Saturday, June 22, 2019

காயத்திரி மந்திரம் சொல்லி மூளை வீங்கிய விஞ்ஞானி எஸ்.வீ.சேகர்

காயத்திரி மந்திரம் சொல்லி மூளை வீங்கிய விஞ்ஞானி எஸ்.வீ.சேகர் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் ஆரியபவன்தான் உள்ளது திராவிடபவன் இல்லை என சமீபத்தில் கிண்டல் செய்துள்ளார்.

தமிழகமெங்கும் ஆரியபவன்கள் மட்டுமல்ல முட்டை பப்ஸ் விற்கும் ஐயங்கார் பேக்கரிகளும் உண்டு. ஆனால் இவற்றில் 99% கடைகளை நடத்துவது பார்பனரல்லாதோர்/ஆரியரல்லாதோர். அதாவது, பேருதான் ஆரியபவன். முதலாளி பெரும்பாலும் திராவிடன்தான்.

இதில் இன்னொரு விஷயமும் உண்டு. நேற்று ப்ரஸ்டீஜ் "RO water purifier" விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன். அது வைரஸ், பேக்டீரியாவை கொல்லுவதோடு, இறந்துபோன வைரஸ், பேக்டீரியாவை நீரில் இருந்து அகற்றுமாம். எனவே அது தருவது சுத்தமான வெஜிடேரியன் நீராம்! அதாவது "100% சைவ நீர்" என விளம்பரம் செய்திருந்தார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? '100% சுத்த சைவம்' என போர்டு மாட்டினாலோ, ஆரியம் என பெயர் வைத்தாலோ, ஐயங்கார் என பெயர் வைத்தாலோ பல்லைக் காட்டிக்கொண்டு எஸ்.வீ.சேகரின் கும்பல் வந்து பொருளை வாங்கும் என்றும், தின்றுவிட்டுப் போகும் என்றும் சாதாரண முதலாளிகளில் இருந்து கார்ப்பரேட் கம்பனிகள் வரை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால் திராவிடத் தமிழர்கள் அப்படி அல்ல. குப்பன், சுப்பன் அசைவ ஓட்டல் நடத்தினாலும் சரி, ஏன் ஐயர்/ஐயங்கார்கள் அசைவ ஓட்டல் நடத்தினாலும் சரி, நன்றாக இருந்தால் போய் சாப்பிடுவார்கள். "100% சுத்தமான அசைவம்" என்கிற பீத்தபெருமைகளோ, திராவிடபவன் என முத்திரை குத்தினால்தான் சாப்பிடுவோம் என்கிற இனவெறியெல்லாம் அவர்களுக்குக் கிடையாது. சைவம் சாப்பிட நினைத்தால் ஆரியபவன்களிலும் சாப்பிடுவார்கள்.

சைவம் சாப்பிடுகிறோம் என்கிற பெயரில் முழு கேணையர்களாக இருந்துகொண்டு, ரூபாய் நோட்டுகளில் சிப் வைத்தார்கள் என்றெல்லாம் பேசிக்கொண்டு, திராவிடத்தமிழர்களை கிண்டல் செய்வதற்கெல்லாம் நிஜமாகவே ஒரு முரட்டுத்தனமான முட்டாள்த்தனம் வேண்டும். அது எஸ்.வீ.சேகர் வகையறாக்களிடம் நிறையவே இருக்கிறது.

*திராவிடமும் அணைகளும்*

*திராவிடமும் அணைகளும்*



தமிழ்நாட்டில் காவிரி பிரச்சனை பெருசாகும் போதெல்லாம்
காமராசர் அணைக்கட்டினார்
காமராசர் அணைக்கட்டினார்
என்று அள்ளிவிடுவோர் யாருக்கேனும் அவர் எத்தனை அணைக்கட்டினார் என்று தெரியுமா என கேட்டால்...

நிச்சயம் தெரியாது.
நாமே அதையும் சொல்லுவோம்...
எப்படி?
தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையின் அதிகாரப்பூர்வ, ஆதாரப்பூர்வ இணையதளத்தின் வழியே...
காமராசர் 9 வருடம் முதல்வராகயிருந்தார். அவர் காலத்தில் கட்டப்பட்ட அணைகள் தான் இங்கே சிவப்பு வண்ணத்தில் கட்டம் போட்டு காண்பிக்கப்பட்டிருக்கிறது.



சரி, அப்போ திமுக/அதிமுக என்ன செய்தது?
இங்கு இணைக்கப்பட்டிருக்கும் பட்டியலில் உள்ள வருடங்களை படித்துப்பார்த்தாலே எளிதில் தெரிந்துவிடும்
திமுக மட்டுமே 36 அணைகள் கட்டியுள்ளது.
நான்காவது புகைப்படம் *காவேரிக்கு குறுக்கே மட்டும் இதுவரை கட்டிய அணைகளின் விபரம்* தருகிறது.
தமிழ்நாடு காவிரியில் வெள்ளம் வரும்போதெல்லாம் வீணாக்கிவிடுகிறது. எல்லாமே கடலில் தான் போய் சேர்கிறது. தடுப்பணைகளே இல்லை என்றும் ஒரு அறிவில்லா புலம்பல் இருக்கிறது.
அப்படியா? என்று அதையும் ஆராய்ந்துப் பார்ப்போம்.
சேலம் மாவட்டம் மேட்டூர் முதல் திருச்சி வரை காவேரி குறுக்கே உள்ள அணைகள் விவரம்.
மேட்டூர் அணை முதல் கல்லணை (டெல்டா ஆரம்பம்) வரை 14 அணைகள் உள்ளன.
இதில் காலிங்கராயன் அணை மட்டும் பவானி காவேரி ஆற்றில் கலக்கும் இடத்தில் உள்ளது.
மற்ற அணைகள் அனைத்தும் காவேரி குறுக்கே உள்ளது.
மேட்டூர் முதல் திருச்சி வரை 210கிமீ நீளம் உள்ள ஆற்றில் 13 அணைகளில் தான் தலைக்காவேரிலிருந்து வரும் நீரை சேமிக்கப்படுகிறது.
சேலம்,
ஈரோடு
நாமக்கல்,
கரூர்
மாவட்டங்கள்
காவேரி டெல்டா மாவட்டங்களான
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினத்தை விட மேட்டில் உள்ளதால் *(9)* தடுப்பு அணைகள் இந்த மாவட்டங்களில் கடந்த முப்பது ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளது!
இதில் விவசாயம் (குறிப்பாக டெல்டா மாவட்டங்களுக்கு), குடி தண்ணீர் தேவை மற்றும் மின்சார தேவைக்கு தண்ணீர் சேர்த்து வைக்கப்படுகிறது!
*காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தால் தான் இந்த அணைகளுக்கு முறையாக தண்ணீர் வரும்!!*
கல்லணை அடுத்து காவேரி பல நதிகளாக பிரிந்து கடலில் கலக்கிறது. இந்த சின்ன சின்ன ஆறுகளிலும் நிறைய தடுப்பணை உள்ளது. அடுத்த கட்டமாக கொள்ளிடம் ஆற்றில் சில தடுப்பணை கட்டும் பணிகளும் நடந்து வருகிறது.
மேட்டூர் போல பிரம்மாண்ட அணை கட்ட புவியியல் இடம் மேட்டூரை தாண்டி தமிழகத்தில் இல்லை.
*தமிழகத்தில் அணைகள் இல்லை,யாரும் கட்டவில்லை என்று உங்களிடம் இனி எவனாவது பாடமெடுத்தால் தயங்காமல் செருப்பை தூக்கிக் காட்டுங்கள்.*
எல்லோரும் அறிய, பொதுவெளியில் இருக்கும் ஒரு விவரத்தை எடுத்து, அதைப் பற்றி ஆராய்ச்சி செய்ததைப்போல இவ்வளவு எழுதுவதற்கு வெட்கமாகத்தான் இருக்கிறது.
ஆனால், பொதுவெளியில் இவ்வளவு விவரங்கள் இருக்கும்போதே இவ்வளவு கேவலமாக பொய் சொல்கிறார்களே, அதை நினைத்தால் இந்த தயக்கம் போய்விடுகிறது.

பெரியார் & வைக்கம் போராட்டம் - துக்ளக் என்னும் துப்புக் கெட்ட இதழ் ஒரு கூச்ச நாச்சில்லாமல் என்ன எழுதுகிறது

