Friday, May 19, 2017

விடுதலைப்புலிகள் & கலைஞர்

1.
காதல் மனைவி செய்த துரோகத்தை வெளியே சொல்லமுடியாமல் உள்ளுக்குள்ளேயே புழுங்குகிறவனை போலத்தான் விடுதலைப்புலிகள் செய்த தவறுகளைப் பற்றி வாய் திறக்காமல் இருந்தோம். பருத்திவீரன் படத்தில் இறக்கும் தருவாயில் பிரியாமணி ஒரு வசனம் சொல்வார். "நீ செஞ்ச எல்லா பாவத்தையும் எம்மேல வந்து இறக்கிட்டாங்கடா வீரா! " என. அதுபோல எல்லா தவறுகளையும் கலைஞர் மீது சாட்டி பேசாமடந்தையாக இருந்த எங்களையும் பேசவைக்கிறார்கள் .
இந்த எளிமையான கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு விவாதத்தை தொடரலாம் வாருங்கள் :
1. நார்வே அமைதி ஒப்பந்த காலத்தில் ஆன்டன் பாலசிங்கத்துக்குத் தெரியாமல் ஆயுதங்களை குவித்தது யார்? அதன்காரணமாக சர்வதேச அமைப்பு முன்பாக பாலசிங்கம் தவறு செய்தது போல நிற்க வைக்கப்பட்டாரே ஏன்?
2. ரணில் விக்ரமசிங்கே தோற்கடிக்கப்பட்டு ராஜ பக்சே வெற்றி பெற்றது எப்படி?
3. அமைதி ஒப்பந்தத்தை மீறி போரைத் துவக்கியது யார்?
4. போர் நிறுத்த கோரிக்கையை ஏற்க மறுத்து போரை நிறுத்த மறுத்தது யார்?
5. கடைசியாக அப்பாவி தமிழர்களை மனித கேடயமாக பயன்படுத்தியது யார்?

2.
சில ஆண்டுகளுக்கு முன்பு நூற்றில் எண்பது திமுகவினருக்கு பிரபாகரன் மீது ஒருவித மதிப்பும், ஈர்ப்பும் இருந்தது.
இறுதி யுத்தத்தின் போதும், அதன்பின்பும் கூட அந்த நிலை தொடர்ந்திருந்தது. ஆனால் எப்போது இந்த தமிழ் தேசியவாதிகள் ஜெயலலிதாவிற்காக திமுகவையும், கலைஞரையும் ஈழத்துரோகிகள் என்று பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்களோ அப்போதிலிருந்தே இந்த எண்பது திமுகவினரில் பலரும் பிரபாகரன் மீதும், புலிகள் மீதும் விமர்சனங்களை வைக்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் இப்படி பிரபாகரனை விமர்சிப்பதில் தயக்கமும், உறுத்தலும் கொண்டிருந்த திமுகவினரை உசுப்பிவிடும் வகையில் இந்த தமிழ்தேசியவாதிகள் கலைஞர் மீதும், திமுக மீதும் தொடர்ந்து அவதுறான, அசிங்கமான பரப்புரையை மேற்கொண்டனர்.
இந்த நிலைக்கண்டு இனியும் பொறுக்க முடியாது என்று அந்த எண்பது திமுகவினரில் இன்று எழுவது பேர் பிரபாகரனை மிகக்கடுமையாக விமர்சிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதற்கேற்றாற் போல புலிகள் மீதும், பிரபாகரன் மீதும் நிறைய குற்றச்சாட்டுகளும் ஆதாரப்பூர்வமாக தென்படுகிறது. இதில் என்ன கொடுமை எனில் இன்று பிரபாகரன் மீது இத்தகைய கரும்புள்ளிகளும், கடும் விமர்சனங்களும் வைக்கப்பட காரணமாயிருந்த தமிழ்தேசியவாதிகள் எவரும் பிரபாகரன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை களைக்க முற்படுவதில்லை. மாறாக இன்னும் கலைஞரையும், திமுகவையுமே திட்டிக்கொண்டிருக்கிறார்கள். பிரபாகரனுக்காக அவர்கள் கவலை பட்டதாகவோ, பரிதாபப்பட்டதாகவோ தெரியவில்லை. ஆனால் இன்றும் பிரபாகரனை ஒரு போராளியாக பாவித்து, அவர் மீதான விமர்சனத்திற்காக பரிதாபப்படுபவர்கள், அனுதாபப்படுபவர்கள் யாரென்று பார்த்தால் அது அந்த எண்பதில் மீதமிருக்கும் பத்து திமுகவினரே.
இந்த பத்தும் இனிவரும் காலங்களில் கண்டிப்பாக குறைந்து சுழியாகும், காரணம் நமது தமிழ்தேசிய பிள்ளைகளின் சுழி அப்படி.
எப்படியோ, பிரபாகரனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

3.
கலைஞரின் உண்ணாவிரத்திற்கு பிறகு சீஸ்ஃபயர் அறிவிப்பு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் சென்னை வந்து இலங்கை அரசு அனுப்பிய ஃபேக்ஸ் செய்தியைக் காட்டுகிறார். காலை 7 மணிக்கு துவங்கிய உண்ணாவிரதத்தை 2 மணியளவில் முடிக்கிறார் கலைஞர்.
ஆனால் அடுத்த மூன்று நாட்களில் மீண்டும் போர் துவங்கியது எப்படி??
கலைஞரின் உண்ணாவிரதத்திற்கு அடுத்த தினத்திற்கு அடுத்த தினம் புலிகளின் அரசியல் ஆலோசகராய் அப்போது இருந்த திரு.நடேசன் "நாங்கள் செய்வது பின் வாங்கும் தந்திரோபாயம்! கருணாநிதி எங்கள் வெற்றியை மழுங்கச் செய்கிறார் என்று அறிக்கை வெளியிட்டார். "இன்னும் ஒரு சில தினங்களில் இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்துவிடும், பிஜேபி நிச்சயம் வெல்லும். அதுவரை தாக்குப் பிடியுங்கள்" என்று தமிழக அரசியல்வாதிகள் குடுத்த யோசனையைக் கேட்டே புலிகள் போரை நீடித்ததாக நார்வே குடுத்த அறிக்கை இப்போதும் இணையத்தில் இருக்கிறது!
போர் நிறுத்தம் என்றால் இரு தரப்பும் நிறுத்த வேண்டும். ஒருவர் மட்டும் நிறுத்தி மறு தரப்பு நிறுத்தாமல் அடிப்பதற்கு பெயர் போர் நிறுத்தம் அல்ல.
கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார். அறிவிப்பு வந்தது. ஆனால் நாங்கள் தொடருவோம் என்று சொன்னவர்கள் யார்????????????
அன்றைக்கு மொத்த மீடியாவும் திமுகவுக்கு எதிராக இருந்த நிலையில் பல செய்திகள் மக்களிடம் மறைக்கப்பட்டது. சமூக வலைதளத்தின் வீச்சும் இந்த அளவிற்கு இல்லை அப்போது.
ஆனால் அதையும் மீறி மக்களிடம் சொல்ல ஒரு வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்து அநியாயமாகக் கோட்டை விட்டார். எப்படி?
"போர் நிறுத்தம் வந்துவிட்டது என்று சொன்ன பிறகும் போர் நடக்கிறதே?" என்று கலைஞரிடம் கேட்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள். பெரிய இலக்கியத் தரமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு இந்த மனுசனும் " மழை விட்டும் ( அதாவது இலங்கை நிறுத்தியும்) தூவானம் விடவில்லை ( புலிகள் விடவில்லை) என்றார். இதற்கு பதிலாக நேரடியாக " இலங்கை நிறுத்திருச்சு. அவங்க நிறுத்தலையே! என்னைய என்ன பண்ண சொல்றீங்கன்னு? பாமரத்தனமாகக் கேட்டு இருந்தால் அது மக்களுக்கு எளிதில் புரியும் செய்தியாகி இருக்கும். இலக்கிய வாயால் அதைக் கோட்டை விட்டார் தலைவர் கலைஞர். இந்த விசயத்தில் எனக்கு அவர் மேல் தீராத கோபம் உண்டு.
இனி புலிகளின் கதையும், ஈழமும் மொத்தமாய் முடிந்தது என்பதை உணர்ந்த ஜெயலலிதா...தன் வாழ்நாள் முழுவதும் புலிகளை ஈழத்தை எதிர்த்த ஜெயலலிதா போர் முடிவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் தனி ஈழமே தீர்வு என்று..நடக்காது என்று உறுதியாகத் தெரிந்த விசயத்திற்கு பல்டி அடித்து பேசி ஈழத்தாய் ஆனார். கலைஞர் துரோகியானார்.
இன்றைக்கு புலிகள் வாழ்க ஈழம் வாழ்க என்று யார் வேண்டுமானாலும் பேசலாம். ஈழம் என்று வாயை அசைத்தாலே பொடாவிலும் தடாவிலும் தள்ளிய அன்றைய நேரத்தில் பிரபாகரன் வாழ்க தமிழ் ஈழம் வெல்க என்று எழுதிய யுவகிருஷ்ணாக்களும் அப்துல்லாக்களும் நரேன்களும் இன்று திடீர் குபீர் டாலர் வசூல் போராளிகளுக்கு இன்று தமிழின விரோதியாகிப் போனோம். மகிழ்ச்சி :(

