Sunday, September 04, 2022

பிரபல தீஸிஸ் திருடனின் பிறந்தநாள் ஆசிரியர் தினமா.!?

 பிரபல தீஸிஸ் திருடனின் பிறந்தநாள் 

ஆசிரியர்_தினமா.!? 


ஜாதுநாத் சின்ஹா கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1915ல் இளங்கலை தத்துவவியல் முடித்து, புகழ்பெற்ற ஃபிலிப் சேமுயல் ஸ்மித் மற்றும் க்ளின்ட் நினைவு பரிசுகளையும் வென்று, 1917ல் முதுகலையும் முடிக்கிறார். உடனடியாக கல்கத்தா ரிப்பன் கல்லூரியில் தத்துவவியல் துறை துணை பேராசிரியராக தேர்வாகி பணி செய்கிறார் 


கல்கத்தா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பிரேம்சந்த் ராய்சந்த் மாணவர் கல்வி உதவித்தொகைக்காக 1922ம் ஆண்டு, “இந்திய உளவியல் ஞானம்” என்ற தலைப்பில் தொகுதி 1 மற்றும் 2 என்ற இரண்டு ஆராய்ச்சி ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்க தொடங்குகிறார். அதற்கு தேர்வாளராக பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்படுகிறார். ஆராய்ச்சியின் ஒவ்வொரு வகுப்பீடும் தேர்வாளர் பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனிடம் சமர்பிக்கப்படுகிறது. 1923ம் ஆண்டு ஜாதுநாத் சின்ஹாவுக்கு புகழ்பெற்ற க்ரிஃப்ஃபித் பரிசும் மௌஅத் பதக்கமும் வழங்கப்படுகிறது. 1925ல் ஆராய்ச்சியின் முழு அறிக்கையும் சமர்பிக்கப்படுகிறது. இதற்கிடையில் ஜாதுநாத் சின்ஹா தனது ஆராய்ச்சி ஆய்வறிக்கையின் சாறுகளை மீரட் கல்லூரி இதழில் 1924 மற்றும் 1926ம் ஆண்டுகளில் வெளியிடுகிறார். 


ஜாதுநாத் சின்ஹாவினுடைய ஆராய்ச்சி ஆய்வறிக்கையின் பெரும்பகுதியை திருடி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தனது இந்திய தத்துவம் புத்தகத்தின் இரண்டாம் தொகுதியில் பதிந்து வெளியிட்டிருப்பதை நவம்பர் 1928ல் கண்டுபிடிக்கப்பட்டது.


சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் இந்த பதிப்புரிமை மீறல் தொடர்பாக, 20.12.1928 தேதியிட்ட புகார் கடிதம் ஒன்றை மாடர்ன் ரிவ்யூவ் இதழுக்கு அனுப்புகிறார் ஜாதுநாத். 1929 பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மாதங்களில் மீண்டும் புகார் கடிதங்களை அனுப்புகிறார். அவை அதே இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவை பலனிக்காதததால், 1929 ஆகஸ்ட் மாதம், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் மீது தனது ஆராய்ச்சி ஆய்வறிக்கையை திருடிவிட்டதாக, கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்குகிறார் ஜாதுநாத்.


சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் நடவடிக்கையால் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் மானம் கப்பலேறுவதை சகிக்க முடியாமல், சக பேராசிரியர்களின் துணையோடு, நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு பேச்சுவார்த்தை நடத்தி மே 1933ல் வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. 


பிறகு 1952ல் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், தனது பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி, 1954ல் பாரத ரத்னா விருதையும் வாங்கிக் கொண்டார். 


பின்பு 13.05.1962ல் இந்திய ஜனாதிபதியாக பதவியேற்ற சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், அதன் பிறகு வந்த தனது பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாட அவரே வற்புறுத்தினார். அதன் விளைவாக 05.09.1962ம் ஆண்டு முதன்முதலாக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. 


இப்படி தனது மாணவனின் ஆராய்ச்சி அறிக்கையைத் திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு, பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி பாரத ரத்னா விருது வாங்கிய சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுவது வரலாற்றுப் பிழை


நியாயமாக பார்த்தால் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரிபாய் பூலேவின் பிறந்தநாளான ஜனவரி 3 தான் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட வேண்டும்.

Tuesday, June 14, 2022

Marshall நேசமணி

 "1810 வரை தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட, சேரர் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம், அதன் பிறகு, சனாதன தர்மத்தை கொள்கையாகக் கொண்ட சமஸ்கிருத மலையாள மன்னராட்சியின் கட்டுப்பாட்டுக்கு சென்றது.
ஏறத்தாழ 146 ஆண்டுகள் இந்நிலப்பரப்பு அடிமைப்பட்டுக் கிடந்தது. தீண்டாமை, காணாமை, தோள் சீலை அணியும் உரிமை மறுப்பு, கோவிலுக்குள் நுழையத் தடை, தலைப்பாகை அணியக்கூடாது, நல்ல பெயர்களை சூட்டக் கூடாது, வரிச்சுமை.. இன்னும் பற்பல அடக்குமுறைகள் தமிழ் குலத்தினர் மீது ஏவப்பட்டது!!

கன்னியாகுமரி தமிழர்கள் மீண்டும் தமிழ்நாட்டுடன் சேராமல் இருக்க சமஸ்கிருத மலையாள ஆட்சியாளர்கள், இந்நிலப்பரப்பை மலையாளமயமாக்கினர்; தமிழ் கற்கும் உரிமை மறுக்கப்பட்டது. தமிழர்களை அடக்கி ஒடுக்கினர். 1948 - 1956 காலகட்டத்தில், மொழி வழியில் மாநிலங்களை பிரிக்க இந்திய அரசு ஆய்வு நடத்திய போது, கேரளத்தோடு குமரி மாவட்டத்தை சேர்க்க அரசு முடிவு செய்தது. இவற்றையெல்லாம் எதிர்த்து, தமிழர்கள் வீறுகொண்டு எழுந்து நடத்திய போராட்டமே, தெற்கெல்லை விடுதலைப் போராட்டமாகும்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடைபெற்ற வீரஞ்செறிந்த போராட்டங்களில் பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் 36 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் நாடார் சமூகத்தினர். காவல்துறையின் கொடூரமான தாக்குதல்களில், நூற்றுக்கணக்கானோர் உடல் ஊனமுற்றனர். எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தாலும், தமிழ்நாட்டோடு இணைந்தே தீருவது என்ற மன உறுதியோடு மக்கள் போராடினர்.

போராடிய மக்களின் தலைவராக இருந்து வழிநடத்தியவர் தான் குமரித் தந்தை Marshall நேசமணி. வர்ணாஸ்ரமதர்மத்தால் ஒடுக்கப்பட்ட நாடார் சமூகத்தில் பிறந்தவர். வழக்கறிஞரான இவர், நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில், ஆதிக்க ஜாதி வழக்கறிஞர்களுக்கும் ஒடுக்கப்பட்ட வக்கீல்களுக்கும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த குடிநீர்ப் பானையை உடைத்து, அனைவருக்கும் பொதுவான ஒரே பானையை வைத்தவர்.

தான் நீதிமன்றம் சென்ற முதல் நாளன்றே,  ஒடுக்கப்பட்டடோருக்கு (நாடார், தேவர், பறையர், முக்குவர், ஈழவர், புலையர்......), தீண்டாமை காரணங்களுக்காக போடப்பட்டிருந்த "தனி" ஸ்டூலை காலால் உதைத்துத் தள்ளிவிட்டு, நாற்காலியில் உட்கார்ந்தவர். தமிழர்களை ஒன்றுதிரட்டி, அரசுக்கு எதிராக பல கிளர்ச்சிகளை முன்னின்று நடத்தியவர். அதேபோல,  தாய்மொழிக்கல்வி மறுக்கப்பட்ட தமிழர்களின் மொழி உணர்வுக்கும் விழிப்புணர்வுக்கும் எழுச்சிக்கும், வேளாளர்கள் முன்னெடுத்த தமிழ் சங்கங்களும், கருத்தரங்குகளும் பெரிதும் பயன்பட்டன.

துப்பாக்கி சூடுகள், தடியடிகள்,  ஆதிக்கவாதிகளின் அரிவாள் வெட்டுக்கள், சொத்து பறிப்புகள், தியாகங்கள், உயிரிழப்புகள் ஒருபுறம் அதிகரித்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், பலகட்ட போராட்டங்கள் நடந்தன‌.  "வீட்டுக்கு ஒரு தமிழன், நாட்டை காக்க புறப்படு" என்று நேசமணி முழங்கினார். ஒரு கட்டத்துக்கு மேல், இந்திய அரசால் போராட்டங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால், வேறு வழியில்லாமல், விருப்பம் இல்லாமல், கன்னியாகுமரி மாவட்டத்தையும், தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை தாலுகாவையும், தமிழ்நாட்டோடு இணைத்தது அரசு. (1956)

நேசமணி எழுதிய நூல்கள்:
1. Inside Travancore, Tamil Nadu
2. Rule of Steel and Fire in Travancore Cochin
3. "திங்கள்" என்ற இதழையும் நடத்தினார்.

தன் இறுதிக் காலத்தில், Church of South India (CSI) - கன்னியாகுமரி மறைமாவட்ட துணைத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து மறைந்தார். (1968). மன்னராட்சியில் ஜாதிகளால் பிளவுபட்டிருந்த, பிளவுபடுத்தி வைக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி தமிழர்கள் (நாடார், மீனவர், பறையர், வேளாளர்,  ....), மொழி & பண்பாட்டின் அடிப்படையில், ஒன்று திரண்டெழுந்த வீரவரலாற்றுக்கு சொந்தக்காரரான Marshall நேசமணியின் பிறந்தநாள் இன்று ⚔️⚔️⚔️"

படி..படி..படி...

 படி..படி..படி...
படிக்காம ஜெயிச்சவன் ஒருத்தர் இரண்டுபேர காட்டலாம் படிச்சு ஜெயிச்சவன் லட்சம் பேர என்னால காட்டமுடியும் .. படிக்காம ஜெயிக்கலாம் அப்படி எவனாவது சொன்னா நம்பாதே ..
இவர்களெல்லாம் முன்னேறுகிறார்களே என்ற எரிச்சலில்  தவறான பாதையை காட்டும் சூழ்ச்சி ..
தமிழ்நாட்டின் தலைவன்
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்

M. K. Stalin
Chief Minister of Tamil Nadu
..
ஆம்
படிக்காம விவசாயம், பண்ணு ஆடு வளர்க்க போ.. லட்சம் லட்சமா சம்பாதிக்கலாம் .. IPS வேலைய ராஜினாமா பண்ணிட்டு ஆடு வளர்த்தேன்  என படிக்க  நினைக்கிறவன் மனதில் விசத்தை விதைக்கிற "பசுமைவிகடன்" விவசாயம் பண்ணி கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இன்ஜினியர் என மயக்கும் வார்த்தைகளை நம்பாமல் படியுங்கள் .. படிப்பு மட்டுமே ஒருவனின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் ..
..
எங்கே படிச்சு மேல வந்துடுவானோ என்கிற அச்சம் பன்நெடுங்காலமாய் கல்வி மறுக்கபட்டவன் உயரத்தை நோக்கி வரும் போது அவனை திசைமாற்றும் சதி.. அதை நம்பாமல் கல்வி ஒன்றே குறையாத செல்வம் .. எப்படியாவது படித்துவிடு என முதலமைச்சர் கவலைக்கொள்கிறார் .. எக்கேடுகெட்டால் என்ன மாட்டு மூத்திரமும் புல்டோசரும் முஸ்லிம்களும் இருக்கும் வரை நம்மை அசைக்கமுடியாதென மக்களை மடையர்களாக வைத்திருக்க நினைக்கும் காலத்தில் படி என்கிறார் திராவிட மாடல் முதல்வர் ..
..
காலையில படி மாலையில விளையாடு என பாரதி பாட்டை பாடமாக்கி அவர்கள் மட்டும் எல்லா நேரமும் படித்துக்கொண்டிருக்க பாவேந்தர் தான்
"காலையில் படி - கடும்பகல் படி
மாலை இரவு பொருள்படும்படி
கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டுமப்படி
கல்லாதவர் வாழ்வதெப்படி"..
படி படி படி என பாடினார் ..
..
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் தான் திராவிடத் தலைவர்கள் படித்த சமுதாயம் உருவாக வேண்டுமென பாடுபட்டார்கள், பாடுபடுகிறார்கள் ..  
மிக முக்கியமான காலகட்டத்தில்
வரலாற்றை மாற்றி எழுத துடிக்கும் சனாதனசக்திகள், தமிழகத்தின் விடுதலை வரலாற்றை கூட மறைக்க முயலும் பாசிச சக்திகள், சாதிமத துவேசத்தை எளிதாக நம்மிடையே கடத்த முயலும் இக்காலகட்டத்தில் .. மிகப்பெரிய மாற்றம் என்ற பெயரில் பொய்புரட்டு புராணத்தை புகழ்ந்து கல்வியில் திணிக்க முயலும் வேளையில், எதையும் ஆய்ந்தறிந்து சரியானதை தேர்வு செய்து மாணவச் செல்வங்களின் நெஞ்சில் நல்லதை விதைக்க சரியானவரிடம் அதிகாரம் வந்திருப்பதும் அதை அவர் மிக சாதூர்யமாக கையாள்வதும் மகிழ்வை தருகிறது "எண்ணும் எழுத்தும்"..
..
இந்திய ஒன்றிய அரசு (எல்லாமாநிலத்திற்கும்) ஒதுக்கியதை விட அதிகமாக நிதியை ஒதுக்கி வலுவான கல்வி கட்டமைப்பை தருகிறார் .. நம் பிள்ளைகளை படிக்க வைக்கவேண்டும்..
ஆம் அப்போது தான் இச் சமூகத்தில்
 சிறந்தவர்களாக பண்பாளர்களாக, நல்லொழுக்கமுள்ளவர்களாக, சாதிமதவெறியெனும் சாக்கடையில் மூழ்காமல் எதையும் அறிவுக் கொண்டு சிந்திக்கும் நல்லவர்களாக உருவாக்குவோம் ..
..
நல்லதை விதைப்போம்
வருங்காலம்  நன்மையே பயக்கும்

லார்டு மெக்காலே வை பார்ப்பனர்கள் வில்லனாக சித்தரிப்பதன் காரணம் என்ன?

 “1813 துவங்கி 1833 வரை கிழக்கிந்திய கம்பனி, இந்தியாவில் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்காக, வருடம் தோறும் வழங்கிய ஒரு லட்சம் ரூபாய் மானியம் என்ன ஆயிற்று? என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற குழு ஆய்வு நடத்தியது.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, 20 லட்சம் ரூபாய் என்றால் இன்றைய மதிப்பில் எத்தனை பில்லியன் என்று பாருங்கள்!

அவ்வளவு பணமும் இந்திய பொதுமக்களுக்கு போய் சேரவில்லை. கல்வியோ, பொது அறிவோ, முக்கியமாக அறிவியலோ வளரவே இல்லை. அந்த இருபது லட்சத்தையும் வேத பாட சாலை நடத்தி சமஸ்கிருதம் வளர்க்கவும், மதராசாவில் அரபி கற்பிக்கவும் தான் செலவாயிற்று என்று தெரிய வந்தபோது அது பிரிட்டிஷாருக்கு அதிருப்தியைத் தந்தது.

காரணம்
பிரிட்டனில் கல்வி என்பது மதசார்பற்றது,
எல்லா மனிதருக்கும் பொதுவானது,
முக்கியமாய் பிரிட்டனில் பெண்களும் படிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

ஆனால்
//இந்தியாவில் பெண்களை விடுங்கள், பிராமணரைத் தவிற வேறு எந்த வர்ணத்தை சேர்ந்த ஆண்களுமே கல்வி‌ கற்கவே கூடாது என்கிற விதி இருந்தது//

இந்தியாவின் இந்த விசித்திரமான வழக்கத்தை ஆய்வு செய்யும் பணி தாமஸ் பாபிங்டன் மெக்கலே எனும் ஆங்கேலேய அதிகாரிக்கு வழங்கப்பட்டது.

யார் இந்த தாமஸ் மெக்கலே?

அவர் ஒரு எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர், பல மொழி வித்தகர், அடிமை முறைக்கு எதிரானவர், முற்போக்கு கருத்தளர்,  பெண்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என்கிற கொள்கை உடைய பிரிட்டிஷ் அதிகாரி.

இந்த லார்ட் மெக்கலே இந்தியாவிற்கு விஜயம் ஆனார். சமஸ்கிருதமும் பர்ஷியனும் கற்றுக்கொண்டார்.  அவருக்கு ஏற்கனவே கிரேக்கமும், லத்தீனும் அத்துப்படி என்பதால், அதே வேர் சொற்களை கொண்ட சமஸ்கிருதம் அவருக்கு எளிதில் புரிந்துபோனது.

அவருடைய ஆழமான ஆய்விற்கு பிறகு, 1835 ல் “இந்தியாவில் கல்வி” எனும் அவருடைய குறிப்புக்களை வெளியிட்டார். இந்த
Minutes  on Indian Education எனும் உரை, பிறகு Macaulay's Minutes என்று பிரசித்தி பெற்றது.

அதில் மெக்காலே சொன்னது என்னவென்றால்?

1. சம்ஸ்கிருத நூல்களில் இருக்கும் குறிப்புகளை அனைத்தையும் ஒன்று திரட்டிப்பார்த்தாலும்,
அவை பிரிட்டிஷ் ஆரம்ப கல்வி நூல்களை விட குறைவான தகவலே கொண்டுள்ளன.

2. இந்தியாவில் இது வரை சமஸ்கிருதத்திலும் அரபிக்கிலும் கற்பிக்கப்பட்டு வந்த பாடங்கள் அறிவியலுக்கு உகந்ததாக இல்லை

3. இந்தியர்கள் இதனாலேயே பிற்போக்கான, காட்டுமிராண்டித்தனமான மூடநம்பிக்கைகளை பின்பற்றுகிறார்கள்

4. அதனால் இந்திய மொழிகளில் பாடம் நடத்துவது வீண் செலவு.  அது அனைவருக்கும் போய் சேரவில்லை.

மெக்காலேவின் எண்ணம்
“எல்லோருக்கும் கல்வியில் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும்,
இந்தியர்கள் அனைவரும் வெளித்தோற்றத்தில் பழுப்பு நிறத்தவராய் இருந்தாலும், எண்ணத்திலும் நாகரீகத்திலும், நேர்த்தியிலும், ரசனையிலும் பிரிட்டிஷாரை போல முற்போக்காய் இருக்க வேண்டும்,
சமத்துவ நிலையை அடைய வேண்டும்,
அதற்கு ஆகும் செலவை மனிதாபிமான அடிப்படையில் பிரிட்டிஷ் அரசே மேற்கொள்ள வேண்டும்”
என்றார்.

//சில பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இது ஆபத்தான போக்காக தோன்றிற்று. இந்தியர்களை தமக்கு சமமான நாகரீக நிலைக்கு கொண்டு வர முயல்வது வேண்டாத வீண் செலவு என்றே அவர்கள் நினைத்தார்கள்//

ஆனால்
*தாமஸ் மெக்கலே பிரிட்டிஷ் வரலாற்று நூல் எழுதியவர் என்பதால் அரச குடும்பத்திற்கு நெருக்கமானவர்.  மிக சிறந்த அறிஞர், நாணயமிக்கவர், மனிதாபிமானி, அப்பழுக்கற்ற அறச்சிந்தனையாளர் என்பதால் யாராலும் அவரை நேரடியாக எதிர்க்கமுடியவில்லை*

இதற்கு இடையில் 1833 ல் இந்தியாவில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அது வரை சில பிரெசிடென்சிகளை மட்டுமே ஆண்டுவந்த கிழக்கிந்திய கம்பெனிக்கு
ஒட்டுமொத்த இந்திய நிலபரப்பை ஆளும் அதிகாரம் அளிக்கப்பட்டது.

லார்ட் வில்லியம் பெண்டிங் ஒருங்கிணைந்த இந்திய பிரதேசத்தின் முதல் கவர்னர் ஜெனரலான பொறுப்பேற்றார்.

அவர் பொறுப்பேற்ற பிறகு இயற்றிய முதல் சட்டம்:

பெங்கால் சதி தடை சட்டம்.

ஆங்கிலேயருக்கு இந்தியாவில் ரொம்பவே பிடிக்காத காட்டுமிராண்டுத்தனம் ஒன்று உண்டு என்றால் அது “சதி ஏறுதல்” எனும் மிகவும் கொடூரமான சம்பிரதாயம்.

இங்கிலாந்தில் கணவன் இறந்துவிட்டால்,
மனைவி விரும்பினால் மறுமணம்  செய்து கொள்ளலாம். அல்லது தனி பெண்ணாய் தன் பிள்ளை குட்டியை வளர்த்து ஆளாக்கி சுயமாய் வாழலாம்.

ஆனால் இந்தியாவிலோ கணவன் இறந்தால்,
அதற்கு மேல் பெண்ணுக்கு மறுமணம் செய்தாரில்லை. அந்த பெண்ணை சுயமாக வாழ விட்டாரும் இல்லை. அந்த பெண், கணவனின் சிதையில் தானும் குதித்து செத்தே ஆக வேண்டும் என்பதை கட்டாயமாக்கி இருந்தார்கள்.

பிள்ளைகுட்டி இருக்கிற பெண், இப்படி பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டு சதியில் குதிப்பதில் என்ன லாஜிக் இருக்கிறது?  
அந்தப் பெண் உயிரோடு இருந்தால் தானே அவள் குழந்தைகளுக்கு அனுகூலம்!  
அப்போது தானே அவள் மரபணுக்களுக்கு லாபம். அவள் கணவனுடைய மரபணுக்களுக்கும் லாபம்.

இதை விட்டுவிட்டு ஆரோக்கியமான ஓர் இளம் பெண் இறந்து போவதில் யாருக்கு என்ன லாபம் இருக்க முடியும்??

ஆனால் லாபம் இருப்பதாகவே இந்தியர்கள் நம்புவிக்கப்பட்டார்கள்!
என்ன லாபம் தெரியுமா?
கணவன் அவனுடைய ஈரேழு ஜென்மங்களில் செய்த அத்தனை பாவமும் போய்,
அடுத்த ஜென்மத்தில் புனித க்ஷேத்ரமான காசியில், புனித நதியான கங்கையின் கரையில், புண்ணியாத்மாவான பிராமணனாக பிறக்கும் நல்வாய்ப்பை பெறுவான்.
அதனால் தன் கணவனுக்கு இந்த பாக்கியம் கிடைக்க வேண்டி கற்பில் சிறந்த பெண்கள் உடன்கட்டை ஏறுவது அவசியம்!!

அந்த பெண்ணுக்கு வலிக்குமே?
ஆங்! உண்மையான கற்புக்கரசிக்கு வலிக்காது! எல்லாருக்கும் கிடைக்குமா இந்த பாக்கியம்!  அதுக்கெல்லாம் கொடுப்பனை வேண்டும்!....
என்று சொல்லி,
அழகு போட்டி என்று சொல்லி பெண்களை அரைநிர்வாணமாய் நிற்க வைத்து ஆண்கள் கண்களாலேயே வேட்டையாடுவது போல, கற்புக்கரசிக்கான போட்டி- கற்புள்ளவளுக்கு வலிக்காது என்று கதைகட்டி விட்டார்கள் கருட புராணம் எழுதிய பிராமணர்கள்.

இந்த கதைகளை எல்லாம் இந்தியாவில் படிப்பறிவில்லாத முட்டாள்கள் நம்பி, ஷத்திரிய பெண்களையும், வைஷிய பெண்களையும் மானாவாரியாக உடன்கட்டை ஏற்றி கொன்றுவிட்டார்கள்!

ஆனால் சூத்திர பெண்கள் அதிகமாக உடன்கட்டை ஏறவில்லை. காரணம் சூத்திர பெண்கள் வேலைக்கு போனார்கள். அவர்கள் ஊதியம் ஈட்டினார்கள்.
உழவு, நெசவு, கொசவு, பூ தொடுத்தல், அரண்மனையில் வேலை செய்வது என்று சூத்திர பெண்கள் குடும்பத்திற்கு தங்கள் வருவாயை கொண்டு வந்ததால், அவர்களை யாரும் உடன்கட்டை ஏற்ற தயாராக இல்லை.

பிராமண, ஷத்திரிய, வைஷிய பெண்கள் வீட்டு வாசற்படியை தாண்டாமல், பொருளாதாரத்தில் பங்கே எடுக்காமல் இருந்ததால், அவர்களுக்கு சமூக மதிப்பு இல்லை. அதனால் அந்த பெண் சதி ஏறி செத்தால், அவளுடைய பிள்ளைகளை தவிற வேறு யாருக்கும் எந்த இழப்பும் தெரிந்திருக்கவில்லை.

இந்தியர்கள் இந்த கருட புராண பொய்களை நம்பி இப்படி இளம் பெண்களை கொல்வதை பார்த்த ஆங்கிலேயருக்கு அறச்சீற்றம் பீறிட்டது.
அவர்களுக்கு கங்கை புனித நதி இல்லை,
காசி புனித தளம் இல்லை,
ஈரேழு ஜென்மம் எனும் நம்பிக்கை இல்லை.
பிராமணர் உயர்ந்தவர் என்றோ,
பிராமணருக்கு தக்‌ஷனை கொடுத்தால் தான் புண்ணியம் என்றோ அவர்கள் நம்பவில்லை.

//பிராமணர் எழுதிய சமஸ்கிருத நூல்கள் பலதை அவர்கள் படித்தார்கள். அந்த நூல்களில் இருந்த அப்பட்டமான சுயநலமும், தந்திரமும், ஏமாற்றுத்தனமும் அவர்களுக்கு அருவருப்பாக இருந்தது//

இந்த சமஸ்கிருதம் வளர்க்க நாம் வேறு இருபது ஆண்டுகளாக மானியம் வழங்கி ஏமாந்திருக்கிறோமே என்கிற காட்டம்!

சதியை தடை செய்யும் சட்டத்தை இயற்றிய கையோடு, லார்ட் மெக்கலேவின் அறிவுரையின் படி,
அடுத்த அதிரடி சட்டத்தை இயற்றினார் லார்ட் பெண்டிங்:

//இனி பிரிட்டிஷ் இந்தியா முழுக்க,
ஆங்கிலமே கல்விக்கான மொழி!
ஒரே ஒரு சாராருக்கான சமஸ்கிருதத்தை இனி ஊக்குவிப்பதில்லை, எனும் ஆங்கிலவழி கல்வி சட்டம் 1835 முதல் அமலானது//

இதனோடு, நீதி துறையின் அலுவல் மொழியாக அது வரை இருந்த அரபிக்கை நீக்கி, ஆங்கிலத்தையே சட்ட துறையின் அலுவல் மொழியாக அறிவித்தார்.

குருகுலம், வேத பாட சாலை, மதார்சா எனும்
மத கல்விக்கு அதற்கு மேல் பிரிட்டிஷ் காசு
செல்வழிக்காமல், நேரடியாக பொதுமக்கள் பயன்பெறும் விதமாய், பிரிட்டிஷ் தரத்தோடு, பிரிட்டனில் இருக்கும் அதே பாட திட்டத்தோடு இந்தியாவில் பள்ளிக்கூடங்கள் ஆரம்பித்தார்கள்.

ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல், அறம், உடல் பயிற்சி என்று சர்வதேச தரம் வாய்ந்த கல்வி இந்தியர்களுக்கு இலவசமாய் கிடைக்க ஆரம்பித்தது.

1835 ல் கல்கத்தாவில் ஒரு மருத்துவ கல்லூரி,
அடுத்த ஆண்டே கல்கத்தாவில் பொது நூலகம்,
1847ல் ரூர்கியில் இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி.
1848டில் கல்கத்தாவில் பெண்களுக்கான பிரத்தியேக தனிப்பள்ளி

1835 முதல் ஆங்கில பள்ளிகளில் கற்றுந்தேர்ந்த மாணவர் கல்லூரிக்கு போக வேண்டுமே?
அதனால் 1858 ல் கல்கத்தா, சென்னை, மும்பாய் ஆகிய நகரங்களில் பல்கலைகழகங்கள் துவக்க பட்டன.....

//இரண்டாயிரம் ஆண்டுக்கால இடைவெளிக்கு பிறகு இந்தியர்களுக்கு கல்வி எனும் ஆயுதம் கிடைத்தது//

இப்போது சொல்லுங்கள்,
இத்தனைக்கும் காரணமான அந்த தாம்ஸ் பாபிங்டன் மெக்காலே ஹீரோவா வில்லனா?”
Lord Macaulay, சரசுவதி & Statistics*

நவராத்திரி விழா முடிவில் சரசுவதி பூசையும் சேர்த்து கொண்டாடப்படும். எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் மிகவும் பக்தியுடன்  கல்விக்கான கடவுள் என்று குறிப்பிட்டு சரசுவதியை கும்பிடுவார்கள். இந்த வழிபாடுகளில்  முதன்மையான பங்கு வகிப்பவர்கள் பெண்கள்.

ஆம்
சரசுவதி கல்விக்கடவுள்.
அதிலும் பெண் கடவுள்.
இதுவெல்லாம் புராணங்கள் நமக்கு கூறும் செய்திகள்.

கல்விக்கடவுள் பெண். எனவே கல்வியைக் கற்பித்தலில் பெண்களுக்கு முன்னுரிமை தந்து அவர்களின் சமூக மேம்பாட்டிற்கு துணை நிற்க வேண்டியவர் சரசுவதி.

ஆண்களுக்கும் கல்வி என்றாலும், பெண் கடவுள் கல்விக்கு தலைமை ஏற்பதால், பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியது நியாயமே என்று எண்ணுவது இயல்பு.

வரலாறு தரும் Statistics நமக்கு சொல்லும் உண்மை என்ன?

1881ல்  

இந்தியர்களின் எழுத்தறிவு 4.32%.  
ஆண்கள் மட்டும் 8.10%.
பெண்கள் வெறும் 0.35%.  

2011ல்  

இந்தியர்களின் எழுத்தறிவு 74.04 %  
ஆண்கள் 82.14 %   
பெண்கள்  65.46%.

அதாவது கல்விக்கடவுளாக பெண்ணே இருக்கும் நாட்டில் 1881 வரை ஒரு விழுக்காடு பெண்கள் கூட படிக்க வில்லை.

ஒட்டுமொத்தமாகப் படித்தவர்களே 4.32% தான்

இதையெல்லாம் கல்விக்கடவுள் சரசுவதி ஆய்வு செய்து சீர் செய்தாரா என்றால் இல்லை.

ஆனால் இப்போதோ எழுபது, எண்பது, அறுபது என்ற நிலை.

இதற்கு காரணம் யார்?

Lord Thomas Babington Macaulay

WhatsApp வந்த காலத்தில்
அவர் நமக்கு ஒரு வில்லனாகத்தான் அறிமுகம்.

இந்தியாவின் பாரம்பரிய கல்வி முறையை சிதைத்து, வெள்ளைக்காரனுக்கு பியூன் வேலைப்பார்க்க ஆங்கிலத்தை கற்பித்த கயவன் என்று தான் பல Forward Messages சுற்றியது.

யாரிந்த மெக்காலே என்ற தேடலும் அங்கிருந்து தொடங்கியது தான்.

Macaulay இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அந்தக் காலத்திலேயே நிறவேற்றுமைக்கு எதிராக குரல் எழுப்பியவர்.

இந்தியாவிற்கு வந்தபோதும் அதே செக்யூலரிசத்தை இங்கும் பரப்பியவர்.

அது வரை இந்தியாவில் கல்வி என்றால்:
1) வேத பாட சாலை
2) இஸ்லாமிய மதராசா
3) கிறுஸ்துவ மிஷினரி
தந்தால் மட்டுமே உண்டு.

இந்த மூன்றும் வெறும் மதக்கல்வியை மட்டுமே கற்பித்தவை. இதற்கு இங்கிலாந்து அரசு செலவு செய்வது பொது மக்களுக்கு போய் சேரவில்லை. வெறும் மூடநம்பிக்கைகளை மட்டுமே வளர்க்கிறது...என்று முதன் முதலில், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல், தாய்மொழி என்கிற ஐந்துவித பாடங்களை உள்ளடக்கிய பொதுக் கல்வியை திட்டமாக கொண்டு வந்தவர் மெக்காலே.

♦️ கல்வி ஆங்கிலேயர்களால் பரவலாக்கப்பட்ட பிறகே

♦️ அவரவர் தாய் மொழியிலும் கல்வி கற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டப் பிறகே

♦️ கல்வி நிலையங்கள் அவரவர் இருப்பிடம் அருகில் அமைந்த பிறகே

இந்தியர்கள் படித்தார்கள்.

இதற்கு அடுத்து அவர் எடுத்துக்கொண்ட பிராஜெக்ட் இன்னும் சிறப்பானது.

அது வரை இஸ்லாமியருக்கு ஷரியா சட்டம், இந்துக்களுக்கு மனுஸ்மிருதி என்றிருந்த சட்டத்தை, அனைவருக்குமான “இந்தியன் பீனல் கோடு” என்று மாற்றி IPC யை கொண்டு வந்தவர் இதே லார்ட் மெக்கலே தான்.

அந்த Lord Macaulay அவர்கள்

அவர் திருமணம் ஆகாதவர். அவருக்கு Genetic சந்ததியினர் இல்லை.

நாம எல்லாரும், குறிப்பா இந்தியப் பெண்கள் அவருடைய Memetic வாரிசுகள்!

Friday, December 24, 2021

சீமான் மாமனார் காளிமுத்து வேளாண் ஊழல்!

 ஜெயா  போலவே ஊழல் குற்றவாளி சீமான் மாமனார் காளிமுத்து


வேளாண் ஊழல்!


எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில், வேளாண்துறை அமைச்சராக இருந்தார் காளிமுத்து. வேளாண்துறை நிதியை அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்வதாகவும், அதற்குக் கைம்மாறாக அவர் பரிந்துரைக்கும் நபர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டுமெனவும் ரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, 1982-83-ம் ஆண்டில் வேளாண்துறை நிதி வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டது.


காளிமுத்துவின் சிபாரிசில், அவரது நண்பர்கள் ராபின் மெயின், சாகுல் அமீது, சோமசுந்தரம் உள்ளிட்ட சிலர் ஒன்றரை முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை வங்கியில் கடன் பெற்றனர். அந்தப் பணத்தில் 15 லாரிகள் மற்றும் டிராக்டர்கள் வாங்கியதாகவும் வங்கியில் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர். ஆனால், அவர்கள் தவணைத் தொகையை முறையாகச் செலுத்தவில்லை. எனவே, அவர்கள் வாங்கிய வாகனங்களைப் பறிமுதல் செய்ய முயன்ற வங்கி அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடன் பெற்றவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்பது உறுதிசெய்யப்பட, சி.பி.ஐ-யிடம் புகார் செய்யப்பட்டது. 


1984-ம் ஆண்டு இந்த வேளாண் ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காளிமுத்து மற்றும் அவரின் நண்பர்கள், அதிகாரிகள் உட்பட 32 பேர் இவ்வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். காளிமுத்துவின் நண்பர் ராபின் மெயின் சி.பி.ஐ அதிகாரிகளால் கைதுசெய்யப்பட, தமிழக அரசியல் களம் சூடுபிடித்தது. நாளிதழ் தலைப்புகளைத் தினமும் அதுவே ஆக்கிரமித்தது.


இந்த ஊழல் குற்றச்சாட்டுகளைவிடவும் பெரிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தது. `ஜெயலலிதாதான் (அப்போதைய அ.தி.மு.க கொள்ளைப் பரப்புச் செயலாளர்), இந்த ஊழல் புகாரை பரப்பியிருக்கிறார். இதன் பின்னணியில் இந்திரா காங்கிரஸ் வேலை செய்கிறது' என பகீர் புகார் ஒன்றை வெளியிட்டார் காளிமுத்து. இந்த வேளாண் ஊழல் மற்றும் பல்வேறு பிரச்னைகளால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஜி.ஆர். மீண்டும் அவரது அரசு தொடர்ந்த நிலையில், இந்த ஊழல் புகார் அ.தி.மு.க ஆட்சிக்குத் தலைவலியாகவே இருந்தது. இந்த ஊழல் குறித்து எம்.ஜி.ஆர் புலம்பியதும் உண்டு. இந்நிலையில் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா அணியில் சேர்ந்தார் காளிமுத்து. பிறகு, தி.மு.க-வில் சேர்ந்தவர் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தார். 2001-ம் ஆண்டு தன் ஆட்சிக்காலத்தில் காளிமுத்துவை, சபாநாயகராக ஆக்கினார் ஜெயலலிதா. 


காலங்கள் ஓடினாலும், இவ்வழக்கு `விடாது கறுப்'பாக தொடர்ந்தது. 2005-ம் ஆண்டு இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காளிமுத்துவுக்கு சம்மன் அனுப்பியது உச்ச நீதிமன்றம். `காளிமுத்து பதவி விலகவேண்டும்' என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப, `ராஜினாமா செய்யத் தேவையில்லை' என்றார் ஜெயலலிதா. இவ்வழக்கினால் உடல்நிலைப் பிரச்னைகளை எதிர்கொண்ட காளிமுத்து, 2006-ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். 


32 ஆண்டுகள் நடைபெற்ற இவ்வழக்கில், 2016-ம் ஆண்டு தீர்ப்பு வெளியானது. அப்போது, காளிமுத்து உட்பட இவ்வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட 16 பேர் உயிருடன் இல்லை. மற்ற 16 பேரில், 5 பேருக்கு மட்டும் சிறைத்தண்டனையுடன், அபராதமும் விதிக்கப்பட்டது.


இதில் ஹய்லைட்டே அவர் ஊழல் செய்தது விவசாய துறையில் ( அண்னனின் சின்னம் 😃)

Thursday, December 23, 2021

கஜினி முகமதுவை சோமநாதபுரம் கோயிலைக் கொள்ளையடிக்க அழைத்து வந்தது யார்?

 கஜினி முகமதுவை சோமநாதபுரம் கோயிலைக் கொள்ளையடிக்க அழைத்து வந்தது யார்?

ஆனால் 17 முறை படையெடுத்து 18 வது முறை கொள்ளையடித்து சென்றது எப்படி என்பதைத் தான் யோசிக்கவேண்டும்.

பெயர் முகமதுதான்.கஜினி என்ற பகுதியை ஆண்டதால் கஜினி முகம்மது.இந்தப்பதிவில் சொல்லப்போகும் கருத்துகள் எனது கருத்தல்ல.யார் இதைச் சொன்னார்கள் என்று இறுதியாகச் சொல்கிறேன்.அப்பொழுது மிகவும் வியப்பில் ஆழ்ந்துவிடுவீர்கள்.

"இன்றைய குஜராத் அந்தக்காலத்தில் ஆறு அரசர்களால் ஆளப்பட்ட பகுதி.இங்குள்ள சோமநாதர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றது.அதற்குக் காரணம் இந்தக்கோவிலின் லிங்கம் எந்தப்பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கியதுதான்.

இதன் சிறப்புக்காரணமாக ஏராளமான பக்தர்களை அந்தக்கோவில் ஈர்த்ததில் ஆச்சரியம் இல்லை.எனவே சொல்லமுடியாத அளவு செல்வம் கோவிலில் பக்தர்களால் குவிந்தது.

குஜராத்தின் ஆறு அரசர்களும் அந்தக்கோவிலின் போஷகர்களாக இருந்தனர்.கோவிலின்
அர்ச்சகர்கள் எத்தனைபேர் தெரியுமா?11,000 பேர்.

எந்நேரமும் பரபரப்பாக இருந்த இந்தக்கோவிலில் கோடிக்கணக்கான சொத்தும் சேர்ந்து இருந்தது

கஜினி படையெடுத்து வந்தபோதெல்லாம் குஜராத்தின் ஆறு அரசர்களும் ஒன்றுசேர்ந்து அவனைத் தடுத்து தோற்று ஓடச்செய்தனர்.கி.பி 997 முதல் 1030 வரை 33 ஆண்டுகாலம் கஜினி தன் முயற்சியை கைவிடவில்லை.
பரீட்சையில் தோற்கும் மாணவர்களுக்கு கஜினியே இன்றும் உந்துசக்தியாக இருக்கிறார்.

பதினெட்டாவது முறையாக 25,000 போர்வீரர்களுடன் சோமநாதபுரத்திலிருந்து எட்டு மைல் தூரம் முகாம்போட்டு
காத்திருந்தான் கஜினி...

கஜினி படையெடுத்து வந்ததை ஒற்றர்கள் மூலம் அறிந்த அரசர்கள் ஆறுபேரும் கோவிலின் தலைமை அர்ச்சகரிடம்
போய் ஒரு கோரிக்கைவைத்தனர்.நம்மிடம் நாலரை லட்சம் வீரர்கள் உள்ளனர்.கஜினியிடம் 25,000 பேர் மட்டுமே உள்ளனர்.எளிதில் விரட்டிவிடலாம் என்று அனுமதி கேட்டனர்.ஆனால் தலைமை அர்ச்சகர் அதற்கு உடன்படவில்லை.

அர்ச்சகர் என்றால் சும்மாவா?அரசனுக்கும் மேலே உள்ளவன்.அர்ச்சகர் சொல்கிறார் கேளுங்கள்.மிலேச்சன் படையெடுத்து வருவதை கணேசனும்,காளியும் கனவில் வந்து தன்னிடம் சொன்னதாகவும்,ஆனால் விசேஷமாய் ஹோமங்களும்,அன்னதானம்,சுவர்ணதானம்,கன்னிகாதானம்,ஆகியவை நடத்த வேண்டுமென கூறியதாகவும் சொல்லி,அரசர்களிடம் அதைச்செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.ஏன் இப்படிச் செய்தார்?

இந்த அரசர்களுக்கு வரவர புராணங்களிலும், பிராமனங் களிலும்,நம்பிக்கை குறைந்து வருவதால்தான் இப்படிப் பட்ட இடையூறுகள் தொடர்ந்து வருவதாக அர்ச்சகர் அரசர்களைக் கடிந்துகொண்டார்.இனிமேலாவது பிராமணர்களின் அறிவுரை கேட்டு நடக்கும்படியும்,யுத்தத்திற்கு ஆகும் செலவை பிராமணர்களுக்கு தானம் கொடுத்துவிடுமாறுகட்டளையிட்டு,யாகசாலை நிறுவும் பணியில் ஈடுபட்டார்.

தனது ஒற்றர்கள் செய்திக்காக கஜினி காத்திருக்க, சோமநாதபுரத்திலோ 1008 யாகசாலைகள் நிறுவி,குழிகளில் நெருப்பு வளர்த்து,நெய்,கோதுமை,சந்தனம் முதலானவை எரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.பல நூறுபேர் மிலேச்சனிடம் இருந்து காப்பாற்றவேண்டி கழுத்தளவு தண்ணீரில் நின்று தவம் செய்தார்கள்.போர் வீரர்கள் நமக்கு என்ன என்று தூங்கிக்கொண்டிருந்தார்கள்.
கஜினிக்கு இந்தத் தகவல் போய் சேர்ந்தது.

யாகசாலைகளில் நெருப்பு எரிவதையும்,ஆயிரக்கணக்கான குழிகளில் புகைவருவதையும்,நூற்றுக்கணக்கான தலைகள் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதையும் பார்த்த கஜினியின் ஒற்றர்கள் பயந்து போனார்கள்.அவர்களுக்கு இது ஏன் என்று புரியவில்லை.இதை கஜினியிடம் சொன்னார்கள்.

கஜினி தனது மதகுருவான மவுல்லியிடம் ஆலோசித்தான்.
மவுல்லி உடனே இது காபரினுடைய ஜின்னுகளின் (சாத்தான்கள்)வேலை என்று சொல்லி,நான் குரான் வாசித்தால் ஜின்னுகள் ஓடிவிடும் நீங்கள் படையை நகர்த்துங்கள் என்று கட்டளையிட்டார்.

கஜினியின் படைகள் வரும்சேதி தெரிந்ததும்,11000 புரோகிதர்களில் தலைமை அர்ச்சகர் உட்பட எண்ணூறு புரோகிதர்கள் தவிர மற்ற புரோகிதர்களும்,மேலும் பலரும்
அகப்பட்டதை அள்ளிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

தலைமை அர்ச்சகர் தமது முத்துப்பல்லக்கை நன்றாகச் சிங்காரித்து சீடர்களையும்,கோவில் தாசிகளையும் கஜினியை எதிர்கொண்டு வரவேற்று அழைத்துவர அனுப்பிவைத்தார்.

முத்துப்பல்லக்கை தனது ஒட்டகத்தின் மீது போடவைத்து, அதன் மீது ஏறி அமர்ந்து கஜினி கம்பீரமாக சோமநாதர் ஆலயத்திற்கு வந்து சேர்ந்தான்.கோவிலின் உள்ளே கஜினி அமர சிங்காதனம் போடப்பட்டிருந்தது.அந்த சிங்காதனத்தின் பெயர் வியாசபீடம் என்பதாகும்.இந்த சிங்காதனத்தின் அன்றைய மதிப்பு 50 லட்சம் ரூபாய் ஆகும்.

கஜினி கோவிலில் போடப்பட்ட வியாசபீடத்தில் கம்பீரமாய் அமர, தலைமை அர்ச்சகர் கஜினியிடம் "இங்கு போலி ராஜாக்கள் தங்களைப்பற்றி என்னென்னவோ சொன்னார்கள்.ஆனால் நான் அவர்களை எல்லாம் அடக்கி வைத்தேன்"என்று கூறிவிட்டு,விஷ்ணு அல்லாதவன் அரசனாய் இருக்கமுடியாது.(நா விஷ்ணு ப்ருத்வீ பதி) என்று வேதங்கள் சொல்கிறது.

எனவே விஷ்ணுவின் அவதாரமான தங்களின் நேர்மையான ஆட்சி எங்களை ரட்சிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துவிட்டு,எங்களுக்கு எந்த இடையூறும் செய்ய வேண்டாம் என்று கூறி 3 கோடி ரூபாய் காணிக்கை தருவதாகக் கூறினார்.

யாரையும் ரட்சிக்க நான் வரவில்லை.சொத்துக்கள் எங்கே இருக்கிறது காட்டுங்கள் என்று கஜினி கூற,அர்ச்சகர் கொண்டு வந்து கொடுக்க,அதை கணக்கிட்டுப் பார்த்தால் கேள்விபட்டதற்க்கும்,கிடைத்த சொத்திற்கும் சம்பந்தமே இல்லை.

அர்ச்சகரே என்னிடம் இந்த வேலை ஆகாது என்று கஜினி கூறிவிட்டு,அர்ச்சகரின் இரு கைகளிலும் எண்ணெய்யால் தோய்க்கப்பட்ட துணிகளைச் சுற்றி கொளுத்துமாறு கட்டளையிட்டான்.மிரண்டு போன பார்ப்பான் சொத்து இருந்த எல்லா இடத்தையும் காட்டிக்கொடுக்கிறார்.

தலைமைகுருவின் தலைமையில் கோவில் இடிக்கப் படுகிறது.இடிக்க இடிக்க செல்வங்கள் கொட்டிக்கொண்டே இருக்கிறது.கோவில் சாயத்துவங்க,அதுவரை காந்தக்கற்களின் உதவியோடு அந்தரத்தில் நின்ற லிங்கமும் விழுந்து நொறுங்குகிறது.

நொறுங்கி விழுந்த லிங்கத்தின் உள்ளிருந்தும் நவரத்தினங்கள் கொட்ட வாரிவாரி அள்ளிப்போட்டுக் கொண்டு 800 புரோகிதர்கள்,5000 ஆண்கள்,6000 பெண்களை கைதிகளாகப் பிடித்துக்கொண்டு கஜினி சென்றான்.

இன்னும் இருக்கு....
இவ்வளவு சுவாரஸ்யமாக நடந்த சம்பவங்களை சொல்லியது யார்?என்ன ஆதாரம்?அப்புடின்னு கேப்பீங்க.

இந்த விபரங்கள் சுவையான கதைபோல தோன்றலாம்.அதீதமான கற்பனை என்றும் நினைக்கலாம்.
குஜராத்தி,உருது மொழியிலுள்ள நூல்களில் தேடி எடுத்து
நூலாக எழுதியவர் வேறு யாருமல்ல.வேதங்களை நோக்கி திரும்புமாறு இந்திய மக்களை அறைகூவி அழைத்த, ஆரிய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதிதான்.

சுவாமி தயானந்த சரஸ்வதி குஜராத் மாநிலம் டன்காரா எனுமிடத்தில் பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர்.1875 ல் ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர்.1883 அக்டோபர் 30 இறந்தார்

அவர் இந்தியா முழுமையும் சுற்றி மதுராபுரியில் எழுதி வெளியிட்ட
"சத்தியார்த்தப் பிரகாசம்" என்ற நூலில் 11 வது அத்தியாயத்தில் கஜினி படையெடுப்பு குறித்து விலாவாரியாக எழுதியுள்ளார்.இதுவரை தெரிவித்தக் கருத்துகள் அவர் நூலின் விளக்கம்தான்.இப்போது இதிலிருந்து எளிதாக புரிந்துகொள்வது இதுதான்.

1.ஆறு அரசர்களிடமும் இருந்து பார்ப்பனர்கள் கோவிலைக் கைப்பற்ற சதி செய்துள்ளனர்.

2.கஜினியை உள்ளே கொண்டுவந்து அரசர்களை விரட்டிவிட்டு, கஜினிக்கு தொகை கொடுத்து ஒதுக்கிவிடலாம் என்ற அவாள் பருப்பு அங்கு வேகவில்லை.

3.கோவிலை இஸ்லாமியரான கஜினி இடிக்கவில்லை.பார்ப்பனர்களே இடித்தது தெளிவாகிறது.

4.விஞ்ஞானம் சார்ந்த நுட்பத்தைப் பயன்படுத்தி,லிங்கம் அந்தரங்கத்தில் தொங்குவதாய் மக்களை ஏமாற்றியுள்ளனர்.

5.இந்துக்களை பார்ப்பனர்கள் ஏமாற்றிப் பிழைப்புநடத்துகிறார்கள் என்ற நிகழ்வு வெளிச்சத்திற்கு வருகிறது.

மேலும் நீங்கள் நிரப்பிக்கொள்ளலாம்.

சொன்னது சுவாமி தயானந்த சரஸ்வதி என்பதால் அரை டவுசர்கள் அங்கு போய் தாக்குதல் நடத்தலாம்.இஸ்லாமியர்கள் மேல் பலி போடுவது நியாயம் அல்ல.

கஜினி மற்றும் முகலாய மன்னர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் இந்துக்களை வதைப்பதே அவர்கள் வேலை என்றும் RSS பிரச்சாரம் செய்கிறது.ஏன் இந்தப் பிரச்சாரம்? உண்மை என்ன?

முகலாயச்சக்கரவர்த்திகளுக்கு முன்னால் பல முஸ்லிம் ஆட்சியாளர்கள் இங்கு ஆண்டுள்ளனர்.கி.பி.1192 ல் முகமது கோரியும்,கி.பி 1206ல் குதுப்-உத்-தீனும்,கி.பி.1296 ல் அலாவுதீன் கில்ஜியும்,கி.பி.1325 ல் முகமது -பின்-துக்ளக்கும்,கி.பி.1414 முதல் கி.பி.1450 வரை டெல்லியில் சையதுகளின் ஆட்சியும்,கி.பி 1451ல் ஆப்கானிஸ்தான் வம்சத்தின் பஹ்லுல் லோடியும்,அதைத் தொடர்ந்து லோடி வம்ச ஆட்சியை பானிபட் போரில் வீழ்த்தி கி.பி 1526 ல் பாபர் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார்,

இவ்வளவு காலப்பகுதியில் ஆட்சி புரிந்த முஸ்லிம் மன்னர்கள் இஸ்லாத்தை பரப்புவதற்கான வேலையை கடுமையாகச் செய்திருந்தால் இங்கு இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக இருந்திருக்க மாட்டார்கள்.முஸ்லிம் மன்னர்கள் அதிக காலம் ஆண்டாலும்,பெரும்பாலான மக்கள் இந்துக்களாக இருந்தார்கள் என்பதை மறைக்க முடியுமா?

அவர்களின் நோக்கம் மதம் பரப்புவதல்ல.
சாதியை ஒழிப்பதல்ல
அதை வைத்து அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதே
ஆளும் வர்க்க அரசியலே.

மன்னர்களுக்கு அதிகாரத்தை நிலைநிறுத்த அனைவரும் தேவைப்பட்டார்கள்.RSS சும் இந்து மதத்தை வளர்ப்பதையா நோக்கமாகக் கொண்டுள்ளது. இஸ்லாமியரைப் பகைவராகக் காட்டி பார்ப்பனியத்தின் செல்வாக்கை தக்கவைப்பதே நோக்கம் என்பதை அப்பாவி இந்து மக்கள் புரியவேண்டும்.

இருப்பினும் இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களின் பால் எத்தகைய அணுகுமுறை கொண்டிருந்தார்கள் என்பதற்கு பாபர் தன் மகன் ஹுமாயூனுக்கு 11.1.1529 ல் எழுதிவைத்த உயில் மூலம் அறிவோம்.

இந்துக்கள் குறித்த அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும் என பாபர் தனது மகன் ஹிமாயூனுக்கு 11--1--1529 ல் எழுதிவைத்த உயில் இதுதான்.

அருமை மகனே! பல வகையான மதங்களைப் பின்பற்றும் மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் அல்லா உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி சொல்லவேண்டும்.ஆகவே.

உன் குடிமக்களின் மத சம்பந்தமான மென்மையான உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பளித்து வரவேண்டும்.

மற்ற சமூகத்தின் வழிபாட்டுத்தளங்களை ஒரு போதும் இடித்து சேதப்படுத்தலாகாது.

அடக்குமுறை எனும் வாளைவிட இந்துக்களின் அன்பு மற்றும் நன்றிக்கடன் என்ற தூண் மூலம் இஸ்லாமைப் பரப்பு.

ஷியா மற்றும் சன்னிப் பிரிவினரிடையே நிலவும் உட்பூசலை அலட்சியம் செய்.

குடிமக்களிடம் காணப்படும் வேறுபாடுகளை பருவ காலங்களுக்கு இடையேயான வித்தியாசம் போல் கருதி ஒதுக்கிவிடு.

இப்படிப்பட்ட அறிவுரைகளைக் கூறிய பாபரின் பேரன் அக்பர் இன்னும் ஒருபடி மேலேபோய் மதவேறுபாடுகளற்ற ஒரு புதிய மார்க்கத்தையே "தீன் இலாஹி"என்ற பெயரில் முன் வைத்தார்.

இப்படிப்பட்ட முகலாய அரசர்கள் மீது அவதூறுப் பிரச்சாரத்தை RSS-BJP செய்வதன் நோக்கம் அவதூறுகளின் பால் உண்மையா,பொய்யா என்ற முடிவுக்கு வருவதல்ல.மாறாக..

இப்போது வாழ்ந்துவரும் இஸ்லாமியர்கள்மீது பகையை வளர்த்து,அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் அருவருப்பான சிந்தனை தவிர வேறொன்றுமில்லை.

பார்ப்பனியமும் மனுவும் உருவாக்கிய கேடுகெட்ட கொள்கைகளுக்கு எதிராக இந்திய மண்ணில் ஏராளமான இந்து சமய சீர்திருத்த வாதிகள் உருவானார்கள்
சுவாமி தயானந்த சரஸ்வதி
சுவாமி விவேகானந்தர்
இராஜாராம் மோகன்ராய்
தேவேந்திரநாத் தாகூர்
கேசப் சந்திர சென்
லாலா ஹன்ஸ் ராஜ்
நாராயண குரு
அய்யன் காளி
குருபிரசாத்
குருநானக்
குருசாயி
ஐயா வைகுண்டர்
ராமானுஜர்
இன்னும் இன்னுமாய் பட்டியல் நீளும்.

ஒரே கேள்வி தான்
இத்தனை இந்து சமய சீர்திருத்த வாதிகள்
போராடினார்களே எதற்கு?

பார்ப்பனியம் உருவாக்கிய சீரழிவுகளுக்கு எதிராகத் தானே?

1925 ல் சித்பவன பார்ப்பனர்களால் நாக்பூரில் தொடங்கப்பட்ட ஆர் எஸ் எஸ் இந்து சமூகத்தில் செய்த சீர்திருத்தம் என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
கலவரம் செய்ததைத் தவிர வேறென்ன?

Wednesday, December 22, 2021

சண்முகநாதன்

 ஆரம்ப காலங்களில் காங்கிரஸ் தமிழகத்தை ஆண்டுக்கொண்டு இருந்த போது திராவிட முன்னேற்ற தலைவர்கள் மேடையில் பேசுவதை குறிப்பிடுப்பதற்கு உளவுத்துறை போலீசார் மக்களோடு மக்களாக அமர்ந்து குறிப்பிடுப்பார்கள்!

ஏதேனும் வன்முறை தூண்டும் வகையில் பேசினால் வழக்கு தொடுக்க எடுக்கப்படும் குறிப்பு அது!

ஒரு தரம் பேராசிரியர் அன்பழகனும்,கலைஞர் அவர்களும்  ஒரு மேடையில் பேசியதை வைத்து அவர்கள் மீது வழக்கு பாய்ந்து இருக்கிறது!

"நாம என்ன அப்படி தவறாக பேசினோம்"என யோசித்த கலைஞர் எதற்காக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது,நாங்கள் பேசியது என்ன என்பதை போலீசாரிடம் வாங்கி பார்த்து இருக்கிறார்!

அவரும்,அன்பழகனும் பேசிய வார்த்தைகள் ஒரு வரிகள் விடாமல் அழகான கையெழுத்துடன் எழுதப்பட்டு வழக்கு பதியப்பட்டு இருக்கிறது!

அதை பார்த்த கலைஞர் அசந்து போனார்!கோர்ட்டிலும் தாங்கள் பேசியது உண்மைதான் என ஒத்துக்கொண்டார்!

இந்த குறிப்பெடுத்த காவலர் யார் என விசாரிக்கிறார்!அவர் பெயர் சண்முக நாதன்!

பின்பு அறிஞர் அண்ணா அமைச்சரவையில் அமைச்சர் ஆனபோது தனக்கு உதவியாளராக சண்முக நாதனை வைத்துக்கொள்ள ஆசைப்பட்டு,அவரை அழைக்க ஆள் அனுப்புகிறார்!

பயந்து கொண்டே தன்னை காணவந்த சண்முகநாதனிடம் விசயத்தை சொன்னதும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்!

 

கிட்டதட்ட ஐம்பது ஆண்டு காலம்,கலைஞர் நிழல் போல் பயணித்தவர் சண்முக நாதன்!

Friday, December 17, 2021

முகலாய வம்சத்தின் கடைசி பேரரசர் அவுரங்கசீப்

 அவுரங்கசீப் பற்றி எதுவும் தெரியாமல் வரலாற்றை புரட்டும் சங்கிக்கும்பல் கண்ணில் படும் வரை ஷேர் செய்யுங்கள்.. 


முகலாய வம்சத்தின் கடைசி பேரரசர் அவுரங்கசீப், நவ., 3, 1618ல் மும்பையிலுள்ள, 'டாஹோட்' என்ற இடத்தில் பிறந்தார். 'சக்ரவர்த்தி' என்ற சொல்லுக்கு முற்றிலும் பொருத்தமானவர் இவர்.


அவுரங்கசீப் மிகவும் பொல்லாதவர். தந்தையே சிறை வைத்தவர்; மக்களை வரிகளால் வாட்டி வதைத்தவர்; மதம் மாற்றியவர் என்று தான் வரலாறு சொல்கிறது. ஆனால், அவரது உண்மை முகமே வேறு.

தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கி, அதன்படி வாழ்ந்தவர்; மிகவும் நேர்மையானவர்.

ஷாஜஹானின் கடைசி காலத்தில், அவுரங்கசீப் அவரை கவுரவமான அரண்மனை சிறையில் வைத்திருந்தாரே தவிர, கொடுமை படுத்தவில்லை.

ஷாஜஹானின் உடல், உரிய மரியாதையுடனே அடக்கம் செய்யப்பட்டது. அதுவும், தாஜ்மஹாலில், அவரது பிரியத்துக்குரிய மும்தாஜ் உடலுக்கு அருகிலேயே வைக்கப்பட்டது.


அவுரங்கசீப், 24 மணி நேரத்தில், மூன்று மணி நேரம் மட்டுமே உறங்குவார். வேலை தவிர, மீதமிருந்த ஓய்வு நேரங்களில் இஸ்லாமிய மார்க்க நூல்களை படிப்பதில் செலவிடுவார்; தரையில் தான் படுப்பார்; மாமிசம் உண்ணாதவர்.

அரசாங்க கஜானா பணம் மக்களுக்கு உரியது. அரச குடும்பத்தினர் செலவழிப்பதற்காக அல்ல என்பதில், மிகவும் உறுதியாக இருந்தார் அவுரங்கசீப். 


தன் சொந்த செலவுகளுக்காக, ஒருபோதும், அவர் கஜானாவை உபயோகித்ததில்லை.

எப்போதும் எளிமையான உடைகளையே அணிவார். ஆபரணங்களை அணியாதவர்; பொன், பொருள் மேல் ஆசையில்லாதவர். வெள்ளி, தங்க பாத்திரங்களை கூட உபயோகிக்க மாட்டார்.


பொதுவாக, மன்னர்கள் தங்கள் பிறந்த நாளில் தகதக உடையணிந்து, உடல் முழுவதும் ஜொலிஜொலிக்கும் நகைகள் அணிந்து மக்களுக்கு காட்சி கொடுப்பதை பாரம்பரியமாக வைத்திருந்தனர். ஆனால், எளிமை விரும்பியான அவுரங்கசீப், தன் பிறந்த நாள் கொண்டாட்டங்களை எல்லாம் அனுமதிக்கவில்லை. அன்றைய தினத்தையும், சாதாரண தினமாகவே எடுத்து கொண்டார்.

அவுரங்கசீப்புக்கு குல்லா தைப்பதில் ஆர்வம் உண்டு. அதே போல, குர்-ஆனை தன் கைப்பட எழுதுவதில், அதீத விருப்பம் கொண்டவர். அந்த இரண்டையும் விற்று, கிடைக்கும் பணத்தில் தான், தனிப்பட்ட செலவுகளை பார்த்து கொண்டார்.


மதுவை, வெறுத்தவர். தன் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் மதுவை தடை செய்தார்; அதே போல கேளிக்கை விடுதிகளை இழுத்து மூடினார்; உல்லாச நிகழ்ச்சிகள் நடத்த கூடாதென்று உத்தரவிட்டார்; போதைப் பொருள்களையும் ஒழித்தார்.


அன்றைய காலகட்டத்தில், இறந்த கணவனின் சடலத்தை எரிக்கும்போதே, அதே நெருப்பில், மனைவியும் குதித்து, தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும், 'உடன் கட்டை' ஏறும் பழக்கம் இந்துக்களிடையே இருந்தது. குறிப்பாக, ராஜபுத்திரர்களிடையே அதிகமாக இருந்தது.

ஒருமுறை, போர்க்களத்தில் இறந்த ஒரு வீரனின் உடலை எரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவன் மனைவியை அந்த நெருப்பில் குதிக்க சொல்லி, சுற்றியிருந்தவர்கள் கட்டாயப்படுத்தினர்.

அங்கு வந்த அவுரங்கசீப், அந்த செயலை தடுத்தார். தங்கள் மத விஷயத்தில் தலையிடக்கூடாதென்று அங்கிருந்தவர்கள் வாதம் செய்தனர். ஆனால், அவுரங்கசீப் விடவில்லை.

'இது அநியாயம். இனி இத்தகைய கொடுமைகள் முகலாயப் பேரரசில் நடக்கக்கூடாது. இந்த சடங்கை தடை செய்கிறேன்...' என்று உத்தரவு பிறப்பித்தார். அதற்காக பல்வேறு பிரிவினரிடமிருந்து எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டியிருந்தது. மிகவும் கஷ்டப்பட்டுத்தான் இந்த சட்டத்தை செயல்படுத்தினர்.


'நவுரோஸ்' என்ற பண்டிகையை அக்பர் உருவாக்கியிருந்தார். மிகவும் உல்லாசமான திருவிழா அது. வண்ணமயமான கொண்டாட்டங்கள் நிறைந்தது. அந்த திருவிழாவின் இறுதியில் பேரரசரின் எடைக்கு சமமான பொன், வைர ஆபரணங்களை மக்களுக்கு கொடுக்கும் வழக்கமிருந்தது.

வீணாக அரசாங்க பணத்தை கேளிக்கைகளுக்காக செலவழிக்க விரும்பாத அவுரங்கசீப், நவுரோஸ் பண்டிகையை தடை செய்தார்.

ஒரு பேரரசராக இருந்தாலும், மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். 


அவ்வளவு செலவு செய்து, தன் தந்தை, தாய்க்காக தாஜ்மஹால் கட்டியதையே விரும்பாதவர். ஏனெனில், தாஜ்மஹால் கட்டுவதற்கு மக்களிடமிருந்த பணமெல்லாம் உறிஞ்சப்பட்டது; இக்கட்டட வேலையில் மக்கள் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர்; உயிரிழப்புகளும் ஏற்பட்டன; அரசு கஜானா படுமோசமாகி போனது.

ஆனால், ஷாஜகானுக்கு மக்கள் முக்கியமாக தெரியவில்லை. தன் மனைவிக்காக கட்டும் கட்டடம் மட்டும் நினைவில் இருந்தது. 1632-ல் ஆரம்பித்த தாஜ்மஹாலின் கட்டடப் பணிகள், 1648ல் தான் நிறைவடைந்தன. தன்னுடைய அன்பு மனைவியின் ஆசையை நிறைவேற்றிய சந்தோஷத்தில், கண்ணீர் வடித்தார் ஷாஜஹான்.

எளிமை விரும்பியான அவுரங்கசீப்பின் கண்களுக்கு, தாஜ்மஹால், அழகாக தெரியவில்லை; துயரமாகவே தெரிந்தது.

அதனால், இன்னொரு கருஞ்சலவைக்கல் மாளிகை கட்டுவதற்காக, ஷாஜஹான் எடுத்த முயற்சிகளை தடுத்தார். 


இருப்பினும் சில முக்கியமான நினைவு சின்னங்களை கட்டினார் அவுரங்கசீப்.

லாகூரில், 'பாட்ஷாய் மஸ்ஜித்' என்ற மிகப்பெரிய மசூதியை கட்டினார். மெக்காவுக்கு அடுத்தபடியாக, மிகப்பெரிய வெளிப்புற வழிபாட்டு தளத்தை கொண்டது இந்த மசூதி.

டில்லி செங்கோட்டை வளாகத்தில், மோடி மஸ்ஜித் என்ற சிறிய மசூதி ஒன்றையும் கட்டினார். லாகூர் கோட்டையை சுற்றி யிருக்கும், 13 நுழை வாயில்களில் ஒன்றான, ஆலம்கீர் என்ற பிரம்மாண்டமான கட்டடம் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டது தான்.


அவர் எழுதிய உயில்:

நான் இறந்த பின், எனக்கு நினைவு சின்னங்கள் எதுவும் கட்ட கூடாது. என் கல்லறை மேல் அலங்காரங்களும் இருக்க கூடாது. நான் குல்லாக்கள் தைத்து, விற்று சேர்ந்த பணம் கொஞ்சம் இருக்கிறது. அந்த பணத்தை பயன்படுத்தி என் இறுதி சடங்குகளை செய்யுங்கள்.

அந்த பணத்துக்கு மேல் செலவழிக்க கூடாது. என் இறுதி ஊர்வலத்தில் எந்த வித ஆடம்பரமும் கூடாது. இது போக, திருக்குர்-ஆன் எழுதி, விற்று சேர்ந்த பணத்தை என் பையில் வைத்துள்ளேன். அது புனிதமான பணம். அதை ஏழை மக்களுக்கு தானமாக கொடுத்துவிடுங்கள். இவ்வாறு எழுதி இருந்தார்.


அஹ்மத் நகரில், 1707 மார்ச், 3ல் அவரது உயிர் பிரிந்தது. அவரது உயில்படியே இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.

அவுரங்கசீப்பின் இரண்டாவது மகன் பகதூர் ஷா, அடுத்து ஆட்சியில் அமர்ந்தார். மிகப்பெரிய பேரரசைக் கவனிக்க அவருக்கு திறமையில்லை. அவுரங்கசீப் காலத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்றுக் கொண்டிருந்த மராட்டியர்கள், அவரது மறைவுக்குப் பின், கொஞ்சம் கொஞ்சமாக முகலாயர்களின் இடங்களை கைப்பற்ற ஆரம்பித்தனர். அதனால், முகலாயர்களின் ஆட்சி கலைந்தது.


எளிமையாகவும், நிர்வாகத்தில் கண்டிப்பாகவும் இருந்ததால் தான், அவுரங்கசீப்பால், முகலாயப் பேரரசை கட்டி காக்க முடிந்தது. அவை இல்லாததால் தான் அவருடைய வாரிசுகள் பேரரசை இழந்தனர்.

ஒரு மனிதரின் இன்னொரு பக்கம் இத்தனை இனிமையானதா என்று ரொம்ப ஆச்சர்யமா இருக்கு இல்ல.. யாரையும் மனிதர்களின் ஒரு முகத்தை மட்டும் பார்த்து அவர்களை எடை போடாதீங்க; அவர்களது இன்னொரு முகத்தையும் பாருங்க... சரியா!


- நன்றி Dinamalar

ஓளரங்கஜேப்பின் உண்மை வரலாறு

 மோடி அடிக்கடி மேற்கோள் காட்டும் ஓளரங்கஜேப்பின் உண்மை வரலாறு என்ன?


கேள்வி...

காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்தது அவ்ரங்கசீப்னு சொல்றாங்க உண்மையா ?


#இதுபற்றிய_வரலாறு_என்ன..?


அதிர்ச்சிகளின் அணிவகுப்புக்கு தயாராகுங்கள் சகோஸ்..!


அதிர்ச்சி 1


ஒளரங்கசீப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள். அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் லி ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.


அதிர்ச்சி 2


மேலும், அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.


அதிர்ச்சி 3


அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் முகலாய படையில் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்?


அதிர்ச்சி 4


இதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில. தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார். ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்தனர். வைணவம் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடைப்படுத்தவில்லை.


அதிர்ச்சி 5


ஒளரங்கசீப் ஒரு முஸ்லிம் என்பதால், "உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு" என்னும் இஸ்லாமிய கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர். இதனால் கட்டாய மத மாற்றத்தை இவர் செயற்படுத்தவில்லை. சத்திரபதி சிவாஜியின் பேரன், சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன் ஏழாம் வயது முதல் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார். ஒளரங்கசீப்பின் புதல்வி ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார். சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என அனைவரும் மறைந்து விட்ட நிலையில், ஒளரங்கசீப்பின் அவையிலும், முகலாயர்களின் சுற்றுச் சார்புகளிலும் சுமார் 25 ஆண்டுகள் வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப்பட்டதிலிருந்து, ஒளரங்கசீப்பின் தாராள மனப்பான்மை தெளிவாகப் புரியும். 


அதிர்ச்சி 6


அதேபோல் இராஜபுத்திர இராணி ஹாதி, 'ஜோத்பூரை தனது வாரிசுக்கு உரிமையாக்கினார். "அங்குள்ள இந்து ஆலயங்களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை நிர்மாணிக்கிறேன்" என்று அந்த இந்து அரசியே சொன்னபோது... அதனை ஏற்றுக் கொள்ளாது மறுத்தவர் ஒளரங்கசீப்.

 


அதிர்ச்சி 8


தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார். ''பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட்படுத்தக்கூடாது'' என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. பேராசிரியர் கே.கே.தத்தாவின் Islam and Indian Culture(1578 - 1802) என்றும் நூல் ஒளரங்கசீப் இந்துக்களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளையும் பட்டியலிடுகிறது. 


அதிர்ச்சி 9


''ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர்கள், இந்துக்கள் ஆகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின் தாராளத்தன்மையையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.


இனி, #காசி_கோயில்_பற்றிய_அதிர்ச்சியோ_அதிர்ச்சி 10

பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து சிற்றசர்கள் மற்றும் தளபதிகள் வாரணாசியில் மொகலாய படை ஒரு நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.


தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இராணியை மட்டும் திரும்பவே இல்லை. 


இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த அரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் திடீரென வெளிப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் அரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.


நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இராணி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க மாமன்னர் ஒளரங்கசீப்பை வேண்டினர். 

மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், #கற்பக்கிரகத்தின்_புனிதம்_அழிந்துவிட்டதாகக்கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டு, கர்பக்கிரக சாமி சிலை இல்லாத #தோஷம்பட்டக்கட்டிடம் (அந்தக்கோயில்) இந்து அரசர்கள் ஆதரவோடு அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, மாமன்னர் ஒளரங்கசீப்பின் ஒப்புதலுடன் இடிக்கப்பட்டது.


இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture) என்னும் நூலில் ஆதாரமாக தரப்பட்டுள்ளது.

மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மையான வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற பொய்யான வரலாறு வேறு. 


நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா?


ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். அப்படியான ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்.

-----முனைவர் அ. தஸ்தகீர்.

(கட்டுரையாளர் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், தலைசிறந்த வரலாற்றாசிரியர்)

வரலாற்று ஆதாரம்: 

பிஷம்பர் நாத் பாண்டே,

சரித்திர ஆய்வாளர் மற்றும் முன்னாள் ஒரிசா மாநில கவர்னர்

'இஸ்லாமும் இந்திய கலாசாரமும்'

Page : 70,71

மேற்கண்ட அவமானகரமான துயரச் சம்பவம் குறித்து பி.என்.பாண்டே என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.


P.N.Pande

“Aurangzeb came to Know of it. He was very much enraged. He sent his senior officers to search for the Rani. Ultimately they found that the statue of Ganesh: which was fixed in the wall was a movable one. When the statue was moved. They saw a flight of stairs that led to the basement. To their horror, they found the missing Rani dishonoured and crying. The basement was just beneath Lord Vishwanaths seat. The Rajas expressed their vociferous protests. As the crime was heinous the Rajas demanded examplary action. Aurangzeb ordered that as the sacred precinets has despoiled. Lord Viswanath may be moved to some other place. The temple be razed to the ground and the Mahant be arrested and punished.”

P.N.Pande, Islam And Indian Culture, Page 55

இதனை தஸ்தாவேஜூகளின் சான்றுகளுடன் டாக்டர் பட்டாபி சீதாராமையா (The Feathers and the Stones)என்ற தனது நூலிலும் பாடனா அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் பி.எல்.குப்தாவும் இந்த நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

Wednesday, December 15, 2021

ஒற்றை பார்ப்பான்

 இந்தியாவில் இருந்த யவான் சாங் தன் புத்தகத்தில், சமணர்களை கொல்ல பாண்டிய மன்னனை வெகுவாக வற்புறுத்திய ஒரு இந்து இராணியை பற்றி தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.


பார்பனர்கள் சமணர்களை அதிகஅளவில் அடையாளம் காட்டி கொன்றதில் இருந்து தான்


“வெளியே செல்லும் போது ஒற்றை பார்பானை பார்த்தல் நல்லதல்ல”


என்ற சகுனம் பார்க்கும் முறையே ஏற்பட்டிருக்கவேண்டும், ஏனெனில் அந்த காலத்தில் ஒரு சமணர் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது எதிரில் பார்பானை பார்த்தால் அவன் வீடு திருப்ப முடியாது, பின் தொடர்ந்து வரும் பார்பான் எங்காவது ஒரு வீரனிடம் அவனை சமணன் என்று அடையாளம் காட்டி அவன் கைது செய்யப்பட்டு கழுவில் ஏற்றப்படுவான்,  பின் பார்ப்பானே தன்னை பற்றி கேவலமாக ஒரு பழமொழியை சொல்லிக்கொள்வானா.  



சமணம் பார்த்தல் என்ற வார்த்தையே பிற்காலத்தில் சகுனம் பார்த்தல் என்று மாற்றம் அடைந்திருக்கும், இன்றும் நெல்லை குமரி மாவட்டங்களில் வயதானோர் சமணம் பார்த்தல் என்ற சொல்லாடலை பயன்படுத்துவதை பார்த்துள்ளேன்.



இதே ஞானசம்பந்தன், தன் உடன் மதம் பரப்ப வந்த நாவுக்கரசரை, பார்பனர் அல்ல என்பதால் அவரை தன் பல்லக்கை தூக்கும்படி செய்தது, செல்லும் வழியில் வயாதான முதியவர் நாவுகரசறை காலால் எட்டி உதைத்தது, நாவுக்கரசர் கடைசி காலத்தில் சமண மதம் திரும்பியது போன்ற சம்பவங்களை வேறு ஒரு பதிவில் காண்போம்      



ஆக நரசிம்மபல்லவன்,  சுந்தர பாண்டியனை வாதாபிக்கு சண்டை போட  அழைத்து சென்றிருந்தால், 63 நாயன்மார்களில் மூன்று பேர் குறைந்திருப்பார்கள்

Saturday, November 20, 2021

நீதிக்கட்சியின் 106 ஆவது பிறந்தநாள் இன்று (20.11.1916)

நீதிக்கட்சியின் 106 ஆவது பிறந்தநாள் இன்று (20.11.1916)


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது 1900 - 1920 ஆம் ஆண்டுகளின் இடையில் சென்னை மாகாணத்தில் வர்ணாசிரமப் பாதுகாப்புச் சங்கம், சனாதன தர்ம சங்கம், சனாதனச் சங்கம் என்ற பெயர்களில் கிராமங்கள் மட்டத்திலும் இயங்கக்கூடிய இந்துமதச் சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இந்து மதத்தின் பெயரால் உயர்வு தாழ்வுகளை உறுதிசெய்வதும், வேத, ஆகம, இதிகாச, புராணங்களின் பெயரால் மூடப்பழக்கங்கள், விழாக்கள், பண்டிகைகள் ஆகியவை நிலை பெறுகின்ற அளவில் தொடர்ந்து பரப்புரை செய்வதும் இந்தச் சங்கங்களின் நோக்கங்களாக இருந்தன.


 1909 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் மிண்டோ - மார்லி சீர்திருத்தம் ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய மாகாணங்களில் சட்டமன்றம் போன்ற ஒர் அமைப்பை ஏற்படுத்த வகை செய்தது. இதில் உள்ள 'இந்திய உறுப்பினர்'களுக்குச் சட்டமியற்றும் அதிகாரம் இல்லை. விவாதங்கள் செய்யலாம். ஆனால் அதைப் பிரிட்டிஷ் கவர்னர் ஏற்க வேண்டிய அவசியமில்லை. அதேநேரம் இந்திய உறுப்பினர்கள் ஒரு சில இஸ்லாமியர், ஜமீன்தார்கள் தவிரப் பெரும்பான்மையோர் பார்ப்பனர்களாக இருந்தனர். பிரிட்டிஷ் அரசாங்கப் பதவிகளிலும் இதே நிலைதான் நீடித்தது.


 இந்தக் காலகட்டத்தில் சென்னையில் பி. சுப்பிரமணியம், எம். புருஷோத்தம நாயுடு என்னும் இரண்டு வழக்கறிஞர்கள் "மெட்ராஸ் பார்ப்பனரல்லாதார் சங்கம்" (Madras Non-brahmin Association) என்ற ஒர் அமைப்பை ஏற்படுத்தினர். 1912 ஆம் ஆண்டில், பார்ப்பன அரசு ஊழியர்களால் பிற சாதியினர் இன்னல் அடைவதைக் கண்டித்து "தி மெட்ராஸ் யுனைடெட் லீக்" (The Madras United League) என்ற ஒரு சங்கம் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட இது ஒரு தொழிற்சங்க அமைப்புப் போலச் செயல்பட்டது. இதன் செயலாளராக டாக்டர் சி. நடேசன் இருந்தார். இதற்கு அரசு, அரசு சாரா அமைப்புகளின் ஆதரவு ஓரளவு இருந்தது. 


மேற்கூறிய அமைப்பினர், பின்னாட்களில் இச்சங்கத்தின் பெயரைப் "பார்ப்பனரல்லாதார் சங்கம்" என மாற்றக் கருதினர். ஆனால் எதிர்மறைப் பெயராக இருக்கிறது என்பதால் "சென்னை திராவிட சங்கம்" என்று பெயர் மாற்றம் செய்தனர் (10.11.1912). டாக்டர் நடேசன் சங்கத்தின் செயலாளராகத் தொடர்ந்தார். பின்னர் சங்கத்தின் சார்பில் 1914 ஆம் ஆண்டில் திராவிட மாணவர் விடுதி நடத்தப்பட்டது. பொதுவாகப் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்று குறிப்பிடும் வழக்கம் இதற்கு முன்பாகவே சமூக நிலைகளில் வழக்கத்தில் இருந்து வந்தது. இது அரசு ஆவணங்களிலும் எதிரொலித்தது. 1870-71 பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கல்வித்துறை அறிக்கையில் "பார்ப்பனர், இந்து பார்ப்பனரல்லாதார்" (Brahmins, Hindu's Non-brahmins) என்று குறிப்பிடப்பட்டது. 1891 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பிராமணர்கள், பிராமணரல்லாதார், தீண்டத்தகாதவர்கள் என்ற மூன்று பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு அதன்படி கணக்கெடுக்கப்பட்டன.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலாம் உலக யுத்தம் குறுக்கிட்டது. அப்போது பார்ப்பனர்களைப் பெருவாரியாகக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, இந்தியாவுக்கு டொமினியன் ஆட்சி வேண்டும் என்று கோரி வந்தது. "அந்தக் கட்டத்தில் பிரிட்டிஷார் தம்மிடமிருந்த அதிகாரத்தை இந்தியர் கைக்கு மாற்றினால் தென்னாடு சம்பந்தப்பட்ட மட்டில் இது பார்ப்பனர் ஆதிக்கமாகவே இருக்கும் என்று பிராமணர் அல்லாதவர்களில் படித்தவர்களும், பணக்காரர்களும் அஞ்சினர். 


இக்காலகட்டத்தில் நிலவிய சனாதன சங்கங்களின் செயல்பாடுகளும், அவர்களுக்கு ஆதரவாகப் பார்ப்பன ஏடுகளின் அச்சுறுத்தல்களும் பார்ப்பனர் அல்லாதவருக்குக் கலவரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. இந்நிலையில் டாக்டர் டி. எம். நாயர், பிட்டி தியாகராயர், டாக்டர் சி. நடேசன் ஆகிய மூவரும் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் விளைவாகச் சென்னை வேப்பேரியில் 20.11.1916 அன்று பார்ப்பனரல்லாத தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இங்குதான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation) தோற்றம் பெற்றது. இதில் பார்ப்பனர் தவிர்ந்த அனைத்துச் சாதியினரும் கலந்து கொண்டனர். பிட்டி தியாகராயர், டாக்டர் டி. எம். நாயர், டாக்டர் நடேசன், ராவ்பகதூர் எம். சி. ராஜா, திரு ஜான் ரத்தினம், வரதராஜுலு நாயுடு, முத்தையா முதலியார் உள்ளிட்ட 26 தலைவர்கள் ஒன்று கூடி முடிவெடுத்து திரு. ராஜரத்தினம் முதலியார் தலைமையில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தினைத் தோற்றுவித்தனர். 



இவ்வமைப்பு, "திராவிட சங்கம்" அல்லது "பார்ப்பனர் அல்லாதார் சங்கம்" அல்லது "தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்" என்றெல்லாம் அழைக்கப்பட்டது. இந்த அமைப்புக்கு ஆந்திரப் பிரகாசிகா (தெலுங்கு), திராவிடன் (தமிழ்), ஜஸ்டிஸ் (ஆங்கிலம்) என்னும் மூன்று பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. ஆங்கிலப் பத்திரிகையான ஜஸ்டிஸ் அந்நாளில் பிரபலமாகவே, இந்த இயக்கத்தின் பெயரும் ஜஸ்டிஸ் பத்திரிகையின் பெயரால் ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அழைக்கப்பட்டது. அதுவே தமிழில் நீதிக்கட்சி என்று வழங்கலாயிற்று. தமிழில் வெளிவந்த பத்திரிகையான திராவிடன் என்ற பெயரால் திராவிட இயக்கம் என்றும் அழைக்கப்பட்டது.


நீதிக்கட்சியின் தோற்றத்திலும், அதன் தொடக்ககாலச் செயல்பாடுகளிலும் தந்தை பெரியாருக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை. சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த பெரியார், 1925 ஆம் ஆண்டு குடி அரசு இதழைத் தொடங்கினார். பின்னர் காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார். சுயமரியாதை இயக்கத்தின் மாபெரும் போராட்டமான இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் போது, 1938 ஆம் ஆண்டில், அவர் நீதிக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 


முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி

Friday, November 19, 2021

’ஜெய் பீம்’ முழக்கம் எப்படி தொடங்கியது.அதை முதலில் வழங்கியது யார்?

 ’ஜெய் பீம்’ முழக்கம் எப்படி தொடங்கியது.அதை முதலில் வழங்கியது யார்?

🐘☸️🐘✳️🐘
வாழ்த்துக்கூறல் மற்றும் மரியாதையைக்குறிக்கும் இந்தச்சொல் புரட்சிகர உணர்வின் அடையாளமாக எப்படி மாறியது? இந்தப்பயணம் மிகவும் சுவாரசியமானது. இந்த முழக்கம் எப்படி உருவானது, இந்தியா முழுவதும் எப்படிப்பரவியது?

📖✍🏾📚✍🏾📖

கடந்த சில நாட்களாக 'ஜெய் பீம்' சினிமா பற்றி நிறையவே பேசப்படுகிறது. சூர்யாவின் இந்தப் படம் ஒரு விளிம்புநிலை சாதியை சேர்ந்த பெண்ணின் நீதிக்கான போராட்டத்தை சித்தரிக்கிறது.

மகாராஷ்டிராவில்பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரிய சிந்தனை இயக்கத்தின் லட்சக்கணக்கான தொண்டர்களும், அவருடன் உணர்வுபூர்வமான பந்தம் கொண்டவர்களும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது 'ஜெய் பீம்' என்று கூறுகிறார்கள். மகாராஷ்டிராவின் மூலை முடுக்கிலும் ஜெய் பீம் என்ற சொல் குறித்து ஆயிரக்கணக்கான பாடல்கள் இசைக்கப்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் தற்போது இந்தச்சொல் திரைப்படத்தின் வாயிலாக வெகுஜன(பகுஜன) மக்களிடையே பிரபலமாகிறது.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் உண்மையான பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். அவருடைய சிந்தனை இயக்கத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்கள் அவரை கெளரவிக்கும் வகையில் அவரை 'ஜெய் பீம்' என்று அழைக்கின்றனர். ஜெய் பீம் என்பது வெறும் வாழ்த்துச் சொல் மட்டுமல்ல, இன்று அது அம்பேத்கர் சிந்தனை இயக்கத்தின் முழக்கமாக மாறிவிட்டது.  இயக்கத்தின் உயிர்நாடி ஆகும்.

 ஜெய்பீம் முழக்கத்தை அளித்தவர் யார்?

ஜெய் பீம் என்ற முழக்கம் முதன்முதலில் அம்பேத்கரிய சிந்தனை இயக்கத்தின் தொண்டரான பாபு ஹர்தாஸ் எல்என் (லக்ஷ்மண் நாக்ராலே) என்பவரால் 1935 இல் உருவாக்கப்பட்டது. பாபு ஹர்தாஸ் மத்திய மாகாண - பரார் பரிஷத்தின் உறுப்பினராகவும், பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் கருத்துக்களைப் பின்பற்றும் உறுதியான தொண்டராகவும் இருந்தார்.


நாசிக்கின் காலாராம் கோவில் நுழைவு உரிமை போராட்டம் மற்றும், சவ்தார் மஹத் குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமைபோராட்டம்  காரணமாக டாக்டர் அம்பேத்கரின் பெயர் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்தது. இதற்குப் பிறகு, மகாராஷ்டிராவில் டாக்டர் அம்பேத்கரால் முன்னணிக்கு கொண்டு வரப்பட்ட தலித் தலைவர்களில் பாபு ஹர்தாஸும் ஒருவர். ராமச்சந்திர க்ஷிர்சாகரின் 'தலித் மூவ்மெண்ட் இன் இண்டியா அண்ட் இட்ஸ் லீடர்ஸ்' என்ற புத்தகத்தில், பாபு ஹர்தாஸ் முதலில் 'ஜெய் பீம்' கோஷத்தை கொடுத்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஜாதிவெறியர்களை கட்டுக்குள் கொண்டு வரவும், ஒவ்வொரு கிராமத்திலும் சமத்துவக் கருத்துகளைப் பரப்பவும் டாக்டர் அம்பேத்கர், ' சம்தா சைனிக் தளத்தை'(SAMTA SAINIK DAL) நிறுவினார். சம்தா சைனிக் தளத்தின் செயலராக இருந்தவர் பாபு ஹர்தாஸ்.


'ஜெய் பீம்' முழக்கம் எப்படி உருவானது என்ற கேள்விக்கு பதிலளித்த தலித் சிறுத்தைகள் அமைப்பின் இணை நிறுவகர் ஜே.வி.பவார், "பாபு ஹர்தாஸ், கமாட்டி மற்றும் நாக்பூர் பகுதிகளைச் சேர்ந்த தொண்டர்களின் ஒரு அமைப்பை உருவாக்கினார். ஒருவரையொருவர் சந்திக்கும்போது நமஸ்கார், ராம் ராம் அல்லது ஜௌஹர் மாயாபாப் என்பதற்குப் பதிலாக 'ஜெய் பீம்' என்று கூறி வாழ்த்துமாறு இந்த அமைப்பின் தொண்டர்களை அவர் கேட்டுக் கொண்டார்,"என்று குறிப்பிட்டார்.

" முஸ்லிம்கள் 'சலாம் அலைக்கும்' என்று சொல்லும்போது, அதற்கு பதிலளிக்கும் விதமாக 'அலைக்கும் சலாம்' என்று சொல்லப்படுவது போல, 'ஜெய் பீம்' என்ற வாழ்த்துக்கு பதில் சொல்லும்போது 'பால் பீம்' என்று சொல்ல வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார், அவர் உருவாக்கிய பாதை லட்சியப்பாதையாக மாறியது."என்று அவர் கூறினார்.

ராஜா தாலே, நாம்தேவ் தசல் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியதோடு, கூடவே பவார், தலித் சிறுத்தைகள் அமைப்பு பற்றிய புத்தகத்தையும் வெளியிட்டார்.

"1938 ஆம் ஆண்டு, அவுரங்காபாத் மாவட்டத்தின் கன்னட் தாலுகாவில் உள்ள மக்ரான்பூரில் அம்பேத்கர் இயக்கத்தின் தொண்டரான பாவுசாகேப் மோரே, ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இந்த கூட்டத்தில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரும் கலந்துகொண்டார். பாபு ஹர்தாஸ் இந்த முழக்கத்தை எழுப்பியபோது பாவுசாகேப் மோரே இதை ஆதரித்தார்,"என்று அவர் மேலும் தெரிவித்தார்.


 பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நேரடியாக 'ஜெய் பீம்' என்று அழைக்கப்பட்டபோது .

பாபாசாகேப் டாக்டர்
அம்பேத்கர் வாழ்ந்த காலத்திலேயே 'ஜெய் பீம்' என்ற வாழ்த்து தொடங்கியது. இயக்கத்தின் ஆர்வலர்கள் ஒருவரையொருவர் 'ஜெய் பீம்' என்று அழைத்துக் கொண்டனர். ஒரு ஆர்வலர்  
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரை நேரடியாக 'ஜெய் பீம்' என்று அழைத்தார் என்று மகாராஷ்டிர மாநிலமுன்னாள் நீதிபதி சுரேஷ் கோர்போடே, கூறுகிறார்.

சுரேஷ் கோர்போடே, செஷன்ஸ் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியும், விதர்பாவில் உள்ள தலித் இயக்க அறிஞரும் ஆவார். பாபு ஹர்தாஸின் பணிகள் பற்றி எழுதியுள்ள அவர், அது குறித்து விரிவுரையும் ஆற்றியுள்ளார்.

"மஹாராஷ்டிரா முழுவதும் தலித்துகளின் மேம்பாட்டிற்காக டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தொடங்கிய இயக்கத்தில் பல இளைஞர்கள் தாமாக முன்வந்து பங்கேற்றனர். அவர்களில் ஒருவர் பாபு ஹர்தாஸ் எல்என்,"என்று அவர் கூறுகிறார்.

 ஜெய் பீம் கோஷம் உருவாக்கிய பாபு ஹர்தாஸ் எல்.என்.

"பாபு ஹர்தாஸ் இளமைப் பருவத்திலிருந்தே சமூகப் பணியில் ஆர்வம் கொண்டிருந்தார். 1904ல் பிறந்த அவர் 1920ல் சமூக இயக்கத்தில் சேர்ந்தார். நாக்பூரில் உள்ள பட்வர்தன் உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேஷன் படித்தார். அவர் 'ஜெய் பீம் கோஷத்தை உருவாக்கியவர்' என்று அவர் அழைக்கப்படுகிறார். பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரால் ஈர்க்கப்பட்டு பாபு ஹர்தாஸ், 1924 இல் கமாட்டியில் 'சந்த் சோக்மேலா தங்கும்விடுதியை' நிறுவினார். இது கிராமப்புற மாணவர்களுக்கு தங்குமிடத்தை வழங்கியது. பகலில் வேலை செய்யும் மாணவர்களுக்கு இரவுப் பள்ளிகளையும் அவர் தொடங்கினார். ஆங்கிலம் கற்றுத்தரவும் ஆரம்பித்தார்,"என்று சுரேஷ் கோர்போடே குறிப்பிட்டார்.

"அவர் 1925 இல் பீடித் தொழிலாளர் சங்கத்தை நிறுவினார். விதர்பாவின் தலித் மற்றும் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தேந்து இலைகளை சேகரித்து, பீடி ஆலைகளில் வேலை செய்தனர், கூடவே வீடுகளிலும் பீடி தயாரித்தனர். பீடி தயாரிப்பாளர்களும் ஒப்பந்தக்காரர்களும், தொழிலாளர்களைச் சுரண்டினர். தொழிலாளர்களுக்கு உரிய பணத்தைக்கொடுங்கள் என்று அப்போது அவர் கூறினார்."

பீடி தொழிலாளர் சங்கத்தின் பணி விதர்பாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ராமச்சந்திர க்ஷிர்சாகரின் 'தலித் மூவ்மெண்ட் இன் இண்டியா அண்ட் இட்ஸ் லீடர்ஸ், 1857-1956' என்ற புத்தகத்தில் , 1930-ல் மத்தியப் பிரதேச பீடி தொழிலாளர் சங்கத்தை ஹர்தாஸ் நிறுவியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

"1932 ஆம் ஆண்டு கமாட்டியில் 'தீண்டப்படாதார் ' இயக்கத்தின் இரண்டாவது அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. வரவேற்புக் குழுவின் தலைவராக பாபு ஹர்தாஸ் இருந்தார். அவர் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கருக்கு பெரிய வரவேற்பு அளித்தார்,"என்று கோர்போடே தெரிவித்தார்.


1927ல் 'மஹாரத்' என்ற சிறு இதழை ஹர்தாஸ் ஆரம்பித்ததாக வசந்த் மூன் தனது 'பஸ்தி' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பும் கிடைக்கிறது. கெயில் ஓம்வெட்த்,' பஸ்தி' என்ற சொல்லை 'தீண்டப்படாதவராக வளர்வது' என்று மொழிபெயர்த்துள்ளார்.


 பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் சொன்னார் - என் வலது கை போய்விட்டது.

1931-1932ல் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டின் விளைவாலா 1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்க சட்டம் உருவாகி அடுத்து நடைபெறும் முதல் தேர்தலில் கலந்து நமது பிரதிநிதிகளை உருவாக்க சுதந்திர தொழிலாளர் கட்சியை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
 ஏற்படுத்தினார். 1937 சட்டமன்றத் தேர்தலில் ஹர்தாஸை வேட்பாளராக நிறுத்தியதாக வசந்த் மூன் எழுதுகிறார். ஒரு செல்வந்தர் அவருக்கு எதிராக போட்டியிட்டார். இந்த நபரை வசந்த் மூன் 'லாலா' என்று அழைக்கிறார்.


ஹர்தாஸைத் தொடர்பு கொண்ட ஒருவர் வேட்புமனுவை திரும்பப்பெறச் சொன்னார். இதற்காக அவருக்கு பணம் தருவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் ஹர்தாஸ் அதை மறுத்துவிட்டார்.

 *"நான் பாபாசாகேப் டாக்டர்
அம்பேத்கருக்காக நிற்கிறேன்.இப்போது எங்களுக்கான உரிமை கிடைக்கும்."என்று அவர் சொன்னார்.*

வசந்த் மூனின் புத்தகத்தில் உள்ள இந்தக் கதை இத்துடன் முடிவடையவில்லை. லாலா, பாப்பு உஸ்தாத் என்ற வலிமையான மல்யுத்த வீரரை பாபு ஹர்தாஸிடம் அனுப்பினார். அவர் பாபு ஹர்தாஸிடம், "உங்கள் வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்காக சேட்ஜி பத்தாயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். அதை நீங்கள் வாங்கிக்கொள்ளவில்லை என்றால், அவர் உங்களைக் கொன்றுவிடுவார்," என்று கூறினார்.

"எனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அவர் தப்ப மாட்டார் என்று எனக்குத் தெரியும்," என்று ஹர்தாஸ் பதிலளித்தார். "அது வேறு விஷயம். ஆனால் நீங்கள் இறந்துவிட்டால் அதனால் உங்களுக்கு என்ன பயன்," என்று பாப்பு உஸ்தாத் கூறினார். அப்படியும் ஹர்தாஸ் பின்வாங்கவில்லை. "அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்," என்று கூறிவிட்டு பாப்பு உஸ்தாத் வெளியேறினார்.


 சேட்டின் பணமும் அதிகார பலமும் இருந்தபோதிலும், பாபு ஹர்தாஸ் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய மாகாணங்களின் கவுன்சில்-பரார் உறுப்பினரானார். 1939 இல் காசநோய் காராணமாக அவர் காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் தலித்துகள் மற்றும் தொண்டர்கள் திரண்டிருந்தனர். கமாட்டி மற்றும் நாக்பூர் பகுதியில் இருந்து தலித்துகள் வந்திருந்தனர். இதனுடன், பண்டாரா மற்றும் சந்திரபூர் பகுதிகளைச் சேர்ந்த பீடித் தொழிலாளர்களும் இறுதி அஞ்சலி செலுத்த கமாட்டிக்கு வந்தனர்.


 "அவரது மரணத்திற்குப் பிறகு, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், 'எனது வலது கை போய்விட்டது' என்று கூறினார்," என குறிப்பிடுகிறார் ஓய்வுபெற்ற நீதிபதி கோர்போடே.

கமாட்டியில் உள்ள கர்ஹன் ஆற்றங்கரையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. ஹர்தாஸின் நினைவிடம் கமாட்டியில் அமைந்துள்ளது.

"ஹர்தாஸ் ஒரு விடி வெள்ளியைப் போல வானத்தில் பிரகாசித்தார். அவருடைய ஒளி மற்றவர்களுக்கு பாதையைக்காட்டியது. ஆனால் ஒரு நொடியில் அவர் மறைந்துவிட்டார்,"என்று மூன் எழுதியுள்ளார்.

சுபோத் நாக்தேவின் மராத்தி திரைப்படமான 'போலே இந்தியா ஜெய் பீம்' , பாபு ஹர்தாஸின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.

 'ஜெய் பீம்' , ஏன் சொல்லப்பபடுகிறது?

"பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். அவரது பெயரை சுருக்கமாக உச்சரிக்கும் வழக்கம் ஆரம்பத்தில் மகாராஷ்டிராவில் இருந்தது. படிப்படியாக இந்தியா முழுவதும் அவர் ஜெய் பீம் என்று அழைக்கப்படலானார்," என்று எழுத்தாளர் நரேந்திர ஜாதவ் விளக்குகிறார்.

டாக்டர் ஜாதவ் 'Ambedkar- Awakening India's Social Conscience ' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்நூல் 'அம்பேத்கரின் கருத்தியல் தன்மை' என்று அழைக்கப்படுகிறது.

"ஜெய் பீம் என்ற சொல்லை கொடுத்தது பாபு ஹர்தாஸ். இது எல்லா மக்களுக்கும் வெற்றிக்கு குறைவானதல்ல.
 *பட்டியலின, பழங்குடி இன மற்றும் பிற்படுத்தப்பட்ட
மக்களின் சுயமரியாதையைத் தூண்டி,மனிதர்களாக வாழ்வதற்கான உரிமையையும் வழியையும் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஏற்படுத்திக் கொடுத்தார்,"* என்று டாக்டர் ஜாதவ் தெரிவித்தார்.

 'ஜெய் பீம் ஒரு முழுமையான அடையாளம்'

ஜெய் பீம் என்ற முழக்கம் ஒரு அடையாளமாக மாறிவிட்டது என்று மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான உத்தம் காம்ப்ளே கூறுகிறார்.

 *"ஜெய் பீம் என்பது வெறும் வாழ்த்து மட்டும் அல்ல. அது ஒரு முழுமையான சமூக சமத்துவத்திற்கான அடையாளமாக மாறியுள்ளது.இந்த அடையாளத்தின் பல்வேறு நிலைகள் உள்ளன.'ஜெய் பீம்' என்பது சமூக சமத்துவ மற்றும் சுயமரியாதைக்கான
போராட்டத்தின் பகுதியாக மாறியது. அது ஒரு பண்பாட்டு அடையாளமாகவும், சமூக-அரசியல் அடையாளமாகவும் ஆனது. சமூக அரசியல் பண்பாட்டு மாற்றத்தின் ஒட்டுமொத்த அடையாளமாக அது மாறிவிட்டது.*

 'ஜெய் பீம்', முழக்கம் பகுஜன் இயக்கத்தின்  அடையாளம் ஆகும்.

 சூர்யாவின் படத்தைப் பார்த்தால் 'ஜெய் பீம்' என்ற வார்த்தை நேரடியாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பது தெரியும்.

 *ஜெய் பீம் என்பது சமூக- பண்பாட்டு-அரசியல்
மாற்றத்தின் அடையாளமாகும்.*

"'ஜெய் பீம்' என்று சொல்வது வணக்கம் என்று சொல்வது போல எளிதானது அல்ல. ஒருவர் அம்பேத்கரின் சித்தாந்தத்துடன் நெருக்கமாக இருக்கிறார் என்பது இதன் பொருள். 'போராட வேண்டிய அவசியம் உள்ள இடத்தில் 'நான் போராடுவேன்' என்று இந்த வார்த்தை சொல்கிறது," என்று மது காம்ப்ளே சுட்டிக்காட்டுகிறார்.

 மகாராஷ்டிராவிற்கு வெளியே 'ஜெய் பீம்' கோஷம் எப்போது தொடங்கியது?

உத்தரபிரதேசம், பிகார், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் 'ஜெய் பீம்' முழக்கத்தை எளிதாகக் கேட்க முடிகிறது.

அம்பேத்கரின் கருத்துகள் பஞ்சாபிலும் பரவியுள்ளன. இங்கு கோஷங்கள் எழுப்பப்படுவது மட்டுமல்லாமல், பிரபல பாடகி கின்னி மாஹியும், 'ஜெய் பீம்-ஜெய் பீம், போலோ (சொல்லுங்கள்) ஜெய் பீம்' என்று பாடியுள்ளார்.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் அதாவது CAA க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தபோது, முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்பாளர்கள் டாக்டர் அம்பேத்கரின் படங்களை கையில் ஏந்தியிருந்தனர். 'ஜெய் பீம்' என்ற முழக்கம் எந்த ஒரு சமூகத்திற்கும், புவியியல் எல்லைக்கும் மட்டுமே சொந்தமானதல்ல என்பதை இது உணர்த்துகிறது.

இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து பதில் அளித்த டாக்டர் நரேந்திர ஜாதவ், "பாபாசாகேப்பின் முக்கியத்துவம் மற்றும் கருத்துக்கள் பரவியதால், இந்த முழக்கம் எல்லா இடங்களுக்கும் பரவியது. மண்டல் கமிஷனுக்குப் பிறகு, நாட்டில் ஒரு கருத்தியல் எழுச்சி ஏற்பட்டது. தலித்துகள் மத்தியில் மட்டுமல்ல, எல்லா ஒடுக்கப்பட்ட,சுரண்டலுக்கு ஆளான அனைத்து பகுஜன்
மக்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்பட்டது," என்று குறிப்பிட்டார்.

 JAI BHIM.

https://youtu.be/ZhYRz-v6fTc

Monday, October 25, 2021

சிலருக்கு மெக்காலே என்றால் வெறுப்புணர்வு தோன்றக் காரணம்

 இன்று லார்ட் மெக்கலே அவர்களின் பிறந்த நாள்.
அவரை நமக்கு ஒரு வில்லனாகத்தான் அறிமுகப்படுத்தினார்கள்.

“இந்தியாவின் பாரம்பரிய கல்வி முறையை சிதைத்து, வெள்ளைக்காரனுக்கு பியூன் வேலைப்பார்க்க ஆங்கிலத்தை கற்பித்த கயவன்” என்று தான் எனக்கும் அவர் அறிமுகம்.

குடும்பம் என்கிற குட்டி வட்டத்தை விட்டு வெளி உலகை நான் கவனிக்கிறேன்....
மோதிலால் நேரு எங்கு படித்தார்?
வங்காளிகள் ஏன் இவ்வளவு அதிக நோபல் பரிசு வாங்குகிறார்கள்?
இந்தியாவின் முதல் செக்யூலர் பள்ளி/ கல்லூரிகளை யார் துவக்கினார்கள்....?
கல்வி மறுக்கப்பட்ட ரெட்டைமலையின் மகன் ஶ்ரீநிவாசன் எப்படி டிகிரி வாங்கினார்?

இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தான்:
லார்ட் தாமஸ் பபிங்க்ட்டன் மெக்கலே.

அவர் இங்கிலாந்து பாராளுமன்றத்தி லேயே நிறவேற்றுமைக்கு எதிராக குரல் எழுப்பியவர்.இந்தியாவிற்கு வந்தபோது ம் அதே செக்யூலர் மனப்பாண்மையை இங்கும் பரப்பியவர்.

அது வரை இந்தியாவில் கல்வி என்றால்:
1) வேத பாட சாலை
2) இஸ்லாமிய மதராசா
3) கிறுஸ்வ மிஷினரி

இந்த மூன்றும் வெறும் மதக்கல்வியை மட்டுமே கற்பிக்கின்றன. இதற்கு இங்கி லாந்து அரசு செலவு செய்வது பொது மக்களுக்கு போய் சேரவில்லை. வெறும் மூடநம்பிக்கைகளை மட்டுமே வளர்க்கிறது...என்று முதன் முதலில், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல், தாய் மொழி என்கிற ஐந்துவித பாடங்களை உள்ளடக்கிய பொது கல்வியை கொண்டு வந்தவர் மெக்கலே.

இதற்கு அடுத்து அவர் எடுத்துக்கொண்ட பிராஜெக்ட் இன்னும் சிறப்பானது. அது வரை இஸ்லாமியருக்கு ஷரியா சட்டம், இந்துக்களுக்கு மனுச்மிருத்தி என்றிருந்த சட்டத்தை, அனைவருக்கும் ஆன “இந்தி யன் பீனல் கோடு” IPC யை கொண்டு வந்தவர் இதே லார்ட் மெக்கலே தான்.

இன்றளவும் சிலருக்கு மெக்காலே என்றால் வெறுப்புணர்வு தோன்றக் காரணம்,  அவர் ஒடுக்கப் பட்ட, தாழ்த்தப்பட்ட, பட்டியலின, தீண்டத் தகாதோர்க்கு பொன் பொருளை கொடுத்திருந்தால் கூட தாங்கிக் கொண்டிருப்பார்கள்..மாறாக அறிவை பெருக்கும் அழியாத கல்வியை கொடுத்து விட்டார், தங்களுக்கான அடிமை சமூகத்தை இல்லாமல் ஆக்கிவிட்டார் என்ற வயிற்றெரிச்சல் தான்...

லார்டு மெக்கலே திருமணம் ஆகாதவர். அவருக்கு genetic சந்ததியினர் இல்லை. ஆனால் நாம் எல்லாம் அவருடைய memetic வாரிசுகள்!

அவரைப் பற்றி, ஆயிரம் அவதூறுகள் வல்லாதிக்க சக்திகள் பரப்பினாலும், அவர் வகுத்த கொள்கையினால் பயன்பெற்ற படித்தவன், ஒருநாளும் அவர் புகழ் பாடாமல் உறங்க மாட்டான்...

நமக்கெல்லாம் கல்வியையும், சட்டத்தையும் கொடுத்த நம் ஞானத்தலைவன்,
மாமனிதர் மெக்கலே!

மனம் கனிந்த நன்றியுடன், பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!💐💐💐💐

Tuesday, October 05, 2021

வாலி சுக்கிரிவன் உண்டான கதை

 *"அத்திப் பழத்தைப் பிட்டால் அத்தனையும் சொத்தை"!*

இராமாயணத்திலிருந்து ஒரு அத்திப்பழம்

பிரம்மா ஒருநாள் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்த போது அவனுடைய கண்களிலிருந்து வீரியம் பெருகியது. அவன் அதை கைகளில் ஏந்தி பூமியில் விட்ட பொழுது பிறந்தவன் தான் "ரிட்சரஜஸ்". ஒரு நாள் அவ்வானரன் மேரு மலையிலிருந்த ஒரு நீரோடையில் மூழ்கி எழுந்தபொழுது அழகிய பெண்ணாக மாறிவிட்டான். பிரம்மாவை கண்டு பேசிவிட்டு வான்வழியாக திரும்பிக் கொண்டிருந்த இந்திரனும் சூரியனும் இக்கன்னியைக் கண்டு கீழ் இறங்கினர். தேவேந்திரனுடைய வீரியம் அக்கன்னியின் வால் பகுதியில் விழுந்ததால் "வாலி" உண்டானான். சூரியனுடைய வீரியம் அவளுடைய கழுத்தில் விழுந்ததால் "சுக்கிரிவன்" உண்டானான். பிரம்மனிடம் சென்று அப்பெண் முனையிட்டாள். அவர் அதைக் கேட்டு சிரித்து, "நீ இக்குழந்தைகளுடன் இதோ இங்குத் தோன்றும் ஏரியுள் மூழ்கு வாயாக"என்றான். அவள் அவ்வாறே மூழ்கி எழுந்தவுடன் மீண்டும் பழைய வானர வடிவைப் பெற்றாள்.

(யுத்த காண்டம், சருக்கம் 67)

👉 கண்ணில் காம நீர் வடியுமா?
👉 நீரோடையில் குளித்தெழுந்தால் ஆண் பெண்ணாக மாறிவிடுவானா?
👉 கழுத்திலும் வாலிலும் ஏன் வீரியத்தை விடனும்?
👉 கழுத்திலும் வாலிலும் விழந்த வீரியத்தால் குழந்தைகள் பிறக்குமா?
👉 தேவர்களுக்கெல்லாம் அரசனான தேவேந்திரனின் ஒழுக்கம் இது தானா?
👉 சூரிய பகவானின் யோக்கியதை இதுதானா?
👉 களவுக் காமத்திலும் கூட்டா? என்றெல்லாம் உங்கள் சிந்தனை வேலை செய்கிறதா?
👉ஆபாசம்; அநாகரிகம்; அபத்தம் என்கிறீர்களா?

Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - முதல் உலகப்போரில் இந்தியா கொடுத்த ஒத்துழைப்பு

இந்தியாவிற்கு அதிகப்படியான உரிமைகளையும் அதிகாரங்களையும் வழங்க பிரிட்டன் முன் வந்தது.

இந்திய மந்திரி எட்வின் மாண்டேகு , பிரிட்டிஷ்  நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார் இந்திய மக்களுக்கு அரசியலில் அதிக அதிகாரங்கள் வழங்கப்படும் பிரிட்டிஷ் பேரரசின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு பொருப்பு ஆட்சி வழங்கப்படும் அதை படிப்படியாக உருவாக்கும் நோக்கத்துடன். நிர்வாகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் இந்தியர்களை அதிகமாக பங்கெடுத்துக் கொள்ளச் செய்து - சுயாட்சி அமைப்புகளை வளர்ச்சியுறச் செய்யும் என்றது அந்த அறிக்கை 1917 ஆகஸ்ட் 20 ஆம் நாள் இந்திய அரசின் சிறப்பு அரசிதழிலும்அது வெயிடப்பட்டது இந்திய விடுதலைக்கு பிரிட்டன் காட்டிய  முதல் அடையாளம் அது.

காங்கிரஸ் அறிக்கை
-----------------------------------.
அந்த அறிக்கை பற்றிய இந்தியர்களின் கருத்தறிய இந்திய மந்திரி எட்வின் மாண்டேகுவும் அப்போது இந்திய வைஸ்ராயாக இருந்த லார்டு செமஸ்போர்டும் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். பிரிட்டிஷாரின் அடிமை என்ற நிலையிலிருந்து பிரிட்டிஷாருக்கு சமமான நாடு என்ற நிலைக்கு இந்தியா வரவேண்டும். அதற்கு சுயாட்சி அமைவதுதான் தீர்வு அதற்கான ஆணையை பிரிடிஷ் அரசு வெளியிட வேண்டும் என்று அறிக்கை கொடுத்தது காங்கிரஸ் ,முஸ்லீம் லீக்கும் அதே கருத்தைக் கூறியது. இந்திய தேசியக் காங்கிரஸ், முஸ்லிம் லீக் இரண்டு கட்சிகளின் கருத்தை ஆதரிக்கிறோம் என்றது சென்னை மாகாண சங்கம்.

1917 டிசம்பர் 24ம் நாள் அக்குழு சென்னை வந்தது தென்னிந்திய நல உரிமைச் சங்கம் சார்பாக திவான் பகதூர் ராஜரத்ன முதலியார் தலைமையில் ராவ் பகதூர், பிட்டி தியாகராயர் அக்குழுவிடம் ஒரு அறிக்கை கொடுத்தார் பிரிடிஷ் அரசு அறிவித்துள்ள பொருப்பு ஆட்சி முறை உயர் சாதி வாகுப்பினரான பார்ப்பனர்களுக்கு அதிகாரமும் ஆதிக்கமும் கொடுப்பதாகவும் பிற்படுத்தப்பட்ட பார்ப்பனரல்லாத பெரும்பான்மை மக்களுக்கு திங்கு விளைவிப்பதாகவும் அமையும்.
சமூக சீர்திருத்தம் ஏற்பட்டு, சாதிப்பிரிவுகள் அனைத்தும் அடியோடு ஒழிகின்ற காலம் வரை - அரசின் நிர்வாகத் துறைகள் அத்தனையிலும், வகுப்புவாரி பிரதிநிதித்துவ அடிப்படையில் இடா ஒதுக்கீடு செய்யவேண்டும்.
ஒவ்வொரு சமூகப் பிரிவு நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படும் விதத்தில் வகுப்புவாரி பிரதி நிதித்துவம் கொடுத்து சட்டாமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது அந்த அறிக்கையின் சுருக்கம்.

நூல்    ; திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 54 to 55.

1000 ஆண்டுப் போராட்டமும் 1000 ஆண்டுச் சாதனையும்!

 1000 ஆண்டுப் போராட்டமும் 1000 ஆண்டுச் சாதனையும்!
          -ப.திருமாவேலன்

"புரட்சி என்பது பெரியதாகத்தான் இருக்கும் என்று நினைக்காதீர்கள். என்னைப் போலக் குள்ளமாகவும் இருக்கும்” என்று பேரறிஞர் அண்ணா ஒரு முறை சொன்னார்!

புரட்சி என்பது பெரும் முழக்கம் கொண்ட தாகவே இதுவரை இருந்திருக்கிறது. முதன் முதலாக அது ‘அமைதி’யாகவே நடந்திருக் கிறது. ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோராய் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்துகாட்டி இருக்கும் "அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற புரட்சி சத்தமில்லாமல் செய்யப்பட்டுள்ளது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட சமயச் சான்றோர்களும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பகுத்தறிவாளர்களும் ஒரு சேரப் பாராட்டும் புரட்சிகரச் செய்கை இது.  காவியும் கருப்பும் ஒன்று சேர்ந்து பச்சைக்கொடி காட்டி இருக்கும் பார் போற்றும் புரட்சி இது!

‘யாருக்கும் சொல்லக் கூடாது’ என்று சொல்லப்பட்ட மந்திரத்தை கோபுரத்தின் மீதேறிச் சொன்னார் இராமானுசர். ஆயிரம் ஆண்டுக்கு முன்னால். இந்திய வைதிகத் தத்துவ மரபுக்கு மூவராகச் சொல்லப்பட்ட ஆதிசங்கரர் - மத்வர் - வரிசையில் மூன்றாமவர் இராமானுசர். ‘யாருக்கும் சொல்லக்கூடாத மந்திரத்தை இப்படி கோபுரத்தின் மீதேறிச் சொன்னால் நரகத்துக்குப் போவாய்’ என்று சபித்தார் திருக்கோட்டியூர் நம்பி. ‘எல்லோரும் முக்தி அடைய நான் நரகம் போவது பாக்கியமே’ என்று சொன்னதால் இராமானுசர், ‘புரட்சித் துறவி’யாக இன்று வரை அடையாளம் காட்டப்படுகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் பேரும் ஆயிரம் ஆண்டுகள் நின்று நிலைக்கத்தான் போகிறது; பெரிய கோவில் இருக்கும் வரை இராசராசன் பேர் இருக்கும் என்பதைப் போல!

எல்லா இடங்களிலும் விரட்ட முயற்சிக்கப்படும் ஜாதி ( சாதி என்று எழுதி அதனை தமிழ்ப்படுத்தக் கூடாது என்கிறார் பெரியார்!) கடைசியாக கர்ப்பக்கிரகத்துக்குள் போய் ஒளிந்து கொண்டது. அங்கும் விரட்ட எடுத்த அஸ்திரம்தான், அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் என்பதாகும். சுயமரியாதை இயக்க காலத்தின் முதல் போராட்டமே அதுதான்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஜே.என்.இராமநாதனும், திருவண்ணாமலைக் கோவிலில் ஜே.எஸ்.கண்ணப்பரும், திருச்சி - மயிலாடுதுறை - திருவானைக்காவல் கோவில்களில் கி.ஆ.பெ.விசுவநாதமும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் என்.தண்டபாணியும், ஈரோடு ஈஸ்வரன் கோவிலில் குத்தூசி குருசாமி ஏற்பாட்டில் மூவரும் நுழைந்தது என்பது 1927-30 ஆகிய ஆண்டுகளில் ஆகும். சுயமரியாதை இயக்கத்தவர் கூட்டம் நடந்தால் கோவிலுக்குள் நுழைந்துவிடுவார்களோ எனப் பயந்து கோவில்களைப் பூட்டிய காலம் அது. இது தொடர்பான பல்வேறு வழக்குகள் பல ஊர்களில் நடந்தன. இது தான் பின்னர் ஆலய நுழைவு மசோதா ஆனது.

1970 ஜனவரி மாதம் தந்தை பெரியார் அவர்கள் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்தார்கள். ஆலயங் களில் ஜாதிபேதம் இருக்கக் கூடாது, அனைவரும் கர்ப்பக்கிரகம் வரை செல்ல வேண்டும், கர்ப்பக்கிரகம் வரை சென்று வழிபாடு செய்வதற்கு ஜாதி ஒரு காரண மாக இருக்கக் கூடாது. அந்த அடிப்படை யில் கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார்.

இந்தப் போராட்டம் நடத்த வேண்டாம் என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஒரு வேண்டுகோள் அறிக்கையை வெளியிட்டார். "அப்படி ஒரு கிளர்ச்சி நடத்தாமலேயே அவரது எண்ணத்தை நடை முறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும்” என்று அறிவித்தார். ‘அர்ச்சகர் களுக்கென சில சிறப்புத் தகுதிகள் வேண்டும், பயிற்சிகள் வேண்டும், அப்படி பயிற்சி பெறுகிறவர்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் அதில் தேர்வு பெற்று அர்ச்சகர் ஆகலாம்' என்று முதலமைச்சர் கலைஞர் அறிவித்தார். முதலமைச்சர் கலைஞரின் அறிவிப்பை ஏற்ற தந்தை பெரியார் தனது போராட்டத்தைத் தள்ளி வைத்தார்.

2.12.1970 அன்று தமிழ்நாடு சட்ட மன்றத்தில் அர்ச்சகர் சட்டம் நிறை வேற்றப்பட்டது. "இந்து சமய அறக்கட் டளை திருத்த மசோதா” என்று இதற்குப் பெயர். இந்தச் சட்டத்தை ஆதரித்து தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் சட்டமேலவையில் பேசினார். ஆனால் இந்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிலர் வழக்கு தாக்கல் செய்தார்கள். இந்த வழக்கில் 14.3.1972 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. "சட்டம் செல்லுபடியானதே!’’ என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம். ஆனாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இத்திருத் தத்துக்காக அன்றைய ஒன்றிய அரசிடம் பலமுறை முதல்வர் கலைஞர் வலியுறுத்தினார்.

1973 டிசம்பர் 8,9 ஆகிய நாள்களில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக தந்தை பெரியார் அறிவித்தார். இதற்கிடையே டிசம்பர் 24 ஆம் தேதி அன்று தந்தை பெரியார் மறைந்தார்கள். "பெரியாரின் எவ்வளவோ ஆசைகளை நிறைவேற்றினோம். ஆனால் இந்த அர்ச்சகர் சட்டத்தை எழுந்து நடமாட வைக்க முடியவில்லை. பெரியார் அவர்களது நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்காமலேயே புதைத்திருக்கிறோம்’’ என்று முதல்வர் கலைஞர் அவர்கள் அப்போது பேசினார்கள். "அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும்’’ என்ற தீர்மானத்தையும் சட்டமன்றத்தில் நிறை வேற்றினார் முதல்வர் கலைஞர்.

2006 இல் மீண்டும் தி.மு.க. ஆட்சி. 16.5.2006 - அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. "உரிய பயிற்சியும் தகுதியும் உள்ள அனைத்துச் ஜாதியின ரும் இந்து சமய திருக்கோவில்களில் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையைப் பிறப்பிப்பது என அமைச்சரவைக் கூட்டம் தீர்மானிக்கிறது. இது தந்தை பெரியாரின் நெஞ்சில் உள்ள முள்ளை அகற்றும் அரும்பணி என அமைச்சரவை கருதுகிறது.’’ என்று அறிவிக்கப் பட்டது. மீண்டும் நீதிமன்றத்தில் தடை. இறுதித் தீர்ப்பு - 16.12.2015 உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படி சட்டத்துக் குத் தடை இல்லை. சடங்கு முறையில் மாற்றம் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டது.

சடங்கு, சம்பிரதாயம் எதையும் மாற்ற வில்லை. உரிய பயிற்சி பெற்ற வர்கள் சடங்கு, சம்பிரதாயம் செய்யலாம் என்பதுதான் இதன் உள்ளடக்கமே. அத்தகைய தகுதியும், திறமையும் பெற்றவர்களைத்தான் அர்ச்சகர் ஆக்கி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஜாதியால் மூடப்பட்ட கதவை, சட்டத்தால் திறந்திருக்கிறார் முதலமைச்சர். அதுவும் சத்தமில்லாமல்!

புரட்சி சில நேரங்களில் இப்படித் தான் அமைதியாகவும் வரும். இந்த அமைதிப் புரட்சி ஆயிரம் ஆண்டு களுக்குப் பேசப்படும். ‘அன்றொரு நாள் கோபுரத்தின் மீதேறி’ என்று சொல் வதைப் போல... ‘கோட்டையின் மீதேறி மு.க.ஸ்டாலின் சட்டம் போட்டார்' என்று சொல்லப்படும்.

அரசியலில் முதலமைச்சர்கள் வரலாம். போகலாம். சமூகத்தில் மாற்றம் செய்பவர்களே, தனித்து பிரித்தெடுத்து வரிசைப்படுத்தப்படு வார்கள். அந்த வரிசையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேர், போய்ச் சேர்ந்துவிட்டது. என்றும் அழியாப் பேர் இது! ஆயிரமாண்டுப் பேர் இது!

திராவிடம் அறிவோம் - சென்னை மாகாண சங்கம்

பிராமணர் அல்லாத பெருங்குடி மக்களே ! நாங்கள் தான் உங்களுடைய உண்மையான பிரதநிதிகள், எங்களை நம்புங்கள் எல்லோரும் வாருங்கள் என்று அழைப்பு விடுத்த போட்டி இயக்கம்,1917 செப்டம்பர் 15 ம் நாள் கோகலே மண்டபத்தில் கூடியது. காங்கிரஸில்  உள்ள பார்ப்பனர் அல்லாதாருக்கான தனி அமைப்பு என்றும் வலைவீசியது.

தலைவர் தூண்டிலில் மாட்டியவர் திவான்பகதூர் கேசவ பிள்ளை. 1885 -ல் ஆலன் ஆக்டோவியன் ஹியும்,  காங்கிரஸ் கட்சியை துவங்கியபோது அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.துணைத் தலைவர்களாக லாட்கோவிந்த தாஸ், சல்லா குருசாமி செட்டியார் ஈரோடு ராமசாமி நாயக்கர்(பெரியார்) நாகை வி.பக்கிரிசாமி பிள்ளை . சீர்காழி சிதம்பரநாத முதலியார், தஞ்சாவூர் சீனுவாச பிள்ளை, ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

கோபால்சாமி முதலியார், குருசாமி நாயுடு, டாக்டர் வரதராசலு நாயுடு, சர்கரைச் செட்டியார், கல்யான சுந்தர முதலியார், (திரு,வி,க.) ஆகியோர் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்..

இதில் பெரியார் அப்போது காங்கிரஸில் உறுப்பினராக இல்லை . காங்கிரஸ் தலைவர்களான சி, ராஜகோபாலாச்சாரியார், அன்னிபெசன்ட், டாக்டர் வரதராஜலு, கருணாகரன் மேனன் ஆகியோரிடம் நல்ல தொடர்பில் இருந்தார், இராஜகோபாலாச்சாரியார், வாரதராஜலு நாயுடு இருவரும் வற்புறுத்தி அழைத்து சென்னை மாகாண சங்க துணைத்தலைவராக்கினார்.

பார்ப்பனர் அல்லாதார் நலன் என்ற நோக்கத்துடன் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் அமைக்கப்பட்டவுடன், ஆகாயத்திற்கும் பூமிக்குமாக அலறிக் குதித்து எதிர்ப்பு தெரிவித்த இந்து ஏடும், நியூ இந்தியா ஏடும், காங்கிரஸில் உள்ள பார்ப்பனரல்லாதாருக்கான அமைப்பு என்று உறுவாக்கப்பட்ட சென்னை மாகாண சங்கத்தை வரவேற்று எழுதின. இப்படி ஒரு சங்கம் தேவை, பார்ப்பனரல்லாதாருக்கான நிரந்தர அமைப்பு வளர்ந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை - தற்காலிகம் என்ற சொல்லாக வெளிவந்தது,

நூல்    ; திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை,
பக்கம் ; 52 to 53.

திராவிடம் அறிவோம் - இந்தியா என்பது ஒரு நாடல்ல, துணைக்கண்டம்

இந்தியா என்பது ஒரு நாடல்ல, துணைக்கண்டம். குறிப்பாக தென்னிந்தியாவில் திராவிடரும் - பார்ப்பனரும் வெவ்வேறு இனத்தவர்.

மதத்தாலும், வருணாசிரம தருமத்தாலும் பிளவுபட்டுத் திணறும் மாபெரும் திராவிடச் சமுதாயம்.
யானைப் பாகனிடம் அடங்கிப்போயி பழக்கப்பட்ட யானையைப் போன்று இருக்கிறது.
எண்ணிக்கையில் குறைவான பார்ப்பனர்கள், யானைப் பாகனைப் போல்திராவிடச் சமுதாயத்தைப் பன்னெடுங்காலமாகவே வஞ்சகமாக அடக்கி வைத்திருக்கிறார்கள்.

என்றறேனும் ஒருநாள் யானைப் பாகனை விரட்டும், திராவிடர்களின் எழுச்சி பார்ப்பனர்களைப் பணிய வைக்கும்.
எங்களை ஆளத்தான் பிரிட்டிஷாருக்கு உரிமை உண்டு. விற்க உரிமை இல்லை. தங்களை தாங்களே ஆண்டுகொள்ளும் தகுதியை பெரும்பான்மை மக்களாகிய திராவிடர்கள் இன்னும் பெறாத நிலையில்.

ஹோம் ரூலையோ சுயராஜ்யத்தையோ பார்ப்பனர்களிடம் கொடுத்துவிட்டு இங்கிலாந்துக்கு கப்பலேருவது அப்பாவி ஆட்டுக் குட்டிகளை - வஞ்சனையும் ரத்த வெறியும் கொண்ட பார்ப்பன ஓநாய்களிடம் ஒப்படைக்கும் துரோகம் ஆகும்,

1919 ஆம் ஆண்டு டாக்டர் நாயர் தயாரித்து தந்த குறிப்புகளை வைத்து இங்கிலாந்து நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் கே,வி.ரெட்டி 5 மணி நேரத்திற்கும் மேல் வாதாடிய உரையின் ஒரு பகுதி.

மூவாயிரம் ஆண்டுகள் தேவ அசுரப் போராட்டத்தில் அசுரர்கள் கை ஓங்கக் கண்டு பூசுரர்கள் கூட்டம் அலறியது வழக்கமான பிரித்தாலும் சூழ்ச்சியை அவிழ்த்து விட்டது. பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் கொள்கை அறிக்கைதேசிய நலனுக்கு ஆபத்து விளைவிப்பது தேசிய எதிரிகளுக்கு துணை போவது என்று புலம்பியது பின்னாளில் மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்று குத்தூசி குருசாமியால் அழைக்கப்பட்ட இந்து ஏடு
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஒரு விஷாமத்தனமான இயக்கம். அந்த சங்கம் நாட்டின் எதிரிகள் என அலறியது அன்னிபெசன்டின் நியூ இந்தியா ஏடு.

நூல்     ;திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 51 to 52.

திராவிடம் அறிவோம் - சமூக நீதி அரசாணைக்கு 100 வயது!

செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்! செப்டம்பர் 17 - தந்தை பெரியார் பிறந்தநாளும் கழகம் தோன்றிய நாளும்! இரண்டுக்கும் இடைப்பட்ட செப்டம்பர் 16 க்கும் சிறப்பு இல்லாமல் இருக்குமா? இதோ இருக்கிறது!

செப்டம்பர் 16 ஆம் நாள்தான் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வகுப்புரிமை உத்தரவு போடப்பட்ட நாள்! சமூக நீதி அரசாணைக்கு இன்று 100 வயது!

M.R.O. public ordinary  sevice G.O.no 613. dated 16.9.1921 - என்பது இந்த அரசாணைக்குப் பெயர். அப்போது சென்னை மாகாணத்தில் ஆட்சி செலுத்தி வந்த கட்சி நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஆகும். நீதிக்கட்சி ஆட்சியின் இரண்டாவது முதலமைச்சராக பொறுப்பேற்ற பனகல் அரசர் ஆட்சியில் தான் இந்த அரசாணை வெளியிடப்பட்டது.

1919 சட்டப்படி இரட்டை ஆட்சி நடைமுறைக்கு வந்தது. அதன்படி நடந்த முதல் தேர்தலில் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. முதல் முதலமைச்சராக 1921 ஜனவரியில்  கடலூர் ஏ,சுப்பராயலு தலைமையில் அமைச்சரவை அமைந்தது. பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று  நீதிக்கட்சி உறுப்பினர் ஏ,தனிகாசலம் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இது பெண்ணினத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இதனிடையே உடல்நிலை குன்றியதால் முதலமைச்சர் ஏ,சுப்பராயலு ஜூலை 11 பதவி விலகினார், அதைத் தொடர்ந்து பணகல் அரசர் முதல்லமைச்சராக ஆனார். அவரது ஆட்சி அமைந்ததும். ஆகஸ்ட் 5 - ம் நாள் சட்டமன்றத்தில் டாக்டர் நடேசனார் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். பார்ப்பனரல்லாதாருக்கு நியாயமான விகிதாச்சார அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்கவேண்டும், என்று தீர்மானம் கொண்டுவந்தார், அரசே இதை ஆணையாக வெளியிட உள்ளது என்று பனகல் அரசர் சொன்னதன்  அடிப்படையில் நடேசனார் இந்த தீர்மானத்தை திரும்ப பெற்றார்,. அதனடிப்படையில் நீதிக்கட்சி அமைச்சரவையின் முதல் வகுப்புரிமை அரசாணை 16.9.1921 அன்று போடப்பட்டது.

கல்வி, வேலைவாய்ப்பு, சட்டசபை ஆகிய மூன்றிலும் மக்களின் விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் உதயமானது, வெள்ளுடை வேந்தர் தியாகராயரும், சமூக மருத்துவர்களுமான டி,எம், நாயரும், நடேசனாரும், இணைந்து உருவாக்கிய அமைப்பு இது.

1912 ம் ஆண்டு திருவல்லிக்கேணியில் திராவிடர் இல்லம் தொடங்கினார் நடேசனார், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உணவு விடுதிக்கு வெளியே சோற்றுப் பொட்டலத்தைப் தூக்கிப் போட்டதைப் பார்த்து நொந்த நடேசனார். ஒடுக்கப்பட்டவர் உட்கார்ந்து சாப்பிடவும், தங்கிப் படிக்கவும் உருவாக்கிய இல்லம் தான்  திராவிடர்  இல்லம், இந்த இல்லத்தில் மாதந்தோரும் ஒன்றுபட்ட சிந்தனை கொண்டவர்களை அழைத்து பேச வைத்தார், அங்கு பேசவந்தவர்கள் தான் தியாகராயரும், நாயரும்.

திராவிடம் அறிவோம் - அன்னை கண்ணம்மாள்

அன்னை நாகம்மையார் என்று சொல்லும்போதே, சேர்த்து உச்சரிக்கப்பட வேண்டிய இன்னொரு பெயர் கண்ணம்மாள் ஆகும். அன்னை கண்ணம்மாள் அய்யா பெரியார் அவர்களின் உடன் .பிறந்த தங்கை ஆவார். அவருடைய கணவரின் பெயர் காரணமாக அவர் எஸ்.ஆர். கண்ணம்மாள் என்று அழைக்கப்படுகிறார். நாகம்மையார் அவர்களும் சேர்ந்துதான் இயக்க வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். கள்ளுக்கடைஎதிர்ப்பு போராட்டமாகட்டும், கதருக்கான போராட்டமாக இருக்கட்டும், இவை அனைத்திலும் எப்படி அன்னை நாகம்மையார் முழுமையாக ஈடுபட்டு அவற்றை எதிர்கொண்டாரோ அதே வேகத்தில் அண்ணை கண்ணம்மாள் அவார்களும் முழுமையாக ஈடுபட்டு எதிர் கொண்டார் என்பதை முக்கியம்மாக சொல்லவேண்டும். இதில் கண்ணமாள் அவர்களிடம் பார்க்கும் ஒரு படிநிலை வளர்ச்சி அன்னை நாகம்மையார் அவராக மேடையில் பேசியதோ, எழுதியதோ கிடையாது. ஏதோ ஒரு கட்டத்தில் பெரியார் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, குடியரசிலே அன்னை நாகம்மையார் பெயரிலே அறிக்கை வெளிவந்திருக்கிறது. வாசகர்கள் தோழர்கள் தோழர்கள் ஒத்துழைப்பு தருமாறு என வந்திருக்கிறது . மற்றபடி கட்டுறையோ, மேடைபேச்சாகவோ அவருடைய பங்களிப்பு இல்லை.

ஆனால் கண்ணம்மாள் அவர்களைப் பொருத்தவரை  சொற்பொழிவாளராகவும், கட்டுரையாளராகவும் இருந்திருக்கிறார். அது மட்டுமல்ல பத்திரிக்கையின் பொறுப்பில் இருந்தபோது " இன்றைய ஆட்சி ஏன் ஒழியவேண்டும் ?" என்கிற தலைப்பிலே கட்டுரை வெளிவருகிறது. இன்றைக்குப் பலர், பெரியாரும், அம்பேத்கரும் ஆங்கிலேய அரசின் அடிவருடிகலாக இருந்தார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த அரசாங்கமும் ,ஆட்சியும் ஒழிய வேண்டும் என்று  கட்டுரை எழுதியதற்காக அந்தப் பத்திரிக்கை நடத்துவதே கேள்விக்குள்ளாகி, பெரியார் அவர்களையும், கண்ணம்மாள் அவர்களையும் அரசாங்கம் கைது செய்து கடுங்காவர் தண்டனை விதித்தது. இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு பெண் பத்திரிகையாளர் கைதாவது இதுவே முதல் முறை.

நூல்    ; கருஞ்சட்டைப் பெண்கள்,
பக்ககம் ; 84 to 85.
எழுத்தாளர் ; ஓவியா.