இந்த வாரம் 'துக்ளக்' இதழில் (26.6.2019) எழுதப்பட்ட ஒரு கட்டுரையின் (பக்கம்6) தொடக்கமே இவ்வாறு இருக்கிறது.
"ஈ.வெ.ரா.பெரியார் வைக்கம் போராட்டத்தில் கடைசிக் கட்டத்தில்தான் கலந்துகொண்டு தலைமையேற்றார். ஆனால் தமிழ்நாட்டில் வைக்கம் போராட்டம் பெருமை முழு வதும் அவருக்கே தரப்படுகிறது" என்று எழுதப்பட்டுள்ளது.
ஒன்றை எழுதும் போது ஆதாரப்பூர்வமாக எந்த வருடம்; எந்தத் தேதியில் என்ன நடந்தது என்று எழுதும் யோக்கியதை இந்தக் கூட்டத்திற்கே கிடையாது. காரணம் - உண்மையாக இருந்தால் தானே அவ்வாறெல்லாம் ஆதாரப் பூர்வமாக எழுத முடியும்.
போகிற போக்கில் அள்ளித் தெளிக்கும் கோணல் புத்தி அந்தக் கும்பலின் குருதியில் எப்பொழுதுமே கொப்பளிப்பது வழக்கமே!
அவர்களுக்குச் சொல்லா விட்டாலும் வாசகர்களுக்கு உண்மை விவரம் போய்ச் சேர வேண்டும் என்ற பொறுப் புணர்ச்சியோடு நாம் சொல்லத்தான் செய்வோம்.
தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தின் கடைசிக் கட்டத்தில்தான் போனார் என்கிறதே 'துக்ளக்' அது உண்மையா?
ஒரு வழக்கு விசாரணைக்காக ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் மாதவன் நீதிமன்றம் சென்றார்.
நீதிமன்றமோ திருவிதாங்கூர் மன்னரின் கொட்டாரத்தில் (அரண்மனையில் ஓரிடம்) இருக்கிறது. அப்பொழுது மன்னரின் பிறந்த நாள் விழாவுக்காக எல்லாப் பாகத்திலும் பந்தல் போடப்பட்டு இருந்தது. நீதிமன்றம் உள்ள இடமும் பந்தலுக்குள் அடக்கம். அரசருக்காக முறை ஜெபம் தொடங்கப் பெற்றது.
இந்த நிலையில் மாதவன் ஈழவர் (நாடார்) சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் நீதிமன்றம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பிரச்சினையின் தொடக்கப் புள்ளி இதுதான்.
இதனை எதிர்த்து சத்தியாக்கிரகம் நடத்த வேண்டும் என்று ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் முடிவு செய்தார்கள். வக்கீல் மாதவன், டி.கே. மாதவன், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.பி.கேசவமேனன் முதலியோர் இணைந்தனர்.
கொல்லம் சுயராஜ்ஜிய ஆசிரமத்தில் கேரள காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றிய நாள் 16.2.1924.
கிளர்ச்சி தொடங்கப்பட்ட நாள் 30.3.1924. வைக்கம் கோயிலைச் சுற்றி நான்கு வீதிகள் இருப்பதால் சத்தியாக்கிரம் செய்ய வைக்கத்தைத் தேர்வு செய்தனர்.
கிளர்ச்சி தொடங்கியது முதல் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு 6 மாதம் தண்டனை அளிக்கப்பட்டது. கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப் உட்பட 19 முக்கிய தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கிளர்ச்சியினைத் தொடர்ந்து நடத்திட தலைவர்களும் இல்லை - கிளர்ச்சியில் ஈடுபட தொண்டர்களும் இல்லாத கையறு நிலை.
அந்தக் கால கட்டத்தில் இதுபோன்ற சமுக சீர்திருத்த கிளர்ச்சிக்குத் தலைமையேற்று வெற்றிகரமாக நடத்த வல்லவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.ரா.தான் என்று முடிவு செய்து குரு நீலகண்டன் நம்பூதிரி பெரியாருக்கு தந்திகளைக் கொடுத்தார். (4.4.1924 மற்றும் 12.4.1924).
ஜார்ஜ் ஜோசப் மற்றும் பாரிஸ்டர் கேசவமேனனும் கையொப்பமிட்டுக் கடிதமும் எழுதுகிறார்கள். அந்த நிலை யில் பெரியார் வைக்கம் புறப்பட்டு அடைந்த தேதி 13.4.1924.
இந்த இடத்தில் மிக மிக முக்கியமாகக் கோடிட்டுக் கவனிக்கத்தக்கது என்ன? கிளர்ச்சி தொடக்கப்பட்டது மார்ச் முப்பது - தந்தை பெரியார் வைக்கம் சென்றடைந்தது. 13.4.1924 இரண்டே வாரத்தில் வைக்கம் சென்று போராட்டத் துக்குத் தலைமை தாங்குகிறார்.
உண்மை இவ்வாறு இருக்க, 'துக்ளக்' என்னும் துப்புக் கெட்ட இதழ் ஒரு கூச்ச நாச்சில்லாமல் என்ன எழுதுகிறது"
"ஈ.வெ.ரா. பெரியார் வைக்கம் போராட்டத்தின் கடைசி கட்டத்தில்தான் கலந்து கொண்டு தலைமையேற்றார் என்று எழுதுகிறது என்றால், இந்தக் கூட்டத்தின் யோக்கியதை என்ன என்பதைநம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்."
கிளர்ச்சிக்குத் தந்தை பெரியார் தலைமை தாங்கியதும் போராட்டம் சூடு பிடித்து விட்டது. அவர் உரையைக் கேட்க மக்கள் பெரும் அளவில் திரள ஆரம்பித்தனர்.
"கீழ் ஜாதி மக்கள் தெருவில் போவதால் அது தீட்டுப்பட்டு விடும் என்று சொல்லும் வைக்கத்து அப்பனை (கடவுள் மகாதேவனை) கீழே போட்டு வேட்டித் துவைக்கணும்" என்றார்.
"நாயும், கழுதையும், பன்றியும் வைக்கம் தெருக்களில் தாராளமாக நடமாடுகின்றனவே, அவை சத்தியாக்கிரகம் நடத்தியா அவ்வுரிமைகளைப் பெற்றன?" என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்ளுமாறு நச்சு நச்சென்று நாப்பறை கொட்டினார்.
பத்து நாள்கள் அரசு ஒன்றுமே செய்யவில்லை; காரணம் அரசர் தந்தை பெரியாருக்கு நண்பர். அவர் வடக்கே செல்லும் பொழுதெல்லாம் அவர் தங்குவது ஈரோட்டில் தந்தை பெரியார் மாளிகையில்தான். அரசரின் பரிவாரங்கள் தங்குவது தந்தை பெரியாருக்குச் சொந்தமான சத்திரத்தில் தான். அதனால் தொடக்கத்தில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
தந்தை பெரியார் பேச்சைக் கேட்க பெரு வாரியாக மக்கள் திரளுகிறார்கள். கிளர்ச்சி பெரும் அளவில் வெடிக்கும் என்ற நிலை ஏற்பட்ட சூழலில் கைது செய்து,ஒரு மாதம் அருவிக் குத்தி சிறையில் அடைக்கப்படுகிறார்.
விடுதலையான நிலையில் முன்னிலும் தீவிரமாகக் கிளர்ச்சியில் ஈடுபட்டார். இவரை இனி வெளியில் விட்டு வைக்கக் கூடாது என்று முடிவு செய்து திருவிதாங்கூர் சிறையில் 6 மாதத் தண்டனை அளிக்கப்பட்டார்.
பெரியாரோ சிறையில்! போராட்டத்தின் கெதி என்ன என்ற நிலையில் தந்தை பெரியாரின் மனைவி நாகம்மை யாரும், தங்கை கண்ணம்மாள் அவர்களும் போராட்டத்தைத் தொய்வில்லாமல் தலைமை தாங்கி நடத்தினர் என்ற வரலாறு எல்லாம் குடுமி குருமூர்த்தி கூட்டத்திற்குத் தெரியுமா?
அல்லது தெரிந்திருந்தும் பார்ப்பனீயத்துக்கே உரித்தான பித்தலாட்டத்தில் அரங்கேற்றமா என்பதை வாசகர்களின் அறிவார்ந்த முடிவுக்கே விட்டு விடுவோம்!
தந்தை பெரியார் சிறையில் இருந்தபோது அவரை சாகடிப் பதற்கு சவுண்டிகளான நம்பூதிரிகள் சத்துரு சம்ஹார யாகம் நடத்தினார்கள்; எதிரியை (பெரியாரை) சாகடிப்பதற்கான யாகமாம்.
என்ன வேடிக்கையென்றால் மன்னர் மண்டையைப் போட்டு விட்டார். பட்டம் சூட்டிக் கொண்ட இராணி சிறைக் கைதிகளை விடுதலை செய்தார்.
தந்தை பெரியாருடன் இராணி பேசினால், பெரியாருக்கு மரியாதை கூடி விடும் என்று - அதுவரை வைக்கம் போராட்டத்துக்கு ஆதரவாக பெரிய அளவில் எதையும் செய்யாத காந்தியாரை, இராணியுடனான சமரசப் பேச்சுக்குக் கொண்டு வந்தது குல்லுகப் பட்டர் ராஜாஜியே. இன்னும் சொல்லப் போனால் போராட்டத்தை இடையில் நிறுத்தி விடுமாறு கூறியவர்தான் காந்தியார். வைக்கத்தில் தந்தைபெரியார் தலைமை தாங்கி கிளர்ச்சி நடத்திக் கொண்டிருந்த முக்கியமானகால கட்டத்தில் சீனிவாசய்யங்காரை வைக்கத்திற்கே இவர் அனுப்பி, சென்னைக்குத் திரும்பி விடுமாறு சொன்னவர் ராஜாஜி.
"எனக்குக் காரியம் தான் முக்கியமே தவிர, வீரியமல்ல" என்ற கருத்துடையவர் தந்தை பெரியார். காந்தியார் இராணியுடன் பேசியே நாங்கள் கோரியது நடக்கட்டும் என்றார்.
முதற்கட்டமாக ஈழவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்காக எல்லா வீதிகளும் திறந்து விடப்பட்டன என்பதுதான் வரலாறு. வைக்கம் வெற்றி விழா 29.11.1925 இல் நடைபெற்றது. அந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தவரே பெரியார்தான்.
வைக்கம் போராட்டத்தின் உண்மை வரலாற்றை, தந்தை பெரியார் அவர்களின் பங்கினைத் தெரிந்து கொள்ள வேண் டுமானால் இரு நூல்கள் முக்கியமானவை. பாரிஸ்டர் கே.பி. கேசவமேனன் எழுதிய கழிஞ்ச காலம் (கடந்தகாலம்) பல்கலைக் கழகப் பேராசிரியர் டி.கே. இரவீந்திரன் எழுதிய (பிறகு துணைவேந்தர்) Vaikam Satya Graha and Gandhi என்ற நூல் முக்கியமானது இரண்டாவது பதிப்பில் Hundred Yards to Freedom என்று தலைப்பு மாற்றப்பட்டது.
இன்னொரு முக்கிய ஆதாரம்: இந்தியாவின் பொது ஆளுநருக்கு சென்னை மாகாணத்தில் முதல்வராக இருந்த (Agent to the Governor - General, Madras) சி.டபுள்யூ இகாட்டன் எனும் அய்.சி.எஸ். அதிகாரி, சென்னைதலைமைச் செயலாளருக்கு 1924 ஏப்ரல் 21 நாளிட்டு எழுதிய மடல் முக்கியமானதாகும்.
"சத்தியாக்கிரக இயக்கத்திற்கு திருவாங்கூருக்கு வெளியில் உள்ளவர்களின் உதவி கிடைக்காதிருந்தால், அது வெகு நாட் களுக்கு முன்பே பிசுபிசுத்துப் போயிருக்கும். ஆனால், வைக்கம் அறப்போருக்குச் சென்னையிலிருந்து நிதியாகவும் தலைமைப் பொறுப்பு என்ற வகையிலும் கிடைத்த ஆதரவு அபரிமிதமாகவும், மனதில் படும்படியாகவும் இருந்தது. ஈ.வெ. ராமசாமி நாயக்கரின் தலைமை இயக்கத்திற்குப் புத்துயிர் ஊட்டியது. கேரளாவிற்குப் புறப்படுவதற்கு முன் தமிழக மக்களுக்கு அவர் விடுத்த உணர்ச்சி மிக்க வேண்டுகோள் தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் ஆழப் பதிந்தது." பெரியாரின் அறிக்கையைத் தமது மடலில் கொடுத்து விட்டு, மேலும் காட்டன் எழுதுகிறார்: வைக்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், திருவாங்கூரின் மற்ற இடங்களிலும் அவர் பேசியவை மக்களின் உள்ளங்களை ஆழமாகத் தொட்டன. அவ ருடைய தீர்க்க மான தர்க்க முறையில் அமைந்த வாதங்கள், தடு மாற்றமுள்ளவர் களைச் சத்தியாக்கிரகத்திற்குச் சார்பாக மாற்றிய துடன், எதிர்த்தவர்களையும் அவ்வாறே ஆக்கியது. சத்தியாக்கிர கத்திற்குச் சில நாட்கள் தலைமை ஏற்றார். பின்பு கிராமங்களுக்குச் சென்று அதன் கொள்கைகளையும் குறிக்கோள்களையும் பிரச் சாரம் செய்தார். அடுத்துக் காங்கிரஸ் குழுவோடு சேர்ந்து வெவ் வேறு இடங்களுக்குச் சென்றார். ராமசாமி நாயக்கருடைய பேச்சு மக்கள் எளிதில் பதியக் கூடியதாகவும், காரசாரமான ஆற்றல் பெற்றதாகவும், திருவாங்கூர் அரசாங்கத்தின் கவுரவத்தைக் குலைப்பதாகவும் இருந்தது. எனவே, அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்"
இதற்கு மேல் என் ன ஆதாரம் வேண்டும் - உங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைக்கப் போகிறீர்கள். குருமூர்த்திகளே!
தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் அப்பொழுது காங்கிரஸ் ஏடான நவசக்தியில் என்ன எழுதினார் என்பதாவது குருமூர்த்தி வகையறாக்களுக்குத் தெரியுமா?
வைக்கம் வீரர் என்று தலைப்பிட்டு திரு.வி.க. எழுதுகிறார் - படியுங்கள், படியுங்கள்.
"ஸ்ரீமான் நாயக்கர் செல்வமெனும் களியாட்டில் அமர்ந்தவர்; உண்டாட்டில் திளைத்தவர்; வெய்யில் படாது வாழ்ந்தவர்; ஈரோட்டு வேந்தரென விளங்கியவர். ஈ.வெ. ராமசாமி நாயக்கர் தமது செல்வம் முதலிய மாயைகளை மறந்து, வறியார் போல் எளிய உடை தரித்து எளிய உணவு உண்டு, இரவு பகல் ஓயாது தேசத் தொண்டிற்கே தமது வாழ்வை அர்ப்பணம் செய்துள்ளதை எவரே அறியார்?" என்று நவசக்தியில் தீட்டினாரே (24.5.1924).
எவரே அறியார் என்று திரு.வி.க. 95 ஆண்டுகளுக்கு முன் கேட்டார். ஆனால் அப்படி கேட்கும் இனத்துவேஷ விரியன்கள் இன்னும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
இன்னும் உண்டு கேளுங்கள், கேளுங்கள் - உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கேரளத்தைச் சேர்ந்த எம். கோவிந்தன் நாயர் எழுதுகிறார் (1929).
"உலகத்தில் உள்ள எல்லா மக்களும் ஒரே ஜாதியினர் என்று உபதேசித்தவர் காலஞ்சென்ற பெரியார் திரு நாராயண குருசாமி அவர்கள். மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதே அவரது மதத்தின் சாரம். இவ்வுண்மையை உள்ளபடி நன்கு உணர்ந்தவர் திரு கே. அய்யப்பன். என்றும் பிறர்க்கு என வாழும் வாலிபர். அவர் இவ்வுதேசத்தைப் பரப்பி வருகிறார். மேற்கு மலைத் தொடர்ச்சிக்குப் பக்கத்தே என் நண்பர் திரு ஈ.வெ. ராமசாமியார், மற்றெவரையும்விட நன்றாக இவ்வுண்மையை உணர்ந்து ஜாதி என்னும் பேயைப் போராடி ஒழிக்கத் தமது ஆயுள் முழுவதிலும் உழைக்கத் தயாராக முன் வந்துள்ளார். வைக்கம் சத்தியாக்கிரக நாட்களில், யான் இவ ருடன் முதன் முதல் அறிமுகமானேன். வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு இவரே உயிராக இருந்தார். அந்நீண்ட தொடர்ச்சியான போரைச் சித்தியேற் படும்படியான முடிவிற்குக் கொண்டு வந்து விட்டுத் திரு. இராமசாமியார் சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கினார். கோட்டயத்தில் நடைபெற்ற எஸ்.என்.டி.பி. (சிறி நாராயண குரு தர்ம பரிபாலன்) மாநாட்டில், 10000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு, இவர் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களைப் பற்றிச் செய்த சொற்பொழிவை யான் கேட்டேன். சொற்பொழிவு எளிதாகவும், நேரானதாகவும் இருந்தது. அவரது வாயினின்றும் வந்த ஒவ்வொரு சொல்லும், உண்மையுணர்வோடு வந்தது. மிகுந்த கவனத்தோடு மக்கள் கேட்டனர் .களங்கமற்ற கோடிக்கணக்கான மக்களுக்கு இந்நாட்டில் பிறப்பினால் ஏற்பட்டிருக்கும் அநீதியான தடையை நீக்கவும், ஒவ்வொரு மனிதனும் யாதொரு தடையுமின்றி முன்னேற் றமடைய வாய்ப்பும் வசதியும் அளிக்கவும், நாகரிக உலகத்தால் எள்ளி நகையாடப் பாத்திரமாகவிருக்கும் தாழ்ந்த நிலைமையிலிருந்து இந்தியாவை முன்னேற்றவும், திரு இராமசாமியார் சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கினார்"
வைக்கம் வெற்றி விழாவில் உரையாற்றிய மன்னம் பத்மநாபன் பேசுகிறார். நாகம்மையார் அனைவருக்கும் தாய் என்றும் போராட்டக் காலத்தில் மக்களின் இன்னலைப் பகிர்ந்துகொள்ள வந்த அவர் வெற்றி விழாவிற்கும் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள வந்திருக்கிறார் என்று நெகிழ்ந்து கூறியதுண்டே!
சென்னை மாநகர மேயராகவும், சட்டப் பேரவை உறுப்பினரா கவும் அண்ணல் அம்பேத்கருக்கு உற்ற தோழராக இருந்தவருமான வழக்குரைஞர் ராவ்சாகிப் என். சிவராஜ் என்ன கூறுகிறார்? (1928).
"தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்காக மகத்தான வேலை செய்திருக்கும் திரு நாயக்கர் அவர்களை எங்கள் சமுகத்தார் என்றும், மறக்கவே முடியாது. வைக்கத்தில் அவர் செய்துள்ள வேலை அளவிடற்பாலது. அவர் ஒரு காலத்தில் தேசியப் போராட்டத்தில் மிதவாதக் கொள்கை உடையவராக இருந்தார். சமுக சீர்திருத்தமின்றி அரசியல் சுதந்திரம் கொடுக்கப்படுமாயின், அதனால் எவ்வித நன்மையும் ஏற்படாது. சீர்திருத்தக்காரர்கள் பின்பற்றத் தகுந்த தலைவர் நாயக்கர் ஒருவரேயாவர்" என்று ஒடுக்கப்பட்ட சமுதாயத் தலைவர் படம் பிடித்துக் காட்டி கோணல் புத்திக்காரர்களின் செவிளில் அறைந்துள்ளாரே - இதற்குப் பிறகாவது புத்தி வருமா?
தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் என்பது சாதாரணமானதல்ல. மாகத் என்னும் ஊரில் அண்ணல் அம்பேத்கர் நடத்திய போராட்டத்துக்கே தூண்டுகோலாக இருந்தது என்பது கூடுதல் தகவல். தகர டப்பாக்களே இனி மேலாவது உளறுவதை நிறுத்திக் கொள்க!
திருவாங்கூர் சிறைச்சாலையில் பெரியார்
வைக்கம் போராட்டத்தில் சிறை பிடிக்கப்பட்டவர்களில் பாரிஸ்டர் கேசவ மேனன் ஒருவராவார். தமது சிறைவாசம் எப்படி இருந்தது என்பதுபற்றி எழுதுகிறார்.
"சுற்றிலும் தாழ்வரையுள்ள விசாலமானதொரு அறையில் மாதவனுக்கும், எனக்கும் படுத் துறங்கக் கட்டில்கள் போட்டிருந் தார்கள். குளியலறையும், எழுது வதற்கும், படிப்பதற்கும் வசதி யுள்ள இடமும், நடப்பதற்கு முற்றமும் இருந்தன. அந்தந்த நேரத்திற்கு ஏற்ற விருப்பமான உணவு கிடைத்தது. எங்களுக்கு வேண்டியதை அறிந்து உடனுக் குடன் நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் கருத்தாக இருந்த னர். செய்திப் பத்திரிகைகளும், புத்தகங்களும் எங்களுக்குக் கொண்டு வந்து தந்தார்கள். உற வினருக்கும், நண்பர்களுக்கும் கடிதங்கள் எழுதவும், அவர் களிடமிருந்து வரும் பதில் கடி தங்களைப் பெறுவதற்கும் அனுமதியளித்தனர். அன்றாடம் குறித்த நேரத்தில் எங்களைக் காண வருபவர்களுடன் பேசுவ தற்கும் தடை ஏதுமில்லை. சிறையில் இருந்து வெளியே செல்ல முடியாது என்ற ஒன்றைத் தவிர மற்ற வாழ்க்கை வசதி களைப் பொருத்து எங்களுக்குத் தேவைப்பட்ட எல்லாம் எளி தாகவே கிடைத்தன."
என்று கூறுகிறார் பாரிஸ்டர் கேசவ மேனன். அதே கே.பி. கேசவமேனன் திருவாங்கூர் சிறைச்சாலையில் தந்தை பெரியார் எப்படி நடத்தப்பட் டார்? அவர் அனுபவித்த கொடுமை என்ன என்பதையும் எழுதியுள்ளார். அதைப் படித்த பிறகாவது படமெடுத்தாடும் பார்ப்பனர் கூட்டத்தின் கடும் நஞ்சினைப் பார்ப்பனர் அல்லா தார் புரிந்து கொள்ள வேண்டும்.
"கால்களில் விலங்குச்சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய், முழங்காலுக்குக் கீழே தொங்குகின்ற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிக்கப் பட்ட ஒரு மரப்பட்டை, இவற் றோடு ஈ.வெ.ராமசாமி கொலை காரர்களோடும், கொள்ளைக் காரர்களோடும் வேலை செய்து கொண்டிருக்கின்றார். தண் டனை அடைந்த ஒரு சாதாரணக் கைதி எவ்வளவு ஒரு நாளைக்கு வேலை செய்வானோ, அது போல் இருமடங்கு வேலை செய்கிறார்.
ஒரு 'ஜாதி இந்து' என்று சொல்லக்கூடிய நிலையிலே உள்ள ஒருவர் கேரளத்திலுள்ள தீண்டத்தகாத மக்களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்ப தற்காக செய்த தியாகம் நமக்குப் புதுவாழ்வு தந்திருக்கிறது. இந்தப் பெரிய உன்னத இலட்சியத் திற்காக அவர் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார்.
ஈ.வெ.ரா. அவர்களுக்கு இருக்கக்கூடிய நாட்டுப்பற்று, உற்சாகம், அனுபவம், பெருந் தன்மை, பெரும் பக்குவம் இவைகளெல்லாம் உடைய இன் னொருவரை இந்த நாட்டிலே அந்த அளவுக்குக் காண முடியுமா? இந்த மாநிலத்து மக்கள் அனுபவிக்கிற கொடு மையை நீக்க வேண்டும் என்பதற்காக - தான் எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை வேண்டு மானாலும் ஏற்கலாம் என்று சொல்லி ஒரு தலைவர் வந்தாரே - அதைப் பார்த்து இந்த மாநில மக்களாக இருக்கிற யாருக்குமே வெட்கமேற்படவில்லையா? கேரளத்தின் முதிர்ந்த அனுபவ மிக்க தலைவர்கள் தங்கள் சாய்வு நாற்காலியைத் தூக்கி யெறிந்து விட்டு தங்கள் பங்கைச் செலுத்த இப்போதாவது வர வேண்டாமா?"
- கே. பி. கேசவமேனன் (மலையாளத்தில் தன் வரலாறு, பக்கம் 108)
இதனைப் படிக்கும் பொழுது - ஒரு செல்வச் சீமான் தீண் டாமை ஒழிப்புக்காக எத்தகைய விலையைக் கொடுத்திருக்கிறார் என்பதை உணர வேண்டாமா?
அட, வெட்கம் கெட்ட குருமூர்த்திகளே! உங்களுக்கு அறிவு நாணயம் என்ற ஒன்றே கிடையாதா?

Friday, June 21, 2019

இங்கே வரலாறே எது உண்மை எது உண்மை இல்லை என்று தெரியாத ஒரு நிலை

இங்கே வரலாறே எது உண்மை எது உண்மை இல்லை என்று தெரியாத ஒரு நிலை இருக்கையில் இந்த வரலாற்று இடைச்செருகல்கள் என்று ஒரு விஷயம் இருக்கிறது.
அதாவது பல காலமாக உண்மையான வரலாறு என்று நம்பப்பட்டு வரும் கற்பனைக்கு அப்பாற்பட்ட , நிதர்சனங்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்.
குறிப்பாக இதை எடுத்துக் கொள்வோமே.
சில ஆண்டுகளுக்கு முன்பாக இதுதான் திருவள்ளுவரின் மனைவி வாசுகி புகைப்படம் என்று ஒரு புகைப்படம் இங்கு முகநூலில் உலாவியது .அப்பொழுது நாமெல்லாம் அதை மிகவும் கிண்டல் செய்து திருவள்ளுவர் காலத்தில் கேமரா வந்தது எப்படி என்றுஅந்த புகைப்படத்தை பதிவிட்டவர்களை மிக மோசமாக விமர்சனம் செய்தோம்.
ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் யாரை எல்லாம் முட்டாள் என்று இழிவு செய்தோமோ அவர்களைவிட நாமே பெரிய முட்டாளாக தான் இருந்திருக்கிறோம். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் திருவள்ளுவரின் மனைவி வாசுகி தண்ணீர் பிடிக்கும் பொழுது திருவள்ளுவர் அழைத்தார் என்றால் அவர் அவருடைய அந்த தண்ணீர் பிடிக்கும் வாலி அதாவது பக்கெட் அப்படியே அந்தரத்தில் தொங்கும் against the gravity... அதாவது புவி ஈர்ப்பு விசையை மீறி அந்த பக்கெட் அந்தரத்தில் அப்படியே தொங்கிக்கொண்டிருக்கும் இதை எந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் சொன்னாரா என்று பார்த்தால் இல்லை . பின்பு இது நடக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் நம் முன்னோர்கள் என்ன திருவள்ளுவர் வீட்டில் உட்கார்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்களா அப்படியே இருந்தாலும் இதெல்லாம் சாத்தியமா ஆனால் என்றைக்காவது அறிவுபூர்வமாக அறிவியல் ரீதியாக இது எப்படி உண்மையாக இருக்க முடியும் என்று நாம் கேள்வி எழுப்பி இருக்கிறோமா? குறிப்பாக பள்ளிக்கூடத்தில் இது நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பாட புத்தகத்தில் இல்லை என்றாலும் நம் தமிழ் ஆசிரியர் திருவள்ளுவரைப் பற்றி பேசும் போது இது போன்ற சில விஷயங்களை அடித்துவிடுவார். இன்னொரு முக்கியமான விஷயம் இதை தாண்டி பல தமிழ் அறிஞர்கள் மேடைகளில் பேசும் பொழுதும் பட்டிமன்றங்களில் பேசும் பொழுதும் இதை உண்மையாக நடந்த ஒரு விஷயம் போல் திருவள்ளுவரின் மனைவி அவரின் கர்ப்பு , அவர்களின் தாம்பத்தியத்திற்கு சான்றாக இதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறார்கள். நாம் எப்படி இதையெல்லாம் நம்பினோம் ?தமிழ் சமூகம் அறிவு சார்ந்த ஒரு சமூகமாக இருக்கிறது தமிழ் என்பது வெறும் மொழியாக மட்டும் இல்லாமல் பகுத்தறிவையும் அதனோடு தொடர்பு படுத்திக்கொண்டு இருக்கும்போது எப்படி இந்த கேள்விகளை நாம் கேட்காமல் போனோம்?
இன்னும் சொல்லப்போனால் மிக முக்கியமான ஒரு விஷயத்தை நான் சொல்ல வேண்டும் திருவள்ளுவர் என்றால் யாரென்று நமக்குத் தெரியாது .திருவள்ளுவர் அவர் பெயர் கூட கிடையாது .அப்படி இருக்கையில் வாசுகி தான் திருவள்ளுவரின் மனைவி பெயர் என்று சொன்னது யார் ? திருவள்ளுவர் என்று பின்னாளில் நாம் அழைத்த மனிதனின் மனைவி பெயர் வாசுகி என்று எந்த கல் வெட்டில் இருக்கிறது? எந்த ஓலைச் சுவடியில் இருக்கிறது?
"ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான் வளர்ச்சி" என்பார்கள் என்னை பொறுத்தவரை மொழியும் வளரவேண்டும் மொழியோடு சேர்ந்து பகுத்தறிவும் வளரவேண்டும். பகுத்தறிவு வளர வேண்டுமென்றால் நாம் பழைய கற்பிதங்களை கேள்விகள் கேட்கவேண்டும் ,பழைய முறைகளை நாம் சவாலுக்கு உட்படுத்த வேண்டும்.
இது மட்டுமல்ல தமிழர் வரலாற்றில் இதுபோன்ற பல செருகல்கள் இருக்கின்றன.
குறிப்பாக அவ்வையார் எப்படி ஒரே பாட்டில் குமரியாக இருந்து கிழவியாக மாறினார்? பாரி எப்படி முல்லைக்கு தேர் கொடுத்தான்? இன்னொரு மன்னன் எப்படி மயிலுக்கு போர்வை பொத்தினான்? போன்ற பலவிதமான இடைச் செருகல்களை நாம் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது இது எல்லாம் ஒரு விதமான urban legends. உண்மை வரலாறு கிடையாது.
இன்னும் சொல்லப் போனால் எப்படி lord of the rings இல்லை கேம் ஆப் த்ரோன்ஸ் உண்மை வரலாறு என்று அடித்து போட்டாலும் நாம் நம்ப மாட்டோமோ அதேபோல் இதுபோன்ற தமிழ் வரலாற்றில் இருக்கும் சில தேவையற்ற பொய்களையும் நாம் கேள்வி கேட்டே ஆக வேண்டும்.
பகுத்தறிவோடு கேள்வி கேட்கும் சமூகமே முன்னேறும். லாஜிக்கல் கேள்வி கேட்பதே அறிவின் சான்று.

