Wednesday, November 27, 2019

திருவள்ளுவர் யாருக்கு சொந்தமானவர்?

திருவள்ளுவர் யாருக்கு சொந்தமானவர்?
திருவள்ளுவர் ஆண்டை அடிப்படையாக​ கொண்ட​ "தை" புத்தாண்டை தமிழ் புத்தாண்டாக​ கொண்டாடும் இனத்திற்கே சொந்தமானவர் திருவள்ளுவர்!
எங்கிருந்தோ வந்த​ ஆரியர்கள் இங்கே திட்டமிட்டு புகுத்திய "விகாரி, ஹேவிளம்பி" போன்ற​ சமஸ்கிருத​ ஆண்டுகளை தமிழ் புத்தாண்டாக​ கருதி கொண்டாடி திருவள்ளுவரை உதறிதள்ளிபவர்களுக்கு
திருவள்ளுவரை உரிமை கொண்டாட​ எவ்வித உரிமையும் இல்லை.
திருவள்ளுவர் ஆண்டு முறையில் வரும் தை புத்தாண்டை தமிழ் புத்தாண்டாக​ கொண்டாடுவதே தமிழனின் அடையாளத்திற்கும் பெருமைக்கும் உகந்தது. காரணம் திருவள்ளுவர் ஆண்டு தொடர்ச்சியாக​ வரும், ஆனால் சமஸ்கிருத​ ஆண்டோ தொடர்ச்சியாக​ வராமல் சுழற்சி முறையில் வரும். சுழற்சி முறையில் வரும் சமஸ்கிருத​ புத்தாண்டை கொண்டாடுவது தமிழனின் அடையாளத்தை அழித்து விடும்.
உதாரணமாக​,
நடக்கும் திருவள்ளுவர் ஆண்டு 2050. இன்னும் 600 வருடங்கள் கழித்து இது 2650-ஆக மாறும். அப்போது வாழும் அன்றைய​ உலக மக்களுக்கு தமிழனின் நாட்காட்டி 2650 வருடங்கள் வரலாறு கொண்டது என்கிற​ பெருமையையும் தமிழனின் அடையாளத்தையும் "தை தமிழ் புத்தாண்டு" பறைசாற்றி கூறும். திருவள்ளுவர் ஆண்டை வைத்து உங்களால் கணக்கீடுகளை செய்ய​ இயலும், வரலாற்று காலகட்டங்களை ஆராய​ இயலும்.
இப்போது ஆரியர்கள் கொண்டு வந்த​ புத்தாண்டுக்கு வருவோம் . நடக்கும் ஆண்டு விகாரி. 600 வருடங்கள் கழித்தும் இது விகாரியாக​ மட்டுமே இருக்கும். இதை வைத்து கொண்டு உங்களால் எந்த​ வித​ கணக்கீடுகளும் செய்ய​ இயலாது.
இதை வைத்து வரலாற்று காலகட்டங்களை உங்களால் அறியவே இயலாது. தமிழனின் நாட்காடி எத்தனை வருட​ வரலாறு கொண்டது என்பதை இந்த​ புத்தாண்டை வைத்து அறிய​ முடியாது. ​​இந்த​ புத்தாண்டு தமிழனின் அடையாளத்தையும் வரலாற்றையும் காலப்போக்கில் அழிக்கும். இவ்வாறு அழிக்க​ தான் ஆரியர்கள் திட்டமிட்டு இந்த​ புத்தாண்டை உருவாக்கினார்கள்.
ஆகவே, தமிழனின் அடையாளத்தையும் பெருமையையும் வரலாற்றையும் அழியாமல் காக்கும் திருவள்ளுவர் ஆண்டை புத்தாண்டாக​ கொண்டாடுபவர்களுக்கே வள்ளுவர் சொந்தம்!
மற்றவர்களெல்லாம் அப்படியே ஒரமாக​ போ

No comments: