Saturday, October 08, 2022

மூவேந்தர்களையும் கலங்கடித்த புரட்சியாளர்கள்- களப்பிரர்கள்!

 களப்பிரர் காலம் இருண்ட காலம் ஏன்?மறைக்கப் பட்ட உண்மை????


©️இறுதி மனிதர்கள்

©️களப்பிரர் ஆட்சி


மூவேந்தர்களையும் கலங்கடித்த புரட்சியாளர்கள்- களப்பிரர்கள்! 


களப்பிரர் ஆட்சி ஏறக்குறைய (கி.பி.250-கி.பி 600) 350 ஆண்டுகளும் தமிழகம் பார்ப்பனியத்திலிருந்து விடுபட்ட காலகட்டம்.


இவர்களுடைய ஆட்சியில் பார்ப்பனியம் அடங்கி ஒடங்கிபோனது. 


தங்களுக்கு தாங்களே உயர்வு கற்பித்துக்கொண்டு, அந்த கற்பிதத்தை வலிந்து திணிக்கும் விதமாக புராணங்களையும் இதிகாசங்களையும் எழுதிக்கொண்ட பார்ப்பனியம் கி.மு.1700 -கி.மு.1500-களில் தமிழகத்திற்குள் நுழைந்தது. 


தமிழுக்கும், தமிழ் சமூகத்துக்கும் கேடுகாலம் இந்த காலகட்டத்தில்தான் தொடங்கியது. 


மூவேந்தர்களும் எந்த விதமான எதிர் கேள்வியும் இல்லாமல் பார்ப்பனியத்தின்  ஆட்டங்களுக்கும்,யாகங்களுக்கும் தங்களின் அறிவை தொலைத்ததோடு சேர்த்து தமிழ் சமூகத்தையும் அழிவிற்கு உள்ளாக்கினார்கள்.


தமிழர்களின் மதம், கலை, கலாச்சாரம், வானியல், சோதிடம், மருத்துவம், மொழி அனைத்தும் வெகு விரைவாக ஆரிய சமஸ்கிருத மயமாக்கப்பட்டன. 


ரிக் வேத ஆரிய முனிகள் தமிழர்களின் கண்டு பிடிப்புகளுக்கு உரிமை கொண்டாடினார்கள்.


தமிழ் கல்வி பிராமணர்களின் ஏகபோக உரிமையானது. 


உதாரணம்: சங்க இலக்கியங்களுக்கு பிற்காலத்தில் உரை எழுதிய அனைவரும் பிராமணர்களே. திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரும் பிராமணரே.


இதன் விளைவு சங்க இலக்கியங்கள் அனைத்திலும் திருக்குறள் உட்பட எல்லாவற்றிலும் பார்ப்பனியத்தை திணிக்கும் வேலைகள் சுதந்திரமாக நடந்தது.


இதை தட்டி கேட்க வேண்டிய மூவேந்தர்களும் யாகங்களில் மூழ்கி கிடந்தார்கள்.


தங்களுக்கு எதிரான அனைத்தையும் விழுங்கி செரித்து விடுவது பார்ப்பனியத்தின் சிறப்புகளுள் ஒன்று. 


வட இந்தியாவில் சமணமும், பௌத்தமும் பார்ப்பனியத்தால் விழுங்கப்பட்டன. 


இந்தியாவில் தோன்றிய பௌத்தம் இந்தியாவில் பரவாததற்கு காரணம் இதுவே.


மூவேந்தர்களும் போட்டி போட்டுகொண்டு வைதீக பார்ப்பனியத்தை ஆதரித்தார்கள்.


பிராமணர்களுக்கு உள்ளூர் ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டது. 


மனு போன்ற பிராமணியத்தின் பிரத்தயேக தர்மங்கள் பொது மக்களிடையே திணிக்கப்பட்டன.


பிரம்மதேயங்கள், சதுர்வேதி மங்களங்கள் வழங்கப்பட்டன.


பிரம்மதேயங்கள், சதுர்வேதி மங்களங்கள் என்றால் என்ன ?