யோகாவும் இல்ல...ஒரு #ஹைகோர்ட்டும் இல்லை

இவனுக #குடுமி சும்மா ஆடாது.
யோகாவும் இல்ல...ஒரு #ஹைகோர்ட்டும் இல்லை.
#யோக்கியர்கள் யோகா செய்யச் சொல்லும் நோக்கம் #இதுதான்.



இந்தப் படத்தில் இருப்பவர்தான் கே.பி.ஹெட்கேவர்.
அதாவது கேசவ பலராம் ஹெட்கேவர்.
ஆந்திராவில் நிஜாம் மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட குந்த் குர்த்தி என்ற ஊர்தான் இவரின் பூர்வீகம்.
அங்கிருந்து குடும்பத்தோடு அடித்து விரட்டப்பட்டு மகாராஷ்டிரா நாக்பூரில் குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

சித்பவன பார்ப்பனர்.அதாவது பார்ப்பனர்களில் பல பிரிவு உண்டு. கடவுளுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள்தான் சித்பவனப் பிரிவாம்.

இந்தியாவில் மூன்றுமுறை தடை செய்யப்பட்ட RSS தீவிரவாத அமைப்பை உருவாக்கியவர் இவர்தான்.
1925 ல் நாக்பூரில் இவருடைய வீட்டில் வைத்துதான் RSS தொடங்கப்பட்டது.
மராட்டிய தலித் மக்களின் எழுச்சியை ஒடுக்கவே இந்த அமைப்பை அன்று தொடங்கினார்கள்.

RSS நடத்தும் முகாம்களில் யோகாவும் ஒரு நிகழ்ச்சி,
இதை வலியுறுத்தியவர் இந்த ஹெட்கேவர்.
அந்த முகாம்களில் பாடும் பாடல் இதுதான்.
இதற்கு சமஸ்தே சதாவஸ்தே என்று பெயர்.

SOLUTATIONS TO YOU, O MOTHER LAND
WHERE I AM BORN

SOLUTATIONS TO YOU, LAND OF ARYAS
WHERE I HAVE GROWN

SOLUTATIONS TO YOU, O SACRED LAND
WHERE I HAVE WORKED,

இதன் பொருள் என்ன?

நான் பிறந்த தாய் நாடே உன்னை வணங்குகிறேன்
என்னை வளர்த்த ஆரிய நாடே உன்னை வணங்குகிறேன்
நான் உழைக்கும் புனித நாடே உன்னை வணங்குகிறேன்.

ஆரிய நாடாம்.கொழுப்பப் பாத்தேளா.
இந்த யோக்கிய சிகாமணியின் நினைவு நாள் ஜூன் 21.
அந்த ஆள விழுந்து கும்புடச் சொல்றானுக.
யோகா என்ற பெயரில்.

அயோக்கியத்தனத்தையும், உழைக்கும் மக்களிடத்தில் அடிமைப் புத்தியை வளர்ப்பதுதான். இந்த பார்ப்பன அயோக்கியர்கள் தன்னுடைய வாழ் நாள் வேலைத்திட்டமாக வைத்துள்ளார்கள் என்பதை மானமுள்ள தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
யோகா என்பது உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்கி அவர்களை வஞ்சகம் செய்வதற்காகவும் தன்னெழுச்சியாக தனது உரிமையை போராடி பெறக் கூடாது என்பதற்காகவும் அவர்களுடைய போராட்ட குணங்களை மழுங்கடிப்பதற்கு இந்த பார்ப்பன அயோக்கியர்களின் தந்திரம்தான் "#யோகா" என்ற ஆயுதம் அதை அறிவார்ந்த முறையில் புரிந்து கொண்டு தமிழர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

வாள் அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்கள்

கேள்வி:
"பார்ப்பனர்களுக்கென 'Brahministan' என்னும் பெயரில் ஒரு தனி நாடு வேண்டும் என்றக் கோரிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?"
பதில்:
உண்மையில் பார்ப்பனர்கள் மட்டுமே நிறைந்த தேசம் ஒன்று இருக்கவே முடியாது என்பதுதான் என் கருந்து.
காரணம், ஒருவன் தன்னைப் பார்ப்பனனாகக் கருதிக்கொள்கிறான் என்றால் அவன் இந்து வேதங்களின்படி தன்னை பிறப்பால் உயர்ந்தவன் என்று நம்புகிறான் என்றுப் பொருள்.
வேதங்களின்படியும், மனுநீதியின்படியும் சமூகத்தில் மந்திரம் ஓதுவது, கோயிலில் மணியாட்டிப் பிச்சை எடுப்பதுப் போன்ற பணிகள் மட்டுமே தனக்குரியவை என்றும், மற்ற உடல் உழைப்பு தேவைப்படும் பணிகள் அனைத்தும் பார்ப்பனரல்லாத மக்களுக்கு உரியவை என்றும் நம்புகிறவன் என்றுப் பொருள்.
இப்படி ஒரு உழைப்புக்கு அஞ்சும் கையாலாகாத அயோக்கியக் கும்பலால் எப்படி ஒரு நாட்டை கட்டியெழுப்பமுடியும்? ஏற்கனவே உருவான ஒரு நாட்டைக் கொடுத்தால் அதிலாவது இவர்களால் இயங்கமுடியுமா?
இவர்கள் கேட்கும் பார்ப்பனர்களுக்குரிய தனிநாட்டில் வயலில் இறங்கி உழப்போவது யார்? துணியை நெசவு செய்யப்போவது யார்? கட்டிடங்களைக் கட்டப்போவது யார்? உடல் நோக உழைக்கப்போவது யார்? மலம் அள்ளப்போவது யார்?
உழைப்பு இல்லாமல் எப்படி ஒரு நாட்டை உருவாக்கமுடியும்? கோடிக்கணக்கான பார்ப்பனரல்லாத மக்களின் உழைப்பில் நோகாமல் உட்கார்ந்து உண்டுக்கொழுத்த தண்டக் கருமாந்திரங்களுக்கு தனிநாடு ஒருக் கேடா?
"இல்லை இல்லை.. கடுமையாக உழைக்கும் பணிகளை செய்வதற்கு பார்ப்பனரல்லாதவர்களை இங்கிருந்து அழைத்துக்கொள்வோம்" என்று அவர்கள் சொல்வார்களேயானால், "உங்களுக்கு உழைக்கப்பதற்காக பார்ப்பனரல்லாத மக்கள் வேண்டும் என்றால், இந்தியாவிலேயே அப்படித்தானே சுரண்டிப் பிழைக்கிறீர்கள். பிறகு என்ன மயித்துக்கு தனிநாடு வேண்டும்?" என்றக் கேள்வி எழும்.
"இல்லை இல்லை. நாங்களும் எங்கள் நாட்டில் உயர்வு தாழ்வு பார்க்காமல் சமத்துவமாக அனைத்துப் பணிகளையும் செய்வோம். உடல்ரீதியாக உழைப்போம்" என்று அவர்கள் சொல்வார்களேயானால், "பிறகு எப்படி நீங்கள் பார்ப்பனர்கள்? அந்த வெங்காயத்தை இங்கேயே செய்யலாமே? சமத்துவம் தழைக்குமே! அதைத்தானே திராவிட இயக்கம் சொல்கிறது?" என்றக் கேள்வி எழும்.
ஆக, எப்படிப் பார்த்தாலும் அவாள் அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்கள்.

திராவிடர் என்பதற்கு பதிலாக தமிழர்கள் என்று ஏன் வழங்கக் கூடாது

திராவிடர்  என்பதற்கு பதிலாக தமிழர்கள் என்று ஏன் வழங்கக் கூடாது என்று சிலர் கேட்கிறார்கள் . தமிழர்கள் என்று சொன்னாலே பார்ப்பனர்கள்  தாங்களும் தமிழர்கள் தாம் என்று கூறி அதில் சேர்ந்து கொள்கிறார்கள்.

நாங்களும் தமிழ்நாட்டில் பிறக்கிறோம், வளர்கிறோம், தமிழே பேசுகிறோம், தமிழ்நாட்டிலேயே இருக்கிறோம் அப்படி இருக்கும்போது எப்படி எங்களைத் தமிழர் அல்லர் என்று நீங்கள் கூறமுடியும் ? என்று கேட்கிறார்கள்.

ஒருகாலத்தில் தமிழர் என்பது  தமிழ் ( திராவிட)ப் பண்புள்ள மக்களுக்கு  அரிய பெயராக இருந்திருக்கக் கூடுமானாலும் - இன்று அது மொழிப் பெயராக மாறிவிட்டிருப்பதால் அம்மொழி வேதம் ஆரிய பண்புடைய மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்ற உரிமை பாராட்ட முன்வந்து விடுகிறார்கள்.
அத்தோடு ஆரியப்பண்பை நம்மீது சுமத்த அந்த சேர்க்கையைப் பயன்படுத்தி விடுகிறார்கள்.

அவர்களும் நாமும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் நாம் சூத்திரர்களாகிறோம். ஆகவே, நம் கூட்டத்திலிருந்து அவர்களை விலக்கிப் பேசித்தான், நம்மை திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நம்மில் தமிழன் என்று சொல்லும் - ஏமாளிகளைத்தான் பார்ப்பனர்களால் ஏமாற்ற முடியுமே ஒழிய , திராவிடர் என்றால் அவர்களால் ஏமாற்ற முடியாது .

சிதம்பரத்தில் 29.9.1948 இல் சொற்பொழிவு.

Thursday, June 20, 2019

நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்?

சமீபத்தில் புதிதாக நான் சேர்த்துள்ள நிறுவனத்தில், உடன் வேலை செய்யும் ஐயர் நண்பருடன் மதிய சாப்பாடு சாப்பிட்டு கொண்டிருந்த நேரத்தில்,
"பாகற்காய் சாப்பிடுங்க. முடிஞ்சா vegetarian ஆ மாறிடுங்க. நீங்க சாப்பிடற எல்லா விஷயத்தில இருக்க சத்தும் இங்கேயும் இருக்கு. நாமளும் ஒரு உயிர் தானே? எப்படி இன்னொரு உயிரை சாப்பிடுற காரியத்த பண்றமோ" ன்னு சலிப்போட சொன்னார்.
பதிலுக்கு நானும், "லோகத்துல இப்போ மரம் செடி தான் கம்மியா இருக்காம். ஏன் நீங்க அதை இன்னும் இன்னும் அழிச்சுண்டு இருக்கேள்? நாம எல்லாரும் காட்டுவாசியா இருந்தவங்க தானே? நீங்க ஏன் கொஞ்ச காலத்துக்கு நம்ம பக்கம் வரப் படாது?"ன்னு கேட்டேன்.
அதோட அமைதியா சாப்பிட்டு எழுந்து போன அவர், இப்போ வரை என் பக்கமே திரும்பல.
நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்?

ழ்மாரிகள் நாட்டுக்கும் வீட்டுக்கும் மொழிக்கும் கேடு.

ழ் தான் தமிழ்.
ழ் சொன்னா தான் தமிழன் என்று தொங்கும் " ழ்மாரிகள் " எல்லாம் புறந்தள்ளப்படவேண்டியவர்கள்...
ஒரு செத்த மொழியை ஒரு கூட்டமே தூக்கி சுமக்கிறது..தேவ பாஷை, தேவ பாடை என்று பெயரில்லாம் கொடுத்து ஆதிக்க தெனவட்டுடன் சுமக்கிறது. Syllable, phonetics எல்லாம் பற்றி கவலைப் படாமல் வாயில் வெற்றிலை போட்டுக் கொண்டு
ஓழ்ம் பூழ் பூழ்வ சுவஹ.
தத் சவிதுழ்ழ் வழேனியம்
பழ்ழ்ழ்கோ தேவஷ்ஷ்ய தீமஹிழ்
தியோ யோன பிழரசோதயாழ்த்
என்று ஓவர் ழகரம் போட்டு பேசுகிறது.
அவர்களை தமிழர்கள் என்று நாம் நினைத்தாலும்கூட அவர்களில் 99% ஆட்கள் தங்களை தமிழர்கஒ என்று நினைக்கத் தயார் இல்லை. அதனால் தான் தமிழ் வாழ்க என்று நாம் முரசறைந்தால் " ஜெய் ஹிந்த், பாராத் பேட்டி கி ஜெய் " என்கிறது..
நம்மை பார்த்து அதே வெற்றிலைக் கொதப்பும் வாயால் " கையெழுத்தெல்லாம் தமிழ்லயா ஓய் போட்டேள்..."
"வெழ்த்து கோஷம் ஒய்..இதெல்லாம் அவை குழிப்புல வழாது தெழியுமோண்ணோ.." என்று "ழ்"மாரித்தனத்துடன் பேசுபவர்களை எல்லாம் ஒரு காமெடி பீசாக அனுகினால் போதும்..
முதலில் மனிதம். உணர்வு..அதன்பின் தான் மொழி.
சில மாதம் முன்பு ஒரு சேட்டு அம்மா நீயா நானாவில் அட்டகாசமாக தமிழ் பேசினார். இன்னும் பல அயல் மொழிக்காரர்கள் ழகர உச்சரிப்பு வராமல் பேசினார்கள். ஆனால் அவர்கள் உணர்வால் தமிழர்கள் என்று நினைத்தால் அவர்கள் தமிழர்கள் தான். ழகரம் வந்தால் தான் தமிழன் என்றால் கொங்கு பிரதேசத்தையே கேரளாவுக்கு எழுதிக் கொடுங்கள்.
நெல்லைக் கண்ணன் கூட தான் ழ கரத்தை மிகச் சரியாக உச்சரிப்பார்..
அதுக்காக அவர எல்லாம் முற்போக்கிஸ்ட்டுன்னு சொல்லிட முடியுமா... ?
இந்த ழ் பஞ்சாயத்தைக் கிளப்பும் வெற்றிலை வாய் கொதப்பி ழ்மாரிகளிடம் ஒன்றே ஒன்று மட்டும் கேளுங்கள்..
"சரிங்க ழ் மாரி சார்..ழ் வராதவன் தமிழாவே இல்லாமல் போகட்டும்..உங்க வாய்ல தான் ழ் எல்லாம் நல்லா வந்து அக்மார் ழ்த்தமிழனாய் இருக்கிறீர்களே..அனைத்து கோவில்களிலும் இனிமேல் ழ் சிறந்த தமிழிலேயே அர்ச்சனை செய்துவிடலாமே..ஏன் ஒரு புரியாத செத்த மொழி?.." என்று கேளுங்கள்...
ஹெ ஹெ..அது வந்து ஓய்ய் என்று பிரசங்க கதாகலாட்சேபம் ஒன்றைத் தொடங்குவார்கள்.
நீ ஊதவே வேணாம் என்று சொல்லி வேறு வேலையைப் பாருங்கள்.
ழ்மாரிகள் நாட்டுக்கும் வீட்டுக்கும் மொழிக்கும் கேடு.
ழ் மாரிகள் cause cancer.
ழ்மாரி kills..

குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும்னு ஜோசியம் தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்

முகநூல் நண்பர் ஒருத்தர் தனக்கு தேவதை பிறந்திருக்கான்னு போஸ்ட் போட்டிருந்தார். எப்பவுமே இந்த மாதிரி போஸ்ட் போட்டா வாழ்த்துகள் சொல்லிட்டு நகர்ந்துடுவேன். ஆனா அதே போஸ்ட்ல கமெண்ட்ல தன் குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும்னு ஜோசியம் தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்னு கமெண்ட் போட்டிருந்தார். நம்ம வாய் சும்மா இருக்காதே. கீழ இருக்கிறதை கமெண்ட்டா போட்டுவிட்டுட்டு வந்துட்டேன் 😝 அவரு வந்து பார்த்துட்டு ப்ளாக் பண்ணிக்கட்டும் 🤣🤣
பொறந்து முழுசா 12 மணி நேரம் கூட ஆகல. அதுக்குள்ல அவங்க எதிர்காலம் தெரியனுமா? சரி எனக்குத்தெரிஞ்ச எதிர்காலம் சொல்லட்டுமா?
உங்க பாப்பா கொஞ்ச நாளைக்கு படுத்துட்டு மட்டும் இருப்பாங்க. பாத்ரூம்லாம் அவங்க அறியாமயே போயிடுவாங்க. நீங்கதான் ஆய் கழுவிவிடனும். கொஞ்சநாள் கழிச்சு தவழுவாங்க. அவங்களுக்கு நீங்கதான் நடக்க சொல்லிக்கொடுக்கவேண்டி இருக்கும். அப்புறம் நடப்பாங்க. பேச ஆரம்பிப்பாங்க. தமிழே தடுமாறும், நீங்கதான் அதையும் சொல்லித்தரவேண்டியிருக்கும்.
அப்புறம் ஓடுவாங்க, பாடுவாங்க, ஆடுவாங்க. ஸ்கூல் போவாங்க, திங்கள்கிழமை ஸ்கூல் போக அடம்பிடிப்பாங்க. அப்புறம் பெரியமனுஷி ஆவாங்க. அவங்க விருப்பப்படியோ இல்ல விதியேன்னு உங்க விருப்பப்படியோ கல்யாணம் பண்ணுவாங்க. புருஷன் கூட சண்டைப்போடுவாங்க, அவங்களும் குழந்தை பெத்துப்பாங்க.
அவங்களும் குழந்தையோட எதிர்காலம் தெரியனும்னு போஸ்ட் போட்டா, மீதியை அவங்ககிட்ட சொல்லிக்கிறேன். 🤣🤣

ஆதி திராவிடர் பெயர் காரணம்

ஆதி திராவிடர் பெயர் காரணம் !
*பறையர்,பள்ளர் போன்ற*
*தமிழ் குடிகளை #ஆதித்தமிழர் என அழைக்காமல் #ஆதிதிராவிடர் என
*ஏன் அழைக்கிறார்கள்?*
இதுதான் திராவிடம்
செய்த சதி என சிலர்
வரலாற்றை திரித்து
கதை சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் உண்மை என்ன?
பிரிட்டிஷ் இந்தியாவின் கால கட்டத்தில் மதராஸ் மாகாண சட்டசபையில்
20 ஜனவரி 1922ல் M.C.ராசா
சட்டசபையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
அந்த தீர்மானத்தின்படி
#பறையர், #பள்ளர் என்ற பெயர்
நீக்கப்பட்டு ஆதிதிராவிடர் என்ற
பெயர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசாணை எண் 817 மூலம் (25.03.1922) பறையர், பள்ளர் மக்களுக்கு #ஆதிதிராவிடர் எனப் பெயர்
மாற்றம் செய்யப்பட்டது.
பெயர் மாற்றம் செய்யப்பட்டு
2ஆண்டுகளாகியும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களில் பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்யப்படுகிறது.
இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என இரட்டைமலைசீனிவாசன் 25.08.1924ல் சட்டசபையில் முறையிட்டார். உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் பனகல் அரசர் பதிலளித்தார்.
இந்த காலகட்டத்தில் (1925 வரை) பெரியார் காங்கிரசில் இருந்தார்.
நீதிகட்சி 'ஆதிதிராவிடர் 'என பெயர் மாற்றிய தீர்மானத்திற்கும்
பெரியாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
1892ல் ஆதி திராவிடர் என்ற வார்த்தையை பதிவு செய்தவர் அயோத்திதாசர்.
1.12.1891ல் பண்டிதர்அயோத்திதாசர் நீலகிரியில் திராவிட மகா சபையின் முதல் மாநாட்டைக் கூட்டினார்.
அதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றி ஆங்கில அரசுக்கும், காங்கிரஸ்கட்சிக்கும் அனுப்பிவைத்தார்.
1892ல் அதை
"ஆதிதிராவிட மகாசன சபை" எனப்
பெயர் மாற்றி பதிவும் செய்தார்.
இதனை அடிப்படையாக கொண்டு நீதிக்கட்சி ஆட்சியில்
1922ல் பள்ளர், பறையர் என அழைக்கப்பட்ட சாதிகளுக்கு "ஆதிதிராவிடர் " என அரசு அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டியது.
M.C.ராஜா பட்டியல் சமூகத்தை சார்ந்தவர். அவர் தன்னுடைய சமூகத்தின் பெயரை எப்படி அழைக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவரின் மனநிலையிலிருந்து முடிவெடுத்தார்.
அதற்கு உறுதுணையாக இருந்தது
தாத்தா இரட்டைமலை சீனிவாசன்.
எதிர்காலத்தில் நீதிகட்சியிலிருந்து திராவிடர்கழகம் பிறக்கும் என்ற ஜோசியத்தை M.C.ராஜா அறிந்திருக்க வாய்ப்பு இல்லை
வரலாற்றை திரிக்கும் சிலர் சொல்வதுபோல ஆதி திராவிடர் என்ற பெயர் திராவிட கழகங்களால் கொடுக்கப்படவில்லை.
1891ல் அயோத்திதாசரால்
கொடுக்கப்பட்ட பெயர்.
அப்போது பெரியாருக்கு வயது 12.
'ஆதி திராவிடர்' என பெயர் மாற்றும்போது இந்தியா என்ற ஒரு சுதந்திர நாடே அப்போது கிடையாது. தமிழ்நாடு என்றவொரு
மாநிலமும் அப்போது இல்லை.
திராவிட கட்சிகள் அப்போது
பிறக்கவே இல்லை.
அப்போது பிறக்காத திராவிட இயக்கங்களை இழுத்து அவர்கள்தான் ஆதித்தமிழருக்கு ஆதி திராவிடர் என பெயர் சூட்டியதாகப் பொய்யை சொல்லி வரலாற்றை திரித்து அரசியல் செய்வது தற்போது நடக்கிறது.

தோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும்….

தோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும்….
( தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் )

நண்பர்களே…

தமிழ் செய்தி சேனலில் ( NEWS 18 ) தோழர் பெ.மணியரசனின் பேச்சைக் கேட்டேன். நன்றாகப் படித்த படிக்கின்ற பண்புள்ள அவர் பொய்யையும் புளுகையும் அள்ளி வீசியது எனக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. அவருடைய பெரும் புளுகுகளில் இரண்டை மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அவர் புளுகுகிறார் என்பதற்கான ஆதாரங்களையும் அந்த ஆதாரங்களைக் கொண்டுள்ள நூல்களின் இணைப்பையும் உங்களுக்குத் தருகின்றேன்.

தோழரின் பொய்1. தமிழ்நாட்டில் வேத வேள்விகளை பார்ப்பனர்களைக் கொண்டு செய்து அவர்களுக்கு நிலங்களைக் கொடுத்தது “களப்பிரர்கள்“ என்று கூறினார். உண்மையி்ல் சங்க கால சேர சோழ பாண்டிய மன்னர்களே வேத வேள்விகளைத் தொடங்கி வைத்து பார்ப்பனர்களுக்கு நிலம் வழங்கியவர்கள் என்பதை சங்க நூல்கள் பல இடங்களில் குறிப்பிடுகின்றன. சங்க இலக்கியங்களில் உள்ள இத்தகைய வேத வேள்விகள் சார்ந்த ஆதாரங்களை குறிப்பிடும் பாடல்களையும் அப்பாடல்கள் இடம் பெற்றுள்ள பகுதிகளையும் தொகுத்து விரிவாகப் பேசுகின்ற “சங்கநூல்களும் வைதீக மார்க்கமும்” என்ற நூலை நீங்கள் வாசிப்பதற்கு உதவியாக அந்த நூலின் இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

சங்ககால தமிழ் மன்னர்களால் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை களப்பிரர்கள் மீண்டும் பறித்தார்கள். அதனால் அவர்கள் பிற்காலத்தில் வந்த வேதம் சார்ந்த வைதீகர்களால் தூற்றப்பட்டார்கள் என்ற வரலாற்றுச் செய்தி பதிவாகி உள்ளது.  இந்தச் செய்தியைக் குறிப்பிட்டுள்ள நூலின் பக்கத்தை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். இதே நூலை இலங்கையிலும் மொழிபெயர்த்துள்ளார். இந்த மொழிபெயர்ப்பை தரவிறக்கம் செய்து கொள்ள இதன் இணைப்பை இத்துடன் இணைத்துள்ளேன்.

தோழரின் பொய் 2. சோழர் காலத்தில் “குலுக்குச் சீட்டு“ முறையில் பார்ப்பனர்களை மட்டும் பார்ப்பனார்களால் மட்டும் குலுக்கி எடுக்கப்பட்ட பார்ப்பன சபை அங்கத்தினர்களைப் பற்றிக் கூறுகின்ற ஒரு இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. அதனை உத்திரமேரூர் கல்வெட்டு என்று சொல்லுவார்கள். இந்தக் கல்வெட்டுகளைச் சுட்டிக்காட்டி  தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு ஜால்ரா அடித்து வந்த அடிவருடி கல்வியாளர்களும் சோழர்காலத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் முறை இருந்ததாக தமிழ் மக்களின் காதுகளில் பூ சுற்றி கப்சா அடித்து வந்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இத்தகைய கப்சாவை தானும் அடித்து ஒரு கூடுதல் கப்சாவையும் தோழர் இணைத்துக் கொள்கிறார். அது என்னவென்றால் இந்த இரண்டு கல்வெட்டுகளும் கி.பி.919 இல் முதலாம் பராந்தக சோழன் என்று குறிப்பிடப்படுகின்ற இராஜராஜனின் பாட்டனாரால் வெளியிடப்பட்டது என்பதை மறைத்து இராஜராஜ சோழன் வெளியிட்டார் என்பதுதான். இந்தச் செய்திகான ஆதாரத்திற்கான படத்தையும் இணைத்துள்ளேன்.

( “சங்கநூல்களும் வைதீக மார்க்கமும்” )
http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ0luUy&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D#book1/

(தென் இந்திய வரலாறு - இலங்கை மொழிபெயர்ப்பு)
http://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81

குறிப்பு
கி.பி. 8 ம் நூற்றாண்டு வாக்கில் வெளியிடப்பட்ட வேள்விகுடி செப்பேடு சங்ககால மன்னர்கள் பார்ப்பனர்களுக்கு வழங்கிய நில கொடைகள் களப்பிரர்கள் பறித்து பொது மக்களுக்கு அளித்ததாகவும்  நெடுஞ்சடையன் பராந்தகன் என்ற பாண்டிய மன்னன் பொது மக்களிடமிருந்த நிலங்களை மீண்டும் பறித்து பார்ப்பனர்களுக்கு வழங்கியதைப் பேசுகின்றது. இந்த வேள்விகுடிச் செப்பேடு பதிவாகியுள்ள  பாண்டிய செப்பேடுகள் பத்து என்ற பெரிய நூலின் இணைப்பையும் கொடுத்துள்ளேன்.

(பாண்டியர் செப்பேடுகள் பத்து) வேள்விகுடி செப்பேடும் இதனுள் உள்ளது.
http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI8kJQy&tag=%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81

தோழர் பெ.மணியரசன் அவர்களின் வீடியோ இணைப்பு https://www.facebook.com/tamizhdesiyam/videos/2063637237273502/

Wednesday, June 19, 2019

ராமநதி அணை கட்டியது கலைஞர் ஆட்சி காலத்தில்

எங்கள் ஊருக்கு அருகில், ராமநதி அணை என்ற ஒன்று உள்ளது. அந்த அணையில் குளித்துக் கொண்டிருக்கும் போது, ஒருவர் சொன்னார்... காமராஜருக்கு பிறகு யாரும் அணை கட்டவில்லை என்று.
இதில் வேடிக்கை என்னவென்றால், ராமநதி அணை கட்டியது கலைஞர் ஆட்சி காலத்தில்.
அந்த அணையில் குளித்துக் கொண்டிருக்கும், 99 சதவீத ஆட்களிடம் அது கலைஞர் ஆட்சியில் கட்டியது என்றால், நம்ப மாட்டார்கள். கழுத்தைப் பிடித்து கல்வெட்டு முன் இழுத்துச்சென்று அதில் எழுதியிருப்பதை வாசிக்க சொன்னால் கூட நம்பமாட்டார்கள்.
சிலருக்கு பால் ஒவ்வாமை இருப்பது போல, நீதிக்கட்சி, பெரியார், கலைஞர் ஒவ்வாமை இருக்கிறது.
பால் ஒவ்வாமை "lactose intolerance" இருப்பது பாலின் குற்றமல்ல.

பார்ப்பனரைப் பார்த்து வாழக் கத்துக்க'ன்னு பெரியார் சொன்னது

பக்தியில ஆடுவதும்
பாடையில போவதும் நாமதான்டா..!

எந்த பார்ப்பனராவது சாமிவந்து ஆடுறானா..
தீ' மிதிச்ச பார்ப்பனரை பார்த்ததுண்டா..

குழிமாற்று பூஜை செய்த உச்சிக் குடுமிகளை கண்டதுண்டா..

கடவுளுக்கு மொட்டைப் போட்ட அம்பிகளை சொல்ல முடியுமா..

நாட்டில் காவடி தூக்கிய பூணூல்கள் உண்டா..

சாட்டையில அடிச்சிக்கிட்டு, ரத்தபூஜை செய்த பார்ப்பனன் இருக்காணா..

மிளகாய் அரைச்சு பூசி, நேர்த்திக்கடன் அவன் செய்ததுண்டா..

இதத்தானே சொன்னார் பெரியார்,
பார்ப்பனரைப் பார்த்து வாழக் கத்துக்க'ன்னு..!
வேறென்ன, சொத்திலையா பங்கு கேட்டார்..?

தீபாவளி தமிழர் விழாவா? - தந்தை பெரியார்

தீபாவளி தமிழர் விழாவா? - தந்தை பெரியார்

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்!

இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல; தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.
“மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆரியரின் இறக்குமதியே தீபாவளி! வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ற மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று, அவற்றிற்கு அடிமையாகி, பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள்.

அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை - விரதம், நோன்பு - உற்சவங்களாக நல்லநாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.

இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஒரு அளவுக்குத் தலைகீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும்கூட, இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறுஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்!

எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி - யார் - எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!

இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில், இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக் கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக் காட்டாகக் கூற முடியும்?

நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நம் மக்களுக்கு இந்த, இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட அறிவைக் கொடுக்க வில்லையென்றால் இக்கல்விக் கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் வதியும் - பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதத்தில் தான் மானமும் அறிவும் விளைய முடியும்?

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, “கங்காஸ்நானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும், நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

-தந்தை பெரியார்

*ஏண்டா வெங்கட்ட நாயக்கா!*

*ஏண்டா வெங்கட்ட நாயக்கா!*




ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன். சுமார் 30, 35 வருடங்களுக்கு முன்பு, எனது தகப்பனார் ஈரோட்டில் முனிசிபல் கவுன்சிலர் பிரபல வியாபாரி. சுமார் 100, 150 ரூபாய் 'இன்கம் டாக்ஸ்' கட்டி வந்தவர். அவரை அக்காலத்தில் ரூ. 12½ இ ரூ. 15 வரை மாதச்சம்பளம் உள்ள முனிசிபல் பில் கலெக்டர் பார்ப்பனன் வரி விதிப்பு விஷயமாக ஒரு விண்ணப்பத்தை நேரில் பார்த்து பைசல் செய்ய மண்டிக்கடைக்கு வந்து கூப்பிடுவான். அப்படி கூப்பிட வந்தால் அவனைக்கண்டதும் என் தகப்பனார் எழுந்து ' ராவாலராவாலதேவடா' 'வரவேணும் வரவேணும் ஸ்வாமீ' என்று இரு கைகூப்பிக் கும்பிட்டு, உட்காரச்சொல்லிவிட்டு, நின்று கொண்டே இருப்பார். அப்பார்ப்பன பில்கலெக்டர் தலையை ஆட்டிவிட்டு உட்கார்ந்து கொண்டு, 'ஏமிரா, வெங்கிட்ட நாயுடு! போத்தம்மா ஆ இண்டினி குசேதானிக்கி ? - ' ஏண்டா வெங்கிட்ட நாயுடு அந்த வீட்டை பார்க்கப்போகலாமா? என்று கூப்பிடுவான். என் தகப்பனார் ' ஆஹா ' என்று சொல்லி வஸ்திரத்தை தலையில் பூட்டிக்கொண்டு அவன் பின்னால் புறப்பட்டுவிடுவார். சுற்றிவிட்டு வந்தவுடன் மஞ்சள், மிளகாய், கருப்பட்டி, வெல்லம் எல்லாம் ஒரு சாக்கில் கட்டி, ஒரு பையனிடம் கொடுத்து, ' சுவாமிகள் வீட்டில் கொடுத்து விட்டு வா' என்று சொல்லி வழி அனுப்பினார். இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

இதே மாதிரி எவ்வளவு பெரிய மிராசுதாரையும், ஒரு வக்கீல் குமாஸ்தா பார்ப்பான், நாயிலும் கீழாக மதித்து ஆடா புடாவென்று பேசுவான். இதுவும் நான் கண்ணால் பார்த்ததேயாகும். அன்றைய நிலைமைக்கும், இன்றைய நிலைமைக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள். சுயமரியாதை இயக்கத்திற்க்கு முன்பு பார்ப்பனர்கள் நிலைமையும், மத உணர்ச்சியும் எப்படி இருந்தன, இப்போது எவ்வளவு மாற்றமடைந்துள்ளன என்பவைகளை உணர்ந்தவர்களுக்குத்தான் நன்கு தெரியும்.

-- தந்தை பெரியார்
[காஞ்சிபுரத்தில், 1.3.1938 ல்]
தலைமையுரை 'குடியரசு' .
பதிப்பு :
6.3.1938

Tuesday, June 18, 2019

இந்தி எதிர்ப்பு,தமிழ் வாழ்க ன்னு கத்துறியே நாயே

இந்தி எதிர்ப்பு,தமிழ் வாழ்க ன்னு கத்துறியே நாயே, உன் வீட்டு பிள்ளைகள் தமிழ் படிக்க தெரியுமா?
இப்போ உள்ள மாணவர்களிடையே தமிழ் ஒழுங்கா எழுத படிக்க தெரியுமா?
என்ன மயித்துக்கு இந்திய எதிர்ப்பு பிரச்சினை பண்ணுற??
இந்தி எதிர்ப்பு ன்னு உங்களுக்கு என்ன லாபம்?
இந்தி தெரியமால் நான் பட்ட கஷாயம் உங்களுக்கு தெரியுமா?
ஆங்கிலம் உள்ளே வந்து எல்லாம் நாசமா போச்சி..
இப்படி பல கசாயங்கள்.
கடைசியில், நீயெல்லாம் இந்திய விரோதி. ஜெய் ஸ்ரீராம் வரை.
அப்பாடா.. திமுக கூட்டணிக்கு ஓட்டு போட்டது அவ்வளவு தவறா?
என் தாய் மொழி தமிழை அழிக்க வரும் இந்தியை எதிர்ப்பது தேச நலனுக்கு எதிரானதா?
நான் ஆங்கிலம் கற்று பல நாடுகள் பயணப்பட, சம்பாதிக்க ,சுற்றிப்பார்க்க ,என் வாழ்க்கையை அனுபவிக்க முயல்வது அவ்வளவு தவறா?
மொத்தத்தில் நான் முன்னேறி வருவதில் இந்த அடிமை ***** அவ்வளவு என்ன காண்டு..
-- இப்படி எதிர் குரல்.
அட போங்கடா. ஏதோ படிக்கிறோம். மார்க் எடுப்போம். எவனாவது வேலை கொடுப்பான்.. அப்படியே வாழ்க்கையை ஓட்டுவோம். இந்தியும் படிப்போம்.. பாஸ் பண்ணுவோம்.. நம்ம வாழ்க்கை அப்படி.. நாள பின்ன யாராவது அதை படிக்கல, இதை படிக்கல ன்னு சொல்லிற கூடாது..
எப்படியாவது காசை கட்டி படிப்போம்.
- இது பெரும்பாலோர் கருத்து..
கல்வி.. அதன் மூலம் வேலைவாய்ப்பு.. அதன் பின் வாழ்க்கை.திருமணம். குழந்தைகள். இறப்பு..இப்படி நமது வாழ்வின் எல்ல நிலையும் தீர்மானிப்பது. அரசும். அதன் கொள்கை முடிவும்.
இந்திக்கும் ,இன்றைய தமிழ் மொழி நிலைமைக்கும் சம்பந்தம் இல்லை..
இரண்டாவது, தாய் மொழி மீதான ஆர்வம், ஈர்ப்பு குறைந்தது ,மதிப்பெண் நோக்கிய கல்வி முறை..
அது முதலாளித்துவ ஆதிக்கத்தினால் வந்தது. வேலை வாய்ப்பை நோக்கிய கல்வி.
கடைசியில அரசின் தவறினால்.. சரியான கல்வி கொள்கை இல்லாதது.
அறிவார்ந்த சமூகம் இதை எதிர் கொண்டு, தாய்மொழி கொண்டு மீண்டு வரும்..
- பாலாஜி ராஜசேகர்.

