Friday, September 01, 2017

மெண்டல்கள் பலவிதம்

இன்றைக்கு OMR வழியாக வருகிற போது "SAVE RIVER" ன்னு ஒரு கும்பல் கொட்டுகிற மழையில் பதாகைகளை பிடித்துக் கொண்டு நின்றது.
நான் அருகில் போய் BROTHER , இந்த BLUE WHALE விளையாட்டென்று பயமுறுத்திக் கொண்டிருக்காங்களே அது மாதிரியானதா இப்ப நீங்க பதாகை பிடித் து நிற்பது என்று நான் கேட்க, அவரு கொஞ்சம் குழம்பி பின்பு சுதாரித்து கொண்டவராக, BROTHER கிண்டலடிக்க வேண்டாம். நாங்க நநதியை காப்பற்றுவதற்காக மழையில் நிற்கிறோம் என்றார். நான் அவரிடம் நானும் அதைத் தான் சொல்கிறேன் . நதியை காப்பாற்றனும் என்றால் வெயில் காலத்தில் மக்களிடம் போய் எடுத்துச் சொல்லலாமே. நதிகளில் தண்ணீர் கரை புரண்டோடுகிற மழைக்காலத்தில் நனைந்து கொண்டே சொன்னால் எப்படி brother என்றேன். அப்படியே "கோவையில் காட்டை அழித்து ஆசிரமம் அமைத்திருக்கிற சக்கி வாசுதேவின் செயலை பற்றி என்ன நினைக்கிறீங்க" என்று கேட்டவுடன், Brother உங்களது ஆதரவை கொடுக்க முடித்தால் கொடுங்க விதண்டாவாதம் பண்ணாதீங்க என்றார். நான் அவரிடம் Brother காடுகளிலிருந்து தானே ஆறுகள் பிறக்கிறது நீங்கள் காட்டை அழித்து ஆசிரமங்கள் அமைப்பவர்களை பற்றி பேசாமல் விட்டு விட்டு ஆறுகளை காப்பற்றப் போகிறோம் என்பது எப்படி சரியாகும் என்றதும் அமைதியாகி விட்டார்.
நானும் இந்த மெண்டல்களோடு சேர்ந்து நாமும் ஏன் மழையில் நனையனும் என்றெண்ணி நகர்ந்து வந்து விட்டேன் .

 இதை சொன்னா நம்மை பைத்தியக்காரன் என்று சொல்கிறார்கள்

சென்னை ஆக்கிரமிப்பு செய்திருப்பது இப்பொழுது கோவை - திருப்பூர் - ஈரோடு மற்றும் மதுரை - திருநெல்வேலி - தூத்துக்குடி பகுதி சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு ஒரே ஒற்றுமை ஜாதி, மதம், முதலாளித்துவ வெறியர்கள்

இது பாஜகவின் பிராக்சிகள் அதாவது நவீன பெயரில் சுற்றுச்சூழல் ஆா்வலா் என்ற பெயரில்லிருப்பவா்கள் ஆனால் இவா்களுக்கும் இயற்கைக்கும் எந்தச்சம்பந்தமமுமில்லை