பிராமணர்களுக்கு என்று ஒரு ஊரை உருவாக்கி, அந்த ஊரில் வசிக்கப் போகும் ஒவ்வொரு பிராமணருக்கம் அந்த ஊரை சுற்றி விவசாய நிலங்களை ஏற்படுத்தி, அந்த நிலங்களில் உழைப்பதற்கு வேலையாட்களையும் கொடுப்பதற்கு பெயர் பிரம்மதேயம் மற்றும் சதுர்வேதி மங்களம். 


இந்த ஊர்களில் வசிக்கும் பிராமணர்களிடமிருந்து எந்தவிதமான வரியும் வசூலிக்கப்படாது. இவர்களின் விவசாய நிலங்களுக்கும் வரிகள் கிடையாது.


எந்த தகுதியின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு மட்டும் இத்தகைய ஆதிக்க சலுகைகள் என்று அன்றைய தமிழ் சமூகத்திற்கும், அன்றைய மூவேந்தர்களுக்கும் கேட்க வேண்டும் என்று தோன்றாத நிலையில்தான் களப்பிர புரட்சியாளர்கள் தமிழகத்திற்குள் நுழைந்தார்கள்.


ஒடுக்கப்பட்ட விவசாய மற்றும் வணிக வர்கத்தின் கூட்டே களப்பிரர்கள். 


சமூக சீரழிவிற்கு துணைபோன மூவேந்தர்களும் ஆட்சி அதிகாரங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள்.


இந்த விரட்டியடிப்பு கி.பி.150 ஆம் ஆண்டுகளிலேயே தொடங்கிவிட்டது. 


கி.பி. 250 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் களப்பிர புரட்சியாளர்களின் முறையான ஆட்சி தொடங்கியது.


தமிழகமும் பார்ப்பனியத்தின் பிடியிலிருந்தது மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது.


பார்ப்பனியம் மற்றும் பிராமணர்கள் பக்கம் களப்பிர புரட்சியாளர்களின் பார்வை திரும்பியது. 


பிரம்மதேயங்களும் சதுர்வேதி மங்களங்களும் பிராமணர்களிடம் இருந்து பிடுங்கப்பட்டன.


பிராமணர்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவித்த சொத்துகள் அனைத்தும் களப்பிர ஆட்சியாளர்களால் திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்டன.


பிராமணர்களின் மேலாதிக்கம் அடக்கி ஒடுக்கப்பட்டது.


பிராமணர்கள் உழைக்கும் வர்கத்திற்கு அடங்கி இருக்க வேண்டிய நிலையை களப்பிர புரட்சியாளர்கள் ஏற்படுத்தினார்கள். 


இந்தியாவில் தோன்றிய பேரரசுகளில் பார்ப்பனியத்திற்கு எதிரான வலுவான நடவடிக்கை எடுத்த ஒரே ஒரு பேரரசு களப்பிர பேரரசு மட்டுமே. 


பார்ப்பனியத்தை அடக்கி ஒடுக்கி உட்கார வைத்த காரணத்திற்காகவே இன்று களப்பிரர் ஆட்சி இருண்ட காலமாக வருணிக்கப்படுகிறது.


களப்பிரர் கொள்ளையர்கள் என்று அடையாளம் காட்டப்படுகிறார்கள்.


நேர்மையான எந்த வரலாற்று ஆராய்ச்சியாளரும் களப்பிர ஆட்சி காலத்தை இருண்ட காலம் என்று சொல்லத் துணியக் கூட மாட்டார்கள்.


அனைவரும் அனைவருக்கும் சமம் என்று போதிக்கின்ற சமண மதமும், பௌத்த மதமும் களப்பிரர்களின் அரசாங்க மதமாக இருந்தது. 


களப்பிர புரட்சியாளர்களின் காலத்தில் காஞ்சிபுரமும், காவிரிபூம்பட்டினமும் மிக மிக முக்கியமான பௌத்த நகரங்களாக இருந்தன. 


ஆரிய கலப்பற்ற மிகச் சிறந்த பௌத்த தமிழ் இலக்கியங்கள் களப்பிரர் ஆட்சி காலத்திலேயே எழுதப்பட்டன. சீவகசிந்தாமணி, நரிவிருத்தம், கிளிவிருத்தம், பெருங்கதை போன்ற இலக்கியங்கள் இதற்கு உதாரணம்.


சங்கமித்திரர், புத்ததத்தர், புத்தமித்திரர், போதிதருமர் (ஏழாம் அறிவு புகழ்) போன்ற மிகச் சிறந்த பௌத்த மத துறவிகள் களப்பிர அரசர்களால் மதிக்கப்பட்டிருக்கிறார்கள். 


இதில் சங்கமித்திரர் இலங்கையில், பௌத்த தத்துவத்தின் ஒரு பிரிவான மகாயன பௌத்தத்தை பரப்பி புகழ் பெற்றவர்.


போதிதருமர் தென்கிழக்காசியாவில் பௌத்த தத்துவத்தின் தியான பிரிவான ஜென் தத்துவத்தை பரப்பி புகழ் பெற்றவர்.


இன்றைய வரலாற்று நூல்கள் சித்தரிப்பது போல் களப்பிரர் ஆட்சி காலம் இருண்ட காலமாக இருந்திருந்தால் இவர்களால் இத்தகைய சாதனைகளை செய்திருக்கவே முடியாது.


உண்மை வரலாற்றை திரிப்பதும், மறைப்பதும் இந்திய வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் தருமம்.


அதுவும் ஆரிய வர்ணம் தூக்கலாக இருக்கும்படி பார்த்துக்கொள்வதும்,

அதற்கு எதிரான அனைத்தையும் சிறுமைபடுத்துவதும், கேவலப்படுத்துவதும், எதிர்ப்பு குரல் எழுப்புபவர்களை துரோகிகளாக சித்தரிப்பதும் இவர்களின் செயல்கள்.


கி.பி. 250 முதல் தமிழகத்தை ஆரிய ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுத்த களப்பிரரின் ஆட்சி 350 வருடங்கள் கழித்து கி.பி.600-ல் முடிவிற்கு வந்தது. 


தெற்கில் பாண்டியன் கடுங்கோனும், வடக்கில் பல்லவன் சிம்மவிஷ்ணுவும் களப்பிரரை வீழ்ச்சியடைய செய்தார்கள். 


பிடுங்கபட்ட பிராமணர்களின் ஆதிக்கச் சலுகைகள் மீண்டும் அவர்களுக்கு கிடைத்தது.

Friday, October 07, 2022

இந்தியாவில் எல்லா நபரும் வரி செலுத்துபவர்தான்!!

 இந்தியாவில் எல்லா நபரும் வரி செலுத்துபவர்தான்!! 


சில கட்சிகள் வருமான வரியை மட்டும் கணக்கில் கொள்ளும். கட்டணமில்லா சேவைகளை/சலுகைகளை இலவசங்கள் என்றும், அவைகளால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக கூறும். அவைகளை புறக்கணிப்போம். 


பிறப்பு முதல் இறப்பு வரை நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும்/பெறும் சேவைகளிலும் வரி (ஜிஎஸ்டி) செலுத்துகிறோம். 


அரசின் சலுகைகள் நம் வரிப்பணத்தின் ஒரு பகுதி நமக்கு திருப்பிக் கிடைக்கும் வழி. 


பெண்களுக்கான கட்டணமில்லா உள்ளூர் பேருந்து பயணத்தை பெண்கள் உரிமையோடு மேற்கொள்ள வேண்டும்!

காலநிலை மாற்றங்கள்! வளர்ச்சித் திட்டங்கள்!

 நிலை 1: நம் ஊர் பெரிதாக வேண்டும். எல்லா வசதிகளும் அரசு உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.


எங்கள் வீடுகளை, நிலங்களை அரசு திட்டங்களுக்குத் தர மாட்டோம். அது எங்கள் வாழ்வாதாரம்.


பக்கத்து ஊரை எடுத்துக் கொள்ளுங்கள். எங்கள் நிலங்களின் மதிப்பு கூடிவிடும்!


நிலை 2: என் வீட்டைச் சுற்றி மழைநீர் தேங்குகிறது. என்னால் இங்கு வாழ முடியவில்லை. எங்கேயோ வடிகால் அடைபட்டிருக்கிறது. உடனே அரசு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.


வீட்டைச் சுற்றி நீர் தேங்கினாலும் என் வீடு ஆக்கிரமிப்பு கிடையாது. அரசு என் வீட்டை இடிக்கக் கூடாது. பக்கத்து வீட்டை இடித்தால் நீர் வடிந்துவிடும்.


நிலை 3: நிலத்தடி நீரை சட்டத்திற்கு புறம்பாக உறிஞ்சும் நிறுவனங்களால்தான் என் நிலத்தில் நீர் கிடைக்கவில்லை. உடனே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மூன்று நாள்களாக தொடர்ந்து குடிக்க கேன் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கிறோம். ஒரு கேனுக்கு 100 உரூபாய்! அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


காலநிலை மாற்றங்கள்! வளர்ச்சித் திட்டங்கள்!

நூல் அளவுதான் வித்தியாசம்

 எங்கோ ஒரு கோட்சே என்ற பார்ப்பனன் மகாத்மாவை துப்பாக்கியால் சுட்டு கொன்றதற்காக


எங்கோ ஒரு TT கிருஷ்ணமாச்சாரி என்ற ஒன்றிய அமைச்சர் கொள்ளையடித்தார் என்பதற்காக


எங்கோ ஒரு IPS அதிகாரி சபேசன் கொள்ளையடித்தார் என்பதற்காக


எங்கோ ஒரு ராணுவ அதிகாரி KR ராகவன் கொள்ளையடித்தார் என்பதற்காகஎங்கோ ஒரு ஜெயலலிதா மாதம் ஒரு ரூபாய் சம்பளத்தில் ஒரு லச்சம் கோடி கொள்ளையடித்தார் என்பதற்காக


எங்கோ ஒரு தேவநாதன் குருக்கள் 

கோவில் கருவறையில்

காமலீலை செய்ததற்காக,


எங்கோ ஒரு கோவில் குருக்கள் 

கோவிலில் சிறுமியை வன்புணர்ச்சி செய்ததற்காக, எங்கோ ஒரு ராஜப்பா குருக்கள்

100 கிலோ தங்கத்தை திருடியதற்காக.


 எங்கோ ஒரு சித்ரா ராமகிருஷ்ணன் பிராமணாள் பங்கு சந்தையில் பலகோடி ஊழல் செய்ததற்காக 


ஒட்டு மொத்த பார்ப்பனரையும்

தவறாகப் பேசக்கூடாது.


ஆனால்...


எங்கோ ஒரு முஸ்லிம்

குண்டு வைத்ததற்காக,

ஒட்டு மொத்த முஸ்லிம் எங்கோ ஒரு முஸ்லீம் குண்டு வைத்ததற்காக முஸ்லீம் சமுதாயத்தையும் குற்றம் சொல்லலாம்.


எங்கோ ஒரு திமுக காரன்

பியூட்டி பார்லர் கடையை உடைத்தற்காக,

ஒட்டு மொத்த திமுக காரனையும்

பழி சொல்லலாம்.


ஏனெனில், நியாயம் நீதி இரண்டு வகைப்படும். 

அது இரண்டுக்கும் ஒரு நூல் அளவுதான் வித்தியாசம்...

Thursday, October 06, 2022

இந்தியாவில் எல்லா நபரும் வரி செலுத்துபவர்தான்!!

 இந்தியாவில் எல்லா நபரும் வரி செலுத்துபவர்தான்!! 


சில கட்சிகள் வருமான வரியை மட்டும் கணக்கில் கொள்ளும். கட்டணமில்லா சேவைகளை/சலுகைகளை இலவசங்கள் என்றும், அவைகளால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக கூறும். அவைகளை புறக்கணிப்போம். 


