Tuesday, October 17, 2017

போஜ்புரி மாலும் நஹி

How Bojpuri mother tongue of Biharis forgotten
..நேற்று இரவு சுமார் 7 மணிக்கு எல்ட்மஸ் ரோடு , தேனாம்பேட்டை அருகே நண்பருடன் ஹோட்டல் வாசலில் நின்று பேசி கொண்டு இருந்தேன் . மழை விடாமல் பெய்து கொண்டு இருந்தது
அப்போது அங்கு வந்த மூன்று பேர் சென்ட்ரல் ஸ்டேஷன் எப்படி போக வேண்டும் என்று ஹிந்தியில் கேட்டார்கள் அவர்கள் குழி விழுந்த கண்கள் அழுக்கேறிய உடைகள் எல்லாம் அவர்கள் வட இந்தியாவில் இருந்து கட்டிட வேலைக்கு வந்தவர்கள் என்பதை உணர்த்தியது ..
நீங்க எந்த ஊரு என்றவுடன் பாட்னா (பீகார் ) என்றார்கள் .. உடனே உங்க மொழி போஜ்புரி பேச வருமா ( டெல்லியில் ஒரு வருடம் வேலை செய்த ஹிந்தி தந்த அனுபவத்தை வைத்து "பய்யா அப்கோ துமரா பாஷா போஜ்புரி போல் கார்தே சே ") என்றேன் . போஜ்புரி மாலும் நஹி என்று முழி முழித்தார்கள் .
உடனே அருகில் இருந்த ஆட்டோவை அழைத்து இவர்கள் சென்ட்ரல் போக வேண்டும் என்றவுடன் 300 ரூபாய் கேட்டார் ஆட்டோக்காரர் .. அந்த போஜ்புரி மொழியை மறந்த ஹிந்தி பேசும் பீகாரிகள் நூறு ரூபாய் தருகிறோம் என்று கை கூப்பி கெஞ்சினார்கள் ..
பேரம் படியவில்லை .. அவர்கள் முகம் சுருங்கி விக்கித்து நின்றார்கள் .. அவர்களிடம் சென்று என்ன விஷயம் என்றவனுடன் அவர்கள் சொன்னது .. சென்னை வேலைக்கு வந்து 2 வருஷம் ஆகி விட்டதாம் . 25 நாள் 10 சுமார் மணி நேரம் நாள் ஒன்றுக்கு வேலை செய்தால் ரூபாய் 12500 வருமாம் .
அதில் இவர்கள் செலவு போக 7500 ரூபாய் அங்கு அவர்கள் குடும்பத்துக்கு அனுப்பி விடுவார்களாம் . சென்ற தீபாவளி சென்றது இந்த தீபாவளி செல்ல வேண்டும் என்றார்கள் .
ஆட்டோகாரரிடம் சென்று "என்னப்பா ... சென்ட்ரலுக்கு 6 கிமீ தானே கிமீ 50 ரூபாயா கேக்குறே.. ஊரு விட்டு ஊரு வந்து வேலை செய்யிற இவுங்களை பார்த்த பாவமான இல்லையா " என்றவுடன் .. அவர் வட இந்தியர்கள் திட்டி கூறிய வார்த்தைகள் பீப் பீப் ரகம் . பதிய முடியாது ..
சரி எவ்வளவு தான் கடைசியா முடியும் என்றேன் .. 220 ரூ ஓகே என்றார் . இந்த பிடிங்க 120 என்று கொடுத்து விட்டு .அவர்களிடம் 100 மட்டுமே வாங்கி ட்ரோப் பண்ணிடுங்க என்றே அனுப்பி வைத்தேன் .
அந்த முன்றில் இரண்டு பேர் சிறுவர்கள் ஒருவருக்கு சுமார் 60 வயது இருக்கும் .. அவர் கையை பிடித்து கொண்டு "சுக்ரியா" என்றார் .. உங்கள் பீகார் மொழில் சொல்லுங்க என்று சிரித்தேன் . மறுபடியும் முழிமுழிப்பு ..
ஆட்டோவில் ஏறி செல்லும் போது திரும்பி பார்த்து கூப்பிய கைகள் ஊடே அவர் கண்களில் பனித்த நன்றியின் மகிழ்ச்சி ., நினவுகளை கிளறியது
*****நிற்க ******
புத்தரை ( 563 BCE - 483 BCE ) அவர் போதித்த நெறிகளை இன்றும் உலகெங்கும் ஏற்று வாழும் 376 million ( 6% of world population ) மக்களை தந்த நிலம் அது ..
உலகத்திலே அதி சிறந்த கல்வி கூடம் நாலந்தா என்ற இடத்திலே அங்கு இயேசு பிறப்பதற்கு முன்னே 600BC அதாவது சுமார் ரெண்டயிரம் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே 2,000 teachers and 10,000 students கொண்டு இயங்கியதை கல்வெட்டுகளும் மட்டுமில்லை .,சீன வழிப்போக்கர் மொழில் கூட குறித்து வைக்கப்பட்டுள்ளது .
Inspired by the journeys of Faxian and Xuanzang, the pilgrim, Yijing (also known as I-tsing), arrived in India in 673 CE. அவர் இந்தியாவில் இருந்த ஆண்டுகளில் 14 ஆண்டுகள் இன்றைய பீகார் அன்றைய தலைநகரத்தில் 10 ஆண்டுகள் இருந்தும் உள்ளார்..
இந்தியாவை கட்டி ஆண்ட மகத சாம்ராஜ்யம் மையப்புள்ளி :
♦️Haryanka dynasty (c. 600 – 413 BCE)
♦️Shishunaga dynasty (413–345 BCE)
♦️ Nanda Dynasty (345–321 BCE)
♦️Maurya Empire (c. 325 – c. 185 BCE)
♦️Shunga Empire (c. 185 – c. 75 BCE)
♦️Kanva Empire (c. 75 – c. 30 BCE)
♦️Satavahana Empire (c. 30 – c. 320 CE)
♦️Gupta Empire (c. 321 – c. 550 CE)
♦️ Pala Empire (c. 750 – c. 1162 CE)
காலத்திலே அப்போது அங்கு ஹிந்தி கிடையாது ஹிந்தி மொழி என்பது உருது சமஸ்க்ரித அரேபிய கலவையில் முழுவதுமாக உயிர் பெற்று சுமார் 10th AD வருகிறது.
அது அப்போது முகலாய ஆப்கான் கிழக்கு ஐரோப்பிய படை வீரர்கள் மட்டுமே பேசி கொண்டு இருந்த ஒரு மொழி .. மெதுவாக அது நுழைய ., 16 நூறாண்டுகளாக பெருமையுடன் இயங்கிய பல்கலைக்கழகம் 12th AD மூடப்படுகிறது ..
பின்னர் அதனை தனி சட்டம் மூலம் UPAII உயிர்ப்பித்து விடுகிறது The Nalanda University Bill, 2010 was passed on 21 August 2010 in Rajya Sabha and 26 August 2010 in Lok Sabha. The bill received Presidential assent on 21 September 2010 thereby becoming an Act.
ஆனால் ஹிந்தியால் 12th century சூழப்பட்ட வென்று எடுக்கப்பட்ட போஜ்புரி நிலைமை ‼️
*********
அண்ணாவை படிக்கும் போது அவர் சொல்லிய ஒரு விஷயம் புரிபடாமல் இருந்தது .. புரிபடாமல் இருந்தது என்று சுற்றிவளைக்காமல் நேரிடையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது என்றும் சொல்லலாம் ..
அவர் ஹிந்தி யை எதிர்க்கும் போது வேறு மொழியை ஏற்று கொள்ளும் ஒருவரது நிலை மூன்றாம் தர குடிமகனாக அவர்களை(தமிழனை ) அது ஆக்கி விடும் என்றார் ..
How is it possible ‼️ ..learning languages is not the process of expansion of one's knowledge ⁉️ .. why such short sight vision from anna was surfaced at that time while i read..
இந்தியாவை கட்டி ஆண்ட ., உலகத்திற்கு கல்வி வழங்கிய அந்த போஜ்புரி மொழி மறந்த ஹிந்தி பேசும் முதியவரின் கண்களில் பனித்த நன்றியின் சிரிப்பு வாசிக்கும் போது ...
புரியாததை புரிய வைத்தது .. தெளிய வைத்தது ..அனுபவம் தான் எவ்வவளவு பெரிய ஆசான்..
நீங்கள் செலவழித்த மணித்துளிகளுக்கு நன்றி 🙏
Ref : Bronkorst, J; Greater Magadha: Studies in the Culture of Early India (2007)
Ghosh, Amalananda (1965). A Guide to Nalanda (5 ed.). New Delhi: The Archaeological Survey of India.
Scharfe, Hartmut (2002). Education in Ancient India. Handbook of Oriental Studies. 1
#வரலாறு #சவெரா #savera #anna #dmk #hindi #dravidanadu #ஹிந்தி #பீகார் #budhaa

கொண்டாடுங்க

கொண்டாடுங்க..!
மகா வீரர்..மகா வீரர்ன்னு ஒருத்தரு இருந்தாரு.மனுசன் பெரிய்ய அறிவாளி. சமணக் கொள்கைகளையெல்லாம் ஊரூரா சொல்லிக்கிட்டு திரிஞ்சாரு. தனக்குன்னு சொத்துபத்து எதுவும் சேர்த்துவைக்காத ஆளு.ஜனங்களுக்கும் அவருமேல கொள்ள பிரியம். திடீர்ன்னு ஒருநாளு அவரு செத்துட்டாரு.ஜனங்கலாம் ரொம்ப ஃபீலாயிட்டாங்க.
அவர் செத்து ஒரு வருசம் ஆயிப்போச்சி.அவர் நினைவு நாளு வந்துச்சி.நம்மளுக்கு நல்லதுபொல்லது சொல்லிக்குடுத்த மனுசனாச்சேன்னு ஜனங்க அந்த நாள்ல வீட்டுல அகல்விளக்கு ஏத்திவச்சி பலகார பட்சணமெல்லாம் செஞ்சிவச்சி அவருமாதிரியே இருந்த சாமியாருங்க ஏழபாழைங்களுக்கெல்லாம் குடுத்து கொண்டாடுனாங்க.
கொஞ்சநாள்ல இந்த அசோகருன்னு ஒரு ராசா,சண்டைபோட்டு சண்டைபோட்டு வெறுத்துபோயி...எந்த ஆசையும் வாணாம்டான்னு பெளத்த மார்க்கத்துக்கு வந்துட்டாரு.அப்பாலிக்கா..மகாவீரரு நினைவு நாளு வந்துச்சி.அந்த சமயம் பார்த்து சீனாவுலயிலயிருந்து வியாபாரிங்க வந்திருந்தாங்க.அவங்க ராசாவுக்கு கையோட கொண்டாந்த பட்டாசு வெடியயெல்லாம் குடுத்தாங்க.அப்ப பார்த்து மருத்துவம் பார்க்குற பண்டிதரு ஒருத்தரு ஆமணக்கு கொட்டையிலயிருந்து எண்ணெய்ய புழிஞ்சி எடுத்தாந்து ராசாகிட்ட குடுத்தாரு. இது ரொம்பநேரம் நின்னு எரியும் ராசான்னு சொன்னாரு.சரிதான்னு ராசா ஜனங்கள கூப்புட்டு மகாவீரரை கும்புடுற நாளு வருதில்லே..அப்ப இந்த எண்ணெய்ல வூடு வாசலு பூராம் தீபம் ஏத்தி இந்த பட்டாசை வெடிச்சி சந்தோசமா கொண்டாடுங்கன்னாரு.ஜனங்களும் அப்பிடியே செஞ்சாங்க.ஊரே ஜெகஜோதியாயி ஒரே குஷியா பூடுச்சாம்.
அந்த சமயம் பார்த்து அம்மா தாயே பிக்‌ஷாந்தேகின்னு பூணூலு போட்ட கும்பலு ஒன்னு ஊருக்குள்ள வந்துச்சி.கொஞ்ச நாள்லயே அவுங்களுக்கு ராசாங்ககூட பழக்கம் ஏற்பட்டு நிலபுலம்ன்னு பெரிய ஆளுங்களாயிட்டாங்க அவங்களுக்கு இந்த தீவாளிய பாத்து வயித்தெரிச்சலு.கொஞ்சநாள்ல அந்த மகாவீரரு யாருமில்ல..அவந்தான் நரகாசூரன்னு ஒரு கதைய கட்டிவுட்டு கங்கஸ்நானம் பண்ணுங்கோன்னு தஸ்புஸ்ன்னு புரியாத பாசையில சொல்லவும் நம்மாளுங்க அப்புடியே நம்பிட்டாங்க . அப்பறம் மகாவீரரு யாருன்னே மறந்துபோயி..நரகாசூரனை இவங்களே வதம் பண்றதா நெனச்சிக்கிட்டு தீவாளிய கொண்டாடிக்கிட்டிருக்காங்க.
மக்களுக்கு எதையாவது கொண்டாடிக்கிட்டே சந்தோசமா இருக்கணும்..அம்புட்டுதான்.கொண்டாடுங்க...தப்பில்லே...ஆனால் ஏன்... எதுக்கு...எப்படி..கொண்டாடுறோம்ன்னு புரிஞ்சிக்கிட்டு கொண்டாடணும்தான் சொல்றேன்.
மகிழ்ச்சி.
தமிழன் வெகுண்டு எழுந்து என்ன பண்ணுவான்?
வீடு கொளுத்துவான். ரேப் பண்ணுவான், கவுரவ கொலை செய்வான், பொம்பளைங்க கழுத்தில் மொக்கனாங்க் கயிறு தாலி கட்டுவான். ஜாதி வெறி பிடிச்சி அலைவான். எதாச்சும் கேள்வி கேட்டா உன் பொண்டாடி எவனோடு படுத்தால் அம்மா எவனோடு படுத்தால் அக்கா எவனோடு படுத்தால் என்று கேள்வி கேப்பான்.
இதாண்டா தமிழனின் டிரேட் மார்க்…….
#இளையராஜாவின் தந்தை கிறிஸ்துவராக இருந்தார்.
இளையராஜா இந்துவாக இருக்கிறார்.#
இளையராஜா தன்னை இந்து என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார். அவர் இந்துவாக முடியாது. சாக்கியர் (பஞ்சமர்) இந்து மதத்தில் சேருவதற்கு இந்து மதத்தில் எந்த சடங்கும் சம்பிரதாயமும் இல்லை.
இந்து மதத்தில் இருப்பது நாலு வருணம் மட்டுமே. இந்து அல்லாததார் அனைவரும் ஐந்தாம் வருணத்தார். ஐந்தாம் வருணத்தாரை இந்துவாக அங்கிகரிக்க இந்து மதத்தில் வழி இல்லை. சும்மா நானும் இந்து என்று நம்பிக்கொண்டு காவடி தூக்கலாம் ஆனால் முக்தி அடைய அங்கு வழி இல்லை.
வெளி நாட்டில் போய் வாழ்வாதாரம் ஈட்டும் மக்களை இங்கே கொச்சை படுட்தவில்லை. அப்படி அவர்கள் இங்கு வாழ்வாதாரம் செய்ய முடியாமல் வெளி நாட்டுக்கு போக காரணம் இந்த அரசியல் வேடதாரிகள்தான். ஆனால் வெளி நாட்டில் போயி அண்டி பிழைத்துக்கொண்டு இருக்கும் சில சனியன்கள் அந்த நாட்டு மகளை அந்த நாட்டு மண்ணை அந்த நாட்டு மொழியை நேசிக்காமல். அங்கே இருந்து கொண்டு இவர்கள் தமிழ் மயிரு ரொம்ப பெருசு இவுங்க தமிழ் மண்ணு பெரிய சாக்கடை தொட்டின்னு பேசிட்டு இருப்பதுதான் கடுப்படிக்குது. அப்படி உங்க மயிரு பெருசுன்னா இங்க வந்து புடுங்க வேண்டியதுதானே எதுக்கு வெளி நாட்டில் மத்தவங்க மயிரை புடுங்கிட்டு இருக்கீங்க.

சி.பி.முத்தம்மா

🎪சி.பி.முத்தம்மா🙏🏼 காலமான தினமின்று🐾
🎓இன்று ஐ ஏ எஸ் அல்லது ஐ பி எஸ் என்ற சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுத ஆசைப்படும் பல இளம் பெண்கள் இந்தப் பெயரை கேள்விப்பட்டிருக்கக் கூடுமா என்பது டவுட்தான். ஆனால் மூடத்தனத்தினால் எழுப்பப்பட்ட ஒரு மதில் சுவரை தனி ஒருவராக உடைத்து அடுத்தடுத்து வந்துக் கொண்டிருக்கும் தலைமுறைக்கு வழி அமைத்தவர் அவர்.👀
நம்ம மெட்ராஸ் விமன் கிறிஸ்டியன் காலேஜிலும், மாநிலக் கல்லூரியிலும் படித்த சி. பி. முத்தம்மா (கொனெரி பெல்லியப்பா முத்தம்மா), கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில்தான் பிறந்தார். இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றியடைந்த முதல் பெண்.
இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949-இல் பணியில் சேர்ந்தவர்.
இவர் டூட்டியில் சேரும்போது வெளியுறவுத் துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான பணி விதிகளின்படி, அந்தத் துறையில் பணிபுரியும் பெண் மேரேஜ் செய்றதுக்கு முன்னாடி கவர்மெண்டிடம் முன் அனுமதி பெற வேண்டுமென்று சொல்லின. அது மட்டுமல்ல, திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்மணியின் குடும்பப் பொறுப்புகள், வெளியுறவுத்துறையில் அவரது பணிக்குத் தடையாக இருக்கிறதென்று அரசு கருதினால், அந்தப் பெண் ராஜினாமா செய்ய வேண்டுமென அரசு நிர்பந்திக்கும் என்றும் அந்த விதிகள் சொல்லின.
இதைப் போன்ற விதி ஆண்களுக்குக் கிடையாது. இந்தத் துறையின் இன்னொரு விதி, திருமணமான எந்தப் பெண்ணும் இந்தப் பணியில் சேரும் உரிமை தனக்கு உண்டென உரிமை கோர முடியாது என்றது. சுருக்கமாகச் சொன்னால், இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றும் வாய்ப்பும் உரிமையும் ஆண்களுக்கு மாத்திரமே உரியது.
25 வயதில் முத்தம்மா பணியில் சேரும்போது பணி நியமனக் குழுவின் தலைவர், ‘இந்த விதிகளை எடுத்துச் சொல்லி, வெளியுறவுத் துறையில்தான் நீ சேர வேண்டுமா?’ எனக் கேட்டபோது, ‘ஆமாம்’ எனப் பிடிவாதமாகச் சொல்லிவிட்டார். அவரை அந்தப் பணியில் சேர இயலாமல் செய்யும் நோக்கத்துடன், அந்த அதிகாரி அவருக்கு நேர்முகத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் அளித்தார். ஆனாலும் அவரது மற்ற மதிப்பெண்கள், அவர் நினைத்த வண்ணமே வெளியுறவுத் துறையில் சேர வாய்ப்பளித்தன.
ஆனால் அவரது பிரச்சினை அத்துடன் ஓய்ந்துவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் அதற்குப் பின்னர்தான் ஆரம்பம் ஆயிற்று. ஏனெனில் அதன் பின் ஒவ்வொரு கட்டத்திலும் பலவிதமான பாலியல் பாகுபாடுகளுக்கு அவர் ஆளாக நேர்ந்தது.தொடர்ந்து முப்பது வருஷமா இத்தகைய பாகுபாட்டை எதிர்கொண்ட அவர் 1979-ம் வருஷம் , பணி ஓய்வு பெறுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னாடி அரசின் இந்த விதியே பெண்ணுரிமை மற்றும் சமத்துவம் ஆகியவற்றிற்கு எதிராக இருக்கிறதென்றும் பெண் என்பதாலேயே பணியில் அமர்வதற்கான உரிமை பாதிக்கப்படுவதென்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானதென்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த வி ஆர் கிருஷ்ணயரிடம் அரசு இந்த விதிகள் நீக்கப்படும் என உறுதி அளித்தது.
ஆக அரசு விதிகளில் இருந்த ஆணாதிக்கக் கருத்துக்களைத் தனது மன உறுதியாலும், விடாமுயற்சியாலும் உடைத்தெறிந்த முத்தம்மா. இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த அவர் டெல்லியில் தனக்குகு இருந்த 15 ஏக்கர் நிலத்தை அன்னை தெரசாவின் அறப்பணி அமைப்பிற்கு அளித்தார். இப்போது அங்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது.
அப்பேர்பட்ட ரியல் அம்மணி தனது 85 வது வயதில் 2009ம் ஆண்டு இதேஅக்டோபர் 14ம் தேதி காலமானார்.🐾👣🙏🏼

மோடி ஆட்சி தீபாவளி

முன்பெல்லாம் தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும்போதிருந்தே வெடிச்சத்தம் அப்படி இருக்கும். காலேலயே தொலைதூரத்தில் வெடிக்கப்படும் வெடிகளின் சத்தத்தில் துவங்கி பக்கத்துவீட்டு வெடி வரை தொடர்ச்சியாக ஒரு அலையைப்போல சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இன்னைக்கு ஒரு சத்தத்தையும் காணோம். காலையில் இருந்து ஒரே ஒருமுறை கேட்ட பெரும் சத்தமும்கூட பக்கத்துவீட்டு தாத்தா பிரித்த காற்றுச் சத்தம் என பிறகுதான் தெரிந்தது. தமிழகத்தில் என்ன பட்டாசுக்கு தடையா? இல்லை. அப்புறம் ஏன் சத்தமே இல்லை? எல்லோரும் இந்துமத விரோதி ஆகிவிட்டார்களா? அதுவும் இல்லை. மோடி ஆட்சி புண்ணியத்தில் எவன் கையிலும் காசு இல்லை என்பதே உண்மை.
மோடி ஆட்சி என்பது பயங்கரவாத ஆட்சி. மத பயங்கரவாதிகள் வைக்கும் வெடிகுண்டுகள் எப்படி அந்த மதம் இந்த மதம் என்றில்லாமல் எல்லா மதத்தினரையும் உயிர்காவு வாங்குமோ, அதுபோல மோடியின் ஆட்சி எல்லோர் பொருளாராத்திலும் அமிலத்தை ஊற்றி உள்ளது. உணவு வாங்கவும், மருந்து வாங்கவுமே ஆயிரம் முறை யோசிக்கவேண்டிய நிலையில் மக்கள் இருக்கும்போது எங்கே போய் கொண்டாட்டத்திற்காக காசை கரியாக்குவார்கள்?
மோடியும், பாஜகவும் இந்துமதவாதிகளாக இருக்கலாம், இந்துக்களுக்காக, இந்துமதத்திற்காக போராடுகிறவர்கள் போல நடிக்கலாம். ஆனால் அவர்களின் நிர்வாக சீர்கேடு யாரையும் விட்டுவைக்காமல், இந்துக்களையும், இந்துமத பண்டிகைகளையும் சேர்த்தே காவு வாங்கியிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மோடி/பாஜக ஆட்சி இருக்கும்வரை நமக்கெல்லாம் தீபாவளி மட்டுமல்ல எந்த பண்டிகையுமே கிடையாது. இழவு வீடுதான்.

சாமானிய மக்கள் & தீபாவளி

அன்புள்ள பால குமாரன் அவர்களே,
முன்னெல்லாம் தீபாவளிக்கு மூன்று நாளுக்கு முன் இருந்து வெடி வெடிக்கும் சத்தம் கேட்கும், தீபாவளி கழித்து இரண்டு நாள் கேட்கும், தற்போது அந்த நிலையில்லை, சமீப வருடமாகவே இல்லை. சமூகத்தின் கேளிக்கைகள் மாறிக்கொண்டு வருகிறது, வெடி வெடிப்பது மிக பெரிய உற்சாகத்தை குழந்தைகளுக்கு கொடுப்பதில்லை, தொலைக்காட்சி, மொபைல், கேம்ஸ் என்று கேளிக்கைகள் விரிவடைந்து விட்டது, தற்போது தீபாவளி என்பது சம்பிரதாயமாகவே கொண்டாடப்படுகிறது.
அது மிக சிறப்பாக கொண்டாடப்பட்ட காலத்திலே கூட, அது ஒரு ஹிந்து பண்டிகை என்றோ, நரகாசூரன் கொல்லப்பட்டான் என்று வெஞ்சன்ஸோடு மக்கள் கொண்டாடவும் இல்லை. அதை ஒரு பழம் கதையாக காதில் கேட்டு ஓரம் போட்டு, வருடம் முழுக்க உழைக்கும் மக்களுக்கு இயல்பாக இருக்கும் கொண்டாட்டத்தின் தேவை காரணமாக தான் வெடி வெடிப்பதும், இனிப்புகளை பரிமாறி கொள்வதுமாக இருக்கிறது.
அதிலும், பார்ப்பனிய வழக்கம் எங்களுக்கில்லை. நாங்கள் அதிகாலை ஆட்டுக்கறிகடையில் நிற்பவர்கள்.
நீங்கள் ஆத்திக சாயம் பூசி என்ன கதைகளை கற்பித்தாலும் கொண்டாட்ட முறைகளை பொறுத்து தான் அந்த பண்டிகை எப்படி பிரசித்தி பெறுகிறது என்பதை வரையறுக்க முடியும்.
அந்த வரிசையில் தீபாவளி ஆகட்டும், ஹோலி ஆகட்டும், ஏன் ஸ்பெயினில் நடக்கும் la tomatino என்கிற தக்காளி அடித்து கொள்ளும் விழாவே இங்கு வந்தாலும், மக்கள் மத்தியில் பிரபலமாக தான் இருக்கும். இது விழாக்களுக்கே உள்ள இயல்பு.
ஆத்திகர்கள் நீங்கள் போய் இதன் அடிப்படையை விளக்கினாலும், நாத்திகர்கள் விளக்கினாலும், சாமானிய மக்கள் இதையெல்லாம் கேட்பதாயில்லை.
ஏனினில் அவர்கள் பெரும்பாலான விழாக்களை அதன் வரலாறு, ஆதி மூலம் அறிந்து, அதற்காக கொண்டாடுவதில்லை.
வண்ண பட்டாசுகளை ரசிக்கவும், தின்பண்டங்களை வாங்கவும்; ருசிக்கவும்; அடிப்படை புலன்கள் போதுமானது. நீங்கள் பெருமை பீற்றி கொள்ளுமளவு இதை ஆத்திகத்தின் வெற்றியாக பார்க்கும் அளவு பார்ப்பனியத்தின் புல்லுருவித்தனங்களை அறியாதவர்கள் தான் பெரும்பான்மையான மக்கள்.
மக்கள் இனிப்புகளை வாங்கி செல்வதெல்லாம் நாத்திகத்தின் தோல்வியாக நினைப்பதின் மூலம் உங்கள் மனம் நிம்மதியடையுமென்றால், அதை நான் ஏன் கெடுப்பானேன்.
சர்க்கரை நோய் அதிகமாகியிருப்பதும், டாஸ்மாக் வியாபாரம் அதிகமாகியிருப்பதும் கூட ஆத்திகத்தின் வெற்றியாக இருந்துவிட்டு போகட்டுமே!

Monday, October 16, 2017

அபத்தத்தை எப்படி மக்கள் நம்புகிறார்கள்

கேள்வி: ஹீலர் பாஸ்கர், செந்தமிழன் போன்றவர்கள் பேசுவதை ஒருநிமிடம் கூட கேட்கமுடியவில்லை. அபத்தத்தின் உச்சமாக இருக்கிறது. இந்த அபத்தத்தை எப்படி மக்கள் நம்புகிறார்கள்?
பதில்: மக்களின் உளவியல் மிகவும் சாதாரணமானது. கை பெருவிரலில் ஆணுறையை மாட்டிக்கொண்டால் எய்ட்ஸ் வராது எனச் சொன்னால் நிறைய பேர் நம்பி அப்படியே செய்வார்கள். ஏனெனில் ஆணுறையை மாட்ட வேண்டிய இடத்தில் மாட்டுவதை விடவும் கட்டைவிரலில் மாட்டுவது எளிது.
மக்கள் பின்பற்றுவதற்கு கடினமான சரியான உண்மையைவிடவும், பின்பற்ற அதிக உழைப்பு தேவைப்படாத எளிமையான பொய்யை நம்பும் மனநிலை உடையவர்கள். ஆங்கில மருத்துவத்திற்கு மாற்றாக அதைவிட கடினமான விஷயங்களை முன்வைத்தால் ஒருபயல் பின்பற்ற மாட்டான். அதனால்தான் இந்த ஹீலர்கள் உயிர்வாங்கும் பெரிய நோய்களுக்கு கூட மிக மிக எளிமையான தீர்வுகளாக கொடுப்பார்கள். கேன்சர் என்றால் கூட காலேல ரெண்டு ஸ்பூன் பூண்டை மெனறு தின்னுங்கள் என்பார்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம் உடற்கூறு, மருத்துவம் பற்றிய மக்களின் அறியாமை. மூடநம்பிக்கை ஒழிப்பு போராளியும், மனநல மருத்துவருமான டாக்டர் ஆபிரகாம்கோவூரின் case study ஒன்று உண்டு. ஒரே ஒரு மொழி மட்டுமே பேசத்தெரிந்த சிறுமி ஒருத்தி திடீரென ஒருநாள் காலையில் ஆங்கிலம், இந்தி, அரபி உள்ளிட்ட பத்து மொழிகளில் சரளமாக பேசத்துவங்கினாள். சுற்றி இருந்தவர்களுக்கு ஆச்சரியம். அவள் மொழிப்புலமையை நம்பத்துவங்கி அவளுக்கு அபூர்வ சக்தி வந்துவிட்டதாக நம்பினார்கள்.
டாக்டர் கோவூர் அவளை பரிசீலித்தார். அரபி, இந்தி பேசும்போது அவரும் வியந்தார். பின்னர் அவள் ஆங்கிலம் பேசும்போது அவளுக்கிருப்பது அபூர்வ சக்தி அல்ல மனநோய் என கண்டுகொண்டார். ஏனெனில் அவள் ஆங்கிலம் உட்பட அனைத்து மொழிகளையுமே கொஞ்ச கொஞ்ச வார்த்தைகளை தெரிந்துகொண்டு அர்த்தமே இல்லாமல் தப்புந்தவறுமாக, அதே நேரத்தில் சரளமாக பேசியிருக்கிறாள். அவள் பேசிய மொழிகள் அவளைச் சுற்றி இருந்த யாருக்குமே தெரியாதென்பதால் அவளுக்கு வந்திருப்பது அபூர்வ சக்தி என வியந்தார்கள். ஆங்கிலம் தெரிந்த டாக்டர் அவள் ஆங்கிலம் பேசும்போது உண்மையைக் கண்டுகொண்டார்.
அப்படித்தான் இந்த ஹீலர்களும், செந்தமிழன் வகையறாக்களும் பேசும் உடற்கூறும், மருத்துவமும். பொதுமக்கள் அவர்கள் சரளமாக பேசுவதைக் கேட்டு வியப்பார்கள். இவ்வளவு உறுதியாகச் சொல்கிறாரே என நம்புவார்கள். அதாவது அந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அவளைச் சுற்றி இருந்தவர்கள் நம்பியதைப் போல. ஆனால் உண்மையான மனித உடலை அறுத்துப் பார்த்து படித்த டாக்டர்களுக்கு செம்ம கடுப்பாக, கோபமாக இருக்கும்.
பொதுமக்கள் தங்கள் அறிவை, அதாவது யாரை நம்பவேண்டும் என்கிற பகுத்தறிவை வளர்த்துக் கொள்ளவில்லை என்றால் கொத்துக் கொத்தாக தாங்களும் மடிந்து, தங்கள் குழந்தைகளும் மடிவதைக் காணும் அவல நிலைக்கு உள்ளாகுவதையன்றி வேறு நிலை ஏற்படாது.

ராஜராஜ சோழன் முப்பாட்டன்

அன்புள்ள தமிழ்நாஜித் தம்பி!
ராஜராஜ சோழன் உனக்கு ஒரு முப்பாட்டன்.
உங்கப்பாவோட பாட்டன் ஒரு முப்பாட்டன். அதாவது நிஜ முப்பாட்டன்.
உன் நிஜ முப்பாட்டன், உன் ராஜராஜ சோழன் முப்பாட்டன் காலத்துல பொறந்திருந்தா உன் ராஜராஜசோழன் முப்பாட்டன் உன் நிஜ முப்பாட்டன ஊருக்குள்ளயே விட்ருக்க மாட்டான். நிமிர்ந்து பார்த்தாலே நெஞ்சுல மிதிச்சிருப்பான். சுண்ணாம்பு கால்வாய்ல போட்டு வேகவச்சுருப்பான்.
அதாவது உன் ராஜராஜ சோழன் முப்பாட்டன் காலத்துல நீ ராஜராஜ சோழனை மட்டுமில்ல, உனக்கு மேல இருந்த சாதில எவனையுமே முப்பாட்டன்னு கூப்ட்ருக்க முடியாது. கூப்டுருந்தீனா நாக்கை இழுத்து வச்சு அறுத்துருப்பான் உன் முப்பாட்டன்.
ராஜராஜசோழனை விடு, 1900கள்ல கூட நீ எவனையுமே முப்பாட்டன்னு கூப்ட்ருக்க முடியாது. தோலை உரிச்சிருப்பாய்ங்க.
போறவன் வர்றவன், இருக்கவன் செத்தவன், எல்லாத்தையும் நீ முப்பாட்டன்னு இப்ப கூப்பிடுற உரிமையை உனக்கு வாங்கி கொடுத்ததே திராவிட இயக்கம். நீ என்னடான்னா ஆயிரம் ஆயிரம் வருசமா உன்ன மனுசனா கூட மதிக்காதவனை எல்லாம் முப்பாட்டன்னு கூப்டுகிட்டு, உன் சுயமரியாதைக்காக ஊர் ஊரா மூத்திரச் சட்டிய தூக்கிட்டு திரிஞ்ச கிழவனை திட்டிட்டு திரியிற!!!
இந்த லட்சணத்துல தமிழர் பெருமை, முப்பாட்டன் பெருமை, வீரவணக்கம், புகழ்வணக்கம்னு தெருத்தெருவா போஸ்டர் வேற! போங்கடாங்...

அடிமை தரகர்தான் ராஜராஜசோழன்

தேவதாசி முறையையும், வர்ணாசிரம தர்மத்தையும் நிறுவனமயமாக்கி பார்ப்பனர்களுக்கு நிலத்தையும், தமிழ் பெண்களையும் அள்ளி வழங்கிய அடிமை தரகர்தான் ராஜராஜசோழன். ஒரு இனத்தையே சாதிக்கு அடிமையாக்கிவிட்டு, அவ்வினத்திடமே அதிக வரிக்கொள்ளையடித்து மிக அழகான, பிரம்மாண்டமான கோவிலை எழுப்பிவிட்டால் எல்லா பாவமும் தீர்ந்துவிடுமா? சரி அதோடாவது விட்டானா? சமண மத துறவிகளாய் மாறி இருந்த பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட பெண்களை தேவசாதிகளாக்கி கோவிலை நிரப்பினான் அந்த அயோக்கியன். அவனை எல்லாம் தமிழ் மன்னன் எனச் சொல்வதில் நிஜத்தில் நாம் அவமானம் கொள்ளவேண்டும். இவன்லாம் ஒரு மன்னன், இவனுக்கு முப்பாட்டன் என புகழாரம் வேறு. இதைச் சொன்னால் இந்த முட்டாள் தமிழ்நாஜிக்கள் கலைஞர் அரசு நடத்திய ராஜராஜசோழன் விழாவைப்பற்றி கேட்கிறார்கள். அந்த விழாவையும், அவ்விழாவில் பத்மா சுப்பிரமணியத்தை மேடையில் ஆடவிட்டுவிட்டு, பறையிசைக் கலைஞர்களை கீழே வாசிக்கவிட்ட அவலத்தை அப்போதே விமர்சித்து எழுதினேன். கனிமொழி நடத்திய சங்கமம் நிகழ்ச்சியில் பறையிசை கலைஞர்கள் முறையான மரியாதை பெறுகிறார்கள் என பாராட்டியபோதும் அந்நிகழ்வை நினைவுகூர்ந்தேன். தப்பு யார் செய்தாலும் தப்புதான்.
நான் அடிக்கடி சொல்வதைப் போல, அண்ணாவை விட, கலைஞரை விட பெரியார் இதுமாதிரி விஷயங்களில்தான் ஒருபடி உயர்ந்து நிற்கிறார். கண்ணகி எனும் பெண்ணடிமைத்தன சின்னத்திற்கு சிலை வைத்தபோது முதல் கண்டனம் பெரியாரிடமிருந்தே வந்தது. அவர் அயோக்கியத்தனத்தை அயோக்கியத்தனம் என்பார். மொழியோ, இனமோ, நட்போ எதுவோ அவரை தடுத்ததே இல்லை. He never failed to call a spade a spade. King Rajaraja chozha was nothing but a criminal and a brahminical slave. Period.

யாழ்பாண இளைய தலைமுறை சினிமா மோகம்

உலகின் அறிவான இனம் என 3J சொல்வார்கள்,
Jews, Japanese , Jaffna (யாழ்பாணம்)
அதில் நாங்களும் ஒன்று என மார்தட்டிகொண்டிருந்தது யாழ்பாணம்
அதில் கொஞ்சம் உண்மையும் அன்று இருந்தது, கல்வியில் அவர்கள் சிறந்து விளங்கினார்கள், உலகெல்லாம் பெரும் பதவியில் அமர்ந்தார்கள், இன்றும் உலக பெரும் கோடீஸ்வரர்களில் ஈழதமிழர் உண்டு
நினைத்தால் பணம் கொடுத்தே இஸ்ரேலிய லேண்ட் பேங்க் பாணியில் அவர்கள் ஈழம் வாங்கியிருக்கலாம், சாத்தியம் இருந்தது. ஆனால் ஏனோ செய்யவில்லை
அப்படிபட்ட பெரும் தமிழ்பற்றும், கல்வியும், செல்வமும் கொஞ்சம் கர்வமும் நிரம்ப இருந்த யாழ்பாணம் புலிகள் காலத்தில் நாசமாயிற்று
படித்தவர்களையும் சிந்தனையாளர்களையும் குறிவைத்து கொன்ற புலிகளின் ஆட்சியும் வீழ்ச்சியும் அந்த யாழ்பாணத்தை நாசமாக்கிவிட்டது.
கடும் யுத்தம் விட்டுசெல்லும் சுவடான போதை, கூலிப்படை, வெட்டு குத்து இன்னபிற விவகாரங்களில் சிக்கி தவிக்கின்றது யாழ்பாணம்
இனி மீண்டும் யாழ்பாணம் தன் பொற்காலத்தை எட்ட நெடுநாட்கள் ஆகலாம் எனும் நிலை இருக்கும்பொழுது இப்பொழுது ஒரு விவகாரம் அந்த நம்பிக்கையிலும் மண் அள்ளி போடுகின்றது
அதாகபட்டது யாழ்பாண இளைய தலைமுறை சினிமா மோகத்தில் திரிகின்றதாம், இது அங்கு தம் பழம்பெருமையினை எண்ணி கண்ணீர் விடும் சில நல்ல தமிழர்களின் கண்களில் மிளகாய் தூவியிருக்கின்றது
ஆம், அஜித்திற்கும் விஜய்க்கும் இப்ப்பொழுது அங்கு ரசிகர் மன்றங்கள் திறந்திருக்கின்றார்களாம்
விரைவில் அவர்கள் மோதிகொள்ளும் அளவில் நிலமை தீவிரமாகின்றதாம்
சிங்களனோடு ஈழத்திற்கு மோதிய காலம் போய், இப்பொழுது யாழ்பாணத்தில் அஜித் கொடி பறப்பதா விஜய் கொடி பறப்பதா என சண்டை வருகின்றது.
இதில் விஜய் யாழ்பாண மருமகன் என்பதால் அவருக்கு வாய்ப்பு அதிகமாம்.
இதனை எல்லாம், இந்த திருமா வளவன்,வைகோ, வேல் முருகன், திரு முருகன் எல்லாம் கண்டிக்க மாட்டார்கள்
இங்கு "இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை" என கத்தி, செங்கொடி, விக்னேஷ், முத்துகுமார் என பல உயிர்களை உசுப்பேற்றி இழக்க வைத்தவர்களும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
அவர்களே விஜய், அஜித் என கைதட்டி குத்தாட்டம் ஆட கிளம்பிய பின் என்ன போர்குற்றம்? என்ன ஈழம்? என்ன மண்ணாங்கட்டி
அவர்கள் அஜித் படத்திற்கு கைதட்டும்பொழுதுதான் இங்கு திருமுருகன் காந்தி மெரினாவில் மெழுகு கொழுத்தபோனார், எப்படி இருக்கின்றது பார்த்தீர்களா?
அங்கிள் சைமன் இந்தியா என்றால் பொங்குவாரே அன்றி, சினிமா விஷயம் என்றால் மகா சைலண்ட்.
அதுவும் ஈழ தமிழ்பிள்ளைகள் பற்றியெல்லாம் ஹிஹிஹிஹீஹிஹ்
இதுபற்றி மனம் கனத்த ஒரு ஈழநண்பர் சொன்னார்
"எப்படி இருந்த நாங்கள் எப்படி நாசமாகிவிட்டோம் பார்த்தீர்களா?
அந்த ராமசந்திரன் முதல் இந்த சைமன் வரை சினிமாக்காரர்கள் எங்கள் பிரச்சினைகளை பேசியதுதான் இன்று இப்படி விபரீதம் எல்லாம் வர காரணம், சினிமாக்காரன் பேசி பேசி ஈழமும் தமிழகம் போல சினிமாதனமாகிவிட்டது
கொஞ்சம் கவனியுங்கள்
புலிக்கொடி பறந்த இடத்தில் விஜய் கொடி, அஜித் கொடியா? வெட்கமாக இல்லை என ஒரு குரல் தமிழகத்திலிருந்து வருகின்றதா இல்லை
ஈழத்திற்கு குரல் கொடுக்கின்றோம் என தமிழக சினிமாக்காரன் நடிக்க, அதனை நம்பிய ஐரோப்பிய ஈழதமிழன் படம் தயாரிக்க இப்படி எல்லாம் வியாபாரம்
இனி யாழ்பாணமும் அவர்களுக்கொரு மார்கெட் அவ்வளவுதான்,
யாழ்பாண தமிழன் தயாரிப்பாளனாகவும் இந்திய தமிழன் சினிமா உருவாக்கத்திலும் இணைந்து இப்பொழுது ஈழபோராட்டம் முழுக்க வியாபாரமாகிவிட்டது
உங்களுக்கு தெரியுமா தம்பி, திராவிட முன்னேற்ற கழகம் அக்காலத்தில் பெரும் எதிர்பார்ப்பை கொடுத்தது. ரஷ்ய புரட்சி இயக்கம் போல கருதபட்டது
ஆனால் சினிமாக்காரர்களை உள்ளே விட்டு அது இன்றைய தமிழக வீழ்ச்சிக்கு அடிகோலியது
துரதிருஷ்ட வசமாக ஈழபிரச்சினையும் அதில் சிக்கிவிட்டது.
தமிழகத்தை மோசமாக்கிய சினிமா இனி யாழ்பாணத்தின் மிச்ச மீதியினையும் நாசமாக்க வந்தாகிவிட்டது
ஈழம், தொப்புள் கொடி இப்படி எல்லாம் சினிமாகாரன் பேசுறது எல்லாம் மோசடி தம்பி, எல்லாமே நாடகம்.
பணம் ஒன்றே பிராதானம்"
ஆக யாழ்பாணத்தானே அஜித், விஜய் படங்களுக்கு கைதட்டிகொண்டு நான் இலங்கையன் என சொல்லிகொண்டிருக்கும்பொழுது இங்கு சைமன் கோஷ்டி, கவுதமன் கோஷ்டி, திருமுருகன் கோஷ்டி எல்லாம் இந்தியா ஈழத்தை அழித்தது, இந்தியா நம் இன எதிரி என சொல்லிகொண்டிருந்தால் அவர்களை தூக்கி போட்டு மிதிக்க வேண்டாமா
எவண்டா அது "இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை" என கத்தியது?
எதற்கு விடுதலை? விஜயினை இன‌ முதல்வராக்கவா?

ராஜராஜ சோழன் முப்பாட்டன்

அன்புள்ள தமிழ்நாஜித் தம்பி!
ராஜராஜ சோழன் உனக்கு ஒரு முப்பாட்டன்.
உங்கப்பாவோட பாட்டன் ஒரு முப்பாட்டன். அதாவது நிஜ முப்பாட்டன்.
உன் நிஜ முப்பாட்டன், உன் ராஜராஜ சோழன் முப்பாட்டன் காலத்துல பொறந்திருந்தா உன் ராஜராஜசோழன் முப்பாட்டன் உன் நிஜ முப்பாட்டன ஊருக்குள்ளயே விட்ருக்க மாட்டான். நிமிர்ந்து பார்த்தாலே நெஞ்சுல மிதிச்சிருப்பான். சுண்ணாம்பு கால்வாய்ல போட்டு வேகவச்சுருப்பான்.
அதாவது உன் ராஜராஜ சோழன் முப்பாட்டன் காலத்துல நீ ராஜராஜ சோழனை மட்டுமில்ல, உனக்கு மேல இருந்த சாதில எவனையுமே முப்பாட்டன்னு கூப்ட்ருக்க முடியாது. கூப்டுருந்தீனா நாக்கை இழுத்து வச்சு அறுத்துருப்பான் உன் முப்பாட்டன்.
ராஜராஜசோழனை விடு, 1900கள்ல கூட நீ எவனையுமே முப்பாட்டன்னு கூப்ட்ருக்க முடியாது. தோலை உரிச்சிருப்பாய்ங்க.
போறவன் வர்றவன், இருக்கவன் செத்தவன், எல்லாத்தையும் நீ முப்பாட்டன்னு இப்ப கூப்பிடுற உரிமையை உனக்கு வாங்கி கொடுத்ததே திராவிட இயக்கம். நீ என்னடான்னா ஆயிரம் ஆயிரம் வருசமா உன்ன மனுசனா கூட மதிக்காதவனை எல்லாம் முப்பாட்டன்னு கூப்டுகிட்டு, உன் சுயமரியாதைக்காக ஊர் ஊரா மூத்திரச் சட்டிய தூக்கிட்டு திரிஞ்ச கிழவனை திட்டிட்டு திரியிற!!!
இந்த லட்சணத்துல தமிழர் பெருமை, முப்பாட்டன் பெருமை, வீரவணக்கம், புகழ்வணக்கம்னு தெருத்தெருவா போஸ்டர் வேற! போங்கடாங்...