புலிகள் 2

ஈழவிவகாரத்தை இந்திரா கையில் எடுத்ததும் முதலில் வரவேற்றது கலைஞர், அமிர்தலிங்கம் சென்னை வந்தபொழுது முதலில் வரவேற்க சென்றதும் அவரே
அதுவரை தமிழகத்தில் ஈழ அபிமானம் ஏதுமில்லை, 1964ல் மலையக மக்கள் திருப்பி அனுப்பபடும்பொழுது சிறிய சலசலப்பு மட்டும்தான் இருந்தது
கலைஞர்தான் ஈழவிவகாரங்களுக்கு தமிழகத்தில் உயிர்கொடுத்தார், விடுவாரா ராமசந்திரன்? அவர் உள்ளே குதித்ததுதான் பிரச்சினையின் மூலம்
கலைஞர் மூளைக்காரர், ஆழ்ந்து சிந்திப்பவர். தமிழகம் என்றுமே டெல்லிக்கு ஆகாது, மாநில கட்சி அதுவும் முன்பு பிரிவினை பேசிய கட்சி இன்னொரு நாட்டு பிரிவினையினை பேசுவது பெரும் ஆபத்தில் முடியும் என கணித்தார்
அது மகா உண்மையும் கூட பின்னாளில் வைகோ அனாதை ஆனது அப்படித்தான், 2009ல் புலிகள் அடிபட்டு சாக இந்தியா அமைதியாக இருந்ததும் அப்படித்தான்
அதனால் அகில இந்திய அளவில் ஈழபிரச்சினை எதிரொலிக்காமல் தீர்வில்லை என்றுதான் அன்று டெசோ அமைப்பினை வாஜ்பாய், பரூக் அப்துல்லா, பட்நாயக் என அகில இந்திய தலைவர்களை வைத்து அசத்தினார்
"இலங்கை தமிழரை தொட்டால், இந்தியா முழுக்க அதிரும்" என அவர் ராஜதந்திரமாக மிரட்டி நின்றார்
நிச்சயம் மிக அறிவார்ந்த காய்நகர்த்தல் இது, எம்ஜிஆருக்கு இப்படிபட்ட தந்திரம் எல்லாம் இல்லை, ஆனால் அவர் கையில் பிரபாகரன் கிடைத்தான்
இந்திரா ஈழபிரச்சினையினை கையாண்டது வெறும் 1 வருடமே, போராளிகளுக்கு பயிற்சி ஆரம்பிக்கும்பொழுதே இவர்கள் நச்சுபாம்புகள் என அவருக்கு தெரிந்தது, ஆனாலும் ஜெயவர்த்தனேவுக்கு ஆட்டம் காட்டினார்
சென்னையில் சிக்கிய பிரபாகரனை அவர்தான் காத்தார், இந்திரா செய்தது அந்த பெரும் தவறு
ராஜிவிற்கும் பிரபாகரனுக்கும் உரசல் இருந்தது, அதே நேரம் ஜெயாவினை வளர்க்கின்றார் என ராஜிவிற்கும் எம்ஜிஆருக்கும் உரசல் இருந்தது, நீ ஜெயாவினை வளர்த்தால் நான் உன் எதிரி பிரபாகரனை வளர்ப்பேன் என வரிந்து கட்டினார் எம்ஜிஆர்
இங்கு ஒரு கேள்வி எழும்? ஒரு மாநில முதல்வர் அந்நிய நாட்டு தீவிரவாதிக்கு உதவுகின்றார், அந்த அரசை டிஸ்மிஸ் செய்தால் என்ன? செய்திருக்கலாம், ராஜிவ் செய்யவில்லை
வாழ்வில் பல போராட்டங்களை நடத்தியவர் கலைஞர், ராஜ தந்திரமாக அற்புதமாக ஈழ ஆதரவாக‌ இந்தியாவினை திரட்டினார்
ஆனால் சகலத்தையும் கெடுத்தே பழக்கபட்ட ராமசந்திரன், புலிகளை வளர்த்துவிட்டு எல்லாவற்றையும் பாழாக்கினார்
கலைஞரின் டெசோவில் பிரபாகரன் தவிர்த்த ஈழ இயக்கம் கலந்து கொண்டது, அன்றே வெறிபிடித்தது புலிகளுக்கு
எல்லா இயக்கங்களை அழித்தார்கள், கலைஞர் சொல்லிபார்த்தார் "பழம் கிடைக்கட்டும் அதன் பின் சுளைகளை பங்கிடுங்கள்" என்றார், புலிகள் கேட்கவில்லை
"கெஞ்சி கேட்கின்றேன், ஈழதிசை நோக்கி கதறி கேட்கின்றேன் புலிகள் சபாரத்தினத்தை கொல்லவேண்டாம்..." என அவர் மன்றாடி நின்றபொழுது கொஞ்சம் கூட புலிகள் சட்டை செய்யவில்லை,
கலைஞரை மனிதனாக கூட நினைக்கவில்லை
வெறுப்புற்ற கலைஞர் டெசோவினை கலைத்துவிட்டு அமைதியானார், இப்பொழுது காட்சியில் வென்றது எம்ஜிஆரும் புலிகளும்
அப்பொழுதும் புலிகளை அவர் முழுக்க கைவிட்டுவிடவில்லை
அமைதிபடையினை ராஜிவ் அனுப்பும் பொழுது எம்ஜிஆர் தடுக்கவில்லை, மாறாக கலைஞர்தான் இது ஈழம் அடைவதை தடுக்கும் முயற்சி என மறுத்தார், அமைதிபடையினை எதிர்த்த முதல் தமிழர் கலைஞர்தான்
எம்ஜிஆர் சத்தமே இல்லை, அத்தோடு மறைந்தும் போனார்
மணலாற்றில் இந்திய படையினரால் வளைக்கபட்டிருந்தார் பிரபாகரன்,
ஒரு நாள் அவகாசமிருந்தால் இந்திய படை பிடித்து நசுக்கியிருக்கும்,
கிட்டதட்ட சோலி முடிந்த நிலை
அப்பொழுதுதான் விபிசிங்கிடம் மன்றாடி அமைதிபடையினை திரும்ப பெற்றார் கலைஞர்
பிரபாகரனின் உயிர் அவரால்தான் அன்று காப்பாற்றபட்டது, இதனை வரலாற்றில் எவன் மறுக்க முடியும்?
15 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்தார் கலைஞர், அவரின் நெடிய போராட்டம் கழிந்து அப்பொழுதுதான் மூச்சுவிட்டார், புலிகள் அவர் ஆட்சியில் தமிழகத்தை வலம் வந்தனர்
அங்கோ இந்திய ராணுவத்துடனான மோதல், இந்தியாவிலே அடைக்கலம் எனும் அளவிற்கு புலிகளின் ஆதரவு இருந்தது, கலைஞர் அவ்வளவு சுதந்திரம் கொடுத்திருந்தார்
அப்பொழுதுதான் பத்மநாபா படுகொலை சம்பவம் நடந்து கலைஞர் ஆட்சி கலைக்கபட்டது, நொந்து போனார் கலைஞர், இவர்களை நாம் தான் அனுமதித்தோம், நம் ஆட்சிக்கே உலையா?
அடுத்த பேரிடியாக ராஜிவ் கொலை, அகில இந்தியாவும் அலறிற்று திமுகவினர் தாக்கபட்டார்கள், ஓடவிரட்டபட்டார்கள், தேர்தலில் திமுக 1 இடத்தில்தான் வென்றது
திமுக விசாரணை வளையத்தில் வந்தது, கலைஞர் திகைத்தார், கட்சி முடக்கும் அளவு சிக்கல், கலைஞர் கூட்டம் ரத்து ஏன் என ஏக கேள்விகள்
ஆனால் அன்று ராஜிவுடன் கூட்டணியான அதிமுகவின் ஜெயா ஏன் அந்த மேடைக்கு வரவில்லை என யாரும் விசாரிக்கவில்லை, பிராமண பாசம் அப்படி
தப்பி பிழைத்தது திமுக, பத்மநாபா கொலைக்குபின் புலிகளுடனான எல்லா தொடர்பையும் கலைஞர் முறித்ததால் திமுக ராஜிவ் கொலையில் பெரிதாக சிக்கவில்லை, அதன் பின்னும் விடா பிடியாக இருந்த வைகோவினை விரட்டினார்
ஈழதலைவன் என்றும், மிகபெரும் சிந்தனையாளன், பெரும் அரசியல்வாதி என இந்திராவாலும்,ராஜிவாலும் , வாஜ்பாயினாலும் அறிபட்டிருந்த அமிர்தலிங்கத்தின் கொலை கலைஞரை மனம் நோக செய்தது
ஈழம் அமைந்திருந்தால் அமிர்தலிங்கம்தான் ஜனநாயக அதிபராகியிருக்கவேண்டும் என்றால் அந்த கொலையின் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என சொல்லி தெரியவேண்டியதில்லை
சர்வாதிகாரத்தின் உச்சியில் இருந்து எல்லோரையும் கொல்வோம், அதன் பெயர் போராட்டம் என சொன்னால் அறிவில்லாத வைகோ ஏற்கலாம், கலைஞர் ஏற்பாரா?
பின் வைகோ தனிகட்சி கண்டார், ஒன்றுமில்லாத வைகோ தமிழகத்தை மிரட்டும்படி பிரமாண்ட செலவு செய்ய பணம் எங்கிருந்து வந்தது என யாருக்கும் தெரியாது
அதன் பின் கலைஞர் ஈழவிவகாரங்களில் இருந்து ஒதுங்கினார், 1998, 2002 எல்லாம் புலிகளின் வெற்றி காலங்கள், யாரும் கலைஞரை தேடவும் இல்லை, அப்படி ஒரு மனிதர் இருப்பதாக நினைக்கவுமில்லை
பிரேமதசாவுடன் நட்பு கொண்டு பின் அவரையே கொன்றதை சிங்களம் மறக்கவில்லை, ஆனால் பிரபாகரன் அபபடி மகிந்தவுடன் நெருங்கினார், மகிந்த ராஜபக்சேவினை அதிபராக்கியது நிச்சயம் பிரபாகரனே
ஆட்சிக்கு வந்தார் மகிந்தா, அவரும் பிரேமதாச சாயலே, பல சக்திகள் உலகளாவிய தீவிரவாதத்திற்கு எதிராக திரண்டன‌ அழகாக பயன்படுத்தினார் ராஜபக்சே
புலிகளுக்கோ கடல்மீன்கள் கூட நண்பர்கள் இல்லை, புலி ஆதரவு என ஒருகுரலுமில்லை
ஆனானபட்ட யாசர் அராபத்தே போராட்டத்தை கைவிட்டு சுயாட்சிக்கு திரும்பிய நேரம் அது, பிரபாகரனை உலகம் விடுமா? இவ்வளவிற்கும் அராபத் மீது அமெரிக்க அதிபரை கொன்ற வழக்கு கூட கிடையாது
நார்வே குழு மூலம் பேசிபார்த்தார்கள், ஆண்டன் பாலசிங்கமே அலறிவிட்டு ஓடினார், புலிகளின் இறுமாப்பு அப்படி இருந்தது,
அமெரிக்க தூதர் பகிரங்கமாக எச்சரித்தார் "இனி யுத்தம் வருமாயின் புலிகள் பெரும் படுதோல்வியினை சந்திப்பர், அவர்கள் இருப்பே நிர்மூலமாகும்"
ஆனால் விதி புலிகளை திருந்த விடவில்லை, 2006ல் யுத்தம் தொடங்கிற்று, புலிகளின் பாசாங்கு யுத்தம் வெல்லவில்லை
காரணம் கருணாவின் பிரிவு அப்படி, கருணா சமாதானம் பேசினார், மாத்தையாவின் முடிவு உனக்கும் வரலாம் என சிலர் எச்சரிக்க தந்திரமாக விலகினான் கருணா, சும்மா விலகவில்லை தன் படைகளோடு விலகினான், உயிர்காக்க சிங்களனிடம் சேர்ந்தான்
அன்று பிரேமதாசாவுடன் கிட்டுவும் பாலசிங்கமும் பேசலாம், பின் ராஜபக்சேவும் கருணாவும் பேசகூடாதா?
அதுவும் விமானங்களில் சென்று ஒரு தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்துவதை உலக நாடுகள் அனுமதிககாது, காரணம் இன்னொரு தீவிரவாத இயக்கம் அதனை நொடியில் பெற்றுகொள்ளும், இம்மாதிரி பல விஷயங்களில் புலிகளுக்கு கட்டம் கட்டபட்டது
அமெரிக்கா புலிகளின் 11 கப்பல்களை காட்டி கொடுத்தது, ஐரோப்பா புலிகளின் வங்கி கணக்கை மூடியது, உலகமே திரண்டது புலிகள் முடிந்துகொண்டிருந்தனர்
இப்பொழுது கலைஞரை வம்புக்கு இழுத்தனர், நீ புலிகளை காப்பாற்றவில்லை என்றால் துரோகி என மண்வாரி தூற்றினர், இந்த மண்ணில் முளைத்தவர்தான் சீமான்
இந்தியாவும் புலிகள் அழியவேண்டும் என நினைத்தநாடல்ல, அப்படி நினைத்தால் 1995ல் சந்திரிகாவோடு சேர்ந்து நசுக்கியிருப்பார்கள், இலங்கையின் எங்கோ ஒரு மூலையில் இலங்கை அரசுக்கு எதிரான முணகல் இந்தியாவிற்கு வேண்டும்
இந்த தைரியத்தில்தான் ராஜிவ் கொலையினை சாதாரணமாக நினைத்தனர் புலிகள்
ஆனால் 2009ல் உலகம் ஒன்றாய் கூடியது, இந்தியாவிற்கும் வேறு வழியில்லை, இலங்கையில் புலிகளை காத்துவிட்டு பாகிஸ்தானிடம் காஷ்மீரில் தலையிடாதே என எந்த முகத்தை வைத்து சொல்லமுடியும்
அப்பொழுதும் சிதம்பரம் தலையிட்டார், ப.சிதம்பரமும் பிரபாகரனும் 1980களில் பழகியவர்கள். பிரபாகரன் தமிழகத்தில் தங்கி இருந்தபொழுது சிதம்பரத்தின் கண்காணிப்பில்தான் இருந்தார்
ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிய பிரபாகரன் அதன் பின் இந்தியா வரவே இல்லை , காரணம் அவரை தமிழக போலிஸ் கண்காணிப்பது அவருக்கு பிடிக்கவில்லையாம்
அப்படி அன்றே அவமானபட்ட சிதம்பரம் 2009ல் யுத்தம் நிறுத்த வழி ஒன்றே ஒன்றுதான் அது இந்தியா 1987ல் செய்தபடி மாநில அரசை அமைத்தல் யுத்தம் நிறுத்துதல் என்ற ஒப்பந்தம், புலிகள் ஆயுதங்களை கைவிட சொல்லும் ஒப்பந்தம்
அதற்கு மேல் இந்தியா இறங்கிவரவில்லை, இதுதான் முடிவு இதற்கு ஒப்புகொண்டால் பேசலாம் என்றது, 1987ல் இருந்த நிலையில்தான் இந்தியா 2009லும் இருந்தது
கலைஞரும் அதனையே வற்புறுத்தினார்
விடுவாரா வைகோ? 2009ல் ஆட்சி மாறும் என்றும், பாஜக ஆட்சி வந்தவுடன் ஈழம் கிடைக்கும் என்றேல்லாம் சொல்லி அவரை உசுப்பேத்திவிட்டார்கள்
அரசியலில் மிக அப்பாவியும், தீவிரவாதத்தில் மூர்க்கனுமான பிரபாகரன் அதை நம்பினார், சிதம்பரம் சொன்ன யோசனைகளை புறங்கையால் தள்ளினார்
இந்தியா அதிகார மட்டத்தில் வேறு மாதிரி யோசித்தார்கள், என்ன இது? பலமுறை புலிகள் தோற்றார்கள், மக்கள் நடுவில் அமர்ந்தார்கள், மக்களை கொல்கின்ரார்கள் என அலறினார்கள்
நாம் சென்று மக்களை காப்பாற்றினால் இவர்கள் தப்பிப்பார்கள், தப்பித்து?
மறுபடி அதே சண்டை, அதே அலறல், நாம் சென்று காப்பாற்றிவிட்டால் அதே விளையாட்டு, சில நேரம் நம் மீதே அடி, இவர்களை காப்பாற்றினால் இந்த விளையாட்டு இன்னும் 30 ஆண்டுகள் நீடிக்கும், இன்னும் ஆயிரகணக்கானோர் செத்துகொண்டேதான் இருப்பார்கள்
புலிகள் சமாதான‌ முடிவுக்கு வந்தால் ஏதும் செய்யலாம், இல்லாவிட்டால் ஒழியட்டும்
புலிகள் முடிவிற்கு வரவுமில்லை, இந்திய யோசனையினை, நார்வே யோசனையினை கேட்கவுமில்லை
ப.சிதம்பரம், பண்ருட்டி ராமசந்திரன் என பிரபாகரனோடு பழகிய பலர் தமிழகத்தில் உண்டு, அவர்கள் எல்லாம் சத்தமே இல்லை, காரணம் புலிகளை பற்றி அவர்களுக்கு தெரியும்
மாறாக கத்துவதெல்லாம் யார் என்றால் பிரபாகரனை சரியாக கூட பார்க்காதவர்கள், புலிகளிடம் வாங்கியவர்கள், வைகோ போல என்ன பைத்தியங்கள்
உண்மை தெரிந்தவர் எல்லாம் அமைதியாக இருக்க, ஒன்றுமே தெரியாதவர் உளறல்தான் கலைஞர் ஒழிக, காங்கிரஸ் ஒழிக‌
இப்பொழுது வடகொரிய பிரச்சினையினை தமிழக முதல்வர் தீர்க்க முடியுமா? முடியாது. ஈழ இறுதிபோரும் அபபடியே , அது பெரும் கைகளால் நடத்தபட்டது
கலைஞர் தன்னால் முடிந்த மட்டும் ஈழபோராட்டத்திற்கு எல்லா உதவியும் செய்தார், அவர் கை நீட்ட நட்புக்கு அழைத்த பொழுது தட்டிவிட்டவர்கள், அவர் கும்பிட்டு கேட்ட பொழுது கையினை முறித்தவர்கள்தான் புலிகள்
கலைஞர் சொற்படி கேட்டிருந்தால் என்றோ இலங்கையில் அமைதி நிலவியிருக்கும், இத்தனை பேரழிவுகள் நடந்திருக்காது,
ஈழசிக்கலில் எந்த பக்கம் பார்த்தாலும் தெரியும் கல்வெட்டு அது
உடன் போராட வந்தவனை கொன்றது புலிகள், ஆதரவான இந்தியாவினை விரட்டியது புலிகள், சமாதானம் பேச வந்தவனை கொன்றுபோட்டதும் புலிகள்
உலகில் எந்த சக்திக்கும் கட்டுபட மாட்டோம், எங்களுக்கு நார்வே, அமெரிக்கா வேண்டாம். எத்தியோப்பியா, எரித்திர்யா ஆதரவு போதும் என சிந்தித்ததும் புலிகள்
செய்த தவறெல்லாம் அவர்களுடையது
சபாரத்தினம்,பத்மநாபா, அமிர்தலிங்கம், ராஜிவ் என எல்லோரையும் கலைஞரை கேட்டுவிட்டா கொன்றார்கள்? கலைஞரை கேட்டுவிட்டா மகிந்தவினை முதல்வராக்கினார்கள்?
கலைஞரை கேட்டுவிட்டா வைகோவினை தலைவராக்கினார்கள்?
அவரை ஒரு மனிதனாக கூட சிந்திக்கமாட்டார்களாம், ஆனால் அவர்களுக்கு ஒன்று என்றால் கலைஞர் செத்து காத்திருக்கவேண்டுமாம்
அப்படிபட்ட அவசியம் கலைஞருக்கு ஏன் வரவேண்டும்?
கலைஞரை மீறி சென்ற புலிகள் என்ன கிழித்துவிட்டார்கள், அல்லது திமுகவிற்குத்தான் என்ன குறைந்துவிட்டது?
இன்றும் வலுவான எதிர்கட்சி திமுக, இன்று தேர்தல் வைத்தாலும் வலுவான ஆளும் கட்சி திமுக‌
ஆக கலைஞருக்கு ஒன்றுமே இழப்பில்லை, இந்த வயிற்றெரிச்சலில்தான் கத்திகொண்டே இருக்கின்றார்கள்
அதற்காக அவர் ஒரு காலத்தில் செய்த ஈழ உதவிகளை மறப்பது எவ்வகையிலும் நியாயமாகாது..
பிரபாகரன் மட்டும்தான் போராளி என்றும், அவரை காக்காதவர்கள் எல்லாம் துரோகிகள் என சொல்வார்கள் என்றால் அது பைத்தியகாரதனம்
அப்படித்தான் பல பைத்தியங்கள் உருண்டு புரண்டு அழுதுகொண்டிருக்கின்றன‌

புலிகளால் கொல்லபட்ட தமிழர்கள்

முள்ளிவாய்க்கால் தமிழர்களுக்காக அழுகின்றார்களாம், புலிகளுக்காக அழுகின்றார்களாம் அழுங்கள்
நாங்களும் ஏராளமான தமிழருக்காக அழுகின்றோம்
ஆல்பர்ட் துரையப்பா எனும் யாழ்பாண முன்னாள் மேயருக்காக, செல்லகிளி எனும் புலியின் மர்ம மரணத்திற்காக, மைக்கேல், பற்குணம் போன்ற ஆரம்பகால தமிழர்களுக்காக‌
கொஞ்சம் பொறுத்திருந்தால் சிறை தப்பியிருக்கும் குட்டிமணி கோஷ்டிக்கு வாய்பளிக்காமல் அவசரமாக புலிகளால் நடந்த கண்ணிவெடி தாக்குதலும், அதனை தொடர்ந்த கொழும்பு கலவரத்தில் செத்தவர்களுக்காக அதனை தொடர்ந்து வெலிக்கட சிறையில் கொல்லபட்ட குட்டிமணி கோஷ்டிக்காக..
புலிகளால் கொல்லபட்ட பஸ்தியான் பிள்ளை போன்ற இலங்கை தமிழ் காவல் அதிகாரிகளுக்காக..
புலிகளின் வங்கி, அடகுகடை முயற்சியில் கொல்லபட்ட தமிழர்களுக்காக‌
வெடிகுண்டு சோதனைகளில் புலிகளால் கொல்லபட்ட தமிழருக்காக‌
புலிகளால் கொல்லபட்ட ராஜினி முதல் ஏராளமான சிந்தனைவாதி தமிழர்களுக்காக..
புலிகளின் கந்தன் கருணை இல்லத்தில் கொல்லபட்ட 80 தமிழ் போராளிகளுக்காக‌
புலிகளால் கொல்லபட்ட சபாரத்தினம் அவரின் படையில் இருந்த ஆயிரம் தமிழருக்காக, ஆமாம் ஆயிரம் தமிழர்கள் அன்று புலிகளாலே கொல்லபட்டனர்
புலிகளால் கொல்லபட்ட மாற்று இயக்க தமிழர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டும் அந்த தமிழருக்காக‌
புலிகளால் கொல்லபட்ட மெண்டிஸ் போன்ற போராளிகளுக்காக....
துணுக்காய் போன்ற புலிகளின் வதைமுகாமில் சித்திரவதை செய்து கொல்லபட்ட ஏராளமான தமிழருக்காக..
ஈழ தமிழருக்கும் தமிழக தமிழருக்கும் என்ன உறவு? மொழி உறவாம். ஆனால் இலங்கை இஸ்லாமிய தமிழருக்கும் ஈழதமிழருக்கும் மொழி ஒன்றாயினும் உறவே இல்லையாம், அந்த புலிகளால் மசூதியில் கொல்லபட்ட 200 இஸ்லாமிய தமிழருக்காக‌
புலிகளால் சென்னையில் கொல்லபட்ட பத்மநாபாவிற்காக, அவரோடு செத்த 14 தமிழருக்காக, அப்பொழுது சிவராசனால் கொல்லபட்ட ஒரு தமிழக காவலுனுக்காக‌
கொழும்பில் கொல்லபட்ட அமிர்தலிங்கம் எனும் தமிழ் தலைவனுக்காக. இன்னும் 2005 வரை கொல்லபட்ட லஷ்மன் கதிர்காகர் போன்ற தமிழருக்காக‌
ராஜிவ்காந்தியுடன் சென்னையில் கொல்லபட்ட 16 தமிழருக்காக‌
வஞ்சகமாக பேரரிவாளனையும், நளினியினையும் சிக்க வைத்துவிட்டு இறுதிவரை வாய்திறக்காத புலிகளின் வஞ்சகத்திற்காக, கிட்டதட்ட இதுவும் கொலையே
புலிகள் இயக்கத்தில் இருந்த மாத்தையா என்பவரை 500 தமிழர்களுடன் சுட்டு கொன்றார்கள் அல்லவா? அந்த கொலைகளுக்காக‌
கருணா பிரிவு போராளிகள் 400 பேரை வெருகல்லில் கொன்ற கொலைக்காக‌
பள்ளி தமிழ் சிறுவர் சிறுமியரை பிடித்து அவர்களை போர்முனைக்கு அனுப்பி கொன்றார்கள் அல்லவா? அந்த அழிவிற்காக‌
3 தமிழ் தலைமுறை கல்வி, வாழ்வு என சகலமும் புலிகளால் அழிந்திருக்கின்றதல்லவா அதற்காக ....
2009ல் மக்களை விடுங்கள் என உலக நாடுகள் கேட்டும் சுட்டிம் அடித்தும் தங்களோடு வைத்திருந்தார்கள் அல்லவா? அந்த கொடூரத்திற்காக‌
அந்த தமிழர்களை எல்லாம் நினைத்து அழுகின்றோம்
பிரபாகரனுக்கு தன் குண்டுதுளைக்காத பிரத்யோக சட்டையினையும், கை நிறைய பணமும் கொடுத்து அனுப்பிய ராஜிவ் காந்தி
முதலில் பிரபாகரனை நம்பி, பின் இவர் மக்கள் போராளியே அல்ல என முதலில் சொன்ன ராஜிவ்காந்தி சொன்னதும், பின்னாளில் பிரபாகரனுடன் பேசிவிட்டு அலறி அடித்து ஓடிய
நார்வே தூதர் எரிக் சோல்ஹிம் சொன்னதும் தான் மகா உண்மை
"பிரபாகரன் தன் உயிருக்கு அஞ்சுகின்றார், துப்பாக்கியினை கீழே வைத்தால் மறுநிமிடம் கொல்லபடுவோம் என சந்தேகிக்கின்றார்
அந்த பயம் இருக்கும் வரை அவர் எதனைபற்றியும், யாரைபற்றியும் கவலைபட மாட்டார், அவர் இருக்கும் வரை அழிவுகள் தொடர்ந்தே இருக்கும்"
இறுதியாக அதுதான் பலித்தது, அந்த அழிவு பல்லாயிர கணக்கான மக்களோடு நிகழ்ந்ததுதான் சோகம்
கொழும்பிலும், வடமராச்சியிலும் களம்புகுந்து தன் கையினை சுட்டுகொண்ட இந்தியா அதன் பின் ஒதுங்கியது, அதாவது ஆரம்பத்திலே இந்திய தலையீடு இல்லையென்றால் 1980களிலே முடிந்திருக்க வேண்டிய பிரச்சினை, 2009 வரை நீடித்திருக்காது
2009 வரை பிரபாகரன் வாழ ஒரே காரணம் இந்தியா, ராமன் ராவணனுக்கு கொடுத்தது போல, கண்ணன் துரியோதனனுக்கு கொடுத்தது போல பல வாய்ப்புகளை இந்தியா கொடுத்தும் புலிகள் ஏற்கவே இல்லை
சிங்கள தளபதி சொன்னது போல "இந்திரா, ராஜிவ் தலையீடு மட்டும் இல்லையென்றால் 1980களிலே எமது நாடு அமைதியாயிருக்கும், 2009 வரை இழுத்த காரணமே இந்தியாதான்"
எல்லாம் முடிந்துவிட்டது
பலர் புலிகள், முள்ளிவாய்க்கால் என அழுது இந்தியாவிற்கும், கலைஞருக்கும், காங்கிரசுக்கும் சாபமிடட்டும்
காரணமில்லா சாபம் பலிப்பதில்லை
இப்படியாக தமிழர்களை கொன்று, தமிழ் போராளிகளை கொன்று, தமிழ் தலைவர்களை கொன்று, சிங்களன் கொலை முயற்சியில் தப்பிய ராஜிவ்காந்தியினை கொன்ற புலிகள், உண்மையில் யாருக்கு உபயோகமான காரியம் செய்திருக்கின்றார்கள்?
சாட்சாத் சிங்களனுக்கு,, இந்த காரியங்களால் அவனுக்குத்தான் பெருத்த இலாபம். இதனால்தான் அவனால் வெல்ல முடிந்தது
ஆக புலிகள் போராடிய பலன் இதுதான், சிங்களனுக்கு சார்பாகத்தான் அனைத்து கொலைகளையும் நிகழ்த்தியிருக்கின்றார்கள்
புலிகள் காரணமின்றி ஒருவித மூர்க்கத்தில் நிகழ்த்திய இக்கொலைகள்தான், சிங்களனுக்கு வெற்றியினை கொடுத்தன, தமிழருக்கு முள்ளிவாய்க்காலை காட்டின‌
உறுதியாக சொல்லலாம், 1970 முதல் 2000 வரை ஈழத்தில் எழும்பிய மிக உணர்ச்சியான கொதிநிலையிலான மக்கள் எழுச்சியினை அடக்கி, சிங்களனிற்கு உதவியாக இருந்தை அன்றி புலிகள் ஒன்றும் செய்துவிடவில்லை
ஆழநோக்கினால் அதுதான் புரியும்
தமிழ்போராட்டம் தமிழர்களை கொன்ற விசித்திரத்தையும், அதனை தடுக்க முடியாத நம் நிலையினையும் நினைத்து நினைத்து அழலாம்...
நாம் மேற்கண்ட தமிழருக்காக அழலாம், புலிகளால் கொல்லபட்ட சிறுபகுதி தமிழர்கள் நிலைதான் சொல்லபட்டிருக்கின்றது, இன்னும் ஆயிரகணக்கான பட்டியல் உண்டு
அது முள்ளிவாய்க்கால் பட்டியலை விட கொடூரமானது..

புலிகள் 1

நிச்சயமாக முள்ளிவாய்க்கால் கொடூரம்தான், மறுக்க முடியாது
ஆனால் பாலஸ்தீனமும், இன்றைய சிரியாவும், இன்னும் ஏராளமான நாடுகள் அனுதினமும் சந்திக்கும் நிலை அதுதான், அப்படித்தான் உலகம்
வலுவான பின்புலம் இல்லா போராட்டம் இப்படித்தான் நொறுக்கபடும்
இதனை 1980லே சொன்னது இந்தியா, அதனால்தான் அன்றே முள்ளிவாய்க்காலான வடமராச்சியினை இந்தியா களமிறங்கி காத்தது
புலிகள் பெருவீரர்கள் என்றால் இந்தியா களமிறங்க அவசியமே வந்திருக்காது, புலிகளால் காக்க முடியாத தமிழரை காக்கத்தான் அன்று ராஜிவ் களமிறங்கினார்
இன்னொரு அழிவு வந்துவிட கூடாது என்றுதான் இந்திய படை அனுப்பவும் பட்டது
ஆனால் நடந்தது என்ன?
புலிகளும் சிங்களனும் கூட்டாளியாயினர், பிரேமதாசாவும் புலிகளும் சேர்ந்து இந்திய படையினை விரட்டினர்
எப்படிபட்ட அவமானம் இது? யாருக்காக களமிறங்கினோம்? தமிழருக்காக‌
யாரை எதிர்த்து இறங்க்கினோம் சிங்களனை..
ஆனால் அவர்கள் இருவரும் ஒன்றாகி நம்மை அடிப்பார்களாம்,
இந்தியா தனிநாட்டை தடுக்கின்றது என சீறிய புலிகள், சிங்களனிடம் அடைக்கலாமனது ஏன்?? அவன் மட்டும் கொடுத்துவிடுவானா?
உதவ வந்தவனை அடித்துவிட்டு பகைவனோடு கை கோர்ப்பதை அறிவுள்ளவன் செய்வானா? ஆனால் புலிகள் செய்தனர்
ஆனால் அதனையும் மீறி, அந்த அவமானங்களையும் தாண்டி இந்தியா தமிழ் மாகாணசபை வரை நிறைவேற்றியது, ஆனால் பொய்பிரச்சாரங்களிலும் , புலிகள் செய்த பல தந்திரங்களாலும் அவமானமாக திரும்பியது
இந்த முள்ளிவாய்க்கால் நினைவு வரும்பொழுதெல்லாம், அதில் தமிழரை இந்தியா காக்கவில்லை என பலர் கதறும்பொழுதெல்லாம், இந்தியா அன்று உதவபோய் சம்பாதித்த அவமானங்கள் எல்லாம் நினைவுக்கு வரும்
இவர்களை காக்க சென்று புலிகளால் தூண்டபட்ட மோதலில் உயிர்விட்ட 1500 இந்திய வீரர்களின் நினைவு வரும், அவர்களில் பலரை அம்மணமாக்கி கொன்ற புலிகளின் கொடூரம் நினைவுக்கு வரும்
குறிப்பாக அந்த வார்த்தை, புலிகளின் வார்த்தை, சிங்கள பிரேமதாசாவும், புலிகளும் சேர்ந்து சொன்ன வார்த்தைகள்..
"சிங்களனும் தமிழனும் அண்ணன் தம்பிகள், இன்று அடித்துகொள்வோம் நாளை சேர்ந்துகொள்வோம்
இந்திய நாய்களுக்கு இங்கு என்ன வேலை???"
ஆம், இப்படி விரட்டியபின் எங்களுக்கு அங்கு என்ன வேலை?
பின் கலைஞருக்கும், சொனியாவிற்கும் எதற்கு ஈழவிவகாரம்?

Wednesday, April 19, 2017

கார்ப்பரேட் சதி எனும் மாயை.

சமகால தமிழ்ச் சூழலில் கார்ப்பரேட் சதி என்ற பதம் கீழ்க்கண்ட காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
அ) தனக்கு புரியவில்லையென்றால்,
ஆ) தனக்கு கிடைக்காது என்ற பொறாமையால்,
இ) சிலர் சொன்னால் அது சரியாக இருக்கும் என்ற அடிமை சிந்தனையால்,
ஈ) தனக்கிருக்கும் குற்றவுணர்ச்சியை மறைத்துக்கொண்டு சமூக அக்கறையாளனாக காட்டிக்கொள்ள,
உ) மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத ஆயாசத்தினால்,
ஊ) நிதர்சனத்தை சந்திக்கும்போது ஏற்படும் வேதனையினால்
எ) அரிதாக நிகழும் உண்மையான சதித் திட்ட காரணங்களால்...
இவற்றைத்தவிர ஏதாவது இருந்தால் தெரிவிக்கவும்.
சாதாரணமாக நடைபெறும் வர்த்தகம் எப்படி நடைபெறுகிறது, அதற்கு சட்டபூர்வமாக என்னென்ன தேவை, அதன் நல்லது கெட்டது என்னென்ன என்பது குறித்த எந்த அறிவும் கிடைக்கப்பெறாத ஏட்டுக்கல்வியின் வெளிப்பாடுதான் பெரும்பாலும் கார்ப்பரேட் சதி என்ற பதத்தை பயன்படுத்தக் காரணமாக அமைகிறது.
முதலில் ஒரு வணிகத்தில் ஈடுபடுவதற்கு - எந்த தொழிலாக இருந்ததாலும் - சட்டபூர்வமாக எந்த மாதிரியான அமைப்பு தேவைப்படுகிறது என்று பார்ப்போம்.
1) Sole proprietor firm தனி உரிமையாளர் அமைப்பு
2) Partnership firm கூட்டாளிகளினால் உருவாக்கப்பட்ட அமைப்பு
3) Private Limited Company வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம்.
இவற்றைத்தவிர டிரஸ்ட்டு, ஒருநபர் கம்பெனி போன்றவற்றை இப்போது தவிர்த்துவிடலாம்.
ஒரு TIN எண் வணிகவரித்துறையில் வாங்கும்போதே Proprietor firm பதிவாகி விடுகிறது. பார்ட்னர்ஷிப் என்றால் ஒரு deed எழுதி பதிவுசெய்யவேண்டி வரும். Pvt Ltd Company என்றால் இயக்குனர்கள் இணைந்து Articles of Association, Memorandum of Association போன்றவற்றை தயார்செய்து, மேலும் பல ஆவணங்களுடன் கம்பெனி பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டு Incorporate செய்யப்படுகிறது. உரிமையாளர் அல்லது நிறுவனம் ஈடுபடும் தொழில் சார்ந்த உரிமங்கள் வாங்கவேண்டிய கடமைகள் தனி.
இதில் உரிமையாளர், பார்ட்னர் வகை தொழில்களில் நிறுவன அமைப்புக்கென்று தனி உரிமை கிடையாது. அதனால் உரிமையாளர் அல்லது கூட்டாளிகளின் பான் எண் நேரடியாக பயன்படுத்தப்படுவதோடு, வாங்கப்படும் உடைமைகள், சொத்துக்களுக்கு சம்பந்தப்பட்ட நபர் நேரடி உரிமையாளராகிறார். உரிமையாளர் இறந்தால் அந்த அமைப்பு முடிவுக்கு வந்துவிடுவதோடு, சொத்துக்கள்/உடைமைகள் அவரது வாரிசுகளிடம் சென்றுவிடும்.
பங்குகளால் வரையறுக்கப்பட்ட கம்பெனி என்பது சட்டத்தால் ஆரம்பிக்கப்பட்ட, உயிரில்லாத ஆனால் ஒரு குடிமகனுக்குரிய அத்தனை உரிமைகளையும் உடைய அமைப்பு. கம்பெனி தனக்கென்று சொத்துக்களை வாங்க விற்க முடியும், ஒரு குடிமகனுக்கு சட்டத்துக்கு முன்னால் என்னென்ன உரிமைகள் உண்டோ, அத்தனையும் கம்பெனிக்கும் உண்டு.
இயக்குனர்கள் கம்பெனியை நடத்துவதற்காக ஓர் ஊதியத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள் அல்லது கம்பெனி கொடுக்கிறது என்றுகூட வைத்துக்கொள்ளலாம். இயக்குனர் ஒருவர் அல்லது அனைவரும் இறந்தாலும் கம்பெனி இறக்காது. அதனால் கம்பெனி தன்னுடைய பணத்தைக் காரணமில்லாமல் யாருக்கும் கொடுக்காது. அப்படி கொடுத்தால் அதற்கு முறையான ஆவணங்கள் தேவை. இயக்குனராக இருந்து கம்பெனிக்கு கடன் கொடுத்தால் அதை கம்பெனி திரும்பத் தரும்; ஆனால் கம்பெனி பணத்தை இயக்குனரே தேவையில்லாமல் எடுத்தால் சட்டைக்காலரைப் பிடித்து திரும்ப வாங்கிக்கொள்ளும். ஆனால் உரிமையாளர் அமைப்பில் பணத்தை போடலாம் எடுக்கலாம், இரத்த சொந்தங்களுள் அடிக்கடி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
உரிமையாளர் கடன் வாங்கி கட்டவில்லையென்றால் அவரது ஏனைய சொத்துக்களை இணைத்து கடனை வசூலிக்க வங்கிகளுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் கம்பெனிக்கு கடன் கொடுத்தால் கம்பெனியின் சொத்துக்களைத் தாண்டி இயக்குனர்களது தனிப்பட்ட சொத்துக்களை வங்கிகளால் எடுக்க இயலாது (பித்தலாட்டம் ஏதும் இல்லாமல் உண்மையாகவே தொழில் நொடித்திருந்தால்).
எந்த மாதிரியான வர்த்தக அமைப்பாக பதிவு செய்யப்பட்டாலும் அதன் பின்னால் இருக்கும் உழைப்பு ஒன்றுதான். உரிமையாளர் என்றால் கடும் உழைப்பாளி என்றோ பிரேவேட் லிமிடெட் இயக்குனர் என்றால் ஏமாற்றுப்பேர்வழி என்றோ எதுவும் இல்லவே இல்லை.
மக்கள் தங்களது தேவைக்குத்தான் பொருட்களை வாங்குகிறார்கள், நிறுவனம் வளர்வதற்காக அல்ல. அதற்கேற்ற பொருள் தயாரிக்காத நிறுவனம் காணாமல் போகும் என்பதற்கு நோக்கியா அண்மைக்கால உதாரணம்.
இதில் கார்ப்பரேட் சதி என்றெல்லாம் எதுவுமில்லை. தனிநபர் உரிமையாளர் செய்வதை கம்பெனிகளும் செய்தால்தானே வியாபாரத்தில் தாக்குப்பிடிக்க முடியும்? நம் வீட்டுக்கு அருகிலுள்ள பலசரக்கு கடைகளில் பார்த்திருக்கக் கூடும். ஐந்தாறு வாடிக்கையாளர் இருந்தால் ஒவ்வொருவராக விற்பனையை முடித்து அனுப்பாமல், என்ன வேண்டும் என்று கேட்டு அனைவருக்கும் ஒவ்வொரு பொருளை எடுத்துவந்து முன்னால் வைத்துவிட்டு, பின்னர் ஒவ்வொருவராக கவனிப்பார்கள். வாடிக்கையாளர்கள் தனக்குரிய importance அந்த இடத்தில் கிடைத்துவிட்டதாக உணர்ந்து, சிறிதுநேரம் காத்திருப்பதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
அந்தநேரத்தில் கடையிலுள்ள சரக்குகளை நோட்டம் விட்டு தனது லிஸ்ட்டில் இல்லாத ஒன்றிரண்டு பொருட்களை வாங்குவதுண்டு. இது ஒரு சாதாரண வியாபார சூட்சுமம். ஒவ்வொரு தொழிலிலும் அதற்கேற்ப உண்டு. இதே வேலையை ரிலையன்ஸ் போன்ற சூப்பர்மார்க்கெட்கள் செய்தால், பில் போடுமிடத்தில் சில பொருட்களை பார்வைக்கு வைத்திருந்தால் அது கார்ப்பரேட் சதி! என்று சமூக ஊடகங்களில் உளறி வைக்கப்படுகிறது.
அப்புறம், விவசாயத்துக்கு துளியும் தொடர்பில்லாத தொழில்களில் இருப்போரும் தங்களது சமூக அக்கறையைக் காட்டிக்கொள்ள அடிக்கடி இழுக்கும் ஒன்று மான்சாண்டோ கம்பெனியின் சதி.
விவசாயிகள் பேஸ்புக்கில் சொல்லப்படுவது மாதிரி அப்பாவி பழம் அல்லர். தங்களுக்கு என்ன தேவை என்பதை நன்றாகவே அறிவார்கள். எப்போது அப்பிராணி வேஷம் போடவேண்டும் என்பதையும் நன்கு அறிவார்கள். கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கேட்ட வாய்களில் ஏதாவது ஒன்று, அவர்களை நம்பி ஆண்டு முழுவதும் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களுக்கு ஏதாவது அரசாங்கம் செய்யவேண்டும் என்று சொல்லி கேட்டதுண்டா?
விவசாயிகளிடம் வெற்றிகரமாக விற்க இரண்டு விசயங்கள் தேவை. ஒன்று செலவையும், உடலுழைப்பையும் தாறுமாறாக குறைக்கும் மேஜிக் மாதிரியான தொழில்நுட்பம். இரண்டு, ஆட்களின் தேவையை கணிசமாக குறைக்கும்படியான தொழில்நுட்பம். இதில் மான்சான்டோ Bt பருத்தியை சந்தைப்படுத்தி பல இலட்சம் டன் பூச்சிக்கொல்லிகள் மண்ணில் கொட்டப்படுவதைத் தடுத்ததோடு விவசாயிகளின் செலவை பலமடங்கு குறைத்தது. இரண்டாவது, ரவுண்டப் (கிளைஃபோசேட்) களைக்கொல்லி; கூலி ஆட்களின் தேவையைத் தாறுமாறாக குறைத்ததோடு கோரை, அருகம்புல் போன்ற தொல்லை தரும் களைகளுக்கு தீர்வு தந்தது. அறுவடை இயந்திரங்களும் இதே வகைதான்.
இதனால் சில சமூக பிரச்சினைகளும் ஏற்பட்டன. காலங்காலமாக பண்ணையார்களிடம் கூலி வேலை செய்துவந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வேலையிழந்து நகரங்களுக்கு வேறு தொழில் நோக்கி சென்றனர். அங்கு கட்டட வேலை போன்றவற்றில் அதிக வருமானம் கண்டு, உபரி பணம் மூலமாக வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி பிள்ளைகளைப் படிக்கவைக்கவும் ஆரம்பித்தனர். இவ்வாறாக கொஞ்சம் கொஞ்சமாக விவசாயக் கூலிவேலைகள் கடைநிலைச் சாதியினரால் புறக்கணி்க்கப்படன.
பண்ணையார்கள் ஆட்களை வைத்து வேலை செய்வதைவிட இயந்திரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மூலம் அதிக இலாபமீட்ட முடியும் என்றதும் அதை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டனர். மற்றபடி விவசாயிகளை மூளைச்சலவை செய்து கம்பெனிகள் இடுபொருட்களை அவர்களது தலையில் கட்டிவிட்டனர் என்பது ஒரு வகையான மேட்டிமைத்தன விஷம பிரச்சாரம்.
ஒருகட்டத்தில் ஊர், உலகம் மாறுகிறது என்பதை உணர்ந்தவர்கள் அமைதியாக தனக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு மற்றதை ஒதுக்கிவிட்டனர். ஆனால் அந்த பழைய ஜாதி மேட்டிமைத்தனத்தை விட இயலாதவர்கள், அன்று கூப்பிட்டதும் ஓடோடி வந்து காடு கழனியில் வேலை செய்துவிட்டு கொடுத்ததை வாங்கிக்கொண்டு இருந்தவர்கள் இன்று மதிப்பதில்லை என்ற அங்கலாய்ப்பில் அதற்கான காரணத்தைத் தேடி அதை பழையபடி நிறுவ முயல்கிறார்கள்.
தமிழ்நாடு முழுவதற்குமாக மான்சான்டோவில் ஒரு பதினைந்து பேர் மாதம் 30000 - 90000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்வார்கள். இவர்களும் பிள்ளைகுட்டிகளைப் பார்த்தநேரம் போக, வாட்சப், பேஸ்புக் பார்த்தது போக எவ்வளவு பெரிய சதியை செய்துவிடமுடியும்?! இவர்களைத் தாண்டி அமெரிக்க அலுவலகத்தில் உட்கார்ந்து ஒரு பட்டனைத் தட்டி தமிழக விவசாயிகளை அடிமைப்படுத்துவது எல்லாம் பேரரசு படத்தில் மட்டுமே சாத்தியம். ஆனானப்பட்ட அமெரிக்க அரசாங்கம் ஒரு ஐபோனை உடைத்து தகவல்களை எடுக்க முடியாமல் ஆப்பிளிடம் கெஞ்சியது. இந்த இலட்சணத்தில் எல்லாவற்றிலும் CIA சதி என்றால் எப்படி நம்புவது!
மற்றபடி கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் என்றால் முகத்தில் கறுப்புத்துணி கட்டி, கோட் சூட் போட்டு, தொப்பியணிந்து இரவுநேரத்தில் மட்டுமே நடமாடி சதிகளை செயல்படுத்துவார்கள் என்றெல்லாம் ஏதுமில்லை. ஜான் பெர்கின்ஸ் எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலத்தில் சொல்லப்பட்ட மாதிரி, No Escape படத்தில் வருவது மாதிரி கார்ப்பரேட் சதிகாரர்கள் சாதாரண உடையில் வந்து நமக்கு பக்கத்தில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டே நம் ஒவ்வொரு அசைவுகளையும் நோட்டம் விட்டு பின்னர் திட்டமிடுவார்கள் என்பதெல்லாம் ஒருவகையான மனப்பிறழ்வின் அறிகுறி மட்டுமே.
எல்லா கார்ப்பரேட் கம்பெனிகளும் பலரது கடும் உழைப்பில்தான் இயங்குகிறது. ஏதாவது ஓரிரண்டு நிறுவனங்கள் கள்ளத்தனமாக பயனடைந்தன என்பதற்காக மொத்தமாக சேற்றை வாரி இறைப்பது, சேர் கண்டுபிடித்தது தமிழனை அடிமைப்படுத்தவே, வெஸ்டர்ன் டாய்லட் கண்டுபிடித்தது தமிழனை நோயாளியாக்கவே, ஜட்டி கண்டுபிடித்தது ஆண்மைக்குறைவை உண்டாக்கி மருந்து விற்கவே என்றெல்லாம் பேசுபவர்கள் மனநல மருத்துவரைப் பார்ப்பதே நல்லது. அவர்கள் தேவையில்லாத மருந்துகளை விற்க முயல்வார்கள் என்றால் வேப்பிலை அடித்து அரைஞாண்கயிற்றில் தாயத்து கட்டிக்கொள்வது நன்மை பயக்கும்.

Monday, April 17, 2017

ஒரு பஞ்சாயத்து ஓடிகொண்டிருக்கின்றது, அதாவது காமராஜருக்கு பின் அணைகளை கட்டியது யார்?
காமராஜர் அடித்து விளையாடிவர், டெல்லிவரை அவருக்கு செல்வாக்கு இருந்தது, அவர் கேட்டால் நேரு முதல் சாஸ்திரி வரை மறுபேச்சின்றி கொடுத்தார்கள், இதனால் காமராஜர் பல திட்டங்களை கொண்டுவர முடிந்தது
இந்நிலையில்தான் அண்ணாவின் ஆட்சி தொடங்கிற்று, மறைக்க ஒன்றுமில்லை, டெல்லியினை எதிர்த்து ஆட்சி செய்வது ஒரு கலை, அரசியல் அப்படித்தான். பல பிரச்சினைகளை சமாளித்து ஆள வேண்டும், மாநில அரசியலின் நிலை அது.
மத்திய அரசோடு மல்லுகட்ட வேண்டும், அதனுடன் வாதிட வேண்டும் , நிலமை முற்றினால் பிரிவினை வாதம் பேசிவிடவும் கூடாது, ஒரு மாதிரியாக கையாள வேண்டிய சிக்கல் நிறைந்தது மாநில கட்சிகளின் மாநில ஆட்சி
அண்ணா அதில் சமார்த்தியமாக தேர் நகர்த்தினார், மக்களிடம் தன் பெயர் கெடாமல் அதே நேரம் டெல்லியினை பகைக்காமல் ஆண்டார், தமிழகத்திற்கு செய்யவேண்டியதை செய்தார், தமிழ்நாடு பெயர் உட்பட‌
பின் கலைஞர் வந்தார், சும்மா சொல்ல கூடாது மதுகடைகள் திறந்ததை தவிர வேறு ஒரு குறையும் சொல்லிவிட முடியாது, கள்ளசாராய சாவுகளும் இன்னும் பல சிக்கல்களும் அவரை அதற்கு தூண்டின, மக்களின் எதிர்ப்பால் அதனை மூடும் மனநிலையில்தான் அவரும் இருந்தார்
அணை கட்டுவதில் திமுக அரசு நன்றாகத்தான் செயல்பட்டது, அணை கட்டுவது ஜெயா சமாதி போன்ற எளிதான பணி அல்ல, அதற்கு பல இயற்கை அமைப்புகள் பொருந்திவரவேண்டும்
அப்படி இல்லாவிட்டால் சிறு அணைகள்தான் கட்டமுடியும், கலைஞர் காலத்தில் அந்த அரசால் முடிந்த அளவு சிறு, பெரும் அணைகள் கட்டத்தான் பட்டன‌
கலைஞர் நிம்மதியாக ஆண்டது வெறும் 3 ஆண்டுகளே, அதன் பின் அவருக்கு நெருக்கடி பல வகையில் தொடங்கியது, இந்திரா ஒரு பக்கம் , ராமசந்திரன் ஒரு பக்கம் என கிளம்பினார்கள்
மிசா எல்லாம் அசைக்கமுடியாத கலைஞரை ராமசந்திரன் அசைத்தார், 1977ல் ஆட்சிக்கு வந்தார்
ராமசந்திரன் டெல்லி கைப்பாவை, அவர் நினைத்திருந்தால் பல நல்ல திட்டங்களை கொண்டுவந்திருக்கலாம், ஆனால் சறுக்கினார்
எந்த பெரும் தொலைநோக்கு திட்டமும் அவரிடம் இல்லை, சத்துணவு போட்டார், ஆனால் அரிசி வரும் வழி அறியவில்லை, மதுகடைகளை மறுபடி திறந்தார்,
அவர் கவனமெல்லாம் ஆட்சி, மேக் அப், தாய்குலங்களை கவர சரோஜா தேவி, லதா, ஜெயலலிதா என்றே இருந்தது
முல்லை பெரியாறு அணை மட்டத்தினை குறைத்து கொண்டது , ராஜிவ் அமைதிபடையினை அனுப்பும்பொழுது மவுனம் காத்தது, ராஜிவ் எங்களை ஏமாற்றினார் என்ற பிரபாகரனின் குரலை கண்டுகொள்ளமால் இருந்தது என ஏக சர்ச்சைகளுக்கு சொந்தக்காரன் அந்த ராமசந்திரன்
10 ஆண்டுகள் ஆண்டுவிட்டு அடுத்து ஜெயாவிற்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு மெரீனா சென்றார் நடிகர் ராமசந்திரன், அவர் மறையும்பொழுது விவசாயத்திற்கு ஒன்றும் செய்திருக்கவில்லை, விவசாயி படம் மட்டும் நடித்திருந்தார்
ஜெயா இன்னும் அகம்பாவி, சசிகலா குடும்பத்திற்கு நன்றிகடன் காட்டினார், சொத்துக்களை குவிப்பதில் அவருக்கு கவனம் இருந்தது, கூடவே 30 வயது குழந்தையினை தத்தெடுத்து அதற்கு திருமணமும் செய்துவைத்து தன்னை தானே தெரசா என சொல்லிகொண்டார்
அணை கட்டும் திட்டமோ, தொலைநோக்கோ அவரிடம் இல்லை,
ஒரு மாதிரியான அடக்குமுறை அவரிடம் இருந்தது, அதுவும் ஆட்சிபற்றி சொல்ல்விட்டால் அவதூறு என வழக்கு தொடரும் அளவிற்கு வன்மம் அவரிடம் இருந்தது, ஒரு ராணியின் மனநிலை அது..
2001ல் ஆட்சிக்கு வந்தாலும் ஜெயா திருந்தியதாக இல்லை, மன்னார்குடி குடும்பத்தில் அவர் எடுத்தமுடிவெல்லாம் வெறும் 1 மாதம் கூட தாண்டவில்லை,
பதவியில் இருந்தபொழுதே சிறைசென்ற முதல்வர் எனும் பெரும் சாதனையினை தவிர எதுவும் ஜெயா செய்ததில்லை, அதனையும் மீறி அவர் வென்றதெல்லாம் தமிழக சாபக்கேடு அல்லது ஜெயாவின் பூர்வ ஜென்ம புண்ணியம்..
1996ல் ஆட்சிக்கு வந்த கலைஞர் நல்ல விஷயங்களை செய்தார், பல அணைகள் தமிழகத்தில் கட்டபட்டன‌
குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் மட்டும் 8 அணைகள் கட்டபட்டன, அளவுகளில் வேறுபாடு உண்டு. காரணம் கைபற்ற வேண்டிய நிலங்களை தமிழக அரசால் எடுக்க முடியவில்லை, தொழிலதிபர்கள் பலம் அப்படி, மத்திய அரசின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு
இன்னும் தமிழகத்தில் பெரும் அணைகள் உருவாகாமல் இருக்க தொழிலதிபர்கள் வளைத்து வைத்திருக்கும் மலைகளும் காரணம், கேட்டால் நீதிமன்ற கதவுகளை தட்டுவார்கள்,அவர்களில் பலர் ராமசந்திரன் கட்சி என்பது குறிப்பிடதக்கது
இப்படியாக கலைஞர் டெல்லி, அதிமுக இன்னபிற அட்டகாசங்களை சமாளித்துதான் ஆட்சி நடத்தினார்
2006ல் அவர் மறுபடியும் ஆட்சிக்கு வரும்பொழுது, கலைஞருக்கு சில சோதனைகள் உள்ளும் புறமும் வந்தன, இன்னும் ஆதாரம் சமர்பிக்க முடியாத ஸ்பெக்ட்ரம் வழக்கு விஸ்வரூபமெடுத்தது, ஒரு பக்கம் மெஜாரிட்டி இல்லாமல் தடுமாறினார்
அப்பொழுதும் புதிய சட்டமன்றம், அண்ணா நூலகம், திருவள்ளுவர் சிலை என அவர் செய்ய தவறவில்லை
ஆக சுருக்கமாக இப்படி பார்க்கலாம்
கிடைத்த காலமெல்லாம் ஏதாவது ஒரு வகையில் தன் முத்திரையினை தமிழகத்தில் பதித்தது திமுக‌
தமிழ்நாடு பெயர்மாற்றம், சீர்திருத்த திருமண சட்டம், வள்ளுவர் கோட்டம், பூம்புகார், பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, எட்டயபுரம் பாரதி நினைவகம் , இன்னும் பல வரலாற்று அடையாளம் எல்லாம் அவர்கள் கொடுத்தார்கள்
அம்பேத்கர் சட்ட கல்லூரி , இட ஒதுக்கீடு, எல்லாம் அவர்கள் கொடுத்தார்கள்
சென்னை கடற்கரையில் தமிழ் அறிஞர் சிலை எல்லாம் அவர்களால் நிறுவபட்டது
சென்னை போக்குவரத்து போல எல்லா மாநகராட்சிகளும் அவர்களால் சீர்பட்டது, வள்ளுவர் சிலை வரை கலைஞர் நன்றாகத்தான் செய்தார்
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வரை அவர்கள் திட்டத்தில் குறை இல்லை..
இப்படி ஒப்பிட்டு பார்த்தால் ராமசந்திரன் ஜெயா சாதனை என்ன?
ஒரு புல்லும் புடுங்காமலே இறந்தார் ராமசந்திரன், ஒரு திட்டமும் அறிவும் அவரிடம் இல்லை, தொப்பியும் கண்ணாடியும் சிரிப்புமாகவே செத்தார், அதுதான் ஆட்சி
ஜெயா போயஸ், சிறுதாவூர், கொடநாடு என பங்களாக்களாக கட்டினார், மன்னார்குடி குடும்பம் எல்லாம் மன்னர்கள் ஆனது
கலைஞர் வள்ளுவர் கோட்டம், முதல் புதிய சட்டமன்ற கட்டடம் வரை கட்டிவைத்துவிட்டுத்தான் ஓய்ந்தார்
ஜெயா செய்ததெல்லாம் தனக்காக, கலைஞர் செய்ததெல்லாம் மாநிலத்திற்காக, உள்ளங்கை நெல்லிகனியான உண்மை இது
ராமசந்திரன், ஜெயா போல பெரும்பான்மையும், டெல்லி ஆதரவும் இன்ன பிற வசதிகளும், ஆளும் வர்க்க ஆதரவும் கிடைத்திருந்தால் கலைஞர் இன்னும் தூள்பறத்தியிருப்பார்
நல்ல பேட்டை வைத்து கொண்டு, குஜராத் ஐபில் பவுலர்கள் போல சொத்த பேட்டை வைத்துகொண்டு சிக்சர் அடிப்பதில் பெருமை இல்லை
ஓட்டை பேட்டினை வைத்து கொண்டு, அதன் உடைந்த கைப்பிடியினை பிடித்துகொண்டு நல்ல பவுலர் பந்தில் சிக்சர் அடிப்பதுதான் சாமார்த்தியம்
கலைஞர் இரண்டாம் வகை, அவருக்கு இருந்த அல்லது உருவாக்கபட்ட எல்லா சிக்கல்களையும் தாண்டி இவ்வளவு செய்திருப்பது பெரும் விஷயம்..
தமிழகத்திற்கோ, தமிழனுக்கோ ஒரு நல்ல காரியமும் செய்யாதவர்கள்தான் ராமசந்திரனும், ஜெயலலிதாவும், இன்று இல்லையென்றாலும் ஒரு நாள் புரியும், வரலாறு அப்படித்தான் பதிவு செய்திருக்கின்றது
ஒரு காலமும் அதிமுக அரசின் சாதனையுடன் கலைஞர் அரசினை ஒப்பிட முடியாது, ஏணி வைத்தாலும் எட்டாது
ஏன் ஏணியே வைக்கமுடியாது, அவ்வளவு பெரும் இடைவெளி அது

Stanley Rajan

source: https://www.facebook.com/rajarajan.rajamahendiran/posts/10207827885049676

Saturday, February 18, 2017

... ம.நடராசனின் மறுபக்கம்.........*** - ஒரு வாட்ஸாப் பகிர்வு

சசிகலாவின் கணவன் ம.நடராசனின் வாழ்க்கை வரலாறு நமக்கு தேவையற்றது எனும் போதிலும், அரசியலில் எந்தெந்த வகையில் ஈடுபட்டிருந்தார் என்று தெரிந்து கொள்வது அவசியம். ஏற்றிவிட்ட ஏணிகளான கலைஞர், ஜெயலலிதா, சந்திரலேகா மற்றும் பொதுமக்கள் என்று அனைவருக்கும் துரோகத்தையும், வஞ்சத்தையும் பரிசாக தந்த உத்தமன் இந்த நடராசன் என்பதை விளக்கவே இந்த தொகுப்பு.

1967இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவராய் இருந்த காலத்தில் பங்கெடுத்திருக்கிறார் தஞ்சையில் (மாணவர் தலைவராய் தலைமை தாங்கியதாக கூட கதைகள் உண்டு), இதற்கு பிற்பாடு சில ஆண்டுகளுக்கு பின் ஆர்.டி.ஓ. வேலைக்கு தேர்வெழுதி தோல்வியுறுகிறார்,

 (பின்னாளில், அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, "மகளிர் மேம்பாட்டில் இதழ்களின் பங்கு" என்னும் தலைப்பில் முனைவர் பட்டம் பெறுகிறார்😝). இதனிடையே,  ஆர்.டி.ஓ. வேலை கேட்டு எஸ்.டி.சோமசுந்தரம் மூலமாக முயற்சி செய்கிறார், முடியாமல் போகவே எல்.கணேசன் மூலமாக முயற்சி செய்கிறார், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டவர் என்பதால், ஆட்சியர் அலுவலகத்தில் பி.ஆர்.ஓ.என்ற பதவியை முதல் முறையாக உருவாக்கி, ஆர்.டி.ஓ. 90 பேருடன், பி.ஆர்.ஓ. என்ற பொறுப்பில் நடராசன் உட்பட்ட 11பேரை கலைஞர் மு.கருணாநிதி எழுபதுகளின் தொடக்கத்தில் நியமிக்கிறார்.

பின்னர் நடராசனுக்கும் சசிகலாவுக்கும் கலைஞரே தலைமை தாங்கி திருமணம் முடித்து வைத்தார். கடலூர் மாவட்டத்தில் அப்பொழுது ஆட்சித்தலைவர் சந்திரலேகா அவர்கள். எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வருகிறார் 77ல் வந்ததும் முதல் கையெழுத்து நடராசன் உள்ளிட்ட 11பேரின் பி.ஆர்.ஓ.பதவி நீக்க கோப்பில் தான்.  இதனால் சந்திரலேகா நடராசன் குடும்பத்தின் மேல் அனுதாபப்படுகிறார்.

பிழைப்புக்கு வழி தெரியாமல், வீடியோ கேசட்டுகளை சென்னையின் முக்கிய பணக்கார தெருக்களில் வீடு வீடாக மாலையில் கொடுத்து காலையில் வாங்கி பிழைப்பு நடத்த துவங்குகிறார் சசிகலா.

 நடராசனோ நீக்கப்பட்ட மீதமுள்ள 10பேரிடமும் பணம் வாங்கிக் கொண்டு, ஸ்டேட் ட்ரிப்யூனலில் வழக்கு தொடுக்கிறார். வழக்கில் ஆஜராகும் வக்கீலின் வீட்டு அவுட் ஹவுஸில் தங்கி, அவருக்கு குமாஸ்தாவாக காலம் கழிக்கிறார். இதுவே இந்த தம்பதியினர் சென்னை வந்ததற்கான காரணம்.

1981ல் சந்திரலேகாவை சந்தித்து உதவி கேட்கிறார்கள், அரசு விழாக்களின் வீடியோ உரிமையை பெற்றுத் தரக் கோரி. தனக்குக் கீழ் பணி செய்து வேலையிழந்தவர் என்ற அனுதாபம் இருக்கவே, எம்.ஜி.ஆரிடம் இன்னாரின் மனைவி என்று சொல்லாமல் விசயத்தை சொல்கிறார்.

 எம்.ஜி.ஆரோ, "இது கொ.ப.செ. ஜெ. முடிவெடுக்க வேண்டிய ஒன்று" என்று கூறி ஜெ.விடம் அனுப்பி வைக்கிறார். இப்படியாக ஜெ.யிடம் செல்ல, ஜெ. வீட்டுக்கும் தான் வீடியோ கேசட்டை செக்யூரிட்டியிடம் கொடுக்கும் விவரத்தை தெரிவிக்கிறார் சசிகலா.  பரிதாபப்பட்டு வீட்டுக்குள்ளேயே வந்து கொடுக்க அனுமதித்து, தினமும் பேச்சுத் துணையாக சசிகலாவை வைத்திருந்து  திரும்ப அனுப்பியவர், ஒரு தருணத்தில்  வீட்டிலேயே சேர்த்தும் கொண்டார்.

இவர்களின் ஓதுதல் கேட்டே எம்.ஜி.ஆருக்கு எதிராக சில வேலைகளை செய்தார், இந்தத் தகவல் எம்ஜிஆருக்கு தெரியவந்தவுடன் கட்சியிலிருந்து ஒதுக்கியும் வைக்கப்பட்டார் ஜெயலலிதா.

*ஜெயலலிதா கொடுத்த குடைச்சலாலும், எம்.ஜி.ஆரின் உடல்நிலை மோசமானதாலும், திமுகவோடு கட்சியை இணைத்து விடும் முயற்சியை எம்.ஜி.ஆர் எடுத்ததாகவும், அதை ஆர்.எம்.வீ., சோலை உள்ளிட்டவர்கள் தடுத்ததாகவும், அவர்களே நக்கீரன் தொடரில் சொல்லியிருக்கிறார்கள். இப்படி ஒரு சூழல் வருமென்று தெரிந்திருந்ததால் தான், அன்றே அதிமுகவை தோற்றுவித்த எம்.ஜி.ஆரே கலைத்துவிடவும் முடிவெடுத்தார்.

 தடுத்தவர்கள் பின்னாட்களில் வருந்த வேண்டி வந்தது...* எம்.ஜி.ஆரின் இறப்புக்கு பின், ஏற்பட்ட வெற்றிடத்தை பயன்படுத்தி மீண்டும் இழந்த செல்வாக்கை பெறலாம் என்று ராஜீவ் காந்திக்கு இங்குள்ள சிலர் தூபம் போட, ஜானகி தலைமையிலான ஆட்சி கலைக்கப்படுகிறது (அன்று ஆட்சிக் கலைப்பு சாதாரணமான நிகழ்வு, கலைஞர் ஆட்சி இரு முறையும், எம்.ஜி.ஆர். ஜானகி ஆட்சி தலாஒரு முறையும் கலைக்கப்பட்டிருக்கிறது).

1989 தேர்தலில் திமுக கூட்டணி 165 தொகுதிகளில் வென்றது, ஜானகி அணியுடன் கூட்டணி சேர்ந்த காங்கிரசின் திட்டம் பலிக்கவில்லை வெறும் 35தொகுதிகளையே வென்றது. இந்த வேளையில் ஜானகி அரசியலை விட்டு விலகி,  ஜெ.வுக்கு கட்சிக்குள் ஓரளவு செல்வாக்கு பெருகி, இரட்டை இலைச் சின்னமும் கிடைத்தது.

 வரவு செலவு கணக்குகளை பார்த்த ஜெயலலிதா உறைந்து போய், கோவத்தின் உச்சிக்கே சென்றார். பாதிக்கும் மேற்பட்ட பணம் கையாடப்பட்டிருந்தது நடராசனால். இதனால் கோவமுற்று, அரசியலை விட்டு விலகிப் போகப் போவதாக தெரிவித்து நடராசனையும் கார்டனை விட்டு விரட்டியடித்தார், எனினும் சசிகலா தொடர்ந்து அவருடனேயே இருந்தார்.

மிக மிக முக்கியமான காலகட்டம் இது தான், இந்த காலகட்டத்தில் தான் இலங்கை சென்ற அமைதிப்படை சென்னை வந்திறங்கி, டெல்லி சென்றது. மரபுப்படி, கலைஞர் அமைதிப் படையை வரவேற்க வேண்டும், இலங்கையில் அவர்கள் செய்த அட்டூழியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வரவேற்க கலைஞர்  செல்லவில்லை.

இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள எண்ணிய நடராசன், இதைச் சொல்லியே ஜெ. மனதை கரைத்தார்.

நடராசனுக்கு யோசனை உதித்தது, ஏற்கனவே கோவத்தில் உள்ள விடுதலைப் புலிகளை வைத்து செய்தால் என்ன என்று. இது வெறும் அனுமானமல்ல, சந்திரலேகா மூலமாக சு.சாமியிடமும்(ப்ராஜெக்ட் ப்ரோக்கர்), நெடுமாறன் மூலமாக விடுதலைப் புலிகளுடனும், ஜெ.வை ஆட்சிக்கு வர வைத்து, நேரடியாக ஆதாயம் பெறப் போகும் ஆள் தான் தான் என்ற முறையிலும், மூவருடனும் தொடர்புடைய ஒரே ஆள் நடராசன் மட்டுமே.

இதற்கான பிரதி உபகாரமாக தமிழகத்தில் ஆட்சிக் கலைப்பு செய்ய வேண்டும் என்ற உடன்படிக்கையுடன் துவங்கியது ப்ராஜெக்ட்.

*ஆட்சி கலைப்பு, விடுதலை புலிகளுக்கு (திமுகவின் நிதியை வாங்க மறுத்தவர்கள் விடுதலைப் புலிகள் என்பது குறிப்பிடத்தக்கது) இரகசியங்களை தாரை வார்க்கின்றது திமுக தலைமையிலான அரசு என்ற சப்பையான காரணத்தை வைத்து நடத்தப்பட்டது.

மீதி திட்டங்களை எல்லாம் வகுத்து, விடுதலைப் புலிகளை அணுகி கொலைக்கான ஏற்பாடுகளை செய்து விட்டு, ராஜீவையும் தமிழகம் வரவைத்தாயிற்று. திட்டம் குறித்து நாட்டில் பலருக்கும் இரகசியம் கசிந்திருந்த பொழுதும், யார் எதற்காக செய்யப் போகின்றார்கள் என்று அறியாததால், வதந்தி என்றே எண்ணியிருந்தனர்.*

ராஜீவின் வருகையை அன்றைய தமிழக ஆளுனர் பீஷ்ம நாராயண் சிங் தடுத்துப் பார்த்தார், உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி. பின்னாளில், பாதுகாப்பு சரியாக இருந்ததாகவும், அதனை காங்கிரசாரே உடைத்தாகவும் தெரிவித்தார் அன்றைய ஆளுனர். மேடையில், முக்கிய புள்ளிகள் எவருமில்லை, எல்லோருக்குமே ஏதோ அசம்பாவிதம் நடக்க இருப்பதாக தெரிந்திருந்தது, என்ன, எப்படி என்று மட்டும் தெரிந்திருக்க வில்லை. இதன் தீவிரத்தையும் அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.

அந்த கருப்பு தினமும் வந்தது, கொலைக்கு முன்னதாகவே அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரையும் தொடர்பு கொண்ட நடராசன், "இன்று இரவு திமுகவினர் அனைவருடைய இல்லங்களையும் (குறிப்பாக திமுக வேட்பாளர்களின் இல்லங்களை) இரவோடு இரவாக முற்றுகையிட வேண்டும்" என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்தார். இல்லையெனில், விடிவதற்குள்ளாகவே ராஜீவை கொலை செய்த பழி திமுக மீது எப்படி விழுந்திருக்கும்????

😭கொலையாளிகள் தேன்மொழி ராஜரத்தினம் என்கின்ற காயத்ரி மற்றும் தாணு இணைந்து மேடையேறி குண்டை வெடிக்கச் செய்தனர்.

அய்யகோ, நாட்டின் முன்னாள் பிரதமர் மற்றும் 14அப்பாவிகள் கருகிச் சிதறினர். நோக்கம் ராஜீவ் காந்தியை மட்டும் கொல்வதாக இருந்திருக்குமேயானால் துப்பாக்கியால் சுட்டிருப்பார்கள். அவர்களது நோக்கம் பெருங்கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்பதாகவும் இருந்ததாலேயே தான் குண்டு வைத்துக் கொன்றனர்.

திட்டமிட்ட படி, திமுகவினரின் வீடுகள் முற்றுகையிடப்பட்டன, திமுகவினர் தத்தமது குடும்பத்தினர், குழந்தைகள் உயிரை காப்பாற்ற ஓலமிட்டனர், கெஞ்சினர், கசியுமா வஞ்சகர்களின் மனது??? பெருங்கலவரம் மூண்டது. இத்தகைய கொடிய மனம் கொண்டவர் தான் நடராசன்.

இந்த கொலையில் தொடர்புடைய ம.நடராசன், சுப்பிரமணிய சாமி, சந்திராசாமி எல்லாம் விசாரணை வளையத்திற்குள் சிக்காதது, பெரும் விந்தை தான். நடராசன் பெயர் இதில் அடிபடக் கூட இல்லை.

நாடெங்கிலும் ராஜீவின் உடல் சிதறிய மற்றும் ஜெ.வின் தலைவிரி கோலமும் போஸ்டர்களாக ஒட்டப்பட்டன, செய்யாத குற்றத்திற்காக தண்டனையும் பெற்றது திமுக. மக்கள் யோசிக்க தவறி விட்டார்கள், தேர்தல் வேளையில் எளிதில் ஆட்சியமைக்க இருக்கும் ஒரு கட்சி எப்படி இப்படி ஒரு காரியத்தைச் செய்யும் என்று. நடராசன் போட்டு வைத்திருந்த திட்டத்தின்படி அதிமுக வென்றது, ஹிட்லராட்சி துவங்கியது. நாமெல்லாம் எண்ணியிருக்கிறோம், நம்புகிறோம், ஜெ. தான் ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொண்டிருந்தார் என்றும், சிலவற்றுக்கு காரணம் சசிகலா என்றும், அது தான் இல்லை. எல்லாமே கொலையரசன் நடராசனின் சதிச்செயல்.

1991 அதிமுக ஆட்சி அமைந்து ஆடிய ஆட்டம் மக்கள் அனைவருக்கும் தெரியும், எனினும், எப்படி எப்படியெல்லாம் அராஜகமாக நடந்து கொண்டார்கள் என்று விவரித்தால் தான் புரியும், நினைவுக்கு வரும். ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் சொந்த பலத்தில் வென்றதாகவும், ராஜீவ் கொலை செய்யப்பட்ட அனுதாபத்தால் அல்ல என்றார் ஜெயலலிதா.

 இது ஜெ.வின் குரல் அல்ல, நடராசனின் குரலை ஜெ. ஒலித்தார். பிரதமர் நரசிம்மராவ் தான் கொள்ளையர்களை அனுப்பி தமிழக அரசின் நற்பெயரை கெடுக்கிறார் என்றார்.

கொலைகொலையா முந்திரிக்கா.... அதிமுக அரசு குறித்து விமர்சித்த தராசு பத்திரிகை ஊழியர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். திருச்சி விமான நிலையத்தில் ப.சிதம்பரத்தின் வாகனத்தை 400பேர் தாக்கினர் திருச்சியை சேர்ந்த இளவரசன் என்ற அதிமுக பிரமுகர் தலைமையில். எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க ஒரு பட்டியல் தயார் செய்து கொடுத்தார் நடராசன், அதன்படி ஒட்டுக்கேட்கப் பட்டது. இவ்விரு நிகழ்வையும் தோலுரித்து எழுதிய நக்கீரன் அலுவலகத்தில் ரைடு நடத்தி மிரட்டியது நடராசன் உத்தரவின் பேரில்.

வாட்டர் கேட் ஊழல் என்று தலையங்கமிட்டு எழுதிய நக்கீரன் ஆசிரியர் உள்ளிட்ட நக்கீரன் ஊழியர்கள் மூவரை கைது செய்தது ஜெநடராசன் போலீஸ்.
இது போல பல வழிகளில் பத்திரிகையாளர்கள் மிரட்டப்பட்டனர்.

இப்படி நடராசனால் செய்யப்பட்ட ஹிட்லர் ரூலிங், ஜெ.வின் ஸ்டைலாகவே மாறிப் போனது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஆனந்தகிருஷ்ணனை வீடு புகுந்து தாக்கியது, திருத்துறைப்பூண்டி இ.கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. பழனிச்சாமியை தாக்கியது, அன்றைய பா.ம.க. எம்.எல்.ஏ. பண்ருட்டி ராமச்சந்திரனை தாமரைக்கனியை விட்டு தாக்கியது, என்று பட்டியல் நீள்கிறது.

மன்னார்குடி மாஃபியா லிஸ்ட்--------- 1)சசிகலாவின் மூத்த அண்ணன் சுந்தரவதனம், மனைவி சந்தானலட்சுமி, பிள்ளைகள் அனுராதா(தினகரனின் மனைவி), டாக்டர் வெங்கடேஷ். 2) சகோதரி வனிதாமணி, கணவர் விவேகானந்தன், பிள்ளைகள் தினகரன், சுதாகரன்(ஜெ.வின் வளர்ப்புப் பிள்ளை), பாஸ்கரன். 3)அண்ணன் வினோதகன், மகன் மகாதேவன். 4)அண்ணன் ஜெயராமன், மனைவி இளவரசி, மகன் விவேக். 5)சசிகலா, கணவன் நடராசன், நடராசனின் தம்பி ராமச்சந்திரன். 6)தம்பி திவாகரன்........

இந்த கும்பல் வைத்தது தான் சட்டம், தாக்குதல் பட்டியலை தொடர்வோம். ஜெ.அரசின் நிலக்கரி ஊழல் வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் அவர்களின் மருமகன் மீது கஞ்சா வழக்கு. திமுகவினர் மீது தடா சட்டம், டி.என். சேஷன் மீது விமான நிலையத்திலும், தாஜ் ஹோட்டலிலும் தாக்குதல் நடத்தினர் ரவுடிகள்.

நன்றிகெட்ட தனத்தின் உச்சமாக, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கீழ் இயங்கும் ஸ்பிக் நிறுவனத்தின் 26% பங்குகளை குறைந்த விலைக்கு, அதன் நிறுவனர்களான ஏ.சி.முத்தையா செட்டியார் மற்றும் எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் இருவருக்கும் கொடுப்பதை தட்டிக் கேட்ட, டிட்கோ தலைவர் சந்திரலேகா ஐ.ஏ.எஸ். மீது ஆசிட் வீச்சு (அழகுச் சண்டை வேறு காரணமாம்) இந்த முறைகேட்டால், அன்றே 40கோடி இழப்பு, அரசுக்கு. ஆசிட் வீசியது ரவுடி சுடலை என்கின்ற சுருளா, ஏவியது நத்தம் விஸ்வநாதன், நத்தத்தை ஏவியது திண்டுக்கல் சீனிவாசன், சீனிவாசனை ஏவியது மதுசூதனன், மதுசூதனனை ஏவியது சாட்சாத் நடராசனே தான். பின்னாளில் இந்த சுருளா, தன் உயிரை பாதுகாத்துக் கொள்ள, நீதிபதையையே தாக்கி, சிறைக்குள்ளேயே இருக்க முடிவு செய்கிறார்.

ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங்கை(காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டவர்) கைக்குள் போட்டுக் கொண்டு, அவர் தேவைகளை நிறைவு செய்ய, தேவாரத்தின் கீழ் பணிபுரிந்த பெண் காவலர் லால் என்பவரை நியமித்ருந்தனர். அதைக் காட்டி மிரட்டி வைத்திருந்தனர் 30/05/1993 வரை. 31/05/1993 அன்று சென்னாரெட்டி ஆளுநர் பொறுப்பை ஏற்றார், இவர்களுக்கு பெரும் குடைச்சலாக இருந்தார். ஊழல் வழக்கு தொடுக்கும் சு.சாமியின் மனுவுக்கு அனுமதி கொடுத்தார் சென்னாரெட்டி. சட்டசபையிலேயே ஆளுநர் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்று சொல்ல வைத்தனர்.

டான்சி வழக்கில் தங்களையும் பிரதிவாதியாக இணைத்துக் கொள்ள நீதிபதியிடம் திமுக கேட்க, அனுமதி வழங்கி விட்டார் நீதிபதி. இதற்காக இம்ப்ளீட் பெட்டிசன் தயார் செய்கின்றனர் அன்றைய மாநிலங்களவை உறுப்பினர் வக்கீல் சண்முகசுந்தரமும், இன்றைய மாநிலங்களவை உறுப்பினர் அய்யா ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி அவர்களும் தயார் செய்து முடித்துவிட்டு, பாரதி அய்யா வீடு திரும்பி விடுகிறார்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த ஆசைத்தம்பி என்கின்ற ரவடி தலைமையில் வந்த ரவுடி கும்பல் வக்கீல் சண்முகசுந்தரம் அவர்களை சரமாரியாக வெட்டிவிட்டு தப்புகிறது. பின்னர் அதிமுக ஆட்சியிலேயே, அந்த ரவுடி ஆசைத்தம்பி என்கவுண்டர் செய்யப்பட்டார் (விசயம் வெளியே தெரியக் கூடாதுல).

2012ம் ஆண்டு துவக்கத்தில் தமிழர் திருநாள் பண்டிகை கொண்டாடிய நடராசனின் பேச்சை இன்றைய அரசியல் நிகழ்வுடன் பொருத்திப் பார்த்தால், அதிமுகவினருக்கு கூட இவர் மேல் உள்ள சந்தேகம் வலுக்கும்.

அந்த பேச்சு:   [ இந்த விழாவுக்கு, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ணமோகன்ஜி வந்துள்ளார். இது போல், இந்தியா முழுவதும் உள்ள என் நண்பர்களை அழைத்தால் தாங்க மாட்டார்கள்; இனிமேல் அனைவரையும் அழைப்பேன். இனி, நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன். ஒன்று பழ.நெடுமாறனுக்கு கட்டுப்படுவேன்; இரண்டாவது என் மனைவிக்கு கட்டுப்படுவேன். நீங்கள், “முடிவெடு" என்கிறீர்கள். நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது. அதை மாற்றியது மக்கள். மக்கள் சக்தியை திரட்டினால் மாற்றம் வரும். வரும் எம்.பி., தேர்தலிலும் அது எதிரொலிக்கும். முடிவு எடுத்துவிடலாம். அதனால், தமிழகத்தின் பொது நலனுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது (என்ன ஒரு பொதுநலம்).

என் மனைவி மீது வழக்கு உள்ளது;(இது தான் உங்கள் பொதுநலமா???)

அதனால், பொறுமையாக இருக்கிறேன். தற்போதுள்ள இடர்பாடுகளை பார்த்து, யாரும் அச்சப்பட வேண்டாம்.

மற்றவர்களை போல் பொறுப்பற்ற முறையில் அவசரப்பட என்னால் முடியாது. “என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே… இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே!" ] இவ்வாறு நடராசன் பேசினார்.

இனி, சொந்த காரை பயன். படுத்தாமல், பொது காரை பயன்படுத்துவதாகவும், தூக்கு தண்டனையை, இந்தியாவில் ரத்து செய்ய வலியுறுத்தி, குமரி முதல் சென்னை வரை நடை பயணம் மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்தார் (இதுவரை, இந்த நான்கரை ஆண்டுகளில், அப்படி எதுவும் நமக்கு தெரிந்து நடக்கவேயில்லையே). தஞ்சை அருகே, விளார்(நடராசனின் சொந்த ஊர்) ரோட்டில் அமைக்கப்பட்டு வரும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்துக்காக, தனது கைக்கடிகாரம், பழைய கார்கள் உள்ளிட்ட உடைமைகளை, மேடையில், 45 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து, அந்த பணத்தை பழ.நெடுமாறனிடம் வழங்கினார். (ஏலம் விட்டதும் எடுத்ததும் நடராசனின் ஆட்களே....). முற்றம் தொடர்பான சிற்ப வேலைகள் செய்ய பணித்த திரைப்பட நடிகர் சைனி ஹீசைனியையும் கொன்று விடுவதாக மிரட்டினார், காவல்துறையில் புகார் கொடுத்து வைத்ததால் தப்பித்திருக்கிறார்.

ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டிய பொழுது, குடும்ப மாநாடு நடத்தி, ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற முயற்சித்த துரோகி, தீயசக்தி தான் இந்த நடராசன்.

இன்றும் தஞ்சை உள்ளிட்ட நகரங்களில், "அதிமுக எனும் இராணுவ கட்டமைப்பு கொண்ட கட்சியை வழிநடத்த, தேவை இன்னொரு அம்மா, அது தான் எங்கள் சின்னம்மா" எனும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது போஸ்டர்களில். இதில் காசவளநாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது 18கிராமங்களை உள்ளடக்கியது, இதில் தான் நடராசனின் சொந்த ஊரான விளார் கிராமமும் வருகின்றது.

இப்போ சொல்லுங்க இது யாருடைய வேலை????

அன்று முதல் இன்று வரை பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், நீதித்துறையினர்(ஆச்சார்யா உட்பட), பொதுமக்கள் என்று அனைவரும்,சொந்த நாட்டில் அடிமைகளாக கருத்து சுதந்திரம் இல்லாமல் வாழக் காரணம், இந்த நடராசன் வகுத்துத் தந்த பாதை தான்.

வேலை கொடுத்து திருமணம் செய்து வைத்த கலைஞருக்கும், இரக்கப்பட்டு ஜெ.விடம் அறிமுகப் படுத்திய சந்திரலேகாவிற்கும், ஆதரவளித்த ஜெ.விற்கும், இந்த பகட்டு வாழ்க்கை கிடைக்க காரணமான பொதுமக்களுக்கும், நடரசன் துரோகம் ஒன்றையே பரிசாக தந்திருக்கிறார்.

இந்த துரோகங்களுக்கு கிடைத்த தண்டனைகளாக, நடராசன் சிறைக் கம்பிகளை எண்ணியிருந்தாலும், இன்றளவும் ஈழ வியாபாரிகள், நெடுமாறன், வைகோ, சீமான், வேல்முருகன் போன்றவர்களை, அதிமுக சார்பு நிலைப்பாடு எடுக்க வைத்து, ஓரணியில் நிறுத்தியிருக்கிறார். இது மாபெரும் நாச வேலைக்கான, இனவாத அரசியலுக்கான அறிகுறி.

இப்படிப்பட்ட தீய சக்தி நடராசன் தான் கலைஞரை தீயசக்தி என்றும், ஜெயலலிதாவை சேடிஸ்ட் என்றும், மக்களை முட்டாள்கள் என்றும் கூறி வருகிறார்.

இப்போ சொல்லுங்க, இந்த நடராசன்(சசிகலா) கையில் அதிகாரம் செல்லலாமா???, 
 தமிழகத்தில் இவர்களுக்கு   எந்த அதிகாரமும் கிடைத்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.

*இதனை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். *Share. செய்வதன் மூலம் அனைத்து தமிழக மக்களிடமும் இதனை கொண்டு சேருங்கள்...../ பகிர்வு.

ஜெயலலிதா - ஊழல் சாம்ராஜ்யம்? ஒரு வாட்ஸாப் பகிர்வு

விரைவில் தமிழகம் விற்கப்பட்டு விடும்.நீளமாக உள்ளதே என படிக்காமல் விட்டுவிடாதீர்கள்.ஒவ்வொரு தமிழ்குடிமகனும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய தமிழக நிர்வாகம்.

மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மோசமான ஒரு ஊழல் சாம்ராஜ்யத்தை உருவாக்கி மன்னார்குடி கும்பலிடம் கொடுத்து விட்டு மறைந்து விட்டார்!
=============================================
தலைமைச் செயலகத்தில் வருமானவரித் துறை எடுத்த நட வடிக்கை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரவைத்திருக்கிறது. அரசியல் வாதிகளின் கமிஷன் ராஜ்ஜியம் அதிகாரிகளிடம் மாற்றிக் கொடுக் கப்பட்டதன் விளைவு ராமமோகன ராவ் சிக்கிக்கொண்டார் என்கின்ற ஐ.ஏ.எஸ்.வட்டாரம், ""தமிழக அரசை ஊழல்மயமாக்கியதில் அவருடன் இன்னும் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பங்கு இருக்கிறது'' என்கின்றது கைமாற்றப்பட்ட கமிஷன் ராஜ்ஜியம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கை வைத்திருந்த அந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நம்மிடம், ""2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா பொதுப் பணி, நெடுஞ்சாலை, தொழில், சுகாதாரம், உயர்கல்வி, போக்குவரத்து, பத்திரப் பதிவு, எரிசக்தி (மின்சாரம்), மதுவிலக்கு ஆயத்தீர்வை, வணிகவரி, உள்ளாட்சி, வேளாண்மை, கூட்டுறவு, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை உள்பட 20-க்கும் மேற் பட்ட முக்கிய துறைகளின் அமைச்சர்களிடம், தினமும் 20 எல் கார்டனுக்கு வந்து விடவேண்டும் என எழுதப் படாத ஒரு சட்டத்தை அமல்படுத்தியிருந்தார். மற்ற துறைகளின் தன் மைக்கேற்ப தொகை தீர் மானிக்கப்பட்டிருந்தது.
சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 14 பேரையும் கார்டனி லிருந்து ஜெயலலிதா வெளியேற்றியதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மீதும் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை இல்லை. அப் போதைய தலைமைச்செய லாளர் தேபேந்திரநாத் சாரங்கி மற்றும் தனது செயலாளர்களான ஷீலா ப்ரியா, ராமமோகனராவ், வெங்கட்ரமணன், ராம லிங்கம் ஆகியோரிடம் ஆலோசித்தார் ஜெய லலிதா. அதில், "ஒவ்வொரு அமைச்சரும் தினமும் கார்டனுக்கு தருவதைவிட இரண்டு மடங்கு சம்பாத் தியத்தைப் பார்க்கின்றனர். அவர்கள் அபரிமிதமான வளர்ச்சியடைவது பின் னாளில் உங்களுக்கு சிக்கலை உருவாக்கும்' எனச் சொல்லி, ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு கலெக்ஷன் புழங்குகிறது'' என்கிற புள்ளி விபரத்தை விவரித்தனர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். அதோடு, கமிஷனுக்கு சத வீதத்தை (பெர்சண்டேஜ்) முடிவு செய்யலாமென்ப தையும் எடுத்துச்சொன்னார் கள். அதனை வசூலித்து தரும் பொறுப்பையும் அதிகாரி களிடமே ஒப்படைத்தார் ஜெ.
ஆரம்பத்தில் 12% கடைசியில் 42%
ஒவ்வொரு துறையி லும் நிறைவேற்றப்படும் திட்டங்களில் 12 சதவீதம் என முடிவு செய்யப்பட்டது. இதில், 10 சதவீதம் கார்ட னுக்கு. அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தலா ஒரு சதவீதம். அனைத்து துறை களுக்குமான திட்டங்களில் வரும் சதவீதத்தை ராமமோகனராவ் வசூலித்து கார்டனில் ஒப்படைத்து விட வேண்டும். டிசம்பர் 2012-ல் தலைமைச்செயலாளராகவும் பிறகு அரசின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்ட ஷீலா பாலகிருஷ்ணன், இந்த கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அதேநேரத்தில், துறைரீதி யாக உள்ள நியமனங்கள், பதவி உயர்வுகள், இடமாறுதல்கள் உள் ளிட்டவைகளை அந்தந்த அமைச்சர்களே கவனிக்க வேண்டும். அதில் நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தை ஒவ்வொரு அமைச்சரிடமிருந்தும் வசூலித்து கார்டனில் ஒப்படைக்கும் பொறுப்பு ஓ.பன்னீர்செல்வத்திடம் தந்தார் ஜெயலலிதா. சசிகலா, மீண்டும் கார்டனுக்குள் வந்ததற்குப் பிறகு இந்த பொறுப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு மாற்றப்பட்டது. துவக்கத்தில் 12 சதவீதமாக இருந்த கமிஷன், கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, நடப்பு நிதியாண்டில் குறைந்தபட்சம் 25 சதவீத மாகவும் அதிகபட்சம் 42 சதவீதமாகவும் உயர்ந்து நிற்கிறது'' என்று சுட்டிக்காட்டி னார் அந்த அதிகாரி.
ராமமோகனராவின் அடேங்கப்பா வளர்ச்சி
""அனைத்து துறைகளுக்குமான டெண்டர் விவகாரங்களை கவனிக் கும் மொத்தப் பொறுப்பும் ராமமோகனராவிடம் இருந்ததால், தொழி லதிபர்கள் அனைவரும் ராவை சந்தித்தே டீலை முடித்துக்கொள்வார்கள். டீல் விவகாரங்களை முடிவு செய்வதற்காகவே தாஜ் ஹோட்டலில் நிரந்தரமாக ஒரு ரூம் அவருக்கு இருக்கிறது. இரவு 11 மணிக்கு மேல்தான் ராவுடனான தொழிலதிபர்களின் மீட்டிங் நடக்கும். திட்டங்களின் மதிப்பீட்டுத் தொகைக்கேற்ப, நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தைத் தாண்டி தனக்கென 3 சதவீதத்தை அந்த மீட்டிங்கிலேயே முடிவு செய்துகொள்வார் ராவ்'' என்கிறார்கள் தமிழக தொழில்துறையினர். பொதுப்பணித்துறையில் மணல் காண்ட்ராக்ட் விவகாரம் தொடங்கி ஒவ்வொரு துறையிலும் இவர் கோலோச்சிய டெண்டர் விவகாரங்களை மத்திய அரசுக்கு சக அதிகாரிகளே போட்டுக்கொடுத்துள்ளனர். ஜெயலலிதா அரசில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்த வேண்டும் என ஒரு கட்டத்தில் திட்டமிட்டு, அவைகளுக்கான ஆதாரங்களைத் திரட்டி அனுப்புமாறு ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் சிலரை நியமித்தது பா.ஜ.க.டெல்லி தலைமை. அந்த வகையில், பொதுப்பணி, நெடுஞ்சாலை, போக்குவரத்து, எரிசக்தி, மதுவிலக்கு, வனத்துறை, தொழில்துறை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் நடந்த டெண்டர் விவகாரங்களில் மட்டும் சுமார் ஆயிரம் கோடி லாபம் பார்த்திருப்பதாக ஆதாரப்பூர்வ தகவல்களை திரட்டியுள்ளதாம் டெல்லி.
கூட்டுப் பொறுப்பு
நம்மிடம் பேசிய புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் ஓய்வு பெற்ற அதிகாரியான புதுவை பாலு, ""ஜெயலலிதா நிர்வாகத்தில் தனி ஒரு அதிகாரி ஊழல் செய்திட முடியாது. ராமமோகனராவ் ஜெயலலிதாவின் செயலாளராக இருந்த போதும் சரி, தலைமைச்செயலாளராக இருந்த போதும் சரி ஆட்சியில் நடந்த ஊழல்களுக்கு அவர் மட்டும் பொறுப்பல்ல. அரசு ஆலோசகரான ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் செயலாளர்களான வெங்கட்ரமணன், சிவ்தாஸ் மீனா, விஜயக்குமார், ராம லிங்கம் உள்ளிட் டோரின் கண்கா ணிப்பை மீறி எந்த ஊழலும் நடந்திருக்க வாய்ப்பில்லை.அப்படிப்பட்ட ஒரு செட்- அப்பைத்தான் ஜெயலலிதா உருவாக்கி வைத்திருந்தார். அவரை கண்காணிக்க இவரையும், இவரைக் கண்காணிக்க அவரும் என்கிற செட்-அப் அது. இவர்கள் தவிர ஒவ்வொரு துறையின் செயலாளர்களும் ஊழல்களில் பங்குதாரர்கள்தான். அதனால் இது ஒரு கூட்டுப் பொறுப்பு'' என்கிறார் மிக அழுத்தமாக!
ஊழல் ராஜ்ஜிய அதிகாரிகள்
ஜெயலலிதா அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நடத்திய ஊழல் கொள்ளைகள், ஆந்திரா, தெலுங்கானா, கேரள மாநிலங்களில் ரியல் எஸ்டேட்டு களாகவும் வெளிநாடுகளில் முதலீடுகளாகவும் விரிந்துகிடக் கின்றன. 200 கோடிகளுக்கு அதிகமான அரசு திட்டங்களுக்கான டெண்டர்களில் எடுக்கப்படும் முடிவுகளின்படி ஜெய லலிதாவை சுற்றியிருந்த அனைத்து உயரதிகாரிகளுக்கும் கமிஷன் சதவீதம் சரிசமமாகவே பிரித்து தரப்பட்டது என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள். பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா, பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், வேளாண்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி, நெடுஞ்சாலைதுறை ராஜீவ் ரஞ்சன், பால்வளத்துறை நிர்வாக இயக்குநர் சுனில் பாலிவால், முதல்வரின் செயலாளர்கள் விஜயக்குமார், சிவ்தாஸ் மீனா, வணிகவரித்துறை கமிஷனர் சந்திரமௌலி, பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜி.செல்வராஜ், கணிம வளத்துறை எம்.டி.வள்ளலார் உள்ளிட்ட 40 ஐ.ஏ.ஏஸ்.கள் ராமமோகனராவின் நேரடி கட்டுப்பாட்டில் நியமிக்கப் பட்டவர்கள்தான்.
டாஸ்மாக் கமிஷன் அம்மாடியோவ்
உள்துறைச்செயலாளர் அபூர்வ வர்மாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது டாஸ்மாக். தமிழகத்திலுள்ள மதுபான உற்பத்தி ஆலைகளிலிருந்து மாதத்திற்கு 80 லட்சம் கேஸ் (12 பாட்டில்கள் கொண்ட பெட்டி) லிக்கரும் 1 கோடி பியர் பாட்டில்களையும் கொள்முதல் செய்கிறது டாஸ்மாக் நிர்வாகம். ஒரு லிக்கர் பெட்டிக்கு 60 ரூபாயும், பியர் பெட்டி ஒன்றுக்கு 35 ரூபாயும் பிரிமியர் லிக்கர் பெட்டி ஒன்றுக்கு 10 ரூபாயும் மற்றவைகளுக்கு 2 ரூபாயும் கமிஷனாக அரசுக்கு தருகிறார்கள் ஆலை தொழிலதி பர்கள். இதில், கார்டனுக்கு 60 சதவீதமும், அதிகாரிகளுக்கு 35 சதவீதமும், மந்திரிக்கு 5 சதவீதமும் பகிர்ந்தளிக்கப் பட்டுவிடும்.நத்தம்விஸ்வநாதனுக்கு ஒரு அன்புநாதன் இருந்தது போல, அபூர்வ வர்மாவுக்கும் வட இந்திய அதிகாரிகளுக்கும் மேகநாதன் என்பவர்தான் ஃபைனான்ஷியல் புரோக்கராக இருக்கிறார். மது ஆலைகளிடமிருந்து கொள்முதல் செய்யப் படும் சரக்குகளுக்கு 58 சதவீதம் வாட் வரி விதிப்பு செய்யப் படுகிறது. வணிகவரித்துறையின் விதிகள்படி இந்த வாட் வரியை பிடித்தம் செய்துகொண்டுதான் மது ஆலைகளுக்கு டாஸ்மாக் நிர்வாகம் பணத்தை செட்டில் செய்ய வேண்டும். ஆனா, வாட் வரியை பிடித்தம் செய்வதில்லை. இதனால் மாதத்திற்கு சுமார் 2,500 கோடி ரூபாய் வணிகவரித்துறைக்கு வருவாய் இழப்பு. இந்த பணத்தை 2 மாதம், 3 மாதம் ரொட்டேஷனில் விட்டுவிடுகிறார்கள் மதுபான ஆலை அதிபர்கள். இதற்காக சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை ஆலை அதிபர்கள் செமையாக கவனித்துவிடுகின்றனர். வணிக வரித்துறை அமைச்சர் வீரமணி, "எங்க டிபார்ட்மெண்டுக்கு வர வேண்டிய வரியை பிடித்தம் செய்யாமல் இருப்பது தவறு' என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு புகார் அனுப்பியும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
பொங்கும் பால்வளம்!
பால்வளத்துறையில், 2014-2016- க்கான ஃப்லிம் டெண்டர் ( பாலித்தீன் கவர் ) 250 கோடிக்கு விடப் பட்டது. கடந்த 30 வருடமாக, இந்த டெண்டரை ஓசூரில் இருக்கும் பத்மா பேக்கேஜ் மற்றும் ப்ளாசம் பேக்கேஜ் என்ற நிறுவனமே எடுத்து வருகிறது. மில்லர் தலைமையிலான போர்டில், அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டு கள் இருப்பதால் அவர்களுக்கு ஆர்ட ரை தரக்கூடாது என முடிவு எடுக் கின்றனர். அதனை சுனில்பாலிவால் நிராகரித்ததுடன், ஓப்பன் டெண்டரில் சம்பந்தப்பட்ட நிறுவனம் மட்டுமே கலந்துகொள்ளும்படி சில நிபந்தனை களை மாற்றியமைத்து அவர்களுக்கே கொடுத்துள்ளார். இதில் மட்டும் 100 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.ஷீலா பாலகிருஷ்ணனின் சப் போர்ட்டும் சுனிலுக்கு இருப்பதால் ஊழல்கள் தலைவிரித்தாடுகிறது. செங்கோட்டையன் அமைச்சராக இருந்த போது, அவரது உதவியாளராக இருந்த எழில் மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். 2006-ல் தி.மு.க. ஆட்சியின் போது அவருக்கு செய்தித்துறையில் பணியிடம் தரப் பட்டது. 2014-ல் அவர் ரிட்டயர்டு ஆனபோதும் செய்தித்துறையின் கூடுதல் இயக்குநராக 2 வருடம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.2016-ல் அந்த நீட்டிப்பு முடிந்த போது மீண்டும் 5 வருடம் நீட்டிக்கப்பட்டது. எழிலுக்கு இதனை வாங்கித்தந்தவர் வெங்கட்ரமணன். இதன் பின்னணியில், மிகப்பெரிய தொகை கைமாறியது. கேபிள் டி.வி. நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர் குமரகுருபரன், கேபிள் டி.வி.கனெக்ஷன் எண்ணிக் கையை குறைத்து காட்டி அரசுக்கு இழப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். இதன் பின்னணியில் விளையாடுவது சுமார் 90 கோடி! இப்படி மேலே குறிப் பிட்டுள்ள ஒவ்வொரு அதிகாரிகளும் அவர்கள் துறை சார்ந்த திட்டங் களில் குறைந்தது 100 கோடி ரூபாய் ஊழல்களின் பங்குதாரர்களாகவே இருக்கிறார்கள் என்று விவரிக்கிறது அதிகாரிகள் தரப்பு. 10-க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளுக்கு தனிச்செயலாளரை நியமிக்காமல் ஒருவரிடமே பல துறைகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணமும், கமிஷன் கலெக்ஷன்தான்.
கலெக்டர்களின் கஜானா
தமிழகத்திலுள்ள 32 மாவட்ட கலெக்டர் களில் கன்னியாகுமரி சஜன்சிங்சவான், திண்டுக்கல் வினய், பெரம்பலூர் நந்தகுமார், மதுரை வீரராக ராவ், திருவண்ணாமலை பிரசந்த் வாட்னேரே ஆகிய 5 கலெக்டர்கள் மட்டுமே நேரடி ஐ.ஏ.எஸ்.கள். மற்ற அனை வருமே கன்ஃப்ர்டு ஐ.ஏ.எஸ்.கள்.. இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த பட்சம் 3 வருடங்களும் அதிகபட்சம் 7 வருடங்களும் கலெக்டர்களாகவே இருக்கிறார்கள். ராமமோகனராவ், ஷீலா பால கிருஷ்ணன், வெங்கட்ரமணனின் சிபாரிசுகளில் இவர்கள் கோலோச்சு கின்றனர். வருஷத்துக்கு சுமார் 2 முதல் 3 ஆயிரம் கோடிகளுக்கான நிதியை கையாளுகிறார்கள். இதில் 25 சதவீதம் கலெக்டர்களின் சொந்த கஜானாவுக்குச் சென்றுவிடுகிறது. அங்கிருந்து அவர்களை பாதுகாக்கும் உயரதிகாரிகளுக்குப் பத்து சதவீதம்.
கவர்னரிடம் புகார்
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ஊழல்கள் குறித்து கவர்னர் வித்யாசாகர்ராவுக்கு புகார் அனுப்பி யிருக்கிறார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன். அவரிடம் நாம் பேசியபோது, ""தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு முக்கியத்துறைகள் ஒதுக்கப் படாமல் ஓரங்கட்டி வைத்திருக்கிறார்கள். கோடிக்கணக்கில் பணம் புரளும் முக்கியத்துறைகள் அனைத்திலும் வட மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகளே நியமிக்கப்பட்டு ஊழல் ராஜ்ஜியம் நடத்துகிறார்கள்.தமிழகத்திற்கு சென்றால் தடையின்றி ஊழல் செய்யலாம் என்கிற மனநிலையிலேயே தமிழகத்தை தேர்வு செய்கின்றனர். இவர்களின் ராஜ்ஜியத்தை ஒழிக்காமல் ஊழல்களை ஒழிக்க முடியாது'' என்கின்றார் வேல்முருகன். மொத்த ஊழலில் கார்டனுக்கு 60% மந்திரிகளுக்கு 5%, அதிகாரிகளுக்கு 35% என பர்சண்டேஜ் பக்காவாக பங்கு வைக்கப்படுகிறது.