Friday, June 22, 2018

திமுகவும் , அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா?

திமுகவும் , அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்/////.......இது சரியா...???
🔷தமிழக பிரச்சனைகளை கையாளமும் முறை :-
அதிமுக :- அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியதுண்டா...????
திமுக :- முக்கியமான தமிழக பிரச்சனைகளுக்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துக்களை கேட்டு முடிவெடுக்கும்.
🔷முந்தைய அரசின் திட்டங்கள்:-
அதிமுக :- திமுகவின் சமச்சீர் கல்வி, புதிய சட்டப்பேரவை, புதிய மின் திட்டங்கள் மற்றும் அண்ணா நூலகம்வரை அனைத்தையும் முடக்கிவிட்டது...
திமுக :- அதிமுகவின் சத்துணவு திட்டம், மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் ஆகியவற்றை திமுக செயல்படுத்தியது...
🔷அடக்குமுறை சட்டங்கள்:-
அதிமுக :- தடா,பொடா போன்ற சட்டங்களால் அரசியல் தலைவர்கள் பழிவாங்கப்பட்டனர்...சிலர் கஞ்சா வழக்கு போடப்பட்டு பழிவாங்கப்பட்டனர்
திமுக :- அடக்குமுறை சட்டங்கள் திமுக ஆட்சியில் ஒழிக்கப்பட்டன...
🔷அவதூறு வழக்குகள் :-
அதிமுக :- பத்திரிக்கை ஊடகங்கள் மீது அவதூறு வழக்குகள் போடப்பட்டு பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டது.
திமுக :- திமுக தலைவர் மீது இன்றுவரை ஊடகங்கள் சுதந்திரமாக அச்சில் ஏற்ற கூடாத அவதூறுகளை எழுதிக்கொண்டுதான் உள்ளன. யாரும் பழிவாங்கப்படவில்லை....
🔷கூட்டணி தர்மம் :-
அதிமுக :- கூட்டணி தர்மம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் கட்சி.வாஜ்பாய், வைகோ,ராமதாஸ்,விஜயகாந்த்,கம்யூனிஸ்ட்களிடம் கேட்டால் நன்றாக தெரியும்....
திமுக :- இந்திய தலைவர்கள் முதல் தமிழக தலைவர்கள்வரை அனைரும் கலைஞரின் கூட்டணி தர்மத்தை பாராட்டியுள்ளனர் (நண்பன் என்றால் இறுதிவரை ஆதரிப்போம், எதிரியென்றால் இறுதிவரை உறுதியாக எதிப்போம்)
🔷அரசியல் நாகரீகம் :-
அதிமுக :- மாற்றுக் கட்சியினருக்கு வணக்கும் வைக்ககூட தயங்குபவர்கள்
திமுக :-முதல்வராக இருந்த ஜெயலலிதாவையே நேரில் சந்தித்து நிவாரணநிதி வழங்கியவர் ஸ்டாலின். அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழுவில் திமுக எம்பிக்கள் கலந்து கொண்டு மோடியை சந்தித்தனர்...
🔷தமிழக வளர்ச்சி :-
முந்தைய திமுக ஆட்சியில் தமிழகத்தின் தொழில்வளர்ச்சி 33% அதிகரித்தது... அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி ‘மைனஸ்’ 3%...
தமிழக வேளாண்மை வளர்ச்சி ‘மைனஸ்’ 12 சதவிகிதம்....
கலைஞர் ஆட்சி செய்த இறுதியாண்டில் (2011) GDP எனப்படும்
பொருளாதார மொத்த உற்பத்தியானது 13.12% சதமாக இருந்தது, ஆனால், ஜெயா ஆட்சிக்கு வந்த இந்த மூன்றே ஆண்டுகளில் GDP 4.14% சதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது.....
திமுக ஆட்சியில் தமிழக உற்பத்தி வளர்ச்சி 20.18% சதம்... அதிமுக ஆட்சியில் அது 1.61% சதமாக சரிவு...
🔷அடிப்படைகட்டுமான திட்டங்கள் :-
திமுக ஆட்சியில் மட்டும் தான் தமிழகத்தில் எண்ணற்ற அடிப்படைகட்டுமான திட்டங்கள் (இன்பராஸ்ட்ரகச்சர்) செயல்படுத்தபட்டன... கணக்கற்ற மேம்பாலங்கள், நெடுஞ்சாலைகள், மின் திட்டங்கள், தொழில்சாலைகள்... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்...
அதிமுக ஆட்சியில் ஒன்றுமே கிடையாது... எல்லாம் வெறும் 110 விதி அறிக்கைகளாக ஏட்டில் மட்டும்மே உள்ளது.
🔷காவிரி பிரச்சனை :-
அதிமுக :- காவிரி ஆணையத்தை பல் இல்லாத ஆணையம் என்றது...
திமுக :- கவிரிக்காக வழக்கு தொடுத்தது,ஆணையத்தை அமைத்தது,இடைக்கால தீர்ப்பை பெற்றது , இறுதி தீர்ப்பையும் பெற்றது...
🔷அரசு ஊழியர்கள்:-
அதிமுக :- எஸ்மா சட்டம் கொண்டு அரசு ஊழியர்களை கைது செய்தது, மக்கள் நலப் பணியாளர்கள், சாலைப்பணியாளர்களின வேலையை பறித்தது
திமுக :-அரசு ஊழியர்களின் நலன் காக்கப்பட்டது
🔷ஊழல் குற்றச்சாட்டு:-
அதிமுக :-டான்சி வழக்கு, வருமானவரி வழக்கு , சொத்து குவிப்பு வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது
திமுக :- எந்த வழக்கிலாவது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை தரப்பட்டுள்ளதா...????
எல்லாவற்றையும்விடுங்கள் நடுநிலை ஊடக நண்பர்களே ஒரு நிமிடம் உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்...
உங்களால் நினைத்த நேரத்தில் நினைத்த கேள்வியை ஜெயாவிடம் கேட்க முடியுமா அல்லது கலைஞரிடம் கேட்க முடியுமா...????
திமுக எல்லாவற்றிலும் மக்கள் நலன்சார்ந்து செயல்படக்கூடிய இயக்கம்...ஆனால் அதிமுக அப்படிபட்டது இல்லை என்பதற்கு மேலே கூறியவை சில உதாரணங்கள்..
பிறகு எப்படி எந்த முகாந்திரமும் இல்லாமல் திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான் ( ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ) என்று பொத்தம் பொதுவாக கூறுகிறீர்கள்....
இனிமேலும் திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான் என்று சொல்வீர்கள் என்றால் நீங்கள் தான் ஏதோ குட்டையில் ஊறியிருக்கிறீர்கள் என்று அர்த்தம் ....

சீமானின் பொய்கள், அயோக்கியத்தனங்கள் ஒரு பார்வை.

சீமானின் பொய்கள், அயோக்கியத்தனங்கள் ஒரு பார்வை.

சீமான் பிராடுகள்

1) தலைவன் பெரியார் - தலைவனான ஏற்க முடியாது
2) மிகவும் கெட்ட வார்த்தைகளால் சிவன், முருகன், கண்ணனை திட்டியது - பின்னர் முப்பாட்டன் என்று பல்டி அடித்தது
3) விஜயலட்சுமி
4) பாண்டிச்சேரி டாக்டர்
5) கனடா பெண்
6 ) ஜெயலலிதா காலை நக்கியது
7) பஸ்ஸை எரித்து பற்றி முரண்பட்ட கருத்துக்கள்
8) 28 கிலோ ஆமைக்றி
9) வான்கோழி பிரியாணியில் யானை கால் அளவுள்ள கால்
10) பிரபாகரன் இருந்து இடத்தில் நான் இருந்திருந்தால்
11) அரிசி அளவுள்ள குண்டுடன் A74 துப்பாக்கி பயிற்சி
12) 40 டன் அரிசி கப்பலில் துப்பாக்கி பயிற்சி
13) 14 வழி சாலை (நடக்க, பைக், கார், ஆம்புலன்ஸ், காவல் வாகனம், பஸ், லாரி) அமைப்பதாக வரைவு திட்டம் ஆனால் தற்போது 7 வழி சாலைக்கு எதிராக போராட்டம்
14) சேலம் விமானநிலையம் விரிவாக்கம் பற்றி சீமானின் முரண்பட்ட கருத்துக்கள் - விரிவாக்கம் செய்து சுற்றுலாவை மேம்படுத்த படும் என வரைவு திட்டத்தில் குறிப்பு ஆனால் அதற்கு எதிராக இப்போது?
15) பிரபாகரன் பெயரை சொல்லி வெளிநாடு வாழ் இலங்கை தமிழர்களிடம் பணம் வசூல் செய்து சாதனை
16) ஈழம் அமையாமல் திருமணம் இல்லை என்று சொன்னான்
17) ஈழத்து பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று சொன்னான்
18) அருணனிடம் விட்ட சவாலில் கேவலமாக தோற்ற பிறகும் இன்னும் கட்சியை களைத்து விட்டு CPM ல் சேராதது ஏன்?
19) IPL போட்டியின் போது காவலரை தாக்கிவிட்டு தப்பி ஓடியவனை முதலில் எங்க தம்பி என்று சொல்லி விட்டு பின்பு அந்த தொம்பி எங்க கட்சியே கிடையாது என்று ஏன் சொன்னான்?
20) வைகோ அவர்கள் பிரபாகரன் பெயரை சொல்லி வெளிநாடு வாழ் இலங்கை தமிழர்களிடம் பிச்சை எடுக்கிறான் என முன் வைத்த குற்றச்சாட்டுக்கு இதுவரை ஏன் பதிலளிக்கவில்லை?
21) தன்னுடைய பெயர், பூர்வீகம், தகப்பன் பெயர் பற்றி கேட்டால் ஏன் மழுப்பலான பதில்? உண்மை கூற வேண்டிய தானே?
22) பிரபாகரன் படத்தின் முன்னாள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவன் பெண்ணுடன் கேவலமாக நடந்தான். அவன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
23) யார் தமிழன் தீர்மானிக்கும் உரிமை யார் உனக்கு கொடுத்து? 2006-2009 களில் காசுக்காக மாரடித்த கதை உலக அறியும்
24) ஆஸ்திரேலியாவில் ஹெலிகாப்டரில் மாடு மேய்க்கிறான் என்று சொல்லி தமிழ் நாட்டிலும் இப்படி செய்யலாம் என்கிறாய்? எனக்கு வாயை தவிர மற்ற இடத்திலும் சிரிப்பு வருது.
ஆஸ்திரேலியாவில் ஒரு சாதாரண விவசாயி 100 ஏக்கர் நிலம் வைத்திருப்பார். ஆனால் இங்கு சாதாரண விவசாயி 2-4 ஏக்கர் நிலம் தான் வைத்து இருப்பார்கள். இதில் எப்படி ஹெலிகாப்டரில் மாடு மேய்ப்பது? முதலில் இந்தியாவில் Person/SqFeet எவ்வளவு உள்ளது, ஆஸ்திரேலியாவில் எவ்வளவு உள்ளது என்று தெரிந்துகொண்டு பிறகு அதற்கு சாத்தியமானவற்றை பேசு. வாயில வந்தத ஒலரிட்டு இருக்காத.
26) பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறி விட்டு பின்பு வேறு ஒருவர் கூறி பிரச்சினை வந்தவுடன் அதற்கு மீண்டும் ஆதரவு அளித்தது.

இன்னும் நிறைய உள்ளன.

தொம்பிகள் யாராவது விவாதம் செய்ய தயாரா?

உணர்வுகளை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் பிரிவினைவாதி இவன்.

வித‌வைகளுக்கு மொட்டையடி. விதவைகளின் மறுமணம் விபசாரம்?

வித‌வைகளுக்கு மொட்டையடி. விதவைகளின் மறுமணம் விபசாரம்?
கணவனை இழந்த பெண் என்றால்... அவளை இறந்த கணவன‌து சிதையிலேயே வைத்து தீர்த்துக்கட்டு என உத்தரவிடுகிறது மநு ஸ்மிருதி.
விதவைகளாகி மறுமணம் முடிக்க நினைத்தால்?... இதை விபச்சாரம் என்னும் அடைமொழிக்குள் வைத்துப்பார்க்கிறது மநு.
கல்வியும் கிடையாது... 8 வயசிலேயே கல்யாணம் பண்ணிக்கொண்டு நான்கு சுவர்களுக்குள் நன்கு குடித்தனம் நடத்து.
இதுதான் மநு தர்மம் பெண்களுக்கு சொன்னது.
“சிதா வாரோஹணம் பிரம்மச்சர்யம்...”
கணவனை இழந்த பெண் என்றால்... அவளை அவனது சிதையிலேயே வைத்து தீர்த்துக்கட்டு என உத்தரவிடுகிறது மநு ஸ்மிருதி மநு மணம் முடித்து இதுபோல் கணவனை இழந்த பெண்கள், மிகச்சிறு வயதிலேயே விதவைகளாகி விடும்போது... சிதைக்கு போகாமல் தப்பித்த பெண்களும் உண்டு.
ஆனால்... அவர்களது வாழ்க்கையிலும் பயங்கர கட்டுப்பாடுகள் பின்னப்பட்டன. கணவனை இழந்த அவள் மேல் வேறெந்த ஆணுக்கும் ஆசை வரக்கூடாது என்பதற்காக உடனடியாக அவளுக்கு மொட்டையடிக்கப்பட்டது.
‘உலகை ஆற்றுப்படுத்தும் அழகுதான் பெண்’ என்றது வேதம். அந்த அழகை மொட்டையடித்து அவலட்சணமாக்கி அழுவதை வேடிக்கை பார்த்தது மநு.
தவிர... அந்த விதவைப்பெண் வேறெந்த ஆணிடமும் பேசக்கூடாது, பழகக்கூடாது அவளது கண்களை கட்டுப்பாட்டால் கட்டிப் போட்டனர்.
இதையும் மீறி... வயதின் ஆட்சியால் வாலிபத்தின் தூண்டுதலால் மிக இளமையான வயதில் கணவனை இழந்த பெண்களுக்கு ஆண் துணை வேண்டுவது இயற்கையின் விதி. இதை இப்போது மறுமணம் என்கிறோம்.
ஆனால் மநு மணத்தில் மறுமணம் ஏது? ஒரு பெண், கணவனை இழந்த பின்பு... ஆறுதலுக்காகவும், வாழ்க்கை நடத்திட வழி வேண்டியும் இன்னொரு ஆணை அணுகினால் அது கிட்டத்தட்ட விபச்சாரம் ஆகி விடுகிறது என்கிறது மநு. இதற்கும் தண்டனை உள்ளது. அதற்கு முன் விதவைகளுக்கு மொட்டை போடுதல் என்ற தண்டனை பற்றி இன்னும் சில விளக்கங்களை சொல்லி விடுகிறேன்.
விதவைகளுக்கு மொட்டையடிக்கக் கூடாது என்று வடகலை வைணவர்கள் வலியுறுத்தினார்கள். அதெல்லாம் இல்லை மொட்டையடித்தே ஆக வேண்டும் என்பது தென்கலைக்காரர்களின் தரப்பு வாதம்.
இந்த இடத்தில் வடகலை, தென்கலை என இரண்டு பிரிவுகள் பற்றி உங்களுக்கு கேள்வி வரலாம். அப்படி என்றால் என்ன?
பிரம்மத்துவம் எனப்படும் கடவுள்தன்மை பெருமாளின் துணைவியான பிராட்டி அதாவது தாயாருக்கு உண்டா என்ற பிரச்சினை விவாதமாக எழுந்தது.
அப்போது... பெருமாளுக்கு துணையாக இருக்கிறாரே தவிர பிராட்டிக்கு மோட்சம் வழங்குவதில் பங்கு கிடையாது. உதவும் சக்தி கிடையாது. வெறும் சிபாரிசு மட்டும்தான் செய்யமுடியும் என்பது தென்கலைகாரர்களின் வாதம். பெருமாளின் துணைவிக்கே சக்தி இல்லை என்றவர்கள் சாதாரண ஸ்த்ரீ... அதுவும் கணவனை இழந்த ஸ்த்ரீக்கு என்ன சொல்வார்கள். மொட்டையடிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
வடகலைக்காரர்களோ... பிராட்டிக்கு மோட்சம் வழங்குவதில் குறிப்பிட்ட பங்கு இருக்கிறது என்று நம்பினார்கள். அதனால் பெண்மைக்கு முக்யத்துவம் கொடுத்து... விதவைகளுக்கு மொட்டையடிக்கக் கூடாது என்றார்கள். இந்த ஒரு விஷயத்தின் அடிப்படையில் மட்டுமல்ல... பல விஷயங்களின் அடிப்படையில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் தான் வடகலை, தென்கலை என்று பிரிந்தார்கள்.
சாதாரண மனித பெண்களை இப்படி நடத்தியிருக்கிறார்கள். அப்படியென்றால் தெய்வப்பெண்களை?... அதாவது பெண் தெய்வங்களை எப்படி பார்த்தார்கள்?
இது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. சற்று முன்புதான் மோட்சம் வழங்குவதில் பிராட்டி அதாவது பெண் தெய்வத்தின் பங்கு பற்றி சில விஷயங்களை பார்த்தோம்.
கோவில்களில் பெருமாளை பார்த்திருப்பீர்கள். பெருமாளுக்கு வலது பக்கமும், இடது பக்கமும் பூதேவி, நீளாதேவி என இரண்டு பெண் தெய்வங்கள் இருப்பார்கள். ஆனால்... பிராட்டி எனப்படும் தாயார் தனிக்கோவில் நாச்சியாராகத்தான் இருப்பார். அதாவது அவருக்கென்று தனி சன்னதி இருக்கும். அங்கே தான் இருப்பார்.
கோவில்களில் உற்சவம் நடப்பதை பார்த்திருப்பீர்கள். பெருமாள் வாகனங்கள் புடைசூழ வெளியே வருவார்.
முதலில் அன்னபட்சி வாகனத்தில் வெளியே வருவார். கருடன் மீதேறி ஊர் சுற்றுவார். சூரியபிரபை என்னும் வாகனத்தில் புறப்பட்டு கடைத்தெருக்களை பார்வையிடுவார். பிறகு குதிரை வாகனம்... கடைசியில் தேர், ஊர்கூடி இழுக்க உள்ளே படாடோபமாக அமர்ந்திருப்பார் பெருமாள்.
ஆண் தெய்வமான பெருமாள் இப்படி ஊர் சுற்றி உலகம் சுற்றிவிட்டு வர... பெண் தெய்வமான பிராட்டியார்?...
-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

இராமனின் ஆண்குறிபற்றி அனுமன் சீதையிடம் கூறியது

இராமனின் ஆண்குறிபற்றி அனுமன் சீதையிடம் கூறியது.
இது இராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் சர்க்கம் 35 ல் கூறப்படுகின்றது.
சீதையிடம் தூது சென்ற அனுமன், சீதை அவனை யாரென்று தெரியாது சந்தேகித்தபோது இராமனைப்பற்றி விபரிக்கிறேன் என்றுகூறி இராமனின் ஆண்குறி முதல்கொண்டு விதைப்பைவரை பின்வருமாறு வர்ணிக்கிறான்.
(அதற்கு முதல் விருஷணம் என்றால் என்னவென்று கூறிவிடுகிறேன். விருஷணம் என்றால் விதைப்பை)
"மார்பு மணிக்கட்டு முஷ்டி இவை மூன்றும் கெட்டியாயும்; புருவம், புஜம், விருஷணம் இவை மூன்றும் நீளமாயும்; மயிர் நுனியும் விருஷணங்களும், முழங்கால்களும் ஏற்றக்குறைவில்லாமல் சமமாயும்; நாபி, வயிறு, மார்பு இவைமூன்றும் உயர்ந்தும்; உள்ளங்கை, கடைக்கண், உள்ளங்கால் இம்மூன்றும் சிவந்தும்; பாதரேகை, தலைமயிர்கள், ஆண்குறி இம்மூன்றும் மழமழப்பாயும்; நரம்பு வெளியில் தெரியாத பாதங்களையும்; ஒரே மயிரையுடைய மயிர் கால்களையும்; சிறிய ஆண்குறியையும்; ....." என்று பலவாறு தொடர்கிறான்.


அர்த்தமுள்ள இந்து மதத்தில்தான் 5500 (செல்சியஸ்) டிகிரியுடைய சூரியன் கூடப் புணருவான்! பிள்ளையையும் பெற்றுத் தள்ளுவான்

எல்லோருக்கும் சூரியன் என்றால் என்ன என்று தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் இந்துமதம் ஏதோ கூறுகிறது. இந்துவாக இருந்தால் இதை நம்பித்தான் ஆக வேண்டும். அத்துடன் இதை நம்புவதால் அவர்கள் அடி முட்டாள்கள் என்று ஒத்துக்கொள்ளதான் வேண்டும். சரி என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்...
சூரியனின் ரத சாரதியின் பெயர் அருணன். இவன் இரு கால்களும் அற்ற முடவன். தாயால் அவயங் காக்கப் பட்ட முட்டையிலிருந்து பிறந்தவன். இவன் இந்திர லோக வினோதங்களைக் காண்பதற்கு என்று பெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான் - இதனால் வாலி என்பவன் பிறந்தான்.
இந்நிகழ்ச்சியால் அருணன் வேலைக்குத் தாமதித்து வர, சூரியன் காரணம் கேட்டு, நடந்ததையறிந்து, மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வரச் செய்ய, அவன் அப்படியே வர, அவனைச் சூரியன் புணர்ந்தான் - அதனால் சுக்ரீவன் பிறந்தானாம் - இது அர்த்தமுள்ள இந்து மதத்தின் அவலட்சணம்!
இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில்தான் 5500 (செல்சியஸ்) டிகிரியுடைய சூரியன் கூடப் புணருவான்! பிள்ளையையும் பெற்றுத் தள்ளுவான்.

பழைய தெரு நாய் புது வெறியுடன்

அம்பேத்கர் சவுதார் குளத்தில் தலித்கள் தண்ணீர் எடுக்கும் உரிமைக்காக போராடிய போது அந்தக் குளத்தில் தலித் மக்கள் வளர்க்கும் கால்நடைகள் கூட சவுதார் குளத்தில் நீர் குடிக்கலாம் ஆனால் தலித்கள் நீர் எடுத்தால் குளம் தீட்டாகி விடும் என்பது தான் பார்ப்பன மத வாதமாக இருந்தது
காந்தி தனது ஆசிரமத்தில் ஒரு தலித் குடும்பத்தை சேர்த்த போது அங்குள்ள கிணற்றில் அந்த தலித் குடும்பம் நீர் எடுத்ததாலையே தண்ணீர் தீட்டாகி விட்டதாக பார்ப்பன மதம் தன் குரலை உயர்த்தியது
மகாராஷ்டிராவில் நேற்று பொது கிணற்றில் குளித்த காரணத்தினால் இரண்டு தலித் சிறுவர்களை நிர்வாணமாக்கி தன்னை மிகக் கேவலமான சித்தாந்தம் என்று மீண்டும் நிரூபித்து இருக்கிறது பார்ப்பன மதம்
ஒரு விசயத்தை இங்கே கவனிக்க வேண்டும் சவுதார் குளத்திலும் காந்தியின் ஆசிரமத்திலும் தலித்கள் தண்ணீரைத் தொடுவதால் தீட்டு என்று சொல்லும் பார்ப்பன மதம் மாற்று மதத்தினர்கள் அந்த தண்ணீரை தொடுவதை எப்போதும் எதிர்த்ததில்லை
நேற்றைய மகாராஷ்டிர குளத்திலும் வேற்று மதத்தினர் குளிப்பதற்கு எந்த தடையும் இருக்காது என்றே நினைக்கிறேன்
தனது எதிரி இஸ்லாம் தான் என்று பரப்பும் அதே வேளையில் இஸ்லாமியர்கள் பொது கிணற்றில் தண்ணீர் எடுப்பதை தீட்டு என்று எதிர்க்கவில்லை மாறாக தன் மதத்தின் ஒரு அங்கம் என்று செல்லக்கூடிய சமூக பிரிவினரை தீட்டு என்று தள்ளி வைக்கிறது
அதாவது பார்ப்பன மதத்தில் தன்னை உயர்ந்த ஜாதியாகவும் வேறு சமூக பிரிவை தாழ்ந்த ஜாதியாகவும் சிந்திக்கும் உளவியல் தான் இருக்குமேயன்றி வேற்று மதத்தவரை தாழ்ந்த மதமாக பார்க்கும் உளவியல் இருப்பதில்லை
நாய் வால் நிமிர்ந்தாலும் நிமிரலாம் காளை மாட்டில் பால் வந்தாலும் வரலாம் மோடி உண்மையை பேசினாலும் பேசலாம்
ஆனால் பார்ப்பன மதத்தில் சமத்துவம் சகோதரத்துவம் என்பது எல்லாம் நிர்மலா சீதாராமன் வாய் மீது சத்தியமாக வாய்ப்பே இல்லை
இந்து மதத்தை சீர்திருத்தம் செய்வது என்பது சாத்தியம் இல்லாதது அதில் இருந்து விலகி மதம் மாறுவதே இழிவில் இருந்து விடுபடும் வழி
- அம்பேத்கர்

சிவலிங்கம் உருவான கதை தெரியுமா?

சிவலிங்கத்தை வணங்கும் காட்டுமிராண்டிகளே, சிவலிங்கம் உருவான கதை தெரியுமா?
நான் கூறவில்லை. இதோ உங்கள் பத்ம புராணம் கூறுகிறது கேளுங்கள்.
பத்ம புராணம், சரஸ்வதி காண்டம் அத்தியாயம் 17 இல்,
பிரம்மா நடத்திய வேள்விக்குச் சென்ற சிவபெருமான் குடிபோதையில் காம விகாரத்தோடு நிர்வாணமாக மாறி ஆபாசமாக நடந்து கொண்டாராம். இதைக் கண்டு ரிஷி பத்தினிகள் சிலர் வீடு நோக்கிச் சென்றனராம். சிலர் சிவபெருமானுடன் உடலுறவு கொண்டனராம். இதைக் கண்ட ரிஷிகள் (அவர்கள் கணவர்கள்) மயங்கி விழுந்தனராம்.
மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க, சிவபெருமானின் ஆண் உறுப்பு அறுந்து விழ, வானம் - பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்ததாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியைத் தடுக்க உமாதேவியார் தனது பெண் உறுப்பில் ஆண் உறுப்பை ஏந்தி அமைதிப் படுத்தினாராம். இதுதான் சிவலிங்கம். பார்வதியினதும் சிவனினதும் பாலுறுப்புக்களைத்தான் சில காட்டுமிராண்டிகள் வணங்குகின்றார்கள்.
தமிழா விளித்தெழு! ஆரிய அசிங்கங்கள் உனக்கு வேண்டாம்.

காட்டுமிராண்டி என்று சொன்னால் கோபப்படும் பக்த சிரோன்மணிகளே!

பூமி மாறி மாறி மன்னர்களால் ஆளப்படுவது ஏன்?
(மன்னர்கள் காலத்தில் அடித்துவிட்ட கதை. வாருங்கள் கேட்போம்.)
பூமியில் சிந்திய சிவனின் இந்திரியமும் (விந்து) அது பொறுக்காமல் பார்வதியின் சாபமும்.
சிவன் - பார்வதி கூட ஆரம்பித்தனர். ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல - நூறு தேவ வருட காலம் கலவி நடந்ததாம். பூமி தாங்காது என்று தேவர்கள் முறையிட்டு கலவியை நிறுத்தும்படி கெஞ்சினார்களாம். அதன் விளைவு சிவனின் விந்து ஆறாகப் பெருக்கெடுத்ததாம்.
அதுவும் கந்தசஷ்டி கொண்டாடப்படும் நாளில். (ஐய்ப்பசி 14 - அக்டோபர் 31) இது ஏன் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?
நவராத்திரி முடிந்தது, தீபாவளியும் கழிந்தது அடுத்து சுரண்டலுக்கு வழி தேட வேண்டாமா? இருந்த இடத்தில் உண்டி வளர்க்க வேண்டாமா? அதற்கான ஏற்பாடுதான் கந்தசஷ்டி.
ராமநவமி, கிருஷ்ணன் அஷ்டமி, விநாயகர் சதுர்த்தி என்பது போல கந்தன் சஷ்டி. கடவுள் பிறப்பு, இறப்பு அற்றவன் என்று சொல்லிக் கொள்வார்கள்; ஆனால் கடவுள்களின் பிறப்பும் அதற்குப் பிறந்த நாள்களும். இதுதான் அர்த்தமுள்ள இந்து மதத்தின் மகாமகா கூத்து.
சரி உண்டிவளர்க்க திட்டம் தீட்டியாகிவிட்டது, வழக்கம்போல ஓர் அரக்கன் வர வேண்டாமா? அவன்தான் சூரபத்மன். அரக்கனைக் கொல்ல கடவுளைப் பிரார்த்திக்க வேண்டாமா?
சிவனை வேண்டினர். கடவுளாக இருந்தாலும் உடல் சேர்க்கை வேண்டாமா? சிவன் - பார்வதி கூட ஆரம்பித்தனர் - ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல - நூறு தேவ வருட காலம் உடலுறவு நடந்ததாம்.
இதற்கு மேலும் பிண்டம் தரித்தால் நாடு தாங்காது என்று தேவர்கள் முறையிட்டு நிறுத்தும்படிக் கெஞ்சினார்களாம்.
அதன் விளைவு சிவனின் இந்திரியம் ஆறாகப் பெருக்கெடுத்ததாம். தேவர்கள் கைகளில் ஏந்தி சிவனின் விந்தை குடித்ததால் கர்ப்பம் அடைந்தார்களாம். காஞ்சீபுரத்தில் உள்ள கரகரீஸ்வரர் குளத்தில் மூழ்கிக் கர்ப்பம் கலைந்தனராம்.
மீதி வீரியத்தை கங்கையில் கொண்டு போய் விட்டனராம். அது ஆறு கிளைகளாகப் பிரிந்து ஓடி ஆறு குழந்தைகள் ஆயிற்றாம்.
ஆறு பெண்கள் பால் கொடுக்க வந்தார்களாம். ஆறு பெண்கள் பால் கொடுப்பது சிரமமாக இருப்பதாக எண்ணி அவர்கள் ஆறு பேர்களையும் ஒன்றாக அணைத்துப் பால் கொடுக்கையில் முகம் ஆறாகவும் கைகள் பன்னிரெண்டாகவும், உடல் ஒன்றாகவும் ஆனதுதான் ஆறுமுகத்தின் கதையாம்.
இதில் வடமொழியில் ஸ்கந்தன் என்றால் இந்திரியம் என்று பொருள் - சிவனின் இந்திரியத்திலிருந்து பிறந்ததால் ஸ்கந்தன் - கந்தன் என்று பெயராம்.
இப்படிப் பிறந்த ஆபாச பேர் வழிக்குத்தான் கந்த சஷ்டி கொண்டாடப்படுகிறது. அதுவும் ஆறு நாள் விரதம் இருந்து கொண்டாட வேண்டும்.
முருகனின் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருத்தணி, சுவாமிமலை, பழனி, பழமுதிர்சோலை, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் கந்தசஷ்டி என்ற பெயரால் பகல் கொள்ளை செய்கிறார்கள் பக்தர்களிடமிருந்து!
அர்த்தமுள்ள இந்து மதம் இதுதான். தனக்குரிய விந்தை பூமாதேவி தாங்கியதால் பார்வதிக்கு மகா மகா கோபம் பீறிட்டுக் கிளம்பி சாபம் விட்டாளாம்.
உன்னை மாறி மாறி அரசர்கள் புணரக் கடவது என்பதுதான் அந்தச் சாபமாம்! இதனால்தான் மன்னர்கள் மாறி மாறி நிலத்தை ஆள்கிறார்களாம்!
காட்டுமிராண்டி என்று சொன்னால் கோபப்படும் பக்த சிரோன்மணிகளே. இந்தக் கந்தன் பிறப்புக்கு என்ன காரணம் சொல்லப்போகிறீர்கள்?
-தகவல்கள் இராமானுஜ தாத்தாசாரியாரின் இந்துமதம் எங்கே போகிறது என்ற நூலில் இருந்து.

குர்ஆனை தடை செய்யனும்!

குர்ஆனை தடை செய்யனும்!
குரான் பொதுவழியில் தடை செய்யவேண்டிய நூல்
கீழேகாட்டரபி முஹம்மதின் குரான் வசனம் இதை உலக முஸ்லிம்கள் தினமும் தங்களின் வணக்க வழிபாட்டில் படித்து வருகிறார்கள் இன்றும் ...
எனவே புனித மாதங்கள் கழிந்ததும் அந்த இணை கற்பிப்போரைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களைப் பிடியுங்கள்! அவர்களை முற்றுகையிடுங்கள்! ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காகக் காத்திருங்கள்! அவர்கள் திருந்திக் கொண்டு, தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 9:5
மேலே உள்ள வசனத்தில் சின்ன திருத்தத்துடன் கொடுத்துள்ளேன் படியுங்கள்
எனவே மழை மாதங்கள் கழிந்ததும் அந்த முஸ்லிம்களை கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களைப் பிடியுங்கள்! அவர்களை முற்றுகையிடுங்கள்! ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காகக் காத்திருங்கள்! அவர்கள் திருந்திக் கொண்டு, நமக்கு கட்டுப்பட்டு கப்பமும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள்
(மாற்று மத நூல் 9:5)
இப்படி ஒரு வசனத்தை வேறு மதத்தில் இருந்தால் முஸ்லிம்கள் ஏற்ப்பார்களா?
முஸ்லிம்களிடம் கொஞ்சமாவது சுய சிந்தனை இருந்தால் குர்ஆனை புறக்கணிக்கட்டும்

முஸ்லிம்களின் Logic!

முஸ்லிம்களின் Logic!
இஸ்லாத்தை குரான் ஹதீஸ் கொண்டு பாருங்க முஸ்லிம்களை பார்த்து முடிவு செய்யாதீர்கள் , என்று காஃபீர்களிடம் முஸ்லிம்கள்சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம்!
அதன் அபத்தங்கள்
குரானும் ஹதீஸுமே முஸ்லிம்களால் எழுதப்பட்டதுதான்
குரான் ஸைத் எழுதியது ஹதிஸ்கள்பல நூறு முஸ்லிம்களால் பல கால கட்டத்தில் எழுதப்பட்டது அப்படி எழுதப்பட்டஹதீஸ்களை பல கால கட்டங்களில் அதே முஸ்லிம்களால் ஏற்கவும் மறுக்கவும் பட்டிருக்கிறது சில முஸ்லிம்கள் எழுதிய நூல்களுக்காக சில முஸ்லிம் ஆட்சியாளர்களால் சிறைவைக்கப்பட்டும் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள்
சரி மீண்டும் இவர்களின் வாதத்தை பார்ப்போம்
//இஸ்லாத்தை குரான் ஹதீஸ் கொண்டு பாருங்க முஸ்லிம்களை பார்த்து முடிவு செய்யாதீர்கள் ,//
இப்படி சொல்வதே முஸ்லிம்கள்தான் !
இஸ்லாத்தை முஸ்லிம்களை பார்த்து முடிவு செய்யக்கூடாது என்றால் முஸ்லிம்களின் இந்த வாதத்தைமட்டும் எப்படி ஏற்பது?
முஸ்லிம்கள் சொல்லாத இஸ்லாம் என்ற ஒன்று இருக்க வாய்ப்பிருக்கா?
முஸ்லிம்களின் தக்கியாக்களை(பொய்களை) சிந்தியுங்கள்

கிரஹப்பிரவேசம் என்பது தீட்டு அகற்ற செய்யும் சடங்கு!

கிரஹப்பிரவேசம் என்பது தீட்டு அகற்ற செய்யும் சடங்கு!

இந்த வீட்டில் கீழ்சாதிக்காரர்கள் கொத்தனாராக சித்தாளாக வேலை பார்த்திருப்பார்கள் அதனால் தீட்டாகி இருக்கும், அந்தத் தீட்டைப் போக்க பிராமணரை வைத்து மந்திரம் சொல்லிப் பசு மாட்டு மூத்திரம் சாணியைக் கரைத்துத் தெளித்தால் தீட்டுப் போகும் என்றே செய்கிறார்கள்.

அதனை நம்பி உழைக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும் அதேபோல செய்து தான் சார்ந்திருக்கும் உழைக்கும் இனத்தையே இழிவுபடுத்தி பிராமண அடிமையாகிறார்கள்.

மனுதர்மம் அத்தியாயம் 5 சுலோகம் 124 :

"வீடு முதலானவற்றிற்கு சண்டாளாதிகளால் அசுத்தம் நேரிட்டபோது விளக்குதல் மெழுகுதல் கோமூத்திரம் தெளித்தல் கொஞ்சம் மேல் மண்ணை எடுத்துப்போடுதல் பசுமாட்டை ஒரு நாள் வசிக்கும்படிச் செய்தல் இவ்வைந்தினால் அப்பூமி பரிசுத்தப் படுத்தப்படுகிறது."

(சண்டாளாதிகள் - கீழ்சாதிக்காரர்கள்)

உங்கள் வீட்டிலாவது "கிரஹப்பிரவேசம்" எனும் பெயரில் நீங்கள் வசிக்க வீடுகட்டி கொடுத்த தொழிலாளர்களை அவமானப்படுத்தாமல் இருங்கள்... கடவுள் நம்பிக்கை உடையவராக இருப்பின், கடவுளுக்கும் உங்களுக்கும் இடையில் புரோகிதர் எனும் ஏமாற்றுக்காரனுக்கு இடமளிக்காதீர்கள்... சொந்தங்களையும், நண்பர்களையும் அழைத்து விருந்தளிப்பதோடு முடித்துக் கொள்ளுங்கள்...