Monday, June 17, 2019

ஊழல் பத்தி பேச பார்பணியத்துக்கு எந்த அருகதயும் கெடையாது

கலைஞர்,

2001 ல ஆட்சி இழந்து, ஒரு மாதம் கழித்து கைது. மனிதாபிமானம், சட்டம், ஒழுங்கு, முறை,  இப்படி ஏதாச்சும் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்தால் கூட அந்த கைது நடந்திருக்க கூடாது. இதை நா சொல்லல. அந்த வழக்கை விசாரிச்ச நீதிபதி சொன்னாரு.

முந்தைய ஆட்சியில் சஸ்பெண்ட்ல இருந்த ஒரு அதிகாரி.. கார்ப்பரேஷன் கமிஷனர்... பேரு ஆச்சரெயளு.. கண்டிப்பா பார்பனரா தான் இருக்கணும். இல்லாட்டியும் ஜெயலலிதா சொல்லி தான் இதெல்லாம் நடந்தது.

அன்றைய தேதிக்கு பாலம் கட்டுறதுல 12கோடி ஊழல் னு இந்த ஆச்சரெயலு ஒரு fir கொடுக்குறாப்ல... வெள்ளிக்கிழமை சாயுங்காலம் 9 மணிக்கு. சனி அதிகாலை 1.30 மணிக்கு அர்ரெஸ்ட். அதாவது ஒரு சாதாரண கார்பொரேஷன் கமிசனர் கொடுத்த புகாருக்கு நம்ம ஸ்காட்லாண்ட் யார்ட் ராத்திரி போய் ஒரு முன்னாள் முதல்வரை, ஒரு MLA(அவர் வயசெல்லம் பத்தி கூட பேச வேண்டாம்) அர்ரெஸ்ட் பண்றாங்கா.  சன் டிவி நல்லா இந்த சம்பவத்தை வெச்சு trp ஏத்துனாங்க, ஆனா அதையும் தாண்டி இந்த பார்ப்பனிய அரசு எந்திரம் எப்படி எந்த எல்லைக்கும் போகும்னு வெளிய காட்ட அது உதவியா இருந்துச்சு. கூடவே மத்திய மந்திரி யா இருந்த முரோசோலி மாறன், இன்னைக்கு எங்க தொகுதி MP TR. பாலு 🔥🔥🔥, (எனக்கு அன்னைக்கு தான் பாலு யாருன்னே தெரியும், நா அப்ப 11 வகுப்பு)அன்னைக்கு அவர் மத்திய மந்திரி, அவரும் அரேஸ்ட் செய்ய படுகிறார்கள். அப்ப மேயர் ரா இருந்த ஸ்டாலின் நீதிமன்றத்தில் சரண் அடஞ்சார். திமுக தொண்டர்கள் பல ஆயிரம் பேர் அர்ரெஸ்ட்.

பொது மக்கள் பல பேருக்கு குழப்பம். ஊழல் செஞ்சுட்டாங்க அதனால ஜெயா அதிரடி னு ஒரு பக்கம் ஊடகம் வேலை செய்யுது, அத பாத்து சந்தோச படுறதா இல்ல இவ்ளோ பெரிய அதிகாரம் இருக்க அவருக்கே இவ்ளோ தான் மரியாதையானு பயப்புடுறதானு... ஏன்னா அப்ப மத்திய அரசு பாஜக கிட்ட, கூட்டணில திமுக இருந்துச்சு...

அப்ப எனக்கும் பெருசா ஒன்னும் புரியாது, 16 வயசு பையனுக்கு பார்ப்பனியம் பத்தி என்ன தெரிய போகுது. ஏதோ நடக்குதுனு நானும் கடந்து போய்ட்டேன். அப்ப அரசியல்ல அவ்ளோ ஆர்வமும் கிடையாது.

நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு வருது. அந்த நீதிபதி எல்லாரையும் வெச்சு செய்யுறாரு. கலைஞர் இறந்த அப்ப ஏதோ ஒரு முகநூல் பஞ்சாயத்துக்காக, அவர ஊழல் வாதினு சொல்லி ஒரு கமெண்ட்கு பதில் சொல்ல இந்த விஷயத்தை படிச்சேன்...

அந்த நீதிபதி கேட்ட கேள்விகள்..

அந்த ஆச்சரேயலு அந்த பதவிக்கு வந்து ஒரு வாரம் தான் ஆகுது அதுக்குள்ள அவருக்கு எப்படி ஊழல்னு குற்றம் வெக்குற அளவுக்கு இவ்ளோ விஷயம் தெரியும்? கண்டிப்பா முன்பகை(2000 வருஷ பகைன்னு படிக்கவும்)

நேரா cbcid கிட்ட எதுக்கு புகார்? Chief secretary கிட்ட தான புகார் கொடுக்கணும்?

அந்த பாலம் கட்டுனதுல ஈடுபட்ட எந்த engineer கிட்டயும் கலந்தாலோசிக்காம எப்படி இவரே ஒரு முடிவுக்கு வந்தாரு?

முக்கியமான விஷயம், அந்த குற்றத்துல ஈடுபட்ட முக்கிய குற்றவாளி யாருன்னு வாதுடன வக்கீலுக்கே தெரியல! அர்ரெஸ்ட் பண்ண policeகும் தெர்ல, இன்னும் ஏன் fir கொடுத்த நம்ம ஆச்சரெயலு கே தெர்ல... ஆனா முதல் அர்ரெஸ்ட் கலைஞர்...

FIR பதிவு செய்த விதம், charge sheet file செய்யாமல் அர்ரெஸ்ட் செய்த விதம், அர்ரெஸ்ட் கு முன்னாடி நீதி மன்றம் தான் பிடி வாரண்ட் தரணும்.. இப்படி எந்த அரசியல் சாசனம் சொல்ற விஷயத்தையும் கண்டுக்காம எப்படி அர்ரெஸ்ட் பண்ணீங்க?

இதெல்லாம் தான் அந்த நீதிபதி கேட்ட முக்கிய கேள்விகள், இன்னும் நெறய வெச்சு செஞ்சாப்ல பட் எனக்கு அதெல்லாம் புரியல...

ஆனா மேல சொன்ன எதுவும் இங்க யாருக்கும் தெரியாது. ஊடகத்துல பெருசா வந்துச்சானு எனக்கும் தெர்ல.

ஆனா இது நடந்து 17 வருஷம் கழிச்சு ஒரு முகநூல் பஞ்சாயத்துல யாரோ ஒரு சில்வண்டு இந்த அர்ரெஸ்ட் பத்தி பேசி , இதை வெச்சு கலைஞர் ஊழல்வாதி,  அவர் மட்டும் தான் உலகத்துலேய பெரிய ஊழல் வாதி, தீவு வாங்கிட்டாரு, 10000 கோடி சொத்துனு சொல்றான்.

இந்த ஒரே ஒரு அர்ரெஸ்ட் மட்டும் தான் அவன் இதுக்கெல்லாம் சொன்ன சாட்சி.  இது உண்மை இல்லைனு சொல்றதுக்காக மட்டும் தான் நானே இந்த விஷயத்தை பத்தி google பண்ணி படிச்சேன். அப்ப தான் எனக்கே புரிஞ்சது இங்க ஊழல் னு எவனாச்சும் வந்தா அவன் கண்டிப்பா ஒரு ovop னு

இங்க ஊழல் னு சொன்னாலே கலைஞர், லல்லு பிரசாத், மாயாவதி னு தான் எல்லாரும் சொல்வாங்க. அப்படி தான் இந்த பார்ப்பனிய ஊடகம் பிம்பத்தை உருவாக்கி இருக்கு. இவங்கெல்லாம் ஊழல் பண்ணலையா னு கேட்டா, கண்டிப்பா பண்ணி இருப்பாங்க. ஆனா இவங்க மட்டும் ஏன் டார்கெட் செய்ய படுறாங்க. அது தான் நாம யோசிக்க வேண்டிய விஷயம். அங்க தான் எல்லா அரசியலும் இருக்கு. இவங்க எல்லாருமே ஏதோ ஒரு பாயிண்ட்ல பார்ப்பனீயத்தை நேருக்கு நேரா எதிர்த்தவங்க... நமக்கு புரியுற மாதிரி சொல்லனும்னா பார்ப்பனிய பர்னீச்சர உடைச்சவங்க...

பார்ப்பனியம் தான் ஊழலுக்கு முக்கிய காரணம். இதை பத்தி பல தடவை எழுதியாச்சு. ஆனா எவனும் இதை பத்தி பேசவே மாட்டான். கேட்டா எங்கள மட்டும் குறை சொல்லாதேல் னு ஓடிடுவான்...

உதாரணத்துக்கு ஹிந்து N.Ram 2017 ல ஒரு கட்டுரை எழுதுராறு, தமிழக அரசியல்ல ஊழல்.. இது தான் தலைப்பு... . கலைஞர் பத்தி ஒண்ணுமே இல்லாத விஷயத்தை ஹெவியா வும், சொல்றதுக்கு ஆயிரம் விஷயம் இருக்குற MGR JJ பத்தி பல்லு படாமலும்.  ஊடகம் பார்ப்பனியம் கைல இருக்குற வரைக்கும் இதை நம்மால் உடைக்கவே முடியாது. அதுக்கு இது தான் example.

உலகத்துல தேர்தல் அரசியல்ல ஊழல் இல்லாத ஒருத்தனும் இல்லை. அரசு நடத்தனும் என்றாலே ஊழல் செஞ்சு தான் ஆகணும். அதனால ஊழல் வெச்சு மட்டுமே ஒருத்தரை மட்டம் தட்டுனா ஒன்னு அவன் இந்த விஷயம் எல்லாம் தெரியாத அறைவேக்காடு, இல்ல அவனுக்கு எல்லாம் தெரிஞ்சு வேணும்டே சொல்ல வேற பாயிண்ட் இல்லாம அடிக்குறான். இவ்ளோ தான் இந்த ஊழல் சுத்தி இருக்குற அரசியல்.

கலைஞர். ரெண்டு மூணு விஷயத்துல விமர்சனம், கோவம், கடுப்பு, எல்லாம் இருக்கு அவர் மேல. கண்டிப்பா எதிர் காலத்துல அவர் செயலை விமர்சனம் எல்லாம் செய்வேன். அது என் உரிமை. அவர் செஞ்ச நல்ல விஷயங்களும் இருக்கு. நெறயவே இருக்கு. அதை பத்தியும் கண்டிப்பா பேசுவேன்.

ஆனா இன்னைக்கு அவர் பிறந்த நாள் அன்னைக்கு அவரை ஊழல்வாதினு சொல்லி, ட்விட்டர் ட்ரெண்ட் பண்ற பாஜகா, பார்ப்பனியம் முன்னாடி அவரை விட்டு கொடுக்க எனக்கு அவசியம் இல்லை.

ஊழல் பத்தி பேச பார்பணியத்துக்கு எந்த அருகதயும் கெடையாது. இந்த அயோக்கய பசங்க அதிகாரத்துல இல்லனா இங்க ஊழல் னு ஒன்னு இருக்கவே இருக்காது.  இதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

அரசியல் என்பது அறம் சார்ந்த செயல்.
இவ்ளோ தான் எனக்கு தெரிஞ்ச அரசியல்.

1. பார்ப்பனிய ஊழல்
https://m.facebook.com/story.php?story_fbid=163367031361909&id=100030658393441

2. பல்லு படாமல் N.Ram

https://scroll.in/article/851760/how-did-political-corruption-begin-in-tamil-nadu-n-ram-has-some-answers

3. 2001 கலைஞர் கைது

https://frontline.thehindu.com/static/html/fl1814/18140040.htm

தஞ்சை பெரிய கோவில் தமிழன் பெருமையை பாருங்கய்யா

தஞ்சை பெரிய கோவில் தமிழன் பெருமையை பாருங்கய்யா

தம்பி நீ என்ன படிச்சுருக்க ?

நான் டிகிரி முடிச்சுட்டேன்.

உங்க அப்பா

அவரு பியூசி (பெருமையாக)

உங்க தாத்தா

எங்க தாத்தா பிரைமரி அஞ்சாங் கிளாஸ்தான் முடிச்சாரு அதுக்கப்புரம் எங்க கொல்லு தாத்தோவோட வேலைய பாத்துகிட்டாரு.

உங்க கொல்லுதாத்தா?

அவரு படிக்கல

ஓஹோ ஏன்டா மூதேவி மூனு தலைமுறையாதான் படிப்பு வாசனை புடிச்சுருக்கீங்க. கோவில கட்டுனவன் உன் சமூகம் படிக்க பள்ளிக்கூடம் கட்டுனானானு யோசிச்சியா.

மேக்கிறது எருமை இதுல என்னடா பெருமை.

பார்ப்பனர்களின் அரசியல் மந்திரம்.

மீண்டும் அடிமையாக கூடாது என்ற ஒற்றை சொல்லே பார்ப்பனர்களின் அரசியல் மந்திரம்..

உலக நாடுகளின் வரலாற்றை இருவர் ஆய்வு செய்வார்கள் ஒன்று முதலாளித்துவம் ,இரண்டாவது வரலாற்று ஆய்வாளர்கள்.

முதலாளித்துவம் ஆய்வு செய்வது ஒரு நாடு இன்னொடு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தி அடிமைபடுத்த.

இப்படி வரலாற்றை ஆய்வு செய்யும் போது இன்று உலக நாடுகளை ஆதிக்கம் செலுத்துவது யூதர்கள் என்பது தெரியும்.

அப்படியே இந்தியாவிற்கு வந்தால் பார்ப்பனர்கள்,

இந்த பார்ப்பனர்கள் யார் என்று ஆய்வு செய்தால் வந்து நிற்பது யூதர்களே என்றே,

இந்த யூதர்கள் அடிமைபட்டு இருந்த காலத்தில் அவர்களை மீட்டு வரும்போது வழியில்  பல தலைமையின் மூலமே வருகிறார்கள் அப்படி வரும்போது அந்த தலைமை அவர்களுக்கு சொல்லி கொடுத்தது எல்லாம் மீண்டும் நாம் அடிமையாகிவிடக்கூடாது என்பதே அவ்வாறே ஆகாமல் இருக்க என்னென்ன வழிமுறைகள் உள்ளதோ அதை அனைத்தும் கூறியே வழிநடத்தி வந்துள்ளார்கள்,

ஒர் இடத்தில் சென்றால் பெரும்பான்மையை எவ்வாறு உடைப்பது,

குழுவாக எவ்வாறு செயல்படுவது,

குழுவுக்குள் நடக்கும் கருத்துவேறுப்பாட்டை எவ்வாறு கையாள்வது,

குழுவாக தியாகம் செய்வது,

அங்கு யார் ஆளுகிறார்களோ அவர்களின் பலவீனத்தை கண்டறிவது,

பலவீனபடுத்துவதற்க்கான வழிகளை கையாள்வது,

மனிதனை காட்டிலும் ஒர் அதிசய சக்தி உள்ளது அதை தர எங்களால் மட்டுமே முடியும் என்பது..

இது தான் பார்ப்பனர்கள் இன்றும் அரசியலில் ஆதிக்கம் செலுத்த காரணம்.



ஏன் பார்ப்பனர்கள் ஒருநாளும் தனி நாடு கேட்பதில்லை எண்ணிக்கையில் குறைவாக இருந்தும்..

மீண்டும் அடிமையாக கூடாது என்ற ஒற்றை சொல்லே பார்ப்பனர்களின் அரசியல் மந்திரம்..

திமுக மீது பொய் பிரச்சாரம் செய்பவர்கள் கவனத்திற்கு.!

திமுக மீது பொய் பிரச்சாரம் செய்பவர்கள் கவனத்திற்கு.!

பொதுவாக மதுவிலக்கு பற்றி பேசினால் திமுகவினர் மது ஆலையை மூட வேண்டும் என்று பொது பிரச்சனையை மடைமாற்றுவது!

அதே போல் ஹிந்தி திணிப்பை பேசினால் திமுகவினர் நடத்தும் பள்ளிகளை மூடுவார்களா ?என்று பொது சமுதாய பிரச்சனையை மடைமாற்றி வலுவிழுக்க வைக்க செய்யப்படும் இந்தியத்தின் அதன் ஏஜெண்டுகளின் பிரச்சார யுக்தி!

பொய் பிரச்சாரம்!

துணிவோடு சொல்லலாம் அரைநூற்றாண்டாக அவர்களும் பேசிவருவது தான், கச்சத்தீவை கலைஞர் தாரை வார்த்துட்டார் ன்னு அப்பட்டமான பொய் பிரச்சாரம்,
* அப்பொழுது அன்னை இந்திராகாந்தி பிரதமர் என்பதை பேசமாட்டார்கள்!
*தமிழகத்தில் நெடுமாறன் காங்கிரஸ் தலைவர் என்று பேசமாற்றார்கள்! *கலைஞரின் "சட்டமன்ற தீர்மானம்"      எழுப்பியதை பேசமாட்டார்கள்!
*மக்களை திரட்டி கலைஞர் கண்டன குரல்  நிறைவேற்றியதை பேசமாட்டார்கள்!

கலைஞர் கொடுத்துட்டார்! கலைஞர் கொடுத்துட்டார்! என்று மட்டும் கோஷம்.

ஹிந்து எதிர்ப்பு போராட்டம் பற்றி பேசும் போது அவர் குடும்பம் மட்டும் படிச்சுட்டு நம்மளை படிக்காம தடுத்துட்டாங்க ன்னு இருட்டடிப்பு புரளி பேசுவாங்க!
*ஹிந்தி திணிப்புக்கு எதிரான யுத்தம் 1937இல் தொடங்கியதை பேசமாட்டாங்க! *பெரியார் நாடெங்கும் புரட்சி தீயை பற்றவைத்தார் என்பதை பேசமாட்டாங்க! *ஹிந்தியால் பல மொழிகள் அழிந்ததை பேசமாட்டாங்க! (ராஜஸ்தானி, குஜராத்தி, ஓடிய மொழி, பெங்காலி, மராட்டி, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்) *ஹிந்தியால் என்ன லாபம் நமக்கு என்றால் அதையும் சொல்லமாட்டார்கள்!

மது விலக்கு கலைஞர் தான் தமிழகத்தில் மது வை கொண்டுவந்தார் என்று பேசுவார்கள் அதாவது அதற்கு முன்பு தமிழகத்தில் அதாவது மதராஸ் மாகாணத்தில் மதுவே இல்லை என்று சொல்வார்கள்!
*கலைஞர் மதுவை பொருளாதாரத்தை சீர்படுத்த கொண்டுவருகிறோம் என்று சட்டசபையில் சொல்லிவிட்டு கொண்டு வந்து சரியாக இரெண்டே வருடத்தில் தமிழகம் முழுதும் மது கடைகளை இழுத்து மூடினார்! மறுக்கமுடியுமா?
*பிறகு டாஸ்மாக் கை உருவாக்கியது யார்? *டாஸ்மாக் எலைட் டை பரவலாக்கியது யார்? என்று கேட்டால்? நீங்க என் மூடல ன்னு கலைஞரையே திரும்ப கேட்பார்கள்!

"மது ஒழிப்பு சம்பந்தமாக சமீப காலங்களில் ஏற்பட்ட கொந்தளிப்புக்கு காரணமாக அமைந்த நிகழ்வு என்று பார்க்கும் பொழுது "குடித்து விட்டு பள்ளிமாணவர்கள் சீருடையில் விளையாடும் விடியோவும்" "ஒரு சிறுவனுக்கு யாரோ ஊற்றி கொடுப்பது போன்ற விடியோவும்" இணையமொழியில் சொல்வதென்றால் வைரல் ஆனது, அதன் பின்பு அதன் வீரியத்தால் பூரண மதுவிலக்கு தேர்தல் அறிக்கையாக திமுக வைத்து பிறகு தேர்தலில் தோற்றது வரலாறு!"

அதே போல் 7 பேர் விடுதலை இப்பொழுது திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியபொழுது இத்தனை நாள் என்ன பண்ணினீங்க ன்னு கேள்வி கேப்பான் சீமானின் பொடியன்கள்?

"எளிதில் சொல்லவேண்டும் என்றால் தண்டனையாக 25 ஆண்டுகள் சிறையில் அனுபவித்து இருக்கிறார்கள், இனி எடுக்கும் முயற்சி எல்லாம் மனிதாபிமான விடுதலை முயற்சியே அதை தான் இப்பொழுது திமுக முன்னெடுக்கிறது"

கடந்தமுறை தவிர்த்து பிந்தைய ஆண்டுகள் திமுக அதிமுக மாறி மாறி ஆட்சிக்கு வந்தது, சரியான பாதையில் தமிழகம் பயணிக்க தொடங்கிய பொழுதெல்லாம், போலி- பொய் பிரச்சாரங்கள் ,அனுதாபங்களால் ஜெயா ஆட்சிக்கு வருவார், ஜெயாவின்/அதிமுகவில் ஒரே திட்டம்!? திமுகவின் திட்டங்களை நிறுத்துவது அல்லது கிடப்பில் போடுவது எதுவும் செய்யமுடியாது என்று தெரிந்தால் ரிப்பன் வெட்டி திறந்து நான் தான் என்று அடிமைகளைவிட்டு புகழ்ப்பாடி கொள்வது!

அப்படி பாடிக்கொண்டவை
1.மெட்ரோ ரயில்
2.கோயம்பேடு பேருந்து நிலையம்
3.காவேரி தாய்
4.ஈழத்தாய் போன்ற சாதனைகள்

அப்படி நிறுத்தியவை/கிடப்பில் போடப்பட்டவை
1.பறக்கும் ரயில் திட்டம் (மதுரவாயல்)
2.புதிய தலைமை செயலகம்
3.அண்ணா நூலகம்
4.கடல் நீர் குடிநீர் ஆக்கும் திட்டம் போன்றவை முத்தாய்ப்பானவை !

அதே போல் மீத்தேன் ஸ்டாலின் தான் கையெழுத்து போட்டார்! போட்டார்! என்று இருட்டடிப்பு பிரச்சாரம், ஆனால் உண்மையில் நடந்தது ஏற்கனவே எண்பதுகளில் இருந்து ongc தமிழகத்தில் பல்வேறு இடங்களில் எண்ணெய் மத்திய அரசால் எடுத்து வருகிறார்கள், அதே போல் தஞ்சை மாவட்டத்தில் புதிய நிறுவனம் எண்ணெய் எடுக்க தகுதியான இடமா? என்று கண்டறிய ஆய்வுக்கான பணிக்கு கையப்பம் இட்டார்! அது ரெண்டே வருடத்தில் காலாவதியும் ஆனது!

அந்த ஆய்வு பணிக்கு கையப்பம் திட்டத்திற்கும் கூட வருத்தம் தெரிவித்தார், அந்த திட்டம் நன்மையா? தீமையா? என்று எப்படி தெரிந்து கொள்வது ஆய்வு இல்லாமல் அதற்கு திமுகவை குற்றம் சாட்டுகிறார்கள்!

ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன் காமராஜர் ஆட்சி காலத்தில் ஹெலிஹாப்டர் மூலம் கருவேல மர விதைகளை தூவ செய்யதார்- நல்லெண்ணத்தில் ஆடுமாடுகளாவது உண்ணட்டும் என்று! இன்று நிலைமை? அந்த கருவேல மரங்களை ஒழிக்க பல இயக்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம், அரசாங்கம் என்று எல்லாம் போராடுகிறோம்!
காரணம்? ஆய்வு செய்யாமல் தன்னிச்சையாக செய்த முடிவு அன்றைக்கு நல்லதாக பட்டது இன்று தவறானது அதே போல் ஆகிவிட கூடாது என்பதற்காக கூட மீத்தேன் திட்ட ஆய்வுக்கு கையெழுத்து இட்டு இருப்பதாக நினைக்கிறோம்!

பாலக்காடு/குடகு/மூணாறு/ தேவிகுளம் பீர்மேடு போன்ற பகுதிகள் யாரால் எந்த தமிழக முதல்வரால் எடுத்து கொடுக்கப்பட்டது என்பதையும் சொல்லமாற்றார்கள்,வேறு நாட்டிற்கு கச்சதீவை கொடுத்தது கலைஞர்! சொந்தநாட்டில் பக்கத்து மாநிலத்துக்கு நம் நிலப்பரப்பை உண்மையில் கொடுத்த முதல்வரை ,"மேடாவது பள்ளமாவது எல்லாம் இந்தியாவுக்குள் தான் இருக்குதுங்குறேன்" ன்னு சொன்னவரை பற்றி பேசவே மாட்டோம் எவ்வளவு காழ்ப்புணர்வு? கலைஞர் மேல்!

ஒரு ஒரு விஷயமாக சொல்லலாம் கலைஞரால் தான் அவரால் மட்டுமே தமிழகம் இந்த அளவு முன்னேறி இருக்கிறது என்று!

அப்புறம் ஊழல் ஊழல் ன்னு சொல்லுவாங்க சட்டமன்றத்தில் பொன்விழா கொண்டாடிய தலைவர், பொதுவாழ்வில் வருடங்கள் இருந்த தலைவர்,ராஜாஜி காலத்தில் இருந்து கிருஷ்ணசாமி சீமான் காலம் வரை எவ்வளவு குற்றச்சாட்டுகள் அவர் மீதும் அவரை சார்ந்தோர் மீதும், பாவம் பேசியவர்களுக்கெல்லாம் ஆதாரம் மட்டும் கிடைக்கவில்லை, எந்த வழக்கும் போட 60 வருடமாய் முடியாமல் இன்னும் அதே பேசிக்கொண்டு இசுசுசு கார் ரில் களமாடி வருகிறார்கள்!?

சமூக அரசியல் மக்களுக்கானது அதை ஒரு வலிமையான இயக்கம் முன்னெடுக்கும் பொழுது அதை குற்றம் சொல்லி/ பொய் சொல்லி /அவதூறு பேசி என்ன சாதிக்க போறீங்க?

*மதுவிலக்கு கொண்டு வந்தால் நீங்கள் சொல்லும் திமுகவினர் தானாக மூட போறாங்க,
*cbse பள்ளிகள் இவ்வளவு அதிகமாக (ஏறத்தாழ 700 பள்ளிகள் தமிழகத்தில் ) காரணம் ,சமசீர் கல்வியை தோற்கடிக்க ஜெயாவால் தமிழகத்தில் பரவலாக்க பட்டதே ஒழிய வேறெதற்காகவும் இல்லை ! Std 1இல் இருந்து 12வரை தமிழ் பாடமொழி கட்டாயம் என்று அரசாணை கொண்டு வந்தது திமுகதான்!

நாளை ஆட்சிக்கு வந்தா CBSE க்கும் பட்டி பார்க்கப்படும் என்ற அச்சத்தாலே தான் "மந்தி"யர்கள் கூக்குரலிடுகிறார்கள்!

சமூக அரசியல் வேறு! தொழில் வேறு!
சமூக அரசியல் பரவலாக்கப்பட்டால் தானாக தொழில் அது சார்ந்து மாறும் இயல்பாக!

கிருஷ்ணசாமி சீமான் எல்லாம் ஹிந்திக்கும் மும்மொழி திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பொழுதே நாம் விழிப்படைய வேண்டாமா ?

உறுதியாக சொல்வேன் திமுகவால் தான் ஸ்டாலின் அவர்களால் தான் மீண்டும் தமிழகத்தை பொலிவுற செய்ய இயலும் அதுவரை நீங்க குழப்பி மக்களையும் குழப்பிக்கொண்டே இருங்கள்!

அனைத்தையும் முறியடித்து ஹிந்திக்கு உறியடிப்பார்கள் திமுகவினர்! ✍🏼🌹💥💥💥

உடன்பிறப்பே முடிந்த வரை காப்பி பேஸ்ட் செய்யுங்கள் நன்றி 🙏🙏🙏

Sunday, June 16, 2019

பார்ப்பானிடம் மண்டியிட்ட அநீதி மன்றம்

பார்ப்பானிடம் மண்டியிட்ட அநீதி மன்றம், இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்க எங்கிருந்து தைரியம் வந்தது,

போலீஸை பார்த்து ஏன்யா லஞ்சம் வாங்குறீங்க நான் தரேன்யா, பிச்சை வாங்குறீங்களே வெட்கமா இல்ல, கோர்ட்டாவது , மயிராவது என்று தொடர்ந்து பொது வெளியில் அநாகரீகமாக பேசிவருகின்ற எச்ச. ராஜானிடம் மண்டியிட்ட அநீதி  மன்றம்,

உயர் பதவியில் இருப்பவர்களிடம் பெண்கள் அப்படி இப்படி என்று அனுசரித்துதான் போகவேண்டியிருக்கும் என்று பெண்களை இழிவாக பேசிய கோமாளி நடிகன்S.V.சேகரிடனிடம் மண்டியிட்ட அநீதி மன்றம்,

தொடர்ந்து பட்டியல் சமூக மக்களை கொச்சைபடுத்தி வரும், பாலியல் பலாத்கார கும்பல்களின் தலைவன் ராமர்தாஸனிடம் மண்டியிட்ட அநீதி  மன்றம்,

தமிழர்களை பொறுக்கிகள் என்று சொன்ன, உண்டகட்டி வாங்கி தின்ற சுப்பிரமணியன் ஆசாமியிடம் மண்டியிட்ட அநீதி மன்றம்,

தொடர்ந்து கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிவருகின்ற   பாஜக தருதலைகளிடம் மண்டியிட்ட அநீதி மன்றம் ,

இயக்குநர் பா.ரஞ்சித் அவர்கள் ராஜராஜசோழன் குறித்து பேசியதற்க்கு அநீதி  மன்றம் கண்டனம் தெரிவிக்க என்ன அவசியம் ஏற்பட்டது,

ராஜராஜசோழன் ஆட்சிகாலத்தில்தான் தலித்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது என்றும், ராஜராஜசோழனின் ஆட்சி பொற்கால ஆட்சி என்று சொல்கிறார்கள் எங்களை பொருத்தவரையில் அது இருண்ட காலம் என்று பேசினார் இதிலென்ன தவறிருக்கிறது,

மக்கள் கொண்டாடும் மாமன்னரை விமர்சிப்பதா என்று கேட்கும் அநீதி  மன்றம்,

இதுவரை கிடைத்த தகவல்படி 15 பெண்களை மனமுடித்த ஒருவன் எப்படி மக்கள் கொண்டாடும் மாமன்னராவார், யார் கொண்டாடுவது,

தற்போது எப்படி தேவைக்கேற்ப நிலம் கையகப்படுத்தப்படுகிறதோ, அதுபோல் அன்று ராஜராஜசோழன் நிலம் கையகப்படுத்தியிருக்கும் என்று கூறும் அநீதி மன்றம்,

அது எப்படி தலித் மக்களுடைய நிலங்கள் மட்டும் கையகப்படுத்தினான் ராஜராஜசோழன்,  அப்படியே கையகப்படுத்தி அந்த நிலத்தில் என்ன வளர்ச்சி திட்டங்கள் செய்து சாதித்தான், அந்த நிலங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவில் இன்று யார் வசம் உள்ளது என்று தெரியுமா, தெரியாதா?

தேவதாசி முறை அன்றே ஒழிக்கப்பட்டுவிட்டது தற்போது அதுகுறித்து பேச வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கும் அநீதி மன்றம்,
கல்வி பாடபுத்தகங்களில் மட்டும் எதற்க்கு பழைய வரலாறுகளை பதிப்பிட வேண்டும் .

நாட்டில் தினம் நொடிக்கு நொடி, சிறுமிகள்,  பெண்களுக்கெதிராக குறிப்பாக தலித் பெண்களுக்கெதிராக எத்தனை பாலியல் பலாத்காரம், கொலை, வன்கொடுமைகள் நடக்கின்றன அதையெல்லாம் தட்டிகேட்க திராணியில்லாத அநீதி மன்றம், இயக்குநர் பா.ரஞ்சித் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் ராஜராஜசோழன் ஆட்சியில் நடைபெற்ற உண்மை அவலங்களை மக்களிடத்தில் பேசினார் இதிலென்ன தவறிருக்கிறது இதற்க்கு உடனே வழக்கு,  அநீதி மன்றம் கண்டனம், 

ராஜராஜசோழன் தரப்பில் புகார் கொடுத்தது யார், ராஜராஜசோழனுக்கும் புகார் கொடுத்தவனுக்கும் என்ன ரத்த உறவு,

ராஜராஜசோழன் மட்டுமல்ல இந்த நாட்டை ஆண்ட அத்தனை மாமாமன்னர்களும் பார்ப்பனர்களின் அல்லக்கைகள்தான்.

"இயக்குநர் தோழர் பா.ரஞ்சித் அவர்களின் பார்வைக்கு..." - கவிஞர் கலி.பூங்குன்றன்

"இயக்குநர்  தோழர்  பா.ரஞ்சித் அவர்களின்  பார்வைக்கு..."

- கவிஞர் கலி.பூங்குன்றன் -

முற்போக்குக் கொள்கை உடைய திரைப்பட இயக்குநர் தோழர் பா.ரஞ்சித் அவர்களின் பேட்டி ஒன்று  தி எக்னாமிக் டைம்ஸ் ஏட்டில் (2018 நவம்பர்: 25 டிசம்பர்:1) வெளிவந்துள்ளது.

ஜாதி அமைப்பு முறையின் அடிவேர் வரை சென்று அலசி எடுத்திருக்கிறார். அதன் பார்ப்பன மூலத்தையும் அடையாளம் கண்டு தோலுரித்துத் தொங்க விடுகிறார்.

அன்றாட வாழ்க்கையில் ஜாதியின் தாக்கங்களைத் தங்குத் தடையின்றி விமர்சனக் கோடாரியால் பிளந்து தள்ளியுள்ளார்.

நாட்டில் நடைபெறும் ஜாதிய வாதம் -  தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்முறைகள் பற்றி எல்லாம் பொறுப்புணர்ச்சியுடனும், வேதனைக் குமுறலுடனும் விளாசித் தள்ளி யுள்ளார். பாராட்டுகள்.

அதே நேரத்தில் பெரியார் இயக்கம் பற்றி அவர் விமர்சித்துள்ள பகுதிகள் நமது விமர்சனத்துக்கு உட்பட்டவையாகும்.

பெரியார் இயக்கம் என்பது பார்ப்பனரல் லாதோர் மற்றும் பார்ப்பனர்களுக்கிடை யேயான போராட்டம் என்றுதான் கூறலாம். பார்ப்பனர்கள் கைகளில் இருந்து பார்ப்பனரல் லாதார் கைகளுக்கு அதிகாரங்கள் வந்த பிறகு அவர்கள் பார்ப்பனர்களுக்குத் துணை போகும் செயலில் இறங்கி விட்டார்கள் என்று ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பார்ப்பனரல்லாதார் என்று சொல்லும் போது அதில் ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களும் இடம்பெற மாட்டார்களா?

அண்ணல் அம்பேத்கர் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லையா - அவர்கள் மூலக்கருத்தை மூர்க்கமாக தாக்கவில்லையா? பார்ப்பனர் களை எதிர்த்த வரிசையில் தாழ்த்தப்பட்ட வர்கள் மட்டும்தான் என்று பொருள் கொள்ள முடியுமா?  அதன் பலன் யாரிடம் போய் சேர்ந்தது என்பதை இயக்குநர் இரஞ்சித் போன்றவர்கள்  விளக்குவது நல்லது.

பெரியார் இயக்கத்தால் நடத்தப்பட்ட பார்ப்பன எதிர்ப்புப் போராட்டங்களால் பிரச்சாரத்தால்  தாழ்த்தப் பட்டவர்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்பதுதான் தோழர் இரஞ்சித்தின் கருத்தா?

வைக்கத்தில் தந்தைபெரியார் நடத்திய போராட்டமும் சேரன்மாதேவியில் நடத்திய போராட்டமும் தாழ்த்தப் பட்டவர்களை நீக்கித்தானா?

வைக்கத்தில் பெரியார் நடத்திய போராட்டம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமைப் போராட்டத்தை மகத்தில் நடத்திட அண்ணல் அம்பேத்கருக்குத் தூண்டு கோலாக   இருந்தது என்று அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்செய் கீர் குறிப்பிடவில் லையா? தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித் தொகுதி கேட்டுப் போராடி வெற்றி பெற்றார் அண்ணல் அம்பேத்கர்.அதன் பலன் கிடைக்காமல் போனதற்குக் காந்தியார்தான் காரணம். அதனை எதிர்த்து காந்தியார் உண்ணாவிரதம் இருந்தார். அண்ணல் அம் பேத்கருக்கு கடும் நெருக்கடி கொடுக்கப் பட்டது. அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணத்தில் இருந்த தந்தை பெரியார். ஒரு காந்தியாருடைய உயிரை விட ஆறு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் உங்கள் கைகளில் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள் என்று தந்தி கொடுத்தது யாருடைய உரிமைக்காக?

பறையன் பட்டம் போகாமல் உங்களுடைய சூத்திரப் பட்டம் போய்விடும் என்று கருதுவீர்களானால் நீங்கள் வடிகட்டின முட்டாள்களேயாவீர்கள் (குடிஅரசு, 11.10.1931) என்று பிற்படுத்தப்பட்ட மற்றும் முன்னேறிய மேல்ஜாதி மக்களான சூத்திரர்களுக்கு சாட்டை அடி கொடுத்தவர் தந்தை பெரியார் அல்லவா?

தாழ்த்தப்பட்ட குடியிருப்புகளுக்குச் சென்று சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்து உணவுண்டு - சூத்திர பஞ்சம மக்கள் என்ற பார்ப்பன வருணா சிரமத்தால் பிளவுண்டு கிடந்த மக்களி டையே  இணைப்புப் பாலத்தை ஏற்படுத் தியது பெரியார் இயக்கம் தானே - ஒரு எடுத்துக்காட்டு

கேள்வி: தந்தை பெரியார் அவர்களோடு தாங்கள் இணைந்து பணியாற்றிய நிகழ்ச்சிகள் பற்றிக் கூறுங்கள்.

பதில்: நான் ஏராளமான சுயமரியாதைத் திருமணங்களுக்கு தலைமை தாங்கி நடத்தி இருக்கிறேன்.  பெரியார் அவர்கள் கலந்து கொண்ட திருமணங்களிலும் கலந்து கொண்டு பேசி இருக்கிறேன்.

சென்னை பெரம்பூரில் பெரியார் தலை மையில் ஒருசுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. கடுமையான மழை, தாழ்த்தப்பட்டோர் பகுதி... ஒரே சேறும் சகதியுமாகி விட்டது. திருமணம் முடிந்து சாப்பிட்டுப் போகச் சொன்னார்கள். நான் ஏதோ சமாதானம் சொல்லி சாப்பிடவில்லை. பெரியார் என்ன செய்தார் தெரியுமா? மேலே இருந்த ஓலையைக் கீழே எடுத்துப் போட்டு அப்படியே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்து விட்டார். பெரியார் எந்தவித ஏற்றத்தாழ்வும் பார்க்க மாட்டார். (நீதிக்கட்சி பவளவிழா மலரில் மீனாம்பாள் சிவராஜ்பேட்டி -1992 பக்கம் 125)

திராவிடர் கழகத்திற்கே பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்று தானே பெயர் சூட்டப்பட்டது.

தங்களை தாழ்த்தப்பட்டவர்களை விட உயர் வானவர்கள்  என்று மமதை கொண்டிருந்தவர்களின் மண்டையில் அடிக்கும் வண்ணம் பஞ்சமன் என்பதை விட சூத்திரன் என்பது தான் கேவலம், சூத்திரன் என்றால் வேசி மகன்,  பஞ்சமன் என்றால் அவர்கள்தான், அவர்கள் அப்பா அம்மாவிற்கு முறையாக பிறந்தவன் என்று முகத்தில் அடித்துச் சொன்னவர் தந்தை பெரியார். (குடிஅரசு - 16.6.1929)

மனித வாழ்க்கையின் நன்மைகளை உத்தேசித்தும், ஜீவகாருண்யத்தைப் முன் னிட்டும், தேச முன்னேற்றத்துக்காகவும் பொறுத்தும் நம் நாட்டில் பெரும் பகுதியினர் மீது சுமத்தப்பட்டுள்ள தீண்டாமை என்னும் கொடிய தடையை விலக்க பொது ஜனங்களிடையே இடைவிடாது பிரச்சாரம் செய்து அவர்களைக் கண்விழிக்கச் செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்களே இரண்டாவது சென்னை மாகாண தீண்டாமை விலக்கு மாநாட்டில் முன்மொழிந்தார் (குடியரசு 17.2.1929).

ஆண்டாண்டுக் காலமாக தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட ஒடுக் கப்பட்ட மக்களின் தீண்டாமை கொடு மையை வெறும் சட்டத்தால் ஒழித்து விட முடியாது -  மக்கள் மத்தியில் சிந்தனை மாற்றத்தை செய்தாக வேண்டுமே. அதன் முன்னணி ஆயுதமாக இருப்பது பிரச்சாரமே அதனை ஒரு நூற்றாண்டு காலமாக செய்து வருவது பெரியார் இயக்கம் இல்லையா? இதுபோல் எந்த மாநிலத்திலாவது பத்தில் ஒன்று நடந்திருக்கிறது என்று சவால் விட்டு கேட்க முடியுமே!

சென்னைத் தீண்டாமை விலக்கு மாநாடு, (10.2.1929)

கள்ளக்குறிச்சி - தென்னார்க்காடு மாவட்ட ஆதிதிராவிடர் மாநாடு (16.6.1929)

சென்னை ஆதிதிராவிடர் மாநாடு (21.7.1929)

இராமநாதபுரம் ஆதிதிராவிடர் மாநாடு (25.8.1929)

திருநெல்வேலி தீண்டாமை விலக்கு மாநாடு (10.6.1931)

சேலம் ஆதிதிராவிடர் மாநாடு (16.5.1931) லால்குடி தாலுகா ஆதிதிராவிடர் மாநாடு (7.6.1931)

திருச்சி ஆதிதிராவிடர் மாநாடு (5.7.1931)

கோவை ஆதிதிராவிடர் மாநாடு (5.7.1931)

தஞ்சை ஜில்லா ஆதிதிராவிடர் மாநாடு (4.7.1931) கோவை ஆதிதிராவிடர் மாநாடு (7.12.1931)

லால்குடி தீண்டப்படாதவர் மாநாடு (7.2.1932)

அருப்புக்கோட்டை தாலுகா தாழ்த்தப் பட்டோர் மூன்றாவது மாநாடு 28.8.1932

லால்குடி தாலுகா ஆதிதிராவிடர் கிறித்துவர் மாநாடு (7.5.1933)

சென்னை தாழ்த்தப்பட்ட கிறித்துவர் மாநாடு (7.8.1933)

தஞ்சை ஜில்லா மூன்றாவது ஆதிதிராவிடர் மாநாடு (9.7.1935)

சீர்காழி ஆதிதிராவிடர் மாநாடு (10.7.1935)

சேலம் ராசிபுரம் ஆதி திராவிடர் மாநாடு (29.9.1935)

திருச்செங்கோடு ஆதிதிராவிடர் மாநாடு (7.3.1936)

பெரியகுளம் தாலுகா தேவேந்திரகுல மாநாடு (3.81936)

சேலம் ஜில்லா ஆதிதிராவிடர் மாநாடு (2.9.1936)

சிதம்பரம் ஆதிதிராவிடர் மாநாடு (6.5.1937)

ஆம்பூர் ஆதிதிராவிடர் மாநாடு (4.7.1937)

திருச்செங்கோடு தாலுகா ஆதிதிராவிடர் மாநாடு (8.7.1937) அருப்புக்கோட்டை தாழ்த்தப்பட்டோர்  மாநாடு 3.1.1938 இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

தீண்டாமை ஒழிப்பு, பொதுவுரிமை, கல்வி வேலைவாய்பில் இட ஒதுக்கீடு - இவற்றை உள்ளடக்கிய தீர்மானங்கள் தான் ஒவ்வொரு மாநாட்டிலும்- பிரச்சாரமோ அடைமழை! அடைமழை!! இவையெல்லாம் வீண் போகவில்லை. ஏய், டேய், போடா, வாடா என்ற சொல் பிர யோகங்கள் புதையுண்டுப் போகவில்லையா? சூத்திரச்சி வந்து விட்டாளா என்று இன்று கேட்க முடியுமா?

பெயருக்குப் பின்னால் ஜாதி வால் தொங்குவது அறவே ஒழிந்து போனது தமிழ்நாட்டில்தான் என்றால் இதற்கு வித்திட்டது பெரியார் இயக்கம் அல்லவா?

நீதிக்கட்சி ஆட்சியில் தானே இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது தாழ்த்தப் பட்டவர்களுக்கு உட்பட.(1928)

" எந்தப் பொது சாலையிலோ, தெருவிலோ, அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரி மையை யாரும் தடுக்க முடியாது என் பதையும், எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும், அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும், அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும், இவைகளில் எல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அவ்வளவு உரிமை களும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்டு என்பதையும் சென்னை அரசாங்கம் ஒப்புக்கொண்டு, அதைத் தீர்மானமாக நிறைவேற்றி, எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாகாக்களுக்கும் அனுப்பப் பட்டது (அரசு ஆணை எண் 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி 25.9.1924) 1936 வாக்கில் இந்த வகையில் 9614 பள்ளிகள் வழிக்குக் கொண்டு வரப்பட்டன.

நீதிக்கட்சி ஆட்சியில் பனகல் அரசர் பிரதமராக இருந்த போது கொண்டு வரப்பட்ட ஆணை இது! தாழ்த்தப்பட்டவர்கள் பேருந்துகளில் அனுமதி, பள்ளிகளில் அனுமதியெல்லாம் நீதிக்கட்சி ஆட்சியில் தான். தொழிலாளர் துறை என்பது முழுக்க முழுக்க தாழ்த்தப் பட்டவர்களின் முனற்னேற்றத்திற்கே!

இவையெல்லாம் பழைய கதை என்று சொல்லலாம் - தந்தை பெரியார் அவர்களின் இறுதி மூச்சு அடங்கும் வரை உரிமை மறுக்கப்பட்ட மக்கள் பக்கமே தன் சிந்தனைகளையும், செயல்களையும் அர்ப்பணித்தார். கோயில் கருவறைக்குள்  தாழ்த்தப் பட்டவர்கள் போகக்கூடாதா? அவர்கள் அர்ச்சனை செய்ய மறுப்பது ஏன் என்ற களத்தில் நின்று தானே இறுதி மூச்சையும் துறந்தார். இன்று அது செயல்பாட்டுக்கு வந்து விட்டதே. முதலில் மனிதனுக்குச் சுயமரியா தையை ஊட்டுவது,  மூட நம்பிக்கைகளி லிருந்து விடுதலை செய்து பகுத்தறிவுப் பாதையில் திருப்புவது, எதைக் கொடுத் தாலும் கல்வியைக் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கக் கூடாது என்ற வர்ணாசிரம கோட்பாடுக் கோட்டையை உடைத்து, கல்வி வேலைவாய்ப்புகளில் உரிய பங்கு பெறுவது என்பது தாழ்த்தப் பட்டவர்களுக்கும் பெரியார் இயக்கத்தின் பங்களிப்பு இல்லாமல் வேறு எங்கிருந்து குதித்தது?- இவை எல்லாம் அதிகார பங்கேற்பதற்கான உந்துதல் இல்லையா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாழ்த்தப் பட்டவர்கள் ஏன் நீதிபதியாக வர வாய்ப் பில்லை என்ற தந்தை பெரியாரின் கேள்விக்கு விடைத்தானே ஒரு ஜஸ்டிஸ் வரதராஜன்.

தந்தை பெரியாரின் அழைப்பு

(வகுப்புவாரி உரிமைக்காக தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறுவதற்குக் காரணமான காஞ்சிபுரம் மாநாட்டிற்காக "குடிஅரசு"  இதழில் தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கை)

காஞ்சிபுரத்தில், 31 ஆவது ராஜீய மகாநாடு நாளது நவம்பர் மாதம் 21, 22ந் தேதிகளான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை 'நவசக்தி', ஆசிரியர் ஸ்ரீமான். திரு. வி.கல்யாணசுந்தர முதலியாரவர்கள் அக்ராசனத்தின் கீழ் கூடும்.

அது சமயம் சர்வகக்ஷியார்களும் மடங்கிய பிராமணரல்லாதார் மகாநாடொன்றும் கூடும். பிராமணரல்லாதார் முன்னேற்றத்தில் கரிசனமுள்ள தமிழ்நாட்டுப் பிராமணரல்லாதார் அனைவரும் வந்திருந்து, தங்களது முன்னேற்றத்திற்கான ஒரு திட்டத்தைக் காணவும், அதைச் சரிவர அமுலுக்குக் கொண்டு வரவும் ஏற்பாடு செய்ய வேணுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன்.

இது விஷயத்தில் ஒவ்வொருவரும் தங்கள் ராஜீய அபிப்பிராய பேதங் காரணமாகவாவது, சொந்த அசவுகரியங் காரணமாகவாவது அலக்ஷியமாய்   இருந்துவிடாமல் கண்டிப்பாய் வரவேண்டுமாய் மறுபடியும் வினயத்துடன்  கேட்டுக் கொள்ளுகிறேன்.

தீண்டாமையை ஒழிக்கவேண்டியது பிராமண ரல்லாதாருக்கு மிகவும் முக்கியமானதொரு கடனாகும். ஏனெனில், தீண்டாதார் களின் முன்னேற்றந்தான் பிராமண ரல்லாதார்களின் முன்னேற்றமாகும். தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணரல் லாதாரின் துன்பமாகும். தீண்டாமை ஓழிவதன் முலமாய்த்தான் பிராமணரல்லாதார் கடைத் தேறமுடியும். தீண்டாமை ஒழிவதன் மூலமாய்த்தான் நாடு சுயராஜ்யமடையும். ஆதலால், தீண்டாமை விலக்கில் கவலையுள்ளவர்களும், தீண்டாதாரென்று சொல்லப்படுபவரும் அவசியம் காஞ்சிபுரத்திற்கு வந்து அதற்கென்று, ஓர் மகாநாடு கூட்டி காரியத்தில் பலன் தரத்தக்க திட்டங்களைக் காண வேண்டுமாயும் கேட்டுக் கொள்ளுகிறேன்.

ஈ.வெ.ராமசாமி
ஈரோடு, 15.11.1925

தாழ்த்தப்பட்டவர்கள் மீது எந்த அளவு கவலையும், அக்கறையும் கொண்டிருந்தார் என்பதற்கு வேறு எடுத்துக் காட்டும் தேவையோ?

அவர்தானே உச்ச நீதிமன்றத்திற்குள்ளும் நுழைந்த முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதியு  கூட! சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரே நேரத்தில் 10 தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் வருவதற்கான கால்கோள் விழாவை நடத்தியது யார்? அது அதிகாரப் பகிர்வின் கீழ் வராதா?

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளவரசன், திவ்யா என்ற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நிலையில் - தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நத்தம் பழைய கொண்டாம்பட்டி, அண்ணா நகர், புதிய கொண்டாம்பட்டி, வாழ் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளைக் ஜாதி வெறியர்கள் கொளுத்தி சாம்பலாக்கிய நிலையில் (7.11.2012) உடனடியாக பாதிக்கப் பட்ட பகுதிக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களின் தலைமையில் கழகப் பொறுப் பாளர்கள் நேரில் சென்று ஆறுதல்  கூறியதுடன் உடனடியாக அங்கு ஜாதி ஒழிப்பு மாநாட்டை அனைத்து கட்சியின ரையும் அழைத்து நடத்தியது திராவிடர் கழகம் தானே. (9.12.2012)

ஓசூர் அருகே சூடைக்காந்தப் பள்ளியைச் சேர்ந்த ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட  நந்திஷ் சுவாதியை பெற்றோர் களே தீவைத்து எரித்துக் கொன்ற கொடூர நிலையில் (13.12.2018) வரும் 30ஆம் தேதி ஜாதி -தீண்டாமை ஒழிப்பு மாநாடு திராவிடர் கழகத்தின் சார்பில் ஓசூரில் நடத்தப்பட உள்ளதே.

இவையெல்லாம் அலட்சியப்படுத்தப்பட வேண்டி யவை என்று கண்டிப்பாக இயக்குநர் தோழர் ரஞ்சித் சொல்ல மாட்டார் என்று நமக்கு உறுதியாகவே தெரியும்.

எல்லாம் முடிந்து விட்டது - சமத்துவமும், சகோதரத்துவமும் கைகோர்த்து விட்டன என்று யாரும் மார்தட்டவில்லை. ஆயிரம் ஆயிரங்காலத்து வருணாசிரமம் நம் மக்களின் மூளையில் விலங்காக பூட்டப்பட்டு விட்டது.

மூளையில் மாட்டப்பட்ட விலங்கை அவ்வளவு எளிதாக விலக்க முடியாது.  அதே நேரத்தில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம் என்ற தாழ்வு மனப்பான்மை  தேவையில்லை. நடந்திருக்கின்ற மாற்றங்களை  பரிகசிப்பதோ,  உதாசீனப்படுத்துவதோ,  ஆரோக்கிய மானதுமல்ல! மகத்தான உழைப்பும், தியாகமும்,  இந்த மாற்றத்தின் வேரில் குருதியாகக் கொட்டப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை நீக்க வேண்டும் என்று கூறி, ஜாதியைப் பாது காக்கும் சட்டப் பகுதியை எரித்து மூன்றாண்டு காலம் வரை சிறைத்தண்டனை ஏற்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திராவிடர் கழக கருஞ்சட்டைக் குடும்பத்தினரைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் இரஞ்சித் அவர்களே!

நமது ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலேயே கூட உயர்வு தாழ்வு, மேல் - கீழ்நிலை இருக்கத்தானே செய்கிறது. இட ஒதுக்கீடே எங்களுக்கு வேண்டாம் என்றும், நாங்கள் ஜாதியில்  உசத்தி - தேவேந்திரர் என்று சொல்லு பவர்களும் நம்மிடத்தில் இருக்கத் தானே செய்கிறார்கள்.

இவர்களையும் நாம் எதிர்க்க வேண்டிய கெட்ட வாய்ப்பையும் நினைக்க வேண்டிய தருணம் இது.

அதனால் அண்ணல் அம்பேத்கர் தோற் றுப் போய்விட்டார் என்று விரக்திக்காதை எழுதி விடலாமா?

ஜாதி அமைப்பின் பலமே அண்ணல் அம்பேத்கர் கூறிய  GRADED IN EQUALITY என்பதுதான்; ஏணிப் படிக்கட்டு முறைதான். மனித சமத்துவம் ஊட்டும் கல்விமுறை கொணர்வது,  பகுத்தறிவு, விஞ்ஞான சிந்த னைகளை வளர்ப்பது என்கிற முறையிலே மாற்றங்கள் கொண்டு வர தாழ்த்தப் பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். இருவரும் வலதுகரம், இடதுகரம் என்று அண்ணல் அம்பேத்கர் கூறியதை கவனத்தில் கொள்ள வேண்டும். தந்தை பெரியார் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டத்தைத் தொடங்கி அவர் நினைத்த அளவில் இல்லையென்றாலும் எதிரிகள் மிரளும் அளவிற்கு மகத்தான வெற்றி பெற்றுள்ளார் என்பது தான் வரலாறு.

