Monday, November 18, 2019

அமைதியையும் சமாதானத்தையும் போதித்த மண்ணுக்கு சொந்தமான பெரிய மதங்கள் இரண்டே

இந்த தேசத்தில் பிறந்து அமைதியையும் சமாதானத்தையும் போதித்த மண்ணுக்கு சொந்தமான  பெரிய மதங்கள் இரண்டே..

அந்த சமணத்தையும் பவுத்தத்தையும் தழுவிய என் தமிழ் மக்களையும் கூட தன் நயவஞ்சகத்தால் பார்ப்பனியம் கழுவிலேற்றி கொன்றதே வரலாறு...
பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் பவுத்த சமண நூல்கள் என்பதே முழுமுதல் ஆதாரம்...

அந்த நூல்களை அச்சிலேற்றும் போது  தங்களை உள்நுழைத்த சண்டாளர்கள் பார்ப்பனியர்...

திருக்குறளிலேயே 30 குறள்கள் பார்ப்பனியத்தால் திணிக்கப்பட்டதென்று சங்கிகள் கொண்டாடும்  வ.வு.சி யே ஆய்ந்தறிந்து கூறியுள்ளார்....

அன்று முதலே ஆள்பவர்களை அடிமையாக்கி தங்களை சுமக்க வைக்கும் சூட்சுமம் பார்ப்பனியத்திற்கு கைவந்த கலை...

தன் முன்னோர்களை கொன்ற
வந்தேறி பார்ப்பனிய இந்து மதம் ஏற்பவன் வரலாறு தெரியாத பார்ப்பனிய அடிமை....

யார் இந்த அர்சூன் சம்பத்

யார் இந்த #அர்சூன்_சம்பத்

இவரைப்பற்றி தெறிந்து கொள்வோம்!

அர்சூன் சம்பத் 20 ஏப்ரல் 1965ல் பிறந்தார். சிறு வயது முதல்  கிறிஸ்தவ பள்ளியில்  படித்தார். படிப்பு சரியாக ஏறவில்லை என்ற காரணத்தால் 12ம் வகுப்பை பாதியில் விட்டு வெளியே வந்தார். அதன்பிறகு தந்தையின் சலூனில் சிறிது காலம் வேலை செய்தார். அப்போது அங்கு முடி வெட்ட வந்த சில இந்துத்துவ மதவெறியர்களுடன் அர்சூன் சம்பத்துக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்களுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்து கொண்டார். பிறகு இந்து முன்னனி ராம கோபாலுடன் இனைந்து முஸ்லீம் விரோத செயலில் ஈடுபட்டார் உயர்சாதி ராம கோபாலனோ இவரை சூத்திரன் (தாழ்ந்த சாதி) என்பதால் எடுபுடி வேலைக்குமட்டும் பயன்படுத்திக்கொண்டு சற்று தள்ளியே வைத்திருந்தார் அதை பொருத்துகொள்ளமுடியாமல் தானும் ஒரு தலைவனாகி M L A வாகும் ஆசையில் தொடர்ந்து இந்து மக்கள் கட்சி  ( ? )என்ற ஒரு கட்சியை தொடங்கி மத வெறுப்பு அரசியல் செய்ய துவங்கினார்.

இதை கண்ட அர்சூன் சம்பத்  தந்தை கந்திப்பான், தாயார் தங்கமனி அம்மாள் இருவரும் மிகுந்த மனஉளைச்சல் அடைந்தனர். கடைசியில் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்ற பின் அவர்கள் மன நிம்மதி கிடைத்ததால் இருவரும் அந்த பெந்தகொஸ்தே சபையில் ஞானஸ்தானம் எடுத்து மதம் மாறினர். இதை கண்டு எரிச்சல் அடைந்த அர்சூன் சம்பத் அவர்களுடன் தொடர்பை துண்டித்தார்.

அதற்கு பின்பு அர்சூன் சம்பத் மனைவி சுப்புரத்தினம், கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். தான் வேலை செய்யும் குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியின் அருகில் உள்ள கிறிஸ்தவ சபையில் அங்கத்தினராக மாறினார். இந்த சமயத்தில் தான் நித்தியானந்தா சாமியாரால் இந்த செய்தி வெளி உலகுக்கு  தெரியவந்தது. அர்சூன் சம்பத்தும், அவர் மகனும் சுப்புரத்தினத்தை  அனுதினம் இந்து மதத்துக்கு வா என்று தொல்லை கொடுத்து மிரட்டி வந்தனர். குடும்பத்தில் நிலவும் பிரச்னை காரணமாக, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை தின்று, செப்டம்பர் 19, 2017 அன்று  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். KG மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பின்பு காப்பாற்றப் பட்டார்.

அதன் பிறகு நீ கிறிஸ்தவ மதத்தில் இருந்து கொள், எனக்கு ஆட்சேபனை இல்லை என்று அர்சூன் சம்பத் சொன்னார். தற்போது அர்சூன் சம்பத் மனைவி, தாய், தந்தை அனைவரும் கிறிஸ்தவர்கள்.
இவர் மட்டும் சொகுசு வாழ்க்கைக்காக RSS மற்றும் VHP மற்றும் ப ஜ கவின் கைபாவையாக முஸ்லீம் மற்றும் கிருஸ்த்துவ மதத்துக்கு எதிராக தினம் ஒரு TV விவாதத்தில் பங்கெடுத்து தலைப்புகளுக்கு சம்மந்தம் சம்மந்தமில்லால் பேசிவருபவர். சமீபத்தில் ஒரு மாலை வாங்கிசென்று
நடிகர் ரஜினியை சத்தித்து நல்லவர் வல்லவர் என்று புகழ்பாடினார் ரஜினியும் இவர் சரித்திம் தெறிந்து கூடநின்று ஒருபோட்டோவுக்கு போஸ் கொடுத்து இனி திரும்பி இங்கே வரவேண்டாம் சாமி என்றுசொலி வந்த வழி அனுப்பினார்.
  பிறகு நடிகர் கமல்ஹாசனை சந்திக்க சென்றார் இவரின் ஜாதகம் கமலுக்கு அத்துபடி அதனால்  போட்டோஎடுக்காமலே வழியனுப்பி வைத்தார்.
   எங்கெல்லாம் இந்து முஸ்லீம் ஒற்றுமையோ அங்கெல்லாம் சென்று ஏதாவது ஒரு பிரச்சின்யை உண்டுபன்னி பிரிவினையை ஏற்படுத்துவதே இந்த "தேச"பக்தரின் வேலை

திருடத்துடிக்கிறது சனாதனக் கூட்டம்.

காவி நிறத்தையே சமண மதத்திடமிருந்து திருடியதுதான் இந்த சனாதனக் கூட்டம்.

புலால் மறுப்பை பௌத்தத்திடமிருந்து திருடியது.

முருகனை சைவத்திடமிருந்து திருடியது.

கண்ணனை வைணவத்திடமிருந்து திருடியது.

பிராமணீய உயிர் கொலை யாகத்தை எதிர்த்து புரட்சி செய்தப் புத்தரை விஷ்ணு அவதாரம் என்று திருடியது.

இந்துத்துவாவை மறுத்து சமரச சன்மார்க்கம் கண்ட வள்ளலாரைத் திருடியது.

இந்து என்பதை ஏற்காது தனியொரு வழிபாட்டை  உருவாக்கிய
சாமி வைகுண்டரைத் திருடியது.

இசுலாமியர்களோடு இயைந்து வாழ்ந்த மராத்திய சூத்திரர் சிவாஜியைத் திருடியது.

ஆர்எஸ்எஸ்சை தடை செய்த பட்டேலை காங்கிரஸ் கட்சியிடமிருந்து திருடியது.

'இந்துவாக ஒருநாளும் இறக்க மாட்டேன்' என்று முழங்கிய அண்ணல் அம்பேத்கரைத் திருட நெடுநாளாய் முயற்சித்தது.

தற்போது அதன் நீட்சியாக, வள்ளுவரைத் திருடத்துடிக்கிறது.

கழக கொள்கைப்பரப்பு செயலாளர்
                திரு.ஆ.ராசா எம்.பி

கீதாசாரம்

கீதாசாரம்:
.
.
இந்த பெயரில் பல விதமான பதாகைகள் நீங்கள் பார்த்திருப்பீர்கள், பலர் பலவிதமான உரைகள் விளக்கங்கள் சொல்லி கேட்டிருப்பீர்கள்
.
.
நான் நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் லிளக்க முயல்கிறேன்
.
.
போர்க்களத்தில் அர்ஜுனன், தன் ஆயதங்களை கீழே போட்டுவிட்டு, இறங்கி விடுகிறான், கிருஷ்ணன் என்ன ஆயிற்று அர்ஜுனா, உன் உறவினர்களை கொல்ல வேண்டுமே என்று குழப்பம் அடைந்து தயங்குகிறாயா என்று கேட்கிறான்.
.
.
அர்ஜுனன் இல்லை கிருஷ்ணா போர்களத்துக்கு வந்துவிட்டால் சண்டை செய்து தான் ஆகணும் என்று எனக்கும் தெரியும், ஆனால் இந்த போரில் வந்திருக்கும் எல்லா சத்திரிய வீரர்களையும் நான் கொன்றுவிட்டால்
.
.
அவர்களின் மனைவிகள், மகள்கள் மற்றும் மற்ற சத்ரிய பெண்கள் எல்லாரும் இந்த போருக்கு பின், திருமணம் செய்து கொள்ள சத்திரிய ஆண்கள் குறைவாக இருப்பதால் வேறு சாதி மற்றும் வருண ஆண்களை திருமணம் செய்து கொண்டு வர்ணகலப்பு ஏற்பட்டு, இந்த புனிதமான மனுதர்மம் அழிந்து விடுமே என்று தான் அஞ்சுகிறேன் என்று சொல்கிறான்
.
.
அதற்கு கிருஷ்ணன் “சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்” இந்த நாலு வர்ணம் என்பதை உருவாக்கியவனே நான் தான் என்று மேற்கோள் காட்டி, இந்த நாலு வர்ணம் சார்ந்தவர்கள் என்ன என்ன செய்ய வேண்டும் என்ன என்ன செய்ய கூடாது என்றெல்லாம் விளக்கமாக சொல்லிவிட்டு
.
.
கடைசியாக அர்ஜுனனை பார்த்து சொல்லும் பகவத்கீதையின் கடைசி வரிகள் இது தான்
.
.
பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
.
.

அதாவது நீ எதை பற்றியும் கவலைபடாதே அர்ஜுனா, எப்போதெல்லாம் இந்த மனுதர்மத்தை யாராவது கெடுக்க அழிக்க முயற்சி செய்கிறார்களோ, அப்போதெல்லாம் நான் யுகங்கள் தோறும் பிறப்பெடுத்து, மனு தர்மத்தை காப்பேன்
என்று அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் உத்திரவாதம் கொடுத்த பிறகே அர்ஜுனன் பாரதபோரில் ஈடுபடுகிறான்
.
.

இதுவே ஒரு தேங்காய் சிரட்டையின் பின்பக்கம் (Nutshell) எழுதும் அளவுக்கு சுருக்கமான  கீதையின் மொத்த சாரம்,                  
.
.
FYI: மேலே உள்ள மொத்த பதிவு 192 வார்த்தைகள் கொண்டது 100ல் முடிக்க முடியவில்லை என்று வருந்துகிறேன்.

ஆரிய வேதத்திற்கு எதிரானது தமிழ் குறள்..

ஆரியம் நான்கு வருணம் என்கிறது..
குறள் பிறப்பொக்கும் என்கிறது..
ஆரியம் ஏர்பிடிப்பது சூத்திரனுக்குரியதாக கூறுகிறது..
குறள் உழவனை போற்றுகிறது..
ஆரிய புராணங்களில் சூதாட்டங்கள் வருகின்றன..
குறள் சூதாடுவது தவறு என்று கூறுகிறது..
பிராமணன் பிச்சை வாங்க வேண்டும் என்கிறது ஆரியம்..
இரந்து வாழின் உலகியற்றியவன் கெட்டழியட்டும் என்கிறது குறள்..
மரணம் வரின் எந்தச் செயலையும் செய்யலாம் என்கிறது ஆரியம்..
மானம் உயிரினும் பெரிது என்கிறது குறள்..
ஆரிய புராணங்களில் பல மனைவிகள் உண்டு..
குறள் பிரண்மணை நோக்காமை என்கிறது..
வேதம்..பசு, குதிரைகளை, வேள்வியில் இடலாம் என்கிறது..
குறள் கொல்லாமை பற்றி பேசுகிறது..
வேதம் விதி வலியது என்கிறது..
குறள் விதியை முயற்சியால் வெல்லலாம் என்கிறது..
வேதம் தாழ்ந்த சாதிகள் கல்வி கற்க கூடாது என்கிறது.
குறள் எல்லோரும் கற்க சொல்கிறது..
ஆரிய வேதம்=சுயநலம்.
தமிழ் குறள்=பொதுநலம்
வேதத்திற்கு எதிரானது குறள்..
வாழ்க தமிழ்..
வாழ்க திருவள்ளுவர்..
வாழ்க திருக்குறள்..

குடமுழுக்கு(கும்பாபிசேகம்)

குடமுழுக்கு(கும்பாபிசேகம்)
சூத்ரர்களும்,பஞ்சமர்களும் கோயிலுக்குள் போகமுடியாது அதற்கு காரணம் ஆகமம் போட்ட ஆணைதான் காரணம் அதைத்தான் பார்ப்பனர்கள் பின்பற்றி வந்தனர்;
ஆகமம் அப்படி என்னதான் ஆணையிட்டது?
"த்ருஷ்ட்வா தேவஹா பலாயதே என்று போகிற பாஞ்சாராத்ர ஆகம ஸ்லோகம் என்ன உத்தரவிடுகிறதென்றால் பல ஆச்சார அனுஷ்டாங்களின் அடிப்படையில் பகவானை விக்ரகங்களில் இருத்தி வைத்திருக்கிறோம்.இந்த புனிதமான கோயில்களுக்குள் சூத்ரனோ,பஞ்சமனோ ஒரு அடி எடுத்து வைத்தால் கூட அனுஷ்டாங்கள் கறைப்பட்டு விடும்.அதனால் அந்த விக்ரகங்களில் இருந்து பகவான் பட்டென ஓடிப்போய் விடுவார்.

    அதனால் சூத்ரனோ,பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் எடுத்து வைத்தால்...விக்ரகம் வெறுங்கல்லாகி விடும்.பகவான் அதில் கஷணம் கூட தங்கமாட்டார்.எனவே அவர்களை கோயிலுக்குள் விடாதே...என்கிறது ஆகமம்.

  ஒரு வேளை மீறி நுழைந்து விட்டால்?...

  அதற்கு பரிகாரம்தான் சம்ப்ரோக்ஷணம் அதாவது குடமுழுக்கு(கும்பாபிசேகம்)என பரிகாரமும் பண்ணி வைத்திருக்கிறது ஆகமம்.

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்-2

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்-2

பாட புத்தகத்தில் இரட்டைமலை சீனிவாசனார் மற்றும் எம்.சி.ராஜா வரலாறு 😍

ஆங்கில வழியில் 76,77 வது பக்கங்களிலும்
தமிழ் வழியில் 85,86 வது பக்கங்களிலும் இடம்பெற்றுள்ளது 💥💥


நாங்க ஒடுக் பிராமணர்கள்...

நாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான்.. !

இந்தியாவில் செட்டில் ஆன கொஞ்ச நாளில் கறி மீனை சாப்பிடும் பழக்கத்தை இழந்தோம். சொந்த பெண்களுக்கு மொட்டை போட்டு மூளியாக்கும் உரிமையை இழந்தோம்.
அதை மீட்க இப்போது முயன்றால்..
எங்காத்துப் பெண்களே எங்களை விளக்கமாற்றால் அடிப்பார்கள்.

கடவுள் கையேந்தி நிற்கும் அவலம் கண்டதுண்டா நீங்கள்? அது தமிழ்நாட்டில் தினசரி காணக்கிடைக்கும் காட்சி.

கடவுளுக்கும் மேலான எங்களை கடவுளாகவே மக்கள் கருதி வந்தார்கள். கோயில் ராஜாக்கள் வசம் இருந்தது. ராஜாக்களோ எங்கள் வசம் இருந்தார்கள். எங்கள் வீடுகள் வெள்ளம் அண்டாத மேடான நிலத்தில் இருந்தது.

வயலில் கால் வைக்காமலேயே எங்கள் வெள்ளாமை வீடு வந்து சேர்ந்தது. ”சாப்பிடுறதுதான் தயிர் சாதம், மோதிப்பார்த்தா உயிர்சேதம்” என ஸ்டேட்டஸ் போடவேண்டிய நிலை
எங்களுக்கு அன்று இல்லை.
காரணம் ஊரில் எல்லோருக்கும் அது தெரிந்திருந்தது.

ஹிந்து ராஜாக்கள் காலத்தில் வாழ்ந்தது போலவே முகலாயர்கள் காலத்திலும் சௌபாக்கியத்துக்கு குறைவின்றியே வாழ்ந்துவந்தோம்.
வெள்ளைக்காரன் காலத்திலும் அசௌகர்யம் என்று ஒன்று இல்லை.

சாதி ஒழிப்பு, சூத்திரர்களுக்கு கல்வி போன்ற சில அனாச்சாரங்கள் அப்போது இருந்தன என்றாலும் அதிகாரம் எங்களிடம் இருந்தது. உலகமே பயந்த ஹிட்லருக்கு நாங்கள் பயப்படவில்லை, அவன் வருகையை எதிர்பார்த்து ஜெர்மன் மொழி கற்ற வீர சமூகம் எங்களுடையது.

ஆனால் இன்று அவை பழங்கதை ஆகிவிட்டன. முதல்வரைக் காட்டிலும் அதிகாரம் கொண்ட தலைமைச் செயலாளர் எங்களவர். ஆனாலும் மக்களிடம் மரியாதை இல்லை. எல்லா பெரிய நிறுவனங்களின் தலைமைப் பீடங்களும் எங்கள் வசம்தான். ஆனாலும் எங்கள் குலக் கொழுந்துகளுக்கு மீடியா பெண்களை வேசி என அழைக்கும் உரிமைகூட மறுக்கப்படுகிறது.

மீடியா ஓனர்கள் எங்களை பாத கமலங்களில் வீழ்ந்துகிடக்கும் சூழல் இருந்தாலும் எங்கள் பிள்ளை பாண்டேவால்கூட எங்களை முழுமையாக ஆதரிக்கமுடியவில்லை. வியாபாரத்துக்காக பா.ஜ.க.வை நோண்டி நோண்டி கேள்வி கேட்கவேண்டிய தலைவிதியல்லவா அவனுக்கும்?

ஆயிரம்தான் கூமுட்டையாக இருந்தாலும் சுப்ரமணியசாமியை கோமாளிபோல பார்ப்பது நியாயமா? குருமூர்த்தியும் எச்.ராஜாவும் தமது குலவழக்கப்படி
ஒரு வதந்தியைக்கூட ட்விட்டர் வாயிலாக பரப்ப முடியாத அளவுக்கு மக்கள் அவர்களை அம்பலப்படுத்துகிறார்கள்.

அப்படிப்பட்ட கொடியவர்களின் கூடாரமாக இந்த மாநிலம் இருக்கிறது. மோடியையே அதிகாரம் செய்யவல்ல ஜாதி எங்களுடையது.

ஆனாலும் ஷர்மா சாஸ்திரிகளால் ”நம்ம ஜாதி பிள்ளைகள் ஸ்கூல்ல மத்த சாதி கொழந்தைகளோட சாப்பாட்டுல கைவச்சு சாப்பிடக்கூடாது” ன்னு நேரடியாக சொல்ல முடியவில்லை.. அது சுகாதாரம் இல்ல, அதனால் பல விளைவுகள் ஏற்படும்னு மையமாக புலம்ப வேண்டியிருக்கு.

எங்கள் தர்மத்தைக்கூட குசுவைப்போல நசுக்கி விடவேண்டியிருக்கிறது. இதையெல்லாம் சொல்லி புலம்பி ஸ்டேட்டசோ வீடியோவோ போட்டால் 28 லைக் வருவதற்கும் 750 ஹாஹா ஸ்மைலிகள் அசுர பாணங்களாக வந்து எங்கள் நெஞ்சைத் தைக்கிறதே…

கோட்சே எங்கள் பிள்ளை.
கோட்சேவை கொஞ்சி மகிழ முடியவில்லை. தொட்டால் பட்டுக்கொள்ளும் அம்பேத்கரை எல்லாம் பாராட்டித்தொலைய வேண்டியிருக்கிறது.

சொந்தப் பிள்ளைக்கு இன்ஷியல் கொடுக்க முடியாமல் ஊரான் பிள்ளையை தன் பிள்ளையென கொஞ்ச வேண்டிய துரதிருஷ்டம் வேறு ஜாதிக்கு வாய்த்திருக்கிறதா?

மஹாராஜாக்களை எங்கள் காலடியில் விழுந்து கிடக்க வைத்த சமூகம் இன்று காமெடியன்களை ஐகான்களாக வைத்திருக்க வேண்டிய அவல நிலையில் இருக்கிறது.

இன்று இருக்கும் பிராமண தலைவர்களை பாருங்கள், சுப்ரமணிய சாமி, எஸ்.வி.சேகர், எச்.ராஜா, நிர்மலா சீதாராமன்… இந்த பெயர் வரிசையை படிக்கும்போது கெடா குமாரு, டுமீல்குப்பம் வவ்வாலு எனும் சினிமா டயலாக் எனக்கே நினைவு வந்து தொலைக்கிறது.

பிறகு ஊர்ஜனம் மட்டும் சிரிக்காமல் இருக்குமா? இந்த எழவெடுத்த இன்டர்நெட் ஒருகாலத்தில் எங்கள் அக்ரஹார திண்ணை போல எத்தனை ரம்மியமாக இருந்தது. இப்போது பீஃப் கடைக்கு போவதுபோல நாங்கள் அங்கு ரகசியமாகத்தான் போக வேண்டியிருக்கிறது.

ஆசிட் அடிப்பது கஞ்சா கேஸ் போடுவது என பல வீர வரலாறு இருந்தாலும் எங்கள் குலமங்கை ஜெயாவை வைத்தே சங்கராச்சாரியை கைது செய்ய வைத்துவிட்டதே இந்த சூத்திர கும்பல்.

சரி நிம்மியை அடுத்த ஜெ.வாக மாற்றிவிட்டால் எல்லாம் ஷேமமாக நடக்கும் என நாங்கள் ஆறுதல்படும் வேளையில், அந்த தைரிய லட்சுமியை கண்டாலே தமிழக இளைஞர்கள் கூட்டம் ஓணானைக் கண்ட 80-ஸ் கிட்ஸாக மாறி விர்ச்சுவல் கல்லெடுத்து அடிக்கின்றன.

போகட்டும் ஜனநாயக மேக்கப் போட்ட பத்ரியை தலைவராக்கலாம் என்றால் அவருக்கும் அதே ஓணான் டிரீட்மெண்ட் கிடைத்துவிடுமோ என அடிவயிறு கலங்குகிறது.

அதுமட்டும் இல்லாமல் இருக்கும் மிச்சம் மீதியெல்லாம் பொறுக்கியாகவும் கூமுட்டையாகவும் இருக்கிறது. இதில் இருக்கும் டெமாக்ரடிக் மூஞ்சியையும் காவு கொடுக்க பயமாயிருக்கிறது.

மோடியின் ராஜகுரு குருமூர்த்தி அரும்பாடுபட்டு அறிமுகம் செய்த தீபா விளங்கவில்லை.. ஓ.பி.எஸ்.சை வளர்க்கிறேன் என கிளம்பினார் அதனால் சசிகலா மீதிருந்த ஜனங்களின் கோபம் குறைந்து போனதுதான் மிச்சம்.

ரஜினியை உசுப்பினார், அன்றிலிருந்து அது வரலாற்றில் இல்லாத அளவுக்கு உச்சகட்ட மெண்டல்போல உளறிவைக்கிறது. இதையெல்லாம் பார்த்த எங்கள் வீட்டு மாமியே, இந்த தரித்திரம் பிடித்தவன் மூஞ்சியில் முழிச்சிட்டு போனா பால் பாக்கெட்கூட கிடைக்கிறது இல்லை என புலம்புகிறாள்.

இத்தனை காலம் நாத்திகம் பேசி மாட்டுக்கறி தின்றவராயிற்றே எனும் நன்றியில்லாமல்..பிராமண வீட்டுப் பிள்ளை கமலையும் கழுவி ஊற்றுகிறார்கள், அய்யங்கார் வீட்டு மருமகன் ரஜினியையும் பார்க்குமிடமெல்லாம் துப்புகிறார்கள்.

இவனுங்களை எப்படி கரெட்க் பண்றதுன்னே தெரியலையே என ஆர்யா போல புலம்பியே எங்கள் மாமாக்கள் பலர் உலக வாழ்வை முடித்துக்கொண்டு விட்டார்கள்.

ஒரு காலத்தில் எங்கள் வீட்டு நாயாக இருந்த மக்களின் பிள்ளைகள் எதிரியின் வேட்டை நாயாக மாறி எங்களையே கடிக்க வருகின்றன.

ஏதோ ஆதிக்க சாதிச்சங்கங்களும் கிருஷ்ணசாமி வகையறாக்களும் (பேரை மாத்தி வச்சுக்கோடாம்பி… அவா அவாளுக்குன்னு ஒரு கல்ச்சர் இருக்கோல்யோ) எங்களை காலைக் கழுவி சேவகம் செய்வதால் எங்கள் மூச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

கிருஸ்தவ சூத்திரன் விஜய் படத்தை காலி செய்ய எங்கள் பிராமண தளபதி ராஜாவை அனுப்பினால்..தமிழக அசுர கும்பல் அந்த மெர்சல் படத்தை வெறித்தனமாக ஓடவைக்கிறது. அதன் பிறகு கோடம்பாக்க டைரக்டர்கள் எல்லோரும் பா.ஜ.க.வை திட்டி காட்சி அமைப்பதற்கென்றே தனி டிஸ்கஷன் வைத்தார்கள் என கேள்விப்பட்டேன்.

ஏதோ வருமான வரித்துறை எங்கள் வசம் இருப்பதால் தப்பித்தோம். அடுத்த விஜய் படத்தை ஒழிக்க நாங்கள் ஜெயமோகன் எனும் சூத்திரனைத்தான் அனுப்ப வேண்டியிருந்தது.

ஒரு காலத்தில் எங்கள் காலடியில்தான் கிடந்தது சினிமாத்துறை. மணி சார், பாலச்சந்தர் சார் என பயபக்தியோடு ஒலித்த குரல்களை இன்று கேட்க முடியவில்லை. அரவிந்த் சாமி, மாதவன் என வெண்ணிற சாக்லேட் பாய்களை இன்று சீந்த நாதியில்லை.. விஜய் சேதுபதி போன்ற கருப்பர் கூட்டமோ கால்ஷீட் இல்லாமல் பறந்து பறந்து வேலை செய்துகொண்டிருக்கிறது.

சினிமா மட்டுமா எங்களை விட்டு தொலைந்தது? கஷ்டப்பட்டு மந்திரம் ஓதி மஹாராஜாக்களுக்கு சோப்பு போட்டு சம்பாதித்த சதுர்வேதி மங்கலங்கள் எம்மிடம் இருந்தன.. அவற்றை எல்லாம் நோகாமல் – உழைத்துப் பிழைத்த மக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தர்மம் செய்தோம்..

இந்தியாவில் செட்டில் ஆன கொஞ்ச நாளில் கறி மீனை சாப்பிடும் பழக்கத்தை இழந்தோம். சொந்த பெண்களுக்கு மொட்டை போட்டு மூளியாக்கும் உரிமையை இழந்தோம். அதை மீட்க இப்போது முயன்றால் எங்காத்துப் பெண்களே எங்களை விளக்கமாற்றால் அடிப்பார்கள்..

ஸ்கூல் வாத்தியார், தாசில்தார், பேங்க் மேனேஜர் என நாங்கள் கட்டியாண்ட துறைகள் எல்லாம் கையைவிட்டுப் போய்விட்டது. ஆடிட்டர், நீதிபதி, கவர்னர் என சில டிபார்ட்மெண்ட்கள் மட்டும் மிச்சம் இருக்கின்றன. ஆனாலும் அங்கேயும் சில கறுப்பு உருவங்கள் வந்து எங்களோடு ஈஷிக்கொண்டு நிற்கின்றன.

மயிலாப்பூர் மாம்பலமாவது மிச்சமானதா என்றால் அதுவும் இல்லை. அயோத்தியா மண்டப சொற்பொழிவானாலும் தெற்கு மாடவீதி எஸ்.வி.சேகர் மீட்டிங் ஆனாலும் எங்கள் இனத்தில் இருந்து வெறும் கிழடு கட்டைகள்தான் வருகின்றன. சுகர் பேஷண்ட்டுக்களை வைத்து எங்கிருந்து இன்னொரு குருஷேத்ரப் போரை நடத்துவது? அப்படி போரை நடத்தினாலும் அதை முன்னின்று நடத்த வேண்டிய சின்ன சங்கராச்சாரி மல்லாக்கப் படுத்தால் எழவே மாமாங்கம் ஆகும் போலிருக்கிறது.

போகட்டும், இன்றைய தமிழகம் வேண்டுமானால் எங்களை நக்கல் செய்யலாம். ஆனாலும் எங்களை ஆண்டவன் அப்படி அம்போவென விட்டுவிடமாட்டான்.

இன்னமும் கோயில்கள் எங்கள் வசம்தான் இருக்கின்றன. அங்கேயெல்லாம் ஷாகா நடத்தி வேண்டிய அளவுக்கு முட்டாள்களையும் பொறுக்கிகளையும் ரவுடிகளையும் உருவாக்குவோம்.

எங்கள் பிள்ளைகள் எல்லாம் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டன. மேற்கத்திய சாவர்க்கர் ட்ரம்ப் அவர்கள் அதிபராக இருக்கிறார். ஆகவே அங்கிருந்து எங்கள் ராஜாங்கத்தை நடத்துவோம்.

மோடி என்றில்லை யார் இந்தியாவின் பிரதமரானாலும் அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் காணாமல் போகும் அல்லது தனியாருக்கு கைமாற்றிப்போகும்.

இலவசக் கல்வி ஒழிக்கப்பட்டு நாடெங்கும் படிப்பறிவற்ற முட்டாள்கள் இருந்தால்
வாட்சப் வீடியோ வழியே வந்து நாங்கள் ராமராஜ்யம் அமைப்போம்.

சூத்திர துதிகளின் பக்தியும் முட்டாள்த்தனமும் எங்களைக் காப்பாற்றும்..
கிட்டுணசாமி, அரிச்சுனசாமிகளின் அடிமை சாசனம் எங்களை கவசம்போல் காப்பாற்றும்.
வாட்சப் ஃபார்வேர்டு தகவல்களை நம்பும் மிடில்கிளாஸ் அரைவேக்காடுகள் உள்ளவரை பிராமணீயம் எந்த சவாலையும் தாங்கும்.

ஐஐடி உணவுக்கூடம்


படம் 1:
ஐஐடி உணவுக்கூடத்தில் அசைவம் சாப்பிடுவோருக்கு மட்டும் எதிராக எழுதப்பட்ட #அதர்மம்.


படம் 2:
#ஐஐடிசைவங்கள் இருவகைப்படும். 'வெங்காயம்-பூண்டு இல்லா சைவம்' அதில் ஒருவகை. இரண்டு சைவத்துக்கும் தனித்தனி உணவுக்கூடம்.


படம் 3:
அசைவம்/சைவம் சாப்பிடும் இடம்தான் தனித்தனியாக பார்த்திருக்கிறேன்... ஆனால், #கைகழுவுமிடமும் #தனித்தனியாக ஐஐடியில்தான் காண்கிறேன்.

இதில் இரண்டை கேள்விக்குட்படுத்தி கொஞ்சம் சிந்திப்போம்:

1. அசைவதுக்கு எதிராக மட்டும் வைக்கப்பட்டது போல... பூண்டு-வெங்காயத்துக்கு எதிரான ஏதேனும் ஒரு வாசகம், அதை சாப்பிடும் இடத்தில் ஏதுமில்லையே ஏன்..?

2. தனித்தனி உணவுக்கூடம் இருந்தாலும்... பூண்டு-வெங்காயமற்ற சைவத்துக்கும் சாதா சைவத்துக்கும் தனித்தனி கைகழுவும் இடமில்லையே ஏன்..?

அப்படின்னா...
இந்த பாகுபாடுகள் யாவும் 'உணவை அடிப்படையாக வைத்து அல்ல' என்று நமக்கு எளிதாக புரிகிறதல்லவா..?!

Monday, November 11, 2019

அயோத்தி பாபரி மஸ்ஜித் தீர்ப்பு: அரசியலமைப்பின் மாணவராக தீர்ப்பை ஏற்றுக் கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாக உள்ளது!

அயோத்தி பாபரி மஸ்ஜித் தீர்ப்பு: அரசியலமைப்பின் மாணவராக தீர்ப்பை ஏற்றுக் கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாக உள்ளது!- முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்கூலி!

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நீதிபதி அசோக் குமார் கங்குலி, அயோத்தி தீர்ப்பு அவரது மனதில் ஒரு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது என்றும் அவர் “மிகவும் குழம்பிப்போய் உள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:
அங்கு ஒரு மஸ்ஜித் இருந்ததை சிறுபான்மையினர் பல தலைமுறைகளாகக் கண்டு வருகிறார்கள்.  அது இடிக்கப்பட்டுள்ளது.  அதன் மீது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, ஒரு கோயில் கட்டப்பட இருக்கிறது.  இது என் மனதில் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளது….  அரசியலமைப்பின் மாணவராக, அதை ஏற்றுக்கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாகும்.

1856-57 இல் இல்லையென்றாலும், நிச்சயமாக 1949 முதல், அங்கு தொழுகை நடத்தப்பட்டு வந்துள்ளது., அது ஆவணங்களில் உள்ளது.  எனவே, நமது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோதும், தொழுகை அங்கு நடத்தப்பட்டு வந்துள்ளது.  தொழுகை நடத்தப்பட்ட அந்த இடம்,  ஒரு மஸ்ஜித் என்று அங்கீகரிக்கப்பட்டால், சிறுபான்மை சமூகத்திற்கு அவர்களின் மத சுதந்திரத்தை பாதுகாக்கும் உரிமை உண்டு -அது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமை.

ஒரு முஸ்லீம் இன்று என்ன பார்ப்பார்?  ஒரு மஸ்ஜித் பல ஆண்டுகளாக இருந்தது, அது இடிக்கப்பட்டது.  இப்போது அந்த இடம் ராம் லல்லாவுக்கு சொந்தமானது என்று கூறி, அந்த இடத்தில் ஒரு கட்டிடம் வர நீதிமன்றம் அனுமதிக்கிறது.  பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த நில உடைமை குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யுமா?  அரசியலமைப்பு வந்தபோது அங்கு ஒரு மஸ்ஜித் இருந்தது என்பதை உச்ச நீதிமன்றம் மறக்குமா? ”அரசியலமைப்பு மற்றும் அதன் விதிகள் மூலம், அதைப் பாதுகாப்பது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பாகும். ”
அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு இருந்தவை உச்சநீதிமன்றத்தின் பொறுப்பில் வராது.  அதற்கு முன்பு இந்திய ஜனநாயக குடியரசு என்று எதுவும் இருக்கவில்லை.பின்னர்
ஒரு மஸ்ஜித் இருந்த இடத்தில், , ஒரு பெளத்த ஸ்தூபம் இருந்த இடத்தில், ஒரு தேவாலயம் இருந்த இடத்தில்… இதுபோன்ற தீர்ப்புகளை  நாம் வழங்க ஆரம்பித்தால் , நிறைய கோயில்கள் மற்றும் மஸ்ஜிதுகள் மற்றும் பிற கட்டமைப்புகள்   இடிக்கப்பட வேண்டியிருக்கும்.  நாம் புராண ‘உண்மைகளுக்கு’ செல்ல முடியாது.  ராம் யார்?  வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட சூழ்நிலை ஏதேனும் உள்ளதா?  இது நம்பிக்கை சார்ந்த விஷயம்.

விசுவாசத்தின் அடிப்படையில், நீங்கள் எந்த முன்னுரிமையையும் பெற முடியாது என்று உச்ச நீதிமன்றம் இந்த முறை கூறியது.  மஸ்ஜிதின் கீழ், கட்டமைப்புகள் இருந்தன என்று அவர்கள் சொல்கிறார்கள்.  ஆனால் அந்த கட்டமைப்பு ஒரு கோயில் அல்ல.  ஒரு கோவிலை இடித்ததன் மூலம் மஸ்ஜித் கட்டப்பட்டது என்று யாரும் சொல்ல முடியாது.  இப்போது ஒரு மஸ்ஜிதை இடிப்பதன் மூலம், ஒரு கோயில் கட்டப்படுகிறதா?

500 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தை யார் வைத்திருந்தார்கள், யாருக்கும் தெரியுமா?  நாம் வரலாற்றை மீண்டும் உருவாக்க முடியாது.  எது இருந்ததோ அதைப் பாதுகாப்பதே நீதிமன்றத்தின் பொறுப்பு.  எதுவாக இருந்தாலும் உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும்.  வரலாற்றை மீண்டும் உருவாக்க நீதிமன்றத்திற்கு எந்த கடமையும் இல்லை.  ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு என்ன இருந்தது, என்பதை நீதிமன்றம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. மஸ்ஜித் இருந்தது என்றுதான் நீதிமன்றம் சொல்ல வேண்டும் – அது ஒரு உண்மை.  ஒரு வரலாற்று உண்மை மட்டுமல்ல, (ஆனால்) எல்லோரும் பார்த்த ஒரு உண்மை.  அதன் இடிப்பு அனைவராலும் பார்க்கப்பட்டது.  அதை மீட்டெடுக்க வேண்டும்.  அவர்களுக்கு(முஸ்லிம்களுக்கு) ஒரு மஸ்ஜிதை வைத்திருக்க உரிமை இல்லை என்றால், ஒரு மஸ்ஜிதை கட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்குமாறு அரசாங்கத்தை எவ்வாறு வழிநடத்துகிறீர்கள்?  ஏன்?  மஸ்ஜித் இடிக்கப்பட்டது முறையானது அல்ல என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.

நானாக இருந்தால்  ஒன்று அந்த பகுதியில் மஸ்ஜிதை மீண்டும் கட்டியிருக்க சொல்லியிருப்பேன்.  அல்லது அது சர்ச்சைக்குரியதாக இருந்தால், அந்த பகுதி, ‘மஸ்ஜிதும் இல்லை, அந்த பகுதியில் கோயிலும் இல்லை’ என்று சொல்லியிருப்பேன்.  நீங்கள் ஒரு மருத்துவமனையையோ அல்லது பள்ளிக்கூடத்தையோ,  அல்லது கல்லூரியை உருவாக்கலாம் என்று கூறியிருப்பேன்.  வெவ்வேறு பகுதிகளில் ஒரு மஸ்ஜித அல்லது கோவில் கட்டவும் கூறியிருப்பேன்.  அதை இந்துக்களுக்கு கொடுக்க முடியாது.  இது விஸ்வ இந்து பரிஷத் அல்லது பஜ்ரங் தளத்தின் கோரிக்கை.  அவர்கள் எந்த மஸ்ஜிதையும் -  - இன்றோ, பின்னரோ இடிக்க முடியும்.  அவர்கள் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுள்ளனர்;  இப்போது அவர்கள் நீதித்துறையின் ஆதரவையும் பெறுகிறார்கள்.  நான் மிகவும் கலக்கம் அடைகிறேன்.  பெரும்பாலோர் இதை தெளிவாக சொல்லப்போவதில்லை, ”

Source: telegraph

பாவம் கபாலீஸ்வரர்..மூலப்பத்திரம் தேடுகிறார்..😜😜😜

பாவம் கபாலீஸ்வரர்..மூலப்பத்திரம் தேடுகிறார்..😜😜😜

மயிலை (சென்னை) கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும்  இந்து விரோதிகளின் பட்டியலை அக்கோயிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். ஹிந்துக்கள் 471 பேரில் சில முதலியார்கள், நாடார்கள் தவிர ஆகப் பெரும்பான்மையினர்  அய்யர்-அய்யங்கார்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கபாலி கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பார்ப்பனகளின் பட்டியல் பெரிது.

வாடகை கொடுக்காத ப்ராடுகளின் பட்டியலில் முக்கியமானது பாரதிய வித்யா பவன். கதர் அணிந்த காக்கி டவுசர் பேர்வழியும்,  காந்தி கொலைக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றியவருமான கே.எம்.முன்ஷியால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் பாரதிய வித்யா பவன். இதன் முக்கியத் தூண்களில் ஒருவர் ராஜாஜி. கல்வியைப் பரப்புவது என்ற பெயரில் பார்ப்பனியத்தையும், சமஸ்கிருதத்தையும் பரப்பி வரும் இந்த ஆர்.எஸ்.எஸ். பினாமி நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் வாடகை பாக்கி 32 இலட்ச ரூபாய்.

அடுத்தது, மயிலாப்பூர் கிளப். ஜனவரி,1, 1903 அன்று தொடங்கப்பட்ட பெருந்தனக்காரர்களின் தனி உடைமை கிளப்பான இது,  3 அய்யர், 3 அய்யங்கார் மற்றும் ஒரு முதலியாரை உரிமையாளர்களாகக் கொண்டது. பின்னர் இதன் தலைவர் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார். கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுகளுக்கு மேட்டுக்குடிக் குலக்கொழுந்துகளைத் தயார்படுத்தும் பயிற்சித் திடல், உறுப்பினர்களுக்குச் சீட்டாட்டம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஜிம், வட இந்தியதென் இந்திய உணவு விடுதிகள் மற்றும் 24 மணி நேர பார் போன்ற வசதிகள், சாஸ்திரி ஹால் என பல கிரவுண்டு கோயில் நிலத்தைக் குத்தகைக்கு வளைத்துப் போட்டிருக்கும் இந்த ஆன்மீக மெய்யன்பர்கள் கபாலிக்கு வைத்திருக்கும் குத்தகை பாக்கி 3.57 கோடி ரூபாய்.

‘தேசியத் தலைவர்’ எனப் ’பெத்த பேர்’ வாங்கிய தெலுங்கு பார்ப்பனரான நாகேஸ்வர ராவினால் ஆரம்பிக்கப்பட்டு, ஊருக்கெல்லாம் தலைவலி தைலம் தரும் அமிருதாஞ்சன்  நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் குத்தகைப் பாக்கி ரூ.6 கோடியே 45 இலட்சம்.

கல்விக்கும் ஒழுக்கத்துக்கும் பேர் போனதாக மெச்சிக் கொள்ளப்படுவது பி.எஸ். ஹைஸ்கூல் என்று அழைக்கப்படும்  பெண்ணாத்தூர் சுப்பிரமணிய அய்யர் மேல்நிலைப் பள்ளி. கோயிலுக்குச் சொந்தமான 76 கிரவுண்ட் நிலத்தை 1928-இல் குத்தகைக்கு எடுத்தது. பின்னர் குத்தகை ஒப்பந்தம் 1979-இல் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இன்று ஒரு கிரவுண்ட் நிலத்தின் சந்தை விலை ரூ.5 கோடிக்கும் மேலாகும். பல பிரபல உயரதிகாரிகளை உருவாக்கியதாகப் பீற்றிக்கொள்ளும் இந்தப்பள்ளி, 76 கிரவுண்டுகளுக்கு ஆண்டு குத்தகையாக ரூ. 1250 ஐ மட்டும் ஒரே ஒருமுறை தந்துவிட்டு, கபாலீசுவரரைக் கோர்ட்டுக்கு இழுத்து வாய்தாவுக்கு அலைய விட்டுக் கொண்டிருக்கிறது.

மயிலாப்பூரில் காமதேனு திரையரங்குக்கு எதிரே கபாலீசுவரருக்குச் சொந்தமான 25 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமித்திருப்பவர் பார்த்தசாரதி அய்யங்கார். இன்று அந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல். 1901- இல் 99 வருடக் குத்தகையாக எடுத்த அய்யங்கார், இதனை உள்குத்தகைக்கு விட்டு, அது பல கை மாறி இன்று வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் எழுப்பப்பட்டு, 35 பேர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இப்படியே போகிறது பட்டியல். முதலை வாயில் சிக்கிய இந்தச் சொத்துகளை ஒவ்வொன்றாக மீட்பதற்கு நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள். பாரம்பரியமிக்க பெரிய மனிதர்களின் கிளப் என்று கூறப்படும் மயிலாப்பூர் கிளப்பின் வாசலில், “இது கபாலீசுவரர் கோயில் சொத்து” என்று போர்டு எழுதி வைத்திருக்கிறது இந்து அறநிலையத்துறை. அய்யர், அய்யங்கார்வாள்கள் இதையெல்லாம் பார்த்துக் கூச்சப்பட்டு சொத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவார்களா என்ன?

அற்ப வாடகை, குத்தகை பாக்கியைக்கூடக் கொடுக்காமல், அறநிலையத்துறையை இவர்கள் கோர்ட்டுக்கு இழுப்பதன் நோக்கமே கோயில் சொத்தை விழுங்குவதுதான்.

ராமர் படத்தைப் பெரியார் செருப்பால் அடித்தார்

ராமர் படத்தைப் பெரியார் செருப்பால் அடித்தார் என்று பல ஆண்டுகளாக, நடக்காத ஒன்றை, ‘#இராமபக்தர்கள்’ கூறிக்கொண்டே இருக்கிறார்கள். நடந்த உண்மை பற்றி திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வெளியிட்ட கட்டுரையின் மீள் பதிவு இது.

அவரது கட்டுரையில் கூறியிருப்பதாவது, "இராமர் படத்தைப் பெரியார் செருப்பால் அடித்தார் என்று பல ஆண்டுகளாக, நடக்காத ஒன்றை, ‘இராமபக்தர்கள்’ கூறிக்கொண்டே இருக்கிறார்கள். ஒருவேளை, அது அவர்களின் உள்மன விருப்பமாக இருக்கலாம்.

நடந்தது என்ன என்பதை நம் அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும்.

1971ஆம் ஆண்டு தொடக்கத்தில், திராவிடர் கழகம் சார்பில், சேலத்தில் ஒரு பெரிய மாநாடும், பேரணியும் நடைபெற்றன. அந்தப் பேரணியில் பெரியார் ஓர் ஊர்தியில் அமர்ந்து ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார். பின்னால் வந்த இன்னொரு ஊர்தியில், ‘இதுதான் இந்துக் கடவுளர்களின் கதை’ என்பதை விளக்கும் சித்திரங்களைக் கொண்ட வெட்டுருக்கள் வந்து கொண்டிருந்தன.

பேரணி வந்த பாதையில், ஜனசங்கம் (இன்றைய பா.ஜ.க.) கட்சியைச் சேர்ந்த சிலர், அய்யாவிற்குக் கறுப்புக் கொடி காட்டினர். அவர்களுக்கு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. அன்று ஆட்சியிலிருந்த, கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசுதான், ஜனநாயக அடிப்படையில் கறுப்புக் கொடிப் போராட்டத்திற்கு அனுமதி அளித்திருந்தது. வன்முறை ஏதுமின்றி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று காவல் துறை அனுமதித்திருந்தது. காவிக் கொடி களைக் கீழே போட்டுவிட்டு, நம் கொடியான கறுப்புக் கொடியை ஏந்தி நின்ற ஜனசங்கத்தினரைப் பார்த்துப் புன்னகைத்தபடி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.

அப்போது, அக்கூட்டத்திலிருந்து ஒருவன், அய்யா பெரியாரை நோக்கித் தன் செருப்பை வீசினான். அது குறி தவறி, பின்னால் வந்த, கடவுளர்கள் படம் வைக்கப்பட்டிருந்த ஊர்தியில் போய் விழுந்துவிட்டது. அந்த வாகனத்தில் இருந்த தொண்டர்கள், அவர்கள் வீசிய செருப்பை எடுத்து, அவர்கள் கடவுளையே அடித்தார்கள். முன்னால் சென்று விட்ட பெரியாருக்கு, இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததே தெரியாது.

வன்முறையைத் தொடங்கியவர்கள் யார் என்பதை இப்போது உணர்ந்து கொள்ளலாம். பிறகு அவர்களே நம்மீது வழக்கும் போட்டார்கள். அது ஒன்றுமில்லாமல் போய்விட்டது. நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால் ஹெச். ராஜாக்கள் இன்னும் அதனைத் தள்ளுபடி செய்யாமல், இராமர் செருப்பால் அடிபட்ட கதையைத் திரும்பத் திரும்ப அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக் கொண்டுள்ளனர்.

அந்த மாநாட்டையொட்டி இன்னொரு வழக்கும் நடைபெற்றது. அது ‘இந்து’ ஏட்டின் மீது திராவிடர் கழகம் தொடுத்த வழக்கு. மாநாட்டுத் தீர்மானம் ஒன்றைத் திரித்து வெளியிட்டதாகக் கூறி வழக்குத் தொடுக்கப்பட்டது. இன்றைய தி.க. தலைவர், ஆசிரியர் வீரமணி அவர்களே நீதிமன்றத்தில் வாதாடினார். அந்த நாளேடு வருத்தம் தெரிவித்துக் கொண்டதால், வழக்கு கைவிடப்பட்டது.

அப்போதே செய்தியைத் திரித்து ‘துக்ளக்’ ஒரு கேலிப்படம் வெளியிட முயன்றது. இராமர் படத்தைக் கலைஞர் செருப்பால் அடிப்பது போலவும், அருகில் நின்று பெரியார் கைகொட்டிச் சிரிப்பது போலவும் கேலிப்படம். ஆளாளுக்குச் செருப்பால் அடிப்பதைப் போல் அவர்களே கற்பனை செய்து கொண்டார்கள் போலும்!

இந்நிகழ்ச்சி நடைபெற்ற சில வாரங்களிலேயே, பொதுத் தேர்தல் நடைபெற்றது. சேலம் நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கம், தேர்தலில் தி.மு.க.விற்குப் பெரும் சரிவை ஏற்படுத்தும் என்று ஏடுகள் பல எழுதின. அவ்வளவுதான், தி.மு.க. ஆட்சி என்று ஆரவாரக் குரல்கள் எழுந்தன.

எதிர் அணியில் கைகோத்து நின்ற காமராசர், ராஜாஜி அணியின் வெற்றியை இனி எவரும் தடுக்க முடியாது என்று பலரும் கருதினர். ‘இந்துக் கடவுளைச் செருப்பால் அடித்த கட்சிக்கா, உங்களின் ஓட்டு?’ என்று ஊர் ஊராகக் கேட்டனர். நிகழ்ச்சி நடந்தது என்னவோ, சேலத்தில் மட்டும்தான். ஆனால காங்கிரசாரும், சுதந்திராக் கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் பரப்பிவிட்டனர். ‘இவ்வளவு செய்தும், கடவுள் அவர்களை ஒன்றுமே செய்யவில்லையே, கடவுள் என்று எவரும் இல்லை என்று பெரியார் சொல்வதுதான் உண்மையோ’ என்று பக்தர்களுக்கே சந்தேகம் வந்துவிட்டது.

கவிஞர் கண்ணதாசன், ஜெயகாந்தன், சோ மூவரும் ஓர் அணியாகப் பயணப்பட்டு தமிழகம் முழுவதும் சுற்றியலைந்து, தி.மு.க.விற்கு எதிராகத் தேர்தல் பரப்புரை செய்தனர். தமிழக நிலைமைகளைக் கவனித்த, ஒரு மூத்த காவல்துறை அதிகாரி, தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பே, வெளிப்படையாகக் காமராஜரைச் சந்தித்து, ‘அடுத்த முதல்வர் நீங்கள்தான்’ என்று கூறிப் பூங்கொத்தைக் கொடுத்தார்.

இத்தனை கூத்துகளுக்கும் சேலம் நிகழ்ச்சிதான் காரணமாக இருந்தது. ஆனால் 1971ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவோ, வேறு மாதிரியாக இருந்தது.

1967 தேர்தலில் 138 இடங்களில் வென்ற தி.மு.க., 1971 தேர்தலில் 183 இடங்களில் வெற்றிபெற்றது. பெரிய வேடிக்கை என்னவென்றால், எந்த சேலத்தில் அந்நிகழ்ச்சி நடைபெற்றதோ, அந்த சேலத்தின் இரண்டு தொகுதிகளிலுமே தி.மு.கழகம்தான் வென்றது. வெற்றி பெற்றவர்களின் பெயர்கள், இப்போதும் சிலருக்கு நினைவிருக்கலாம். ஒருவர் ராஜாராம், இன்னொருவர் ஜெயராம். ஆமாம், அந்த இராமர் சிக்கல் மக்களிடையே எடுபடாமல் தோற்றுப் போய், இந்த இராமர்கள் இருவரும் வெற்றிபெற்றனர்.

ராஜாஜி மனம் நொந்து, ஒரு வார ஏட்டில், “தமிழ்நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதியற்ற நாடாகிவிட்டது. மகா புருஷர்கள் எல்லோரும் நாட்டைவிட்டே புறப்படத் தயாராகிவிட்டனர்” என்று எழுதினார். சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற நன்றியறிவிப்புக் கூட்டத்தில் பேசிய நாவலர், தனக்கேயுரிய குறும்புடன், “மகா புருஷர்கள் எல்லாரும், சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டு விடாதீர்கள். தேதியைக் குறிப்பிட்டால், நாங்கள் அனைவரும் வந்து வழியனுப்பி வைக்கிறோம்” என்றார்.

இன்னமும் புறப்பட்டுப் போகாமல் இருக்கின்ற ‘மகாபுருஷர்களில்’ ஒருவரான ஹெச்.ராஜா போன்றவர்கள், சாதாரணப் புருஷர்களைப் போலவேனும் பேசப் பழக வேண்டும்.”

இவ்வாறு உண்மையை திரித்து, கலவரத்தை உண்டாக்கி அரசியல் செய்யும் இந்து அமைப்பினரின் முகத் திரையை கிழித்தெரியும் வகையில் அமைந்திருக்கிறது பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் கட்டுரை!

Friday, November 08, 2019

வீர் சாவர்க்கர் - 'வீர்'ன்னு அவருக்கு எப்படி பேர் வந்துச்சு தெரியுமா

எச்ச ராஜா வீர் சாவர்க்கர் வீடியோ ஒண்ணு ஷேர் பண்ணியிருக்காப்புல..
சரி 'வீர்'ன்னு அவருக்கு எப்படி பேர் வந்துச்சு தெரியுமா..
1926 'ல சித்ரகுப்தான்னு ஒருத்தரு 'Life of Barrister Savarkar' ன்னு ஒரு புத்தகத்துல சாவார்க்கரோட வீர சாகசங்கள்.. அவரோட தைரியம்.. போர் குணங்களை விலாவரியா புகழ்ந்து எழுதியிருந்தார்.. அதுலதான் சாவர்க்கர் க்கு 'வீர்'ன்னு ஒரு பட்ட பேரு கொடுத்து எழுதியிருந்தார்...
அப்புறம் சாவர்க்கர் செத்து பல வருஷம் அப்புறம் அந்த புத்தகத்தோட இரண்டாவது அச்சு 1986 'ல வெளியாச்சு.. அந்த புத்தகத்தை வெளியிட்ட 'வீர் சாவர்க்கர் ப்ரகாஷன்'ன்ற அமைப்பை சார்ந்த அதிகாரபூர்வ வெளியீட்டாளர் ரவீந்தர ராம்தாஸ் ஒரு தகவலை தன்னோட முன்னுரைல வெளியிட்டாரு..
அது என்னான்னா.. அந்த புத்தகத்தை எழுதுன சித்ரகுப்தரே 'சாவர்க்கர்'தான்... 😂😂😂😂
'வீர்' சாவர்க்கரை போற்றுவோம் ப்ரெண்ட்ஸ்..

ஏன் ப்ரோ நீங்க பாஜகவை ஆதரிக்குறீங்க?

ப்ரோ - ஏன் ப்ரோ நீங்க பாஜகவை ஆதரிக்குறீங்க?
சகோ - எனக்கு மோடிஜியை ரொம்ப பிடிக்கும்ங்க. பாஜகதான் ஒழுங்கான கட்சி, ஊழலில்லாத கட்சி, குடும்ப அரசியல் இல்லாத கட்சி. அதனாலதான்.
ப்ரோ - சூப்பர் ப்ரோ. அப்ப தமிழ்நாட்டுல நடந்த குட்கா ஊழல், சிபிஐ ரெய்டு, தலைமைச்செயலகத்துல நடந்த ரெய்டு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டையெல்லாம் பார்த்துட்டு நீங்களும் அதிமுகவை எதிர்க்குறீங்களா?
சகோ - ஐயய்யோ இல்ல சகோ. மத்தியில் பாஜக, மாநிலத்தில் அதிமுக ஆதரவு ப்ரோ நான்.
ப்ரோ - அது எப்படி ப்ரோ ஒரே நேரத்துல ஊழல் இல்லாத ஒழுங்கான கட்சியவும் ஆதரிக்கிறீங்க? ஊழலுக்காக 4 வாட்டி ஜெயிலுக்குப்போய், குற்றவாளியாகவே செத்துப்போன கட்சித்தலைவரையும் ஆதரிக்கிறீங்க?
சகோ - அவங்க ஒண்ணும் குற்றவாளி இல்ல சகோ. குற்றம் சாற்றப்பட்டவர் மட்டும்தான், அவங்க இறந்துட்டாங்க. அதனால அவங்க நிரபராதி.
ப்ரோ - அடடா. பின்றீங்க ப்ரோ. அப்ப இரண்டாம் குற்றவாளியா நிரூபிக்கப்பட்டு சிறையில் இருக்கும் சசிகலாவை ஆதரிக்கிறீங்களா?
சகோ - இல்ல சகோ. அவங்க குற்றவாளி, ஊழல் பேர்வழி. அவங்களை எதிர்க்கிறேன்.
ப்ரோ - அது எப்படி ப்ரோ? ஒரே குற்றம். முதல் குற்றவாளியை இரும்புப்பெண்மணின்னு ஆதரிக்கிறீங்க. இரண்டாம் குற்றவாளியை ஊழல்வாதின்னு எதிர்க்கிறீங்க? சரி, சசிகலாவை எதிர்த்தீங்கன்னா, சசிகலா கொண்டு வந்த முதல்வர்தான் இப்ப இருக்க எடப்பாடி பழனிச்சாமி அய்யா. அவரையும் எதிர்க்குறீங்களா?
சகோ - இல்லை சகோ, வாழும் கடவுள் எடப்பாடி அய்யாவை ஆதரிக்கிறேன்.
ப்ரோ - நீங்க சொல்றது ஒண்ணுமே புரியல ப்ரோ. எதையெல்லாம் நீங்க ஆதரிக்கிறீங்க ப்ரோ? எதையெல்லாம் எதிர்க்கிறீங்க? கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.
சகோ - பாஜகவை ஆதரிக்கிறேன். அதிமுகவை ஆதரிக்கிறேன். பாமகவை ஆதரிக்கிறேன். இந்து மத ஆர்வலர். எங்க ஜாதிச்சங்கத்துல முக்கியப்புள்ளி. முக்குலத்தோர், கொங்கு, வன்னியர் இப்படி மெஜாரிட்டி ஜாதில இருக்கவங்க எல்லாரையும் ஆதரிப்பேன். திருட்டு திராவிடர்களை எதிர்ப்பேன், ராமசாமியை எதிர்ப்பேன், திமுகவை எதிர்ப்பேன், காங்கிரஸை எதிர்ப்பேன், ஊழலை எதிர்ப்பேன், ஜாதிமறுப்பு பேசுறவங்கள எதிர்ப்பேன், இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறேன், விசிகவை எதிர்க்கிறேன், இன்னும் நிறைய. திராவிடத்தால்தான் நாம வீழ்ந்தோம் சகோ.
ப்ரோ - ரொம்ப நல்லது ப்ரோ. யூ பீப்புள் கண்டினியூ. 🙏🏽

திருக்குறளைப் பழித்தாரா பெரியார்?

கடந்த 24.05.2019 அன்று இந்து-தமிழ் நாளிதழுக்கு, துக்ளக் ஆசிரியர் திரு. எஸ். குருமூர்த்தி அளித்துள்ள பேட்டியில், ‘பெரியார் திருக்குறளை மலம் என்றார்’ என்று கூறியுள்ளார். தந்தை பெரியார் குறித்த இவ்விதமான அவதூறுகள் பல, காவிகளாலும், போலித் தமிழ்த்தேசியவாதிகளாலும் சமூக ஊடகங்களில் தொடந்து பரப்பப்பட்டு வருகின்றன. உண்மையில் திருக்குறள் குறித்துத் தந்தை பெரியார் கொண்டிருந்த பார்வை என்ன என்பதை நாம் சிறிது ஆராயலாம். பெரியாருக்குத் திருக்குறள் அறிமுகமானது எவ்வாறு?
திருக்குறளைத் தமக்கு அறிமுகம் செய்து வைத்ததாகத் தந்தை பெரியார் கூறும் நபர், பா. வே. மாணிக்கநாயக்கர் என்பவராவார். அடிப்படையில் பொறியியல் அறிஞரான இவர், தனித்தமிழ் இயக்கத்தின் புரவலராக விளங்கியவர். பெரியாரின் உற்ற தோழர். மாணிக்கநாயக்கர் மூலமாகவே குறளில் அடங்கியிருக்கும் பல கருத்துகளை அறிய முடிந்ததாகப் பல இடங்களில் குறிப்பிடுகிறார் பெரியார்.
திருக்குறள் – பொய்யுரையும் புனைவுகளும்
தொடக்கத்தில் இந்து மதப் புராண இதிகாசங்களில் உள்ள குற்றம், குறைகளை எடுத்துக் கூறி வருவது போல, குறளைப் பற்றியும் கூறி வந்தார் பெரியார். அதற்குக் காரணம், குறளுக்கு ஆரியரும், ஆரிய உணர்ச்சியுள்ள மதவாதிகளும் செய்த உரைகளை உண்மை என்று எண்ணியதே காரணமாகும். இதனைப் பெரியாரின் பேச்சின் மூலமாகவே அறியலாம்.
“புராணங்களைப் போலவே வள்ளுவர் குறளையும் பகுத்தறிவுக்கு ஏற்ற்தல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல்’ என்று கேட்பார்கள். நான், ‘இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது, அதை எடுத்துவிடு என்றால் அந்த இடத்தில் என்ன வைப்பது? என்று கேட்பதா’ என்று பதில் கூறுவேன்.
பிறகு நாளாக ஆக, திராவிட உணர்ச்சி மிக்கவர்களோடு, நம் உணர்ச்சியுள்ள அறிவாளிகளோடு பழகியபோது குறளின் மேன்மை பற்றி அவர்கள் எடுத்துக் கூறினார்கள். நான் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே…. இந்த இடத்தில் இப்படியிருக்கிறதே என்று கேட்டேன். அது பரிமேலழகரின் உரை, அது குறளாசிரியர் கருத்தல்ல என்று எடுத்துக் கூறி உண்மை உரையினைச் சொன்னார்கள். அந்தக் காலத்தில் பரிமேலழகர் உரைதான் சிறந்த உரை என்று கொண்டாடப்பட்டது. அவர் மனுதர்ம சாஸ்திரப்படி குறளுக்கு உரை எழுதிவிட்டார். பின்னர் வந்த அறிவாளிகள் அதைக் கண்டித்து, குறளின் உண்மைத் தன்மையை எடுத்துச் சொன்னார்கள். அதிலிருந்துதான் நான் குறளைப் பற்றிப் பேசுகிறேன்”. (23.05.1950 அன்று பெங்களூர் திருவள்ளுவர் கழக ஆண்டு விழாவில் தந்தை பெரியார் பேசியது)
பரிமேலழகரின் உரையை மனுதர்மத்தின் மறுபதிப்பு என்று விமர்சிக்கும் பெரியார், குறளின் உண்மைத்தன்மை மறைக்கப்பட்டதற்குக் காரணம் இவைபோன்ற உரைகளே என்கிறார். இத்தகைய உரைகளைக் கொண்டு குறளின் உண்மைத் தத்துவங்களை எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும் என்ற கேள்வியையும் முன்வைக்கிறார்.
தந்தை பெரியாரின் பார்வையில் குறளுக்குக் கேடு விளைவித்தது தவறான உரை மட்டுமல்ல, வள்ளுவர் குறித்த பொய்யான புராணக் கதைகளும்தான். வள்ளுவரின் பிறப்பைக் குறித்தும், வள்ளுவரின் மனைவியாகக் கூறப்படும் வாசுகியின் கற்புத்தன்மை குறித்தும் சொல்லப்படும் புனைவுகள் பல. சான்றாதாரங்கள் இல்லாத இவையனைத்தும் வழிவழியாக வாய்மொழியாகச் சொல்லப்படுவன.
“குறள் பாடிய வள்ளுவனாரை எங்கோ நள்ளிரவில் ஒரு சத்திரத்தில் ஒரு புலைச்சிக்கும், ஒரு பாப்பானுக்கும் நேரிட்ட கள்ளப் புணர்ச்சியில் பிறந்த பிள்ளையாக்கி, அதன்மூலம் அவரை ஒரு சண்டாளராக்கி, அவருடைய வாக்கிற்கு மதிப்பில்லாதபடி செய்துவிட்டார்கள்” என்று விமர்சிக்கும் பெரியார், இதற்கான தீர்வையும் முன்வைக்கிறார்.
“குறளை யார் எழுதியது, அவர் காலமென்ன என்ற கவலையை எல்லாம் ஆராய்ச்சி வல்லுநர்களான சரித்திரப் பேராசிரியர்களுக்கே விட்டுவிட்டு, நாம் குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை மட்டுமே ஆராய்ந்து பார்த்து அவற்றின்படி நம் வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொள்ள வேண்டும்”. (விடுதலை 17.01.1949)
குறள் பரவாமைக்குக் காரணம் என்ன?
குறளைச் சிறப்பித்துக் கூறும் அதே வேளையில், பெரிய புராணம், இராமாயணம், மகாபாரதம், கீதை, மனுதர்மம் என அத்தனை நூல்களையும் குறளுக்கு எதிராக முன்னிறுத்துகிறார், தந்தை பெரியார். திருக்குறள் ஆரிய தர்மத்தை – மனுதர்மத்தைக் கண்டிப்பதற்காகவே எழுந்த கண்டன நூல் என்கிறார்.
பக்தி இயக்கத்தின்போதும், அதற்குப் பின்னரும் தோன்றிய இலக்கியங்கள் பெரும்பான்மை மக்களைச் சென்றடைந்துள்ளன. அதே நேரம், பக்தி இயக்கம் தோன்றுவதற்குச் சில நூறாண்டுகளுக்கு முன்பே தோன்றிய திருக்குறள் மக்களிடம் பரவாததற்குக் காரணம் என்ன என்ற கேள்வியை எழுப்பி, அதற்குப் பெரியாரே விடை தருகிறார்.
“எந்த ஒரு நூலும் பார்ப்பனக் கூட்டத்தால் புகழப்பட்டால்தான் அவற்றிற்குப் புகழ் ஏற்படும். இன்றேல் புகழ் கிடையாது. இதுதான் இன்றைய நிலை. பழைய கால நிலையும் அதுதான்”. (விடுதலை 25.03.1948)
“எவ்வளவோ ஆபாசமான நூல்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெருமையில் நூறில் ஒரு பங்கு பெருமைகூட நமது திருக்குறளுக்குக் கொடுக்கப்படுவதில்லை”. (விடுதலை 25.03.1948)
“திருவள்ளுவருடைய கொள்கைகளையும், அவருடைய பாட்டின் அருமையையும், அவற்றால் திராவிடநாடு பெற்றிருக்க வேண்டிய பலனையும் கம்பனது இராமாயணம் அடியோடு கெடுத்து விட்டது. (விடுதலை 05.11.1948)
எனவே, குறளைப் பரப்பும் முயற்சியில் இரண்டு விதமான செயல்பாடுகளைக் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். ஒன்று, குறளைப் பரப்பும் ஆக்கவேலை. மற்றொன்று, குறளின் கருத்துக்கு எதிரான நூல்களை மறையச் செய்யும் அழிவு வேலை.
“ஒரு காரியத்திற்காக ஆக்க வேலையும், அழிவு வேலையும் ஒரு உடலுக்கு இரண்டு கைகளைப் போன்றதாகும். குறள் விஷயத்தில் குறளைப் பிரச்சாரம் செய்து மக்களிடையே பரப்புவது, குறள் நிர்மாண, ஆக்க வேலைகளாகும். குறளுக்கு எதிரான கருத்துகளை, காரியங்களை, நூல்களை மறையச் செய்வது என்பது குறள் ஆக்கத்திற்காகச் செய்யப்படும் அழிவு வேலையாகும்”. (விடுதலை 13.01.1951)
மனுதர்ம – இந்துமத எதிர்ப்பு நூல் திருக்குறள்
”திருக்குறள் ஆரியக் கொள்கைகளை மறுக்க, அவைகளை மடியச் செய்ய, அக்கொள்கைகளிலிருந்து மக்களைத் திருப்ப எழுதப்பட்ட நூல் என்றுதான் நான் கருதுகிறேன்” என்கிறார் பெரியார். (விடுதலை 25.03.1948)
குறள் இந்துமதக் கருத்தியலுக்கு எதிரானது என்பதைக் குறளிலிருந்தே அடுக்கடுக்கான சான்றுகளைக் கொண்டு நிறுவுகிறார்.
“பார்ப்பனர்கள் எதை எதை உயர்வு என்று கருதி தங்கள் பெருமையை வெளிப்படுத்தினார்களோ, அவைகளை எல்லாம் ஒழித்துக் கட்டவே இக்குறளை வள்ளுவர் இயற்றி இருக்கிறார்.
பார்ப்பனர்கள் கலப்பையைத் தொட்டால்கூட பாவம். உழுவது என்பது பாவம். கலப்பையைத் தொடக்கூடாது என்று எழுதி வைத்து, உழைக்காமல் உண்ணும் வழியைத் தேடிக் கொண்டார்கள். (மனுதர்மத்தில் உழவுத்தொழில் பாவகரமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது). ஆனால் வள்ளுவர் இதை எதிர்த்துக் கூறி இருக்கிறார். உலகத்திலேயே உழவுத்தொழிலுக்கு ஈடு இணையான தொழில் கிடையாது என்று கூறியுள்ளார்.
”உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”
என்று கூறுகிறார்”.
“குடிசெய்வார்க் கில்லை பருவம்” (குறள் 1028). (பொருள்: குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை). ஒரு காரியத்தை ஒரு மனிதன் எப்பொழுது செய்ய வேண்டும் என்று தீர்மானித்தானோ, எண்ணினானோ உடனேயே அதைச் செய்திட வேண்டும். அதற்காக ராகு காலம், எமகண்டம், குளிகை பார்க்க வேண்டியதில்லை. இந்தக் காலங்களை எதிர்நோக்கிக்கொண்டு சோம்பலாய் இருந்தால் காரியம் கைகூடுவது கடினம் தான். ஆகையால்தான் காலத்தை எதிர்பாராமல் செய்ய வேண்டுமென்று சொல்லுகிறார். (விடுதலை 11.09.1951, 12.09.1951). எந்த ஒரு செயலையும் நல்ல நேரம் பார்த்து ஆரம்பிக்க வேண்டும் என்னும் இந்து மத சடங்கிற்கு நேரெதிர்க் கருத்தை முன்வைப்பது இக்குறள்.
”தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்”
என்ற குறளில், ’பூஜையின்றேல் மழையில்லை, தானமின்றேல் மழையில்லை’ என்ற ஆரியக் கருத்தை அப்படியே மறுத்திருக்கிறார். மக்களுக்கு தெய்வத்தினிடம் பக்தி இல்லையென்றால், மக்களுக்கு ஒழுக்கம் இல்லையென்றால் மழை பெய்யாது என்று ஆரிய நீதி கூறுகிறது. மழையில்லை என்றால் மக்கள் பக்திசெய்ய மாட்டார்கள்; ஒழுக்கமாகவும் இருக்க மாட்டார்கள் என்று கூறுகிறார் வள்ளுவர்.
மனுதர்மம் மாமிசம் சாப்பிட வேண்டும். யாகம் செய்ய வேண்டும். அதில் ஆடு, மாடு, குதிரை முதலியவைகளைப் பலி தர வேண்டும் என்கிறது. திருக்குறள் ஜீவ இம்சையே கூடாது. மாமிசம் சாப்பிடக் கூடாது. யாகம் கூடாது என்கிறது.
”கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”.
பார்ப்பனர்களுடைய கொள்கை, வேள்வி-யாகம் செய்ய வேண்டும் என்பதாகும். அதுமட்டுமல்ல, வேள்வியைச் செய்யாதவர்கள், வெறுக்கிறவர்கள், கண்டிக்கிறவர்கள் எல்லாம் சூத்திரர்கள் – சண்டாளர்கள் – அரக்கர்கள் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த யாக வேள்வியைப் பற்றி வள்ளுவர் என்ன சொல்கிறார்.
”அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று”
(பொருள்: நெய் முதலிய பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட, ஒன்றன் உயிரைக் கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது)
”இந்த ஒரு குறளே, இது கண்டன நூல் என்பதைத் தெரிவிக்கவில்லையா? கண்டன நூல் என்றால், ஆரியத்தை – ஆரியப்பண்பை – அதிலுள்ள உண்மை ஒழுக்கத்துக்கும் பகுத்தறிவுக்கும் ஏற்காத ஆபாச மூடப் பழக்கவழக்கங்களைக் கண்டிக்கும் கண்டன நூல் என்றே எண்ணலாம்”. (விடுதலை 25.03.1948, 8-11.11.1949) குடிஅரசு 07.05.1949)
இவ்வாறு இந்துமத எதிர்ப்புக்கான பல்வேறு சான்றுகளைத் திருக்குறளிலிருந்தே எடுத்தாளும் பெரியார், திருக்குறளின் அடிப்படையாகப் பல்வேறு இடங்களில் முன்வைப்பது, நால்வருணத்தை வலியுறுத்தும் மனுதர்மத்திற்கு மாற்றான, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் திருக்குறளைத்தான்.
பெரியார் முன்வைத்த விமர்சனங்கள்
“ஓர் இலக்கியம் எந்தக் காலத்தில் எழுதப்படுகிறதோ, அந்தக் காலகட்டத்தின் சூழலில் நின்றுதான் விமர்சனம் செய்ய வேண்டுமேயல்லாது, இருபது நூற்றாண்டுகளுக்குப் பின்னால் வந்து நின்று கொண்டு அதனை இன்றைய நிலையோடு ஒப்பிட்டு ஆய்வு செய்வது பொருத்தமாக இருக்காது” என்கிறார் பேராசிரியர் சுப. வீரபாண்டியன். (குறள் வானம், பக்கம் 67). இதைத்தான் பெரியாரும் கூறுகிறார்.
”திருவள்ளுவர் நல்ல அறிவாளி. ஆராய்ச்சிக்காரர். அந்தக் காலத்தில் மக்களிடம் பரவி இருந்த மூட எண்ணங்களோடு போராடிய அறிஞர் என்ற அளவில்தான் ஒத்துக்கொள்ள முடியும். அந்தப்படியிருக்க 2000 ஆண்டுகளுக்கு முன்னதாகத் திருவள்ளுவர் சொன்னவை எல்லாம் அப்படியே இன்றைக்கும் ஏற்றதாக இருக்க முடியுமா?”.
திருக்குறளைச் சிறப்பித்துக் கூறும் அதே வேளையில், தமக்கு ஏற்பில்லாத கருத்துக்களை விமர்சிக்கவும் தவறவில்லை பெரியார். “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று வள்ளுவரே கூறியிருக்கிறார் அல்லவா!
“நான் குறளின் மேம்பாட்டைப் போற்றுவதன்மூலம், குறள் முழுவதையும் ஒப்புக் கொண்டவன் என்றோ, குறளின்படி நடக்கிறவன் என்றோ யாரும் கருதி விடாதீர்கள். எனக்கு/எங்களுக்குப் பொருந்தாத குறளுமிருக்கலாம். அதாவது எங்களால் பின்பற்ற முடியாத குறளுமிருக்கலாம். ஆனால் எனக்கு/எங்களுக்கு வேண்டியவைகள் மீதம் அதில் இருக்கின்றன” (குடிஅரசு 07.05.1949) என்பதுதான் பெரியாரின் நிலைப்பாடாக அறிய முடிகிறது.
குறளில் ‘வாழ்க்கைத் துணைநலம்’ மற்றும் ‘பெண்வழிச் சேரல்’ ஆகிய இரண்டு அதிகாரங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, இவற்றில் மிகவும் அடிமைத்தன்மை புகுத்தப்பட்டிருப்பதாகவே பெரியார் கருதுகிறார்.
சான்றாக ஒரு குறளைக் காணலாம்.
”தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”. (குறள் 55)
(பொருள்: வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு, தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்).
”ஆணைத் தொழுதெழ பெண்ணுக்கு நிபந்தனை இருந்தால், பெண்ணைத் தொழுதெழ ஆணுக்கு நிபந்தனை இருக்க வேண்டும். அதுதான் சம உரிமை என்பது. இருபாலர்க்கும் சமநிபந்தனை குறளில் இல்லை”. (குடிஅரசு 12.02.1928)
திருவள்ளுவர் ஓர் ஆணாயில்லாமல் பெண்ணாயிருந்து இக்குறளை எழுதியிருப்பாரானால் இம்மாதிரி கருத்துகளைக் காட்டியிருப்பாரா என்று பெரியார் கேட்கும் கேள்வி நியாயமானதுதானே?
“குறளிலும் சிற்சில இடங்களில் ஆரியப் பண்பு கலப்பு இருக்கின்றது என்று இன்று பல பெரியோர்கள் கருதுகிறார்கள். அதற்கேற்றபடி சில எடுத்துக்காட்டுகளையும் காட்டுகிறார்கள்.
ஏதோ சில இருக்கலாம் என்றே வைத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்டவைகளை நாம் இக்காலத்துக்கும், குறளாசிரியரது பெரும்பாலான கருத்துக்கும் ஒப்பிட்டுப் பார்த்து நல்ல கவலையுடன் சிந்தித்தோமேயானால், ஏதாவது நம் கருத்துக்கு ஏற்ற தெளிபொருள் விளங்கும் என்றே கருதுகிறேன். விளங்காவிட்டாலும் அவை குறளின் தத்துவத்துக்கு முரண்பாடானது என்றாவது தோன்றலாம். அதுவும் இல்லாவிட்டால், நம் பகுத்தறிவுப்படி பார்த்து, கொள்வதைக் கொண்டு விலக்குவதை விலக்கலாம்” என்கிறார் பெரியார். (குறள் மாநாடு நடத்துவது குறித்துத் தந்தை பெரியாரின் அறிக்கை, விடுதலை, 10.01.1948)
திருக்குறளைப் பரப்பிய பெரியார்
”புலவர்கள் வீட்டுப் புத்தக அலமாரிகளில் புதைந்திருந்த திருக்குறளை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் பெரியார்” என்கிறார் ஆசிரியர் வீரமணி.
1929 ஆம் ஆண்டிலிருந்தே பெரியார், திருக்குறளை எழுத்துகள் வாயிலாகவும், சொற்பொழிவுகள் மூலமாகவும் மக்களிடையே தீவிரமாகப் பரப்பினார். 1949 ல் சென்னையில் மிகப்பெரிய முதல் திருக்குறள் மாநாடு நடத்தினார். 'திருக்குறள் நாள் ' கொண்டாடச் செய்தார். 1952 ல் 10000 திருக்குறள் புத்தகங்களை அச்சடித்து நான்கு அணா விலையில் தமிழ்நாடு முழுவதும் பரப்பினார்.
இதன் விளைவாக, தமிழகப் பள்ளிகளிலும், மேடைகளிலும், பத்திரிகைகளிலும், நூல்களிலும் திருக்குறள் சிறந்த செல்வாக்கு பெற்றது.
திராவிடர்களின் நீதிநூல் - திருக்குறள்
திருக்குறளைத் திராவிடர்களுக்கான ஒரே நீதிநூல் என்று குறிப்பிடும் பெரியார், குறளை ஆதரிக்கவேண்டிய இடத்தில் ஆதரித்தும், விமர்சிக்க வேண்டிய இடத்தில் விமர்சித்துமிருக்கிறார். திருக்குறளைத் திராவிட இயக்கத்தவரிடமிருந்தும், தந்தை பெரியாரிடமிருந்தும் அந்நியப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இன்றைய சூழலில் அம்முயற்சிகளை முறியடிப்பது நமது தலையாய கடமையாகும்.

திருவள்ளுவர் நாத்திகரா

திருவள்ளுவர் நாத்திகராக இருக்க முடியாதாம்.....
ஹலோ நாத்தீகம்னா என்னனு தெரிஞ்சிகிட்டு பேசுங்க.
நாத்திகம் என்றால் கடவுள் மறுப்பு என்று நாமாகவே தவறாக புரிந்துக்கொள்கிறோம்.
கடவுள் மறுப்புக்கு வேறு பெயர் உண்டு: நிரீஷ்வர்வாத்.
நிர்+ஈஷ்வர்+வாத்.

அப்படியானால் நாத்திகம் என்றால் என்ன?
நாத்திகம் = வேத மறுப்பு.
“நாஸ்தீக வேத நிந்திதஹ” என்றே குறிப்பிடுகிறார்கள்.
தட் மீன்ஸ், “உன் உடான்ஸ் வேதத்தை நான் மதிக்கல போடா!” என்கிற மனிதர்கள் = நாஸ்திகர்கள்.
Why take this stand?
Because வேதம்= பிறப்பின் அடிப்படைவாதம்.
உயர் தாழ்வு, ஜாதி, privilege, entitlement, Supremacy மாதிரியான விஷயங்களை கறாராக சொல்கிறது. நம்ப வைக்க முயல்கிறது. இத்தகைய மக்கள் விரோத அம்சங்களை ஏற்காதவரை வேதம் தண்டிக்க முற்படுகிறது.
எட்டாம் நூற்றாண்டின் classification படி ஆதிக்க மதங்கள்: சைவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம், வைணவம். இவை எல்லாமே சதுர் வர்ணமெனும் racist கோட்பாட்டை ஏற்றவை.
அதே கிளாஸிபிகேஷன் படி நாத்தீக மதங்கள்: சார்வாகம், ஆசீவகம், பௌத்தம், ஜெய்னம். இவை எல்லாவற்றுக்குமான பொது அம்சம்: வேதம் விட்ட நான்கு வகை சமூக அந்தஸ்து கப்ஸாவை நம்பாமல் சொந்த அறிவை பயன்படுத்தியவர்கள். இதில் ஜயினர்கள் பிறவி, மறுப்பிறவி, மாதிரியான கருத்துக்களை வைத்திருந்ததால் அவர்கள் கொஞ்சம் வைதீகத்தோடு ஒத்துப்போனார்கள்.
ஆனால் ஆசீவர்கள் ஒரு போதும் ஒத்து போகவேயில்லை.
ஆதி தமிழரது மதம் ஆசீவகம்.
திருவள்ளுவர் ஆசீவக மதத்தை சேர்ந்தவராக இருக்கக்கூடும்.
ஆசீவகர்களை சமணர் என்று அழைப்பர்.
இவர்கள் தத்துவம், வானியல், மருத்துவம் ஆகியவற்றில் ஜித்தர்கள். ஜித்து=சித்து.
திருநாவுக்கரசருக்கு சூளை நோய்க்கு அறுவை சிகிச்சை செய்தவர் ஆசீவக துறவியர். இந்த துறவியரை தான் பிறகு சைவர்கள் கழுவில் ஏற்றி கொன்றார்கள்.
இவர்கள் தீவர வேத எதிர்ப்பாளர்கள், அதனால் நார்தீகர்கள்!!
One lineல சொல்லணும்னா:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
vs
சதுர்வர்ணம் மயா சிருஷ்ட்டம்.
நீங்கள் எந்த பக்கம்?

Tuesday, October 15, 2019

சீமான் மனிதனாக மதிக்கப்படக் கூட தகுதியானவர் இல்லை.

சீமான் நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கியது முதலே இவர் ஒரு ப்ராடு என்பதை நான் அறிவேன். சீமானின் அரசியல் துவக்கமே, சீமானும் பிரபாகரனும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை சென்னை நகர் முழுக்க சுவரொட்டிகளாக ஒட்டுவதிலிருந்து தொடங்கியது. (பிரபாகரன் இறந்த பிறகு) அமைதி காலத்தில், புலிகள் அமைப்பினர் தமிழகத்திலிருந்து பலரை அழைத்து சந்தித்தனர். அப்போதெல்லாம் சீமான் ஒரு சாதாரண இயக்குநர். பிரபல இயக்குநர் கூட கிடையாது. பிரபாகரனை சந்தித்து வந்தவர்கள், சீமான் – பிரபாகரன் சந்திப்பு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே கூறினர்.

2008 ஜூலையில் நான் சிறையில் இருந்தேன். அப்போது எனக்கு அடுத்த ப்ளாக்கில், “தம்பி அண்ணா” என்று புலிகளின் உளவுப் பிரிவில் இருந்த ஒருவரை ராமேஸ்வரத்தில் இருந்து கைது செய்து வைத்திருந்தனர். தம்பி அண்ணாவோடு பேசிக் கொண்டிருக்கையில், அவர், தம்பி சீமானை என்னை வந்து சந்திக்க சொல்லுங்கள் என்றார். அதன் பிறகு சென்னை உயர்நீதிமன்ற வாயிலில், ஜனவரி 2009ல் வழக்கறிஞர்கள், ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஒரு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கையில் அதில் கலந்து கொள்ள சீமான் வந்தார். அப்போதுதான் அவர் பொது வாழ்வில் இறங்குகிறார். வழக்கறிஞர் புகழேந்தியிடம் தம்பி அண்ணா பேசியது குறித்து கூறியதும், “நீயே போயி பேசுய்யா” என்றார். சீமானிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு விபரத்தை கூறினேன். தம்பி அண்ணா விடுதலையாகி, அகதிகள் முகாமுக்கு சென்ற பிறகும், கடைசி வரை சீமான் அவரை சந்திக்கவேயில்லை. சீமானுக்கு புலிகள் இயக்கம் பற்றிய எந்த புரிதலும், இல்லை என்பதை அவரோடு உரையாடியபோது புரிந்து கொண்டேன்.

10 ஜூலை 2010ல், சீமானை கருணாநிதி அரசு கைது செய்தது. பின்னர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தது. அப்போது சீமான் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜூலை 10, 2010 முதல், டிசம்பர் 10, 2010 வரை சீமான் வேலூர் சிறையில் இருந்தார். அந்த ஆறு மாதங்களும், சீமான், ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட முருகன், ரவி, ராபர்ட் பயஸ், போன்றோரோடு கழித்தார். முருகன் புலிகள் இயக்கத்தில் மூத்த பொறுப்பில் இருந்தவர். அவர்களோடு உரையாடித்தான் சீமான் புலிகள் இயக்கம், அதன் செயல்பாடுகள் பற்றியெல்லாம் அறிந்து கொண்டார்.

அதற்கு பின்னர்தான், ஆமைக் கறி கதை, ஏகே 76, அரிசிக் கப்பல் கதையெல்லாம். சீமான் ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன் என்ற எனது எண்ணம், மீண்டும் மீண்டும் உறுதியானது.

ஆறு மாதங்களை அவர்களோடு கழித்த சீமானுக்கு 28 ஆண்டுகளாக சிறையில் இருப்பதன் வலியும் வேதனையும் புரிந்திருக்க வேண்டும்.

வெறும் கைதட்டல்களுக்காக அவர்களின் விடுதலையே நாசமானால் கூட பரவாயில்லை என்று பேசும் சீமான் மனிதனாக மதிக்கப்படக் கூட தகுதியானவர் இல்லை.

இன்றும் சீமானை நம்பி அவர் பேசுவதை ரசித்து அவர் பின் செல்லுபவர்கள், அறிவு வளர்ச்சிக் குறைந்தவர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

Tuesday, September 24, 2019

தமிழக அரசு ஊழியர்களின் முக்கிய அரசாணைகள்

தமிழக அரசு ஊழியர்களின் முக்கிய அரசாணைகள்

(1)- பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும்,
பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278)

(2)- கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)

(3)- அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்-27.9.1974)

(4)- அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, நாள்-17.4.1996)

(5)- மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் பணியாளரை முடிந்தவரை அதே இடத்தில் பணி அமர்வு செய்ய வேண்டும். (அரசு கடித எண். 2290/93-1,நிர்வாகத்துறை, நாள் - 18.6.1993)

(6)- அரசு ஊழியர் ஒருவர் Private Study பயில்வதற்கு துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும். (G. O. Ms - 362,P&A. R, DT - 4.11.1992)

(7)- தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்பும் அரசு ஊழியர் மாவட்ட அளவிலான உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். (அரசாணை எண். 362, நிர்வாகத்துறை, நாள். 4.11.1992, மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/93,நாள் - 22.6.1993)

(8)- மாலை நேரக் கல்வி பயில துறைத்தலைவரின் அனுமதி தேவை. (அரசாணை எண் 1341,பொது, நாள் - 27.8.1993 மற்றும் அரசு கடித எண். 98189/84-8, நிர்வாகத்துறை, நாள் - 13.8.1983)

(9)- அரசு ஊழியர் ஒருவர் மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondence Course) பயில அனுமதி கோரி விண்ணப்பித்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம். (அரசாணை எண். 200,நிர்வாக சீர்திருத்ததுறை, நாள் - 19.4.1996)

(10)- பரம்பரை சொத்துகளிலிருந்து பாகம் கிடைத்தாலோ அல்லது சொத்து ஒன்று பரம்பரையாக அரசு ஊழியருக்கு கிடைக்க நேர்ந்தாலோ அதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை. சொத்து அறிக்கையில் மட்டும் காண்பிக்க வேண்டும். (அரசாணை எண். 7143/பணி/ஏ/85-6,நிர்வாகத்துறை, நாள்
[14/09 4:13 pm]  +91 94426 43238 : அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி

அரசாணை எண் 39
பள்ளிக் கல்வி (இ2 ) துறை
அரசாணை எண் 39
அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி ரூ 75,000

பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்குதல்- ஆணை வெளியிடப் படுகிறது.

பள்ளிக் கல்வி (இ2 ) துறை
அரசு ஆணை ( நிலை ) எண். 39

ஒரு குடும்பத்தில் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய், விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலே, வருவாயின்மைக் காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியைத் தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படுகிறது. அவ்வாறான சூழ்நிலைகளில் அத்தகைய குழந்தைகள் தங்களது கல்வியை இடையில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து கல்வி கற்கும் வகையில், அவர்களது கல்விப் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில், புதிய திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ,மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்கப்படும்.

இந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் அவர்களது பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும்.

தரமான கல்வி எது?

தரமான கல்வி எது?

இங்கு ஒரு தவறானப் பொது உளவியல் உருவாக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. நிறையத் தேர்வு எழுதினால், நிறைய மதிப்பெண் எடுக்கலாம், தரமானக் கல்வி உருவாகும் என்கின்றனர். தேர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்தால், எப்படி தரமானக் கல்வி உருவாகுமென்று யாரேனும் நிரூபிக்கத் தயாரா?

அரசுப்பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகளை நடத்துகின்றனர். அதில் தரம் இல்லையெனக் கூறிக்கொண்டு, மாதாந்திர தேர்வு நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அனுப்பத் தொடங்கினர். இப்பொழுது, வாராந்திர தேர்வு நடத்துகின்ற பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புகின்றனர்.

இன்னும் சில ஆண்டுகளில் தினமும் தேர்வு நடத்துகின்ற பள்ளிகளுக்கு குழந்தைகள் அனுப்பப்படுவர். உண்மையில் தேர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்தால், கற்றல் அதிகரிக்குமா?

நாங்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது, காலாண்டுத் தேர்வு வருவதற்கு முன் ஒரு வாரத்திற்கு முன்பாக தேர்வுக்கான தேதியை அட்டவணையாக வெளியிடுவர். அந்த அட்டவணை வெளியான நாள் முதல் மனதில் ஒருவிதமான பயம் தொற்றிக் கொள்ளும். தேர்வில் சரியாக மதிப்பெண் எடுக்காவிட்டால், வகுப்பில் ஆசிரியர் அடிப்பார், வீட்டில் பெற்றோர் அடிப்பார்கள், பக்கத்து வீட்டில் மாமா கிண்டல் செய்வார் என்று பல்வேறு அழுத்தம் உருவாகும். அதனை தவிர்ப்பதற்காக படிக்கத் தொடங்குவோம்.

தேர்வு முடிந்தால் ஒருவாரம் விடுமுறை அதில் நன்றாக விளையாடலாம், இப்பொழுது கவனமாக படிக்கலாம் என்ற ஒருவித விட்டுக்கொடுத்தலுக்கு மனம் தயாராக இருக்கும். படிக்கின்ற நாள்களில் ஒழுங்காகப் படிக்க வேண்டும். விளையாடுகின்ற நாள்களில் ஓடியாடி விளையாடலாம் என்ற புரிதல் பால்ய வயதிலேயே வந்துவிடும்.

தேர்வு, தேர்வுக்குத் தாயராக சரியான நாள்கள், தேர்வுக்கு பிறகு மன ஓய்வுக்கான விடுமுறை என்று எல்லாமும் சரிவிகிதமாக பிரிக்கப்பட்டு, பள்ளி வாழ்க்கை நகர்ந்தது. அதனால், உண்மையில் வலிமையான மனதிடத்தோடு நாங்கள் உருவானோம்.

இன்றைய நிலைமை வேறு. ஒரு வாரம் பாடம் நடத்துகின்றனர். அடுத்த வாரம் தேர்வு வைக்கின்றனர். அதற்கு அடுத்த வாரம், இவன் புத்திசாலி, இவன் முட்டாள் என்று தரம் பிரித்துவிடுகின்றனர். நாம் எந்த இடத்தில் தவறு செய்தோம் என்று அந்த மாணவன் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே அடுத்த வாரத்திற்கான தேர்வு வந்துவிடுகிறது. மறுபடியும் அவன் முட்டாளாக்கப்படுகிறான்.

கற்பித்தலும்- கற்றலும், புரியாதப் பகுதியை மீண்டும் கற்பித்தலும்- அதன் மூலம் மீண்டும் தெளிவாக கற்றலும்தான் கல்வி. ஆனால், வாரம் ஒருமுறை தேர்வு நடத்தினால், கற்பித்தல் எப்பொழுது நடக்கும், அதன் விளைவான கற்றல் எப்பொழுது நடக்கும்?

இன்றைய காலத்தில், நீங்கள் எந்தப் பள்ளிக்கூடம் தலைச்சிறந்த பள்ளிக்கூடம் என்று நினைக்கிறீர்களோ, அங்கு கற்பித்தலே நடப்பது இல்லை என்பதை என்னால் நிரூபிக்க முடியும். கற்பித்தலிலும், கற்றலிலும், இரண்டு பக்கமும் வார்த்தைகள் பரிமாற்றம் நடக்க வேண்டும். எந்தப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பாடம் நடத்தியவற்றில் இருந்து மாணவன் கேள்வியை எழுப்புகிறான்? குறிப்பாக ஆக்கபூர்வமான கேள்வியை எழுப்புகிறான்?

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் வீட்டில் இருந்தே தேர்வு எழுதுகின்ற காலம் வந்துவிட்டது. காரணம், தேர்வு முக்கியமில்லை, தேர்வில் இருந்து கற்பதும், புதியவற்றை கண்டுபிடிப்பதும்தான் கல்வியின் நோக்கம் என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்து வைத்து இருக்கின்றனர். ஆனால் இங்கு நடப்பது என்ன? குழந்தைகளை செக்கு மாடுகளாக மாற்றும் மாபெரும் பணியைத்தான் வகுப்பறைகளில் நிகழ்த்திக் கொண்டு இருக்கின்றனர்.

வகுப்பறையில் இருக்கும் கரும்பலகையில் எழுதப்படுபவை வெறும் வரிகளாக, படங்களாக மட்டுமே மாணவர்களின் மூளைக்குள் திணிக்கப்படுகின்றன. அதனைத்தான் 'பாடம் நடத்துவது' என்று நம்புகின்றனர் ஆசிரியர்கள். அதனையும் கடந்து, புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வரியும், இயல்பான உலகில் நடைபெறும் ஓர் உண்மை சம்பவத்தின் குறியீடு என்பதை யாருமே உணர்வதில்லை. அந்த குறியீடுகளின் வழியாக மெய் உலகைத் தேடி நகர்கின்ற அறிவு, இக்கால குழந்தைகளுக்கு வழங்கப்படாமல் இருப்பதுதான் பெருங்கொடுமை.

எடுத்துக்காட்டாக ஒருக் கேள்வியைக் கேட்கிறேன். எல்லோரும் எலக்ட்ரான் என்ற வார்த்தையைப் படிக்கின்றனர். ஆனால், எலக்ட்ரான் எப்படி இருக்கும், அதன் உருவம் என்ன? அதன் பிம்பம் என்ன? போன்ற எந்த கேள்விக்கும் யாரிடமும் பதில் இல்லை. ஆனால், எலக்ட்ரான் அணுவைச் சுற்றி வருகிறது என்று மட்டும் எல்லோரும் நம்புகின்றனர். ஏன் இந்த தேடல்களை நம் தேர்வுகள் உருவாக்கவில்லை?

பாடப்புத்தகங்களுக்குள் விடை தேடுவது அறிவல்ல. பாடப்புத்தகங்கள் சொல்லாதவற்றையும் தேடுவதுதான் உண்மையான அறிவு. தொடர்ந்து தேர்வு எழுதுபவன் மெய்நிகர் உலகிற்கு செல்வதே இல்லை. அதன் அருகில் கூட அவன் இல்லை. அவன் உலகம் எல்லாம், அவன் கையில் இருக்கும் புத்தகம் மட்டுமே. புத்தகத்தைக் கடந்து அவனிடம் கேள்வியும் இல்லை, பதிலும் இல்லை, தேடலும் இல்லை.

தரமானக் கல்வி என்பது ஒருபோதும் செக்குமாடுகளை உருவாக்காது..
தேடல் கொண்டச் சமூகத்தை உருவாக்கும் வலிமை, எந்தக் கல்வி முறைக்கு இருக்கிறதோ, அதுவே தரமான கல்வி...

தரமானக் கல்வியும், அதன் விளைவாக உருவான அறிவார்ந்த மாணவனும்தான், வலிமையான நாட்டை வடிவமைக்க உதவியாக இருக்க முடியும்...

அந்த 'தரம்' கட்டாயம் நீங்கள் நினைக்கும் தேர்வுகளால் தீர்மானிக்கப்படாது..
கற்றலும்- கற்பித்தலும் எங்கு இருக்கோ, அங்குதான் தரம் இருக்கும்..

-பேராசிரியர் ஆ.அருளினியன்

சத்திய வரலாறு

சத்திய வரலாறு - 1 - தமிழ்நாடு என பெயர் வைக்க கோரி சங்கரலிங்கனார் 75 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்கிறார். அவருடைய உண்ணாவிரதத்தை கைவிட திரு.வி.க, பேரறிஞர் அண்ணா போன்ற பலர் முயற்சித்தும் பலனற்று போனது.  அது 1957_ம் ஆண்டு, அப்போது ஆட்சியில் முதலமைச்சராக இருந்தவர் காமராசர். சங்கரலிங்கனார் இந்த கோரிக்கைக்காக இறந்த பிறகும் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் காமராசரே முதலமைச்சர்.
ஆயினும் “தமிழ்நாடு” என்கிற பெயர் மாற்றத்தை நினைத்து கூட பார்க்கவில்லை காமராசர்!!!!
1957_ல் சங்கரலிங்கனார் இறந்து போகிறார்.
1967_ல் பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வருகிறார்.
முதல் மூன்று கையெழுத்துகளில் ஒன்றாக தாய் தமிழ்மண்ணிற்க்கு, “தமிழ்நாடு” என்கிற பெயரை சூட்டுகிறார்!!!

சத்திய வரலாறு - 2 - தமிழகத்தின் எல்லையில் தேவிக்குளம், பீர்மேடு எல்லை பிரசினை பூதாகார உருவெடுக்கிறது. அப்போதும் ஆட்சியில் இருந்தவர் காமராசர் தான்!!! தமிழகமே கொத்தளித்து நிற்கிறது!!! “மேடாவது, குளமாவது” என தமிழக எல்லையை பற்றி அசட்டையாக பதிலளித்தவரும் இதே காமராசர் தான்!!!

சத்திய வரலாறு - 3 - பெரியாரும், ராஜாஜியும் நெருங்கிய நண்பர்கள்.  ஆயினும் காமராசர் எனும் பச்சை தமிழனை வீழ்த்த உதவமாட்டேன் என சொன்னதோடு காமராசரை ஆதரித்தார் பெரியார். பேரறிஞர் அண்ணாவோ, காமராசரை எதிர்த்து வேட்பாளரே நிறுத்த மறுத்தார். ஆனால், பச்சை தமிழனான காமராசரை எதிர்ப்பதே வாழ்நாள் இலக்காக கொண்ட மா.பொ.சி. காமராசருக்கு எதிரான ராஜாஜியின் கை கோர்த்து கொண்டு துரோகம் செய்தார்!!!

இப்படி வரலாற்று உண்மைகள் நிறைய இருக்கின்றன!!!

ஆனால்.., தமிழ்நாடு என பெயர் வைக்க மறுத்தவரும், எல்லையை காவு கொடுத்தவருமான காமராசர் மண் இதுவாம் - சீமானின் தம்பிகளுக்கு.
காமராசரை இப்படி சொல்கிற இவர்களே, காமராசருக்கு நேர் துரோகியான ம.பொ.சி.யையும் சேர்த்து கொண்டாடுகிறார்கள்!!!

எனில், சீமான் இவர்களுக்கு கற்று தந்திருப்பது புழுகினி வரலாறு தானே!!!