Showing posts with label RSS. Show all posts
Showing posts with label RSS. Show all posts

Thursday, July 26, 2018

பாஜகவின் கோவை மாவட்ட இளைஞரணி

இது கோவை மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரோட்டி,,,


பாஜகவின் கோவை மாவட்ட இளைஞரணி பொருளாளர் யார்னு பார்த்தீங்கனா குஜராத்தை சேர்ந்த நம்ம ஹரீஸ் பட்டேல்,,,,மாவட்ட செயற்குழு உறுப்பினர் யார்னு பாத்தீங்கனா நம்ம பஜன்லால் சேட்டோட ஒன்னுவிட்ட ரிலேசன் சோஹன்லால்,,,,
இது ஒன்னும் எதர்ச்சியா நடந்தது இல்ல,,,அப்படியே ஒரு 20 வருசம் பின்னாடி வாங்க,,,1997 கோவை கலவரம்,,, பெரிய வணிக நிறுவனங்கள் துவங்கி,சிறு கடைகள் வரை அனைத்தும் இஸ்லாமியர் கடைகளும் இந்துத்துவ தீவிரவாதிகளால் வேட்டையாடப்பட்டுச்சு,,,
யாரோ ஓரு டிராபிக் போலீஸை சில இளைஞர்கள் கொன்றதற்கு ,எதற்காக எல்லா இஸ்லாமியர்களும் இலக்காக்கபட்டாங்க???
ஏன்னா அந்த ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கும்,நம்ம பஜன்லால் சேட்டுகளுக்கும் ஒரே தொழில் தான்,,,வணிகம் செய்வது,,,
ஆக நம்ம பஜன்லால் சேட்டுகளுக்கு கோயம்புத்தூர்குள்ள வணிகம் செய்ய நுழையனும்னா, முதல் தொழில் எதிரிக நம்ம இஸ்லாமியர்கள் தான்,,,
ஆக அந்த இஸ்லாமியர்களின் வணிகத்தை அழிக்க வேண்டிய தேவை நம்ம பஜன்லால் கும்பலுக்கு இருந்தது,,,
கரைக்டா அந்த நேரம் பார்த்து, இப்படி ஒரு கொலை நடக்க அது நம்ம பணியா,மார்வாடி கும்பலுக்கு வசதியா போச்சு,,,
உடனே தெருப் பொறுக்கிகளா சுத்தீட்டு இருந்த இந்துத்துவ கும்பலுக்கு பெரும் அளவுள பைனாஸ் பண்ணி,அந்த கலவரத்துல அனைத்து இஸ்லாமிய நிறுவனங்களையும் குறிவெச்சு அழிச்சாங்க,,,
( காஸ் சிலிண்டரை கட்டத்திற்குள் உருட்டி விட்டு வெடிக்க வைக்கும் டெக்னிக் ,குஜராத் கலவரத்துக்கு முன்னாடியே சோதனை செஞ்ச இடம் கோவை தான்னா பாத்துகோங்களே !! )
அந்த கலவரத்துக்கு அப்பறம் அப்படியே கோவை முழுக்க மார்வாடி கும்பல் ஆக்கிரமிக்க ஆரம்பிச்சுது,,,இன்னைக்கு குண்டூசி துவங்கி வைரம் வரைக்கும் அனைத்து ஹோல்சேல் கடைகளும் மார்வாடிகள் கைல தான்,,,
கோவையில் செழிப்புமிக்க பகுதிகளான ஆர்எஸ்புரம்,ரேஸ் கோர்ஸ் போன்ற பகுதிகளே அவுங்களுக்காக தான்,,,நீங்க எல்லாம் அங்க வேடிக்கை வேணா பார்க்க போலாமே ஒழிய, ஒரு இஞ்ச் இடம் கூட வாங்க முடியாது,,,அவ்வளவு ஆடம்பரமான பகுதிகள்,,,
ஆக இவங்களுக்கு இந்த வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்த பொறுக்கி கூலிப்படைகளான இந்துத்துவ கும்பலுக்கு விநாயகர் சதுர்த்தி துவங்கி, கட்சி நடத்த பன்டிங் செய்வது வரை அனைத்தும் இந்த பஜன்லால் கும்பல் தான்,,,
ஆக கட்சிக்கே படி அளக்கறவங்க சாதாரண பொருளாளர்,செயற்குழு உறுப்பினர் பதிவியில் இருப்பது எல்லாம் பெரிய விசயம் இல்ல ஜீ !!

ஈழ துரோக காங்கிரஸ்சை ஆதரிப்பதா -- பழைய குபீர் திடீர் (RSS) தமிழுணர்வு போராளிகள்

//ஈழ துரோக காங்கிரஸ்சை ஆதரிப்பதா -- பழைய குபீர் திடீர் (RSS) தமிழுணர்வு போராளிகள்//
காங்கிரஸ்சாவது புலிகளை மாத்திரம் எதிரியாய் பார்த்தது, அதுவும் ராஜீவ் படுகொலையால், ஆனால் பாஜக RSS கும்பலோ, ஒட்டுமொத்த தமிழினத்தையே எதிரியாய் பார்க்கும்..
2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பிஜேபி கட்சி வெளியிட்ட காங்கிரஸின் மீதான குற்றபத்திரிக்கையில், "உள்நாட்டு, பிரதேச" அழுத்தங்களுக்கு பணிந்து, தமிழர்களுக்கு எதிரான இறுதி போரில், இலங்கை ராஜபக்சே அரசுக்கு முழு ஒத்துழைப்பை, உதவியை மந்திய காங்கிரஸ் அரசாங்கம் செய்யவில்லை என்று குறைசொல்லி, நாங்களாய் (பிஜேபி ஆட்சி) இருந்திருந்தால், இத்தைகைய அழுத்தங்களுக்கு அடிபணிந்திருக்கமாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்... அப்படியென்றால் என்ன அர்த்தம்?? "கூட்டணி கட்சியான திமுக கொடுத்த அழுத்தங்களால், மத்திய காங்கிரஸ் அரசு, இலங்கை அரசுக்கு, புலிகளை ஒழிக்க சரியான முறையில் உதவவில்லை.. ஆனால், நாங்கள் (பிஜேபி) இவ்வாறு உள்நாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியாமல், ராஜபக்ஷே அரசுக்கு உதவியிருப்போம்" என்பதுதானே.. .
சரி, இலங்கையில் தமிழ் இந்துக்கள் பாதிக்கப்பட்டபோது, எந்த RSS ஹிந்துத்துவா இயக்கங்களும் போராடவில்லையே... இலங்கையில் லட்சகணக்கான தமிழ் மக்கள் கொல்லபட்டார்களே, பல நூறு இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டனவே... அப்போது இங்கே எந்த ஒரு ஹிந்துத்துவா இயக்கங்களோ, மோடி போன்ற ஹிந்து தேசியவாதிகளோ ஒன்றுமே செய்யவில்லையே... ஒரு சிறு எதிர்ப்போ, போராட்டம்மோ, அறிக்கையோ எதுவும்மே செய்யவில்லையே??, அப்போ தமிழர்கள், ஹிந்துக்கள் இல்லையா???
சாதாரண சப்பை காரணக்களுக்காக பலமுறை, வாரக்கணக்கில் இந்திய நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் முடக்கிவைத்த அப்போதைய எதிர்கட்சியான பிஜேபி, தமிழ் நாட்டு மீனவர்களுக்காகவும், ஈழ தமிழர் (இந்துக்கள்) படுகொலைகளின் போதும், எத்தனை முறை நாடாளுமன்றத்தை முடிக்கிவைத்தது??? அவற்றின் மீது விவாதம் நடத்த அரசை கோரியது????... விடை : பூஜ்யம்
காங்கிரஸ் அரசே ஒருவழியாய் ஒத்துக்கொண்டு, போற்குற்றத்துக்காக இலங்கையை கண்டிக்கும் தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முன்வந்தது... ஆனால் அந்த தீர்மானத்தைகூட நாடாளுமன்றத்தில் கொண்டுவரக்கூடாது என்று எதிர்த்தும், அதை தாக்கல்செய்யகூட ஒத்துழைக்காத கட்சிதான் பிஜேபி.... "இலங்கையில் நடந்தது போர்குற்றம் அல்ல", ராஜபக்ஷேவை "போற்குற்றவாளி" என்று குறிப்பிடக்கூடாது என்று சொன்னகட்சிதான் பாஜக...
இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு மட்டும் முட்டுக்கட்டை போட்டது ஏன்?????
தமிழர்களை கொன்ற சிங்கள ராஜபக்ஷவுக்கு பாரத ரத்னா கொடுக்கவேண்டும் என்று சொன்னவர் BJPயை சேர்ந்தவரும், மோடியின் நண்பருமான சு.சாமி... மோடியின் அமைச்சரவையில் மிகமுக்கிய பொறுப்புக்களை வகிக்கும் ரவிசங்கர் பிரசாத், இலங்கையில் நடந்தது போர்குற்றம் கிடையாது, ராஜபக்சே போற்குற்றவாளி என்று அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று அறுதியாய் சொன்னவர்.... சுஷ்மா சுராஜோ, ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்.. இந்தியாவுக்கு அவரை அழைத்து மரியாதை செய்தவர்.. ஈழ தமிழர்கள் தனி நாடு என்பதை கேட்கவில்லை என்று சொல்லி, உயிர்த்தியாகம் செய்த போராளிகளை அவமதித்தவர்..

Wednesday, July 25, 2018

யார் இந்த திலகர்?

யார் இந்த திலகர்?

லோக மான்ய பாலகங்காதர திலகர் என்று பார்ப்பனர்களால் ஏற்றிப் போற்றப்படுபவரின் பிறந்த நாள் இந்நாள் (1856).

‘லோக மான்ய' என்றால், உலகத்திற்கே அறிவுரை சொல்பவர் என்று பொருளாம். இவர் அப்படி என்ன  அறிவுரை கூறியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

‘‘இப்பொழுது எல்லோரும் சட்ட சபைக்குச் செல்லவேண்டுமென்று முயற்சி செய்கிறார்கள். செருப்புத் தைக்கிறவனும், எண்ணெய் செக்கு ஆட்டுபவனும், வெற்றிலைப் பாக்குக் கடைக்காரனும்  (The Gobblers, The Oil Mongers, and Petty Traders) சட்டசபைக்குப் போகவேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். யார் யார் எது எதற்குப் போகவேண்டுமென்ற ஒரு வரைமுறை கிடையாதா?'' என்று பேசிய வர்தான் உலகத்திற்கே அறிவுரை கூறும் இந்த லோகமான்யர்.

(ஆதாரம்: டாக்டர் அம்பேத்கர் அவர் களின் ‘‘காந்தியாரும் - காங்கிரசும் தீண்டாத மக்களுக்குச் செய்தது என்ன?'' என்ற நூல்!

''இவரைப் பற்றி மேற்கோளாக அடிக்கடி கூறப்படுவது 'சுயராஜ்யம் நமது பிறப்புரிமை' என்பார் திலகர் என்ற வாசகங்கள்.

இவரது 'சுயராஜ்யம்' மனு ஆட்சி தான் என்பதற்கு மகாராஷ்டிர அரசின் கல்வித் துறை 1994-இல் வெளியிட்ட 'சத்திரபதி சாகு - சமூக ஜனநாயகத்தின் தூண்' (Chatrapathi Sahu - The Pillar of Social Democracy) என்ற நூலில், 363-364 பக்கங்களில் (“Our Law is Manu Smriti" and pointed out that the law (Manu Smriti) orders king to administer with the help of learned persons and Brahmins - (Samagra Lokmanya Tilak- Vol. V- pages 449-50)

"நமது சட்டம் மனுஸ்மிருதிதான்" என்று கூறிய திலகர், கற்றறிந்தவர்கள் மற்றும் பார்ப்பனர்களின் உதவியுடன் அரசன் ஆட்சி நடத்த வேண்டும் என்று இந்த மனுஸ்மிருதி சட்டம் இருப் பதைச் சுட்டிக் காட்டினார்.

Manu Smriti was to be the law of Swarajya, according to Tilak. (Tilak's speech at Yeotmal on 9th Jan 1917)

சுயராஜ்யத்தின் சட்டமாக மனு ஸ்மிருதிதான் இருக்க வேண்டும் என்று திலகர் விரும்பினார். (யோத்மாலில் 1917 ஜனவரி 9 அன்று திலகர் பேசிய பேச்சு)

"In his speech at Athani on 11th November 1917, Tilak used strong language and strong logic in denying position to different professional castes in the Legislative Council of Bombay Presidency."

பம்பாய் மாகாண சட்ட மன்ற மேலவையில் பல்வேறுபட்ட தொழில் செய்பவர்களுக்கு இடம் அளிப்பதை எதிர்த்து திலகர், ஆதானியில் 1917 நவம்பர் 11 அன்று பேசிய தமது பேச்சில் கடுமையான மொழியில், ஒரு தீவிரமான வாதத்தை முன்வைத்தார்.

"Tilak advised the untouchables not to take secondary education after primary education; he wanted them to learn crafts of their caste. He thus, believed in the continuation of caste professions for untouchables, and not in giving higher education to them."

"தொடக்கக் கல்விக்குப் பின் இடைநிலைக் கல்வியைத் தொடர வேண்டாம்" என்று தீண்டத்தகாத மக்களுக்குத் திலகர் ஆலோசனை கூறினார். இதன் மூலம் தீண்டத் தகாத மக்களின் ஜாதித் தொழில்களை அவர்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பதை நம்பிய திலகர் அவர்களுக்கு உயர் கல்வி அளிக்கப்படுவதை எதிர்த்தார்.''

மற்றொரு முக்கிய தகவல் உண்டு. இந்தத் திலகர் மரணமடைந்தபோது (1.8.1920) இறுதி நிகழ்ச்சியில் காந்தியார் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்.

அப்பொழுது திலகரின் பாடையைத் தம் தோளிலும் தூக்கவேண்டும் என்று கருதிய காந்தியார் அங்கு சென்றபோது, அங்கிருந்த பார்ப்பனர்கள், ‘நீ வைசியன், பிராமணராகிய திலகரின் பாடையைத் தூக்கக் கூடாது' என்று கூறி, காந்தியாரைப் பிடித்துத் தள்ளிவிட்டனர்.

காரணம், திலகர் அந்த அளவுக்கு வருணாசிரம வெறியர் என்பதுதான்.

Tuesday, July 24, 2018

மெகாலே கல்வி திட்டம்.

மெகாலே கல்வி திட்டம்.

நம் நாட்டில் மேற்கத்திய கல்விகொள்கையை உருவாக்கியவர் தான் மெகாலே .
1835ல் உருவாக்கிய கல்வி கொள்கை தான் இன்றைக்கும் நாம் கற்ற அல்ல நம் பிள்ளைகள் கற்கும் கல்விமுறை.

இந்தியாவை உருவாக்கிய கிழக்கிந்திய கம்பேனி இந்தியர்கள் வாழனும்னா அதற்கு நாம் ஆளனும் என்ற உயரிய சிந்தினையில் இந்திய நிர்வாகத்தை வெள்ளையரை வைத்தே நிர்வகிப்பதை காட்டிலும் சில கழுதைகளை உருவாக்கி நம் நிர்வாகமுறைகக்கு அக்கழுதைகளை  புகுத்த என்ன செய்யலாம் என யோசித்தபோது.

இங்கிலாந்தில் தொழில் நஷ்டத்தால் கடனில் தத்தளித்த வழக்கறிஞர் மெகாலே தன் கடனை அடைக்க மாதம் 12ஆயிரம் பவுன்ட்ஸ் சம்பளத்தில் ஆய்வு செய்ய இந்தியா அனுப்ப படுகிறார்.

அவரும் ஓராண்டு ஆய்வின் முடிவில்.
கழுதைகளை உருவாக்க ஆங்கில வழி மனப்பாட கல்விமுறை என்ற ஒரு உயரிய கல்விமுறை அறிமுகபடுத்துகிறார்.

அவர் 1835ல் உருவாக்கிய கல்விமுறை காலகட்டத்தில் அப்போ குருகுல கல்விமுறை நடைமுறையில் .
அப்போலாம் தமிழ் கல்வின்னா சிலம்பம் வாள்வீச்சு போன்ற தற்காப்பு கல்விதான்  அதுலயும் வர்ணபேதம் கடுமையாக இருந்த காலகட்டம்.

1835க்கு முன் வெறும் புரானம் இதிகாசம் ஜோதிடம் என்ற குலகல்வியை தடைசெய்து ஆங்கிலேய ஏவலா (கழுதையா) இருக்கனும்னா ஆங்கில வழி கல்விக்கு வாங்கன்னு வெள்ளைகாரன் கூப்பிட்டபோது அதுவரை குலகல்வியே ஒசந்தது என பேசியவன் தான் ஆங்கிலவழி கல்வியை கற்க ஓடினான்.

1835முன் இருந்த சமஸ்கிருத கல்வியை காட்டிலும் எவ்வளோ மேலானது இந்த மெக்காலே கல்வி.
மெக்காலே அவர் தாய்நாட்டுக்கு துளியும் துரோகம் இழைக்காமல் இந்தியாவை நிர்வாகிக்க கழுதைகளை உருவாக்கிவிட்டு போயிட்டார்.

ஆனா அந்த மெகாலே கல்வியை படித்து வெள்ளைகாரனுக்கு ஏவலாக வேலைக்கு வந்தவன்  அந்த கல்விமுறை தொடர்ந்து தன் #சந்நதிகளின் வழையடிவாழையாக தலைமுறை தலைமுறையாக இன்று 2017லு வரை மனப்பாட கழுதை கல்விமுறை நடைமுறைபடுத்தி வந்துகொண்டே தான் இருக்கான்.

1835ல் ஆங்கிலேய அரசு கல்வி விசயத்தில் முழுக்க முழுக்க மேற்கத்திய பானியைதான் திணித்தது.

ஆனா 1857க்கு பிறகு அதாவது சிப்பாய் கலகத்தில் ஆயிரக்கான ஆங்கிலேயரை இழந்த பிறகு மத சாதி வியசத்தில் தலையிடுவதில்லை என்ற குறிக்கோளை ஆங்கில அரசு எடுத்தன அதை தனக்கு சாதகமாக சமஸ்கிருத சகாக்கள் பிடித்துகொண்டு மெக்காலேவின் ஆங்கிலவழி கல்வியோட சமஸ்கிருதத்தையும் இனைத்த கல்விமுறையை படிப்படியாக திணித்தார்கள்,

ஆரம்பகட்ட தொடக்க கல்வியில் சமஸ்கிருதத்தை திணிக்காமல் எல்லாரும் ஓரளவுக்கு படிச்சிட்டு போங்கன்னு விட்டுட்டு உயர்கல்வியில் திணிக்க ஆரம்பித்தார் அப்படி ஒரு வழிமுறைதான் அலோபதி (ஆங்கில) மருத்துவ நுழைவுதேர்வுக்கு சமஸ்கிருத மொழியில் நுழைவுதேர்வை கொண்டுந்தார்கள்.

இன்னைக்கு நுழைத்தேர்வு நீட் போன்றவைக்கு முன்னோடி இது அதை நீதிகட்சி ஆட்சியில் மருத்துகல்வி நுழைவுத்தேர்வை அன்றய முதல்வர் பனகல் அரசர் அதை ரத்துசெய்தார்.

ஆங்கிலேயர் காலம் வரை மெக்காலே கல்வி திட்டம் நடைமுறையில் இந்தது அதன்பின் இந்தியா சுதந்திரம் பெற்றபின்னாச்சும் மெக்காலைவை ஒழித்து புதிய கல்விமுறை கொண்டுவரலாம் பார்த்தா ராஜாஜி குலகல்வின்னு 1835க்கு முன் நடந்த கூத்தையே திரும்ப திணிக்கபட்டு அசிங்கபட்டு ஆட்சியையும் அதிகாரத்தையும் இழந்து காமராஜர் ஆட்சிக்கு வந்தார் .காமராஜரால் கல்வி நிலையத்தை தான் திறக்கமுடிந்ததே தவிர கல்வியை மாற்றமுடிலன்னு 1967ல் இன்றய கல்வி வெறும் வேலைவாய்ப்புகான (கழுதைகளுக்கான)  பாஸ்போர்டாக இருக்ககூடாதுன்னு தன் ஆதங்கத்தை சொல்லிட்டு போய்ட்டார்.

அடுத்துவந்த அரைநூற்றாண்டு ஆட்சியிலும் பெரிய மாறுதல்கள் கல்விமுறையில் ஏற்படுத்தாத தால்  மெக்காலே உருவிக்கிய கழுதை உற்பத்தி கல்விமுறை
சமீபத்திய தேர்வு முடிவுகள் வைத்து பார்க்கும்  93% நம் நாட்டு மக்களிடம் மெக்காலே கல்வி ஆக்கிரமித்துள்ளது. இது சி.பி.எஸ்.சி.யில் 98%மாக உச்சத்தில் உள்ளது.

இந்த கல்வி கொள்கையை உருவாக்க அன்று மெக்காலே  காரணம்..
இந்தியாவில் கல்விக்கான படிக்க கற்வேண்டிய புத்தகத்தின் அளவு வெறும் அரை பீரோவில் அடைச்சிவிடலாம் அந்தளவே இங்க விசயம் இருக்கு.
அதனாலே மேற்கத்திய மொழிப்பெயர்ப்பு அவசியம் அதற்காக ஆங்கிலவழி கல்வி அவசியம்னு தான் சொன்னார்.

மெக்காலே அப்படி சொல்வதற்கு காரணம்.
இங்கிலாந்தில் கல்வி வளர தொடங்கிய போது ஆங்கிலத்தை காட்டிலும் லத்தீன் கிரேக்கத்திலே நிறைய கல்வி இலக்கியங்கள் இருந்தன அதை பிரிட்டன் கற்றுகொண்டு தன் மொழியில் மொழிபெயர்த்துகொணட பின் தான் ஆங்கிலவழி கல்வியே அவர்களுக்கு பூர்த்தியடைந்தது.

அதேபோல நம் நாடும் மெக்காலே கல்வி மூலம் ஐரோப்பா இலக்கியத்தை பெற்றுகொண்டு நம் மண்ணின் வாழ்க்கை முறை வாழ்வியல் முறையை கல்வியில் புகுத்தபட்டு இருக்கனும்.

ஆனா உலக கல்விமுறைகள் ஜெட்வேகத்தில் பயணித்துகொண்டு இருக்கையில் நாம் இன்னும் நம் மூதாதையர் நடைபழகிய கட்டைவண்டியை பிடித்துகொண்டு முன்னேறிகொண்டு இருக்கவேண்டிய சூழலை அன்றுமுதல் இன்று வரை கல்விமுறை மாற்றவிடாமல் சிலர் தடுத்துவருகிறார்கள் .!!

திலகர் சுதந்திரப் போராட்டத்தில் சிறை செல்லவில்லை.

