Monday, October 25, 2021

சிலருக்கு மெக்காலே என்றால் வெறுப்புணர்வு தோன்றக் காரணம்

 இன்று லார்ட் மெக்கலே அவர்களின் பிறந்த நாள்.
அவரை நமக்கு ஒரு வில்லனாகத்தான் அறிமுகப்படுத்தினார்கள்.

“இந்தியாவின் பாரம்பரிய கல்வி முறையை சிதைத்து, வெள்ளைக்காரனுக்கு பியூன் வேலைப்பார்க்க ஆங்கிலத்தை கற்பித்த கயவன்” என்று தான் எனக்கும் அவர் அறிமுகம்.

குடும்பம் என்கிற குட்டி வட்டத்தை விட்டு வெளி உலகை நான் கவனிக்கிறேன்....
மோதிலால் நேரு எங்கு படித்தார்?
வங்காளிகள் ஏன் இவ்வளவு அதிக நோபல் பரிசு வாங்குகிறார்கள்?
இந்தியாவின் முதல் செக்யூலர் பள்ளி/ கல்லூரிகளை யார் துவக்கினார்கள்....?
கல்வி மறுக்கப்பட்ட ரெட்டைமலையின் மகன் ஶ்ரீநிவாசன் எப்படி டிகிரி வாங்கினார்?

இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தான்:
லார்ட் தாமஸ் பபிங்க்ட்டன் மெக்கலே.

அவர் இங்கிலாந்து பாராளுமன்றத்தி லேயே நிறவேற்றுமைக்கு எதிராக குரல் எழுப்பியவர்.இந்தியாவிற்கு வந்தபோது ம் அதே செக்யூலர் மனப்பாண்மையை இங்கும் பரப்பியவர்.

அது வரை இந்தியாவில் கல்வி என்றால்:
1) வேத பாட சாலை
2) இஸ்லாமிய மதராசா
3) கிறுஸ்வ மிஷினரி

இந்த மூன்றும் வெறும் மதக்கல்வியை மட்டுமே கற்பிக்கின்றன. இதற்கு இங்கி லாந்து அரசு செலவு செய்வது பொது மக்களுக்கு போய் சேரவில்லை. வெறும் மூடநம்பிக்கைகளை மட்டுமே வளர்க்கிறது...என்று முதன் முதலில், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல், தாய் மொழி என்கிற ஐந்துவித பாடங்களை உள்ளடக்கிய பொது கல்வியை கொண்டு வந்தவர் மெக்கலே.

இதற்கு அடுத்து அவர் எடுத்துக்கொண்ட பிராஜெக்ட் இன்னும் சிறப்பானது. அது வரை இஸ்லாமியருக்கு ஷரியா சட்டம், இந்துக்களுக்கு மனுச்மிருத்தி என்றிருந்த சட்டத்தை, அனைவருக்கும் ஆன “இந்தி யன் பீனல் கோடு” IPC யை கொண்டு வந்தவர் இதே லார்ட் மெக்கலே தான்.

இன்றளவும் சிலருக்கு மெக்காலே என்றால் வெறுப்புணர்வு தோன்றக் காரணம்,  அவர் ஒடுக்கப் பட்ட, தாழ்த்தப்பட்ட, பட்டியலின, தீண்டத் தகாதோர்க்கு பொன் பொருளை கொடுத்திருந்தால் கூட தாங்கிக் கொண்டிருப்பார்கள்..மாறாக அறிவை பெருக்கும் அழியாத கல்வியை கொடுத்து விட்டார், தங்களுக்கான அடிமை சமூகத்தை இல்லாமல் ஆக்கிவிட்டார் என்ற வயிற்றெரிச்சல் தான்...

லார்டு மெக்கலே திருமணம் ஆகாதவர். அவருக்கு genetic சந்ததியினர் இல்லை. ஆனால் நாம் எல்லாம் அவருடைய memetic வாரிசுகள்!

அவரைப் பற்றி, ஆயிரம் அவதூறுகள் வல்லாதிக்க சக்திகள் பரப்பினாலும், அவர் வகுத்த கொள்கையினால் பயன்பெற்ற படித்தவன், ஒருநாளும் அவர் புகழ் பாடாமல் உறங்க மாட்டான்...

நமக்கெல்லாம் கல்வியையும், சட்டத்தையும் கொடுத்த நம் ஞானத்தலைவன்,
மாமனிதர் மெக்கலே!

மனம் கனிந்த நன்றியுடன், பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!💐💐💐💐