Sunday, November 01, 2020

ஜப்பான் ஒழித்த சாதி



 
 
100 ஆண்டுகளுக்கு முன்பும் ஜப்பான் நாட்டிலும் தீண்டாமை தலைவிரித்தாடியது
கீழ் சாதியினர் என்ற வார்த்தைக்கு ஈடாக ஜப்பானிய மொழியில் 'புராக்குமீன்' (Burakumin) என்று கூறி சில மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.
இந்தியாவில் இருப்பது போல அவர்களையும் "சேரி" களிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் மட்டுமே வைத்திருந்தனர்
அவர்களை தொட்டால் தீட்டு, வீட்டுக்குள் வந்தால் தீட்டு என்ற அனைத்து சாதிய அடக்குமுறைகளுமே இருந்தது
அவர்களுக்கு செருப்பு, தோல், சாக்கடை கழுவுதல் சார்ந்த தொழில்கள் மட்டுமே தரப்பட்டது.
1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் முடிவில் ஜப்பான் இரண்டு அணு குண்டுகளால் படு தோல்வியடைந்த பிறகு குறைவான மக்கள் தொகையில்,
பொருளாதாரமற்ற சூழ்நிலையில் திக்கு முக்காடியது...
இனி ஜப்பான் அவ்வளவு தான், சரித்திரத்தின் பக்கங்களில் காணாமல் போய்விடும் என்று உலகம் உச்சுக்கொட்டியது.
காலங்காலமாக ஆண்ட பரம்பரையாக இருந்து, நாட்டை உலகப்போரில் சீர்குலைத்ததற்கு மன்னர் "ஹிரோஹிட்டோ' (Hirohito) பொதுமன்னிப்பு கேட்டு ஆட்சி அதிகாரத்திலிருந்து விலகி கொண்டார்...
அவருக்கு பதில் போர்களில் பெரும் பங்கு வகித்த அவரது மந்திரி 'டோஜோ' (Tojo) போர் வெறியை தூண்டியதற்காக தூக்கிலிடப்பட்டார்...
(அப்பவும் மன்னர்களே தப்பினர் அவரின் எடுபுடிகளான மந்திரிகள் மாட்டிக்கொண்டனர்)
பின்னர் வந்த மக்களாட்சி முறை ஜப்பானிய மக்கள் மத்தியிலுள்ள சாதி பிரிவினைகளை முதலில் ஒழித்தது..
ஜப்பான் வளர வேண்டுமென்றால் அனைவருமே 'ஜப்பானியர்' என்ற சொல்லை தவிர 'நான் சாமுராய் இனம், என்‌ பரம்பரை வீரப்பரம்பரை, நான் அவன் நான் இவன்' போன்ற வீண் பெருமைக்கு இனி இடமில்லை என்று திட்டவட்டமாக நின்றது
பொது மக்களின் வேலை நேரத்தை அதிகரித்தது..விடுமுறைகளை குறைத்தது...
புராக்குமீன்களை ஊருக்குள் அழைத்தது...ஊரார் அனைவருக்கும் ஒரே கல்வியை தந்தது...
சாதிய புனைப்பெயர்களை அழித்தது...உலக நாடுகளின் பண உதவியுடன் ஜப்பானியர் அனைவருமே தம் தம் திறமையை வைத்து ஏற்றுமதி தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் தந்தது...
அமெரிக்காவுடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் தொழில் ரீதியாக கைகோர்த்து நின்றது... முதலாளித்துவமாக வெளியே தெரிந்தாலும் உள்ளே சிறந்த சோசலிச கொள்கை கொண்ட நாடாக பரிணமித்தது.
"ஜப்பானிய நாட்டில் தயாரிக்கப்பட்டது"(Made in Japan) என்றால்
அதன் தரமே உலக நாடுகளின் தரத்தை விட உயர்ந்த தரமாக இருக்க வேண்டும்
என்பதில் எள்ளவும்
விட்டுகொடுக்கவில்லை
நாடு மெல்ல மெல்ல முன்னேறியது.
இத்துபோன பழைய பெருமைகள் பேசி, எங்கள் சாதி, எங்கள் பரம்பரை, எங்கள் இனம் என்று முட்டுகட்டையாக கூவிய சில பழமைவாதிகளை ஈவிரக்கமின்றி கைது செய்து கடுமையாகக் தண்டித்தது,
ஆன்மீகத்தை விட அறிவியல் சார் நாத்திகத்தையே முதல் கொள்கையாக பாவித்தது.
கலப்பு சாதி திருமணங்களை வலு கட்டாயமாக்கியது,
சம்பந்தி வீட்டார் என்ன சாதி? நம் மேனேஜர் என்ன சாதி? சக பணியாளர் என்ன சாதி? எதிர் வீட்டுக்காரன் என்ன சாதி ? என்று மோப்பம் பிடிப்பதை அரசாங்கம் தண்டனை குற்றமாகவே மாற்றியது,
சாதியை பற்றி பேசினாலே கடும் தண்டனை என்பதால் வெறும் 30 ஆண்டுகளில் கடை சாதியான புராக்குமீன்
இரத்தமும் ஆண்ட சாதியான சாமூராய் இரத்தமும் அனைத்து ஜப்பானியர் உடலிலும் ஓடியது.
விளைவு...??
இந்தியா இன்னமும் 100 ஆண்டுகளில் வளரமுடியாத சமூக வளர்ச்சியை பெற்று இன்று ஜப்பான் நாம் எட்ட முடியாத தூரத்தில் உயர்ந்து நிற்கிறது‌.
"புராக்குமீன்" என்ற வெறுப்பை ஒரு கடந்தகால கனவாக ஜப்பான் மக்களிடம் மறக்கடித்து சாதி பிரிவினைகளை வென்று உலக நாடுகளில் சிறந்த மக்கள் மேம்பாடான முதல் 10 நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்கிறது‌.
நாமும் அறிவியல்சார் நாத்திகமும்,
மக்கள் மேம்பாடுமே
எங்களின் இரு கண்கள் என்போம்,

Friday, October 02, 2020

உத்திரப்பிரதேசம் சென்றிருக்கிறீர்களா?

 உத்திரப்பிரதேசம் சென்றிருக்கிறீர்களா?
நிலவுடமையின் கோர முகத்தை அங்கு காணலாம்.
அங்கு வீடுகளின் உயரத்தைக் கூட சாதிதான் தீர்மானிக்கிறது.

தாக்கூரின் வீடு பார்ப்பானின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், யாதவர்களின் வீடு தாக்கூர்களின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க  வேண்டும், தலித்துகளின் வீடுகள் யாதவர்களின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், முசாகர்களின் வீடுகள் தலித்துகளின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும்.

முசாகர்கள் வயலில் இருக்கும் எலியை பிடித்து உணவாக உண்பார்கள். எலியைத் திண்பதால் அவர்களது வீடுகளும் எலி நுழைவதைப் போலவே இருக்க வேண்டும் என்பது இன்றைய தேதி வரை அங்கு நீடிக்கும் ஏற்பாடு.
கதவுகளும் அவ்வாறே அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதால், முசாகர்களின் வீட்டுக்குள் நுழைவது என்பது எலி வலைக்குள் நுழைவது போலத்தானிருக்கும்.

இந்த மக்கள் தான் சாதிக் கொடுமையால் ஊர்களை விட்டு ஓடி, குடும்பம் குடும்பமாக டெல்லி, நொய்டா போன்ற இடங்களில் பிளாட்பார வாழ்க்கை நடத்துபவர்கள்.

குடியிருப்புகள் அமைந்திருக்கும் திசைகூட காற்றின் திசைக்கு ஏற்ப தான் இருக்க வேண்டும். அதாவது தலித்துகளின் குடியிருப்பைக் கடந்து மேல்சாதியினரின் குடியிருப்புக்குக் காற்று கூட செல்லக் கூடாது. ஓலைக் குடிசையாய் இருந்த தனது வீட்டை ஒரு முசாகர் காரை வீடாக கட்டியதற்காக சமீபத்தில் அதை இடித்துத் தள்ளிய செய்தி வந்தது.

தமிழகத்தில் பெரியார் என்ன செய்தார் என்பதை இதிலிருந்து பொருத்திப் பார்க்கலாம்.

Tuesday, September 01, 2020

தமிழர்களிடம் நாலு காசு கையில் சேர்ந்தால்...

தமிழர்களிடம் நாலு காசு கையில் சேர்ந்தால் சில விடயங்களில் தேடிப்போய் தூக்கி சுமப்பார்கள்.
*ஜாதி சங்கத்தில் உறுப்பினராக இணைந்து ஆண்ட பரம்பரை கனவில் மிதப்பது.
*கோவில் கட்டுவது(சாய்பாபா இவர்களின் லேட்டஸ்ட் க்ரேஸ்)
*விட்டிற்கு ஆரிய புரோகிதர்களை அழைத்து யாகம் வளர்த்து, அவர்களின் காலில் வயது வித்யாசமில்லாமல் விழ்ந்து வணங்குவது.
*சாமிகளின் பேருக்கு பின்பு "ஸ்ரீ" என்று போட்டு ஆரிய தூய்மைவாதம் காட்டுவது.
*ஞாயிற்று கிழமை தவிற மற்ற நாட்களை எல்லாம் சுத்த சைவ நாட்களாக மாற்றிக்கொண்டு பஜனை பாடுவது.
*கையில் ராசிக்கல் போட்டுக்கொள்வது.ஒவ்வொரு ராசி கல்லுக்கு ஒவ்வொரு கோளுக்கு தொடர்பு இருக்கிறது என்று WhatsApp விஞ்சானம் பேசுவது. சிலர் பத்து விரலுக்கு பன்னிரெண்டு ராசிக்கும் ராசிக்கல் போட்டுக்கொள்கிறார்கள்.
ஏன் அப்படி?அதாவது பன்னிரெண்டு கோளையும் நட்பு சக்தியாக வைத்துக்கொள்வது.
*அரசு பள்ளி கல்லூரியில் படித்து,இட ஒதுக்கீட்டை அனுபவித்து பல்நாட்டு நிறுவத்தில் வேலை கிடைத்த பின்பு ஆரியர்களிடன் இணைந்து " இட ஒதுக்கீட்டால் வீழ்ந்தோம் ஒறவே" என்று நரி ஊளையிடுவது.
*தன் பிள்ளைகளை ICSE சேர்த்துவிட்டு சூத்திர ஜாதி வன்முறையை,சக மனிதர்களை தன் முன்னோர்கள் இழிவாக நடத்தியதை ஜாதி பெருமையாக ஊட்டி வளர்ப்பது.அவர்களின்
உழைப்பை திருடி தின்றதை கௌரமாக நினைப்பது.
"நாய் வளர்ப்பு(அரை டவுடர் மாட்டிக்கொண்டு ஏரியாவில் நாய் மேய்த்து " நாங்களும் வி.ஐ.பி." தான் என்று கெத்து காட்டுவது)
*இறுதியில் அக்ரஹாரத்தில் நமக்கொரு வீடு கிடைக்குமா என்று அலைந்து திரிந்து அரை பார்ப்பனராக மாறுவது.