திலகர் சுதந்திரப் போராட்டத்தில் சிறை செல்லவில்லை.
கள்ள கையெழுத்து மோசடி சாதிவெறி மததுவேஷ வழக்குகளில் சிறைக்கு சென்ற பாலகங்காதர திலகர்.
ஆதாரங்களுடன் பதிவு..
இன்று நாடுமுழுவதும் சங்கிகளால் திலகரின் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. '' சுதந்திரம் எனது பிறப்புரிமை'' என்று திலகர் முழங்கியதாக கூறும் அவர்கள், ''சுதந்திரமடைந்த இந்தியாவை ஆளும் உரிமையும் கல்வியும் அரசியலும் பார்ப்பனர்களுக்கே உரியது '' என்று சாதிவெறி பிடித்த இந்த பார்ப்பனன் கூறியதை மட்டும் வசதியாக மறைத்து விடுவார்கள்.
தற்போது கூட தமிழகத்தில் கள்ளக்காதல் கந்துவட்டி கட்டப்பஞ்சாயத்து நிலஆக்கிரமிப்பு போன்ற கேவலமான செயல்களில் ஈடுபட்ட பாஜக இந்து முன்னணி அமைப்பின் தலைவர்கள் பாதிக்கப்பட்டவனால் ஓடஓட துரத்தி வெட்டிக் கொல்லப்பட்டதையும் ,அப்படி செத்தவர்களை இந்து அமைப்புகள் '' தேச பக்தர்களாக '' சித்தரித்து வருவதையும் நாம் அறிவோம்.
இன்றைக்கு நடந்த கள்ளக்காதல் கொலைகளையே தேசபக்த கொலைகளாக திரித்து கூறும் பார்ப்பனிய கும்பல்களும் பார்ப்பன ஊடகங்களும் ,ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய முஸ்லிம் மக்களை தேசவிரோதிகளாகவும் , பார்ப்பனியத்துக்கு ஆதரவாக போராடியவர்களை தேசபக்தர்களாவும் வரலாற்றையே திரித்து நமக்கு சொல்லி வருவதோடு சுதந்திர போராட்ட வீரர்களை காட்டிக்கொடுத்த வாஜ்பேயிக்கு பாரத ரத்னா விருது கொடுத்துள்ளது ..
இப்படி பார்ப்பனிய RSS கும்பலால் மிகப்பெரும் தேசபக்தனாக சித்தரிக்கப்படும் பாலகங்காதர் திலகர் உண்மையில் ஒரு சித்பவன் பார்ப்பன சாதி வெறியன் .மதவெறியன் . பிரிட்டிசார் மராட்டிய பார்ப்பனர்களிடமிருந்து கைப்பற்றிய ஆட்சியை திரும்ப பார்ப்பனர்களிடமே ஒப்படைக்க வேண்டுமென்பதே இவரின் கோரிக்கையாக இருந்தது .மகாத்மா ஜோதிபா பூலே வின் சத்யசோதக் சமாஜுக்கு எதிராக கலவரத்தை தூண்டுவதற்காகவே விநாயக சதுர்த்தி விழாவை ஆரம்பித்து வைத்தவர் . காங்கிரஸ் மாநாட்டில் செருப்பு வீட்சை தொடங்கி வைத்தவர்.
1920 இல் அத்தானி பொதுக்கூட்டத்தில் பேசும்போது '' பிராமணர் அல்லாத மக்கள் கல்வி கற்கவோ அல்லது அரசியலில் ஈடுபடவோ கூடாது '' என பொதுக்கூட்ட மேடையில் வெளிப்படையாக பேசியதால் பம்பாய் சங்கலி புனே கூட்டங்களில் மக்களால் கல்லடிபட்டவர்.
சாதிமறுப்பு திருமணம் குழந்தை திருமண தடுப்பு போன்ற சட்டங்களை கடுமையாக எதிர்த்தவர். தீண்டாமைக்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத்திட மறுத்தவர்.
இப்படிப்பட்ட திலகர் நாட்டுக்காக சிறைப்பட்டதாக பார்ப்பன கும்பல் வரலாற்றை எழுதி வைத்துள்ளது .உண்மையில் பிறர் மீது அவதூறு சுமத்துதல் , மோசடி , கள்ள கையெழுத்து . பிளேக் நோய் பரப்பிய எலிக்கு ஆதரவான போராட்டம் . முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறு பிரசாரம் போன்ற காரணமாகத்தான் இவர் நான்கு முறை சிறை சென்றார்.
1. 1882 ஜூலை 16 இல் திலகர் முதன் முதலில் சிறைக்கு சென்றது ஒரு அவதூறு வழக்கில் .
************************************************
பம்பாய் அருகிலுள்ள கோலாப்பூர் சமஸ்தானத்தின் மன்னர் இறந்ததும் அவர் மகன் சிவாஜி VI என்ற சிறுவனை பதவியில் அமர்த்தினர் . அவனுக்கு மூளை வளர்ச்சி குறைவு .மாதவ் பார்வே கோலாப்பூரின் பொறுப்பதிகாரியாக இருந்தார் .
முதன் முதலில் பத்திரிக்கைகளில் அவதூறு துவேசம் கிசுகிசு எழுதியதே திலகர் தான் .கோலாப்பூர் விவகாரத்திலும் திலகர் புதுசா ஒரு கதை கட்டினார் .'' மன்னர் சத்ரபதி சிவாஜி VI ஒரு பைத்தியம் இல்லை என்றும் ,ஆனால் அவரை பைத்தியமாக்குவதற்கு மருந்து கொடுக்கப்படுகிறது , குறிப்பாக மாதவ் பார்வே மன்னருக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்து வருவதாகவும் தன் கேசரி. மராத்தா பத்திரிக்கைகளில் எழுதினார் .
திலகர் தன் மீது அவதூறு சுமத்தியதாக கார்வார் மாதவ் பார்வே நீதிமன்றத்துக்கு போனார் .இதில் திலகருக்கு 4 மாதம் சிறை தண்டனை கிடைத்தது . சிறைக்கு போனபின்பு ஆங்கில பேராசிரியராக இருந்த வர்ட் ஸ்வர்த் மூலம் அரசுக்கு மனு அனுப்பி பார்த்தார் , ஒன்னும் வேளையாகல , நாலு மாசம் களி தின்னுட்டு வந்தார் .இந்தியாவில் முதன் முதலில் அவதூறு வழக்கில் சிறை சென்றவர் இந்த பால் கங்காதர் திலக் தான்.
2. பிளேக் நோயை பரப்பும் எலிகளுக்கு ஆதரவான போராட்டம்
***********************************************
1897 இல் புனே நகரை பிளேக் நோய் தாக்கியதால் ஆயிரக்கணக்கில் மக்கள் செத்தனர் . நோய் தாக்கி இறந்தவர்களை அடக்கம் கூட செய்ய பயந்து பிணங்களை அப்படியே விட்டுவிட்டு மக்கள் வெளியேறினர் .பாதி நகரமே காலியானது .
நோயை கட்டுப்படுத்த அரசு V.C ராண்ட் தலைமையில் பிளேக் கமிசனை அமைத்தது .
இவர்கள் வீடு வீடாக சென்று பிளேக் நோய் தாக்கியவர்களுக்கு சிகிழ்ச்சை அளித்ததோடு ,வீட்டிலுள்ள சாமான்களுக்கு மருந்து போட்டு சுத்தம் செய்தனர் . அனாதையாக கைவிடப்பட்ட பிணங்களை அப்புறப்படுத்தி எரித்ததோடு பிளேக் நோய்க்கு காரணமான எலிகளையும் கொன்றனர் .இவர்களின் முயற்சியால் நோய் கட்டுப்படுத்தப்பட்டது .
உலகமே இவர்களின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டிய போது திலகர் தன் பார்ப்பன புத்தியை காட்டினான் .
'' மாமிசம் சாப்பிடும் மிலேசளர்கள் அக்கரகாரதுக்குள் நுழைந்ததோடு பிராமணர்களை தீண்டி விட்டார்கள் .பிள்ளையாரின் வாகனமான எலிகளை கொல்லுகிறார்கள் .இது இந்து மதத்தை இழிவுபடுத்துவதாகும் '' என கண்டித்து ஊர்வலம் போனார் . பிளேக் கமிசனர் W.C ராண்ட் க்கு எதிராக கேசரியில் எழுதினார் .
திலகரால் உந்தப்பட்ட பார்ப்பன சாபேகர் சகோதர்கள் ஜூன் 22 .1897 அன்று W.C ராண்ட் மற்றும் அவரது உதவியாளர் Lt அயஸ்டரை சுட்டுக் கொன்றனர் .
இதனால் பிளேக் நோய் பரப்பிய எலிகளுக்கு ஆதரவாய் போராடிய திலகருக்கு 18 மாதம் சிறை தண்டனை கிடைத்தது .
திலகருக்கு சிறையில் சுவற்றுக்கு சுண்ணாம்பு அடிக்கிற வேலை கொடுக்கப்பட்டது . மாக்ஸ் முல்லரின் மூலம் பிரிட்டிஸ் ராணிக்கு மனு கொடுத்து 6 மாதத்துக்கு முன்னாடி விடுதலையானார்.
3. 24.8.1903 பாபா மகராஜ் உயில் மோசடி வழக்கு .
************************************************
கோலாப்பூரில் இருந்த சர்.பாபா மகராஜ் என்ற பெரும் செல்வந்தருக்கு உடல்நிலை சரியில்லாததால் 7.8.1897 அன்று தன் திரண்ட சொத்துக்கள் தொடர்பாக ஒரு உயில் எழுதி வைத்தார் , சொத்துக்களை நிர்வகிக்க திலகர் உட்பட ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்தார் . உயிலின் படி '' கர்பிணியான தன் மனைவிக்கு பிள்ளை பிறக்காமல் போனாலோ அல்லது பிறந்த பிள்ளை அற்ப ஆயுளில் இறந்தாலோ தன் வம்சம் செழிக்க ,ஐந்து பேர் கொண்ட குழுவின் ஒப்புதலோடு ஒரு பிள்ளையை தத்தெடுத்து கொள்ளவேண்டும் . அந்த பிள்ளை மேஜர் ஆகும் வரை இந்த சொத்துக்களை இந்த ஐவரே பரிபாலித்து வரவேண்டும் '' என எழுதிவைத்து இறந்தார் .
பாபா மகராஜின் மனைவிக்கு பிள்ளை பிறந்து அது இரண்டு மாதத்தில் இறந்து விட்டது .வளர்ப்பு மகன் விசயத்தில் திலகரும் வேறு இரண்டு டிரஸ்டிகளும் சேர்ந்து தன்னை மோசடி செய்வதாகவும் ,துன்புறுத்துவதாக பாபா மகராஜின் மனைவி ஜூலை 29.1901 அன்று கோர்டில் வழக்கு போட்டார் .
24.8.1903 அன்று இந்த வழக்கில் கள்ளக் கையெழுத்து பொய் சாட்சி முதலிய குற்றங்கள் செய்ததற்காக திலகருக்கு 18 மாதம் கடுங்காவல் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
4. முஸ்லிம்களுக்கு எதிராக மத துவேச பிரசாரம் செய்ததால் 6 ஆண்டு சிறை .
************************************************
இந்த வழக்கின் பின்னணி பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் .
1911 க்கு முன்பு வரை கல்கத்தா தான் தலைநகராக இருந்தது .மெக்காலே கல்வி திட்டம் வந்தவுடனேயே வங்க பிராமணர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால் அவர்கள் கல்வி கற்று அரசின் உயர் பதவியில் அமர்ந்தனர் .1858 புரட்சிக்கு பின்பு ஆங்கிலேய அரசும் முஸ்லிம்களுக்கு எதிராக இருந்ததால் அவர்களுக்கு ஆங்கில கல்வி மறுக்கப்பட்ட காலம் .
வங்க பிராமணர்கள் தான் இந்து தேசியத்தை உருவாக்கியவர்கள் .இவர்கள் indian mirror .the national guardian .young bengal .tribune .hindu patriat '' போன்ற இதழ்களை நடத்தி வந்தார்கள் .
1870 இல் அரசு பணிகளில் முஸ்லிம்களையும் சேர்க்க பிரிட்டிசார் முன்வந்தபோது வங்காள பிராமணர்கள் நடத்திவந்த '' இந்து பேட்ரியாட் '' பத்திரிகை ஆகஸ்ட் 2.1870 ல் வெளியிட்ட இதழில் ,அரசின் முடிவை எதிர்த்ததோடு '' முஸ்லிம்கள் அரசுக்கு எதிரான கலகக்காரர்கள் '' என்பதையும் ஞாபகப்படுத்தியது .
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த வங்காளத்தில் அரசு துறை பணிகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே முஸ்லிம்கள் இருந்தனர் .
1905 ல் கர்சன் பிரபு வங்காளம் பிகார் ஒரிசா உள்ளடங்கிய வங்காளத்தை இரண்டு மாகாணங்களாக பிரித்ததார். அதுவரை அரசு பணிகளை ஏகபோகமாக அனுபவித்து வந்த வங்க பிராமணர்கள் ,இந்த பிரிவினையால் தங்கள் வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்ப்படும் என்பதால் பிரிவினையை ரத்து செய்ய கோரி கல்கத்தா உள்ளிட்ட வங்க பகுதியில் கலவரம் செய்து வந்தனர் .
பிளேக் எலிக்கு ஆதரவாக போராடி சிறை சென்ற திலகர் வெளிவந்தவுடன் வங்க பார்ப்பனர்களுக்கு ஆதரவாக எழுதிவந்தார் .இந்த பிரச்னையில் ''அரசு முஸ்லிம் குண்டர்களை ஏவி இந்துக்களின் சொத்துக்களை சேதப்படுத்தி பெண்களை மானபங்கப்படுதுவதாக '' முஸ்லிம்களுக்கு எதிராக மத துவேச கருத்துக்களை தொடர்ந்து தனது கேசரி பத்திரிக்கையில் எழுதி வந்ததால் இவர் மீது இரு மதங்களுக்கிடையே துவேசத்தை வளர்ப்பதாக வழக்கு தாக்கலானது .இந்த வழக்கில் ஜூன் 24 1908 அன்று கைது செய்யப்பட்டார் . இதில் திலகருக்கு 6 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது .
தலித் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்ட இப்படிப்பட்ட ஒரு சாதி மத வெறியனை தேச பக்தனாக சித்தரித்துள்ளனர் .
பார்ப்பன சாதி மத வெறியர்களை தேச பக்தர்களாக சித்தரிக்கும் பார்ப்பன புரட்டு வரலாற்றை மாற்றியமைப்போம்.
ஆதாரங்கள் .
1.http://ambedkar.org/jamanadas/TilakGandhi.htm
2.https://en.wikipedia.org/wiki/Shivaji_IV
3.https://en.wikipedia.org/wiki/Kesari_(newspaper)
4.https://www.mapsofindia.com/on-this-day/july-3-1908-bal-gangadhar-tilak-is-arrested-for-sedition-by-the-british
5.https://en.wikipedia.org/wiki/Chapekar_brothers
6.http://bombayhighcourt.nic.in/libweb/historicalcases/cases/First_Tilak_Trial_-_1897.html
7.http://www.newworldencyclopedia.org/entry/Bal_Gangadhar_Tilak
8.http://www.bombay-book.htmlplanet.com/custom2.html
9.https://indiankanoon.org/doc/1765978/
10.https://en.wikipedia.org/wiki/Bal_Gangadhar_Tilak
11.https://indiankanoon.org/doc/265118/
12.https://books.google.co.in/books?id=905gbgzGN1EC&pg=PA117&lpg=PA117&dq=bal+gangadhar+tilak+kolhapur+case&source=bl&ots=i0AxYblMoa&sig=OjhsQmiKiRpyzmp3q0PrE8VOwRI&hl=en&sa=X&ei=MWI1UpeBC4OErAeJz4DACg#v=onepage&q=bal%20gangadhar%20tilak%20kolhapur%20case&f=false
13.http://bombayhighcourt.nic.in/libweb/judgment/Tilakcases/BalGangadharTilak.html
14.https://indiankanoon.org/doc/1430706/
15.8.நூல் .லோக மான்ய பால கங்காதர திலகர் .
ஆசிரியர் .ஸ்ரீ.எம்.எஸ்.சுப்ரமணிய ஐயர் .
அல்லயன்ஸ் கம்பெனி
மைலாபூர் .1938

குடுமிகள் கையில் ஆட்சி நிர்வாகம் சிக்கி சீரழியுது

சாதாரண போத்தீஸ் விளம்பரத்தில் கூட குடுமி வச்சவன் தான் ராஜகுருவாக  இருக்கான் மொரட்டு மீசை வச்சவன் படைத்தளபதியாகவும் ராஜா என்பவன் இந்திய ராஜா போல  ஆடையெடுபதிலே குறியாக தத்தியாக காட்சி படுத்திருக்கான் ..

ஆனா இந்திய திருநாட்டில் குடுமி கையிலயே பாதுகாப்பையும் நிதியையும் நீதியையும் கொடுத்துவிட்டு கையேந்தி பிழைத்தவன் கையில் நாட்டை ஒப்படைத்துவிட்டு நாம் கையேந்தும் சூழலில் வாழ்கிறோம்..

குடுமியை கிருமிகளாக விமர்சித்த திராவிட சித்தாந்தம் கொண்ட கலைஞர் கூட தான் ஆளும்போது குடுமியையே தலைமை செயலாளராக அதிகார பதவியில் வைத்து அழகு பார்த்தார்..

இன்றய ஆட்சியிலும்  எஸ்.வி சேகர் வைகைரா குடுமிகள் கையில் ஆட்சி நிர்வாகம் சிக்கி சீரழியுது..

தாழ்த்தபட்ட சமூகத்தை சேர்ந்த அம்பேத்கர் எழுதிய சட்டமானாலும் அதை நடைமுறை படுத்தும் அதிகாரம் தந்திரம் முழுக்க குடுமிகளின் கையிலே தான் அன்று முதல் இன்று வரை தொடர்கிறது..

அம்பேத்கர் எழுதிய சட்டம் என்ற ஒற்றை சொற்களை கொண்டே எங்கள் தீர்ப்பை எதிர்காமல் சட்டத்தை மதிக்கவேண்டும் எந்த தந்திரத்தை ஆயுதமாக்கி குடுமி ராஜ்யம் நடந்துகிறார்கள்.

இந்தியாவில் உள்ள நூறு கார்ப்ரேட் நிறுவனங்களின் இயக்குனர் போன்ற முக்கிய பொருப்புகள் 96விழுக்காடு குடுமிகள் கையிலும் அவாலுக்கு நிகரான உயர்சாதிகள் கையிலுமே இருக்கிறது.

 இந்நாட்டின் நிர்வாகம் தொழில் நிர்வாகம் அனைத்துமே கொத்தடிமைப்போல் அவாலுக்கு சேவகம் செய்கிறது போல இந்நாட்டின் கட்டமைப்பு இருக்கிறது..

இதை எப்படி மாற்றியமைப்பது என்ற புரிதல் இல்லாமல் நிர்மலா தேவி தனக்கு கீழான சாதியை சார்ந்த பன்னீரை உதாசின படுத்தினால்
பன்னீர் தனக்கு கீழான சாதியை சேர்ந்தவரை உதாசின படுத்தி நான் ஆதிக்கசாதி என்ற வெத்து பீத்தலோடு உலாவருவார்  இப்படிபட்ட சாதி அடுக்குமுறை தகர்க்கபடாமல் என்னத பேசியும் எந்த தீர்வும் ஏற்படாதுன்னு இன்றைக்கு பெரியார் இருந்தால் இப்படி தான் பொளம்புவார்...

Monday, July 23, 2018

தமிழகத்தில் RSS ன் நுழைவு - மீனவமக்களை அடித்து விரட்டி கட்டப்பட்ட குமரி விவேகானந்தன் மண்டபம்..

தமிழகத்தில் RSS ன் நுழைவு - மீனவமக்களை அடித்து விரட்டி கட்டப்பட்ட குமரி விவேகானந்தன் மண்டபம்..
தமிழகத்தில் பெரியாரின் தாக்கத்தினால் வளரமுடியாமல் தேங்கியிருந்த ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு, பார்ப்பனரல்லாத இந்து மதப் பிரச்சாரகர் விவேகானந்தனுக்கு பொதுவில் இருந்த இரசிகர் பட்டாளம் நம்பிக்கையளித்தது. இதையே அடித்தளமாக வைத்து தமிழகத்தில் RSS நுழைய திட்டம் போட்டது. அதன் விளைவுதான் குமரியில் கட்டப்பட்ட விவேகானந்தன் நினைவாலயம்.
பார்ப்பனரல்லாதோரையும் உள்ளிழுக்கும் வகையில் வருண சாதி அமைப்புக்கு பங்கம் வராமல் சில சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்தவன் விவேகானந்தன். காங்கிரசு மட்டுமல்ல போலி கம்யூனிஸ்டுகள் கூட விவேகானந்தனை ஏற்றுக் கொள்பவர்கள் தான்.
பொதுவாக ஆர்.எஸ்.எஸ் தனது வளர்ச்சிக்கு மக்களிடம் இயல்பாக இருக்கும் மதநம்பிக்கைகளையும் விழுமியங்களையும் கவர்ந்து கொண்டும், அவற்றுள் ஊடுருவிக் கைப்பற்றியும் அவற்றின் உள்ளடக்கத்தை தமக்கேற்றவாரு மறுசீரமைத்து மதவெறியூட்டுவதையும் தமது செயல் தந்திரங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் ஊடுறுவுவதற்கு ஆர்.எஸ்.எஸ் முயன்றது. காலம் காலமாக குமரி மாவட்ட கரையோர மீனவர்கள் கடலாடி வந்து உணவருந்தி ஓய்வெடுக்கவும், தமது வலைகளைக் காய வைக்கவும், ஆண்டுக்கொரு முறை சிலுவை வைத்து ‘குரூஸ்’ எனும் வழிபாடு நடத்தப் பயன்படுத்தி வந்த பாறையை ஆர்.எஸ்.எஸ் விவேகானந்தனுக்கு மணிமண்டபம் கட்ட குறிவைதத்து.
விவேகானந்தனோ நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பல இடங்களில் தங்கி தியானம் செய்திருக்கிறான், சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கிறான். அங்கேயெல்லாம் நினைவாலயம் காட்டாமல், RSS குறிப்பாக அந்தப் பாறையைத் தேர்ந்தெடுக்கக் காரணம் அதைப் பயன்படுத்தி வந்த மீனவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்ததும், அம்மாவட்ட மக்கள் தொகையில் அவர்கள் கணிசமான அளவில் கிறஸ்துவர்களா இருந்ததும் தான்.
அவர்கள் எல்லாம் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை, புறக்கணிப்பு காரணமாக மதம் மாறியவர்கள். அதே போல நாடார்களில் கணிசாமானோரும் கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர். மிச்சமிருக்கும் இந்து நாடார்களையும் ஏனைய சாதி இந்துக்களையும் திரட்டுவதற்கு இந்த விவேகானந்தர் நினைவு சின்னம் வழி செய்யும் என்றும்,
மேலும் இந்தியா முழுவதிலும் இருந்துவரும் மக்களுக்கு இந்த நினைவுச் சின்னம் ஒரு இந்துதுத்வ சுற்றுலாவாக இருக்கும் நன்மையையும் ஆர்.எஸ்.எஸ் கணித்தது.
ஆர்.எஸ்.எஸ் மீனவர்களுக்குறிய பாறையில் நினைவாலயம் அமைக்கப்பட்டால் தமது வாழ்வுரிமை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த மீனவர்களும், மக்களும் அந்நடவடிக்கைகளை தம்மால் இயன்ற அளவில் கடுமையாக எதிர்த்தார்கள்.
அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் RSS இந்துவெறியர்களுக்கு பலமில்லாத காரணத்தால், கேரளாவில் இருந்து இரகசியப் படகுகள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் குண்டர்களையும், தமிழக போலீசையும் வைத்து மீனவர்களை அடித்து விரட்டி விட்டு இந்த ஆக்கிரமிப்பை வெற்றிகரமாகச் செய்தனர்.
மீனவர்களுக்கு அந்தப் பாறை மேல் இருந்த பாரம்பரிய உரிமையை மூடி மறைத்து, அவர்களிடம் இருந்து அதைத் தட்டிப் பறித்த ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு துணையாக மத்தியில் ஆட்சியிலிருந்த சாஸ்திரியும், மாநிலத்தில் ஆட்சியிலிருந்த பக்தவத்சலமும் பக்கபலமாய் இருந்துள்ளனர். காஞ்சி சங்கராச்சாரி மறைமுகமாகத் துணை நின்றான்.
இறுதியில் 1970ஆம் ஆண்டு விவேகானந்தர் நினைவாலயம் திறக்கப்பட்டது. கூடவே கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ்இன் நச்சுப்பணிக்கான தளவேலையும் ஆரம்பிக்கப்பட்டது. பின்னாளில் மாண்டக்காடு கலவரத்தை தூண்டிவிட்டு குளிர்காய்ந்தது இந்த RSS கும்பல்.

எவன் சுதந்திர போராட்ட வீரர் - ஆங்கில அதிகாரி ஆஷ் படுகொலை - வாஞ்சிநாதனின் பார்ப்பன சாதிவெறி

எவன் சுதந்திர போராட்ட வீரர் - ஆங்கில அதிகாரி ஆஷ் படுகொலை - வாஞ்சிநாதனின் பார்ப்பன சாதிவெறி - காவிகளால் மறைக்கப்பட்டுவரும் வரலாறு....
இந்த 21-ம் நூற்றாண்டிலே இந்துத்துவ சக்திகள் இந்தியத் திருநாட்டை ஆட்சி செய்யும் தருவாயிலே மத்தியப் பிரதேசத்திலே ஒரு உயர்சாதி இந்து ஒருவரின் மீது தலித் சிறுமியின் நிழல் பட்டதற்காக அவள் அடித்து துன்புறுத்தப்பட்டிருக்கிறாள். இது அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று எண்ணுகிறேன்.
அரசியல், அறிவியல் வளர்ச்சியடைந்த இந்த தருணத்திலே கூட இப்படிப்பட்ட இழிவுகளைக் காண முடிகிறது என்றால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிலைமை எப்படி இருந்திருக்கும்.?
பிரிட்டிஷ் ஆட்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ்துரை, அம்மாவட்டத்தில் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை சமமாக மதித்தார். அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சாதி பாகுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் மதிய உணவு உண்ணவேண்டும் என்றும் ஒரே குடத்தில் தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
இதை உறுதி செய்யும் விதமாக ஆஷ் இறந்த ஒரு வார காலத்திற்குள் தனது "தமிழன்" பத்திரிக்கையில் "சகல சாதி மனுஷரையும் சமமாக பாவித்தவர் கலெக்டர் ஆஷ்.!” என்பதாக அயோத்திதாச பண்டிதர் குறிப்பிட்டதை கவனிக்கலாம்.
.
''குற்றால அருவிகளில் தெய்வங்களும், அவருக்கு பூசை நடத்தும் “பிராமணர்களும்” மட்டும் தான் குளிக்க வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. குற்றலாத்தில் சூத்திரர்கள் குளிக்க தடை இருந்தது. சூத்திரர்கள் என்றால் இப்போது ஆண்ட பரம்பரை பேண்ட பரம்பரை என்று பீற்றிக்கொள்கிறார்களே.. அவர்களையும் சேர்த்துதான் குறிப்பிடுகிறேன்.
பிராமணர்கள் மட்டும் குளிக்கலாம் என்ற வழக்கத்தை மாற்றி அனைத்து சாதி ஜனங்களுக்கு குளிக்கலாம் என்ற ஆணையை பிறப்பித்து சாதி தடையை நீக்கினார் ஆஷ்.
தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காந்தி, குற்றாலத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்ட செய்தி அறிந்து தானும் குளிக்க மறுத்தார் என்கிறது வரலாறு.
ஆஷ் துரை மாலை நேரத்தில் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தர் உடன் நடைப்பயிற்சி போகும் போது காதில் ஏதோ அலறல் கேட்கிறது. ஓசை வந்த திசை நோக்கினார் ஆஷ் துரை. அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார். பின்னால் வந்த ராவுத்தர் ஓடி வந்து "துரை அங்கு போகாதீர்கள்" என்று தடுக்கிறார். ஏன் என்று வினவிய துரைக்கு, "அது தாழ்த்தபட்டவர்களின் குடிசை'' என்றும் நீங்கள் அங்கு போகக்கூடாது என்றும் கூறுகிறார்.
பின்பு, நானே சேரிக்குள் சென்று என்ன விசயம் என்று அறிந்து வருவதாக சொல்லிய முத்தா ராவுத்தர் திரும்பி வந்து கூறுகிறார் "மொத பிரசவம் துரை. சின்ன பொண்ணு. ரெண்டுநாள கத்திட்டு இருக்காளாம், பிள்ளை மாறிக்கிடக்காம் எங்கிட்டு துரை பொழைக்க போகுது.!" என்றான்.
"ஏன். மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே.!" என்று துரை கேட்க , "அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க. அய்யா பின்ன எப்படி வண்டி கட்டி டவுணுக்கு கொண்டு போறது.?" என்றார் முத்தா ராவுத்தர். ஆனால் மருத்துவமனை கொண்டு சென்றால் ஒரு உயிரையெனும் காப்பாற்றலாம் என்று துரையிடம் சொன்னார்.
அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரையொட்டியை பணித்தார் துரை. ஓடிப்போன ராவுத்தர் ஊரின் மேற்கு பகுதியில் உள்ள அக்கிரஹாரம் தாண்டிய பொழுது துரையின் வண்டியொட்டி எனத்தெரிந்த ஒரு பார்ப்பனர் வழிமறிக்கிறான். என்ன விடயம் என்பதைச் சொல்லி விட்டு ஒரு குடியானவனின் வீட்டிலிருந்த மாட்டு வண்டியை ஒட்டி வருகிறார்.
மருத்துவமனை செல்ல அக்கிரஹாரத்தை தாண்டி தான் வண்டி சென்றாக வேண்டும். சரியாய் அக்கிரஹாரத்துக்குள் மாட்டு வண்டி மறிக்கப்படுகிறது. ஒரு சக்கிலிக்குடி பெண்ணை இந்த வழியே கொண்டு செல்லக்கூடாது போகக்கூடாது என்று பார்ப்பனர்கள் வழிமறித்து பிரச்சினை செய்தனர். மீறி சென்றால் வண்டி கொடுத்த வண்டி கொடுத்தவன் முதற்கொண்டு ஊர் நீக்கம் செய்து விடுவோம் என எச்சரித்தனர்.
இதைக்கேட்ட ஆஷ் துரை அவர்கள், தனது வண்டியில் அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார். குதிரையோட்டியின் பக்கத்திலேறி அமர்ந்து கொண்டார். வண்டி அக்கிரஹாரம் நுழையும் போது மீண்டும் பார்ப்பனர்கள் கூட்டமாய் வழிமறித்து "ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக்கொண்டு இந்த அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய் இருந்தாலும் அனுமதிக்கமுடியாது" என்று பிரச்சினை செய்தனர்.
ஆஷ் கோபமாக வழி விட சொல்லி வண்டியைக்கிளப்பு என்று உத்தரவிடுகிறார்.
மீறி மறித்த பார்ப்பனர்களை அடித்து விரட்டிவிட்டு அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டுசென்று காப்பாற்றினார். ஆஷ் துரை அவர்களிடம் அடிவாங்கிய கும்பலில் ஒரு 16 வயது இளைஞனும் இருந்தான் அவன் பெயர் தான் வாஞ்சிநாதன். அப்போது எடுத்த சபதம்தான் வாஞ்சிநாதனை கொலைசெய்ய தூண்டியது.
இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரை மணியாச்சி என்ற ஊரின் ரயில் நிலையத்தில் சாதி வெறிபிடித்த வாஞ்சிநாதனால் சுட்டு கொல்லப்பட்டார்.
இந்த வரலாறு இன்று வரை பார்ப்பனர்களால் மறைக்கபட்டு வருகிறது. இந்த வரலாற்றை பற்றி திருநெல்வேலி மாவட்டத்தில் மணியாச்சியில் (தற்போது பார்ப்பன தேவிடியாமகன்லால் வாஞ்சிமணியாச்சி என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது) தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களிடம் கேட்டுப்பாருங்கள். அனைத்தும் கூறுவார்கள்.
மேலும் இதுபற்றிய விபரம் laan venish எழுதிய Ash Official Notes எனும் குறிப்புகள் அரசு ஆவணக்காப்பகங்களில் இன்றும் உள்ளது.
இது தவிர்த்து இந்த படுகொலைக்கு ஆதாரமாக வாஞ்சிநாதன் எழுதி வைத்திருந்த கடிதம் குறித்த தகவலும் உள்ளது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது....
("ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலில் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயர்களைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.
எங்கள் ராமன், கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜுனன் முதலியவர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோ(பசு) மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனுக்கு முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது.
அவன் (ஜார்ஜ்) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு, 3000 மதராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை.
இப்படிக்கு
ஆர். வாஞ்சி அய்யர்”)
1911-ம் ஆண்டு ஜீன் 17-ம் தேதி காலை 10.30 மணியளவில் திருநெல்வேலி மாவட்டத்தின் மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து கலெக்டர் ஆஷ்-ஐ சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட வாஞ்சிநாதன், ஆஷ் கொலைக்கான காரணமாக தன் சட்டைப்பையில் எழுதி வைத்திருந்த ஆவணமே மேற்கண்ட கடிதம்.
ஆக, இந்தக் கடிதம் ஆஷ் துரை கொல்லப்பட்டது தேசபக்தியின் பொருட்டு அல்ல, இந்து மதத்தின் வர்ணாசிரமத்துக்கு ஆஷ்துரையால் ஏற்படுத்தப்பட்ட அவமானத்தைப் போக்கவே என்று உணர்த்துகிறது.
மாபெரும் வீரனாக, புரட்சியாளனாக, பூலுத்தியாக, சுதந்திர தாகம் கொண்டவனாக விடுதலைப் போரில் வெள்ளையரின் அநீதி கண்டு கொதித்தெழுந்தவனாக வாஞ்சிநாதனை உருவகப்படுத்தி இது நாள் வரையிலும் பார்ப்பன பரதேசிகளால் வரலாறுகள் எழுதப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.
தென்னிந்தியாவை பொறுத்த வரையில் ஆஷ்-ன் கொலையே முதலும் கடைசியுமானது.
இக்கடிதத்தின் பின்னணியில் பார்த்தோமானால் சுதந்திரம் என்பதை விட சனாதனமும், ”எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில்” எனும் வரிகள் வெள்ளையர்களின் ஆளுகையிலிருந்த இந்த தேசத்தை மீண்டும் பிராமணீய ஆட்சிக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்கிற வேட்கையே முன்னணியில் நிற்கிறது என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.
இதைத்தான் ராமராஜ்ஜியம் என்ற பெயரில் தற்போது இந்துத்துவா வெறியர்களும், RSS பிஜேபி அரசும் இந்த நாட்டில் செயல்படுத்த துடிக்கின்றனர்.
இந்த இந்துத்துவா சதி வேலைகளை கண்டு கொதித்தெழுந்து நீங்கள் பார்ப்பனர்களை கருவருக்காமல் இருந்தாலும் பரவாயில்லை, இதைப் பற்றி புரிந்துகொல்லவாவது முயற்சி செயுங்கள் நண்பர்களே..

கோல்வால்கரும் RSS சித்தாந்தமும் - ஒரு கேவலமான பிறவிகள் தான் RSS காவிகும்பல்

கோல்வால்கரும் RSS சித்தாந்தமும் - ஒரு கேவலமான பிறவிகள் தான் RSS காவிகும்பல்..
ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தங்களின் வேத புத்தகம் என்று கூறிக்கொள்வது அவர்களது தலைவரான கோல்வாக்கர் எழுதிய Bunch of Thoughts எனும் புத்தகம். இதை அவர்களால் மறுக்க முடியாது. மறுப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்களாகவும் இருக்க முடியாது. ஒருபோதும் மறுக்கவும் மாட்டார்கள்.
அப்படிப் பட்ட அந்த புத்தகத்தில் அவர்கள் கனவு காணக்கூடிய இந்து ராஷ்டிரத்தைப் பற்றி எழுதுகிறான். எப்படிப்பட்ட இந்து ராஷ்டிரம்? கோல்வாக்கர் சொல்லும் இந்து ராஷ்டிரத்தின் லட்சணம் என்ன தெரியுமா? இதோ படியுங்கள்.
“தென்னாட்டில் ஒரு ஆங்கிலேய அதிகாரி இருந்தார். அவருக்கு உதவியாளராக அந்த மாநிலத்தைச் சார்ந்த ஒருவர் இருந்தார். அவர் நாயுடு வகுப்பைச் சார்ந்தவர். அந்த ஆங்கிலேய அதிகாரியின் பியூனாக இருந்தவர் ஒரு பிராமணர்.
ஒருநாள் அந்த ஆங்கிலேய அதிகாரி தனது ‘பிராமண’ பியூன் பின் தொடர வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அவரது உதவியாளராக இருந்த அந்த நாயுடு சமுதாயத்துக்காரர் வந்தார். ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்து கைகுலுக்கினார். ஆனால் பிராமண பியூனைப் பார்த்தவுடன் காலைத்தொட்டு வணங்கினார்.
அதைப்பார்த்து வியப்படைந்த ஆங்கிலேய அதிகாரி ‘நான் உன்னுடைய பெரிய அதிகாரி. என்னிடம் நீ கைதான் குலுக்கினாய். ஆனால் என்னுடைய பியூனின் காலைத்தொட்டு கும்பிடுகிறாயே. இது என்ன பிரச்னை?’ என்று கேட்கிறார்.
அதற்கு அந்த உதவியாளர் பதில் சொல்கிறார். நீங்கள் என்னுடைய பெரிய அதிகாரியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு மிலேச்சர். அவர் ஒரு பியூனாக இருக்கலாம். ஆனால் நாங்கள் வணங்கக்கூடிய பிராமண சமூகத்தைச் சார்ந்தவர். அவரைத் தொழவேண்டியது எனது கடமை என்று பதில் சொன்னார். இதுதான் இந்து தர்மம்”
கல்வியறிவில் குறைந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. தன்னைவிட குறைவான பொறுப்பில் பணிசெய்பவராக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் பிராமணன் என்ற ஒரே காரணத்திற்காகவே அவர் வணங்குவதற்கான தகுதியுடையவர் என்கிறான். கோல்வாக்கர். அது மட்டுமல்லாமல் அதுதான் இந்து தர்மம் என்கிறான். இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும். இதை பின்பற்றுபவர்கள் தான் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கும், சாதிய அமைப்பிற்கு எதிராக போராடுபவர்கள் என்று சொன்னால் நம்மால் சிரிப்பதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்?
ஆதாரம் - (கோல்வாக்கர் எழுதிய Bunch of Thoughts நூல் பக்கம் 138-139)

நம்பர் ஒன் கோழை தான் வீர் சாவக்கர்

நம்பர் ஒன் கோழை தான் வீர் சாவக்கர் - வீரனாக வரலாறு திரிக்கும் காவி கும்பல்...
இவனை போன்ற ஒன்னா நம்பர் கோழையை வரலாற்றில் எங்கு தேடினாலும் காண முடியாது.
1883 மே மாதம் 28ஆம் நாள் மகாராட்டிராவில் நாசிக் அருகில் உள்ள பாகூர் என்ற கிராமத்தில் சித்பவன் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவன் தான் வினாயகத் தாமோதர் சாவர்க்கர்தான். இன்று காவிஇந்துமதவெறி கூட்டத்தினாரால் வீரசாவர்க்கர் என்று அழைக்கப்படுகின்றான்.
இல்லாத கடவுள்தான் எல்லாவற்றையும் இயக்குகிறது என்பான்.
அய்ந்துபேரின் மனைவியை அழியாத பத்தினி என்பான்.
இந்து ராஷ்டிரம் என்பதை வரையறுத்து இந்து முஸ்லிம் கலவரத்திற்கு காரணமானவன் இவன் தான்.
காந்தியை கொல்ல வெப்பன் சப்பளையும், செயல்திட்டமும் இவனுடையதுதான்.
அதேபோல், ஆங்கிலேயர்களிடத்தில் கெஞ்சி மண்டிபோட்டு மன்னிப்பு கடிதம் எழுதுவதில் , இவனை யாரும் மிஞ்ச முடியாது. இவனை மன்னிப்பு கடித மன்னன் என்றே சொல்லலாம். இப்படிப்பட்டவனைத்தான் இந்து வெறியர்கள் வீரசாவர்க்கர் என்கிறார்கள்.
இவனை பற்றிய உண்மையை தெரிந்தித்தவர்கள் ஒருமுறையாவது காரித்துப்பாமல் இருக்கமுடியாது.
கல்லூரிப் படிப்பை இந்தியாவில் முடித்துவிட்டு, பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக இலண்டன் சென்றிருக்கிறான். அங்கு பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் பலருடன் தொடர்புகொண்டான்.
1909ஆம் ஆண்டு, இலண்டனில் சர் கர்சன் வைலி என்ற ஆங்கில அதிகாரியைச் சுட்டுக் கொல்லும்படி மதன்லால் திங்ரா என்பவரைத் தூண்டிவிட்டார்.
அதே ஆண்டு இறுதியில் நாசிக் கலெக்டர் எ.எம்.டி.ஜாக்சன் என்பவரைச் சுட்டுக் கொன்றவனுக்கு துப்பாக்கி சப்பளை செய்தது இவன்தான்.
ஜாக்சன் என்பவர் இந்திய மக்களை நேசித்தார், அறிவியல் மனப்பான்மை உடையவர். மூடபழக்கத்து எதிராக சட்டம் கொண்டுவர முன்மொழிந்தவர்.
இந்த இரண்டு குற்றச் செயல்களிலும் அடுத்தவரை மாட்டவிட்டு தந்திரமாக தப்பித்துக்கொண்ட கோழை இந்த வீர் சாவுக்கார். இவனின் குற்றச்செயல்பாடுகளைக் கண்டறிந்த பிரிட்டிஷ் அரசாங்கம், இவரது அண்ணனைக் கைது செய்து அந்தமான் சிறையில் அடைத்துவிட்டு, பாரிசில் இருந்த சாவர்க்கரையும் கைதுசெய்யத் தேடியது. 1910இல் கொலைக்குற்றமும், தேசத் துரோகக் குற்றமும் சாட்டப்பட்டு, இலண்டன் விக்டோரியா இரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டான். அவனை இந்தியாவிற்கு ஏற்றிவந்த கப்பல் பிரான்ஸ் நாட்டின் மார்ஸெ நகரில் நின்றபோது, கப்பலின் ஜன்னல் வழியாகத் தப்பித்து ஓடிவிட்டான்.
ஆனால், பிரெஞ்சு நாட்டில் மீண்டும் கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்டார். இரண்டு குற்றங்களுக்கும் 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்தமான் சிறையில் 04.07.1911 அன்று அடைக்கப்பட்டான்.
ஆனால் இவன் சிறைக்கு வந்த ஆறு மாத்தத்திலேயே பிரிட்டிஷ் அரசுக்குக் கருணை மனு போட ஆரம்பித்துவிட்டான். ஆனால் பிரிட்டிஷ் அரசு கருணை காட்டவில்லை.
24.11.1913இல் அப்போதைய கவர்னர் ஜெனரலின் நிர்வாகத்தில் உள்துறை பொறுப்பிலிருந்து ரெனினால்ட் கிராட்டோக் என்பவருக்கு, மண்டிபோட்டு மன்றாடி இரண்டாவது கருணை மனு போட்டான்.
அந்த கடிதத்தில் அவன் கூறியிருப்பதாவது ...
“1906-_1907இல் நிலவிய கொந்தளிப்பான, நம்பிக்கையற்ற சூழ்நிலைமை எங்களை சமாதானம், முன்னேற்றம் என்ற பாதையில் செல்லமுடியாமல் வஞ்சித்து விட்டது. இந்தியாவிலும் மனித குலத்தினதுரும் நன்மையை மனத்தில் கொண்டுள்ள எந்த மனிதரும் குருட்டுத்தனமாக அந்தப் பாதையில் இனி அடியெடுத்து வைக்கமாட்டார். எனவே, பல்வகையிலும் நல்லெண்ணமும் கருணையும் கொண்ட அரசாங்கம் என்னை விடுதலை செய்யுமானால், அரசியல் சட்டவகையான முன்னேற்றத்திற்கும் ஆங்கிலேய அரசாங்க விசுவாசத்திற்கும் மிக உறுதியான ஆதரவாளனாக மட்டுமே இருப்பேன்.
மேலும், அரசியல் சட்டவகையான மார்க்கத்திற்கு நான் மாறி வந்துள்ளது இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஒரு காலத்தில் என்னைத் தங்களது வழிகாட்டியாகப் பார்த்துவந்த, வழிதவறிப் போன இளைஞர்களை மீட்டுக் கொண்டுவரும். எந்த வகையில் நான் அரசாங்கத்திற்குப் பணிபுரிய வேண்டும் என்று அது விரும்புகிறதோ அதற்குத் தகுந்தபடி நான் பணிபுரிவேன். ஏனெனில் எனது மனமாற்றம் எப்படி உணர்வுபூர்வமானதாக உள்ளதோ அதே போலவே எனது எதிர்கால நடத்தையும் இருக்கும் என நம்புகிறேன்.
என்னை சிறையில் வைத்திருப்பதன் மூலம் பெறப்படுவது, வெளியில் விடுவதனால் கிடைப்பதை ஒப்பிடுகையில் ஒன்றுமேயில்லை.
வலிமையுடையோரே கருணையுடையவராக இருக்க முடியும். எனவே, பாதை தவறிப் போன மகன் அரசாங்கம் எனும் பெற்றோர்களின் கதவுகளுக்குத் திரும்பிவராமல் வேறு எங்கு செல்வான்? இந்த விசயங்களை மாண்புமிக்க தாங்கள் அன்புடன் கருத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.’’
இப்படி கெஞ்சிக் கூத்தாடி மண்டிபோட்டு மன்னிப்பு கடிதம் எதுதியவன்தான் வீரராம்.
இவன் அந்தமான் சிறையில் என்ன செய்தான் தெரியுமா?
அந்தமானில் சாவர்க்கரின் சக கைதிகளிலொருவராக இருந்தவர் சக்ரவர்த்தி. சாவர்க்கரும் அவரது சகோதரர் கண்பதியும் சிறைக் கொடுமைகளைக் கண்டனம் செய்து, சிறையில் வழங்கும் உணவை உட்கொள்ளக் கூடாது, சிறையதிகாரிகள் சொல்லும் வேலைகளைச் செய்யக் கூடாது என்ற கைதிகளைத் தூண்டிவிடுகின்றனர்.
ஆனால், வேலை நிறுத்தத்தில் சேரவேண்டிய தருணத்தில் மோடி போல் அழத் தொடங்கிவிடுகிறான். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் தனிமைச் சிறையில் அடைக்கப்பட வேண்டியிருக்கும், வயதான காலத்தில் தன்னால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாது என்று.
ஆனால், அவரைவிட அதிக காலம் சிறையிலிருந்த, அவரைவிட வயதில் மூத்தவர்களாக இருந்த கைதிகள் பலர் மூன்ற வாரங்களுக்கு மேல் உணவு உட்கொள்ளாமல் இருந்தனர். கைதிகளின் போராட்டம் வெற்றியடைந்தது.
1921இல் அந்தமானிலிருந்து இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டு, முதலில் ரத்தினகிரி சிறையிலும் பின் ஏர்வாடி சிறையிலும் அடைக்கப்பட்டான்.
அப்போது இவர் தன் குடும்பத்தவரை ஒன்றுதிரட்டி தனது விடுதலைக்கு பலவகையில் முயன்றான்.
சிறையிலிருந்து வெளியே வருவதற்காக “அய்ந்தாண்டுக் காலத்திற்கு அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் எவ்வகையான அரசியல் நடவடிக்கைகளிலும் அந்தரங்கமாகவோ அல்லது பகிரங்கமாகவோ ஈடுபடப் போவதில்லை’’ என்றும் “அய்ந்தாண்டுக் காலத்திற்குப் பிறகும் அரசாங்கம் விரும்பினால்இந்தக் கட்டுப்பாட்டைப் புதுப்பித்துக் கொள்ளலாம்’’ என்றம் ஒரு உறுதிமொழி எழுதித் தருகிறான். இந்த உறுதிமொழியைப் பதிவு செய்யும் அரசாங்கத் தீர்மானம் கூறுகிறது:
சாவர்க்கர் இந்த நிபந்தனைகளுக்கான ஒப்புதலை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். இது அவரது விடுதலைக்கான நிபந்தனையாக இருக்காது என்ற அவரிடம் எடுத்துச் சொல்லப்பட்டபோதிலும் அவர் கீழ்க்கண்ட அறிக்கையை சமர்பித்துள்ளார் “என்மீது நடத்தப்பட்ட விசாரணையும் அளிக்கப்பட்ட தண்டனையும் நீதியானதும் நியாயமானதும் என்பதை இதன் மூலம் ஏற்றுக் கொள்கிறேன். கடந்த காலத்தில் நாடியது போன்ற வன்முறை வழிமுறைகளை மனதார வெறுக்கிறேன். சட்டத்தையும் அரசமைப்பையும் எனது முழுச் சக்திக்கும் ஏற்ற வகையில் உயர்த்திப் பிடிப்பது எனது கடமை என்று உணர்கிறேன். எதிர்காலத்தில் எந்த அளவுக்கு எனக்கு அனுமதி வழங்கப்படுகிறதோ அந்த அளவிற்கு (அரசியல்) சீர்திருத்தத்தை வெற்றிகரமானதாக்க விருப்பம் கொண்டிருக்கிறேன்.’’
1924இல் கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் ஏரவாடா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டான்.
அவனுக்கு அளித்த நிபந்தனை 1.ரத்னகிரி மாவட்டத்தை விட்டு அரசாங்கம் அல்லது மாவட்ட நீதிபதியின் அனுமதியின்றி எங்கும் செல்லக் கூடாது.
2. அய்ந்தாண்டுக் காலத்திற்கு அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் எத்தகைய அரசியல் நடவடிக்கைகளிலம் ஈடுபடக் கூடாது. இந்தக் காலக் கெடுவை அரசாங்கம் விரும்பினால் தொடர்ந்து நீட்டிக்கலாம்.
“எத்தகைய அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடுவதில்லை’’ என்ற உறுதிமொழியின் பேரில் விடுதலையான சாவர்க்கர் ‘சும்மா’ இருக்கவில்லை. ரத்னகிரியில் அவரைச் சந்தித்து அவரது ஆதரவைப் பெற்ற பிறகே டாக்டர் எச்.பி.ஹெட்கெவர், 1925இல் ஆர்.எஸ்.ஆர். அமைப்பை நிறுவினான்.
இதே ஆண்டில்தான் சாவர்க்கர் நான்காவது முறையாக பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்திற்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார். அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் வடமேற்கு எல்லை மாகாணத்தில் வெடித்த வகுப்புக் கலவரம் தொடர்பாக புனெவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘மராத்தா’ என்ற பத்திரிகையின் மார்ச் 1925 இதழில் முஸ்லிம் விரோத - இந்து வகுப்பு வெறிக் கட்டுரையொன்றை சாவர்க்கர் எழுதியிருந்தான். அதனைக் கண்டித்து அரசாங்கம் அவரது விடுதலையை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்ததுதான் தாமதம், உடனே, 6.4.1925இல் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில், ஒரு நீண்ட தன்னிலை விளக்கம் கொடுக்க வாய்ப்புத் தரப்பட்டதற்காக நன்றி செலுத்தும் சாவர்க்கர்’’.
“எனது கட்டுரையில் ‘சுயராஜ்யம்’ என்ற வார்த்தை வருகிற ஒரே இடம், மூன்றாவது பத்தியின் இறுதியில்தான். அந்த வார்த்தை அங்கு குறிப்பிடப்படுவது நானோ அல்லது மற்றவர்களோ ‘சுயராஜ்யம்’ என்பதைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்பதைக் காட்டவோ சுட்டவோ செய்வதில்லை என்பது வெளிப்படை’’ என்று எழுதினார்.
‘சுயராஜ்யம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்ட ‘வீர’ சாவர்க்கர் மீது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் 1937 வரை நீடித்தன. 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின்படி நடந்த முதல் மாகாண சட்டசபைத் தேர்தல்களில் பம்பாய் மாகாணத்திலும்கூட காங்கிரஸ் பெரும் வெற்றி கண்டிருந்தபோதிலும், உடனடியாக அரசாங்கப் பொறுப்பை மேற்கொள்ள முன்வரவில்லை.
இந்து மகா சபையின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவை 10.5.1937இல் சாவர்க்கரை விடுதலை செய்தது.
இந்தியா விடுதலை அடைந்தபின் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவன்., 22.2.1948இல் பம்பாய் நகரக் காவல்துறை ஆணையருக்குக் கடிதம் எழுதுகிறான். அதில், “நான் ஒருபோதும் வெறுப்பை ஊக்குவிக்கவோ முகமதியர்களை முகமதியர்கள் என்பதற்காக அவர்களை வெறுக்கும்படியோ அல்லது அவர்கள்மீது வன்முறைச் செயல்களைப் புரியும்படியோ இந்துக்களை ஒருபோதும் தூண்டிவிட்டதில்லை’’ என்று பச்சைப் பொய் கூறினான். ஆனால் அனைத்து செயத்திட்டமும் நீட்டியது இவன்தான். இந்த செய்தி இவன் செத்த பிறகுதான். நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அதாவது ஜெயலலிதா வழக்கு போல்.
எனக்கு இப்போது 65 வயதாகிறது. கடந்த மூன்றாண்டகளாக, நெஞ்சுவலி, நரம்புத்தளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக அடிக்கடி படுத்தப் படுக்கையாக இருக்கிறேன். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி நமது புதிய தேசியக் கொடியை ஏற்றுக் கொண்டு அதனை என் வீட்டில் ஏற்றிவைத்தேன். இது எனது ஆதரவாளர்கள் சிலருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது...
எனவே, சந்தேகம் அனைத்தையும் களையும் பொருட்டும் எனது கோரிக்கை மனுவிற்கு வலுச் சேர்க்கும் பொருட்டும் அரசாங்கம் விரும்புகிற எத்தனை காலத்திற்கும் வகுப்பு அல்லது அரசியல் சார்ந்த பொது நடவடிக்கை எதிலும் பங்கேற்க மாட்டேன் என்ற உறுதிமொழியை _ இந்த நிபந்தனையுடன் எனக்க விடுதலை வாங்கப்படுமேயானால் _ தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்றான்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையையொட்டி நடந்த கொடூரமான வகுப்புக் கலவரங்களின் காரணமாக அந்தநத நாடுகளில் உள்ள மதச் சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்தியப் பிரதமர் நேருவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானுக்குமிடையே 1950இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தை இந்துமகாசபை எதிர்த்ததால், நாட்டில் வகுப்புக் கலவரம் மூளும் அபாயம் இருப்பதாக மத்திய அரசாங்கம் கருதியது. சாவர்க்கரும் வேறு முக்கிய இந்துமகா சபைத் தலைவர்களும் ‘1950ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்’ கீழ் கைது செய்யப்பட்டனர்.
சிறையில் வைக்கப்பட்டவுடனேயே வழக்கம்போல சாவர்க்கரின் கோழைத்தனம் தலைதூக்கியது. 21.4.1950 அன்று பம்பாய் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் “அரசாங்கம் நிர்ணயிக்கிற எத்தனை காலத்திற்கும் நடப்பு அரசியலில் எந்தவிதப் பங்கும் மேற்கொள்ளாமல் இருப்பதாக’’ உறுதிமொழி எழுதித் தருவதாகக் கூறினார். மேலும், “அரசியல் களத்திலிருந்து தான் விரைவில் ஒய்வு பெறப் போவது அனைவரும் அறிந்த விசயம்’’ என்றும் கூறினார். நீதிமன்றத்தில் அவர் சார்பில் வழக்கறிஞர் கே.என்.தாரப் என்பார் கொடுத்த உறுதிமொழிகள் பேரில் விடுதலை செய்யப்பட்டார்.
இப்படிப்பட்ட கடைந்தெடுத்தக் கோழையைத்தான் வீர சாவர்க்கர் என்கிறது ஆரியப் பார்ப்பனக் கூட்டம். இவருக்குத்தான் நாடாளுமன்றத்தில் சிலை வேறு.. இந்த மயிரு என்ன செய்துவிட்டான் என்று இவனுக்கு சிலை.? இந்து மகா சபை அமைப்பை ஏற்படுத்தி சுதந்திர போராட்டத்துக்கு எதிராகவும், ஆங்கிலேயர்களுக்கு சாதகமாகவும் இருந்ததை விட இவன் இவன் நாட்டுக்கு செயத தியாகம் என்ன?
இவன் அமைத்த இந்து மகாசபை தான் இன்று உள்ள அனைத்து இந்துத்துவா இயக்கங்களின் தாய் அமைப்பு. இந்த யோகியனை தான் வீர் சாவுக்கார் என்றும் சுந்ததிர போராட்ட வீரர் என்றும் காவிகள் கூவி திரிகிறார்கள். கோழைகள் எல்லாம் இந்த காவிகளுக்கு விரர்களாக தெரிகிறார்கள். எந்த அடிப்படை பிரச்னைக்கும் போராடத இனம் தான் பார்ப்பன இனம். கோட்சேவுக்கே சிலைகள் வைக்கும்போது அவனின் குருஜியான சாவக்கரை வீரர் என்று காவி கும்பல் கூறித் திரிவத்தில் ஆச்சரியமில்லை.

