Thursday, August 24, 2017

சமூத்ரகனியிசம்

ஒரு விஷயத்தை
”மேலோட்டமான உணர்ச்சிவசப்படலால் கொண்டாடுவது” என்பதற்கு
”சமுத்ரகனியிசம்” என்று பெயர் வைக்கலாம் என்றிருக்கிறேன்.
சமுத்ரகனியிசத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இப்படி இருப்பார்கள்
- தடுப்பூசி போடாமல் இருக்க வேண்டும். தடுப்பூசி உடல்நலத்துக்கு கேடு.. தடுப்பூசியே மருந்து கம்பெனிகளின் சதி என்று நினைப்பது.
- பசுமாட்டில் இருந்து கறந்து அந்தவிநாடியே குடிக்கும் பால் மட்டுமே சத்துள்ளது என்று நம்புவது.
-400 சுகர் இருக்கும் போது அலோபதி மாத்திரைகள் இல்லாமல் ”பித்தாவில்” லேகியம் வாங்கி உண்டு சரிசெய்யலாம் என்று நம்புவது.
-மெட்டி போடுவது, தாலி போடுவது, உடன்கட்டை ஏறுவதில் எல்லாம் அறிவியலை தேடி தேடி கண்டுபிடிப்பது மாதிரி காட்டி அதை நிருபிப்பது.
- மிக்சியில் சட்னி அரைத்தால் சுவையிருக்காது. அம்மாவோ அத்தையோ பாட்டியோ நெஞ்சுவலிக்க வலிக்க அம்மியில் அரைத்த சட்னிதான் சுவை என்று நினைப்பது.
- நேச்சுரோபதி, அக்குபஞ்சர் போன்றவற்றைப் புகழ்ந்து, அங்கப் போங்க எல்லாம் சரியாகும் என்று சொல்வது.
- நாட்டுக்கத்திரிக்காய், நாட்டுக்கோழி, நாட்டு நாட்டு என்று தொடங்கும் எதுவும்தான் உடலுக்கு நல்லது, மீதம் அனைத்தும் விஷம் விஷம் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்வது.
- டூமச்சாக பிளாஸ்டிக் பொருட்களை திட்டிக்கொண்டே இருப்பார்கள். அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் எவ்வளவு உபயோகமாக இருக்கிறது என்பது பற்றியெல்லாம் யோசிக்கவே மாட்டார்கள்.
- ஜாதிப் பிரச்சனை பற்றி, அடக்கப்பட்டோர் நிலை பற்றி சமுத்தரகனிசம் எப்போதும் பேசாது. அது மரம் நடுவது, பிறந்தநாளுக்கு ஆதரவற்றோர் ஆசிரமங்களுக்கு சென்று சர்க்கரைப் பொங்கல் கொடுப்பது, எங்கோ ஒரு பாட்டி பட்டாணி விற்று குடும்பத்தைக் காப்பாற்றுவதை சிலிர்ப்பது இப்படியாக சமூகத்தைப் பார்க்கும்.

Monday, August 07, 2017

வெறும் எல்லைக்கருப்பன் இன்று ஸ்ரீ எல்லை கருப்பனார் சாமி ஆகிவிட்டார்

பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு வேண்டுதலுக்காக வேலின் மீது சேவலைக் குத்திவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்தபோது, எதிரிகளின் அக்கிரமங்களை பேப்பரில் எழுதி, சுருட்டிக் கட்டி வேலில் தொங்கவிட்டு வந்தபோது வெறும் எல்லைக்கருப்பன் என்றே அழைக்கப்பட்டது.

இன்று வாரிசுகள் ஐ.டி. வேலைக்கும், அயல்நாடுகளுக்கும், அரசு உத்தியோகத்திற்கும் சென்றபின் வருமானம் அதிகமாகிவிட்டதால் ஸ்ரீ எல்லை கருப்பனார் சாமி ஆகிவிட்டார். இன்னும் சில வருடங்களில் ஸ்ரீ எல்லைக்கருப்பணாரீஸ்வரன் என்றோ அல்லது ஸ்ரீ எல்லைக்கருப்பணார்பதி என்றோ உருமாற்றம் அடைந்து சமஸ்கிருத மந்திர உச்சாடனத்தில் ஜொலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.