Saturday, August 22, 2020

அங்கே பார்ப்பனியம் கோரைப்பல் தெரியச் சிரிக்கிறது. நாமோ கொழுக்கட்டைக்கு நாக்கைச் சப்புக் கொட்டுகிறோம்.

 

 
சங்க இலக்கியத்திலோ சிலப்பதிகாரத்திலோ விநாயகரைப் பற்றி ஒரு சொல் இல்லை. தமிழகத்தின் மிகப்பழைய விநாயகரான பிள்ளையார்பட்டி தேசிகவிநாயகர் (பல தேசங்களுக்கும் சென்று வர்த்தகம் செய்வோர் தேசிகர். அநேகமாக இன்றைய மகாராட்டிரப் பகுதியிலிருந்து விநாயகர் வழிபாட்டை தேசிகர்கள் கொண்டு வந்திருக்க வேண்டும்) கூட நான்காம் நூற்றாண்டளவினதான புடைப்புச் சிற்பம் தானாம். அதிலும் கூட யானைக்கான கூறுகளே அதிகம் என்கிறார் பேரா.தொ.பரமசிவன்.
பரஞ்சோதியார் வாதாபியைத் தீக்கிரையாக்கி வெற்றிச் சின்னமாகக் கொண்டுவந்து காஞ்சியில் நிறுவிய வாதாபி கணபதியும் மிகப்பழைய விநாயகர் என்கிறார்கள். எதைக் கொண்டு வந்து வைத்தாலும் பஜனை பாட ஒரு கூட்டம் இங்கே உண்டு. "வாதாபி கணபதிம் பஜே" என்ற ஒரு பிரபலமான கீர்த்தனை உண்டு.
புத்தர் கடவுளாக்கப்பட்ட பிறகு அவரது பிறப்பை விதந்தோதும் கதைகள் பிறந்தன. அதிலொன்று அவரது தாயார் மாயாதேவியின் வயிற்றில் அவலோகிதரான போதிசத்துவர் ஒரு வெள்ளையானை வடிவில் வந்து கருவாகத் தங்கினார் என்கிறது. இதன் காரணமாக, புத்தம் தழைத்தோங்கிய காலத்தில், அரசமரத்தடியில் யானைச் சிலையை நிறுவி வழிபடும் வழக்கம் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
வைதீகமதம் தலையெடுத்த பொழுது அது யானைச் சிலையை அப்புறப்படுத்திவிட்டு விநாயகரை நிறுவியது என்றும் அதற்காகப் பார்வதி-அழுக்குருண்டை-பாத்ரும் காத்தல்-சிவனுடன் சண்டை- கழுத்தறுப்பு-யானைத்தலை ஒட்டல்-விநாயகர் பிறத்தல் என்று கதை புனைந்து கொண்டது என்கிறார்கள். இந்தக் கதை தான் அடியேன் முதன்முதலாக வாசித்த தொடர். இரண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்ததாக நினைவு. அழகழகான படங்களுடன் சிறுவர் மலரில் வெளியாகிப் பரவசப்படுத்தியது.
இன்னொரு கருதுகோள், அரசமரத்தடியில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுப் பரவலாக வழிபடப்பட்டன. ஆனால் பௌத்தத்தை வீழ்த்திய வைதீகம், அந்த புத்தர் சிலைகளுக்குப் பதிலாக யானைத்தலையும் மனித வடிவும் கொண்ட விநாயகரை அமர்த்தியது என்கிறது.
ஆனால் எனக்கென்னவோ இந்தக் கருதுகோள்களில் முழுஉண்மை இருப்பதாகப்படவில்லை. விநாயகர் கதை பௌத்த வீழ்ச்சியை மட்டுமே சுட்டி நிற்பதாகத் தெரியவில்லை. இன்னொன்றின் வீழ்ச்சியையும் அது சுட்டி நிற்கிறதாகவே படுகிறது.
ஆசீவகத்தின் சின்னம் யானை. ஆசீவகத்தின் கடவுளரான ஐயனார்களின் வாகனமும் கூட. பௌத்தம் வீழ்ந்த பின்னும் கிட்டத்தட்டப் பதினான்காம் நூற்றாண்டு வரை உயிரைப் பிடித்துக் கொண்டு இருந்த மதம் ஆசீவகம். புத்தர் காலத்தில், புத்தரே பொறாமைப்படும் அளவிற்கு அந்த மதம் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்திருக்கிறது.
சிவன் ஆனை அரக்கனைக் கொன்று அதன் தோலைப் போர்த்துக் கொண்டு கஜசம்ஹாரமூர்த்தி ஆனான் என்னும் கதை சைவம் ஆசீவகத்தை அழித்ததன் உருவகம் தானே? திருநாவுக்கரசர் ஆயிரம் ஆசீவகர்களை யானைக்காலால் இடறச் செய்தார் என்கிறது பெரியபுராணம். மதுரையில் திருஞானசம்பந்தரும் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் கூன்பாண்டியனை மனம்மாற்றிக் கைக்குள் போட்டுக்கொண்டு எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றிக் கொன்று ஒழித்தார்கள் அல்லவா? அந்த எட்டாயிரம் பேரில், ஜைனர்களுடன் ஆசீவகர்களும் உண்டு என்று கொள்வதே மதி! மதுரையைச் சுற்றிக் காணக்கிடைக்கும் கற்படுகைகள் பலவும் ஆசீவகர்களுக்கு உரியவை என்கின்றன அண்மை ஆய்வுகள்.
வைணவம் ஆசீகத்திற்கு ஆதரவளித்திருக்கிறது. முதலை, காலைக் கவ்வியதும் 'ஆதிமூலம் ஆதிமூலம்' என்று அபயக்குரல் எழுப்பிய ஆனையை மகாவிஷ்ணு பறந்துவந்து காப்பாற்றினார் எனும் கதை இதை விளக்கும். ஐயனாருக்கு நாமம் போடும் பழக்கத்தை எண்ணிப்பார்க்கலாம். ஆனால், விநாயகர் புராணத்தின்படி வைணவமும் கூட ஆசீவகத்தை எதிர்த்திருக்கிறது.
விநாயகர் புராணத்தின்படி, சிவனால் தலை துண்டிக்கப்பட்ட பார்வதி பாலனை உயிர்பிக்கத் தேவர்கள் காட்டிற்குள் செல்கிறார்கள். அவர்களை எதிர்க்கும் முதல் விலங்கின் தலையைக் கொய்துவரவேண்டும் என்பது ஈஸ்வரன் ஆணை. அப்படி எதிர்த்து வந்த களிறின் தலையைக் கொய்வது விஷ்ணுவின் சக்கரம்!
இங்கே, சாக்தம், சைவம், வைணவம் மூன்றும் கூடி விநாயகனை உண்டாக்குகின்றன. இதில் சைவத்தின் ஆணைப்படி, வைணவம் ஆசீவகச் சின்னமான யானையின் தலையைத் துண்டிக்கிறது. அந்தத் தலையைத் தலையற்ற புத்தர் உடலில் சைவம் பொருத்துகிறது. ஆசீவகமும் பௌத்தமும் சேர்ந்த ஒரு கலவையான தெய்வம் உருவாகிறது. இப்போது அந்த தெய்வத்தை ஆசீவகமும் உரிமை கோரமுடியாது. பௌத்தமும் கொண்டாட முடியாது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! வைதீகம் புத்தரையும் ஆசீவகத்தையும் இணைத்து ஸ்வீகரித்துக்கொண்டது. காரணம் வெகுமக்களிடமிருந்த பௌத்த ஆசீவக ஆதரவை நைச்சியமாக ஒழித்துக்கட்ட வைதீகம் செய்த வழக்கமான புரட்டாகவே இதை நான் பார்க்கிறேன்.
விநாயகரை ஞானக் கடவுள் என்கிறார்கள். வைதீகத்திற்கும் ஞானத்திற்கும் ஸ்நானப் ப்ராப்த்தி கூடக் கிடையாது. பொய்யும் புனைசுருட்டும் வஞ்சமும் சூழ்ச்சியும் நிறைந்தது அது. ஆனால் பௌத்தமும் ஆசீவகமும் உண்மையிலேயே ஞானத்தை போதித்த மதங்கள். அவற்றின் கூட்டான விநாயகரை ஞானக்கடவுளாகச் சொல்வதில் வியப்பொன்றும் இல்லை.
ஜெயமோகன், சிலப்பதிகாரத்தைத் திரியோ திரி என்று திரித்துக் 'கொற்றவை' எழுதினார். அதில் கதை தொடங்குவது குமரிக்கண்டத்தில்! அங்கே சிவனின் மூத்த மகனாக, ஞானக்கடவுளாக வருவது யார் தெரியுமோ? ஆனைத்தலை விநாயகர்! வைதீகப் புரட்டை எங்கு கொண்டுபோய் வைக்கிறார் பாருங்கள்! தமிழின் பேரெதிரி, தமிழரைக் காட்டிக் கொடுக்கும் புல்லுருவி தான் இன்றைக்குத் தமிழின் நம்பர் ஒன் ரைட்டர்!
ஆனால், வெகுமக்களைப் பொறுத்தவரை இந்தக் கதைகளுக்கு எந்தப் பொருளும் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை பிள்ளையாருக்கு உருவம் கிடையாது. ஒரு பிடி மாட்டுச் சாணமோ, ஒரு உருண்டை மஞ்சளோ போதும். பிள்ளையாராக்கி விடுகிறார்கள். தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி வெகுமக்களிடையே பிரபலமானது மிக அண்மையில் தானே? அதற்கும் முன்புவரை அவர்களைப் பொறுத்தவரை விநாயகர் என்பவர் அவர்களது கையால் உருவாகும் விருப்பத்திற்குரிய தெய்வம். அது புத்தரா ஐயனாரா என்று கூடக் கவலைப்பட்டதில்லை. அவர்களது முதல் பூசைக்குரிய கடவுளும் அவர் தான்.
எங்கள் பகுதியில் நிலாப்பிள்ளை என்று ஒரு அழகிய திருவிழா ஒன்று உண்டு. அதில் பிள்ளையாரைப் பற்றிப் பாடும் கும்மிப்பாடல் வரியொன்று ரசமானது.
"பிள்ளாயா பொண்டாட்டி எப்பேருப் பட்டவ?
மாரு நெறஞ்சவ மங்கிலியம் பூண்டவ"
தங்கள் பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ செய்த பிள்ளையார் சிலைகளைப் பெருமையாகப் பதிவிடும் பெரியாரியர்களை நேற்று முதல் காணமுடிகிறது. பிள்ளைப் பருவத்தில் பெரியாரை ஊட்டாமல் பிள்ளையாரை ஊட்டுகிறார்கள். அங்கே பார்ப்பனியம் கோரைப்பல் தெரியச் சிரிக்கிறது. நாமோ கொழுக்கட்டைக்கு நாக்கைச் சப்புக் கொட்டுகிறோம்.