பார்ப்பன தந்திரம் - 1

பார்ப்பன தந்திரம்.....
ஒரு மாத சுய ஆலோசனைக்கு பிறகு இப்பதிவை எழுதுகிறேன்.
பிராமணன் தமிழர்களை எப்படி எல்லாம் மாற்றியிருக்கிறார்கள் என்பதை உணர்த்தவே இப்பதிவு.
நாம் நிறைய கேள்விபட்டிருப்போம் நம் பாட்டி, கொள்ளுபாட்டி,பூட்டி எல்லாம் ஏழு வயதிலும் எட்டு வயதிலும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று.அப்போதெல்லாம் நான் நினைத்துக்கொண்டிருந்தேன் அந்த காலத்தில் விஞ்ஞான வளர்ச்சி இல்லாததால் மக்களுக்கு போதிய அறிவின்மையின் காரணமாக நிகழ்ந்திருக்கும் என்று.
பிறகுதான் என் மூளைக்குள் ஒரு மணி அடித்தது.
விஞ்ஞானமா?அப்படி என்றால் என்ன என்று தெரியாத காலத்திலேயே கடல் தாண்டி வணிகம் செய்த இனம் எப்படி அறிவில் குன்றியதாக இருக்கும்.அப்படி என்றால்,அந்த காலத்தில் நடந்த குழந்தை திருமணத்திற்க்கு என்னதான் காரணம் என்று ஆராய்ந்தால் கிடைத்தது பதில்.
எல்லாம் சரி,இதற்க்கும் பிராமணனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க்கிறீரா.இருக்கிறதே...
மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா
பிதா பிபதி கோனிதம்.
இது என்னவென்று புரியவில்லையா....இது தான் பதில்...ஆம் இக்காலத்து அப்பாக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிள்ளை,ஆனால் அக்காலத்து அப்பாக்களுக்கு இது நன்றாக தெரியும்.
நான் இந்து நான் இந்து என்று மார்தட்டிக்கொண்டு திரியும் ஒரு சில இக்காலத்து அப்பாக்களும் இதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்க்காகவே இப்பதிவு.
இந்து தர்ம நீதி நெறிகளை வகுத்த மநுவின் தர்மம்...எட்டு வயதிற்க்குள் உன் மகளை கன்னிகாதானம் செய்து விட வேண்டும்,இல்லையென்றால் அதற்க்கு கிடைக்கும் தண்டனை மரணத்தை விட கொடியது.
மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா
பிதா பிபதி கோனிதம்.
அட கையாளாகாத அப்பா,உன் பெண்னை நீ எட்டு வயதிற்குள்ளேயே இன்னொருத்தனுக்கு பிடித்து கொடுக்க வேண்டும்,ஆனால் நீ அதை செய்ய தவறிவிட்டாய்,அவள் இப்போது ருதுவாகிவிட்டாள்,ருதுவான பின் மூன்று வருடத்திற்க்குள் அவளுக்கு மனமுடிக்கவில்லை என்றால் அவளாகவே சுயம்வரம் நடத்தி தன் கணவனை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.ஆனாலும் ருதுவாகும் வரை அவளை நீ உன் வீட்டில் வைத்திருப்பது எப்படி சரியாகும்.
அதனால் இதோ தண்டனை,ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை உன் பெண்னுடைய பஹிஷ்டை காலத்தில்(அதாவது மாதவிலக்கு காலத்தில்) வெளியேற்றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும்.இப்படி ஒரு தண்டனையை பெருகிறோமே என நீ வருத்தப்பட வேண்டும்.அதற்க்காககதான் இந்த தண்டனை.
இப்படி ஒரு கருத்தை சுமந்து நிற்ப்பதை நினைத்து அந்த சமஸ்கிருதம மொழியே நாணி தீயில் கருகிவிடலாம்.இந்த எலவு மொழியைதான் இன்று இந்தியா முழுவதிற்க்கும் விநியோகம் செய்ய பலர் முயற்சிக்கின்றனர்.
சரி இதற்க்கு பரிகாரமே கிடையாதா என்றால்..மகா தர்மத்தலைவன் மநு அவர்கள் ஒரு பரிகாரத்தை சொல்கிறார்.
இதிலிருந்து நீ தப்பிக்க அவளின் ஒவ்வொரு பஹிஷ்டையின் போதும் ஒரு பசுவை பிராமணனுக்கு தானம் பன்னிவிடு.இந்த கோதானம் தான் உனக்கு பரிகாரம்.அதாவது மகள் ருதுவாகி கல்யாணம் ஆகும்வரை அவளுக்கு எத்தனை பஹிஷ்டை நேருகிறதோ அத்தனை பசுக்களை தானம் செய்ய வேண்டும்....
இந்த கொடுமையை கணவில் கூட நினைத்து பார்க்க முடியாது.
இருந்த இடத்திடல் இருந்தே எம் மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்த கூட்டம்.
ஆதாரம் வேண்டும் என கேட்ப்பவர்கள்.தாத்தாச்சாரியாரின் இந்து மதம் எங்கே போகிறது என்ற கட்டுரையில் தேடி கண்டுபிடித்து கொள்ளுங்கள்.

சொல் நானும் ஒரு இந்து என்று

பிராமணனைப்போல்
நீயும்
இந்துதானே..
அவன்
உனக்கு எப்போது வாடகைக்கு வீடு கொடுக்கிறானோ
அப்போது சொல்,
நானும் ஒரு இந்து என்று,
உன் வீட்டுக்குவந்து நீ சமைத்த உணவை
எப்போது
உளப்பூர்வமாக உண்ணுகிறானோ
அப்போதுசொல்
நானும் ஒரு இந்து என்று,
உன் உரிமைக்காக
உன் போராட்டத்தில் எப்போது அவன் கைகோர்க்கிறானோ
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
கோவிலின் கருவறைக்குள்,
நீயும் அவனும் எப்போது
ஒன்றாக நின்று
அர்ச்சனை செய்கிறாயோ அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
அவனை
தமிழில் மந்திரம் சொல்லவைக்க
தெம்பும் திரானியும்
உனக்கு எப்போது வருகிறதோ
அப்போது சொல்
நானும் இந்து என்று.
நீ பூசாரியாக இருக்கும் கோவிலுக்கு,
அவன் எப்போது குடும்பத்தோடு வந்து
நீ கொடுக்கும் திருநீரை
அவனின் நெற்றியில்
பூசிக்கொள்கிறானோ..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
எப்போது அவனும்
உன்னோடு சேர்ந்து
சிலைகளை உடைக்கிறானோ அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
அவன் எந்த மாநிலத்துக்குப்போனாலும்..
இந்து பிராமணன்தான்.
நீ
எந்தமாநிலத்துக்குப்போனாலும் தமிழன்தான்.
உன்னை தமிழனாகமட்டும் பார்க்காமல்,
பிறமாநிலத்தவனும்
பிராமணனைப்பார்ப்பதுபோல்..
உன்னையும்
இந்துவாக பார்த்தால்
நடத்தினால்..
அப்போது சொல் நானும் ஒரு இந்து என்று.
மாநில கோர்ட்டுகளிலேயே மல்லுக்கட்டுகிறாயே
உன்னாலும் சுப்ரீம் கோர்ட்
நீதிபதியாக முடியும்
என்றால்..
உன்னை வரவிடுவார்களென்றால்..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
உன்னால் உன் மகனால்..
இந்திய கிரிக்கெட் அணியில் நுழைய முடிந்தால்..
உன்னையெல்லாம் நுழைய
விட்டால்..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
உன்னால்..
அவர்களால்
நியமிக்கப்படும்
ஜனாதிபதியாகத்தான்முடியும்.
ஆனால்,
ஒரு
ஜனாதிபதியையே நியமிக்கும்,
பிரதமராக
உன்னால் வர
முடியும் என்றால்..
அப்போது சொல் நானும்
ஒரு இந்து என்று.
இரண்டுபேரும்
இந்துக்கள்தானே..
உன்வீட்டுக்கல்யாணத்தை,
அவன் நடத்திவைப்பதைப்போல..
சாஸ்த்திர சம்பிரதாயங்களை
நீயும் கற்றபின்...
அவன் வீட்டு கல்யாணத்தை நீ..
நடத்திவைக்க
அவன் அனுமதித்தால்..
அப்போது
சொல்
நானும் ஒரு இந்து என்று.
இயல் இசை நாடக சபையில்,
உன்னையும் மனிதனாக மதித்து,
உன்னையும் தலைவனாக ஏற்றுக்கொண்டால்.
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
மத்திய அரசு வங்கிகளில்..
தமிழ்நாட்டில்
விண்ணப்பங்களை
தமிழிலேயே அச்சடித்தால்..
அப்போது சொல்
நானும் இந்து என்று.
காவிரி நீரை எப்போது
சமமாக தருகிறானோ..
நதிநீர் பங்கீட்டுப்போராட்டத்தில்..
உன்னோடு பிராமணனும் எப்போது
கலந்து கொள்கிறானோ..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
விவசாயிகளின் போராட்டத்தில் எப்போது அவன் கலந்துகொள்கிறானோ
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
நீட் தேர்வுக்கு எதிரான
போராட்டத்தில் எப்போது
அவனும் கலந்து கொள்கிறானோ அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
நீதான்
நான்தமிழன்
நான்தமிழன் என்கிறாய்.
அவன் எப்போதாவது சொல்கிறானா.
அவனும்
தன்னை தமிழன் என்று
எப்போது ஒப்புக்கொள்கிறானோ
அப்போது சொல்
நானும் இந்து என்று.
நாரதகான சபையில்
முறையாக சங்கீதம் கற்றும்
உன்னை பாட
அனுமதித்தால்..
அவர்கள் பார்வையாளராக
அமர்ந்தால் அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,
உன்னால்..
சங்கரமடத்தில் சங்கராச்சாரியாரோடு
சரிக்குசமமாக
சம்மணமிட்டு
அமரமுடிந்தால்..
அப்போதுசொல்
நானும் ஒரு இந்து என்று.
இந்து அறநிலைய கோவில்களில்
காசுவாங்காமல்..
உன்னை கருவறைக்குள் விட்டால்,
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
அடித்தட்டு மக்களின்
வரிப்பணத்தில்
மருத்துவம் படித்துவிட்டு,
ஊசி போட..
அமெரிக்காவுக்கு ஓடுபவனை,
தடுத்துநிருத்தியபின்
சொல்
நானும் ஒரு இந்து என்று.
ஒவ்வொரு அலுவலகத்திலும்
அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து,
மற்றவர்களை மட்டம்
தட்டுகிறார்களே..
அதை அவர்கள் நிறுத்தியபின் சொல்
நானும் ஒரு இந்து என்று.
பயணங்களில்..
நீ கீழ்தட்டுவர்க்கம்
என்று தெரிந்தவுடன்
பதரியடித்தபடி எழுந்து வேரு இடம் தேடுகிறானே
அந்த பதட்டத்தை அவன் குறைத்துக்கொள்ளும்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.
நீ
முருகனை கும்பிடு
முத்துமாரியம்மனை
கும்பிடு
அதுவல்லபிரச்சினை.
இந்து என்று சொல்லிச்சொல்லி.
உன்னை வீதியில்
இறக்கிவிட்டு
அவன்மட்டும் வீட்டுக்குள் இருந்துகொண்டு வேடிக்கை பார்க்கிறானே.
அதுதான் வேதனையை
தூண்டுகிறது.

முட்டாள் தமிழா வரலாற்றை தெரிந்துகொள்

தமிழனைச் சூத்திரன் என்று ஒரு கூட்டம் கூறுகிறதே! அதை எதிர்க்க நமக்குத் துணிவு இல்லை என்றால் என்ன அர்த்தம்? எதற்காக நமக்கு 3000 வருடங்களாக ஆயிரக்கணக்கான கடவுள்களும், கோடிக்கணக்கான கோயில்களும் இருக்க வேண்டும்? குழவிக் கல்லைக் கும்பிட வேண்டும்? மாட்டு மூத்திரத்தை எதற்காகக் குடிக்க வேண்டும்?
63 நாயன்மார்கள், ஆழ்வார்கள் என்ன செய்தார்கள்? அவர்களுக்கு எப்படி அந்தப் பட்டம் கிடைத்தது? புத்தர்களை, ஜைனர்களைத் திட்டினார்கள், தீ வைத்தார்கள், பவுத்தப் பெண்களைக் கற்பழித்தார்கள். பார்ப்பான் சொற்படி வேத, புராண, மனுதர்மங்களை மக்களிடையில் பிரச்சாரம் செய்தார்கள். அதனால் பட்டம் கிடைத்தது.
நம் கருத்துக்குத் தகுந்தபடி 2500 வருடங்களுக்கு முன்பு புத்தர் கொள்கைகள் தோன்றின. பார்ப்பனர்கள், பவுத்தர்களைக் கொன்று, பள்ளி மடங்களுக்குத் தீயிட்டு, பண்ணக்கூடாத வேலைகளையெல்லாம் செய்திருக்கிறார்கள், அன்பே சிவம் என்று சொல்கின்ற சைவர்கள், திருவத்திபுரத்தில் போய் பார்க்க வேண்டும் - இன்றைக்கும் சமணர்களைக் கழுவிலேற்றிய பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதை!
திருவத்திபுரத்தில் சைவர்கள், வேதம் பெரிது என்றார்கள். சமணர்கள், அறிவுதான் பெரிது என்று சொன்னார்கள். இரு பெயரையும் தனித்தனி சீட்டுகளில் எழுதி நதியில் விட்டார்கள். அதில் வேதம் என்று எழுதியிருந்த சீட்டு நீரை நோக்கி எதிர்த்துப் போனதாம். ஆகவே, அறிவுதான் பெரியது என்று சொன்ன 100க்கும் மேற்பட்ட சமணர்களைக் கழுவிலேற்றிக் கொன்றனர். மேற்கண்ட நிகழ்ச்சிகளை, சதுரம் கருங்கல்லில் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.
இப்படி ஆரிய மூடப்பழக்கங்களை எதிர்த்து யார் கூறியிருக்கிறார்கள்? எல்லோரும் டாலர் முதல்கொண்டு போட்டு வணங்கி வரும் சாயிபாபா, ராமகிருஷ்ணர், விவேகானந்தர், யாராவது ஒருவர் கூறினார்களா? புத்தர் ஒருவர்தான் ஆரியத்தின் இந்து மதத்தின் மண்டையைப் பார்த்து ஓங்கியடித்தார். “மனிதன் தன் வாழ்க்கையில் துன்ப இன்பங்களை அனுபவிக்கிறான். தெரியாத ஆத்மாக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதைவிட "தெரிகிற ஆத்மாக்களாகிய' மனிதர்களின் துன்பத்திற்கு வழி தேட வேண்டும்'' என்றார் புத்தர்.
தேவாரம் திருவாசகம் படித்துப் பாருங்களேன். திருஞான சம்பந்தன் என்னும் பார்ப்பனன் 3 ஆம் வயதிலேயே பாட்டுப் பாடினானாம்! இவன், பவுத்தர், சமணர்களை சண்டாளர்கள், அயோக்கியர்கள் என்று கூறி, அவர்கள் பெண்களைக் கற்பழிக்க உதவ வேண்டுமென்று கடவுளை வேண்டினானாம். இந்தப் பாட்டுக்களை மடாதிபதிகள் தங்கள் பள்ளிகளில் வைத்து, பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்!
முட்டாள் தமிழா வரலாற்றை தெரிந்துகொள். உனக்கு மதம் என்று எதுவுமே இருந்ததில்லை. புரிந்தால் தூக்கி எறி மதங்களை.

வீரப்பனை நீ ஒரு போராளி என பப்பாளி மரத்தின் மேல் ஏற்றிவிட்டனர், அவன் அது முறிந்து விழுந்து செத்தான்

வீரப்பனுக்கு விஷம் வைத்து விஜயகுமார் கொன்றார் என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
உண்மையில் வீரப்பனை பிடிக்கும் பணியில் தமிழக போலிஸ் சலிப்படைந்து கைவிடும் நிலைக்கு வந்தது, வீரப்பனும் அமைதியாக இருந்திருந்தால் சிக்கலே இல்லை
நம்புகின்றீர்களோ இல்லையோ 1986க்கு பின்னரான வீரப்பன் எப்படி இருப்பான் என்றே பின்னாளில் யாருக்கும் தெரியாது, அவனும் அப்படியே மலைவாழ் சாதியாகவோ இல்லை விவசாயியாகவோ இருந்திருக்கலாம், கண்டுபிடிக்க வாய்ப்பே இல்லா நிலை
அவ்வளவு ஏன்? கூலி தொழிலாளியாக வெளியூர் சென்றாலும் அவனை கண்டுபிடித்திருக்க முடியாது, அப்படி மர்மமாகத்தான் அவன் இருந்தான்
அவனுக்கு விதி தமிழ் தீவிரவாதிகள், நக்சலைட் வடிவில் வந்தது
தமிழகத்தில் நக்சலைட் நடமாட்டம் உண்டு என பொன்னார் சொல்வது எல்லாம் முழுக்க புறம் தள்ளகூடிய விஷயம் அல்ல, இங்கு ராமசந்திரன் காலத்திலே அவர்கள் முளைவிட்டார்கள். இன்றைய பழனிச்சாமி போல டெல்லி அடிமையான ராமசந்திரன் கடும் நடவடிக்கையால் அவர்கள் வளராமல் பார்த்துகொண்டார்
ஆனாலும் ரகசிய நடவடிக்கையில் நக்சல்கள் இருந்தனர், பின்னர் அவர்கள் தமிழ் தேசியவாதிகளுடன் கை கோர்த்தனர்
அதன் பின் இங்கும் சிக்கல் எழுந்தது, கவிஞர் தாமரை வாழ்வினை கெடுத்த தியாகு அப்பொழுது நடந்த குண்டுவெடிப்பில்தான் மரண தண்டனை பெற்றார்
சில தமிழ்புலிகள் தமிழகத்தின் பொன்பரப்பி போன்ற வங்கி கொள்ளையின்பொழுது மக்களாலே அடித்து கொல்லபட்டான்
இலங்கையினை போல வங்கிகளை கொள்ளை அடித்து இயக்கம் வளர்க்கும் புலிகளின் செயல் தமிழகத்தில் நடக்கவில்லை
மாறாக வேறு வழியில் வந்தார்கள், ராஜிவ் கொல்லபட்டபின் கொஞ்சகாலம் அமைதியாக இருந்தவர்கள் பின் இங்கு மறுபடியும் துளிரிவிட்டார்கள்
அரசியலுக்கு வைகோ, ராமதாஸ், திருமா என பலரை வளைத்தவர்கள், ஆயுதத்திற்கு வீரப்பனை வளைத்தார்கள்
வீரப்பன் மூலம் பலருக்கு ஆயுதபயிற்சி அளித்து அதன் மூலம் பெரும் ரத்தகளறி ஏற்படுத்தும் முயற்சிநடந்தது
வீரப்பனும் அதற்காக பலரை கடத்தி பணம் குவித்தான், ராஜ்குமாரை கடத்தியபொழுது பல நூறு கோடிகளை குவித்தான்
அவனுக்கு ஏன் அவ்வளவு பணம்? அவன் பிள்ளைகளே அனாதையாக தெருவில் நிற்க அவனுக்கு ஏன் அத்தனை கோடிகள்?
அவனை இயக்கியது நக்சலைட் மூளைகள் மற்றும் மாறன் முதலான தமிழ்தேசிய போராளிகள்
வீரப்பனும் அதன் பின் திடீர் போராளியானான், கன்னட அணை திறக்க உத்தரவிட்டான், காட்டுக்குள் தமிழ்தேசிய கொடி ஏற்றினான், படுபயங்கர அறிக்கை எல்லாம் விட்டான்
இனி இவனை விடவே கூடாது என்றுதான் அரசுகள் களமிறங்கின, உளவுதுறை அறிக்கைகள் வீரப்பனுக்கும் அந்நிய சக்திகளுக்கும் உள்ள உறவினை வெளிச்சம் போட்டு காட்டின‌
இந்நிலையில்தான் விஜயகுமாரிடம் பொறுப்பு ஒப்படைக்கபட்டது, வால்டர் தேவாரம் தன் வாழ்நாள் எதிரி என தேடிகொண்டிருந்த வீரப்பன் விஜயகுமாரை கண்டுகொள்ளவில்லை
வீரப்பன் செய்த பெரும் தவறு நக்கீரன் பத்திரிகையில் தன் படத்தை வர செய்தது, அதுவரை அவனின் லேட்டஸ்ட் புகைபடம் யாரிடமும் இல்லை
அதில் அவன் வகை வகையாக போஸ் கொடுக்க, வீரப்பனின் துப்பாக்கி முதல் கூட்டாளிகள் எண்ணிக்கை வரை சிக்கலே இல்லாமல் காவல்துறைக்கு கிடைத்தது, வீரப்பன் செய்த மிக பெரும் தவறு அதுதான்
மாயாவி என சொல்லபட்ட வீரப்பன் உலகெல்லாம் இப்படி காட்சி கொடுக்க ஆரம்பித்தபின் அவனை கண்காணிப்பதும் வளைப்பதும் எளிதாயிற்று
ஈழத்திற்கு செல்லலாம் என சில போராளிகள் ஐடியா கொடுக்க, அதில் ஊடுருவிய காவல்துறை அட்டகாசமாக அவனை கடத்தி வந்து போட்டு தள்ளியது
நிச்சயம் விஜயகுமாரின் சாதனை அது
1990களுக்கு பின் வீரப்பனை பிடிக்க முடியாது என காவல்துறை ஒதுங்கிய நேரத்தில் அட்டகாசமாக வீரப்பனால் செட்டில் ஆகியிருக்க முடியும் எல்லா வாய்ப்பும் அவனுக்கு இருந்தது
ஆனால் இந்த தமிழ்தேசிய வாதிகளின் தொடர்பு நளினி, பேரரிவாளன் போலவே அவன் வாழ்வினையும் முடிக்க வைத்தது
சுருக்கமாக சொன்னால் காடு, மான்கறி என மகா மகிழ்ச்சியாக இருந்த வீரப்பனை நீ ஒரு போராளி என பப்பாளி மரத்தின் மேல் ஏற்றிவிட்டனர், அவன் அது முறிந்து விழுந்து செத்தான்

Thursday, June 21, 2018

ராவண விழாக் கொண்டாடிய தமிழர்கள்.

ராவண விழாக் கொண்டாடிய தமிழர்கள்.
சாணர்கள் எனப்படும் ஈழவர்கள், 100 ஆண்டுகளுக்கு முன்புவரை, ஒவ்வொரு வருடமும் ஆடி முதல் தேதியை சாணர்களின் தேசிய விழாவாகக் கொண்டாடி வந்துள்ளனர்.
இது ராவணன் சீதையைக் கவர்ந்து வந்த நாளை ராவணனின் வெற்றி விழாவாகவும், சீதையைப் பிரிந்த ராமனின் துயரை மகிழ்ச்சியுடனும், நினைவுக் கூறும் விழாவாகவும் அவர்கள் கொண்டாடினர்.
ராவணின் முதல் அமைச்சர் மகோதரா என்பவரும் சாணர் இனத்தை சேர்ந்தவர். அசுர/பூத வழிபாட்டை எதிர்த்தவர்கள் மீதான பல்லாயிரம் வருட பகையின் வெளிப்பாடாக இந்த விழாவினை சாணர்கள் கொண்டாடினர் எனக் கையேடு குறிப்பிடுகிறது.
ரொம்பக் குசும்புதான்யா, ரொம்பக் குசும்புதான்....

இதெல்லாம் திராவிடர் கழகத்துக்கு முன்னாடியே, புலவர் குழந்தையின் இராவண காவியம் எழுதப்படுவதற்கு முன்னரே!
 அப்போ இராவணன் சமணனா பௌத்தனா? இமயத்தையே தூக்கிச் சிவனுடைய இருப்பிடத்தை ஆட்ட முயன்றான் என்றால் சரியான வம்புப்பேர்வழியாக இருந்திருப்பான் போலிருக்கிறதே! 