234 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டே இரண்டு பார்ப்பனர்கள் தான் உறுப்பினர்கள். இந்த நிலை இந்தியாவில் எந்த மாநிலத்தில் உண்டு - சற்றே எண்ணிப் பார்க்கவேண்டும்! நண்பர்கள் யார், பகைவர்கள் யார்? என்பதைத் தெரிந்து கொள்வதில் கூட இன்னும் தயக்கமும் குழப்பமும் இருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது!

பெரியார் இயக்கம் பார்ப்பன அல்லாதோர் மற்றும் பார்ப்பனர்களுக் கிடையேயான போராட்டம் என்றுதான் கூறலாம். பார்ப்பனர்களில் இருந்து பார்ப் பனர் அல்லாதாவர்களுக்கு அதிகாரங்கள் வந்த பிறகு அவர்கள் பாரப்பனர்களுக்குத் துணைப் போகும் செயலில் இறங்கி விட்டார்கள். ஜாதியை எதிர்த்துப் போராட முன் வரவில்லை. அதிகாரத்தின் சுவையில் மூழ்கி விட்டார்கள். பார்ப்பனீயத்தை அழிக்க வேண்டுமென்றால் பார்ப்பனிய சிந்தனையை ஒழிக்க வேண்டும். பார்ப்பனர்களின் கைகளில் இருந்து அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு தாங்கள் பார்ப்பனியக் கொள்கை களைக் கடைப்பிடிக்கத் துவங்கி விட்டனர். பார்ப்பனர்  - பார்ப்பனர் அல்லாதோர் போராட்டம் தற்போது தாழ்த்தப்பட்ட மற்றும் நடுநிலை ஜாதியினருக் கிடையேயான போராட்டமாகி விட்டது. என்றெல்லாம் பொத்தாம் பொதுவாக இயக்குநர் இரஞ்சித் குற்றப் பத்திரிகை படிப்பது சரிதானா?

திமுக சார்பில் ஆட்சிக்கு வந்த கலைஞர் அப்படி என்ன உயர்ந்த ஜாதிப் பட்டியலில் இடம் பெற்றவர்தானா? கதர் சட்டைக்குள் கறுப்புச் சட்டை என்று பார்ப்பனர்களால் அடையாளம் காட்டப்பட்ட காமராசர் அப்படியென்ன பெரிய ஜாதி?

கலைஞரையும் சரி, காமராஜரையும் சரி பார்ப்பனர்கள் ஏற்றுக் கொண்டு விட்டனரா - இன்று வரை கூட? கலைஞர் வீட்டில் தாழ்த்தப்பட்ட சமூக மருமகள்கள் வரவில்லையா? - அது ஒரு நம்பிக்கை ஏற்படுத்தாதா? அரசியல் தேர்தல் பதவி பக்கம் செல்லாத திராவிடர் கழகம் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு - மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி தன் ஆயுளையே ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றுகிறதே!  திராவிடர் கழகத்தினரிடமிருந்து ஸ்டாலின் விலகி இருக்க வேண்டும் என்று பார்ப்பன ஏடுகள் இலவசமாக அறிவுரை சொல்லுவது எந்த அடிப்படையில்?

வெறும் விமர்சனம் செய்யும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு  எதை வேண்டு மானாலும் பேசலாம். நாங்கள் களத்தில் நிற்பவர்கள். அத்தகையவர்களை நோக்கி களங்கமான கற்களை வீசுவது - யாருக்கோ தான் பயன்படும்.

கல்வி, வேலைவாய்ப்பில் வளர்ச்சி என்பதே ஒரு வகையான அதிகார மேல்நிலைதான். முதல் அமைச்சர் நாற்காலியில் வந்தால் தான் ஏற்கமுடியும் என்பதல்ல. ஒரு பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வந்த நிலையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழக்கில் சமூக நீதியான தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். வழக்கின் கட்டைத் தொட்டுக்கூட பார்க்கவில்லை என்பதற்காக வருத்தப்படலாம் அவ்வளவுதான் - அதற்குமேல் விமர்சிக்கலாமா? விமர்சன கர்த்தாக்கள் கீழே இறங்கி வரட்டும், கைகோக்கட்டும் - வரவேற்கிறோம்.

பெரியார் இயக்கத்தின் பெரும் பணியை கொச்சைப்படுத்துவது, பெரியார் சிலையை உடைப்பவர்களுக்கும், இந்துத்துவா சக்திகளுக்கும்தான் தீனிப் போட உதவும். தோழர் இரஞ்சித் போன்றவர்கள் பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளை உள்வாங்கி நடைபோடட்டும்.

ஏற்கெனவே தலித் அல்லாதார் கூட்டணியை உண்டாக்க முயற்சித்தவர்கள் கரங்களை வலுப்படுத்தி விடக்கூடாது. தோழர் இரஞ்சித்துக்கு வாழ்த்துகள்.

நன்றி : "விடுதலை" ஞாயிறு  மலர்  இதழ் 08.12.2018

பெரியார் காங்கிரஸ்காரராக இருந்தபோது 1922ல் திருப்பூர் மாநாட்டில் சொன்னார்

"பெரியார் காங்கிரஸ்காரராக இருந்தபோது 1922ல் திருப்பூர் மாநாட்டில் சொன்னார், 'தாழ்த்தப்பட்டவர்களையும், நாடார்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும்' என்ற தீர்மானத்தை கொண்டுவந்தார். அதை கொள்கை அளவில் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளட்டும் என்று கேட்டார். ஏற்றுக்கொள்ளவில்லை காங்கிரஸ் கட்சி.

இதை எதிர்த்தவர் யாரென்றால், 1939இல் கோவில் நுழைவுப்போராட்டத்திற்கு காரணமாக இருந்தவர் என்று சொல்லப்பட்ட வைத்தியநாத அய்யர்தான். அப்போது, 'உனக்கு சாஸ்திரம் தெரியுமா? இராமாயணம் தெரியுமா?' என்று வைத்தியநாத அய்யர் கேட்டதற்கு, அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியார் சொன்னார், 'மனுசாஸ்திரமும் இராமாயணமும் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் நுழையத் தடையாக இருந்தால் அதை இரண்டையும் எரிக்கனுமே தவிர இதைப்பற்றி பேசக்கூடாது' என்றார்.

'இராமாயணத்தையும் மனுசாஸ்திரத்தையும் எரிப்போம்' என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த போது 1922ல் திருப்பூர் மாநாட்டில் பெரியார் பேசினார்."-

எழவு வீட்டையே திருட நினைக்கும் பிணந்தின்னி நாயே, அடக்குடா உன் வாயை..,

திமுகவினருக்கு அம்பேத்கர் என்றால் யாருன்னு தெரியாது, தாத்தா ரெட்டமலை சீனிவாசனைத் தெரியாது ஏன் அயோத்திதாச பண்டிதரையே தெரியாது -தோழர் சீமான்

சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக மெட்ராஸ் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் என பெயர் சூட்டியது எந்த கட்சி..?

அதே அம்பேத்கர் பெயரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னை - வியாசர்பாடியில் தொடங்கியது எந்த கட்சி..?

சட்ட மாமேதை அம்பேத்கருக்கு சென்னை -அடையாரில் மணிமண்டபம் அமைத்தது எந்த கட்சி..?

சென்னை- கிண்டியில் காந்தியடிகள் நினைவு மண்டபம் அருகே  தாத்தா ரெட்டமலை சீனுவாசனுக்கு மணிமண்டபம் அமைத்தது எந்த கட்சி..?

தாம்பரம் அருகேயுள்ள சாண்கடோரியத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவமனைக்கு தேசிய அயோத்திதாச பண்டிதர் என பெயர் சூட்டியது எந்த கட்சி..?

மேலே குறிப்பிட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் #திமுக. வேணுமென்றால் வரலாற்றை புரட்டிப்பார்.

எழவு வீட்டில் ஏதாவது திருடுவதே மாபெரும் தவறு. ஆனால் அந்த எழவு வீட்டையே திருட நினைக்கும் பிணந்தின்னி நாயே, அடக்குடா உன் வாயை..,

இந்தியாவில் இரண்டு வரலாறு உள்ளது

பார்ப்பனர்கள்★

இந்தியாவில் இரண்டு வரலாறு உள்ளது

ஒன்று உண்மையான வரலாறு

இன்னொன்று இந்தியாவை பற்றி பார்ப்பனர்கள் முன் வைக்கும்

வரலாறு

பார்ப்பனர்கள் அயோக்கியர்கள் என்பது சரித்திர ஆய்வு

யூதர்களுக்கு நிகரான மட்டமான அயோக்கியர்கள் யாரென்றால்
அது பார்ப்பணர்கள் தான்

இந்த பார்ப்பனர்கள் தான்

இந்தியாவின் வரலாறை மாற்றி தலைகீழாக திரித்து எழுதுபவர்கள்

இந்த மண்ணின் பூர்வ குடி மக்களை அசிங்கமாக சித்தரித்து
இதே மண்ணில் ஒரு வித அதிகாரத்தை கை பற்றி கொண்டவர்கள்

யாரென்றால்

அது பார்ப்பனர்கள் தான்

மதத்தின் மூலம் வக்கிரத்தை எழுப்பி அதை வைத்தே சாதித்து கொண்டு
அப்படியே பக்தி வளர்ப்பது யாரென்றால்

பார்ப்பனர்கள் தான்

பார்ப்பனர்களுக்கு எது நன்மையானதோ?
அது ஒட்டு மொத்த இந்தியாவிற்கும்
தீங்கானது

தமிழ் மண்ணில் வாழ்ந்து கொண்டு
தமிழையே பேசி கொண்டு
தமிழர்களுக்கு துரோகம் செய்வதையே
முழு நேர மத தொழிலாக
வைத்து கொண்டு

இதே மண்ணில் வாழும் ஆட்கள் யாரென்றால்

அது பார்ப்பனர்கள் தான்

உண்மையில் இந்தியாவை தவிர வேறு நாட்டில்

இந்த பார்ப்பனர்கள் வாழ்ந்தால்
நிச்சயம் படுகொலை செய்ய படுவார்கள்

இல்லையெனில்
நாட்டை விட்டே துரத்தி அடிக்க படுவார்கள்

அது உண்மை

யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள்

உண்மையில் இந்து மதம் என்பது பார்ப்பனர்களின் மதமே

அல்ல

பார்ப்பனர்களின் வைதீக மதம் இந்து மதத்துடன் கலந்து

ஒரு வித மதமாக மாற்றம் கொண்டது

இந்தியாவின் தலை விதி மாறி போனது பார்ப்பனர்களால் தான்

மக்கள் தொகையில் வெறும் மூன்று சதவீதம் உள்ள ஒரு இனம்

ஒரு பெரிய இந்திய நாட்டையே கையில் வைத்து கொண்டு
எல்லா அதிகாரத்தையும் கை பற்றி கொள்கிறது

எப்படி இது முடிந்தது

பார்ப்பனர்களுக்கு சளி பிடித்து கொண்டாள்
ஒட்டு மொத்த இந்தியாவும்
தைலம் பூசி கொள்ள வேண்டும்

மூன்று சதவீதம் உள்ள பார்ப்பனர்கள்

இந்தியாவை கையில் வைத்து உள்ளார்கள்

பெரிய அநியாயம் இது

ஒரு சூத்திரனை விட பார்ப்பான் ஒன்றும் உயர்ந்தவன் கிடையாது

செருப்பு தைக்கும் ஒருவனை விட பார்ப்பான் ஒன்றும் உயர்ந்தவன் கிடையாது

மலம் அள்ளும் தோட்டியை விட பார்ப்பான் ஒன்றும் உயர்ந்தவன் கிடையாது

காரணம் பார்ப்பான் ஒரு சோம்பேறி

இரண்டாயிரம் ஆண்டுகளாக எவ்வித உடல் உழைப்பும் செய்யாமல்

ஒரு இனம் இந்தியாவில் வாழ்ந்து வந்தது என்றால்

அது ஆரிய பார்ப்பன இனம் தான்

பார்ப்பனர்கள் உடல் உழைப்பை அசிங்கமாக நினைத்தார்கள்

அதுதான் உண்மை

வெறும் சடங்குகளை வைத்தே முன்னேறி வாழ்ந்து காலம் கழித்தவர்கள்

பார்ப்பனர்கள்

இந்த பார்ப்பனர்களை பற்றி  வெளி நாட்டுக்காரன் கண்டு பிடித்ததை விட

தமிழ் நாட்டு தந்தை பெரியார்

பெரிய ஆய்வையே செய்து விட்டு சென்று உள்ளார்

பெரியாரை பார்ப்பன துவேசி யென்று எல்லோரும் மட்டமாக புரிந்து கொண்டார்கள்

பார்ப்பணர்களிடம் நெருங்கி பழகி அவர்களை உள்ளும் புறமாக
முழுவதும் தெரிந்து கொண்டு
அவர்களை விமர்சனம் செய்தே விரட்டி அடித்தவர் யாரென்றால் தந்தை பெரியார் தான்

அது எந்தளவிற்கு என்றால்

பெரியார் வாழ்ந்த காலத்தில் தமிழ் நாட்டை விட்டே

பார்ப்பனர்களை மூட்டை முடிச்சி யோடு வெளியேற்றி இருக்க முடியும் அந்தளவிற்கு

பெரியாரை கண்டு நடுங்கினார்கள்

எத்தனை அசிங்கிமான  ஈன பிறவிகள் பார்ப்பனர்கள் என்பது
பெரியாருக்கு தெரிந்த போதுதான்

அவர்களை ஒழிப்பதையே முழு நேர பிரச்சார உத்தியாக கையாண்டார் பெரியார்

பார்ப்பனர்களை பற்றி பெரியார் மிக துல்லியமாக சொல்லி உள்ளார்

அது இன்றும் எதிரொலிக்கிறது

அது பத்து முனைவர் பட்டத்திற்கு நிகரானது எனலாம்

அந்த அளவிற்கு அது விரிந்து செல்கிறது

மிக பெரிய பார்ப்பான உளவியல் பகுப்பாய்வு அது

பார்ப்பனர்களின் உளவியல் பகுப்பாய்வு தந்தை என்றால்

அது பெரியார் தான்

முடிந்த வரை தமிழ் மொழியை ஒழித்து கட்டி விட்டு
அதன் செல்வங்களை யெல்லாம்
தீக்கிரையாக்கி ஆக்கி விட்டு

ஆடி பெருக்கில் தமிழின் பனை ஓலை இலக்கியங்களை
விட்டு சென்றால் புண்ணியம் மென்று

ஒரு மொழியின் இலக்கியத்தை  சிதைத்தது

பார்ப்பனர்கள் தான்

பொய்

வக்கிரம்
ஜாதி பெருமை
மத பற்று
குரூர புத்தி இதையெல்லாம் ஒன்று சேர்த்தால் அவர்கள் பார்ப்பனர்கள்

எனலாம்

தமிழ் நாட்டில் ஒரு பழமொழி உண்டு

"பார்ப்போடு பழகாதே" என்னும் பழமொழி அது

சிலர் பாம்பு குட்டியோடு பழகாதே என்பார்கள்

அது தவறு

அதல்ல பொருள்

பார்ப்பணர்களோடு பழகாதே என்பதே அதனின் பொருள்

இன்னொரு பழமொழி

"முட்டி புகும்  பார்ப்பார் " என்னும் பழமொழி

அதாவது பிச்சை எடுக்கும் பார்ப்போர் என்னும் பல மொழி

பார்ப்பனர்களை மக்கள் ஏளனமாக இந்த பழமொழியை சொல்லி விரட்டி உள்ளார்கள்

இந்த பிச்சை எடுக்கும் புத்தியை வைத்து கொண்டு பார்ப்பனர்கள்

சிவனையும்  பிச்சை எடுத்து வாழுகின்ற கடவுளாக

பார்ப்பனர்கள் கதை கட்டி விட்டார்கள் என்கிறார்

தேவ நேய பாவாணர்

அவர் சொன்னா சரியாதகத்தான் இருக்கும்

இந்த கேடு கெட்ட பார்ப்பனர்களை பற்றி

சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள்

ஞானம் சூரியன் " என்னும் ஒரு நூல் எழுதி உள்ளார்

அந்த நூலை படித்தாலே போதும்

பார்ப்பனர்களின் யோக்கிதையே தெரிந்து கொள்ளலாம்

பார்ப்பனர்கள் பற்றி ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்

தெரியுமா..?

பார்ப்பனர்கள் எவ்வகையிலும் உயர்ந்தவர்களாக இல்லை
மனித ஆற்றலிலோ'

ஆராய்ச்சி அறிவிலோ
அறிவியலிலோ
வாய்மையிலோ
ஒழுக்கத்திலோ
நட்பிலோ
உழைப்பிலோ

உயர்ந்தவர்களாக இல்லை என்கிறார்கள்

அம்பேத்கர் கூறுகிறார்

பார்ப்பனர்கள் படித்தவர்கள் தான்
ஆனால் அறிவாளிகள் அல்ல என்கிறார்

உழவு தொழில் செய்வது பாமென்று
கூறி அந்த தொழிலை செய்ய மறுத்து
சோம்பேறிகளாய்
கோலைகளாய்

அவர்கள் வாழ்ந்து வந்தார்கள்

என்பதை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்

உயிர்க்கொலை செய்வதையும் மாமிசம் உண்பதையும் பார்ப்பனர் விட்டு விட்டாலும்

தாகமென்று  வருபவர்களுக்கு

சிறிது தண்ணீர் கூட கொடுக்காத ஆட்கள்
யாரென்றால்

அது பார்ப்பனர் தான்

எந்த வித தகுதியும் இல்லாத வக்கிர புத்தி உள்ள பார்ப்பான்

நய வஞ்சகத்தால்

உயர்ந்த ஜாதியாக கருத படுகிறான்

என்ன மடத்தனம்

உயர்ந்த ஜாதி என்றால் உயர்ந்த குணம் இருக்க வேண்டுமல்லவா..?

அப்போது தானே அது உயர்ந்த ஜாதி

இந்தியாவின் உண்மையான வரலாறு என்ன என்பதை பார்ப்பனர்கள் முடிவு செய்யும் போது

அப்போதுதான் சமஸ்கிருதத்தை உயர்த்தி பிடிக்கிறார்கள்

இந்து மதத்தை தூக்கி பிடிக்கிறார்கள்

இந்தியாவின் வரலாறு என்பது
பார்ப்பனர்களை தவிர்த்த வரலாறு

பார்ப்பனர்களுக்கு என்ன வரலாறு உள்ளது இந்தியாவில்

அவர்கள் பிச்சை எடுத்ததும்
கொலை செய்ததும் தான்

அவர்கள் வரலாறு.

வேறென்ன