Monday, December 27, 2004

நில நடுக்கம்

காகா உட்கார பனம் பழம் விழுந்த கதை மாதிரி, 1000 கி.மீ. தள்ளி இருக்கிற சுமத்ராவில நடந்த நில நடுக்கத்தில சென்னை அடிபட்டிருச்சு! 21 000 பேருக்கு மேல உயிர் இழந்துட்டாங்களாம், கேக்கவே ரொம்ப கஷ்டமாயிருக்கு. நம்ம ஊருல சின்ன புயல் வந்தாலே தாங்காது, இதுல இப்படி ஒன்னு வேற. "எப்ப வருவேன், எப்பிடி வருவேன்னு சொல்ல மாட்டேன், வர வேண்டிய நேரத்தில கண்டிப்பா வருவேன்" அப்படீன்னு ரஜினி சொல்ற மாதிரி இருக்கு, கஷ்டப் படரது அப்பாவி மக்கள்தான்.