Saturday, June 01, 2019

முனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம் பார்ப்பனரல்லாத ஜட்ஜிகளின் தீர்ப்பு

முனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம் பார்ப்பனரல்லாத ஜட்ஜிகளின் தீர்ப்பு

                                                          தந்தை பெரியார்

ஏழு எட்டு மாதங்களுக்கு முன்பு பாலக்காடு கல்பாத்தி ரோட்டில் ஒரு ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த ஈழவர் ஸ்ரீ சங்கரன் என்பவர் சர்க்கார் வேலை யாக பைசைக்கிள் மீது சென்றதற்காக அவ்வீதியில் உள்ள ஒரு பார்ப்பனர் அவரைத் தடுத்து நிறுத்தி மிரட்டி ரோட்டிற்கு புண்ணியார்ச்சனையையும் கும்பாபிஷேகமும் செய்ய 15 ரூபாய் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தி வண்டியையும் மேல் வேஷ்டியையும் பிடுங்கி வைத்துக் கொண்டதற்காக, போலீசார் இவ்விஷயமறிந்து ஸ்தலத்திற்குப் போய் பை சைக்கிளையும் வேஷ்டியையும் பிடுங்கி கொடுத்துவிட்டு அந்தப் பார்ப்பனர் மீது கிரிமினல் நடவடிக்கை நடத்தினார்கள்.

 அதில் பார்ப்பனருக்கு 30 ரூபாய் அபராதம் விழுந்தது.  அதன் பேரில் பார்ப்பனர்கள் ஐகோர்ட்டில் அப்பீல் செய்து கொண்டார்கள்.  அப்பீலில், பார்ப்பனரல்லாத இரண்டு ஐகோர்ட் ஜட்ஜிகள் பார்ப்பனர் செய்தது அக்கிரம மென்றும் ஜனங்கள் வரிப் பணத்தில் முனிசிபா லிட்டியாரால் பரிபாலிக்கப்படும் எந்த ரோட்டிலும் யாரும் நடக்கலாம் என்றும், பார்ப்பனர் 30 ரூபாய் அபராதம் கொடுக்க வேண்டியதுதான் என்றும் தீர்ப்புச் சொல்லி விட்டார்களாம்.

  இது மிகவும் சந்தோஷப்படக்கூடிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை. இதே ஐகோர்ட் ஜட்ஜ் ஸ்தானத்தில் வர்ணாசிரமப் பார்ப்பனரோ அல்லது தன்னை உயர்ந்த ஜாதி என்று நினைத்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரோ அல்லது பார்ப்பனர் சொல்லுப்படி ஆடுகிற பார்ப்பனரல்லாதாரோ (நமது மந்திரிகளைப் போல்) ஜட்ஜிகளாய் இருந்திருந்தால் இந்த கேசின் முடிவு இப்படியிருக்குமென்று உறுதி கூற முடியுமா? ஜட்ஜிமெண்டு என்பது மிக பரிசுத்த ஜட்ஜிமெண்டு என்பதே அவரவர்கள் மனச்சாக்ஷியைப் பொறுத்ததாகத்தானே இருக்கும்.  மனச்சாக்ஷி என்பதே எல்லோருக்கும் ஒன்றுபோல் இருக்காது.

 ஐரோப்பியருக்கு மாடு சாப்பிடுவது மனச்சாக்ஷிக்கு விரோதமாகாது.  பார்ப்பனரல்லாதாருக்கு ஆடு தின்பது மனச்சாட்சிக்கு விரோதமென்பதாகத் தோன்றாது.  பார்ப்பனருக்கு இவர்கள் சாப்பிடுவதை கண்ணில் கூட பார்க்கக்கூடாது என்பது மனச்சாக்ஷிக்கு விரோதமாகத் தோன்றாது.  ஆதலால் இதே ஐகோர்ட் ஜட்ஜி ஸ்தானத்தில் ஒரு வருணாசிரம பார்ப்பனர் இருந்தால் அவர் கண்டிப்பாய் இந்த ரோட்டில் நடந்தது தப்பு என்றும் போட்ட அபராதம் வாப்பீஸ் செய்து நடந்தவனை தண்டிக்க வேண்டும் என்று சொன்னால் தான் அவர் மனச் சாக்ஷிப்படி நடந்தவராவர்.

 அதனால்தான் நாமும் நமது சுயமதிப்பையும் மனச்சாக்ஷியையும் உத்தேசித்து ஐகோர்ட் ஜட்ஜ் முதல் எல்லா ஸ்தானங்க ளிலும் பார்ப்பனரல்லா தாரே இருக்கவேண்டுமென்று கோருகிறோமே  அல்லாமல் வேறில்லை.  இதுபோலவேதான் பார்ப்பனர்களுக்கு தங்களது ஆதிக்கத்தை உத்தேசித்து பார்ப்பன ஜட்ஜிகளே இருக்க வேண்டுமென்று கோருகிறார்கள். அவர்கள் கோருவதைப்பற்றி நாம் அவர்கள் பேரில் குற்றம் சொல்ல வரவில்லை.  ஆனால் அது நிறைவேறினால் நமது சமூகத்திற்கும் நமது சுயமரியாதைக்கும் ஆபத்து என்றுதான் சொல்வதோடு நம்மால் கூடுமானவரை தடுக்க வேண்டியதும் நம்முடைய கடன் என்கிறோம்.

 அவர்கள் 4000, 5000 சம்பளம் வாங்குவதாலும் அவர்கள் ஜாதி வக்கீல்களையே முன்னுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்து அவர்களுக்கு அனுகூலம் செய்து நம்ம ஜாதி வக்கீல்களை சிறுமைப்படுத்தி  விரோதம் செய்வதினாலும் மற்றும் அவர்கள் ஜாதியாருக்கே முனிசீப்பு, சப் ஜட்ஜி, ஜட்ஜி முதலிய உத்தியோகங்கள் கொடுத்து நம்முடைய ஜாதியாரின் உரிமையை ஒழிப்பதினாலும் நமக்கு அவ்வளவு ஆபத்திருப்பதாய் நாம் நினைப்பதில்லை. 

ஆனால் கல்பாத்தி பொது ரோட்டு வழிநடை உரிமை போன்ற விஷயங்களில் பார்ப்பன ஜட்ஜிகளிடம் இருந்தும் பார்ப்பன சட்டமெம்பர்களிடமிருந்தும் நமது சுயமரியாதைக்கும் அனுகூலமான தீர்ப்பு பெற முடியுமா என்கிற விஷயத்தில்தான் பயமாயிருக்கிறது. 

உதாரணமாக கல்பாத்தி ரோட்டில் யாரும் நடக்கலாம் என்று சட்டசபையில் தீர்மானம் ஏற்பட்டும் சட்டமெம்பர் ஸ்ரீமான் சர்.சி.பி. பார்ப்பனர் வேலையிருந்தால்தான் போகலாம் என்று சொல்லி வியாக்கி யானம் செய்யவில்லையா?  அதுபோலவே இந்த வழக்கும் பார்ப்பன ஜட்ஜாயிருந்தால் ஈழவர் அந்த ரோட்டில் நடந்தது குற்றமானாலும்  நடக்க உரிமையில்லை. ஆனாலும், அதற்கு வேறு மார்க்கம் செய்து நடக்கவிடாமல் செய்துவிட வேண்டுமே அல்லாமல் தடுத்தது குற்றம் என்றாவது சொல்லி அபராதத்தைக் காயம் செய்ய அவரது மனச்சாக்ஷி சொல்லுமே அல்லாமல் பார்ப்பனரல்லாத ஜட்ஜியைப் போல் சர்க்கார் பொது ரோட்டில் யாரும் தாராள மாய் போகலாம் என்று துணிந்து இயற்கை தர்மத்தை சொல்லியிருப்பார் என்று எண்ண நமக்கு தைரியமில்லை.

 இது எப்படியோ இருக்கட்டும். இனியாவது பாலக்காட்டு பார்ப்பனர்கள் கல்பாத்தி ரோட்டில் யாரும் நடக்க சுதந்திரம் கொடுப்பார்களா?  அல்லது அந்த தீர்ப்பை வாங்கி பாலக்காட்டு முனிசீப்பு கோர்ட்டில் நிறைவேற்றி சர்க்கார் பந்தோபஸ்துடன் போய்க் கொண்டு இருக்க வேண்டுமா என்று தான் கேட்கிறோம். அது போலவே, திருநெல்வேலி சந்நியாசி அக்கிரஹாரப் பார்ப்பனர்களுக்கும் கும்பகோணம் அய்யங்கார் தெரு, வியாசராய மடத்தெரு, பட்டாச்சாரி தெரு பார்ப்பனர்களுக்கும் இந்த தீர்ப்பே போதுமா அல்லது அங்கும் பெரிய கிளர்ச்சி செய்து பார்ப்பனர்களின் அட்டூழியங்களை மக்களுக்கு வெளிப்படுத்தி, சத்தியாக்கிரகம் செய்து ஜெயிலுக்குப் போய் ஐகோர்ட்டுக்குப் போய் நீதி பெற வேண்டுமா என்றுதான் கேட்கிறோம்.

  அல்லது மகாத்மா இந்த ஊர்களுக்கு வந்த சமயம் பார்த்து இந்த தெருவுகளில் நுழைந்து இந்த பார்ப்பனர்களின் நிலைமையை அவர் அறியச் செய்ய வேண்டுமா என்றுதான்  கேட்கிறோம்.  ஆனால், இந்தப் பார்ப்பனர்கள் எதற்கும் பயப்படமாட்டார்கள்.  ஏனெனில் ஐகோர்ட், கவர்ன்மெண்டு, சட்ட மெம்பர், சட்டசபை மற்றும் அதிகாரம் செல்வாக்கு முதலியவைகளில் அவர்கள் இருப்பதால் இதையெல்லாம் கால் தூசிக்கு சமானமாய்தான் நினைப்பார்கள்.

 ஆனாலும், பாமர மக்கள் இவ்வாங்கில அரசாட்சியிலேயே தெருவில் நடக்க தெருவைத் தொடாமல் பைசைக்கிளின் மேல் போக உரிமை கொடுக்க மறுக்கும் இக்  கல்நெஞ்சக் கூட்டங்கள் தங்களுக்கு சுய ஆட்சி வந்தால் எப்படி நடப்பார்கள்? நம்மை எவ்வித கொடுமை செய்வார்கள்?  நம்மை மனு தர்ம சாஸ்திரமோ  பராசரஸ்மிருதியோ அல்லது  இதில் பட்ட ஆச்சாரிய சுவாமிகளோதான் ஆளுவார்கள்.  ஆனாலும் மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி வந்துவிட்டால் பிறகு என்ன ஆகும் என்பதுதான் நமது கவலை.

       குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.03.1927
#பெரியார்காலவரிசைப்பதிவுதீண்டாமை.

Wednesday, May 29, 2019

இந்து மதத்தை ஏன் நாங்கள் எதிர்க்கிறோம்

இந்து மதத்தை ஏன் நாங்கள் எதிர்க்கிறோம்...?

சொந்த மகனின் திருமணம் என்றாலும், விதவைத் தாய் முன் நின்று வாழ்த்த முடியாது. 

ஏனென்று கேட்டால், கழுத்தில் தாலி இல்லை; நெற்றியில் குங்குமம் இல்லை; பூ இல்லை, பொட்டு இல்லை, என்று சொல்லி, நம்முடைய சொந்தத் தாயையே விதவை என்று சொல்லி, தள்ளி வைத்தக் கொடுமைக்குப் பெயர்தான் ஆரிய மதம் - வேத மதம் - இந்து மதம் என்கிற வைதீக மதம். இதுதான் பார்ப்பனீயம் என்பதை நன்றாக நினைத்துப் பாருங்கள். 

அதற்காகத்தான் அந்த மதத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.

Tuesday, May 28, 2019

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு:

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு: விடுதலை இராசேந்திரன்

நந்தன் :
தில்லை நடராசன் கனவில் வந்ததாகக் கூறி, சிவபக்தனாகி, ஆண்டவனை தரிசிக்க வந்தவன் நந்தன். தீண்டப்படாத சமூகத்தைச் சார்ந்தவன். கொள்ளிடம் என்ற சிற்றூரிலிருந்து புறப்பட்டு தில்லைக்கு நடராசனை தரிக்க வந்தபோது தீட்சதப் பார்ப்பனர்கள் தீயில் குளித்து தீட்டைப் போக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். நந்தன் தீயில் குதித்தான். அப்போது தில்லை நடராசன் நேரில் தோன்றி, எதிரே இருந்த நந்தியை விலகச் சொல்லி, நந்தனுக்கு கர்ப்பக்கிரகத்துக்கு வெளியில் வைத்தே ‘தரிசனம்’ தந்ததாக ‘பெரிய புராணத்தில்’ சேக்கிழார் எழுதியுள்ளார். உண்மை என்னவென்றால், நந்தன் தீயில் எரிக்கப்பட்டான் என்பதே.
சம்பூகன் :
பார்ப்பனர்கள் மட்டுமே கடவுளை நேரடியாக தவம் செய்ய உரிமை பெற்றவர்கள். ராமன் ஆட்சியில் சம்பூகன் என்ற ‘சூத்திரன்’ கடவுளை நோக்கி நேரடியாக தவம் செய்தான். பார்ப்பனர்கள் – இதை அதர்மம் என்று கூறி, சூத்திரன் தவம் செய்ததால், அக்கிரகாரத்தில் பிறக்க வேண்டிய ஒரு குழந்தை, தாயின் கர்ப்பத்திலே இறந்துவிட்டதாக புகார் கூறுகிறார்கள். ராமன் – ‘பிராமண’ தர்மத்தைக் காப்பாற்ற, தவமிருந்த சம்பூகன் தலையை வெட்டினான். இது வால்மீகி இராமாயணத்தில் உள்ள செய்தி. தமிழில் கம்ப இராமாயணத்தில் கம்பன் இதை எழுதாமல் மறைத்து விட்டான்.
கர்ணன் :
மகாபாரதத்தில் வரும் கர்ணன் – கொடை வள்ளல். அரச குலத்தில் பிறந்து தேரோட்டி குலத்தில் வளர்ந்தவன். தான் ‘சூத்திரர்’ என்பது தெரிந்தால், பார்ப்பனர் பரசுராமன், தனக்கு போர் தொடர்பான சாத்திரங்களைக் கற்றுத் தர மாட்டார் என்பதால், உயர்குலத்தவன் என்று பொய் கூறி, கல்வி கற்கிறான். ஒரு நாள் பரசுராமன் கர்ணன் மடியில் படுத்து உறங்கினார். கர்ணனை மாட்டிவிட சூழ்ச்சி செய்த இந்திரன், வண்டாக மாற்று உருவம் கொண்டு கர்ணனின் தொடையைத் துளைக்கிறான். தொடையிலிருந்து குருதி கொட்டுகிறது. கர்ணன், தனது குருவின் தூக்கம் கலைந்து விடக்கூடாது என்று, அந்தத் துன்பத்தைத் தாங்கிக் கொள்கிறான். ஆனால், குருதி ஈரம், பரசுராமன் தூக்கத்தை கலைக்கிறது. விழித்து எழுந்த பரசுராமன், கர்ணனின் குரு பக்தியை நெஞ்சுரத்தைப் பாராட்டவில்லை. “நீ பிராமணன் அல்லன்; அதனால்தான் வண்டு துளைத்த பெருந் துன்பத்தைத் தாங்கியிருக்கிறாய். எனவே என்னிடம் பிராமணன் என்று பொய் சொல்லி நீ கற்ற போர்க்கலைகளை, அதைப் பயன்படுத்த வேண்டிய நேரத்தில் நீ மறந்து விடவேண்டும் என்று சபிக்கிறேன்” என்று கூறுகிறார். இந்த ‘சாபமே’ கர்ணனின் கடைசிக் கால சாவுக்கும் காரணமாகிறது. இது புராணம்தான். ஆனால், இதன் வழியாக பார்ப்பன வெறியும், அவர்களின் ‘சூத்திர’ வெறுப்பும் அம்பலமாகிறது.
ஏகலைவன் :
வேட்டுவ குலத்தைச் சார்ந்த (தாழ்ந்த சாதி – பழங்குடி) ஏகலைவன் – பார்ப்பனரான துரோணரிடம் வில்வித்தைக் கற்றுத் தரக் கேட்டான். ‘நீ கீழ் சாதி கற்றுத் தர முடியாது’ என்று துரோணன் மறுக்கிறான். ஏகலைவன் துரோணன் போல ஒரு உருவத்தைச் செய்து, அதையே குருவாகக் கருதி, வில் வித்தையைக் கற்கிறான். ஒரு நாள், அந்த துரோணன் உருவத்தின்மீது நாய் சிறுநீர் கழித்தது. நெடுந் தொலைவிலிருந்து அதைப் பார்த்த ஏகலைவன், சீற்றமடைந்து மிக நுட்பமாக, குறி பார்த்து அம்பு வீசி, நாயைக் கொல்கிறான். இவ்வளவு திறமையாக அம்பு வீசிய ஏகலைவனைப் பாராட்டவில்லை துரோணன். என்னுடைய உருவத்தை வைத்துத் தானே, வில் வித்தையை கற்றுக் கொண்டாய். எனவே குருதட்சணையாக, கட்டை விரலை வெட்டி கொடு என்கிறான். ஏகலைவன் சிறிதும் தயக்கமின்றி கட்டை விரலை வெட்டித் தருகிறான். கட்டை விரலையே வெட்டிவிட்டால், வில்லை எய்த முடியாது.
– மேற்கண்ட இரு நிகழ்ச்சிகளும் அன்றைய பார்ப்பனர்கள், சூத்திரர்கள் எந்தக் கல்வியும் கற்கக் கூடாது என்று தடை விதித்திருந்ததை எடுத்துக் காட்டுகின்றன.
நவ நந்தர்கள் :

1) நந்தர்கள் சமண மதத்தினர் – வைதீகத்துக்கு எதிரிகள் – ஒரிசா தக்காணம் பகுதி வரை ஆட்சி செய்தனர். தலைநகர் பாடலிபுத்திரம் – இவர்கள் ஆட்சியின் புகழ், செல்வாக்குப் பற்றி சீன யாத்திரிகர் யுவான் சுவாங் மற்றும் பல நூல்கள் பேசுகின்றன. நந்தர்களின் செல்வச் செழிப்பு பற்றி அகநானூற்றிலும் பாடல் வருகிறது.

2) நந்தர்கள் – தாழ்ந்த குலத்தினர் – புராணங்கள் நந்தர்களை இழிகுலத்தினர், நாத்திகர்கள், கொடுங்கோலர்கள் என்று வசைபாடுகின்றன.

3) ஆட்சியின் முக்கிய பதவிகளில் – அமைச்சர் பதவிகளில் பார்ப்பனர்களைப் புறக்கணித்து, சமண அறிஞர்களையே நியமித்ததே, பார்ப்பனர் எதிர்ப்புக்குக் காரணம்.

4) “நந்தர்களின் கொடுங்கோன்மையிலிருந்து புனித சாஸ்திர நூல்களையும், ஆயுதங்கள் பற்றிய சாஸ்திரங்களையும், அவர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த நாட்டினையும், எவன் முன் வந்து காப்பாற்றினானோ அவனால், (சாணக்கியன் எனும் கவுடல்யனால்) ‘அர்த்தசாஸ்திரம்’ எனும் இந்த நூல் எழுதப்பட்டது” என்று சாணக்கியன் (பார்ப்பான்) கூறியுள்ளான்.
சந்திரகுப்தன் சதி :

1) நந்தன் வம்சத்தின் கடைசி மன்னனான தனநந்தனின் படைத் தலைவன் சந்திரகுப்தன். இவன் நந்தர்களை ஒழித்துவிட்டு ஆட்சியைப் பிடிக்க விரும்பினான். பார்ப்பனர்கள் இந்த சதியில் ஈடுபட்டனர்.
2) சதி முறியடிக்கப்பட்டது. சந்திரகுப்தன் நாடு கடத்தப்பட்டான்.
3) நந்தர்களின் அரண்மனையில் விருந்து ஒன்றில் முறை தவறி நடந்து கொண்ட சாணக்கியன் எனும் வைதீகப் பார்ப்பான், அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட்டான். அவமானத்தால் கோப மடைந்த சாணக்கியன், காடு நோக்கி ஓடினான்.
4) கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர் படையெடுத்து வந்து பியாஸ் நதிக்கரையில் தங்கியிருந்த காலம் அது. காட்டுக்குள் இருந்த சந்திரகுப்தன், அலெக்சாண்டரை சந்தித்து, நந்தர்கள் ஆட்சி செய்த மகத நாட்டின் மீது படை எடுக்குமாறு வலியுறுத்தினான். அடிக்கடி அலெக்சாண்டரை வற்புறுத்தினான்.
5) அலெக்சாண்டருக்கு இதில் உடன்பாடு இல்லை. தொடர்ந்து நச்சரித்து வந்ததும், நந்தர்களை ‘இழிகுலத்தினர்’ என்று கூறியதும், அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில், சந்திர குப்தனைப் பிடித்துக் கொன்றுவிடும்படி, தனது அலுவலர்களுக்கு அலெக்சாண்டர் ஆணை யிட்டார்.
6) தலை தப்பினால் போதும் என்று சந்திரகுப்தன், அலெக்சாண்டர் படை முகாமிலிருந்து வெளியேறி, விந்திய மலைக்காடுகளில் அலைந்துக் கொண்டிருந்த சாணக்கியனோடு சேர்ந்து கொண்டான்.
7) சாணக்கியன் காட்டில் கிடைத்த ஒரு புதையலைக் கொண்டு பெரும் பணம் பெற்றான். அவன் சந்திரகுப்தனுக்கு பெரும் படையை திரட்டித் தந்தான். திருடர்கள், கொள்ளைக் கூட்டத்தினர், கூலிக் கும்பல், அப்படையில் இடம் பெற்றனர்.
8) போர் நடத்தி, நந்த வம்சத்தின் கடைசி மன்னன் தனநந்தனை வென்று, சந்திரகுப்தன் ஆட்சிக்கு வந்தான். இவனது வம்சம் மவுரிய வம்சம். இவனது அமைச்சரவையில் பார்ப்பன சாணக்கியன் இடம் பிடித்தான். பார்ப்பன கொடுங்கோல் ஆட்சி நடத்தினான்.
9) மக்கள் எதிர்ப்புக்கு உள்ளான சந்திரகுப்தன், இறுதிவரை அச்சத்துடனே வாழ்ந்தான். சாணக்கியன் – சந்திரகுப்தனைப் பயன்படுத்தி, பார்ப்பன மதத்தைப் பரப்பத் திட்டமிட்டான். முதலில், சாணக்கியனுக்குப் பணிந்து போன சந்திரகுப்தன், இறுதி காலத்தில் மனம் திருந்தி, சமணத்தில் ஈடுபாடு கொண்டான். சமண மதம், பார்ப்பன எதிர்ப்பு மதமாகும். பார்ப்பன சூழ்ச்சியில் சிக்கி, பிறகு திருந்திய சந்திர குப்தன், உள்ளம் உடைந்து, பட்டினி விரதம் இருந்து உயிர் நீத்தான்.
அசோகன்
1) பார்ப்பன சாணக்கியன் துணையோடு ஆட்சியைக் கைப்பற்றிய மவுரியர்கள், பார்ப்பனர்களுக்கு பயன்படுவார்கள் என்ற பார்ப்பனர் பேராசை பொய்த்துப் போனது.
2) மகதம் (இன்றைய பீகார், உ.பி. பகுதிகள்) பார்ப்பனியத்துக்கு எதிராகவே இருந்து வந்தது. மவுரியப் பேரரசு, மகதத்தைத் தலைநகராகக் கொண்டே ஆட்சி செய்தது. அசோகன், சந்திர குப்தனின் பேரன் 38 ஆண்டுகாலம் ஆட்சி செய்தான். புத்தர் கொள்கைகளைத் தீவிரமாகப் பரப்பினான்.
3) பார்ப்பன தர்மங்களைப் புறக்கணித்து அனைவரும் சமம் என்று அறிவித்தான் அசோகன். பார்ப்பன யாகங்கள், உயிர்ப் பலிகள், குதிரை யாகங்களைத் தடை செய்தான்.
4) நாடு முழுதும் கல்வெட்டுகளை நிறுவி, ஆணைகளைப் பிறப்பித்தான். பார்ப்பனர்கள் கொதித்தனர்.
5) பார்ப்பனர்கள் நாடு முழுதும் – அரசுக்கு எதிராக சதி செய்தனர்; அரண்மனையிலும் ஊடுருவினர்.
6) அசோகனின் 29 ஆம் ஆண்டு ஆட்சியில் பட்டத்து ராணி “அசந்தி மித்திரா” மரணமடைந்தாள். அதன் பிறகு ‘திஷ்ய ரஷிதா’ என்பாளை பட்டத்து ராணியாக்கினார். இவருக்கு பவுத்தத்தின் மீது ஈடுபாடு இல்லை. அரசன் புத்தரின் நினைவாக – அவர் அறிவு பெற்றதாகக் கூறப்படும் அரச மரத்தின் (போதி மரம்) மீது பற்றுக் கொண்டு வளர்த்தான். இந்த பட்டத்து ராணி, ‘விஷ முள்’ கொண்டு மரத்தைக் குத்தி காய்ந்துப் போகச் செய்து விட்டாள். ஆறாத் துயர் கொண்ட அசோகன், மரம் முழுமையாக பட்டுப் போகாமல், ஒரு பகுதியையாவது காப்பாற்றினான் என்று இலங்கையின் ‘மகா வம்சம்’ என்ற புராண நூல் கூறுகிறது.
7) அசோகன் தனது இறுதிக் காலத்தில் தன்னிடமிருந்த பொருள்களை எல்லாம் பவுத்த மடத்திற்கும் பவுத்தர்களுக்கும் வழங்கலானான்.
அசோகனுக்குப் பிறகு….

8) மவுரிய ஆட்சியின் கடைசி மன்னன் ‘பிரகத்ரன்’
கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். பார்ப்பன ஆதிக்கம் தலை விரித்தாடியது.
9) மவுரிய மன்னருக்கு எதிராக பார்ப்பனர்கள் கலவரங்களைத் தூண்டிவிட்டனர். மகத நாட்டின் படைத் தலைவனாக இருந்த ‘புஷ்யமித்திர சுங்கன்’ எனும் பார்ப்பனருடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டனர்.
10)மன்னன் பிரகத்ரன் – படைவீரர்களைப் பார்வை யிட்டு வரும்போது, புஷ்யமித்திரன் பட்டப் பகலில் தந்திரமாக மன்னனை கத்தியால் குத்தி கொலை செய்து, மகதத்தின் ஆட்சியைக் கைப்பற்றினான். பவுத்த நெறி சீர்குலைந்தது.
புஷ்யமித்திர சுங்கன்

1) இவன் பார்ப்பான். சுங்கர் குலம்; இவனது பரம்பரை 112 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. பவுத்த மடாலயங்கள் கல்வெட்டுகள் இடித்துத் தரைமட்ட மாக்கப்பட்டன.
2) பாடலிபுத்திரத்தில் (இன்றைய பீகார் பகுதி) மிகச் சிறப்பான ‘குக்குடாரமா’ எனும் பவுத்த மடாலயத்தை அழித்திட புஷ்யமித்திரனே சென்றான். அப்போது உள்ளே இருந்து சிங்கம் உறுமியது போன்ற சத்தம் கேட்டு, பயந்து ஓடி வந்து தனது படையினரைக் கொண்டு மடாலயத்தை தீயிட்டு கொளுத்தச் செய்தான். மீண்டும் அசுவமேதயாகம் (குதிரைகளை எரிக்கும் யாகம்) கொண்டு வந்தான்.

3) சாகலா என்ற இடத்தில் தங்கி இருந்தபோது, ‘ரமண’ என்ற புத்தத் துறவியின் தலையினைக் கொண்டு வந்தால் நூறு ‘தினார்கள்’ பரிசு என்று அறிவித்தான்.
4) அடுத்து வந்த குப்தர்களின் பார்ப்பன ஆட்சிக்கு முன்னோடியாக, அதற்குப் பாதை அமைத்துத் தருவதாக சுங்கர்களின் ஆட்சி விளங்கியது என்கிறார் வரலாற்றுப் பேராசிரியர் சத்தியநாத அய்யர்.
பவுத்தர்களைப் படுகொலை செய்த பார்ப்பனர்கள்

5) புஷ்யமித்திரன், அசோக மன்னன் நிறுவிய 84000 கல்வெட்டுத் தூண்களை இடித்தான்.
6) பவுத்த பிக்குகளும், பவுத்தத்தைத் தழுவிய மக்களும் படுகொலை செய்யப்பட்டனர்.
7) காஷ்மீரத்தை ஆண்ட ஜாலுக்க என்ற காஷ்மீர் மன்னன், பவுத்த மடாலயத்திலிருந்து எழுப்பப்படும் சங்கொலி, தனது தூக்கத்தைக் கெடுப்பதாகக் கூறி, மடாலயத்தை இடித்துத் தள்ளினான். (தகவல் ஆய்வாளர்: கல்கணன்)

8) அபிமன்யூ என்ற காஷ்மீரை ஆண்ட பார்ப்பன மன்னன் பவுத்தர்களை இனப் படுகொலை செய்துவிட்டு கடும் பனிப் பொழிவினால் இறந்தார்கள் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தான். (ஈழத் தமிழர்களை சிங்கள ராணுவம் படுகொலை செய்ததுபோல) இந்தப் படுகொலைகளை குளிர்காலங்களில் நடத்தினான். அந்த 6 மாதங்களிலும் தனது நாட்டை விட்டு வெளியேறி, ஒரு பள்ளத்தாக்குப் பகுதிக்குப் போய்விடுவான். திட்டமிட்டபடி பவுத்தர்கள் படுகொலைகள் நடக்கும். கேட்டால் பனியில் உறைந்து இறந்தார்கள் என்று பொய் சொல்வான். பனிப் பொழிவில் பார்ப்பனர்கள் ஏன் இறப்பதில்லை என்று கேட்டதற்கு, “அவர்களிடம் உள்ள ஆன்மீக சக்தியால் மரணத்தைத் தடுக்கிறார்கள்; அந்த ஆன்மீக சக்தியைப் பயன்படுத்தி, கடவுளுக்கு யாகங்களையும், படையல்களையும் செய் கிறார்கள்” என்று பதில் கூறினான். (ஆதாரம்: கல்கணன்)
9) பவுத்த மதத்தினர் ஒரு பெண்ணைக் கடத்தியதாகக் கூறி ஆயிரக்கணக்கான பவுத்த மடாயலங்களைத் தீ வைத்துக் கொளுத்தினான், காஷ்மீர் அரசன் கின்னரன்.
10)காஷ்மீர் மட்டுமன்றி பிற பகுதிகளிலும் பவுத்தர்கள் படுகொலை செய்யப்பட்டனர். போதி மரத்தை (அரசமரம்) வெட்டி வேரோடு சாய்க்க பல முறை முயன்றான் கேரளாவை ஆண்ட குமாரிலபட்டன். அவனது கொடுமை தாங்காமல், பவுத்த மதத்தினர் அனைவரும் கேரளாவை விட்டு வெளியேறினர்.

சுதன்வனன் எனும் மன்னன், தனது குடிமக்களுக்கு பிறப்பித்த ஆணை: “தனுஷ்கோடி பாலத்திலிருந்து இமாலயம் வரை, பவுத்த மதத்தினரைக் குழந்தைகள் முதியவர்கள் என்று பாராது அனைவரையும் கொன்றுவிட வேண்டும். அவ்வாறு செய்யாதவர்கள் கொல்லப்படுவார்கள்”. (தகவல்: சங்கர விஜயம்)

11)“பிற மதத்தின் மீது அடக்குமுறையை ஏவி விடுவதும், அட்டூழியங்கள் புரிவதும் உலகம் முழுதும் நடந்துள்ளது. ஆனால், பவுத்த மதத்தை இந்தியாவை விட்டுத் துரத்துவதற்காக செய்யப்பட்ட அடக்குமுறைகளுக்கும், அட்டூழியங் களுக்கும் ஈடான வேறு ஒன்று உலகின் எந்த மூலையிலும் நடந்தது இல்லை”. (ஆய்வாளர் டபுள்யு. டி. வில்கின்ஸ்)
பார்ப்பனக் கொடுமைகளை – புத்தமதம் எதிர்த்த தற்காக வரலாற்றில் பார்ப்பன கொலைக்காரக் கூட்டம் இவ்வளவு படுகொலைகளையும், அழிப்புகளையும் செய்தது. புத்தருக்குப் பிறகு, பார்ப்பனர்களை எதிர்த்து, அதில் வெற்றிப் பெற்ற ஒரே வரலாற்று நாயகன் பெரியார் மட்டுமே.
தேவ பூதி

1) சுங்க வம்சத்தின் கடைசி மன்னன் தேவ பூபதி.
2) அவனிடம் அமைச்சராக இருந்த வாசுதேவன் எனும் பார்ப்பனன், மன்னனின் காமக்கிழத்திக்கு அரசியைப் போல் வேடமிட்டு, ‘அந்தப்புரத்துக்கு’ அனுப்பி, மன்னனை தந்திரமாகக் கொலைச் செய்தான். (ஆதாரம்: பாணரின் ‘ஹர்ஷ சரிதம்’)
3) கன்வ குலத்தைச் சார்ந்த வாசுதேவன் பரம்பரை 40 ஆண்டுகள் – ‘பார்ப்பன தர்ம’ ஆட்சி நடத்தியது.
குகசிவன்
1) புத்த மதம் வட இந்தியா முழுதும் அழிக்கப்பட்ட நிலையில் கலிங்க நாட்டில் மட்டும் (கி.பி. 4 ஆம் நூற்றாண்டு) குகசிவன் ஆட்சி நடந்தது. இவன் புத்தத்தின் தீவிர ஆதரவாளன். சிற்றரசன், புத்தரின் புனிதப்பல், கலிங்கத்தில் (இன்றைய பீகார் பகுதி) இருப்பதே, அங்கு புத்தர் கொள்கை ஆட்சி நீடிக்கக் காரணம் என்று கருதிய பார்ப்பனர்கள், பல முறை, புத்தரின் புனிதப் பல்லைக் கடத்திப் போக முயற்சித்தனர். அந்த சூழ்ச்சியை குகசிவன் முறியடித்து, பார்ப்பனர்களை நாடு கடத்தினான்.
2) குகசிவன் – மகத நாட்டை ஆண்ட சமுத்திர குப்தனுக்கு கப்பம் கட்டி வந்த சிற்றரசன். பார்ப்பனர்கள், சமுத்திர குப்தனிடம், குகசிவனுக்கு எதிராக, தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று முறையிடவே, சமுத்திரகுப்தன், குகசிவனையும், புனித பல்லையும் கொண்டுவர படை அனுப்பினான். பின்பு பார்ப்பனர்கள், பொய்ப் பிரச்சாரத்தை உணர்ந்து, மீண்டும் புனிதப் பல்லை குகசிவனிடம் ஒப்படைக்க, அவனிடம் நேசம் பாராட்டினான்.
3) தங்கள் சூழ்ச்சி பலிக்காமல் போகவே, பார்ப்பனர்கள், குகசிவனுக்குப் பகைவனான சுவேதனன் எனும் மன்னனுக்கு தூபம் போட்டனர். சுவேதனன், புத்தர் பல்லினை மீட்க குகசிவனுடன் போரிட்டான். பல்லாயிரம் பேர் மாண்டனர். முடிவில் குகசிவனும் மாண்டான். ஆனால், புத்தரின் புனிதப் பல், எதிரிகளின் கையில் சிக்கவில்லை. குகசிவன் விருப்பப்படி, அவனது மகளும் மருமகளும், புனிதப் பல்லை இலங்கைக்குக் கொண்டு போய் விட்டனர். புனிதப் பல்லை வரவேற்ற அந்நாட்டு மன்னன் (கீர்த்தி ஸ்ரீ மேகவர்ணன்) அதனை வைத்து ஒரு கோபுரம் அமைத்தான்.
சசாங்கன் (கி.பி. 603 – 620)

மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய பகுதிகளை அரசாண்ட கவுட மன்னன் சசாங்கன், புத்த மதத்தின் எதிரி, பவுத்தர்களையும், பவுத்த மடாலயங்களையும் அழித்தான். புத்த சின்னங்களை அழித்தான். புத்தரின் நினைவாகப் போற்றும் அரச மரத்தையும் (ஏற்கனவே அழிக்கப்பட்டு, அசோகனால் பாதுகாக்கப்பட்டது) வெட்டினான். பிறகு மகத மன்னன் பூர்ணவர்மனால் அரச மரம் (போதி மரம்) முற்றிலும் அழிந்துவிடாமல் மீண்டும் நீரூற்றிக் காப்பாற்றப்பட்டது. போதி மரத்தின் அடியில் இருந்த புத்தர் சிலை ஒன்றையும் அழிக்க முயன்றான்.

ஹர்ஷ வர்த்தனன் (கி.பி. 606 – 647)

1) இவன் வைசிய மரபைச் சார்ந்தவன். கன்னோசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இவன், வர்ணாஸ்ரமப் பித்தன். பார்ப்பனர் களுக்கும், புரோகிதர்களுக்கும் பொருட்களை வாரி வாரி கொடுத்தான். பார்ப்பனர்கள் வீடுகளில், முன்பாக மதுவை தயாரிக்கும் சோமச் செடிகள், பலிக்குரிய பொருட்கள், வேள்வித் தீக்குப் பயன்படும் பொருட்கள் மண்டிக் கிடந்ததாக, சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இறந்த தந்தையின் நினைவாக – பார்ப்பனர்களுக்கு 100 கிராமங்களை ‘தானம்’ செய்தான்.
2) கி.பி. 613 இல் பவுத்தத்தைத் தழுவினான். அதற்குப் பிறகும் பார்ப்பனர்களுக்கு அள்ளி அள்ளித் தந்தான். ஆனாலும் புத்த மார்க்கத்தினரை மன்னன் ஆதரித்ததை பார்ப்பனர்களால் பொறுக்க முடியவில்லை.
3) கன்னோசி நகரில் 18 அரசர்கள், 30000 பவுத்த துறவிகள், 3000 பார்ப்பனர்களை அழைத்து, சட்ட மாநாடு நடத்தினான். சீனப் பேரறிஞர் யுவான் சுவாங்கிற்கு பெருமை தர திட்டமிட்டான். கங்கை நதிக்கரையில் பெரிய பந்தல் போடப்பட்டது. 22 நாட்கள் மாநாடு நடந்தது. 100 அடி உயர கோபுரம் அமைக்கப்பட்டு, அதன் உச்சியில் ஆள் உயர தங்கத்தால் ஆன புத்தர் சிலை, மாநாட்டு அரங்கில் நிறுவப்பட்டது. ஒவ்வொரு நாளும் மன்னர் – அரசர்கள் – ஊர்வலமாகப் புறப்பட்டு, மாநாட்டுக்கு வந்தனர். சீனப் பேரறிஞர் யுவான் சுவாங் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். வழிநெடுக முத்துக்களையும், தங்கத்திலான மலர்களையும் வழி நெடுக தூவிக் கொண்டே வந்தான்.
4) பார்ப்பனர்கள் பொருமினர். சதித் திட்டம் தீட்டினர். 5 ஆம் நாளில் சதித் திட்டத்தை அறிந்து, மன்னர் எச்சரித்தார். 23வது நாள் – புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த கோபுரத்தில் பார்ப்பனர்கள் தீ வைத்தனர். பெரும் முயற்சியால் அணைக்கப் பட்டது. ஹர்ஷனும் அரசர்களும் கோபுரத்தின் உச்சியில் ஏறி, புத்தர் சிலையைப் பார்வையிட்டு திரும்பும்போது, சதிகாரன் ஒருவன் கோபுரத்தின் சுவரில் மறைந்து நின்று, மன்னனை கத்தியால் குத்திக் கொலைச் செய்ய முயன்றான். மன்னன் சாமர்த்தியமாக, அவனைப் பிடித்தார். சிற்றரசர்கள், வாளினை உருவ, மன்னர் பெருந்தன்மையுடன் மன்னித்தார். பெருந்தன்மை கண்டு மனம் திருந்திய கொலையாளி, தன்னை ஏவி விட்டது பார்ப்பனர்கள் தான் என்ற உண்மையை ஒப்புக் கொண்டான். பார்ப்பனர்களும் உண்மையை ஒப்புக் கொண்டனர். சதிக்கு முக்கிய காரணமான பார்ப்பனர்களை மட்டும் தண்டித்து, 500 பார்ப்பனர்களை மட்டும் மன்னன் நாடு கடத்தினான்.
அருணாஸ்வரன்
1) ஹர்ஷவர்த்தனன் மறைவுக்குப் பிறகு, அவனது அமைச்சரவையில் இருந்த அருணாஸ்வரன் எனும் பார்ப்பனன், ஆட்சியைக் கைப்பற்றி, தன்னை மன்னன் என்று அறிவித்தான்.
2) அவையில் சீனத் தூதுவராக இருந்த வாங்க் ஹியூன் சீ, அவரது 30 மெய்க்காப்பாளர்களை தாக்கிக் கொன்றான். வாங்க் ஹியூன் சீ, நோபாளத்துக்கு தப்பி ஓடி, நேபாள மன்னரிடமிருந்து பெரும் படையைத் திரட்டி வந்து, அருணாஸ்வரனை குடும்பத்துடன் சிறைப்பிடித்து சீனத்துக்குக் கொண்டு போனான்.
சந்திரா பீடன்

1) கார்கோட மரபில் வந்த காஷ்மீர் மன்னன் (கி.பி.662). இவனது ஆட்சியில், ஒரு பார்ப்பன அதிகாரி மற்றொரு பார்ப்பன அதிகாரியைக் கொலை செய்ய, வழக்கை விசாரித்த சந்திரபீடன், கொலை செய்த பார்ப்பனருக்கு தண்டனை வழங்கினான். பார்ப்பனருக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது என்பது தர்மம். மரணதண்டனையிலிருந்து தப்பிய பார்ப்பன அதிகாரி, மன்னனது தம்பி ‘தாராபீடன்’ உடன் சதி செய்து, அண்ணனைக் கொலை செய்து, பார்ப்பன அதிகாரி துணையுடன் ஆட்சியைப் பிடித்தான்.

கிருஷ்ண தேவராயர் (கி.பி. 1509 – 1530)

தென்னகம் முழுவதையும், தனது ஆட்சிக்கு உட் படுத்திய மன்னர். பார்ப்பன தாசர். வர்ணாஸ்ரமப் பற்றாளர். பார்ப்பனர்களுக்கே முக்கிய பதவிகளைத் தந்தார். பெரும்பாலான பார்ப்பனர்கள் சுகவாசி களாக, உண்டு உறங்கிக் கிடந்தனர். “வேத மார்க்க பிரதிஷ்டாபன சாரியா” என்று பட்டம் சூட்டிக் கொண்டனர்.
2) நீண்ட காலத்துக்குப் பிறகு, அவருக்கு குழந்தைப் பிறந்தது. திருமலைராயன் என்று பெயரிட்டு, 6 ஆம் வயதிலேயே முடிசூட்டி வைத்தார். முடிசூட்டிய ஒரு மாதத்திலேயே திம்மாதண்ட நாயகன் எனும் பார்ப்பான், குழந்தைக்கு நஞ்சு ஊட்டிக் கொன்றான். இவன் சாளுவ திம்மன் எனும் பார்ப்பன முதலமைச்சரின் மகன்.
3) 3 பார்ப்பனர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். திம்மா தண்டநாயகன் சிறையிலிருந்து தப்பி, தனது பார்ப்பன உறவினரான அதிகாரிகளிடம் தஞ்ச மடைந்து, சதி செய்து நாட்டில் கலகத்தை உருவாக்கினான்.
4) படையினால் மீண்டும் பிடிக்கப்பட்டான்; விசாரணை நடந்தது. திம்மா தண்டநாயகன், அவனது தந்தை சாளுவ திம்மன், தம்பி சாளுவ குண்டராஜன் ஆகிய பார்ப்பனர்கள் கண்களை பறிக்க மன்னர் ஆணையிட்டார். பார்ப்பனர்களுக்கு மரண தண்டனை தரப்படக் கூடாது என்பதால், கண்கள் மட்டும் பறிக்கப்பட்டன.
5) உயிரினும் மேலாக வளர்த்த குழந்தையின் மரணத்தைத் தாங்காமல், கிருஷ்ண தேவராயரும் உயிர் நீத்தார்.
மதுரை – திருமலை நாய்க்கர் (கிபி. 1529 – 1736)

1) மதுரையில் பாண்டியர்கள் ஆட்சிக்குப் பிறகு விஜய நகரத்தின் அரசப் பிரதிநிதிகளான நாயக்க மன்னர்கள் ஆளத் தொடங்கினர். அதில் ஒருவன் திருமலை நாயக்கர்.
2) கோயில்கட்டுவதற்கும், கோபுரங்கள் கட்டுவதற்கும் பணத்தை அள்ளிக் கொட்டினான்.
3) ‘அபிஷேகப் பண்டாரம்’ எனும் பார்ப்பனர் அல்லாதார் நிர்வாகத்தில் இருந்த மதுரை மீனாட்சி கோயிலை, அவர்களிடமிருந்து பறித்து, பார்ப்பனர்களான குலசேகரப்பட்டன், விக்கிரமப்பட்டன் கும்பலிடம் ஒப்படைத்தான்.
4) நீலகண்ட தீட்சகன், ராமப்பைய்யன் என்ற பார்ப் பனர்கள் அமைச்சர்களாகவும், தளபதிகளாகவும் இருந்து மன்னனை ஆட்டிப் படைத்தனர். தமிழர்களான பண்டாரகர்கள் பூசை செய்த பழனி கோயிலை அவர்களிடமிருந்து பறித்து, பார்ப்பனர் களிடம் ஒப்படைத்தது, இவன்தான்.
5) திருமலை நாயக்கன் படைத் தளபதியாக இருந்த பார்ப்பானே, மைசூர் போரில் எதிரிகளிடம் பணம் வாங்கி, காட்டிக் கொடுத்தான்.
6) இத்தாலி நாட்டு கிறிஸ்தவ பாதிரியான இராபர்ட்-டி நொபிலியுடன் மன்னர் திருமலை நாயக்கர் உறவு கொண்டார். அவர் கிறிஸ்துவ மதப் பிரச்சாரம் செய்ய அனுமதித்தான். இதனால் பார்ப்பனர்கள் மன்னரை வெறுக்கலாயினர்.
7) அர்ச்சகப் பார்ப்பனர்கள் மன்னரிடம், ‘மதுரை மீனாட்சிக் கோயிலுக்குள் புதையல் இருக்கிறது. அதை எடுத்தால், நாட்டில் பொருளாதார நெருக்கடியைப் போக்கிடலாம்’ என்று கூறி, அர்த்த ஜாம பூஜை முடிந்த பிறகு, கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். ஓர் இருளடைந்த சுரங்கத் துக்குள் புதையல் இருப்பதாக உள்ளே அனுப்பி, உள்ளே போனவுடன் வாயிலைப் பாறாங்கல் போட்டு மூடினர். மன்னர் மூச்சுத் திணறி உள்ளேயே செத்தார். மறுநாள் மதுரை மீனாட்சி, மன்னரை தன்னோடு அய்க்கியப்படுத்திக் கொண்டார் என்று பறைசாற்றி மக்களை நம்பச் செய்து விட்டனர். மன்னரைத் திட்டமிட்டுக் கொலை செய்தது, அவர் அதிகாரத்தில் அமர்த்திய ‘குலசேகரப் பட்டன்’ வகையறாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சொக்கநாத நாயக்கன்

1) 16வது வயதிலே பட்டத்துக்கு வந்தவன் (மதுரை) சொக்கநாத நாய்க்கன். பார்ப்பன அமைச்சர்கள் சதி செய்தனர். மன்னரின் தம்பியை அரசராக்க சதி செய்தனர். மன்னனை, தனி அறையில் அடைத்தனர். அரசனைக் கொலை செய்ய திட்டமிட்டனர். அரண்மனைப் பெண் ஒருவள் மூலம் அறிந்த அரசன், சதிக் கும்பல் கொல்ல வரும்போது பிடித்தான். ஒரு பார்ப்பன அமைச்சருக்கு மரணதண்டனை தர உத்தரவிட்டான். மற்றொரு அமைச்சர் பார்ப்பனர் என்பதால், பார்ப்பனருக்கு மரண தண்டனை தரக்கூடாது என்று ‘தர்மத்தை’க் எடுத்துக் கூறவே, ஆளைக் கொல்லாமல், கண்கள் மட்டுமே பிடுங்கப்பட்டு விரட்டப்பட்டான்.
2) சொக்கநாதன் பழமைவாதி. வர்ணாஸ்ரமப் பித்துப் பிடித்தவன். தங்கத்தில் ஒரு பசு செய்து, அதன் வாய் வழியாகப் புகுந்து வெளிவந்து, அந்தப் பொன்னாலான பசுவை பார்ப்பனர் களுக்கு தானமாக வழங்கினான். இதற்கு ‘இரண்ய கர்ப்பதானம்’ என்று பெயர்.
3) அரசன் ஆட்சியை மறந்து வைதீகச் சடங்குகளில் மூழ்கி, பார்ப்பனர்களுக்கு பொருள்களை வாரி இறைத்தான். பார்ப்பன அதிகாரிகள் மக்களை சுரண்டிக் கொண்டிருந்தனர்.
4) கோவிந்த தீட்சன் எனும் பார்ப்பான், அமைச் சராக இருந்தான். இவன், சொக்கநாதனுக்கு மூளைக் கோளாறு என்று கூறி மக்களை நம்பச் செய்து, சொக்கநாதனின் தம்பியும், தனது நண்பனுமான அளகாத்திரியை அமைச்சராக் கினான். அளகாத்ரியும் கோவிந்த் தீட்சனும் மக்களை வாட்டி வதைத்தனர். ‘ரஸ்தம்கான்’ என்ற முகம்மதிய வீரன், இருவரையும் கைது செய்து சொக்கநாதனை விடுவித்தான். மனம் உடைந்த சொக்கநாதன், நீண்ட நாள் உயிர் வாழவில்லை.
விஜயராகவன்
1) தஞ்சையை ஆண்ட விஜயராகவன், நாயக்க மன்னர்களில் கடைசி மன்னன். பார்ப்பன அடிமை. தினமும் 12,000 பார்ப்பனர்களுக்கு அறுசுவை உணவு போட்டான். பார்ப்பனர் களுக்கு உணவு பரிமாறப்பட்ட பிறகே அவன் சாப்பிடுவான்.
2) ஒருமுறை பார்ப்பனர்களுடன் ராமேசுவரம் சென்று, மொட்டை அடித்து, காவி தரித்து, எடைக்கு எடை பார்ப்பனர்களுக்கு தானம் வழங்கினான். தஞ்சை திரும்பியவுடன், “அயல் மன்னன் ஆட்சியிலுள்ள கடவுளுக்கு அளவற்ற பொருள்களைத் தானமாக வழங்கியதால், சொந்த நாட்டு தெய்வம் சீற்றமடைந்துள்ளது” என்று பார்ப்பனர்கள் கூறினர். 20,000 பொன்னை பார்ப்பனர்களுக்கு அளித்து, தெய்வத்தின் சீற்றத்தை அடக்கிவிட்டதாக நம்பினான்.
3) அவனது குரு, குமார தாதாச்சாரி என்ற பார்ப்பனர், ஒவ்வொரு நாளும் 30 மைல் தொலைவிலுள்ள திருவரங்கம் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தான். அதேபோல் பார்ப்பன குருவையும், விலை உயர்ந்த பொன் னாலும், மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், அரண்மனை தாதிகள், குருவை அமர வைத்து 30 மைல் தூரத்க்கு தூக்கி வருவார்கள். அதற்குப் பின்னே மற்றொரு பளபளப்பான பல்லக்கில் தாதாச்சாரியின் “செருப்புகள்” நவரத்தினங்களால் இழைக்கப் பட்டு, தாதிகளால் தூக்கப்பட்டு வரும். மன்னன், கையில் பூசை பாத்திரம் ஏந்தி கால்நடையாக நடந்து வருவான்.
4) நாட்டில் கடும் பஞ்சம்; கொடும் நோய்; மக்கள் வேறு பகுதிகளுக்குக் குடியேறினர். பலர் டச்சுக் காரர்களின் சர்ச்சுகளில் அடைக்கலமானார்கள். சீரழிவிற்குக் காரணம், கிறிஸ்தவ மதமும், அவர்களின் சர்ச்சுகளும் தான் என்று பார்ப் பனர்கள் பிரச்சாரம் செய்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வந்த கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினர்.
5) இளவரசன் மன்னாடுதாசன், மனம் கொதித் தான். தந்தையின் மூடத்தனத்தைக் கண்டித் தான். மத குருவுக்கும், கோயிலுக்கும் பணத்தைச் செலவிட்டால், பிறகு, அரசாங்கம் ஏன்? நீதிமன்றம் ஏன்? என்று கேட்டான்.
6) இளவரசனை வீழ்த்த பார்ப்பனர்கள் சதித் திட்டம் போட்டார்கள். இளவரசனை மன்னனிட மிருந்து பிரித்தார்கள்.
7) மதுரை மன்னன் சொக்கநாத நாயக்கனுக்கும், விஜயராகவனுக்கும் கோவிந்த தீட்சத் எனும் பார்ப்பான் சதி செய்து போர் மூட்டினான். விஜயராகவன் தோல்வி அடைந்தான். பார்ப்பன புரோகிதர்கள் மன்னன் மறு பிறவி எடுக்க வேண்டும் என்று கூறி, அதற்காக சடங்குகளை செய்ய வேண்டும் என்றனர். வெண்கலத்தாலான பசு செய்யப்பட்டது. மன்னன் உள்ளே புகுந்தான்; பார்ப்பனர்கள் மந்திரம் ஓத, பசு, கன்றினை ஈனுவது போல, உயிரற்ற அந்த பசு, அரசனை ஈன்றது. மன்னன், குழந்தையைப் போல கையை, காலை ஆட்டிக் கொண்டு வெளியே வந்தான். ஒரு பார்ப்பன குருவின் மனைவி, மருத்துவச்சியாக இருந்து, 80வயது அரசனை, குழந்தையாக பாவித்து, தனது காலில் கிடத்தி, தாலாட்டி, மார்போடு இணைத்து முத்தம் கொடுத்தாள்.
– இப்படி எல்லாம் பார்ப்பனர்கள் கூத்து அடிக்க, அரசர்கள் அவர்களின் தாசர்களாக இருந்தார்கள் என்பதே இந்த நாட்டின் வரலாறு.
வீழ்ந்த சிவாஜி

1) சூத்திரனாகிய சிவாஜி, பார்ப்பன தாசன். அவன் மூடி சூட ‘சத்திரியனாக’ வேண்டும். அதனால் பார்ப்பனர்கள் முடிசூட்ட மறுத்தனர்.