Friday, July 20, 2018

பார்ப்பனரோட பலிஆடுகள்தான் சங்கிகள்

உண்மையில் சங்கிகளை சமாளிப்பதில் எந்த சிக்கலும் கிடையாது... இவர்களுக்கு சொல்லி கொடுக்கப்படும் பயிற்சி என்பது... கெட்ட வார்த்தைகள் பேசி எதிரியை பேசாமல் இருக்க செய்ய வேண்டும். அவ்வளோதான், அவர்கள் போடும் பதிவுகள் தரவுகள் என்பது ஒன்று கூட அவர்களாக தேடி ஆராய்ந்து உருவாக்கியவை கிடையாது, எல்லாமே ஆர்எஸ்எஸ் பார்ப்பனர்கள் உருவாக்குவது...
அதை உருவாக்கும் போதே அந்த பார்ப்பனருக்கு இரண்டு விஷயங்கள் உறுதியாக தெரியும் ஒன்று அந்த தரவு பொய் என்பது, இரண்டாவது அதை பரப்ப போகும் இவர்கள் அதை படித்து கூட பார்க்க மாட்டார்கள் என்று... ஆதனால்தான் இங்கே களத்தில் இந்த முட்டாள்கள் அசிங்கபடுகின்றார்கள்... நல்லா கவனிச்சி பாருங்க இங்க கத்துற எல்லா சங்கியும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத்தான் இருப்பாங்க, ஆனா இட ஒதுக்கீடுதான் இவனுக்கு பாதுகாப்பு என்பதையே புரிஞ்சிக்க மாட்டானுங்க.... சுருக்கமா சொல்லனும்னா பார்ப்பனரோட பலிஆடுகள்தான் சங்கிகள்..

Monday, July 16, 2018

நல்ல பொருளாதார ஆதரவும் உணவு சுதந்திரமும் தேவை....அதை இந்துத்துவ நாட்டில் ரோம்ப கஷடம்.

ஹீம தாஸ் வெற்றியும் இந்தியாவின் விளையாட்டு துறை தலைநகரமாக மாறி இருக்கும் வட கிழக்கு மாநிலங்கள்
ஹர்பாஜன் சிங் --BBC NEWS
"135 கோடி மக்கள் வாழும் நாட்டில் கால்பந்தில் சாதிக்கமுடியாமல் வெறும் இந்து முஸ்லீம் சண்டை போட்டுகொண்டு இருக்கிறோம்..."
Mr.பஜ்ஜி உண்மை தான் மறுக்கவில்லை...அதை விட மிக முக்கியமானதை விடுவிடீர்கள்....அது உணவு and அரசங்கத்தின் வழியான பொருளாதர& Private SPONSORSHIP ஆதரவு ....கால்பந்து மட்டுமல்ல அத்லெடிக்ஸ் வீரர்களுக்கு BEEF PORK and கடல் உணவு மிக அத்தியாவசியமானது...புரதசத்து அதிகம் தேவை..
உதாரணமாக ஒரு கால்பந்து வீரன் ஒரு நாள் ஐந்து வேலை உணவு உன்ன வேண்டும்...அதற்கு நல்ல பொருளாதார ஆதரவும் உணவு சுதந்திரமும் தேவை....அதை இந்துத்துவ நாட்டில் ரோம்ப கஷடம்....ஸ்டாமினா குறைவாக தேவைப்படும் கிரிக்கெட் மட்டுமே பணக்கார , முதலாளிகளின் மீடியாக்களின் ஆதரவு... அது ஏன் என்றால் உண்மை எல்லாருக்கும் தெரியும்..
இன்று இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் பெருமை பட வைக்கும் விளையாட்டு வீர்கள் பெரும்பாலும் வட கிழக்கு மாநிலங்களில் இருந்து தான் வருகிறார்கள்... வட கிழக்கு மாநிலங்கள் BEEF and PORK பிரதான உணவுகள்...கிறிஸ்துவர்கள் அதிகம் ...அதுமட்டுமல்ல மலை தவளை உணவு & மலைப்பாங்கான இயற்கையான உணவுகள் அங்கு அதிகம்...அதற்கு ஆதாரமான இருப்பது மாசுபடாத பிரம்மபுத்திரா நதி மற்றும் அதில் வரும் மீன் உணவுகள்..வட கிழக்கு மாநிலத்தில் பிறக்கும் ஒரு குழந்தை இயற்கையாக விளையாட்டு துறையை தேர்ந்தெடுப்பார்கள்..மத்த மாநிலத்தில் விளையாட்டு துறையை வீணான துறை என்று அவமானப்படுத்துவது இந்த ஏழு மாநிலங்களில் நடக்காது...
Khelo India program மூலம் அங்கு வெவேறு விளையாட்டை ஊக்கப்படுத்தும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை கொஞ்சம்கொஞ்சமாக மேம்படுத்திவருகிறார்கள்..பாக்ஸிங் வீராங்கனை மேரிகோம் மற்றும் கால்பந்து ஸ்டார் பாய்ச்சுங் பூட்டிய போன்றவைகள் இங்கு ரோல் மாடல் மட்டுமல்ல...அவர்கள் தங்கள் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்கள்..
எனக்கு ஒரு ஆசை நான் இறப்பதற்கு முன் இந்தியாவில் அதுவும் வடகிழக்கு மாநிலத்தில் இருக்கும் அத்தனை விளையாட்டு துறை அம்சங்களை பெற்று இருக்கும் வட சென்னையில் ஒலிம்பிக் அல்லது உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்த வேண்டும்...முதல் ஐந்து இடத்திற்குள் தங்க பதக்க வேட்டையில் இந்திய வந்திருக்க வேண்டும்.....நடக்குமா தோழர்களே..

Friday, July 13, 2018

தமிழ் தேசிய சித்தாந்தம்.

தமிழ் தேசிய சித்தாந்தம்.
தமிழ் தேசிய சிதாந்தம் என்பது மணூ தர்மத்தின் நவின வடிவம்.அதை வெளிப்படையாக சொல்லாமல் தமிழ் தேசியவாதிகள் மரபு,பன்பாடு,ஐதிகம் போன்ற ஜால வார்தைகளை வைத்து வார்த்தை மாயா ஜாலம் நடத்துவார்கள்.
தமிழ் தேசிவாதிகளின் சமுக கொள்கை என்பது;
ஜாதி
ஜாதி சார்ந்த குல தொழில்
ஆண் பெண் தான் விரும்பும் நபரை திருமணம் செய்துக்கொள்ள தடை.
பச்சையான சொல்ல வேண்டும் என்றால்;பெண்களின் யோனிக்கு செகுரிட்டி வேலையை செய்வதுதான் இந்த தமிழ் தேசிவாதிகளின் தலையாய பணி.அதாவது “இந்த யோனிக்கு இந்த ஆண் குறி” இந்த எழவுக்கு பேர் தமிழ் தேசியம்.காலக் கொடுமை!!!
ஒட்டு மொத்தத்தில் தமிழ் தேசியம் என்பது இன,மத,ஜாதிய மணூ தர்ம கோட்டுப்பாடு.இந்த தமிழ் தேசியவாதிகளுக்கும் ஜெர்மனியா நாஜிக்கள்,ஆஃப்கானிஸ்தானிய தாலிபான்கள்,சிசியாவில் ஐ.எஸ்.எஸ்.களுக்கும் எவ்வித வித்யாசமும் இல்லை.எல்லாம் ஒரே மதுவை வெவ்வேறு குடுவையில் அடைத்து விற்க்கும் கெடு மதியாளர்கள்.
திராவிடத்தை அழிக்கும் வேலையை நாக்பூர் தமிழ் தேசியவாதிகளிடமும் கொடுத்திருக்கும் போல் தெரிகிறது.எல்லா தமிழ் தேசியவாதிகளும் ஒரே குரலில் ஓசை எழுப்புகிறார்கள்.
திராவிடத்தால் வீழ்ந்தோம் ஒரவே!
இலுமினாட்டி சதி ஒரவே!
இங்கே பிரச்சனை குப்பனும் சுப்பனும் கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருப்பதுதான்.இவர்களின் வாயிற்றிச்சலுக்கு காரணம்.
சக மனிதர்களை மதம்,ஜாதி போன்ற தூய்மைவாத சித்தாந்தங்களை வைத்து பிரித்தாளும் தூய்மைவாதிகளை சமுகம் அழித்தொழிக்கும் காலம் வரும்.
குறிப்பு:இந்த பதிவு ஜாதிதான் தமிழ் தேசியம் என்று விளையாடிக்கொண்டிருக்கும் சில மதி கெட்டா தமிழ் தேசிய ஜாதியவாதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

