Sunday, October 09, 2022

மாடு அல்லாத ஒட்டகம் அல்லாத அனைத்தும் கழுதை

 வெள்ளைக்காரன்: மாடு அல்லாத ஒட்டகம் அல்லாத அனைத்தும் கழுதை.


நரி : நல்லவேளை நம் அனைவருக்கும் வெள்ளைக்காரன் கழுதை என்ற ஒரு பொதுப்பெயரைக் கொடுத்தான். இல்லையெனில் நாம் நரியாகவோ நாயாகவோ இருந்திருப்போம்.


யானை: என்னை எப்படிடா நீ கழுதைன்னு சொல்லலாம்.


எலி: அப்ப நீ என்ன மாடா... ஒட்டகமா... நீயும் என்னைப்போல கழுதைதான்.


யானை: எலிப்பயலே ஒரே மிதியா மிதிச்சு நசுக்கிப் புடுவேன். உனக்கு கழுதை என்பது பெருமையாக இருக்கலாம். நீ கழுதையாகவே இருந்துக்கோ. ஆனா என்ன ஏண்டா உன்கூட சேர்க்கிற.


எலி: வெள்ளைக்காரனே நாம் எல்லோரும் கழுதைன்னு சொல்லிட்டான்.! காட்டில் உள்ள எல்லா விலங்குகளும் தங்களை கழுதைன்னுதான் சொல்லுது.! தடிப்பயலே, உனக்கு என்ன திமிரு இருந்தால் திரும்பத் திரும்ப நீ யானைனு சொல்லுவ.!


இங்க இருந்தா கழுதையா இரு. இல்லேன்னா பாகிஸ்தானுக்கு ஓடிப்போ.!