Wednesday, November 27, 2019

சாமி கும்பிட வந்த பெண்ணை ஒரு தீட்சிதர் அடித்திருக்கிறான்

சாமி கும்பிட வந்த பெண்ணை ஒரு தீட்சிதர் அடித்திருக்கிறான். இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள் இரண்டு.
1) அந்த தீட்சிதரை விட பொறுமையும், தொழிலும், 'சமஸ்கிருத ரைம்ஸ்களும்' தெரிந்துவைத்திருக்கும் வேறு சாதி இந்துவால் அந்தக் கோவிலுக்கு தீட்சிதர் ஆக முடியாது. அதாவது அந்த ரவுடிப் பார்ப்பானை விட தகுதி இருந்தாலும், இந்துத்துவாவிற்கு கூழைக்கும்பிடு போட்டாலும், அர்ஜூன் சம்பத், ராமதாஸ், கிருஷ்ணசாமி போன்ற இந்துத்துவ அடிமைகளின் சாதிகளில் பிறந்து வேதம் பயின்ற ஒருவனால் தீட்சிதர் பதவியை வாங்க முடியாது. தீட்சிதனிடம் முகரை வீங்க அறைதான் வாங்க முடியும்!
2) சாமி கும்பிட வந்த பெண் ஒரு மாமியாக இருந்தால் அவன் அறைந்திருக்க மாட்டான். கருவறைக்குள் போகவே தகுதில்லாத ஒரு சூத்திரச்சி தன்னைக் கேள்வி கேட்பதா என்பதுதான் அவன் கோபத்தின் அடிப்படை. காலம்காலமாக இந்து வர்ணாசிரம தர்மம் என்பது இதுதான்.
இந்தச் சம்பவம் சொல்லிக்கொடுக்கும் இந்த இரண்டு அடிப்படைகளை மட்டும் கொஞ்சம் பொறுமையாக யோசித்துப் புரிந்துகொண்டால் போதும். மானம் வந்துவிடும். வாய் தானாக "வாழ்க பெரியார்" சொல்லும்.
ஊர்காசில் உட்கார்ந்து தின்று கொழுப்பெடுத்துப்போய் திரியும் பூணூல் தடியன்களை 'சாமி' என்றோ, 'அய்யர்' என்றோ அழைத்துத் தொழாத அறிவையும், மானத்தையும், சுயமரியாதையையும் எமக்களித்த தந்தைப் பெரியார் வாழ்க.

No comments: