Thursday, December 28, 2017

தமிழர்களை இழிவுபடுத்த, வடவர்களை உயர்த்த எழுதிய காப்பியமே ராமாயனம்

அந்த காலகட்டத்தில் இராவணன் என்பவன் பறந்து வந்திருக்கவும் முடியாது, அவன் பறவையும் அல்ல
மனித பிறவியில் மனிதனுக்கு பத்து தலைஎன்பதும் அறிவியலுக்கு பொருந்தாதது,
இராமயன காலம் 17லட்சம் ஆன்டுகள் என்று கூறப்படுகிறது ,
அந்த காலகட்டத்தில் மனித இனமே பரினாம் அடையவில்லை என்கிறது அறிவியல்,
இராமர் கட்டியதாக சொல்லப்படுகிற இடத்தில் 10000 ஆண்டுகளுக்கு முன்பே கடல் இல்லை அது இந்தியாவுடன் சேர்ந்து இருந்த குமரிக்கண்ட திட்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்,.
உண்மை இப்படி இருக்க,!
ராமன் சீதையை திருமனம் செய்ய வெற்றி பெற கலந்துக்கொன்ட போட்டியில் ராமன் பயன்படுத்திய 60000வீரர்கள் எடுத்துவந்து ராமனிடம் கொடுத்ததாகவும் ;
அந்த வில்லை வளைத்து படக்கொன உடைத்தாகவும் கதை இருக்கிறது,
அதிலும் திருமனத்தின் போது ராமனின் வயது12சீதையின் வயது7என்கிறது புராணம்.!
இதற்கு எல்லாம் யார் விடையளிப்பது?
ராமாயனம் உண்மை என்பவர்கள் தான் பதிலளிக்க வேன்டும் பதில் வருமா?
ஆக உண்மையில் வடவர்கள் தமிழர்களை வென்றதுமில்லை,
தமிழர்களை ஆட்சி செய்யவும் இல்லை ,
வரலாற்றில் ஆரிய படைகடந்த பான்டிய நெடுஞ்செழியன்,
இமயத்தில் கொடி நாட்டிய ராஜேந்திர சோழன் போன்ற தமிழ் மன்னர்கள் வேன்டுமானால் இருக்கிறார்களேயொழிய
தமிழ்நாட்டை ஆன்ட வட நாட்டு அரசன் இதுவரையில் இல்லை,
தமிழர்களை இழிவுபடுத்த,
வடவர்களை உயர்த்த எழுதிய காப்பியமே ராமாயனம் !
இதைதான் கம்பரும் கூட மனவருத்தத்துடன் வருங்காலதமிழர்களை என்னை இகழ்ந்தாலும்,
அதனால் மாசு வந்து சேர்ந்தாலும் வடமொழியில் இருக்கும் காவியத்தை தமிழில் தருகிறேன் என்று பின்வரும் பாடலில் எழுதுகிறார்,
பாடல்:
வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இது இயம்புவது யாது எனின்
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிவிக்கவே

வாழ்க பல்கலை வித்தகர் கங்கை அமரனார்

பல்கலை வித்தகர் கங்கை அமரனார் மட்டும் ஆர்கே நகரில் மீண்டும் வேட்பாளராக நின்றி ருந்தால்-முன்னாள் தாழ்த்தபட்டவரான தமிழிசை அவர்கள் --நாங்கள் மீண்டும் தாழ்த்தபட்டவரான கங்கை அமரனை பொது தொகுதியில் விட்டிருக்கிறோம்- என 
திருமதி தமிழிசையை விட அனைத்திலும் உயர்ந்து நிற்கும் 
திரு கங்கை அமரனாரை ஒரு நாளைக்கு100 முறையாவது அவரை தாழ்த்தபட்டவர் -தாழ்த்தபட்டவர் - தாழ்த்தபட்டவர் என சொல்லி -சொல்லியே தன்னை பிராமண ரேஞ்சிற்கு உயர்த்தி ரொம்பவே பம்மாத்து காட்டியிருப்பார்
--
திரு- கரு -நாக ராஜன் அவர்களை விட கங்கை அமரனார் அதிகமாகவே
வாக்கு பெற்றிருப்பார் என்றாலும்- என்ன சொல்லியிருப்பார்கள்????
-
கங்கை அமரனாரின் பாடி லாங்குவேஜ் சரியில்லை- பட்டியலின இளைஞர்கள் ஜீன்ஸ“ பேண்ட் - டீ சர்ட்- கூலிங் கிளாஸ் போட்டு
காதலிகளை கவருவது போல (நம்ம மருத்துவர் பாணி ) மக்களை கவராமல் கழுத்தில டவ்வல் போட்டு பாகவதர் போல வந்தார் -மக்களை கவரும்பட பேச தெரியாமல்-காமெடியனாக பேசினார் அதனாலத்தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம் -என மொத்த பழியையும் அவர் மேல் சுமத்தி தந்திரமாக தப்பிருப்பார்கள்-
காலங்காலமாக பட்டியலின மக்களை அனைத்திலும்
குறை ம--ரை மட்டுமே சொல்லவில்லையென்றால்-தாங்களே உலக மகா அறிவாளிகள்- பட்டியலின மக்கள் திறமையற்றவர்கள் - தகுதியற்றவர்கள்-அறிவற்ற முட்டாள்கள் என காட்டவில்லையென்றால்
இவர்களின் தலைவெடித்து சிதறிவிடும்தானே???
பல்கலை வித்தகர் திரு கங்கை அமரனார் புத்தி வந்து- மருத்துவமனையில் படுத்து-பணத்தையும்- தன்“ மானத்தையும் தானே இரட்சித்து விட்டார்-
-
வாழ்க பல்கலை வித்தகர் திரு- கங்கை அமரனார்

Wednesday, December 27, 2017

இந்துக்களிடமிருந்து இந்துக்களின் உரிமையை மீட்போம்

சில நண்பர்கள் என் மீது கோபப்படுகிறார்கள். இந்து மதத்தை போற்றி வளர்க்கும் பிராமனர்களை திட்டுகிறேன். பிற சமய நண்பர்களிடம் நட்பு பாராட்டுகிறேன் என்று. ஆம். ஏனென்றால் அதுவும் உங்களுக்காகத் தான் இந்து நண்பர்களே. சிலர் உங்களை அடியாட்களாக பயன்படுத்துகிறார்கள். நீங்கள் எந்த இந்து கோவிலைப் பெருமையாக என்னுகிறீர்களோ அனைத்து கோவில்களின் கருவறைக்குள் உங்களால் செல்ல முடியுமா?. இல்லை இறைவனுக்கு கற்பூர தீபம் தான் காட்ட முடியுமா? இல்லை சாமியை தான் சுமக்க முடியுமா? ஏன். நீங்கள் தூய்மை இல்லாதவரா?. ஆச்சாரம் அற்றவரா?. சைவமாக உள்ள மக்கள் எல்லா சாதியிலும் இருக்கிறார்கள். அவர்களை கூட இறைவன் ஏற்கமாட்டாரா. சரி உங்கள் வீட்டில் பார்பனை நீர் அறுந்த சொல்லுங்கள் பார்ப்போம். வேதம் எழுதியது பிரகஸ்பதி எனும் தச்சன் ஒரு பிராமணர் ஆவார் .. சரி மற்ற சாதியினர் கோவிலுக்குள் நுழைய கூடாது. சாமியை வணங்க கூடாது. கடவுளே இல்லை என்றும் சொல்லக் கூடாது. சரி ஏதாவது ஒரு கடவுளை வணங்குவோம் என்று பிற சமய கடவுளை வணங்க மதம் மாறுவதும் தவறு இதை தான் நண்பர்களே பார்பணன் உங்களை வைத்து செய்துக் கொண்டிருக்கிறான். இந்து கோவில்களை மீட்க போராடும் நாம். ஏன் கோவில் கருவரைக்குள் செல்ல இன்னும் போரடவில்லை. அதை தான் மற்ற மதத்தினர் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு மதமாற்றம் செய்கின்றனர். நீங்கள் ஏன் மதம் மாறினீர்கள் என ஒருவரையாவது கேட்டிருப்பீர்களா?. கேட்டுப்பாருங்கள் உண்மை புரியும். முதலில் நாம் திருத்த வேண்டியது பார்பனனை தான். முதலில் இந்துக்களிடமிருந்து இந்துக்களின் உரிமையை மீட்போம். இந்தியாவில் உள்ள மற்ற சமூக மக்களின் முன்னோர்கள் ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்தவர்கள் தான். நான் சொல்வது சரிதானே நண்பர்களே!

மனுதர்மம்தான் ஆளுகிறது! ஊழல் செய்வதிலும் பார்ப்பானுக்கு சலுகையா?

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!

மனுதர்மம்தான் ஆளுகிறது!   ஊழல் செய்வதிலும் பார்ப்பானுக்கு சலுகையா?

‘தி இந்து’ (தமிழ்) நாளிதழில் நேற்று (26.12.2017) 10 ஆம் பக்கத்தில் சேகர் குப்தா அவர்கள் எழுதியுள்ள ‘‘அரசியலில் ஊழல் களுக்கும், சாதிகளுக்கும் என்ன தொடர்பு?’’ என்ற கடடுரையை அப்படியே எடுத்து வெளியிடுகிறோம்.   (ஆ-ர்)

ஊழலுக்கும் குற்றச் செயல்களுக்கும் சாதியோ, சமூகமோ நேரடித் தொடர்பில் உள்ளனவா? சாதிப் படிநிலையில் கீழே செல்லச் செல்ல ஊழல் வழக்கு களில் பிடிபடுவதும், தண்டிக்கப்படுவதும் அதிகமா கிறதா? சில உண்மைகளை ஆராய்வோம்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந் ததாகத் தொடரப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆ. ராசா 15 மாதங்களுக்கு சிறையில் விசாரணைக் கைதியாக இருந்தார். 6 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் தலித். இதே வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கனிமொழி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். நிலக்கரி ஊழல் வழக்கில் சமீபத்தில் தண்டனை விதிக்கப்பட்ட மது கோடா, லஞ்சம்  கொலை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சிபு சோரன் ஆகியோர் பழங்குடி வகுப்பினர். உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தலித். லாலு பிரசாதும், முலாயம் சிங்கும் யாதவ சமூகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப் பட்டவர்கள். அவ்விருவரும் ஊழல் செய்ததாகவும், வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாகவும் வழக்குகளுக்கு உள்ளானவர்கள்.

ஊழல் வழக்கில் மேல் சாதிக்காரர்களும் சிக்காமல் இல்லை. சுக் ராம், ஜெயலலிதா, சுரேஷ் கல்மாடி முக்கியமானவர்கள். இவர்களைப் போன்ற மேல் சாதிக்காரர்கள் பிடிபடுவது மிகவும் குறைவு. சுக் ராமின் கட்டிலிலிருந்தே கட்டுகட்டாக ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டும், அவருக்குத் தண்டனை விதிக் கப்பட்டும், அவர் சிறைக்கே செல்லவில்லை. இப்போது சுக் ராமுக்கு வயது 90. பாஜகவில் சேர்ந்து புதுவாழ்வு பெற்றுவிட்டார். தேர்தல் நேரத்திலேயே அவர் கட்சி மாறினார். அவருடைய மகன் அனில் இப்போது இமாச்சல பிரதேச பாஜக சட்டப் பேரவை உறுப்பினர். அமைச்சராகக் கூட வாய்ப்பு இருக்கிறது. ஆ. ராசா வுக்கோ அவருடைய குழந்தைகளுக்கோ இப்படிப் பட்ட அதிருஷ்டம் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?

என்னடா இவர் ஊழல் வழக்கில் கூட சாதி பார்த்து எழுதுகிறாரே என்று கோபத்தில் கொதிக்கும் முன்ன தாக, நான்கு அம்சங்களைக் கவனத்தில் கொள்ளக் கோருகிறேன்.

முதலாவதாக, சுக்ராமும் ராஜாவும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்தபோதே ஊழல் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இரண்டாவதாக, சுக் ராம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது, ராஜா இப்போது வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மூன்றாவதாக, முதலாமவர் வீட்டில் கட்டிலில் படுக்கைக்கு அடியி லிருந்து ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மற்றொருவர் விஷயத்தில் பணம் எங்கே என்று நீதிபதியே எகத் தாளமாகக் கேட்கிறார்? பணம் இல்லை என்றால் ஊழல் என்ன என்று கேட்டுவிட்டு வழக்கிலிருந்து விடுவிக்கிறார்.

இப்போது நாலாவதும் முக்கியமானதுமான அம்சம். சுக்ராம் பிராமணர். அவர் அப்போது மட்டும் ஊழலில் ஈடுபட்டிருக்கலாம்; மேல் சாதிக்காரர்கள் ஊழலே செய்ய மாட்டார்கள்; ஆ. ராசா பட்டியல் இனத்தவர். அவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? அவர்களால் பதவியையும் பொறுப்பையும் வகிக்க முடியாது, வழக்கமாகவே சந்தேகத்துக்குரிய வர்கள் என்பதே பொதுப்புத்தியாக இருக்கிறது!

இனி, பாஜகவுக்குள் இரு வேறு ஊழல் சம்பவங்கள் எப்படிக் கையாளப்பட்டன என்று ஆராய்வோம். அக் கட்சியின் இரு வேறு மூத்த தலைவர்கள் ஆளுங் கட்சியாக இருந்தபோது அரசின் மூலம் ‘எதையோ செய்து தருவதற்காக', மறைத்துவைக்கப்பட்ட கேமரா எதிரில் லஞ்சம் வாங்கினார்கள். 2003-ல் திலீப் சிங் ஜுதேவ் ரூ.9 லட்சம் வாங்கினார். அந்த விவகாரம் வெளியான பிறகும் அவருக்குக் கட்சியில் மறுவாழ்வு தந்து மீண்டும் தேர்தலில் நிறுத்தப்பட்டு நாடாளு மன்றத்தில் கூட இடம் பெற்றுவிட்டார்.

இன்னொருவர் பங்காரு லட்சுமண். 2001-ல் ‘தெஹல்கா' நிறுவன ஏற்பாட்டில், ஒரு செயலுக்குப் பரிந்துரை செய்வதற்காக ஒரு லட்ச ரூபாயை கேமரா எதிரில் வாங்கிக்கொண்டார். ஜுதேவ் இளைய அமைச்சர் என்றால் பங் காரு லட்சுமண் கட்சியின் தேசிய தலைவர். அத்துடன் அவர் தலித். கட்சி அவரைப் பதவியிலிருந்து இறக்கியது, அவரைத் தனிமைப்படுத்தியது. சிறைக்கு சென்ற பங்காரு லட்சுமண் தன் மீதான ஊழல் வழக்கை தனியாக எதிர்த்துப் போராடி இறந் தும்விட்டார்.

ஜுதேவை ஆதரித்த கட்சி, பங்காரு லட்சு மணை ‘தீண்டத்தகாத வராகவே' நடத்தியது. அதுதான் ஊழலுக்கும் சாதிக்கும் உள்ள தொடர்பு அல்லது வித்தியாசம்!

சாதி, நிறப் பாகுபாடு நிச்சயம் தொடர்கிறது; தண்டனை விதிக்கப்பட்டாலும் சுக் ராம் என்ற பிரா மணரால் சிறைக்குப் போகாமலேயே தப்ப முடிகிறது; வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் ஆ.ராசாவைத் திருடனாகவே பார்க்கும் கண்ணோட்டம் தொடர்கிறது. ஜுதேவ் மறுவாழ்வு பெறுகிறார், பங்காரு லட்சுமண் விலக்கப்பட்டு, சாகவிடப்படுகிறார். இத்தகைய ‘இருட்டு சிந்தனைகளோடு' உங்களுடைய விடுமுறை நாள்களைப் பாழ்படுத்துவதற்காக வருந்துகிறேன்; ஆனால் யதார்த்தம் என்ன என்பதை ஒப்பிட இதைவிடச் சிறந்த நேரம் வேறு இல்லை.

தமிழில்: ஜூரி
சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர்,
முதன்மை ஆசிரியர்
நன்றி: ‘தி இந்து’ (தமிழ்), 2612.201
http://www.viduthalai.in/page-3/154967.html

வாழ்க்கையில் முன்னேற

என்னோட இத்தனை வருடத்தில் நான் கற்றுக்கொண்ட ஒரு பாடம் சொல்கிறேன். நீங்க வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் உங்க பிராமண நண்பர்களை மட்டும் வெளிப்படையாக பகைச்சுக்காதீங்க.

Friday, December 22, 2017

சங்கிகளும், பார்ப்பனர்களும் டிவிட்டரில் மரண ஓலம்

சங்கிகளும், பார்ப்பனர்களும்
இப்பொழுது வரை டிவிட்டரில் மரண ஓலம் போட்டுக்கொண்டுள்ளார்கள்.
அதே போல் சில வாட்சப் குழுமங்களிலும் நடக்கின்றன
உண்மையில் இந்த அளவு வலி இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை
இப்பொழுது இதை விளங்கி கொள்ள முயல்கிறேன்
1
2005-2015 காலகட்டத்தில்
சமூக ஊடகங்கள் வளரும் போது
அதிகம் ஊதி பெரிதாக்கப்பட்டவை இரு விஷயங்கள் ,
ஒன்று மோடி - இது நேர்மறை பிம்பம்.
இரண்டு 2ஜி - இது எதிர்மறை பிம்பம் .
இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி, இந்தியாவின் சிறந்த நிர்வாகம் குஜராத், சிங்கபூரை விட, நார்வேயை விட, ஜப்பானை விட குஜராத் சிறந்தது.
சோமாலியாவை விட தமிழகம் மோசம், உலகின் மிகப்பெரிய ஊழல் 2ஜி
என்று மிக எளிதாக மக்களை நம்ப வைத்தார்கள்
இதற்கு முக்கிய காரணம் - திமுக அன்று தின்ற மிக்சர் (ஈழம், 2ஜி, மின்வெட்டு என்று தொடர்ந்து திமுக மிக்சர் தின்றார்கள். ஒரு விஷயத்தை பற்றி பேசினால் தான் அது பெரிதாகும், பேச வில்லை என்றால் அமுங்கி விடும் என்று 1970கள் போல் நினைத்து கோட்டை விட்டார்கள் . . . . ஹீலர் பாஸ்கர் போன்ற ஹேவிளம்பிகள், உட்டாலக்கடி ரீலர்கள் போன்றவர்கள் வளர்ந்ததற்கும், மருத்துவர்கள் இதே போல் நினைத்து அமைதியாக இருந்தது தான் காரணம்).
குஜராத்தை விட தமிழகம் சிறப்பாக உள்ளது என்று புள்ளி விபரங்களுடன் பேசியது சிலரிலும் சிலர் தான். (குறிப்பாக அந்த தடாலடி நரம்பியல் மருத்துவர்)
இப்பொழுது
குஜராத் மாடல் பொய் என்று மெல்ல மெல்ல தெளிவாகிறது. இருந்தாலும், அதை வெளிப்படையாக கூற பலருக்கும் தயக்கம் உள்ளது.
குஜராத் மாடல் பொய் என்று கூறினால்,
“நான் 10 வருடம் முட்டாளாக இருந்தேன்”
என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போலாகும் என்பது தான் பலரின் தயக்கத்திற்கு.
அதே போல்
2ஜியில் ஊழலே இல்லை என்பது இவர்களுக்கு சம்மட்டி அடி
இதை ஏற்றுக்கொண்டால்
“நான் 10 வருடம் முட்டாளாக இருந்தேன்” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போலாகும் என்பது தான் பலரின் தயக்கத்திற்கு காரணம்.
ஆனால்
இந்த இரண்டும் சேர்ந்து உள்ளுக்கும் வலிக்கிறது, எரிகிறது
அது தான் ஒப்பாரிக்கு காரணம்.
2
ஜெ குற்றவாளி
திமுக ஊழல் செய்யவில்லை
என்ற இரு தீர்ப்புகள்
பாஜக ஆட்சியில் வந்ததை
காவிகளால்
தாங்கவே முடியவில்லை.
இந்த தீர்ப்பை வைத்து ஜெ மீதான களங்கத்தை ( !!?) போக்கலாம் என்று நினைத்து
இவ்வளவு நாளும் தம் பிடித்து கொண்டிருந்தவர்களுக்கு மரண அடி.
3
வழக்கமாக
ஒரு விஷயம் எப்படி சென்றாலும் கூட அது தங்களுக்கு சாதகம் என்று பொய் பிரச்சாரம் செய்வது காவிகளில் வழக்கம்.
உதாரணமாக
சாரணர் தேர்தலில் தோற்ற பிறகு, அதில் வென்றவர் தங்கள் ஆள் என்று அல்ப்பமாக பிரச்சாரம் செய்தார்கள். (அந்தோ,அய்யகோ எச்.ராஜா 😉 )
ஆனால்
இங்கு அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறார்கள்.
காரணம்
(1) தீர்ப்பு சரி என்றால் - 2ஜி ஊழலே இல்லை.
(2) தீர்ப்பு தவறு என்றால் - ஒன்று
மோடியால் ஒரு சிறு நீதிமன்றத்தை கூட கட்டுப்படுத்த முடியவில்லை. இது அவர்களை பொறுத்த வரை மிகப்பெரிய அவமானம்.
(3) தீர்ப்பு தவறு என்றால் - இரண்டு மோடி திமுகவிற்கு உதவுகிறார் . . . அப்படி என்றால் மோடியை விட திமுக பலம் அதிகமாக இருக்கவேண்டும்
திமுக அழிந்தது, திராவிடம் அழிந்தது என்று பேசியவர்களுக்கு இது பேரிடி
குஜராத்தில் வென்ற மோடி
உபியில் வென்ற மோடி
20 மாநிலங்களில் ஆட்சி செய்யும் பாஜக
திமுகவின் தயவை நோக்கியுள்ளது என்றால்
திமுக எவ்வளவு அசுர பலம் பொருந்தியதாக இருக்க வேண்டும்.
இதை நினைத்து பார்த்தாலே ஆசனவாயில் முதல் அனைத்து துவாரங்களும் எரியுமே.
இது தான் பிரச்சனை
இதனால் தான்
கதவிடுக்கில் சிக்கிய ஏதோ ஒன்று போல் கத்துகிறார்கள்
மேலே பாருங்கள்..
1 - 2ஜி ஊழலே இல்லை என்பதை விட
2 மோடியால் ஒரு சிறு நீதிமன்றத்தை கூட கட்டுப்படுத்த முடியவில்லை மோசமாக உள்ளது
2 - மோடியால் ஒரு சிறு நீதிமன்றத்தை கூட கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை விட 3 - திமுக பலம் மோசமாக உள்ளது
இதை விட மோசமான ஒரு காரணம் 4 தான் அவர்களை பயமுறுத்துகிறது
அது என்னவென்றால்
"சூத்திரன் மோடி, சூத்திரன் கலைஞருடன் சேர்ந்து விட்டார் " ( இதை அவர்களே சொல்கிறார்கள்.அதன் பொருட்டே அய்யய்யோ கூட்டணி, அம்மம்மா கூட்டணி புருடா எல்லாம்.)
இதை நேரடியாக சொல்லவில்லை
ஆனால்
இது அவர்களில் உள் வட்டத்தில் பேசப்படுகிறது
That is why we had this tweet
"US will never trust India any more. Stupid Modi is a bloody communist with hiis sudhra guna. He is playing with fire. Tell me a history when a Sudhra has usurped power and ruled benevolently! "

Monday, December 11, 2017

ஏன் மதம் மாறுறான்.. எப்புடி மாத்த முடியுது

இப்ப facebook'ல troll videos'க்கு அடுத்து அதிகமா பாக்க முடியிறது மதம் மாத்த வர கிறிஸ்தவ மிஷ்னரிகளை காவி வேஷ்டி கட்டியவர்கள் திருப்பி அனுப்புற videos தான்.. இது தான் இப்ப trending..
நேத்து ஒருபடி மேலே போய் ஒரு கிரிஸ்தவ ஜெப கூட்டத்தில் நுழைந்து நாற்காலிகளை வீசி எறிந்து பாதிரியார் மண்டை உடைக்கப்பட்டது.. இதை பல பக்தாக்கள் பெருமையா வேற share பண்ணிட்டு இருக்காங்க..
நாட்டில் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் அதைபத்தி எதுவுமே கண்டுக்காம எங்களுக்கு மதம் மட்டும் தான் ஒரே பிரச்சனைனு ஒரு கூட்டத்தை நம்ப வைத்து இத வச்சே எல்லாத்தையும் சமாளிக்கிறதுலாம் வேற லெவல் அரசியல் வித்தை. இதை செய்வதில் நம் பக்தாளை அடிச்சிக்க யாராலும் முடியாது.
சரி முதலில் ஏன் மதம் மாறுறான்.. எப்புடி மாத்த முடியுது.. ஒருத்தனை நீ கால்ல இருந்து பிறந்தவன் உனக்கு கோயிலுக்குள்ள வரவே உரிமை இல்லன்னு மறுக்கப்படும்போது அவன் மாறுவதில் என்ன தவறு இருக்கு?
தாழ்டப்பட்டவனை பல போராட்டங்கள், எதிர்ப்புகளை மீறி பல இடங்களில் ஆலய நுழைவு போராட்டம்னு செஞ்சி தான் கோயிலுக்கு உள்ளயே கூட்டி போக முடிஞ்சிருக்குன்னா அப்ப அடிப்படையில் அவனை உன் மதம் எங்கே வைத்திருந்திருக்கறது?
கூலுக்கும் ரொட்டிக்கும் ஆசைப்பட்டு மதம் மாறிய பாவாடை, வாலுக்கு பயந்து மண்டி போட்டு மதம் மாறிய துலுக்கன்னு மதம் மாறியவனை பார்த்து நீங்க பேசுவது பெருமையான விஷயம் இல்ல, உங்களுக்கு வெட்கக்கேடு, ஏன்ன்னா அவனை அந்த அளவிற்கு வறுமையிலும் பாதுகாப்பில்லாமலும் வச்சிருந்தது உங்க நிலப்பிரபுத்துவ ஜாதிய கட்டமைப்பு தான.. அந்த நிமிடத்தில் அவன் குடும்பத்திற்காக எங்கே பாதுகாப்பும் பசிக்கு உணவும் கிடைக்குதோ அங்கே போய் தான ஆகணும்..
நீங்க குலக்கல்வி முறைனு இவன் மட்டும் தான் படிக்கணும், இவன் பானை செய்ய போனும், இவன் பீ அள்ள போனும்னு சொல்லுவீங்க.. அவனும் அதை கேட்டுட்டு அது தான் எசமான் சரினு கும்பிடு போட்டு அக்குல்ள துண்ட இடுகிக்கிட்டு பொத்திட்டு இருக்கணும்.. எல்லாரும் ஏகலைவனா மாறி சாத்திட்டு போனும், அர்ஜுனர்கள் மட்டும் வாழனும்.. மீறி அவன் வாய்ப்பை அவன் இன்னொரு மதத்தை வைத்து தேடுனா அவன் உங்களுக்கு துரோகி.
இதுல உங்களுக்குள்லயே ஒரு க்ரூப் சாதி தான் இந்து மதத்தின் ஆணி வேர்னு ஒரு பெரிய சைஸ் அல்வாவ கிண்டி உங்களுக்கு குடுத்துக்குட்டே இருகாணுங்க.. பக்தாக்களே இவனுங்க தான் உங்க பக்கம் இருக்க எட்டப்பன்ஸ்.. இப்புடி சாதியை தூக்கி புடிச்சி
மதம் மாற்றத்துக்கு எதிரா பொங்குறவன் எல்லாம் பெரும்பாலும் OC, BC, MbC category ஆ தான் இருக்காங்க, அது ஏன்னா எனக்கு கீழ இருக்கவன நீ மதம் மாத்தி கூட்டி போயிட்டா அப்புறம் என் மதத்தில் நா யார தாழ்த்தி என்ன பெரிய ஆளா காட்டிக்கிறதுங்கிற பதட்டத்தின் வெளிபாடாவே தான் இருக்கு..
உண்மையில் இந்த சாதி கொண்டைகளால் தான் மற்றவர்களால் ஈஸியா மதம் மாத்த முடியுது.. இவங்க சாதியையும் வர்ணாசிரமத்தையும் தூக்கி புடிக்க புடிக்க அங்கே ஏற்படும் ஏற்றத்தாழ்வை வைத்து தாழ்த்தப்பட்டவனை ஈஸியா மதம் மாத்த முடியுது..
சாதியை ஸ்ட்ராங்கா புடிக்கிரவன மதம் மாத்தவே முடியாதுன்னா க்ரிஸ்ட்டியன் நாடார், வன்னிய கிறிஸ்டியன், பள்ளர் கிரிஸ்டியன்லாம் எங்க இருந்து வந்தாங்க?
ஒரு தாழ்த்தப்பட்டவன் மதம் மாறும்போது, மாத்தும்போது வர்ற கோவம், அவன் கடைசி வரைக்கும் இந்துவாவே இருக்கணும்னு நினைக்கும் உங்க எண்ணம்லாம்,
ஊரில் கோயில் தேர் இழுக்கும்போது எங்க தேரை ஒண்ணா சேந்து நீங்க இழுக்குர அளவுக்கு வந்துருச்சானு அவர்களை வெட்டும்போது பலர் செத்தாங்களே, அப்ப அவன் இந்து இல்லயா?
ஊர் குளத்துல தண்ணி எடுக்க கூடாதுனு சொன்னப்ப அவன் இந்து இல்லையா?
அவங்க பிணம் ஊர் தெரு வழியா வர கூடாதுனு மரிச்சு ஊருக்கு வெளிய அனுப்புனப்ப, சாவிலும் சாதி பார்த்து தனி சுடுகாடுங்கிற அவலம் வரைக்கும் எடுத்துட்டு வந்து விட்ருக்கமே.. அப்ப அவன் இந்து இல்லையா?
நெற்றியில் விபூதியிட்ட
கார்ப்பரேஷன் தொழிலாளி தண்ணி கேக்கும்போது சொம்புல குடுக்காம கை படாம use & throw பாட்டிலில் குடுக்கும்போதும், மீறி அவங்க கை உன் மேல பட்டா உடனே கையை சோப்பு போட்டு கழுவிட்டு வீட்டுக்குள்ள போகும்போதும் அவன் இந்து இல்லயா?
போன வருஷம், எங்க தெரு பிள்ளையாரை விட உங்க தெரு பிள்ளையார் பெருசா இருக்கு, ப** பயலுகளுக்கு பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடுகிற அளவுக்கு திமிர் வந்துருச்சானு தாக்குதல் நடத்தி உடைக்கும்போது அவன் இந்து இல்லயா?
ஒரு தாழ்த்தப்பட்டவனை உன் வீட்டு பெண் இழத்துட்டு ஓடுனா ஆணவ கொலை செய்வது தப்பே இல்ல.. அவள் கர்ப்பமா இருந்தாலும் கருவருங்கள்னு பேசுனப்ப கை தட்டுனீங்களே அப்ப அவன் இந்து இல்லயா?
ஒவ்வொரு கலவரத்தின் போதும் வீட்டையும் வாகனங்களையும் குறிவைத்து கொழுத்தி நீங்கல்லாம் படிச்சி வீடும், காரும் வாங்கவும் தான்டா திமிர் வந்துருச்சுனு பொருளாதார சேதம் ஏற்படும்போது அவன் இந்து இல்லயா?
ஒரு சாதி கட்சி தலைவரின் தலைமையில் 2012'இல் 49 சாதி சங்கத்தை இணைத்து "தலித் அல்லாதோர் கூட்டமைப்பு"க்கு முன்னோட்டம் போட்டீங்களே அப்ப அவன் இந்து இல்லயா?
இவ்ளோ அநீதிக்கு அவனை ஏண்டா தள்ளுறீங்க அவன் சக இந்துனு உங்களில் மதம் மாற்றத்தை எதிர்க்கும் எத்தனை பேர் அவனுக்காக அப்ப நின்னீ்ங்க?
நான் மேலே சொன்ன பட்டியல் மிக குறைவு, இப்புடி எல்லாவற்றிலும் ஒருசாராரை ஒதுக்கி கீழே தள்ளி அவனை அவமானப்படுத்தும்போது இன்னொரு மதத்திடம் அவன் போக தான் செய்வான்.. இது தான் இயல்பு. எல்லாராலும் இங்கே பெரியாரையும் , சே,வையும், கார்ல் மார்க்ஸையும் இறுக்கி பிடிக்க முடியாது.. எளிய மனிதர்களுக்கு கடவுள் தேவைப்படுகிறார்.. உங்கள் கடவுள் அவனை வேண்டாம்னு சொல்லும்போது அவன் இன்னொரு கடவுளை நோக்கி போக தான் செய்வான்..
ஏன் மற்ற மதங்களில் சாதியே இல்லயா, மதம் மாறியவுடன் சாதிய ஏற்றத்தாழ்வு ஒழிஞ்சிருமா, அங்கே உட்பிரிவுகளே இல்லயானு உங்களோட template அரைகுறை கேள்வியை இங்கே கேட்கலாம்.. மனிதன் இருக்க எல்லா இடங்களிலும் உட்பிரிவுகளும் ஏற்றதாழ்வுகளும் இருந்துக்குட்டே தான் இருக்கு.. ஆனா அப்புடியே மற்ற மதங்களில் இருந்தாலும் இந்து மதம் அளவிற்கு இல்லை என்பதே நிதர்சனம். ஏன்னா நீங்களே சொல்ற மாறி இது நால்வர்ணங்களால் கட்டப்பட்டது.. அப்புடியே மற்ற மதத்தில் இருந்தாலும் அது அவன் பிரச்சனை, ஒரு வீட்டில் நிறைய வலியும் அவமானமும் இருந்தா அந்த வீட்டை காலி செய்வது அவன் கடமை, அது அவன் நிம்மதி, சுயமரியாதை சம்பந்தபட்ட விஷயம்.. இன்னொரு வீடு எப்புடி இருக்கும்ங்கிறது வேறு விஷயம்.
தாழ்த்தப்பட்ட மக்களை கிறிஸ்தவர்கள் கொஞ்சம் சத்தம் போட்டு அவர்கள் பக்கம் ஈர்க்குறாங்கன்னா சத்தமே இல்லாம புத்திஸ்ட்டுகள் பெரும் எண்ணிக்கையில் மக்களை அவங்க பக்கம் இழுத்துகுட்டே இருக்காங்க.. உங்க சாதிய அழுக்கால mass converstions நடந்துகுட்டே தான் இருக்கு, இருக்கும்.. நீங்க மாறும்வரை..
எங்க அவன் மிச்சம் இருக்கவனையும் மதம் மாத்திருவானோங்கிற
பதட்டம் உங்களை ஆழமா பாதிக்கவும் தான் இதுவரை நாடார் ஒற்றுமை, வன்னியர் ஒற்றுமை, தேவர் ஒற்றுமைனு கேட்ட இந்த ஊரில் "இந்து ஒற்றுமை"ங்கிற வார்த்தையே வருது.. இவ்வளவு நாள் நீ வேற ஆளு, தள்ளி நில்லுனு சொன்னவன் கிட்ட ஒரு பேச்சுக்காச்சும் நாமெல்லாம் ஒரே மதம், இந்து மதம்னு சொல்லவச்சி, உங்களுக்குள்ள இந்த ஒற்றுமைய எடுத்துட்டு வந்த conversion நல்லது தான..
எல்லா மதத்திற்கும் அதற்கான updation தேவைப்படுகிறது.. இனியும் உங்களை நீங்க அப்டேட் பண்ணிக்காம நால் வர்ணம், மனு, வர்ணாசிரமம்னு பழைய பஞ்சாங்கமாவே இருந்தீங்கன்னா யார் நினைச்சாலும் மதம் மாற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது.. இந்த விஷயங்களை எல்லாம் நீங்களே சரி செஞ்சுகிட்டா இன்னொருவனை திட்ட வேண்டிய அவசியம் வராது.. முதலில் உங்க
முதுகுல இருக்க அழுக்கை தொடைங்க.. அதுக்கப்புறம் தொடைக்க வர்றவன திட்டலாம்..