ஜி.டி. நாயுடு

ஜி.டி. நாயுடு
நாங்கள் பள்ளியில் படிக்கிற காலத்தில் ஒரு வழக்கம் இருந்தது. யாராவது புதிதாக ஏதாவது சொன்னால், “ஆமா... இவரு பெரிய ஜி.டி. நாயுடு!” என்பார்கள். அந்த அளவுக்கு ஜி.டி. நாயுடுவின் பெயர் மக்களிடையே பரவியிருந்தது. அரசுப் பள்ளிகளின் மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும்போது ஜிடி நாயுடுவின் இல்லம் தவறாமல் இடம்பெற்றிருக்கும். பள்ளி மாணவனாக ஏதோவொரு காலத்தில் சென்று வந்த நினைவுகள் மிகமிக மங்கலாகவே நினைவில் உள்ளன. வளர்ந்த பிறகு அவருடைய இல்லத்துக்குச் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் நிறைவேற வாய்க்கவே இல்லை. இத்தனைக்கும் அவருடைய வீட்டுக்கு மிக அருகில் போலீஸ் பயிற்சிப் பள்ளியின் கேன்டீனில் பல மாதங்கள் வேலை செய்திருந்தும்கூட அந்த நேரத்தில் வாய்க்கவில்லை. இப்போது வருத்தப்பட்டு என்ன செய்ய?
இந்திய விஞ்ஞானிகளை / கருவிகளைப் பற்றி வாசிக்கும்போதெல்லாம், ஜிடி நாயுடு நினைவு வரும். அவர் இருந்திருந்தால் இதைக் கண்டுபிடித்திருப்பார் என்று தோன்றும். அவ்வளவு ஏன், பாதாள சாக்கடை சுத்தம் செய்ய இறங்கிய மூன்று பேர் உயிரிழந்த செய்தியை இரண்டு நாட்களுக்கு முன்னால் வாசித்தபோதும் நாயுடுவின் நினைவு வந்தது. அவர் இருந்திருந்தால் நிச்சயமாக ஒரு கருவியைக் கண்டுபிடித்திருப்பார் – அதுவும் மிக மலிவாக. இத்தனை பெரிய மனிதர் எப்படி தேசிய அளவில் கவனிக்கப்படாமல் போனார் என்பது இப்போதும் எனக்கு வியப்புதான்.
ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் எப்போதுமே எனக்கு உண்டு. ஆனால் கிடைப்பவை எல்லாம் ஆதாரங்கள்-அலசல்கள் குறைவாகவும், செவிவழிச் செய்திகள்-மிகைப்படுத்தல் மிகுதியாகவும் கொண்ட வழக்கமான தமிழ் வாழ்க்கை வரலாற்று நூலாகவே இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னால் கோவை சென்றிருந்தபோது விஜயா பதிப்பகத்தில் ஒரு சிறிய நூல் கிடைத்தது. அது மேலே சொன்ன ரகம்தான். கடந்த வாரம் ஏதோ தேடும்போது, இணையத்தில் ஒரு புத்தகம் கிடைத்தது. கலைமணி என்பவர் எழுதியது. அதுவும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்தது. (இந்த நூலை எழுதிய கலைமணி என்பவர், தொழிலாளியாக இருந்து, படிப்படியாக உயர்ந்து, கலைமணி என்ற பெயரில் அச்சு இயந்திரத்தை உருவாக்கி வெற்றி கண்ட அதே நபர்தானா என்று தெரியவில்லை.)
என் காலத்தில் அவருடைய சாதனைகளைப் பற்றிய செய்திகளோடு சாகசங்களைப் பற்றிய கட்டுக்கதைகளும் ஏராளம். சிக்கல் என்னவென்றால், சாகசங்களை நம்பாமலும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவை சாதனைகளோடு கலந்திருக்கும். உதாரணமாக, அவர் ஏராளமான பேருந்துகளை இயக்கி வந்தார். ஒரே எண்ணில் பல வழித்தடங்களில் வாகனங்கள் ஓடுமாம். வருமான வரிக்காரர்கள் ரெய்டு நடத்த வந்தால் பேருந்துகளே மாயமாகி விடுமாம். அண்டர் கிரவுண்டில் அவ்வளவு பெரிய கிடங்கு வைத்திருந்தாராம். சாகசக் கட்டுக்கதைகளுக்கும் மேலே அவருடைய சாதனைகள் இருந்தன என்பது உண்மை. அவற்றில் சிலவற்றின் பயன்களை நானும் அனுபவித்திருக்கிறேன். ஒன்றல்ல இரண்டல்ல, எண்ணற்ற விஷயங்களுக்கு அவர் முன்னோடி. பள்ளிப்படிப்புகூட முறையாக முடிக்காத ஒருவர் எப்படி எண்ணற்ற துறைகளில் கால்பதித்து சாதித்துக் காட்டியிருக்க முடியும் என்ற கேள்விக்கு எவரிடமும் பதில் கிடையாது. சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
ஜி.டி. நாயுடு, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கலங்கல் என்ற கிராமத்தில் பிறந்தவர். பள்ளியில் படிக்க விருப்பமில்லாமல் பாதியில் விட்டவர். ஆங்கிலேயர் ஒருவர் ஓட்டிக்கொண்டு வந்த மோட்டார் பைக்கை தற்செயலாகப் பார்க்க நேர்ந்து, வீட்டைவிட்டு ஓடி கோவைக்கு வந்து, ஹோட்டலில் வேலை செய்து, காசு சேர்த்து, மோட்டார் பைக்கை விலைக்கு வாங்கி, ஊருக்குக் கொண்டு போய் அக்க்க்காகப் பிரித்து மீண்டும் பொருத்தி இயக்கிப் பார்த்தவர். இதிலிருந்து தொடங்குகிறது அவரது சாதனைப் பயணம்.
1920இல் பொள்ளாச்சி-பழனி வழித்தடத்தில் பஸ் ஓட்டுகிறார். அவரே டிரைவர், அவரே கண்டக்டர், அவரே மெக்கானிக்.
அடுத்த சில ஆண்டுகளில் யுஎம்எஸ் என்ற பேருந்து நிறுவனம். இதிலும் என் நினைவிலிருந்து குறிப்பிட வேண்டியது, இந்த நிறுவனம் டீசென்டிரலைஸ் செய்யப்பட்டிருந்தது. உடுலை கிளை பேருந்துகள் யுஎஸ், கோவை கிளை பேருந்துகள் சிஎஸ், தாராபுரம் கிளை பேருந்துகள் டிஎஸ் – என எல்லாமே ஒரே மாதிரியான லோகோ கொண்டிருக்கும். பேருந்தின் நடுவே வட்டத்தில் இந்த இரண்டு எழுத்துகளும் இருக்கும். தன்னுடைய பேருந்துகளில் டிக்கெட் கொடுக்க தானியங்கி இயந்திரம் அவரே வடிவைத்தார். இப்போது கண்டக்டர் கையில் வைத்திருக்கும் எலக்டிரானிக் கருவி போல, அப்போது மெக்கானிக்கல் இயந்திரம் இருந்தது.
பாலசுந்தரம் என்பவருடன் கூட்டு சேர்ந்து இந்தியாவிலேயே முதல் மோட்டார். (இந்த பாலசுந்தரம் டெக்ஸ்டூல் என்ற நிறுவனத்தை அமைத்தார். அதுதான் பிற்காலத்தில் லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் ஆக விரிவடைந்தது.)
சர்வதேச அளவில் பரிசு பெற்ற பேட்டரி ரேசர்
மெல்லிய ரேசர் பிளேடு
ஐந்து வால்வு ரேடியோ
கால்குலேட்டர்
புகைப்படக் கருவிக்கு போகஸ் செய்யும் இயந்திரம். லண்டனில் ஜார்ஜ் மன்னர் இறந்தபோது, இறுதிச்சடங்கை முழுமையாக படம்பிடித்தவர்.
1952இல் 2000 ரூபாய்க்கு கார். அரசு அனுமதி தரவில்லை.
வீரிய ஒட்டுவிதைப் பயிர்கள்.
தொழில்துறை, இயந்திரத்துறை, மின்சாரத்துறை, வேளாண்துறை என பல துறைகளிலும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்கள் வேறு எவரும் கிடையாது.
கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிடி எல்லாம் அறியப்படாத காலத்திலேயே, தொண்டிலும் தன் கவனத்தை செலுத்தியவர் அவர். சென்னை கவர்னராக இருந்த ஆர்தர் ஹோப் என்பவர் மீது கொண்ட மரியாதையால் ஆர்தர் ஹோப் பாலிடெக்னிக், ஆர்தர் ஹோப் என்ஜினியரிங் கல்லூரியை நிறுவினார். அதுதான் பின்னாளில் அரசு பொறியியல் கல்லூரி ஆனது. கோவையில் இப்போதும் ஹோப் காலேஜ் என்ற பெயரில்தான் பேருந்து நிறுத்தம் இருக்கிறது. கல்லூரிகளிலும் என்ஜினியரிங் கல்விக்கு நான்காண்டுகள் தேவையில்லை, இரண்டு ஆண்டுகள் போதும் என்பது அவர் கருத்தாக இருந்தது. 15 நாட்களில் என்ஜினியர் ஆக்கும் சிறப்பு படிப்பும்கூட நடத்த முடியும் என்றாராம் அவர்.
அவருடைய மூளையை 2 கோடி ரூபாய்க்கு இன்ஷ்யூர் செய்து வைத்திருந்தார். இல்லை இல்லை, இன்ஷ்யூர் செய்ய விரும்பினார், ஆனால் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனங்கள் அதற்குத் தயாராக இல்லை. அவர் இறந்த பிறகு, கோவையில் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அடுத்த சில நாட்கள் கழித்துப் பார்த்தபோது உடலைக் காணவில்லை. அமெரிக்காகாரன் அவருடைய மூளையை ஆராய்ச்சி செய்வதற்காக எடுத்துக்கொண்டு போய்விட்டான். ... இதெல்லாம் எங்கள் மாணவகால கட்டுக்கதைகள்.
இன்று ஜி. துரைசாமி நாயுடுவின் பிறந்தநாள். அவரைப்பற்றிய தகவல்களைத் தேடும்போது, கோவையில் உள்ள ஜி.டி. நாயுடு அருங்காட்சியம் பற்றிய தகவலும் கிடைத்தது. வாய்ப்புக்கிடைக்கும்போது அவசியம் பாருங்கள், குழந்தைகளையும் அழைத்துச் செல்லுங்கள்.
G.D Naidu Museum
734, Avinashi Road, President Hall, Coimbatore - 641018
Phone: +91 422 2222548

நீ எதை வேண்டுமானாலும் பேசு. ஆனால் மதத்திலும், ஜாதியிலும் கடவுள்களின் மீதும் கையை வைக்காதே

முன்பு ஜாதி ஒழிப்புச் சங்கம் என்று ஒன்று இருந்தது. அதற்கு பிர்லா தலைவர். நேருவின் உறவினர்களில் ஒரு பெண் செக்ரெட்டரியாக இருந்தார். இப்படி இவர்கள் சேர்ந்து ஜாதி ஒழிப்புக்குத் திட்டமிட்டால் உருப்படுமா? அந்த சங்கத்தின் மாநாட்டிற்கு டாக்டர் அம்பேத்கரைப் பேசுவதற்கு அழைத்தனர். இவரும் ஒப்புக் கொண்டார். மாநாடு நடத்தும் தினம் நெருங்குவதற்கு ஆரம்பித்தது. அம்பேத்கரை, "நீங்கள் எதைப் பற்றிப் பேசுவதாக இருக்கின்றீர்கள்? அதன் குறிப்பு முதலில் வேண்டும்" என்று கேட்டார்கள். இவர் கொடுத்த குறிப்பில் மத சாஸ்திர புராணம் மற்றும் கடவுள்கள் இவற்றின் யோக்கியதையை வெளியிடுவதாக எழுதி இருந்தார். உடனே அதை மாளவியா மற்றும் பெரிய ஆட்கள் எல்லாம் எதிர்த்தார்கள். "நீ எதை வேண்டுமானாலும் பேசு. ஆனால் மதத்திலும், ஜாதியிலும் கடவுள்களின் மீதும் கையை வைக்காதே" என்று கூறினர்.
ஆனால், அம்பேத்பர் ஓங்கி அடித்துக் கூறிவிட்டார். "நான் மாநாட்டில் பேசுவதாக இருந்தால், இதைத் தவிர வேறு எதையும் பேச முடியாது. என்னுடைய பேச்சு தேவைப்படுமானால், இதைத் தான் பேசுவேன். ஆனால் நீங்கள் இதை மறுத்து மாநாட்டின் இறுதியில் என்னுடைய பேச்சைச் சங்கம் ஏற்க மறுக்கிறது என்று வேண்டுமானாலும் தீர்மானித்துக் கொள்ளுங்கள்! அதற்கு ஆட்சேபனை இல்லை" என்று கூறிவிட்டார். பிறகு அம்பேத்கர் தம் எண்ணப்படியே பேசினார்.
இவ்விதம் ஜாதியை ஒழிக்கும் வீரர்கள் மதத்திலும், சாஸ்திர புராணத்திலும், கடவுள்களிடமும் கைவைக்காமல் ஒழித்து விடலாம் என்று பார்க்கிறார்கள். இப்போது கூட அரசியல் தலைவர்கள் எல்லாம் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறிக்கொண்டு திரிகிறார்கள். ஆனால், ஜாதி ஒழிய எவை தேவையோ அந்தக் காரியங்களில் பிரவேசிப்பதில்லை. 17.02.1956-இல் மணல்மேட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை", 05.03.1956

பார்ப்பன தேசவிரோதிகளின் நடவடிக்கைகள் எப்படி இருந்திருக்கும்

" ஆமா, நாங்க அப்படித்தான் பண்ணுவோம்,
சோடா பாட்டில் வீசுவோம்
இன்னும் என்ன என்ன வரும்னு பாருங்க
குண்டாஸ் வரலாம்"
பல்லாயிரம் பேர் பார்த்துக் கொண்டிருக்கிற வெகமக்கள் ஊடகத்தில் சிரிப்பு நடிகர் சேகர் இப்படித்தான் பேசினார்...
அவரது உடல்மொழியும், நெறியாளரின் கேள்விகளை எதிர்கொண்ட விதமும், நெறியாளரை தனிப்பட்ட முறையில் இழிவாக பேசிய விதமும் அத்தனை அருவெறுப்பு...
" பார்ப்பனரல்லாதோரின்" சமூக அரசியல் பொருளாதார நிலைமைகள் ஓரளவுக்கு விழிப்படைந்திருக்கும் இந்த சூழலிலும், ஒருவரால் இப்படி வன்மமாக பேசமுடிகிறது என்றால்...... சில நூறாண்டுகளுக்கு முன்பு,இவர்களின் நடவடிக்கைகள் எப்படி இருந்திருக்கும்? நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது....
இந்த வன்மத்துககு பின்னால் ஒளிந்திருக்கும் "பார்ப்பன லாபி " மிக வலிமையானது.... இவரைப் போன்றவர்களுக்கு பாதுகாப்பையும்,நேரடியான ஆதரவையும் தந்து... ஊக்கப்படுத்துகிறது....
இதை தகர்ந்தெறிந்திருக்கிறது உச்சநீதிமன்ற நடவடிக்கை
முன்ஜாமீன் வழங்க மறுத்து இருக்கிறது..
இனியும் காவல்துறை இந்த "பார்ப்பன தேசவிரோதி "யை கைதுசெய்யாமல், தப்பவிட்டுக் கொண்டிருக்குமானால்...
சட்டத்தின் ஆட்சியை ஏற்றுக்கொண்ட நமது நாட்டில்
நீங்கள் சட்டவிரோதிகளே.......

பொறுப்பும் பொறுப்பின்மையும் - படங்களில் சாதி 1980 களின் மத்தியிலேயே தொடங்கி விட்டது