எங்க குலதெய்வங்களுக்கெல்லாம் தமிழ் தெரியாமற்போய் வெகுநாட்களாகிவிட்டன. இப்பொழுதெல்லாம் சம்ஸ்கிருதத்தில் சொன்னால்தான் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன.. கருப்பராயன் ஸ்ரீ கருப்பண்ண சுவாமி யாகி, அண்ணமார் அண்ணன்மார் சுவாமி நாமதேஸ்யங்களாகி , ஆயுர் ஆரோக்ய குலசம்பத்தானாம் என்றுதான் எங்கள் கோரிக்கைகள் தெரிவிக்கப்படுகின்றன.

என் குலதெய்வக் கோயிலில் மல்லாந்து படுத்து தூங்க முடியும். நாளையே ஆகம விதிப்படி நீங்கள் அங்கே படுக்கக் கூடாது என்றால் எனக்கு நிச்சயமாக கோபம் வரும். கிடா வெட்டுவது என்பது அசைவ உணவு சாப்பிடவதற்காக அல்ல. அது ஒரு கொண்டாட்டம்.

நான் -வெஜ். நம்ம கிராமத்து கோயில் திருவிழாவில் நல்லா கறி சோறு தின்னுட்டு தெம்பா சாமி கும்பிடுவோம். இப்போ சாமியையும் சைவமாக்கிடுவாங்க போல. செவ்வாய், சனி, கிருத்திகை கவுச்சி கலக்க கூடாதுன்னு சொல்றாங்க. அந்த நாள் ல சாப்பிடுறது தப்புன்னா மற்ற நாள்ல பரவாயில்லையா?

Friday, August 04, 2017

நல்லூர் முருகன் சக்தி

நல்லூர் முருகன் உண்மையில் சக்தி உள்ள கடவுள்தான் போலத்தான் கிடக்கு!

தனக்கு மேலே குண்டு போட்ட கோத்தபாயாவைக்கூட கெலிகொப்டரில் தனக்கு பூ தூவ வைத்தவர்

எங்கோ பிறந்த வெள்ளைக்காரியைக்கூட  தனக்கு காவடி தூக்க வைத்திருக்கிறார்.

ஆனால் ஏனோ தன்னை நம்பிய மக்களை  முள்ளிவாய்க்காலில் காப்பாற்ற தவறிவிட்டார்!

புத்தருக்கு எதிரான போராட்டத்தில் அவர் வேலாயுதம் வெற்றி பெற முடியவில்லையே?

கொங்கு வேளாளர் மேட்ரிமோனி டாட் காம்

கொங்கு வேளாளர் மேட்ரிமோனி டாட் காம்ல தான் நான் ரம்யாவ பார்த்தேன்"னு வீட்டுலயே தக்காளி செடி வளர்த்திட்டு இருக்கப் பொண்ணு ஒன்னக் காட்டுறாங்க. நீங்க இந்தக் கம்யூனிட்டி மேட்ரிமோனி விளம்பரங்கள உத்து கவனிச்சாவே அதுல இருக்க வித்தியாசங்கள சீக்கிரம் புரிஞ்சுக்கலாம். ஒவ்வொரு சாதிக்கும் மதத்திற்கும் உரிய குணங்களைத் தான் பொண்ணு மாப்பிள்ளையோட குணங்களா சித்தரிச்சிருப்பாங்க. ஆன்சைட் போற பிராமின் பொண்ணு, பெரிய பதவில இருக்க நாடார் பொண்ணு, அடக்க ஒடுக்கமான முஸ்லீம் பொண்ணுனு காட்டிட்டு கொங்கு வேளாளர் பொண்ணுங்க தக்காளி வளர்க்குதாம். என்னடா சாதி பெயரால பொண்ணுங்களுக்கு வக்காலத்து வாங்குறாளேனு நினைக்க வேண்டாம். கொங்கு வேளாளர்னு இல்ல,கொங்கு மண்டலத்துப் பெண்களுக்கே இதே நிலைமைதான்.
"பொம்பளைங்கன்னா அடக்கமா புருஷனுக்குப் புடிச்ச மாதிரி இருக்கோணும்டீ"னு அன்னைக்குக் குஷ்பு அக்கா மீனாவைப் பார்த்து சொல்லுமே. இன்னைக்கும் அதே மீனா நிலைமை தான் இந்த மண்டலத்துப் பெண்களுக்கும். அந்த விளம்பரத்தில் எல்லாம் எந்தத் தப்பும் இல்லீங்க. இங்க இருக்கப் பெண்களில் குறைஞ்சது அறுபது சதவீதம் பெண்கள் அப்படித் தான் இருக்காங்க.கல்யாணப் பத்திரிகையில போட்டுக்க ஒரு டிகிரி, அதையும் மீறி ஜாதகம் சொல்லுச்சுனா இன்னொரு டிகிரி(அதிலும் ஆர்ட்ஸ் மட்டுமே). படிக்கறப்பவே மாப்பிள்ளை தேடி, பரீட்சை முடியுற அடுத்த வாரமே ஊரே பேசுற மாதிரி ஆடம்பரமா கல்யாணம். இல்லனா பேருக்கு ஒரு வருஷமோ இரண்டு வருஷமோ வேலை (இதெல்லாம் எஃசப்ஷனல்).
படிக்கும் போது கஷ்டமா இருந்தாவே பேசாம கல்யாணம் பண்ணிட்டு போய்டலாமானு பேச ஆரம்பிச்சுடுவோம். நடுவுல கடலூர் காரி வந்து 'அடிப்பாவிகளா நான்லாம் வேலைக்குப் போனா தான்டி கல்யாண பேச்சே எங்க வீட்டுல எடுப்பாங்கனு' எங்கள விசித்திரமா பாப்பா.
வேலைக்குப் போகனும்,சொந்தமா சம்பாதிக்கணும்கிற எண்ணத்தை எங்க ஜீன்லயே யாரோ மியூடேட் பண்ணிட்டாங்க போல. அப்படியே வேலைக்குப் போனாலும் திருமணத்துக்கு அப்புறம் குழந்தை குடும்பம்னு ஒதுங்கிடணும்.பொருளாதார ரீதியிலும் நாங்க தேவைப்படாததால வேலைக்குப் போகணும் சாதிக்கணும்கிற உணர்வு வரதேயில்லை. (அடுத்த வருஷம் நானே got engaged னு ஸ்டேடஸ் போட்டா யாரும் பதட்ட பட வேண்டாம்)
'எந்தக் காலத்துலமா இருக்க நீ. இன்னைக்கு எத்தன பெண்கள் எத்தன பண்றாங்க தெரியுமா'னு எல்லாம் சொல்லிடாதீங்க.கொஞ்சம் அப்படியே திருப்பூர்,ஈரோடு,கோவை,நாமக்கல் னு ஒரு வலம் வந்தா தெரியும் எத்தன சாதனையாளர்களும் திறமைசாலிகளும் பாத்திரமும் பால் டப்பாவுமா இருக்காங்கன்னு.மிஞ்சி மிஞ்சி போனா நூத்துல நாலு பேர் தனியா மேல வந்துட்டு இருக்காங்க.மத்தவங்க எல்லோரும் daddy's little princess இல் இருந்து king's beauty queen ப்ரோமோஷன்லயே தன்னிறைவடைஞ்சறாங்க.
வேலைக்குப் போறதும் தனக்குன்னு ஏதாவது செஞ்சிக்குறதும் பெண்களோட தனியான விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தே தான் இருக்கு. ஆனா அந்த விருப்பங்களைப் பிரித்துப் பார்க்குறதுக்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் இன்றளவும் கிடைக்கற மாதிரித் தெரியலை. தனக்கு எது வேணும, வேண்டாம்னு யோசிக்க வேண்டிய தேவையே இங்க உருவாகுற மாதிரி தெரியல.
பெண்களுக்கு அது வேணும் இது வேணும்,அவ்வளவு சாதிச்சுட்டாங்க அடுத்ததா இதை நோக்கி தான் அவுங்க போகனும்னு எவ்வளவோ விஷயங்கள் இருக்க, காலைல இட்லிக்குத் தக்காளி சட்னியா தேங்காய் சட்னியானு தீர்மானிக்குறதுலயே இன்னும் கொங்கு மண்டல பெண்கள் இருக்காங்கனு ஒரு விளம்பரதாரர் கூடக் கணிக்கிற அளவுக்கு மோசமா இருக்காங்கன்னு நினைக்கும் போது வருத்தமா இருக்கு.

பண மதிப்பு இழப்பு விவகாரம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழு வழங்கியுள்ள அறிக்கையில்..

பண மதிப்பு இழப்பு விவகாரம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழு வழங்கியுள்ள அறிக்கையில்..
∆ பண மதிப்பு இழப்பு நடவடிக்கை ஒரு பெரும்பிழை.. அதன் குறி இலக்கு ஏதும் எட்டப்படவில்லை..
∆ பெருமதிப்பிலான கறுப்புப் பணம் ஏதும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.. 4172 கோடி மட்டுமே சந்தேகத்திற்கிடமான பணமாக உள்ளது.
∆ ரொக்கமில்லா அல்லது குறை ரொக்க பொருளாதாரம் சாத்தியமாகவில்லை..
∆ பயங்கரவாத நிதியளிப்பு வலைப்பின்னலில் எந்த தாக்கத்தையும் இந்நடவடிக்கை ஏற்படுத்தவில்லை..
∆ பணமதிப்பிழப்பு சிறு, குறு தொழில்களையும் அமைப்புசாரா தொழிலையும் பெருமளவு நலிவடைய செய்தது. 3 லட்சம் தொழிற்கூடங்கள் மூடப்பட்டு, 4 கோடி பேர் வேலையிழந்ததாக பாரதிய மஜ்தூர் சங்கம் தெரிவிக்கிறது..
∆ திட்டத்தின் அனைத்து முடிவுகளும் எவ்வித முன் யோசனையும் இன்றி எடுக்கப்பட் டுள்ளது. இன்றுவரை கிராமப் பகுதிகளில் ATM கள் வேலை செய்யவில்லை
∆ பண மதிப்பிழப்புத் திட்டத்தின் தோல்வி சுகாதாரம், கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளின் செலவீனங்களில் கைவைக்க வழி வகுத்துள்ளது..
∆ வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன.. முதலீட்டிற் கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது..
∆ இந்த அமைப்பு ரீதியான குளறுபடிகளுக்கு யார் பொறுப்பேற்பது.. இத்திட்டத்தால் ஏற்பட்ட ₹30000 கோடி செலவுக்கு யார் பதில் அளிக்கச் சொல்வது? 180க்கும் மேற்பட்ட சாவுக்கு யாரை குற்றஞ்சாட்டுவது?
சரியாகத்தான் சொன்னார் உங்களின் மௌன் மோகன் சிங் /அமைப்புசார் கொள்ளை/ என்று.. வாய் கிழிய பேசுபவர்கள் தான் இப்ப பொத்திக்கிட்டு இருக்காய்ங்க..
இப்பவும் அதெல்லாம் ஒத்துக்க மாட்டோம்.. ஓட்டை பத்திக் கவலைப்படாமல் இது மாதிரி ஓட்டை நடவடிக்கையை எடுக்க 56" மார்தான் வேண்டும்.. அதை கண்டு உங்களுக்கு ஏன் காண்டாவுது.. நாடு வல்லரசாக வேண்டாமா?
/எத்தனை பேரு வரி கட்டாத ஏமாத்துறாய்ங்க.. அடிச்சாரு பாரு ரிவீட்டு?/
/என்னால நம்பவே முடியல.. இப்டி ஒரு அதிரடியா?/
/தீவிரவாத கும்பல் எல்லாம் நாசமாப் போச்சி.. சிங்கிள் டீக்கு வழியில்ல/
/புதிய இந்தியா பொறந்த வுடனே டாக்டராயிடிச்சி/
/இனி ஒருபய அரசாங்கத்த ஏமாத்த முடியாது/
என்றெல்லாம் தாண்டிக் குதித்தவர்கள், அந்தரத்தில் பல்டியடித்தவர்கள், இதென்ன பித்துக்குளித்தனம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களை மடையர்களாக/ நாட்டு நலனில் அக்கறையற்றவர்களாக சித்தரித்து படங்காட்டியவர்கள் அனைவரும் -
அவுரு மூஞ்சி தொடைச்சிட்டிருந்த கொடியை வாங்கி தலையில முக்காடு போட்டுக்கிட்டு கெளம்புங்க.. கெளம்புங்க..