Thursday, February 06, 2020

இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி...

இராஜராஜ சோழன் ஆட்சி!
பார்ப்பனியத்தின் மீட்சி...👇👇👇
உலகின் மிக உயரமான கோபுரங்களைக் கொண்ட, பழமையான பெருங்கோவில்களில் தஞ்சைப் பெரியகோவிலும் ஒன்று. இன்றிருப்பதைப் போன்ற துரிதக் கட்டுமானப் பொறி நுட்பங்கள் ஏதும் வளர்ந்திராத, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கட்டிடப் பொறியியலில் மாபெரும் சாதனையாகக் கட்டப்பட்டதுதான் இந்தக் கோவில். மழைபெய்தால் நீர்க்கசிவு ஏற்படாதிருக்கப் பதிக்கப்பட்டிருக்கும் நுண்குழாய்கள், ஒரே கல்லினால் ஆன மிகப் பெரும் நந்தி எனப் பல்வேறு பிரம்மாண்டமான பொறியியல் சாதனைகளை எல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்துக் காட்டிய மாமன்னன் ராஜராஜன் போற்றிக் கொண்டாடப்படுகிறான். கூடவே அவனது ஆட்சியும் ’தமிழகத்தின் பொற்கால ஆட்சி’ என்று புகழப்படுகிறது.
தஞ்சைப் பெரியகோவிலின் கலைநுட்பமும், பொறியியல் சாதனையும் மனிதகுல வரலாற்றில் மகத்தான படைப்புகள்தான். அதே போல எகிப்தின் பாரோக்கள் கட்டிய பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும்கூட மனித வரலாற்றின் பெரும் சாதனைகள்தான். எனினும் அவை பொற்காலங்களாகக் கொண்டாடப்படுவதில்லை. கலைத்திறனைப் போற்றுவது என்பது வேறு. அரசாட்சியைக் கொண்டாடுவதென்பது வேறு.
பெரியகோவிலை எழுப்பிய ராஜராஜனின் ஆட்சியில்தான் குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை செழித்திருந்ததாகவும், வேந்தன் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலங்களை அளந்து முறைப்படுத்தி ’உலகளந்தான்’ எனும் பெயர் பெற்றதாகவும் கூறி ’தமிழனின் பொற்கால ஆட்சி’ என கலைஞர் முதல் தமிழினவாதிகள் வரை பலராலும் போற்றப்படுகிறது, ராஜராஜனின் ஆட்சி.
அன்றாடங்காச்சிகளாக வாழும் அப்பாவித் தமிழர்கள் கூட இப்பெருமிதக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ’கடாரம் கொண்டான்’ என்றும் ’சோழ சாம்ராச்சியம்’ என்றும் காதில் கேட்டமாத்திரத்தில் ’நம் தமிழனின் பெருமை’ என்று பெருமிதத்துள் வீழ்கின்றனர்.
வரலாறு நெடுகிலும், மன்னர் ஆட்சி, உழைக்கும் மக்களுக்கு கொடுங்கோல் ஆட்சியாகவே இருந்துள்ளது. இருப்பினும் அம்மன்னர்களின் வரலாற்றுப் பாத்திரம் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அசோகனின் பாத்திரமும் புஷ்யமித்திர சுங்கனின் பாத்திரமும் வேறுவேறுதான். முன்னெப்போதும் இல்லாப் பிரம்மாண்டமாக ராஜராஜன் பெரியகோவிலை எழுப்பியது ஏன்? அக்கற்றளிக் கோவிலின் கம்பீரம் மூலம் அவன் எதைச் சொல்ல நினைத்தான்?
அடிமை உழைப்பிலும் போர்க் கொள்ளையிலும் உருவான பெரிய கோவில்!
ராஜராஜனுக்கு முன்னர் நடுகல் வழிபாடுதான் தமிழ்நாட்டில் பரவி இருந்தது. அக்கம் பக்கமாக குறிஞ்சி (மலை சார்ந்த) , முல்லைப் பகுதிகளில் (காடு சார்ந்த) இருந்த வேளிர் எனும் இனக்குடிகளின் அரசுகளை ஒழித்துக் கட்டி, மருதநிலப் பரப்பில் பேரரசுகள் உருவாக்கம் பெற்ற வரலாற்றுக் காலமே ராஜராஜனின் காலம். தொடர் போர்கள் மூலம் சிற்றரசுகளை நிர்மூலமாக்கி, அவ்வரசுகளின் செல்வங்களை எல்லாம் கவர்ந்து வந்து தன் பேரரசைக் கண்டாலே அனைவரும் அச்சத்தால் உறைந்திடச் செய்யும் மாபெரும் சின்னம் ஒன்றை உருவாக்குவதும், அச்சின்னத்தையே அதிகார மையமாக மாற்றுவதுமே ராஜராஜனின் நோக்கமாக இருந்திருக்கிறது. அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் பெரிய கோவில்.
சங்கம் மருவிய காலத்தின் பின் வந்த களப்பிரர் காலத்தில் வைதீகத்தின் கொட்டம் அடக்கப்பட்டு சமணம் தழைத்தோங்கி இருந்தது. களப்பிரர்களை வீழ்த்திய பாண்டியபல்லவர்கள் காலத்தில் ஆற்றுப்பாசனம் வளர்ச்சி பெற்று வேளாண் உற்பத்தி பெருகியது. சிற்றரசுகள் வீழ்த்தப்பட்டு பெருவேந்தர்கள் உருவாகும் வரலாற்றுக் கட்டத்தைச் சேர்ந்தது சோழர் ஆட்சி. கழுவேற்றி சமணத்தைக் கருவறுத்த சைவத்தின் வெற்றி, ராஜராஜனின் பேரரசு உருவாக்கத்தோடு ஒருங்கிணைந்தது. இக்காலத்தில்தான் சைவக்கொழுந்துகளான வேளாளர்களும் பார்ப்பனர்களும் கூட்டணி கட்டிக் கொண்டு அதிகார மையமானார்கள். இவர்களின் ஆட்சிக்கு பெரியகோவில்தான் மைய அச்சாக இருந்தது.
கருங்கற்பாறைகளே இல்லாததும் காவிரியாறு கொண்டு வந்து சேர்த்த வண்டலால் நிரம்பியதுமான தஞ்சைப் பகுதியில், ஒரு லட்சத்து முப்பதாயிரம் டன் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடம்தான் பெரிய கோவில். கட்டிடக் கலை சார்ந்த நவீன தொழில்நுட்பங்களோ, சாலைகளோ போக்குவரத்து வசதிகளோ இல்லாத அந்தக் காலத்தில் இத்தனை பெரிய கட்டிடத்தைக் கட்டிமுடிக்க, எவ்வளவு மனித உழைப்பு தேவைப்பட்டிருக்கும்? இந்தக் கட்டுமானப் பணியில் எத்தனை பேர் தங்களது உயிரை இழந்திருப்பார்கள்?
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இந்தக் கோவிலை அடிமைகளின் இலவச உழைப்புதான் உருவாக்கியது. தனது ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து போர்கள் நடத்திய ராஜராஜன் போரில் தோற்ற நாட்டு வீரர்களைக் கைதிகளாக்கிக் கொண்டுவந்து அவர்களின் உழைப்பிலேயே இக்கோயிலை எழுப்பினான். போர்க்களங்களில் இருந்து கைதிகளை மட்டுமல்ல, இக்கோவிலுக்குத் தேவையான அனைத்தையும் கொள்ளையடித்துத்தான் கொண்டு வந்தான்.
மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை வென்றபோது கைப்பற்றப்பட்ட செல்வங்களும், ஈழம், கேரளத்தின் தென் பகுதி, ஆந்திரத்தின் தென் பகுதி ஆகியவற்றை வென்று அந்நாடுகளின் கருவூலங்களைக் கொள்ளை அடித்த செல்வங்களும்தான் 216 அடிக் கற் கோபுரமாகியது. மலைநாடு எனப்படும் சேரநாட்டை வென்றபோது எடுத்து வந்த பொன் நகைகளும், பாண்டிய நாட்டை வென்றபோது கொள்ளையடித்து வந்த முத்து, பவளங்களும்தான் பெருவுடையாருக்குரிய நகைகளாயின.
சாளுக்கிய நாட்டிலிருந்து கொள்ளையிட்டு பெருவுடையாருக்கு சொந்தமாக்கப்பட்ட 87.593 கிலோ தங்க நகைகளும், சேர, பாண்டிய நாட்டுக் கொள்ளையில் கிடைத்த 95.277 கிலோ வெள்ளியும் இதில் அடக்கம். ஈழப் போரின்போது கைப்பற்றப்பட்ட கிராமங்கள் பெரிய கோவிலுக்கான வருவாய்க் கிராமங்களாக (நிவந்தம்) விடப்பட்டிருந்தன. இவ்வாறு அண்டை நாடெங்கும் போர்தொடுத்து கொள்ளையடித்த பொருட்களால் உருவானதுதான் தஞ்சைப் பெரியகோவில்.
இக்கோவில் உருவாவதற்காக தென்னகத்தில் தொடர்ந்து ரத்த ஆறு ஓடிக் கொண்டே இருந்தது. காந்தளூர் முதல் ஈழம் வரை இதற்காக ராஜராஜன் படை எடுத்துப் பேரழிவை நடத்தினான். காந்தளூரில் (இன்றைய திருவனந்தபுரத்தின் ஒரு பகுதி) சேரனைத் தோற்கடித்து, உதகை நகர் (கல்குளம் வட்டம்) கோட்டை தகர்க்கப்பட்டு எஞ்சிய நகரெங்கும் தீவைக்கப்பட்டது. இது அவனுடைய மெய்க்கீர்த்தியில் ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி’ என்று சொல்லப்படுகிறது.
அண்மையில் கண்டறியப்பட்ட கல்வெட்டில் இதன் அடுத்த வரி ‘மலையாளிகள் தலை அறுத்து‘ என்றுள்ளதாக முனைவர் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். அடுத்து மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனைத் தோற்கடித்த போரில் நகரங்களைக் கொளுத்தியும், குழந்தைகள் எனக்கூடப் பாராது அனைவரையும் கொன்று வெறியாட்டம் போட்டது சோழர்படை. கன்னிப்பெண்களைக் கைப்பற்றி மனைவியராக்கிக் கொண்டும் அளவற்ற பொருட்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினர்.
ஈழத்தின் மீது படை எடுத்து அந்நாட்டு அரசியையும், அவளுடைய மகளையும் கைப்பற்றி வந்தனர். புத்தசமய நினைவுச் சின்னங்களில் இருந்த பொன்னாலான உருவங்களைக் கொள்ளை அடித்தனர். இந்தப் படையெடுப்பின்போது அனுராதபுரம் நகரை தீவைத்து அழித்தனர். புது நகராக பொலனருவாவை உருவாக்கினர். ஜார்ஜ் புஷ், ஈராக்குக்கு ஜனநாயகம் வழங்கியதைப் போல ஜனநாதபுரம் என அதற்குப் பெயருமிட்டனர்.
நாட்டு மக்களைச் சுரண்டிய பெரிய கோவில் பொருளாதாரம்!
ஆகம நெறிப்படி பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட கோவில்களில் தஞ்சைப் பெரிய கோவிலே முதற்கோவில் என்பர். சைவம் பரப்பும் வேலையை மட்டும் அக்கோவில் செய்துகொண்டிருக்கவில்லை. சோழர்காலத்தின் வட்டிக்கடையாகவும், நில உடைமையாளராகவும், பொற்களஞ்சியமாகவும் அரசின் அதிகார பீடமாகவும் விளங்கியது.
சோழநாட்டின் விளை நிலங்களில் பெரும்பகுதி பெருவுடையார் கோவிலுடன் இணைக்கப்பட்டிருந்தது. குடிகளிடம் இருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு கோவிலுக்கு வசூலிக்கப்பட்டது. கோவில் நிதிக் குவியலில் (பண்டாரம்) இருந்து விவசாயிகள் தமது தொழிற்தேவைகட்கும், பெண்களுக்கு சீதனம் தரவும் கடன் பெற்றனர். பெருவுடையார் கோவில் கணக்கில் இருந்த பல்லாயிரக் கணக்கான களஞ்சு பொன்களும், காசுகளும் பெரும்பாலும் பல ஊராட்சி மன்றங்களுக்கும், சபைகளுக்கும் கடனாகத் தரப்பட்டு 12 சதவீதம் வட்டியாக (பணமாகவோ பொருளாகவோ) வசூலிக்கப்பட்டது.
சிறிய அளவில் நிலம் வைத்திருந்த விவசாயிகட்குக் கடன் கொடுத்து விளைச்சல் இன்மையால் அவர்கள் கடன் கட்டத் தவறிய போது, அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டு பெரியகோவிலுக்கு சொந்தமாக்கப்பட்டன. கடனாளியான விவசாயிகளை கோவில் அடிமைகளாக்கி, அவர்கள் முதுகில் சூட்டுக் கோலால் சூடுபோட்டு, கோவில் நிலங்களில் வேலை செய்ய வைத்தனர்.
பெரிய கோவில் இறைத் திருமேனிக்கு ராஜராஜன் அளித்தது 2.692 கிலோ தங்கமாகும். பெரியகோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து காணிக் கடனாக ஆண்டொன்றுக்கு வந்த நெல் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் கலம். ஆண்டொன்றுக்கு கோவிலுக்கு வந்த வருவாயில் நெல் தவிர பொன், 300 களஞ்சு, காசுகள் 2 ஆயிரம் என நாட்டின் ஒட்டுமொத்த செல்வமுமே பெரியகோவிலில் குவிக்கப்பட்டிருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கென 4 பண்டாரிகள், 116 பரிசாரகர்கள், 6 கணக்கர், 12 கீழ்க்கணக்கர் பெரியகோவிலில் பணி புரிந்தனர். கோவிலுக்கு நெல்லும், பொன்னும் கட்டாயமாகத் தரவேண்டும் என 57 கிராமங்களுக்கு ராஜராஜன் உத்தரவிட்டிருந்தான்.
அன்றாடம் இந்தக் கோவில் இயங்குவதற்கான இலவச உழைப்பும் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இக்கோவிலுக்கு நுந்தா விளக்கெரிப்பதற்காக 400 இடையர்கட்கு ‘ சாவா மூவாப் பேராடுகள்’ எனும் பெயரில் ஆடு, மாடு, எருமைகள் வழங்கப்பட்டன. ‘வெட்டிக் குடிகள்’ என அழைக்கப்பட்ட இந்த 400 பேரும் கோவிலுக்கு விளக்கெரிக்க நாளொன்றுக்கு உழக்கு நெய் கொடுக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது. கோவிலுக்குக் கொடுத்தது போக, இவர்களுக்கு ஆடுமாடுகளிடமிருந்து கிடைத்த உபரியைத் தவிர வேறு சம்பளம் கிடையாது. கால்நடைகளின் எண்ணிக்கை குறையாமல் அவற்றைப் பராமரித்து கோவிலுக்கு நெய் அளக்கும் ‘வெட்டிக் குடி’ (ஊதியம் இல்லா வேலையாட்கள்)களாக அவர்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. நெய் அளக்கத் தவறிய இடையர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வெட்டிக்குடிகளைப் போன்றே பல பெண்கள், பெரிய கோவில் நெல் குற்று சாலையில் சம்பளம் இன்றி வேலை செய்ய அமர்த்தப்பட்டனர். ஆனால், பார்ப்பனர்களுக்கென்று, வேதம் கற்க பாடசாலைகள், உணவு உறைவிட வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டன. இப்பாடசாலை மாணவர்களுக்கு 6 கலம் நெல்லோடு 1 பொன் உபகாரச் சம்பளமாகவும் வழங்கப்பட்டது.
விவசாயிகளுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தும், நிலப்பறிப்புச் செய்தும், அரசு வல்லமையால் வரி தண்டிச் சுரண்டியும்தான் பெரியகோவில் வானுயர்ந்து நின்றது.
பார்ப்பனிய நிலவுடமை ஆதிக்கத்தின் காலம்!
இவ்வாறு பெரிய கோவில் செழித்திருந்த காலத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது?
பார்ப்பனரைத் தவிர அனைத்துத் தரப்பினரும் தத்தம் ஊர்களுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்த காவலுக்கென்று ‘பாடி காவல் வரி’ செலுத்தினர். கைத்தொழில் செய்வோர் ஒவ்வொரு தொழிலுக்கும் வரி (இறை) செலுத்த வேண்டி இருந்தது. நெசவாளர் ’தறி இறை’யும், எண்ணெய் பிழிபவர் ’செக்கு இறை’யும், தட்டார், தட்டாரப்பாட்டத்தையும், தச்சர், ‘தச்சு இறை’யும் வரிகளாகச் செலுத்தினர். மக்களிடமிருந்து புரவு, இரவு, குடிமை, திருமணவரி, போர்வரி எனப் பல வரிகளை அரசு வசூலித்த அதே நேரத்தில், ஊர், சபை போன்ற அமைப்புகளும் தனியாக வரி விதித்தன. இவ்வாறு விதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிடமிருந்துதான் வசூலிக்கப்பட்டன.
விவசாயிகள், விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை வரியாக செலுத்த வேண்டியிருந்தது. அந்த வரிக்குக் ’கடமை’ எனப் பெயரிட்டதன் மூலம் அரசுக்கு நெல் கொடுப்பது உழவர்கள் வாழ்வின் நிரந்தரமான கடமையாக்கப்பட்டிருந்தது. இந்த வரியை செலுத்தத் தவறினால், நிலம் பிடுங்கப்பட்டு, அந்த நிலம் ஊர்ப் பொதுவாக்கப்பட்டது. மக்கள் பலர் பஞ்சத்தாலும் வறுமையாலும் வாடியுள்ளனர். வரிகொடுக்க இயலாதோரின் நிலங்கள் ஈவிரக்கமின்றிப் பறிமுதல் செய்யப்பட்டன. ஊர்களே அதனை விற்று பணத்தை வரியாக (இறை)க் கட்டின. நிலத்தைப் பறித்தல்தான் அன்றைய சமூக அமைப்பில் மிகப் பெரிய தண்டனையாக இருந்தது.
சோழர் ஆட்சிக்காலத்தில் அடிமை முறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக் கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆறு பேர் பதின்மூன்று காசுகளுக்குத் தம்மைப் பெரிய கோவிலுக்கு விற்றுக் கொண்டுள்ளனர். நந்திவர்ம மங்கலத்தில் பதிகம் பாடுவதற்காக 3 பெண்கள் பரிசளிக்கப்பட்டனர். திருவிடந்தைப் பெருமாள் கோவில் எனும் ஊரிலுள்ள ஸ்ரீவராகதேவர் கோவிலுக்கு 12 மீனவர் குடும்பத்தினர் தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டிருக்கின்றனர். இதே போல நெசவாளர்களும் கோவிலுக்கு அடிமைகளாக தம்மை விற்றுக் கொண்டுள்ளனர். இவ்வடிமைகள் தங்களின் தொழில் மூலம் வரும் வருவாயில் களஞ்சுப் பொன், கோவிலுக்குத் தர வேண்டும் என்றும், ஆண்டுக்கு இருமுறை வரும் கோவில் திருநாட்களில் பணிகள் செய்யவேண்டும் என்றும் விதிகள் இருந்தன.
பார்ப்பனர் அல்லாதோரின் பஞ்சாயத்து ஆதிக்கத்திலுள்ள கிராமங்களை ‘ஊர்கள்’ என்றழைத்தனர். ‘ஊர்களின்’ நில உரிமைகளை மாற்றியும், கோவிலுக்குக் குடிகள் கொடுக்க வேண்டிய காணிக்கடனை அதிகரித்தும் ராஜராஜன் கட்டளைப் பிறப்பித்தான்.
தங்கள் தேவைக்கென சிறு அளவில் வேளாண்மை செய்து வந்தவர்களின் நிலங்கள் அவ்வப்போது ஆட்சியாளர் களால் பறிக்கப்பட்டு, அந்த உழவர்களைக் கூலியாக மாற்றியோ (‘குடி நீக்கியா’), குத்தகையாளராக மாற்றியோ (‘குடி நீக்காமலோ’), அவர்களின் நிலங்கள் கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டன.
