Monday, July 30, 2018

கற்பு என்பது பெண்களின் தொடைஇடுக்கில் இருக்கிற சதைகளில் தான் இருக்கிறது...

"தனது கடந்த காலத்தை அறிந்து தன்னை விரும்பி ஏற்றுக்கொண்டால் திருமணத்திற்கு தயார்"

என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறிய கருத்தை தூக்கிக்கொண்டு "ஸ்ரீரெட்டிக்கு வாழ்க்கை கொடுக்க எந்த பெரியாரிஸ்ட்டாவது இருக்கீங்களா"ன்னு மானத்தமிழ் புள்ளைங்க குறுக்கா மறுக்கா ஓடீட்டு இருக்காங்க..

அடேய் டம்ளர் பயலுகளா.. இதெல்லாம் பெரியாரிஸ்ட்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லைடா.. மனம் ஒத்துப்போய் இருவரும் விரும்பினால் அது யாராக இருந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள எந்த பெரியாரிஸ்ட்டும் தயங்கியதில்லை.. இங்கே இருவரின் மணம் ஒத்துப்போதல்தான் முக்கியம்.. மத்த எந்த கருமாந்திரமும் தேவையே இல்லை..

திராவிடர் இயக்கத்தில் சாதி மாறி திருமணம் முடித்தல், விவாகரத்து பெற்றோரை திருமணம் முடித்தல், விதவையை திருமணம் முடித்தல், குழந்தை இருந்தாலும் பிரச்சனையில்லை என்று சொல்லி திருமணம் முடித்தல் போன்ற நிகழ்வுகளெல்லாம் சர்வ சாதாரணம்பா..

நானே கணவனை இழந்த பெண்ணைத்தான் திருமணம் முடித்திருக்கிறேன்.. இதெல்லாம் கற்பு என்பதை புனிதமாக கருதி பெண்களை ஒடுக்கி நடக்கும் மூடர்களிடம் போய் சொல்., கற்பு என்பதை வெங்காயமாக பார்க்கும் எங்களிடம் சொல்லாதே..

கற்பு என்பது பெண்களின் தொடைஇடுக்கில் இருக்கிற நூறுகிலோ கிராம் சதைகளில் தான் இருக்கிறது என்று நம்ம மானத்தமிழ்ப் பிள்ளைகள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்...

கற்புங்கிறது மூளை என்ற கொழுகொழு சதையில்கூட இல்லை..அது எண்ணத்தில், சிந்தனையுல் இருக்கிறது என்பது நம்ம டம்ளர்ஸ்க்கு தெரியாது..
பெரியாரிஸ்டுகளையும் கம்யூனிஸ்டுகளையும் சந்தடிசாக்கில் கேவலப்படுத்த எடுக்கிற முயற்சிகள் தேல்வியில் முடியும் என்பதறியாத பாலகர்கள்..
முப்பாட்டன் முருகனுக்கு நாக்கில் அலகு குத்தி, காவடி எடுக்கிற கோஷ்டிகள்தானே தமிழர் பாய்ஸ்..

No comments: