Wednesday, July 15, 2020

சங்கீ வகைகள் 4

சங்கீ வகைகள் 4

முதலாவது வகை, நேர்மையான அப்பாவிகள், மோடி தான் இந்தியாவை காப்பாற்ற முடியும், என்று நம்பி கொரானாவை விரட்ட விளக்கு ஏற்றுவார்கள், கைதட்டுவார்கள், வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் அவதிப்படுவார்கள், ரேஷனில் பொருள் வாங்கிவிட்டு எப்படியும் இரண்டு நாளில் புதிய இந்தியா பிறக்க போகுதுன்னு நம்பிக்கையுடன் தூங்க செல்வார்கள்

இரண்டாவது வகை, முருகன் முப்பாட்டன், பார்பனரும் தமிழர்களே, சாதி என்பது செய்யும் தொழில் சார்ந்த இனக்குழு பெயர்கள், நடுவில் யாரோ அதை பிறப்புடன் இணைத்துவிட்டார்கள் என்பார்கள் அந்த யாரோ யார் என்று யார் கேட்டாலும் சொல்லமாட்டார்கள், இவர்களும் வீட்டு வாடகை கொடுக்கமுடியாமல் அவதிப்படுவார்கள் ஆனால் அரசு கொடுத்த டீ.வி எல்லாம் தூக்கி போட்டு உடைப்பார்கள், கொரானாவை விரட்ட விளக்கு ஏற்றுவார்கள், கைதட்டுவார்கள்

மூன்றாவது வகை, முருகன் சிவன் எல்லாம் தமிழரின் முன்னோர் வழிபாட்டின் எச்சம், சங்ககாலத்துலேயே, நியூட்டனின் 3 விதிகள் பற்றி பாட்டு இருக்கு, இதில் சிவன் முருகன் எல்லாம் எம்மாத்திரம், இந்து மதம் அதை எல்லாம் உள்ளே எடுத்து கொண்டது என்பார்கள், இந்துமதத்தில் யார் எடுத்துக்கொண்டார்கள் என்று கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள், வாடகை எல்லாம் ஒழுங்காக கட்டிவிடுவார்கள், டீ.வீ எல்லாம் தூக்கி போட்டு உடைக்கமாட்டார்கள், கொரானாவை விரட்ட விளக்கு ஏற்றுவார்கள், கைதட்டுவார்கள், கேட்டால் ஊரோடு ஒத்து வாழ் என்பார்கள், சேரி தனியாக இருக்கிறதே என்று கேட்டால். அது தப்புதான் கொஞ்சகொஞ்சமாக தான் சரியாகும், இப்போ எல்லாம் யாரு சார் சாதி பாக்குறாங்க என்பார்கள், ரொம்ப கேள்வி கேட்டால் குவாண்டம் பிசிக்கஸ் பற்றி நக்கீரர் என்ன சொல்றார் தெரியுமா என்று முதலில் இருந்து தொடங்குவார்கள்

கடைசி நாலாவது வகை, பவுத்தம் சமணம் போன்ற மதங்களுக்கு ஆதி வடிவம் தான் ஆசீவகம், யானை, பாம்பு, சிலைகள் தமிழர் ஆதிமதம், அய்யனார் சாஸ்தா என்று கலந்து கட்டி, ஆசு + ஈவு+ அகம், அப்போவே சித்தர்கள் கால யந்திரம் வைத்திருந்தார்கள், தமிழர்களுக்கு தொன்மங்களின் மேலே பற்று இல்லை அவற்றை காக்கவில்லை என்று கிறிஸ்டோபர் நோலன் ரேஞ்சுக்கு, பெரிய திரைக்கதை எல்லாம் சொல்லுவார்கள், ஏதாவது கேட்டால் நகை கடை விளம்பரத்தில் வருவது போல நம்பிக்கை தானே எல்லாம் என்று  முடித்து கொள்வார்கள், சாதி குறித்து எல்லாம் என்ன பெரிய பேச்சு என்பது போல மெத்தனமாக ஒரு லுக் விடுவார்கள், கோரான குணப்படுத்த ஆசீவகம் தான் ஒரே வழி அதில் ஒன்று தான் கபசுர குடிநீர் என்பார்கள், ரொம்ப கேள்வி கேட்டா போதிதர்மர் கூட ஆசீவகம் தான், லைன் போட்டு தர்றேன் பேசுறியா என்று ஆரம்பிப்பார்கள் 

பார்க்க பேச எப்படி இருந்தாலும், மேலே சொன்ன, நாலு வகையும் மறக்காமல் சொல்வது

ஈ.வே.ரா தான் தமிழ் நாட்டை கெடுத்தார்