அரசனுக்கும், கோவிலுக்குமான பங்கான ‘மேல்வாரமும்’, குத்தகைதாரர்களின் பங்கான ‘கீழ்வாரமும்’ எடுக்கப்பட்டபின், ஊர் அறிவித்துள்ள மானியங்களை உரியவர்களுக்குக் கொடுத்த பின்பு எஞ்சியதே உழவர்களுக்குக் கிடைத்தது. இது விளைச்சலில் பத்தில் ஒருபங்கை விடக் குறைவானது. ‘மேல்வார’மாக செலுத்த வேண்டிய விளைச்சல் ஏற்கெனவே அதிகமாக இருந்ததுடன், அடிக்கடி இந்த அளவு உயர்த்தப்பட்டுக் கொண்டே போனதால் உழுபவர்க்குக் கிடைக்கும் பங்கு குறைந்து கொண்டே போனது.
இதனால் நில உடைமையாளருக்கு (கோவில்தான் உடைமையாளர்) அஞ்சி உழுகுடிகள் ஊரைவிட்டு ஓடியுள்ளனர். வரி அதிகமாகப் பிடுங்கியதால் தாங்கள் வெள்ளாமை செய்து குடியிருக்கப் போவதில்லை என மன்னார்குடி மக்கள் எச்சரிக்கையும் விட்டுள்ளனர். சாகுபடி செய்யாது கிடந்த நிலங்களுக்கும் வரி இருந்தது. அதை வசூலிக்கத் தவறிய புன்னைவாயில் எனும் ஊர்ச்சபை தண்டிக்கப்பட்டிருந்தது.
ஊரார் சிலரே வரி நெல்லைக் குறைத்து அளப்பதற்காக, தமது ஊர்நிலத்தில் வரி விலக்குப் பெற்றிருந்த (இறையிலி) நிலங்களின் அளவைக் கூடுதலாகக் கணக்குக் காட்ட முயன்றிருக்கின்றனர். சொந்த நிலமுடையவர்கள் கூட தங்கள் நிலத்தை வரியில்லா நிலங்கள் எனக் கணக்குக் காட்டி அனுபவித்து வந்தனர். கோவிலின் சுரண்டலில் இருந்து எவ்வாறெல்லாம் தப்பலாம் எனத் திட்டமிட்ட குடிமக்கள், மகிழ்ச்சியுடன் வரி செலுத்தி இருக்கக்கூடுமா?
பார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்ற சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின் அவர்கள் நிலங்களை விற்றுவிடச் சொல்லி ராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை ராஜராஜனின் தமக்கை குந்தவை விலைக்கு வாங்கி கோவிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பார்ப்பனர் ஊர்களில் பார்ப்பனரல்லாதோரின் நில உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழுகூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர்.
இவ்வாறு கோவிலைச் சார்ந்து பிறப்பிக்கப்படும் நிலப்பறிப்பு, வரி விதிப்பு போன்ற ஆணைகளை யாரேனும் உழவர்கள் எதிர்த்தால் அவர்கள், ‘சிவத்துரோகி’ எனப் பட்டம் கட்டி அடக்கப்பட்டனர்.
விவசாயத் தொழிலாளர்கட்கு நெல் கூலியாக அளக்கப்பட்டது. நெல் அளப்பவரின் பதவிப் பெயர் ‘கருமி’. இன்றளவும் அச்சொல் மக்கள் மத்தியில் கஞ்சத்தனத்திற்கு மாற்றாகச் சொல்லப்படுவதிலிருந்தே சோழர் காலத்தில் தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் வயிற்றில் அடிக்கப்பட்டிருப்பர் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.
சேரிகள், அடிமை விபச்சாரம்: ராஜராஜ சோழனின் சாதனை!
ராஜராஜன், 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு ‘தேவரடியார்களாக’ மாற்றினான். இப்பெண்கள் கோவிலின் பணிகளோடு நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டனர். இறைவனின் பெயரால் விபச்சாரத்தைப் புனிதமாக்கி தஞ்சையில் ‘தளிச்சேரி’யை உருவாக்கினான். கோவில் அடிமைகளென கட்டாயப்படுத்தி இழுத்து வரப்பட்ட இப்பெண்கள், அரசனின் அந்தப்புரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடுமைகளும் சோழப் பொற்காலத்தில்தான் நிகழ்ந்தன. கோவில் பூசகர்கள், பெருநிலவுடமையாளர்களின் காமவெறிக்குப் பலி கொடுக்கப்பட்ட ‘தேவரடியார்’ குலப் பெண்களின் ஆயிரம் ஆண்டுகாலக் கொடுமையை 1929 இல் சுயமரியாதை இயக்கமும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் போராடி சட்டம் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
‘தமிழ்மறை மீட்டான்’ என சைவக் கொழுந்துகளால் போற்றப்படும் ராஜராஜன், தமிழ்மறைகளை ஒளித்து வைத்துக் கொண்டு சமயக்குரவர் நால்வரும் வந்து கேட்டால்தான் தருவோம் என தில்லை தீட்சிதர்கள் மிரட்டியபோது பம்மிப் பதுங்கி சமயக்குரவர்களின் தங்கச்சிலைகளைச் செய்து அவர்களுக்குத் தானம் தந்து மீட்டானே ஒழிய, தளிச்சேரிப் பெண்டிர் மீது ‘சூடு’ போட்ட ‘வீரத்தை’ தீட்சிதரிடம் காட்டவில்லை. “சமச்சீர் கல்வியை எதிர்த்து போராடுவோம்” என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மிரட்டியபோது ‘செம்மொழிகொண்டானின்’ அரசு ‘அனைத்துத் தரப்பினரின் நலன்களும் காக்கப்படும்’ எனக் கெஞ்சியதே, ராஜராஜன் காட்டியதும் அதே வீரம்தான்.
தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களில் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது. வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில் ஊருக்கு வெளியே தீண்டாச் சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன.
தாழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழல்வதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும், பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது. ராஜராஜனின் பொற்காலம் பற்றிப் பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையைப் பற்றியோ, சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதே இல்லை.
கோவிலை மையமாகக் கொண்ட சோழர் கால அதிகார அமைப்பில் சாதிவாரிக் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டன. பார்ப்பன, வெள்ளாள நிலவுடைமை ஆதிக்க சாதிகள் ஒருபுறமும் விவசாயத் தொழிலாளிகள், அடித்தட்டு உழைப்பாளர் மற்றும் உடைமை,உரிமை அற்ற சமூக அடிமைகளாக கடைச் சாதி தீண்டப்படாதோர் மறுபுறமுமாக சமூகமே பிரிந்து கிடந்தது.
பொற்காலத்தில் கொழித்த பார்ப்பனர்களும், ஆண்டைகளின் ஜனநாயகமும்!
ராஜராஜனின் ‘பொற்கால ஆட்சி’யை அனுபவித்தவர்கள் யார்? தீட்சிதப் பார்ப்பனர்கள் தனக்கு பட்டம் சூட்ட மறுத்ததால் பீகார் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை சோழநாட்டிற்கு அழைத்து வந்து ராஜராஜன் அவர்களைக் குடியேற்றினான். தமிழக மன்னர்களின் வரலாற்றில் முதன்முதலாக ராஜகுரு என்றொரு பதவியை உருவாக்கி, ஈசான சிவப் பண்டிதர் எனும் காஷ்மீரப் பார்ப்பனரை அப்பதவியில் நியமித்தான். பின்னர் பார்ப்பனர்களே இப்பதவிக்கு வருவது மரபாக்கப்பட்டது. ராணுவப் படையெடுப்பு போன்றவற்றை தான் கவனித்துக் கொண்டு, குடிமக்கள் நிர்வாகத்தை ராஜகுருவின் ஆலோசனைக்கு விட்டிருந்தான்.
பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக் கிராமங்கள், கோவில்கள், மடங்கள் ஆகியவை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. 250 ஊர்கள் சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன. இந்தியச் சட்டங்கள் எவையும் செல்லுபடியாகாத இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போன்றே , குற்றவிசாரணைக்காகக்கூட அரசப்படையினர் இத்தகைய ‘மங்கலங்களின்’ உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.
குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை சோழர் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுவது ஒரு இமாலயப்பொய். ஊர்ச்சபைகளைத் தேர்ந்தெடுக்க ஓலைகளில் வேட்பாளர்கள் பெயர்கள் எழுதப்பட்டு ஒரு குடத்துக்குள் அவ்வோலைகள் போடப்படும். பின்னர் குடத்துக்குள் கையை விட்டு எடுக்கப்படும் ஓலையில் வரும் பெயருக்குரியவர் சபைக்குத் தேர்வு செய்யப்படுவார். இந்த திருவுளச்சீட்டு ஜனநாயகத்தில் வேட்பாளராக நிற்பதற்கு வேதம் கற்றிருக்க வேண்டும், நில உடைமையாளராக இருக்க வேண்டும் என்ற இரு தகுதிகள் வைக்கப்பட்டிருந்தன.
வேதக் கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமேயான உரிமையாக இருந்ததால், பார்ப்பன நிலவுடைமையாளர்கள் மட்டுமே ஊர்ச்சபைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதுதான் குடவோலை முறையின் யோக்கியதை. அதுமட்டுமல்ல, நிலவுடைமையாளர்களான பிராமணர்கள் மட்டுமே பெருவுடையார் கோவிலின் நிதி நிர்வாகிகளாக (பண்டாரி) இருக்க முடியும் என்று ராஜராஜன் ஆணை பிறப்பித்திருந்தான்.
பார்ப்பனர்களுக்கு தன் எடைக்கு எடை (துலாபாரம்) தங்கமும், தானியமும் பலமுறை தானமாகத் தந்தான் ராஜராஜன். அதுமட்டுமல்ல, அவனும் அவனது தமக்கை குந்தவையும் தமது ‘பிறவி இழிவு நீங்கி’ சொர்க்கம் செல்வதற்காக, தங்கத்தால் பசுமாடு ஒன்றைச் செய்து, அதன் வயிற்றுக்குள் சென்று வந்த பின்னர், அந்த தங்கப் பசுவை பார்ப்பனர்க்கு தானமாகத் தந்துவிடும் ஹிரண்யகர்ப்ப தானம் செய்தனர்.
மண்ணும் பொன்னும் தந்து பார்ப்பனர்களை மகிழ்வித்த ராஜராஜன், தனது அரசாட்சியிலும் பார்ப்பன நீதிமுறைகளையே பின்பற்றினான். தனது அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்களைக்கூட அவன் தண்டிக்கவில்லை. சோழ எல்லை தாண்டி சேர நாட்டிற்கு நாடுகடத்தினான். “கொலைக்குற்றம் செய்தாலும் பார்ப்பனர்களுக்கு மரணதண்டனை தரக்கூடாது” என்ற மனுதரும விதியைத் தனக்கே பிரயோகித்துக் கொண்ட மன்னன், மக்கள் மீது அவ்விதியை எங்ஙனம் நிலைநாட்டியிருப்பான் என்பதை யாரும் புரிந்துக் கொள்ளலாம்.
சோழநாட்டின் ஊர்களில் நிலம், ஊருக்குப் பொதுவாயினும், அவை கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டு, அதில் வேளாளரின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. விளைநெல்லில் பெரும்பங்கு, குத்தகை உரிமையாகவும் (காராட்சி) கோவிலுக்காக மேற்பார்வை ஊதியமாகவும் (மீயாட்சி) வேளாளருக்கு மட்டுமே கிடைத்தது.
வேளாளர் தம் மேற்பார்வையில் இருந்த நிலங்களில் ‘காராட்சி’, ‘மீயாட்சி’ப் பங்குகளை முன்னிலும் அதிகமாக வசூலித்தபோது பயிரிட்ட குடிமக்கள் கிளர்ச்சி செய்துள்ளனர். இந்த வேளாளர் பங்குகளுக்கு மன்னன் உச்சவரம்பு நிர்ணயிக்காததால், உழுகுடிகளையும் விவசாயக் கூலிகளையும் வேளாளச் சாதியினர் வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்தனர். ராஜராஜனின் காலம் மட்டுமின்றி, சோழர் காலம் முழுவதுமே வேளாளர், பார்ப்பனக் கூட்டணிக்கு பெருவாழ்வைத் தந்த பொற்காலமாக இருந்தது.
களப்பிரர் காலம்: உழைக்கும் மக்களின் பொற்காலம்!
ராஜராஜனது பொற்காலத்தை விதந்தோதும் சதாசிவ பண்டாரத்தாரில் இருந்து கருணாநிதி வரை தமிழக வரலாற்றில் இருண்டகாலமாக ‘களப்பிரர்’ காலமிருந்ததெனக் குறிப்பிடத் தவறுவதே இல்லை. அந்த ‘இருண்டகாலத்தை’ புரிந்து கொண்டால்தான் சோழர் பொற்காலத்தின் மகிமையை விளங்கிக் கொள்ள இயலும்.
களப்பிரர்களின் ஆட்சிக்காலத்துக்கு (கி.பி. 4 முதல் 6 ஆம் நூற்றாண்டுவரை)முந்தைய சங்கக் காலத்தில் (கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை) விவசாய உற்பத்தி வளர்ச்சி பெற்று முற்காலப்பாண்டியர்களின் அரசு உருவாகி வந்தது. நிலவுடைமை என்பது பொதுவில் இருந்த வேளிர்களின் காலம் அது. பாண்டிய ஆட்சியின்போது விவசாயமயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டு விளிம்புகளிலிருந்த இனக்குழு சமூகம் விவசாய விரிவாக்கத்துக்குள் கொண்டுவரப்பட்டு, அவர்களின் உபரி உறிஞ்சப்பட்டது. அவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. பார்ப்பனர்களுக்குத் தானமாக்கப்பட்டன. அரசனுக்கான வரியாக இனக்குழுக்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. இதனை எதிர்த்து கிளர்ந்தெழுந்த இனக்குழு சமூகங்களின் எழுச்சி தமிழகமெங்கும் 300 ஆண்டுகள் தொடர்ந்தது. களப்பிரர் ஆட்சிக்காலமாகக் குறிப்பிடப் படும் காலம் இதுதான்.
இக்காலத்தில் நிலங்கள் மீண்டும் ‘பொது’வாக்கப்பட்டன. பார்ப்பனர்களுக்குத் தானமாகத் தரப்பட்ட நிலங்கள் பறிக்கப்பட்டன. இந்த ‘இருண்ட’ காலத்தில்தான் தமிழிலக்கிய வளர்ச்சி உச்சத்தில் இருந்தது. மணிமேகலை, சீவக சிந்தாமணி, எலி விருத்தம், கிளி விருத்தம், கார் நாற்பது, இனியவை நாற்பது போன்ற இலக்கிய நூல்களும், விருத்தம், தாழிசை போன்ற பாவகைகளும், உரை நூல்களும் உருவாக்கப்பட்டன. தமிழுக்கு வச்சிரநந்தி தலைமையில் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டு தமிழ் இலக்கியம் வளர்ச்சி பெற்றது. வைதீகத்தை வீறுகொண்டு எதிர்த்து, ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று பிரகடனம் செய்த திருக்குறளும் களப்பிரர் காலத்தில்தான் இயற்றப்பட்டது. தமிழகமெங்கும் பவுத்தமும் சமணமும் தழைத்தோங்கியிருந்த காலமும் இதுதான்.
இந்த ‘இருண்டகால’த்தைத்தான் பல்லவர்களும் பாண்டியர்களும் வீழ்த்தினர். இனக்குழுக்களின் பொது நிலத்தை மீண்டும் பறித்து, பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கினர். நிலத்தின் மீது நிலவிய
சோழர் காலம் பொற்காலமா, பார்ப்பனிய மீட்சிக் காலமா?
இன்று கருணாநிதிக்கு சூட்டப்படும் சமத்துவப் பெரியார், வாழும் வள்ளுவர் போன்ற எண்ணற்ற அடைமொழிகளைப் போலவே சோழர்களும் அடைமொழி சூடினார்கள். இன்று கருணாநிதியின் துதிபாடுவதற்காகவே நடத்தப்பட்டும் சொறியரங்குகளைப் போலவே, அன்றைய ‘மெய்க்கீர்த்தி’களும், ‘உலா’, பரணிகளும்தான் சோழர்களைச் சொறிந் தன. வருணாசிரமத்தை கடுமையாக எதிர்த்த திருக்குறளின் பொருளைத் திரிப்பதற்கு சோழர்கள் காலத்தில் பல உரையாசிரியர்கள் தோன்றினார்கள். வேதங்களையும், வேள்விகளையும் கண்டித்து, பிறப்பினால் அல்ல, ஒழுக்கத்தினாலேயே மனிதனுக்கு உயர்வு வரும் என்று கற்பித்த வள்ளுவரின் குறளையே திரித்துப் பரிமேலழகர் எனும் பார்ப்பனர் ‘நால் வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கங்களில் வழுவாது நிற்க’ என்று சோழர்காலத்தில்தான் உரை எழுதினார்.
சோழர் காலத்துக்கு முந்திய நிலையை ஜெயங்கொண்டார் (சோழர் காலம்) கலிங்கத்துப் பரணியில் ‘மறையவர் வேள்வி குன்றி, மனுநெறிக் குலைந்து, சாதிகள் கலப்புற்றதாக’ப் பாடியுள்ளார். இவற்றை எல்லாம் மீண்டும் தலைகீழாக மாற்றி மனுநெறியை நிலைநாட்டியதுதான் சோழர்களின் ‘சாதனை’.
சோழ மன்னர்கள் சிங்களம், மலைநாடு, கங்கம், மாலத்தீவெல்லாம் படையெடுத்துச் சென்று தலை அறுத்துக் கொண்டிருந்தார்கள். தலையறுத்துக் கொள்ளையடித்த பொன்னையும் பொருளையும் கொண்டு, கோவில்கட்டுவதற்காக மக்களைக் கல்லறுக்கப் பணித்தார்கள். சற்சூத்திரர்களின் ‘ஊர்’களும், பார்ப்பனர்களின் ‘பிரம்மதேயங்களும்’ பார்ப்பன ராஜகுருவின் ஆலோசனைக்கும் ஆணைக்கும் கட்டுப்பட்டே இருந்தன. உழுகுடிகளை ஒட்டச் சுரண்ட பெரியகோவிலும் வட்டாரக் கோவில்களும் இருந்தன.
இதனைப் பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே, வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச் சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் யாரும் சிந்தித்து விடாதிருக்க, ‘கங்கை கொண்டான்’, ‘கடாரம் கொண்டான்’ என்று மாற்றான் தோட்டத்தில் தாலி அறுத்து வந்து தமிழ்நாட்டில் கோபுரம் கட்டியிருப்பதை அண்ணாந்து பார்க்கச் சொல்கிறார்கள். நாம் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே நம் காலடி மண்ணை ‘இறையிலி’ ஆக்கி ஏகாதிபத்தியங்களின் ‘மங்கலங்களாக’ மாற்றிக் கொண்டிருக்கிறது, கருணாநிதி அரசு.

Wednesday, February 05, 2020

நீ ஒரு அப்பன் ஆத்தாவுக்கு தான் பொறந்தியா

இந்த பக்தா எல்லாம் டென்சன் ஆனா நீ ஒரு அப்பன் ஆத்தாவுக்கு தான் பொறந்தியானு கிளம்புறாங்க

இயற்கையாகவே அறிவியல் படி இங்கே மனிதன் ஒரு தாய் தந்தைக்கு தான் பிறக்கிறார்கள்

இருந்த போதும் பக்தாளின் ஆர்வத்தை புரிந்து கொண்டு ஒரு அப்பன் ஆத்தாவுக்கு பிறக்காதவர்கள் லிஸ்ட்

விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பிறந்த குழந்தை தான் ஐயப்பன்,ஐயப்பனுக்கு இரண்டுமே தந்தை தான் தாய் இல்லை

ஆக ஐயப்பன் ஒரு அப்பன் ஆத்தாவுக்கு பிறக்காதவர்

பிரம்மனின் மகள் மற்றும் மனைவி இரண்டுமே EDUCATION DEPARTMENT GOD சரஸ்வதி தான் இவருக்கு தந்தை உண்டு தாய் இல்லை

ஆக சரஸக்கா ஒரு அப்பன் ஆத்தாவுக்கு பிறக்காதவர்

தசரதனின் துப்பாக்கி வெடிக்காத காரணத்தால் ராமனின் தாய் பாயாசம் குடித்து விட்டு குதிரையுடன் இரவைக் கழிக்கிறார்

ராமனுக்கு தாய் உண்டு தந்தை இல்லை

ஆக ராமன் ஒரு அப்பன் ஆத்தாவுக்கு பிறக்காதவர்

பார்வதியின் அழுக்கில் இருந்து விநாயகர் பிறக்கிறார் விநாயகர் பிறப்பில் எந்த ஆணுக்கும் தொடர்பு இல்லை

விநாயகருக்கு தாய் உண்டு தந்தை இல்லை

ஆக விநாயகர் ஒரு அப்பன் ஆத்தாவுக்கு பிறக்காதவர்

பாண்டவர்கள் ஐந்து பேரில் ஒருவர் கூட பாண்டுவுக்கு பிறக்கல இவர்கள் ஐந்து பேருக்கும் தாய் ஒன்று தான் ஆனால் தந்தை ஐந்து பேர்

ஆக பாண்டவர்கள் ஐந்து பேரும் ஒரு அப்பன் ஆத்தாவுக்கு பிறக்காதவர்கள்

ஒரு தகவல் தான்

அய்யோ #கிருஷ்ணா ! அரே #கிருஷ்ணா !

அய்யோ #கிருஷ்ணா ! அரே #கிருஷ்ணா !


வீட்ல ராமன், வெளியில கிருஷ்ணன் என்ற தலைப்பில் ஒரு சினிமாப் படம் வந்தது. மனைவிக்கு மதிப்புத் தந்து, பயந்து நடந்து கொள்ளும் ஒருவன், வெளி உலகில் எப்படி பெண் பித்தனாக, வெறியனாக நடந்துகொள்கிறான் என்பதை நடிகர் (சிவக்குமார்) வெளிப்படுத்துவார். இந்தப் படம் தெரிவித்த செய்தி என்ன?



ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழும் மனிதர்கள் ராமனைப் போல எனக் கூறுவார்கள். எல்லா அரசர்களையும் போல, ராமனும் பல மனைவிகளைக் கொண்டிருந்தான் என்பதை வெள்ளி நாக்கு சீனிவாச சாஸ்திரி அம்பலப்படுத்தி உள்ளார் என்பது வேறு செய்தி. இருந்தாலும் ராமன்    மீது அப்படி ஒரு கருத்து உண்டு.

#பதர்போன்ற #பகவான்

ஆனால், கிருஷ்ணன் கதை என்ன? ஒரே சமயத்தில் 9 ஆயிரம் கோபிகையருடன் கலவி செய்த கதையை பாகவதம் கூறும். 9 ஆயிரம் கிருஷ்ணன்களாகிக் கலவி செய்தானாம். 18 ஆயிரம் பேர்கள் ஆணும் பெண்ணுமாக உடலுறவில் ஈடுபட்டதைப் பாகவதம் கூறும் நேர்த்தியை பாகவத மேளா நடத்தும் பார்ப்பனர்கள், பாகவதர்கள், தூர்தர்ஷன், சங்கரா தொலைக்காட்சியில் காலட்சேபம் செய்யும் வேளுக்குடிகள் விவரிக்கும்போது கேட்கும் கிருஷ்ண பக்தர்கள் வாயில் எச்சில் ஒழுகும்.

இதன் பொருள் என்ன? கிருஷ்ணன் எனும் கடவுள் பொம்பளைப் பொறுக்கி என்ற கொச்சை வார்த்தையால் வருணிக்கப்பட வேண்டிய பதர்தானே!

கடவுள் என்ற நிலையில் வைத்து கவுரவிக்க வேண்டிய அளவுக்குத் #தகுதியானவனா?

இப்படித்தான் வாழவேண்டும் என்று அளவுகோல்போல் வாழக் கூடியவர்களுக்கு கடவுள் ராமன் _ எப்படியும் வாழலாம் என்ற இழி பிறவிகளுக்கு உதாரணமான கடவுள் கிருஷ்ணன் என்று கவிஞர் கண்ணதாசன் கூறினார்! அர்த்தமுள்ள இந்துமதம் எழுதியவர் அவர்! முத்தய்யா எனும் தன் பெயர் இருக்க, கண்ணதாசன் என்ற பெயரைச்  சூடிக்கொண்ட கவிஞர். கண்ணன் அவரைக் கவர்ந்ததும் அவர் பெயருக்குக் காரணியாக அமைந்த அவரது தனிவாழ்க்கையும் தனிக்கதை. என்றாலும் அவர் போன்ற ஆத்திகச் சிகாமணிகளால் அற்பன் என்று கூறப்பட்டவன்தானே கிருஷ்ணன்!

#ராதா #அத்தைஅல்லவா?

ராதா கல்யாணம் என்று பாகவதர் காலட்சேபம் நடத்துவார். ருக்மணி கல்யாணம் என்று ஒருவர் பிரசங்கம் செய்வார். பாமா விஜயம் எனப் பாடுவார் ஒருவர். சத்ய பாமா _ ருக்மணி சண்டையைச் சிலாகித்துப் பாடுவார் வேறொருவர். ஜாம்பவதி என்ற மனைவியை அறிந்தவர்கள் சிலரே!

ஒரு ஆணுக்கு இத்தனை மனைவிகளை இணைத்துப் பாடுகிறோமே என்று பாகவதர்களுக்கும் வெட்கமோ குற்ற உணர்வோ கிடையாது. கேட்கும் பக்தர்களுக்கும் அறிவோ, மானமோ கிடையாது என்பது தெரிந்த சங்கதியே!

ஆண்களில் சிலர் ராதாகிருஷ்ணன் என்றே பெயர் வைத்துக் கொள்கிறார்கள். கிருஷ்ணனின் மனைவி பெயரையும் சேர்த்தே தன் பெயராக வைத்துக் கொள்கிறார்கள். அத்தகைய தனிச் சிறப்பு பெற்ற கிருஷ்ணனின் மனைவி ராதா, கிருஷ்ணனின் மனைவியா? கிருஷ்ணன் தாலி கட்டிய மனைவியா? முறையாகக் கல்யாணம் செய்து கொண்ட மனைவியா?

பக்தர்கள் பதில் கூறட்டுமே! கிடையாதே! பின் ராதா யார்? கிருஷ்ணனின் அத்தை! அப்படி இருக்கும்போது, அத்தையை வைத்துக் குடும்பம் நடத்தியவன்தானே கிருஷ்ணன்! கல்யாணம் ஏதும் செய்து கொள்ளாமல், சும்மா வைத்துக் கொண்டவன்தானே கிருஷ்ணன்!

#அடுத்தவன் #மனைவியோடு...

பின் ராதை யாருடைய மனைவி? இருவேறு கதைகள் உள்ளன. ஒன்றில் அபிமன்யுவின் மனைவி. அதை முன்பு பார்த்தோம். அதிரதன் என்பவனுடைய மனைவி என்று இன்னொரு பாரதம் சொல்கிறது! அதிரதன் யார்? வேகமாகத் தேரோட்டும் அதிரதனின் மனைவியாம்! இந்த அதிரதன்தான் கர்ணனின் வளர்ப்புத் தந்தை. திருமணத்திற்கு முன்பே திருட்டுத்தனமாக குழந்தை பெற்ற குந்திதேவி, ஊரார் பழிச் சொல்லுக்குப் பயந்து குழந்தையைக் கூடையில் வைத்து ஆற்றில் விட்டாளாம். அந்தக் கூடையைக் கண்டு, எடுத்து, வளர்த்தவள்தான் ராதை! கர்ணனின் வளர்ப்புத்தாய். வேறு வகையில் கிருஷ்ணனின் அத்தை!

அத்தையோடு குடும்பம் நடத்திய குடிகேடன் கிருஷ்ணன். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்துவரும் ஆணும் பெண்ணும் கணவனும் மனைவியும் எனக் கருதப்படலாமா எனும் வழக்கில் தீர்ப்பு வழங்கிய இந்திய உச்ச நீதிமன்றம் கிருஷ்ணனும் ராதையும் வாழ்ந்த கதையை எடுத்துக்காட்டாகக் கூறித் தீர்ப்பு அளித்துள்ளது.

ராதாகிருஷ்ணன் யோக்யதையைச் சட்டப் பூர்வமாகக் குறிப்பிட்டுக் கூறியிருப்பவர் மற்றொரு கிருஷ்ணன்தான். இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன்!

#பாரதத்தின்வண்டவாளம்

பாரதம் படிக்காத கிருஷ்ணபக்தர்கள், ஆல் இந்தியா லா ரிப்போர்ட் புத்தகங்களையாவது படிக்கட்டும். 18 நாள் பாரதம் படித்தபோது பக்கத்தில் ஆமாம் போடுபவர்களாக இருந்தவர்கள் _ இருப்பவர்கள்தானே கிருஷ்ணனைக் கும்பிடும் பக்தர்கள்! யாருக்கு முழுக் கதை தெரியும்? பெயர் தெரிந்த நான்குபேர் தவிர, மேற்கொண்டு 16 ஆயிரம் பேர் மனைவிகள் என்கிறதே, பாரதம்! அறிவார்களா, இவர்கள்?

15ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் எழுதப்பட்ட பிரம்ம வைவர்த்த புராணக் கதையின்படி, ராதா, கிருஷ்ணனை வளர்த்த தாய் என்று ஆகிறாள். சிறுவன் கிருஷ்ணனை வளர்த்தவள். இவள் வீட்டில் இருந்தபோதுதான் இவன் தீராத விளையாட்டுப் பிள்ளை! வெண்ணெய் திருடித் தின்றது ராதா வீட்டில் வளர்ந்தபோதுதான்! நவநீத (வெண்ணெய்) கிருஷ்ணன் என்ற பெயர் வந்ததே ஆயர்குல ராதையின் வீட்டு வெண்ணெயைத் திருடித் தின்று லீலை செய்ததால்தான்! இத்தகைய லீலா கிருஷ்ணன், தன்னை வளர்த்த தாயையே தாரமாக்கிக் கொண்டான் என்றால்... இந்தக் கேடுகெட்ட கதாபாத்திரம் கடவுளா?
யோசித்துப் பார்க்க வேண்டும்! தாயாக, அத்தையாக இருந்த வயதில் மூத்த பெண்ணைத் தன் மனைவியாக்கிக் குடித்தனம் நடத்திய குணக்கேடன் கிருஷ்ணன்! வங்கதேசத்து மன்னன் லட்சுமணசேனன் (1179-_1209) என்பவனது அரசவைக் கவிஞன் ஜெயதேவ என்பவன் எழுதிய இடையனின் பாடல் எனும் கவிதை ராதாவிடம் எப்படியெல்லாம் கிருஷ்ணன் நடந்துகொண்டான் என்பதைக் கூறும். ராதாவின் முன் குனிந்து அவளது காலைத் தூக்கித் தன் தலையில் வைத்துக் கொண்டாடினான் என்கிறது இந்தக் கவிதை! இப்படியும் ஒரு கடவுளா?

#வஞ்சகன்கிருஷ்ணன்

குடும்ப வாழ்க்கை இவ்வளவு கோளாறுகள் நிறைந்தது என்றால், கிருஷ்ணனைப் பற்றிப் பெருமையாகப் பேசப்படும் பாரதப் போர் பற்றிய கதை நிரம்பவும் வஞ்சகம் நிறைந்தது. பாண்டவர்கள் பக்கம் சாய்ந்து நின்று அவர்கள் போரில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக என்னென்ன செய்தான் என்பது எல்லார்க்கும் தெரிந்ததே. அவற்றை விவரிக்கப் போவதில்லை. போர் முடிந்து, பாண்டவர்கள் வெற்றி பெற்றபிறகு போர்க்களத்தில் நடைபெற்ற கடைசிக் காட்சி பலபேருக்குத் தெரியாத ஒன்று.

அதுதான் அர்ஜூனனை இறங்கச் சொல்லிவிட்டு கிருஷ்ணன் தேரிலிருந்து இறங்கியதும் தேர் எரிந்துபோன காட்சி! அதைத்தான் கடந்த இதழில் நாம் பார்த்தோம்.

தேரே எரிந்து போகும் அளவுக்கு அயோக்கியத்தனம் செய்து போரில் வென்றிருக்கிறோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் தரும் அளவிற்குத்தான் உள்ளது பாரதப் போரை கிருஷ்ணன் நடத்திய யோக்கியதை! இத்தகைய கிருஷ்ணனும் கடவுளா?

ராதா #யார்மனைவி?

வேறொரு கதையின்படி, ராதா அபிமன்யுவின் மனைவி என்கிறது. அபிமன்யுவின் தந்தை அர்ஜூனன். அபிமன்யுவின் தாய் சுபத்திரை. கிருஷ்ணனின் தங்கை சுபத்திரை. தன் தங்கையின் மருமகளைத் தன் தாரமாக்கிக் கொண்டவன்தான் கடவுள் கிருஷ்ணன்!

16ஆம் நூற்றாண்டில் ரூபகோஸ்வாமி என்னும் சைதன்யரின் சீடரால் எழுதப்பட்ட சமக்கிருதக் காவியம் கூறும் கதை இது. பாதராயணனின் பிரம்மசூத்ரத்திற்கு ராமானுஜர் எழுதிய சங்கரரின் தத்துவம் எனும் நூலின் 14ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ள செய்தி இது!

என்னய்யா, குழப்பம் இது! கடவுளின் பெண்டாட்டி பற்றியே இவ்வளவு மாறுபட்ட கதைகள் என்றால்...?

#தங்கையோடு கூட...

கூடுதலாக ஒரு செய்தி. சர்வம் ஜகன்னாதம் என்று வைணவச் சொல்லடை ஒன்றுண்டு. எந்த வித்தியாசமும் இல்லாதது என்று இதற்குப் பொருள் கூறுகிறார்கள். அதனை விளக்க ஒரு கதையையும் கூறுகிறார்கள்.

ஒருநாள் தங்கை சுபத்திரா அண்ணன்  கிருஷ்ணனைப் பார்த்து எல்லாப் பெண்களும் உன்னை விரும்புவதற்கும் உன்னை அடைவதற்கும் என்ன காரணம்? அதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றாளாம். இதைச் சொல்லி விளக்க முடியாது, செய்து காட்டித்தான் விளக்க முடியும் என்று கூறித் தன் தங்கையுடன் உடல் உறவு கொண்டு விளக்கினானாம். அந்தச் செயல் நடந்த இடம் ஜகன்னாத். ஒடிஷா மாநிலத்தில் பூரி எனும் கடற்கரை நகரில் நடந்ததாம். அதனால்தான் அங்கே பெரிய கோவில். அங்கே கிருஷ்ணனுக்கு ஜகன்னாத் என்று பெயர், பூரிஜெகன்னாத் கோவில் முழுவதும், கோபுரம் முழுவதும் அசிங்கமான, ஆபாசமான உடல் உறவுச் சிற்பங்களே!

இந்தக் கோவிலுக்குள் இந்து தவிர பிற மதத்தவர் அனுமதிக்கப்படுவதில்லை. பார்சி மதத்தவரைத் திருமணம் செய்து கொண்டதால் இந்திரா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது அவர் பிரதமராக இருந்தபோதே! இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவராக ஆக்கப்பட்ட பாபாசாகேப் அம்பேத்கர் உள்ளே போக அனுமதிக்கப்படவில்லை. இத்தனைக்கும் அவர் விஷ்ணுவின் மகன் (அரிஜன்) என்றழைக்கப்பட்டார் காந்தியாரால்!

ஆனால் மிலேச்சரான மவுன்ட் பேட்டன் பிரபு அனுமதிக்கப்பட்டார். இந்த லட்சணத்தில் சர்வம் ஜகன்னாதம் என்ன வாழ்கிறது?

ஓ! நான்கு வருணங்களையும் இதே கிருஷ்ணன்தான் படைத்தவனா?

#அவதாரம்அல்ல

படைத்தவன் என்றால் _ கிருஷ்ணன் கடவுளா? கடவுளின் அவதாரமா? விஷ்ணு எனும் கடவுள் இந்து மதத்தின் மூன்று கடவுள்களில் ஒன்று. இந்தக் கடவுள் 22 அவதாரங்களை எடுத்தது என்கிறது புராணம். அவற்றில் 10 அவதாரங்களை மட்டுமே சிலாகித்துப் பேசுவார்கள். அதில் ஒன்று கிருஷ்ண அவதாரம் என்கிறார்கள்.

அது #உண்மையா?

பாரதத்தைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் கும்பகோணம் அத்வைத பண்டிதர், வேதாந்த கேசரி, மகாமகோபாத்யாய, பைங்கா நாடு கணபதி சாஸ்திரி என்பவர். அவரது மொழிபெயர்ப்பு நூல் 1930ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அந்நூலின் 1266ஆம் பக்கத்தில் விஷ்ணுவும் நாரதனும் பேசிக் கொள்ளும் விவரம் உள்ளது. தான் எடுத்த அவதாரங்களைப் பற்றிய விவரத்தை விஷ்ணுவே கூறுவதாக வாசகம். ஓ, நாரத முனியே! என்னுடைய அவதாரங்களைக் கேள். மத்ஸ்யம், கூர்மம், வராஹம், நரசிம்ஹம், வாமனம், பரசுராமன், தாசரதிராமன், பலராமன், புத்தன், கல்கி எனத் தொடர்கிறது. (அத்யாயம் 348)

பரசுராமன் இருக்கிறான். தசரதனின் மகன் ராமன் இருக்கிறான். பலராமனும் இருக்கிறான். கிருஷ்ணனைக் காணோமே!

#புத்தர் அவதாரப் #பித்தலாட்டம்

பலராமனுக்கு அடுத்து புத்தன் வருகிறது. 2,560 ஆண்டுகளுக்கு முந்தைய அரசன் மகனாகப் பிறந்து புத்தராக வளர்ந்து மறைந்து சித்தார்த்தர், கவுதமர் என்றெல்லாம் பெயர் பெற்ற புத்தர் வருவது எப்படி?

புத்தர் அவதாரம் விஷ்ணு எடுத்தது என்பது அண்டத்தையே தூக்கிச் சாப்பிடும் புளுகு அல்லவா? இந்தப் புளுகு கந்த புராணத்திலும் இல்லை என்பது சொல்லடை. அத்தகைய புளுகு மூட்டையான கந்த புராணம் கூட இப்படிப்பட்ட புளுகைப் புளுக வில்லையே!

சரி, கிருஷ்ணன் அவதாரம் இல்லை என்று ஆகிறது. அப்படியானால் அவன் யார்? துவாரகையை ஆண்ட அரசன் என்கிறார்கள். மாடு மேய்த்த இடையர்குல குறும்பன் என்கிறார்கள். எது உண்மை? நிறைய செயல்கள் அவன் மாடுமேய்த்துக் கொண்டிருந்தபோது செய்தவை என்பதாகப் பழங்கதைகள் நிறைய இருக்கின்றன. அதனால்தான் அவன் ஒரு ஜாதிக் கடவுளாகக் குறுக்கப்பட்டு விட்டானோ!

அய்ரோப்பியக் கடவுள், #அரபியக் கடவுள், இந்தியக் கடவுள் என்று நில எல்லைக் கடவுள்கள் (TERRITORIAL GODS) இருப்பதுபோல, ஜாதிக் கடவுள் (SECTARIAN GOD) என்பதாகவும் ஆகிவிட்டதோ, #கிருஷ்ணன்?????????????????

அவர்களைத்தான் கேட்க வேண்டும்!

எரிந்து கொண்டே இருக்கிறது ஈராயிரம் ஆண்டுகளாக...

எரிந்து கொண்டே இருக்கிறது ஈராயிரம் ஆண்டுகளாக...

எது நடந்தாலும் 
பற்றி எரிவது என்னவோ
சேரிகள் தான்.
இன்று நேற்றல்ல
இரண்டாயிரம் ஆண்டுகளாய்.

அரக்கு மாளிகையில்
பாண்டவர்களுக்காக
வைத்த தீயில்
பாண்டவர்கள் சாகவில்லை.
ஐந்து பஞ்சமர்களே
பலியானார்கள்
இது மகாபாரதம்.

குரங்கு வைத்த தீயில்
எரிந்தது எல்லாம் எது?
ஈழத்துச் சேரிகள் தான்
இது இராமாயணம்.

உயிரோடு எரிக்கப்பட்ட
கழுமரத்தில் கொல்லப்பட்ட
பௌத்தர்களும்
சமணர்களும் யார்?
தாழ்த்தப்பட்டவர்களே
இது சைவ வரலாறு.

காஞ்சியிலும்
திருப்பெரும்புதூரிலும்
எரிக்கப்பட்ட ஏழைகள் யார்?
இராமானுஜரால்
பார்ப்பனராக்கப்பட்ட
பறையர்களே.
இது வடகலை வைணவம்.

கண்ணகி மூட்டிய
மதுரைத் தீயில்
கருகிப்போன
தீத்திறத்தார் யார்?
சேரி மக்களே.
இது சிலப்பதிகாரம்.

நந்தன்
ஏன்
நாயனார் ஆனார்?
அது அந்தணர் இட்ட தீ
இது பெரியபுராணம்.

ஈராயிரம் ஆண்டுகளாக
கொலைகளைச் செய்து கொண்டும்
கொல்லாமைப் பேசிக் கொண்டும்
பயணப்படுகிறது ஆதிக்கத்திமிர்.

ஆதிக்க வெறிக்கு
வர்ணங்கள் உண்டு
வர்க்க வேறுபாடுகள் உண்டு.
அவர்ணர்களுக்கு அது ஏது?
அவர்ணங்களா?
ஆம்.
வர்ணமற்றவர்கள்.

சம்புகன்
ஏகலைவன்
நந்தன்
வெண்மணி
மேட்டுப்பாளையம்
தொடர்கிறது.

அடைகாத்த
ஆதிக்கத்திமிர் அகற்றிட
அணிவகுக்கும் காலம்
அருகில் தான்.
அயர்ந்து விடாதீர்கள்.
எரியிடை மூழ்கி அல்ல
எரிதழல் ஏந்தி.

தமிழ் இனக்குழுக்களின் ஆட்சி என்றால் அது களப்பிரர்களின் ஆட்சி.

தமிழ் இனக்குழுக்களின் ஆட்சி என்றால் அது கி.பி.4 ஆம் நூற்றாண்டை தொடங்கி கி.பி.6 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்த களப்பிரர்களின் ஆட்சி.
இவர்களின் காலத்தில் தனியுடமையாக இருந்த நிலங்கள் மற்றும் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் பறிக்கப்பட்டு பொதுவுடமை நிலங்களாக மாற்றப்பட்டன.
தமிழுக்கு சங்கம் அமைக்கப்பட்டு தமிழ் இலக்கியம் வளர்ச்சியில் கவனம் செலுத்தினர்.
வைதீகம் கற்பித்த உயர்வு தாழ்வை எதிர்த்து "பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்’ சமத்துவம் பேசிய திருக்குறளும் களப்பிரர் காலத்தில் இயற்றப்பட்ட ஒன்று.
மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்ற காப்பியங்களும் இவர்களின் காலத்தில் இயற்றப்பட்டது.
தமிழகம் முழுவதும் பௌத்தமும் சமணமும் களப்பிரர் காலத்தில் தழைத்தோங்கியது.
இவர்களின் ஆட்சியை தான் பல்லவர்களும் பாண்டியர்களும் இணைந்து வீழ்த்தினர்.
இனக்குழுக்களின் பொது நிலத்தை கைப்பற்றி மீண்டும் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கினர். நிலத்தின் மீது நிலவிய பொதுவுடைமையை நீக்கியதனாலேயே ‘பொது நீக்கி’ என்று இம்மன்னர்கள் புகழப்படுகிறார்கள்.
உலகம் முழுதும் மன்னர் ஆட்சிகளுக்கு எதிராக மக்களாட்சி மலர செய்து வரலாறு இருக்கிறது.இதற்கு அண்மை உதாரணம் நேபாளம்.
ஆனால் தமிழர்கள் சிந்தனை என்பது தலைக்கீழ்.எங்களுக்கு மக்கள் ஆட்சி வேண்டாம்.மன்னார் ஆட்சி போதும்.ஏனெனில் மன்னார் ஆட்சி என்பது பூலோக சொர்கம் என்பது இவர்களின் கற்பனைவாத கணிப்பு.
மன்னர்கள் கட்டிய கோயில்களை சான்றாக வைத்து அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்குவது தமிழர்களின் தொன்றுதொட்ட பழக்கம். பிம்ப வழிப்பாட்டுக்கு ராஜ ராஜ சோழன் முதல் எம்.ஜி.ஆர்.வரை ஆக சிறந்த சான்று.

Saturday, January 11, 2020

1884-ஆண்டு நெல்லையில் ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் எடுக்கப்பட்ட படம்

1884-ஆண்டு நெல்லையில் ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் எடுக்கப்பட்ட படம், ஒடுக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் தாகத்திற்கு தண்ணீர் குடிக்கிறார். அவருக்கு தருபவர் நீண்ட மூங்கில் தண்டின் மேல் புறத்தில் தண்ணீர் ஊற்ற கீழே வழியும் நீரைக் குடிக்கவேண்டும்.



அன்றைய காலகட்டத்தில் இப்போது உள்ளது போல் எந்த கிணற்றிலும் போய் தண்ணீர் எடுக்க முடியாது, குளத்தில் இறங்கி குளிக்க முடியாது, அடிபம்ப் என்பது எங்குமே இல்லை. அப்படி என்றால் குடிக்க தண்ணீர் எடுக்க என்ன செய்யவேண்டும்.

இதற்கு தமிழகத்தில் என்ன நடந்திருக்கும் என்று புலன்விசாரணை செய்யும் முன்பு உஜ்ஜைனின் 1922-ஆம் ஆண்டு ஒரு ஆங்கிலேயே அதிகாரியின் பதிவில் இருந்து “உஜ்ஜைனில் உயர்ஜாதியினரின் கழிவு நீர் தேங்கும் குழிக்கு அருகே ஒரு குழி வெட்டப்பட்டுள்ளது, அந்தக்குழியில் ஊற்று நீர்(கழிவு தொட்டியில் இருந்து வரும் நீர்) நிரம்பும் வரை காத்திருந்து பானைகளில் பிடித்துச் செல்கிறார்கள். இந்த அழுக்கு நீரை இவர்கள் பயன்படுத்துவதால் இவர்களின் குழந்தைகள் நோயுள்ளவர்களாக உள்ளனர். இவர்களுக்கு அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க டில்லியில் இருந்து கவர்னர் வேண்டுகோள் விடுத்தும் இந்த நாட்டின் (உஜ்ஜைன் ஆங்கிலேயரின் ஆளுமைகுட்பட்ட பகுதி அல்ல) தலைவர் மத சூத்திரத்தின் குறிப்புகளைச் சுட்டிக்காட்டி மறுத்துவிடுகிறார். மனம் வேதனைப்படுகிறது என்று எழுதியுள்ளார்.
இப்போது சங்கிகள் கூறும் ரொட்டிக்காகவும் காசுக்காகவும் மதம் மாறினார்கள் என்பது எந்த அளவிற்கு மோசடியான பொய்கள் என்று தெரியும்

1971ல், 1972ல் நடந்தேறிய அனைவரும் அறிய வேண்டிய மிக இன்றியமையாத அரசியல் வரலாறு.

1971ல், 1972ல் நடந்தேறிய அனைவரும் அறிய வேண்டிய மிக இன்றியமையாத அரசியல் வரலாறு.
ஒன்றிய அரசு நினைத்தால் எப்பற்ப்பட்ட அரசையும், சூழ்ச்சி செய்து, கவிழ்த்து விடலாம். 184 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்தை கூட நிலைகுலைய செய்யவும் முடியும். கபட நாடகத்தை அரங்கேற்றி ஒரு செல்வாக்கு பெற்ற நடிகரைக் கூட தனி கட்சியை தொடங்க வைக்க முடியும் என்பதற்கு கீழ்காணும் பதிவு. சான்று.
-----------------------
23.3.92 இல் தமிழ் வார இதழில் போலீஸ் அதிகாரி மோகன்தாஸ் எழுதி வெளிவந்துள்ள தொடர் கட்டுரையின் ஒரு பகுதியை எழுத்துப் பிசகாமல் அப்படியே தருகிறேன்
ஜூனியர் விகடன்
எஸ் எஸ் வாசன் என்ற
பிரபல காங்கிரஸ்காரரும்
ஜெமினி ஸ்டூடியோ அதிபரும் ஆனந்தவிகடன் நிறுவனமான செல்வாக்குடன் வாழ்ந்து மறைந்த ஒருவரின் புதல்வர் பாலசுப்ரமணியம் அவர்களால் நடத்தப்படும் ஏடு.
அந்த ஏட்டில் போலீஸ் மனிதர்கள் என்ற தலைப்பில் ஒரு தொடர் வெளிவந்து கொண்டு இருக்கிறது
நான் இங்கே குறிப்பிடுவது
13ஆவது தொடராகும்.
போலீஸ் உளவுத் துறை அதிகாரி ஒருவர் அவர் பணியாற்றியபோது நாட்டில் நடந்த சில நடப்புகளையும் விளக்குகிறார் அதைத்தான் வாசகர்களாகிய நீங்கள் இப்போது படிக்கப் போகின்றீர்கள்
அவர் பின்வருமாறு எழுதுகிறார்
எம்ஜிஆரை திமுகவில் இருந்து வெளியே கொண்டுவர ஒரு பெரிய நாடகம் நடத்தினோம்
அந்த நாடகத்தை எப்படி நடத்தினோம் தெரியுமா என்று ஆரம்பித்த
சிஐடி அதிகாரி தொடர்ந்து
சொல்லத் தொடங்கினார்.
எதிர்க்கட்சிகளை உடைப்பதற்கு தேவையான தகவல்களை திரட்டித் தரும் பொறுப்பும் ஒரு சில சமயம் உளவுத்துறையின் தலையில் விழும்
அதைச் செய்ய வேண்டுமானால்
அந்த கட்சியில் உள்ள தலைவர்களுருடைய தனிப்பட்ட வாழ்க்கை அவர்களுக்கு உள்ள
பலம் பலவீனங்கள் கண்டெடுக்கப்படும்
அவர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு போன்ற
புள்ளி விவரங்கள்
இன்டெலிஜன்ஸ் அதிகாரிகளுக்கு
தெரிந்திருக்க வேண்டும்
இல்லையென்றால் ஆழம் தெரியாமல் காலை விட்ட கதையாகும்.
1971 திமுக 25 எம்பிக்களை வைத்திருந்தது.
அரசியலில் கருணாநிதியும் ஒரு சூப்பர் மேனாக இருந்த நேரம்
மாநில சுயாட்சிக் கொள்கையை உரமூட்டி வளர்த்துக் கொண்டிருந்தார் தன்னுடைய மாநிலதில் தான்
சிறப்பான ஆட்சி என்று முழங்கினார் இந்த குரல்கள் எல்லாம்
பிரதமர் இந்திரா காந்தி
காதிலும் விழுந்திருந்தன
தமிழ்நாட்டைச் சுற்றி உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் தான் ஆண்டது தமிழ்நாடு மட்டும் ஒரு தீவாக திமுகவின் கையில் இருந்தது.
திமுகழக எம்பிக்களின் ஆதரவு
இந்திரா காந்தியின் அரசுக்கு
அப்போது தேவைப்பட்டது
அதே சமயத்தில் கருணாநிதி
தன் கைக்குள் இருக்க வேண்டும்
என்றும் நினைத்தார் இந்திரா காந்தி
இதற்கு என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தார்
திமுகவை உடைத்துவிட்டால் தான் அந்தக் கட்சி காங்கிரஸ் உதவியை தமிழ்நாட்டில் நாடும்
என்று முடிவெடுத்தார்.
அதற்கான வேலையை செய்ய இன்டெலிஜென்ஸ்
உயர் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்
உதவிக்கு காங்கிரஸ் பிரமுகர் ஒருவரும் அனுப்பப்பட்டார் அந்த காங்கிரஸ் பிரமுகர் இன்டலிஜன்ஸ் அதிகாரியோடு உட்கார்ந்து திட்டம் போட்டார்
எனக்கு கூட அப்போது வேறு மாநிலத்தில் தான் பணியில் இருந்தது
ஆனால் தமிழக அரசியல் தெரியும் என்பதால் எனக்கு
ஸ்பெஷல் ட்யூட்டி போட்டிருந்தனர்.
திமுகவில் முக்கிய புள்ளிகள் யார் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தபோது
என் கண்முன் எம்ஜிஆர் தான் முன்னணியில் இருந்தார்.
அதனால்தான் அவரை
திமுகத்திலிருந்து இழுக்க
நாங்கள் முயற்சி செய்தோம்.
அப்போது ஏராளமான படங்களில்
நடித்து கொண்டிருந்தார் எம்ஜிஆர் வருமானமும்அதிகமான இருந்த நேரம்
இதைக் கருத்தில் கொண்டு
வருமான வரி அதிகாரிகள்
அடுத்து வருவாய் கண்காணிப்பு அமலாக்க பிரிவு என்று
எல்லா அதிகாரிகளையும்
எம்ஜிஆர் வீட்டை முற்றுகையிட்டு குடைந்து எடுக்க வைத்தோம்
அப்போது அவர் ஒரு சினிமா படப்பிடிப்பு சம்பந்தமாக வெளிநாடு சென்று வந்திருந்தார்
அதற்கான கணக்கு வழக்குகளை விசாரித்தார்கள்
ஆனால் இதற்கெல்லாம்
பெரும் பின்னணி இருப்பது
எம்ஜிஆருக்கு தெரியாது.
இந்த சமயத்தில் எம்ஜிஆருடன் பேச என்னை அனுப்பினார்கள்
நான் போன போது எம்ஜிஆர் மிகவும் சோர்வாக இருந்தார்
நானே வழியே பேசி பிரச்சினைகளை சமாளிக்க டெல்லி போய் இந்திராகாந்தியை பாருங்க எல்லாம் சரியாய்ப் போய்விடும் என்று
யோசனை சொன்னேன்
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டார் எம்ஜிஆர்
பிறகு நானே முக்கியமான காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் பெயரைச் சொல்லி அவர் மூலமாக அம்மாவை மீட் பண்ணுங்க என்று கூறி வழி காட்டிக் கொடுத்தேன்
அதன்படி எம்ஜிஆர் அந்த காங்கிரஸ் பிரமுகர் மற்றும் தன் வழக்கறிஞரிடம் சென்று பிரதமரை சந்தித்தார்
சந்திப்பு நடந்து எம்ஜிஆர் உற்சாகமாக திரும்பினார்
இப்படித்தான் மெதுமெதுவாக தொடங்கி திமுகவில் உட்பூசல் உண்டாக்கி கடைசியில் 1972ல் எம்ஜிஆரை திமுகவிலிருந்து வெளியேற்ற வைத்தோம் என்று முடித்தார்
அந்த போலீஸ் அதிகாரி.
ஜூனியர் விகடன் வார இதழில் வந்துள்ள இந்த உண்மையை
20 ஆண்டுகளுக்கு முன்பு
நானும் திமுக தலைவர்களும்
பல ஆதாரங்களுடன்
மக்கள் மன்றத்தில் எடுத்துவைத்த போது இப்படியும் இருக்குமா என்று
எங்களை மூர்க்கத்தனமாக எதிர்த்தனர்
ஆனால் உண்மை 20 ஆண்டுகள் கழித்து சாட்சியுடன் வெளிவந்துள்ளது.
நெஞ்சுக்கு நீதி தொடரிலிருந்து
அண்ணன் Napa Mc.
_____________________
இது ஏதோ முரசொலியில் பதிவானது அல்ல. 'நான் ஏன் பிறந்தேன்' என்று தொடரை கொடுத்த ஆனந்த விகடன் குழுமத்தில் இருந்து வரும் ஜூனியர் விகடனில் வெளியானது.
உண்மைத்தன்மை நிறைந்திருக்கும். ஏனெனில் எழுதியவர் அரசியல்வாதி அல்ல. எழுதிய நேரத்தில் திமுக சட்டமன்றத்தில் 1 இடம் மட்டுமே வென்ற அரசியல் கட்சி.
கணக்கு வழக்குகளை கொடுக்க வேண்டிய பொருளாளர் எவ்வாறு கணக்கு கேட்பார் என்ற அடிப்படையே தெரியாத அறியாதவர்கள் அதிகம் வாழ்ந்த காலம் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்கவில்லை.
நிறைவாக, ஆளும் ஒன்றிய அரசு நினைத்தால் எந்த ஒரு நடிகரையும் கட்சியோ, மய்யமோ, மன்றமோ, இயக்கமோ தொடங்கி வைக்க முடியும்.
பெரும் பலம்வாய்ந்த ஒரு இயக்கத்தை தகர்க்க, ஆட்சியில் வராமல் தடுக்க எல்லா அரசியல் சித்து விளையாட்டுகளை அரங்கேற்றிக் கொண்டிருக்க முடியும்.
அன்று அந்த விவரமறியாத தமிழ்ச் சமூகம் ஏமார்ந்தது. இன்று நிச்சயம் ஏமாராது என்பதனை ஒவ்வொரு தேர்தலிலும் தமிழக மக்கள் உணர்த்தி உள்ளனர்.மீண்டும் உணர்த்துவார்கள்.

இரண்டு விளம்பரங்கள்.

இரண்டு விளம்பரங்கள்.
1. ராம்ராஜ் வேட்டி விளம்பரம்.
வேஷ்டி கட்டுவதில் 99% ஆட்கள் கிராமப்புற ஆட்கள். ஆனால் விளம்பரம் நகர்ப்புற முன்னேறிய பிரிவினரை அதுவும் சாதீய ரீதியிலான மொழி அடையாளங்களுடனே காட்டி விளம்பரம் செய்கிறார்கள்.
2. அடுத்து ஏதோ வாஷிங் பவுடர் விளம்பரம்.
மெஸ் மணி மாமாவிற்கு குழந்தைகள் உதவுவது போல.
இன்னும் ஏகப்பட்ட விளம்பரங்கள் இப்படித்தான் சமூகத்தின் பெருவாரியான மக்களிடம் பொருட்களை விற்க 3% முன்னேறிய பிரிவினரை வைத்து சாதி ரீதியாக கூட விளம்பரங்கள் வருகின்றன.
இதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும்.
1. விளம்பரம் எடுக்கும் ஏஜன்சியினரின் சாதிப்பாசம்.
2. பெருவாரியான மக்கள் அடிமை மனப்பான்மையில் இருப்பதால் இதுபோன்ற விளம்பரங்கள் பயனளிக்கும் என்று நினைக்கிறார்கள்.

"தை ஒன்னு" தமிழ் புத்தாண்டு இது வரலாற்று உண்மை

"தை ஒன்னு" தமிழ் புத்தாண்டு இது வரலாற்று உண்மை



ஆனால் அதை கலைஞர் சொல்லிவிட்டாரே அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்

#பார்ப்பன கைக்கூலிகளும்,
போலி தமிழ் #தேசியவாதிகளும் சேர்ந்த புலம்பும் புலம்பல்

மானமுள்ள தமிழா நீ முடிவு செய் யாரையும்💪 நம்பாதே வரலாற்றை ஆய்வு செய் பிறகு நீயே சொல்ல
"தை ஒண்ணா" அல்லது
"சித்திரை ஒண்ணா" என்று



தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியே .. புது வருடத்தில் ஒரு நல்ல வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் வைக்கப்பட்டது !!! இந்த உண்மையை உணர்ந்து கலைஞர் தை ஒன்றை வருடப்பிறப்பாக மாற்றினார் !!! ஆனால் ஜெ ஆட்சிக்கு வந்து .. மீண்டும் தவறாத சித்திரை யை வருடப்பிறப்பாக மாற்றினார் ... அவர் நிலையை பார்த்தீர்களா ??? என்று மரித்தார் என்று தெரியவில்லை !!! கொலை செய்யப்பட்டாரா என்று தெரியவில்லை !!! சித்திரவதைக்கு ஆளானாரா என்றும் தெரியவில்லை !!!

இந்து மதம் அறிவியல் மதம் ப்ரூ...

இந்து மதம் அறிவியல் மதம் ப்ரூ...



சரிடா... திரேத யுகம் எத்தன வருஷம்?
12 லட்சத்தி 96 ஆயிரம் வருஷம் ப்ரு... பாருங்க. பைபிள் வெறும் 6,000 வருஷம்னு சொல்லுது. ஆனா அறிவியல் உலகம் தோன்றி கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகுதுனு சொல்லுது. அதுனால இந்துமதம் அறிவியல் மதம் ப்ரூ...
பொறுடா நாயே... வாமன அவதாரம் எந்த யுகம்?
சத்திய யுகம் ப்ரூ.
சரி. சத்திய யுகம் முடிவுல வாமன அவதாரம் வந்ததா வச்சுக்குவோம். இப்போ நாம இருக்குறது எந்த யுகம்?
கலியுகம் ப்ரூ. அதான் உங்கள மாதிரி நாத்திகர்கள் பெருகிட்டாங்க.
இப்போ திரேத யுகம், துவாபர யுகம் ரெண்டையும் சேத்து கூட்டு.
திரேத யுகம் 12,96,000 +
துவாபர யுகம் 8,64,000
= 21,60,000 வருஷம் ப்ரூ....
சரி. 20 லட்சம் வருஷம்னு வச்சுக்குவோம். அறிவியல் படி மனிதன் தோன்றி எவ்வளவு காலம் ஆகுது?
தெரியலையே ப்ரூ...
இது தெரியாமதான் நீ அறிவியல், அது இதுனு பேசுனியா? 3,00,000 ஆண்டுகள் முந்தைய படிம ஆதாரங்கள் இருக்கு. அதிக பட்சம் 5,00,000 வருடங்கள். இப்போ விஷயத்துக்கு வருவோம். எனக்கு 10,00,000 வருட பழமையான Homo sapiens எலும்பு/படிமம்/இதர ஆதாரம் ஏதாச்சும் காட்டு. நான் ஏத்துக்கிறேன்.
அது ப்ரூ... ஒவ்வொரு யுக முடிவிலையும் பிரளயம் வரும். எல்லாம் அழிஞ்சு போயிடும்.
அப்போ ஏன் ஆறு கோடி வருஷம் பழைய Tyrannosaurus rex எலும்பு கிடைக்குது?
அது யாரு பாஸ்? கிறிஸ்டின் ராஜாவா?
முண்டமே... அது டைனோசர்டா!
ப்ரூ... அது பெரிய விலங்கு ப்ரூ....
அப்போ 15 கோடி வருஷம் முன்னால வாழ்ந்த காக்கா சைஸ் archaeopteryx படிமம் கிடைச்சிருக்கு? ஏன் 10 லட்சம் வருட பழைய மனித எலும்பு கிடைக்கல?
இதெல்லாம் வெளிநாட்டுகாரன் சொல்ற கதை ப்ரூ. அறிவியல் எல்லாம் ஒரு கற்பனை ப்ரூ...
டேய்! நீதான அறிவயல் மதம்னு ஆரம்பிச்ச. இப்போ அறிவியல் கற்பனைனு சொல்ற? அப்போ உன் மதம் கற்பனையா?
ப்ரூ... நீங்க தியானம் பண்ணி மனச ஒருநிலைப் படுத்தி தேடுங்க. நான் சொல்றது புரியும்.
அப்போ அறிவியல்னு சொன்னதுக்கு ஆதாரம்?
அறிவியல் வேஸ்டு ப்ரூ.
அப்போ உன் அறிவியல் மதமும் வேஸ்டு.
உங்களுக்கு ஒரு நாள் புரியும் ப்ரூ.
ஆனா உனக்கு என்னைக்குமே புரியாது போல... பாவத்த. போய் உன் மகனோட 5-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்த வாங்கிப் படி.

