Tuesday, May 28, 2019

யார் சொன்னார்கள் பார்ப்பனர்கள் லஞ்சம் வாங்காதவர்கள் என்று

யார் சொன்னார்கள் பார்ப்பனர்கள் லஞ்சம் வாங்காதவர்கள் என்று. 1852 குண்டூர் கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஓ. லஞ்சம் வாங்கியதாலும் , அந்த அலுவலகங்கள் எல்லாவற்றிலும் முழுமையான பார்பனிய ஆக்கிரமிப்பில் இருந்ததாலும் எந்த நடவடிக்கையும் ஆங்கில அரசால் எடுக்க முடியவில்லை. ஆகவே அதை தவிர்க்க இந்திய வரலாற்றிலேயே சாதியச் சுழற்றி முறையில் வருவாய்த் துறையில் பணியமர்த்த ஆங்கில அரசால் சட்டம் இயற்றப் பட்டது. சத்திய மூர்த்தி அய்யர் சட்ட மன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் கேட்டார் என்ற குற்றச் சாட்டு எழுந்தது. அதற்கு அவர் சட்ட மன்றத்திலே யே," என்னிடம் கேள்வி இருக்கிறது. அவர்களிடம் பணம் இருக்கிறது. எனக்கு பணம் தேவைப் படுகிறது. அவர்களுக்கு வேலை ஆக வேண்டியுள்ளது. ஆகவே அவர்களுக்காக நான் பேசுகிறேன். அவர்கள் எனக்கு பணம் தருகின்றனர். இருவர் தேவையும் பூர்த்தி ஆகிவிடுகிறது. இதில் தவறு என்ன இருக்கிறது." என்று வாதிட்டார். இராஜாஜி முதல்வர் என்பதால் அவர் மீது நடவடிக்கையில்லை. 1957 இல் சுதந்திர இந்தியாவில் முதல் முதலில் முந்திரா ஊழல் செய்து மாட்டிக் கொண்டு பார்ப்பனர் என்பதால் குற்ற நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வைக்கப் பட்டு, பதவி இழந்தவர் நமது ஊர் பார்ப்பனர் டி.டி. கிருஷ்ணமூர்த்தி அய்யங்கார்தானே. இந்தியாவை தற்பொழுது சாரதா சிட்பணட் அதிபர் பார்ப்பனர். மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்துவிட்டு வெளிநாடு ஓடிய விஜெய் மல்லையா பார்ப்பனர். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப் பட்ட பார்ப்பனத்தி இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? 
தி.மு.க. ஆட்சி வரும் வரை தமிழக விளை நிலங்கள் யாவையும் இவர்கள் கையில். இவர்கள்தான் நில உடமை சமூகத்தினர். மற்ற சமூகத்தினர் கூலிகள். நெல்லை மாவட்டத்தில் குளங்களே இவர்களின் ஆதிக்கத்தில். இன்றும் பார்ப்பன சங்கர மடத்துக்கு தமிழகம் முழுதும் விளைநிலங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளன. இன்று நிலப் பதிவு அல்லது A1ரிஜிஸ்டரில் இருந்து நில மாற்றம் பற்றிய தகவல்கள் புள்ளிவிவரம் எடுத்தால் 85% இவர்களடத்திலிருந்து கை மாறியதே. இராஜ ராஜன் காலத்திலிருந்து தி.மு.க. ஆட்சி வரும் வரை இவர்கள்தான் பண்ணையார்கள். மேல் தாமிரபரணி விளை நிலங்கள் யாவும் இவர்கள் கையில். சங்கர் சிமிண்ட் அதிபரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிபருமான ஸ்ரீனிவாசன் நெல்லை மாவட்டத்தில் பெரிய நிச்சுவான்தார். இங்கு ஒருவருக்கு பண்ணை சங்கரய்யர் என்ற பெயரே உண்டு. வெள்ளையர் நாட்டை விட்டுச் செல்லும் போது விக்கிரமசிங்கபுரம் HARVEY MILL இவர்கள் கை மாறியது நேர்மையான முறையிலா? மேற்கூறிய சொத்துக்கள் எல்லாம் இவர்களுடைய ஆத்தாளும் அம்மாவும் தொடை தெறிய சேலையை வரிந்து கட்டி நாற்று நட்டு சம்பாதித்தவர்கள்? இவர்கள் ஏழைகளாம். இவர்கள் ஏழைகள் என்றால் இத்தனை ஊடகங்கள் இவர்கள் எப்படி நடத்த முடியும். இந்தியன் எக்ஸ்பிரஸ் கோயாங்கோ யார்? இந்து கஸ்தூரி அய்யங்கார் யார்? ஆனந்த விகடன் மற்றும் ஜெமினி ஸ்டூடியோ வாசன் யார்? டி.வி.எஸ் அய்யங்கார் யார்? என்பீல்டு ஈஸ்வர அய்யர் யார்? சிம்சன் அனந்தநாராயணன் யார்?இவர்களில் எத்தனை பேர் உழைத்து சம்பாதித்தவர்கள்? வெள்ளைக்காரனை அண்டிப் பிழைத்து சுரண்டியவர்கள். இந்த நாட்டுக்கு ஊழல் சுரண்டல் லஞ்சம் முறையற்ற செயலில் சம்பாதிப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்ததே பார்ப்பனியம்தான். இன்று சைத்தான் திராவிடவியலால் அடித்த அடி தாளாது ஒப்பாரி வைக்கிறது. 1000 ஆண்டுகளாக உழைக்காது பிறர் உழைப்பை சுரண்டி அக்கிரஹாரம் அமைத்து ஹாழ்ந்தவர்கள் இவர்கள். மற்றவர்களை நேர்மையற்றவர்களாக விமரிக்கின்றனர்.

No comments: