Tuesday, July 31, 2018

...சொல்லுறான் கலைஞர் துரோகினு

பொண்டாட்டி புள்ளயோட அவனவன் களத்துல நின்னு போராடிக்கிட்டிருக்கும்போது ஓடிப்போயி ஐரோப்பா லண்டன் ஆஸ்திரேலியா வுல செட்டிலானவன் சொல்லுறான் கலைஞர் துரோகினு...!!!!
விசா நீட்டிப்புக்கும் குடியுரிமைக்கும் அங்க போர் நடந்தால்தான் சாதகம்னு இங்க பாதுகாப்பா உக்காந்துக்கிட்டு அங்க சண்டைய தூண்டிவிட்டு தமிழன் சாவுக்கு வித்திட்டவன் சொல்லுறான் கலைஞர் தமிழரை அழித்தார்னு..!!
ஊரில் நின்று போராடி உறவை உறுப்பை இழந்தவன் முன்னாடி ஐரோப்பாவிலிருந்து ஆடம்பரமாப்போய் இறங்கி கெத்துக்காட்டி சீன் போட்டுத்திரும்புறவன் சொல்லுறான் கலைஞருக்கு மனசாட்சி இல்லைனு..!!
கள்ளத்தனமா வேலைசெய்து கணக்குக்காட்டாமல் சம்பாரிச்சுக்கிட்டு அரசின் பெனிபிட்டையும் ஆட்டை போடுபவன் சொல்லுறான் கலைஞர் ஊழல் வாதினு...!!!!
அத்தனை தமிழன் அங்கே அல்லல்பட்டுக்கொண்டிருக்கும்போது தன் சொந்தங்களாய் மட்டும் ஐரோப்பா வருத்திக்கொண்டவன் சொல்லுறான் கலைஞர் சுய நலவாதினு..!!!
இன்னும் தமிழன் முள்வேலிக்குள் பட்டினியாய்க் கிடக்க இங்கே பிள்ளைகளுக்கு ஹெலிகாப்டரில் சடங்கு நடத்துறவன் சொல்லுறான் கலைஞர் ஆடப்பரவாதினு....!!!

No comments: