Tuesday, July 31, 2018

...சொல்லுறான் கலைஞர் துரோகினு

பொண்டாட்டி புள்ளயோட அவனவன் களத்துல நின்னு போராடிக்கிட்டிருக்கும்போது ஓடிப்போயி ஐரோப்பா லண்டன் ஆஸ்திரேலியா வுல செட்டிலானவன் சொல்லுறான் கலைஞர் துரோகினு...!!!!
விசா நீட்டிப்புக்கும் குடியுரிமைக்கும் அங்க போர் நடந்தால்தான் சாதகம்னு இங்க பாதுகாப்பா உக்காந்துக்கிட்டு அங்க சண்டைய தூண்டிவிட்டு தமிழன் சாவுக்கு வித்திட்டவன் சொல்லுறான் கலைஞர் தமிழரை அழித்தார்னு..!!
ஊரில் நின்று போராடி உறவை உறுப்பை இழந்தவன் முன்னாடி ஐரோப்பாவிலிருந்து ஆடம்பரமாப்போய் இறங்கி கெத்துக்காட்டி சீன் போட்டுத்திரும்புறவன் சொல்லுறான் கலைஞருக்கு மனசாட்சி இல்லைனு..!!
கள்ளத்தனமா வேலைசெய்து கணக்குக்காட்டாமல் சம்பாரிச்சுக்கிட்டு அரசின் பெனிபிட்டையும் ஆட்டை போடுபவன் சொல்லுறான் கலைஞர் ஊழல் வாதினு...!!!!
அத்தனை தமிழன் அங்கே அல்லல்பட்டுக்கொண்டிருக்கும்போது தன் சொந்தங்களாய் மட்டும் ஐரோப்பா வருத்திக்கொண்டவன் சொல்லுறான் கலைஞர் சுய நலவாதினு..!!!
இன்னும் தமிழன் முள்வேலிக்குள் பட்டினியாய்க் கிடக்க இங்கே பிள்ளைகளுக்கு ஹெலிகாப்டரில் சடங்கு நடத்துறவன் சொல்லுறான் கலைஞர் ஆடப்பரவாதினு....!!!

Monday, July 30, 2018

மானங்கெட்ட தமிழனே!

எனக்கு ஒரு வாட்ஸ் அப் செய்தி வந்தது. ''மானங்கெட்ட தமிழனே! என்று அது தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் திரும்பிய பக்கம் எல்லாம் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். பெயராக இருக்கிறது.
அட மானங்கெட்ட தமிழனே ராஜராஜசோழனை, ராஜேந்திரசோழனை, பாண்டிய மன்னனை எங்கேடா காணும்? வெள்ளையர்களை எதிர்த்தவர்களுக்கு சிலை எங்கே? என்று நீட்டி முழக்குகிறது அந்த வாட்ஸ் அப்.
ஐயோ பாவம்! மானங்கெட்ட தமிழனே என்று கேட்கும் அந்த மானமுள்ள தமிழனுக்கு தமிழ்நாடு தெரியுமா என்று தெரியவில்லை? அல்லது கைபர் வாசியா தெரியவில்லை?
இந்த நாட்டில் தான்...
1. வள்ளுவர் கோட்டம்
2.வள்ளுவருக்கு 133 அடி சிலை
3. காமராஜர் நினைவகம்
4. பக்தவத்சலம் நினைவகம்
5 காந்தி மண்டபம்
6. இராஜாஜி நினைவாலயம்
7. பாரதியார் நினைவு இல்லம் சென்னை
8. காமராஜர் நினைவு இல்லம்
9. மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபம்
10.சுதந்திரப் போராட்ட தியாகிகள் மணிமண்டபம்
11.இரட்டமலை சீனிவாசன் நினைவகம்
12. காயிதேமில்லத் மணிமண்டபம்
13. திருப்பூர் குமரன் நினைவகம்
14. உடுமலை நாராயணகவி மணிமண்டபம்
15. தீரன் சின்னமலை மணிமண்டபம்
16. இராஜாஜி பிறந்த இல்ல நினைவகம்
17. வள்ளல் அதியமான் கோட்டம்
18. நாமக்கல் கவிஞர் நினைவு இல்லம்
19. நாமக்கல் கவிஞர் மாளிகை
20. தாளமுத்து நடராசன் மாளிகை
21. வ.வே.சு.அய்யர் நினைவு இல்லம்
22. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபம்
23. தில்லையாடி வள்ளியம்மை நினைவகம்
24. தமிழ்த்தாத்தா உ.வே.சா நினைவு இல்லம்
25. கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்
26. குன்றக்குடி அடிகளார் மணிமண்டபம்
27. மருதுபாண்டியர் நினைவு மண்டபம்
28. தியாகசீலர் கக்கன் மணிமண்டபம்
29. தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லம்
30. பரிதிமாற் கலைஞர் நினைவு இல்லம்
31. பாவாணர் மணிமண்டபம்
32. காமராஜர் பிறந்த இல்லம்
33. காமராஜர் நூற்றாண்டு விழா மண்டபம்
34. பாரதியார் மணிமண்டபம்
35. மகாகவி பாரதியார் இல்லம் எட்டயபுரம்
36. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. இல்லம்
37. வீரன் அழகு முத்துக்கோன் மணிமண்டபம்
38. வீரன் சுந்தரலிங்கம் நினைவகம்
39. வீரன் வெள்ளையத்தேவன் நினைவகம்
40. உமறுப்புலவர் நினைவகம்
41. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. மணிமண்டபம்
42.பூலித்தேவன் நினைவு மாளிகை
43. கால்டுவெல் நினைவு இல்லம்
44. ஜீவா மணிமண்டபம்
45. காந்தி நினைவு மண்டபம்
46. காமராஜர் மணிமண்டபம்
47. செய்கு தம்பி பாவலர் நினைவு மண்டபம்
48. முத்து மண்டபம்
49. சுப்பிரமணியசிவா மணிமண்டபம்
50. தமிழிசை மூவர் மணிமண்டபம்
51. வீரர் கோபால் நாயக்கர் மணிமண்டபம்
52.ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மணிமண்டபம்
53. தியாகி சின்னமலை நினைவுச் சின்னம்
54. வாஞ்சிநாதன் மணிமண்டபம்
55. மார்ஷல் நேசமணி மணிமண்டபம்
56. வேலுநாச்சியார் மணிமண்டபம்
57.தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம்
58. வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம்
59.சிங்காரவேலர் மணிமண்டபம்
60. வீரன் ஒண்டி வீரன் மணிமண்டபம்
61. மனுநீதிச்சோழன் மணிமண்டபம்
63. இராஜாஜி மண்டபம்
64. கலைவாணர் அரங்கம்
65. வெள்ளையனே வெளியேறு இயக்க பொன்விழா நினைவுத்தூண்
66. சுதந்திரப் பொன்விழா நினைவுத்தூண்
67. குடியரசு பொன்விழா நினைவுத்தூண்
68. சிப்பாய் புரட்சி நினைவுத்தூண்
69. காமராஜர் நூற்றாண்டு விழா நினைவுத்தூண்
70. வீரத்தாய் குயிலி நினைவுச்சின்னம்
- இவ்வளவும் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டு சென்னை முதல் கன்னியாகுமரி வரை கம்பீரமாகக் காட்சி தரும்போது பெரியாரும் அண்ணாவும் மட்டும் அவர்கள் கண்ணுக்கு உறுத்துகிறது.
இவை காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்டதா திராவிட ஆட்சியில் அமைக்கப்பட்டதா என்பதை அந்த மானமுள்ளவன் கண்டுபிடித்துச் சொன்னால் தமிழர் இனமானம் பெறலாம்!

கட்டுமரம் எங்களுக்கு மட்டுமான எண்டர்டைன்மெண்ட்

கருணாநிதி நிலைமை பார்த்து ஐரோப்பா வாழ் டுமீலர்கள் கொண்டாடுதுகள். என்னமோ இந்தியத்தமிழன் தான் இவங்கள கொன்ன மாதிரி.
நீங்களே சண்ட போட்டுக்கிட்டீங்க, இன்னைக்கு அடிச்சுப்போம் நாளைக்கு சேந்துப்போம் இது சகோதர யத்தம்னு சொல்லிக்கிட்டீங்க. இப்ப பழிய தூக்கு எங்க மேல போட்றீங்க.
மலையகத்தமிழர்கள மனுசனா கூட மதிக்காத கூட்டம்,
சிங்களன் கூட சேர்ந்து இந்திய தமிழர்களை விரட்டின கூட்டம்.
பிரபாகரன்/வி.பு.களுக்கு கருணாநிதி/திமுக ஆயிரமாயிரம் மடங்கு தேவல. குண்டடிபட்டு சாகுறதுக்கு/குடும்பத்தோட அகதியா வாழ்றதுக்கு, உள்ளூர்ல குடும்பத்தோட நிம்மதியா வாழ்ந்துட்டு லஞ்ச/ஊழல சகிச்சுக்கலாம்.
உங்க ரத்த/இன வெறியால நாங்க இழந்தது ஒரு (முன்னாள்) பிரதமர், 1200 ராணுவ வீரர்கள், பல அப்பாவி பொதுமக்கள்.
இலங்கைல இருக்குற மிச்சசொச்ச தமிழனாவது நிம்மதியா இருக்கணும்னு நெனைங்கடா. அவங்கள மொதல்ல படிக்க வைங்க, அப்றமா தமிழ்நாட்ல அரசியல் மாற்றம் கொண்டு வரலாம்.
ஒரு கசப்பான உண்மை, நீங்க திட்ற இதே கருணாநிதி இலங்கைல பொறந்திருந்தா, நீங்க இன்னைக்கி அகதியா திரிய வேண்டிய அவசியமில்ல. சிங்கள-தமிழன் பிரச்சினை வேற மாரி டீல் ஆகிருக்கும்.
ஒன் லைன் மெஸேஜ்: கட்டுமரம் எங்களுக்கு மட்டுமான எண்டர்டைன்மெண்ட்.

கலைஞர் இல்லாவிட்டால் பிரபாகரன் செத்திருக்கமாட்டான் : அங்கிள் சைமனின் தும்பிகள்

கலைஞர் இல்லாவிட்டால் பிரபாகரன் செத்திருக்கமாட்டான் : அங்கிள் சைமனின் தும்பிகள்
அடேய், அரை மண்டைகளா
திராவிட எழுச்சியும் அது கொடுத்த ஆதரவுமே பிரபாகரனை துப்பாக்கி தூக்க வைத்தது
கலைஞரும் அவரின் திராவிட எழுச்சியும் இல்லாவிட்டால் பிரபாகரன் 1970களின் கடைசியிலே செத்திருப்பான், மூட்டை பூச்சியினை நசுக்குவது போல் நசுக்கி இருப்பார்கள்
அவனுக்கு அடைக்கலம் கொடுத்து காத்ததே கலைஞரின் திராவிட எழுச்சி தமிழகம்தான்.
1989ல் அமைதிபடையிடம் இருந்து பிரபாகரன் உயிரை காத்ததே கலைஞர்தான்
பிரபாகரனுக்கு 20 வருடம் உயிர்பிச்சை வழங்கியதே கலைஞர்தான், அதன் பின்னும் திருந்தாத மடையன் பிரபாகரன் மொத்தமாய் அழிந்தான்
திராவிட எழுச்சியும் அது கொடுத்த ஆதரவுமே பிரபாகரனை துப்பாக்கி தூக்க வைத்தது
கலைஞரும் அவரின் திராவிட எழுச்சியும் இல்லாவிட்டால் பிரபாகரன் 1970களின் கடைசியிலே செத்திருப்பான், மூட்டை பூச்சியினை நசுக்குவது போல் நசுக்கி இருப்பார்கள்
1989ல் அமைதிபடையிடம் இருந்து பிரபாகரன் உயிரை காத்ததே கலைஞர்தான்
பிரபாகரனுக்கு 20 வருடம் உயிர்பிச்சை வழங்கியதே கலைஞர்தான், அதன் பின்னும் திருந்தாத மடையன் பிரபாகரன் மொத்தமாய் அழிந்தான்

தமிழகத்திற்கு பிரபாகரன் தாயாரை வரவிடாமல் தடுத்தது யார்?

தமிழகத்திற்கு பிரபாகரன் தாயாரை வரவிடாமல் தடுத்தது யார்?
இந்தியாவில் சிகிச்சை பெற பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் விரும்பினார். இதற்காக முறையான விசாவுடன் சென்னைக்கு வந்த அவரை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் மனிதாபிமானம் சற்றும் இல்லாமல் விமானத்திலிருந்து கூட இறங்க விடாமல் தடுத்து திருப்பி மலேசியாவுக்கே அனுப்பி விட்டனர்.
ஏன் தடுக்கப்பட்டார்?
பிரபாகரனின் பெற்றோர்கள் திருச்சியிலிருந்து இலங்கை திரும்பியிருந்த நிலையில், 2003 ஆம் அண்டு மே மாதத்தில், அப்போதைய அதிமுக அரசு, அவர்களுக்கும் தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புக்களுக்கும் இருந்த தொடர்பின் காரணமாக அவர்கள் மீண்டும் இந்தியா வர அனுமதிக்கப்படக்கூடாது என மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதியிருந்தது.
அந்த அடிப்படையில் மத்திய அரசு பிரபாகரன் பெற்றோர் பெயர்களை இந்தியா வர தடைசெய்யப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது.
அதனால்தான் திருப்பி அனுப்பப்பட்டார்
தங்களின் அரசியல் லாபம் கருதி தமிழகத்தில் இருந்த தமிழ் தேசியவாதிகள்
பார்வதி அம்மாள் வருகையை ரகசியமாக வைத்திருந்தனர்.
அவர் வந்தது இரவு 10.45
கலைஞர் நண்பர் ஒருவர் மூலம் இரவு 12 மணிக்கு தகவல் கலைஞருக்கு கிடைக்கிறது. கலைஞர் உடனே விமான நிலைய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாக கலைஞருக்கு சொல்லப்படுகிறது.
இதுதான் நடந்தது
நாடாளுமன்றத்தில் பார்வதிஅம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட பிரச்சினை திமுகவாலேயே எழுப்பப்பட்டது
முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு பார்வதி அம்மாள் பிரச்சினை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை, தவிரவும் குற்றப் பின்னணி இல்லாத அவருக்கு, மருத்துவ சிகிச்சைக்காக விசா வழங்கப்பட்டும் அவர் திருப்பி அனுப்பப்பட்டது ஏன் என்று வினவினார்
முதல்வர் கலைஞர் சட்டசபையில் அரசுக்குத் தெரிவிக்காமல் பார்வதி அம்மாள் வந்து விட்டார் அவருக்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என்றார். அதன்படி மத்திய அரசுக்கும் கடிதம் எழுதினார்.
இதையடுத்து நிபந்தனைகளுடன் பார்வதி அம்மாள் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி அளித்தது. இதை சட்டசபையில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
பார்வதி அம்மாள் பாதுகாப்பு கருதி, அரசின் அரவணைப்பில் அந்த அம்மையார் அரசு குறிப்பிடுகிற மருத்துவமனையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அரசு செலவில் அவர்கள் சிகிச்சை பெற வேண்டும் என்பதுதான் அரசு கூறியிருந்த நிபந்தனை.
ஆனால் மத்திய அரசின் நிபந்தனையுடன் கூடிய சிகிச்சை வாய்ப்பை பார்வதி அம்மாள் தரப்பு நிராகரித்து விட்டது. திடீரென மலேசியாவிலிருந்து பார்வதி அம்மாள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கேள்விகள்
1) தமிழக முதலமைச்சருக்கு பார்வதி அம்மாள் வருகையை முன் கூட்டியே தெரிவிக்காமல் மறைத்தது யார்? ஏன்?
2) பார்வதி அம்மாள் வருகையே முதலமைச்சரிடம் தெரிவிக்காமல் அவர் பார்வதி அம்மாள் வருகையை தடுத்ததாக எப்படி கலைஞரை குற்றம் சாட்டுகிறீர்கள்?
3) விமான நிலையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது மாநில முதல்மந்திரியால் எப்படி ஒரு பயணியின் இந்திய வருகையை தடுக்க முடியும்?
4) பிரபாகரன் பெற்றோர் இந்திய வருகைக்கு தடை வாங்கிய ஈழத்தாய் ஜெயலலிதாவை குறை சொல்லாமல் கலைஞரை குறை கூறுவது ஏன்?
உண்மை என்னவென்றால் பார்வதி அம்மாளை வரவழைத்து அதன் மூலம் அரசியல் லாபம் பார்ப்பதுடன் வசூலிலும் இறங்கி கூத்தடிக்க நினைத்தனர் தமிழ் தேசியவியாதிகள்.
அது நடக்கவில்லை என்றவுடன் கலைஞர் மீது பாய்ந்து பிராண்டுகிறார்கள்

கற்பு என்பது பெண்களின் தொடைஇடுக்கில் இருக்கிற சதைகளில் தான் இருக்கிறது...

"தனது கடந்த காலத்தை அறிந்து தன்னை விரும்பி ஏற்றுக்கொண்டால் திருமணத்திற்கு தயார்"

என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறிய கருத்தை தூக்கிக்கொண்டு "ஸ்ரீரெட்டிக்கு வாழ்க்கை கொடுக்க எந்த பெரியாரிஸ்ட்டாவது இருக்கீங்களா"ன்னு மானத்தமிழ் புள்ளைங்க குறுக்கா மறுக்கா ஓடீட்டு இருக்காங்க..

அடேய் டம்ளர் பயலுகளா.. இதெல்லாம் பெரியாரிஸ்ட்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லைடா.. மனம் ஒத்துப்போய் இருவரும் விரும்பினால் அது யாராக இருந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள எந்த பெரியாரிஸ்ட்டும் தயங்கியதில்லை.. இங்கே இருவரின் மணம் ஒத்துப்போதல்தான் முக்கியம்.. மத்த எந்த கருமாந்திரமும் தேவையே இல்லை..

திராவிடர் இயக்கத்தில் சாதி மாறி திருமணம் முடித்தல், விவாகரத்து பெற்றோரை திருமணம் முடித்தல், விதவையை திருமணம் முடித்தல், குழந்தை இருந்தாலும் பிரச்சனையில்லை என்று சொல்லி திருமணம் முடித்தல் போன்ற நிகழ்வுகளெல்லாம் சர்வ சாதாரணம்பா..

நானே கணவனை இழந்த பெண்ணைத்தான் திருமணம் முடித்திருக்கிறேன்.. இதெல்லாம் கற்பு என்பதை புனிதமாக கருதி பெண்களை ஒடுக்கி நடக்கும் மூடர்களிடம் போய் சொல்., கற்பு என்பதை வெங்காயமாக பார்க்கும் எங்களிடம் சொல்லாதே..

கற்பு என்பது பெண்களின் தொடைஇடுக்கில் இருக்கிற நூறுகிலோ கிராம் சதைகளில் தான் இருக்கிறது என்று நம்ம மானத்தமிழ்ப் பிள்ளைகள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்...

கற்புங்கிறது மூளை என்ற கொழுகொழு சதையில்கூட இல்லை..அது எண்ணத்தில், சிந்தனையுல் இருக்கிறது என்பது நம்ம டம்ளர்ஸ்க்கு தெரியாது..
பெரியாரிஸ்டுகளையும் கம்யூனிஸ்டுகளையும் சந்தடிசாக்கில் கேவலப்படுத்த எடுக்கிற முயற்சிகள் தேல்வியில் முடியும் என்பதறியாத பாலகர்கள்..
முப்பாட்டன் முருகனுக்கு நாக்கில் அலகு குத்தி, காவடி எடுக்கிற கோஷ்டிகள்தானே தமிழர் பாய்ஸ்..

பெரியாரிஸ்டுகளுக்கு இன்று மூன்று விதமான எதிரிகள் இருப்பதாகத் தெரியவருகிறது

பெரியாரிஸ்டுகளுக்கு இன்று மூன்று விதமான எதிரிகள் இருப்பதாகத் தெரியவருகிறது.
1.RSS/இந்து மகா சபை, இந்துமக்கள் கட்சி, VHP போன்ற ஹிந்துத்துவ அமைப்புகள்..இவர்கள் ஈவெரா இந்து விரோதி,பகுத்தறிவுவாதியல்ல..குதர்க்கம் பேசுகிற பெரியாரின் தொண்டர்கள் உங்கள் மனதை புண் படுத்தவே உங்கள் கடவுளை, மதத்தை இழிவாக பேசுகிறார்கள் என்று தூண்டிவிட்டு பெரியாரியத்தை வீழ்த்தி ஹிந்துவாவை அமல்படுத்த துடிக்கும் நேரடி எதிரிகள்..
2. தமிழ்த்தேசியவாதிகள்..இவர்கள் வந்தேறி வடுகர்களால், இதர இனத்(!)தவர்களால் குறிப்பாக தெலுங்கர்கள், கன்னடர்களால் தமிழர்களின் மொழி வீழ்த்தப்பட்டது..வளம் சுரண்டப்பட்டது.கலை ,இலக்கியம் கலாச்சாரம் அழிக்கப்பட்டது,தமிழர்கள் தெலுங்கர்களால் அடிமையாக்கப்பனர் என்றெல்லாம் பேசுகிற மறைமுக இந்துத்துவவாதிகள்..பெரியாரும், கலைஞரும் மட்டுமே கடந்த இரண்டாயிரமாண்டுகளாக நடக்கிற தமிழர்களின் அனைத்து அவலங்களுக்கும் காரணம் என்பவர்கள்..
3.தலித்தியம் பேசுகிறவர்கள், முரட்டு அம்பேத்கர் பக்தர்கள் ,தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் ..
இவர்களும் தமிழ்த்தேசியவாதிகளின் வழித்தோன்றல்கள்தான்..
தலித்களின் எதிரி சூத்திர்களும், அவர்களின் தலைவர் பெரியாரும் ,அவரது தொண்டர்களுமே தலித்களின் அத்தனை துன்பங்களுக்கும் காரணம் என்பவர்கள்..
இவர்களில் கிறிஸ்தவம் தழுவிய தலித்கள் இந்துத்துவ ஆசாமிகளுக்கொப்பானவர்கள்..பெரியார் மீது அவ்வளவு வன்மம் கக்குபவர்கள்..காரணம் அவ்வளவு கிறிஸ்தவ மத போதையில் கட்டுண்டு கிடப்பவர்கள்..பாதிரியாரின் கைப்பாவைகள்..
பெரியாரிஸ்டுகள் கடவுள் ,ஜாதி, மத சடங்கு ,சாஸ்திரங்களில் நம்பிக்கையற்றவர்கள்..ஜாதிமறுப்பு, சமத்துவம் இவற்றுக்காக களப்பணி செய்பவர்கள்..
பதவி, பணம் இவற்றை எதிர்பார்த்து பொதுகாரியங்களில் இறங்குபவர்களல்ல.
சேரிக்குள் வந்து சோறு சாப்பிடுவதெல்லாம் புரட்சியா? சேரி மக்களை ஊருக்குள் கூட்டிப்போய் அமர வைத்து உபசரிப்பதுதானே புரட்சி ?
விமர்சனம் வருகிறது..
கருப்புச்சட்டை பெரியாரிஸ்டுகள் அதை செய்ய தயங்குபவர்களா?
விதவை மணம், சடங்குமறுப்பு, மத மறுப்பு ,கடவுளையே மறுக்கிற பெரியார் தொண்டர்கள் ஜாதியைமட்டும் கடைபிடிப்பார்கள் என்று நம்புகிறீர்களா?
இந்த ஜாதிக்காரர் சமைத்தால் சாப்பிட மாட்டோம் என்பது உங்கள் சனாதனம், ஜாதி கவுவமானால் அதே ஜாதிக்காரர் வீட்டுக்குப்போய் அவர்கள் வீட்டுப் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வருவது தான் எங்களுக்கு கவுரவம், சமத்துவம் என்பது எதிர் கொள்கை ,புரட்சி இல்லையா ?
தலித்களுக்குப் பெண் கொடுப்பீர்களா? தலித்களை உங்கள் வீட்டுக்குள் அனுமதிப்பீர்களா ?
ஜாதி பற்றாளர்களுக்கும் பெரியாரிஸ்டுகளுக்கும் வித்தியாசமில்லை என்று நினைக்கிறீர்களா ?
இருவரும் உங்கள் பார்வையில் ஒன்றா ?

தமிழ்த்தேசியவியாதிகள் மாபொசியின் மிச்சசொச்சங்கள், தெருப்பொறுக்கிக்கூட்டம்

அன்றைய தனித்தமிழ் இயக்கத்தவரான மறைமலையடிகள், திருவிக, பெருஞ்சித்திரனார் ,தேவநேயப்பாவாணர் போன்றவர்கள் உண்மையான தமிழ் அறிஞர்கள்..
இன்றைய தமிழ்த்தேசியவியாதிகள் மாபொசியின் மிச்சசொச்சங்கள்..
பொறுக்கித்தின்பதைத்தவிர இவர்கள் கொள்கை என்ன?
திமுகவினர் பேசிப்பேசி ஆட்சியைப்பிடித்து பதவி, பணம் சம்பாதித்துவிட்டனர் ..நாமும் அதே பாணியில் பேசி,கத்தி ஆட்சியைப்பிடிப்போம் ,பணம் அள்ளுவோம் என்பதே கொள்கையாக செயல்படுகிறார்கள்..
எல்டிடியி தலைவர் பிரபாகரன் படத்தை இவர்கள் வைத்துக்கொண்டு செய்கிற காமெடிக்கு அவர் உயிரோடு இருந்தால் என்ன நடக்கும் ?
திமுகவினர் அதற்கு முன்பு ஒரு உண்மையான கொள்கை கோட்பாடுகள் கொண்ட கட்சியில் இருந்தார்கள்..செயல்பட்டார்கள்..பிரிந்து வந்தே தேர்தலில் ஈடுபட்டார்கள்..
பெரியாரிஸ்டுகளின் ஈழத்திற்கான கண்டணக்கூட்டத்தில் மேடையேறி மற்ற தலைவர்கள் பேசியதை உரக்க கத்திவிட்டு தனிகடைபோட்டு இவர்கள் செய்யும் பிழைப்புவாதம் சகிக்கவில்லை...
தமிழ்த்தேசியவியாதிகளிடம் மசாலாவும் கிடையாது,..கொள்கையும் கிடையாது..அரசியல் நாகரீகமும் கிடையாது..
தெருப்பொறுக்கிக்கூட்டமிது..

இந்தக் கருணாநிதியைப் போல விபரம் இல்லாத மனிதர் இந்தியாவிலேயே இருக்க முடியாது - ஐடி

*இந்தக் கருணாநிதியைப் போல விபரம் இல்லாத மனிதர் இந்தியாவிலேயே இருக்க முடியாது.*
ஐடிக்கு என தலைமைச்செயலகத்தில் தனித்துறையை 1998ல் உருவாக்கினார்.
முதலமைச்சர் தலைமையில் ஐடி டாஸ்க் போர்ஸ் உருவாக்கினார்.
இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக ஐடி பாலிசியை தமிழகம் தான் உருவாக்கியது.
டாக்டர் ஆனந்தகிருஷ்ணனை இ கவர்னன்ஸ் ஆலோசகராக நியமித்துக் கொண்டார்.
அரசுத்துறையை கம்யூட்டர் மயமாக்க முனைந்தார்.
பள்ளிக் கல்வியில் தகவல் தொழில் நுட்பத்தை இணைத்தார்.
தமிழ் மென்பொருளை உருவாக்கிப் பரப்ப முனைந்தார்.
340 கோடியில் டைட்டல் பார்க்கை 2000ம் ஆண்டில் கட்டினார்.
கிண்டி முதல் கேளம்பாக்கம் வரை சைபர் கேரிடார் அமைக்க காரணம் ஆனார்.
டைட்டல் பார்க்கில் மின்சாரம் தடைபடாமல் இருக்க துணைமின்நிலையம் அமைத்தார்.
நாட்டிலேயே முதன்முதலாக தமிழ்நாடு மென்பொருள் நிதி உருவாக்கி மென்பொருள் முனைவோருக்கு முதலீட்டு நிதி கொடுத்தார்.
சிறுசேரியில் வன்பொருள்/ மென்பொருள் பூங்கா அமைத்தார்.
தரமணி முதல் பழைய மாமல்லபுரம் வரையிலான சாலையை ஐடி ஹைவே ஆக்கினார்.
வேர்ல்ட் டெல் நிறுவனத்துடன் பேசி சமுதாய மையங்கள் தமிழகம் முழுக்க அமைக்கத் திட்டமிட்டார்.
பூமிக்கடியில் ஆப்டிக் ஃபைபர் கேபிள் பதித்திடத் தனிக் கொள்கை வகுத்த மாநிலம் தமிழகம்.
கடலுக்கடியில் ஃபைபர் கேபிள் அமைக்கும் பேச்சைத் தொடங்கினார்.
தமிழ்நெட் 1999 மாநாடு நடத்தினார்.
யுனிக்கோட் கன்சோர்டியத்தில் இணைந்த முதல் இந்திய மாநிலம் தமிழகம்.
உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கினார்.
அரசு மேனிலைப்பள்ளிகளில் கணினி மையம் உருவாக்கினார்.
கல்லூரிகளிலும் கணினி பயிற்சி தொடங்கினார்.
தமிழ் இணைய ஆய்வு மையம் அமைப்பு.
டானிடெக் அமைத்தார்.
1996க்கு முன்னால் 34 ஐடி நிறுவனம் தான் தமிழ்நாட்டில் இருந்தது. 96 - 2000 காலக்கட்டத்தில் 632 நிறுவனங்கள் வந்தது.
94ம் ஆண்டு 12 கோடியாக இருந்த மென்பொருள் ஏற்றுமதி 2000ம் ஆண்டில் 1900 கோடி ஆனது.
ஒரே இடத்தில் அனைத்து தொழில்களும் நடக்கும் சிப்காட் உருவாக்கியவர் இவர்.
ராணிப்பேட்டை/ ஓசூர் /ஶ்ரீபெரும்புதூர்/ இருங்காட்டுக்கோட்டை/ கும்மிடிப்பூண்டியில் தொழில்வளாகம் அமைத்தார்.
ஹூண்டாய் வந்தது.
மிட்சுபிசி வந்தது.
ஃபோர்டு வந்தது.
சென்னை இந்தியாவின் டெட்ராய்டு என்று பைனான்சியல் எக்ஸ்பிரஸ் எழுதியது.
இந்தக் கருணாநிதிக்கு இதெல்லாம் தேவையா? யாராவது அவரிடம் கேட்டார்களா? அனுபவிப்பவர்களாவது நன்றி சொல்கிறார்களா?