Tuesday, July 21, 2020

பெரியார் பேசுகிறார் : வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்! - சித்திரபுத்திரன்

பெரியார் பேசுகிறார் : வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்!
தந்தை பெரியார்

நகை வியாபாரி:   அய்யா, தாங்கள் என்னிடம் காலையில் காசு மாலை வாங்கி வந்தீர்களே! அது தங்களுக்குத் தேவையா இல்லையா என்பதை தெரிவித்துவிட்டால் வேறு ஒருவர் வேண்டும் என்று சொல்லி மத்தியானமிருந்து கடையில் காத்துக்க்ண்டிருக்கிறார். அவருக்காவது கொடுத்துவிடலாம் என்று வந்திருக்கிறேன். எனக்குப் பணத்துக்கு மிகவும் அவசரமாகயிருப்பதால் தயவு செய்து உடனே தெரிவித்துவிடுங்கள்.

வைதீகன்: செட்டியாரே, அந்த நகை தேவையில்லை. வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும்போது பூனை குறுக்கே போச்சுது, அப்பொழுதே வேண்டியதில்லை என்று தீர்மானித்துவிட்டேன். வீட்டில் பெண்டுகள் பார்த்து மிகவும் ஆசைப்பட்டு மாலையிலுள்ள காசை எண்ணிப் பார்த்தார்கள். அதில் 68 காசு இருந்தது. எட்டு எண்ணிக்கைக் கொண்டது. எதுவும் எங்கள் குடும்பத்திற்கு ஆயிவருவதில்லை. அதனால் அவர்களும் உடனே கீழே போட்டுவிட்டார்கள். ஆனதினால் அது எங்களுக்கு வேண்டியதில்லை.

நகை வியாபாரி: அப்படியானால் தயவு செய்து கொடுத்துவிடுங்கள். வேறு ஒருவர் காத்துக்கொண்டிருக்கிறார்.

வைதீகர்: ஆஹா, கொடுத்துவிடுவதில் ஆட்சேபணையில்லை. காலமே நேரத்தில் வாருங்கள், கொடுத்து விடுகிறேன்.

நகை வியாபாரி: அவர் இன்று ராத்திரிக்கு ஊருக்குப் போகின்றவர் ஆனதால் தயவு செய்து இப்பொழுதே கொடுத்துவிடுங்கள்.

வைதீகர்: செட்டியாரே, தாங்கள் என்ன நாஸ்திகராய் இருக்கின்றீர்கள்! வெள்ளிக்கிழமை, அதுவும் விளக்கு வைத்த நேரம், இந்த சமயத்தில் நிறைந்த வீட்டிலிருந்து பொன் நகையை வெளியில் கொடுக்கலாமா?

நகை வியாபாரி: என்ன அய்யா! வியாபாரத்திற்காக பெண்டுகளுக்கு காட்டிவிட்டு கொண்டு வருகிறேன் என்று எடுத்துக்கொண்டு வந்த நகையை வேறு ஒருவர் அவசரமாகக் கேட்கின்றார்கள் என்று வந்து கேட்டால் ‘வெள்ளிக்கிழமை, விளக்கு வைத்த நேரம்’ என்கிறீர்களே, இது என்ன ஒழுங்கு. ஊரார் நகைக்கு நாள் என்ன? நேரம் என்ன? என்பது எனக்கு விளங்கவில்லையே?

வைதீகர்: (தனக்குள்ளாகவே இந்த இழவு நகையை நாம் ஏன் ‘இந்த மனிதனிடம் வாங்கி வந்தோம்’ என்று நினைத்துக்கொண்டு) என் புத்தியை விளக்குமாற்றால் புடைக்க வேண்டும். உம்ம கடைக்கு வந்ததே பிசகு, தவிரவும் உம்மிடம் நகையை எடுக்கும்போதே மணி பத்தரை இருக்கும், நல்ல ராகு காலத்தில் எடுத்து வந்தேன். அது எப்படியானாலும் கலகமாய்த்தான் தீரும். எனக்கு புத்தி வந்தது. இனி இம்மாதிரி செய்ய மாட்டேன். தயவு செய்து நாளைக்கு வாருங்கள்.

நகை வியாபாரி: இது என்ன அய்யா தமாஷ் செய்கின்றீர்களா என்ன? உங்கள் நகையை யாராவது கேட்டால் நாள், கோள் எல்லாம் பார்த்துக்கொள்ளுங்கள்.  ஊரார் நகைக்கு இதையெல்லாம் பார்க்கச் சொல்லி உங்களுக்கு எவன் புத்தி சொல்லிக்கொடுத்தான். அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள் அவனுக்கு நல்ல புத்தி கற்பிக்கின்றேன். மரியாதையாய் நகையை கொடுங்கள், நேரமாகுது.

வைதீகர்: நீங்கள் ‘குடிஅரசு’ பத்திரிகை கட்சியைச் சேர்ந்தவர்களா என்ன? நாளையும் கோளையும் சாஸ்திரத்தையும், கேலி செய்கின்றீர்களே! அந்தக் கூட்டத்திற்குத்தான் நல்லது இல்லை; கெட்டது இல்லை; மேல் இல்லை; கீழ் இல்லை; கோவில் இல்லை; புராணம் இல்லை; பறையனும், பார்ப்பானும் ஒண்ணு என்று ஆணவம் பிடித்து நாத்திகம் பேசிக்கொண்டு திரிகிறார்கள். நீங்களும் அதுபோல் பேசுகின்றீர்களே!

நகைக்காரர்: நீரே ரொம்பவும் ஆஸ்திகராயிருந்துகொள்ளும், அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. மரியாதையாய் நகையைக் கொடுத்துவிடும். பவுன் விலை இறங்கப் போகின்றது. இன்றைக்கு விற்காவிட்டால் எனக்கு நஷ்டம் வந்துவிடும். வேறு ஓர் ஆசாமியும் மிகவும் ஆசையாய் காத்திருக்கின்றார். இனி தாமதம் செய்யாதீர், இருட்டு ஆகப்போகிறது. சீக்கிரம் எடுத்துக்கொண்டு வாரும்.

வைதீகர் (வீட்டிற்குள் போய் சம்சாரத்திடன் யோசிக்கின்றார்) என்ன செட்டியார் நகை கேட்கின்றார்!

அம்மா: இன்றைக்கு வெள்ளிக்கிழமை, விளக்கு வைத்த நேரம், லட்சுமியை வீட்டைவிட்டு வெளியில் கொடுக்கலாமா?

புருஷன்: எல்லாம் நான் சொல்லிப் பார்த்தாய்விட்டது. செட்டியார் ஒரே பிடியாய் இப்போதே கொடுத்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொண்டு வெளியில் காத்துக் கொண்டிருக்கிறார்.

அம்மா: (பலமாய் சத்தம் போட்டுக்கொண்டு வெளியில் வருகிறபோது பேசிக் கொண்டு வருவதாவது) செட்டியாருக்குப் புத்தியில்லை. அவர் என்ன செட்டியா, மட்டியா? வீடு வாசல் வைத்து பிழைத்த மனிதரா, நாடோடித் தடம் போக்கியா? நிறைந்த வீட்டில் விளக்கு வைத்த நேரத்தில் கலகம் பண்ண வந்திருக்கின்றான். நான் போய் கேட்கிறேன். என்ன செட்டியாரே உமக்குப் புத்தியில்லை. இப்பொழுதுதான் ஏதோ கொஞ்சம் ஓஹோ என்று எங்கள் குடும்பம் தலை எடுக்கின்றது. அதுக்குள் நீர் எமனாய் வந்துவிட்டீர். நாளைக்கு காலமே வாருமே. அதற்குள் என்ன நீர் கொள்ளையில் போய்விடுவீரா அல்லது வேறு ஒரு மனிதன் நகை வாங்க வந்தவன் என்கிறீரே, அவன் கொள்ளையில் கோய்விடுவானா? உமக்குத்தான் புத்தியில்லாவிட்டாலும் அவனுக்காவது புத்தியிருக்கவேண்டாமா? வெள்ளிக்கிழமை நகையைப் போய்க் கேட்கச் சொல்லாமா என்கிற அறிவில்லாமல் உம்மை இங்கே அனுப்பி ரகளை பண்ணச் சொல்லி இருக்கிறானே, அத்தனை அவசரம் என்ன?

(இந்தச் சமயத்தில் மகன் வந்துவிட்டான்.)

மகன்: என்ன அம்மா கூச்சல் போடுகிறாய்? இவர் யார்?

தாயார்: இவரா? இவர் ஒரு நகை வியாபாரியாம். இவர் தலையில் நெருப்பைக் கொட்ட! வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரத்தில் காசி மாலையைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டுமாம். ரகளைக்கு நிற்கிறார்!

மகன் அதெல்லாம் இருக்கட்டும்! ஜாஸ்தி பேசாதே! நமக்கு காசி மாலையேது? நம் வீட்டில் இல்லையே - அப்பதான் வாங்க வேண்டும் என்று நேத்து மத்தியானம் பேசிக் கொண்டிருந்தார். அதற்குள்ளாவா வந்துவிட்டது?

