Thursday, May 25, 2017

திரிகோணமலையில் அமெரிக்க முகாம்

திரிகோணமலையின் ஒரு பக்கத்தில் அமெரிக்க முகாம் அமையலாம் : செய்தி
1980ல் அமெரிக்கா இதற்குத்தான் முயன்றது, தந்திரமாக ஆடிய இந்திரா அதனை முறியடித்தார், அதன் பின் புலிகள் இந்திய எதிரிகள் என்றாலும் இந்தியா விட்டுகொண்டே இருந்த காரணம் அதுதான், சிங்ளனை மிரட்ட ஒரு சக்தி தேவை
இது பிரபாகரனுக்கு மிக நன்றாக தெரியும், அந்த தைரியத்தில்தான் ராஜிவ் கொலையினை ஒரு பொருட்டாக எடுக்காமல் இருந்தார் பிரபாகரன்
2009ல் விஷயம் எல்லை மீறியது, புலிகளை ஒழித்து தீருவோம் என உலகம் மொத்தமாய் களமிரங்கியபொழுது இந்தியாவால் தடுக்கமுடியவில்லை, முடியவும் முடியாது
அதனால் மறுபடியும் 1987 ஒப்பந்தத்தை காட்டி உட்புகுந்துவிடலாமா என யோசித்தது, ஆனால் புலிகள் விடவில்லை
இந்திய ராணுவத்தை அனுப்பும் முடிவினை இந்திய தளபதிகளே நிராகரித்தனர், சென்று காப்பாற்றினால் அமைதிபடை பட்டபாடுதான், புலிகள் ஆயுதம் ஒப்படைத்து சரணடையட்டும் மறுநொடி நாம் இறங்கலாம்
புலிகள் ஒப்புகொள்ளவே இல்லை, எல்லாம் முடிந்தது
இப்பொழுதும் திரிகோணமலை துறைமுகத்தில் இந்திய பிடி உண்டு, அது யுத்த முகமாக மாற்றபடாது என்ற இலங்கை சட்டமிருப்பதால் அது எண்ணெய் குடோனாக உள்ளது
அமெரிக்காவிற்காக அது யுத்தமுகாம் என திருத்தபடுமானால் நிச்சயம் இந்தியாவால் சும்மா இருக்கமுடியாது, இந்தியா என்ன திட்டம் வைத்திருக்கின்றதோ தெரியவில்லை
ராஜிவினை இழ்ந்தும் திரிகோணமலையில் காங்கிரஸ் அரசு தன் கட்டுப்பாட்டில்தான் வைத்திருந்தது, ஆனால் பாஜக அரசு சறுக்குகின்றது
இனி அமெரிக்க படைகள் இலங்கையில் கால்பதிக்கலாம், நாளை அமெரிக்கா இந்தியா மோதும் சூழல் வந்தால், அதாவது இந்தியா பாகிஸ்தான் மோதலிலோ அல்லது இன்னொரு நாட்டுடன் இந்தியா மோதும் சூழல் வந்தாலோ நாங்களும் இறங்குகின்றோம் என இறங்கினால்
சாகபோவது தமிழகம் தான், இப்போதைக்கு சீனாவினை விரட்டுகின்றோம் என அமெரிக்காவுடன் இந்தியா கரம்கோர்த்தாலும் அவர்கள் நம்பகூடியவர்கள் அல்ல‌
இனி நெல்லைமாவட்ட விஜயநாராயணத்தை மேம்படுத்தும் அவசியம் இந்தியாவிற்கு வரலாம், சேது சமுத்திர திட்டத்தை மீளாய்வு செய்யும் நிலைவராலாம்
அமெரிக்கா கால்பதித்துவிட்டால் இனிவரும் காலங்கள் பரபரப்பானவை, அது கால்பதிக்கும் அறிகுறி தெரிகின்றது
அதெல்லாம் இருக்கட்டும்
இந்திய படை ஆக்கிரமிப்பு படை, கற்பழிப்பதற்கு என்றே ஜட்டியோடு ஈழம் சென்றபடை என சொன்னவன் முகத்தை எல்லாம் தேடிகொண்டிருக்கின்றேன்
இதோ அமெரிக்க முகாம் இலங்கையில் வருகின்றதே? அது என்ன ராவணன் கோயிலை தேடிய திருபயணமா? புனித யாத்திரையா?
இலங்கையில் கால்பதித்த இந்தியாவினை புலிகளை வைத்து விரட்டியதும் , பின் புலிகளை அழித்துவிட்டு ஒன்றும் தெரியா கன்னிபோல கால் வைப்பதும் யார் விளையாட்டு என தெரிகின்றதா?? முள்ளிவாய்க்கால் கொடுமை ஏன் நடந்தது என புரிகின்றதா?
புரிந்தாலும் சொல்லமாட்டீர்கள்
அந்த அரைகிறுக்கனும், உலகத்தை தன் அடிதொண்டையில் வைத்திருப்பவனுமான சீமான் என்பவன், திருமுருகன் காந்தி, திருமா, வேல்முருகன் சொல்வதை நம்பியதாக நடியுங்கள்
உண்மைகள் சாகாது, பொய்கள் நிலைக்காது
ராஜிவின் தியாகமும், புலிகளின் சாயமும் வெளியே வந்துகொண்டிருக்கின்றது
அது இருக்கடும், இந்தியாவிலிருந்து வெறும் 50கிமீ தூரத்தில் உலக வல்லரசு முகாம் அமைக்கின்றது, மோடி என்ன செய்ய போகின்றார்? மோடி செய்யமாட்டார்
ஆனால் புட்டீன் செய்யலாம், ஐ.என்.எஸ் கட்டபொம்மன் இனி விஸ்வரூபமெடுக்கலாம்
காங்கிரசின் அயல்நாட்டு திட்டங்கள் எப்படி எல்லாம் இருந்திருக்கின்றன, புலிகள் எனும் அந்நிய சக்தி எப்படி சிதைத்திருக்கின்றது என்பதை கண்ணார காண்பீர்கள், இதோ கண்டுகொண்டிருக்கின்றீர்கள்
அரேபியருக்கு பெட்ரோல் போல ஈழமக்களுக்கு அந்த துறைமுகம் துருப்பு சீட்டு, அதனை வைத்து சிங்களிடம் பல உரிமைகளை வல்லரசு துணையோடு பெற்று அமைதியாக வாழும் வாய்ப்பு இருந்தது, அது ஒன்றுதான் தீர்வு , சுயநல உலக யதார்த்தம் அது
அப்படி இந்தியா சில உரிமைகளை பெற்றுகொடுக்க முயன்றது, அடிபட்டு ஒதுங்கியது, இதோ அமெரிக்கா நுழைகின்றது? என்ன உரிமை ஈழ தமிழருக்கு பெற்று கொடுத்தது? போர்குற்றம் கூட குப்பைக்கு சென்றாயிற்று
புலிகள் ஒருகாலமும் சிங்களனை வெல்லமுடியாது, வென்றாலும் அது தனிநாடு ஆகமுடியாது, ஏதாவது ஒருநாடு வந்து மீட்டு சிங்களனிடம் கொடுத்தே தீரும்
இந்நிலையில்தான் இந்தியா ஓரளவு ஈழதமிழருக்கு நலம் கொடுக்கும் திட்டங்களை சொன்னது, கேட்கவேயில்ல்லை, தனிநாடு கிழிப்போம் என்றார்கள், எங்கே அமெரிக்க படைகளை விரடட்டும் பார்க்கலாம்..
இனியும் எவனாவது அமைதிபடை ஏன் சென்றது என கேட்கமுடியுமா? முடிந்தால் அமெரிக்க தூதரகத்தில் சென்று ஈழ் திரிகோணமலையில் அந்நிய வெள்ளையனே உனக்கு என்ன வேலை என கேட்டுவிட்டு வாருங்கள்.

ltte = pillai piddikarar (child abducters)


முள்ளிவாய்க்கால் சாசனம் : Caught in between. Drawing by Vanni IDP school student showing herself (in yellow) escaping from pillai piddikarar (LTTE recruiters in black) amidst shelling from the Sri Lanka army through huts towards (Pudu)mathalan beachfront area.

......................Shobasakthi Antonythasan ...

இராஜதந்திரம் போதாது

ஐயோ எங்களை காப்பாற்றுங்கள், சிங்களவன் எங்களை கொல்கிறான் என குடாநாட்டில் இருந்து ராஜிவை நோக்கி கூக்குரல் எழுப்பினோம். ஊரடங்கு சட்டம் போட்டு எங்களை பட்டினி போட்டு ஆமியை விட்டு எங்களை சாகடிக்கின்றான். உடனேயே தலையிட்டு அதனை நிறுத்துங்கள் என இரவு பகலாக யாழ் குடாநாடு ஓலமிட்டது. கிட்டத்தட்ட முள்ளிவாய்க்கால் அபயக்குரல்தான் அன்று ஒழித்ததும். எம்ஜிஆரின் தொப்புழ்கொடி தமிழகமும் ராஜிவை யாழ்ப்பாணத்துக்கு உதவுமாறு அந்த மனிதரின் பிறைவேட் டைமில் கூட நெருக்கடி கொடுத்தது.
ராஜிவும் விமானத்தை அனுப்பி உணவு பொதிகளை குடாநாட்டில் போட்டார். உடனடியாகவே ஐலன் பிறைட் கப்பலை உணவு, அத்தியாவசிய பொருட்களுடன் காங்கேசந்துறைக்கு அனுப்பினார். ராஜிவ் இல்லை மோடிகூட அன்று இருந்த்திருந்தால் இதைதான் செய்திருப்பார்.
இந்திய போர்விமானங்களை கண்ட இலங்கை படைகள் ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கைகை விட்டு ஓடிச்சென்று முகாம்களுக்குள் பெட்சீட்டுக்குள் பதுங்கிகொண்டனர்.
குடாநாட்டில் காத்தல் கடவுள் ரேஞ்சிக்கு ராஜிவை தூக்கி வைத்து கொண்டாடினோம். விட்டால் மீண்டும் சிங்கள ஆமி ஊருக்குள் வந்துவிடும் இன்னும் ஏதாவது செய்யுங்கள். உங்களால் முடியும் என்று தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நடுவர்கள் போன்று ராஜிவை உசுப்பேத்தினோம்.
ஜெயவர்த்தனவை வெருட்டி சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சகிகலா பாணியில் கூவாத்தூர் ட்ரீட்மெண்ட் கொடுத்தது இந்திய படைகளை யாழ்குடாநாட்டில் கொண்டுவந்து இறக்கினார்கள் டீக்சிட்டும் ரொமேஷ் பண்டாரியும்
வந்து இறங்கிய சீக்கியனுக்கும், கூர்காவுக்கும் மாலை போட்டு ஆராத்தி எடுத்து மாப்பிள்ளை வரவேற்பு கொடுத்த நாம் என்ன செய்திருக்க வேண்டும்? ஆமை தலையை வெளியே நீட்டி பார்ப்பது போன்று போர்வைக்குள் இருந்து வெளியே எட்டி பார்த்த சிங்கள ஆமிக்கும் சிங்குகளுக்கும் சண்டை மூட்டிவிட்டுக்க வேண்டாமா? கூர்க்காக்களை கொண்டே அவன்களை அடித்து குடாநாட்டில் மட்டுமில்லாது வடகிழக்கை விட்டே துரத்தி விட்டிருக்க வேண்டாமா?
ஆனால் நாம் என்ன செய்தோம்? சிங்களவனுடன் புதிதாக அண்ணன் தம்பி உறவை உருவாக்கிகொண்டு ”டேய் சிங் நாயே வெளியே போடா பரதேசி!” என்றோம். " we are brothers எங்களுக்குள் ஆயிரம் பிரச்சினை இருக்கும் அதை கேட்க நீ யார்?" என கூர்காவின் குடிநீரில் விசத்தை கலந்துவிட்டு ”நீங்கள் வாருகள் Bro” என்று பிரேமதாசாவின் தோளில் கைபோட்டுக்கொண்டு அலரிமாளிகையில் ஐஸ்கிறீம் சாப்பிட்டோம்.
நாம் செய்திருக்க வேண்டியதை சிங்களவன் செய்தான். துணிச்சலாக பெட்சீட்டை விட்டு வெளியே வந்து புகுந்து விளையாடினான். என்று Bro உறவில் இணைந்தோமோ அன்றே நாம் சிங்களவனுக்கு எடுபிடிகளாகி முள்ளிவாய்ய்க்கால் வரை அவனது திட்டத்துக்கு பலியாகினோம்.
இதனால்தான் முள்ளிவாய்காலில் நாம் குலறியபோது எவனுமே கண்டுகொள்ளவில்லை. உதவபோய் ராஜிவை போன்று வில்லங்கத்தை விலைக்கு வாங்க வேண்டிவருமோ என பயத்தில் வாய் மூடி பேசிக்கொண்டிருந்தனர் நாம் உதவி கேட்டோர்.. அவர்கள் கண்முன்னே ராஜிவ் நிழலாடியிருக்க வேண்டும்.
அன்று மட்டும் இல்லை இன்றுவரை வன்னியும் கிழக்கும் செம்மறி ஆடுகள் போன்று குடாநாட்டு கோமாளிகளின் கூத்துகளுக்கு தலையாட்டிக்கொண்டு அவர்கள் பின்னே ஓடிக்கொண்டே இருக்கின்றது.
நமக்கு இராஜதந்திரம் போதாது!.

Monday, May 22, 2017

ராஜ்கிரண் நல்ல மனிதர் என நினைத்தால் உளறி கொட்டுகின்றார்

மகாத்மா காந்தியின் ஆட்சியினை 10 வருடமாக ஈழத்தில் நடத்தினார் பிரபாகரன், அதனால் உலக நாடுகள் அழித்தன : ராஜ்கிரண்
நல்ல மனிதர் என நினைத்தால் உளறி கொட்டுகின்றார்
மிஸ்டர் ராஜ்கிரண், உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி, அந்த பொன்னான ஆட்சிக்கு ஏன் உலகெல்லாம் இருந்த ஈழதமிழர் திரும்பவில்லை
தமிழகத்தின் படுபயங்கரமான அகதிகள் முகாமில், ஆஸ்திரேலிய முகாமில் இருந்தெல்லாம் அகதிகள் ஏன் அந்த பொன்னான பூமிக்கு செல்லவில்லை?
எல்லா அகதிகளும் நாடு திரும்புங்கள் பொற்கால ஆட்சி நாங்கள் தருகின்றோம் என புலிகள் ஏன் அழைக்கவில்லை?
அந்த பொன்னான பூமியினை விட்டா அகதிகளாக ஓடினார்கள்?
சரி அந்த பொன்னான பூமியில் நீங்கள் என் குடியுரிமை வாங்கவில்லை?
நீங்கள் செல்லும்பொழுது வன்னிபகுதி மட்டுமே புலிகளிடம் இருந்தது, யாழ்பாண தமிழர்கள் ஏன் அந்த பொன்னான பூமியுடன் இணைய துடிக்கவில்லை?
ஏன் அய்யா இப்படி கதை விட்டு அழுகின்றீர்? இதோ சிங்கப்பூரில் , புருனேயில், துபாயில் பொற்கால ஆட்சி நடக்கின்றது உடனே உலக நாடுகள் எல்லாம் புகுந்து அழித்துவிட்டதா?
அங்கு மின்சாரம் கூட இல்லாமல், பள்ளிகள் இல்லாமல் சகலமும் துப்பாக்கி முனையில் என அம்மக்கள் பட்ட பாடு கொஞ்சமா?
கிட்டதட்ட 70 ஆண்டு ஈழத்தை பின்னோக்கி கொண்டு சென்றனர் புலிகள், அது இன்றைய உலகத்தோடு ஒட்ட இன்னும் 40 ஆண்டு ஆகலாம்,
என்ன இருக்கின்றது அங்கு? ஒரு கல்வி நிறுவணம்? ஒரு தொழிற்சாலை? ஒரு சுற்றுலா தளம்? ஒரு துறைமுகம்? ஏதாவது ஒன்று புலிகளின் இடத்தில் வளர்ந்ததா?
ஒரு வளர்ச்சியினை காட்ட முடியுமா?
ஏதோ நியூயார்க் அளவிற்கு புலிகள் ஈழத்தை வளர்த்தது போலவும், அதனை பின்லேடன் போல உலகநாடுகள் அழித்தது போலவும் அன்னார் பேசுகின்றார்
என்னா கதை விடுகின்றார் ராஜ்கிரண்???
ராஜ்கிரன் சினிமாவில் மட்டும் எலும்பு கடிப்பவர் அல்ல என்பது மட்டும் புரிகின்றது

வேட்டி விளம்பரதில் நடிக்க ரெண்டு கோடி கொடுக்கேன்னு கூப்பிட்டாங்களாம். ஆனால் "ஐயோ.. அதை வாங்கும் ஏழை மக்களின் தலையில் அந்த விளம்பர கட்டணம் விழுந்து விடுமே" என்ற வருத்தத்தில் மறுத்து விட்டாராம்.

இவரு லிஸ்ட்லயே இல்லையே

வாண்டடடா வண்டியில ஏறுறாரு


அது குப்பியா லிப்ஸ்டிக் டப்பியா

பெரியாரையே விமர்சனம் செய்யும் இந்திய தமிழ் சமூகம்.
பிரபாகரன் தவறுகளுக்கு கழுவி ஊற்றி விமர்சனம் செய்வது தான் தக்க செயல்.


“He is the way of life that keepeth instruction
But he that refuses reproof erreth"6
Proverbs (10:17)

எதிரியிடம் மாட்டாதே சயனைடு குப்பி கடித்து சாகுன்னு , சின்ன புள்ளைக கழுத்தில் கூட மாட்டி, அதுங்களும் செத்து, இவன் அதுங்களுக்கு வீரவணக்கமும் வெச்சு...KEEPETH INSTRUCTION.
கடைசி வரை இவன் சயனைடு குப்பி கடிக்கவே இல்லையே? REFUSES REPROOF ERRETH !!!
இதுல ரெண்டு குப்பி வெச்சிருப்பாராம், எதிரி கிட்ட சரணடைய போனா எரிச்சிடு ன்னு மெய்க்காவலர் கிட்டே எப்பவும் ஒரு அஞ்சு லிட்டர் பெட்ரோல் கொடுத்து வெச்சிருப்பாராம்...

எங்கேயடா அந்த குப்பி, அது குப்பியா லிப்ஸ்டிக் டப்பியா ? பெட்ரோலை மெய்க்காவலன் டீ செலவுக்கு வித்துட்டானா என்ன?! இப்படி கூட பெரியார் கேட்டிருப்பார்.

பெரியாரிஸ்ட் என்பதை மறந்து ரெயில் சுத்துன பார்ட்டிக்கெல்லாம் பெரியார் செருப்படி தான் கொடுத்து இருப்பார்.

தேவையே இல்லாமல் ராஜீவைக் கொன்று தன் மீதும், தன் மக்களின் மீதும் மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்ட பிரபாகரன்

தலைவர் ஒருவரை கொடூரமாக கொன்றுவிட்டு ஈழம் வாங்கிவிட முடியும் என நினைத்ததெல்லாம் பிரபாகரனுக்கு ஆறாவது அறிவு என ஏதாவது இருந்ததா

வீட்டின் வரவேற்பறையில் பிரபாகரன் சிறுத்தைக்குட்டியுடன் நிற்கும் சிலிர்க்க வைக்கும் பெரிய புகைப்படம் ஒன்று தொங்கிக் கொண்டிருந்த காலம் அது.  ஆரம்பத்தில் இருந்தே டெலோ அமைப்புக்கு ஆதரவாக இருந்த திமுக, பிற எல்லா அமைப்புகளும் புலிகளால் அழிக்கப்பட்ட பிறகு வேறு வழியே இல்லாமல் புலிகள்தான் அப்போதைக்கு பலம் மிகுந்த ஈழப்போராட்ட இயக்கம் என்பதை ஏற்றுக்கொண்டு முழுமையாக pro-ltteஆக செயலாற்றத் துவங்கிய காலமும் அதுதான்.  அதாவது எம்.ஜி.ஆர் நோயுற்றப் பிறகு (ப்ரூக்ளினில் சிகிச்சையில் இருந்த எம்.ஜி.ஆர் ராஜீவ்வுக்கு ஆதரவாக, புலிகளைத் திட்டி இந்தியன் எக்ஸ்பிரஸில் பேட்டி கொடுத்ததெல்லாம் தனிக்கதை. இப்போது வேண்டாம்.)  இந்து, தினமணி உள்ளிட்ட ஏடுகள் எல்லாம் மத்திய அரசின் மார்பில் பாயவிட கலைஞர் வளர்க்கும் புலிக்குட்டி தான் பிரபாகரன் என சித்திரங்கள் வரைந்து கொண்டிருந்தன.  ஈழம் அடைந்தபிறகு அதே சூட்டில் தனித்தமிழகம் அடைவதுதான் கலைஞரின் நோக்கம் என்ற அளவுக்கு அகில இந்திய ஊடகங்கள் எழுதிக்குவித்துக் கொண்டிருந்ததும் அப்போதுதான்.  இலங்கையில் அட்டூழியங்கள் செய்து வந்த அமைதிப்படையை முதல்வர் கலைஞர் வரவேற்கப் போகாததும் அப்போதுதான். இந்தியாவின் வேறெந்த முதல்வரும் செய்யாத விஷயம் இது. தேசதுரோகம் என இந்தியாவே திட்டித் தீர்த்தது.  இப்படி ஒட்டுமொத்த சூழலும் திமுகவும், புலிகளும் ஒரே அணி என்பதை இந்தியாவுக்கே எடுத்துக்காட்டிக் கொண்டிருந்த சூழலில் தான் கலைஞர் ஆட்சி அநியாயமாக கலைக்கப்பட்டது. 
அதன் பின்பு வந்த அந்த அதிகாலை இன்னமும் மனதில் சிகப்பாக நினைவிருக்கிறது. சிறுவனாக இருந்த என்னை எழுப்பி அப்பா செய்தித்தாள்களைக் காண்பித்தார்.  ராஜீவ் காந்தி உடல் சிதறி துண்டு துண்டாக தரையில் கிடந்தார்.  இப்போது நினைத்துப்பார்த்தால் பிராய்லர் கோழிக்கடையின் ரத்தம் தோய்ந்த தரை போல இருந்தது ராஜீவ் செத்துக்கிடந்த இடம்.  கொன்றது விடுதலைப் புலிகள்.  எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்திருந்த அந்த நேரத்தில் காங்கிரஸ்-அதிமுக ரவுடிகள் நம்மை தாக்கப் போகிறார்கள் என்பது பல திமுககாரர்களுக்கு அப்போது தெரியாது.
ராஜீவ் பழி ஒட்டுமொத்தமாக திமுக மீது போடப்பட்டது. ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் சிந்திய ரத்தம் திமுகவினர் தலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டது. கொடிக்கம்பங்கள் சாய்க்கப்பட்டன.  உடைமைகள் சூறையாடப்பட்டன.  பிரபாகரனின் மூலம் ராஜீவ்வைக் கொன்றது கலைஞர்தான் என்ற எண்ணம் இந்தியா முழுக்க அதிதீவிரமாக பதிவுசெய்யப்பட்டது.  கலைஞர் மேல் வன்மத்தோடு அலைந்த நெடுமாறன் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்களே கூட அப்போது திமுகவுக்கு ஆதரவாக வரவில்லை.  ஜெயலலிதாவும் அதை மிகச்சரியாக அறுவடை செய்து ராஜீவ் காந்தியின் ரத்தத்தின் மீது நடந்து சுலபமாக ஆட்சிக்கு வந்தார். வந்ததும் போராடி விடுதலைப்புலிகளுக்கு தடையும் வாங்கித்தந்தார். 1996 தேர்தல் பிரச்சாரத்தின் போதும் ஜெஜெ டிவி மீண்டும் மீண்டும் ராஜீவ் உடலைக் காட்டி வாக்கு கேட்டது இதன் நீட்சிதான்.
அதன்பிறகு நடந்ததெல்லாம் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரியும். பேரறிவாளன் என்ற இளைஞன் அநியாயமாக கைது செய்யப்பட்டார்.  இப்போது அவர் விடிவுக்கு எவ்வளவோ ஒப்பாரி வைக்கிறோம்.  ஆனால் பிரபாகரன் நினைத்திருந்தால் அவரை ஒரே ஒரு அறிக்கையின் மூலம் காப்பாற்றி இருக்க முடியும்.  அவர் அப்பாவி என்பதை உலகுக்கு சொல்லியிருக்க முடியும்.  ஆனால் எத்தனையோ ஆண்டுகள் கழித்தும் பிரபாகரனுக்கு அந்த மனம் வரவில்லை.  ஒத்துவராத யாரையும் கொலை செய்வதுதான் தனது போராட்டத்தின் முக்கிய அம்சம் என்ற கொள்கையில் வெறியோடு இருந்த பிரபாகரனுக்கு ராஜீவ்வோடு சேர்த்து தான் புதைத்தது ஈழக்கனவையும்தான் என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை.  அதை அவர் பெருமையாகக் கூட அப்போது எண்ணியிருக்கக் கூடும்.  அதனால்தான் பல்லாண்டுகள் கழித்து ராஜீவ் கொலையைப் பற்றிக் கேட்டபோதுகூட 'துன்பியல் சம்பவம்' என சொல்லிவிட்டு அவரால் எளிதாக கடந்துபோக முடிந்தது.
ராஜீவ் மீது அப்போது போஃபர்ஸ் ஊழல் புகார் இருந்தது.  அடுத்த தேர்தலில் அவர் தோற்க வாய்ப்பிருந்தது.  அடுத்த ஆட்சி ஈழ ஆதரவாக கூட அமைந்திருக்கலாம். தேவையே இல்லாமல் ராஜீவைக் கொன்று தன் மீதும், தன் மக்களின் மீதும் மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டார் பிரபாகரன்.  இந்திய துணைக்கண்டத்தின் மிகப்பெரிய தலைவர் ஒருவரை கொடூரமாக கொன்றுவிட்டு ஈழம் வாங்கிவிட முடியும் என நினைத்ததெல்லாம் பிரபாகரனுக்கு ஆறாவது அறிவு என ஏதாவது இருந்ததா என்பதையே சந்தேகிக்க வைக்கிறது.  ஆண்டன் பாலசிங்கம் ஆரம்பத்தில் இருந்தே இதை எதிர்த்ததாகவும் சொல்கிறார்கள். 
எது எப்படியோ, ராஜீவ்வுடன் அன்று அப்பாவிகள் எத்தனையோ பேர் இறந்தார்கள்.  அதில் தமிழர்கள் ஏனையோர்.  ராஜீவ்வைக் கொல்லும்போது உடன் சாகும் குழந்தைகளை உள்ளடக்கிய அப்பாவிகளைப் பற்றி பிரபாகரன் கவலைப்படவில்லை.  18 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபாகரனைக் கொல்லும்போது உடன் சாகும் அப்பாவிகளைப் பற்றி ராஜபக்சே கவலைப்படவில்லை.  (பிரபாகரனும் கவலைப்படவில்லை என்பது ஐநா அறிக்கை)
முதல் பத்தியில் பிரபாகரனின் பெரிய புகைப்படம் பற்றி சொல்லியிருந்தேன் அல்லவா? அதை நாங்கள் ராஜீவ் கொல்லப்பட்டபோதும், திமுகவினர் தாக்கப்பட்டபோதும், கலைஞர் அநியாயமாக 1991ல் தண்டிக்கப்பட்டபோதும், ஜெயலலிதா விடுதலைப்புலிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தபோதும் கூட தூக்கிப்போடவில்லை, கழட்டித்தான் வைத்தோம்.  ஆனால் 2009ல் பிரபாகரன் செத்த பழியையும் திமுக மீது எழுதினார்களே படுபாவிகள், அப்போதுதான் தூக்கிப்போட்டோம். 

அமைதிபடையினை அவமானமாக திருப்பி அனுப்பியதன் பலன்

அமைதிபடை அட்டகாசம் தெரியாமல் பேசுகிறாய் என்கின்றனர் சிலர்.
அமைதிபடைக்கு முன்பே ஜேவிபி கிளர்ச்சியும் அதனை அடக்க இந்திய ராணுவம் கொழும்பிற்கு சென்றதும் இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? தெரியாவிட்டால் விட்டுவிடலாம். அதாவது அன்றிலிருதே இன்னொரு மூன்றால் நாடு இலங்கையில் தலையிடுவதை இந்தியா அனுமதிப்பதில்லை.
ஈழ போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் இந்தியாவினை ஒதுக்கிதான் வைத்தார், போராளிகளுக்கு பயிற்சிகள் தொடங்கிய காலத்திலும் வேண்டா வெறுப்பாக இறுதியில் வந்து சம்பிரதாயத்திற்குதான் கலந்து கொண்டனர் புலிகள். அவ்வப்போது இந்தியாவுடன் மோதும் சூழ்நிலை வரலாம் என்று எதிர்பார்த்தேதான் இருந்தார்.
அமைதிபடை சென்று இறங்கியதும் எல்லா குழுக்களும் ஆயுதம் ஒப்படைக்க, புலிகளும் சிலவற்றினை ஒப்படைத்து சுதுமலை மேடையில் "இந்தியாவினை நம்பி ஆயுதங்களை ஒப்படைக்கின்றோம்" என்றவுடன் கூட்டம் மகிழ்ச்சியில் ஆர்பரித்தது, ஆனால் பிரபாகரனின் முகம் சிலநொடி சட்டென இருண்டது,
அமைதிபடை காலம் அமைதியாகத்தான் தொடங்கியது, மக்களும் இந்திய படையினை வரவேற்றனர், டீ கொடுத்து உபசரிக்கும் அளவிற்கு நல்லுறவுகள் வளர்ந்தன, புலிகளை மக்கள் மறக்க தொடங்கினர்
அமைதிபடை இருந்தால் களத்தில் நாம் மக்களால் மறக்கபடுவோம் என்பதை புலிகளால் தாங்கமுடியவில்லை, அமைதிபடைக்கும் பொதுமக்களுக்கும் சண்டைமூட்டும் காரியத்தில் இறங்கினார்
இந்திய வீரர்களுக்கு எல்லாமே அங்கு புதிது, சிரித்தால் சிரிப்பார்கள், ஆனால் அடித்தால்..அவர்களுக்கு யார் புலி? யார் பொதுமக்கள் என எப்படி தெரியும்? அங்குதான் சிக்கல் வெடித்தது
17 புலிகளை சிங்களன் கைது செய்யும்போது அவர்களிடம் சயனைடு இல்லை, ஆனால் புலிகள் சென்று பார்த்துவிட்டு வந்தபின் சயனைடு வந்தது, கொஞ்சநேரத்தில் அவர்கள் சாக பிரச்சினை வெடித்தது, பழி இந்தியா மேல்.
அதன்பின் புலிகளின் வரிவசூல் ஒப்பந்தத்தால் பாதிப்படைய, தீலிபனின் உண்ணாவிரதம் தொடங்கியது, அவனை காப்பாற்ற புலிகள் ஒரு முயற்சியும் எடுக்கவில்லை, அவன் செத்ததும் அவன் உடலோடு மக்கள் முன் சென்று ஒரு உணர்ச்சி எழுச்சி உண்டாக்கினர்.
அதன்பின் அது போராக வெடித்தது, இந்தியபடை சுற்றுலா செல்வது போல் சென்றிருந்தது, அந்த இடங்களின் வரைபடம் கூட அவர்களிடம் இல்லை, புலிகள் தங்களுடன் மோதுவார்கள் என கனவிலும் நினைக்கவில்லை, புரியாத புது இடத்தில் அது திணறியது. புலிகளின் தாக்குதல் அகோரமாக இருந்தது, இந்திய படைக்கு புலி எது? மக்கள் எது என தெரியவில்லை. தடுமாறியது.
உதாரணம் பனை உச்சியிலிருந்து ராணுவத்தை சுடுவார்கள், ஒரு வீட்டின் உள்ளிருந்து சுட்டுவிட்டு ஓடுவார்கள், ராணுவம் உள் செல்லும், விளக்கிற்காக சுவிட்சை போட்டால் குண்டு வெடிக்கும் இப்படி ஒரு வித்தியாசமான களம் அது.
மக்கள் யார், புலிகள் யார் என இந்தியபடைக்கு தெரியாது, மருத்துவமனையில் மக்களோடு நோயாளியாக படுத்திருக்கும் புலி, தெருவில் செல்லும் ராணுவம் மீது சுட்டுவிட்டு படுத்துகொள்ளும், ராணுவம் என்ன செய்யும்? ஒரே ஒரு முறை திருப்பி தாக்கியதில் மருத்துவமனை அழிந்தது, அதனை பெரும் செய்தியாக்கினர் புலிகள்.
மாலை மக்களை ஒன்றாக அமரவைத்து சில பாதுகாப்பு விஷயங்களை சொல்வார்கள் இந்திய ராணுவத்தார், நடு கூட்டத்திலிருந்து ஒரு புலி சுடும், திரும்ப மொத்த மக்களை கொல்லவா முடியும்? ராணுவம் திணறும்.
திண்ணையில் வெற்றிலை இடிக்கும் பாட்டி ராணுவம் வீட்டை கடந்ததும், முந்தானையில் இருக்கும் ரிமோட்டை அமுக்குவார், வாகனம் சிதறும். பள்ளி மாணவிகள் உள்ளாடைகளில் தோட்டா முதலான ஆயுதம் கடத்தபடும், எப்படி சோதிக்க? சில மாணவிகள் செக்போஸ்டை கடக்கும்போது அசால்டாக புத்தக பையினை எறிவார்கள் அது வெடிக்கும், சோதனை மற்ற மாணவிகள் மீது நடக்கும், அதற்கும் இந்திய ராணுவம் கற்பழிக்கின்றது என செய்தி பரவும்.
ஒரு கட்டத்தில் தவறான தகவலை பரப்பவிட்டு 300 ராணுவத்தினரை மொத்தமாக கொன்று, அவர்கள் உடலை அம்மணமாக ஒப்படைத்தனர் புலிகள், சர்வதேச சட்டபடி அது ஒரு தேச அவமானம், இந்திய ராணுவ உச்சம் அவமானத்தால் தலைகுனிந்த நேரம் அது. அப்படி செய்திருக்க கூடாது.
எந்த நாடும் தன் நாட்டில் அந்நிய ராணுவம் இருக்க அனுமதிக்க்காது, உண்மையில் மோதி இருக்கவேண்டியது சிங்கள படை, ஆனால் தமிழ் மக்களும், இந்திய ராணுவமும் பாதுகாப்பில்லாமல் இருக்க மிக மகிழ்ச்சியாக இருந்தது சிங்கள இனம் மட்டுமே, புலிகளுக்கு ஆயுதம் கொடுத்து மகிழ்ந்தார் பிரேமதாச.
இதுதான் உலகின் 4ம் பெரும் ராணுவமான இந்திய ராணுவத்தை புலிகள் விரட்டிய வரலாறு, நேருக்கு நேர் எல்லாம் மோதவில்லை, இன்னொன்று இந்திய ராணுவம் அழிவுகளை குறித்து கவனமாக போராடிற்று, அப்படியும் பிரபாகரனை முடக்கிய சமயத்தில்தான் விபி சிங் படை மீட்டார்.
இதே தந்திரத்தை, அதாவது மக்களோடு மறைந்து தாக்கும் வித்தையினை 2009ல் சிங்களனிடம் காட்டிய புலிகள் மொத்தமாக வாங்கி கட்டி அழிந்தனர், யாரைபற்றியும் கவலைபடாத சிங்களம் மொத்தமாக அழித்தது.
பிரபாகரனின் உடல் கோவணத்துடன் கிடந்தது, அன்று 300 இந்திய ராணுவ வீரர் உடல்களை அம்மணமாக்கி கொடுத்த வினை, பின் அவருக்கே திரும்பியது. யுத்த களத்தில் ஒரு உச்சகட்ட அவமானம் அது. அதனால்தான் சிங்களன் அந்த படத்தினை திரும்ப திரும்ப காட்டினான்.
அந்த அமைதிபடையினை மட்டும் விரட்டியிருக்காவிட்டால், இன்று வடக்கு கிழக்கு இணைந்த ஈழ மாகாண முதல்வராக ஒரு தமிழன் இருப்பார், பின்புலத்தில் இந்தியா இருக்கும், இந்திய தளமும் அந்நாட்டில் தொடர்ந்து இருந்திருக்கும், ஈழ மக்கள் இவ்வளவு துன்பம் அடைந்திருக்கமாட்டார்கள், 25 வருட அழிவும், முள்ளிவாய்க்கால் கொடுமையும் நடந்திருக்காது.
இந்திய ராணுவம் அன்று பின் வாங்க ஒரே காரணம் புலிகளின் பிரச்சார ஊடகங்களும், சிங்கள அரசு புலிகளுக்கு கொடுத்த மகா ஒத்துழைப்புமே, இன்று வரை அது அப்படியே நிலைத்துவிட்டது, அமைதிபடை அழித்தது, கற்பழித்தது. புலிகளின் ஊடகபலம் அப்படி. இதோ ராஜிவ் கொலை குற்றவாளி 5 புலிகள், 2 தமிழகத்தார் என்பதை 7 தமிழர்கள் என லாவகமாக மறைத்தார்கள் அல்லவா? அப்படியே தான்.
அமைதிபடை காலத்தில் 1500 இந்திய வீரர்கள் செத்தனர், பெரும்பாலும் சீக்கிய சகோதரர்கள், அவர்களுக்கு இலங்கையில் இன்றும் நினைவு மண்டபம் உண்டு, அவர்கள் பெயர் எல்லாம் பொறிக்கபட்டுள்ளன.
மக்களை முன்னிறுத்தி செய்யபடும் இடத்தில் எமது பெருமை மிக ராணுவம் தன் உயிரை இழக்குமே ஒழிய, அப்பாவிகளை கொல்லாது என்பதற்கு பெரும் அடையாளமாக அது உள்ளது, இலங்கை செல்லும் எல்லா இந்திய ராஜதந்திரிகளும் அதனை வணங்க தவறுவதே இல்லை.
நிச்சயம் கண்ணீரால் வணங்கவேண்டிய இடம் அது, இந்த புலிகளால் ஒரு நாளில் லட்சகணக்கான அப்பாவி மக்கள் சாவார்கள் என முன்னறிவித்த இடம் அது, அந்த , முள்ளிவாய்க்கால் காலத்தையும் அமைதிபடை காலத்தையும் ஒப்பிட்டு அமைதிபடை காலத்தில் இருந்த ஈழத்தவரிடம் கேட்டால் சொல்வார்கள்
சிங்கள ராணுவம் என்பது எவ்வளவு இரக்கமில்லாத அமைப்பு என்பது எங்களுக்கு பின்னாளில்தான் விளங்கிற்று, அப்படி பார்க்கும்பொழுது இந்திய ராணுவம் ஓரளவு பொறுமையுடந்தான் போராடிற்று, முடிந்த அளவு பொறுமை காத்தது, அழிவுகளையும் அவமானங்களையும் பொறுத்துகொண்டது.
மக்கள் அழிவுகளை பற்றி கவலை இன்றி அடித்து நொறுக்கி இருக்குமானால் புலிகளை வீழ்த்த அதற்கு 1 நாள் கூட ஆகியிருக்காது.
ஆயிரம் அர்த்தம் நிறைந்த வார்த்தை அது,
உதவ வந்த அந்த படையினை விரட்டிவிட்டு, மொத்த வன்னிமக்களையும் முள்ளிவாய்க்காலில் சிங்களனிடம் ஒப்படைத்துவிட்டு, இனபடுகொலை, வெள்ளைகொடி படுகொலை, மனித உரிமை மீறல் என்றெல்லாம் சொல்வதை 1500 வீரர்களையும் ஒரு தலைவனையும் இழந்து, பெரும் பழி சுமத்தபட்ட‌ இந்த பெரும் தேசம் எப்படி எடுத்துகொள்ளும்?
ஈழத்தில் இந்தியா இறங்கிய பின்னும் என்ன பிரச்சினை என்பதற்கு முன்பு ராஜிவ்காந்தி அருமையான பதில் சொன்னார்,
"ஒரு நபர் தன் ஆயுதத்தை கீழே வைத்தால் மறுநொடி கொல்லபடுவோம் என அஞ்சுகின்றார், ஆயுதம் இல்லாமல் அவரால் வாழமுடியாது. தன் ஆளுகைகுட்பட்ட நாட்டில், காலம் வரை ஆயுத துணையோடு வாழும் முடிவில் அவர் இருக்கின்றார், அதுதான் பெரும் பிரச்சினை" ,
பின்னாளைய வரலாறு அதனை உண்மை என காட்டிற்று.
இலங்கை செல்லும் எந்த இந்திய உச்சமும் அங்கு இந்திய அமைதிபடையினாய் சென்று புலிகளால் கொல்லபட்ட வீரர்களுக்கான நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்த தவறுவதே இல்லை
மோடியும் அதனை செய்தார்
இது காங்கிரஸ் அல்லது பாஜக என எதுவும் ஆளும் நாடாக இருக்கட்டும், ஆனால் இந்தியா. அந்த இந்தியா ஈழத்தில் அந்த மக்களுக்காக போராடி 1500 ராணுவத்தாரை இழந்துதான் , ஒரு தலைவரை இழந்துதான் திரும்பியது.
மறுபடி 2009ல் அடிக்கின்றான் வாருங்கள் என்றால் இந்த பெருமை மிகு ராணுவம் எப்படி வரும்?
மானமும் வீரமும் ஈழத்தில் மட்டும்தான் உண்டா? இந்திய ராணுவத்தில், இந்தியாவிற்கு கிடையாதா?
அமைதிபடையினை அவமானமாக திருப்பி அனுப்பியதன் பலனே முள்ளிவாய்க்காலில் உலகிற்கு தெரிந்தது..

Sunday, May 21, 2017

2004 பிரபாகரன் பேட்டி

2004ல் பிரபாகரனை ஒரு ஊடகவிய‌லாளர் பேட்டி எடுத்தார், தனிபட்ட பேட்டி அது, அதில் பிரபாகரன் நிறைய பேசினார், அரசியல் துளியும் இல்லை, சிங்கள பேரினவாதம் அது இது என சொல்லிகொண்டே இருந்தார்
அந்த நிருபர் கிடுக்கிபிடி கேள்விகளை கேட்டார்
"ராஜிவ் கொலைக்கு பின் இந்தியாவில் புலி ஆதரவு எப்படி இருக்கின்றது?"
எம்மீதான தடையினை நீக்க இந்தியாவில் தமிழ்மக்கள் போராடுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
ராஜிவ் கொலையால்தானே தடை வந்தது? அது பற்றி?
(இதற்கு ஒருநாளும் பிரபாகரன் பதில் சொன்னதே இல்லை,, மாறாக இப்படி இழுத்தார்)
நாம் இந்தியாவினை நட்பு நாடாக பார்க்கின்றோம், சிங்களனை விட புலிகளே இந்தியாவிற்கு விசுவாசமாக இருக்க முடியும், எம்மீதான தடையினை நீக்க வேண்டும்
அய்யா அந்த ராஜிவ் கொலைபற்றி...
நாம் இந்தியாவிற்கு நேசகரம் நீட்டுகின்றோம்
இந்தியாவில் புலிகள் தடை நீங்குமா? எப்படி?
நாங்கள் இப்பொழுது இறுக்கமான அமைப்பு அல்ல, பழைய சம்பவங்களை வைத்துகொண்டு இப்பொழுது எமக்கு தீர்ப்பிட கூடாது, இந்தியா என் நண்பன் கிட்டுவினை கொன்றது அதற்கு நாங்கள் பழிவாங்கயில்லை , பொறுமை காக்கின்றோம்..
(என்னது இந்தியாவினை பழிவாங்குவாரா??.. இன்னும் தொடர்ந்தார் பாருங்கள்)
அண்ணன் கோப்பால்சாமி அவர்களும், பழநெடுமாறன் போன்றவர்களும் இந்தியர்கள்தான், அவர்கள் எம் போராட்டத்தின் நியாய தர்மங்களை புரிந்துகொண்டு எமக்காக போராடுகின்றார்கள், அவர்களால் எம்மீதான தடை நீங்கும்
இதற்கு மேல் என்ன சொல்ல, புலிகள் எப்படி அழிந்தார்கள் என இனியும் சொல்ல என்ன இருக்கின்றது?, வைகோவினை நம்பியெல்லாம் காத்திருந்திருக்கின்றார்கள்
வைகோவினையும், பழநெடுமாறனையும் நம்பி அழிந்திருக்கின்றார் பிரபாகரன் , ஆனால் இவர்கள் திட்டுவது எல்லாம் கலைஞரை
அந்த தடை நீக்கும் வழக்கில் வைகோ வாதாடி ஒன்றும் கிழிக்கவில்லை என்பது இன்னொரு விஷயம்..
(இந்த பேட்டியில் மட்டுமல்ல எந்த பேட்டியிலும் சீமான் என்றொரு பெயரையோ, திருமுருகன், வேல்முருகன் என்றொரு பெயரையோ சொன்னதே இல்லை
இப்படி சிலர் உண்டு என்பதே அவருக்கு தெரியாது, இன்று அவர்கள் எல்லாம் கத்திகொண்டிருப்பதுதான் வினோதம்)

குஷ்பூ தைரிய நாயகி

முன்பெல்லாம் பிரபாகரன் மீது பெரும் பிம்பம் இருந்தது, கலைஞரே பட்டும் படாமல்தான் விமர்சித்து கொண்டிருந்தார்
சோ ராமசாமி மட்டும் துணிச்சலாக விமர்சித்தார், ஜெயகாந்தனும் முழங்கிகொண்டிருந்தார் ஆனால் ஒரு மாதிரியாக விமர்சித்து நிறுத்துவார்கள், ஊடக வெளிச்சமும் பாயாது
2009ல் பிரபாகரனை பெரும் தெய்வம் அளவிற்கு சிலர் உயர்த்தினர், விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனித பிம்பமாக சித்தரிக்க கிளம்பினார்கள், பெரும் அழிச்சாட்டியம்
பிரபாகரனை தூக்கில்போடவேண்டும் என முதலில் என்றோ சொன்ன தமிழக குரல் ஜெயலலிதா, அவர் முதல்வராகவும் எதிர்கட்சி தலைவராகவும் இருந்ததால் யாரும் எதிர்த்து பேசவில்லை மாறாக அவர் கண்ணசையில் கலைஞரை திட்டினார்கள்,
அதனை ரசித்த ஜெயலலிதா பின் புலிகளை விமர்சிப்பதை நிறுத்திகொண்டார்.
அதன் பின் ஒரு குரல் 2010 வாக்கில் மிக துணிச்சலாக "புலிகள் தீவிரவாத இயக்கம்" என்றது, எதிர்ப்புகள் கிளம்பின, அவர் வீட்டின் மீது கல் எறியும் அளவிற்கு சென்றார்கள்
ஆனால் அந்த குரல் கொஞ்சமும் பின்வாங்கவில்லை, இன்றும் காங்கிரசில் கம்பீரமாக ஒலித்துகொண்டிருக்கின்றது,
அது குஷ்பூவின் குரல்
அவருக்கு பின்னால்தான் தமிழகத்தில் புலிகளை போட்டு சாத்த ஆரம்பித்தார்கள், இன்று பின்னி எடுக்கின்றார்கள், பிரபாகரன் புலிகள் என்ற மொத்த பிம்பமும் சரிந்து நொறுங்கி கிடக்கின்றது
சர்வ சாதரணமாக புலிகளையும், பிரபாகரனையும் காரிதுப்ப தொடங்குகின்றார்கள் தமிழக மக்கள்
"பிரபாகரனா? உருப்படியாக என்ன செய்தான்? ராஜிவை கொல்ல பெண் மீது குண்டு கட்டி விட்டானே அவனா? .." என்ற ரீதியில் கடும் விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன, புலிகள் என்றாலே ஓட அடிக்க கிளம்பிவிட்டார்கள்
இந்த துணிச்சலான காரியத்தினை தமிழகத்தில் குஷ்பூதான் தொடங்கி வைத்தார்.
ஆனால் அதே காங்கிரசின் திருநாவுக்கரசர் இன்று ரஜினிக்கு அழைப்பு விடுத்துகொண்டிருக்கின்றார்.
ராஜிவை இழந்த காங்கிரசில் இருந்து புலிகளை மிக தைரியமாக விமர்சித்த குஷ்பூ எல்லாம் இருக்கும்பொழுது, கொஞ்சமும் தைரியமில்லா ரஜினியினை ஏன் அழைக்கவேண்டும் என தெரியவில்லை
இன்று புலிகளையும் பிரபாகரனையும் மானாவாரியாக எல்லோரும் மண்வாரி இறைக்கும்பொழுது, அன்று தனி மனுஷியாக புலிகளை சாடிவிட்டு தனியொருத்தியாக அவர்களை எதிர்கொண்ட குஷ்பூவின் தைரியம் கண்ணில் வரத்தான் செய்கின்றது
அன்று குஷ்பூ புலிகள் தீவிரவாதிகள் என சொன்னதற்கு சாடியவர்களை இன்று காணவே இல்லை, பங்கர் பிரபாகரன், கொலைகாரன் பிரபாகரன் என கடும் சொற்கள் வீசபடும் காலத்திலும் அவர்களை காணவில்லை
தைரியமாக களத்தில் நிற்கின்றார் குஷ்பூ
நிச்சயம் குஷ்பூ தைரிய நாயகி..

திமுகவும்......புலிகளும்,.....

1989 ல் துவங்கி 1991 வரையிலான காலகட்டத்தில் புலிகளால் திமுக அடைந்த அவப்பெயரும், ஆட்சி இழப்பும் மிக மோசமானது.
.
13.05.1985ல் கலைஞர், வீரமணி, நெடுமாறன் மூவராலும் துவங்கபட்ட டெசோ அமைப்பின் சார்பாக 1986 ல் சென்னை மெரீனா சீரணி அரங்கில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் அனைத்து போராளி குழுக்களுக்கும் கலைஞரால் நிதி உதவி வழங்கப்படவிருந்த நிலையில் L.T.T.E சார்பில் அதை ஏற்காமலும் நிகழ்ச்சிக்கே வராமலும் தவிர்த்தவர் பிரபாகரன். அதற்கு காரணம் இந்த கூட்டத்துக்கு சில நாட்கள் முன்புதான் 1986 மே மாதம் ஈழத்தில் TELO இயக்கத்தை சேர்ந்த போராளிகளை நூற்றுக்கணக்கில் கொன்று குற்றுயிரும், குலையுயிருமாக வீதிகளில் வீசி டயர்களை போட்டு எரித்து கொன்றதையும், அந்த இயக்கத்தின் தலைவர் ஸ்ரீசபாரத்தினத்திடம் சமரசம் பேசுகிறோம் என்ற பெயரில் கண்களில் துப்பாக்கியை வைத்து சதாசிவம் கிருஷ்ணகுமார் என்ற கிட்டு குரூரமாக சுட்டுக்கொன்றதையும் மிகக்கடுமையாக சாடி சகோதர யுத்தம் வேண்டாம் என்று கலைஞர் விட்டிருந்த அறிக்கை. அதை விட தீவுத்திடலில் நடந்த அந்த டெசோ கூட்டத்தில் மிகப்பிரமாண்டமாக சபாரத்தினத்தின் கட்டவுட் ஒன்று வைக்கப்படிருந்ததும் சபாரத்தினத்துக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவித்திருந்ததும் புலிகளுக்கு பிடிக்காமல் போனதுதான்.(1983 இலங்கை கலவரத்தில் வெளிக்கடை சிறையில் கொடூரமாக கொல்லப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் போன்றவர்கள் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது). எம்.ஜி.ஆர் இருந்த வரை இந்த புலிகளுக்கு கலைஞரின் தயவு தேவையில்லை என்ற இறுமாப்புடன் அலட்சியமாக இருந்தனர்.
.
எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த போது இலங்கைக்கு சென்ற அமைதிப்படையோடு புலிகள் போராட துவங்கியிருந்தனர். எம்.ஜி.ஆர் இறந்த பிறகு 1989 ல் தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்தது...தொடர்ந்து மத்தியில் வி.பி சிங் அரசு இருந்தது. அதிமுகவும் ஜா. அணி, ஜெ. அணி என இரு அணிகளாக பிரிந்திருந்தன. இந்தியாவிலும், தமிழகத்திலும் மாறியிருந்த அரசியல் சூழலில் புதிதாக ஆட்சியமைத்த மத்திய மாநில ஆட்சியாளர்களிடம் நெருங்க புலிகளுக்கு ஒரு தரகர் தேவைப்பட்டார். அதற்கு அவர் அன்றைய திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஒருவரை தேர்ந்தெடுத்தனர். அதனை தொடர்ந்து 1989 ல் முதல்வர் கலைஞரிடம் சொல்லாமல், கொள்ளாமல் சட்டத்துக்கு புறம்பாக மிக ரகசியமாக ஈழத்துக்கு கள்ளத்தோணியில் பயணப்பட்டார் அந்த மாநிலங்களவை உறுப்பினர். இலங்கைக்கு சென்றிருந்த இந்திய ராணுவத்துக்கு எதிராக இலங்கையில் போர் புரிந்து வந்த விடுதலைப்புலிகளை சட்டத்துக்கு புறம்பான வழியில் திமுகவின் இந்திய மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் சென்று வந்தது திமுகவுக்கும், தலைமைக்கும் பெரும் சங்கடங்களை உருவாக்கியது. அதுவரை அனைத்து இயக்கங்கள் மீதும் பரிவுடன் அணுகிய திமுகவில் அவர் இலங்கை சென்று திரும்பி வந்த பிறகே அனைத்து போராளி அமைப்புகளுக்கும், அப்பாவி ஈழ தமிழர்களுக்குமான திமுகவின் ஆதரவு குரலை, விடுதலை புலிகளுக்கான ஆதரவு குரலாக மட்டுமே உருவாக்க இங்கே அரசியல் கட்சிகள் பயன்படுத்த துவங்கின.கள்ளத்தோணியில் சென்று திரும்பியவரும் தலைமையை முழுமையாக விடுதலைபுலிகளை நோக்கி மட்டுமே திருப்ப தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.
.
இதற்கிடையே திமுக ஆட்சியில் அமர்ந்த பிறகு அதிமுக அணிகள் ஒருங்கிணைந்து ஒன்று பட்ட அதிமுகவாக இரட்டை இலையை மீட்டிருந்தது. அந்த நேரத்தில் மாநில காங்கிரஸ் தலைவராக வாழப்பாடி நியமிக்கப்பட்டார். ஒன்று பட்ட அதிமுகவுக்கு ராஜீவ் ஆதரவு கொடுத்தார். அதிமுகவோடு காங்கிரஸ் கூட்டணியை ஏற்படுத்தி பழியை சுமத்தி திமுக ஆட்சியை கலைக்க திட்டங்கள் தீட்டப்பட்டுக்கொண்டிருந்தன. இந்த நிலையில் தமிழகத்தில் கோடம்பாக்கத்தில், ஜக்கிரியா காலனியில் மற்றொரு போராளி குழுவான E.P.R.L.F தலைவர்கள் கிட்டத்தட்ட இருபது பேர் ஒரே நாள் இரவில் சுட்டுகொல்லப்பட்டனர். இதர போராளிகுழுக்களை மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாக செயல்பட்டுக்கொண்டிருந்த முதியவர்களான அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் போன்றவர்களையும் கொன்றனர் புலிகள். தங்களை தவிர்த்து வேறு எந்த அமைப்பையும் செயல்பட விடாமல் முழுமையாக அழித்தொழித்தனர் புலிகள்.
.
இதனிடையே திமுகவின் கோரிக்கையால் இலங்கையிலிருந்து அமைதிப்படையை மத்திய அரசு வாபஸ் பெற்றது. அமைதிப்படை சென்னை வந்த போது அதை வரவேற்க போகப்போவதில்லை என்று கலைஞர் தெரிவித்தார்.
.
இதனிடையே வாழப்பாடி ராமமூர்த்தி மற்றும் ஒன்று பட்ட அதிமுகவுக்கு பொது செயலாளராக உருவாகியிருந்த ஜெ, சோ, சுப்ரமணிய சாமி எல்லோரும் சேர்ந்து விடுதலைபுலிகளுக்கும் திமுகவுக்கும் தொடர்பு இருப்பதாக தொடர் பிரச்சாரங்களை செய்து வந்தனர். இதற்கிடையில் மத்தியிலும் வி.பி சிங் அரசு மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தவும் அந்த ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து சந்திரசேகர் காங்கிரஸ் தயவில் ஆட்சியில் அமர்ந்து கொண்டார். சுப்ரமணிய சாமி அமைச்சரானார். சுபோத் காந்த் சகாய் என்ற மத்திய உள்துறை இணைஅமைச்சரை சென்னைக்கு அனுப்பி சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்து சட்டம் ஒழுங்கு கெட்டிருப்பதாக மீடிவிடம் சொல்ல வைத்தார்கள். தொடர்ந்து மாநில அரசுக்கு எதிராக அறிக்கை அனுப்பும்படி அன்றைய ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்களிடம் மத்திய அரசு நிர்பந்தம் செய்தது. அவர் அறிக்கை கொடுக்க மறுக்கவும், ஆளுநர் பரிந்துரையில்லாமலேயே மத்திய அரசின் பரிந்துரையோடு அன்றைய குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமன் திமுக ஆட்சியை கவிழ்த்தார். அதன் பிறகு சில நாட்களில் மத்தியிலிருந்த சந்திரசேகர் அரசும் ராஜீவ் வீட்டை உளவு பார்த்ததாக காங்கிரசால் குற்றம்சாட்டப்பட்டு கவிழ்க்கப்பட்டது. மக்களவை கலைக்கப்பட்டது.
.
அதனை தொடர்ந்து 1991 மே மாதம் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் விடுதலை புலிகளின் தற்கொலை படையை சேர்ந்த மனித வெடிகுண்டான தணு என்ற பெண்ணால் கொடூரமாக கொல்லப்பட்டார். தொடர்ந்து அந்தப்பழியும் திமுக மீது விழுந்தது. அதனால் பொது தேர்தலில் திமுக தோல்வியடைந்து அதிமுக வெற்றி பெற்றது. அதன் பிறகு நடைபெற்ற அதிமுக ஆட்சியில் மத்திய உளவுப்பிரிவு மாநில அரசுக்கு அனுப்பிய ஒரு செய்தியில் வை.கோபாலசாமியின் அரசியல் ஆதாயத்துக்காக விடுதலைபுலிகள் கருணாநிதியை கொல்ல சதி என்று ஒரு தகவலை தெரிவித்திருப்பதாக கலைஞர் பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்தார். இந்த செய்தி அரசிடமிருந்து தனக்கு வந்ததாகவும் தெரிவித்தார். அதை தொடர்ந்து நடந்த சம்பவங்களால் புலிப்பிரியர்கள் பெரும்பாலானோர் திமுகவிலிருந்து வெளியேறி தனி இயக்கம் கண்டனர். இப்படி பல காலகட்டங்களில் விடுதலை புலிகளால் திமுக அனுபவித்த பழிகளும், சங்கடங்களும் ஏராளம்.
.
அதனாலதானோ என்னவோ பழைய சம்பவங்களை தெரிந்த திமுக ஆளுங்க இப்பெல்லாம் 2009 இறுதி போர் குறித்து கலைஞரை சாடும் போதெல்லாம் பதிலுக்கு புலிகளையும், பிரபாகரனையும் கடுமையா சாடுறாங்க.

இராஜிவ் காந்தி தமிழக மண்ணில் படுகொலை

இன்று இராஜிவ் காந்தி தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்ட நாள்.
இராஜிவ் காந்தி கொல்லப்பட வேண்டியவர்தான். அவருக்கு வழங்கப்பட்டது மரணதண்டனை. இப்படியெல்லாம் வெட்டிவாய்சவடால் அடிக்கலாம்தான். நானே ரொம்ப காலத்துக்கு இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்தவன் தான்.
இராஜிவ் படுகொலையின் பின்விளைவுகள் என்னவென்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். இன்று தோழர் ஜெயனாதன் குறிப்பிட்டிருப்பதைப் போல, தமிழகம் இன்றுவரை இராஜிவ் கொலைக்கான விலையை கொடுத்துவருகிறது.
இராஜிவ் கொலைதான், தமிழக அரசியலில் ஜெயலலிதா என்கிற நபரை அசைக்கமுடியாத சக்தியாக உருவாக்கியது. இராஜிவ் கொலைதான், வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வி.பி.சிங் என்கிற மாணிக்கக் கல்லை தூக்கிவீசியது. இராஜிவ் கொலை ஏற்படுத்திய வெற்றிடம்தான், இந்துத்துவ அரசியல் வளர்ச்சிகான பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தது.
இராஜிவ் காந்திக்கு கொடுத்த மரணதண்டனை என்பது, ஈழத்தமிழர்களுக்காவது எந்த வகையிலாவது பயன்பட்டதா என்றால், அதுவும் கிடையாது! ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை, உலகத்தில் எந்தவொரு நாடும் அங்கிகரிக்காமல் அவர்கள் அனாதைகளாக தனித்து விடப்பட்டது இராஜிவ் கொலையால்தான்.
13 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்த திமுக, இந்திய அமைதிப்படை இலங்கையில் நடத்திய அட்டூழியங்களை தொடர்ந்து கண்டித்து அந்த படையை திரும்ப அழைப்பதற்கு அழுத்தம் கொடுத்துவந்தது. விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரித்தவராக அன்றைய முதல்வர் கலைஞர் இருந்தார். ஆனால், அந்த ஆட்சிக்கு ஆபத்துவரும் என்பது குறித்த எந்த அக்கறையும் இல்லாமல், பத்பனாபா உள்ளிட்ட 15 பேரை பட்டப்பகலில் சென்னையில் வைத்து கொலைசெய்தனர் புலிகள். அதில் இரண்டு அப்பாவி தமிழ்நாட்டுத் தமிழர்களும் செத்தனர். ( இரண்டுப் பேர் சாவதெல்லாம் பெரியவிசயமா, தனி நாடு என்கிற பெரிய லட்சியத்திற்கு முன்னால் இந்த சாவெல்லாம் சும்மா என்பதுதான் புலி வெறியர்களின் மன நிலை ) திமுகவின் ஆட்சி கலைக்கப்பட்டது.
இந்திய அமைதிப்படையை திரும்பப் பெற்றவர் வி.பி.சிங். 1991 பொதுத்தேர்தலில். இராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டால், அந்த அனுதாப அலையில் வி.பி.சிங் காணாமல் போவார் என்பது குறித்த அக்கறை எதுவும் கொலை செய்தவர்களுக்கு இல்லை.
தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் முகவரியாக இருந்த இடம் பெரியார் திடல். ஒருமுறை பிரபாகரனுக்கு அனுப்பப்பட்ட போலிஸ் சம்மன், பெரியார் திடல் என்று முகவரியிட்டுதான் அனுப்பப்பட்டிருக்கிறது. இராஜிவ் காந்தி கொலையினால் திராவிடர் கழகத்திற்கு சிக்கல் வரும் என்கிற கவலையெல்லாம் புலிகளுக்கு இல்லை. இது உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்கிற செயல் இல்லையா?
இராஜிவ் காந்தி கொலை என்பது எந்த வகையிலும் ஈழத்தமிழர்களுக்கோ, தமிழ் நாட்டு தமிழர்களுக்கோ அல்லது எவருக்குமோ எந்த வித நன்மையையும் கொடுக்கவில்லை !!! மாறாக இன்றுவரை தமிழ் நாடு அதன் பின்விளைவுகளுக்கான விலையை கொடுத்து வருகிறது!
இராஜிவ் காந்தி பெரிய யோக்கியரோ, புனிதரோ கிடையாதுதான். ஆனால், இராஜிவ் காந்திக்கு மரணதண்டனை வழங்கிவிட்டதாக மீசையை முறுக்குகிற பெரியார் இயக்க வீரர்களிடம் ஒரு கேள்வி. சரி, இராஜபக்சேவுக்கும், கருணாவிற்கும் எப்போது மரணதண்டனை வழங்கப்போகிறார்கள்? குஜராத் படுகொலை செய்தவர்களுக்கு யார் மரணதண்டனை வழங்கப்போகிறது? பெரியார் இயக்கங்கள் அதற்கான ஆட்களை தயார் செய்துவருகிறதா? பின் எதற்கு இந்த வீண் மரணதண்டனை சவடால் எல்லாம்???

பங்கர் பிரபாகரன்

அறிவுடைமை உள்ள ஒரு சமூகமாக இருந்த யாழ் தமிழர்களை இன்று ஒரு வேலை செய்து பிழைக்க கூட வழியில்லாமல் செய்தவன் பங்கர் பிரபாகரன். அது மட்டுமல்ல, அவர்களின் மூளையைக் கூட செயல்பட வைக்க முடியாத zombies ஆக மாற்றி வைக்கப்பட்டிருப்பதை மேலே உள்ள சில பின்னூட்டங்களில் பார்க்கலாம்.

புலிகளின் அரசியல் தத்துவம்

Q:
புலிகளுக்கு அரசியல் தத்துவம் இல்லை,
என்னது?.
தத்துவம், தத்துவம், தத்துவமில்லை...

டேய், அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்க்குள்ளயே நொழஞ்ச ஆளுங்கடா, உலக அளவில் மிக வலிமையானதுடா புலிகளின் உளவு அமைப்பு, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து லத்தீன் அமெரிக்க நாடுகள் வரைக்கும் புலிகளின் ராஜ்ய உறவு இருந்ததுடா, நீதி நிர்வாகம்னு ஒரு தேச அரசையே தற்சார்புள்ளதா கட்டி எழுப்பி ஆண்டவங்கடா, புலிகளின் சோஷலிச தமிழீழம் மேனிபெஸ்டோ பாத்திருக்கியா?.. நடைமுறையில் சாதி ஒழிக்கப்பட்ட, பூரண பெண் விடுதலையடைந்த ஒரு தேச அரசு இந்து சமூகத்தில் ஈழத்தை தவிர எங்காவது பாத்திருக்கியா?..
அரசியல் தத்துவம்னு உங்கட்ட உருப்படியா இருந்தது மாநில சுயாட்சிதானே அதையும் மார்வாடி அரசுக்கிட்ட வித்து தின்னுட்டிங்கதானே?.
இத்தனை வருசத்துல கர்நாடகா ஆந்திராவுல தாக்கப்படுற தமிழர்களையே காப்பாத்த துப்பு இல்லைல, இந்த லட்சணத்துல 20 நாட்டு ராணுவத்தை எதிர்த்து சண்டைபோட்டு மடிந்த போராளிகள பார்த்து மக்களை காப்பாத்தலைன்னு சொல்லலாமா?..
நாம வாங்குற 5, 10 அரசியலுக்கு அந்த மாபெரும் போராளிகள இழுக்கலாமா?
உங்க ரேஞ்சுக்கு அரசியல் பண்ணுங்க தல?
ஒரு அதிமுக, ஆளுநர் சந்திப்பு, சட்ட பேரவைய உடனே கூட்டணும் ஊழல் ஆட்சி அப்டி ஏதாவது பேசுங்க அதுல ஒரு நியாயம் இருக்கு..
அரசியல் தத்துவத்தை பத்தியெல்லாம் நாம பேசலாமா?..


A:

ஆம் தத்துவம் இருந்தது!
1. அமைதி கொடி அசைத்து நார்வேகாரன் வந்தாலும், நாயை அடித்து விரட்டுவதுப்போல் விரட்டும் வெற்று வீராப்பு இருந்தது!
2. வால் சிடீரீட் வரை வால் நீட்டியிருந்தாலும், போரை கட்டி புலம் பெயர்ந்த தமிழகர்களிடம் புடுங்கியதையெல்லாம் அமெரிக்கார
ன் கட்டியெழுப்பியை சர்வதேச பண பரிவர்த்தனை தடங்களையே பிரயோஜப் படுத்திய மடத்தனம் தத்துவமாய் இருந்தது.
3. எந்த ராஜாங்களோடு நட்பு பாராட்டியிருக்க வேண்டும், எந்த ராஜாங்கத்தோடு வெறுப்பு வளர்த்திருக்க வேண்டும் என்று விவஸ்த்தை இல்லாமல் உதவிக்கு வர முடியாத மேற்கு ஆப்ரிக்க நாடுகளோடும், லத்தீன அமெரிக்க நாடோடு தொடர்பு வைத்திருந்தற்கு பதிலாக சீனாக்காரனோடு நட்பு பாராட்டியிருந்தால் அமெரிக்கா, இந்தியா, சிங்களம் என எல்லோரும் பொத்திகொண்டு இருப்பார்களே, இதுவும் தத்துவம்.
4. ஈழத்திலே கூட தமிழ் பேசும் முஸ்லீம்களை காத்தான்குடியில் கொலை செய்து தூரமாக்கியது மிக பெரிய தத்துவம்.
5. தமிழீழ சோஷலீச அரசாங்க இரண்டாண்டில் சாதித்தது என்று பெருமை பீத்துபவர்களை தமிழகத்தில் ஒரு சொட்டு ரத்தமில்லாமல் தமிழகத்தை இந்தியவில் முதன்மை மாநிலமாக மாற்றிய திராவிட தலைவர்களிடம் உங்களைப்போல் தத்துவமில்லாமல் இருக்கலாம், ஆனால் சூட்சமம் இருக்கிறது.

நாங்கள், இன்னும் உயிரோடு இருக்கிறோம். எங்கள் உரிமைகளை அரசியலில் முண்டி பெற பயிற்சி பெற்றிருக்கிறோம். நீங்கள் ஒன்றரை லட்ச மக்களை காவு கொடுத்துவிட்டு 'மான் கராத்தே' ஆடும் சீமார்களை நம்பி பழம்பெருமை பேசி கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் 30 வருடத்திற்கு முன்னால் தொடங்கிய புள்ளியிலிருந்து தொடங்கும் அவலம் உங்களுக்கு.



point:

கலைஞரின் உண்ணாவிரத்திற்கு பிறகு சீஸ்ஃபயர் அறிவிப்பு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் சென்னை வந்து இலங்கை அரசு அனுப்பிய ஃபேக்ஸ் செய்தியைக் காட்டுகிறார். காலை 7 மணிக்கு துவங்கிய உண்ணாவிரதத்தை 2 மணியளவில் முடிக்கிறார் கலைஞர்.

ஆனால் அடுத்த மூன்று நாட்கள
ில் மீண்டும் போர் துவங்கியது எப்படி??

கலைஞரின் உண்ணாவிரதத்திற்கு அடுத்த தினத்திற்கு அடுத்த தினம் புலிகளின் அரசியல் ஆலோசகராய் அப்போது இருந்த திரு.நடேசன் "நாங்கள் செய்வது பின் வாங்கும் தந்திரோபாயம்! கருணாநிதி எங்கள் வெற்றியை மழுங்கச் செய்கிறார் என்று அறிக்கை வெளியிட்டார். "இன்னும் ஒரு சில தினங்களில் இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்துவிடும், பிஜேபி நிச்சயம் வெல்லும். அதுவரை தாக்குப் பிடியுங்கள்" என்று தமிழக அரசியல்வாதிகள் குடுத்த யோசனையைக் கேட்டே புலிகள் போரை நீடித்ததாக நார்வே குடுத்த அறிக்கை இப்போதும் இணையத்தில் இருக்கிறது!

போர் நிறுத்தம் என்றால் இரு தரப்பும் நிறுத்த வேண்டும். ஒருவர் மட்டும் நிறுத்தி மறு தரப்பு நிறுத்தாமல் அடிப்பதற்கு பெயர் போர் நிறுத்தம் அல்ல.

கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார். அறிவிப்பு வந்தது. ஆனால் நாங்கள் தொடருவோம் என்று சொன்னவர்கள் யார்????????????

அன்றைக்கு மொத்த மீடியாவும் திமுகவுக்கு எதிராக இருந்த நிலையில் பல செய்திகள் மக்களிடம் மறைக்கப்பட்டது. சமூக வலைதளத்தின் வீச்சும் இந்த அளவிற்கு இல்லை அப்போது.

ஆனால் அதையும் மீறி மக்களிடம் சொல்ல ஒரு வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்து அநியாயமாகக் கோட்டை விட்டார். எப்படி?

"போர் நிறுத்தம் வந்துவிட்டது என்று சொன்ன பிறகும் போர் நடக்கிறதே?" என்று கலைஞரிடம் கேட்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள். பெரிய இலக்கியத் தரமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு இந்த மனுசனும் " மழை விட்டும் ( அதாவது இலங்கை நிறுத்தியும்) தூவானம் விடவில்லை ( புலிகள் விடவில்லை) என்றார். இதற்கு பதிலாக நேரடியாக " இலங்கை நிறுத்திருச்சு. அவங்க நிறுத்தலையே! என்னைய என்ன பண்ண சொல்றீங்கன்னு? பாமரத்தனமாகக் கேட்டு இருந்தால் அது மக்களுக்கு எளிதில் புரியும் செய்தியாகி இருக்கும். இலக்கிய வாயால் அதைக் கோட்டை விட்டார் தலைவர் கலைஞர். இந்த விசயத்தில் எனக்கு அவர் மேல் தீராத கோபம் உண்டு.

இனி புலிகளின் கதையும், ஈழமும் மொத்தமாய் முடிந்தது என்பதை உணர்ந்த ஜெயலலிதா...தன் வாழ்நாள் முழுவதும் புலிகளை ஈழத்தை எதிர்த்த ஜெயலலிதா போர் முடிவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் தனி ஈழமே தீர்வு என்று..நடக்காது என்று உறுதியாகத் தெரிந்த விசயத்திற்கு பல்டி அடித்து பேசி ஈழத்தாய் ஆனார். கலைஞர் துரோகியானார்.

இன்றைக்கு புலிகள் வாழ்க ஈழம் வாழ்க என்று யார் வேண்டுமானாலும் பேசலாம். ஈழம் என்று வாயை அசைத்தாலே பொடாவிலும் தடாவிலும் தள்ளிய அன்றைய நேரத்தில் பிரபாகரன் வாழ்க தமிழ் ஈழம் வெல்க என்று எழுதிய யுவகிருஷ்ணாக்களும் அப்துல்லாக்களும் நரேன்களும் இன்று திடீர் குபீர் டாலர் வசூல் போராளிகளுக்கு இன்று தமிழின விரோதியாகிப் போனோம். மகிழ்ச்சி .

Saturday, May 20, 2017

உயிர்கொடுத்து எங்களை விடுவித்தவ‌ர் ராஜிவ்

ஒரு ஈழ சிந்தனையாளர் ஒருவரிடம் பேசிகொண்டிருக்கும் பொழுது சொன்னார், அவர் புலி குஞ்சு அல்ல மாறாக சிந்திப்பவர்
"எங்கள் நாட்டில் புலிகள் காலங்களில் எங்கள் நாட்டில் நடந்த கொடூரங்கள் உங்களுக்கெல்லாம் ஓரளவுதான் தெரியும், முழுக்க தெரியாது
கொலைக்கும், கொள்ளைக்கும் போராட்டம் என பெயர், அவர்களை கட்டுபடுத்த யாராலும் முடியவில்லை, காலம் அப்படி
நாங்கள் வாழ்ந்த பரிதாப வாழ்வு அப்படி
ஏதோ ஒரு சக்தி ராஜிவினை கொல்ல அவர்களுக்குள் புகுந்தது , ராஜிவ் மட்டும் சாகவில்லையென்றால் எங்களுக்கு விடிவே இல்லை
உயிர்கொடுத்து எங்களை விடுவித்தவ‌ர் ராஜிவ்"
அந்த ஈழதீயில் தன்னையே எரித்து உண்மையினை உணர்த்தியவர் அவர்
ராஜிவ் தமிழகத்தில் சாகவில்லை என்றால், தொடர்ந்து பல அரசியல் கொலைகள் நடந்திருக்கும், புலிகளை எதிர்த்த எல்லோரும் கொல்லபட்டுகொண்டே இருந்திருப்போம்
ராஜிவ் அதனை தடுத்திருக்கின்றார்
ராஜிவோடு கொல்லபட்டு, தமிழகத்தில் புலிகளின் கொலைகரங்களை முறித்த அந்த 15 தமிழருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்
அதில் எம் நெல்லை மாவட்ட காவல் அதிகாரியும் உண்டு
அவர்கள் எல்லாம் செத்து தமிழகத்தை அமைதியாக்கியிருக்கின்றார்கள், அவர்கள் தான் மாவீரர்கள்
ராஜிவிற்கும் அவர்களுக்கும் வீரவணக்கம்

ராஜிவ் கொலை

ராஜிவ் கொலைகுற்றவாளிகள் பற்றி என் பதிவுகளில் யாரும் பின்னோட்டம் இடவேண்டாம், அப்படி பதிவிட்டால் நீக்கபடும், நட்பும் துண்டிக்கபடும்
ராஜிவ் கொலையில் இவர்களுக்கு சம்பந்தம் இல்லை என சொல்லவேண்டியது நீங்களோ, நானோ அல்ல, அதில் மிக முக்கியான குரல் பிரபாகரனிடம் இருந்து வந்திருக்க வேண்டும்
இவர்கள் நிரபராதிகள் என அவன் தான் சொல்லியிருக்க வேண்டும், ஆனால் அவனுக்கோ இந்த 7 பேரும் சயனைடு கடித்த பட்டியில் இருந்ததாகவே நினைவு, அவன் முடிவு அப்படி
ஆக அந்த 7 பேரும் என்றோ மாவீரர் ஆகிவிட்டவர்கள், அதனால் அந்த குற்றவாளிகளை பற்றி இங்கு வந்து சொல்லிகொண்டிருக்க வேண்டாம்..
அவர்களை காப்பாற்றும் பொறுப்பு புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் இருந்தது, சாட வேண்டுமென்றால் அவரை சாடுங்கள்
நளினி சம்பாதித்து படிக்கவைக்க முடியாத நளிய்யினின் மகள் லண்டனில் டாக்டராகிவிட்டாள், படிக்க வைத்தது யார்? கூலி கிடைத்ததா இல்லையா?
எல்லோரும் அவரவர்க்கான கூலியினை பெற்றுவிட்டார்கள், கூலிப்படை கொடுத்துதான் கணக்கை முடித்திருக்கின்றது
அதனை பற்றி பேசாமல் இருப்பது நல்லது

ஆரம்பத்திலேயே தூக்கில் போட்றுந்தா இன்னேரம் மறந்துறுப்பாய்ங்க.

ராஜிவ் அமைதிபடையினை அனுப்பினார் அதனால் புலிகளால் செத்தார் என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான்
அட மானிட பதர்களா, தமிழனத்தினை இலங்கை மண்ணிலிருந்தே கருவருப்பேன் கன கங்கணம் கட்டி நின்ற தமிழின விரொதி ஜெயவர்த்தெனே என்றொருவன் இருந்தானே, கொழும்பில் 10 ஆயிரம் தமிழரை கொளுத்தினானே, யாழ்பாண நூலகத்தை கொழுத்தினானே அவனை என்ன செய்தார்கள் புலிகள்?
அமைதிபடையினை இலங்கைக்கு அழைத்த ஜெயவர்த்தனேக்கு என்ன நடந்தது? ஒன்றுமே இல்லை
ஈழசிக்கலின் பிதாமகன் ஜெயவர்த்தனே, அவன் தான் ராஜிவினை தந்திரமாக இழுத்துவிட்டு, புலிகளை சீண்டிவிட்டு ஆடியவன், அவனுக்கு புலிகளும் எதிரி , இந்தியாவும் எதிரி
ஆனால் இருவரையும் மோதவிட்டு இந்தியாவினை ஓரங்கட்டி , பின் புலிகளை எப்படி ஒழிக்கவேண்டும் என அஸ்திவாரம் எழுப்பியவனும் அவனே
புலிகள் வீரர்கள், மானமுள்ளவர்கள், பழிவாங்குவதில் சூரர்கள் என்றால் ஜெயவர்த்தனேவினை கொன்றிருக்கவேண்டும் செய்தார்களா?
அட அதன் பின்னாவது கோத்தபாய, மஹிந்த என தொட்டார்களா?
புலிகள் என்பது யார்? தனக்கு பிடிக்காதவர்களை அவர்கள் எதிர்பாரா நேரத்தில் நம்ப வைத்து அடித்து கொல்லும் கூட்டம்
ராஜிவ், பிரேமதாசாவினை அப்படித்தான் கொன்றார்கள், விழிப்பாக இருப்பவன் பக்கம் செல்ல கூட மாட்டார்கள்
அதுவும் ஜெயவர்த்தனே போல அமெரிக்க விசுவாசி என்றால் அவன் பக்கமே செல்லமாட்டார்கள், அதுதான் புலிகள்
ஒருசிலர் இன்று அமைதிபடை , பழி என என்னமோ சொல்லிகொண்டிருக்கின்றான்
அப்படி மானமுள்ள புலி ஏன் ஜெயவர்த்தனே பக்கம் செல்ல கூட இல்லை என பதில் கேள்வி கேட்டால் பதிலே இல்லை
அமைதிபடையினை வரசொல்லி கேட்டதே ஜெயவர்த்தனே தான், அவன் மகாராஜா போல வாழ்ந்து நிம்மதியாக செத்தான்
ஏன் புலிகள் ஜெயவர்த்தனேவினை கொல்லவில்லை என எவனாவது மலையாள மந்திரவாதியினை பிடித்து, பிரபாகரன் ஆவியினை துப்பாக்கி முனையில், சயனைடு குப்பியில் வரவழைத்து கேட்டால் தான் உண்மை தெரியும்..
இப்படியான கோணங்கள் எல்லாம் சீமானிய அடிப்பொடிகளிடம் இல்லை, அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் கலைஞர் ஒழிக...
சிதறி செத்திருக்க வேண்டியவன் ஜெயவர்த்தனேவே தவிர ராஜிவ் அல்ல, இதுதான் உண்மை
வரலாறு இப்படி இருக்க சிலர் இன்று குதித்துகொண்டிருக்கின்றான்
அவனுகளும் அவனுக படித்த ஈழமும்.. போங்கடா டேய்

யார் தமிழ் மக்கள் , அவன் ஸ்ரீலங்கா தமிழன் டா , நீ இந்திய தமிழன் டா , அவன் கொன்னது உன்னோட நாட்டு பிரதமரை , ,, இந்தியா செய்யாம விட்டது MOAB (அமெரிக்கா காரன் ஆப்கானிஸ்தான் ல போட்டான் ல அது) அங்கே போடாம விட்டது தான்டா , அப்படி போட்டு இருந்தால் இன்னைக்கு நீங்கல்லாம் சத்தம் போட மாட்டிங்க .


 
 

ராஜிவிற்கு ஜெயா கொன்ற நன்றி

அந்த படுகொலை தமிழகத்தில்தான் நிகழ்ந்தது , தமிழகம் தன் தாய்வீடு என நம்பி வந்த தலைவன் இங்குதான் செத்தான்
அவனின் சாவில்தான் ஜெயா ஆட்சிக்கே வந்தார், ராஜிவின் ரத்தம் இங்கு சிந்தியிராவிட்டால் ஜெயா அரசியல் வாழ்வு முளைத்தே இருக்காது
1984ல் தொல்வியின் விளிம்பில் இருந்த ராமசந்திரன் இந்திரா கொலையில் கிடைத்த அனுதாபத்தில், அவருடன் இருந்த கூட்டணியால் தப்பினார், இல்லை அன்றே தோற்றிருப்பார்
1991ல் ஜெயா முதல்வரானதும் ராஜிவ் கொலையிலே தான், இரு பெரும் தலைவர்களின் அனுதாபமும் தமிழகத்தில் அதிமுகவிற்குத்தான் சென்றதே தவிர காங்கிரசுக்கு அல்ல, அப்படி ஒரு அப்பாவி கட்சி அது
அந்த தலைவனின் நினைவிடம் இங்குதான் இருக்கின்றது, என்றாவது ஜெயாவோ கலைஞரோ அங்கு அஞ்சலி செலுத்த கண்டீர்களா?
கலைஞர் செல்லமாட்டார், அப்படி சென்றால் அவர் நினைவுகளை கிளறிவிட்டு காங்கிரஸ் வந்துவிடும் என்பதால் அல்ல, மாறாக ஒரு குற்றவுணர்ச்சி அவர் நெஞ்சில் இருக்கலாம்
பத்மநாபா கொலை நடந்தபொழுதே அந்த சிவராசனை, தஞ்சைபக்கம் போலிசில் சிக்கிய சிவராசனை சுட்டு கொன்றிருந்தால் ராஜிவ் கொலை நடந்திருக்காது, கலைஞருக்கு அது நன்றாகவே தெரியும்
ஆனால் இவ்வளவு தூரம் கொடூர புலிகள் செல்வார்கள் என யாரும் நினைத்து பார்க்கவில்லை, அப்படி கலைஞரும் நினைக்கவில்லை, ஆனாலும் கலைஞரின் மன்சாட்சி உலுக்கியிருக்கலாம்
ஆனால் ஜெயலலிதா?
கொஞ்சமேனும் நன்றி இல்லாதவர் அவர்தான், ஜெயாவினை அரசியலில் உயர்த்திவிட்டதே ராஜிவ், கடைசியாக உயிர்கொடுத்து முதல்வராக்கியதும் அவரே
அன்று ஜெயாவும், ராஜிவும்தான் கூட்டணி, ஆனால் அந்த கூட்டத்திற்கு ஜெயா வரவில்லை ஏன்? பலத்த சந்தேகம் தான், ஆனால் முன் கூட்டியே மறுநாள் ராஜிவ் கலந்துகொள்ள இருந்த கிருஷ்ணகிரி கூட்டத்திற்கு தயாராக ஜெயா அங்கே இருந்ததால் சந்தேகம் தீர்ந்தது
ராஜிவ் திருப்பெரும்புதூரில் தப்பியிருந்தால் மறுநாள் கிருஷ்ணகிரியில் ஜெயாவோடு கொல்லபட்டிருப்பார்
அப்படி ராஜிவினை நினைக்க வேண்டிய ஜெயா என்றாவது திருப்பெரும்புதூர் சென்றதாக சொல்லமுடியுமா?
அதனை கூட மன்னித்துவிடலாம், அதற்கொரு காரணம் சொன்னார் பாருங்கள்
"நான் ஏன் திருப்பெரும்புதூர் செல்ல வேண்டும்? சென்னைக்கு வரும் காங்கிரசார் எல்லாம் அண்ணா சமாதிக்கு செல்கின்றார்களா?"
ராஜிவிற்கு ஜெயா கொன்ற நன்றி கொஞ்சமல்ல..

Friday, May 19, 2017

பிரபாகரன் & கலவரம் & அமைதி

ஈழதமிழர் விவகாரத்தில் பலர் அள்ளிவிட்டனர், கடைசியில் வந்து கப்சா விட்டவர் ஜெகத் கஸ்பர் எனும் பாதிரி, சும்மா சொல்ல கூடாது , அவர்தான் சீமானுக்கு முன்னோடி
புலிகள் பற்றி அவர் அள்ளிவிட்ட கதைகள் ஏராளம்
அதாவது இவர் பிரபாகரனை பார்த்து நாள்கணக்காக பேசி ஒரே இலையில் உண்டு மகிழ்ந்தாராம்
ஒருநாள் பிரபாகரன் சொன்னாராம், "பாதர், 1983க்கு பின்னால இன்னைக்கு வரைக்கும் கொழும்பில, மற்ற இடத்தில‌
சிங்களன் தமிழரை அடிக்கையில்லை, ஏன் என்டால் புலியள் திருப்பி அடிக்கும்ங்க்ற பயம்
அந்த பயபயத்துலதான் பாதர், இந்த நாட்டிலே தமிழன் வாழமுடியுது, புலியள் இல்லண்ணா ஒரு நொடி கூட தமிழன விடமாட்டான்"
உடனே கஸ்பார், "பிதா சுதன் பரிசுத்தஆவி பெயராலே ஆமென், ஸோஸ்த்திரம் கர்த்தாவே ஸ்ஸோஸ்திரம் புலியள் இல்லாட்டி தமிழினம் அழிஞ்சி போயிரும் கர்த்தாவே" என நெற்றியில் சிலுவை போட்டாராம்
இன்றோடு புலிகள் அழிந்து 8 வருடம் ஆகின்றது, எங்காவது ஒரு கலவரம் இலங்கையில் நடந்திருக்கின்றதா?
ஒரு ஈழதமிழன் வலியோடு சொன்னது நிஜம்
"பிரபாகரன் பிறந்தான், அமைதியான நாட்டில் குண்டுகள் வெடிக்க தொடங்கின, அவன் இறந்ததும் மறுபடி நாடு அமைதியாயிற்று"
ஆக புலிகள் இல்லையென்றால் இலங்கை தமிழர் எல்லாம் அழிந்துவிடுவர் என்பதெல்லாம் தமிழக பொறுப்பற்றதரப்பினர் கட்டிவிட்ட கதைககளில் ஒன்று
சீமான், வைகோ, வேல்முருகன், திருமுருகன், திருமாவளவன் இந்த பாத(க)ர் எல்லாம் ஒரே வரிசை..

புலிகள் வெற்றி பிம்பம்

புலிகள் எங்குமே முழு வெற்றி பெற்றவர்கள் அல்ல, அவர்களின் சிறிய தாக்குதலையும் ஏதோ பெரும் அமெரிக்க தாக்குதல் போல சித்தரித்தவை தமிழக ஏடுகள், அங்கே சும்மா புலிகள் ஆயுதம் இல்லாதவனை சுட்டால் கூட, இங்கே பெரும் யுத்தம் இலங்கையில் நடந்தது போல எழுதுவார்கள்
அப்படித்தான் புலிகளின் செய்திகள் இருந்தன, தாக்குதல் வெற்றிக்கும், பெரும் போருக்கும் புலிகளுக்கும் வெகுதூரம், எல்லாம் ஊதிபெருக்கிய பிம்பம்
அன்றைய வடமராட்சியில் அவர்கள் கதை முடியும்பொழுதே ராஜிவ்காந்திதான் காத்தார்,
புலிகள் அப்படித்தான் சிங்களனை அடித்துவிட்டு ஓடுவார்கள், அல்லது மக்கள் நடுவில் அமர்வார்கள், சிங்களன் வந்து மொத்தமாக அப்பாவிகளை கொல்வான்,
இப்படித்தான் அவர்களின் வீரவிளையாட்டு பொதுவாக‌ இருந்தது
அவர்களின் ஒரே பலம் ஊதிபெரிதாக்கும் ஊடக செய்திகளும், ஆண்டன் பாலசிங்கத்தின் வாயும்
ஆனால் ஒரே ஒரு இடத்தில் புலிகள் முழுவெற்றி பெற்றார்கள், அது ஆனையிறவு தாக்குதல் , முக்கியமான வெற்றி அவர்களின் முந்தைய‌ 20 வருட போராட்டத்தில் அது ஒன்றுதான் உச்ச வெற்றி...
இலங்கையின் வரைபடத்தினை கவனித்தால் புரியும் யாழ்பாண பகுதிகளையும் இலங்கையினையும் இணைக்கும் நிலபரப்பது அதுவே, மிக முக்கியமான பகுதி, அங்கு இலங்கை ராணுவத்தின் முகாம் இருந்தது 50 ஆயிரம் வீரர்கள் இருந்தனர்
கிட்டதட்ட 2 ஆயிரம் புலிகளை இழந்து அந்த முகாமினை புலிகள் பிடித்தனர், புலிகள் வாழ்வில் ஒரே வெற்றி
அந்த வெற்றியில் 50 ஆயிரம் சிங்களர்களை புலிகள் சிறைபிடித்தனர், அத்தோடு வடக்கில் இருந்து சிங்களம் வெளியேறிற்று,இனி ஈழக்கொடி ஏற்றவேண்டியதுதான் பாக்கி
அப்படியான நிலை, போரில் புலிகளுக்கு வெற்றிதான், ஆனால் அங்கீகரிப்பது யார்? ராஜதந்திரம் வேண்டும், புலிகளிடம் அது என்றைக்கு இருந்தது..
ஆனால் சிங்களம் ஆடியது, தன் நேசநாடுகளுக்கு தூது அனுப்பியது. எப்படி தூது அனுப்பும்? "எங்கள் உள்நாட்டில் குழப்பம் வந்து தீர்த்து வைப்பீர்.."
இப்படியான அழைப்பு இந்தியாவிற்கும் வந்தது, "நீங்கள் வருகின்றீர்களா அல்லது வேறுயாரையும் அழைக்கட்டுமா? பாகிஸ்தான் கூட தயார்தான்.."
ஆனால் ராஜிவ் கொலைக்கு பின் தயங்கி நின்ற இந்தியா, லேசாக எட்டிபார்த்தது, அப்பொழுது வாஜ்பாய்தான் பிரதமர்
ஈழம் அமைய அதுதான் வாய்ப்பு, அந்த சூழ்நிலை ஒன்றுதான் ஒரே வாய்ப்பு, ஆனால் நடந்ததென்ன?
புலிகளுக்கு இந்தியா சார்பில் ஓலை அனுப்பபட்டது, 50 ஆயிரம் சிங்கள வீரர்களை விடுவித்துவிட்டு , உங்கள் வழியில் செல்லவும் இல்லையென்றால் இந்தியா களமிரங்கும்
அவ்வளவுதான் கிட்டதட்ட 2 ஆயிரம் புலிகள் செத்து கிடைத்த ஒரே வெற்றியும் வீணானது
ஏன் அன்று வாஜ்பாய் அப்படி அறிவித்தார்? ஏன் ஈழம் அமைவதை தடுத்தார்கள்? சரி இந்தியா ஏன் தன் ராணுவத்தை அனுப்பி ஆனையிறவினை மீட்கவில்லை??
இந்தியா மிரட்டவில்லை என்றால் ஐ.நா பன்னாட்டு படை அங்கே வந்திருக்கும், பன்னாட்டு படை என்றால் அமெரிக்க படை என அர்த்தம்,
இந்தியா அதனைத்தான் தடுத்தது
பாலஸ்தீனம் போல ஈழபோராட்டம் சர்வதேச அரசியலை பெறவில்லை, ஒருவகையான ரவுடிச பேரம்பேசுதலாகவே உலகம் அதனை 1991க்கு பின் கண்டது..
ஆனால் இந்தியா ஈழத்தை விரும்புமோ இல்லையோ புலிகள் அழிவதை விரும்பாது, இது ஒரு அரசியல். பன்னீரை வைத்து டெல்லி ஆடுகின்றல்லவா அப்படி
ஈழம் அமைய ஒரே வாய்ப்பான அந்த ஆனையிறவு வெற்றி வீணாய் போனபொழுது வாஜ்பாய் அமைச்சரவையில் வைகோ இருந்தார், ஒரு வார்த்தை எதிர்த்திருப்பார்?
உண்மையில் அன்றுதான் தமிழகம் பொங்கியிருக்க வேண்டும், அன்றுதான் ஏன் புலிகள் பின்வாங்க வேண்டும்? என சீறியிருக்க வேண்டும் ஆனால் எல்லாம் அமைதி, வைகோ, திருமா,நெடுமாறன் எல்லாம் அமைதி
சீமான், வேல்முருகன், திருமுருகன் எல்லாம் அன்று எங்கிருந்தார்களோ தெரியாது, சீமான் பாஞ்சால்ங்குறிச்சி எடுத்துகொண்டிருந்தார்
ஆக அன்று ஈழம் அமைய தங்கள் வாழ்நாளின் உச்சபட்ட ஒரே வெற்றியினை புலிகள் பெற்றபொழுது ஈழம் அமையாமல் தடுத்தது பாஜக அரசு, அருகே இருந்தவர் வைகோ
அதனை எல்லாம் பற்றி ஒருவரும் பேசமாட்டார்கள், மாறாக ஈழத்தை அழித்தது கலைஞர், காங்கிரஸ் என கடும் ஒப்பாரிமட்டும் மறக்காமல் வைப்பார்கள்....
தன் நாட்டில் பெரும் படுகொலை புரிந்த ஒருவனை, இந்திய ராணுவத்தார் 1500 பேரை கொன்ற இயக்கத்தின் தலைவனை, ஒரு நாட்டின் அதிபராக இந்தியா அனுமதிக்குமா? ஒருகாலும் இல்லை
வாஜ்பாய் அதனைத்தான் செய்தார்,அன்று வாஜ்பாய் முன்னால் அமைதியாக இருந்த வைகோதான் பின்னாளில் குதியோ குதி என குதித்தார்..
இந்தியாவிற்கு எதிராக அவ்வளவு காரியங்களை செய்துவிட்டு இந்தியா தங்களை காக்கும் என்றோ, தங்களை அதிபர்களாக ஆளவிடும் என்றோ மனப்பால் குடித்தவர்களை என்ன சொல்லமுடியும்??

தமிழ் கடவுள்கள்

தமிழ்ச் சமூகம் கற்பனையான கடவுள்களை உருவாக்கி வழிபடும் பழக்கம் கொண்டிருந்ததா?..
ராமனை போல நீல நிறம் கொண்ட மனிதர்கள் எங்காவது வாழ்த்திருக்கிறார்களா?, ஆனால் கறுத்த நிறம், தடித்த உடம்பு, சுருள் முடி, கிடா மீசை கொண்ட கருப்பு சாமியின் சாயல் உங்களுக்கும் இருக்கிறதுதானே?,
தமிழர்கள் தாங்கள் வணங்கிய தெய்வங்களுக்கு பிரம்மனை போல மூன்று நான்கு தலைகளோ, நான்கைந்து கை கால்களோ , பிள்ளையாருக்கு போன்று பிளாஸ்டிக் சர்ஜரியோ செய்து பார்த்திருக்கிறீர்களா?.
அப்படியென்றால் தமிழர்களுக்கு கற்பனை வளம் கம்மி என்று எடுத்துக் கொள்வதா?, இல்லை தமிழர்கள் எதார்த்தவாதிகள் என்பதா?..
தமிழ்த் தெய்வங்கள் நிறமும் உருவமும் இந்த மண்ணின் மனிதர்களை பிரதிபலிப்பதாக இருக்கிறது, இந்த நிலத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது, உற்பத்தியோடு தொடர்புடையதாக இருக்கிறது,
பிரம்மனுக்கோ, பிள்ளையாருக்கோ இந்த துணைக்கு கண்டத்தின் ஏதாவது வட்டாரத்தன்மை இருக்கிறதா?, திணைக் கூறுகளைக் கொண்ட தலைவன்களும், போரிட்டு மடிந்த வீரன்களும்தானே தமிழ் தெய்வங்களின் கூறுகள்.
மூன்று திசைகளும் கடல் அரணாக உள்ள தென்னிந்தியாவில் வடக்கு திசை எதிரி நுளையும் வாய்ப்புள்ள பகுதி என்பதால்தானே மாரியம்மனையும், பிற காவல் தெய்வங்களையும் எல்லா தமிழ் கிராமங்களின் வடக்கு எல்லையில் நிறுத்தி இருக்கிறார்கள்,
அப்படியென்றால் வடக்கு எதிர்ப்பு என்பதும் வடக்கு ஆபத்து என்பதும் தானே தமிழ்த் தெய்வங்களே உணர்த்தும் தொன்மமாக இருக்கிறது.
என்றால் வடக்கின் ஆன்மீக ஆதிக்கத்திற்கு, வடக்கின் மார்வாடி பொருளாதார ஆதிக்கத்திற்கு, வடக்கின் ஹிந்தி மொழி ஆதிக்கத்திற்கு எதிராகவும் தமிழ் எல்லை தெய்வங்களை நிறுத்தி வளர்ந்திருக்க வேண்டியது அவசியமில்லையா?..
மூதேவி என்றொரு தமிழ் தெய்வம் விவசாய உற்பத்திக்கு ஆதாரமான மண்ணோடும், சேரோடும், குப்பை உரங்களோடும் தொடர்புடையது, பழந்தமிழர் கடல் வணிகத்தில் மாசாத்தான் என்னும் பெரு வணிகர்கள் கடல் பயணங்களில் தங்களை காக்கும் தேவதையாக ஒரு பெண் தெய்வத்தை வணங்கினார்கள், சாஸ்தா கோவில் வழிபாடுகள் இம்மண்ணின் கூறுகளை உடையதுதானே?.
திராவிட பகுதிகளை போல அதிகமான பெண் தெய்வங்களை கொண்ட பகுதி வேறெதுவும் கிடையாது,
தாய்த்தெய்வ வழிபாடும், தாய்மாமன் மரியாதையும், இறப்பை போற்றும் சடங்குகளும் பழக்கமும் இந்த மண்ணிற்க்கே உடையது, இவை எதுவும் ஆரிய கூறுகளில் இல்லாதது, அவர்கள் கடவுள்களிலும் இல்லாதது.
தமிழ் மக்களால் வணங்கப்படாத சுடலை மாடனையோ காத்தவராயனையோ, அய்யனார்களையோ , அரிவாள்களையோ தமிழ்நாட்டில் எங்கும் எங்காவது பார்க்க முடியுமா,
ஆனால் ஆடு மாடு கூட போகாத உயரமான கோபுரங்களையும் கொடிமரங்களையும் கருவறைகளையும் கொண்ட கோவில்களை நூற்றுக் கணக்கில் சாலை ஓரங்களில் காணலாம்,
இம்மண்ணில் ஆரியத்தை வேரறுக்க, வெகுமக்கள் பண்பாட்டில் வைதீகத்தை வேறுபடுத்தி காட்ட ஆயிரம் கூறுகள் சும்மாவே கிடக்கின்றன..
புராதனமான வைதீக ஆதிக்கம் என்பது அருவமானது கண்ணுக்கு புலப்படாதது, ஆனால நிஜத்தில் இருப்பது, அதனாலேயே ஆரிய எதிர்ப்பும் வெகுமக்கள் தன்மையில் புலப்படுத்த முடியாதிருக்கிறது,
நவீன முரண்களில் ஆரிய எதிர்ப்பை உள்வாங்கிக் கொள்வதும் அவசியமாக இருக்கிறது, புலித்தேவன், ஒண்டி வீரன், மருது சகோதர்களின் வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு கூறுகளை நவீன சமூகத்தில் சரியாக பயன்படுத்திக் கொள்கிறோமா?.
அந்த கூறுகள் அந்த காலகட்டத்தோடு நின்றுவிடுமா மருது சகோதரிகளின், தமிழ் கூறுகள் சம்ஸ்கிருத இந்தி திணிப்பிற்கு எதிராக பயன்படுத்த கூடியது அல்லவா?..
அதுபோலத்தானே தீரன் சின்னமலையும், வீரன் அழகுமுத்துக் கோணும், சுந்தரலிங்கமும், புலித்தேவனுடைய தமிழ் கூறுகளும் ஆரிய பார்ப்பனியத்தின் மேலாதிக்கத்திற்கு எதிரான பயப்படுத்தக் கூடியதுதானே,
அவன் விநாயகரை எடுத்துக்கிட்டு இந்துக்களே முஸ்லீம்களை விரட்டுங்கள்னு வந்தான்னா, நாம வடக்கு எதிர்ப்புன்னு மாரியம்மனை எல்லை சாமிகளை கையிலெடுப்பதில் என்ன தப்பு?,,
நெத்தி நிறைய பட்டை அடிச்சிட்டுதான் மறுத்து சகோதர்கள் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சண்டையிட்டு இருப்பார், ஜக்கம்மான்னு சொல்லித்தான் கட்டபொம்மன் வெள்ளைக்காரனை எதிர்த்து நின்றிப்பார்.
"ஆற்றங்கரையில் இருக்கும் அந்த எளிய மக்களின் களிமண் பொம்மைகளை விட்டு விடுங்கள் அவற்றை சமூகத்திற்கு பயனில்லாதது என்று உணரும்போது அந்த மக்களே தூக்கி வீசிவிடுவார்கள்" என்று மாவோவின் மேற்கோளாக எங்கோ வசித்த ஞாபகம்.
அந்த வார்த்தைகள் எவ்வளவு அரசியல் கொண்டது..

புலிகள் & ராஜிவ் காந்தி

ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு ஒரு தெளிவற்ற நிலைதான், இவர் காரணம் அவர் காரணம் என்று சொல்லிகொண்டே போகலாம் .மிக மிக முக்கியமான கேள்வி என்னவென்றால் ...யார் இல்லையென்றால் ராஜிவ் காந்தி படுகொலை நடந்திருக்காது என்ற கேள்விக்கு உண்டான பதில் விடுதலை புலிகளாவே இருக்கின்றனர்.
இதை விடுதலை புலிகளும் எங்கும் எப்போதும் மறுக்கவில்லை.
நமக்கு ஒருவரை பிடித்திருக்கோ இல்லையோ ... எந்த நாடும் தன் முன்னாள் பிரதமரை (மீண்டும் ஆகப்போகும் பிரதமரை) ஓர் இயக்கம் படுகொலை செய்தால் ஒருபோது அந்த இயக்கத்தை விட்டுவைக்காது. அதுவும் மற்ற நாட்டின் இயக்கம் கொன்றுவிட்டால் அதற்கு பதிலடி கொடுத்தே தீரும் ...
எப்போது ராஜிவ் படுகொலை நடந்ததோ அன்றிலிருந்து ஈழ விடுதலையின் தோல்வி தொடங்கியது ...
விடுதலை புலிகள் இந்தியாவின் உதவிகிடைக்காமல் இருந்தால் கூட வென்றிருக்கலாம் மாறாக மிகவும் முட்டாள்தனமாக பகைத்து கொண்டார்கள் ...அது போரில் எவ்வளவு பெரிய பாதமாக அமையும் என்று கூடவா தெரியாது ? இதனால் மற்ற நாடுகள் விடுதலை புலிகளுக்கு உதவும் வாய்ப்பும் பறிபோனது ...ஏனினில் அவர்களை பொறுத்தவரை விடுதலை புலிகளுக்கு ஆதரவு என்பது ராஜிவ் படுகொலையை ஆதரிப்பது போன்றது, அந்த தவறை அவர்கள் ஒருபோதும் செய்யமாட்டர்கள் ...அது தான் நடக்கவும் செய்தது ..எந்த நாட்டின் உதவி இல்லாமல் எப்படி ஓர் உள்நாட்டின் போரை வெல்ல முடியும் ? அதுவும் தன் பக்கத்தில் இருக்கும் பெரிய நாட்டை பகைத்துக்கொண்டு ?
மீண்டும் சொல்கிறேன் ..
யார் இல்லையென்றால் ராஜிவ் காந்தி படுகொலை நடந்திருக்காது என்ற கேள்விக்கு உண்டான பதில் விடுதலை புலிகளாவே இருக்கின்றனர்.
இதை விடுதலை புலிகளும் எங்கும் எப்போதும் மறுக்கவில்லை.
நமக்கு ஒருவரை பிடித்திருக்கோ இல்லையோ ... எந்த நாடும் தன் முன்னாள் பிரதமரை (மீண்டும் ஆகப்போகும் பிரதமரை) ஓர் இயக்கம் படுகொலை செய்தால் ஒருபோது அந்த இயக்கத்தை விட்டுவைக்காது. அதுவும் மற்ற நாட்டின் இயக்கம் கொன்றுவிட்டால் அதற்கு பதிலடி கொடுத்தே தீரும் ...
எப்போது ராஜிவ் படுகொலை நடந்ததோ அன்றிலிருந்து ஈழ விடுதலையின் தோல்வி தொடங்கியது ...

விடுதலைப்புலிகள் & கலைஞர்

1.
காதல் மனைவி செய்த துரோகத்தை வெளியே சொல்லமுடியாமல் உள்ளுக்குள்ளேயே புழுங்குகிறவனை போலத்தான் விடுதலைப்புலிகள் செய்த தவறுகளைப் பற்றி வாய் திறக்காமல் இருந்தோம். பருத்திவீரன் படத்தில் இறக்கும் தருவாயில் பிரியாமணி ஒரு வசனம் சொல்வார். "நீ செஞ்ச எல்லா பாவத்தையும் எம்மேல வந்து இறக்கிட்டாங்கடா வீரா! " என. அதுபோல எல்லா தவறுகளையும் கலைஞர் மீது சாட்டி பேசாமடந்தையாக இருந்த எங்களையும் பேசவைக்கிறார்கள் .
இந்த எளிமையான கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு விவாதத்தை தொடரலாம் வாருங்கள் :
1. நார்வே அமைதி ஒப்பந்த காலத்தில் ஆன்டன் பாலசிங்கத்துக்குத் தெரியாமல் ஆயுதங்களை குவித்தது யார்? அதன்காரணமாக சர்வதேச அமைப்பு முன்பாக பாலசிங்கம் தவறு செய்தது போல நிற்க வைக்கப்பட்டாரே ஏன்?
2. ரணில் விக்ரமசிங்கே தோற்கடிக்கப்பட்டு ராஜ பக்சே வெற்றி பெற்றது எப்படி?
3. அமைதி ஒப்பந்தத்தை மீறி போரைத் துவக்கியது யார்?
4. போர் நிறுத்த கோரிக்கையை ஏற்க மறுத்து போரை நிறுத்த மறுத்தது யார்?
5. கடைசியாக அப்பாவி தமிழர்களை மனித கேடயமாக பயன்படுத்தியது யார்?

2.
சில ஆண்டுகளுக்கு முன்பு நூற்றில் எண்பது திமுகவினருக்கு பிரபாகரன் மீது ஒருவித மதிப்பும், ஈர்ப்பும் இருந்தது.
இறுதி யுத்தத்தின் போதும், அதன்பின்பும் கூட அந்த நிலை தொடர்ந்திருந்தது. ஆனால் எப்போது இந்த தமிழ் தேசியவாதிகள் ஜெயலலிதாவிற்காக திமுகவையும், கலைஞரையும் ஈழத்துரோகிகள் என்று பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்களோ அப்போதிலிருந்தே இந்த எண்பது திமுகவினரில் பலரும் பிரபாகரன் மீதும், புலிகள் மீதும் விமர்சனங்களை வைக்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் இப்படி பிரபாகரனை விமர்சிப்பதில் தயக்கமும், உறுத்தலும் கொண்டிருந்த திமுகவினரை உசுப்பிவிடும் வகையில் இந்த தமிழ்தேசியவாதிகள் கலைஞர் மீதும், திமுக மீதும் தொடர்ந்து அவதுறான, அசிங்கமான பரப்புரையை மேற்கொண்டனர்.
இந்த நிலைக்கண்டு இனியும் பொறுக்க முடியாது என்று அந்த எண்பது திமுகவினரில் இன்று எழுவது பேர் பிரபாகரனை மிகக்கடுமையாக விமர்சிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதற்கேற்றாற் போல புலிகள் மீதும், பிரபாகரன் மீதும் நிறைய குற்றச்சாட்டுகளும் ஆதாரப்பூர்வமாக தென்படுகிறது. இதில் என்ன கொடுமை எனில் இன்று பிரபாகரன் மீது இத்தகைய கரும்புள்ளிகளும், கடும் விமர்சனங்களும் வைக்கப்பட காரணமாயிருந்த தமிழ்தேசியவாதிகள் எவரும் பிரபாகரன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை களைக்க முற்படுவதில்லை. மாறாக இன்னும் கலைஞரையும், திமுகவையுமே திட்டிக்கொண்டிருக்கிறார்கள். பிரபாகரனுக்காக அவர்கள் கவலை பட்டதாகவோ, பரிதாபப்பட்டதாகவோ தெரியவில்லை. ஆனால் இன்றும் பிரபாகரனை ஒரு போராளியாக பாவித்து, அவர் மீதான விமர்சனத்திற்காக பரிதாபப்படுபவர்கள், அனுதாபப்படுபவர்கள் யாரென்று பார்த்தால் அது அந்த எண்பதில் மீதமிருக்கும் பத்து திமுகவினரே.
இந்த பத்தும் இனிவரும் காலங்களில் கண்டிப்பாக குறைந்து சுழியாகும், காரணம் நமது தமிழ்தேசிய பிள்ளைகளின் சுழி அப்படி.
எப்படியோ, பிரபாகரனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

3.
கலைஞரின் உண்ணாவிரத்திற்கு பிறகு சீஸ்ஃபயர் அறிவிப்பு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் சென்னை வந்து இலங்கை அரசு அனுப்பிய ஃபேக்ஸ் செய்தியைக் காட்டுகிறார். காலை 7 மணிக்கு துவங்கிய உண்ணாவிரதத்தை 2 மணியளவில் முடிக்கிறார் கலைஞர்.
ஆனால் அடுத்த மூன்று நாட்களில் மீண்டும் போர் துவங்கியது எப்படி??
கலைஞரின் உண்ணாவிரதத்திற்கு அடுத்த தினத்திற்கு அடுத்த தினம் புலிகளின் அரசியல் ஆலோசகராய் அப்போது இருந்த திரு.நடேசன் "நாங்கள் செய்வது பின் வாங்கும் தந்திரோபாயம்! கருணாநிதி எங்கள் வெற்றியை மழுங்கச் செய்கிறார் என்று அறிக்கை வெளியிட்டார். "இன்னும் ஒரு சில தினங்களில் இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்துவிடும், பிஜேபி நிச்சயம் வெல்லும். அதுவரை தாக்குப் பிடியுங்கள்" என்று தமிழக அரசியல்வாதிகள் குடுத்த யோசனையைக் கேட்டே புலிகள் போரை நீடித்ததாக நார்வே குடுத்த அறிக்கை இப்போதும் இணையத்தில் இருக்கிறது!
போர் நிறுத்தம் என்றால் இரு தரப்பும் நிறுத்த வேண்டும். ஒருவர் மட்டும் நிறுத்தி மறு தரப்பு நிறுத்தாமல் அடிப்பதற்கு பெயர் போர் நிறுத்தம் அல்ல.
கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார். அறிவிப்பு வந்தது. ஆனால் நாங்கள் தொடருவோம் என்று சொன்னவர்கள் யார்????????????
அன்றைக்கு மொத்த மீடியாவும் திமுகவுக்கு எதிராக இருந்த நிலையில் பல செய்திகள் மக்களிடம் மறைக்கப்பட்டது. சமூக வலைதளத்தின் வீச்சும் இந்த அளவிற்கு இல்லை அப்போது.
ஆனால் அதையும் மீறி மக்களிடம் சொல்ல ஒரு வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்து அநியாயமாகக் கோட்டை விட்டார். எப்படி?
"போர் நிறுத்தம் வந்துவிட்டது என்று சொன்ன பிறகும் போர் நடக்கிறதே?" என்று கலைஞரிடம் கேட்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள். பெரிய இலக்கியத் தரமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு இந்த மனுசனும் " மழை விட்டும் ( அதாவது இலங்கை நிறுத்தியும்) தூவானம் விடவில்லை ( புலிகள் விடவில்லை) என்றார். இதற்கு பதிலாக நேரடியாக " இலங்கை நிறுத்திருச்சு. அவங்க நிறுத்தலையே! என்னைய என்ன பண்ண சொல்றீங்கன்னு? பாமரத்தனமாகக் கேட்டு இருந்தால் அது மக்களுக்கு எளிதில் புரியும் செய்தியாகி இருக்கும். இலக்கிய வாயால் அதைக் கோட்டை விட்டார் தலைவர் கலைஞர். இந்த விசயத்தில் எனக்கு அவர் மேல் தீராத கோபம் உண்டு.
இனி புலிகளின் கதையும், ஈழமும் மொத்தமாய் முடிந்தது என்பதை உணர்ந்த ஜெயலலிதா...தன் வாழ்நாள் முழுவதும் புலிகளை ஈழத்தை எதிர்த்த ஜெயலலிதா போர் முடிவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் தனி ஈழமே தீர்வு என்று..நடக்காது என்று உறுதியாகத் தெரிந்த விசயத்திற்கு பல்டி அடித்து பேசி ஈழத்தாய் ஆனார். கலைஞர் துரோகியானார்.
இன்றைக்கு புலிகள் வாழ்க ஈழம் வாழ்க என்று யார் வேண்டுமானாலும் பேசலாம். ஈழம் என்று வாயை அசைத்தாலே பொடாவிலும் தடாவிலும் தள்ளிய அன்றைய நேரத்தில் பிரபாகரன் வாழ்க தமிழ் ஈழம் வெல்க என்று எழுதிய யுவகிருஷ்ணாக்களும் அப்துல்லாக்களும் நரேன்களும் இன்று திடீர் குபீர் டாலர் வசூல் போராளிகளுக்கு இன்று தமிழின விரோதியாகிப் போனோம். மகிழ்ச்சி :(

புலிகள் 2

ஈழவிவகாரத்தை இந்திரா கையில் எடுத்ததும் முதலில் வரவேற்றது கலைஞர், அமிர்தலிங்கம் சென்னை வந்தபொழுது முதலில் வரவேற்க சென்றதும் அவரே
அதுவரை தமிழகத்தில் ஈழ அபிமானம் ஏதுமில்லை, 1964ல் மலையக மக்கள் திருப்பி அனுப்பபடும்பொழுது சிறிய சலசலப்பு மட்டும்தான் இருந்தது
கலைஞர்தான் ஈழவிவகாரங்களுக்கு தமிழகத்தில் உயிர்கொடுத்தார், விடுவாரா ராமசந்திரன்? அவர் உள்ளே குதித்ததுதான் பிரச்சினையின் மூலம்
கலைஞர் மூளைக்காரர், ஆழ்ந்து சிந்திப்பவர். தமிழகம் என்றுமே டெல்லிக்கு ஆகாது, மாநில கட்சி அதுவும் முன்பு பிரிவினை பேசிய கட்சி இன்னொரு நாட்டு பிரிவினையினை பேசுவது பெரும் ஆபத்தில் முடியும் என கணித்தார்
அது மகா உண்மையும் கூட பின்னாளில் வைகோ அனாதை ஆனது அப்படித்தான், 2009ல் புலிகள் அடிபட்டு சாக இந்தியா அமைதியாக இருந்ததும் அப்படித்தான்
அதனால் அகில இந்திய அளவில் ஈழபிரச்சினை எதிரொலிக்காமல் தீர்வில்லை என்றுதான் அன்று டெசோ அமைப்பினை வாஜ்பாய், பரூக் அப்துல்லா, பட்நாயக் என அகில இந்திய தலைவர்களை வைத்து அசத்தினார்
"இலங்கை தமிழரை தொட்டால், இந்தியா முழுக்க அதிரும்" என அவர் ராஜதந்திரமாக மிரட்டி நின்றார்
நிச்சயம் மிக அறிவார்ந்த காய்நகர்த்தல் இது, எம்ஜிஆருக்கு இப்படிபட்ட தந்திரம் எல்லாம் இல்லை, ஆனால் அவர் கையில் பிரபாகரன் கிடைத்தான்
இந்திரா ஈழபிரச்சினையினை கையாண்டது வெறும் 1 வருடமே, போராளிகளுக்கு பயிற்சி ஆரம்பிக்கும்பொழுதே இவர்கள் நச்சுபாம்புகள் என அவருக்கு தெரிந்தது, ஆனாலும் ஜெயவர்த்தனேவுக்கு ஆட்டம் காட்டினார்
சென்னையில் சிக்கிய பிரபாகரனை அவர்தான் காத்தார், இந்திரா செய்தது அந்த பெரும் தவறு
ராஜிவிற்கும் பிரபாகரனுக்கும் உரசல் இருந்தது, அதே நேரம் ஜெயாவினை வளர்க்கின்றார் என ராஜிவிற்கும் எம்ஜிஆருக்கும் உரசல் இருந்தது, நீ ஜெயாவினை வளர்த்தால் நான் உன் எதிரி பிரபாகரனை வளர்ப்பேன் என வரிந்து கட்டினார் எம்ஜிஆர்
இங்கு ஒரு கேள்வி எழும்? ஒரு மாநில முதல்வர் அந்நிய நாட்டு தீவிரவாதிக்கு உதவுகின்றார், அந்த அரசை டிஸ்மிஸ் செய்தால் என்ன? செய்திருக்கலாம், ராஜிவ் செய்யவில்லை
வாழ்வில் பல போராட்டங்களை நடத்தியவர் கலைஞர், ராஜ தந்திரமாக அற்புதமாக ஈழ ஆதரவாக‌ இந்தியாவினை திரட்டினார்
ஆனால் சகலத்தையும் கெடுத்தே பழக்கபட்ட ராமசந்திரன், புலிகளை வளர்த்துவிட்டு எல்லாவற்றையும் பாழாக்கினார்
கலைஞரின் டெசோவில் பிரபாகரன் தவிர்த்த ஈழ இயக்கம் கலந்து கொண்டது, அன்றே வெறிபிடித்தது புலிகளுக்கு
எல்லா இயக்கங்களை அழித்தார்கள், கலைஞர் சொல்லிபார்த்தார் "பழம் கிடைக்கட்டும் அதன் பின் சுளைகளை பங்கிடுங்கள்" என்றார், புலிகள் கேட்கவில்லை
"கெஞ்சி கேட்கின்றேன், ஈழதிசை நோக்கி கதறி கேட்கின்றேன் புலிகள் சபாரத்தினத்தை கொல்லவேண்டாம்..." என அவர் மன்றாடி நின்றபொழுது கொஞ்சம் கூட புலிகள் சட்டை செய்யவில்லை,
கலைஞரை மனிதனாக கூட நினைக்கவில்லை
வெறுப்புற்ற கலைஞர் டெசோவினை கலைத்துவிட்டு அமைதியானார், இப்பொழுது காட்சியில் வென்றது எம்ஜிஆரும் புலிகளும்
அப்பொழுதும் புலிகளை அவர் முழுக்க கைவிட்டுவிடவில்லை
அமைதிபடையினை ராஜிவ் அனுப்பும் பொழுது எம்ஜிஆர் தடுக்கவில்லை, மாறாக கலைஞர்தான் இது ஈழம் அடைவதை தடுக்கும் முயற்சி என மறுத்தார், அமைதிபடையினை எதிர்த்த முதல் தமிழர் கலைஞர்தான்
எம்ஜிஆர் சத்தமே இல்லை, அத்தோடு மறைந்தும் போனார்
மணலாற்றில் இந்திய படையினரால் வளைக்கபட்டிருந்தார் பிரபாகரன்,
ஒரு நாள் அவகாசமிருந்தால் இந்திய படை பிடித்து நசுக்கியிருக்கும்,
கிட்டதட்ட சோலி முடிந்த நிலை
அப்பொழுதுதான் விபிசிங்கிடம் மன்றாடி அமைதிபடையினை திரும்ப பெற்றார் கலைஞர்
பிரபாகரனின் உயிர் அவரால்தான் அன்று காப்பாற்றபட்டது, இதனை வரலாற்றில் எவன் மறுக்க முடியும்?
15 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்தார் கலைஞர், அவரின் நெடிய போராட்டம் கழிந்து அப்பொழுதுதான் மூச்சுவிட்டார், புலிகள் அவர் ஆட்சியில் தமிழகத்தை வலம் வந்தனர்
அங்கோ இந்திய ராணுவத்துடனான மோதல், இந்தியாவிலே அடைக்கலம் எனும் அளவிற்கு புலிகளின் ஆதரவு இருந்தது, கலைஞர் அவ்வளவு சுதந்திரம் கொடுத்திருந்தார்
அப்பொழுதுதான் பத்மநாபா படுகொலை சம்பவம் நடந்து கலைஞர் ஆட்சி கலைக்கபட்டது, நொந்து போனார் கலைஞர், இவர்களை நாம் தான் அனுமதித்தோம், நம் ஆட்சிக்கே உலையா?
அடுத்த பேரிடியாக ராஜிவ் கொலை, அகில இந்தியாவும் அலறிற்று திமுகவினர் தாக்கபட்டார்கள், ஓடவிரட்டபட்டார்கள், தேர்தலில் திமுக 1 இடத்தில்தான் வென்றது
திமுக விசாரணை வளையத்தில் வந்தது, கலைஞர் திகைத்தார், கட்சி முடக்கும் அளவு சிக்கல், கலைஞர் கூட்டம் ரத்து ஏன் என ஏக கேள்விகள்
ஆனால் அன்று ராஜிவுடன் கூட்டணியான அதிமுகவின் ஜெயா ஏன் அந்த மேடைக்கு வரவில்லை என யாரும் விசாரிக்கவில்லை, பிராமண பாசம் அப்படி
தப்பி பிழைத்தது திமுக, பத்மநாபா கொலைக்குபின் புலிகளுடனான எல்லா தொடர்பையும் கலைஞர் முறித்ததால் திமுக ராஜிவ் கொலையில் பெரிதாக சிக்கவில்லை, அதன் பின்னும் விடா பிடியாக இருந்த வைகோவினை விரட்டினார்
ஈழதலைவன் என்றும், மிகபெரும் சிந்தனையாளன், பெரும் அரசியல்வாதி என இந்திராவாலும்,ராஜிவாலும் , வாஜ்பாயினாலும் அறிபட்டிருந்த அமிர்தலிங்கத்தின் கொலை கலைஞரை மனம் நோக செய்தது
ஈழம் அமைந்திருந்தால் அமிர்தலிங்கம்தான் ஜனநாயக அதிபராகியிருக்கவேண்டும் என்றால் அந்த கொலையின் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என சொல்லி தெரியவேண்டியதில்லை
சர்வாதிகாரத்தின் உச்சியில் இருந்து எல்லோரையும் கொல்வோம், அதன் பெயர் போராட்டம் என சொன்னால் அறிவில்லாத வைகோ ஏற்கலாம், கலைஞர் ஏற்பாரா?
பின் வைகோ தனிகட்சி கண்டார், ஒன்றுமில்லாத வைகோ தமிழகத்தை மிரட்டும்படி பிரமாண்ட செலவு செய்ய பணம் எங்கிருந்து வந்தது என யாருக்கும் தெரியாது
அதன் பின் கலைஞர் ஈழவிவகாரங்களில் இருந்து ஒதுங்கினார், 1998, 2002 எல்லாம் புலிகளின் வெற்றி காலங்கள், யாரும் கலைஞரை தேடவும் இல்லை, அப்படி ஒரு மனிதர் இருப்பதாக நினைக்கவுமில்லை
பிரேமதசாவுடன் நட்பு கொண்டு பின் அவரையே கொன்றதை சிங்களம் மறக்கவில்லை, ஆனால் பிரபாகரன் அபபடி மகிந்தவுடன் நெருங்கினார், மகிந்த ராஜபக்சேவினை அதிபராக்கியது நிச்சயம் பிரபாகரனே
ஆட்சிக்கு வந்தார் மகிந்தா, அவரும் பிரேமதாச சாயலே, பல சக்திகள் உலகளாவிய தீவிரவாதத்திற்கு எதிராக திரண்டன‌ அழகாக பயன்படுத்தினார் ராஜபக்சே
புலிகளுக்கோ கடல்மீன்கள் கூட நண்பர்கள் இல்லை, புலி ஆதரவு என ஒருகுரலுமில்லை
ஆனானபட்ட யாசர் அராபத்தே போராட்டத்தை கைவிட்டு சுயாட்சிக்கு திரும்பிய நேரம் அது, பிரபாகரனை உலகம் விடுமா? இவ்வளவிற்கும் அராபத் மீது அமெரிக்க அதிபரை கொன்ற வழக்கு கூட கிடையாது
நார்வே குழு மூலம் பேசிபார்த்தார்கள், ஆண்டன் பாலசிங்கமே அலறிவிட்டு ஓடினார், புலிகளின் இறுமாப்பு அப்படி இருந்தது,
அமெரிக்க தூதர் பகிரங்கமாக எச்சரித்தார் "இனி யுத்தம் வருமாயின் புலிகள் பெரும் படுதோல்வியினை சந்திப்பர், அவர்கள் இருப்பே நிர்மூலமாகும்"
ஆனால் விதி புலிகளை திருந்த விடவில்லை, 2006ல் யுத்தம் தொடங்கிற்று, புலிகளின் பாசாங்கு யுத்தம் வெல்லவில்லை
காரணம் கருணாவின் பிரிவு அப்படி, கருணா சமாதானம் பேசினார், மாத்தையாவின் முடிவு உனக்கும் வரலாம் என சிலர் எச்சரிக்க தந்திரமாக விலகினான் கருணா, சும்மா விலகவில்லை தன் படைகளோடு விலகினான், உயிர்காக்க சிங்களனிடம் சேர்ந்தான்
அன்று பிரேமதாசாவுடன் கிட்டுவும் பாலசிங்கமும் பேசலாம், பின் ராஜபக்சேவும் கருணாவும் பேசகூடாதா?
அதுவும் விமானங்களில் சென்று ஒரு தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்துவதை உலக நாடுகள் அனுமதிககாது, காரணம் இன்னொரு தீவிரவாத இயக்கம் அதனை நொடியில் பெற்றுகொள்ளும், இம்மாதிரி பல விஷயங்களில் புலிகளுக்கு கட்டம் கட்டபட்டது
அமெரிக்கா புலிகளின் 11 கப்பல்களை காட்டி கொடுத்தது, ஐரோப்பா புலிகளின் வங்கி கணக்கை மூடியது, உலகமே திரண்டது புலிகள் முடிந்துகொண்டிருந்தனர்
இப்பொழுது கலைஞரை வம்புக்கு இழுத்தனர், நீ புலிகளை காப்பாற்றவில்லை என்றால் துரோகி என மண்வாரி தூற்றினர், இந்த மண்ணில் முளைத்தவர்தான் சீமான்
இந்தியாவும் புலிகள் அழியவேண்டும் என நினைத்தநாடல்ல, அப்படி நினைத்தால் 1995ல் சந்திரிகாவோடு சேர்ந்து நசுக்கியிருப்பார்கள், இலங்கையின் எங்கோ ஒரு மூலையில் இலங்கை அரசுக்கு எதிரான முணகல் இந்தியாவிற்கு வேண்டும்
இந்த தைரியத்தில்தான் ராஜிவ் கொலையினை சாதாரணமாக நினைத்தனர் புலிகள்
ஆனால் 2009ல் உலகம் ஒன்றாய் கூடியது, இந்தியாவிற்கும் வேறு வழியில்லை, இலங்கையில் புலிகளை காத்துவிட்டு பாகிஸ்தானிடம் காஷ்மீரில் தலையிடாதே என எந்த முகத்தை வைத்து சொல்லமுடியும்
அப்பொழுதும் சிதம்பரம் தலையிட்டார், ப.சிதம்பரமும் பிரபாகரனும் 1980களில் பழகியவர்கள். பிரபாகரன் தமிழகத்தில் தங்கி இருந்தபொழுது சிதம்பரத்தின் கண்காணிப்பில்தான் இருந்தார்
ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிய பிரபாகரன் அதன் பின் இந்தியா வரவே இல்லை , காரணம் அவரை தமிழக போலிஸ் கண்காணிப்பது அவருக்கு பிடிக்கவில்லையாம்
அப்படி அன்றே அவமானபட்ட சிதம்பரம் 2009ல் யுத்தம் நிறுத்த வழி ஒன்றே ஒன்றுதான் அது இந்தியா 1987ல் செய்தபடி மாநில அரசை அமைத்தல் யுத்தம் நிறுத்துதல் என்ற ஒப்பந்தம், புலிகள் ஆயுதங்களை கைவிட சொல்லும் ஒப்பந்தம்
அதற்கு மேல் இந்தியா இறங்கிவரவில்லை, இதுதான் முடிவு இதற்கு ஒப்புகொண்டால் பேசலாம் என்றது, 1987ல் இருந்த நிலையில்தான் இந்தியா 2009லும் இருந்தது
கலைஞரும் அதனையே வற்புறுத்தினார்
விடுவாரா வைகோ? 2009ல் ஆட்சி மாறும் என்றும், பாஜக ஆட்சி வந்தவுடன் ஈழம் கிடைக்கும் என்றேல்லாம் சொல்லி அவரை உசுப்பேத்திவிட்டார்கள்
அரசியலில் மிக அப்பாவியும், தீவிரவாதத்தில் மூர்க்கனுமான பிரபாகரன் அதை நம்பினார், சிதம்பரம் சொன்ன யோசனைகளை புறங்கையால் தள்ளினார்
இந்தியா அதிகார மட்டத்தில் வேறு மாதிரி யோசித்தார்கள், என்ன இது? பலமுறை புலிகள் தோற்றார்கள், மக்கள் நடுவில் அமர்ந்தார்கள், மக்களை கொல்கின்ரார்கள் என அலறினார்கள்
நாம் சென்று மக்களை காப்பாற்றினால் இவர்கள் தப்பிப்பார்கள், தப்பித்து?
மறுபடி அதே சண்டை, அதே அலறல், நாம் சென்று காப்பாற்றிவிட்டால் அதே விளையாட்டு, சில நேரம் நம் மீதே அடி, இவர்களை காப்பாற்றினால் இந்த விளையாட்டு இன்னும் 30 ஆண்டுகள் நீடிக்கும், இன்னும் ஆயிரகணக்கானோர் செத்துகொண்டேதான் இருப்பார்கள்
புலிகள் சமாதான‌ முடிவுக்கு வந்தால் ஏதும் செய்யலாம், இல்லாவிட்டால் ஒழியட்டும்
புலிகள் முடிவிற்கு வரவுமில்லை, இந்திய யோசனையினை, நார்வே யோசனையினை கேட்கவுமில்லை
ப.சிதம்பரம், பண்ருட்டி ராமசந்திரன் என பிரபாகரனோடு பழகிய பலர் தமிழகத்தில் உண்டு, அவர்கள் எல்லாம் சத்தமே இல்லை, காரணம் புலிகளை பற்றி அவர்களுக்கு தெரியும்
மாறாக கத்துவதெல்லாம் யார் என்றால் பிரபாகரனை சரியாக கூட பார்க்காதவர்கள், புலிகளிடம் வாங்கியவர்கள், வைகோ போல என்ன பைத்தியங்கள்
உண்மை தெரிந்தவர் எல்லாம் அமைதியாக இருக்க, ஒன்றுமே தெரியாதவர் உளறல்தான் கலைஞர் ஒழிக, காங்கிரஸ் ஒழிக‌
இப்பொழுது வடகொரிய பிரச்சினையினை தமிழக முதல்வர் தீர்க்க முடியுமா? முடியாது. ஈழ இறுதிபோரும் அபபடியே , அது பெரும் கைகளால் நடத்தபட்டது
கலைஞர் தன்னால் முடிந்த மட்டும் ஈழபோராட்டத்திற்கு எல்லா உதவியும் செய்தார், அவர் கை நீட்ட நட்புக்கு அழைத்த பொழுது தட்டிவிட்டவர்கள், அவர் கும்பிட்டு கேட்ட பொழுது கையினை முறித்தவர்கள்தான் புலிகள்
கலைஞர் சொற்படி கேட்டிருந்தால் என்றோ இலங்கையில் அமைதி நிலவியிருக்கும், இத்தனை பேரழிவுகள் நடந்திருக்காது,
ஈழசிக்கலில் எந்த பக்கம் பார்த்தாலும் தெரியும் கல்வெட்டு அது
உடன் போராட வந்தவனை கொன்றது புலிகள், ஆதரவான இந்தியாவினை விரட்டியது புலிகள், சமாதானம் பேச வந்தவனை கொன்றுபோட்டதும் புலிகள்
உலகில் எந்த சக்திக்கும் கட்டுபட மாட்டோம், எங்களுக்கு நார்வே, அமெரிக்கா வேண்டாம். எத்தியோப்பியா, எரித்திர்யா ஆதரவு போதும் என சிந்தித்ததும் புலிகள்
செய்த தவறெல்லாம் அவர்களுடையது
சபாரத்தினம்,பத்மநாபா, அமிர்தலிங்கம், ராஜிவ் என எல்லோரையும் கலைஞரை கேட்டுவிட்டா கொன்றார்கள்? கலைஞரை கேட்டுவிட்டா மகிந்தவினை முதல்வராக்கினார்கள்?
கலைஞரை கேட்டுவிட்டா வைகோவினை தலைவராக்கினார்கள்?
அவரை ஒரு மனிதனாக கூட சிந்திக்கமாட்டார்களாம், ஆனால் அவர்களுக்கு ஒன்று என்றால் கலைஞர் செத்து காத்திருக்கவேண்டுமாம்
அப்படிபட்ட அவசியம் கலைஞருக்கு ஏன் வரவேண்டும்?
கலைஞரை மீறி சென்ற புலிகள் என்ன கிழித்துவிட்டார்கள், அல்லது திமுகவிற்குத்தான் என்ன குறைந்துவிட்டது?
இன்றும் வலுவான எதிர்கட்சி திமுக, இன்று தேர்தல் வைத்தாலும் வலுவான ஆளும் கட்சி திமுக‌
ஆக கலைஞருக்கு ஒன்றுமே இழப்பில்லை, இந்த வயிற்றெரிச்சலில்தான் கத்திகொண்டே இருக்கின்றார்கள்
அதற்காக அவர் ஒரு காலத்தில் செய்த ஈழ உதவிகளை மறப்பது எவ்வகையிலும் நியாயமாகாது..
பிரபாகரன் மட்டும்தான் போராளி என்றும், அவரை காக்காதவர்கள் எல்லாம் துரோகிகள் என சொல்வார்கள் என்றால் அது பைத்தியகாரதனம்
அப்படித்தான் பல பைத்தியங்கள் உருண்டு புரண்டு அழுதுகொண்டிருக்கின்றன‌