2) பெரும் தொகையை வாங்கிக் கொண்டு காசியி லிருந்து காகப்பட்டன் என்ற பார்ப்பனர் முடிசூட்ட வந்தான். நாடு முழுதுமிருந்தும் 11,000 பார்ப் பனர்கள், குடும்பத்துடன் அழைக்கப்பட்டனர். அன்றாடம் பூசைகளும், சடங்குகளும் நடந்தன. 44வது வயதில் பூணூல் போடப்பட்டு, சத்திரியன் ஆக்கப்பட்டான். தானும் ஒரு சத்திரியன் என்று ஒப்புக் கொண்டு விட்டபடியால், தனது காதில் விழுவதுபோல் மந்திரங்களை ஓத வேண்டும் என்று சிவாஜி விரும்பினான். பார்ப்பனர் களிடையே சலசலப்பு ஏற்பட்டது. “வேத மந்திரங்கள் என்பது இரு பிறப்பினருக்கு மட்டுமே உரியது. தற்காலத்தில் பார்ப்பனர்கள் தவிர வேறு எவரும் இரு பிறப்பாளர்களாக மாட்டார்கள். உலகில் உண்மையான சத்திரியர் களும் இல்லை” என்று கூறிவிட்டனர். “பேராசை பிடித்த பார்ப்பனன் மந்திரங்களின் ஒரு சிறு அசைவுகூட, சிவாஜியின் காதில் விழாத வண்ணம், தங்கள் வாய்க்குள்ளாகவே முணுமுணுத்துக் கொண் டனர்” என்று எச்.எம். அரிபிரசாத் சாஸ்திரி குறிப்பிடுகிறார்.

3) சிவாஜியின் எடைக்கு எடை பல பொருட்கள் எடையில் நிறுக்கப்பட்டன. திடீரென இரண்டு பார்ப்பனர்கள், சிவாஜி படையெடுப்பின்போது பார்ப்பனர்கள், பசுக்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு மரணம் அடையத்தக்க வகையில் நகரங்களை எரித்தான் என்றும், அப்பாவங்களுக்கு தகுந்த விலை கொடுத்து, பாவத்திலிருந்து மீள வேண்டும் என்று கூறவே, அதற்காக, 8000 பார்ப்பனர்களுக்கு பணமாகக் கொடுத்தான் சிவாஜி.
பார்ப்பனர்களை நம்பி, அவர்கள் காலடியில் வீழ்ந்த சிவாஜியின் சாம்ராஜ்யத்தை பார்ப்பனர்கள், பொன்னையும், பொருளையும் சுரண்டியே ஆட்சியை திவாலாக்கி விட்டனர். இந்த வரலாற்றையே-‘இந்து கண்ட சாம்ராஜ்யம்’ என்று அண்ணா நாடகமாக்கினார். அந்த நாடகத்தில் சிறப்பாக நடித்ததற்காகத்தான் ‘சிவாஜி’ என்ற பட்டத்தை பெரியார் சிவாஜி கணேசனுக்கு சூட்டினார்.
(நிறைவு)
தொகுப்பு : விடுதலை இராசேந்திரன்

சேலம் வேத மரபு மறுப்பு மாநாட்டு மலரில் இருந்து
7) காஷ்மீரத்தை ஆண்ட ஜாலுக்க என்ற காஷ்மீர் மன்னன், பவுத்த மடாலயத்திலிருந்து எழுப்பப்படும் சங்கொலி, தனது தூக்கத்தைக் கெடுப்பதாகக் கூறி, மடாலயத்தை இடித்துத் தள்ளினான். (தகவல் ஆய்வாளர்: கல்கணன்)

8) அபிமன்யூ என்ற காஷ்மீரை ஆண்ட பார்ப்பன மன்னன் பவுத்தர்களை இனப் படுகொலை செய்துவிட்டு கடும் பனிப் பொழிவினால் இறந்தார்கள் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தான். (ஈழத் தமிழர்களை சிங்கள ராணுவம் படுகொலை செய்ததுபோல) இந்தப் படுகொலைகளை குளிர்காலங்களில் நடத்தினான். அந்த 6 மாதங்களிலும் தனது நாட்டை விட்டு வெளியேறி, ஒரு பள்ளத்தாக்குப் பகுதிக்குப் போய்விடுவான். திட்டமிட்டபடி பவுத்தர்கள் படுகொலைகள் நடக்கும். கேட்டால் பனியில் உறைந்து இறந்தார்கள் என்று பொய் சொல்வான். பனிப் பொழிவில் பார்ப்பனர்கள் ஏன் இறப்பதில்லை என்று கேட்டதற்கு, “அவர்களிடம் உள்ள ஆன்மீக சக்தியால் மரணத்தைத் தடுக்கிறார்கள்; அந்த ஆன்மீக சக்தியைப் பயன்படுத்தி, கடவுளுக்கு யாகங்களையும், படையல்களையும் செய் கிறார்கள்” என்று பதில் கூறினான். (ஆதாரம்: கல்கணன்)
9) பவுத்த மதத்தினர் ஒரு பெண்ணைக் கடத்தியதாகக் கூறி ஆயிரக்கணக்கான பவுத்த மடாயலங்களைத் தீ வைத்துக் கொளுத்தினான், காஷ்மீர் அரசன் கின்னரன்.
10)காஷ்மீர் மட்டுமன்றி பிற பகுதிகளிலும் பவுத்தர்கள் படுகொலை செய்யப்பட்டனர். போதி மரத்தை (அரசமரம்) வெட்டி வேரோடு சாய்க்க பல முறை முயன்றான் கேரளாவை ஆண்ட குமாரிலபட்டன். அவனது கொடுமை தாங்காமல், பவுத்த மதத்தினர் அனைவரும் கேரளாவை விட்டு வெளியேறினர்.

சுதன்வனன் எனும் மன்னன், தனது குடிமக்களுக்கு பிறப்பித்த ஆணை: “தனுஷ்கோடி பாலத்திலிருந்து இமாலயம் வரை, பவுத்த மதத்தினரைக் குழந்தைகள் முதியவர்கள் என்று பாராது அனைவரையும் கொன்றுவிட வேண்டும். அவ்வாறு செய்யாதவர்கள் கொல்லப்படுவார்கள்”. (தகவல்: சங்கர விஜயம்)

11)“பிற மதத்தின் மீது அடக்குமுறையை ஏவி விடுவதும், அட்டூழியங்கள் புரிவதும் உலகம் முழுதும் நடந்துள்ளது. ஆனால், பவுத்த மதத்தை இந்தியாவை விட்டுத் துரத்துவதற்காக செய்யப்பட்ட அடக்குமுறைகளுக்கும், அட்டூழியங் களுக்கும் ஈடான வேறு ஒன்று உலகின் எந்த மூலையிலும் நடந்தது இல்லை”. (ஆய்வாளர் டபுள்யு. டி. வில்கின்ஸ்)
பார்ப்பனக் கொடுமைகளை – புத்தமதம் எதிர்த்த தற்காக வரலாற்றில் பார்ப்பன கொலைக்காரக் கூட்டம் இவ்வளவு படுகொலைகளையும், அழிப்புகளையும் செய்தது. புத்தருக்குப் பிறகு, பார்ப்பனர்களை எதிர்த்து, அதில் வெற்றிப் பெற்ற ஒரே வரலாற்று நாயகன் பெரியார் மட்டுமே.
தேவ பூதி

1) சுங்க வம்சத்தின் கடைசி மன்னன் தேவ பூபதி.
2) அவனிடம் அமைச்சராக இருந்த வாசுதேவன் எனும் பார்ப்பனன், மன்னனின் காமக்கிழத்திக்கு அரசியைப் போல் வேடமிட்டு, ‘அந்தப்புரத்துக்கு’ அனுப்பி, மன்னனை தந்திரமாகக் கொலைச் செய்தான். (ஆதாரம்: பாணரின் ‘ஹர்ஷ சரிதம்’)
3) கன்வ குலத்தைச் சார்ந்த வாசுதேவன் பரம்பரை 40 ஆண்டுகள் – ‘பார்ப்பன தர்ம’ ஆட்சி நடத்தியது.
குகசிவன்
1) புத்த மதம் வட இந்தியா முழுதும் அழிக்கப்பட்ட நிலையில் கலிங்க நாட்டில் மட்டும் (கி.பி. 4 ஆம் நூற்றாண்டு) குகசிவன் ஆட்சி நடந்தது. இவன் புத்தத்தின் தீவிர ஆதரவாளன். சிற்றரசன், புத்தரின் புனிதப்பல், கலிங்கத்தில் (இன்றைய பீகார் பகுதி) இருப்பதே, அங்கு புத்தர் கொள்கை ஆட்சி நீடிக்கக் காரணம் என்று கருதிய பார்ப்பனர்கள், பல முறை, புத்தரின் புனிதப் பல்லைக் கடத்திப் போக முயற்சித்தனர். அந்த சூழ்ச்சியை குகசிவன் முறியடித்து, பார்ப்பனர்களை நாடு கடத்தினான்.
2) குகசிவன் – மகத நாட்டை ஆண்ட சமுத்திர குப்தனுக்கு கப்பம் கட்டி வந்த சிற்றரசன். பார்ப்பனர்கள், சமுத்திர குப்தனிடம், குகசிவனுக்கு எதிராக, தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று முறையிடவே, சமுத்திரகுப்தன், குகசிவனையும், புனித பல்லையும் கொண்டுவர படை அனுப்பினான். பின்பு பார்ப்பனர்கள், பொய்ப் பிரச்சாரத்தை உணர்ந்து, மீண்டும் புனிதப் பல்லை குகசிவனிடம் ஒப்படைக்க, அவனிடம் நேசம் பாராட்டினான்.
3) தங்கள் சூழ்ச்சி பலிக்காமல் போகவே, பார்ப்பனர்கள், குகசிவனுக்குப் பகைவனான சுவேதனன் எனும் மன்னனுக்கு தூபம் போட்டனர். சுவேதனன், புத்தர் பல்லினை மீட்க குகசிவனுடன் போரிட்டான். பல்லாயிரம் பேர் மாண்டனர். முடிவில் குகசிவனும் மாண்டான். ஆனால், புத்தரின் புனிதப் பல், எதிரிகளின் கையில் சிக்கவில்லை. குகசிவன் விருப்பப்படி, அவனது மகளும் மருமகளும், புனிதப் பல்லை இலங்கைக்குக் கொண்டு போய் விட்டனர். புனிதப் பல்லை வரவேற்ற அந்நாட்டு மன்னன் (கீர்த்தி ஸ்ரீ மேகவர்ணன்) அதனை வைத்து ஒரு கோபுரம் அமைத்தான்.
சசாங்கன் (கி.பி. 603 – 620)

மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய பகுதிகளை அரசாண்ட கவுட மன்னன் சசாங்கன், புத்த மதத்தின் எதிரி, பவுத்தர்களையும், பவுத்த மடாலயங்களையும் அழித்தான். புத்த சின்னங்களை அழித்தான். புத்தரின் நினைவாகப் போற்றும் அரச மரத்தையும் (ஏற்கனவே அழிக்கப்பட்டு, அசோகனால் பாதுகாக்கப்பட்டது) வெட்டினான். பிறகு மகத மன்னன் பூர்ணவர்மனால் அரச மரம் (போதி மரம்) முற்றிலும் அழிந்துவிடாமல் மீண்டும் நீரூற்றிக் காப்பாற்றப்பட்டது. போதி மரத்தின் அடியில் இருந்த புத்தர் சிலை ஒன்றையும் அழிக்க முயன்றான்.

ஹர்ஷ வர்த்தனன் (கி.பி. 606 – 647)

1) இவன் வைசிய மரபைச் சார்ந்தவன். கன்னோசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இவன், வர்ணாஸ்ரமப் பித்தன். பார்ப்பனர் களுக்கும், புரோகிதர்களுக்கும் பொருட்களை வாரி வாரி கொடுத்தான். பார்ப்பனர்கள் வீடுகளில், முன்பாக மதுவை தயாரிக்கும் சோமச் செடிகள், பலிக்குரிய பொருட்கள், வேள்வித் தீக்குப் பயன்படும் பொருட்கள் மண்டிக் கிடந்ததாக, சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இறந்த தந்தையின் நினைவாக – பார்ப்பனர்களுக்கு 100 கிராமங்களை ‘தானம்’ செய்தான்.
2) கி.பி. 613 இல் பவுத்தத்தைத் தழுவினான். அதற்குப் பிறகும் பார்ப்பனர்களுக்கு அள்ளி அள்ளித் தந்தான். ஆனாலும் புத்த மார்க்கத்தினரை மன்னன் ஆதரித்ததை பார்ப்பனர்களால் பொறுக்க முடியவில்லை.
3) கன்னோசி நகரில் 18 அரசர்கள், 30000 பவுத்த துறவிகள், 3000 பார்ப்பனர்களை அழைத்து, சட்ட மாநாடு நடத்தினான். சீனப் பேரறிஞர் யுவான் சுவாங்கிற்கு பெருமை தர திட்டமிட்டான். கங்கை நதிக்கரையில் பெரிய பந்தல் போடப்பட்டது. 22 நாட்கள் மாநாடு நடந்தது. 100 அடி உயர கோபுரம் அமைக்கப்பட்டு, அதன் உச்சியில் ஆள் உயர தங்கத்தால் ஆன புத்தர் சிலை, மாநாட்டு அரங்கில் நிறுவப்பட்டது. ஒவ்வொரு நாளும் மன்னர் – அரசர்கள் – ஊர்வலமாகப் புறப்பட்டு, மாநாட்டுக்கு வந்தனர். சீனப் பேரறிஞர் யுவான் சுவாங் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். வழிநெடுக முத்துக்களையும், தங்கத்திலான மலர்களையும் வழி நெடுக தூவிக் கொண்டே வந்தான்.
4) பார்ப்பனர்கள் பொருமினர். சதித் திட்டம் தீட்டினர். 5 ஆம் நாளில் சதித் திட்டத்தை அறிந்து, மன்னர் எச்சரித்தார். 23வது நாள் – புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த கோபுரத்தில் பார்ப்பனர்கள் தீ வைத்தனர். பெரும் முயற்சியால் அணைக்கப் பட்டது. ஹர்ஷனும் அரசர்களும் கோபுரத்தின் உச்சியில் ஏறி, புத்தர் சிலையைப் பார்வையிட்டு திரும்பும்போது, சதிகாரன் ஒருவன் கோபுரத்தின் சுவரில் மறைந்து நின்று, மன்னனை கத்தியால் குத்திக் கொலைச் செய்ய முயன்றான். மன்னன் சாமர்த்தியமாக, அவனைப் பிடித்தார். சிற்றரசர்கள், வாளினை உருவ, மன்னர் பெருந்தன்மையுடன் மன்னித்தார். பெருந்தன்மை கண்டு மனம் திருந்திய கொலையாளி, தன்னை ஏவி விட்டது பார்ப்பனர்கள் தான் என்ற உண்மையை ஒப்புக் கொண்டான். பார்ப்பனர்களும் உண்மையை ஒப்புக் கொண்டனர். சதிக்கு முக்கிய காரணமான பார்ப்பனர்களை மட்டும் தண்டித்து, 500 பார்ப்பனர்களை மட்டும் மன்னன் நாடு கடத்தினான்.
அருணாஸ்வரன்
1) ஹர்ஷவர்த்தனன் மறைவுக்குப் பிறகு, அவனது அமைச்சரவையில் இருந்த அருணாஸ்வரன் எனும் பார்ப்பனன், ஆட்சியைக் கைப்பற்றி, தன்னை மன்னன் என்று அறிவித்தான்.
2) அவையில் சீனத் தூதுவராக இருந்த வாங்க் ஹியூன் சீ, அவரது 30 மெய்க்காப்பாளர்களை தாக்கிக் கொன்றான். வாங்க் ஹியூன் சீ, நோபாளத்துக்கு தப்பி ஓடி, நேபாள மன்னரிடமிருந்து பெரும் படையைத் திரட்டி வந்து, அருணாஸ்வரனை குடும்பத்துடன் சிறைப்பிடித்து சீனத்துக்குக் கொண்டு போனான்.
சந்திரா பீடன்

1) கார்கோட மரபில் வந்த காஷ்மீர் மன்னன் (கி.பி.662). இவனது ஆட்சியில், ஒரு பார்ப்பன அதிகாரி மற்றொரு பார்ப்பன அதிகாரியைக் கொலை செய்ய, வழக்கை விசாரித்த சந்திரபீடன், கொலை செய்த பார்ப்பனருக்கு தண்டனை வழங்கினான். பார்ப்பனருக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது என்பது தர்மம். மரணதண்டனையிலிருந்து தப்பிய பார்ப்பன அதிகாரி, மன்னனது தம்பி ‘தாராபீடன்’ உடன் சதி செய்து, அண்ணனைக் கொலை செய்து, பார்ப்பன அதிகாரி துணையுடன் ஆட்சியைப் பிடித்தான்.

கிருஷ்ண தேவராயர் (கி.பி. 1509 – 1530)

தென்னகம் முழுவதையும், தனது ஆட்சிக்கு உட் படுத்திய மன்னர். பார்ப்பன தாசர். வர்ணாஸ்ரமப் பற்றாளர். பார்ப்பனர்களுக்கே முக்கிய பதவிகளைத் தந்தார். பெரும்பாலான பார்ப்பனர்கள் சுகவாசி களாக, உண்டு உறங்கிக் கிடந்தனர். “வேத மார்க்க பிரதிஷ்டாபன சாரியா” என்று பட்டம் சூட்டிக் கொண்டனர்.
2) நீண்ட காலத்துக்குப் பிறகு, அவருக்கு குழந்தைப் பிறந்தது. திருமலைராயன் என்று பெயரிட்டு, 6 ஆம் வயதிலேயே முடிசூட்டி வைத்தார். முடிசூட்டிய ஒரு மாதத்திலேயே திம்மாதண்ட நாயகன் எனும் பார்ப்பான், குழந்தைக்கு நஞ்சு ஊட்டிக் கொன்றான். இவன் சாளுவ திம்மன் எனும் பார்ப்பன முதலமைச்சரின் மகன்.
3) 3 பார்ப்பனர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். திம்மா தண்டநாயகன் சிறையிலிருந்து தப்பி, தனது பார்ப்பன உறவினரான அதிகாரிகளிடம் தஞ்ச மடைந்து, சதி செய்து நாட்டில் கலகத்தை உருவாக்கினான்.
4) படையினால் மீண்டும் பிடிக்கப்பட்டான்; விசாரணை நடந்தது. திம்மா தண்டநாயகன், அவனது தந்தை சாளுவ திம்மன், தம்பி சாளுவ குண்டராஜன் ஆகிய பார்ப்பனர்கள் கண்களை பறிக்க மன்னர் ஆணையிட்டார். பார்ப்பனர்களுக்கு மரண தண்டனை தரப்படக் கூடாது என்பதால், கண்கள் மட்டும் பறிக்கப்பட்டன.
5) உயிரினும் மேலாக வளர்த்த குழந்தையின் மரணத்தைத் தாங்காமல், கிருஷ்ண தேவராயரும் உயிர் நீத்தார்.
மதுரை – திருமலை நாய்க்கர் (கிபி. 1529 – 1736)

1) மதுரையில் பாண்டியர்கள் ஆட்சிக்குப் பிறகு விஜய நகரத்தின் அரசப் பிரதிநிதிகளான நாயக்க மன்னர்கள் ஆளத் தொடங்கினர். அதில் ஒருவன் திருமலை நாயக்கர்.
2) கோயில்கட்டுவதற்கும், கோபுரங்கள் கட்டுவதற்கும் பணத்தை அள்ளிக் கொட்டினான்.
3) ‘அபிஷேகப் பண்டாரம்’ எனும் பார்ப்பனர் அல்லாதார் நிர்வாகத்தில் இருந்த மதுரை மீனாட்சி கோயிலை, அவர்களிடமிருந்து பறித்து, பார்ப்பனர்களான குலசேகரப்பட்டன், விக்கிரமப்பட்டன் கும்பலிடம் ஒப்படைத்தான்.
4) நீலகண்ட தீட்சகன், ராமப்பைய்யன் என்ற பார்ப் பனர்கள் அமைச்சர்களாகவும், தளபதிகளாகவும் இருந்து மன்னனை ஆட்டிப் படைத்தனர். தமிழர்களான பண்டாரகர்கள் பூசை செய்த பழனி கோயிலை அவர்களிடமிருந்து பறித்து, பார்ப்பனர் களிடம் ஒப்படைத்தது, இவன்தான்.
5) திருமலை நாயக்கன் படைத் தளபதியாக இருந்த பார்ப்பானே, மைசூர் போரில் எதிரிகளிடம் பணம் வாங்கி, காட்டிக் கொடுத்தான்.
6) இத்தாலி நாட்டு கிறிஸ்தவ பாதிரியான இராபர்ட்-டி நொபிலியுடன் மன்னர் திருமலை நாயக்கர் உறவு கொண்டார். அவர் கிறிஸ்துவ மதப் பிரச்சாரம் செய்ய அனுமதித்தான். இதனால் பார்ப்பனர்கள் மன்னரை வெறுக்கலாயினர்.
7) அர்ச்சகப் பார்ப்பனர்கள் மன்னரிடம், ‘மதுரை மீனாட்சிக் கோயிலுக்குள் புதையல் இருக்கிறது. அதை எடுத்தால், நாட்டில் பொருளாதார நெருக்கடியைப் போக்கிடலாம்’ என்று கூறி, அர்த்த ஜாம பூஜை முடிந்த பிறகு, கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். ஓர் இருளடைந்த சுரங்கத் துக்குள் புதையல் இருப்பதாக உள்ளே அனுப்பி, உள்ளே போனவுடன் வாயிலைப் பாறாங்கல் போட்டு மூடினர். மன்னர் மூச்சுத் திணறி உள்ளேயே செத்தார். மறுநாள் மதுரை மீனாட்சி, மன்னரை தன்னோடு அய்க்கியப்படுத்திக் கொண்டார் என்று பறைசாற்றி மக்களை நம்பச் செய்து விட்டனர். மன்னரைத் திட்டமிட்டுக் கொலை செய்தது, அவர் அதிகாரத்தில் அமர்த்திய ‘குலசேகரப் பட்டன்’ வகையறாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சொக்கநாத நாயக்கன்

1) 16வது வயதிலே பட்டத்துக்கு வந்தவன் (மதுரை) சொக்கநாத நாய்க்கன். பார்ப்பன அமைச்சர்கள் சதி செய்தனர். மன்னரின் தம்பியை அரசராக்க சதி செய்தனர். மன்னனை, தனி அறையில் அடைத்தனர். அரசனைக் கொலை செய்ய திட்டமிட்டனர். அரண்மனைப் பெண் ஒருவள் மூலம் அறிந்த அரசன், சதிக் கும்பல் கொல்ல வரும்போது பிடித்தான். ஒரு பார்ப்பன அமைச்சருக்கு மரணதண்டனை தர உத்தரவிட்டான். மற்றொரு அமைச்சர் பார்ப்பனர் என்பதால், பார்ப்பனருக்கு மரண தண்டனை தரக்கூடாது என்று ‘தர்மத்தை’க் எடுத்துக் கூறவே, ஆளைக் கொல்லாமல், கண்கள் மட்டுமே பிடுங்கப்பட்டு விரட்டப்பட்டான்.
2) சொக்கநாதன் பழமைவாதி. வர்ணாஸ்ரமப் பித்துப் பிடித்தவன். தங்கத்தில் ஒரு பசு செய்து, அதன் வாய் வழியாகப் புகுந்து வெளிவந்து, அந்தப் பொன்னாலான பசுவை பார்ப்பனர் களுக்கு தானமாக வழங்கினான். இதற்கு ‘இரண்ய கர்ப்பதானம்’ என்று பெயர்.
3) அரசன் ஆட்சியை மறந்து வைதீகச் சடங்குகளில் மூழ்கி, பார்ப்பனர்களுக்கு பொருள்களை வாரி இறைத்தான். பார்ப்பன அதிகாரிகள் மக்களை சுரண்டிக் கொண்டிருந்தனர்.
4) கோவிந்த தீட்சன் எனும் பார்ப்பான், அமைச் சராக இருந்தான். இவன், சொக்கநாதனுக்கு மூளைக் கோளாறு என்று கூறி மக்களை நம்பச் செய்து, சொக்கநாதனின் தம்பியும், தனது நண்பனுமான அளகாத்திரியை அமைச்சராக் கினான். அளகாத்ரியும் கோவிந்த் தீட்சனும் மக்களை வாட்டி வதைத்தனர். ‘ரஸ்தம்கான்’ என்ற முகம்மதிய வீரன், இருவரையும் கைது செய்து சொக்கநாதனை விடுவித்தான். மனம் உடைந்த சொக்கநாதன், நீண்ட நாள் உயிர் வாழவில்லை.
6) இத்தாலி நாட்டு கிறிஸ்தவ பாதிரியான இராபர்ட்-டி நொபிலியுடன் மன்னர் திருமலை நாயக்கர் உறவு கொண்டார். அவர் கிறிஸ்துவ மதப் பிரச்சாரம் செய்ய அனுமதித்தான். இதனால் பார்ப்பனர்கள் மன்னரை வெறுக்கலாயினர்.
7) அர்ச்சகப் பார்ப்பனர்கள் மன்னரிடம், ‘மதுரை மீனாட்சிக் கோயிலுக்குள் புதையல் இருக்கிறது. அதை எடுத்தால், நாட்டில் பொருளாதார நெருக்கடியைப் போக்கிடலாம்’ என்று கூறி, அர்த்த ஜாம பூஜை முடிந்த பிறகு, கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். ஓர் இருளடைந்த சுரங்கத் துக்குள் புதையல் இருப்பதாக உள்ளே அனுப்பி, உள்ளே போனவுடன் வாயிலைப் பாறாங்கல் போட்டு மூடினர். மன்னர் மூச்சுத் திணறி உள்ளேயே செத்தார். மறுநாள் மதுரை மீனாட்சி, மன்னரை தன்னோடு அய்க்கியப்படுத்திக் கொண்டார் என்று பறைசாற்றி மக்களை நம்பச் செய்து விட்டனர். மன்னரைத் திட்டமிட்டுக் கொலை செய்தது, அவர் அதிகாரத்தில் அமர்த்திய ‘குலசேகரப் பட்டன்’ வகையறாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சொக்கநாத நாயக்கன்

1) 16வது வயதிலே பட்டத்துக்கு வந்தவன் (மதுரை) சொக்கநாத நாய்க்கன். பார்ப்பன அமைச்சர்கள் சதி செய்தனர். மன்னரின் தம்பியை அரசராக்க சதி செய்தனர். மன்னனை, தனி அறையில் அடைத்தனர். அரசனைக் கொலை செய்ய திட்டமிட்டனர். அரண்மனைப் பெண் ஒருவள் மூலம் அறிந்த அரசன், சதிக் கும்பல் கொல்ல வரும்போது பிடித்தான். ஒரு பார்ப்பன அமைச்சருக்கு மரணதண்டனை தர உத்தரவிட்டான். மற்றொரு அமைச்சர் பார்ப்பனர் என்பதால், பார்ப்பனருக்கு மரண தண்டனை தரக்கூடாது என்று ‘தர்மத்தை’க் எடுத்துக் கூறவே, ஆளைக் கொல்லாமல், கண்கள் மட்டுமே பிடுங்கப்பட்டு விரட்டப்பட்டான்.
2) சொக்கநாதன் பழமைவாதி. வர்ணாஸ்ரமப் பித்துப் பிடித்தவன். தங்கத்தில் ஒரு பசு செய்து, அதன் வாய் வழியாகப் புகுந்து வெளிவந்து, அந்தப் பொன்னாலான பசுவை பார்ப்பனர் களுக்கு தானமாக வழங்கினான். இதற்கு ‘இரண்ய கர்ப்பதானம்’ என்று பெயர்.
3) அரசன் ஆட்சியை மறந்து வைதீகச் சடங்குகளில் மூழ்கி, பார்ப்பனர்களுக்கு பொருள்களை வாரி இறைத்தான். பார்ப்பன அதிகாரிகள் மக்களை சுரண்டிக் கொண்டிருந்தனர்.
4) கோவிந்த தீட்சன் எனும் பார்ப்பான், அமைச் சராக இருந்தான். இவன், சொக்கநாதனுக்கு மூளைக் கோளாறு என்று கூறி மக்களை நம்பச் செய்து, சொக்கநாதனின் தம்பியும், தனது நண்பனுமான அளகாத்திரியை அமைச்சராக் கினான். அளகாத்ரியும் கோவிந்த் தீட்சனும் மக்களை வாட்டி வதைத்தனர். ‘ரஸ்தம்கான்’ என்ற முகம்மதிய வீரன், இருவரையும் கைது செய்து சொக்கநாதனை விடுவித்தான். மனம் உடைந்த சொக்கநாதன், நீண்ட நாள் உயிர் வாழவில்லை.
விஜயராகவன்
1) தஞ்சையை ஆண்ட விஜயராகவன், நாயக்க மன்னர்களில் கடைசி மன்னன். பார்ப்பன அடிமை. தினமும் 12,000 பார்ப்பனர்களுக்கு அறுசுவை உணவு போட்டான். பார்ப்பனர் களுக்கு உணவு பரிமாறப்பட்ட பிறகே அவன் சாப்பிடுவான்.
2) ஒருமுறை பார்ப்பனர்களுடன் ராமேசுவரம் சென்று, மொட்டை அடித்து, காவி தரித்து, எடைக்கு எடை பார்ப்பனர்களுக்கு தானம் வழங்கினான். தஞ்சை திரும்பியவுடன், “அயல் மன்னன் ஆட்சியிலுள்ள கடவுளுக்கு அளவற்ற பொருள்களைத் தானமாக வழங்கியதால், சொந்த நாட்டு தெய்வம் சீற்றமடைந்துள்ளது” என்று பார்ப்பனர்கள் கூறினர். 20,000 பொன்னை பார்ப்பனர்களுக்கு அளித்து, தெய்வத்தின் சீற்றத்தை அடக்கிவிட்டதாக நம்பினான்.
3) அவனது குரு, குமார தாதாச்சாரி என்ற பார்ப்பனர், ஒவ்வொரு நாளும் 30 மைல் தொலைவிலுள்ள திருவரங்கம் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தான். அதேபோல் பார்ப்பன குருவையும், விலை உயர்ந்த பொன் னாலும், மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், அரண்மனை தாதிகள், குருவை அமர வைத்து 30 மைல் தூரத்க்கு தூக்கி வருவார்கள். அதற்குப் பின்னே மற்றொரு பளபளப்பான பல்லக்கில் தாதாச்சாரியின் “செருப்புகள்” நவரத்தினங்களால் இழைக்கப் பட்டு, தாதிகளால் தூக்கப்பட்டு வரும். மன்னன், கையில் பூசை பாத்திரம் ஏந்தி கால்நடையாக நடந்து வருவான்.
4) நாட்டில் கடும் பஞ்சம்; கொடும் நோய்; மக்கள் வேறு பகுதிகளுக்குக் குடியேறினர். பலர் டச்சுக் காரர்களின் சர்ச்சுகளில் அடைக்கலமானார்கள். சீரழிவிற்குக் காரணம், கிறிஸ்தவ மதமும், அவர்களின் சர்ச்சுகளும் தான் என்று பார்ப் பனர்கள் பிரச்சாரம் செய்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வந்த கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினர்.
5) இளவரசன் மன்னாடுதாசன், மனம் கொதித் தான். தந்தையின் மூடத்தனத்தைக் கண்டித் தான். மத குருவுக்கும், கோயிலுக்கும் பணத்தைச் செலவிட்டால், பிறகு, அரசாங்கம் ஏன்? நீதிமன்றம் ஏன்? என்று கேட்டான்.
6) இளவரசனை வீழ்த்த பார்ப்பனர்கள் சதித் திட்டம் போட்டார்கள். இளவரசனை மன்னனிட மிருந்து பிரித்தார்கள்.
7) மதுரை மன்னன் சொக்கநாத நாயக்கனுக்கும், விஜயராகவனுக்கும் கோவிந்த தீட்சத் எனும் பார்ப்பான் சதி செய்து போர் மூட்டினான். விஜயராகவன் தோல்வி அடைந்தான். பார்ப்பன புரோகிதர்கள் மன்னன் மறு பிறவி எடுக்க வேண்டும் என்று கூறி, அதற்காக சடங்குகளை செய்ய வேண்டும் என்றனர். வெண்கலத்தாலான பசு செய்யப்பட்டது. மன்னன் உள்ளே புகுந்தான்; பார்ப்பனர்கள் மந்திரம் ஓத, பசு, கன்றினை ஈனுவது போல, உயிரற்ற அந்த பசு, அரசனை ஈன்றது. மன்னன், குழந்தையைப் போல கையை, காலை ஆட்டிக் கொண்டு வெளியே வந்தான். ஒரு பார்ப்பன குருவின் மனைவி, மருத்துவச்சியாக இருந்து, 80வயது அரசனை, குழந்தையாக பாவித்து, தனது காலில் கிடத்தி, தாலாட்டி, மார்போடு இணைத்து முத்தம் கொடுத்தாள்.
– இப்படி எல்லாம் பார்ப்பனர்கள் கூத்து அடிக்க, அரசர்கள் அவர்களின் தாசர்களாக இருந்தார்கள் என்பதே இந்த நாட்டின் வரலாறு.

வீழ்ந்த சிவாஜி

1) சூத்திரனாகிய சிவாஜி, பார்ப்பன தாசன். அவன் மூடி சூட ‘சத்திரியனாக’ வேண்டும். அதனால் பார்ப்பனர்கள் முடிசூட்ட மறுத்தனர்.

2) பெரும் தொகையை வாங்கிக் கொண்டு காசியி லிருந்து காகப்பட்டன் என்ற பார்ப்பனர் முடிசூட்ட வந்தான். நாடு முழுதுமிருந்தும் 11,000 பார்ப் பனர்கள், குடும்பத்துடன் அழைக்கப்பட்டனர். அன்றாடம் பூசைகளும், சடங்குகளும் நடந்தன. 44வது வயதில் பூணூல் போடப்பட்டு, சத்திரியன் ஆக்கப்பட்டான். தானும் ஒரு சத்திரியன் என்று ஒப்புக் கொண்டு விட்டபடியால், தனது காதில் விழுவதுபோல் மந்திரங்களை ஓத வேண்டும் என்று சிவாஜி விரும்பினான். பார்ப்பனர் களிடையே சலசலப்பு ஏற்பட்டது. “வேத மந்திரங்கள் என்பது இரு பிறப்பினருக்கு மட்டுமே உரியது. தற்காலத்தில் பார்ப்பனர்கள் தவிர வேறு எவரும் இரு பிறப்பாளர்களாக மாட்டார்கள். உலகில் உண்மையான சத்திரியர் களும் இல்லை” என்று கூறிவிட்டனர். “பேராசை பிடித்த பார்ப்பனன் மந்திரங்களின் ஒரு சிறு அசைவுகூட, சிவாஜியின் காதில் விழாத வண்ணம், தங்கள் வாய்க்குள்ளாகவே முணுமுணுத்துக் கொண் டனர்” என்று எச்.எம். அரிபிரசாத் சாஸ்திரி குறிப்பிடுகிறார்.

3) சிவாஜியின் எடைக்கு எடை பல பொருட்கள் எடையில் நிறுக்கப்பட்டன. திடீரென இரண்டு பார்ப்பனர்கள், சிவாஜி படையெடுப்பின்போது பார்ப்பனர்கள், பசுக்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு மரணம் அடையத்தக்க வகையில் நகரங்களை எரித்தான் என்றும், அப்பாவங்களுக்கு தகுந்த விலை கொடுத்து, பாவத்திலிருந்து மீள வேண்டும் என்று கூறவே, அதற்காக, 8000 பார்ப்பனர்களுக்கு பணமாகக் கொடுத்தான் சிவாஜி.
பார்ப்பனர்களை நம்பி, அவர்கள் காலடியில் வீழ்ந்த சிவாஜியின் சாம்ராஜ்யத்தை பார்ப்பனர்கள், பொன்னையும், பொருளையும் சுரண்டியே ஆட்சியை திவாலாக்கி விட்டனர். இந்த வரலாற்றையே-‘இந்து கண்ட சாம்ராஜ்யம்’ என்று அண்ணா நாடகமாக்கினார். அந்த நாடகத்தில் சிறப்பாக நடித்ததற்காகத்தான் ‘சிவாஜி’ என்ற பட்டத்தை பெரியார் சிவாஜி கணேசனுக்கு சூட்டினார்.
(நிறைவு)
தொகுப்பு : விடுதலை இராசேந்திரன்

சேலம் வேத மரபு மறுப்பு மாநாட்டு மலரில் இருந்து

"ஆன்மா" என்று அறிவியலில் எதுவும் கிடையாது...

"ஆன்மா" என்று அறிவியலில் எதுவும் கிடையாது...



சிந்தியுங்கள்...

ஒரு குழந்தையற்ற தம்பதிகளுக்கு

ஒரு ஆய்வக கண்ணாடி குடுவையில் அந்த ஆணின் விந்தை உறைய வைக்கிறார்கள்...

அந்த பெண்ணின் கருமுட்டையையும் தனியாக எடுத்து உறையை வைக்கிறார்கள்...

பிறகு உடலுக்கு வெளியே உள்ள அந்த ஆய்வகத்தில் இரண்டையும் இணைத்து விதைக்கிறார்கள்...கருமுட்டை கண்ணாடி குடுவையில் சினையாகிறது...

சினையான கருமுட்டையை திரும்ப அதே பெண்ணோ அல்லது வேறொரு பெண்ணின் கற்பத்திலோ அடைக்கிறார்கள்...

கரு வளர்கிறது...9 மாதத்தில் குழந்தை பிறக்கிறது...

இதில் கேள்வி என்ன வென்றால்  அறிவியல் கூறாத "ஆன்மா" சினையான குருமுட்டைக்குள் எப்பொழுது சென்றது?

கண்ணாடி குடுவையில் இருக்கும்போதா? அல்லது பெண்ணின் கருவறைக்குள் சென்ற பொழுதா?

கண்ணாடி குடுவையில் என்றால் மனித ஆன்மாவால் கடவுளிடமிருந்து கண்ணாடி குடுவைக்குள்ளெல்லாம் பயண பட முடியுமா?

அந்த தாய்க்கு அதற்கு முன் ஏற்பட்ட ஒவ்வொரு கருச்சிதைவிலும் ஒரு ஆன்மா இறக்கிறதா? 5-8 நாள் வாழ்ந்த ஆன்மாவெல்லாம் உள்ளதா?

தாயின் கருவறை என்றால் அப்பொழுது  கருமுட்டை எப்படி குடுவையில் சினையாகி வளர்ந்தது

தமிழர் கண்ட கால அளவீடும் தை மாதம் தமிழ் புத்தாண்டான வரலாறும்*


தமிழர் கண்ட கால அளவீடும் தை மாதம் தமிழ் புத்தாண்டான வரலாறும்*
பழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை. திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணி, 43 மணித்துளிகள். பண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி ) முதுவேனில் (ஆனி, ஆடி), கார் (ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, ) பின்பனி ( மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும். வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 நிமிடங்களாகும்.
சங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன. முழுமதி நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது. சங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். "நாள்முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவி"எனும் பாடல் நாள்மீன்(நட்சத்திரம்) பற்றி பேசுகிறது. "திங்கள் முன்வரின் இக்கே சாரியை" என்ற பாடல்வரி மாதத்தைப் பற்றியது. எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம்.
மேலும் தொல்காப்பியர் அ,இ,உ,எ, ஒ என்னும் ஐந்து உயிர் எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துக்கள் என்கிறார். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள என்னும் ஏழு உயிர் எழுத்துக்களும் இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துக்கள். மூன்று மாத்திரைகளில் எந்த எழுத்தும் ஒலிக்கப்படுவதில்லை. ஒலி மிகுதல் தேவைப்பட்டால் அந்தளவிற்குத் தேவையான எழுத்து ஒலிகளை எழுப்புதுல் வேண்டும். இதே போல் மெய் எழுத்துக்கு ஒலி அரை மாத்திரை. மாத்திரையின் கால அளவைச் சொல்லும்போது இயல்பாகக் கண் இமைத்தலும், விரல் நொடித்தலுமே ஒரு மாத்திரை என்னும் ஒலி அளவு. இது தெளிவாக அறிந்தோர் வழி என்கிறார் தொல்காப்பியர்.
"கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே" (தொல்)
காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.
தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு
ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடராண்டு முறை இல்லாதது முக்கிய காரணமாகும். பழந்தமிழரிடையே வியாழ ஆண்டு என்கிற அறுபதாண்டு கணக்குமுறை இருந்துவந்துள்ளது என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இந்த அறுபதாண்டு கணக்குமுறையை பின்னாளில் ஆரியர்கள் தங்கள் கையகப்படுத்திக் கொண்டு ஆரியமயமாக்கி 60 ஆண்டுகளுக்கும் சமற்கிருதப் பெயர்களைச் சூட்டி, காலப்போக்கில் தமிழரின் ஆண்டு முறையையும் வானியல் கலையையும் ஐந்திற அறிவையும் அழித்து ஒழித்தனர். தமிழரிடையே தொடராண்டு முறை இல்லாமல் போனதால் இன்று நாம் காணுகின்ற பல்வேறு தாக்குறவுகளும் பின்னடைவுகளும் தமிழினத்திற்கு ஏற்பட்டுவிட்டது. இந்தக் குழப்பத்தை நீக்க ஐந்நூறு தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் மறைமலை அடிகளார் தலைமையில் 1921 ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டை கி.மு 31 எனக் கொண்டு, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டை ஏற்படுத்துவதென முடிவு செய்தனர். இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென அவர்கள் அறிவித்தனர்.
சைவம், வைணவம், புத்தம், சமணம், கிறித்துவம், இசுலாம் என பல்வேறு சமயத்தைத் தழுயிய அந்த ஐந்நூறு சான்றோர்கள் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்குச் சரியான காரணங்களும் சான்றுகளும் இருக்க்கின்றன. தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் அண்டுகளுக்கும் முற்பட்ட கழக இலக்கியன்களில் காணப்பெறும் சான்றுகள் சில:-
1. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்" – நற்றிணை
2. "தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" – குறுந்தொகை
3. "தைஇத் திங்கள் தண்கயம் போல்" – புறநாநூறு
4. "தைஇத் திங்கள் தண்கயம் போல" – ஐங்குறுநூறு
5. "தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" – கலித்தொகை
தைப் பிறந்தால் வழி பிறக்கும், தை மழை நெய் மழை முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் இன்றும் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன. இனி, தை முதல் நாளே புத்தாண்டு என்பதற்குரிய வானவியல் அடிப்படையிலான காரணத்தை காண்போம். பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும் ஆடி முதல் மார்கழி வரை தென்செலவுமாகும். அந்தவககயில், கதிரவன் வடசெலவைத் தையில்தான் தொடங்குகிறது. இந்த வானியல் உண்மையை அறிந்த பழந்தமிழர் தைத்திங்களைப் புத்தாண்டாக வைத்தது மிகவும் பொருத்தமானதே. இப்படியும் இன்னும் பல அடிப்படை காரணங்களாலும் தை முதல் நாளை ஐந்நூறு தமிழ்ச் சான்றோர்கள் புத்தாண்டாக அறிவித்தனர். தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
'பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்''
என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதைத் தெளிவாக்குகிறது.
தமிழ் மொழி, இன, சமய, கலை, பண்பாடு, வரலாற்று மீட்பு வரிசையில் பிற இனத்தாரின் தாகுதலால், படையெடுப்பால், மறைப்புகளால், சூழ்ச்சிகளால் இடைக்காலத்தில் சிதைக்கப்பட்ட தமிழரின் வானியல் கலையை – ஐந்திரக்(சோதிடம்) கலையை நாம் மீட்டெடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழரின் செவ்வியல் நெறியை நிலைப்படுத்த முடியும்.
சித்திரைப் புத்தாண்டு புராண வரலாறு
தமிழரின் ஆண்டு என்ற பெயரில் இன்று இருப்பது 60 ஆண்டுகளைக் கொண்டு சுழன்றுவரும் ஆண்டு முறைதான. இதற்கு, விக்கிரம ஆண்டு, சாலிவாகன ஆண்டு(சாலிவாகன சகம்), கலியாண்டு என்று பல பெயர்கள் விளங்குகின்றன. தமிழரின் வியாழ ஆண்டு முறையாக 60 ஆண்டு சுழற்சி முறை ஆரியமயமாக மாறிப்போன பிறகு அதற்கு தெய்வீகம் கற்பிக்கப்பட்டது. இறைவனால் உருவாக்கப்பட்டது என நம்பவைக்கப்பட்டது. மதச்சார்பு செய்யப்பட்டுப் புராணங்களில் இணைக்கப்பட்டது. மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கடவுளர்களின் பெயர்களோடு தொடர்புபடுத்தி மதநூல்களில் ஏற்றப்பட்டது. அவ்வகையில், புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் "'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்''; என வேண்டினார். அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, எந்தவொரு பெண்ணின் மனதில் நான் இல்லையோ அந்தப் பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார்.
ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்;டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார். 'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா? என வேண்டி நின்றார்.
பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார். அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது. இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத் தமிழர்கள் ஆர அமர அலசிப் பார்க்க வேண்டும்.
பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக, இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.

இலவசத்தால் தான் தமிழ்நாடு முன்னேறவில்லை என்று கூறும் அரைகுறை அரசியல் விமர்சகர்களுக்கு இது

'ஒருவேளை சாப்பாட்டுக்கே பிரச்சினையா இருக்கு. இதுல எங்க சாமி எம்புள்ளைய படிக்க அனுப்ப?'
"உன் புள்ளைய படிக்க அனுப்பு. அந்த பிள்ளைக்கான சாப்பாட்டை நான் தரேன்" - தமிழக அரசு அரை நூற்றாண்டுக்கு முன்பு
'என் புள்ள பள்ளிக்கூடத்துக்கு போட்டுட்டு போக நல்ல துணி இல்லைங்க'
"புள்ளைய படிக்க அனுப்பு. சீருடையை நான் தரேன்"
'என் புள்ள கால்ல செருப்பு இல்லாம வெயில்லயும், மழையிலயும் நடக்குது'
"புள்ளைய படிக்க அனுப்பு. செருப்பு நான் தரேன்"
'பள்ளிக்கூடத்துல வெறும் சோறும் குழம்பும்தானாம். அத திண்ணுட்டு எப்படிங்க என் புள்ள தெம்பா படிக்கும்?'
"இனி சத்துணவுல முட்டை போட சொல்றேன். சந்தோஷமா?"
'புத்தகத்தை காசு கொடுத்து வெளியில வாங்க சொல்றாங்க சார். என்னால அதெல்லாம் முடியுமா?'
"உன் பிள்ளைக்கு புத்தகம், ஜியாமெண்டரி பாக்ஸ் எல்லாமும் இலவசமா தரேன். படிக்க மட்டும் அனுப்பு"
'எம்புள்ள அஞ்சாப்பு வரை எங்கூர்லயே படிச்சிடுச்சிங்க. அடுத்து ஆறாப்பு படிக்க பக்கத்து ஊருக்கு போனும். அது இங்கேர்ந்து 4-5 மைல் தூரம் இருக்கும். தினமும் பஸ்ல போக காசுக்கு நான் எங்க போவேன்'
"உன் பிள்ளைக்கு இலவச பஸ் பாஸ் நான் தரேன். படிக்க அனுப்பு"
'பக்கத்து ஊர்ல என் புள்ள படிக்குது. அந்த ஊருக்கு அடிக்கடி பஸ் இல்லை. எப்படி அனுப்புறது?'
"கவலைப்படாதீங்க. உங்க பிள்ளைக்கு இலவசமா சைக்கிள் தரோம். படிக்க அனுப்புங்க"
'நாங்க மலைக்கிராமங்க. எங்க ஊர்லேர்ந்து தினமும் பிள்ளைகளை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்கிறது சாத்தியமில்லைங்க'
"உங்களை மாதிரி மக்களுக்குதான் அரசாங்கம் சார்பில் உண்டு உறைவிட பள்ளிகளை கட்டியிருக்கோம். பிள்ளையை படிக்க அனுப்புங்க. தங்குற இடம், சாப்பாடு, படிப்பு அனைத்துக்கும் நாங்க பொறுப்பு"
'வயசுக்கு வந்த பொம்பள புள்ளைய எப்படி அந்த மூனு நாளுக்கு பள்ளிக்கூடம் அனுப்புறது? அதான் அந்த நாட்கள்ல பள்ளிக்கூடத்துக்கு அனுப்பறதில்லை'
"தைரியமா அனுப்புங்க. அந்த நாட்களுக்கு தேவைப்படும் நாப்கின்களை கொடுக்க தானியங்கி நாப்கின் மிஷின்களை பள்ளிக்கூடத்தில் அமைச்சிருக்கோம். அதுக்காகல்லாம் புள்ளைய லீவ் போட சொல்லாதீங்க"
'பத்தாவதுவரை அரசாங்க பள்ளிக்கூடத்தில் படிக்க வச்சிட்டேன். ஏதோ கம்பியூட்டர் படிப்பு வந்துருக்காம்ல அதுல சேர்த்து விடலாம்னு பார்க்குறேன். எங்க போயி சேர்க்குறதுன்னு தெரியலையே?!'
"எங்கிக்கிட்ட அனுப்புங்க. Computer Science படிப்பை நாங்களே சொல்லித்தரோம். படிக்கிற புள்ளைக்கு உதவியா இருக்க இலவசமா லேப்டாப்பும் தரோம்"
'என் புள்ளைதாங்க என் வம்சத்துலயே பள்ளிக்கூடம்வரை போய் படிச்சவன். அவனை காலேஜ் படிப்புக்கு அனுப்ப பணத்துக்கு நான் எங்க போவேன்?
"குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு கல்லூரி படிப்பும் இலவசம். தயங்காம படிக்க அனுப்பி வைங்க.நாங்க பார்த்துக்குறோம்"
'எம் புள்ள நல்லா படிச்சி டாக்டர்படிப்புக்கோ, என்ஜினியர் படிப்புக்கோ போகனும்னா எங்க போயி படிக்கனும்?'
"நம்ம பிள்ளைகள் எங்கேயும் போக வேணாம். அவுங்க டாக்டராகவோ, பொறியாளராகவோ ஆகனும்னா நம்ம மாநிலத்துலயே படிக்கலாம். அதுக்கு தேவையான மருத்துவ கல்லூரிகளையும், பொறியியல் கல்லூரிகளையும் நம்ம அரசு கட்டித்தரும். அதுக்கு 12வதுல நல்ல மார்க் எடுத்தா போதும்"
'பொம்பளப்புள்ள 8வதுவரை படிச்சிருக்கு. அது போதும்னு பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்திட்டோம். சட்டுபுட்டுனு அடுத்த தை மாசத்துல கல்யாணத்தை முடிச்சிடுவோம்'
"பெண் பிள்ளைகளை முழுமையா படிக்க விடுங்க. 12ம் வகுப்புவரை படித்தால் திருமணத்துக்கு 50,000 ரூபாய் பணமும் தாலிக்கு 8 கிராம் தங்க காசும் அரசாங்கம் சார்பா தரோம். படிக்க அனுப்புங்க"
'நீங்க நல்லாயிருக்கனும் சாமி. என் வம்சத்துலயே என் புள்ளதான் முதல் பட்டதாரி. இனி குடும்பம் தழைச்சிடும்'
திடீரென ஒரு வில்லன் வரான் " இனி நீங்கல்லாம் எனக்கு கட்டுப்படனும். நான் சொல்றபடிதான் நீங்கல்லாம் படிக்கனும்.
நீ என்ன தேர்வு எழுதனும்னு நான்தான் சொல்லுவேன். அதே மாதிரி இந்த கல்லூரிகள் எல்லாம் உனக்கு சொந்தமா இருக்கலாம் ஆனா அதில் யார் யாரை படிக்க வைக்கனும்னு நான்தான் முடிவெடுப்பேன். ஒரே நாடு, ஒரே கொள்கை. இனி இப்படித்தான். இதை ஏற்று நீங்க நடக்கலைனா நீங்கல்லாம் தேச துரோகி. அடுத்து என்ன பாடம் சொல்லிக்கொடுக்கனும்னு நான்தான் சொல்லப்போறேன்"
இதுதான் அரை நூற்றாண்டுகளாக தமிழக அரசுகளின் உழைப்பால் கிடைத்த கல்வி எனும் சமூகநீதி , காவி பாவிகளின் கையில் சிக்கிய வரலாறு.
இலவசத்தால் தான் தமிழ்நாடு முன்னேறவில்லை என்று கூறும் அரைகுறை அரசியல் விமர்சகர்களுக்கு இது சமர்ப்பணம்.

யார் சொன்னார்கள் பார்ப்பனர்கள் லஞ்சம் வாங்காதவர்கள் என்று

யார் சொன்னார்கள் பார்ப்பனர்கள் லஞ்சம் வாங்காதவர்கள் என்று. 1852 குண்டூர் கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஓ. லஞ்சம் வாங்கியதாலும் , அந்த அலுவலகங்கள் எல்லாவற்றிலும் முழுமையான பார்பனிய ஆக்கிரமிப்பில் இருந்ததாலும் எந்த நடவடிக்கையும் ஆங்கில அரசால் எடுக்க முடியவில்லை. ஆகவே அதை தவிர்க்க இந்திய வரலாற்றிலேயே சாதியச் சுழற்றி முறையில் வருவாய்த் துறையில் பணியமர்த்த ஆங்கில அரசால் சட்டம் இயற்றப் பட்டது. சத்திய மூர்த்தி அய்யர் சட்ட மன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் கேட்டார் என்ற குற்றச் சாட்டு எழுந்தது. அதற்கு அவர் சட்ட மன்றத்திலே யே," என்னிடம் கேள்வி இருக்கிறது. அவர்களிடம் பணம் இருக்கிறது. எனக்கு பணம் தேவைப் படுகிறது. அவர்களுக்கு வேலை ஆக வேண்டியுள்ளது. ஆகவே அவர்களுக்காக நான் பேசுகிறேன். அவர்கள் எனக்கு பணம் தருகின்றனர். இருவர் தேவையும் பூர்த்தி ஆகிவிடுகிறது. இதில் தவறு என்ன இருக்கிறது." என்று வாதிட்டார். இராஜாஜி முதல்வர் என்பதால் அவர் மீது நடவடிக்கையில்லை. 1957 இல் சுதந்திர இந்தியாவில் முதல் முதலில் முந்திரா ஊழல் செய்து மாட்டிக் கொண்டு பார்ப்பனர் என்பதால் குற்ற நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வைக்கப் பட்டு, பதவி இழந்தவர் நமது ஊர் பார்ப்பனர் டி.டி. கிருஷ்ணமூர்த்தி அய்யங்கார்தானே. இந்தியாவை தற்பொழுது சாரதா சிட்பணட் அதிபர் பார்ப்பனர். மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்துவிட்டு வெளிநாடு ஓடிய விஜெய் மல்லையா பார்ப்பனர். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப் பட்ட பார்ப்பனத்தி இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? 
தி.மு.க. ஆட்சி வரும் வரை தமிழக விளை நிலங்கள் யாவையும் இவர்கள் கையில். இவர்கள்தான் நில உடமை சமூகத்தினர். மற்ற சமூகத்தினர் கூலிகள். நெல்லை மாவட்டத்தில் குளங்களே இவர்களின் ஆதிக்கத்தில். இன்றும் பார்ப்பன சங்கர மடத்துக்கு தமிழகம் முழுதும் விளைநிலங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளன. இன்று நிலப் பதிவு அல்லது A1ரிஜிஸ்டரில் இருந்து நில மாற்றம் பற்றிய தகவல்கள் புள்ளிவிவரம் எடுத்தால் 85% இவர்களடத்திலிருந்து கை மாறியதே. இராஜ ராஜன் காலத்திலிருந்து தி.மு.க. ஆட்சி வரும் வரை இவர்கள்தான் பண்ணையார்கள். மேல் தாமிரபரணி விளை நிலங்கள் யாவும் இவர்கள் கையில். சங்கர் சிமிண்ட் அதிபரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிபருமான ஸ்ரீனிவாசன் நெல்லை மாவட்டத்தில் பெரிய நிச்சுவான்தார். இங்கு ஒருவருக்கு பண்ணை சங்கரய்யர் என்ற பெயரே உண்டு. வெள்ளையர் நாட்டை விட்டுச் செல்லும் போது விக்கிரமசிங்கபுரம் HARVEY MILL இவர்கள் கை மாறியது நேர்மையான முறையிலா? மேற்கூறிய சொத்துக்கள் எல்லாம் இவர்களுடைய ஆத்தாளும் அம்மாவும் தொடை தெறிய சேலையை வரிந்து கட்டி நாற்று நட்டு சம்பாதித்தவர்கள்? இவர்கள் ஏழைகளாம். இவர்கள் ஏழைகள் என்றால் இத்தனை ஊடகங்கள் இவர்கள் எப்படி நடத்த முடியும். இந்தியன் எக்ஸ்பிரஸ் கோயாங்கோ யார்? இந்து கஸ்தூரி அய்யங்கார் யார்? ஆனந்த விகடன் மற்றும் ஜெமினி ஸ்டூடியோ வாசன் யார்? டி.வி.எஸ் அய்யங்கார் யார்? என்பீல்டு ஈஸ்வர அய்யர் யார்? சிம்சன் அனந்தநாராயணன் யார்?இவர்களில் எத்தனை பேர் உழைத்து சம்பாதித்தவர்கள்? வெள்ளைக்காரனை அண்டிப் பிழைத்து சுரண்டியவர்கள். இந்த நாட்டுக்கு ஊழல் சுரண்டல் லஞ்சம் முறையற்ற செயலில் சம்பாதிப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்ததே பார்ப்பனியம்தான். இன்று சைத்தான் திராவிடவியலால் அடித்த அடி தாளாது ஒப்பாரி வைக்கிறது. 1000 ஆண்டுகளாக உழைக்காது பிறர் உழைப்பை சுரண்டி அக்கிரஹாரம் அமைத்து ஹாழ்ந்தவர்கள் இவர்கள். மற்றவர்களை நேர்மையற்றவர்களாக விமரிக்கின்றனர்.

17-08-1932 பிரிட்டன் பிரதமர் ராம்சே மெக்டோனால்ட் வட்டமேசை மாநாட்டு கொள்கையை அறிவிக்கிறார்

1932 ஆகஸ்ட் மாதம் 17 ந்தேதி [17-08-1932] பிரிட்டன் பிரதமர் ராம்சே மெக்டோனால்ட் வட்டமேசை மாநாட்டு கொள்கையை அறிவிக்கிறார். இதன்படி “பொதுத்தொகுதிகளில் வாக்களிக்கும் உரிமையோடு தாழ்த்தப்பட்டோர் தனித்தொகுதி உரிமையையும் பெறுகின்றனர்” என்றார்
அதாவது பிளவுபடாத அன்றைய சென்னை மாகாணத்தில் சிலதொகுதிகளில் பொதுவாக்கெடுப்பில் தேர்தெடுக்கும் உறுப்பினர்களோடு,அத்தொகுதியில் தாழ்த்தப்பட்டோருக்கான தாழ்த்தப்பட்டோர் மட்டும் வாக்களித்து ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பு உறுப்பினரையும் தேர்ந்தெடுப்பார்கள். இந்த இரட்டை வாக்குரிமை தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்படும் சிறப்பு உரிமை ஆகும்.
கடுமையான போராட்டத்தின் விளைவாக அம்பேத்கர் ஆங்கில அரசிடமிருந்து பெற்று தந்த மிகமுக்கியமான நுட்பமான சிறப்பு உரிமை இது.இது குறித்து அம்பேத்கர் “இனப்பிரதிநிதித்துவத் தீர்வினால் கிடைத்த இரண்டாவது வாக்குரிமை என்பது விலைமதிப்பற்றதொரு சலுகை. இது ஒரு அரசியல் ஆயுதம்.இதன் மதிப்பு கணிப்பிற்கு அப்பாற்பட்டது” என்றார்
ஆனால், காந்தி இப்படி ஒரு தீர்ப்பு வந்துவிடக் கூடாது என்று ஏற்கனவே பிரிட்டன் பிரதமருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்து சிறையிலிருந்து 11-03-1932 அன்று ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் “ மேன்மை தாங்கிய மன்னருக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனித்தொகுதி கொடுத்தால் நான் சிறையில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளவேண்டியதிருக்கும் என மரியாதையோடு தெரிவித்துக்கொள்கிறேன்” என்று
அதன்படி, தனித்தொகுதி அறிவிக்கப்பட்ட மறுநாள் 18-08-1932 காந்தி பிரிட்டன் பிரதமருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதுகிறார் “இத்தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டாலொழிய நான் உத்தேசித்துள்ள உண்ணாவிரதம் வருகிற செப்டம்பர் 20 ந்தேதி சாதாரண முறையில் நடைமுறைக்கு வரும்’ என்கிறார்
காந்தியின் கடிதத்திற்கு பிரிட்டன் பிரதமர் 08-09-1932 அன்று பதில் கடிதம் எழுதுகிறார்.
“தற்போது மிக மோசமாக துன்புற்றுக்கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வருங்காலத்தில் தங்களுக்கான நலனில் ஒரு செல்வாக்கை ஏற்படுத்தும் வாய்ப்பையும் சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான பிரதிநிதியை தேர்தெடுத்துக்கொள்ளும் உரிமையையும் தடுப்பதற்காகவே நீங்கள் உண்ணாவிரதம் மேற்கொள்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுகிறேன்”
நாடெங்கும் பெரும் பரபரப்பான சூழலில் காந்தி 20-09-1932 உண்ணாவிரதத்தை தொடங்கினார்.நாடு கொந்தளித்தது எல்லோருடைய கரங்களும் அம்பேத்கரை நோக்கி நீண்டது.காந்தி இருந்த எரவாட சிறைச்சாலை தினமும் பேச்சுவார்த்தை நடக்கும் இடமாக மாறியது.அவைகள் இருண்ட நாட்களாகவே அம்பேத்கருக்கு இருந்திருக்கவேண்டும்.
26-09-1932 அன்று வகுப்புவாரி பிரதிநிதித்துவ-இரண்டை வாக்கு உரிமையை எதிர்த்த காந்தியின் ஒப்பந்தத்தை ஏற்றுகொண்டதாக பிரிட்டன் அரசாங்கம் சிறைச்சாலையில் கர்னல் டயல் மூலமாக காந்தியிடம் தெரிவித்தது. மாலை காந்தியின் மனைவி பழச்சாறு கொடுக்க காந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
சுற்றியிருந்த நண்பர்கள்,சாதகமான அரசியல்வாதிகள், தாழ்த்தப்பட்ட தலைவர்களும் கூட அம்பேத்கரைவிட்டு காந்தியிடம் போய் சேர்ந்தது, அரும்பாடுபட்டு,உழைத்து,வாதிட்டு ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்டோரின் மேன்மைக்காக வாங்கிய உரிமை கண்ணுக்கு முன்னால் களவு போனது!
டாக்டர் அம்பேத்கரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? இதை படிக்கும்போதே நமக்கு மனம் பதைபதைகிறது.
“காந்தி ஏமாற்றி விடுவார், கவனமாக இருங்கள், காந்தி ஒரு உயிர்தான். ஆனால், நீங்கள் பாடுபட்டு வாங்கிய உரிமை லட்சம் உயிர்களுக்கு சமம்.நான் உங்களோடு இருக்கிறேன் கவலையை விடுங்கள்” என்று கடைசிவரை அம்பேத்காருக்கு தமிழகத்திலிருந்து ஒரு நட்பு கரம் நீண்டது. அது பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் கரமே!
இது புனா ஒப்பந்தத்தின் சோக வரலாறு.
இது குறித்து அம்பேத்கர் சில ஆண்டுகள் கழித்து இப்படி எழுதுகிறார்
”இயற்கையாக அந்த நேரத்தில் நாயகனாக [The man of the moment] அல்லது கதையின் வில்லனாகக் [ Villain of the piece ] கருதி அனைத்துக் கண்களும் என் பக்கம் திரும்பின
இரு மாறுபட்ட முடிவுகளிடையே ஒன்றினை நான் தேர்வு செய்யவேண்டியதிருந்தது.காந்தியை நிச்சயம் சாவிலிருந்து காப்பற்றுவதற்கு பொது மனிதத்தன்மையின் ஒரு பகுதியாக இயங்கி வந்த அந்தக் கடமை என் முன்னாளிருந்தது....
கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை விலையாக கொடுத்து காந்தியின் உயிர் காப்பற்றப்பட்ட வரலாறுதான் புனா ஒப்பந்தத்தின் சோக வரலாறு!
டாக்டர் பாபா சாகேப் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் நினைவாக...
லெனாகுமார்

நன்றி; புனா ஒப்பந்தம் ஒரு சோகக்கதை
- தொ பரமசிவன்

1973 ஆம் ஆண்டு மறைந்த தந்தை பெரியாருக்கு நினைவேந்தல் கூட்டம் அமைக்க சி.பி.எம். ஆய்வு மாணவர்கள் சிலர் எதிர்ப்புக் காட்டினர்

1973 ஆம் ஆண்டு தந்தை பெரியார்
மறைந்து விடுகிறார்.
சென்னைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்கள் சங்கத்தின் சார்பில் பெரியாருக்கு நினைவேந்தல் கூட்டம்
நடத்த முற்படுகிறோம்.
இந்து பத்திரிகையின் ராம் தான் அன்றைய எஸ்.எப்.அய்.
இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பின் அறிவிக்கப்படாத வழிகாட்டி.
பெரியாருக்கு நினைவேந்தல் கூட்டம் அமைக்க சி.பி.எம். ஆய்வு மாணவர்கள்
சிலர் எதிர்ப்புக் காட்டினர்.
ஆராய்ச்சி மாணவர்கள் சங்கத்தின்
செயலர் என்ற முறையில் இச்சங்கம் உடைந்துவிடக்கூடாது என்பதற்காக இளந்தமிழர் என்ற அமைப்பின் சார்பில் இக்கூட்டத்தை நடத்தினோம். பொது மக்களும் கலந்து கொள்ளும் வகையில், மத்திய நூலக மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.
அன்றைய கல்வி அமைச்சர் நாவலர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஏ.எஸ்.கே., நடிகவேள் எம்.ஆர்.ராதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பல்கலைக் கழக, கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என எதிர்ப்பார்த்ததிற்கு
மேல் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
நடிகவேள் ராதாவின் பேச்சு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
#நடிகவேள்_இவ்வாறு_பேசினார் ......
🔊🔊🔊
"படிக்காத என்னை ஏன் அழைத்தீர்கள்
என்று உரையைத் தொடங்கியவர் ,,,,,,
1920 களில் பெரியார் முதல் வலம்
வருகிறார்.
அப்போது நாடகக்குழுவில் சிறுவனாக வேலை செய்து வந்தேன். காலையில்
நாடகக் குழுவினருக்கு காபி தேநீர்
வாங்கச் செல்வேன்.
அய்யர் கடையில் 20 அடி தூரத்திலிருந்து "அய்யா சாமி" என்று உரத்தக் குரலில் கத்துவேன்.
"டேய் வரேன்டா" என்று கூறிவிட்டுப் பாத்திரத்தில் காபியை அய்யர் எடுத்து வருவார்.
நான் எடுத்துவந்த பாத்திரத்தையும், பணத்தையும் மண் தரையில் வைக்கச் சொல்வார். நீண்ட கைப்பிடியுடன் உள்ள அவரது பாத்திரத்திலிருந்து காபியை ஊற்றுவார்.
1930களில் தமிழ்நாடெங்கும் பெரியார் மீண்டும் வலம் வருகிறார்.
காபி கடைக்கு மிக அருகில் செல்ல முடிகிறது. "சாமி காபி கொடுங்கள்"
என்று கூறியவுடன் "இதோ வரேன்டா!" பாத்திரத்தையும் பணத்தையும் உணவகத்தின் மேஜை மீது வைக்க முடிந்தது. "டேய்" என்ற ஆணவச் சொல் காணாமல் போய்விட்டது.
1940களில் பெரியார் வலம் வருகிறார்.
உணவகத்தின் நாற்காலியில் அமர்ந்து கொண்டு "அய்யரே! காபி கொடு,
காசு கொடுக்கிறன்" என்று மிடுக்கோடு
பேச முடிந்தது.
"இதோ தரேன்! வாங்கிக்கப்பா" இப்படியாக, படிப்படியாக அனைவருக்கும் மரியாதையும், சம உரிமையும் கிடைக்கிறது.
இதை யார் வாங்கித்தந்தது?
#அய்யா_சாமி : டேய் வரேன்டா ......
#சாமி : வரேன்டா .......
#அய்யரே : வாங்கிக்கப்பா .......
மாணவர்களே! சற்றுச் சிந்தித்துப்
பாருங்கள் ,,,,,,,
ஒரு முறை இந்தச் சொற்களைச் சொல்லிப்பாருங்கள்,
இந்த ஒலி சத்தத்தின் வேறுபாடுகளில் தந்தை பெரியாரின் உழைப்பும், சீர்திருத்தமும் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொண்டிருக்கும்" என்று குறிப்பிட்டு, அவரின் குரலில், அவருக்கே உரித்தான பாணியில் நடித்துக் காட்டினார். மண்டபமே அதிரும்படியான கையொலி சத்தம்.
நடிகவேள் ராதாவின் பகுத்தறிவுப் பணி என்றும் போற்றப்படும்.
👊👊👊
நன்றி : பேராசிரியர் மு. நாகநாதன்.
நன்றி கார்த்திகைநிலவன்

திராவிடம் ஏன்?

திராவிடம் ஏன்?
வீட்டுக்கு வந்திருந்த நண்பரொருவர் எனது புத்தகங்களை எல்லாம் பார்த்துவிட்டு எவ்வளவு தமிழ் இலக்கிய புத்தகங்கள் படிக்கிறாய் பின்பு எப்படி தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன பெரியாரை ஆதரிக்கிறாய்? இயக்கத்தின் பெயரில் கூட தமிழை முன்னிறுத்தாது திராவிடத்தை அடையாளமாக்கிக் கொள்ளும் அரசியலை ஆதரிக்கிறாய்? சமீபகாலமாக அவரது அரசியல் நிலைப்பாடு என்ன என்று எனக்கு தெரியும் என்பதால் சற்று விளக்கமாக பதில் சொல்ல விரும்பினேன்.
இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வழங்கியதும், இருமொழிக் கொள்கை கொண்டு வந்து தமிழை இந்த மாநிலத்தில் அதிகாரத்தின் மொழியாக்கியது திராவிட இயக்கம்தான். மேடைக்கு மேடை தமிழ் தமிழ் என்று முஷ்டியை உயர்த்தி கூவும் பிழைப்புவாதிகளால் நல்லாட்சி என கொண்டாடப்படும் காமராஜரின் காங்கிரஸ் ஆட்சியில் தான் இவர்களால் வந்தேறி என அழைக்கப்படும் அண்ணா அவர்கள் கொண்டு வந்த தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். இந்த உண்மையை மட்டும் அவர்கள் ஏன் கண்டுகொள்வதில்லை இப்படி திட்டமிட்டு மறைப்பதில் இருந்து அவர்களது அரசியல் யோக்கிதை தெரிந்துவிடும். இங்கு மீண்டும் மீண்டும் நடப்பது என்ன வென்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களை மட்டும் உணர்வுபூர்வமாக கொப்பளித்து பொதுபுத்தியில் திணிப்பது.
கல்விக்கண் திறந்தவர் காமராஜர் என்று கொண்டாடுவது எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் காமராஜர் என்னும் ஒற்றை பிம்பத்துக்கு பின்பு தமிழக கல்விச் சாதனைகள் அனைத்தையும் அடைப்பது அதன் மூலம் திராவிட இயக்கத்தின் அளப்பரிய பங்களிப்பை குழி தோண்டி புதைக்க நினைப்பதும், காமராஜரை திராவிட இயக்கத்திற்கு எதிரான பிம்பமாக கட்டமைப்பதும் அருவருப்பான அரசியல் நிலைப்பாடு.
அப்படி என்ன திராவிட இயக்கம் கல்விக்கு பங்களித்தது என்று கேட்போருக்கு சொல்கிறேன் முதல் முதலில் சென்னை மாகாணத்தில்
கட்டாயக் கல்வி திட்டத்தையும் ,
மத்திய உணவுத் திட்டத்தையும் ,
அறிமுகப்படுத்தியதே திராவிட இயக்கத்தின் மூதாதையான நீதிக் கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான். அதேபோல் காமராஜர் ஆட்சிக்காலத்தில் இலவசக் கல்வித் திட்டத்தையும், மத்திய உணவுத் திட்டத்தையும் முன் மொழிந்தவரும், அதனை செயல்படுத்த அரும்பாடு பட்டவருமான நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் ஒரு பெரியார் தொண்டர் சாகும்வரை சுயமரியாதைக்காரர் ஆகவே வாழ்ந்தவர்.
பெருந்தலைவர் காமராஜரும் "பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றுவதை நான் பெருமையாக கொள்கிறேன்" என்று பொதுவெளியில் கூறியவர். காமராஜர் பள்ளிக் கல்வியை பரவலாக்கியதை தொடர்ந்து உயர்கல்வியை பரவலாக்கி, கல்லூரிகளை உருவாக்கி, இட ஒதிக்கீட்டை மேலும் விரிவுபடுத்தி நம்மை பட்டதாரிகளாக உருவாக்கியது அதற்குப் பின் வந்த திராவிட ஆட்சியின் சாதனைகள் தான்.
இப்பொழுது நாம் திருப்பிக் கேட்போம் தமிழக கல்வி வரலாற்றில் தமிழ் தேசியவாதிகளின் பங்களிப்பு என்ன??
இந்திய தேசியம் பேசிய காமராஜருக்கும் தமிழ் தேசியம் பேசும் இவர்களுக்கும் என்ன தொடர்பு??
இக்கேள்விகளில் சற்றே ஊன்றி சிந்தித்துப் பார்த்தால் அதன் காரணிகள் தெளிவாக புரியவரும். இவர்களுக்கு ஜனநாயகம் சார்ந்த சித்தாந்த வறட்சி காரணமாக காமராஜர் போன்ற மக்கள் நாயக பிம்பத்தை சுவீகரிக்க முயல்வது, அதே போல அவரது ஜாதி பின்புலத்தை பயன்படுத்திக்கொள்ள நினைப்பது. இதை நீங்கள் அப்படியே ஆர்எஸ்எஸ் எப்படி அம்பேத்கரை தமதாக்கிக் கொள்ள முயல்கிறது என்பதுடன் ஒப்பிடலாம். அரசியல் அற்பத்தனத்தில் உச்சம் இது.
சரி திராவிடம் என்னும் சொல் ஏன் முன்னிலைப் படுத்தப் படுகிறது என்பதற்கு வருவோம். வரலாற்று ரீதியாக திராவிடம் என்னும் சொல் விந்திய மலைக்கு தெற்கே வசிக்கும் மக்கள் இனத்தை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது(The Hathigumpha inscription of the Kalingaruler Kharavela refers to a T(ra)mira samghata(Confederacy of Tamil rulers) dated to 150 BCE.) ,
அதன்பின் ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை வகுக்கும்போது திராவிடம் என்னும் சொல்லை சமஸ்கிருதத்தை வேறாக கொள்ளாத மொழிக் குடும்பத்தை குறிப்பிட பயன்படுத்துகிறார்.
திராவிட இயக்கக் காலத்தில் பெரியார் திராவிடம் என்னும் சொல்லை ஆரியம் என்னும் பண்பாட்டால் ஒடுக்கப்படும் பண்பாட்டை குறிக்கும் சொல்லாக வரையறுக்கிறார்(அன்றைய மதராஸ் மாகாணத்தில் கன்னடதெலுங்கு மற்றும் மலையாளம் பேசும் பகுதிகளும் உள்ளடங்கியது என்பதை நினைவில் கொள்வோம்), அதாவது ஆரியம் என்பது ஆதிக்க மனோபாவத்தை குறிக்கும் சொல் என்றால் திராவிடம் என்பது ஆதிக்கத்தை எதிர்க்கும் சமத்துவத்தை முன்மொழியும் புரட்சி குறியீடு.
அண்ணா இதை மேலும் தெளிவாக விளக்குகிறார்
"ஆரியம் பிறப்பில்லை கருத்தில் இருக்கிறது, சாதியை நெஞ்சில் சுமக்கும் எவரும் ஆரியரே" .
இதன்படி தமிழர் தமிழர் என வாய்கிழிய கூறினாலும் சாதியை மனதில் சுமந்து உங்கள் சாதி தலைவருக்கு ஜே போடுவீர்கள் என்றால், சாதி வெறியர்களை ஓட்டுப் பொறுக்குவதற்காக தமிழன் எனும் தலைவன் எனவும் கொண்டாடுவீர்கள் என்றால், நீங்கள் ஆரியர்களே.
ஆக திராவிடம் என்னும் தத்துவம் ஒரு இன ரீதியான ,மொழி ரீதியான அடையாளத்தையோ மட்டும் முன்னிலைப் படுத்துவது என சுருங்கிவிடாமல் சமத்துவம் என்னும் தத்துவத்தின் குறியீடாக தன் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டது. சுருங்கச் சொல்வதென்றால் திராவிடம் என்றால் "சமூக நீதி".
திராவிடம் என்னும் சொல்லை அறிமுகப்படுத்தியவர்கள் வந்தேறிகள் என உலறுபவர்களுக்கு ஒரு சேதி சொல்கிறேன் தமிழ்நாட்டில் திராவிடம் என்னும் சொல்லை முதலில் பயன்படுத்தியவர் அயோத்திதாச பண்டிதர். இவரையும் நீங்கள் வந்தேறி என்றுதான் சொல்வீர்களா?
தமிழ் என்னும் சொல்லின் திரிபு தான் திராவிடம் ( Thamizhar was likely derived from the name of the ancient people Tamilar > Tamila > Damila > Dramila > Dravida.[30]) ஆனால் இன்றைய சூழலில் தமிழ் என்னும் அடையாளத்தை முன்னிறுத்தி கையில் அத்துடன் தமிழ் சமயம் , தமிழ் கடவுள் ,தமிழ் வழிபாட்டு முறை என திராவிட இயக்கம் எதிர்த்த அனைத்து பிற்போக்குத்தனங்களுக்கு தமிழ் சாயம் பூசி மீண்டும் நம்முள்ளே திணிப்பதற்கான வாயிலை அது ஏற்படுத்துகின்றது. இன்று தமிழ் தேசியர்கள் செய்வதை உற்று நோக்கினால் புரியும் முதலில் தமிழ் கடவுள் என முப்பாட்டன் முருகன் என கூறினார்கள் , பின்பு சிவனை முப்பாட்டன் என்றனர், இன்று மாயோன் எங்கள் முப்பாட்டன் என்கின்றனர் அத்துடன் ஐந்திணை கடவுள் அனைத்தும் எங்கள் கடவுள் தான் என்கின்றனர். ஐந்திணை கடவுள்களில் இந்திரனும் அடக்கம் இந்திரனுக்கும் தமிழனுக்கும் என்ன சம்பந்தம்? தமிழ் சாயம் பூசுவதனால் மட்டும் காட்டுமிராண்டித்தனம் காட்டுமிராண்டித்தனமாகதா என்ன?
தமிழகம் பார்ப்பனிய தாக்கத்திற்கு உள்ளான பின்பு உருவாக்கப்பட்டதுதான் இந்த ஐந்திணை தெய்வ வழிபாட்டு முறை , தமிழன் என்னும் அடையாளத்தை முன்னிறுத்தி இந்திரன் என்னும் ஆரிய கடவுளை தெய்வமாக்கி கொண்டாட தயாராகுவது தமிழர்களுக்கு இவர்கள் இழைக்கும் துரோகம் ஆகாதா?
அதேபோல இவர்களையும் இயக்கத்தை நம்பி தமிழர் என்று இணைந்த கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இது பச்சை துரோகம் ஆகாதா?
இன்று அர்ஜுன் சம்பத் தமிழகம் நாயன்மார்களின் பூமி ஆழ்வார்களின் பூமி என்பதற்கும் இந்த தமிழ் தேசியவாதிகள் ஐந்திணை தெய்வ வழிபாடு என்று சொல்வதற்கும் என்ன வேறுபாடு உள்ளது. இவர்கள் தமிழர்களை கண்டறிய வைக்கும் இனத் தூய்மைவாதம் dna test முறை ஏன் தமிழக பார்ப்பனர்களுக்கு செல்லுபடியாவல்லை அவர்களை தமிழர்கள் என்று எந்த அடிப்படையில் இவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்?

கரிய நிறத்தில் சிக்ஸ்பேக்குடன் காட்சியளிக்கும் இவர்களின் முருகனுக்கு பின்னால் அவர் பயணிக்க வாகனமாக மயிலை நிறுத்தும் லாஜிக்கே இல்லாத காட்டுமிராண்டித்தனத்தை மீண்டும் இங்கு நிறுவுவதுதான் தமிழர்களை முன்னேற்றுவதா. புலிகேசி படத்தில் வடிவேலு சொல்வார் உள்ளே உங்கள் ஆங்கில பூர்வீகமே இருக்கலாம் ஆனால் பெயர்கள் தமிழில்தான் வைப்போம் என்பது போல , உள்ளே உங்கள் சமஸ்கிரித வர்ணாஸ்ரம பூர்வீகமே இருந்தாலும் தமிழில் சொன்னால் ஏற்றுக் கொள்வோம் என்பது தான் இவர்களது லாஜிக்.
ஆனால் மேடைகளில் தமிழ் தமிழ் என உருகிய திராவிடர் அண்ணா கம்பராமாயணத்தையும் ,பெரியபுராணத்தையும் பெரியார் எரிக்க வேண்டும் என்று சொன்னவுடன் தலைமேல் வைத்து அதை ஏற்றுக்கொண்டார் காரணம் தமிழ் என்ற மொழியின் மூலமாக பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயத்தை எங்கள் தலையில் திணித்து உங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்புகிறீர்கள் என்றால் அது நடவாது , எங்களுக்கு தமிழ் எந்த அளவு முக்கியமோ அதே அளவு தான் ஆதிக்க எதிர்ப்பு முக்கியம். இதுதான் தமிழ் தேசியத்துக்கும் திராவிடத்திற்குமான வேறுபாடு.
தமிழை காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொன்னது மொழியில் இடைப்பட்ட காலத்தில் திணிக்கப்பட்ட பிற்போக்குத்தனங்களை, ஆரிய மாயையை விலக்கி விஞ்ஞான மொழியாக்க வேண்டும் என்பதற்குத்தான். அதே பெரியார்தான் திருக்குறளை நமக்கான நூல் என அறிவித்தார் அதிலும் அவரது விமர்சனம் இருக்கவே செய்தது. பெரியார் தமிழர்களை கண்டித்தது மொழி மீது உள்ள பாசத்தால் பிற்போக்குத்தனத்தில் நாங்கள் மூழ்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான். அதற்கு அண்ணா கொடுத்த விளக்கம் என்றும் பொருந்தக்கூடியது அவர் சொன்னார்
" புலி தன் இரையைக் கவ்வுவதற்கும் தன் குட்டியை கவ்வுவதற்கும் வித்தியாசம் உண்டு" அதைத் தமிழர்கள் நன்றாகவே அறிவார்கள்.
ஆதிக்கம் என்றுமே மக்களின் உணர்வுடன் தொடர்புடைய விஷயத்தை மிகைப்படுத்தி அதன் மீது கேள்வி கேட்க முடியாத நம்பிக்கையை வைக்கச் சொல்லி பகுத்தறிவை மழுங்கடித்து அடிமைப்படுத்தும். வடக்கில் மதத்தின் மூலமாக வெற்றி பெற்ற ஆதிக்க வர்க்கம் இங்கு திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் அதனை செய்ய முடியவில்லை . எனவே இவ்வியக்கத்தின் வீரியத்தை பிளவின் மூலம் கட்டுப்படுத்துவதற்காக தமிழ் தேசியவாதிகளை பயன்படுத்திக் கொள்கிறது. இவர்கள் சனாதனத்தின் மாற்று உருவே அன்றி வேறில்லை. என்ன அவர்களை எதிர்த்தால் anti-indian என்பார்கள், இவர்களை எதிர்த்தால் வந்தேறி என்பார்கள். அவர்கள் ராமனையும் கிருஷ்ணனையும் வரலாறாக்க முயல்கிறார்கள், இவர்கள் மாயோனை அப்படி வரலாறாக்க முயல்கிறார்கள் அவ்வளவுதான்.
ஆனால் ,
திராவிடம் எனும் தத்துவம் மத, சமய, ஜாதி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட சமத்துவத்தின் குறியீடாகும், விடுதலைக்கான போர் கருவியாகும். பழம் பெருமைகளை பேசுவதற்கானதள்ள திராவிடம் சமூக நகர்வை, மேம்பாட்டை உறுதி செய்வது. சமூக படிநிலைகளை தகர்த்து சமத்துவத்திற்கு வழிவகுப்பது. திராவிடம் என்றால் சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம்.
எனவே திராவிடம்
வெல்லும்,
வென்றாக வேண்டும்,
வென்றே தீரவேண்டும்.
என்று சொல்லி முடித்தேன் நண்பர் அவரது கவனத்தை கலைப்பதாக தெரியவில்லை. ஐயா ஒரு டீ குடிப்போம் என்று வெளியே அழைத்துச் சென்றுவிட்டேன்.