தாயார்: உங்கப்பா யார் முகத்தில் முழித்தாரோ! காலையில் கடைக்குப் போனார். இந்தச் செட்டியாரிடம் மாலை ஒன்று இருந்தது. அதை எனக்குக் காட்டுவதற்காக வாங்கிவந்தார். நேற்று நினைக்கும்போதே ராகுகாலம். இன்று செட்டியார் கடையில் நகை வாங்கும்போதும் ராகு காலம், வழியில் வரும்போது பூனை குறுக்கே போச்சுதாம்; அப்பொழுதே உங்கப்பா வேண்டாமென்று தலையைச் சுத்தியெறிந்துவிட்டு வரவேண்டாமா? அப்படி செய்யாமல் என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார். அது கொஞ்சம் நன்றாய் இருந்தது. நானும் ஆசைப்பட்டு வாங்கலாம் என்று முடிவுகட்டி எண்ணிப் பார்த்தேன். காசு அறுபத்தி எட்டாயிருந்தது. உடனே தலையைப் சுற்றி எறிந்துவிட்டேன். உங்கப்பா பெட்டியில் வைத்துவிட்டார். இப்ப வந்து செட்டியார் அவசரப்படரார்; யாரோ வேறே கிராக்கி காத்துக் கொண்டிருக்கின்றதாம்; வெள்ளிக்கிழமை, விளக்கு வைத்த நேரம், முதலாவது பெட்டியைத் திறக்கலாமா? நீயே சொல்லு பார்ப்போம்.

மகன்: அய்யய்யோ! இதென்ன பெரிய அழுக்கு மூட்டையாயிருக்குது. குருட்டு நம்பிக்கைப் பிடுங்கலாயிருக்கின்றது. வெள்ளியாவது, சனியாவது, ராகுவாவது, கேதுவாவது! ஊரார் வீட்டு நகையை வாங்கிக் கொண்டு வந்து பெட்டியில் வைத்துப் பூட்டிக் கொண்டு வெள்ளியும் சனியும் பேசுவது வெகு ஒழுங்காய் இருக்கின்றது! பேசாமல் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்துவிடு; இல்லாவிட்டால் பெட்டியை உடைத்துவிடுவேன் தெரியுமா?

(அதற்குள் அப்பா வந்துவிட்டார்)

அப்பா: என்னடா பயலே! பலே அதிகப் பிரசங்கியாய் போய்விட்டே! நான் அப்போதே உன்னை குடிஅரசு பத்திரிகையைப் படிக்கவேண்டாம், கெட்டுப் போவாய் என்று சொன்னேனா இல்லையா? அது போலவே படித்து கெட்டுக் குட்டிச் சுவராய் போய்விட்டாயல்லவா? கர்மம், கர்மம், இந்த இழவு பத்திரிகை ஒன்று முளைத்து, ஊரிலுள்ள சிறுபிள்ளைகளையெல்லாம் நாஸ்திகராக்கிவிட்டது.

மகன்: வெகு நன்றாயிருக்கிறது என்று சொல்லிக்கொண்டு உடனே அம்மாள் இடுப்பில் சொருகி இருந்த சாவியைப் பிடுங்கி கொண்டு போய் பெட்டியைத் திறந்து நகையை எடுத்துக்க்ண்டு வந்து கொடுத்து செட்டியாரை மன்னிக்கும்படிக் கேட்டுக் கொண்டான்.

பிறகு புருஷனும், பெண்ஜாதியும் ராகு காலத்தில் அந்தச் செட்டியாரிடம் நகை வாங்கி வந்ததே பிசகான காரியம். இதுவும் வரும், இன்னமும் வரும் எவ்வளவோ கெடுதியும் வரும் என்னை அடிக்கவேண்டும்..... லே.

(8.1.1928 குடிஅரசு இதழில் “சித்திரபுத்திரன்’’ என்ற புணைப் பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை.)

Wednesday, July 15, 2020

சங்கீ வகைகள் 4

சங்கீ வகைகள் 4

முதலாவது வகை, நேர்மையான அப்பாவிகள், மோடி தான் இந்தியாவை காப்பாற்ற முடியும், என்று நம்பி கொரானாவை விரட்ட விளக்கு ஏற்றுவார்கள், கைதட்டுவார்கள், வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் அவதிப்படுவார்கள், ரேஷனில் பொருள் வாங்கிவிட்டு எப்படியும் இரண்டு நாளில் புதிய இந்தியா பிறக்க போகுதுன்னு நம்பிக்கையுடன் தூங்க செல்வார்கள்

இரண்டாவது வகை, முருகன் முப்பாட்டன், பார்பனரும் தமிழர்களே, சாதி என்பது செய்யும் தொழில் சார்ந்த இனக்குழு பெயர்கள், நடுவில் யாரோ அதை பிறப்புடன் இணைத்துவிட்டார்கள் என்பார்கள் அந்த யாரோ யார் என்று யார் கேட்டாலும் சொல்லமாட்டார்கள், இவர்களும் வீட்டு வாடகை கொடுக்கமுடியாமல் அவதிப்படுவார்கள் ஆனால் அரசு கொடுத்த டீ.வி எல்லாம் தூக்கி போட்டு உடைப்பார்கள், கொரானாவை விரட்ட விளக்கு ஏற்றுவார்கள், கைதட்டுவார்கள்

மூன்றாவது வகை, முருகன் சிவன் எல்லாம் தமிழரின் முன்னோர் வழிபாட்டின் எச்சம், சங்ககாலத்துலேயே, நியூட்டனின் 3 விதிகள் பற்றி பாட்டு இருக்கு, இதில் சிவன் முருகன் எல்லாம் எம்மாத்திரம், இந்து மதம் அதை எல்லாம் உள்ளே எடுத்து கொண்டது என்பார்கள், இந்துமதத்தில் யார் எடுத்துக்கொண்டார்கள் என்று கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள், வாடகை எல்லாம் ஒழுங்காக கட்டிவிடுவார்கள், டீ.வீ எல்லாம் தூக்கி போட்டு உடைக்கமாட்டார்கள், கொரானாவை விரட்ட விளக்கு ஏற்றுவார்கள், கைதட்டுவார்கள், கேட்டால் ஊரோடு ஒத்து வாழ் என்பார்கள், சேரி தனியாக இருக்கிறதே என்று கேட்டால். அது தப்புதான் கொஞ்சகொஞ்சமாக தான் சரியாகும், இப்போ எல்லாம் யாரு சார் சாதி பாக்குறாங்க என்பார்கள், ரொம்ப கேள்வி கேட்டால் குவாண்டம் பிசிக்கஸ் பற்றி நக்கீரர் என்ன சொல்றார் தெரியுமா என்று முதலில் இருந்து தொடங்குவார்கள்

கடைசி நாலாவது வகை, பவுத்தம் சமணம் போன்ற மதங்களுக்கு ஆதி வடிவம் தான் ஆசீவகம், யானை, பாம்பு, சிலைகள் தமிழர் ஆதிமதம், அய்யனார் சாஸ்தா என்று கலந்து கட்டி, ஆசு + ஈவு+ அகம், அப்போவே சித்தர்கள் கால யந்திரம் வைத்திருந்தார்கள், தமிழர்களுக்கு தொன்மங்களின் மேலே பற்று இல்லை அவற்றை காக்கவில்லை என்று கிறிஸ்டோபர் நோலன் ரேஞ்சுக்கு, பெரிய திரைக்கதை எல்லாம் சொல்லுவார்கள், ஏதாவது கேட்டால் நகை கடை விளம்பரத்தில் வருவது போல நம்பிக்கை தானே எல்லாம் என்று  முடித்து கொள்வார்கள், சாதி குறித்து எல்லாம் என்ன பெரிய பேச்சு என்பது போல மெத்தனமாக ஒரு லுக் விடுவார்கள், கோரான குணப்படுத்த ஆசீவகம் தான் ஒரே வழி அதில் ஒன்று தான் கபசுர குடிநீர் என்பார்கள், ரொம்ப கேள்வி கேட்டா போதிதர்மர் கூட ஆசீவகம் தான், லைன் போட்டு தர்றேன் பேசுறியா என்று ஆரம்பிப்பார்கள் 

பார்க்க பேச எப்படி இருந்தாலும், மேலே சொன்ன, நாலு வகையும் மறக்காமல் சொல்வது

ஈ.வே.ரா தான் தமிழ் நாட்டை கெடுத்தார்

Sunday, July 05, 2020

கொஞ்சம் கழனியில் இறங்கி விவசாயம் செய்யட்டுமே

IT வேலையில் சலித்துக்கொள்பவர், நகரத்தை நரகம் என்று சபித்துக்கொண்டு கிராமத்தை நோக்கி ஓட போவதாக சொல்பவர்கள்,
நகரத்து குழந்தைகள் பெற்றோரிடம் போதிய நேரம் செலவிட முடியாமல் தவிப்பதாகவும், கிராமங்களில் பெற்றோரின் அரவணைப்பில் குழந்தைகள் மகிழ்வோடு வாழ்கிறார்கள் என்றும் கதைப்பவர்கள் என சிலருக்கு கிராமத்தில் வாழ்க்கை, விவசாயம் மற்றும் ஏனைய தொழில்கள் எப்படி இருக்கும் என்று தெரியுமா ?,
வயலும் வயல் சார்ந்த வாழ்க்கையே கொண்ட கிராமங்களில், எல்லா பெற்றோர்களின் பகலும் ,இரவும் வயலில்தான் கழியும்,
விவசாயம் என்பதை புனித தொழிலாக பரப்புரை செய்யும் அனேகர், அந்த தொழில் IT மற்றும் இன்ன பிற தொழிற்சாலை வேலைகளை விடவும் கொடூரமாக விவசாயிகளின் உழைப்பை சுரண்டி கொண்டு இருக்கிறது என்பதை அறிவார்களா?
பூர்விக சொத்து என்று பெரிதாக பெரும்பாலானவர்களிடம் இருக்காத விவசாய கூலிகள், தங்கள் உழைப்பில் வாங்கிய வயலில், வேலை பார்க்க வருபவர்களோடு, தன்னையும் ஒரு கூலி ஆளாக “பாத்தி-பாசன” கணக்கு போட்டு வேலை செய்பவர்களாகதான் இருக்கின்றனர்.
குழந்தைகளை முந்தானையில் முடிந்து தோளில் போட்டுக்கொண்டு வயல் வேலை பார்க்கும் அம்மாக்கள் உண்டு, ஆண்களுக்கு சளைக்காத கடின உழைப்பாளிகள்.
காலை 5 மணியில் தொடங்கி, இரவு 7 மணி வரை வயலில் ஓயாத உழைப்பு பின் வீட்டில் அடுத்தநாளைய வேலைக்கு செய்ய வேண்டிய தயாரிப்புகள், பிள்ளைகளுக்கு தேவையான உணவிற்க்கு சமையல் பின் சிறிது ஓய்வு, இதுதான் அவர்களின் routine…
பிள்ளைகள் தூங்கி எழும் முன்னே வயலுக்கு செல்லும் அவர்கள், தூங்கும் நேரத்திற்க்குதான் வீடு திரும்புவார்கள், வீட்டிற்க்கு வந்து சாப்பாடு செய்ய ஆரம்பிக்கும் போதே குழந்தைகள் தூங்க ஆயத்தமாகிவிடுவர். பெற்றோரிடம் ஆற அமர பேசிய interactions எல்லாமே பிள்ளைகளின் பள்ளி ஓய்வு நாட்களில், அவர்களின் பெற்றோர்களோடு ஓயாயமல் வயல்காட்டில் சிறு வேலைகளை செய்துகொண்டிருந்த நேரங்களில்தான்.
இப்படிப்பட்ட குடும்பங்களில் பெரும்பாலும் அவர்களின் மூத்த சகோதரிகள்தான் பெற்றோர் இல்லாத குறையை சிறிது தீர்த்து வைக்கிறார்கள்,
கிராமங்களில் 1980 மற்றும் 90களின் தொடக்கத்தில்
காலை மற்றும் இரவு வேளைகளில் இட்லி, மதியம் சூடான சோறு என்பதே பல வீடுகளில் மிகவும் அரிதான உணவு.
அப்படி சாப்பிடும் ஆட்களே பெரிய பணக்காரங்க என்று எண்ணும் குழந்தைகள் உண்டு (அது சிறிதளவு உண்மையும் கூட)
சொல்லப்போனால் இட்லி, தோசை என்பது கோவில் திருவிழா காலங்களில் மட்டுமே பெரும்பாலான விவசாய குடும்பங்களில் கிடைத்திருக்கிறது.
அதே போல, விவசாய குடும்பங்களில் தீபாவளி பண்டிகையை பெரிய அளவில் அதாவது நகரங்களில் கொண்டாடுவது போல் கொண்டாடி பார்த்ததே இல்லை, இன்றும் சிலருக்கு தீபாவளி எப்படி கொண்டாடுவது என்று தெரியாது, காரணம் பெரிய அளவில் அவர்களின் பெற்றோர்கள் வீட்டில் அந்த பண்டிகையை கொண்டாடியதே கிடையாது
(ஆனால் இன்று வீட்டில் விடுமுறை தினமாக கொண்டாடி கொள்கின்றனர் )
சரியாக பண்டிகை நாளில்தான் அந்த வீட்டு குழந்தைகளுக்கு புத்தாடைகள் வாங்கப்படும், பெரிசா சொல்லிக்கொள்ளும் அளவுக்கு டிசைன்கள் என்பதே அன்றை பொழுதில் இருக்காது, எல்லாரும் பார்த்து கழித்து போட்ட துணிதான் கிடைக்கும்,
இதற்க்கெல்லாம் முக்கிய காரணம் அவர்களின் விவசாய வேலை, கிராமத்து வாழ்க்கைமுறை.
அந்த கடின உழைப்புக்கு பலனாக அவர்கள் சம்பாதித்தது, சேமித்தது என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை..
தன்னை கழித்தது என்று கிராமத்தில் சொல்வார்களே, அது போல வரவுக்கும் செலவுக்கும் சரியாய் இருந்து இருக்கிறது. பெண்களுக்கு நகை செய்து திருமணம் செய்தது, ஆண் பிள்ளைகளை படிக்க வைத்தது என்பதை தவிர அவர்களின் சேமிப்பு என்று சொல்லிக்கொள்ளபடி எதுவுமே இருப்பதில்லை.
நான் கண்டும் கேட்டும் அனுபவித்த கிராமத்து விவசாய வாழ்க்கையில்,
நல்லதோ கெட்டதோ IT வேலை பார்க்கும் அல்லது பிஸியானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நகரத்து ஆட்களை போலவேதான் தங்கள் குழந்தைகளை வளர்க்கிறார்கள்
ஆனால் நகரத்து குழந்தைகளுக்கு கிடைக்கும் வெளி உலக தொடர்போ, exposureயோ அந்தந்த வயதில் சரியாக கிராமத்தில் கிடைப்பதில்லை என்பதுதானே உண்மை. ஆனால் அதற்க்கு பதிலாக சாதிய இறுக்கங்களை புற்றுநோய் போல திணித்துவிடுவதும் கிராமங்கள்தானே?
நான் கணினியை தொட்டது என்னுடை கல்லூரியில்தான் ஆனால் என் மகன் ஒன்றரை வயதில் மடிக்கணியை ஆன் ஆஃப் செய்ய கற்றுக்கொண்டான்..
என் பிள்ளைகள் இட்லியும் தோசையும் சாப்பிட்டுக்கொண்டு பீஸாவுக்கு கனவு காண்பவர்களாக நகரத்தில் வளர்ந்து இருக்கிறார்கள் இந்த வளர்ச்சியில் எனக்கு மகிழ்ச்சியே..
யாரோ எவனோ எங்கோ உட்கார்ந்து கொண்டு மைக்ரோ பாலிடிக்ஸ் செய்ய விவசாய/கிராமத்து வாழ்க்கை மட்டுமே சொர்க்கம் என்று கற்பனையில் எழுதுவதை படித்தும் பார்த்தும் இந்த தொழிலுக்கு அந்த தொழில் மேல், இந்த ஊருக்கு அந்த ஊர் மேல் என்பதல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை போல்தானே தவிர வேறோன்றும் இல்லை.
சிறு குறு விவசாயிகளின் / விவசாய கூலிகளின் வாரிசுகளே உங்கள் தலைமுறையை உயர் கல்வி கற்க செய்யுங்கள், இதுவரையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பிறர் கொஞ்சம் கழனியில் இறங்கி விவசாயம் படிக்கட்டும்,பின் செய்யட்டுமே....

Monday, June 01, 2020

இந்திய பொருளை எந்த ஒரு நல்ல குடிமகனும் மட்டம் தட்டவில்லை!

இந்திய பொருளை எந்த ஒரு நல்ல குடிமகனும் மட்டம் தட்டவில்லை!  மட்டம் தட்டுவதெல்லாம் இந்த நாட்டை ஆள்வோர்தான்!  இந்த போஸ்ட்ட ஷேர்செய்யும்முன் எச்ச கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?  பிரன்ஸிடம் இருந்து ரஃபேல் போர்விமானம் வாங்கியது யார்?  ரேபிட் டெஸ்ட்கிட் சீனாவிடம் வாங்கியது யார்?  அமெரிக்காவிடம் இருந்து சவப்பெட்டி வாங்கியது யார்?  21ஆயிரத்தி 600கோடிக்கு அமெரிக்காவிடம் இருந்து எம் எச்-60 ஏஎச்-64 ஹெலிக்கப்டர் இரக்குமதிக்கு ஒப்பந்தம் போட்டவர் யார்?  சீனாகாரன்ட்ட பட்டேல் சிலையே வாங்கியாது யார்?  தைவானில் இருந்து காளான் கொண்டு வந்து சாப்பிடுபவர் யார்?  இப்படி கேட்டுக்கிட்டே இருக்கலாம் பதில் தான் பக்தாளிடம் இருக்காது..........................  எச்ச ராசா  ராஜகோபாலன் ராமகிருஷ்ணன் சங்கி யாரையோ சொல்லனும்னு நெனச்சு தனக்குத்தானே ஆப்பு வச்சுட்டான்!  ராஜகோபாலன் ராமகிருஷ்ணன் நீ கேட்ட ஒவ்வொரு கேள்வியும் உன்னை போன்ற சங்கிகளை செறுப்பல அடிச்சு மாதிரி இருக்குன்னு நான் சொல்லவில்லை?  செறுப்பலேதான் அடிச்சிருக்க!


Tuesday, May 26, 2020

Cable 06CHENNAI954 : US Consulate Chennai to US Defense Intelligence Agency [Wikileaks] - No actual support for LTTE/Prabhakaran in Tamil Nadu - (Makes us wonder if Stalin & Seeman are nothing but full buruda) - Cable Notes VAIKO MAY HAVE GOT CASH FROM LTTE IN EXCHANGE FOR HIS SUPPORT & POLITICS

https://wikileaks.org/plusd/cables/06CHENNAI954_a.html

Summary: Despite the fact that Tamil Nadu is home to the largest population of Tamils in the world, there is virtually no support in the state for the LTTE. There is no financial support coming from the state, no significant supplies flowing from Tamil Nadu to the LTTE, and almost no public sentiment in support of the LTTE in Tamil Nadu.
[2](c) All the sources with whom Post has discussed this issue, including law enforcement officials, say that Tamils in Tamil Nadu and the relative few Tamils who live elsewhere in India, are not a source of financial support for the Liberation Tigers of Tamil Eelam (LTTE). This was not always the case, however. Prior to the assassination of Rajiv Gandhi by an LTTE terrorist in 1991, there was significant support for the LTTE cause in the state that likely included financial support. But support for the LTTE cause vanished almost overnight after Rajiv Gandhi's death. It may be, however, that some financial support flows the other way, that is, from the LTTE to certain political leaders in Tamil Nadu, notably Vaiko, founder and General Secretary of the Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK). Some people, including Tamil refugee NGO leader Chandrahasan, believe that the LTTE provided initial financial support for Vaiko in establishing his MDMK party after he split from the DMK party in 1993. Vaiko has been an outspoken supporter of the LTTE but any financial link remains unproven (Reftel).
[3] substantial financial support for the LTTE comes from Tamils in other countries, notably Canada, the United Kingdom, Netherlands and Germany. Each of these countries has a significant Tamil population. Some sources suggest that Tamils in these countries are encouraged to give up to 10 percent of their income to support the LTTE cause. This encouragement, which may be closer to extortion, is often administered through local religious institutions or Tamil cultural organizations in these countries.
[4] Tamil Nadu government under former Chief Minister J Jayalalithaa took against LTTE elements in the state. Post expects the newly elected DMK government to continue that tough anti-LTTE policy. The expectation is based on the DMK's record in controlling the LTTE when it was last in power from 1996 to 2001.
[6] It may seem strange that in the Indian state of Tamil Nadu, which literally means Tamil country, there is so little support for the LTTE, an organization that professes to be dedicated to establishing a homeland for all Tamils. But the situation today can be directly traced to the day in May 1991, when an LTTE suicide bomber terrorist killed Rajiv Gandhi here in Tamil Nadu. Opinion instantly turned against the LTTE and their tactics. Dravidian political parties that had been supportive of the LTTE in the past fell silent in their support and later stepped up efforts to rid the state of any remnants of LTTE activity. That anti-LTTE sentiment remains today and is unlikely to change in the foreseeable future.

