Thursday, March 29, 2018

“கந்தன் கருணை”

அது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு
இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம்
அன்று ஈழத்தில் எல்லாம் புலிகளுக்கு, எது வேண்டுமானாலும் அவர்களே எடுத்துகொள்வார்கள், கேட்டால் கொல்வார்கள், அதன் பெயர் மக்களுக்கான போராட்டம்
இந்த மக்களுக்கான போராட்டத்தில் அடவாடியாக யாழ்பாணத்தில் இருந்த ஒரு செல்வந்தரிடம் இருந்து பறிக்கபட்டது “கந்தன் கருணை” என பெயரிடபட்ட பெரும் வீடு, ஒரு செல்வர்க்கானது, அவரை விரட்டிவிட்டு புலிகள் அபகரித்துகொண்டார்கள், அது புலிகுகை ஆயிற்று
அதில் மாற்றியக்க போராளிகள் சுமார் 70 பேர்வரை விசாரணைக்காக அடைக்கபட்டனர், அவர்களும் தமிழர்கள், அதே மக்களுக்காக போராட வந்தவர்கள், ஆனால் புலிகள்முன் துரோகிகள்
இவர்கள் போக புலிகளுக்கு கப்பம் மறுத்தவர்கள், எதிர்த்தவர்கள், ஆலோசனை சொன்னவர்கள், சாபமிட்டவர்கள் எல்லாம் ஆங்காங்கு அடைத்துவைக்கபட்டனர்.



இது சகோதர இயக்கங்கள் சிறைவைக்கபட்ட இடம்..
விசாரணை என்றால் ஒன்றுமல்ல, அந்த மாற்றுகுழுவின் தலைவன் எங்கிருக்கின்றான், ஆயுதம் எங்கிருக்கின்றது என போட்டு அடிப்பது, சித்திரவதை செய்து அடிப்பது, இதன் பொறுப்பாளர் பொட்டு அம்மான், அவருக்கு கீழே பல அடியாட்கள் உண்டு
இந்த வீட்டிற்கு காவலாக வந்தவன் அருணா எனும் புலி
இந்த அருணா முன்பு பிரபாகரனுடன் இருந்தார், பின் சண்டையில் சிங்களபடையிடம் பிடிபட்டான், பின் சந்திரிகாவின் கணவரின் முயற்சியில் யுத்த கைதிகள் பறிமாறியபொழுது மறுபடி புலிகளோடு வந்தார்
பிரபாகரன் தன் நிழலையும் சந்தேகிப்பவர், இந்த அருணாவிற்கு சிங்களன் ஏதும் சொல்லி அனுப்பியிருக்கலாம் என அருகில் சேர்க்கவே இல்லை, ஒரு அல்லக்கை போல அலைந்தார் அருணா
தினமும் அந்த சிறைபட்ட போராளிகளை போட்டுசாத்துவது அவரின் அன்றாட பணி
அன்றைய காலகட்டத்தில் புலிகளுக்குள் அதிகாரபோட்டி நிலவியது, பிரபாகரன் தமிழகத்தில் இருக்கும்பொழுது புலிகள் கட்டுபாடு கிட்டுவிடம் இருந்தது, கிட்டுவிற்கும் மாத்தையாவிற்கும் ஆகாது
பிரபாரனுக்கோ கிட்டு மீது ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது, அவர் அப்படித்தான்
இந்நிலையில் தன் காதலியினை பார்க்க சென்ற கிட்டுவின் மீது குண்டு வீசபட்டு காலினை இழக்கின்றார்.
இதே கிட்டு முன்பு சிங்கள வீரனின் காலை குண்டுவீசி துண்டித்ததும், பின் அந்த காலை நல்லூர் கந்தசாமி கோவில் வாசலில் வீரசாட்சியாக ரத்தம் சொட்ட சொட்ட காட்சிக்கு வைத்த காலமும் உண்டு
கோவில் வாசலில் இப்படி செய்யாதீர்கள், இது ஆண்டவனுக்கே அடுக்காது என பலர் சொன்னபொழுது கிட்டு அவர்களை துப்பாக்கி முனையில் விரட்டிய காலமும் உண்டு
தெய்வம் நின்று குண்டு வீசியது..
குண்டை வீச திட்டமிட்டதும், வீசியதும் புலிகளின் உட்கட்சி விவகாரம், அதில் பல மர்மம் உண்டு, பிரபாகரனின் நண்பன் மீது கைவைக்க பிரபாகரனின் அனுமதி இன்றி எப்படி? என்ற சர்ச்சை அன்றே உண்டு
ஆனால் அது வேறு யாரோ வீசியது என கதை கட்டினார்கள் புலிகள், விஷயம் அருணா காதுக்கும் சென்றது
அவ்வளவுதான் ஆங்கில படங்களில் வரும் ஹீரோ போல (புலிகளுக்கு அடிக்கடி ஆங்கில யுத்தபடம் காட்டபடுவதுண்டு) இரு மெஷின்களை கையில் எடுத்து கந்தன் கருணை இல்லம் புகுந்தான் அருணா
அந்த கொடூரம் அரங்கேறிற்று
அங்கு இருந்த கைதிகள் மீது சுட தொடங்கினான், அவர்கள் அலறினார்கள், கதறினார்கள், காலில் விழுந்து அரற்றினார்கள், சிலருக்கு வாயிலே சுட்டான் சண்டாளன்
மாடிக்கும் தளத்திற்க்கும் ஓடி ஓடி சுட்டான், அவன் களைத்ததும் அடுத்தவனை அழைத்டு சுட சொன்னான், சிலர் உயிர்தப்ப சமையலறை போன்ற இடங்களில் பதுங்கிகிடந்தனர்
எண்ணி எண்ணி தேடினர், தப்பியவர்களை கண்டனர், அழைத்து வைத்து சுட்டனர்
அவர்கள் நிலை எப்படி இருக்கும் என எண்ணிபாருங்கள்?, யார் இந்த அநியாயத்தை கேட்க, தடுக்க முடியும்? ஒருவரும் இல்லை
ஏராளமான அப்பாவி போராளிகள் காரணமின்றி உயிர்விட்டனர், அவர்கள் செய்த தவறென்ன? போராட வந்தது, தமிழீழம் அமைய சிங்களனுக்கு எதிராக துப்பாக்கி ஏந்தியது
இன்னும் கொடூரமாக அரைகுறை உயிரோடு இருந்தவர்களை தலையிலே சுட்டு கொன்றார்கள், ஒருவன் மட்டும் தப்பினான்
அவன் சொன்ன சொல்தான் மானிட அவலத்தின் உச்சம்.
எல்லோரும் சாகும் பொழுது ஆடு அறுக்கும்பொழுது வரும் சத்தம் போலவே முணகி செத்தார்கள், என்னால் அதிலிருந்து மீளமுடியவில்லை
இவ்வளவு கொடூரம் நடந்தபின் , அவர்களை சாவாகசமாக கொண்டு எரித்துவிட்டு வந்தனர் புலிகள்
விஷயம் லேசாக கசிந்தபொழுது புலிகள் அலட்டிக்கொள்ளாமல் சொன்னார்கள் “அவர்கள் தப்ப முயன்றதால் நடவடிக்கை எடுக்கபட்டது, இருவர் மட்டும் பலி”
எப்படி இருக்கின்றது? இதுதான் புலிகள் நடத்திய போர், சொந்த மக்களையே கொன்று குவித்த சாகசம், தியாகம்,வீரம் இன்னபிற‌
இன்று சிங்களனிடம் சரண்டைந்த புலிகளை காணவில்லை, அதனால் ரஜினி போக கூடாது என திருமாவும் இன்னும் சிலரும் ஒப்பாரி வைக்கின்றனர்
அன்று புலிகளிடம் சரணடைந்த தமிழர்களும் இப்படித்தான் காணாமல் போனார்கள்
இந்த விவகாரம் அப்படியே அடக்கபட்டு பின் புலிகள் யாழ்பாணத்தை போட்டு ஓடிய பின்பே வெளிவந்தது,
தண்ணீர் லாரியில் வெடிகுண்டு நிரப்பி தாக்குவது அவர்கள் ஸ்டைல், ஒரு நாள் அது குடியிருப்பு அருகே வெடித்தது 50 தமிழர்கள் அங்கேயே செத்தர், புலிகள் ஜஸ்ட் டெக்னிக்கல் பால்ட் என சொல்லிவிட்டு சென்றனர், இப்படி ஏராள சம்பவம் உண்டு
இந்த படுகொலை சம்பவம் பாருங்கள், போராட வந்ததும் தமிழர்கள், சிறைபிடித்தவனும் சிறைபிடிக்கபட்டவனும் தமிழன், கொன்றவனும் தமிழன், கால் போனவனும் தமிழன், அவன் காலை உடைத்தவனும் தமிழன்..
இப்படி நடந்ததன் பெயர்தான் ஈழமக்களுக்கான போராட்டம்
கந்தன் கருணை மாதிரியான‌ ஏராள சம்பவங்கள் உண்டு, கொஞ்சம் ஆழமாக பார்த்த்தால் சிங்களனை விட அதிகமான தமிழர்கள் புலிகளால் பாதிக்கபட்டிருக்க்கின்றார்கள்
இதனை எல்லாம் நாம் சொன்னால் துரோகி
இப்படி மக்களின் வீட்டை அபகரித்து புலிகள் செய்த அட்டகாசம் கொஞ்சமல்ல, பணம், வீடு, சொத்து , குழந்தைகள் என எதனை அவர்கள் விட்டார்கள்?
அப்படி மக்களின் வீட்டை அபகரித்துகொண்டு சிங்கள படையினை தாக்குவார்கள், அவன் திருப்பிதாக்குவான் வீடு இடியும் புலிகள் அவர்கள் போக்கிற்கு ஓடுவார்கள்
அந்த வீட்டை கட்டிகொடுக்கும் விழாவிற்குத்தான் ரஜினி செல்ல இருந்தார், அதற்குள் திருமா கும்பல் பொங்கிற்று
இந்த கந்தன் கருணை சம்பவம் எல்லாம் சொல்வார்களா என்றால் சொல்லமாட்டார்கள்.
“கந்தன் கருணை” படுகொலை ஒரு எடுத்துகாட்டு, அது வெளிவந்தது
அதனைபோல வெளிவராத கொடூரங்கள் ஏராளம் உண்டு
அந்த அருணா என்ன ஆனான்?
பின் இந்திய அமைதிபடை சென்று அவனை சுட்டு கொன்றது, இதுதான் இந்திய அமைதிபடை இலங்கையில் செய்த அட்டகாசம்..
கிட்டு என்ன ஆனான்?
மிக தந்திரசாலி என தன்னை எண்ணிய அவன் அமைதிபடை காலத்தில் இந்திய நண்பன் போல நடித்து, ராஜிவ் கொல்லபடுவதற்கு கொஞ்ச நாளைக்கு முன்பு டெல்லியில் சென்று பார்க்குளவு இந்தியாவின் மதிப்பினை பெற்றான்
1987பிரபாகரனுக்கு குண்டு துளைக்காத சட்டையினை பரிசாக கொடுத்த ராஜிவ், கொல்லபடுவதற்கு கொஞ்ச‌ நாட்களுக்கு முன்பாக அவனை டெல்லியில் கார் வரை வந்து வழியனுப்பினார்.
அந்த அப்பாவி தலைவன் அப்படி எல்லோரையும் நம்பி செத்திருக்கின்றான்
அந்த கிட்டு கொடுத்த நம்பிக்கையே புலிகளால் தனக்கு ஆபத்து இல்லை என அவரை நம்ப வைத்து, தைரியமாக சென்னைக்கு வரவழைத்தது
அப்படிபட்ட நயவஞ்சக கிட்டுவினை இந்திய கடற்படை கப்பலோடு கொன்றது
ஆக அப்பாவி தமிழர்கள் சாக காரணமான‌ கந்தன் கருணை சம்பவத்திற்கு காரணமான அருணாவினையும், கிட்டுவினையும் தண்டித்தது சிங்களனோ, பிரபாகரனோ அல்ல‌
மாறாக இந்தியா
இப்படி பெரும் துரோகம் செய்தது இந்தியா, நம்பிகொள்ளுங்கள்
இந்த கந்தன் கருணை இல்லம், சொந்த மக்களின் மேலே புலிகள் நிகழ்த்திய கொடூரத்திற்கு சுவடாய் இன்னும் அங்கே நிற்கின்றது
நிச்சயமாக அது ஒரு நினைவிடம், பெரும் அடையாளம், புலிகளின் காட்டுமிராண்டி தனத்தின் ஆறா தழும்பு..

Tuesday, March 27, 2018

NRI தமிழர்களையும், புலம்பெயர்தமிழர்களையும் generalize செய்யலாமா

NRI தமிழர்களையும், புலம்பெயர்தமிழர்களையும் generalize செய்யலாமா எனக் கேட்கிறார்கள். நான் generalize செய்யவில்லை. ஆனாலும் விமர்சிக்கவே கூடாதென்று இலங்கையிலும், வேறு நாடுகளிலும் வசிக்கும் பெரியாரிஸ்டுகளில் சிலர் என்மேல் கோபப்படுகிறார்கள். நிற்க. இவர்களைப் பொறுத்தவரை என் பார்வை ஒன்றே ஒன்றுதான். பண்டைய ரோமில் அடிமைகளை சாகும்வரை புலிகளோடு மோதவிடும் கிளாடியேட்டர் சர்க்கஸ் நிகழ்ச்சிகளை பரணில் அமர்ந்து பார்த்து குதூகலித்த மக்களைப் போல இவர்களில் பெரும்பான்மையினர் தமிழ்நாட்டு அரசியலைப் பார்க்கிறார்கள். காலம்காலமாக அதுதான் நடக்கிறது என்றாலும், 2009க்குப் பிறகு தமிழ்நாட்டு அரசியல்/அறிவு/சமூகச்சூழலை நிர்மூலமாக்க இவர்கள் வாரி இறைத்திருக்கும் தொகை கொஞ்சநஞ்சமல்ல. இன்றும் தாலியில் மேக்னட் உள்ளது, மிஞ்சியில் அணு ஆயுதம் உள்ளது, சீமான் முதல்வர் ஆகிவிடுவார் போன்ற மூடநம்பிக்கைகளைப் பரப்பும் பல, "நம்மில் எத்னி பேருக்கு தெரியும்," வகை முகநூல் பக்கங்கள் இவர்களால் ஸ்பான்சர் செய்யப்படுகின்றன. இயக்குனர் சமுத்திரக்கனி பெயரில் முட்டாள்த்தனமான கருத்துக்களைப் பரப்பும் பல லட்சம் ஃபாலோயர்களைக் கொண்ட ஒரு போலி பக்கத்துக்கு எங்கேயிருந்து ஃபண்ட் வருகிறது எனப் பார்த்தால் இலங்கையில் இருந்து வருகிறது!! இதுபோல் பல நூறு பக்கங்கள் உண்டு. ஒரு தலைமுறையையே அறிவுக்குருடர்கள் ஆக்கும் வகையில் வாட்சப்களில், முகநூல் பக்கங்களில் காணொளிகளைப் பரப்புவதில் முதல் ஆளாக ஆர்வம் காட்டுகிறார்கள். இன்று தமிழ்நாட்டில் ஆங்காங்கே மேடை போட்டுக்கொண்டு 1800களைப் போல கிறுக்குத்தனமாக பேசிக்கொண்டிருக்கும் ஆட்கள் அத்தனை பேரும் சிலோன் தமிழர்களாலும், ஈழத்துக்காக போராடுகிறேன் என்கிற பெயரில் வெளிநாடுகளில் அமர்ந்துகொண்டு இங்கிருக்கும் fraudகளுக்கு fund செய்யும் உணர்வாளர்களாலும் வளர்த்துவிடப்பட்டவர்கள்.
நடைமுறையை புரிந்துகொண்டு, தமிழக அரசியலைப் புரிந்துகொண்டு இணக்கம் காட்டும் புலம்பெயர்த்தமிழர்கள் பலர் உண்டு. ஆனால் 3% மட்டுமே இருக்கும் பார்ப்பனர்களில் 3% பேர் மட்டுமே எப்படி திராவிட இயக்கத்தின் நியாயத்தை புரிந்துகொண்டவர்களாக இருக்கிறார்களோ, அதேபோல சொற்பத்திலும் சொற்பமாகத்தான் இவர்கள் இருக்கிறார்கள். எப்படி இங்கிருக்கும் பாரிசாலன் வகையறா இளைஞர்களிடம் பேசும்போது அயர்ச்சியும், அதிர்ச்சியும் ஏற்படுமோ, அதுபோலவேதான் பல வளர்ந்த நாடுகளில் வசிக்கும் சிலோன் தமிழர்களிடம் பேசும்போதும் இருக்கிறது. கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்கள் உள்நுழைவது குறித்த ஏதோ ஒரு விவாதத்தில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிலோன் தமிழர் ஒருவர் கேட்கிறார், "நீ கு** கழுவாம உள்ள போனீனா அவன் எப்படி விடுவான்?" என்று!! தமிழ்நாட்டில் பார்ப்பனர்களோ, தீட்சிதர்களோ கூட இப்படியெல்லாம் மடத்தனமாக காரணம் சொல்லமாட்டார்கள். அந்த இழை மட்டுமல்ல இதுபோல் அவர்களுக்குள் நடக்கும் ஏனைய விவாதங்களை நான் பார்த்திருக்கிறேன். இப்படியாகப்பட்ட சமூக அறிவுடன் சுற்றும் இவர்கள்தான் தமிழ்நாட்டை யார் ஆண்டால் நன்றாக இருக்கும் என்றும், திராவிடம் என்பது தமிழ் விரோதம் என்றும், தமிழ்நாட்டில் மாற்று அரசியல் வேண்டும் என்றும் இன்னொருபக்கம் விவாதம் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் 3% பேருக்கு பெரியார் பிரச்சினையாக இருக்கிறார் என்றால், அங்கே 97% பேருக்கு பிரச்சினையாக இருக்கிறார் என்பதுதான் உண்மை.
இப்படியான விவாதங்களைக் கண்டு குமுறும் முற்போக்கு ஈழத்தமிழர்கள் கூட அவர்களுடன் பொதுவெளியில் மோத ஏனோ தயாராக இல்லை! ஆனால் என் போன்றவர்களுடன் மோதவோ, என் போன்றவர்களை விமர்சிக்கவோ ஆளுக்கு முன்னால் நிற்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சிலோன் தமிழர்களில் பெரும்பான்மையினர் தமிழகத்தமிழர்களை எவ்வளவு தாழ்வாக பார்க்கும் மனநிலையைக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுடன் பழகுகின்றவர்களுக்குத் தெரியும்.
நான் மேலே சொன்னதைப் போல யாரையும் பொதுமைப்படுத்தவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் 3% மக்களின் மீதான என் வேதனையை தெரிவித்ததைப் போலவே, வெளிநாடுகளில் வாழும் 97% மக்களின் மீதான என் வேதனையை தெரிவித்தேன். அதுவே வலிக்கிறது என்றால், மருந்திட்டுக்கொண்டு மாற வேண்டியது நீங்கள்தான். நானில்லை.

Monday, March 26, 2018

ராகவன் கோபம் நியாயம்! -- சுப. வீரபாண்டியன்

ராகவன் கோபம் நியாயம்!
                                 --------------------------------------------
                                                   -சுப. வீரபாண்டியன்

பாஜக செயலாளர்களில் ஒருவரான திரு கே.டி. ராகவன் அவர்கள், தொலைக்காட்சிகளில் பேசும்போது, தந்தை பெரியார் அவர்களை, ஈ.வி. ராமசாமி என்றுதான் குறிப்பிடுவார். கலைஞரைக் கூட, கலைஞர்  என்று குறிப்பிடுவார். ஆனால் பெரியாரை மட்டும் அப்படிக் கூறவே மாட்டார். திரு ஹெச்.ராஜாவும் அப்படித்தான்.  அது குறித்து நம் நண்பர்கள் சிலர் தேவையில்லாமல் கோபப்படுகின்றனர். இது தேவையற்றது. அய்யாவின் பெயர் ராமசாமிதானே! அவர் பெயரைச் சொல்லி அவரை அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

அப்படியானால், சங்கராச்சாரியார்களை,  ஜெயேந்திரன், விஜேயேந்திரன் என்று அவர் பெயர் சொல்லி அழைப்பதில்லையே என்கின்றனர். தேவையில்லை, அது அவரவர் விருப்பம்.  நாம் பெரியாரால் பயன் பெற்றோம். அதனால் அவரை அப்படி அழைக்கின்றோம். அவர்கள் சங்கராச்சாரியார்களால் பயன் பெற்றார்கள். எனவே அவர்கள் அப்படி அழைக்கின்றனர்.

அவர்கள் பெரியாரால் பயன் பெறவில்லை என்பது மட்டுமில்லை. தாங்கள் பெற்றிருந்த சமூக அதிகாரத்தையும், பாவம்,  இழந்தார்கள். அந்தக் கோபம் அவர்களுக்கு  இருக்கத்தானே செய்யும். நினைத்துப் பாருங்கள் என் தாத்தா அவர் தாத்தாவைச் 'சாமி' என்றுதான் அழைத்திருப்பார். அவர் தாத்தாவைப் பார்த்ததும் என் தாத்தா, துண்டை எடுத்துக் கக்கத்தில் வைத்திருப்பார்.

ஆனால் இன்றோ, நான்  அவரைச் சாமி என்று அழைப்பதில்லை. நண்பர் ராகவன் என்று அழைக்கிறேன். அவருக்குச் சமமாக ஒரே இருக்கையில் அமர்கிறேன். இதுவெல்லாம் அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தத்தானே செய்யும்! பெரியார் மாதிரி ஒருவர் பிறக்காதிருந்தால், திரு ராகவன் சோபாவில் அமர்ந்திருக்க,  இந்நேரம் நானும், அருள்மொழி போன்றவர்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தரையில் அமர்ந்துதானே வாய்பொத்திப் பேசியிருப்போம். தொலைகாட்சி நெறியாளரும், அவாளாக இல்லையென்றால்,    எங்கள் பக்கத்தில் தரையில்தான் அமர வேண்டியிருக்கும்!

அந்தக் காலமாக இருந்தால், ராகவன் என்னைப்  பார்த்து, வயது வித்தியாசம் எல்லாம் ஒரு பொருட்டென்று கருதாமல், "என்னடா அம்பி வீரபாண்டியன்,எப்படியிருக்கே?' என்றுதானே கேட்டிருப்பார். இப்போது 'அண்ணன் எப்படியிருக்கீங்க?' என்று அன்போடு (?) கேட்கிறாரே! இத்தனை மாற்றங்களுக்கும் இந்தப் பெரியார்தான் காரணம் என்கிறபோது, அவருக்குக் கோபம் வரத்தானே செய்யும்? அதில் என்ன தவறு?

இவ்வளவு சமூகப் பெருமைகளையும் தாங்கள்  இழப்பதற்குக்   காரணமாக இருந்த ஒருவரைப் போய் அவர் பெரியார் என்று அழைக்க வேண்டும் நாம் எதிர்பார்ப்பது வன்முறை இல்லையா? ஆனாலும் என்ன ஒரு பெரிய இடைஞ்சல் என்றால். நம் அய்யாவின் பெயரிலேயே 'சாமி' இருக்கிறது. அதனால் வேறு வழியின்றி. நம் அய்யாவை அவர்கள் இப்போது சாமி, சாமி என்று அழைக்க வேண்டியிருக்கிறது. அதனையும் விட்டுத் தொலைக்க ஏதேனும் வழி கண்டு பிடித்து விடுவார்கள்.

ராகவன் கெட்டிக்காரர், புத்திசாலி. எப்படியாவது இந்தப் பெயரை ஒலிக்காமல் இருக்க ஒரு வழி கண்டுபிடித்து விடுவார். இல்லையானால், சாமி என்று அழைப்பதை விட, பெரியார் என்றே  சொல்லித் தொலைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தாலும் வந்துவிடுவார்.

அவர் உடல்மொழியில் ஓர் ஆணவம் இருக்கிறது. கேலியும், கிண்டலுமாகப் பேசுகின்றார் என்கின்றனர். எல்லாவற்றையும் இழந்துவிட்ட பிறகு, அவைகளைக் கூட அவர்  வைத்துக் கொள்ளக் கூடாதா? இதெல்லாம் என்ன நியாயம்? அவர் மனநிலையை, அவர் கோபத்தை, அவர் பக்கம் உள்ள நியாயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தங்கள் தாத்தா காலத்தில் இருந்த நிலைமை, மீண்டும் தங்கள் பேரன்கள் காலத்திலாவது வந்துவிடாதா என்று அவர்கள் ஏங்குகின்றனர். அந்த ஏக்கம் அவர்களுக்கு இருக்கக் கூடாதா என்ன?

சரி, ராமரவி என்று ஒருவர் வேறு ராமசாமி நாயக்கர் என்று தொலைக்காட்சிகளில் பேசுகிறாரே, அது ஏன் என்று கேட்கின்றனர். ஐயோ அவர் ஒரு அப்பாவி, நம் பிள்ளை அவர். நாய்க்கர் என்பது ஆள் பெயரா, சாதி பெயரா என்று கூடத் தெரியாமல், விவாதங்களில் விழிக்கின்றார். அவர் விழிப்பதில் இருந்தே தெரியவில்லையா, அவர் நம் பிள்ளை என்று. நண்பர் ராகவனிடம் இருப்பது போல, ராமரவியிடம் அந்த எள்ளல், ஏகடியம் எல்லாம் இருக்கிறதா பாருங்கள். ஏதோ உணர்ச்சி வயப்பட்டு அல்லது வயப்பட்டதைப் போல ஒரு தோற்றம் இருக்கும், அவ்வளவுதான். உண்மையில் ராகவன் கோபத்தில் இருக்கும் நியாயம், ராமரவி கோபத்தில் இல்லை.அதில் ஒரு நன்றியுணர்ச்சி மட்டும் குறைகிறது. மற்றபடி தப்பு ஏதும் இல்லை.

"கணவனை இழந்ததாலே கண்ணகி கோபம் நியாயம்" என்பார் கவிஞர் தணிகைச் செல்வன்.  அனைத்தையும் இழந்ததால், ராகவன் கோபம் நியாயம், நியாயம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

இருக்கட்டும், சங்கராச்சாரியார் போன்றவர்களால்தானே நாம் சமூக இழிவைப் பெற்றோம். அப்படியிருக்க, நண்பர் ராகவனைப் போல,  நீங்களும் அவர்கள் பெயர்களைக் குறிப்பிடும்போது, சங்கரன், விஜேயேந்திரன் என்று குறிப்பிட வேண்டியதுதானே, பாரதியார் என்று ஏன் சொல்ல வேண்டும், அவர்களைப் போலவே கவிஞர் சுப்பிரமணி என்று சொல்ல வேண்டியதுதானே என்று நண்பர்கள் கேட்கின்றனர். அது எப்படி முடியும்? நாம் நாகரிகம் தெரிந்தவர்களாயிற்றே!
#KTRagavan #BJP

Friday, March 23, 2018

நானும் ஒரு இந்து

பிராமணனைப்போல்
நீயும்
இந்துதானே..

அவன்
உனக்கு எப்போது வாடகைக்கு வீடு கொடுக்கிறானோ
அப்போது சொல்,
நானும் ஒரு இந்து என்று,

உன் வீட்டுக்குவந்து நீ சமைத்த உணவை
எப்போது
உளப்பூர்வமாக உண்ணுகிறானோ
அப்போதுசொல்
நானும் ஒரு இந்து என்று,

உன் உரிமைக்காக
உன் போராட்டத்தில் எப்போது அவன் கைகோர்க்கிறானோ
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,

கோவிலின் கருவறைக்குள்,
நீயும் அவனும் எப்போது
ஒன்றாக நின்று
அர்ச்சனை செய்கிறாயோ அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.

அவனை
தமிழில் மந்திரம் சொல்லவைக்க
தெம்பும் திரானியும்
உனக்கு எப்போது வருகிறதோ
அப்போது சொல்
நானும் இந்து என்று.

நீ பூசாரியாக இருக்கும் கோவிலுக்கு,
அவன் எப்போது குடும்பத்தோடு வந்து
நீ கொடுக்கும் திருநீரை
அவனின் நெற்றியில்
பூசிக்கொள்கிறானோ..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,

எப்போது அவனும்
உன்னோடு சேர்ந்து
சிலைகளை உடைக்கிறானோ அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,

அவன் எந்த மாநிலத்துக்குப்போனாலும்..
இந்து பிராமணன்தான்.

நீ
எந்தமாநிலத்துக்குப்போனாலும் தமிழன்தான்.

உன்னை தமிழனாகமட்டும் பார்க்காமல்,
பிறமாநிலத்தவனும்
பிராமணனைப்பார்ப்பதுபோல்..
உன்னையும்
இந்துவாக பார்த்தால்
நடத்தினால்..
அப்போது சொல் நானும் ஒரு இந்து என்று.

மாநில கோர்ட்டுகளிலேயே மல்லுக்கட்டுகிறாயே
உன்னாலும் சுப்ரீம் கோர்ட்
நீதிபதியாக முடியும்
என்றால்..
உன்னை வரவிடுவார்களென்றால்..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,

உன்னால் உன் மகனால்..
இந்திய கிரிக்கெட் அணியில் நுழைய முடிந்தால்..
உன்னையெல்லாம் நுழைய
விட்டால்..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.

உன்னால்..
அவர்களால்
நியமிக்கப்படும்
ஜனாதிபதியாகத்தான்முடியும்.
ஆனால்,
ஒரு
ஜனாதிபதியையே நியமிக்கும்,
பிரதமராக
உன்னால் வர
முடியும் என்றால்..
அப்போது சொல் நானும்
ஒரு இந்து என்று.

இரண்டுபேரும்
இந்துக்கள்தானே..
உன்வீட்டுக்கல்யாணத்தை,
அவன் நடத்திவைப்பதைப்போல..
சாஸ்த்திர சம்பிரதாயங்களை
நீயும் கற்றபின்...
அவன் வீட்டு கல்யாணத்தை நீ..
நடத்திவைக்க
அவன் அனுமதித்தால்..
அப்போது
சொல்
நானும் ஒரு இந்து என்று.

இயல் இசை நாடக சபையில்,
உன்னையும் மனிதனாக மதித்து,
உன்னையும் தலைவனாக ஏற்றுக்கொண்டால்.
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.

மத்திய அரசு வங்கிகளில்..
தமிழ்நாட்டில்
விண்ணப்பங்களை
தமிழிலேயே அச்சடித்தால்..
அப்போது சொல்
நானும் இந்து என்று.

காவிரி நீரை எப்போது
சமமாக தருகிறானோ..
நதிநீர் பங்கீட்டுப்போராட்டத்தில்..
உன்னோடு பிராமணனும் எப்போது
கலந்து கொள்கிறானோ..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,

விவசாயிகளின் போராட்டத்தில் எப்போது அவன் கலந்துகொள்கிறானோ
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.

நீட் தேர்வுக்கு எதிரான
போராட்டத்தில் எப்போது
அவனும் கலந்து கொள்கிறானோ அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,

நீதான்
நான்தமிழன்
நான்தமிழன் என்கிறாய்.
அவன் எப்போதாவது சொல்கிறானா.
அவனும்
தன்னை தமிழன் என்று
எப்போது ஒப்புக்கொள்கிறானோ
அப்போது சொல்
நானும் இந்து என்று.

நாரதகான சபையில்
முறையாக சங்கீதம் கற்றும்
உன்னை பாட
அனுமதித்தால்..
அவர்கள் பார்வையாளராக
அமர்ந்தால் அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,

உன்னால்..
சங்கரமடத்தில் சங்கராச்சாரியாரோடு
சரிக்குசமமாக
சம்மணமிட்டு
அமரமுடிந்தால்..
அப்போதுசொல்
நானும் ஒரு இந்து என்று.

இந்து அறநிலைய கோவில்களில்
காசுவாங்காமல்..
உன்னை கருவறைக்குள் விட்டால்,
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.

அடித்தட்டு மக்களின்
வரிப்பணத்தில்
மருத்துவம் படித்துவிட்டு,
ஊசி போட..
அமெரிக்காவுக்கு ஓடுபவனை,
தடுத்துநிருத்தியபின்
சொல்
நானும் ஒரு இந்து என்று.

ஒவ்வொரு அலுவலகத்திலும்
அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து,
மற்றவர்களை மட்டம்
தட்டுகிறார்களே..
அதை அவர்கள் நிறுத்தியபின் சொல்
நானும் ஒரு இந்து என்று.

பயணங்களில்..
நீ கீழ்தட்டுவர்க்கம்
என்று தெரிந்தவுடன்
பதரியடித்தபடி எழுந்து வேரு இடம் தேடுகிறானே
அந்த பதட்டத்தை அவன் குறைத்துக்கொள்ளும்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.

நீ
முருகனை கும்பிடு
முத்துமாரியம்மனை
கும்பிடு
அதுவல்லபிரச்சினை.

இந்து என்று சொல்லிச்சொல்லி.
உன்னை வீதியில்
இறக்கிவிட்டு
அவன்மட்டும் வீட்டுக்குள் இருந்துகொண்டு வேடிக்கை பார்க்கிறானே.
அதுதான் வேதனையை
தூண்டுகிறது.