பிறப்பு முதல் இறப்பு வரை நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும்/பெறும் சேவைகளிலும் வரி (ஜிஎஸ்டி) செலுத்துகிறோம். 


அரசின் சலுகைகள் நம் வரிப்பணத்தின் ஒரு பகுதி நமக்கு திருப்பிக் கிடைக்கும் வழி. 


பெண்களுக்கான கட்டணமில்லா உள்ளூர் பேருந்து பயணத்தை பெண்கள் உரிமையோடு மேற்கொள்ள வேண்டும்!

எதை பற்றியும் தெரியாமல் ஒரு காலத்தில் நான் சீமான் பின்னால் சுற்றி கொண்டு இருந்தேன்

 

India Today பத்திரிக்கை வருடா வருடம் இந்திய மாநிலங்களை தரப்படுத்தி வெளியிடும். அதை நூலகத்திலோ, இணையத்திலோ தேடி படித்து பாருங்கள். அதில் ஒவ்வொரு முறை திமுக ஆட்சில இருக்கும் பொழுதும் தமிழ் நாடு முதல் மூன்று இடங்களில் இருக்கும். ஆனால் அதிமுக வரும் பொழுது எல்லாம் கீழே இறங்கி விடும். அதிலும் OPS முதல்வராக இருந்த பொழுது கடைசி இடதுக்கு தள்ளப்பட்ட கேவலமும் நடந்தது.

குறிப்பாக 96-01 திமுக ஆட்சி இன்றைய நவீன தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட பொற்கால ஆட்சி என்று திமுக பிடிக்காத பார்ப்பன பத்திரிகைகளே ஒத்து கொண்ட விடயம். I.T துறை முதல், சாலை மற்றும் போக்கு வரத்து விரிவாகம் வரை தமிழ் நாடு நாட்டிலேயே உச்சதுக்கு போக காரணம் திமுக தான். EPS வந்து எல்லா இடத்துக்கு MGR பேரை வச்சிட்டு வெற்று தம்பட்டம் அடித்து கொண்ட கொள்ளைகாரன்/ கொலைகாரன்.

(MGR ஆண்ட 10 வருடங்கள் தமிழ் நாட்டில் எந்த பொருளாதார வளர்ச்சியில் இல்லை, வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடியாது என்று அப்ப வந்த CAG அறிக்கை காறி துப்பி விட்டது. ஆனா சினிமா மோகத்தை வச்சி மக்களை ஏமாற்றி, கடைசில் A1 கொள்ளைகாரி கிட்ட தமிழ் நாட்ட விட்டுட்டு போய்ட்டாரு.)

Bonus for those interested in facts and not inane bullsh!t:

இந்தியாவிலேயே தமிழ் நாடு இன்று முன்னேறிய மாநிலமாக இருக்க காரணம், கலைஞர் தான். 1971 இல் SIPCOT மற்றும் SIDCO உருவாக்கி மாபெரும் தொழிர்ச்சாலைகள் & வேலைவாய்ப்புகள் உருவாகினார். பிறகு 1977இல்ல ELCOT தொடங்கி அதான் மூலம் மின்னனு தொழிர்ச்சாலைகள் உருவாக்கி தொழிர்ரபுரட்சியை தமிழ் நாட்டில் தொடங்கினார். பிறகு 1991இல் நிதி அமைச்சர் மன்மோகன் சிங் உலகமயமாக்கள் இந்தியாவிற்கு கொண்டுவந்த பின், கலைஞர் 1997இல் இந்தியாவில் முதன் முதலாக I.T policy உருவாக்கினார். பிறகு 1999இல் அப்போதைக்கு ஆசியாவின் மிக பெரிய I.T பூங்காகளில் ஒன்றாக TIDEL park உருவாக்கினார்.

இன்று அதில் உட்கார்ந்து கொண்டு தான் சில தற்குறிகள் “திராவிடத்தால் வீழ்ந்தோம் ஒறவே”னு போன்ல பதிவு போடுதுங்க. அப்பலாம் இங்க I.T னா என்னன்னே பெரும்பாலும் மக்களுக்கு தெரியாமல் இருந்த பொழுது அதான் எதிர்காலத்தை உணர்ந்து I.T துறையை உருவாக்கி, கணினி கல்வியை கொண்டுவந்தார். மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ் நாட்டின் பங்கு 1995-96இல் வெறும் 0.2% இருந்தது, அதை 2000 எட்டும் பொழுது 13% மாற்றி காட்டினார்.

ஜெயலலிதா எத்தனை I.T park அமைத்தார்னு யாராவது சொல்ல முடியுமா. சொல்லப்போனா ஓசூர் கிட்ட அமையவிருந்த I.T park திட்டத்தை திமுக போட்ட திட்டம்னு கிடப்பில தான் போட்டாங்க. (இப்ப திமுக மதுரையில ஒரு பெரிய I.T park மைக்கும் திட்டத்தை PTR அறிவித்திருக்கார்.)

இந்தியாவின் Detroit என தமிழ் நாடு புகழ் பேரும் வகையில் கார், பைக் தொழிர்சாலைகள் கொண்டுவந்தார். சேலம் இரும்பு ஆலையையும் கொண்டுவந்தவர் கலைஞர் தான்.

இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு சாலை போக்குவரத்து infrastructure உருவாக்கியது 1996-01 கலைஞர் தான். முதன் முதலில் சிறு சிறு தெருக்களுக்கு கூட சிமன்ட் சாலை, குக்கிராமங்களுக்கு மினி பேரூந்து தொடங்கினார். பேரூந்து கட்டணங்களை தொடர்ந்து இந்தியாவிலேயே மிக மலிவாக வைத்துகொண்டார். கோயம்பேட்டில் அப்போதைக்கு ஆசியாவின் மிக பெரிய பேரூந்து நிறுத்தம், கிட்டத்தட்ட 100 சிறு மற்றும் பெரு அணைகள், அரசு ஊழயர்களின் குடும்பத்துக்கு அனுதாப தொகை இந்தியாவில் முதன் முதலில் உருவாக்கியது, சென்னை மெட்ரோ, தமிழ் நாடு முழுக்க ஆரம்ப சுகாதார நிலையங்கள் (அம்மா கிளினிக் போல வெறும் ஒரு பாத்ரூம் கட்டி பலகை தொங்க விட்டவரல்ல), என்று இன்னும் பல.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், உழவர் சந்தை, Tamil Nadu Civil Supplies Corporation போன்றவற்றை கொண்டுவந்தார்.

கை ரிக்க்ஷாகள் ஒழித்தார், குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி, இந்தியாவில் முதன் முதலில் பெண்களுக்கு சொத்து உரிமை கொடுத்தவர், குடிசை மாற்று வாரியம் அமைத்து குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாக வித்திடவர். இன்று தமிழ் நாட்டில் 75% பேர் சொந்த வீடு வைத்துள்ளனர். Backward class/தாழ்த்தபட்டோர் என்பதை நீக்கி பிற்படுத்தப்பட்டோர் என்ற பதம் உருவாக்கினார். அது போல் ஊனமுற்றோர் என்ற பாதத்தை நீக்கி, மாற்றுத்திறனாளி என்ற பதத்தை கொண்டுவந்து, அவர்களுக்கு 3% இடஒதுக்கீடும் கொண்டுவந்தார். இன்னும் நூற்று கணக்கில் திட்டங்களை, infrastructure என்று உருவாக்கி தமிழ் நாட்டின் தலைஎழுத்தை மாற்றியவர்.

It's these things that gave common people a chance to improve their lives become determiners of their lives. Not random selection of rich men with caste backing as ministers.

ஆனால் இது எதை பற்றியும் தெரியாமல் ஒரு காலத்தில் நான் சீமான் பின்னால் சுற்றி கொண்டு இருந்தேன், பிறகு அரசியல் தெளிவு ஏற்பட்ட பின் வெளி வந்து விட்டேன். இங்கு கலைஞரை திட்டி பதிவு போடுபவர்கள் நாளை உணர்வார்கள்.