LTTE recruited kids, paid media people and doctors to exaggerate death tolls, a few doctors even came out saying they were threatened to lie about all this. It's like.. Do you really think they had the support of eezham tamil people?
Prabhakaran wanted to become a dictator, he let a lot of tamil people die at the hands of SL Army. They attacked sinhala civilians, constantly broke ceasefire, never actually defended any tamil civilians. Eezham people supported LTTE, once, some 30 years ago. When people actually had something to fight for.. When people who fought were all volunteers and not conscripted. What they did in the 2000s to tamil people is what led to that addage about betrayal.. "dhrogatthil valarndha eezham" or something like that. LTTE hijacked it with their media people and changed it's meaning to Prabhakaran being betrayed by MK.
LTTE is and always will be cancer and people who they claimed to protect absolutely hated them by the end. Don't ever let anyone tell you otherwise. Just notice when you're arguing with them.. They'll only talk about 1980s LTTE.. They'll NOT even disagree about the conscription, extortion and abduction on tamil people. But, they will still claim LTTE has eezham's support. In the 1980s, yes, they supported them. When people saw the true colors of Prabhakaran, they tried to back out and LTTE forced them to support, they were too strong to oppose.. My friend's father called it "puli vaal pudichi savaari panrathu mathiri.." Now their fanboys will force you to believe they are still liked by the eezham.
In that other thread, this idiot brought up maaveerar nal, November 27 as proof that tamil people support LTTE. Just look up Prabhakaran, who came up with this particular date as maaveerar nal, look up his birthday. That entire week was usually celebrated by the LTTE because Prabhakaran threw himself big birthday parties.. Ask any Sri Lankan guy if this didn't happen.
They control the story too much, you've to read between the lines but when you do, it's painfully obvious how glad we must be that they were defeated.

Monday, May 25, 2020

பாரத் மாதா என்றால் என்ன

பாரத் மாதா என்றால்  என்ன என்று தெரியாத கோமாளிகள்..பாரத் மாதா என்றால் என்ன?

பாரத் மாதா என்பது வங்காள மாநிலத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு  எதிராக நடத்தப்பட்ட நாடகத்தில் உள்ள  ஒரு கதா  பாத்திரம் .இந்த நாடகம் 1873 ம் ஆண்டுநடத்த பட்டது .  நடத்தியவர் கிரன்  சந்திர பேனர்ஜி. அந்த நாடகத்தில் பாரத் மாதா  பிரிட்டிஷ் அரசை தோற்கடிக்க உதவுவது  போல் அமைக்க பட்டது.  பின்னர் இது விடுதலை போராட்டத்தில்  மிகவும் பிரபலமானது. 

1882 ல்  வந்தே மாதரம்  என்ற முத்திரை  வாக்கியம் அனந்தமாத்  என்பவர் தனது கதை புஸ்தகத்தில் அறிமுகம் செய்தார்.

பாரத் மாதா படத்தை  1907 ம் ஆண்டு  தான் முதல் முதலில் ஓவியமாக அபினிந்திரநாத் தாகூர் அவர்களால் வரையப்பட்டது.

1920 ம் ஆண்டு மெதுவாக மத சாயல் கொடுக்க பட்டது.

1936 ல் பாரத் மாதா வுக்கு கோயில் பெனாரஸ்  என்ற இடத்தில் காந்தி அவர்கள் திறந்து வைத்தார். 

இந்த  கதா பாத்திரத்தை வைத்து  எச்ச ராஜா எல்லா மதத்தினரும்  ஒற்றுமையாக வாழும் குமரி மாவட்டத்தில் கலவரம் உண்டாக்க முயற்சி செய்கிறான்..

 இதில் போலிசாரை வேறு இவன் மிரட்டுகிறான்..

நான் கேட்கிறேன், விடுதலை போராட்டத்தில் பிரிட்டிஷ் அரசின் ராணுவத்தில் ஆட்களை சேர்த்தவனுக்கும், காலை நக்கியவனும், மன்னிப்புக் கடிதத்தை எழுதி  கொடுத்தவனுக்கும், சுபாஷ் மற்றும் காந்தி யின் விடுதலை போராட்டத்தில் முட்டு கட்டையாக இருந்தவர்களும், இன்று  எப்படி இந்த கோஷம்  மற்றும் பாரத் மாதாவை  உபயோகிக்கலாம்?

Saturday, May 23, 2020

பார்ப்பன காவிகளின் ஆகச் சிறந்த அடிவருடி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்பது தமிழக அரசியல் வரலாற்றில் மிக வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக ஒரு தமிழக அரசு தன் சொந்த மக்கள் மீதே நடத்தும் இரண்டாவது துப்பாக்கிச்சூடு!

இதற்கு முன்பு 1982ஆம் ஆண்டு மண்டைக்காடு கலவரத்தின்போது பார்ப்பன காவிகளுக்காக அப்பாவி மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது எம்.ஜி.ஆர் அரசு.

ஆர்.எஸ்.எஸ் நடத்தும் 'விஜயபாரதம்' பத்திரிகையின் 21.10.2016 தேதியிட்ட இதழில், "எம்.ஜி.ஆர் போல ஹிந்துத்வ ஆதரவு முதல்வர் நேற்றும் இல்லை, நாளையும் இல்லை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையே வெளியாகும் அளவுக்கு அ.தி.மு.கவின் பார்ப்பனப் பாசம் ஊரறிந்தது.
(ஆதாரம்: பின்னூட்டத்தில்)

ஆகவே, பார்ப்பனப் பெண்ணான ஜெயலலிதா அ.தி.மு.க தலைவரானதால்தான் அந்தக்கட்சி பார்ப்பன அடிமையானது என்று நாம் கருதினால், அது தவறு. அது ஏற்கனவே பார்ப்பன அடிமையாக இருந்ததால்தான் ஜெயலலிதா எல்லாம் அதன் தலைவராக வரமுடிந்தது.

அதன் நீட்சியாகத்தான் ஜெயலலிதாவால் அண்ணாவின் பெயரில் ஒரு திராவிடக் கட்சிக்கு தலைமைதாங்கிக்கொண்டே பாபர் மசூதியை இடிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் கரசேவைக்கு ஆட்களை அனுப்பமுடிந்தது.

தற்போது 'பொன்மனச்செம்மல்' எம்.ஜி.ஆர்ஜி, 'இரும்புப் பெண்மணி' ஜெ.ஜெயாலலிதாஜி ஆகிய இருவரையே மிஞ்சும் வகையில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமிஜி அவர்கள் பார்ப்பன காவிகளின் ஆகச் சிறந்த அடிவருடியாகத் திகழ்கிறார்.

உள்நாட்டு ஃபார்வட் ப்ளாக் என்கிற இடது ஆதரவுக் கட்சியின் சரிவை ஆராய்வது வெளிச்சத்தைத் தரலாம்

பிரிட்டிஷ் காலத்து காங்கிரஸ் கட்சிக்குள் எம்.கே காந்தியின் அகிம்சை வழியை ஏற்ற மிதவாத போக்கும்,    போஸ் தலைமையை ஏற்ற தீவிரவாதப் போக்கும் இருந்தது.

நாளடைவில், காங்கிரசில் இருந்தபடியே தமது ஆதரவாளர்களை இணைத்து ஃபார்வர்ட் பிளாக்கை 1939 இல் உருவாக்கினார் போஸ்.

அதில் புரட்சிகர எண்ணப் போக்குகள் இருப்பினும் அவை மார்க்சிய தத்துவப் பின்புலத்தைக் கொண்டவையாக இருக்கவில்லை.

இனவெறியாளன் ஹிட்லரைச் சந்தித்து ஆதரவு கேட்கத் தயங்காத போஸின் நிலைப்பாட்டிற்கு இதுவும் ஒரு காரணம்.

மேற்கத்திய கல்வி தந்த அறிவும்
உள்ளூர் ஹிந்து தேசிய உணர்வும் சேர்ந்து 'ஜெய்-ஹிந்த்' என்று முழங்கிய போஸை, பசும்பொன் முத்துராமலிங்கத்திற்கு மிகவும் பிடித்துப் போனது.

ஆனால் போஸின் ஐஎன்ஏ, போரில் தோற்று, பிறகு போஸ் அடையாளமற்று தொலைந்து போனதும், பார்வர்ட் ப்ளாக் தொய்வடைந்தது.

பிறகு, 1946இல் போஸ் ஆதரவாளரான R.S.ரூய்க்கர், அக்கட்சியை மீள் உருவாக்கம் செய்தார். அதில், ஜோக்லேகர் போன்ற இடதுசாரி தலைவர்களும் இணைய, ஃபார்வட் ப்ளாக் வர்க்க முரண்களை எதிர்த்துப் போராடும் இடதுசாரி கட்சியாக உருவெடுத்தது.

எனினும், 1948லேயே இரண்டாக அக்கட்சி உடைந்தது. அது, இடதுசாரி குழுக்களின் தொடர் உடைபடு பண்பை ஒத்திருந்தது.

எது எவ்வாறாயினும், நாட்டின் பிற பகுதிகளில் ஃபார்வட் ப்ளாக் இடது நிலைப்பாட்டில் பிற இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து தேர்தல்களை சந்தித்து வருகிறது.

ஆனால், தமிழகத்தில் மட்டும் அக்கட்சி பசும்பொன் மு.ராம் ஆதரவு முக்குலத்தோர் கட்சியாக சீரழிந்தது.
எந்த அளவுக்கு என்றால் ஒரு கட்டத்தில் அதன் தமிழகத் தலைவராக நடிகர் கார்த்திக்கை உட்கார வைத்திருந்தனர்.

