Wednesday, November 27, 2019

மன்னர் குடும்பத்தில் பிறந்து மக்களுக்காகச் சிந்தித்தவரை கொண்டாடாமல்

மன்னர் குடும்பத்தில் பிறந்து மக்களுக்காகச் சிந்தித்தவரை கொண்டாடாமல் ஏழைத் தாயின் மகன் எனக் கூறி ஏழைகளை ஒழிப்பவரை ஏன் இந்தியாவின் பெரும்பான்மையினர் கொண்டாடுகின்றனர்...கொண்டாட வைக்கப்படுகின்றனர்?

காரணம் மிக எளிது...

வி.பி.சிங் நடைமுறைப்படுத்திய இரண்டு முன்னெடுப்புகள்:

1. BC/MBC பிரிவினருக்கு கல்வி மற்றும் மத்திய அரசு வேலையில் 27% இட ஒதுக்கீட்டை வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமுல் படுத்தியது.

2. அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கியது.

இவ்வளவு தான் சார் இந்தியா!

இதை உணர்ந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே!!!

அதனால் தான் அந்த மன்னர் குடும்பத்து வாரிசு...அடுத்தப் பிறவி என ஒன்றிருந்தால் தமிழனாக பிறக்க வேண்டும் என்று சொல்லி மறைந்தார்.

திருவள்ளுவர் யாருக்கு சொந்தமானவர்?

திருவள்ளுவர் யாருக்கு சொந்தமானவர்?
திருவள்ளுவர் ஆண்டை அடிப்படையாக​ கொண்ட​ "தை" புத்தாண்டை தமிழ் புத்தாண்டாக​ கொண்டாடும் இனத்திற்கே சொந்தமானவர் திருவள்ளுவர்!
எங்கிருந்தோ வந்த​ ஆரியர்கள் இங்கே திட்டமிட்டு புகுத்திய "விகாரி, ஹேவிளம்பி" போன்ற​ சமஸ்கிருத​ ஆண்டுகளை தமிழ் புத்தாண்டாக​ கருதி கொண்டாடி திருவள்ளுவரை உதறிதள்ளிபவர்களுக்கு
திருவள்ளுவரை உரிமை கொண்டாட​ எவ்வித உரிமையும் இல்லை.
திருவள்ளுவர் ஆண்டு முறையில் வரும் தை புத்தாண்டை தமிழ் புத்தாண்டாக​ கொண்டாடுவதே தமிழனின் அடையாளத்திற்கும் பெருமைக்கும் உகந்தது. காரணம் திருவள்ளுவர் ஆண்டு தொடர்ச்சியாக​ வரும், ஆனால் சமஸ்கிருத​ ஆண்டோ தொடர்ச்சியாக​ வராமல் சுழற்சி முறையில் வரும். சுழற்சி முறையில் வரும் சமஸ்கிருத​ புத்தாண்டை கொண்டாடுவது தமிழனின் அடையாளத்தை அழித்து விடும்.
உதாரணமாக​,
நடக்கும் திருவள்ளுவர் ஆண்டு 2050. இன்னும் 600 வருடங்கள் கழித்து இது 2650-ஆக மாறும். அப்போது வாழும் அன்றைய​ உலக மக்களுக்கு தமிழனின் நாட்காட்டி 2650 வருடங்கள் வரலாறு கொண்டது என்கிற​ பெருமையையும் தமிழனின் அடையாளத்தையும் "தை தமிழ் புத்தாண்டு" பறைசாற்றி கூறும். திருவள்ளுவர் ஆண்டை வைத்து உங்களால் கணக்கீடுகளை செய்ய​ இயலும், வரலாற்று காலகட்டங்களை ஆராய​ இயலும்.
இப்போது ஆரியர்கள் கொண்டு வந்த​ புத்தாண்டுக்கு வருவோம் . நடக்கும் ஆண்டு விகாரி. 600 வருடங்கள் கழித்தும் இது விகாரியாக​ மட்டுமே இருக்கும். இதை வைத்து கொண்டு உங்களால் எந்த​ வித​ கணக்கீடுகளும் செய்ய​ இயலாது.
இதை வைத்து வரலாற்று காலகட்டங்களை உங்களால் அறியவே இயலாது. தமிழனின் நாட்காடி எத்தனை வருட​ வரலாறு கொண்டது என்பதை இந்த​ புத்தாண்டை வைத்து அறிய​ முடியாது. ​​இந்த​ புத்தாண்டு தமிழனின் அடையாளத்தையும் வரலாற்றையும் காலப்போக்கில் அழிக்கும். இவ்வாறு அழிக்க​ தான் ஆரியர்கள் திட்டமிட்டு இந்த​ புத்தாண்டை உருவாக்கினார்கள்.
ஆகவே, தமிழனின் அடையாளத்தையும் பெருமையையும் வரலாற்றையும் அழியாமல் காக்கும் திருவள்ளுவர் ஆண்டை புத்தாண்டாக​ கொண்டாடுபவர்களுக்கே வள்ளுவர் சொந்தம்!
மற்றவர்களெல்லாம் அப்படியே ஒரமாக​ போ

சாமி கும்பிட வந்த பெண்ணை ஒரு தீட்சிதர் அடித்திருக்கிறான்

சாமி கும்பிட வந்த பெண்ணை ஒரு தீட்சிதர் அடித்திருக்கிறான். இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள் இரண்டு.
1) அந்த தீட்சிதரை விட பொறுமையும், தொழிலும், 'சமஸ்கிருத ரைம்ஸ்களும்' தெரிந்துவைத்திருக்கும் வேறு சாதி இந்துவால் அந்தக் கோவிலுக்கு தீட்சிதர் ஆக முடியாது. அதாவது அந்த ரவுடிப் பார்ப்பானை விட தகுதி இருந்தாலும், இந்துத்துவாவிற்கு கூழைக்கும்பிடு போட்டாலும், அர்ஜூன் சம்பத், ராமதாஸ், கிருஷ்ணசாமி போன்ற இந்துத்துவ அடிமைகளின் சாதிகளில் பிறந்து வேதம் பயின்ற ஒருவனால் தீட்சிதர் பதவியை வாங்க முடியாது. தீட்சிதனிடம் முகரை வீங்க அறைதான் வாங்க முடியும்!
2) சாமி கும்பிட வந்த பெண் ஒரு மாமியாக இருந்தால் அவன் அறைந்திருக்க மாட்டான். கருவறைக்குள் போகவே தகுதில்லாத ஒரு சூத்திரச்சி தன்னைக் கேள்வி கேட்பதா என்பதுதான் அவன் கோபத்தின் அடிப்படை. காலம்காலமாக இந்து வர்ணாசிரம தர்மம் என்பது இதுதான்.
இந்தச் சம்பவம் சொல்லிக்கொடுக்கும் இந்த இரண்டு அடிப்படைகளை மட்டும் கொஞ்சம் பொறுமையாக யோசித்துப் புரிந்துகொண்டால் போதும். மானம் வந்துவிடும். வாய் தானாக "வாழ்க பெரியார்" சொல்லும்.
ஊர்காசில் உட்கார்ந்து தின்று கொழுப்பெடுத்துப்போய் திரியும் பூணூல் தடியன்களை 'சாமி' என்றோ, 'அய்யர்' என்றோ அழைத்துத் தொழாத அறிவையும், மானத்தையும், சுயமரியாதையையும் எமக்களித்த தந்தைப் பெரியார் வாழ்க.

வி.பி.சிங் எனும் வரலாற்று நாயகன்!

வி.பி.சிங் எனும் வரலாற்று நாயகன்!
கதிர் ஆர்.எஸ்
கட்டுரையாளர்
எப்படி பெரியாரை கடவுள் மறுப்பு என்ற எல்லைக்குள் சுருக்குகிறார்களோ அப்படித்தான் வி.பி.சிங் அவர்களை இட ஒதுக்கீடு என்ற வரையறைக்குள் சுருக்கி ஒரு சாரார் புறக்கணிக்கின்றனர்.
இந்தியாவின் பிரதமராக ஓர் ஆண்டு கூட நிறைவு செய்யாத வி.பி.சிங் செய்து முடித்த காரியங்கள் பல நூறு ஆண்டுகள் நினைவுக்கூறத்தக்கவை. பிரதமர் ஆவதற்கு முன்பும், பின்பும் அவர் செய்த சாதனைகளும் எடுத்த முடிவுகளும் எந்த ஒரு அரசியல் தலைவராலும் அத்தனை எளிதில் எடுக்க முடியாததாகும்.
முதல்வர் பதவியை துறந்ததாகட்டும், தான் சார்ந்த கட்சியின் மீதே கரிசனம் காட்டாமல் தான் வகித்த மத்திய அமைச்சர் பதவிக்கு மதிப்பளித்து எடுத்த முடிவுகளாகட்டும், அதனால் தலைமையுடன் ஏற்பட்ட முரண்களை விசிறியடித்து கட்சியை விட்டு வெளியேறியதாகட்டும், பிரதமர் பதவியை துறந்த பின்னும் தனது வாழ்நாளின் இறுதி மூச்சுவரை நோயுடன் போராடிய வேளையிலும் ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நடத்திய போராட்டங்களாகட்டும், உடலில் வலிமையிருந்தால் நான் இந்நேரம் ஒரு மாவோ போராளியாக இருந்திருப்பேன் என்று உறுதிபட முழங்கியதாகட்டும். எந்த அரசியல் வரம்புகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் இந்திய அரசியல் எனும் மாபெரும் உப்புகடலில் கலந்தபின்னரும் தனித்தன்மையுடன் நன்னீர் நதியாக பல்லாண்டுகாலம் மக்களுக்கான அரசியலை மட்டுமே முன்னெடுத்த மாவீரன் வி.பி.சிங் அவர்கள்.
1989ல் இந்திய அரசியலில் ஒரு மிகப்பெரிய புரட்சி நடத்தப்பட்டது. எந்த பெரிய தேசிய கட்சிகளின் தயவுமின்றி திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் ஒன்று சேர்ந்து அந்த புரட்சியை நிகழ்த்தினர். மாநில கட்சிகளின் பலம் என்ன என்பதும், அவை ஒன்று சேர்ந்து பணியாற்றினால் நாட்டில் எப்பேர்பட்ட மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று தில்லிக்கு தெரியவந்த காலகட்டம் அது.
நிலையற்ற அரசு என்ற விமர்சனங்கள் இருந்தாலும் அத்தனை ஆண்டுகளாக நிலையான அரசுகள் செய்த சாதனைகளை விஞ்சும் வகையில் சாதனை புரிந்த அரசாக வி.பி.சிங் அரசு இருந்தது. வி.பி சிங் அரசை கவிழ்க்க இரண்டு பிரதான கட்சிகளுமே மறைமுக கூட்டணி அமைத்தன என்று சொன்னால் அது மிகையில்லை.
“என்னை நீங்கள் தோற்கடிக்கலாம்; ஆனால் நான் இந்த நாட்டுக்கு செய்யவேண்டியதை எப்போதோ செய்து முடித்துவிட்டேன்” என்று பிரதமராக தனது இறுதி பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டார் வி.பி.சிங். தான் எப்போது அவுட் ஆவோம் என்று தெரியாமல் எத்தனை பந்துகள் மிச்சமிருக்கின்றன என்றும் தெரியாமல் அடித்து ஆடிய வி.பி.சிங் அடித்த சில சிக்சர்கள் கீழே:
1.இந்திய அரசியலமைப்பின் தந்தையாக இருந்தாலும் எந்த அரசு மரியாதையும் வழங்கப்படாமல் இருந்த பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கருக்கு "பாரத ரத்னா" பட்டம் வி.பி.சிங் ஆட்சியிலேயே வழங்கப்பட்டது.
2.நாடாளுமன்றத்தில் அம்பேத்கரின் படத்தை இடம் பெற வைத்த பெருமையும் வி.பி.சிங்கையே சேரும்.
3.ராஜிவ்காந்தி பிரதமராக இருந்த போது இலங்கைக்கு சென்றிருந்த இந்திய ராணுவத்தை திரும்ப பெற்றவர் வி.பி.சிங்.
4.1990 மே மாதம் சென்னை வந்திருந்த வி.பி.சிங்கிடம் செய்தியாளர்கள் விடுதலை புலிகளை தீவிரவாத இயக்கம் என்பதாக ஒரு கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், ”எவரையும் தீவிரவாதி என முத்திரை குத்தும் ரப்பர் ஸ்டாம்ப் எனது பாக்கெட்டில் இல்லை” என பதிலளித்தார்.
5.சங்பரிவார் நடத்திய ரத யாத்திரையை நிறுத்தி, அதற்கு தலைவராக இருந்த அத்வானியை பிஹார் முதல்வர் லல்லு பிரசாத் மூலம் கைது செய்ய வைத்தார். அந்த கைது அவர் பதவியையே பறிக்கும் என்று தெரிந்தபோதும் அதற்காக அவர் கவலைப்படவில்லை.
6.அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் வேண்டுகோளை ஏற்று காவிரி நடுவர் மன்றம் அமைத்திட உத்தரவிட்டது.
7.சென்னை மீனம்பாக்கத்திலுள்ள வெளிநாட்டு விமான தளத்துக்கு அண்ணா பெயரும், உள்நாட்டு விமான தளத்துக்கு காமராஜர் பெயரும் சூட்டவேண்டும் என்று கலைஞர் மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்ததும், அந்த வேண்டுகோளை ஏற்று அதனை விழா மேடையிலேயே அறிவித்தது.
8.பொற்கோயிலில் போய் இந்திரா காலத்தில் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார். கூடவே, பஞ்சாபில் அமைதி திரும்ப மனதார முன்னெடுப்புகள் எடுத்தார்.
9.வெகுகாலமாக கிடப்பில் கிடந்த மண்டல் கமிஷனின் பரிந்துரையான பிற்படுத்தபட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டை தனி மெஜாரிட்டி இல்லாத பொழுதும் தைரியமாக அமல்படுத்தியது.
இப்படி அரசியல்களத்தில் நாட்டின் பிரதமராக எந்த சமரசமுமின்றி துணிச்சலான பல முடிவுகளை எடுத்த விபி சிங் தனது அரசியல் வரலாற்றில் ஆரம்ப காலந்தொட்டே இத்தகைய அணுமுறை கொண்டவராகவே இருந்திருக்கிறார்.
உத்தரபிரதேசத்தில் தையா என்ற ராஜவம்சத்தைச் சேர்ந்தவர் விஷ்வநாத் பிரதாப் சிங் என்கிற வி.பி.சிங்.டமாண்டா என்கின்ற பகுதியை ஆண்டு வந்த ராஜ குடும்பத்தில், 1931-ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி பிறந்தார். இயற்பியல் படித்துக் கொண்டிருந்த காலத்தில், அவருடைய உச்சகட்ட லட்சியமாக இருந்தது, 'எதிர்காலத்தில் மிகப் பெரிய அணு விஞ்ஞானி ஆக வேண்டும்' என்பதுதான். காலம் அவரை அரசியல்வாதியாக்கியது. 1941-ம் ஆண்டு மாண்டாவின் ராஜ் பகதூராக வி.பி.சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரச குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவரது அரசியல் எளியோர்களுக்கானதாகவே இருந்தது. இளம் வயதிலேயே வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தில் ஈடுபாடு கொண்டதால், தன்னுடைய விளைநிலங்களை தானமாக அளித்த நிகழ்வு அவர் எப்படிப்பட்ட அரசியல்வாதி என்பதை உலகத்திற்கு உணர்த்துவதாக இருந்தது.
காங்கிரஸ் கட்சியின் மீது தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்த வி.பி.சிங். 1969-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் வென்று எம்எல்ஏ அமைச்சர் என்று அடுத்தடுத்து வளர்ந்து காங்கிரஸ்கட்சியின் மிக முக்கிய ஆளுமையானார். 1980-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில முதல் அமைச்சராக இந்திரா காந்தியால் தேர்வு செய்யப்பட்டார்.
இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி வென்று ராஜீவ் காந்தி பிரதமரானபோது நிதியமைச்சர் ஆனார் சிங். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அவர் தயங்கவில்லை. திருபாய் அம்பானி, நடிகர் அமிதாப் பச்சனின் சகோதரர் என எந்த வி.ஐ.பி-யும், வி.பி.சிங்கின் தாக்குதலில் இருந்து தப்ப முடியவில்லை. அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் கெடுபிடிகளைத் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் பணக்காரர்கள், ராஜீவ் காந்தியிடம் முறையிடவே, நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் வி.பி.சிங்.
ஆனால், அடுத்து வந்த காலங்களில் பாதுகாப்புத் துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த நேரத்தில் ராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக ஸ்வீடன் வானொலி அறிவித்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க, அமைச்சர் பதவி மற்றும் கட்சிப் பதவியிலிருந்தே நீக்கப்பட்டார் வி.பி.சிங்.
1989-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் திமுக, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத் போன்ற மாநில கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கினார். இந்தக் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பா.ஜனதா வெளியில் இருந்து ஆதரித்த நிலையில், இந்தியாவின் பத்தாவது பிரதமரானார் வி.பி.சிங். அதிலும், டிசம்பர் 1, 1989 அன்று வி.பி.சிங் நாடாளுமன்றத்தின் அவையில் தேவிலாலை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஹரியானாவின் ஜாட் தலைவரான தேவிலால், பரிந்துரையை ஏற்க மறுத்து வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார் என்பது கூடுதல் சிறப்பு. பா.ஜ.க ஒருபுறம், இடதுசாரிகள் மறுபுறம் என இருதுருவங்களின் ஆதரவுடன் ஆட்சியை மிகத் திறமையாக நடத்திக் கொண்டிருந்தார்.
அந்த காலகட்டத்தில் அவர் நிகழ்த்திக்காட்டிய சாதனைகளைத்தான் மேலே குறிப்பிட்டிருந்தோம். தனது பதவியை இழந்த பின்னர் மீண்டும் அந்த பதவியில் அமர விரும்பாத வி.பி.சிங், அதே கூட்டணியின் மூலம் 1996-ம் ஆண்டு தேவகௌடாவைவும், பின்னர் ஐ.கே.குஜ்ராலையும் பிரதமர் பதவியில் அமரத்த முக்கியப் பங்கு வகித்தார்.
ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர், பல ஆண்டுகள் பொதுவாழ்க்கையிலிருந்து ஒதுங்கியிருந்தவர், 2006-ம் ஆண்டு ஜனமோர்ச்சா கட்சியை மீண்டும் தொடங்கினார். 2006-ல் உத்தரபிரதேசத்தின் தாத்ரி பகுதியில், விவசாயிகளின் நிலங்களை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றியதைக் கண்டித்து, தீவிரமான போராட்டங்களில் பங்கெடுத்தார். தொடர் போராட்டங்களும் டயாலிசிஸ்களும் அத்துடன் சேர்ந்த புற்றுநோயும் உடலை வாட்ட, 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார்.
'பிரதமர் பதவியைவிட முக்கியமானது தேசத்தின் ஒற்றுமை’ என பாராளுமன்றத்தில் முழங்கிய விபிசிங் இந்தியாவின் ஒற்றுமைக்கு மதச்சார்பின்மை எவ்வளவு முக்கியம் என்பதை மட்டுமல்லாமல், பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் எவ்வளவு தூய்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்.
இந்திய அரசியலையே புரட்டிப்போட்ட அந்த செம்மல் பதவியில் நீடிக்கமுடியாமல் போனது இந்தியாவின் துரதிருஷ்டம் என்றால் அது மிகையல்ல

பெரியார் சட்ட எரிப்புப் போராட்ட அறிவிப்புக்குப் பிறகு

பெரியார் சட்ட எரிப்புப் போராட்ட அறிவிப்புக்குப் பிறகுதான் அடுத்த சில நாட்களிலேயே அரசியல் சட்டம் கொளுத்துவதும், காந்தி படம் போன்ற தேசத் தலைவர்களின் படத்தைக் கொளுத்துவதும் தேசிய அவமதிப்பு என்றும் அப்படிச் செய்கிறவர்களுக்கு *மூன்று ஆண்டு சிறை * என்றும், தமிழ்நாடு அரசு அவசர சட்டம் ஒன்றைக் கொண்டு வருகிறது அது குறித்து பெரியார் என்ன எழுதினார்?

“அரசமைப்புச் சட்டம் முதலியன கொளுத்துவது பற்றி சென்னை அரசாங்கம் செய்திருக்கும் புதிய சட்டம் விஷயமாய் பொது மக்கள் சிறிதும் கவலைப்பட வேண்டியதில்லை. மற்றும் என் மீது கடுந்தண்டனைக்கு ஏற்ற வழக்கு தொடுத்திருப்பது பற்றியும் பொது மக்கள் கவலைப்பட வேண்டிய தில்லை.

இவைகள் எல்லாம் பார்ப்பனர்களால் எய்யப்படும் அம்புகளே தவிர, சென்னை அரசாங்க மந்திரிகளாகிய அம்புகளுக்குச் சிறிதும் சம்பந்தப்படாதவைகளேயாகும். அன்றியும் பார்ப்பனர் வெளியேற்றப்பட வேண்டும் என்பதற்கும், வடநாட்டான் ஆதிக்க ஆட்சியிலிருந்து (இந்திய யூனியனிலிருந்து) பிரிந்து முழு சுதந்திரத் தமிழ்நாடு ஆட்சி பெற்றாக வேண்டும் என்பதற்கும் இவை (பார்ப்பனர் நடத்தைகளும் அவர்களுக்கு வடநாட்டான் ஆதரவுகளும்) சரியான காரணங்களாகும். அதற்காகத் துரிதமாகவும், தீவிரமாகவும் கிளர்ச்சி செய்யவும், இது வலிமை மிக்க தூண்டுதலாகும். சென்னை அரசாங்க மந்திரிகள் நம் மக்களின் கல்வி சம்பந்தமாக எடுத்துக் கொண்டிருக்கிற முயற்சிகள் நாம் பாராட்டத்தக்கதும், நன்றி செலுத்தத் தக்கவையும் ஆகும். இம்முயற்சி பார்ப்பனர்களுக்குப் பெரும் கேடானதால் இந்த பார்ப்பனர்கள் என் மீது கொண்டுள்ள ஆத்திரத்தையும், பழிவாங்கும் எண்ணத்தையும்விட, இன்றைய மந்திரி சபை மீது கொண்டுள்ள ஆத்திரமும், பழி வாங்கும் எண்ணமுந்தான் பேயாட்டமாக ஆடி இப்படிப்பட்ட தொல்லைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன.

ஆதலால், பொது மக்கள் இச்சம்பவங்களுக்காக இன்றைய மந்திரி சபையிடமோ, குறிப்பாக திரு.காமராசரிடமோ எவ்விதமான அதிருப்தியும் காட்டவோ கொள்ளவோ வேண்டியதில்லை. (‘விடுதலை’ 16.11.1957) - என்று எழுதினார்.

அடக்குமுறைகளை தனது போராட்டத்துக்கான உந்து சக்தியாக்கிக் கொண்டு ஆர்வத்தோடு அவற்றை வரவேற்றார் பெரியார். வரலாற்றில் பார்ப்பன எதிர்ப்புக் களத்தில் பெரியார் முன்னேறிச் செல்ல முயன்றதற்கு பெரியாரின் இந்த நுட்பமான அணுகுமுறைகளே மிக முக்கிய காரணிகளாக இருந்திருக்கின்றன.

Even a brāhmaṇa would not accept foodstuff prepared by his wife

"Even a brahmana would not accept foodstuff prepared by his wife, because woman is considered sudra"

- Swami Prabhupada (ISKCON Founder)

Source : https://prabhupadabooks.com/conversations/1976/aug/new_mayapur_(french_farm)/august/02/1976-1

[Even a brāhmaṇa would not accept foodstuff prepared by his wife, because woman is considered śūdra. The woman, when she becomes the wife of a brāhmaṇa, then she is called brāhmaṇī, but she's not offered brahminical culture. She remains as śūdra. So therefore a strict brāhmaṇa does not accept foodstuff prepared by his wife. Still there are in U.P. The wife will arrange for cooking, and he'll sit down and cook dāl, cāpāṭis. Then he will eat, and whatever remains, that is there, that will be taken by her. But he will not take foodstuff cooked by his even wife. And if there are several brāhmaṇas, so each one of them will cook his own food.]

1957 நவம்பர் 26 சட்ட எரிப்பு நாள்

1957 நவம்பர் 26 உள்துறை அமைச்சரை கலாய்த்த பெரியார் தொண்டர்கள்
நவம்பர் 3 அன்று சாதியை பாதுகாக்கும் சட்டப் பிரிவுகளை நீக்க தந்தை பெரியார்  கெடு விதித்த போது அதனை சட்டை செய்யாமல் எட்டு நாட்களில் அரசியல் சட்டத்தை கொளுத்தினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என்று நவம்பர் 11 அன்று வேகவேகமாய் சட்டம் இயற்றிய இந்திய அமைச்சரை சரியாக பதினைந்து நாட்களில் அரசியல் சட்டத்தை கொளுத்திய பிறகு நவம்பர் 26 அன்று

இரண்டு இளைஞர்கள் உள்துறை அமைச்சருக்கு பின்வருமாறு கடிதம் எழுதினர்
நீங்கள் அல்லும் பகலும் கண் துஞ்சாது  கஷ்டப்பட்டு கடினப்பட்டு துன்பப்பட்டு துயரப்பட்டு எழுதிய சட்டத்தை கிஞ்சிற்றும் மதிக்காமல் தங்கள் காவல்துறை சட்டம் கொளுத்திய எங்களை இன்னும் கைது செய்யாமல் உள்ளனர்
ஆகவே உடனே நீங்கள் எங்களை கைது செய்ய ஆவண செய்யும்மாறு கேட்டுக்கொள்கிறோம்

நீங்கள் நம்பமாட்டீர்கள் என்பதால் இத்துடன் சட்டத்தை கொளுத்திய #காகித_சாம்பலை  இணைத்துள்ளேன்

சட்ட எரிப்பு நாள்

தேவதாசி

தேவதாசி

20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.

கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.

இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது.
முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார்.

சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர். பெண் விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.

இதற்கு பார்ப்பனர்கள் சொன்ன காரணம் என்னவென்றால்.. இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர,

சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டோம் என்று கூறி தேவதாசி பெண்களை வைத்தே இந்த தீர்மானத்தை எதிர்த்து போராட வைத்தனர்.

இந்த இக்கட்டான சூழலில் பெரியாரிடம் வந்து "இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள்.

இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் என்ன செய்வது" என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்.

அதற்கு பெரியார் " நான் சொல்லுகிறபடி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்" என்று சொல்லி அனுப்பினார்.

பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்கத் தயாராக இருந்தார்.

அப்போது சத்தியமூர்த்தி அய்யர் பேசினார். "தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் என்று சொன்னார்.

அவர்கள் தங்களை அர்ப்பணித்து தொண்டு செய்வதால் புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகிறார்கள்.'' என்றார்

அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சி பார்ப்பனர்களைப் பார்த்து "தேவதாசி ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராக பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன்.

இதுவரையில் எங்க ஜாதியிலேயே கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். எக்கச்சக்க புண்ணியத்தை சேர்த்து வைத்துள்ளார்கள்.
இனிமேல் அந்தத் தொண்டை உங்கள் பிராமண பெண்களே செய்யட்டும்..

நீங்களும் புண்ணியம் சேர்த்து கொள்ளுங்கள், அதற்கு யாரும் எதிர்ப்பு கூறமாட்டார்கள், உங்கள் சாத்திர சம்பிரதாயங்களும் கெட்டுப் போகாது" என்றார்.

இதைக் கேட்ட பார்ப்பனர்களுக்கு, ஒரு செருப்பை வாயில கவ்வக் கொடுத்து, இன்னொரு செருப்பை சாணில முக்கி அடித்தது போல் இருந்தது.

இவ்வளவு பிரச்சினைகளை மீறித்தான் தேவதாசி ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

#பெரியார்_என்றாலே ஏன் பார்ப்பனர்கள் வெறுப்பை உமிழ்கிறார்கள் என்று இப்பொழுதாவது புரிகிறதா..?

#தந்தைபெரியார்

காஞ்சி சங்கராச்சாரி தண்டத்தை மடத்தில் போட்டுட்டு வெங்கட்ராமன் என்பவரின் மகளைக் கூட்டிக் கொண்டு...

// வரலாறு நெடுக ஆடிட்டர் குருமூர்த்திகள் இப்படியாகவே தான் இருக்கிறார்கள் //

உங்களுக்கு ஒரு கதை தெரியுமா?

1986 ல் காஞ்சி சங்கராச்சாரி தண்டத்தை மடத்தில் போட்டுட்டு வெங்கட்ராமன் என்பவரின் மகளைக் கூட்டிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் மடத்தை விட்டே ஓடிப் போனார்.

அப்ப பத்திரிக்கையில் சங்கராச்சாரியைக் காணவில்லையென பரபரப்பா செய்தி போட்டுக்கிட்டே இருந்தானுக.
தினமலர் பார்ப்பான் தினமும் மூக்குச்சிந்தி அழுகுறா மாதிரி செய்தி போட்டான்.
நானெல்லாம் அப்ப கல்லூரியில் அந்த மாமியைப் பற்றி தான் பேசிக்கிட்டு இருப்போம்.

எங்கு தேடியும் தக்காளியை ஆளைக் காணோம்.
கண்டுபிடிக்கும் பொறுப்பை சிபிஐ வசம் ஒப்படைத்தனர்.
இரண்டு மாதம் கழித்து தலைக்காவிரியில் அந்தப் பெண்ணுடன் பிடித்தார்கள்.

அப்போது தான் இப்ப இருக்கிற ஆளை நியமித்தார்கள்.
அதனால் தான் மூத்த சங்கரன், இளைய சங்கரன்னு ரெண்டு பேர் இருந்தாங்க.

சங்கராச்சாரிக்கு அந்தப் பெண்ணை அறிமுகம் செய்து வைத்த
வெப்பன் சப்ளையர் யார் தெரியுமா?
குருமூர்த்தி தான்.
அதன் பிறகு தான் புரோக்கர் குருமூர்த்தின்னு பட்டம் பெற்றார்.
வீரத்தமிழன்னு ஓபிஎஸ் வாங்குனா மாதிரி.

இப்ப உங்க கேள்வி என்னன்னா
சங்கராச்சாரி வச்சிருந்த மாமியை
இப்ப யாரு வச்சிருக்கான்னு தானே?

தெரிஞ்சுக்கிற மூடுல நீங்க இருந்தாலும்
சொல்லுற மூடுல நான் இல்லை.
ஆனா மாமாவுக்கு நெருக்கமா இருக்கு அந்த மாமி.

Monday, November 25, 2019

நாஞ்செலி



தென்னிந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சோ்ந்த 18 சாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு முலை வரிப்போட்ட மனு தர்ம பாா்ப்பன சனாதன இந்துமதம்...

கேரளா ஈழவா சமூகத்தை சோ்ந்த நாஞ்செலி என்ற பெண்ணிடம் உனது முலை பெரிதாக உள்ளதால் இரட்டைவரி கட்ட வேண்டும் என்று முலைவரி கேட்டுவந்த திருவிதாங்கூா் சமஸ்தானம் அதிகாரிகளிடம் தனது முலையை அறுத்து வாழை இலையில் வைத்து எடுத்துக்கொள் என்றாள்.

நான் வரி கட்டமாட்டேன். முலை இருந்தால் தானே வரி கேட்பாய் என்று முலையை அறுத்து இறந்து போனாள்.

அதன் பிறகு தான் முலைவரி ரத்து செய்யப்பட்டது என்பது வரலாறு.

அந்த பெண்மணி நாஞ்செலியின்  நினைவாக கேரளாவில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இப்படி எந்த ஒரு மதத்தில் யாவது இந்த கேடுகெட்ட செயல் நடந்துள்ளதா?

இந்து பெண்களே சிந்திப்பீா்...!!!

இந்து மதம் என்பது minority யை சேர்ந்த கிறிஸ்தவம், இஸ்லாமியம், சீக்கியம், பெளத்த மதத்தை பின்பற்றுபவரிடம் இருந்து பார்ப்பனர்கள் பெரும்பான்மைக்காக Majority க்காக மட்டுமே ஆங்கிலேயர்களால் குறியீடு செய்யப்பட்டது இந்து மதம் என்று,

பார்ப்பனர் தவிர்த்து மற்றவர்களை அதாவது சத்திரியன், வைசியன், சூத்திரன் மற்றும் பெண்களை இந்துமதம் என்று பெயரளவில் சொல்வார்களே தவிர,

மற்றபடி ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு சாஸ்திர சம்பிரதாயம் என்று வர்ணாசிரம கோட்பாடான சனாதன தர்மம் தர்மத்தை பார்ப்பனர்கள் ஒரு போதும் விலக்கி கொள்ள மாட்டார்கள் தமிழர்களே சிந்தியுங்கள்...

தமிழர்கள் இந்துக்களும் இல்லை!
பார்ப்பனர் சக இந்துக்களுக்கு சம வாய்ப்பு கொடுக்க போவதும் இல்லை!!