Thursday, March 22, 2018

உலகத்தில் 3 ‘ஜாதிகள்’ உள்ளன

உலகத்தில் 3 ‘ஜாதிகள்’ உள்ளன, இந்த படத்திற்கு வரும் “reaction” வைத்து சொல்லிவிடலாம் :



முதல் ஜாதி - இந்த படத்தை பார்த்து, இந்த படத்தில் என்ன கொடுமை இருக்கு என்றே தெரியாதவர்கள். இவர்கள் யார் ஆண்டாளும் கவலைப்படாதவர்கள். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவர்கள். இவர்கள் போராடவும் வரமாட்டார்கள், இவர்களை வைத்து கொண்டு போராடவும் முடியாது, இவர்களுக்காக போராடுவதும் வீண்.

இரண்டாவது ஜாதி - இந்த படத்தை பார்த்து, இது சரிதானே, இதில் என்ன தவறு இருக்கிறது, இதற்க்கு ஒரு உளவியல்/அறிவியல்/பொருளாதார /ஆன்மீக காரணம் இருக்கிறது என்று நினைப்பவர்கள். இவர்கள்தான் ‘தீயவர்கள்’ 

மூன்றாவது ஜாதி  - இந்த படத்தை பார்த்து, சொல்லித்தராமலேயே இவர்களின் இரத்தம் கொதிக்கும். இவர்கள்தான் ‘நல்லவர்கள்‘. இவர்கள் தான் ஆளவேண்டியவர்கள்!

Monday, March 12, 2018

ஆரியர்களின் ஆதி பூர்வீகம் சிரியா

பகிர்வு

உங்களுக்கு தெரியுமா, தற்போது போர்க்களமாக காட்சி அளிக்கும் சிரியா தான் இந்தியாவில் வாழும் ஆரியர்களின் ஆதி பூர்வீகம் என்று. ஆம், இங்குதான் உலகின் மிக பழமையான சுமார் 3500 ஆண்டுகள் பழமையான சமஸ்கிரத எழுத்துக்கள் உள்ள கல்வெட்டுக்கள் உள்ளன. இந்தியா வில் அசோகர் காலத்து 1500 வருடங்களுக்கு மேல் பழமையான சமஸ்கிரத கல்வெட்டுக்கள் இல்லை ஆனால் கீழடி, கொடுமணல் ஆகியவற்றில் 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தமிழ் எழுத்துக்கள் பொறித்த மண்பாண்டங்கள் கிடைத்து உள்ளன.

சிரியா சமஸ்கிரத கல்வெட்டுக்கள் பற்றி மேலும் அறிய google அல்லது youtube  -ல் "Mittani Sanskrit inscriptions" அல்லது "hittite-mitanni treaty" என்று தேடி பாருங்கள்.

http://www.iskcontimes.com/india-wasnt-the-first-place-sanskrit-was-recorded/

https://en.wikipedia.org/wiki/Mitanni-Aryan

This Place Was The First To Record 'Sanskrit' And Not India:

https://mdaily.bhaskar.com/news/JM-MYTH-sanskrit-roots-syria-india-5351484-PHO.html

3500 வருடங்களுக்கு முன் சிரியா பகுதியை Mittani மற்றும் hittite Empire ஆண்டு வந்தனர். பின்னர் இவர்களுக்குள்ளாகவே அடித்து கொண்டு ஒரு பகுதியினர் துர்க்மெனிஸ்தான் பகுதிக்கு ஓடிவிட்டனர்.

இந்த துர்க்மெனிஸ்தான் பகுதியிலிருந்து பின்னாட்களில் அபிகானிஸ்தான் வழியாக ஆரியர்கள் இந்தியா வில் நுழைகின்றனர். துர்க்மெனிஸ்தான் பாலைவன பகுதியில் தான்  ஆரியர்கள் வாழ்ந்த 2500 -3000   வருடம் பழமையான archealogical settlements கண்டுபிடிக்க பட்டுள்ளது. 

ரிச்சர்ட் மார்ட்டின் டோனி ஜோசப் ஆகியோரின் இந்த வருடம் வெளியான  DNA analysis ம் இதை உறுதி படுத்து கிறது .

http://www.thehindu.com/sci-tech/science/how-genetics-is-settling-the-aryan-migration-debate/article19090301.ece

கேள்வி

2500 வருடங்களுக்கு அதிக பழமையான பொருட்களை கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டது எனில் இந்தியா இந்த தமிழனுக்கு (திராவிடர் களுக்கு ) உரியது என சொல்லுகிறீீர்கள்....அசோக கல் வெட்டுகள் 1500 வருட பழமை தானா?.....அசோகர் ஆ்ண்ட நூற்றாண்டு எது?..

பதில்

மிகச்சரியான கேள்வி ஐயா. நீங்கள் கூறியதை போல அசோகர் காலத்து கல்வெட்டுகள் கிடைத்துள்ளன ஆனால் அவை சம்ஸ்கிருத கல்வெட்டுகள் அல்ல. கீழடியில் கிடைத்துள்ளவை தமிழ் எழுத்துகளிலேயே உள்ளன. இதைத்தான் நான் அனுப்பிய பதிவிலும் உள்ளது. அசோகர் காலத்து கல்வெட்டுகள் உள்ள மொழிகள் - ப்ராக்ரித், கிரேக்கம், அராமைக் - இந்த கல்வெட்டுகள் மேற்கில் காந்தகார், கிழக்கில் தவுலி, தெற்கில் எர்ரகுடி மற்றும் வடக்கில் மான்செரா (கஷ்மீரம்) உட்பட பல இடங்களில் கிடைத்துள்ளன.

"அசோகர் காலத்து 1500 வருடங்களுக்கு மேல் பழமையான சமஸ்கிரத கல்வெட்டுக்கள் இல்லை"

"கீழடி, கொடுமணல் ஆகியவற்றில் 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தமிழ் எழுத்துக்கள் பொறித்த மண்பாண்டங்கள் கிடைத்து உள்ளன"

மேலும் கீழடியில் கிடைத்துள்ளவை settlement எனப்படும் நிரந்தர குடியிருப்புகளுள்ள பகுதியிலுள்ள தினசரி உபயோக பொருட்கள். நாம் அசோகர் காலத்தை பற்றி தெரிந்து கொண்டது சமண மற்றும் பௌத்த மத துறவிகள் எழுதி வைத்துள்ள குறிப்புகளை வைத்துதான். அசோகர் காலத்து மக்கள் என்ன மாதிரி பாண்டங்கள் உபயோகப்படுத்தினார்கள், அவர்களது அன்றாட பொருட்கள் என்ன என்பதுதான் இந்த பொருட்கள். அவற்றில் தமிழில் பொறிக்கப்பட்டுள்ள வார்த்தைகள் அரிதானது.

இந்த பொருட்கள் மற்றும் நகர அமைப்புகளை வைத்து கீழடி கலாச்சாரமும் சிந்து சமவெளி கலாச்சாரமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்றும், hittite சாம்ராஜ்ய கலாச்சாரமும் சிந்து சமவெளி கலாச்சாரமும் வெவ்வேறு கலாச்சாரங்கள் என்று archaeologists கூறுகிறார்கள்.

Tuesday, March 06, 2018

பெரியார் ராமனை செருப்பால் அடிச்சப்ப

பெரியார் ராமனை செருப்பால் அடிச்சப்ப நாங்க அமைதியா தானே இருந்தோம் இப்ப மட்டும் ஏன் பொங்குறீங்கனு உங்க கேள்வி
பதில்:
1971 ஆம் ஆண்டில், ராமனை செருப்பாலடித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு? என்று காமராஜரையும், இராஜாஜியையும் ஒன்று சேர்த்தார்கள்.
போச்சு, போச்சு என்று தி.மு.க.காரர்களும் நம்பினார்கள்.
திராவிடர் கழகம் ஊர்வலம் நடைபெறுகிறது. தந்தை பெரியார் அவர்கள் அந்த ஊர்வலத்தில் வருகிறார். கடவுள் பிறப்பு என்று சொல்லிக்கொள்ளும் உருவங்களை அந்த ஊர்வலத்தில் எடுத்துக்கொண்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக கலைஞர் அவர்கள் இருந்தார். அப்பொழுது பா.ஜ.க. கட்சி இல்லை. அன்றைக்கு ஜனசங்கம் என்ற பெயரில் இருந்தது.
அந்த ஊர்வலத்திற்குக் கருப்பு கொடி காட்டப் போகிறோம் என்று ஜனசங்கத்தினர் சொன்னதும், கலைஞர் அவர்கள் ஜனநாயகவாதி. அப்படியா? நல்லது! அவர்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்குங்கள் என்று சொன்னார். ஏனென்றால், பெரியாருக்கு எதிர்ப்பைக் கண்டால் இன்னும் கொஞ்சம் உற்சாகம் வரும் - மாநாட்டில் இன்னும் நன்றாகப் பேசுவார் என்றார்.
எதிர்ப்புதான் எங்களுக்கு எப்பொழுதும் தீனி. எங்கள் வயலில் எவ்வளவு அசிங்கத்தை நீங்கள் வீசினாலும், எங்கள் விளைச்சலுக்கு அவைகள் உரங்கள் என்பதை மிகத் தெளிவாக உணர்ந்திருக்கக் கூடியவர்கள்.
ஜனசங்கத்தினரை சுற்றி காவல்துறையினர் நின்றிருந்தார்கள். ஊர்வலம் சென்று கொண்டிருக்கிறது. முழக்கங்களை எழுப்பிக்கொண்டு தோழர்கள் வருகிறார்கள்.
ஜனசங்கத்தினர் கருப்புக் கொடி காட்டிவிட்டு போவது தானே நியாயம். ஆனால், அப்படி அவர்கள் செய்யாமல், அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர், திடீரென்று செருப்பை தூக்கி பெரியார்மீது எறிந்தார். அதற்குள் பெரியார் வந்த வண்டி நகர்ந்துவிட்டது. அவருக்குப் பின்னால் வந்த கருப்புச் சட்டைத் தோழரின்மேல் விழுந்தது.
பெரியார்மீதுதானே நீங்கள் செருப்புப் போடவேண்டும் என்று நினைத்தீர்கள். உன்னுடைய ராமனை நான் செருப்பால் அடிக்கிறேன் என்று அந்த செருப்பை எடுத்து ராமன் படத்தின்மீது அடித்தார்.
இப்படித்தான் அந்த சம்பவம் நடைபெற்றது..
ஆக நாங்க எத எடுக்கணும்னு நீங்க தானே முடிவு பண்றீங்க பக்தாள்களே

Friday, March 02, 2018

பெரியார் சாதித்ததுதான் என்ன?

பெரியார் சாதித்ததுதான் என்ன?
வே. ஆனைமுத்து
ஏ கழுதை, எசமான் வர்றது கண்ணுக்குத் தெரியிலே? மடமடண்ணு வர்றியே வரப்பு மேலே!
போடா திரும்பி என்று உறுமி தீண்டாப்படாதவனை விரட்டிவிட்டுப் பண்ணையார்கள் விசுவநாத அய்யர், கிருஷ்ணசாமி ரெட்டியார், கந்தசாமிப்பிள்ளை, இராமசாமி முதலியார் இவர்களுக்குக் காரியஸ்தன் கந்தசாமி போன்றோர் பராக்குக்கூறிய காலம் 1940 வரை கூட நீடித்தது.
ஒரே வரப்பில் - ஒற்றையடிப் பாதையில் தீண்டப்படாதவன் எதிரே நடந்து வரக்கூடாது; மீறி நடந்தால் ஊர் பஞ்சாயத்துக் கூடி, மரத்தில் அவனைக் கட்டி வைத்துப் புளியன் வளாரினாலும், எருக்கங்குச்சியினாலும் செம்மையான அடி கொடுக்கப்பட்டது. இது அன்றைய சமூக நீதி - சாதி ஆசாரம்.
இந்த மிருகத்தனமான கொடுமைக்கு முடிவு கட்டியவர் பெரியார். டேய்! கொட்டாங்கச்சியிலே வாங்கிக்கோ. இல்லேண்ணா அந்த மூங்கிக்குழாயிலே குடிச்சுக்கோ.
தண்ணீர்ப் பந்தலிலும், தேநீர் விடுதியிலும் எல்லாச் சாதிக்காரர்களும் தீண்டப்பாடதவரை நடத்தியவிதம் 1950 வரையில் கூட இதுதான். இந்தக் கொடூரப்பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தவர், பெரியார்.
மாடு மேய்க்கற பசங்கள்லாம் இங்க வந்து கழுத்தறுப்பு பண்றேளே! உங்களுக்கு எங்கடா படிப்புவரும்? எப்படிடா சரசுவதி கடாட்சம் கெடைக்கும்? முகரைக்கட்டயப்பாரு!கணக்கில் தடுமாற்றம் அடைந்த வீட்டுப் பாடத்தில் மட்டம் போட்டுவிட்ட திராவிடர் வீட்டுப் பிள்ளைகளுக்குத் திண்ணைப் பள்ளிக்கூட வாத்தியார் புரோகிதர் வீராசாமி அய்யர், பிரைமரி பள்ளி ஆசிரியர் இராமசாமி அய்யங்கார் ஆகியோர் செய்த ஏகத்தாளமான அர்ச்சனை இது. 1942 வரையில்கூடக் காதாரக்கேட்டுக் கண்ணார நாம் கண்ட காட்சி இது.
இந்த ஓரவஞ்சனை தர்மத்தை அடியோடு தகர்த்து எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறந்து வைத்தவர், பெரியார்.
நீ சந்நிதிக்கு அப்பாலே தேங்கா, பழத்தட்டை வெச்சுடு; நீ கிராதிக்கு அன்னாண்டே தள்ளி நின்னுக்கோ; தீபாராதனையை வெளியே நின்று நீ பாத்துக்கோ என்று கூறி, மார்கழி முப்பது நாளும் குளித்து முழுகிக் கோலம் பூண்டு கோவில்களுக்குச் சென்று பக்தியைச் சுரந்த திராவிடர்களுக்குக் கோவில் அர்ச்சகன் தந்த மரியாதை 1950 வரையில்கூட இதுதான். இவற்றை அடியோடி மாற்றி.கர்ப்பக் கிருகத்துக்குள் நான் ஏன் போகக்கூடாது? என்ற ஒவ்வொருவரும் இன்று உரத்துக் கேட்கும் அளவுக்கு மானிட உரிமை உணர்வைக் கிளறிவிட்டவர், பெரியார்.
ஏய்! ஒங்க அண்ணாச்சி வந்திருக்கார்டீ. சட்டுப்புட் டுண்ணு ஆக்கி அரிச்சி காலாகாலத்திலே சாப்பாடு போடுடி!
காலமெல்லாம் கண்ணுக்கு இமைபோல் நிற்கும் காதல் மனையாளை நம் பாட்டனும் அப்பனும் விளித்த விதம் இப்படி. இந்தக் காட்டுமிராண்டிப் பழக்கம் இன்று பழங்கதையாகி வருவதற்கு அடிப்படையாக அமைந்தவர், பெரியார்.
பொட்டச்சி படிச்சா போச்சி. கள்ளப் புருசனுக்குத் திருட்டுக் கடுதாசி எழுதுவா.பொம்பளைக்கி சொத்து குடுத்தா அடங்கி இருக்க மாட்டா, இதெல்லாம் நம்ப சாதிக்கு அடுக்காது.தத்தம் சாதியிலிருந்து எல்லா இளங் கைம்பெண்களுக்கும் ஏக கதாநாயகனாக விளங்கிய அந்தந்தச் சாதி நாட்டாண்மைக்காரன் பெண்கல்விக்கும், பெண் சொத்துரிமைக்கும் போட்ட தடைச்சட்டம் அவ்வளவு கொடுமையானது.
இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்து இன்று எல்லாநிலைக் கல்விக்கும், சொத்துக்கும் உரிமை உள்ளவர்களாக நம் பெண்களை ஆக்கியவர், தந்தை பெரியார்.
ஏலே! குடுத்ததை வாங்கிக்கிட்டுப் போவியா! அதை உட்டுட்டு, பண்ணையை நேராவே எதுத்துக்கேக்கி றியே! என்னா தெய்ரியம்டா ஒனக்கு? ஏழைத் தொழிலாளிக்கு உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்கக்கூட உரிமை கிடையாது என்று இருந்த இந்த அவலநிலையை மாற்றிவிட்டவர், பெரியார்.
அண்ணய்க்கி எழுதுனவன் அளந்ததுதான் நம்புளுக்கு தக்கும். வயிறார சோறு, இடுப்பாரத் துணி, ஓட்டு ஊடு இதெல்லாம் எல்லாத்துக்கும் வா...ண்ணா வருமா? என ஏங்கிக்கூறித் தன்னைத்தானே நம்மவர் தாழ்த்திக் கொண்ட நிலையை மாற்றி, நாட்டு வளங்கள் அனைத்தும் நாட்டிலுள்ள அனைவர்க்கும் சொந்தம் என்பதை 1925 முதலே சொல்லித் தந்து சமதர்ம சமஉரிமை உணர்வைத் தழைக்கச் செய்தவர், பெரியார்.
நாமள்லாம் நாற்காலியிலே ஒக்காந்துக்கிட்டு, பங்கா காத்து வாங்காணும்னா அது முடியுமா? அதுக்கிண்ணே பொறந்த வங்களுக்குத்தான் அது கெடைக்கும். இப்படி மூட வேதாந்தம் பேசிக்கொண்டு பங்கா இழுப்பது, எடுபிடி வேலை செய்வது, வாடா - போடா என்கிற கீழ்நிலை வேலைகளைப் பார்ப்பது என்பதே தங்களுக்குக் கொடுத்துவைத்த பாக்யம் என 1946 வரையில் நினைத்துக் கிடந்த மர மண்டைத்தனத்தை அடித்து நொறுக்கி, எழுத்தர் வேலை முதல் உயர் நீதிமன்ற உயர் நீதிபதி வேலை வரையில் திராவிடருக்கு இன்று வந்து சேர வழி வகுத்தவர், பெரியார்.

Thursday, March 01, 2018

திரு.மு.க.ஸ்டாலினைப் பற்றி

இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரிடம் உலகமே பின்வாங்கிக் கொண்டிருந்த காலகட்டம். ஃப்ரான்ஸ் கிட்டத்தட்ட ஹிட்லரிடம் விழுந்துவிட்ட சூழலில் இங்கிலாந்து பிரதமராக சர்ச்சில் பதவியேற்கிறார். ஆனால் இங்கிலாந்து அரசர் ஆறாம் ஜார்ஜ் ஆதரவில் இருந்து, கேபினேட்டின் ஆதரவு வரை சர்ச்சிலுக்கு அரைகுறையாகத்தான் கிடைக்கிறது. சர்ச்சில் மேல் பலர் நம்பிக்கையற்று இருக்கிறார்கள். கேபினேட்டில் பலர் ஹிட்லருடன் சமாதானம் பேசி சரணடையச் சொல்கிறார்கள். சர்ச்சிலோ ஹிட்லர் போன்ற கொலைவெறி பிடித்த சர்வாதிகாரியுடன் எந்தக் காலத்திலும் சமாதானம் பேச முடியாது என்கிறார். அவர் பதவி பறிபோகுமோ என்கிற நிலை. சர்ச்சிலோ உறுதியாக நிற்கிறார். ஒரு நடு இரவில் சர்ச்சிலை அவரது வீடு தேடி சந்தித்த அரசர் சொல்கிறார், “இதுவரை நான் உங்களை அரைகுறையாக ஆதரித்திருக்கலாம். ஆனால் என் முழு ஆதரவும் இப்போது உங்களுக்கு உண்டு. நீங்கள் பிரதமர் ஆனது நம்மில் பலருக்கு பிடிக்கவில்லை என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் நீங்கள் பிரதமர் ஆனது ஹிட்லருக்கு துளியும் பிடிக்கவில்லை. ஹிட்லர் உங்களை அடி ஆழத்தில் இருந்து வெறுக்கிறார். அதனாலேயே உங்களை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ செய்யுங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன்,” என்றார். பின்னர் சர்ச்சில் போரைத் தொடர்ந்ததும், ஹிட்லரை கூட்டுப்படைகள் தோற்கடித்ததும் வரலாறு. நிற்க.
கலைஞரின் மகன் என்பதைத் தவிர திரு.மு.க.ஸ்டாலினைப் பற்றி வேறெதுவும் தெரியாத காலம் அது. மிசாவைப் பற்றியெல்லாம் பின்னர் தான் அறிந்தேன். ஒருநாள் ஏதேச்சையாக டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது சென்னையின் மழை நிரம்பிய வீதிகளில் முட்டி வரை ஏற்றிவிடப்பட்ட பேண்டோடு அவர் தெருத்தெருவாக நடந்துபோய் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அவர் மேயராக இருந்த குறுகிய காலத்தில் வெறும் சென்னை சிங்காரச் சென்னை ஆனதும், இன்று சென்னையின் போக்குவரத்தைக் குறைக்கும் அத்தனை பாலங்களையும், சாலைகளையும் அவர் நிர்மாணித்ததும் வரலாறு. ஸ்டாலின் என்பவர் வெறுமனே கலைஞரின் மகன் மட்டுமல்ல, தந்தைக்கு சற்றும் குறையாத மிகச்சிறந்த நிர்வாகி என்பதும் எதிரிகளாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டதும் அப்போதுதான். வளர்ந்த நாடுகள் குறித்த அவரது, ‘பயணம்’ என்னும் பயணக்கட்டுரைகள் நிறைந்த நூல் அதற்குச் சான்று. இன்றும்கூட சிங்கப்பூர், மலேசிய தொழிலதிபர்கள் பலருடன் பேசும்போது வளர்ச்சிப்பணிகள், தொழிற்சாலைகள் மீதான மு.க.ஸ்டாலினின் ஆர்வத்தை அவர்கள் வியந்து பேசுவதைப் பார்த்திருக்கிறேன். மேம்பால ஊழல் என்ற பெயரில் வாரண்ட் கூட இல்லாமல் கலைஞரை நடு இரவில் கைது செய்து ஆட்டம் போட்ட ஜெவுக்கு சூட்டோடு சூடாக, “தினமும் இரண்டுமுறை அந்த பாலத்தில் நீங்கள் சென்றுவருகிறீர்களே, அந்தப் பாலம் மிகவும் வலிமையானது என்பதற்கு அதைவிட என்ன சான்று வேண்டும்,”என கேட்டபோதுதான் அவர் முதன்முறையாக என் மனதில் நின்றார். பின்னர் அதற்காக கலைஞர் ஸ்டாலினை கடிந்துகொண்டதாகக் கூட கூறுவார்கள். ஜெ மருத்துவமனையில் இருந்தபோது அவரை ஸ்டாலின் சந்திததுதான் இளைஞர்கள் பலருக்குத் தெரியும். ஆனால் சுனாமியின் போதே அரசியல் நாகரீகத்தோடு ஜெவை நேரில் சந்தித்து நிவாரண நிதி அளித்தவர் ஸ்டாலின். அரசியலில் என்றுமே எதிரிப்போக்கை கடைபிடிக்கக் கூடாது என்பது அவர் இன்றுவரை கடைபிடித்து வரும் கொள்கை. அதனால்தான் ஆன்மீக அரசியலுக்கு ஆசீர்வாதம் வாங்க பகுத்தறிவுக்கோட்டைக்கு வருகின்றவர்களை வரவேற்ற கையோடு, ஆன்மீக அரசியலுக்கெல்லாம் தமிழ்நாட்டில் இடமில்லை என பேட்டியும் தர முடிகிறது.
கலைஞர் ஆக்டிவாக இருந்தபோது துக்ளக், தினமலர் போன்ற ஏடுகளில் ஸ்டாலின் தலைவரானால் திமுகவை ஆதரிக்கலாம் என்றும், கலைஞர்தான் அவர்களுக்கு ஒரே பிரச்சினை என்றும் அடிக்கடி எழுதியதை பலர் கவனித்திருக்கலாம். மறைந்த பிரபல மிடாஸ் அதிபர் சோ கூட பலமுறை தன் கேள்வி பதில் பதிவுகளில் ஸ்டாலின் திமுக தலைவரானால் தன் ஆதரவு உண்டு என எழுதியிருக்கிறார். ஆனால் அவர் செயல்தலைவர் ஆனபின் என்ன ஆனது? எங்கே போனது அந்த ஆதரவு? ஏன் சதாசர்வ காலமும் ஸ்டாலினை இந்த ஏடுகள் விமர்சிக்கின்றன? ஏன் தன் குரு சோவின் முடிவை குருமூர்த்தி பின்பற்றவில்லை? இத்தனைக்கும் திமுக ஆட்சிக்கு கூட வரவில்லை எனும்போது ஸ்டாலின் மீதான தங்கள் ஆதரவு நிலைப்பாட்டை ஏன் இவர்கள் மாற்றிக்கொண்டார்கள்? காரணம் மிக எளிது. ஸ்டாலின் கலைஞரைப் போல சமூகநீதியைப் பேசுவார் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஸ்டாலின் தமிழ்நாட்டை பெரியார் மண் என அழைப்பார் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. “திராவிட இயக்கத்தை ஒரு கொம்பனாலும் அசைக்கமுடியாது,” என ஸ்டாலின் சூளுரைப்பார் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. மோடியே வீட்டுக்கு தேடி வந்தாலும், அடுத்தநாள் மேடை போட்டு மோடியை ஸ்டாலின் கிழிப்பார் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. மொத்தத்தில் அவர்கள் ஸ்டாலின் எல்லாவற்றிலும் ‘கலைஞரின் மகன்’ ஸ்டாலினாக இருப்பார் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
அதனால்தான் எப்படியாவது ஸ்டாலினை ஓரங்கட்டப் பார்க்கிறார்கள். தொட்டதெற்கெல்லாம் ஸ்டாலினை விமர்சிக்கிறார்கள். கிண்டல் செய்கிறார்கள். பாஜக கதவுகளை எல்லாம் ஒன்றுவிடாமல் தட்டிவிட்டு எதுவுமே திறக்கப்படவில்லை என்றவுடன் திருவோட்டை தூக்கிப்போட்டுவிட்டு வீரவசனம் பேசும் தினகரனை எல்லாம் பாஜகவின் பெரிய எதிரியாக ஊடகங்கள் சித்தரிக்கும் காரணமும் அதுதான். ரஜினி, கமல் என யார் யாரையோ அரசியல் மாற்று என சித்தரிக்கிறார்கள். ஜெவுக்கே பயந்து அறைக்குள் முடங்கிய இந்த கிழட்டுக் கன்றுக்குட்டிகள் மோடிக்கோ, மத்திய அரசுக்கோ பயப்படாமல் மார்பிலா பாய்வார்கள்? கொஞ்சமாவது லாஜிக் என்பது வேண்டாமா? எடப்பாடிக்கும், ஓ.பி.எஸ்க்கும் தான் ரஜினியும் கமலும் மாற்றாக இருப்பார்களேயொழிய கலைஞருக்கும், ஜெயலலிதாவிற்கும் அல்ல.
இன்று நாட்டை நிர்மூலமாக்கும் மதவாத சக்திகள், ஃபாசிஸ்டுகள், தமிழ்நாட்டை விற்கும் அடிமைகள், சமூகநீதி விரோதிகள், மோடி ஆதரவு ஏடுகள், RSSயின் கட்சி சார்பற்ற சமூக ஆர்வலர்கள் என அனைவரும் எப்படியாவது ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும் என ஏன் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்களோ, அதே காரணத்திற்காகத்தான் நாம் ஸ்டாலினை ஆதரிக்க வேண்டும்! நாம் ஏற்கனவே மநகூ என்கிற பெயரில் மாபெரும் வரலாற்றுத் தவறை நிகழ்த்தினோம். மீண்டும் அதே தவறுக்கு இடம் கொடுக்காதீர்கள். முதல் பத்தியில் உள்ள வரலாற்றைப் படியுங்கள். யார் ஸ்டாலினை ஆதரிக்கிறார்கள் எனப் பார்க்காதீர்கள். யாரெல்லாம் முதல்வரிசையில் நின்று எதிர்க்கிறார்கள் எனப் பாருங்கள். நாம் ஸ்டாலினை ஆதரிக்க வேண்டிய காரணம் புரியும்.
காரிருள் முடியட்டும். சூரியனால் விடியட்டும்.

யார் இந்த காஞ்சி காம கேடி ஜெயேந்திரன்?

யார் இந்த காஞ்சி காம கேடி ஜெயேந்திரன்?
கைதே செய்வதானாலும் தலித் (DSP) என்னைத் தொட்டுவிடக்கூடாது என்ற புண்ணியவான்!
நம்பி வரும் பெண்களை தவறாக அனுபவித்த நல்லவர்!
மடத்தின் மேலாளரை கொலை செய்த வல்லவர் !
இதோ விளக்கமுடன் :
காஞ்சிபுரம் சங்கரமடத்தில் பணியாற்றிய சங்கரராமன், 68வது சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி மறைந்ததும் பொறுப்புக்கு வந்த ஜெயேந்திரருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மடத்திலிருந்து வெளியேறினார், பின்னர் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராக பொறுப்பேற்றார்.
3.9.2004இல் கோயில் வளாகத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை சதி திட்டமிட்டதாக ஜெயேந்திரர், விஜயேந்திரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.....
ஆந்திராவில் இருந்த ஜெயேந்திரர், விஜயேந்திரர் 11.11.2004ல் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.
அந்த கைது கால கட்டத்தின் இடைவெளியில் நடை பெற்ற நிகழ்வுகளை தாங்கிய பதிவு இது....
அந்த படுகொலை நடந்த போது அப்போதைய்ய காஞ்சி SP பிரேம்குமார்... முதல்வர் "J".
இந்த கொலை குறித்த தகவல் முழுமையாக தனக்கு வேண்டும் என அம்மா அவர்கள் spயிடம் கேட்கிறார்....
அதற்கு முன்பே காஞ்சி காமகோடி மடத்தின் பக்தர் செட்டிநாடு குழுமத்தின் தலைவர் Spic-முத்தையா செட்டியார் மனைவி அங்கு நடந்த நிகழ்வுகளை அம்மாவிடம் தான் அங்கு சென்றபோது...
"ஜெயேந்திரன் அறையில் பெண்கள் அணியும் ஜட்டி- ப்ரா போன்ற உள்ளாடைகள் ஒரு மூலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியுடன் திரும்பிவிட்டேன்" என அம்மாவிடம் பகிர்ந்து இருந்தார்....
பல கட்ட விசாரணைக்கு பிறகு காஞ்சி SP அவர்கள் "சங்கர ராமனை" கொன்றது ஜெயேந்திரன் & கோ தான் என்ற ஆதாரபூர்வமான ஆவணங்களை சமர்பித்து விட்டு... அம்மா அவர்கள் ஒரு பெண் என்பதால் மிகவும் தயக்கத்துடன்
"அம்மா அங்கு ஒரு சிடியும் கிடைத்துள்ளது, அது இந்த வழக்கிற்கு தேவையில்லை எனினும் கைப்பற்றியுள்ளேன் " என தயக்கத்துடன் சமர்பிக்கிறார்....
'J' அவர்கள் வெளியே காத்து இருங்கள் நான் அழைக்கிறேன் என கூறிவிட்டு...
சில நிமிடங்கள் கழித்து மிகவும் கடும் கோபத்துடன் அவர் எந்த மூலையில் இருந்தாலும் உடனே கைது செய்துவிட்டு வந்து என்னை பாருங்கள் என கட்டளையிடுகிறார்...
சரிங்க அம்மா என கூறிவிட்டு SPஅவர்கள் வெளியே வந்த போது... மீண்டும் அவரை அழைத்து காஞ்சி DSP மூர்த்தியை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள், அவர்தான் ஜெயேந்திரனை கைது செய்ய வேண்டும் என மிக உறுதியாக கட்டளையிடுகிறார்..... SP அவர்களும் ஒன்றும் புரியாமல் சரி என ஏற்றுக் கொண்டு காஞ்சி DSP மூர்த்தியுடன் உடன் ஆந்திரா மாநித்தில் ஜெயேந்த்திரன் உள்ளான் என அறிந்து புறப்படுகிறார்...
ஒரு வழியாக ஜெயேந்திரன் ஆந்திரா மாநிலம், திருப்பதியில் ஒழிந்து கொண்டு இருப்பதை அறிந்து அங்கு சென்ற SP அவர்கள் உங்களை கைது செய்ய போகிறேன் என தெரிவித்த போது ஜெயேந்திரன் உட்பட மறுத்து தகராறு செய்கிறான்....
'J' 'வின் கட்டளைப்படி DSP மூர்த்தி அவர்களிடம் ஜெயேந்திரன் வர மறுக்கிறான்! அம்மா அவர்கள் நீங்கள் தான் கைது செய்ய வேண்டும் என உத்தரவு போட்டு இருக்கிறார் அவனை கைது செய்து வாருங்கள் என கைது-வாரண்டை கொடுத்து உத்தரவு பிறப்பிக்கிறார்.
DSP மூர்த்தி அவர்களும் மிகுந்த குழப்பத்துடன் ஏன் அம்மா எனக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்? நான் இது வரை நேராக சந்தித்தது கூட கிடையாதே என சக அதிகாரிகளிடம் புலம்பிவிட்டு செல்கிறார்....
DSP மூர்த்தி அவர்கள் ஜெயேந்திரனிடம் உங்களை கைது செய்ய வந்துள்ளேன் என்றதும்... அதுவரை கைதுக்கு அடம்பிடித்த ஜெயேந்திரன் கடும் கோபத்துடன் "என்னை நீ தொடக்கூடாது".. நான் ஒத்துழைக்கிறேன் என சொன்னதும் SP அவர்களுக்கு பெரும் ஆச்சர்ய்யம் நான் இவ்வளவு விளக்கியும் வராதவன் மூர்த்திக்கு கட்டுபட்டுவிட்டானே என்று.....
கைது செய்து தமிழ்நாடு பயணிக்கும் போதுSPஅவர்கள் DSPயிடம் கேட்கிறார் எப்படிய்யா நீ சொன்னவுடன் அவன் வந்துட்டான் என கேட்கிறார்... (அதற்க்குள் DSP "என்னை நீ தொடக்கூடாது" என ஜெயேந்திரன் சொன்னதின் அர்த்தத்தை யூகித்து விட்டார்) அது ஒன்னும் இல்லை சார்....
நான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்த்தவன் நான் தொட்டால் தீட்டு ஆகிவிடும் என்று நினைப்பான் என்று தான் அவன் ஒத்துழைப்பு கொடுத்தான் இப்படி எல்லாம் இவன் அடம்பிடிப்பான் என உணர்ந்து தான் அம்மா அவர்கள் என்னை உங்களுடன் வைத்து கொள்ள கட்டாய படுத்தி இருக்கிறார்.... இதை கேட்ட SP அவர்கள் அப்படியே உறைந்து போய் விட்டாராம்.
பிற்காலத்தில் சிறையில் வாழை இலையில் தான் "பீ போவேன்" என முரண் பிடித்த கதைகள் எல்லாம் வேறு.
இன்று வரை ஜெயேந்திரன் கைது வரலாற்றில் ஒரு மைல்கள்
அப்படி அந்த CDயில் என்ன தான் இருந்தது என ஆர்வமாக இருக்கும் நெட்டிசன்ஸ்...
ஜெயேந்திரன் மடத்திற்கு வரும் பெண்களிடம் காம களியாட்டம் நடத்தியதை வீடியோ எடுத்து சுய இன்பம் அடைந்தவை தான் அந்த வீடியோ...
SP மிகவும் கூச்ச நாச்சம் கருதி அதை எடிட் செய்தே சமர்பித்தாறாம்.
இந்த மனிதர் தான் இறந்திருக்கிறார் !

சிரியாவில் என்ன நடக்கின்றது என்பதன் சுருக்கம் இதுதான்

சிரியாவில் என்ன நடக்கின்றது என்பதன் சுருக்கம் இதுதான்
சிரியாவில் ஆட்சியினை மாற்றலாம் என கருதி போராளிகளை உருவாக்கியது அமெரிக்கா. ஆனால் சிரியா மக்கள் அரசை எதிர்க்கவில்லை, அதிருப்தி உணரவில்லை இதனால் போராளிகளுக்கு வரவேற்பில்லை
போராளி குழுக்களில் ஒன்றான அல் நுஸ்ரா என்னவென்று நினைக்கின்றீர்கள்? அல் கைதாவின் ஒரு பிரிவு.
பின் எப்படி ஆதரவு கிடைக்கும்?
இந்நிலையில் ஐஎஸ் இயக்கத்தின் அட்டகாசம் பெருகி சிரியாவில் குழப்பம் வெடித்தது. அமெரிக்கா ராக்கா நகரில் வீசிய குண்டில் செத்த குழந்தைகள் கணக்கில்லாதவை, அதெல்லாம் பற்றி பேசமாட்டார்கள்
காரணம் அது தீவிரவாததிற்கு எதிரான போர்
இப்பொழுது சிரிய அரசு படை முன்னேறுகின்றது, கிழக்கு பகுதியினை தீவிரவாதிகளிடமிருந்து மீட்கின்றது. ஆனால் அவர்கள் புலிகள் முள்ளிவாய்க்காலில் மனித கேடயம் வைத்திருந்தது போல் வைத்திருக்கின்றார்கள் அந்த கொடூர தீவிரவாதிகள்
அறிந்து சொன்னாரோ அறியாமல் சொன்னாரோ சீமான், அதே நிலைதான் இங்கேயும்
தீவிரவாதிகளை ஒழித்து கட்ட சிரிய அரசு எடுக்கும் நடவடிக்கையில் பலர் சாகின்றனர், அந்த தீவிரவாதிகளும் மக்களை விடுவதாக இல்லை
இந்த பகுதி அமெரிக்க சவுதி ஆசிபெற்றவர்கள் கட்டுபாட்டு பகுதி என்பதால் எல்லா படங்களும் உலகிற்கு கிடைக்கின்றன‌
முன்பு அமெரிக்க படுகொலைகளை வெளியிட்ட அல் ஜசீராவும் அதற்கு அடைக்கலம் கொடுத்த கத்தாரும் எதிர்கொண்ட சிக்கல் கொஞ்சமல்ல, கத்தார் சிக்கல் வர முதல் காரணமே இதுதான்
அமெரிக்கா செய்தால் தீவிரவாதத்திற்கு எதிரான போர், ஆனால் சிரியா செய்தால் மானிட கொடூரம்
சிரியாவிற்காக அழுபவர்கள் எவனாவது அமெரிக்க படையால் கொல்லபட்ட சிரிய மக்களுக்ககாகவும், இஸ்ரேலால் கொல்லபடும் பாலஸ்தீன சிறுவர்களுக்காகவும் அழமாட்டான்
ஏமனில் சவுதியால் கொல்லபடும் சிறுவர்களுக்காக அழமாட்டான்
மாறாக அமெரிக்க பிடி சிரியாவில் சரியும்பொழுது மட்டும் அழுவான் அல்லது அழவைகபடுவான்
ஏனெனில் சிரியா செய்தால் "மானிட படுகொலை" மற்றபடி அமெரிக்கா, துருக்கி, சவுதி எல்லாம் செய்தால் அது "போர்"

இலங்கையில் தமிழ் பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள்

இராணுவ சோதனை சாவடிகளில் உள்ளாடையை நீக்கி காட்ட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை இலங்கை மக்களுக்கு ஏற்படுத்த சில விசமிகள் களம் இறங்கிவிட்டதாகவே தெரிக்கின்றது.
இலங்கையில் தமிழ் பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் தமிழையும் சிங்கள பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் சிங்களத்தையும் தமது அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். 95% முஸ்லிம்களுக்கு இரு மொழிகளையும் அறிவார்கள். இஸ்லாமிய தமிழர் , சைவதமிழர், கத்தோலிக்க தமிழர், காப்பிலி தமிழர் என்றெல்லாம் இங்கு கிடையாது. அவ்வாரே இஸ்லாமிய சிங்களவர்களும் கிடையாது. இப்படி கூறினால் சிங்களவன் கட்டி வைத்து உதைப்பான். ஏன் முஸ்லிம்களிடம் சென்று நீங்கள் தமிழர்தானே என கூறினால் ஆசையாக கூட்டிச்சென்று அந்த மலட்டு கொத்துரோட்டியை உண்ண வைத்துவிடுவார்கள். இது தான் இலங்கையின் இன்றைய யதார்த்தம்.
முஸ்லிம்கள் இலங்கையில் இப்போது தமக்கென்று ஒரு மொழியை உருவாக்கி கொள்ள அரபியை ஆங்காங்கே தாம் செறிந்து வாழும் பகுதிகளில் எழுதி வைக்க தொடங்கியுள்ளனர். இன்னும் 30-40 ஆண்டுகளில் இவர்கள் தமது மொழியாக அரபு மொழியை பேசக்கூடும்.
முஸ்லிம்கள் இலஙுகையில் தனியான ஒரு இனமாகவே வாழ்வதில் அவர்களுடைய இனப்பற்றை ஏனைய இனத்தினர் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. சிங்கள இன வெறியர்கள், தமிழ் இனவெறியர்கள் போன்று முஸ்லிம் இன வெறியர்களும் இந்த நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஒரு குறிப்பிட்ட இனம் ஏனைய இனங்களுக்கு எதிராக silent killers ஆக செயற்படுவதாக குற்றசாட்டை யாராவது சுமத்தினால் வழமையான பசப்பு வார்த்தைகளை அரசும் அதன் ஆதரவாளர்களும் கூறிக்கொண்டிருக்காமல் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து நாட்டு மக்களை பாதுகாக்க முயலவேண்டும்.
இல்லாவிட்டால் இராணுவ சோதனைச்சாவடிகளில் உள்ளாடையை கழற்றி காட்ட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இலங்கை மக்களுக்கு ஏற்படலாம்.
இன்று Save Syria என்று profile pic போடுபவர்கள் நாளை இலங்கையில் முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடிக்கொண்டிருப்பார்கள்.
இது தேவையா?

Wednesday, February 28, 2018

இத்தேசத்தின் அருமை அந்நொடியில் உங்களுக்கு விளங்கும்

ஏதோ சிரியாவில் புதிதாக குழந்தைபலி நடப்பது போல பலர் பொங்குகின்றார்கள், கடந்த 7 வருடமாக நடக்கும் சோகம் அதுவும் சமீப 3 ஆண்டுகள் மகா மோசம்
அங்கு அமைதி திரும்ப வேண்டுமானால் முதலில் அவர்கள் மனம் மாற வேண்டும். அந்நிய நாட்டு தூண்டுதலினால் நாசமாய் போனோம் என்ற எண்ணம் அங்கிருக்கும் போராளிகள் மனதில் உண்டாகமல் சாத்தியமில்லை
சிக்கல் அவர்கள் அரசை எதிர்த்து ஆயுதம் தூக்கியதில் தொடங்கியது, ஆட்சி மாற்றம் வேண்டுமாம். உடனே அவர்களுக்கு அமெரிக்க ஆயுதங்கள் தடையின்றி கிடைத்தன‌
இதே அமெரிக்கா சவுதி, குவைத், ஐக்கிய அரபு நாடுகளில் மக்களாட்சி வேண்டும், ஜனநாயகம் வேண்டும் என பேசுமா? பேசாது, ஆனால் சிரியாவில் மட்டும் புரட்சி வேண்டுமாம், இவர்கள் ஆதரிப்பார்களாம்
சிரிய சிக்கல் இன்று வந்ததல்ல அதன் மூலம் சதாம் காலத்திலே தொடங்கிற்று, சதாம் அமைக்க முயன்ற அணுவுலையினை இஸ்ரேல் நொறுக்க பின் ஷியா தேசம் என்றும் பாராமல் சில சதாமின் உதவி மூலம் சிரியா செய்ததும் பின் அதனையும் இஸ்ரேல் நொறுக்கியதும் வரலாறு
இதை எல்லாம் விட மகா முக்கியமான விஷயம், சதாமின் பணம். பின்லேடனை தொலைப்பதற்கு முன் சதாமினை தொலைத்தே தீரவேண்டும் என்ற வெறியில் அமெரிக்கா பாய அப்பொழுது சதாமின் ஏராளமான பணங்கள் சிரியாவில் பதுக்கபட்டதாகவும், அமெரிக்கா அதனை கேட்டபொழுது சிரியா மறுத்ததாகவும் செய்திகள்
இதுவும் ஒரு கோணம்
இன்னொரு கோணம்தான் அரபு அரசியலின் இன்னொரு முகத்தை வெளிபடுத்துகின்றது, அது அசிங்கமானது
அதாவது ஷியாக்களின் கை ஓங்குவது சன்னிகளுக்கு பிடிக்கவில்லை. ஈரானின் செல்வாக்கு இன்று அங்கு ஓங்குகின்றது, ஏமனில் அவர்கள் ஆதரவுடனே யுத்தம் நடக்கின்றது, ஈராக் ஈரானுடன் ஐஎஸ் ஒழிப்பில் இணைந்தே நிற்கின்றது , சிரியாவும் ஈரானுடன் நெருக்கமான நாடு என்பதால் ஷியாக்கள் பலம் பெறுகின்றார்கள் இதில் லெபனானின் ஹிஸ்புல்லாவும் இணைகின்றது
இந்த ஷியாக்களின் எழுச்சி சன்னி நாடுகளுக்கு உவப்பானது அல்ல, இன்று சதாம் போல தைரியமான சன்னி தலைவர்களும் இல்லை, அவர்கள் எல்லாம் அமெரிக்காவின் பின் ஒழிந்து ஷியாக்களை அழிக்க சொல்கின்றார்கள்
சரி ஷியா கூட்டணி இணைந்ததில் என்ன இருக்கின்றது என்றால் குர்துகள் தனிநாடு பெற கூடாது என்ற அரசியலும் உண்டு இதனை துருக்கி ஆதரிக்கின்றது
ஐஎஸ் இயக்கம் இதில் இன்னொரு கொடுமை, எல்லாம் எங்களுக்கே என எல்லோருடனும் சண்டையிடும் அமைப்பு அது, குழப்பம் இங்கே கூடுகின்றது.
இதில் எண்ணெய் வியாபாரம், அரபு அரசியல் என பல விஷயங்களை கணித்து புட்டினீன் ரஷ்யாவும் வந்து நிற்கின்றது. நாங்கள் இல்லா காலத்தில் சதாமினை கொன்றுவிட்டீர்கள் இனி அப்படி விட முடியாது என பகிரங்கமாக வந்துவிட்டது ரஷ்யா
பொதுவாக ஈராக்கோ, ஆப்கனோ , சிரியாவோ பலமில்லா அரசுகள் மீது தங்கள் நவீன ஆயுதங்களை பரிசீலிப்பது அமெரிக்க வழக்கம். அங்கும் அதுதான் நடக்கின்றது
ரஷ்யா விடுமா? அதுவும் நேரடி யுத்தகளத்தில் அதனைத்தான் செய்கின்றது, ஐஎஸ் இயக்க ஒழிப்பு என வந்த ரஷ்யா சந்தடி சாக்கில் அமெரிக்க ஆதரவு போராளிகள் மீது தாக்கிவிட்டு இலக்கு குறி தவறிற்று என சொல்லிகொள்கின்றது
அமெரிக்காவும் நவீன ஆயுதங்களை கொடுத்து ரஷ்ய விமானங்களை வீழ்த்த சொல்கின்றது, பதிலுக்கு ரஷ்ய ஆயுதங்கள் சிரியா வழியாக இஸ்ரேலிய விமானங்களை வீழ்த்துகின்றன‌
இப்படியாக பல கோணங்களில் நடக்கும் யுத்தம் அது. இப்பொழுது சிரிய அரசை அகற்றமுடியா பட்சத்தில் அந்நாட்டை இரண்டாக பிரிக்கலாமா என யோசிக்கின்றது அமெரிக்கா , காரணாம் எண்ணெய் குழாய் கொண்டு செல்ல கொஞ்ச இடம் போதாதா?
ஆனால் சிரியா பிரிந்தால் தனக்கு ஆபத்து என எண்ணும் துருக்கி கடுமையாய் எதிர்கின்றது, இதில் அமெரிக்கா அப்செட்
இப்படி எல்லா தேசமும் , எல்லா தீவிரவாத இயக்கமும் சிரியா பக்கம் பிசி என்பதால் ஹேப்பியாக இருக்கும் ஒரே நாடு இஸ்ரேல்
இப்பொழுது அங்கு ஏதும் குண்டுவெடிப்பு, ஹமாஸ் தாக்குதல், கலவரம் என ஏதும் செய்தி வருமா? வராது. காரணம் இதுதான்
அதெல்லாம் இருக்கட்டும் 5 ஆண்டுகளாக நடக்கும் யுத்தம் இப்பொழுது மட்டும் ஏன் இப்படி பரபரப்பு பெற வேண்டும்? குழந்தைகள் கொல்லபடுகின்றார்கள் என ஏன் ஒப்பாரி வைக்க வேண்டும்?
இதுதான் ஊடக போர்
லிபியாவிலும் இன்னும் சில நாடுகளிலும் கொல்லபடும் மக்களும் குழந்தைகளும் கணக்கில்லாதவை, ஆப்கன் எல்லையில் என்ன நடக்கின்றது என்பது ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும் ரகசியம்
ஆனால் சிரியாவினை மட்டும் முன்னிறுத்துவது ஏன்? அதுவும் மிக சமீபமாக?
விஷயம் இதுதான் அமெரிக்கா குண்டுவீச்சில் கொல்லபட்டால் ஒரு படமும் வராது, அவர்கள் உலக ஊடக பலம் அப்படி. வியட்நாம் யுத்தத்தில் ஒரு சிறுமி ஆடையின்றி ஓடிவந்ததை கண்டு அமெரிக்கர்களே பொங்கி எழுந்து அவர்கள் ராணுவத்தை திரும்பபெற்றனர்
அதிலிருந்து தன் கொடூர தாக்குதலில் நடைபெறும் அழிவுகளை அமெரிக்கா வெளிவராமல் பார்த்துகொண்டது, எப்படி படமெடுக்க முடியும், அவர்கள் அனுமதித்தால்தான் உண்டு.
சிரியாவில் ரஷ்ய குண்டுவீச்சில் செத்த குழந்தைகளை மட்டும் படமெடுத்து உலகெல்லாம் ஒளிபரப்புவார்கள், உலகில் அவர்கள் கட்டுபாட்டில் உள்ள எல்லா ஊடகமும் அதற்கு பலம் சேர்க்கின்றன‌
அரபுநாட்டின் உண்மை செய்திகளை சொல்லும் ஒரே ஊடகமாக அல் ஜசீரா இருந்தது. ஆப்கனிலும் லிபியாவிலும் அமெரிக்கா செய்த அத்தனை அட்டகாசங்களையும் அதுதான் சொன்னது
ஆனால் அதனை எல்லாம் பெரும் செய்தி ஆக்காமல் பார்த்துகொண்டார்கள், அல் ஜசீராவிற்கு தொந்தரவு பெருகிற்று, இப்பொழுது அதுவும் பழைய வீச்சு இல்லை
அதனால் வல்லவன் வைத்ததே நீதி, வல்லவன் நடத்தியதே போர், அவன் சொன்னதே செய்தி என உலகெல்லாம் ஏதோ இப்பொழுதுதான் சிரியா எரிய தொடங்கி இருப்பது போல பிம்பம் காட்டுகின்றார்கள்.
அன்றே சொன்னதுதான் எண்ணெய் இருக்கும் வரை அங்கு எரிவது நிற்காது, அதனை தாண்டி நிற்க வேண்டுமென்றால் அந்த மக்கள் சிந்திக்க வேண்டும், ஒரே ஒரு வரியில் சிந்தித்தால் போதும், உண்மை விளங்கும்
ஈராக் அழிந்து கிடக்கின்றது, ஐஎஸ் இயக்கம் தாண்டவமாடுகின்றது, ஏமனில் யுத்தம், சிரியா கேட்கவே வேண்டாம். இந்த மாபெரும் அழிவிலும் ஒரே ஒரு விஷயம் தங்கு தடையின்றி நடக்கின்றது
அது என்ன? கச்சா எண்ணெய் வியாபாரம். எந்த யுத்தமும் அதனை பாதிப்பதில்லை ஏன்?
இந்த புள்ளியில் சிந்தித்தால் அவர்கள் திருந்துவார்கள், மாறாக ஷியா, சன்னி, அல்லாவி, அகமதியா, குர்து, பெர்ஷியா என பேசிகொண்டே இருந்தால் அமைதி திரும்பவே திரும்பாது
இவ்வுலகில் நாடோடிகளாகவும், தங்களுக்குள் அடித்துகொண்டும் இருந்தவர்களை ஒன்றாக்கி மாபெரும் பேரரசை கட்டியது ஒருவர் ஒருவன் செங்கிஸ்கான் இன்னொருவர் நபி பெருமான்
செங்கிஸ்கான் வாள் முனையில் அதனை செய்தான், ஆனால் இறை தூதரான‌ நபிபெருமான் தன் அன்பான கண்ணியமான‌ போதனையால் செய்தார்
இஸ்லாம் வாள்முனையில் எல்லாம் பரப்பபடவில்லை, ஆப்கன் எனும் அலெக்ஸாண்டர் செங்கிஸ்கான் கலப்பினத்தில் வந்த முரட்டு கூட்டத்தின் போர்களில் அப்படி சொல்லபடமாலே தவிர தொடக்கம் அப்படி அல்ல‌
நபி பெருமான் வலிய ஒரு யுத்தமும் செய்தவர் அல்ல, தற்காப்பிற்காக இரு யுத்தம் செய்தார். மெக்காவினை பிடித்தபொழுது ஒரு சொட்டு ரத்தமும் அவர் சிந்தவிடவில்லை மாறாக அவர்களை மன்னித்தருளினார்
அந்த பெருந்தன்மைதான் பின்னாளைய கலீபாக்கள் மாபெரும் சாம்ராயத்தை உருவாக்க வைத்தன. அந்த சாம்ராஜ்யத்தில் யூதரும், கிறிஸ்தவரும் வாழ்ந்தனர். துளி கலகமுமில்லை
சலாவுதீன் போன்றவர் ஆட்சியில் ஜெருசலேமில் யூதருக்கும் கிறிஸ்தவருக்கும் எந்த குறையுமில்லை அப்படி எல்லாம் காலமிருந்திருக்கின்றது, நபிபெருமானின் பெரும் சாதனை அது. அவர் போதனையின் தாக்கம் அப்படி இருந்திருக்கின்றது
இதெல்லாம் ஓட்டோமன் சாம்ராஜ்யம் வரை தொடர்ந்திருக்கின்றது
பின் எங்கு சிக்கல் வந்தது என்றால் எண்ணெய் வளம் வந்ததில் இருந்து, அதில் வெளிநாடுகள் தலையிட்டதில் இருந்து
ஆம் அதுவரை இஸ்லாமியர்களாக ஒன்றுபட்டு இருந்த இனங்கள், புது பணக்காரர்கள் ஆனபின்பு அந்த பணத்திலும் வசதியிலும் நிலைக்க மீண்டும் முகமது நபி காலத்திற்கு முற்பட்ட அந்த இன குழு மோதலுக்கு திரும்பிவிட்டார்கள்.
"தங்கள் ஒற்றுமைக்கும் நலனுக்கும் தானே இறைவன் நபிபெருமானை அனுப்பினான், அதனால் மாபெரும் அமைதி சாம்ராஜ்யம் எல்லாம் கண்டோமே, மதங்களை ,இனங்களை எல்லாம் தாண்டி மகா ஒற்றுமையாக இருந்தோமே இன்று ஏன் மோதிகொள்கின்றோம்?" என அவர்கள் சிந்தித்தல் வேண்டும்.
இந்த எண்ணெய் பணத்தின் வசதியும், அதிகாரமும் அல்லவா அந்த நபிபெருமானின் போதனைகளை மீறி நம்மை சண்டையிட வைக்கின்றது என அவர்கள் சிந்தித்தாலே அங்கு அமைதி நங்கூரமிடும்
தங்கள் வரலாற்றையும், தங்களை ஒற்றுமையும் அன்பும் சமாதானமும் நிறைந்த சமூகமாக மாற்ற நபிபெருமான் செய்த முயற்சிகளையும் , அதன் பின் இன்றளவும் பெருமையாக பேசபடும் அந்த தூய கலீபாக்களின் ஆட்சியினை கண்ட அந்த காலத்தையும் நினைத்தாலே போதும்,
அவர்கள் மனம் மாறும் அரபுகளின் காதில் விழும் வெடிசத்தம் நிற்கும், தேசங்களின் அழுகை நிற்கும்.
அந்த பிஞ்சுகளின் முகமும் பூக்கும்
கூடவே பாலஸ்தீன அழுகையும் புன்னகையாக மாறும்
இந்த உலகில் அமைதியான நாடுகள் குறைவு, அதில் நம் பாரத தேசம் எவ்வளவோ கொடுத்து வைத்தது. ஓரளவு பாதுகாப்பான தேசத்தில் அமைதியாக வாழ்கின்றோம்
பிழைக்க வெளிநாடு சென்றிருப்போமே அன்றி இத்தேசத்தில் வாழமுடியாது, பாதுகாப்பு இல்லை என்ற நிலை வந்ததில்லை. இத்தனைக்கும் ஏகபட்ட மதம், மொழி,இனம் என பல விஷயங்கள்
அதனை தாண்டி நிலைத்து நிற்பதுதான் இத்தேசத்தின் மகா சிறப்பு
சுதந்திர போராட்ட காலத்தில் கூட இந்திய அகதிகள் என யாரும் உருவாகவில்லை, இனி எக்காலத்திலும் உருவாக விடவும் மாட்டோம்
உலகின் பல நாடுகளை பாருங்கள், சிரியா, லிபியா ஏமன் என பலவற்றை பாருங்கள்,குறிப்பாக அக்குழந்தைகளையும் நம் குழந்தைகளையும் காணுங்கள்
பள்ளிக்கு சென்றுவிட்டு வீதியில் விளையாடும் நம் குழந்தைகளையும், மாலையில் நம் தோளோடு விளையாடும் அக்குழந்தைகளையும். சிரியாவிலும் ஈராக்கிலும் மழலை மொழியில் ரத்தம் வழிய "எங்க வீட்டுல குண்டு விழுந்து ஆனா நான் சாகலை அப்பா செத்துபோனாங்க" என அப்பாவியாய் சொல்லும் அக்குழந்தைகள் பேச்சையும் கேளுங்கள்
இத்தேசத்தின் அருமை அந்நொடியில் உங்களுக்கு விளங்கும், தானாக இத்தேசத்தை கைஎடுத்து வணங்குவீர்கள். இந்தியா என்பது மகா இனிமையாக கம்பீர்கமாக, பெருமையாக‌ உங்கள் காதுகளில் ஒலிக்கும்"

சிரியா போரினை உற்று கவனியுங்கள். அந்த அழிவுகளை பாருங்கள்

சிரியா போரினை உற்று கவனியுங்கள். அந்த அழிவுகளை பாருங்கள்
காஷ்மீரில் ஏன் இந்தியா மூன்றாம் நாட்டு தலையீட்டை ஏற்கவிலை என்பதும், பாகிஸ்தான் ஏன் அப்படி வேண்டும் என அடம்பிடிப்பதும் புரியும்
மூன்றாம் நாட்டை அனுமதித்தால், நான்காம் நாடு ரகசியமாக வரும், பின் கூடவே ஆயுதமும் வரும். பின் என்ன மாபெரும் அழிவுதான்
காஷ்மீரில் அந்த அழிவினை கூடுமானவரை தவிர்த்தே இந்தியா தக்கவைத்து வருகின்றது, இதனால் இந்திய ராணுவம் சந்திக்கும் இழப்பும் அதிகம்
எப்படியாவது மூன்றாம் நாடு அதில் தலையிட வேண்டும், அச்சூழல் வரவேண்டும் என பாகிஸ்தானை தூண்டிவிட்டு சிலநாடுகள் செய்யும் சூழ்ச்சியினை நம் வீரர்கள் உயிர்கொடுத்து முறியடிக்கின்றனர்
ஈழத்தில் இன்னொரு நாட்டுபடை வந்து குதறிபோட்டிருக்கும் நிலையில்தான் இந்தியபடை சென்றது. சர்ச்சைகள் கூட புலிகள் மோதலுக்கு பின்பேதான்
அதுவும் இந்திய ராணுவம் பொறுப்போடு இருந்தது, அங்கு அன்றே முள்ளிவாய்க்காலை நிகழ்ந்த்த இந்திய ராணுவத்திற்கு சில நொடி ஆகியிருக்காது , ஆனால் மக்கள் அழிவை எண்ணி கைகளை கட்டிகொண்டு அடிவாங்கியது
இதனை எல்லாம் பின்பு முள்ளிவாய்க்காலில் சிங்களன் மொத்தமாக கொள்ளிவைத்தபொழுதுதான் எல்லோருக்கும் புரிந்தது
சில கணக்குகளை புரிந்துகொள்ள தகுந்த உதாரணம் வேண்டும்
சிரியாவினை நன்கு பாருங்கள், கவனியுங்கள். ஈழ விவகாரம் முதல் காஷ்மீர் வரை இந்தியா எவ்வளவு நிதானமாக அழிவுகளை குறைக்க பாடுபடுகின்றது எனபது புரியும்
இந்த தேசத்தின் பெருந்தன்மையும், அதன் மாபெரும் முன்னெச்செரிக்கையும், தியாகமும் புரியும்.
ஜெய் ஹிந்த்.

கிறிஸ்துவை யூதர்களுக்கு கொஞ்சமும் இன்றுவரை பிடிக்காது

இங்கே ஆளாளுக்கு கிறிஸ்தவர்கள் இஸ்ரேல் வாழ்க என சொல்லிகொண்டிருக்கின்றார்கள், டிரம்ப் கூட ஜெருசலேமிற்கு அமெரிக்க தூதரகத்தை மாற்றுவேன் என சொல்லிகொண்டிருக்கின்றார்
ஆனால் அங்கே நிலை என்ன?
கிறிஸ்துவை யூதர்களுக்கு கொஞ்சமும் இன்றுவரை பிடிக்காது, அவர் தங்கள் பெருமையினை கெடுக்க வந்த கோடாரி காம்பாகவே கருதுகின்றார்கள். தாங்கள் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் இயேசு எனும் குட்டிசாத்தானே முழு காரணம் என்பது அவர்களின் மனமார்ந்த நம்பிக்கை
அதனால் ஜெருசலேமில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயங்களை எல்லாம் கண்டுகொள்வதில்லை, சிலவற்றை பல்லை கடித்துகொண்டு பொறுத்துகொள்கின்றார்கள்
ஆனாலும் அவ்வப்போது பழிவாங்க தவறவில்லை, இப்பொழுது இயேசு கல்லறை அமைந்த ஆலயத்தில் வில்லங்கத்திற்கு வந்தாயிற்று
அந்த ஆலயம் இன்று ஒரு இஸ்லாமிய குடும்பத்தால் நிர்வகிக்கபடுகின்றது, அவர்கள்தான் அந்த பாரம்பரிய புனிதமான இடத்தின் தற்போதைய அதிகாரம் கொண்டிருப்பவர்கள்,சாவி அவர்களிடம் தான் உண்டு
அவர்களால் இன்றுவரை ஒரு சிக்கலும் இல்லை
இஸ்ரேல் அரசு அந்த புனிதமான ஆலயத்தை ஆலயம் என்ற வரிசையில் கொண்டுவராமல், வியாபார நிலையம் என்ற வரிசையில் கொண்டு வந்து பெரும் வரிகளை சுமத்திற்று
இது ஆலயம், கர்த்தராகிய தேவன் உயிர்த்தெழுந்த ஆலயம் , இதுவா வியாபார நிலையம் என கிறிஸ்தவர்கள் கேட்டும் இஸ்ரேல் இறங்கவில்லை அவர்கள் கிறிஸ்தவ வெறுப்பு அப்படி
இதனால் கோவில் பூட்டபட்டது, சுற்றுபயணிகள் பாதிக்கபட்டனர், விஷயம் கொஞ்சம் வெளியில் வந்தது 3 நாட்களில் விஸ்வரூபமெடுத்தது
மேற்கு நாடுகள் எங்களிடமே உங்கள் வேலையினை காட்டுவீர்களா என முறைக்க இப்பொழுது வரிவிலக்கு அளித்துள்ளது இஸ்ரேல் இதனால் ஆலயம் திறக்கபட்டுள்ளது
இயேசு வாழ்ந்த காலத்தில் யூத ஆலயம் வியாபார தலமானதை எதிர்த்து எல்லோரையும் அடித்து விரட்டினார். அதற்கு 2030 வருடம் கழித்து அவர் கல்லறையினை வியாபார தலம் என அறிவித்து பழிவாங்குகின்றார் இஸ்ரேலியர்
இங்கு இது தெரியாமல் பல கிறிஸ்தவர் "இஸ்ரேல் வாழ்க, தேவன் இஸ்ரேலை பாதுகாத்தார் அல்லேலூயா.." என அழிச்சாட்டியம் செய்கின்றார்கள்
பரிதாபத்திற்குரிய கூட்டம் இது

Tuesday, February 27, 2018

சமணர் கழுவேற்றம்


சிரியாவின் தற்போது நடைபெறும் முஸ்லிம் இனகுழு தீவிரவாதம் போல வேறு மதத்தில் உண்டா..

வைணவர்களும் சைவர்களும் 8~10 நூற்றாண்டில் சிரியா முஸ்லிம் மதக்குழு போல மோதி கொண்டதாக நயன்மார்கள் ஆழ்வார்கள் வரலாறு சொல்கிறது ..
சிரியாவை விட மோசமாக எழாம் நூற்றாண்டில் மதுரை வட்டத்திலே சுமார் 8000 ஜைன் மதத்தினரை சிவனை கும்பிடும் சைவ மதத்தினர் கொடுரமாக கழுவேற்றி கொன்று உள்ளனர் .
சமணர் கழுவேற்றம் என்பது நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வு சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் நூலில் உள்ள குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், அந்தணர் மரபிலே, கவுணியர் குடும்பத்தில் சம்பந்தர் பிறந்தார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
ஞானசம்பந்தரால் சைவ சமயத்தை மீண்டும் தழுவிய பாண்டிய மன்னன் சைவ சமயத்தைத் தழுவ மறுத்த எண்ணாயிரம் சமணர்களை மதுரை அருகே உள்ள சாமணத்தம் என்னும் இடத்தில் கழுவேற்றினான் என்று சொல்லப்படுகிறது.
கழுவேற்றம் (impalement) என்பது ஒரு மரணதண்டனை முறையாகும். கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றுவர்.
அதற்குமுன் கழுமரத்தில் எண்ணெய் தடவி கழுவேற்றப்படுபவனை பிடித்து நிர்வாணமாக்கி, அவனை குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயை கழுமுனையில் வைத்து அப்படியே செருகி விடுவார்கள். உடலின் எடையால், எண்ணைதடவிய கூர்மையில் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக உடலை துளைத்துக் கொண்டு மேலேறும்.
கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேற ஏற வலி தாங்காமல் இரவெல்லாம் கூப்பாடு போட்டு மடிந்து போவார்க்ள்.
சாதாரணமாக இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து புதைப்பார்கள். அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுமரம் ஏற்றப்பட்டவர்களுக்கு இது கிடையாது.
கழுவிலேற்றப்பட்ட உடல் பறவைகளுக்கும்,நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும். கழுமரம் பெரும்பாலும் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். அதனால்தான் அதனைக் கழுமரம் என்று குறிப்பிட்டனர். இரும்புக் கழுவும் இருந்தது. இந்த இரும்புக் கழுமரத்தை வெங்கழு என்று குறிப்பிட்டனர். இந்த வெங்கழு தமிழகத்தில் ஈரோடு காளிங்கராயன் கால்வாய்க்கு அருகில் உள்ள 'அய்யனாரப்பன் கோவிலில்' இன்றும் உள்ளது.
தனது சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எனும் நூலில் திரு.வி.க போதிய அகச்சான்றும் புறச்சான்றும் இல்லாததால் சமணர் கழுவேற்றத்தைத் தான் ஏற்றுக்கொள்ள முடியாதெனக் கூறியுள்ளார்.
முனைவர் கொடுமுடி ச. சண்முகன் தான் எழுதிய எண்ணாயிரம் என்ற நூலில் எண்ணாயிரம் சமணர் என்பது சில சமணர்களை கொண்ட குழுவே என்றும் எழுதியுள்ளார்
"எண்ணாயிரம்" சமணர் என்ற பெயர் சுட்டில் சமணர்களின் முன்னொட்டு பெயராக வரும் எண்ணாயிரம் என்பது 8000 சமணர்களை குறிக்கிறதா அல்லது எண்ணாயிரம் என்ற ஊரில் வாழ்ந்த சமணர்களின் குழுவைக் குறிக்கிறதா என்பதில் அறிஞர்களிடம் மாற்றுக்கருத்துகள் உண்டு.
ஆனால் சமணரைக் கழுவேற்றிய படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 63ஆவது படலமாகும். இப்படலம் பாண்டியன் சுரம் தீர்த்த படலம் என்பதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.
இப்படலத்தில் பாண்டிய மன்னனின் சுரத்தினை திருஞானசம்பந்தர் தீர்த்தபின்பு நிகழந்தவைகளை குறிப்பிடப்பட்டுள்ளன. மன்னின் நோயைக் குணப்படுத்த முடியாத சமணர்கள் திருஞானசம்பந்தரை அனல் மற்றும் புனல் வாதத்திற்கு அழைப்பதும், அதில் தோற்றுப்போனால் தங்களை கழுவேற்றலாம் என வாக்குறிதி அளிப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளன.
மதுரையில் கூன்பாண்டியன் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் கொடுமைக்கான ஆதாரங்கள் என மூன்று சான்றுகளை அறிஞர்கள் வைக்கின்றனர் .
முதல் சான்று:
சுவரோவியங்களும் சிற்பங்களும். முதலில் சமணர்களைக் கழுவேற்றியதை அன்றைய ஆட்சியாளர்கள் வெற்றியாகவே கருதினர். அதனால்தான் அதுகுறித்த ஓவியங்களை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்தைச் சுற்றிலும் இருக்கும் சுவர் களில் தீட்டி வைத்துள்ளனர்.
இரண்டாவது சான்று:
கந்தர்சஷ்டி கவசங்களில் கொலைக்களத்துக்கு வெகு அருகில் இருக்கும் பழமுதிர்ச்சோலை கவசம் பாடிய தேவராயக் கவிராயர் ‘எண்ணாயிரம் சமணர்களை எதிர்கழுவேற்றி’ எனப் பாடுவார்.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் எழுதிய பெரிய புராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் திருஞான சம்பந்தரின் கீர்த்தியாக இந்தக் கழுவேற்றத்தைப் பற்றிப் பேசுகிறது.அதில் மதமாற்றம், அதாவது சமணத்திலிருந்து சைவத்துக்கு மாறும்படியான பாண்டி யனின் கட்டளையை ஏற்காத எண்ணாயிரம் சமணர்கள் ஆனைமலை மற்றும் இதர மலைகளிலிருந்து இறங்கிக் கழுவேறினர் என்கிறது.
ஞானியான சம்பந்தர் சைவ மடங்களின் நலனுக்காகவே இந்தக் கழுவேற்றத்தை நிறைவேற்றினார் என் கிறது. பெரும்பற்றப் புலியூர் நம்பி எழுதிய திருவிளையாடல் புராணமும், பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணமும் அதைப் பெருமிதமாகவே பேசுகின்றன.
மூன்றாவது சான்று:
வெகு மக்களின் சடங்குகள் வழியாகக் கைமாற்றப்படும் நினைவு வரலாறு. இது நாட்டார் பாடலாகவும் திருவிழாவின் பகுதியான சடங்காகவும் நிகழும். இன்று வரை மதுரை மேற்கில் இருக்கும் மேலக்காலில் இருந்து கிழக்கில் இருக்கும் திருப்புவனம் வரை சிவன் கோயில் விழாக்களின் பிரிக்க முடியாத அங்கமாக, கழுவேற்றம் என்னும் சடங்கு தவிர்க்க முடியாத வகையில் நிகழ்ந்துவருகிறது.
அது நிகழும் இடம் திருப்புவனத்தில் ‘கழுவேற்றப் பொட்டல்’என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. இன்னும் மிச்சமாகப் பல்வேறு திருவிழாக்களின் பகுதியான சடங்காக இன்று வரை கழுவேற்றம் என்பது ‘பெருமிதத்துடன்’நிகழ்த்தப்படுகிறது.
மொத்தத்தில் தீவிரம் + வாதம் உடன் மதம் கலக்கும் போது அது தீவிரவாதம் ஆகிறது ..
அதில் சிரியா என்ன .. திருஞானசம்பந்தர் என்ன .. பின்லேடன் என்ன ஞானபெண்ணே ..
நீங்கள் செலவழித்த மணி துளிகளுக்கு நன்றி 🙏
Data Complied by #Savera based on References
பெரியபுராணம் முலமும் உறையும் - மூன்றாம் பாகம், புலவர்.பி.ரா.நடராசன், உமா பதிப்பகம், சென்னை
சமணரைக் கழுவேற்றிய படலம் - பெரியபுராணம்
சேக்கிழார். பெரியபுராணம். பாடல் எண் - 2751.
John Cort (1998). Open Boundaries: Jain Communities and Culture in Indian History. SUNY Press.
Steven Paul Hopkins Associate Professor of Religion Swarthmore College in Pennsylvania .
Singing the Body of God : The Hymns of Vedantadesika in Their South Indian Tradition: Oxford University Press.

மகா கணபதிம்

மகா கணபதிம்
==========
எங்கள் பயிலகம் ஒரு பரந்த அரச மரத்தடியில் நடக்கிறது. அந்த அரசோடு ஒரு வேம்பும் பிணைந்து வளர்ந்து நிற்கிறது.
அங்கு வினாகயருக்கு ஒரு சிலையும் மேடையும் அமைத்திருக்கின்றனர்.
அங்கு வரும் குழந்தைகள் படிக்கிறார்கள். விளையாடுகிறார்கள். சில சமயம் படம் பார்க்கிறோம். வானம் பார்க்கிறோம். மிகுந்த விருப்புடன் பாடக் கற்றுக்கொண்டு குழுவாகப் பாடுகிறார்கள்.
பாரதியின் 'எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி' பாடலை மிக ஆர்வமாகப் பாடுகின்றனர்.
வினோபாவின் சர்வசமயப் பாடலான ‘ஓம் தத் சத்’ பாடுகிறார்கள். அதை ஆங்காங்கே தமிழொலிப்பு கொண்ட வடமொழி/சர்வமொழிப் பாடல் எனலாம்.
அகர முதல எழுத்தெல்லாம் பாடுகிறார்கள்.
எங்களிடம் வருபவர்களில் பெரும்பாலானோர் தலித் மாணவர்கள். தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் பிற சாதி மாணவர்கள் ஓரிரு வாரங்களிலேயே நின்றுவிட்டார்கள். தனியார் பள்ளியில் படிக்கும் ஓரிரு தலித் மாணவர்களும் அடுத்த சில வாரங்களில் நின்றுவிட்டார்கள். அரசுப் பள்ளியில் படிக்கும் பிற சாதி மாணவர்கள் மேலும் சில வாரங்களில்.
அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வந்துவிட்டது. ஒரு சிலர் தமிழ்வழியிலும், ஒரு சிலர் ஆங்கிலவழியிலும் படிக்கிறார்கள். ஐந்தாவதுக்குள் இருக்கும் பெரும்பாலனவர்கள் ஓரளவு நன்றாக ஆங்கிலம் படிக்கப்பழகிவிடுகிறார்கள், எதுவும் புரியாமலே. அண்மையில், வெளிநாட்டிலிருந்து வந்திருந்த குழந்தைகள்-மனோதத்துவ நிபுணரோடு, நாங்கள் சென்றிருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில், பட்டவகுப்பு மாணவர்கள் ஒருவர்கூட ஆங்கிலத்தில் பேசமுடியவில்லை. நாங்கள் ஆங்கிலம்-தமிழ்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பு செய்யவேண்டியிருந்தது.
எங்கள் பங்குக்கு எங்கள் குழந்தைகளுக்கு நாங்களும் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க முயல்கிறோம். ஷேக்ஸ்பியரின் Where the bee sucks பாடுகிறார்கள். Flyய்ய்ய்ய்ய்ய் என்று இழுக்கும்போதும், Merrily, merrily shall I live now என்னும் போதும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை படித்துப் பழகாதவர்களும் சேர்ந்துகொள்கிறார்கள்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே விரும்பிப் பாடுகிறார்கள். ஒளி படைத்த கண்ணினாய் பாடுகிறார்கள்.
மிக அதிக ஆரவாரத்துடன், 'தன்னன்ன னாதினும்' என்று பூஞ்சோலைக்கு வரும் ஆத்தாவைக் கூவி அழைக்கிறார்கள். இது என்ன சந்தைக் கடையா, மீன் விற்கிறாங்களா என்று தினமும் ஒரு எட்டு வயதுக் குழந்தை கேட்கிறாள்.
ஒரு சிலர் சர்ச்சுக்கும் போவதாகச் சொல்கிறார்கள்.
இந்தப் பாடல்களையெல்லாம் அவர்களுக்குக் கற்றுத் தரும் எங்கள் மகள், சகவாச தோசத்தால் எந்தக் கடவுளையும் வணங்குவதில்லை. திருமுறை பாடக்கற்றுத்தரும் அவளது ஆசிரியை சொல்லும்போது மட்டும் எப்போதாவது திருநீறு இட்டுக்கொள்கிறாள். நிறைய கல்லூரிகளில் இறைவணக்கம் பாடிவிட்டாள்.
பயிலகம் தொடங்கிச் சில நாட்களில் ஒரு பெரியவரும் வேறு சிலரும், கோயில் மேடையின் மீது அமரக்கூடாது, கீழேதான் அமர வேண்டும் என்று பிரச்சனை செய்ய ஆரம்பித்தனர். "சீட்டாடுவதற்கும் தண்ணி அடித்துவிட்டும் மேடை ஏறினால் பிரச்சனை இல்லையா?" என்று கேட்டோம். 'ச**** பசங்கள மேல ஏத்திட்டீங்களா?' என்று பொங்கினார்கள். கொஞ்ச நாள் போராடிப் பார்த்துவிட்டு, 'நீங்களாச்சு உங்க கோயிலாச்சு, கிடைத்த இடத்தில் இவர்களைப் படிக்க வைப்பது முக்கியம்' என்று இப்போது கீழேயே அமர்ந்துகொள்கிறோம்.
பொங்கலின் போது எங்கள் குழந்தைகளெல்லாம் புத்தாடையுடனும் முகமெங்கும் அப்பிய புன்னகையுடனும், ஒரு சிலர் பெரியவர்களோடு சேர்ந்து வெவ்வேறு வகைத் தாள வாத்தியங்களை அடித்துக்கொண்டும், ஊர்வலமாக ‘பூ நோம்பி’க்கு மாதங்கியம்மன் கோவிலுக்குச் சென்றார்கள். கோயில் வாசல் ஒரு வடிகட்டியானது. எங்கள் குழந்தைகள் அனேகரும் குதூகலம் குன்றாமல் வெளியில் தான் நின்றனர். குதூகலம் வற்றிப்போய் நாங்களும் வெளியில் நின்றுகொண்டோம்.
கோயில் திருவிழாவில் கலந்துகொள்ளாமல் கிராமத்தோடு ஒன்றவே முடியாது என்று அனுபவசாலி நண்பர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். இன்றைக்குக் காளியாத்தா கோயில் திருவிழா. மீண்டும் இதே காட்சிகள் அரங்கேறும். சென்ற ஆண்டு பக்கத்து கிராமத்தில் இருந்தோம். மஞ்சள் நீராட்டின் போது, ஊர் முழுக்க வலம் வந்த அம்மன், காலனிக்கு வெளியிலேயே நின்று, எல்லாரும் ஆடிய பின்னர், திரும்பினாள். இங்கும் இவ்வாறான வடிகட்டிகள் மேலும் இருக்கும். யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்று கிராமத்தில் எல்லாரும் இருக்கிறார்கள்.
நாங்கள்தான் கலகம் செய்யவும் மனமில்லாமல், கலந்து கொள்ளவும் மனமில்லாமல் கிராமத்துக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறோம்.

https://www.facebook.com/story.php?story_fbid=10155453974437894&id=739692893

Monday, February 26, 2018

சீமான் நாம் தமிழர் கட்சியை கைப்பற்றிய கதை



2009 ஈழ இனப்படுகொலைக்கு பிறகு எழுந்த மிகப்பெரிய எழுச்சியை வைத்து தொடங்கப்பட்டது நாம் தமிழர் இயக்கம். இதை பெரியாரிய இயக்கங்கள் தான் வளர்தெடுத்தது . அந்த சமயத்தில் சீமானுக்கு பெரிய ரோல் எதுவும் கிடையாது . அண்ணன் சுப.முத்துகுமாரை வைத்தே இயக்கம் நடந்து வந்தது. இந்த சமயத்தில் தான் நாம் தமிழர் இயக்கம் 2010 ஆம் ஆண்டும் சுப.முத்துகுமார், சீமான் மற்றும் பெரியாரிய இயக்கங்கள் இணைந்து மதுரையில் நாம் தமிழர் கட்சியை அறிவித்தனர். நிற்க
அண்ணன் சுப முத்துகுமார் அவர்கள் தமிழ்தேசியத்திற்காகவே உழைத்தவர் . விடுதலை புலிகளுக்கு உதவியதாக சிறையில் இருந்தார். சிறையிலிருந்து வெளிவந்ததும் புலிகளுக்கு உதவி செய்தவர் . இது இந்திய உளவுத்துறையின் கண்ணை உருத்தியது . அண்ணன் சிறிது நாள் தலைமறைவாக இருந்து வந்தார் .

நாம் தமிழர் கட்சி ஆரம்பித்தவுடன் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதில் முத்துகுமாரின் மேல் அனைவருக்கும் மதிப்பு அதிகமாவதை பொறுத்துகொள்ள முடியாத சில அல்லறை சில்லைறைகளும்,சீமானும் சேர்ந்துகொண்டனர் . கட்சி தொடங்கி சில மாதங்களிலே சுப. முத்துக்குமாரை கூலிப்படை கொலைசெய்கிறது .முத்துகுமாரின் ஊர்வலத்தில் அண்ணன் சீமான் கண்ணீர் மல்க வீரவசனம் பேசினார். ஆனால் இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளில் ஊத்தி மூடப்பட்டது .இதில் தான் அண்ணனின் சூச்சமம் இருக்கிறது .

கட்சியில் இருந்த சுப.முத்துகுமாரின் தோழர்கள் எதிர்த்து கேள்வி கேட்க அதற்கு பதில்சொல்ல முடியாமல் அவர்களை கட்சியை விட்டு நீக்குகிறார். கட்சியை தன்னுடைய கட்டுப்பாடில் கொண்டுவருகிறார். சீமானின் சுயரூபம் தெரிந்தவுடன்
நாம் தமிழரின் ஆதரவு தளம் உடைகிறது .ஈழத்துக்காகவும் தமிழக மக்களின் வாழ்வுக்காகவும் இரவுபகல் பாராமல் உழைத்த அத்தனை தோழர்களும் தன்னுடைய பேச்சுக்கு உடன்படாதவர்களையும் சில அல்லறை சில்லறைகளை வைத்து அவதூறு பரப்பச்செய்து தோழர்களுக்கு களங்கம் ஏற்படுத்தி கட்சியை விட்டு நீக்குகிறார். சீமானின் போக்கை கண்டித்து கட்சியை விட்டு உண்மையாக நாம் தமிழர் கட்சி உருவாகக் காரணமாக இருந்த முக்கியமான நபர்கள் அதிகமானோர் வெளியேறுகிறார்கள்.தற்போது அந்த கட்சி எதற்கு உருவாக்கப்பட்டது என்று தெரியாத சில்லறைகள் தான் அந்த கட்சியை இயக்கி கொண்டு இருக்கிறது .அனைத்து முக்கிய தோழர்களும் வெளியே வந்தவுடன் அது சில குறிப்பிட்ட சாதி பற்றாளர்களின் கொட்டமாக மாறிவிட்டது .அதன் பிறகு தான் சில்லறைகளின் பேச்சை கேட்டு பெரியாரிய எதிர்ப்பை பேச தொடங்குகிறார் .இப்போது அந்த கட்சியை சில பார்ப்பனர்களும், சாதி பற்றாளர்களும் வழி நடத்திகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் தான் இதற்கு அஜண்டா போட்டு எழுதி கொடுக்க அதை சீமான் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கிறார். அந்த பின்னாடி இருந்து கண்டண்ட் கொடுக்குற குரூப் சங்கர் அப்பா, கல்யாண சுந்தரம் ,இடும்பாவனம் கார்த்தி இன்னும் சிலர் இருக்கிறார்கள். இவர்களுக்கும் கட்சி தொடங்கப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை .

அந்த கட்சியில் இருந்து வெளியே வந்த முக்கிய தோழர்கள் :-

1)மதுரை செந்தில்
2)திருநெல்வேலி கரிகாலன்
3)அதியமான்
4)அம்பத்தூர் சுந்தரமூர்த்தி
5)டேவிட் பெரியார்
6)திருநெல்வேலி மணிகண்டன்
7)கோயம்புத்தூர் சந்திரன்
8 )பெரம்பலூர் வீரமுத்துகுமார்
9)ராமநாதபுரம் திருமுருகன்
10)ஐயநாதன்
11)சிபி சந்திரன்
12)தூத்துக்குடி பிரபு
13)தஞ்சாவூர் நல்லதுரை
14)நீலகிரி ஆனந்தன்
15)வேலூர் திருமலை
16)விழுப்புரம் சைலேந்தர்
17)கூடலூர் ஆனந்த

இன்னும் பலர் உள்ளனர் . நாம் தமிழர் இயக்கம் தொடங்கி கட்சிக்காக உழைத்த அத்தனை தோழர்கள் மீதும் சில்லறைகளை வைத்து அவதூறு பரப்ப செய்தவர் சீமான் .

எதற்காக கட்சி தொடங்கப்பட்டதோ சிலரின் சுயநலத்திறகாக அந்த கட்சி பண வேட்டைக்கு பயண்பட்டுகொண்டு இருக்கிறது . கட்சியை உருவாக்க பாடுபட்ட அத்தனை பேருக்கும் துரோகம் செய்துள்ளார் சீமான். சுப.முத்துகுமார் அண்ணனின் கனவு அனைத்தும் இன்று பணத்திற்காக விற்க்கப்பட்டு கொண்டு இருக்கிறது.

ஏழாம் அறிவு விஷம் தோய்ந்த வசனம்

சன் டிவியில் ஏழாம் அறிவு திரைப்படம் ஒடிக் கொண்டிருக்கிறது.
அதில் ஸ்ருதிஹாசன் கேரக்டர்
“நம்ம நாடு ரிசர்வர்வேசன் ரெக்கமெண்ட்டேசன் பண்றதாலத்தான் திறமையானவங்க வெளிநாடு போறாங்க” என்று சிபாரிசுடன் சமூகநீதி விஷயமான இடப்பங்கீட்டையும் சேர்த்து விடுகிறார்.
எவ்வளவு விஷம் தோய்ந்த வசனம் இது.
இதை இயக்கிய முருகதாசும் சரி,
படத்தை தயாரித்த உதயநிதி ஸ்டாலினும் சரி நிச்சயமாக பார்ப்பனர்கள் அல்ல.
ஆனால் பார்ப்பனியத்தை இவ்வசனம் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
உதயநிதி இப்படத்தை பார்த்திருப்பார்தானே.
இந்த வசனம் அவரை உறுத்தவில்லையா என்ன ?
உதாரணமாக ஒரு வில்லன் கதாபாத்திரத்துக்கு
கருணாநிதி என்று முருகதாஸ் பெயர் கொடுத்திருந்தால் உதயநிதி பெயரை மாற்ற சொல்லி இருப்பார்.
ஏனென்றால் உதயநிதியின் உணர்வும் அறிவும் அதைப் புரிந்து கொள்கிறது.
ஆனால் உதயநிதியின் காதுகள் ரிசர்வேசன் வசனத்தை புரிந்து கொள்ளவில்லை. ஏனென்றால் அவருக்கு அடிப்படை சமூகநீதியை கருணாநிதியோ, ஸ்டாலினோ கற்றுக் கொடுக்கவில்லை.
இவர் நாளை திமுக தலைவராகவும் ஆகிவிட்டால் இதே பார்ப்பனிய அறிவோடுதான் எந்தப் பிரச்சனையையும் கையாள்வார்.
வெளங்கிரும்.
திராவிட கழகத்தினர் முதலில் கலைஞர் ஃபேமிலி குழந்தைகளுக்கு ஸ்பெசல் டியூசன் எடுங்கப்பா.
முதல்லேயே அவுங்கள தயார் படுத்துங்க. நாட்டுக்கு அதுதான் நல்லது.
சுப வீரபாண்டியன ஹோம் டியூசன் சொல்லிக் கொடுக்க அனுப்பி வைங்க.
டியூசன் ஃபீஸ் வேணா கலெக்ட் பண்ணி தரோம்.

சாதி இங்கே ஒரு மனநிலையாக கெட்டியாகிவிட்டது. its a state of mind. நாம் அனைவரும் அந்த நோயால் பிடிக்கப்பட்டிருக்கிறோம்.”

ஒரு ஆட்டோ டிரைவர் தன்னை தேவர் ஜாதியை சேர்ந்தவர் என்று முன்னிலைப்படுத்திக் கொண்டவர்
மிக வெள்ளந்தியாய் பேசிக் கொண்டு வந்தார்.
தன் மகன் குரூப் 4 தேர்வு எழுதிருப்பதாக சொன்னார்.
“அப்படியா சூப்பர். என்ன படிச்சிருக்காரு” நான்
“பி.ஈ முடிக்க போறான்” அவர்
“அப்ப எதாவது கோச்சிங் கிளாஸ் சேர்ந்து பெரிய லெவல் தேர்வு எழுதச் சொல்லுங்கண்ணே”
“கோச்சிங் கிளாஸா எவ்ளோ செலவாகும்”
“ஐம்பதாயிரம் ஆகட்டுமே. ரெண்டு பவுன போட்டுத்தள்ளுங்க. வித்திருங்க. எதாவது தேர்வுல மாட்டிக்கும். உங்க பையன் நல்லா இருப்பாரு”
“எனக்கும் அதான் ஆசை”
“நீங்க கள்ளரா”
”இல்ல அகமுடையார்”
“அகமுடையார்னு சொல்றது ஒரு பெருமை உங்களுக்கு. இன்னும் நீங்களே மூணு சாதி ஒண்ணு சேந்து தேவரா ஆகல பாருங்க”
“ஹா ஹா ஹா அப்படி இல்ல தம்பி. தேவர்ல்லாம் ஒண்ணா சேந்தாச்சு”
‘சத்தியமா சொல்லுங்க பொண்ணு பாக்கும் போது அதெல்லாம் பாக்க மாட்டேன்னு”
“ஹா ஹா அது வசதியா அமைறதப் பொறுத்து. நீங்க எந்த ஊரு தம்பி”
“எந்த ஊரா ? எந்த ஜாதியா?” கேட்டேன்
“ (சிரிப்பு)”
“நா நாடார் சாதிண்ணே. ஆனா இப்ப நாடார் தேவர் Clash எல்லாம் வருதாண்ணே நம்ம ஊர் பக்கம்” (அவர் சிவகங்கை)
“சச்சே அது அந்த காலத்துல இப்ப அதெல்லாம் இல்ல”
“இப்ப எல்லா ஊர்லையும் எஸ்.சி கூட தான் Clash அப்படித்தாணன்னே”
“ஆமா ஆமா. எப்பவும் எதாவது பிரச்சனை”
“சட்டமும் அவுங்களுக்கு துணைண்ணே”
”ஆமா.. ஐயோ ரொம்ப தம்பி”
“எனக்கு ஒரு டவுட்டுண்ணே. இப்ப ஒரு தேவர் தலைவர் பள்ளர்கள் மாநாட்டுக்கு போறாரு. அது எப்படி ? அப்புறம் தேவர் சாதில இருந்து ரெட்டியார் சாதி பொண்ணுங்கள கல்யாணம் பண்ணினா மட்டும் எதுவும் சொல்ல மாட்டீங்களாம். என் ஃப்ரெண்டு சொன்னான்”
“அவரு எந்த ஊர்”
“அருப்புக்கோட்டை”
“அது ரெட்டியார் சாதின்னா கொஞ்சம் மேலத்தான. அது பிரச்சனை இல்லை. வேற சாதிதான் இங்க பிரச்சனை”
“வேற சாதின்னா எஸ்.சி ய சொல்றீங்க”
“ஆமா, அப்புறம் பள்ளர்கள் மாநாட்டுக்கு போனாருன்னு சொன்னீங்களே. ஊர்ல எல்லாம் இந்த குடும்பத்துக்கு வேலை செய்றது இந்த குடும்பம்னு இருக்கும்”
”ஒஹ் இந்த குடும்பத்துக்கு வேலை செய்றதுக்கு இந்த சாதிக் குடும்பம்னு இருக்கும்”
“ஆமா. அப்ப ஒரு குடும்பத்துக்கு வேலை செய்ற கிழ்சாதிக்காரன இன்னொரு தேவன் குறை சொன்னா இவன் கேப்பான்ல. எப்படி எனக்கு வேலை செய்றவன நீ திட்டலாம்னு. அப்படித்தான் நீங்க சொல்ற சாதிக்காரங்க மேல ஒரு அக்கறை”
“வேலை செய்றவங்க அதே கீழ்மட்ட வேலையே செய்துட்டு இருந்தா நீங்களும் அவுங்க மேலதான் அக்கறையா இருக்கீங்க. எல்லை மீறும் போதுதான் ரெண்டு தட்டி தட்டி கீழ இறக்கி விட வேண்டியதிருக்கு அப்படித்தான”
“அதேதான்”
“எல்லா இந்த கட்சித்தலைவர்கள் செய்றதுண்ணே எஸ்.சி ஆட்கள தூண்டி விடுறாங்கண்ணே”
“ஆமா என்னத்த சொல்ல. சிட்டிக்குள்ள (சென்னை) அவுங்க அட்டகாசம்தான். யாரு கேக்க முடியுது. ஊர்ல பிரெசிடெண்டா இருந்தாலும் ஒண்ணும் பண்ண முடியாது”
“உங்க ஊர் பிரசிடெண்ட் எஸ்.சியா”
“ஆமா”
“அது எப்படி”
“எல்லாம் சட்டம்தான்”
“ஆமாண்ணே அத அமெண்ட்மெண்ட் 73 ன்னு சொல்லுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறேன். இரநூறு ஏதோ ஆர்ட்டிகிள் வரும்னு படிச்சிருக்கேன். ஒஹ் பிரசிடெண்ட் ஆனாலும் அவரு ஒப்புக்கு சப்பாண் மாதிரி இருப்பாரு என்ன?”
“ஆமா”
“அப்ப யாரு பவரு”
“அதான் நம்மாளு வைஸ் பிரசிடெண்ட் இருப்பாருல்ல”
“ஒஹ் வைஸ் பிரசிடெண்ட் தேவரா. சும்மா பிரசிடெண்ட்ட அண்ணேன்னு சொல்லிட்டு. வைஸ் பிரசிடெண்டுக்கு முழு பொறுப்பு கொடுத்திருவீங்க. இப்ப புரியுது”
“அவன நான் ஏன் அண்ணேன்னு சொல்லப் போறேன். அப்படின்னா அப்படித்தான் நிக்கனும். பேசக் கூட பயப்படுவாங்க”
“பதவி இருந்தாலும் பவர் உங்கக்கிட்டத்தான் வெச்சிருக்கீங்க”
“ஆமா”
இப்படியாக தேவர் சாதியைச் சேர்ந்த அவரும் நாடார் சாதியைச் சேர்ந்த நானும் ஒண்ணுமண்ணாக அண்ணன் தம்பியாக பேசி பழகி சென்று கொண்டிருந்தோம்.
1.அந்த ஆட்டோ டிரைவர் அண்ணன் பொருளாதாரத்தில் நலிந்த இடத்தில்தான் இருக்கிறார். ஆனால் சாதி என்று வரும் போது மிகுந்த பெருமை கொண்டு பேசினார். சாதி பெருமிதம் அவருக்கு ஒரு இன்பம். சிறுவயதிலேயே ஏன் எதற்கு என்று தெரியாமல் அந்த வெறியை அவருக்குள் ஏற்றி வைத்திருக்கிறார்கள்.
2.அவர் சொன்ன பிரசிடெண்ட் கதையை ஒரு வன்னியர் கார் டிரைவரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். பிரசிடெண்டாக இருந்தாலும் தாழ்த்தபட்ட சாதியைச் சேர்ந்தவர் அங்கே அதிகாரமில்லாமல்தான் இருப்பார்.
3.சாதியை தவிர்த்து வாழ்க்கையில் அறநெறிக்கு கட்டுப்பட்டவராகவே அவர் இருக்கிறார்.
4. மேல் சாதி சம சாதி பற்றிய அன்பு அவருக்கு இருக்கிறது. ரெட்டியார் சாதி பற்றி பேசும் போது ரெட்டியார் சாதி பொண்ணுங்க சிவப்பா இருப்பாங்க அதனால நம்ம ஆட்கள் கட்டிக்கிடுவாங்க என்று பெருமை பொங்க சொன்னார். இதற்கு முன் பேசிய ஒரு வன்னியர் கார் டிரைவர் தான் ஒரு வேளாளர் பெண்ணை லவ் செய்து திருமணம் முடித்ததை அவ்வளவு பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார்.
5.நான் தேவரா என்று அறிய அதிக ஆவல் கொண்டிருந்தார். நான் நாடார் என்றதும் ஒரு விநாடி தடுமாறி சுதாரித்துக் கொண்டதைப் பார்த்தேன். நாடார்களை விட தேவர்கள் வீரம் விளைந்தவர்கள் என்று சொன்னதும் அவர் குழந்தை மாதிரி குஷி அடைந்தார்.
6. அவர் சாதிக்கு மேல் உயர்சாதியினர்தான் அவரை ஆள்கிறார்கள் என்பது பற்றி எந்த புரிதலும் இல்லாமல் இருக்கிறார்.
7. பிரசிடெண்டை அவர் அண்ணே என்று விழிப்பார் என்று நான் புரிந்து கொள்ளக் கூடாது என்பதில் அவர் காட்டிய வேகம் அவர் சாதி உள்ளத்தைக் காட்டியது.
”உயர் சாதி எனப்படும் சாதிகளில் 200 சாதிகள்தாம் உண்டு. அதற்கு கீழே சூந்திர சாதிகளில் மூவாயிரம் சாதிகள் உண்டு. இங்கே ஒவ்வொரு சாதிக்கும் மேலே கொஞ்சம் சாதிகளும், கீழே கொஞ்சம் சாதியும் உண்டு. கீழே உள்ளவர்களோடு ஒப்பிட்டு நாம் பெரியவர்கள் என்று சிலாக்கிக்கும் அதே வேளையில் தம்மை விட மேல் சாதியினரிடத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு “நான் ஒசந்துட்டேன்” என்று சொல்லிக் கொள்வார்கள். சாதி இங்கே ஒரு மனநிலையாக கெட்டியாகிவிட்டது. its a state of mind. நாம் அனைவரும் அந்த நோயால் பிடிக்கப்பட்டிருக்கிறோம்.”
பேராசிரியர் சத்யபால் பேசிய உரை நினைவுக்கு வந்தது.
பின்குறிப்பு : நீங்கள் சாதி பேசியிருக்கிறீர்கள் என்று மொக்கை கமெண்ட் செய்தால் ப்ளாக் செய்துவிடுவேன்.
சும்மா தலைவர்கள் பேசிய சாதி எதிர்ப்பு கொட்டேசன்ஸ் மட்டும் எப்போதும் எழுதிக் கொண்டிருக்க முடியாது.