அவ்வகையில் ஒரு பாபி குறுங்குழு,பார்ப்பனீய அடிமைத்தனத்தில் ஊறியபடி,தனது சூத்திர ஜாதி ஆணவ உளவியலை வலிமைப்படுத்த சிறுவர் சிறுமியரை வைத்து டிக்டோக் போடும் உரிமைக்காக துடித்துக் கொண்டுள்ளது.

வடிவேலன்(எ)வசுமித்ரா- நிர்மலா கூட்டணியை இங்கு நினைவூட்டிக் கொள்ளவும்.

உலகப் பாட்டாளி வர்க்க விடுதலைக் கருத்தியலாக இயங்கும் மார்க்சியமானது, இந்தியாவுக்குள் வந்ததும் பார்ப்பனீய + ஜாதி ஆண்டை உளவியலால் திரிந்து போகும் ஆபத்தை எதிர்கொண்டபடியே இருப்பதேன் என்கிற கேள்விக்கு, உள்நாட்டு ஃபார்வட் ப்ளாக் என்கிற இடது ஆதரவுக் கட்சியின் சரிவை ஆராய்வது வெளிச்சத்தைத் தரலாம்.

இதில் A போனா என்ன! B போனா என்ன! இழப்பு திமுகவிற்கு இல்லை.

கலைஞர்,

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் இயற்றினார்,
விளைவு.....
பார்ப்பனர்கள் (திராவிடரல்லாதார்) திமுகவை எதிரியாக பார்த்தனர்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார்,
விளைவு.....
பார்ப்பனர்கள் (திராவிடரல்லாதார்), பிள்ளைகள், முதலியார்கள் திமுகவை எதிரியாக பார்த்தனர்,

BC Category 50% இடஒதுக்கீடு தொகுப்பிலிருந்து 20% மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு (வன்னியர், பரமலைக் கள்ளர்) வழங்கினார்,
விளைவு.....
வெள்ளாளர்கள், தேவர்கள், உடையார்கள், கோனார்கள் திமுகவை எதிரியாக பார்த்தனர்.

சமத்துவபுரம் அமைத்து அனைத்து சாதியினரும் ஒரே ஊரில் பிறந்து, ஒரே சுடுகாட்டில் எரிக்கப்பட வேண்டும் என்றார்.
விளைவு.....
முன்வரிசையில் முண்டியடித்துக் கொண்டு  நின்று வீட்டை வாங்கி கொண்ட முதலியார்கள், வெள்ளாளர்கள், தேவர்கள், உடையார்கள், கோனார்கள், பார்ப்பனர்கள் எல்லாம் இந்த கருணாநிதி பய, நம்மையெல்லாம்  .......  .......களோட வாழ சொல்றான் என்று திமுகவை, கலைஞரை எதிரியாக பார்த்தனர்.

அய்யோ,
கலைஞர் அவர்களே, எங்களுக்காக எல்லா சாதியினரும் உங்களை கை விட்டு விட்டனர். உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்.
மற்ற கட்சிகளில் Reserve தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தகூட முடியாத அளவுக்கு 100% தாழ்த்தப்பட்ட மக்களும் உங்கள் பின்னாடி உள்ளோம் என்று எத்தனை தலைவர்கள் கலைஞரின் கரத்தை வலுப்படுத்தினீர்கள்!!!???

ராமச்சந்திரன் கட்சியை உடைத்துக் கொண்டு போனதிலிருந்து இன்று வரை 30% தாழ்த்தப்பட்ட மக்கள் தானே திமுகவிற்கு வாக்களிக்கின்றனர்.

இதில் A போனா என்ன! B போனா என்ன!

இழப்பு திமுகவிற்கு இல்லை.

ஊட்டுப்புரைகளும் ஓட்டுப்புரைகளும்.!

ஊட்டுப்புரைகளும் ஓட்டுப்புரைகளும்.!

உலக வரைபடத்தில் அனைவரும் எளிதாக அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய இடங்கள் மூன்று.

தென் அமெரிக்காவின் தென் கோடியிலுள்ள கேப் ஹார்ண் என்ற கொம்பு முனை, ஆப்பிரிக்காவின் கேப் ஆஃப் குட் ஹோப் என்ற நன்னம்பிக்கை முனை, இந்தியாவின் தென் முனையான
கேப் காமரின் என்ற குமரிமுனை.

அங்கிருந்து மேற்காக ஒரு கிலோமீட்டர் மேற்கு கடற்கரை சாலையில் தென் மேற்கிலிருந்து வீசும் இதமான பருவக்காற்றின் ஊடே  பயணித்து உண்மையான தென்முனையான  கல்முனையை தாண்டி, கடல் மணல் சூழ்ந்த கோவளம் கிராமத்தில்  மிக அழகிய கருங்கற்களால் கட்டப்பட்ட கத்தோலிக்க  கிறிஸ்தவ தேவாலயத்தையும்,
நான் பாடும் பாடல்’ திரைப்படத்தில் நடித்த வருடம் முழுக்க தளும்பிக் கிடக்கும்  தலைக்குளத்திற்கு அருகே இலந்தையடிவிளை ஊருக்கு முன்  சற்று விலகி வடக்கே ஒரு கிலோமீட்டர் பயணித்தால் மலையாள சினிமாவின் தந்தையான ஜே.சி.டேனியல் , ரெட் டீ அல்லது எரியும் பனிக்காடு நூலாசிரியர் பி.எச்.டேனியல், குமரி அனந்தன்  ஆகியோரது ஊரான ஏறத்தாழ ஒன்பதாயிரம் மக்கள் தொகை கொண்ட அகஸ்தீஸ்வரம் கிராமத்தை அடைய முடியும்.

அங்கு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரையில்  ஊர் முழுக்க  ஓலைப் புரைகள் என்ற தென்னை ஓலை கூரை வீடுகளே இருந்தன , திருவனந்தபுரம்  அனந்தபத்மநாப சுவாமியின் பிரதிநிதியாக ஆட்சி செய்த மார்த்தாண்ட வர்மாவின் ராம ராஜ்யத்தில் அவ்வூரில் வசித்தவர்கள் ஓட்டு வீடுகள் அமைக்க அனுமதியில்லை.அவ்வூரின் முதல் ஓட்டு வீடு 1935 ஆம் ஆண்டில் மன்னராட்சி புதைக்கப்பட்டுகொண்டிருந்த  காலகட்டத்தில்  கீழச்சாலையில் கட்டப்பட்டது.

அவ்வூர் மக்கள் மூன்று கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் கன்னியாகுமரி பகவதி அம்மனை வழிபட அனுமதிக்கப்பட்டது 12.11.1936 ஆம் நாளில்தான். 1933 ஆம் ஆண்டில் கோவில் நுழைவை அவ்வூர் மக்களுக்கு மறுத்த அதே சி.பி.ராமசாமி ஐயர் 1936 ஆம் ஆண்டு அனுமதித்த மனமாற்றத்திற்கு காரணம் முன்னதாக
ஈழவர், தீயர், பில்லவர்கள், நாடார்கள் ஆகியோர் மதம்மாற தீர்மானித்து கிறிஸ்தவத்தையோ இஸ்லாமையோ தழுவுவது குறித்து மாநாடு ஒன்று நடத்தியதால் என டாக்டர் பாபாசகேப் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். (1)

1952  ஆம்ஆண்டு வரை அங்கு ஒரு ஆரம்ப பள்ளி மட்டுமே இருந்தது.அது 24.05.1954 அன்று நடுநிலைப்பள்ளியாக உயர்ந்தது.10.06.1959 ஆம் ஆண்டு கு.காமராஜ் அவர்கள் முதல்வராக இருந்த போது உயர்நிலைப்பள்ளியாக மேம்படுத்தப்பட்டது.

11.08.1965 ஆம் ஆண்டு 165 பியூசி மாணவர்களோடு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி உள்ளூர் பெரியவர்களால் நிலமும் பணமும் வழங்கப்பட்டு அரசு மானியத்துடன்  தொடங்கப்பட்டது. கல்கத்தா ராமகிருஷ்ணா மிஷனுக்கும் இக்கல்லூரிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

தி.மு.க ஆட்சியின் போது 1968 ஆம் ஆண்டில் அக்கல்லூரியில் பெண்களையும் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது. பிஎஸ்சி வேதியியல் , உயிரியியல் ஆகிய பிரிவுகள் தொடங்கின.பணியாளர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் அரசு மானியம் வழங்கப்பட்டது.

அகஸ்தீஸ்வரத்தில் இன்று ஞான தீபம் என்ற ஆங்கிலப் பள்ளி ஒன்று இயங்குகிறது.அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாகி விட்டது.

விவேகானந்தா கல்லூரி முதுகலை கல்லூரியாகவும், தொழில் நுட்பக் கல்லூரியாகவும், கல்வியியல் கல்லூரியாகவும் விரிவடைந்து விட்டது.

ஊரின் தெற்கே கல்லூரிச் சாலையில் அமைந்த  மேம்படுத்தப்பட்ட சுகாதார மையமும்
சுதந்திரத்திற்கு பின்னர் அமைக்கப்பட்டதுதான்.

சுதந்திரத்திற்கு முன் மருந்துக்கு  மூன்று அரசு ஊழியர்கள் என்ற  எண்ணிக்கை இன்று முற்றிலுமாக மாறி இன்று அகஸ்தீஸ்வரத்தின்   பள்ளி ஆசிரியர்கள் , கல்லூரி விரிவுரையாளர்கள் , முதல்வர்கள்,, மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள்   கல்வி  அதிகாரிகள் என அரசுப் பணியாளர்கள் எண்ணிக்கை  நூறுகளைத் தொடும்.

பாம்பே இயற்கை வரலாற்று சங்க இயக்குனர் பாலச்சந்திரன் , வசந்த் அன்ட் கோ வசந்த குமார், எல்லோரும் பயின்றது அரசு பள்ளிகளில்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் , மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், பட்டியல் சாதியினரும் மட்டுமே வாழும் மாடிவீடுகள் நிறைந்த இவ்வூரில் இன்று ஒரு ஓலைப்புரை வீட்டை பார்ப்பது அரிது.

ஏறத்தாழ அகஸ்தீஸ்வரத்தைப் போன்ற கிராமங்கள்தான் கன்னியாகுமரி மாவட்டம் முழுக்க.