பொறுப்பும் பொறுப்பின்மையும் .
சங்கிலி முருகன் தான் தயாரித்த எல்லா படங்களின் முதல் காட்சியிலும் இரண்டு அடையாளங்களை வைப்பார். முதலாவதாக மாட்டிலிருந்து செம்பு நிறைய பால் கறக்கும் காட்சி. அடுத்ததாக சிலையாகவோ படமாகவோ முத்துராமலிங்கத் தேவரின் பிம்பம் இடம் பெற்று விடும். முதல் அடையாளம் சினிமாவிற்கான சகுனம். அடுத்த அடையாளம் ஏன் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
இப்போக்கு 1980 களின் மத்தியிலேயே தொடங்கி விட்டது. நினைவே ஒரு சங்கீதம் (1987) நம்ம ஊரு நல்ல ஊரு (1986) போன்ற படங்களில் பசும்பொன் என்ற ஊர்ப் பெயரிலிருந்து தான் காட்சிகள் தொடங்கும். தங்கள் சொந்த சாதிய பிம்பங்களையும் கதையாடல்களையும் தான் இந்த இயக்குநர்கள் இப்படங்களில் காட்டினர். இவையே வளர்ந்து 1990 களின் சினிமா கதையாடல்களை ஆட்டிப்படைத்தன. அதன் தொடர்ச்சியில் நடிகர் கார்த்திக்கை சாதியின் பிம்பமாக அவருக்கே காட்டித் தந்தனர். சிவாஜி கணேசன் பாரதிராஜா போன்றோரும் அந்த வாசனைக்கு இலக்காகினர்.இக்கதையாடல்கள் வணிக வெற்றிக்கான பார்முலாவாக ஆனதால் அச்சாதியினர் அல்லாதவர்களும் அவ்வகை படங்களையே எடுத்தனர். தமிழ்ச் சினிமாவில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட பாடல்களில் முத்துராமலிங்கத் தேவர் புகழ்ச்சி (சீமானே எழுதிய பாஞ்சாலங்குறிச்சி படப் பாடல் உள்பட) இடம் பெற்றுள்ளது.இது வேறு எவருக்கும் கிடையாது.
இவை யாவும் பிராமணரல்லாத வட்டார பெரும்பான்மை சாதி கதையாடல்கள் என்பது தெளிவு. இவர்களும் பிராமணர்களால் சாதிய ரீதியாக வஞ்சிக்கப்பட்டவர்கள் என்றே அரசியல் ரீதியாக சொல்லப்படுகின்றனர். அதன் தொடர்ச்சியினாலேயே தலித்துகளை ஒடுக்குபவர்களாக இருந்தாலும் பிராமணர் எதிர்ப்பு என்ற வகையில் தலித்துகளோடு ஒத்தவர்களாக சொல்லப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் இது மகத்தான அரசியல் கதையாடல்.
இந்த கதையாடலின்படி இடைநிலை பிரிவினர் பிராமணர் எதிர்ப்பு அரசியல் குறியீடு என்ற முறையில் பெரியாரை ஏற்றிருக்க வேண்டும். அதோடு பெரியாரின் உழைப்பால் அதிகாரத்திற்கு வந்த திராவிட அரசியலால் பலன் பெற்றவர்கள் என்ற முறையிலும் பெரியாருக்கு / பிராமணர் அல்லாத அரசியலுக்கு விசுவாசமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இவர்களிடம் அதற்கான எந்த ஓர்மையும் இருந்ததில்லை. உள்ளூரில் சாதிய சமூக அதிகாரத்தை கைக்கொண்டிருக்கும் இவர்கள் பெரியார் போன்றோரின் பிராமணரல்லாத அரசியலின் பலனையும் எவ்வித தீவிர பங்களிப்பும் இல்லாமலே பெற்றிருக்கின்றனர். ஆனால் இவ்வகுப்பினர் தாங்கி பிடித்து வந்திருப்பதோ தத்தம் சாதிகளுக்கேயுரிய பிம்பங்களையே. அதன்படி தான் மேற்கண்ட முத்துராமலிங்கத் தேவர் பிம்பங்களை பார்க்க வேண்டியுள்ளது.
ஆனால் பிராமணரல்லாதோர் அரசியலால் பயன் பெற்றோர் என்ற முறையில் இவர்கள் பெரியாரை ஏன் காட்டவில்லை? என்ற கேள்வியோ மாறாக அவரை காட்ட வேண்டும் என்ற நெருக்கடியோ அரசியல் சமூகத்திடமிருந்து இதுவரையிலும் ஒரு கேள்வியாக எழுப்பட்டதில்லை.
இடைநிலை வகுப்பினர் சாதியவாதிகளாக இருப்பது இயல்பானதாக பார்க்கப்படுவதே இதற்கான அடிப்படைக் காரணம். எனவே அவர்களிடம் வலியுறுத்துவதற்கோ எதிர்பார்ப்பதற்கோ எதுவுமில்லை என்று கருதப்படுகிறது. எனில் சாதிக்கு எதிராக இருக்க வேண்டிய பொறுப்பும் அதற்கு எதிராக போராடி இழப்புகளை சந்திக்க வேண்டிய நிலையும் தலித்துகளுடையதாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் அவ்வகை போராட்டங்களின் பலன் பிராமணர் அல்லாதவர் என்ற முறையில் இடைநிலை சாதியினருக்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும் என்ற சொல்லப்படாத அரசியல் விளக்கமும் இங்கிருக்கிறது. அதிலிருந்து விலகுவதாக சந்தேகப்படும் போதெல்லாம் தலித்துகள் தங்களை நிருபிக்கும் வரையிலும் தாக்கப்படுகிறார்கள்.

லஷ்மி அக்கா


நேற்று 19 ந்தேதி, காலை உணவுக்காக வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு உணவகம் சென்றேன்...... அப்போது எனது எதிரில் உள்ள இருக்கைகளில் இரண்டு மாநகர துப்புரவு தொழிலாளர்கள் உணவருந்த வந்து அமர்ந்தார்கள்.... அவர்களில் ஒருவர் எனது நெருங்கிய உறவினரும் கூட....
"நைனா உன் போட்டா போட்டு ஒரு பேனர் அங்க கட்டியிருந்துச்சே...ஸ்கூல் பசங்க போட்டால்லாம் கூட இருந்துச்சே....

" ஆமாம் மா படிக்கிற பசங்களுக்கு பரிசு தர்றோம்.... மத்த பசங்களுக்கு ஊக்கமா இருக்கும் இல்ல அதனால தான் "
" நீயும் அம்பேத்கர் அது இதுன்னு என்னன்னமோ பண்ற, நம்ம ஜனங்களுக்கு நல்லது நடந்தா சரி"
என்று சொல்லிவிட்டு அவரது தோழியுடன் உரையாடலை தொடர்ந்தார்....
அப்போதுதான் அவரது இடது கையை கூர்ந்து கவனித்தேன்.... அதில் லஷ்மி என்று பச்சை குத்தப்பட்டிருந்தது.. பொதுவாக மனம் கவர்ந்த மற்றவர்களின் பெயரைதான் தங்களின் கைகளில் பச்சை குத்திக்கொள்வார்கள்.....
இது என்ன புதுசா இருக்கே.... ஏனெனில் அவரின் பெயர் லஷ்மி என்பதை நான் நன்கு அறிவேன்.... குழப்பமும் ஆர்வமும் கலந்த உணர்வினால் உந்தப்பட்டு அல்லாடிக் கொண்டிருந்தேன்...
இறுதியில் கேட்டுவிட துணிந்தேன்....

"உங்க பேரையே ஏன் நீங்க பச்சை குத்திட்டிருக்கீங்க என்றேன்....
" அதுவா.... ஒன்னுமில்ல என்றவர், சிறிது நேர தயக்கத்திற்கு பிறகு பேச ஆரம்பித்தார்.... நாங்க சின்ன வயசா இருக்கும் போது உன்ன மாதிரி அம்பேத்கர் பத்தி எங்களுக்கு சொல்லிக்கொடுத்து இப்படியெல்லாம் பரிசு குடுத்திருந்தா நான் ஏன் நைனா இப்படி என் பேரையே பச்சை குத்திக்கிட்டு அலையப்போறேன் "
கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களேன் என்றேன்...
" அப்பல்லாம் நாங்க பள்ளிக்கூடம் போறதே மத்திய சோத்துக்காகத்தான்.. படிப்போட அருமை தெரியாது... அத தெரிஞ்சு சொல்றத்துக்கும் யாருமில்லை.....
எங்கப்பா பிணம் அறுக்கற வேல..... அந்த பிணத்தின் மேல சுத்தற வெள்ள காடா துணி யை தான் நாங்க யூனிபார்ம் தச்சு போட்டுட்டு போவோம்.... பட்டினிய ஜெயிக்கறதுதான் எங்களோட மிகப்பெரிய போராட்டமாக இருந்ததால படிப்பு ஏறல....
அவ்ளோதான்...
அப்புறம் நகராட்சி யில் துப்புரவு வேலைக்கு போயி சேர்ந்தேன்...
அப்பல்லாம் பம்பாய் கக்கூசு கிடையாது...நாத்தம் குடல புடுங்கும்..
என்ன பண்றது.... வயித்தக் கழுவனுமே... சமாளிச்சிட்டு செய்வேன்....
அப்பதான்... "மஸ்டரோல்" ல (வருகை பதிவேடு) கண்டிப்பா கையெழுத்து போடனும் னு மேஸ்திரி strict ஆ சொல்லிட்டாரு.... இந்த வேலைய விட்டுடக்கூடாதுன்னு.... எவ்வளவோ முயற்சி பண்ணேன்...எழுத வரல... அஞ்சில வராதது அம்பதுலியா வரும்..? அப்புறம் ஒரு ஐடியா பண்ணேன், போயி எம்பேர பச்சை குத்திக் கிட்டேன்.... இதைப்பார்த்து பார்த்து தான் கையெழுத்து போடுவேன்.... அப்ப படிப்போட அரும தெரியல.... என்னா பண்றது நைனா...
நம்ப புள்ளைங்களுக்கு எங்கள மாதிரி நிலம வரக்கூடாது நைனா....படிப்பு தான் நைனா நம்ம சொத்து..... ஊர் அழுக்கையெல்லாம் சுத்தம் பண்ண நமக்கு சொந்தமா பொட்டு நிலம் கிடையாது..... பாட்டன் சேத்து வச்ச சொத்தும் கிடையாது..... படிப்புதான நைனா.. அதான் நீ தான் அம்பேத்கர் கட்சிக்காரனாச்சே உனக்கு தெரியாதா? என்று சொல்லிவிட்டு ஊர் அழுக்க சுத்தம் பண்ண கிளம்பிட்டாங்க...
இன்னும் அதிகமாக இப்படியான நிகழ்ச்சிகள் நடத்தி... சுய மரியாதை உணர்வூட்டி, மாண்புள்ள மனிதர்களை உருவாக்க வேண்டிய தேவையும் அவசரமும் நிறைய இருக்கு என்று எண்ணிக் கொண்டேன்....
ஓடிப்போய் நிகழ்ச்சிக்கான நோட்டீசை அவர்களிடம் கொடுத்தேன்.....வருவதாக உறுதியளித்தார்...
ஆம் கல்வி ஆயுதமே...
சமூகத்தையும் சேர்த்து படிக்கும் கல்வி புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னதுபோல்
ஓர் ஆயுதமே......

Wednesday, June 20, 2018

ராபர்ட் வில்லியம் ஆஷை துப்பாக்கியால் கொலை செய்த பார்ப்பனர் வாஞ்சிநாதன் எழுதிய கடிதம்

ஆங்கில சத்ருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸநாதன தர்மத்தை காலால் மிதித்து துவம்சம் செய்து வருகிறார்கள், ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்திலும் தேசச் சத்ருவாகிய ஆங்கிலேயனை துரத்தி, தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் (மாட்டுக்கறி) தின்னக்கூடிய ஒரு மிலோச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் (george ) எங்கள் தேசத்தில் காலை வாய்த்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்துகொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும்பொருட்டு அவர்களில் கடையேனாகிய இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் ஹிந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை
இப்படிக்கு,
R. வாஞ்சி அய்யர்
மேலே இருக்கும் கடிதம், திரு. ராபர்ட் வில்லியம் ஆஷை துப்பாக்கியால் கொலை செய்த பார்ப்பனர் வாஞ்சிநாதன் எழுதியது.
இந்த கடிதத்தில் எங்காவது பிரிட்டிஷாரால் இங்கே சாமானிய மக்கள் படும் அவதிகள் குறித்து எழுதப்பட்டிருக்கிறதா? பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தை குறித்து எழுதப்பட்டிருக்கிறதா? மாறாக எது high light செய்யப்பட்டிருக்கிறது பாருங்கள். வெள்ளையர்களிடம் பார்ப்பனர்கள் உயர்த்த பதவிகளை அனுபவித்து கொண்டிருந்தது ஒருபுறமென்றால், வெள்ளையர்களிடம் முரண்பட்டதிற்கான காரணமும் வெள்ளையர்கள் பார்ப்பனர்களின் பாசிச ஸநாதன சித்தாந்தத்திற்கு எதிராக இருந்ததே. அதிலும் மாட்டிறைச்சியை பற்றிய கருத்தை பாருங்கள்.
கொலைகாரன் வாஞ்சிநாதன் திரு. ஆஷை கொலை செய்வதற்கான அளவு வன்மமிருந்தது இந்த நாட்டின் பார் கொண்ட பற்றினால் அல்ல, பார்ப்பனிய கோட்பாடுகளில் இருந்த தீவிரமான வெறி. பார்பனீயவாதிகள் நம்மை மீண்டும் மீண்டும் தேச விரோதிகள் என்று சொல்லிக்கொண்டிருந்தாலும், இந்த உண்மையை நாம் எந்நாளும் மறக்க கூடாது.
சுரண்டல், ஆதிக்கம், அடிமைத்தனம் என்று பிரிட்டிஷார்களை எதிர்ப்பதற்கு காரணமில்லாமல் இல்லை, ஆனாலும் பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் நடந்த பல மாற்றங்கள் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டம். கையளவு அவர்களிடம் மனசாட்சி இருந்தது, ஆனால் வெள்ளையனுக்கே சாதியை சொல்லிக்கொடுத்து "லார்ட், அவன் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவன்" என்று சாதிவெறி பாடமெடுத்தவன் இந்திய சாதி ஹிந்துக்கள்.
இந்திய நிலவுடமை முதலாளிகளுக்கும், பார்பனீயவாதிகளுக்கும் பிரிட்டிஸ்காரன் குடைச்சலாக இருந்ததெல்லாம் அவன் அதிகாரத்தை வைத்து கொண்டிருந்தது தான். ஒரு முதலாளி ஸ்தானத்தில் இருந்து மொத்த இந்தியாவையே அடிமையாக பார்த்தான் பிரிட்டிஷ், ஆனால் நம்மூர் சாதி ஹிந்துக்கள் அடுக்கடுக்காக அடிமை தனத்தை உருவாக்கி வைத்திருந்தனர். சொந்த மக்களை பிறப்பால் ஒடுக்கினர், கல்வி பொருளாதாரம் அந்தஸ்து என்று எந்த உயரத்தை அடைந்தாலும் அவர்களை அதே நிலையில் வைத்து ஒடுக்கும் நிகழ்கால சாதி அரசியலே இத்தனை நுணுக்கத்தோடு உயிர்ப்போடு இருக்கிறதென்றால், வரலாற்றில் எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்தும் பார்த்திட முடியாது.
திரு.ஆஷ் நம்மோட சமத்துவ நண்பனில்லை, அவனொரு முதலாளி, ஆனால் அவனிடம் இருந்த கொஞ்சம் நஞ்ச நேர்மை கூட வாஞ்சிநாதன்களிடம் இங்கே இருந்ததில்லை என்பதே உண்மை.
ஆஷ் கொல்லப்பட்ட நாள்.

உழைக்கச் சோம்பியோர் கூட்டம் பார்ப்பனர்கள்தான்

கசப்பான உண்மை என்னவென்றால், இஸ்லாமியர் அல்லாதோருக்கு ரம்ஜான் அன்று வேறு வேலை கிடையாது. சாப்பிடுவது, டிவி பார்ப்பது, ஊர் சுற்றுவது, சினிமா போவது, பகலில் படுத்துத் தூங்குவது, வார இறுதி நாள்களில் ரம்ஜான் வந்தால் அயலூருக்குப் பயணம் போவது இதைத் தவிர வேறு பெரிய வேலைகள் கிடையாது. அதனால் அவர்களுக்கு விடுமுறை இல்லை என்றால் கடுப்பாகிறது. உழைக்கச் சோம்பியோர் ஒரு நாளும் உயர்ந்ததில்லை
---- மாலன் நாராயணன் எழுதிய பதிவு ஜூன் 15 2018
இதைப்பற்றி பெரியார் அப்போதே எழுதியுள்ளார். எழுதிய ஆண்டு 1958
பூணூல் போடுவதற்குச் சர்க்காரில் (அரசில்) லீவு (விடுமுறை) விடுகிறானே! பார்ப்பான் நாட்டில் இருப்பது 100-க்கு 3- பேர். அவர்களின் பூணூல் மாட்டுவது அநேகமாக ஒருவர் அல்லது இருவர். அந்த இனப்பெண்கள் எல்லாரையும் கழித்துப் பார்த்தால் இதற்காக எதுக்கு அத்தனை பேர்களுக்கும் விடுமுறை. இது அக்கிரமம் அல்லவா? அரசாங்கம் இப்படி இருக்கலாமா? என்று எங்களைத் தவிர யாரும் கேட்பதில்லையே? ஆனால் இதைக் கேட்காதவர்கள் கேட்க நடுங்குகிறவன் எல்லாரும் மக்களிடத்திலே வந்து அளக்கிறான்கள். சட்டசபையிலே பிளக்கிறேன் என்கிறார்கள்! நாங்கள் மந்திரிகளுடைய மூக்கிலே, நாக்கிலே விரலை விட்டு ஆட்டுகிறோம் என்கிறார்கள்! இது ஏன் என்று கேட்க ஒரு பயல் முன்வருவது கிடையாதே? ஓட்டு கேட்க மாத்திரம் வருவார்கள்.
---பெரியார் ("விடுதலை" 19-10-1958)
மாலன் ஒருவிதத்தில் பெரியாரின் சிந்தனைகளைத்தான் பிரதிபலிக்கிறார். அதாவது உழைக்கச் சோம்பியோர் என்று அவர் குறிப்பிடும் கூட்டம் பார்ப்பனர்களைத்தான் 

பார்ப்பன சங்கராச்சாரியின் சாதி வெறி vs கக்கன்

செத்துப்போன சங்கராச்சாரி சந்திரசேகரன், ஒரு தாழ்த்தப்பட்டவரை நேரடியாக கண்ணால் பார்க்கக் கூடாது என்பதற்காக, அமைச்சர் கக்கனுக்கும் தனக்கும் இடையில் ஒரு பசுமாட்டை நிறுத்தி வைத்துப் பார்த்தான். அப்பாவியான அமைச்சர் கக்கனின் எளிமையும், நேர்மையும் அவருடைய சுயமரியாதையைக் காப்பதற்குக் கூட பயன்படவில்லை.
இன்று மறைந்த கக்கன் அவர்களின் பிறந்த நாளில் அன்னாரை நினைவு கூறும் அதே நேரத்தில் பார்ப்பன சங்கராச்சாரியின் சாதி வெறியை நாம் மறக்கக்கூடாது

பழமைவாதக் கொள்கைகளின் பிடியிலிருந்து தனது மனைவியைக் காப்பாற்றுவதற்குரிய சக்தி அவனுக்கு இல்லாமல் போய்விட்டது.

சூழ்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது. அரசன்(ராமன்) தன் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான். பிரார்த்தனை செய்வதிலும், விரதமிருப்பதிலும், தன் அன்பு மனைவியிடம் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சுவதிலும் அவன் தனது நாட்களைச் செலவிட்டான். இதில் வேடிக்கை என்னவென்றால், உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த அரசனிடமிருந்து சீதையை அவன் வெற்றிகரமாக மீட்டிருந்தும்கூட, பழமைவாதக் கொள்கைகளின் பிடியிலிருந்து தனது மனைவியைக் காப்பாற்றுவதற்குரிய சக்தி அவனுக்கு இல்லாமல் போய்விட்டது. அவன் தன் குடிமக்கள்மீது அக்கறை கொண்டிருந்தான் என்பதை வெறுப்போடு நான் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அவர்கள் தங்கள் சாதிக் கடமைகளிலிருந்து தவறாமல் இருந்தவரை, அவனுடைய ஆட்சியின்கீழ் அவர்களால் அமைதியாக வாழ முடிந்தது. ஆனால் சம்புகனைப் போன்றவர்கள் தங்களுடைய எதிர்காலத்தைத் தங்கள் சொந்தக் கைகளில் எடுத்துக் கொள்ளும் நேரத்தில், தர்மத்தின் நீண்ட வாள் அவர்களைத் துரத்தி வேட்டையாடிவிடும். ஒட்டுமொத்த அமைப்புமுறையானது பாகுபாட்டின் அடிப்படையிலும், அனுகூலங்கள் பிறப்பின் அடிப்படையிலும் இருக்கும்போது, வெறுமனே ஓர் ஆட்சியாளனாக இருப்பது மிகவும் கடினம்.

ராமனின் வன்முறை பெண் மீது..


‘கற்பில் உறுதியில்லாத நீ கல்லாகப் போ’ இந்திரனோடு அறியாமல் உறவு கொண்ட தன் மனைவி அகலிகையைச் சபித்தான் கவுதமன்.

இந்த முனிவர்களே இப்படிதான் ‘தானும் படுக்க மாட்டான்.. தள்ளியும் படுக்கமாட்டான்’ பாணி. இதுல பொம்பளைய சாபமிட்டு சபிக்கிறதல மட்டும் கொறச்சல் இல்ல.

பிறகு, ‘தசரத ராமன் பாதம் பட்டால் உன் சாபம், பாவம் தீரும்’ என்று அதற்குத் தீர்வு. அறிவியல் ரீதியாகக் கல்லு மண்ணாதான் மாறும். ஆனால் ராமன் பாதம் பட்டால், அது பொண்ணா மாறும். மாறிடிச்சி. ஏன்னா அவரு அவ்வளவு யோக்கிய ‘ராம்’.

கவுதமன் அகலிகையின் உணர்வுகளுக்கு எதிராகச் செய்த கொடூரத்தை விட, ராமன் அதே காரணத்திற்காக இன்னொரு பெண் மீது மூர்க்கமான வன்முறையை நிகழ்த்தினான்; டெல்லியில் பெண் மீது ரவுடிகள் நிகழ்த்திய வன்முறையை விடக் கொடூரமானது அது.

‘சூர்ப்பனகை இராமனிடம் தன் காதலை சொன்னாள்’ என்பதற்காக, ராமன் பிரதர்ஸ் அவளது மார்பகங்களையும், மூக்கையும் வெட்டி எறிந்தார்கள்.
என்னடா உங்கள் யோக்கியதை? அகலிகைக்கு நீதி? சூர்பனகைக்கு அநீதி?

குற்றவாளிகளே நீதிமான்களாக இருப்பது ராமாயணக் காலத்திலிருந்தே நடக்கிறது.
அகலிகையை முன்னிறுத்தி பெண்ணியம் பேசுகிறவர்கள், சூர்ப்பனகைக்கு ஏற்பட்ட அவமானம், வன்முறை குறித்துப் பேசுவதில்லை?
ஏன் என்றால் அதில் குற்றவாளி ராமன்.

அப்படியானால் அது பெண்ணியமா? பார்ப்பனியமா?

சம்புகன் கதை என்ன ?

சம்புகனின் கதை ஸ்ரீ வால்மீகி அருளிய இராமானணத்தில் உள்ளபடி .
இராமன் இலங்கைப்போர் முடித்து மகுடாபிஷேகம் செய்து கொண்டு அரசாட்சி புரிந்து வந்தார்.
அரசவையில் மந்திரிகளோடு அவர் ஆலோசனை செய்து கொண்டிருந்த வேளையில் அரண்மனை வாயிலில் ஒரு ஏழை பிராமணர் தன் கையில் ஒரு பாலகனின் உடலை ஏந்தியபடி கண்ணீருடன் நிற்கிறார் என அறிந்து அவரை உள்ளே அழைக்கிறார் ராமன்.
வயது முதிர்ந்த அந்த ஏழைப் பிராமணரைப் பார்த்து நீர் யார்?என்ன நடந்தது ? என்று இராமன் கேட்க அந்த பிராமணர் கூறினார் .
"ஸ்ரீ ராமா இதோ இந்த பாலகன் என் மகன் வீட்டின் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தவன் திடுக்கென விழுந்து இறந்து விட்டான் .
ஒரு பிராமணக் குழந்தை இவ்வாறு சாகிறதென்றால் அந்த தேசத்தின் ஆட்சியில் தர்மம் அழியுமாறு ஏதோ நடக்கிறது என்று அர்த்தம் .
எனவே என் மகனுடைய மரணத்திற்கு நீயே பொறுப்பு " என்று கூறி தன் மகனின் சடலத்தை அரசவையில் ராமன் முன் கிடத்தினார் அந்த பிராமணர்.
மனம் கலங்கிப் போன ராமன் என் ஆட்சியில் தர்மம் அழிகிறதா அப்படி என்ன நடந்தது என்று தேவலோக ஞானிகளையும் அழைத்து கேட்கிறார்.
அந்த ஆலோசனை சபைக்கு வந்திருந்த திரிலோக சஞ்சாரியான நாரதர் கூறினார்.
" ராமா உன் ஆட்சியில் நீ தர்மத்தை நல்லபடி காத்து வருகிறாயு .அப்படி இருந்தும் இந்த பிராமணப் பிள்ளையின் அகால மரணம் ஏற்பட்டுள்ளது என்றால் சனாதன தர்மத்தை மீறி ஏதோ செயல் நடந்திருக்கலாம் ".
மேலும் இராமன் விளக்கம் கேட்க நாரதர் கூறினார் .
" சூத்திரர்கள் யாரேனும் வேதம் தவம் இவற்றில் ஈடுபட்டிருக்கலாம் . சூத்திரர்கள் கற்பதும் தவம் செய்வதும் கலியுகத்தில்தான் நடக்கும் .. இந்த யுகத்தில் நடக்காது . அவ்வாறு நடந்தால் அது தர்மத்திற்கு எதிரானது .அதைத் தேடி தடுத்து நிறுத்தினால் இந்த பிராமணப் பிள்ளை பிழைக்கும் "என்றார் நாரதர்.
உடனே தன் வில் அம்பு வாள் சகிதம் புறப்பட்ட இராமன் தான் திரும்பி வரும்வரை அந்த சிறுவனின் சடலம் கெட்டு விடாமல் மருந்துத் தைலங்களை பெரிய பாத்திரத்தில் நிறைத்து அதில் அந்த உடலைப் பாதுகாத்து வரும்படி ஆணையிட்டான் .
கோபத்துடன் தன் புஷ்பக விமானத்தில் ஏறி பல திசைகளையும் பார்த்துக் கொண்டு வந்த இராமன் சரயு நதிக் கரையில் வியக்கத்தக்க தேஜஸுடன் ஒருவர் தலைகீழாக நின்று உக்ர தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு விமானத்தை இறக்கி அவர்.அருகில் சென்று
" தவசிரேஷ்டரே நீர் யார்? எதற்காக இந்த தவம் செய்கிறீர்கள் ?" என்று கேட்க
தவநிலையில் இருந்தபடியே அந்த தவசி சொல்கிறார் .
"என் பெயர் சம்புகன் . நான் சொர்க்கத்திற்கு செல்வதற்காக இந்த உக்கிர தவம் புரிகிறேன் ." நீங்கள் யார் ?
என்று கேட்கிறார் சம்புகன் .
நான் ஸ்ரீ ராமச்சந்திரன் . இத்தவம் செய்யும் செய்யும் நீர் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவர் ? பிரா மணரா அல்லது ஷத்திரியரா ? வைசியரா இல்லை சூத்திரரா சொல்லுங்கள் என்று கேட்க ,
சம்புகன் கூறினார் ஸ்ரீ ராமச்சந்திர பிரபு நான் உம்மைக் கண்டது என் பேறு .
நான் " சூத்திர யோனியில் பிறந்தவன் "
என்றார் சம்புகன்.
அதைக்கேட்டவுடன் ஒரு நொடியும் தாமதிக்காது ராமன்
" அப்படியானால் நான் என் கடமையைச் செய்ய வேண்டும் ""
என்று கூறியபடி தன் பளபளக்கும் வாளை உருவி சம்புகனின் தலையை சீவினான் .
சம்புகனின் தலை வேறு உடல் வேறாக விழுந்த உடன் வானுலகில் இருநது தேவர்கள் மகிழ்ந்து பூமாரி பெய்தனர் .
அதே நேரத்தில் தைலக் கொப்பறையில் வைக்கப்பட்டிருந்த பிராமண சிறுவனின் சடலம் உயிர் பெற்று அச்சிறுவன் எழுந்தோடி வந்தான் .
அவனைக் கண்ட அந்த பிராமணர் மகிழ்ந்து இராமனை வாழ்த்தினார் .
இவ்வாறாக ஸ்ரீ இராமர் தனது ஆட்சியில் தர்மத்தை நிலை நாட்டினார்.
இதுவே சம்புகன் கதை !!!