Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - கல்வி கற்றோர் புள்ளிவிவரம்

 1901 ஆம் ஆண்டில் கல்வி கற்றோர்  புள்ளிவிவரத்தையும், 1921 ஆம் ஆண்டுக் கணக்கையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! பார்ப்பனரல்லாதார் பார்ப்பனர்களைப் போல் இல்லாவிடினும் - மெல்ல மெல்லக் கல்வி கற்பதில் முன்னேறி வந்திருப்பது தெறியும்.

தாமதமாக நுழைந்திருந்தாலும் பார்ப்பனரல்லாத சமுதாயங்கள் முன்னேரத் துவங்கிவிட்டன. அவர்கள் இப்போது முன்னேற்றத்தின் பல படிக்கட்டுகளில் இருக்கிறார்கள், செட்டியார், கோமுட்டி, நாயுடு, நாயர், போன்ற சமுதாயத்தினர் வேகமாக முன்னேறி வருகின்றனர். மிகவும் பின்தங்கியோர் கூட முன்னேறியிருப்பவர்களைப் போல புதிய காலத்தின் தகுதிகளைப் பெறுவதற்காக அக்கறையுடன் பாடுபட்டு வருகிறார்கள். கல்வியில் முன்னேற வேண்டும் என்கிற பொதுவான உணர்வு எல்லோருக்கும் ஏற்பட்டுவிட்டது. பார்ப்பனர்களில் காணப்படுவதைவிட சில பார்பனரல்லாத சமுதாயத்தினரிடையே காணப்படும் கல்வி வளர்ச்சி சீரானதாகவும், சமநிலையிலும் (பெண் - ஆண் இருபாலரும்) கல்வி கற்கும் நிலை இருக்கிறது.

கல்வி இலாக்காவினர் பார்ப்பன பெண்களுக்கும், குறிப்பாக பார்பன விதவை பெண்களுக்கும் ஏதோ அவர்கள்  பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் போலக் கருதிக் கொண்டு கல்விச் கலுகை அளித்து வருகின்றனர். இருந்தாலும் நாயர் பெண்கள் அளவுக்கு  பிராமணப் பெண்கள் கல்வி கற்றுவிட்டதாக இல்லை. பல்வேறு துறைகளில் பிராமணரல்லாதார் பயனுள்ள வகையில் - இந்த மாகாணத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றி வாருகின்றனர். பார்ப்பனர்கள் தந்திரமாகவும், பல்வேறு வழிகளிலும் அரசியல் அதிகாரத்தையும், உத்தியோகச் செல்வாக்கையும் பயன்படுத்திய காரணத்தால் ! அறிவுத் துறையில் தீவிரமான போட்டி நிலவுகின்ற இந்த நாட்களில் தேர்வில் வெற்றி பெற தனித்திறமை வேண்டும் என்பதை மறுக்கவில்லை.

புரிந்துகொள்ளமுடியாதது என்னவெனில், மற்றவர்களை விட ஆங்கிலம் கற்ற ஆடவர்களை அதிகம் கொண்டிருக்கிற  ஒரு சிறு வகுப்பு, மற்ற வகுப்பினர் திறமையானவர்களாகவும்,அறிவு கூர்மையானவார்கள் அதிகம் இருப்பினும் அவர்களுக்கு அரசு வேலைகளில் இடம் கொடுக்காமல் , உயர் பதவி, தாழ்ந்ததுமான அனைத்தும் அவார்களுக்கே வழக்குவதுதான். நீதிபதிகள், சிறந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், பெரிய முக்கிய எஸ்டேட்களை நிர்வகிப்பவர்களாக மேதைகளை பார்ப்பனரல்லாத சமூகம் வழங்கியிருக்கிறது, அவர்களில் ஈடாக பார்ப்பன சமூகத்தில் ஒருவரை கூட ஒப்பிட முடியாது.

நூல்.    ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ;  123 to 125.

திராவிடம் அறிவோம் - பார்ப்பனரல்லாத கொள்கை அறிக்கை.

 பார்ப்பனரல்லாத கொள்கை அறிக்கை.

பார்ப்பனரல்லாத சமுதாயத்தார் விழிப்புற்றுச் செயல்பட வேண்டும். முதலாவதாக தங்கள் குழந்தைகளை படிக்கவைக்க வேண்டும். கல்வி வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள பார்ப்பனரல்லாதாரை ஊக்குவிக்க வேண்டும்.

கல்வி வசதியற்ற இடங்களில் அவ்வசதியை ஏற்படுத்தவும், புத்திகூர்மையுள்ள ஏழை சிறுவர், சிறுமியர்க்குக் கல்வி கற்பிக்க நிதி உதவி வழங்கவேண்டும். மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களில் சங்கங்கள் துவங்கப்பட்டு அவை திறமையாக பராமரிக்கப்பட வேண்டும். பார்பனரல்லாதாருக்கு என கல்வி கொள்கை உருவாக்க வேண்டும், சமுதாய அரசியல் அமைப்புகள் உருவாக்கபடவேண்டும், தங்களது கோரிக்கையை முன்வைப்பதற்கு ஆங்கலத்திலும் , தாய்மொழியிலும் செய்தித்தாள்கள் துவங்கி நடத்தப்பட வேண்டும். தந்திரம் மிகுந்தோர் அவர்களைத் தங்கள் சுயநலத்திற்காகப் பயன் படுத்திக்கொண்டார்கள் பார்ப்பனர்களோடு ஒப்பிடும்போது தாமிருக்கும் தற்கால நிலை குறித்து பார்ப்பனரல்லாதாரிடையே அதிருப்தி நிலவுகிறது, அரசாங்கம் ஒரு வேலை அறியாமல் இருக்கலாம் , அரசின் கவனத்தை திருப்பவேண்டும். பார்ப்பனரல்லாதார் ஒருவருக்கொருவார் உதவி செய்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் ஒவ்வொரு சமுதாயமும், குறைந்த பட்சம் தங்களது வளர்ச்சியை முதன்மையாக கொள்ள வேண்டும்.
தாழ்ந்த நிலையிலும் அல்லாமல் - சுயமரியாதை பெற்ற வளர்ச்சியுற்ற அமைப்பாக உயர்வானதென்று கருதப்படுகிற பிற வகுப்பாரோடு ஒத்துழைக்க முடியும்.
பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை இன்றைக்கும் பொருந்தும்.
11.8.1957 -ல் 1967 என்கிற தலைப்பில் மதுரையில் சிறப்பு சொற்போழிவு நிகழ்த்திய அண்ணா கீழ்க்கண்டவாறு கூறினார்.

பார்ப்பனரல்லாதார் இயக்கம் சமநீதி காணும் நோக்குடன் துவக்கப்பட்டதே தவிர, அது பார்ப்பனர்களைத் தனிப்பட்ட முறையில் வெத்ததில்லை, வெறுக்கவேண்டிய அவசியமில்லை, பார்பனர்களுக்கு உரிய பங்குகைத் தந்து, பார்ப்பனரல்லாதாருக்கு உரிய பங்கைத் தரவேண்டும் என்ற நீதியை அடிப்படையாகக் கொண்டதால்தான் ஜஸ்டிஸ் கட்சிக்கு நீதிக்கட்சி என்று தமிழில் பெயரிடப்பட்டது என்று பேசினார் அறிஞர் அண்ணா.

நூல்     ; திராவிட இயக்க                      வாரலாறு.
பக்கம் ; 126 to 127.

திராவிடம் அறிவோம்

சுவாமி தீர்த்தாஜி மகராஜ் என்பவர் இந்து ஏகாதிபத்தியத்தின் அபாயம் என்னும் நூலில் எப்படி ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இந்தியாவில் பார்ப்பணீயத்தை உயர்த்தி விட்டது என்பதற்குப் பத்து உதாரணங்களை காட்டுகிறார்.

1. ஆங்கிலேயர்கள் மிக உயர்ந்த நம்பிக்கைகுரிய லாபம் தரும் பதவிகளில் நியமித்தனர்.
2.கம்பெனி அதிகாரிகளுக்கும், புரோகிதர்களுக்கும் ஒருவருக்கொருவர் லாபம் தரும் வகையிலும், பொழுதுபோக்கும் வகையிலும் அழிந்துபோன கோவில்களையும், விக்ரக ஆராதனை உற்சவங்களையும், அதோடு சேர்ந்த நடன மாதரையும் ஊக்குவித்தனர்.

3. இந்துக்களின் கொடுங்கோன்மைச் சின்னமான " ஜாதிக் கச்சேரி" களைப் (நீதிமன்றங்களை) புதுப்பித்தனர்.

4 இந்துக்களின் பெரும்பான்மையோரின் சிந்தனையிலிருந்து மறைந்த ஒழிந்துபோன மனு சாஸ்திரத்தையும், இதர சாத்திரங்களையும் மறுபடியும் கண்டுபிடித்து அதுவே அதிகாரபூர்வமான இந்துச் சட்டம் என்கிற நிலைக்கு அவற்றை உயர்த்தினர்.

5. கோவில்களின் நிர்வாகத்தை அறங்காவலர்கள் கையில் ஒப்புவித்து, பார்ப்பனீயம் வலுப்படவும், இதர சாதியினர் உரிமை இழக்கவும் ஏற்பாடு செய்தனர்.

6. சில சட்டங்கள்  மூலமாகவும், நீதிமன்ற முடிவுகள் மூலமாகவும், கிறித்துவர்கள் அல்லது முஸ்லீம்கள் அல்லாத அனைவரையும் கட்டுப்படுத்துவது இந்துச் சட்டம் தான் என்கிற நிலையை உறுவாக்கினர்.

7. சாதிப் பிரிவுகளுக்கு அவர்கள்  ராஜாங்க அங்கீகாரம் கொடுத்தனர். அரசுப் பாதுகாப்பும், முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

8. இந்த இழிநிலைமையை மாற்றியமைக்கும் சீர்திருத்தவாதிகளின் நம்பிக்கைகளை நாசமாக்கினார்கள்.

9. மத விஷயங்களில் தலையிடுவதில்லை என்று கூறிக்கொண்டு, சமுதாயக் கொடுமைகளை பலப்படுத்தினார்கள், நிரந்தரமாக நிலவச் செய்தார்கள்.
10. அவர்களில் சிலர் சாதிமுறையையும் விக்ரக ஆராதனையையும் மனித சமுதாயத்தை மகிழ்விக்க வந்த கலாச்சார சாதனைகள் என குறிப்பிட்டு புகழ்ந்தனர்.

நூல்    ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 119 to 120.