ஆமைக் கறியிலிருந்து அவுஸ்திரேலியாக் கப்பல் வரை!

ஆமைக் கறியிலிருந்து அவுஸ்திரேலியாக் கப்பல் வரை!
இன்றைக்கு சமூக வலைத்தளங்களிலும் இணையங்களிலும் பேசப்படுகின்ற ஆமைக் கறிக் கதை ஒன்றும் புதிது இல்லை. என்னுடைய ஞாபகப் பதிவுகள் சரியாக இருந்தால், இந்தக் கதை 2006, 2007களில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அன்றைக்கு அது ஆமைக் கறி அல்ல. ஈழத் தமிழர் வழக்கில் „ஆமை இறைச்சி'.
சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமிழ் இணைய ஊடகங்கள் திடீர் என்று அதிகரித்தன. இந்த ஊடகங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சில நோக்கங்களை கொண்டு செயற்பட்டன. அதில் முக்கிய நோக்கமாக தலைவர் பிரபாகரனை உல்லாச வாழ்க்கை வாழ்பவராக சித்தரிப்பது என்பது இருந்தது.
ஏழைப் பிள்ளைகள் களத்தில் சாக, தலைவர் பிரபாகரன் நீச்சல் தடாகத்துடன் கூடிய மாளிகையில் உல்லாச வாழ்க்கை வாழ்கிறார் என்று இந்த ஊடகங்கள் தொடர்ச்சியாக எழுதின. அப்படியே தலைவர் பிரபாகரன் அமை இறைச்சி விரும்பி உண்கிறார் என்றும், அதற்காக தாய்லாந்தில் இருந்து ஆமை இறைச்சி கொண்டுவரப்படுகிறது என்றும் எழுதின.
ஆமை இறைச்சி கதையைப் பரப்பி தலைவர் பிரபாகரனை கேலியும் கிண்டலும் செய்வதற்கு புலி எதிர்ப்பாளர்கள் முற்பட்டார்கள். கவிதைகள், கேலிச் சித்திரங்கள் எல்லாம் வரைந்தார்கள். „ஆனந்தசங்கரி புளியம்பொக்கணையில் உடும்பு இறைச்சி தின்கிறவர்' என்று அன்ரன் பாலசிங்கம் தனது உரை ஒன்றில் கேலி செய்தததற்கு பதிலடியாகவும் ஆமை இறைச்சிக் கதையை புலி எதிர்ப்பாளர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.
ஆமை இறைச்சிக் கதை என்பதே தலைவர் பிரபாகரனின் மாண்பைக் குறைப்பதற்காக புலி எதிர்ப்பாளர்களால் பரப்பி விடப்பட்ட ஒன்று. தலைவர் பிரபாகரன் தனது வாழ்நாளில் அதிக காலம் காட்டில் நின்று போராடியவர். இதன்போது உணவு கிடைப்பதே பெரும் பாடாக இருந்த காலங்களை அவர் அனுபவித்திருக்கிறார். கிடைத்தவற்றை உண்டும் எதுவும் கிடைக்காத போது பட்டினியாகவும் வாழ்ந்திருக்கிறார்.
இப்படியான ஒரு போராளியாகவும், புரட்சியாளராகவும் தலைவர் பிரபாகரன் தமிழர் மனங்களில் நிறைந்திருந்திருப்பதை பொறுக்க முடியாமல், புலி எதிர்ப்பாளர்கள் அவரை ஒரு உணவுப் பிரியராகவும் உல்லாச வாழ்க்கை வாழ்பவராகவும் காட்டுவதற்கு படாத பாடு பட்டுக் கொண்டிருந்தார்கள்.
இப்படியான ஒரு நாளில்தால் இந்தியாவில் இருந்து 14000 மெற்றிக்தொன் அரிசி ஏற்றிக் கொண்டு தென்னாபிரிக்கா நோக்கி பர்ஹா 3 என்கின்ற ஜோர்தானியச் சரக்குக் கப்பல் ஒன்று புறப்பட்டது. வழியில் முல்லைத்தீவுக்கு அண்மையில் இயந்திரக் கோளாறு எற்பட்டு கப்பல் தத்தளிக்கத் தொடங்கியது. உதவிக்கு விரைந்த கடற்புலிகள் அதில் இருந்த 25 மாலுமிகளையும் காப்பாற்றி, கப்பலையும் கரை சேர்ந்தார்கள். தமது உயிரைக் காப்பாற்றியதற்காக மாலுமிகள் விடுதலைப் புலிகளுக்கு நன்றியை தெரிவித்தார்கள். அவர்கள் பத்திரமாக அவர்களுடைய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த மனிதாபிமான நடவடிக்கையும் அன்றைக்கு புலி எதிர்ப்பாளர்களால் கடற்கொள்ளையாகவும், வழிப்பறியாகவும் வர்ணிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் அத்துமீறி கப்பலை மறித்து, தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இழுத்து வந்தது போன்றுதான் அன்றைக்கு புலிகளுக்கு எதிரான இணைய ஊடகங்கள் எழுதின.
2009இற்குப் பின்னர் புலிகளுக்கு எதிரான இணைய ஊடகங்களில் பெரும்பாலானவை காணாமல் போயின. மிஞ்சியுள்ள ஊடகங்களும் தமது பாதையை பெருமளவில் மாற்றிக் கொண்டன. போராட்டத்திற்கு தன்னையும் தன் குடும்பத்தையும் தலைவர் பிரபாகரன் அர்ப்பணித்து விட்ட பிறகு, இனியும் அவரைப் பற்றி அவதூறு எழுத வேண்டாம் என்று அவர்கள் சிந்தித்திருக்கலாம். அல்லது புலி ஆதரவாளர்கள் தமக்குள்ளேயே மோதிக் கொள்கின்ற நிலையில் தமது வேலை மிச்சம் என்று நினைத்தும் ஒதுங்கியிருக்கலாம்.
ஆனால் யாருக்கோ இது பொறுக்கவில்லை. திடீரென்று „28 கிலோ ஆமைக் கறி சாப்பிட்டேன்' என்றபடி சீமான் காட்சி தந்தார். தலைவர் பிரபாகரனை உண்மையாக நேசிப்பவர்கள் ஒருகணம் திடுக்கிட்டுத்தான் போனார்கள். சீமானின் நிகழ்ச்சி நிரல் எது என்று தடுமாறிப் போனார்கள். ஆயினும் சுதாரித்துக் கொண்டார்கள். இந்தக் கதையை சீமானை நோக்கியே திருப்பி விட்டு, அவரைப் பொய்யனாக்கி கேலி செய்து இந்தச் சதியை முறியடித்தார்கள். சற்றும் சளைக்காத சீமான் கப்பல் கதையோடு வந்தார். நல்ல வேளையாக 40000 தொன் என்றும் அவுஸ்திரேலியாக் கப்பல் என்றும் உளறினார். ஆகவே இம்முறை இலகுவாக முறியடிக்க முடிந்தது.
விடுதலைப் புலிகள் மீதும், தலைவர் பிரபாகரன் மீதும் விமர்சனங்கள் வைப்பது வேறு. ஆனால் ஒரு உன்னதாமான அர்ப்பணிப்பு மிகுந்த போராட்டத்தை நடத்திய தலைவரை உல்லாச வாழ்க்கை வாழ்ந்தவராக சித்தரித்து அவருடைய மாண்பைக் குலைப்பது வேறு.
தலைவர் பிரபாகரன் ஓரு போராளி. புரட்சியாளர். மாபெரும் தலைவர். உண்ணாமல், உறங்காமல் தமிழர்களுக்காக போராடியவர். கையை தலையணையாய் வைத்து அவர் உறங்கிய காலங்கள் அதிகம். உண்ணாமல் இருந்த காலங்கள் அதிகம். அதே வேளை அவருடைய போராட்ட வாழ்வில் அவர் மனநிறைவாய் ரசித்து ருசித்து உண்ட நாட்களும் நிச்சயம் இருந்திருக்கும்.
ஆனால் வரலாற்றில் எதைப் பதியப் போகிறோம் என்பதுதான் இங்கு கேள்வி. கொளத்தூர் மணி அண்ணன் சொன்னது போன்று, தட்டை கையில் ஏந்தி உண்கின்ற ஒருவராக தலைவர் பிரபாகரனை எதிர்கால சந்ததியினர் படிக்க வேண்டும் என்பதே அவரை உண்மையாக நேசிப்பவர்களின் விருப்பமாக இருக்கிறது.

கலைஞர் எல்லாவற்றையும் சரியாகக் கணக்கிட்டு, தன்னால் முடிந்ததை முயன்றார்

கலைஞர் 2009இல் மேலும் வீரியத்துடன் போராடியிருக்க வேண்டும், போராடியவர்களையும் கிளர்ச்சி செய்ய அனுமதித்திருக்க வேண்டும் என்று சொல்பவர்கள் அன்றைய நிலைமையை இலகுவாக மறந்து விடுகிறார்கள். அன்றைய நிலைமையை பார்க்கு முன் இன்றைய நிலைமையைப் பார்ப்போம்.
அண்ணன் சீமான் ஊர் ஊராகச் சென்று மானத் தமிழ்ப் பிள்ளைகளுக்கு பிரபாகரனின் வீரத்தை ஊட்டியிருக்கிறார். உணர்ச்சியோடு இலட்சக் கணக்கான தம்பிகள் ஏகே 74 ஏந்தத் தயாராக நிற்கிறார்கள். எட்டு வழிச் சாலை அமைந்தால் எட்டுப் பேரை வெட்டுவேன் என்று மன்சூர் அலிகான் அரிவாள் எந்தி நிற்கிறார். சுங்கச் சாவடிகளை அடித்துடைத்து விட்டு வேல்முருகன் வேலேந்தி நிற்கிறார்.
இப்படியான நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமியின் காட்டாட்சி தமிழ்நாட்டில் இனிதே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தூத்துக்குடியில் தமிழர்கள் மீது பயங்கரவாதப் படுகொலை அரங்கேறியது. எட்டுவழிச் சாலை ஏற்பாடுகள் புயல் வேகத்தில் நடக்கின்றன. தமிழர்களுக்கு எதிரான அனைத்துத் திட்டங்களும் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படுகின்றன.
இதை எதிர்த்துப் போராடப் போகிறோம் என்று மார்தட்டியவர்கள் இன்றைக்கு சில வழக்குகளைப் போட்டதும் ஓடி ஒளிந்து விட்டார்கள். எட்டுப் பேரை வெட்டுவேன் என்ற மன்சூர் அலிகான் சிறைவாசலில் நின்றபடி, 'இது நல்ல திட்டம் என்றால், நானும் கல் தூக்கி உதவுவேன்' என்று பம்மினார். சீமானின் சத்தத்தையே காணவில்லை. உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
அடி வாங்கவும், சிறை செல்லவும் இன்றைக்கும், அன்றைக்கும் பெரும்பாலானவர்கள் தயாராக இல்லை என்பதுதான் உண்மை. இவர்களை எல்லாம் நம்பி, 2009இல் கலைஞர் டெல்லிக்கு எதிரான கிளர்ச்சியில் இறங்கியிருந்தால், அதோ கதிதான்.
ஒரு காலம் இருந்தது. 1985இல் ஆண்டன் பாலசிங்கம் உட்பட மூன்று பேர் இந்திய அரசால் நாடுகடத்தப்பட்டார்கள். கலைஞர் ஆணையிட்டார். இலட்சக் கணக்கில் தமிழர்கள் வீதியில் இறங்கினார்கள். ரயில் நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். தமிழ்நாட்டில் எந்த ஊரிலாவது ரயில் ஓடினால் அந்த ஊரில் தமிழன் இல்லையென்று அர்த்தம்' என்று கலைஞர் முழங்கினார். இந்திய அரசு பணிந்தது. நாடுகடத்தல் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
இது எல்லாம் ராஜிவ்காந்தி படுகொலையோடு முடிந்து போனது. வெகுஜன ஆதரவு இப்படியான போராட்டங்களுக்கு இல்லாமல் போனது. உலகமயமாக்கலும் ஒருபக்கம் போர்க்குணம் கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கையை உலகம் முழுதும் குறைக்கத் தொடங்கியிருந்தது.
இப்படியான ஒரு நிலையில்தான் 2009 வருகிறது. சென்னையிலும், யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் பெரும்பாலான தமிழர்கள் தம்பாட்டில் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் கிளர்ச்சி செய்ய சில நூறு பேர் தயாராக இருந்தார்கள். பல இலட்சம் பேர் கிரிக்கட் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இந்திய அரசு ஈழத்தில் மூர்க்கமான போரை நடத்திக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டின் மீது பாயவும் அது தருணம் பார்த்துக் கொண்டிருந்தது. கலைஞர் வரம்பு மீறினால், அவருடைய ஆட்சியைக் கலைத்து, அவரையும் சிறையில் அடைத்து, திமுக என்கின்ற கட்சியையும் இல்லாமல் செய்து விடுகின்ற திட்டத்தை ஆரிய பார்ப்பனிய அதிகார வர்க்கம் கொண்டிருந்தது.
திமுகவின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு போனாலும், வெளியில் இருந்து கொண்டே மத்திய அரசாங்கத்தைக் காப்பாற்ற பகுஜன் சமாஜ், இடதுசாரிக் கட்சிகள் என்று பலர் தயாராக இருந்தார்கள். தன்னால் மத்திய அரசைக் கவிழ்க்க முடியாது என்பதையும் கலைஞர் உணர்ந்திருந்தார்.
மிகப் பலவீனமான நிலையில் சிறுபான்மை அரசாங்கத்தை தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருந்த கலைஞர் தன்னால் எவ்வளவு தூரம் செய்ய முடியுமோ, அவ்வளவு தூரம் முயன்றார். ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் முடியவில்லை.
ஈழத்தில் தலைவர் பிரபாகரன் எந்த ஒரு அடி பணிவுத் திட்டத்தையும் ஏற்க மறுத்து சண்டை செய்து கொண்டிருந்தார். ஈழத்தில் இழப்பதற்கு இனி ஏதும் இல்லை என்பதும் தனக்குப் பிறகு வருபவர்கள் தமிழர் உரிமையை கூறு போட்டு விற்று விடுவார்கள் என்பதும் அவருக்கு தெரிந்திருந்தது. ஆகவே இறுதி வரை அடிபணியாது எதிர்த்து நின்று அவர் சண்டையிட்டார்.
ஆனால் கோடிக் கணக்கில் தமிழர்கள் வாழ்கின்ற தமிழ்நாட்டில் இழப்பதற்கு நிறைய இருக்கின்றன. திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டை ஒரு முதன்மை மாநிலமாக ஆக்கியிருக்கின்றன. சமூகநீதியில் தமிழ்நாடு எடுத்துக் காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இங்கே 'எடுத்தேன், கவிழ்த்தேன்' என்று எந்த முடிவையும் எடுக்க முடியாது. இன்னும் போக வேண்டிய தூரமும் இருக்கிறது. விட்டுக் கொடுப்புக்களோடும், நிதானத்தோடும்தான் இலக்கை அடைய வேண்டியிருக்கிறது.
மூத்த அரசியல்வாதியான கலைஞர் எல்லாவற்றையும் சரியாகக் கணக்கிட்டு, தன்னால் முடிந்ததை முயன்றார். முடியாததை செய்யாது விட்டார். தடுக்க முடியாததை தடுக்காது விட்டார். தமிழீழத்தை அவரால் காப்பாற்ற முடியாமல் போனாலும் கூட, இந்திய வேட்டை நாய்களிடம் இருந்து தமிழ்நாட்டை கலைஞர் காத்தார்.

சிலோன் தமிழர்களும் நாம் பிணந்தின்னிகள் கட்சி'யின் ஆட்களும்

ஒருபக்கம் சில சிலோன் தமிழர்களும், சீமான் உள்ளிட்ட ஒட்டுமொத்த 'நாம் பிணந்தின்னிகள் கட்சி'யின் ஆட்களும் ஆபாச, வக்கிர வார்த்தைகளை கலைஞரை நோக்கி வீசுகிறார்கள். அந்த இழிபிறவிகளை எல்லாம் இடதுகையால் ஒதுக்கும் அதேவேளையில், இன்னொருபக்கம் ஈழப்போராட்டத்திற்கும் கலைஞருக்கும் இடையிலான வரலாற்று உறவை சரியான முறையிலே அறிந்த ஈழத்தமிழர்களும், ஆரம்பத்தில் திமுகவின்மேல் பழிபோட்டு பின்னர் உண்மையறிந்து தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ள ஈழத்தமிழர்களும், கலைஞரின் நடவடிக்கைகளால் நேரடியாக பயன்பெற்ற ஈழத்தமிழர்களும் கலைஞர் குணமடைய வேண்டும் என வாழ்த்துவதையும், தமிழகத் தமிழர்க்கு இணையாக நெஞ்சுருகுவதையும் காண முடிகிறது. அவர்களுக்கு கலைஞரின் கோடி உடன்பிறப்புகளிலே ஒருவனாக எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கு பத்மநாபா கொலையால் திமுக ஆட்சியை இழந்ததை குறிப்பிடவில்லை அதை தொடர்ந்து ராஜீவ் கொலையையும் அதன்பிறகான திமுகவின் வீழ்ச்சியையும் கண்ணால் கண்டவன். கலைஞர் எம்மாம் பெருமனிதன் 80க்கும் அதிகமான மீன்பிடி படகுகளை வாராவாரம் அனுப்பி அகதிகளை இலவசமாக கொண்டுவந்து சேர்த்தது திமுகவே.! அப்படி ஒரு படகில் நானும் இலவசமாக அகதியாய் வந்து பதினைந்து வருடம் அகதிமுகாமில் வளர்ந்தவன். அப்போ அகதிக்கு 57 பைசாவுக்கு அரிசியை அறிவித்தவர் கலைஞர்.! அந்த அரிசியை இன்றும் லட்சம் இலங்கை அகதிமக்கள் வாங்கிட்டு தான் இருக்கிறார்கள். இரண்டு லட்சம் பேர் அகதியாக இருந்த பொழுது 20 மெடிக்கல் சீட் 20 எஞ்சினிரிங் சீட் அறிவித்தவர் கலைஞர். ஜெயலலிதாம்மா காலம் அகதிமுகாம் ஜெயிலாக மாறும் கலைஞர்காலத்தில் ஒரு போலீஸ்காரன் கூட இருக்கமாட்டான் அகதிகள் கடற்கரையோரங்களில் மீன்பிடித்தொழிலுக்கு செல்வர் ஏதோ அவனவன் அவனவன் பாடு பார்ப்பான் அதெல்லாம் ஒரு காலம் இப்போ நெனைச்சுக்கூட பார்க்க முடியாது என்னவோ போங்க கலைஞர் காலத்தில் நான் மிகவும் சுதந்திரமான அகதியாய் இருந்தேன். அவர் எனக்கு தன்னாலான எல்லாவற்றையும் கொடுத்து கெளரவித்தார் எங்க ஊராளுங்களில் சிலர் மரியாதை தெரியாத பயலுக அவரை எழுந்தமானாத்துக்கு தூற்றுவார்கள் அவர்கள் புத்தி அவ்வளவு தான் தலைவர் கலைஞரை பற்றி கேட்கணும்னா பழைய அரசியல்வாதி தந்தை செல்வா அவர்களின் மகன் சந்திரகாசனைத்தான் கேட்கணும் இன்றுவரை மிக நெருக்கமாக இருப்பார். அந்த இரண்டு மணி நேர உண்ணாவிரதத்தை முடிக்க வைத்ததே சந்திரகாசன் தான். தலைவர் அந்த முடிவில் சொன்னது “ தந்தை செல்வாவின் மைந்தன் போர் முடிந்தது என்று சொல்கிறார் நான் அவரை நம்புகிறேன் போர் முடிந்த பின்னர் இந்த உண்ணாவிரதத்தைதொடர்வதில் அர்த்தமில்லை” என்றார்.!


நீ போட்ட extra பிட்டு...,

கிட்டு, சிட்டு, பொட்டு, ரஸித்தபிட்டு..!
படகில் போனேன் என்றதோடு நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “ஆமை ஓடு, சிங்களன் பட்டாசு சுட்டான், வானம் வானவில் வரவேற்பு போட்டது” என நீ போட்ட extra பிட்டு...,
“புலிகள் எனக்கு விருந்து வைத்தாங்க” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “28 கிலோ ஆமை கறி, ஆறுவகை ஏறால், ஆறுவகை நண்டு” என நீ போட்ட extra பிட்டு...,
“அண்ணனுடன் விருந்து உண்டேன்” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “அண்ணனுக்கும் எனக்கும் சாப்பாடு போட்டி நடந்தது” என நீ போட்ட extra பிட்டு...,
“அண்ணன் எனக்கு துப்பாக்கி சுட பழக்கினார்” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “முதலில் கைத்துப்பாக்கி எனவும், பிறகு AK74” எனவும் நீ மாற்றி மாற்றி போட்ட extra பிட்டு...,
“AK74 சுட்டு பழகினேன்” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “இந்தியாவிலேயே நீ தான் AK74 சுட்டு பழகிய ஒரே ஆளு, இதை போய் இந்தியாவிலே சொல்லு” என தலைவரே சொன்னார் என நீ போட்ட extra பிட்டு..
“அண்ணன் என்னை பார்த்து பேச தயங்கினார்” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “ஆங்கிலத்தில் பேசினால் தம்பி திட்டுவான் என பிரபாகரன் பயந்து தயங்கி நின்றார்” என நீ போட்ட extra பிட்டு...,
“என்னை தங்க வைத்ததால் இருவரை சுட்டு கொன்றனர்” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “முதலில் யாழ்ப்பாண மாணவர்கள்
எனவும் பிறகு எனக்காக அண்ணன் தவம் சுட்டு கொல்லப்பட்டார்” எனவும் நீ மாற்றி மாற்றி போட்ட extra பிட்டு...,
“அரிசி கப்பல்” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “40,000 டன் ஆஸ்திரேலிய அரிசி கப்பல்” என நீ போட்ட extra பிட்டு...,
“அங்கே தான் சுட்டு பழகினோம்” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “தலைவர் அந்த கப்பலை எனக்கு சுட்டு பழக கொடுத்தார்” என நீ போட்ட extra பிட்டு...,
“அனைவரையும் அரசியலில் வீழ்த்துவேன்” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “அனைவரையும் வெட்டுவேன், குத்துவேன், கொல்லுவேன், உயிரோடு வைச்சு கொளுத்துவேன்” என நீ போட்ட extra பிட்டு...,

நாம் தமிழர் கட்சியில் இருந்து முழுவதுமாக விலகிக்கொள்கிறேன் - செ பிரபாகரன் மற்றும் வேல்முருகன்...... திருப்போரூர் தொகுதி