Thursday, July 12, 2018

ராமனின் ராமராஜியம்

சூத்திரனுக்கும் பஞ்சமனுக்கும் படிக்க அனுமதியில்லை என்று சம்புகனை கொன்றதே ராமனின் ராமராஜியம்.
வாருங்கள் விமூலாக்களையும் தங்கை அனிதாகளையும் கேட்போம்
ராமராஜியம் இனிமேல் தான் வரவேண்டுமா இல்லை ஏற்கனமே இருக்குறதா என்று?
ஜனாதன(சாதி,வர்ண) தர்மம் காக்க எந்த வன்முறையும் கையாளலாம் என்கிறது ராமராஜியம் (இராமாயணம்)
இளவரன்,கோகுல்ராஜ் சங்கர்களின் மரணத்திற்கும் இதற்குக் தொடர்பிறுக்கிறதா ?
கௌசல்யாகளை கேட்டால் தெரியும் ராமராஜியம் இனிமேல் தான் வரவேண்டுமா இல்லை ஏற்கனமே இருக்குறதா என்று
பிராமணன் தவிர்த்து எவனுக்கும் கருவறையில் பூசை செய்யக்கூடாது என்கிறது ராமராஜியம் 2015 உச்சிகுடும்பி மன்றம் சொன்னதே அது ஆகமத்தின் படி அவாள் தான் இருக்க வேண்டும் என்று இதற்கும் ராமராஜியத்திற்கும் தொடர்பு இருக்கிறதா?
வேதம் படித்து பூசை செய்ய காத்திருந்த So Called உயர்சாதி சூத்திரர்களை கேட்போம் ராமராஜியம் இனிமேல் தான் வரவேண்டுமா இல்லை ஏற்கனமே இருக்குறதா என்று?
இவ்வளவு அழகிய உன்னை எப்படி இராவணன் தொடாமல் விட்டால் என்றானே சீதையை பார்த்து ராமராஜியத்தில் அயோகிய ராமன்
அதற்கும் உங்கள் உடைகள் தான் கற்பழிப்புமனிதர்கள் காரணம் என்றானே சங்கராசரி இதற்கும் தொடர்பிருக்கிறதா
வாருங்கள் நிருபையா,ஜிஸ்வா,ஆஜிப்பா மற்றும் பல சதை கிழிந்து இரத்தில் வெள்ளத்தில் இறந்த
நம் தங்கைகளை கேளுக்கள் ராமராஜியம் இனிமேல் தான் வரவேண்டுமா? இல்லை ஏற்கனமே இருக்குறதா? என்று
சூத்திரர்கள்,பஞ்சமர்கள் தீண்டதகாதவர்கள் என்கிறது ராமராஜியம் (சந்தோக்கி உபநிடதம்) ஊருக்கும் சொரியும் தனியே
இருக்கிறதே அதற்கு இதற்கு என்ன வித்தியாசம்
எல்லாரும் இந்து என்பவனிடம் கேட்போம் ராமராஜியம் இனிமேல் தான் வரவேண்டுமா? இல்லை ஏற்கனமே இருக்குறதா? என்று..
பார்பனர்களே உயர்ந்த பதவிக்கு உரியவர்கள் என்கிறது ராமராஜியம் இன்று 90% அரசு உயர் பதிவியை பிடித்து வைத்துள்ளனரே எதுவும் ஒற்றுமை உண்டா
இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என கூவும் சூத்திரர்களை கேட்போம் ராமராஜியம் இனிமேல் தான் வரவேண்டுமா இல்லை ஏற்கனமே இருக்குறதா? என்று
பல கேள்விகள் இன்னும் இருக்கிறது
ரதத்தை விட்டு அவன் சொல்ல வருவது அரசியல் ராமராஜித்தை அடித்து துரத்திவிட்டோம் என்று பெருமை பேசுகிறோம்
ஏற்கனமே இருக்கும் இந்திய இந்து சமூக ராமராஜியத்தை என்று அழிக்கபோகிறோம்.
வாருங்கள் அண்ணலையும் பெரியாரையும் கேட்போம் அதை எப்படி. செய்வதென்று..

தேசிய இனப் பிரச்சனையும்- தமிழ் தேசியமும்

தேசிய இனப் பிரச்சனையும்-
தமிழ் தேசியமும்
தற்போது ஆளும்கட்சியாக விளங்கும் பாரதிய ஜனதாக் கட்சி இந்தியாவில் தேசிய இனங்களே இல்லை என்று ஒரேயடியாக மறுத்திடும் கட்சி. இந்தியா, ஒரே தேசம், ஒரே தேசிய இனம், ஒரே மதம் கொண்ட நாடு என்ற கருத்துடையவர்கள் அவர்கள்.
அவர்களது கருத்துப்படி பார்த்தால் தமிழினம் என்ற ஒன்று இல்லை என்ற அபத்தமான முடிவுக்கு வர வேண்டியிருக்கும். இந்த அபத்தங்களை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.இந்தியா பல தேசிய இனங்களைக் கொண்ட நாடு.
அப்படியானால் ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தை தேசிய இனம் என்று எதை வைத்து நிர்ணயிப்பது?தொடர்ச்சியான ஒரு நிலப்பரப்பில், ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப் பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து, வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம்.
தமிழகத்தில் வாழும் மக்கள் ஒரு தனி தேசிய இனம். குறிப்பிட்ட நிலப்பரப்பு, பொது மொழி உள்ளிட்ட அனைத்தும் தமிழ் இனத்திற்கு உண்டு. கேரளம், ஆந்திரா, அசாம் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் இந்த இலக்கணம் பொருந்தி வருகிறது. எனவே, பல்வேறு தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் நாடாக இந்தியா திகழ்கிறது.
தேசிய இனங்களிடம் தேசியம் என்ற கருத்து ஒரு உணர்வாக எழுகிறது. அதாவது, ஒரு தேசிய இனத்தவரிடம் நமது மக்கள் நம்மவர் என்ற மனப்பான்மை நிலைத்திருக்கிற நிலையே தேசியம் எனப்படுவது. இந்த தேசிய உணர்வை ஒன்று திரட்டி மாநில ஆட்சி அதிகாரத்தை திராவிட இயக்கம் தமிழகத்தில் கைப்பற்றியது.
இதேபோன்று பல நாடுகளில் தேசிய உணர்வுகளைப் பயன்படுத்தி பல முதலாளித்துவ இயக்கங்கள் மக்கள் செல்வாக்கு பெற்றன. அதாவது, முதலாளித்துவ பொருளுற்பத்தி முறை வளர்ந்த நிகழ்வோடு இணைந்ததாக தேசிய இனங்களின் வளர்ச்சி அமைந்தது. ஆனால், சேர, சோழ, பாண்டியர் காலங்களில் தனித் தனி நாடுகளாக இன்றைய தமிழகம் பிரிந்திருந்த சூழலில் நமது மக்கள் நம்மவர் என்ற தேசிய மனப்பான்மை இருக்கவில்லை.
தேசம், தேசிய இனம், தேசியம் என்பதெல்லாம் பிற்காலத்தில் எழுந்த கருத்தாக்கங்கள். முதலாளித்துவ சகாப்தம் துவங்குவதற்கு முன்பு இப்போது தேசியம் என்று பேசப்படுகிற உணர்வு நிலை எழவில்லை. நிலபிரபுத்துவ சமூகத்தில் மக்கள் தங்களை தங்களது கிராமங்கள், பகுதிகள், பிரதேசங்களைச் சார்ந்தவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டனர்.
முதலாளித்துவம் பெரும் பொருளாதார மாற்றத்தை நிகழ்த்தியது. ஒரு உள்நாட்டு சந்தையை உருவாக்கியதால் மக்கள் நாட்டு அரசுகளின் கீழ் உள்வாங்கப்பட்டு, தேசம் சார்ந்த குடிமகன்களாக மாறினர். இந்த வளர்ச்சிப் போக்கு வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக நடைபெற்றது.
ஐரோப்பாவில் முதலாளித்துவ வளர்ச்சி வேகமாக நடைபெற்ற போது நாட்டு அரசுகளின் உருவாக்கம் அதையொட்டி நிகழ்ந்தது. முதலாளித்துவமும், நிலப்பிரப்புத்துவமும் ஒருங்கே இயங்கி வந்த ஆசிய நாடுகளில் நாட்டு அரசுகளின் உருவாக்கம் வேறு விதமாக நடைபெற்றது. ஒவ்வொரு நாட்டுக்கும் இதையொட்டி தனி வரலாறு உண்டு. அது ஒரு தனி ஆய்வு.
எனினும் முதலாளித்துவ வளர்ச்சி தேசிய அரசுகளின் உருவாக்கத்திற்கு வித்திட்டது என்பது பொதுவான உலக அனுபவம்.
முதலாளித்துவ இலாப வேட்டைக்கு விரிந்த பரந்த சந்தை தேவை. இந்த ஒருங்கிணைந்த சந்தை தேவைக்காக மக்களின் தேசிய இன உணர்வுகளை முதலாளித்துவம் பயன்படுத்திக் கொள்கிறது. ஜார் மன்னன் ஆட்சியின் போது ரஷியாவில் வளர்ந்து கொண்டிருந்த முதலாளித்துவம், நாடு தழுவிய சந்தை வேண்டும் என்பதற்காக, ரஷிய இன மேலாதிக்க வெறியை வளர்த்து, இதர தேசிய இனங்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாகி இருக்கும் சூழலை நிலைநிறுத்தியது. ரஷிய அல்லாத இதர இனங்களின் தேசிய எழுச்சியை அது அடக்குமுறை கொண்டு அடக்கி, ரஷியாவை பல தேசிய இனங்களின் சிறைக்கூடமாக நீடிக்கச் செய்திட கடும் முயற்சி மேற்கொண்டது.
பிறகு, கம்யூனிஸ்ட் ஆட்சி வந்த பின்புதான், தேசிய இனங்களுக்கு சமத்துவம் கிடைத்தது.
ஆனால், இந்தியாவில் வேறான நிலைமை இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அன்று வளர்ந்து வந்த இந்திய தேசிய உணர்வுகள் வளர்ந்து வலுப்பெற்று, அது விடுதலை இயக்கமாக மலர்ந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் ஆதிக்கத்தில் இருந்ததால் சந்தை, இலாப வாய்ப்புக்கள் பிரிட்டிஷ் முதலாளித்துவத்திற்கு சாதமாக இருந்தது.
இந்திய உள்நாட்டு முதலாளித்துவம் அவற்றை தனக்குரியதாக்கிக் கொள்ள முயற்சித்தது. இதன் காரணமாக உள்நாட்டு முதலாளித்துவம் விடுதலை இயக்கத்தை ஆதரித்தது. காங்கிரஸ் தலைமையிலான தேசிய இயக்கத்திற்கு முதலாளிகள் பக்கபலமாக இருந்தனர். இதே இந்தியப் பெரு முதலாளித்துவம் விடுதலைக்குப் பிறகு மொழி வழி மாநிலம் என்ற தேசிய இன எழுச்சி ஏற்பட்ட போது, தங்களது விரிந்து பரந்த, நாடு தழுவிய சுரண்டலுக்கும், சந்தை வாய்ப்புக்களுக்கும் ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தால் அந்த எழுச்சியை அடக்கி ஒடுக்கினர்.
மக்கள் போராட்டத்தால் அந்த கோரிக்கை வெற்றி பெற்று மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அதாவது முதற் கட்டத்தில் இந்தியா என்ற தேசியம் உணர்வு சார்ந்த ஒற்றுமையை இந்திய முதலாளித்துவம் ஆதரித்தது. இரண்டாவது கட்டத்தில், மாநில அளவில் உருவான தேசியத்தை அது எதிர்த்தது.
எனவே, முதலாளித்துவம் தனது மூலதனக் குவியலை மையமாகக் கொண்டு தேசிய இன எழுச்சியை நிராகரிக்கிறது; அல்லது தேசிய இனங்களுக்கிடையே இன வெறியை கிளப்பி அதனைப் பயன்படுத்தி கொள்கிறது.
உழைக்கும் மக்களிடம் தனது மேலாண்மையை தக்க வைத்துக் கொள்ள, முதலாளித்துவத்திற்குப் பயன்படும் முக்கியமான சித்தாந்தக் கருவி, தேசிய இனவெறி. இது, கடந்த பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்து வரும் வரலாறு. தேசிய உணர்வுகளை தனது ஆதாயத்திற்கு முதலாளித்துவம் பயன்படுத்தி இன மோதல்களையும், இன வன்முறையையும் தூண்டி வர்க்க ஒற்றுமையைக் குலைக்கிறது.
இந்திய சூழலில் மாநில முதலாளிகளும், நிலப்பிரப்புக்களும் பிராந்திய உணர்வுகளை சுரண்டல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். அதனால் தான், கார்ல் மார்க்ஸ் எழுதினார்: “முதலாளித்துவத்தை வீழ்த்தி, பாட்டாளி வர்க்கம் வெற்றி பெறுவது, ஒடுக்கப்பட்ட தேசங்களின் விடுதலைக்கான திறவுகோல்”.
எனவே, உழைக்கும் வர்க்கங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவது தேசிய இனப்பிரச்னை தீர்வதற்கான வழியாக அமைந்துள்ளது.
பல தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில் அந்த இனங்களிடையே முழுச் சமத்துவம் இல்லாத நிலை இருந்தால் அந்நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாக தேசிய இனப் பிரச்னை உள்ளது. இந்தியா இதற்கோர் உதாரணம். இன்னமும் இந்தியாவில் சமத்துவம் எட்டப்படவில்லை. ஒரு இனமோ பல இனங்களோ விசேட சலுகைகள், உரிமைகள் கொண்டிருப்பதும், இதர இனம் அல்லது இனங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வரும் நிலையும் ஒரு நாட்டில் இருந்தால் அங்கு தீர்க்கப்பட வேண்டிய பிரச்னையாக தேசிய இனப் பிரச்சனை உள்ளது.
தேசிய இனப் பிரச்சினைக்கு இறுதி இலக்கு எது? எந்த தேசிய இனத்துக்கும் விசேட அந்தஸ்து, உரிமைகள் என்பது அகன்று, அனைத்து இனங்களும் சம உரிமை, சம அந்தஸ்து பெற்று வாழுகிற ஒரு சமுதாயம் அமைவதுதான் இறுதித் தீர்வு. இது பொருளாதாரச் சமத்துவத்திற்கான போராட்டத்தோடு இணைந்தது.
இந்த இலக்கை அடைய உழைக்கும் வர்க்கங்கள் தேசிய இனப் பிரச்சினை குறித்து கோரிக்கைகளை எழுப்பி, போராட வேண்டும். பண்பாடு, மொழி, கலை உள்ளிட்ட அம்சங்கள் முற்போக்கான கோரிக்கைகளை முன்னிறுத்தி மக்களைத் திரட்ட வேண்டும்.
ஒரு நாட்டின் பாட்டாளி வர்க்கங்கள் மொழியால், பண்பாட்டால் வேறுபட்டிருக்கலாம். ஆனால், முதலாளித்துவத்தால் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் வர்க்கங்கள் எனும் வகையில் உலகத் தொழிலாளி வர்க்கங்கள் ஒரே தன்மை கொண்டவர்கள். சுரண்டலிலிருந்து விடுதலை என்ற பொது நோக்கம் கொண்டவர்கள்.
பல சமயங்களில் பிரிவினைக் கோரிக்கைக்கு பின்னணியாக இருப்பது இன வெறி. ஒரு தேசிய இனம் சார்ந்த மக்களுக்கு எதிராக மற்ற இன மக்களை தூண்டிவிட, ஆளுகிற முதலாளித்துவ வர்க்கங்களுக்கு இனவெறி பயன்படுகிறது. தேசிய ஒடுக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும் உலகின் எந்த மூலையில் நிலவினாலும் அதனை உழைப்பாளி மக்கள் எதிர்க்க வேண்டும். உலக உழைக்கும் வர்க்கங்களோடு இணைந்து இந்த எதிர்ப்பினை வலுப்படுத்த வேண்டும்.
இனப்பிரச்சனையை அணுகுவதில் சர்வதேசப் பார்வை முக்கியமானது. இதுவே முதலாளித்துவ கட்சிகளிடமிருந்து தொழிலாளி வர்க்கக் கட்சிகளை வேறுபடுத்துகிற உரைகல்.
ரஷிய நிலைமைகளில் தேசிய இனப்பிரச்னைக்கு தீர்வாக பிரிந்து போகும் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமையை தனது திட்டத்தில் முன்வைத்தார் லெனின். இது ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த ரஷிய அல்லாத தேசிய இனங்களுக்கு பெரும் நம்பிக்கையை ஊட்டியது.
அவர்கள் போல்ஷிவிக் கட்சியின் மீதும், புரட்சியின் மீதும் நம்பிக்கை வைத்தனர். அனைத்து தேசிய இனங்களின் தொழிலாளி வர்க்க ஒற்றுமை மூலம் புரட்சி வெற்றி பெற்றது. எனவே, சுயநிர்ணய உரிமை என்பது நாட்டைத் துண்டாட எழுப்பப்பட்ட கோரிக்கை அல்ல.
இந்தக் கோரிக்கை எழுப்பப்பட்ட போது, இது பிரிவினைக்கு இட்டுச் செல்லும் என்ற விமர்சனம் எழுந்த போது, விவாகரத்து சட்ட உரிமையை உதாரணமாகக் காட்டி லெனின் வாதிடுகிறார்.
விவாகரத்தை அனுமதிக்கும் சுதந்திரம், குடும்ப உறவுகளை அழிக்க ஊக்கமளிக்கும் என்று சொல்வது முட்டாள்தனமானது என்றார் லெனின். ஆக, லெனியத்தின் அடிப்படை, ஒன்றுபட்ட தேசத்தில் அனைத்து தேசிய இனங்களுக்கும் சம அந்தஸ்து, சம உரிமை என்பதுதான்.
ரஷியாவில் போல்ஷிவிக் கட்சியின் செயல் திட்டத்தை லெனின் உருவாக்கினார். அதில், எல்லா தேசங்களிலும், நிலவும் அனைத்து வகை தேசிய வெறிகளை எதிர்த்து வெற்றிகரமாக நடத்த வேண்டிய போராட்டத்தை அவர் வலியுறுத்துகிறார். அவரே இதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.அவர் ரஷிய தேசிய இனத்தில் பிறந்தவர். ரஷிய இனம் சார்ந்தோரிடம் நிலவும் ரஷிய இனவெறியை கண்டிக்க அவர் எப்போதும் தயங்கியதில்லை.
கட்சித் தோழர்களிடம் பூடகமாக இந்த உணர்வுகள் வெளிப்படும் போதேல்லாம் அதனை அம்பலப்படுத்தினார்.
ஒருமுறை மிகவும் வெறுப்புடன் குறிப்பிட்டார். கம்யூனிஸ்ட்களில் இரண்டு பேருக்கு ஒருவரை கீறிப் பாருங்கள்; அவரிடம் ஒரு மேலாதிக்க இனவெறியை நீங்கள் காண்பீர்கள்; அந்த வெறியன் நமக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கின்றான். அவனை எதிர்த்து வீழ்த்த வேண்டும். தனது இறுதிக் காலம் வரை இந்த போராட்டத்தை அவர் நடத்தினார்.
இனவெறி அடிப்படையில் தேசிய இனப்பிரச்னைகளை அணுகுவது சரியான அணுகுமுறை அல்ல. அது உழைப்பாளி மக்களிடம் வர்க்க உணர்வை மழுங்கடித்து இன அடையாளத்தை வலுப்படுத்தும். இதன் மூலம் முதலாளித்துவ சித்தாந்த மேலாதிக்கத்திலிருந்து உழைப்பாளி மக்களை விடுவிக்க இயலாத நிலை ஏற்படும்.
இந்திய தேசிய இனப்பிரச்னையை எவ்வாறு அணுக வேண்டும்.
தேசிய இனப்பிரச்சனையை தனித்துப் பார்ப்பது, சரியானது அல்ல. மக்கள் ஜனநாயக அரசு அமைப்பதின் பிரிக்க முடியாத பகுதி அது. தேசிய இன உரிமைகளுக்கான போராட்டம் பொதுவான புரட்சிகரப் போராட்டத்துடன் இணைந்தது.
தேசிய சமத்துவத்திற்கான போராட்டத்தை நடத்துகிற போது, எந்த முனையிலிருந்து தேசிய வெறி எழுந்தாலும், அதனை எதிர்த்து உறுதிமிக்க, ஊசலாட்டமில்லாத நிலை எடுக்க வேண்டும்.
இந்திய நிலைமைகளில் பெரு முதலாளிகள், மற்றும் பிராந்திய முதலாளித்துவக் கட்சிகள் எழுப்பும் தேசிய வெறியை எதிர்த்த போராட்டம் முக்கியமானதாகும். இந்திய தேசியம் எனும் வகையில் மத்திய அரசின் மையப்படுத்தப்பட்ட அதிகார மேலாதிக்கத்திற்காக பெரு முதலாளிகளின் குரலாக செயல்படுகிற காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளின் தேசிய வெறியை எதிர்க்க வேண்டும். அந்தக் கட்சிகளின் தேசியம் இந்நாட்டின் பல தேசிய இனங்களின் இருப்பையே அங்கீகரிக்கவில்லை.
பா.ஜ.க.வின் இந்து தேசியம் எனும் கருத்து மதம் சார்ந்து தேசிய இனத்தை வரையறுக்கிறது. இதனால் தனித்தனி தேசிய பண்பாடுகளை அது நிராகரிக்கிறது. அத்துடன், சிறுபான்மையினரின் பண்பாட்டையும் நிராகரிக்கிறது. பல தேசிய இனங்களையே மத அடிப்படையில் பிளவுபடுத்தும் தன்மை கொண்டது. அனைத்து மதங்களை சார்ந்தவர்களுக்கும், அவரவர் சமூக வாழ்க்கை முறைகளை, நாட்டின் ஜனநாயக அரசியல் சாசன விதிமுறைகளுக்கு உட்பட்டு, பின்பற்றும் உரிமை உண்டு.
ஆனால், பாஜக இந்த உரிமையை மறுக்கிறது. எனவே, சங் பரிவாரத்தின் தேசியம் பற்றிய பார்வை ஒற்றுமைக்கும், தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைக்கும் எதிரானது. மறுபுறம், இந்தியப் பொருளாதார தளத்தில்,பெரு முதலாளிகளுக்குப் போட்டியாக, தங்களை வலுப்படுத்திக் கொள்ள பிராந்திய முதலாளித்துவம் முயற்சிக்கிறது. இதற்கு அவ்வபோது தேசிய வெறியை பயன்படுத்திக் கொள்ளுகிறது.
உதாரணமாக, தமிழகத்தில் திமுக துவக்கத்தில் திராவிட நாடு என்ற பிரிவினை கோஷத்தை எழுப்பியது.பிறகு,பிராந்திய முதலாளித்துவம், பெரு முதலாளித்துவ தலைமையின் கீழ், வளர்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்ட சூழலில் பிரிவினை கோரிக்கை கைவிடப்பட்டது. மாநில சுயாட்சி என்ற ஜனநாயக உள்ளடக்கம் கொண்ட கோரிக்கை எழுப்பப்பட்டது. ஆனால், இதில் கூட, ஒரு பலவீனமான மத்திய அரசு இருக்க வேண்டும் என்ற வகையில் கோரிக்கைகள் எழுப்பபடுவதுண்டு.
இது, பிராந்திய முதலாளித்துவம் விரும்புகிற பலவீனமான மத்திய அரசு; பலமான மாநில அரசு என்ற ஏற்பாடு ஆகும். பலமான மத்திய அரசு, பலமான மாநில அரசுகள் என்ற உண்மையான ஜனநாயக கோட்பாட்டிற்கு எதிரானது. எனினும் மாநிலக் கட்சிகள் எழுப்பும் மாநில சுயாட்சிக் கோரிக்கை வரவேற்க வேண்டிய நிலைப்பாடு.
ஆனால் அதனை அக்கட்சிகள் உறுதியாக தொடர்ந்து எழுப்புவதில்லை.
தமிழகத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் அவ்வபோது மாநில சுயாட்சிக் கோரிக்கையை எழுப்பினாலும் மக்களைத் திரட்டிப் போராட முன்வருவதில்லை. ஏனெனில், மக்களுக்கான அதிகாரம் என்ற வகையில் மாநில சுயாட்சிக் கோரிக்கையை அவர்கள் எழுப்புவதில்லை.
உண்மையில், மாநில முதலாளித்துவக் கட்சிகள் தமிழகத்தில் மக்கள் ஆதரவை பெற்றிட மொழி, இன சமத்துவப் பிரச்னைகளை பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், அவை இன்னும் தீர்க்கப்படவில்லை. உழைக்கும் மக்கள் இயக்கங்கள் அவற்றை எழுப்பிட வேண்டும். மாநில சுயாட்சிக்காக உழைக்கும் மக்கள் குரலெழுப்ப வேண்டும். அத்துடன் கீழ்மட்ட உள்ளாட்சி அமைப்புக்கள் வரை அதிகாரம் பரவலாக்கப்பட்டால் தான் தமிழினக் குடிமக்கள் ஒவ்வொருவரும் சம உரிமை கொண்டவர்களாக வாழ முடியும்.
பல தேசிய இன மக்கள் உழைக்கும் வர்க்கம் என்ற வகையில் நாடு தழுவிய அளவில் மொழி, பண்பாட்டு, இன உரிமைகளுக்காக திரளும் போது இனச் சமத்துவம் சாத்தியமாகும்.
எனவே, தற்போதைய நிலையில் இந்திய தேசிய இனப்பிரச்னை மூன்று குறிக்கோள்கள் கொண்டது.
அனைத்து மொழிகளுக்கான சமத்துவம்
மத்திய மாநில உறவுகள் சீரமைத்தல்
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பல பகுதிகளுக்கிடையே உள்ள சமச்சீரற்ற நிலை மாறி சமமான வளர்ச்சி. இவை 65 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் நீடிக்கின்றன.
இந்த மூன்று அம்சங்களை மையமாக வைத்து பல கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் இயக்கம் வளர்க்கப்பட வேண்டும்.
மூன்றாவது அம்சமாக சொல்லப்பட்ட சமச்சீரற்ற வளர்ச்சி, முதலாளித்துவ வளர்ச்சிப்பாதை ஏற்படுத்திய விளைவு, இந்திய ஆளும் வர்க்கக் கொள்கைகளை எதிர்த்த ஒன்றுபட்ட போராட்டம், தேசிய இனப் பிரச்சனைக்கான ஜனநாயகத் தீர்வாக அமையும்.
தேசிய இனப்பிரச்சனைகளை ஏகாதிபத்தியம் எவ்வாறு கையாள்கிறது என்பதை நினைத்துப் பார்ப்பது அவசியம். 1950களில் 60களில் காலனீய ஆதிக்கம் உலகளவில் தகர்க்கப்படும் காலத்திற்கு முன்பு, தேசீய இனப்போராட்டங்களுக்கு, அவை பெரும்பாலும் காலனிய எதிர்ப்பு இயக்கங்களாகவும் அமைந்த நிலையில், ஒரு வலுவான ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கம் இருந்தது.
ஆனால், அதற்குப்பின் வளரும் நாடுகளுக்கு எதிரான வகையில் ஏகாதிபத்தியம் பல தேசிய இன எழுச்சிகளை தூண்டி விட்டது. வளரும் நாடுகளில் சிலவற்றை பலவீனப்படுத்தும் நோக்குடன் இந்த நாடுகளில் பிரிவினை வாத இயக்கங்களை ஆதரித்தது. அவற்றிற்கு பண மற்றும் ஆயுத உதவி அளித்தது. இந்தப் பின்னணியில், பல தேசிய இன உணர்வு அடிப்படையிலான இயக்கங்கள் முற்போக்கு உள்ளடக்கத்தை இழந்து, ஏகாதிபத்திய நலன்களுக்கு சாதகமாக செயல்படும் நிலை ஏற்பட்டது.
ஆப்பிரிக்காவில், காலனி ஆதிக்கத்தை எதிர்த்த தேசிய இன போராட்டங்களை உடைக்க குழு-இன பிரிவினை வாதங்கள் கிளப்பி விடப்பட்டன. சோவியத் யூனியனுக்கும், சோசலிசத்திற்கும் எதிராகவும், இச்செயல்பாடுகள் ஏகாதிபத்தியத்தால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. இந்திய நாட்டில் வடகிழக்கு மாநிலங்களிலும், சீனாவில் திபெத் பகுதியில் பிரிவினைவாத சக்திகளை கிளப்பி விடுவதிலும் ஏகாதிபத்தியத்தின் பங்கு உள்ளது என்பது தெளிவு படுத்தப்பட வேண்டும்.
எழுபது ஆண்டுகள் ஒன்றுபட்ட நாடாக இருந்த யூகோஸ்லேவியா நாடு, குரோஷியா, ஸ்லோவினியா, போஸ்னியா என துண்டு துண்டான நாடுகளாக பெரும் இரத்தக் களறிக்கு இடையில் பிரிந்தன. இன மோதல்களில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியானர்கள். கொடூரமாக மக்கள் தங்களிடயே போரிட்டு சாகும் நிலையை ஏகாதிபத்தியவாதிகள் தங்கள் சுயநலத்திற்காக ஊக்குவித்தனர்.
இனவெறியும், ஏகாதிபத்திய தூண்டுதலும் சேர்ந்தால், பேரழிவு ஏற்படும் என்பதற்கு ஒரு உதாரணம் யூகோஸ்லேவியா. அமெரிக்க ஏகாதிபத்தியம் அங்கு தனது அரசியல், பொருளாதார, ராணுவ மேலாதிக்கத்தை நாட்டுப்பிரிவினை மூலம் வலுவாக உறுதிபடுத்திக் கொண்டது. இதேநிலையை தெற்காசியப் பிராந்தியத்தில் ஏற்படுத்த அவர்கள் விரும்புகின்றனர்.
சீனாவை மட்டுப்படுத்த இந்தியாவை பகடைக்காயாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல தந்திரங்களை கையாள்கின்றனர். இலங்கை நாடு அமைந்துள்ள பகுதி, ஒரு முக்கியமான, கேந்திரமான பகுதி. இலங்கையில் இனக்குழப்பம், மோதல்கள் நீடிப்பது, அவர்களுக்கு சாதகமாக உள்ளது.
முதலாளித்துவம் எப்போதும் தேசிய இனக் கோரிக்கைளை முன்னிறுத்தும். ஆனால், பாட்டாளி வர்க்கம் வர்க்கப் போரட்டத்துக்குட்பட்டு இந்த கோரிக்கைகளை எழுப்பும். தேசிய இனங்களுக்கு சமத்துவம், சம உரிமையை வலியுறுத்துகிற அதே நேரத்தில், பாட்டாளி வர்க்கக் கூட்டணியை முக்கியத்துவம் கொடுத்து முன்னிறுத்தும்.
ஒவ்வொரு தேசிய இன கோரிக்கையையும் தொழிலாளி வர்க்கப் போராட்ட கோணத்திலேயே அணுகுவதே சரியானது. இனம் சார்ந்த கலை, இலக்கியம், இசை, மொழி, பண்பாடு என அனைத்துத் துறைகளிலும் முற்போக்கான கோரிக்கைகள் உருவாக்கப்பட வேண்டும். அந்தக் கோரிக்கைகளுக்காக மக்கள் திரண்டிட வேண்டும். முதலாளித்துவம் இனக் கோரிக்கைளை முன்னிறுத்தி மக்களை தனது வசம் கைப்பற்றி கொள்ளும் என்ற வரலாற்று அனுபவம் இங்கு ஏராளமாய் இருக்கிறது.
ஆதாரம்.தோழர்கள் லெனின் ஸ்டாலின் எழுதிய நூல்களின் குறிப்புகளிலிருந்து.