Showing posts with label Education. Show all posts
Showing posts with label Education. Show all posts

Tuesday, July 24, 2018

மெகாலே கல்வி திட்டம்.

மெகாலே கல்வி திட்டம்.

நம் நாட்டில் மேற்கத்திய கல்விகொள்கையை உருவாக்கியவர் தான் மெகாலே .
1835ல் உருவாக்கிய கல்வி கொள்கை தான் இன்றைக்கும் நாம் கற்ற அல்ல நம் பிள்ளைகள் கற்கும் கல்விமுறை.

இந்தியாவை உருவாக்கிய கிழக்கிந்திய கம்பேனி இந்தியர்கள் வாழனும்னா அதற்கு நாம் ஆளனும் என்ற உயரிய சிந்தினையில் இந்திய நிர்வாகத்தை வெள்ளையரை வைத்தே நிர்வகிப்பதை காட்டிலும் சில கழுதைகளை உருவாக்கி நம் நிர்வாகமுறைகக்கு அக்கழுதைகளை  புகுத்த என்ன செய்யலாம் என யோசித்தபோது.

இங்கிலாந்தில் தொழில் நஷ்டத்தால் கடனில் தத்தளித்த வழக்கறிஞர் மெகாலே தன் கடனை அடைக்க மாதம் 12ஆயிரம் பவுன்ட்ஸ் சம்பளத்தில் ஆய்வு செய்ய இந்தியா அனுப்ப படுகிறார்.

அவரும் ஓராண்டு ஆய்வின் முடிவில்.
கழுதைகளை உருவாக்க ஆங்கில வழி மனப்பாட கல்விமுறை என்ற ஒரு உயரிய கல்விமுறை அறிமுகபடுத்துகிறார்.

அவர் 1835ல் உருவாக்கிய கல்விமுறை காலகட்டத்தில் அப்போ குருகுல கல்விமுறை நடைமுறையில் .
அப்போலாம் தமிழ் கல்வின்னா சிலம்பம் வாள்வீச்சு போன்ற தற்காப்பு கல்விதான்  அதுலயும் வர்ணபேதம் கடுமையாக இருந்த காலகட்டம்.

1835க்கு முன் வெறும் புரானம் இதிகாசம் ஜோதிடம் என்ற குலகல்வியை தடைசெய்து ஆங்கிலேய ஏவலா (கழுதையா) இருக்கனும்னா ஆங்கில வழி கல்விக்கு வாங்கன்னு வெள்ளைகாரன் கூப்பிட்டபோது அதுவரை குலகல்வியே ஒசந்தது என பேசியவன் தான் ஆங்கிலவழி கல்வியை கற்க ஓடினான்.

1835முன் இருந்த சமஸ்கிருத கல்வியை காட்டிலும் எவ்வளோ மேலானது இந்த மெக்காலே கல்வி.
மெக்காலே அவர் தாய்நாட்டுக்கு துளியும் துரோகம் இழைக்காமல் இந்தியாவை நிர்வாகிக்க கழுதைகளை உருவாக்கிவிட்டு போயிட்டார்.

ஆனா அந்த மெகாலே கல்வியை படித்து வெள்ளைகாரனுக்கு ஏவலாக வேலைக்கு வந்தவன்  அந்த கல்விமுறை தொடர்ந்து தன் #சந்நதிகளின் வழையடிவாழையாக தலைமுறை தலைமுறையாக இன்று 2017லு வரை மனப்பாட கழுதை கல்விமுறை நடைமுறைபடுத்தி வந்துகொண்டே தான் இருக்கான்.

1835ல் ஆங்கிலேய அரசு கல்வி விசயத்தில் முழுக்க முழுக்க மேற்கத்திய பானியைதான் திணித்தது.

ஆனா 1857க்கு பிறகு அதாவது சிப்பாய் கலகத்தில் ஆயிரக்கான ஆங்கிலேயரை இழந்த பிறகு மத சாதி வியசத்தில் தலையிடுவதில்லை என்ற குறிக்கோளை ஆங்கில அரசு எடுத்தன அதை தனக்கு சாதகமாக சமஸ்கிருத சகாக்கள் பிடித்துகொண்டு மெக்காலேவின் ஆங்கிலவழி கல்வியோட சமஸ்கிருதத்தையும் இனைத்த கல்விமுறையை படிப்படியாக திணித்தார்கள்,

ஆரம்பகட்ட தொடக்க கல்வியில் சமஸ்கிருதத்தை திணிக்காமல் எல்லாரும் ஓரளவுக்கு படிச்சிட்டு போங்கன்னு விட்டுட்டு உயர்கல்வியில் திணிக்க ஆரம்பித்தார் அப்படி ஒரு வழிமுறைதான் அலோபதி (ஆங்கில) மருத்துவ நுழைவுதேர்வுக்கு சமஸ்கிருத மொழியில் நுழைவுதேர்வை கொண்டுந்தார்கள்.

இன்னைக்கு நுழைத்தேர்வு நீட் போன்றவைக்கு முன்னோடி இது அதை நீதிகட்சி ஆட்சியில் மருத்துகல்வி நுழைவுத்தேர்வை அன்றய முதல்வர் பனகல் அரசர் அதை ரத்துசெய்தார்.

ஆங்கிலேயர் காலம் வரை மெக்காலே கல்வி திட்டம் நடைமுறையில் இந்தது அதன்பின் இந்தியா சுதந்திரம் பெற்றபின்னாச்சும் மெக்காலைவை ஒழித்து புதிய கல்விமுறை கொண்டுவரலாம் பார்த்தா ராஜாஜி குலகல்வின்னு 1835க்கு முன் நடந்த கூத்தையே திரும்ப திணிக்கபட்டு அசிங்கபட்டு ஆட்சியையும் அதிகாரத்தையும் இழந்து காமராஜர் ஆட்சிக்கு வந்தார் .காமராஜரால் கல்வி நிலையத்தை தான் திறக்கமுடிந்ததே தவிர கல்வியை மாற்றமுடிலன்னு 1967ல் இன்றய கல்வி வெறும் வேலைவாய்ப்புகான (கழுதைகளுக்கான)  பாஸ்போர்டாக இருக்ககூடாதுன்னு தன் ஆதங்கத்தை சொல்லிட்டு போய்ட்டார்.

அடுத்துவந்த அரைநூற்றாண்டு ஆட்சியிலும் பெரிய மாறுதல்கள் கல்விமுறையில் ஏற்படுத்தாத தால்  மெக்காலே உருவிக்கிய கழுதை உற்பத்தி கல்விமுறை
சமீபத்திய தேர்வு முடிவுகள் வைத்து பார்க்கும்  93% நம் நாட்டு மக்களிடம் மெக்காலே கல்வி ஆக்கிரமித்துள்ளது. இது சி.பி.எஸ்.சி.யில் 98%மாக உச்சத்தில் உள்ளது.

இந்த கல்வி கொள்கையை உருவாக்க அன்று மெக்காலே  காரணம்..
இந்தியாவில் கல்விக்கான படிக்க கற்வேண்டிய புத்தகத்தின் அளவு வெறும் அரை பீரோவில் அடைச்சிவிடலாம் அந்தளவே இங்க விசயம் இருக்கு.
அதனாலே மேற்கத்திய மொழிப்பெயர்ப்பு அவசியம் அதற்காக ஆங்கிலவழி கல்வி அவசியம்னு தான் சொன்னார்.

மெக்காலே அப்படி சொல்வதற்கு காரணம்.
இங்கிலாந்தில் கல்வி வளர தொடங்கிய போது ஆங்கிலத்தை காட்டிலும் லத்தீன் கிரேக்கத்திலே நிறைய கல்வி இலக்கியங்கள் இருந்தன அதை பிரிட்டன் கற்றுகொண்டு தன் மொழியில் மொழிபெயர்த்துகொணட பின் தான் ஆங்கிலவழி கல்வியே அவர்களுக்கு பூர்த்தியடைந்தது.

அதேபோல நம் நாடும் மெக்காலே கல்வி மூலம் ஐரோப்பா இலக்கியத்தை பெற்றுகொண்டு நம் மண்ணின் வாழ்க்கை முறை வாழ்வியல் முறையை கல்வியில் புகுத்தபட்டு இருக்கனும்.

ஆனா உலக கல்விமுறைகள் ஜெட்வேகத்தில் பயணித்துகொண்டு இருக்கையில் நாம் இன்னும் நம் மூதாதையர் நடைபழகிய கட்டைவண்டியை பிடித்துகொண்டு முன்னேறிகொண்டு இருக்கவேண்டிய சூழலை அன்றுமுதல் இன்று வரை கல்விமுறை மாற்றவிடாமல் சிலர் தடுத்துவருகிறார்கள் .!!

Tuesday, June 05, 2018

NEETஐ இனி ஒழிக்கவே முடியாது என்கிற விரக்தியை, அவநம்பிக்கையை ஒருபோதும் ஏற்க முடியாது. ஏற்கவும் கூடாது.

இட ஒதுக்கீடு செல்லாது என்று இந்திய உச்சநீதிமன்றம் நிராகரித்தபோது இந்திய அரசியல் சட்டத்தை திருத்தி அதைசாத்தியமாக்கியது இதே தமிழ்நாடு. இப்போது NEETஐ தமிழ்நாட்டின் மீது பலவந்தமாக திணித்திருப்பது அதே உச்சநீதிமன்றம்.
இட ஒதுக்கீடு செல்லாது என்று இந்திய உச்சநீதிமன்றம் நிராகரித்தபோது தமிழ்நாடு மட்டும் அதை எதிர்த்திருக்காவிட்டால் தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலுமே கடந்த ஐம்பது ஆண்டுகளில் இத்தனை கோடி பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் இவ்வளவு குறுகியகாலத்தில் பள்ளிக்கல்வியோடு, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஆய்வாளராகவெல்லாம் ஆகியிருக்க முடியாது. பல லட்சம்பேர் வெளிநாடுகளில் குடியேறி கோடீஸ்வரர்கள் ஆகியிருக்கமுடியாது.
அதையெல்லாம் செய்தவர் பெரியார் என்கிற ஒற்றை மனிதன். தனக்கென சொந்தமாக ஒரு குழந்தை இல்லாத அவன் தான் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் தன் சொந்தப்பிள்ளைகளாக நினைத்தான். அவர்களின் அடிப்படை உரிமையான கல்வி மறுக்கப்பட்டபோதெல்லாம் அவன் துடித்தான். அதன் விளைவே நம்மில் பலர் உயர்கல்வி கற்று நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்துக்கு விமானம் ஏறிப்பறக்கவும் வெளிநாடுகளுக்கு கோடை விடுமுறைகள் செல்லுமளவுக்கும் செல்வந்தர்களாக முடிந்தது. சீரோடும் சிறப்போடும் செல்வாக்கோடும் வாழ முடிந்தது.
இன்று மருத்துவப்படிப்பில் பொதுசுகாதாரத்துறையில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாகத்திகழும் தமிழ்நாட்டின் மீது இப்போது அதே இந்திய உச்சநீதிமன்றம் NEETஐ பலவந்தமாக திணித்திருக்கிறது. அதை எதிர்த்து சட்டத்திருத்தம் மூலம் NEETஐ ஒழிக்கவேண்டியதும் அதே தமிழ்நாடு. அதற்குத்தேவை அரசியல் அதிகாரம். அரசியல் அதிகாரத்தால் மட்டுமே அது இனி சாத்தியப்படும். அடிமைக்கும்பல்களால் அல்ல. எனவே அடிமைகளை அகற்றி அரசியல்சட்டப்படிக்கு NEETஐ ஒழிக்க என்ன வழி என்பது மட்டுமே ஒற்றை இலக்காக இருக்கவேண்டும்.
NEETஐ இனி ஒழிக்கவே முடியாது என்கிற விரக்தியை, அவநம்பிக்கையை ஒருபோதும் ஏற்க முடியாது. ஏற்கவும் கூடாது. இந்திய அரசியல் சட்டத்தை திருத்த முடிந்த தமிழ்நாட்டால் இந்த சுண்டைக்காய் NEETஐ தூக்கி எறிய முடியாது என்பது ஏற்கக்கூடிய வாதமும் அல்ல; ஏற்கவேண்டிய வாதமும் அல்ல. அது ஏமாற்றுப்பேர்வழிகளின் வாதம். ஏமாளிகள் மட்டுமே அதை நம்புவார்கள். ஏழுகோடித்தமிழர்களும் ஏமாளிகள் அல்ல.

Monday, January 29, 2018

மெக்காலே கல்விமுறை

வழக்கமாக மெக்காலே கல்விமுறையை திட்டுவது RSS ஆட்களின் வேலை.
ஏனெனில் அதற்கு முன்பு வரை நம்மில் பெரும்பாலோருக்கு படிக்க வாய்ப்பு கிடையவே கிடையாது. அதற்கு பிறகுதான் கல்வி உரிமை அனைவருக்கும் கிடைக்க ஆரம்பித்தது.நீங்க எல்லாம் ஏண்டா படிக்க வந்தீங்கன்னு அவனுங்களுக்கு வயித்தெரிச்சல்.
வேலைக்காரன் படத்தில் மெக்காலே கல்வி முறையை எதிர்த்து வசனம் வருகிறாதாம்.
இந்த முட்டாள் சினிமா டைரக்டர்கள் தமிழகத்தை சீரழிக்காமல் விட மாட்டார்கள் போல.

மெக்காலே கல்வி முறை சிறந்ததா இல்லையா

மெக்காலே கல்வி முறை சிறந்ததா இல்லையா என்ற வாதம் நீண்ட நாட்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களும் கல்வி கற்கவேண்டும் என்பதே மெக்காலே கல்வித்திட்டம். இந்த ஒரேயொரு காரணத்தை வைத்துக்கொண்டே மெக்காலே கல்வித்திட்டம் மிகச்சிறந்தது என சொல்லிவிடலாம்.
என்னவோ மெக்காலே வருவதற்கு முன்னால் இங்கே பூரா பேரும் ஸ்காலர்களாக இருந்தது போல ரீல் சுற்றுவதெல்லாம் சுத்த புருடா. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் அரசாங்க வேலையில் இருந்த 90 சதவீதம் பேர் பிராமணர்கள். ஏனென்றால் அவர்கள் தான் படித்திருந்தார்கள். அவர்களுக்கு மட்டுமே படிக்கிற வாய்ப்பை நமது சமூக கட்டமைப்பு வழங்கியிருந்தது. So, NEET Exam போல தகுதித்தேர்வுலாம் கூட தேவையில்லை. ஜஸ்ட் எவன்லாம் எழுத படிக்க கூட்டல் கழித்தல் கணக்கு போடத் தெரிஞ்சு வச்சிருந்தானோ அவனுக்கெல்லாம் கவர்ன்மென்ட் வேலை தேடி தேடி வந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் மெக்காலே இந்தியர்கள் அனைவரும் படிப்பதற்கான கல்வி முறையை கொண்டுவந்தார். வெள்ளைக்காரர்களும் கிறிஸ்தவ மிஷனரிகளும் வராமல் இருந்திருந்தால் நாம் கல்வியில் குறைந்தது நூறாண்டுகள் பின்னோக்கி இருந்திருப்போம் .
நமது முன்னோர்கள் எவ்வளவு அயோக்கியர்களாக இருந்தார்கள் என்பதற்கு ஒரேயொரு உதாரணம் மட்டும் சொல்லி முடிக்கிறேன். 1925 ம் ஆண்டு வரை சென்னையின் புகழ்பெற்ற பச்சையப்பன் கல்லூரியில் பட்டியல் வகுப்பு மாணவர்கள் கல்வி கற்க அனுமதியில்லை. இந்த லட்சணத்தில் தான் இங்கே இருந்தது. (இணைப்புத் தகவல் : 1927ம் ஆண்டு அதே பச்சையப்பன் கல்லூரியில் நடந்த முதல் ஆதிதிராவிடர்கள் நல மாநாட்டின் தலைவராக திவான் பகதூர் ரெட்டைமலை சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அந்த மாநாட்டில் தான் முதன்முறையாக பட்டியல் வகுப்பினருக்கென தனித் தொகுதி பிரதிநிதித்துவம் வேண்டுமென்ற வரலாற்றுச்சிறப்புவாய்ந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது) .
எனவே இந்த மக்களின் மீது அக்கறையும் அன்பும் கொண்ட எவரும் மெக்காலே கல்வித்திட்டத்தை குறை சொல்ல முடியாது. எல்லா சாதிக்காரனும் படிச்சுட்டாங்களே என்ற பொச்சரிப்பு உள்ளவர்களால் தான் மெக்காலே வை குறைசொல்ல முடியும்..!

மெக்காலே கல்வித்திட்டம்

மெக்காலே கல்வித்திட்டம் ஒரு அடிமை கல்வித்திட்டம் என அந்த கல்வியை கற்றே முன்னேறிய ஒரு கூட்டம் ஒரு உள்நோக்கத்துடன் குறை கூறிக்கொண்டு திரிவது வேடிக்கையாக இருக்கிறது.
இங்கு பலபேர் தலையில் தூக்கி கொண்டாடும் அய்யா அப்துல் கலாமே அந்த அடிமைக்கல்வி ப்ராடக்ட் தான் என்பதை வசதியாக மறந்து விடுவார்கள்.ஒரு சமூகத்தை தவிர மற்றவர்கள் கல்வி கற்க இருந்த தடையை உடைத்த ஆங்கிலேயர்களின் வழியில் அதனை தொடர்ந்து தமிழகத்தில் கல்வி மலர்ச்சியை ஏற்படுத்திய திராவிட பேரியக்கத்தின் அரும் சாதனை.
கடும் வெய்யில், குளிர்,பனியில் உன்னை வெளியே நிறுத்தி வைத்த கூட்டத்திற்கு எதிராக உனக்கு வீட்டின் கதவை திறந்துவிட்டவன் ஆங்கிலேயன், நீங்கள் இப்போது இருக்கும் அவன் திறந்துவிட்டிருக்கும் கல்வி எனும் வீட்டை சீரமைத்து கொள்ளவேண்டியது நாம்தானே தவிர, ஆங்கிலேய ர்களோ,மறைந்த மெக்காலேவோ அல்ல.
அதிலும் குறிப்பாக இன்று தமிழகத்தில் நம் உயர் கல்வியை,மருத்துவ கல்வியை எனும் நம் வீட்டைவிட்டு வெளியேற்றும் முயற்சியாக NEET என்ற நுழைவு தேர்வின் மூலம் அழிக்க நினைக்கும் மத்திய காவி அரசாங்கதை பார்த்து மக்களாகிய நாம் சுரணையற்று வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம் என்றே தோன்றுகிறது.
மாநிலத்தை ஆளும் அடிமை அதிமுக எடுபுடிகளின் அரசு தமிழக சட்டமன்றத்தில் NEET தேர்வுகெதிராக சட்டமியற்றிவிட்டு,அதனை பற்றி சிறிதும் கவலைபடாமல்,அதனை சிறிதும் மதிக்காத மத்திய அரசை நோக்கி,தன் எஜமானர்களை நோக்கி எந்த கேள்வியும் வைக்காமல்,மாநில சுயாட்சியை பறிக்கொடுத்துவிட்டு,மத்திய அரசின் 400-க்கும் மேற்பட்ட NEET பயிற்சி மையங்களை தமிழகத்தில் திறக்க பரபரப்பாக அலைகிறது என்பதை புரிந்தாலே தமிழகத்தில் யாருடைய ஆட்சி நடைபெறுகிறது என்ற தெளிவு தமிழக மக்களுக்கு கிடைக்கும் .