நாம் தமிழர் கட்சியில் இருந்து  முழுவதுமாக விலகிக்கொள்கிறேன்.
இது அவசரத்தில் எடுத்த முடிவும் அல்ல..
கணக்கு கேட்டதாக பொய் குற்றச்சாட்டு சாட்டியும் என்னையும் (நகர செயலாளர் திருக்கழுக்குன்றம்) என் பகுதி தம்பி
வேல்முருகன் சீமானின் தம்பி
(நகர துணை செயலாளர்)தொகுதி பகிரி குழுவில் வேட்பாளரை கேட்காமல் இணைத்தற்காவும்
திருப்போரூர் தொகுதியில் இருந்து சூலை 7 தேதி என்னை நீக்கிவிட்டார் வேட்பாளர் யூசுப்..
இதை முகநூலில் பதிவிட்டதற்காக என்னையும் என் பகுதி தம்பியையும் கேவலமாகவும் எங்களை பற்றி தொகுதி பகிரி குழுவில் தவறாகவும் பதிவிட்டு கொண்டும் வருகிறார்
தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வருகிறது திருப்போரூர் தொகுதி செயலாளர் மோகன்ராஜ் எங்களுக்கு அலைபேசியில் கொலை மிரட்டலும் விடுக்கிறார் (அதற்கான ஆதாரங்களை பதிவு செய்தும் வைத்திருக்கிறேன்)
மேற்படி எங்கள் உயிருக்கு ஏதேனும் நடந்தால் அந்த இருவருமே முழு பொறுப்பு...
1.திருப்போரூர் தொகுதியில் கட்சியை வளர்பதற்கு எந்த ஒரு முயற்ச்சியையும் தொகுதி பொறுப்பில் இருப்பவர்கள் செய்வதில்லை..
2. 2016 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஒரே ஒரு கலந்தாய்வு மட்டுமே நடந்துள்ளது அதுவும் 17 உறுப்பிரை‌ மட்டுமே வைத்து
3. இந்த தொகுதியில் தொடர்ச்சியாக பழைய உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் புறந்தள்ளபடுகின்றனர்
மற்றும் கட்சியை விட்டு நீக்கபடுகின்றனர்.
4. இந்த தொகுதியில் கட்சியில் சேரும் போது பலருக்கும் தொகுதி துணை செயலாளர், நகர செயலாளர் , ஒன்றிய செயலாளர்
நகர மற்றும் ஒன்றிய தலைவர்கள் பொறுப்பும் முறை தவறி வழங்கப்படுகிறது இதனால் பழைய உறுப்பினர்கள் தொடர்ச்சியாக செயல்படாத நிலையில் கட்சியை விட்டு ஒதுங்கி கொண்டே வருகிறார்கள்
5 . தேர்தல் நடந்து மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்னும் தொகுதி அலுவலகம் திறக்கப்பட கூட இல்லை..
6.கடந்த சனவரி மாதம் 7 நாட்கள் உறுப்பினர் முகாம் நடத்தி 140 உறுப்பினரை கட்சியில் நான் இணைந்தேன் 180 நாட்கள் கடந்தும் இன்னும் அவர்களுக்கு உறுப்பினர் அட்டை சென்றடையேவே இல்லை இதற்காக கேட்டு வேட்பாளர் கண்டு கொள்ளவும் இல்லை 200 பேருக்கு மேல் உறுப்பினர் அட்டை கொடுக்காமல் நிலுவையில் உள்ளது..
7. தெருமுனை கூட்டம் நடத்த உறுப்பினர்கள் கொடுக்கும் பணம் முறையாகவும் கையாளவில்லை கையாடல் செய்யப்படுகிறது
8 திருக்கழுக்குன்றம் தெருமுனை கூட்டத்திற்கு சாலூர் பொறுப்பாளர் கொடுத்த பணத்தை தொகுதி செயலாளர் மோகன்ராஜ் தன் வங்கி கணக்கில் வாங்கினார் இன்று வரை தரவேஇல்லை...
9.. திருப்போரூர் தொகுதி இணையதள பாசறை செயல்படுவதே இல்லை
பல பகுதிகளில் எங்களால் நடத்தப்பட்ட புதிய உறுப்பினர்கள் பதிவுசெயப்படவுமில்லை...
10.ஒவ்வொரு கட்சி போராட்ட சுவரொட்டிகளும் தலைமையில் இலவசமாக கொடுகப்பட்டும் தொகுதி அருகில் இருந்தும் இதுவரை அதை வாங்கி கொடுக்கும் முயற்சியில் வேட்பாளர் என்றும் ஈடுபட்டதே இல்லை
பல முறை கூறியும் கண்டுகொள்வதில்லை...
11. கடந்த மூன்று வருடங்களாகவே தொகுதியில் எப்போதாவது போராட்டம் நடந்தால் வெறும் 15 உறுப்பினர்கள் மட்டுமே வருகிறார்கள் ஆனால் செயல்பாட்டில் 800 உறுப்பினர்கள் வரை இருக்கிறார் முறையாக யாரையும் அழைப்பதில்லை அதற்கான முயற்சிகளையும் வேட்பாளர் ஈடுபடுவதில்லை கண்துடடைப்புக்கு 15 பேரை மட்டுமே வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்.
12. 2015 தலைவர் பிறந்தநாள் நவம்பர் 26 சீமான் இந்த தொகுதியில் பேசினார் கடைசியாக அதன் பிறகு நான்கு வருடம் கடந்தும் இந்த தொகுதியில் அண்ணனை அழைத்து வந்துகூட்டம் நடத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை நிர்வாகிகள் பலமுறை கூறியும் வேட்பாளர் யூசுப் கண்டுகொள்வதில்லை
13. தொகுதியை விட்டு பக்கத்து தொகுதி கூட்டங்களில் கலந்து கொண்டாலும் அங்கு சென்று வேலை செய்தாலும் துரோகி என்கிறார் வேட்பாளர் யூசுப்.
இதுதான் இந்த வேட்பாளர் இலட்சணத்திற்கு பெரிய எடுத்துக்காட்டு..
14. நகர ஒன்றிய கலந்தாய்வில் பக்கத்து தொகுதிகளை குறிப்பிட்டு இலங்கை பணம் , வெளிநாட்டு பணம் வருதாம் தனக்கு வருவதில்லை எனவும் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் ‌இது புதிய உறுப்பினர்கள் மனதில் தவறாக என்ன நினைக்கிறது மேலும் கட்சியை தவறாக புரிந்து கொள்ளவும் தான் என்ன வைக்கிறது இப்படி பட்ட வேட்பாளர் இந்த கட்சியை எப்படி சீர்குலைக்கிறார் உங்கள் பார்வைக்கு விட்டுவிடுகிறேன்..
15. துண்டறிக்கையில் இவர் பெயர் சிறியதாக இருந்தாலோ சுவரொட்டியில் இவர் படம் சிறியதாக இருந்தாலோ கட்சியை விட்டு நீக்கிவிடுவேன் எனவும் மிரட்டுகிறார் இதனால் மன உளைச்சலில் என்னை போல பல நிர்வாகிகள்
16.இத்தொகுதியில் நடக்கும் போராட்டம் தெருமுனை கூட்டத்திற்கு பக்கத்து தொகுதியில் இருந்து தான் கட்சி கொடிகள் வாங்கி போராட்டம் தெருமுனை கூட்டம் நடந்தம் நிலை உள்ளது இது ஒன்றே போதும் இத்தொகுதியை அவர் எந்த நிலையில் வைத்திருக்கிறார் என
17. கடந்த 2016 தேர்தல் நேரத்தில் ஒருமாதம் 15 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை தேர்தல் வேலைக்கு அமர்த்தி வேலை வாங்கினார் தேர்தல் முடிந்த பிறகு அவர்களுக்கு தனித்தனியாக வாழ்வதாரத்திற்கு பணி அமைத்தும் மற்றும் கடைவைத்தும் தெரிந்த நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி கொடுத்து தேர்தல் வேலை வாங்கினார் ஆனால் தேர்தல் பிறகு கைவிட்டு விட்டதாகவும் இன்று வரை பலமுறை கேட்டும் அவர்களை கண்டுகொள்வதில்லை எனவும் பாதிக்கப்பட்ட அந்த உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகிய நிலையில் குற்றச்சாட்டை எங்களிடம் அடிக்கடி கூறிவருகின்றனர்
18. வேட்பாளர் யூசப்பால் சேரும் போதே தொகுதியில் தலைமை பொறுப்பு வாங்கி வந்த நிர்வாகிகள் எங்களை போல பழைய உறுப்பினர்களிடம்
நீங்கள் என்ன சாதி என்ன ஆளுங்க என தெருமுனை கூட்டங்களில் நகர கலந்தாய்வுகளில் கேட்டு மன ரீதியான அழுத்தத்தை தருகிறார்கள் இதனால் புதிய உறுப்பினர்கள் பலரும் தொடர்ச்சியாக நகர ஒன்றிய கலந்தாய்வுகளுக்கே வருவதை நிறுத்திக் கொண்டார்கள்
19.. 2015 திருக்கழுக்குன்றம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதையும் துணை போன காவல் துறை அதிகாரிகளையும் எதிர்த்தும் ஐயா வியனரசு தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினான் வேல்முருகன் சீமானின் தம்பி அந்த சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளரை செய்யூர் தொகுதிக்கு மாற்றிய நிலைக்கு காரணமான அவனை காவல்துறை மூலமும் அதிமுக கட்சியினராலும் வீட்டில் சென்று மிரட்டப்பட்டு ஒன்றை வருடம் சென்னையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து மீண்டும் கட்சியில் இணைந்து என்னுடன் கட்டமைப்பு செய்து வருகிறான் ஆனால் கடந்த தேர்தலில் இவருக்கு வாக்கு செலுத்தாத காரணத்தால் இவனை மனநோயாளி எனவும் மெண்டல் எனவும் ஓடுகாளி எனவும் என்னிடமும் மற்ற நிர்வாகிகளிடமும் தொடர்ச்சியாக கூறிவருகிறார் வேட்பாளர் யூசுப் இதனால் அவன் பலமுறை கண்ணீர் விட்டு சீமான் அலைபேசி எண் கேட்டான் என்னிடம் ......ஒருவர் முக அமைப்பை வைத்து ஏளானம் செய்யும் இந்த ஈழிவான வேட்பாளர் கீழ் தொகுதியில் இருக்க எங்களுக்கு விருப்பமில்லை..
20. திருப்போரூர் தொகுதியில் இரண்டு முக்கிய பொறுப்பாளர்கள் அடுத்த தேர்தலில் வேட்பாளராக நிற்கும் தகுதியில் வளர்ந்து விட்டனர் அடிக்க தலைமையகம் சென்று வருவதனால் அவர்களை திட்டமிட்டு யூசுப் ஒதுக்கியும் வருகிறார் வேட்பாளர் பதவி வெறிக்காக..
21. சீமான் நாடார் பக்கத்து தொகுதி ராஜன் நாடார் எங்க தொகுதியில் அடிக்கடி தலைமையகம் செல்லும் அந்த நபரும் நாடார் அடுத்த முறை எனக்கு வேட்பாளர் பொறுப்பு கிடைக்காதோ என உறுப்பினர் முன்னிலையிலும் யூசுப் கூறியிருக்கிறார். இவர்தான் தத்துவத்தை சார்ந்து கட்சிக்கு வந்தவரா நன்கு புரிந்து கொள்ளுங்கள்.
திருப்போரூர் தொகுதியை வளர்க்க வேட்பாளர் யூசுப் எந்த முயற்சியையும் எடுக்கபடவில்லை மேலும் இவர் மீது நடவடிக்கை எடுக்கவும் இத்தொகுதியின் வளர்ச்சி மீது தலைமை கவனத்தை செலுத்தவும் கேட்டு கொள்கிறேன்...
............................................................
பக்கத்து தொகுதியில் வேலை செய்தால் எனக்கு துரோகி பட்டம்
பக்கத்து தொகுதி வேட்பாளரிடம் பழகுவதால் எனக்கு துரோகி பட்டம்
பக்கத்து தொகுதி கூட்டத்தை நேரலை போடுவதால் துரோகி பட்டம்...
தொகுதியில் கணக்கு கேட்டதாக துரோகி பட்டம்...
வேட்பாளரை எதிர்த்து பேசுவதால் துரோகி பட்டம்.
வேட்பாளர் யூசுப் மேடையில் பேசுவதை முகநூல் நேரலை போட்டதால் துரோகி பட்டம்..
யூசப்பை மேடை பேச்சை நேரலையில் போட செயலாளரை விட்டு மிரட்டுகிறார்
2008 அக்டோபர் 18 இயக்குனர் சீமானின் ராமேஸ்வரம் பேச்சை கேட்டு காதல் தோல்வி மூன்று முறை தற்கொலை முயற்சி அந்த சீமானின் பேச்சால் இனப்படுகொலை வலி பற்றி தெரிந்து கொண்டு நாம் தமிழர் இயக்கம் 2010 தொடஙகிய போது இனைந்தேன்
நான் இந்த கட்சிக்காகவும் என் தொகுதி காகவும் 1% கூட வேலை செய்தது கிடையாது
ஆனால் கடந்த ஆறுவருடமாக சீமான் அண்ணா கலந்து கொண்ட எல்லா போராட்ட களத்திலும் பொதுகூட்டங்களிலும் நான் கலந்து கொண்டேன் 100% இன் உணர்வுடன்....
2017 கிருட்டிணகிரி மாவீரர் கூட்டத்தில் அண்ணன் வேதனையுடன் பேசியது சிந்தனையில் உள்ளது
கூடவே என் பின்னால் பயணிப்பான் ஆனால் கட்சிக்காக தொகுதிக்காக எதுவும் செய்ய மாட்டான். கேவலமான
உதாரணம் நான்...
கட்சியில் இருப்பான் ஆனால் கட்சிக்கு ஆள் சேர்க்காமல் தனக்கு ஆள் சேர்ப்பார் கேவலமான உதாரணம் திருப்போரூர் தொகுதி வேட்பாளர் யூசுப்... நாங்கள் இருவருமே இக்கட்சியில் இனிபயணிக்க தகுதியற்றவர்கள் .....
செங்கை தொகுதி சஞ்சீவிநாதன் அண்ணா 2015 திருச்சி இன எழுச்சி மாநாடு அன்று அறிமுகமாகி உங்களுடன் பயணிக்கிறேன் என்னை எல்லா போராட்ட தளங்களுக்கும் அழைத்து சென்று என் இன உணர்வை வளரச்செய்யது நீங்களும் ஒருவர் உங்களுக்கு நிறைய நன்றி கடன் பட்டுள்ளேன்
ஆவடி நல்லதம்பி நண்பன் அதிம் பார்த்து வியந்திருக்கிறேன். வறுமையில் இருந்தாலும் இந்த கட்சிக்காக இவன் செய்யும் அற்பணிப்பு ஆளப்பெரியது இவனை முன்னுதாரணமாக யூசுப் எடுத்து கொள்ள வேண்டும் ....
இதை முகநூலில் பதிவிட்டதாக மன்னிக்கவும் ஒன்பது வருடமாக முகநூலும் என் எழுத்தும் மட்டுமே ஆயுதம்..... தலைமை அலுவலகம் செல்லவோ தலைமையிடம் முறையிடவோ நிலையில் இல்லை நான் இந்த கட்சியில் பயணிக்கும் சாதாரண தொண்டன்... எனக்கு கொலைமிரட்டல் விடுக்கும் திருப்போரூர் தொகுதி வேட்பாளர் யூசுப்
தொகுதி பதவி வெறி செயலாளர் மோகன்ராஜ் எதிர்த்து போராடும் நிலையில் நான் இல்லை....
நாம் தமிழர் கட்சியில் இருந்து முழுவதும் விலகி கொள்கிறேன் இனி சமாதானம் ஆகும் நிலையில் நான் இல்லை
துரோகி பட்டம் இது போதும்...
மேலும் முகநூலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாகவும் சீமானின் கொள்கையையும் தத்துவத்தையும் ஏற்று பயணிப்பேன் ....
மேலும் திருப்போரூர் தொகுதி மீது முழு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்னை போல மூன்றாண்டுகளாக பாதிக்கப்பட்ட பலரும் இருக்கிறார்கள்
வெளியேறியும் போய்விட்டார்கள்...
கணக்கு கேட்டாதாக திருப்போரூர் தொகுதி ஈன வேட்பாளர் யூசுப் என்மீது சுமத்திய குற்றச்சாட்டுடனும்
பிரபாகரன் பெயரை வைத்து கொண்டு துரோகி பட்டத்துடன் இத்தொகுதியில் மண்டியிட்டு பயணிக்க விரும்பவில்லை
மேலும் எங்கள் உயிருக்கும் ஏதேனும் நடந்தால் அது திருப்போரூர் தொகுதி வேட்பாளர் யூசுப் மற்றும் செயலாளர் மோகன்ராஜ் மட்டுமே முழுகாரணம் என்பதையும் பதிவு செய்கிறேன்
மேலும் நான் இந்த கட்சிக்கு எதிராகவோ கட்சியின் பங்கத்திற்கு எதிராகவோ
கட்சியின் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவிருப்பதாக நினைத்தால் என் மீது உரிய நடவடிக்கை எடுக்க கட்சி முற்படலாம் எனவும் கேட்டு கொள்கிறேன்...
செ பிரபாகரன்
மற்றும்
வேல்முருகன்......
திருப்போரூர் தொகுதி...
.காஞ்சி மாவட்டம்


புலிகள் தோல்விக்கு யாரை காரணம் சொல்வீர்கள்.

புலிகள் தோல்விக்கு யாரை காரணம் சொல்வீர்கள். ஒரு சாதாரண முதலமைச்சாரால் உலக அளவிலான பிரட்சினையை
தீர்க்க முடியுமா? இறுதியாக புலிகளின் தோல்விக்கு சில காரணங்களை குறிப்பிடலாம்.
1. மக்களை அரசியல் படுத்தாமல், ஆயுதமே எல்லாம் என்று நம்பவைத்து ஆயுதங்களின் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்தது...
2. சகோதர இனமான முஸ்லிம்களின் நம்பிக்கையை பெறத் தவறியது...
3. ராஜீவ் காந்தியை கொன்றதனால் இந்திய ஆதரவையும், தமிழ் மக்களின் தார்மீக ஆதரவையும் ஒரு சேர இழந்தது....
4. சிங்களவர்களுக்கு எதிராக போராடக்கூடிய மற்ற போராளிக்குழுக்களை இல்லாது அழித்தொழித்தது....
5. ஓரளவுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியிருக்க கூடிய ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிராகரித்தது....
6. 2001 செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டைகோபுர தகர்ப்புக்கு பின் மாறிய உலக நிலைமைகளை கவனிக்கத் தவறியது...
7. இறுதியில் தனது மக்களை விட்டு பிரிந்து மீண்டும் கொரில்லா போர்முறையை பயன்படுத்தி போரிட முயற்சிக்காதது..
8. கிழக்கு மற்றும் மேற்கு மாகாண மக்களின் மதிப்பையும்
ஆதரவையும் பெறத்தவறியது போன்று பல உள்ளது.
இதையெல்லாம் விட்டு விட்டு கலைஞர் போரை நிறுத்தவில்லை
என்பது நகைச்சுவையின் உச்சக்கட்டம்.
உச்சக்கட்ட போரின்போது சிங்கள வீரர்களை அச்சமயம் ராஜபக்சேவால் கூட கட்டுப்படுத்தியிருக்க முடியாது.
அத்தனை இழப்புகளை சிங்களப்படை சந்தித்துள்ளது.
போர் நேரத்தில் உங்களுக்காக பேச கனிமொழியை தவிர உங்களுக்கு யாருமே கிடைக்கவில்லை என்பதிலிருந்து உங்களுக்காக பேச யாருமே இல்லாமல் இருந்ததை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள்.
கனிமொழியை இந்திய பிரதமர் லெவலுக்கு கொண்டு போய் கதைக்கிறீர்கள். அவர் தந்தையை இந்திய ஜனாதிபதி லெவலுக்கு கற்பனை செய்து கதைக்கிறீர்கள். இவர்களால் உங்கள் மக்களை காப்பாற்றி இருக்க முடியுமா? கொஞ்சம் அறிவை பயன்படுத்தி சிந்தியுங்கள். நீங்கள் சொல்லும் கனிமொழிதான் ஆறுமாதங்கள் ஜெயிலில் இருந்தார். அவர் தந்தை கலைஞரால் என்ன செய்ய முடிந்தது.
போரின் போது நீங்கள் சொல்வது போல ராஜினாமா செய்திருந்தால் மீண்டும் ஜெயா ஆட்சிக்கு வந்திருப்பார். அது சரி கலைஞர் அரசு எத்தனை முறை ஈழப்பிரட்சினையால் பதவி இழப்பது?
திமுகவுக்கு ஓட்டு போட்டது நீங்களா இல்லை தமிழக மக்களா?
ஐநா முதற்கொண்டு யாரையுமே உங்கள் நாட்டில் உள்ளே வந்து விசாரிக்க அனுமதிக்க மறுக்கும் லங்கா அரசை கனிமொழியால் கேள்வி கேட்க முடியுமா?
இதுவரையில் திமுக உங்கள் மக்களுக்கு
சாதகமாக நடந்து ராஜீவ் கொலை பழி வரை சுமந்ததே அதற்கு நீங்கள் என்ன நன்றி காண்பித்தீர்கள்?
இன்றும் கலைஞர் குடுப்பத்தை சொல்ல கூசும் அளவிற்கு அசிங்க படுத்தி கொண்டுள்ளீர்கள். இப்படியே தொடர்ந்து செய்தால் நாதியில்லாமல் போய்விடுவீர்கள்.
உச்சகட்ட போரில் சரணடைந்த ஆயிரக்கணக்கானவர்கள் கனிமொழி சொல்லியா சரணடைந்தனர்? கனிமொழி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சரணடைவதை விட வேறு வழி அப்போது இருந்ததா?
வேண்டுமென்றே திமுக மீது பழிபோடும் மடத்தனத்தை நிறுத்துங்கள். உங்கள் மக்களை உண்மையில் நேசிப்பவர்கள் திமுகவினரே. தம்பி பிரபாகரன் என்றுமே கலைஞரையும் திமுகவையும் மதித்து ஆலோசனை கேட்டதேயில்லை. சகோதர யுத்தம் வேண்டாம் என்ற போதும் சகோதர போராளிக் குழுக்கள் அழிக்கப்பட்டனர்.
இப்போதும் சொல்கிறேன் திமுவை அசிங்கப்படுத்தி தமிழ்நாட்டில் உங்களுக்கு இருக்கும் கொஞ்ச நெஞ்ச ஆதரவையும் கெடுத்துக்கொள்தீர்கள்.
இதை வருத்தத்துடன் சொல்லிக்கொள்கிறேன்.

ஈழத்தமிழர்களை உண்மையாக நேசித்தது கலைஞரும் திமுகவுமே.ராஜீவ் கொலை..சகோதர இயக்கப் போராளிகள் அழிப்பு,அவர்களைக் கொன்று நாயைப்போல ஜீப்பில்கட்டி தெருத்தெருவாக இழுத்தது, முஸ்லீம்சகோதரர்களை எதிரியாக்கியது என பல தவறுகளே அவர்களது தோல்விக்குக் காரணங்கள்.என்றுமே புலிகள் திமுகவையும் கலைஞரையும் மதித்ததில்லை.ஒருமுறை கலைஞர் பிறந்தநாளில்
சேர்த்த நிதியைப் போராளிக்குழுக்களுக்கு கலைஞர் பிரித்து கொடுத்தபோது MGR மனம் நோகுமென்று வாங்க மறுத்தவர் பிரபாகரன்.

தான் தான் எல்லாமும் என சர்வாதிகாரி யாக நடந்து கொண்ட பிரபாகரன் தான் இலங்கை தமிழர்கள் இன்னலுர காரணம் . கலைஞர் காலில் விழாத குறையாக சகோதர போராளி குழுக்கள் ஒற்றுமை யாக என கேட்டுக் கொண்டார் ஆனால் பிரபாகரன் எல்லா போராளிகளையும் அழித்தது டன் இலங்கை முதுபெரும் தலைவர்களை படுகொலை செய்தார் இலங்கை இஸ்லாமியர்ககள எதிரிகளளாக பாலித்தார் மலையகத் தமிழர்களை கண்டு கொள்ளவே மறுத்தார்.ஒரு புறம் அரசு பயங்கரவாததால் மாண்டனர் மறுபுறம் புலிகளால் கொடுரமாக கொல்லப்பட்டனர்.யார் ஆலோசனையையும் கேட்க மாட்டேன் என ஆனவமாக செயல் பட்ட பிரபாகரன் இறுதி யில் ராஜிவ் காந்தி படுகொலை மூலம் இந்தியாவின் ஆதரவையும் இழந்தார் ராஜிவ் காந்தி படுகொலை பழியை திமுக சுமக்க நேர்ந்தது.கலைஞரின் ஆலோசனைகளை கேட்டிருந்தால் தமிழர் வாழும் பகுதிகளில் சுயாட்சி மாநிலங்கள் தமிழர்களால் ஆளப்பட்டு வந்திருக்கும்.எல்லாவற்றையும் குட்டி சுவராக்கிய பிரபாகரன் அவருக்கு தவறான வழி காட்டிய தமிழக தமிழ் தேசிய தலைவர்கள்.ஆரிய பார்பபன வெளியுறவு துறை அதிகாரிகள் இந்தியா அனுப்பிய அமைதி படை அதிமுக அடிமை அரசு என எல்லோரும் இலங்கை பிரச்சனை யை குழப்பி விட்டனர் இவற்றில் கலைஞர் செய்த தவறு என்ன?

இதை எத்தனை முறை விளக்கி
சொன்னாலும் சொறி சிரங்கு வந்தவர்கள் வருக் வருக் என சொறிவது போல் 
ஈழத் தமிழர்கள் இறந்ததற்கு 
கலைஞர்தான் காரணம் என்று சொல்லி உண்மைக் 
குற்றவாளிகளை தப்பவிட்டு தங்களது வஞ்சக திட்டம் 
வெளிவராமல் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.