Monday, December 30, 2019

காஞ்சி சங்கராச்சாரி 'தீக்குறளைச் சென்றோதோம்' எனும் திருப்பாவை வரிகளை திருக்குறளை எதிர்க்க பயன்படுத்தியது ஏன்?

காஞ்சி சங்கராச்சாரி 'தீக்குறளைச் சென்றோதோம்' எனும் திருப்பாவை வரிகளை திருக்குறளை எதிர்க்க பயன்படுத்தியது ஏன்?
Krishnan Nallaperumal, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்-இல் அறிவியற்புல முதன்மையர், மூத்த பேராசிரியர் (1992-தற்போது)
7 நவம்பர் அன்று பதில் அளிக்கப்பட்டது.
"காஞ்சி சங்கராச்சாரி 'தீக்குறளைச் சென்றோதோம்' எனும் திருப்பாவை வரிகளை திருக்குறளை எதிர்க்க பயன்படுத்தியது ஏன்?" என்ற உங்கள் வினாவின் விடையைப் புரிந்துகொள்ள, ஒரு சுருக்கமான "FLASHBACK" தேவைப்படுகிறது.
எழுத்துமுறையும், எண் முறையும் இல்லாமல், பேச்சுவழக்கில் மட்டுமே இருந்த வேதமொழியைப் பேசிக்கொண்டு வடமேற்கு இந்தியாவில் நுழைந்த ஆரியர்கள், சிந்து கங்கைச் சமவெளி தொடங்கி, இந்தியாவெங்கும் புலம் பெயர்ந்தனர்.
தொடக்க காலத்தில், அவர்களின் நாடோடி இன இலக்கியமாக வேதப்பாடல்களைச் செவி-வழியாக ஓதி, மனப்பாடம் செய்து, தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வந்தார்கள்.
ஆங்காங்கே குலம் குலமாகத் தங்கிய இடங்களில் வாழ்ந்த பண்டைய இந்திய மக்களுடன் பழகி, தங்கள் வாழ்வைத் தொடங்கினர்.
ஒரு காலத்தில், இந்தியா முழுவதும் இருந்த மக்கள் ஒரே மொழி பேசிய ஓரினம் என்பது இந்திய மொழிகள் அனைத்தும் ஒரே மொழி அமைப்பும் - Orthography, ஒரே வகை-எழுத்துமுறை-வரிசையும் - Ordering of Alphabets as Vowels, Consonants and Consonant-al Vowels கொண்டு விளங்குவதை ஆரியர்கள் நன்கு உணர்ந்து இருந்தார்கள்.
நாகரிகத்தில் பலபடிகள் முன்னேறி, எழுத்தும், எண் முறையும் கொண்ட வளர்ச்சியடைந்த மொழிகளைப் பேசிய பண்டைய இந்திய மக்கள், ஆரியர்களின் சிவந்த நிறமும், எடுப்பான ஓசையுடன் கூடிய வேத மொழியையும் கண்டு, ஏமார்ந்துவிட்டனர். ஆரியர்களை மிக மதிப்புடன் நடத்தினர்.
பண்டைய இந்திய மக்களின் ஏமாறும் தன்மையைக் கண்டுகொண்ட ஆரியர்கள் "அடிமை சிக்கிட்டாண்டா!" என்றார் வடிவேலு பாணியில், தங்களைப் 'பூசுரர்கள்' - அதாவது பூமியில் வாழும் தேவர்கள் என்றும், தாங்கள் பேசும் மொழி 'தேவபாஷை' என்றும் விட்ட கதைகளை நம்பியவர்களின் முகில் குதிரை ஏறி, ஓட்டத் தொடங்கினார்கள்.
உள்ளூர் மக்களுக்கு மழை வேண்டி யாகம், குழந்தை வேண்டி யாகம், ஆயுள் வேண்டி யாகம், பொருள் வேண்டி யாகம் என்று தங்கள் வேத வேள்வியை முழுநேரத் தொழிலாக ஆக்கிக்கொண்டு, பெரும் பணம் ஈட்டினர். உடல்-உழைப்பு இல்லாத மதிப்பான வாழ்க்கை, ஆரியர்களின் அதிகார போதையை அதிகப்படுத்தியது.
தங்கள் வேதமொழியைப் பிறர் அறியாதவாறு காக்க வேண்டும் என்று நினைத்ததால், வீட்டில் மட்டும் வேதமொழியைப் பேசினார்கள்.
பெண்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தமையால், உள்ளூர் பெண்களைத் திருமணம் செய்தனர். இதன் காரணமாக, ஆரியர்கள் பலரும் வீட்டில் உள்ளூர் மொழியையே பேச நேர்ந்தது. யாகம் செய்யும் தொழிலுக்காக, ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே வேதமொழி கற்றுத்தரப்பட்டது.
பெண்களுக்கு வேதக்கல்வி மறுக்கப்பட்டதால், வீட்டில் உள்ளூர் பிராகிருத மொழிகளே பேசப்பட்டு, காலப்போக்கில், வேதமொழி பேச்சுவழக்கில் இருந்து போய்விட்டது.
உள்ளூர் மக்களின் பிராகிருத எழுத்துமுறையை உள்வாங்கி, தங்கள் மொழிக்கு எழுத்துமுறையும், இலக்கண முறையும் உருவாக்கிக் கொண்டனர். அவற்றுக்கு பிராதி-சாக்கியங்கள் என்று பெயர்.
எனவே, வேதமொழிக்கான ஒலிப்பு ஒன்றாக இருந்தாலும், எழுத்துமுறை நாட்டுக்கு நாடு வேறுபட்டதால், காலப்போக்கில், பல வேறுபாடுகள் வேதத்தில் உருவாகின.
இவற்றை ஒன்றுபடுத்தினார் வேத வியாசர். இந்தியாவெங்கும் வாழ்ந்துவந்த ஆரியர்களுக்கு வேதம் எழுதுவதற்குப் பொதுவான எழுத்துமொழியாக, பாஷா என்ற ஏட்டு-எழுத்துமொழி உருவானது.
இந்தமொழிக்குத்தான் பாணினி 'வ்யாகரணம்' என்னும் இலக்கண நூல் எழுதினர். இதுவே பின்னாளில் சமஸ்கிருதம் ஆனது.
சமஸ்கிருதம் ஏன் எவருடைய தாய் மொழியும் இல்லை என்பது இப்போது வாசகர்களுக்குப் புரிந்திருக்கும்.
உள்ளூர்க்காரர்களை ஏமாற்றி, உடலுழைப்பு இல்லாமல் வாழும் வாழ்க்கைக்காக, வேத வேள்வி செய்த ஆரியர்கள், தொழிலுக்காகத் தாய்மொழியைத் தொலைத்துவிட்டனர். ஆரிய ஆண்களுக்குப் பொதுவான மொழியாக சமஸ்கிருதம் அன்றும், இன்றும் இருந்து வருகிறது.
எனவே, ஆரிய இனம், மாநிலத்துக்கு மாநிலம் உள்ளூர் மொழியைத் தாய்மொழியாகவும், சமஸ்கிருத மொழியை, வேள்வித் தொழிலுக்கான தந்தை மொழியாகவும் பயன்படுத்துகின்றனர்.
என்னதான் உள்ளூர் பிராகிருத மொழிகள், தாய் மொழிகளாக இருந்தாலும், ஆரிய மூதாதையருக்குச் சொந்தமான பண்டைய வேதமொழி என்னும் தாய்மொழியின் வேர்கள் சமஸ்கிருதத்தில் உள்ளதால், சமஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்துவதற்காக, பிராகிருத மொழிகளில், சம்ஸ்கிருதச் சொற்களிச் சேர்த்துப் பேசத் தொடங்கி, உள்ளூர் மொழிகளின் அடையாளத்தை அழிக்கத் தொடங்கினர்.
ஆரியர்களின் சதித்திட்டத்தை உணராத வடஇந்தியர்கள், தங்கள் மொழிகளின் மரபுச் சொற்களைப் பேணாமல், சமஸ்கிருதத்துக்குக் கொடுத்துவிட்டு, அவையே மீண்டும் சில பல மாற்றங்களுடன் சமஸ்கிருதச் சொற்களாகத் திரும்பி, அவர்தம் பிராகிருத மொழியில் சம்ஸ்கிருத அடையாளத்துடன் கலந்தன.
ஒவ்வொரு நூற்றாண்டிலும், பல சிதைவுகளை உண்டுபண்ணி, பிராகிருத மொழிகளைச் சின்னாபின்னப் படுத்தினர்.
தமிழகத்தில் ஆரியர் எண்ணிக்கை மிகக் குறைவான எண்ணிக்கையில் இருந்தமையாலும், தமிழர்களின் மொழிப் பற்றினாலும், தமிழ் மொழியை மட்டும் அவர்களால், அழிக்க முடியவில்லை.
ஆனால், தமிழுடன் வடமொழியைக் கலந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகள் உருவாகின. தமிழர்களின் எண்ணிக்கை நான்கில் ஒரு பகுதியாகக் குறைந்தது.
தனித்து இயங்க முடியாத ஏட்டுச் சுரைக்காய் சம்ஸ்கிருத மொழியைத் தமிழ் மொழியுடன் கலந்து பேசும் மொழிநடைக்கு 'மணிப் பவளம்' அல்லது 'மணிப்பிரவாளம்' என்று பெயர்.
மணிப்பிரவாளம் முற்றியதும், துஞ்சத்து இராமானுஜன் எழுத்தச்சன் (തുഞ്ചത്ത് രാമാനുജൻ എഴുത്തച്ഛൻ) என்பவர் மலையாள மொழிக்கு இலக்கணம் கிபி 16ம் நூற்றாண்டில் எழுதினர்.
இவ்வாறு, நான்கில் மூன்று பகுதி தமிழின மக்களை வடமொழி கலந்து வேற்று மொழியினராக்கிய ஆரியர்கள், தொடர்ந்து தனித்தன்மையுடன் இயங்கும் தமிழ் மொழியை எப்படியாவது சமஸ்கிருதம் கலந்து அழித்துவிடத் துடிக்கிறார்கள்.
FLASHBACK முடிந்தது! - ———————
இந்நிலையில்தான், கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஆரியப் பிராமணர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி காஞ்சி மடத்தின் தலைவரானார். சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள், ஹிந்தி, மராத்தி, வங்காளம் உள்ளிட்ட பல மொழிகளும் அறிந்தவர். மொழி இலக்கணங்கள் இவருக்கு அத்துபடி!
தமிழ் மொழியை எப்படியாவது சமஸ்கிருதப்படுத்தி, மாசுபடுத்தி, தமிழின் அடையாளத்தைஅழித்துவிடுவது என்ற சூழுரை கொண்டவர்.
சிந்தித்துப் பாருங்கள், தமிழ் மொழியிலிருந்து பிரிந்த கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளை ஏன் நீசமொழிகள் என்று ஆரியர்கள் சொல்வதில்லை?
இதற்கான விடை, மக்களால் பேசப்படும் இம்மொழிகளிலிருந்து சமஸ்கிருதச் சொற்கள் நீக்கப்பட்டால், அவை மீண்டும் தமிழாகிவிடும் என்பதால், கன்னடம் உள்ளிட்ட தென்மொழிகள் தம் தனித்தன்மையைக் காக்க, தங்கள் மொழிச் சொற்களில் சமஸ்கிருதக் கலவையைப் பாதுகாக்கவும், போற்றவும் பெருமையுடன் முற்படுகிறார்கள்.
ஆரியமொழி சமஸ்கிருதம் கலக்காமல் இயங்கும் தூய செம்மொழி பேசும் தமிழ்மொழி மக்கள், தமிழின் தனித்தன்மையைப் பாதுகாக்க, தமிழில் கலந்துள்ள ஓரிரு சமஸ்கிருதச் சொற்களையும் நீக்க முற்படுவதால், தமிழ் மொழியை மட்டுமே ஆரியர்கள் 'நீசமொழி' என்பார்கள்.
மகாப்பெரியவரின் ஆசியோடு, மத்திய அரசுகள், கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில், சமஸ்கிருதம் பேச்சுமொழியாக உள்ளது என்று தொடர்ந்து பொய்க்கணக்குக் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அக்கிராம மக்கள், பத்திரிக்கைக்காரர்கள் அந்தப் பக்கம் போனதும், கன்னடம் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள்.
என்னதான் அழகான மெழுகு பொம்மை உண்மைபோல் தோன்றினாலும், அதனுடன் குடும்பம் நடத்த முடியாதல்லவா? அப்படித்தான் சம்ஸ்கிருத மொழியில் நடைமுறை வாழ்வில் பேசுவது இயலாத காரியம்.
மகாப் பெரியவா அவர்களுடன் நெருங்கிப் பழகிய அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரியார் மகாப் பெரியவா-வின் தமிழ் வெறுப்பைப் பற்றி, அவரது இணையதளத்தில் வெளிட்டுள்ளார்.
"பூஜை வேளைகளில் 'நீசபாஷை' தமிழில் நான் பேசமாட்டேன்", என்று பெரியவா கூறியதாகவும், இச்செய்தி, காஞ்சிமடத்தில் அனைவரும் அறிந்த ஒன்று என்றும் தாத்தாச்சாரி தமது இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
காஞ்சி மகாப் பெரியவரின் போதாத காலம், பரிதிமாற்கலைஞர், தமிழ் மாமலைப் பெரியார் மறைமலையடிகள் ஆகியோர் தனித்தமிழ் இயக்கம் தொடங்கி, தமிழர்களுக்கு அவர்தம் மொழியின் தனித்தன்மை குறித்து விழிப்புணர்வு உருவாக்கினார்கள்.
"முடிந்தால் ஒழித்துவிடு! இல்லையேல் விழுங்கிவிடு!" என்பது ஆரியர்கள் இந்தியா நுழைந்ததிலிருந்து கடைப்பிடித்துவரும் ஆரிய மேலாண்மைத் தத்துவம். காஞ்சி மாமுனிவரின் கொள்கையும் அதுதான்.
தனித்தமிழ் இயக்கத்தால், 'தேவபாடை' சமஸ்கிருதச் சொற்கள் தமிழிலிருந்து பத்தாண்டு காலங்களுக்குள் ஏறத்தாழ நீக்கப்பட்டுவிட்டன. இதைப் பொறுக்க இயலாமல், புலம்பிய 'தெய்வத்தின் குரல்' உங்கள் பார்வைக்கு:
தமிழில் 'மனிதநேயம்' என்ற சொல் அறிமுகமானபோது மகாப்பெரியவா சொன்ன புலம்பல்:
"ஸமீபத்தில் `மனிதநேயம்’ என்ற ஒரு வார்த்தை உலாத்துகிறதாகப் பார்க்கிறேன். நல்ல வார்த்தைதான். காதுக்குக் கேட்கவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும் `மனிதாபிமானம்’ என்று இத்தனை நாளாகச் சொல்லி வந்ததில் `அபிமானம்’ என்ற ஸம்ஸ்கிருத வார்த்தை இருப்பது பிடிக்காமல் தான் இப்படி மாற்றியிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கும்போது பரிஹாஸமாகத்தான் இருக்கிறது!
ஏனென்றால், `நேயம்’ என்பதும் ஸம்ஸ்கிருத `ஹநேஹ’த்தின் திரிபுதான்! ஸம்ஸ்கிருதம் என்பது இலக்கண சுத்தமான பாஷை. அதையே பேச்சுக் கொச்சையாக இருக்கும்போது ப்ராக்ருதம் என்பார்கள்.
அந்த ப்ராக்ருத பாஷையில்தான் ஸம்ஸ்கிருதத்தில் உள்ள நாடகங்களில் ஸ்த்ரீகள், படிப்பில்லாதவர்கள் ஆகியவர்கள் ஸம்பாஷிப்பார்கள். அதிலே `ஸ்நேகம்’ என்றுதான் வரும்.அது போகட்டும்.
`மனிதநேயம்’ என்கிறதிலும் முதலில் மனித என்று வைத்துக் கொண்டிருக் கிறார்களே. அதுவும் ஸம்ஸ்கிருத `மநுஷ்ய’வின் திரிபுதானே?
ஒருத்தருக்கும் ஒரு ப்ரயோஜனமுமில்லாமல் இப்படியெல்லாம் வெறும் த்வேஷத்தில் செய்கிற காரியங்கள் கடைசியில் பித்துக்குளித்தனமாகத்தான் முடிகின்றன."
தமிழ்மொழியைத் தமிழர்கள் தூய்மை செய்யும்போது, இவருக்கு எப்படி பொத்துக்கொண்டு வழிகிறது பாருங்கள்!
பிராகிருத மொழிகள், தமிழ் மொழி ஆகிவற்றில் இருந்து எழுத்துமுறைகளை - Orthography கடன்வாங்கி, எழுத்துக்களை உருவாக்கிய சமஸ்கிருத மொழியின் கொச்சை வடிவம் பிராகிருத மொழியாம்! 'பேரன் பாட்டனைப் பெற்றான்' என்று 'மகாப் பெரியவா' சொன்னா ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே!
வரலாற்றுப் பேராசிரியர் ந. சுப்பிரமணியன் எழுதியுள்ள சுயசரிதையில் இவர் பற்றி இடம் பெற்றுள்ள ஒரு செய்தி தமிழின்மீது மகாப்பெரியவா கொண்ட வெறுப்பு எத்தகையதென்று வெளிப்படுத்துகின்றது.
குளித்துவிட்டு பூசை செய்து முடிக்கும்வரை இவர் தமிழில் பேச மாட்டாராம். சமஸ்கிருதத்தில்தான் பேசுவார். ஏனென்றால் தமிழ் `நீசபாசை’யாம். பூசை முடிந்தபிறகுதான் நீசபாசையில் பேசுவாராம்.
தமிழ் வழிபாட்டு மொழியாவதை எதிர்த்து வந்தவர் மகாப்பெரியவா.
தமிழர்கள் 'உலகப் பொதுமறை' என்று பெருமையுடன் அழைக்கும் தமிழ் நான்மறையாம் 'அறம், பொருள், இன்பம், வீடு' பேசும் 'திருக்குறளை' எப்படியாவது ஒழித்துவிடுவது என்பது காஞ்சி மகாப்பெரியவரின் முதல் திட்டமாயிருந்தது.
இத்திட்டத்திற்கு வரைபடம் போடுவதற்கு, முதலில் மார்கழி மாதத்தில் பெரும்பான்மைத் தமிழர்களின் வீடுகளிலும், தமிழக வைணவ, சைவத் திருக்கோயில்களிலும் மார்கழி மாதம் முழுவதும் பாடப்படும் திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்கள் பாடி, பாவை நோன்பு நோற்கும் விழாவைக் கையில் எடுத்தார் மகாப் பெரியவா.
திருக்குறளை ஒழிப்பதற்கும், திருப்பாவை-திருவெம்பாவை விழாவுக்கும் என்ன தொடர்பு என்று குழம்ப வேண்டாம். திருக்குறள் மோசமான நூல் என்று சொல்வதற்கு, திருப்பாவையில் வரும்
வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளிரோ; பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலே நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம்முடியோம்;
செய்யா தனசெய்யோம்; தீக்குறளை சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
என்னும் பாடலை, திருக்குறளுக்கு எதிராக முன்நிறுத்துவது என்பது மகாப்பெரியவரின் திட்டம்.
தமிழகமெங்கும் திருப்பாவை - திருவெம்பாவைப் பாடல்கள் திருக்கோயில்களில் பாடவும், அவை சார்ந்த மனப்பாடப் போட்டிகள், பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி ஆகியன நடத்த காஞ்சி சங்கர மடம் ஏற்பாடு செய்தது.
மகாப்பெரியவரின் அரசியல் செல்வாக்கால், இவ்விழாவைத் தமிழக அரசே இந்து அறநிலையத்துறை விழாவாக அறிவித்தது.
அப்படி நடந்த அரசுவிழாவில்தான் மகாப்பெரியவாவின் 'தெய்வத்தின் குரலாகத் திருவாய் மலர்ந்து' ("அது வேற வாய்; இது . . .வாய்" என்ற வடிவேல் காமெடி உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்லன்!) திருக்குறளுக்கு எதிராக 'தம் பிரம்மாஸ்திரமாக திருப்பாவைப் பாடல் விளக்கத்தைப் பொதுமேடையில் பேசினார்.
"திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளே இருக்கின்றன. வீடு என்பது இல்லை. நாற்பொருளைக் குறிப்பிடாத திருக்குறளை ஓதக் கூடாதென்ற பொருளில் தான் `தீக்குறள்’ என்று ஆண்டாள் நாச்சியார் குறிப்பிட்டுள்ளார்", என்ற புதிய விளக்கத்தை திருக்குறளுக்கு எதிராகச் சொன்னார் சங்கராச்சாரியார் மகாப்பெரியவா!!!
"பெரியவா சொன்னா பெருமாளே சொன்ன மாதிரி!" என்று தமிழர்களிடையே ஒரு சொல் வழக்கு உண்டு.
அப்படியிருக்க, "மகாப்பெரியவா சொன்னா பெருமாளே விஸ்வரூபம் எடுத்துச் சொன்ன மாதிரி!" என்று தம் 'தெய்வத்தின் குரல்' மக்களிடம் பரவி, திருக்குறள் ஒரே அடியாக மக்கள் மனதிலிருந்து ஒழிந்துவிடும் என்பது காஞ்சி மகாப்பெரியவா-வின் கணக்காக இருந்தது.
ஆனால், நடந்ததோ அவர் நினைத்ததற்குத் தலைகீழாக! குமுதம் நாளிதழ் மகாப்பெரியவா சொன்னதை சிறப்புச் செய்தியாக வெளியிட்டு, செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டது.
மகாப்பெரியவரின் திருக்குறளுக்கு எதிரான கருத்துக்கு, தமிழகமெங்கும் கண்டனக் கூட்டங்கள், எதிர்ப்புக் குரல்கள் என திமிலோகப்பட்டது. மகாப்பெரியவா-வின் கருத்துக்கு எதிராக எழுந்த வைணவர்களின் எதிர்ப்புக்குரல்கள் மிகக்கடுமையாக இருந்தன. குமுதம் 'வருத்தம்' தெரிவித்தது.
மகாப்பெரியவா தன்னிலை விளக்கமாக, ஒரு 'சப்பைக்கட்டு' சொல்லி, சமாளித்தார். ஆனால், வருத்தம் தெரிவிக்கவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்ட ஒன்றுக்காக அவர் ஏன் வருத்தப்பட வேண்டும்? திட்டம் 'பணால்' ஆனதற்கு கட்டாயம் வருத்தப்பட்டிருப்பார்.
'முடிந்தால் ஒழித்துவிடு!" என்ற ஆரிய முதல் ஆயுதத்தை ஏவிய , மகாப்பெரியவா செய்த வலக்காரங்கள்(தந்திரங்கள் என்பதன் தமிழ்) பலன் தரவில்லை.
இனி, "இல்லையேல் விழுங்கிவிடு!" என்ற அடுத்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார் மகாப் பெரியவா. அதுதான், திருக்குறளை ஆரிய சாஸ்திரங்களின் சுருங்கிய வடிவம் என்று பரப்புரை செய்து, திருக்குறள் ஆரிய நூலே என்று நிறுவுவது!
பெரியவா காலத்தில், தமிழ்ப் பேராசியர்களில் பல பல ஆரியக் கைக்கூலிகள், நான், நீ என்று போட்டி போட்டுகொண்டு எழுதித் தள்ளினார்கள். காலம் அவற்றைக் குப்பை கூடைகளில் கொண்டு சேர்த்தது.
சமீபத்தில், தமிழகத் தொல்லியல் துறையில் இயக்குனராகப் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற திரு.நாகசாமி என்ற ஆரியப் பார்ப்பனர் 'Tirukkural - An Abridgement of Sastras" என்ற தலைப்பில், தப்பும், தவறுமான ஆங்கிலத்தில் உளறிக் கொட்டி, ஒரு நூல் எழுதி, வெளியிட்டார்.
அந்த விழாவில்தான், 'மகாப்பெரியவா'-வின் இடத்தில் இன்று அமர்ந்திருக்கும் முன்னாளைய 'பாலப்பெரியவா', தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமரியாதை செய்தார் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்.
ஆரியர்கள் வேதாளம்-விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளங்கள்! மீண்டும் மீண்டும் தமிழை அழிக்க ஏதாவது ஒரு வடிவில் அவதாரங்கள் எடுப்பார்கள்.
பண்பாட்டு அளவில், ஆரியர்கள் "அழிக்கவும் இயலாமல், விழுங்கவும் இயலாமல்" தவிக்கும் திருக்குறளும், செம்மொழி தமிழும் அவர்களை உலகம் உள்ளவரை உறங்க விடாது என்பது உறுதி!
——————
அன்பர் பத்ரிநாத் பக்தவத்சலம் அவர்கள் என்னிடம் 'ஆண்டாள் நாச்சியார்' அன்னையின் திருப்பாவை குறித்த ஒரு விளக்கம் கேட்டிருந்தார். அனைவருக்கும் பயன்படும் என்பதால், இங்கு தருகிறேன்:
ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒருவராக அவதரித்த தாயார் ஆண்டாள் நாச்சியார் இறைப்பணியில் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட சூடிக்கொடுத்த சுடர்க்கொடி நாச்சியார்.
'ஆண்டாள் நாச்சியார்' உலகத்துக்கே தாயார்! அன்னையார் 'தீக்குறளை' என்று சொன்னதன் பொருள் 'தீய கோள்கள் சொல்ல மாட்டோம், அதாவது புறம் பேசுதல் செய்ய மாட்டோம்' என்பதுதான்.
'மகாப்பெரியவா' தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள, 'தீய குறள்' என்று வேண்டுமென்றே திரித்துக் கூறிவிட்டார்.
சங்கராச்சாரியாரின் இப்பொருள் திரிப்புக் கருத்துக்கு, வைணவப் பெருமக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
உங்கள் ஐயம் சரிதான்.
வைணவப் பெருமக்கள் ஆழ்வார்களின் தமிழ்ப் பாசுரங்களுக்கே முதல் வழிபாடு செய்யும் தமிழ் மொழிப் பற்றாளர்கள்.
அன்னை ஆண்டாள் நாச்சியார் சொன்ன திருப்பாவை 'சங்கத் தமிழ் முப்பதும்' என்று நாச்சியாரின் திருவாய் மொழியே அருளி உள்ளதைக் காணுங்கள்!
அன்னை ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற இரண்டு திருப்பாசுரத் தொகுதிகளிலும் 'பிராமணர்' என்ற சொல்லை எங்குமே பயன்படுத்தவில்லை.
தாயார் தம்மைக் குறிக்க, 'பட்டர்பிரான் கோதை' மற்றும், 'விட்டுசித்தன் கோதை' என்ற இரண்டு அடைமொழிகளால் மட்டுமே குறித்துள்ளார் என்பது இங்கு அனைவரும் உற்றுக் கவனிக்க வேண்டிய ஒன்று.