2011 கணக்கெடுப்பின்படி  18 இலட்சம் மக்கள் தொகை கொண்ட இம்மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் எண்ணிக்கை 460.(2)

 33 இலட்சம் மக்கள் தொகை கொண்ட பக்கத்து மாவட்டமான திருவனந்தபுரத்திலேயே அதே வருட கணக்கெடுப்பின்படி மேல்நிலைப் பள்ளிகள் எண்ணிக்கை 181.

காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகள்  ஆட்சியில்தான் 92% கல்வியைப்பெற்றது இம்மாவட்டம்.

தமிழ்நாட்டில் மிகக்குறைந்த கல்வியறிவான  74 விழுக்காட்டைப் பெற்ற தர்மபுரியை விடக் குறைவான  உத்தர பிரதேசத்தின் அலஹபாத்  மாவட்டமே அம்மாநிலத்திலேயே மிகையான கல்வியறிவான 72 விழுக்காட்டைப் பெற்ற மாவட்டம்.

உத்தரப்பிதேச ஷிராவதி மாவட்டத்தில்  அதே கணக்கெடுப்பில் கல்வியறிவு 49 விழுக்காடு மட்டுமே.

ஒரு வேளை மாடுகளுக்கு பள்ளிகள் இருந்திருந்தால் உத்தரப்பிரதேசம் கல்வியில் முதன்மை பெற்றிருக்கும் .

கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்கள் அகஸ்தீஸ்வரம் போன்றவையே, ஏன் தமிழகம் முழுவதுமே அது போலத்தான்!.

காங்கிரஸ் மற்றும்  திராவிடக் கட்சிகளின்
இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி மற்றும்  வேலை வாய்ப்புகளை  பெற்ற மக்கள் தங்களை கோவில்களுக்கும்,  பள்ளிகளுக்கும் , அரசு வேலைகளுக்கும் வெளியே நிறுத்திய மன்னன் மார்த்தாண்ட வர்மாவின், பசுக்களுக்கும் பிராமணர்களுக்குமான   ராமராஜ்யத்தை கனவு காண்பதும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேச பயிற்றுவிக்கப் படுவதும் மிகப்பெரிய வரலாற்று முரண்.

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசிய கூட்டத்தினர் இன்று 10 விழுக்காடு உயர்சாதி இட ஒதுக்கீட்டைப் பெற்றது அதைவிட வேடிக்கை.

இன்று குழந்தைகளுக்கு பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படுவதைப் போல திருவிதாங்கூர் அரசரது ஆட்சியில் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கோவில்கள் தோறும் ஊட்டுப்புரைகள் அமைக்கப்பட்டு நாளொன்றுக்கு இருமுறை பிராமணர்களுக்கு மட்டும் சத்துணவு வழங்கப்பட்டது.கோவில் இருக்கும் தெருக்களில் கூட அம்மாவட்டத்தின் மனப்பிறழ்வு கொண்ட உயர்சாதியினரால் பெரும்பான்மையான தீண்டாமை முத்திரை குத்தப்பட்ட மக்கள் அனுமதிக்கப்படவில்லை.

அதே காலகட்டத்தில் 02.03.1809 ஆம் ஆண்டு பிறந்த அய்யா வைகுண்டர்  அனைத்து மக்களையும் சாதி மத பேதமற்று வழிபடவும் உணவருந்தவும்  உருவாக்கிய பதிகளில் ஒன்று அகஸ்தீஸ்வரத்தில் உள்ளது.

1869 ஆம் ஆண்டு சிறையில் இருந்த பிராமணக் கைதிகளுக்கு தீட்டு ஏற்படாமலிருக்க அவர்கள் தினமும் உணவு வேளைகளில் சிறைக்கு வெளியே சென்று சாப்பிடும் வசதி அரசால் செய்து தரப்பட்டிருந்தது.(3)

ஐஏஎஸ் என பொதுவாக அறியப்படும் குடிமை உரிமைப் பணிகளில்  தேர்வானதும் டேராடூன்  பயிற்சியின் ஒரு பகுதியாக பாரத் தர்ஷன் என்றவொரு சுற்றுலா அழைத்து செல்வார்கள் .எந்த வட மாநிலத்திற்கு சென்றாலும் அங்கு கல்வி, சுகாதாரம், குடும்ப நலன், எல்லாவற்றிலும் அவை தமிழகத்தையும் கேரளாவையும் விட  பின் தங்கியிருப்பதைக் கண்டு  தமிழ்நாடு மற்றும் கேரள மாநில பயிற்சிப் பணியாளர்கள் கர்வத்துடன் தலை நிமிர்ந்து கொள்வார்கள்.

‘தமிழக பேச்சாளருக்கும் மைக்குக்கும் இடையே பெரும் சண்டை ஒன்று நிகழும், தன் முன்னால் நிற்கும் ஒலிவாங்கியை ஒரு எதிரியாக நினைத்து உரக்க சத்தமிட்டு அதன் கழுத்தை உலுக்கி, திருகி, நெரித்து  அதைக் கொன்று போட்டு விடப்போகிறார்  என நினைக்கத் தோன்றும்’  என
‘ஊரும் சேரியும்’ என்ற அழகிய தன்வரலாற்று நூலை எழுதிய கவிஞர் சித்தலிங்கையா கூறியிருப்பார்,

இப்போது தமிழகத்தில்  பொய் கதைகளை மூலதனமாக்கி, பெரியாரின் போராட்டங்களை , அதன்  பயன்களை மறுக்கும்,  கவிஞர் சித்தலிங்கையா விவரித்ததைப் போன்ற உணர்ச்சிவச பேச்சாளர்கள் மற்றும் பொலிட்டிக்கல் மெர்சனரீஸ் அல்லது அரசியல் கூலிப்படையினர் , பிகார், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஒரிசா கிராமங்கள் முழுக்க  பாரத் தர்ஷன் சுற்றுலா முடித்து அதன்பின் பச்சைமட்டை அரசியல் பாடம் எடுப்பது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லது.

நல்ல வேளை தமிழ்நாட்டில் திருவாளர்கள்  யோகியோ மோடியோ முதல்வராக இருந்ததில்லை ஒருவேளை இருந்திருந்தால் இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்  தமிழ்நாட்டு  மக்கள் இந்தி படித்த புலம்பெயர் தொழிலாளர்களாக டெல்லியில் இருந்து  தமிழ்நாட்டை நோக்கி நடந்து  இந்நேரம் ஹைதராபாத் அருகே வந்து கொண்டிருப்பார்கள் .

தி.லஜபதி ராய்
23.05.2020

அடிக்குறிப்புகள்

 1. பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு- தொகுதி 16 பக்கம் 515
 2. கன்னியாகுமரி மாவட்ட அறிக்கை 2016
 3. சாமுவேல் மட்டீர் - லாண்ட் ஆஃப் சாரிட்டி
         Land of charity 1871  பக்கம் 75 .

படம் உதவி:திரு.அய்யாசாமி பாண்டியன், அகஸ்தீஸ்வரம்.
1935 ஆம் ஆண்டின் அகஸ்தீஸ்வரம் ஊரின் முதல் ஓட்டுப்புரை.

லஜபதிராய்
முகநூல் பதிவு
நாடார் வரலாறு கருப்பா காவியா நூல் ஆசிரியர்

Thursday, February 06, 2020

இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி...

இராஜராஜ சோழன் ஆட்சி!
பார்ப்பனியத்தின் மீட்சி...👇👇👇
உலகின் மிக உயரமான கோபுரங்களைக் கொண்ட, பழமையான பெருங்கோவில்களில் தஞ்சைப் பெரியகோவிலும் ஒன்று. இன்றிருப்பதைப் போன்ற துரிதக் கட்டுமானப் பொறி நுட்பங்கள் ஏதும் வளர்ந்திராத, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கட்டிடப் பொறியியலில் மாபெரும் சாதனையாகக் கட்டப்பட்டதுதான் இந்தக் கோவில். மழைபெய்தால் நீர்க்கசிவு ஏற்படாதிருக்கப் பதிக்கப்பட்டிருக்கும் நுண்குழாய்கள், ஒரே கல்லினால் ஆன மிகப் பெரும் நந்தி எனப் பல்வேறு பிரம்மாண்டமான பொறியியல் சாதனைகளை எல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்துக் காட்டிய மாமன்னன் ராஜராஜன் போற்றிக் கொண்டாடப்படுகிறான். கூடவே அவனது ஆட்சியும் ’தமிழகத்தின் பொற்கால ஆட்சி’ என்று புகழப்படுகிறது.
தஞ்சைப் பெரியகோவிலின் கலைநுட்பமும், பொறியியல் சாதனையும் மனிதகுல வரலாற்றில் மகத்தான படைப்புகள்தான். அதே போல எகிப்தின் பாரோக்கள் கட்டிய பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும்கூட மனித வரலாற்றின் பெரும் சாதனைகள்தான். எனினும் அவை பொற்காலங்களாகக் கொண்டாடப்படுவதில்லை. கலைத்திறனைப் போற்றுவது என்பது வேறு. அரசாட்சியைக் கொண்டாடுவதென்பது வேறு.
பெரியகோவிலை எழுப்பிய ராஜராஜனின் ஆட்சியில்தான் குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை செழித்திருந்ததாகவும், வேந்தன் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலங்களை அளந்து முறைப்படுத்தி ’உலகளந்தான்’ எனும் பெயர் பெற்றதாகவும் கூறி ’தமிழனின் பொற்கால ஆட்சி’ என கலைஞர் முதல் தமிழினவாதிகள் வரை பலராலும் போற்றப்படுகிறது, ராஜராஜனின் ஆட்சி.
அன்றாடங்காச்சிகளாக வாழும் அப்பாவித் தமிழர்கள் கூட இப்பெருமிதக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ’கடாரம் கொண்டான்’ என்றும் ’சோழ சாம்ராச்சியம்’ என்றும் காதில் கேட்டமாத்திரத்தில் ’நம் தமிழனின் பெருமை’ என்று பெருமிதத்துள் வீழ்கின்றனர்.
வரலாறு நெடுகிலும், மன்னர் ஆட்சி, உழைக்கும் மக்களுக்கு கொடுங்கோல் ஆட்சியாகவே இருந்துள்ளது. இருப்பினும் அம்மன்னர்களின் வரலாற்றுப் பாத்திரம் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அசோகனின் பாத்திரமும் புஷ்யமித்திர சுங்கனின் பாத்திரமும் வேறுவேறுதான். முன்னெப்போதும் இல்லாப் பிரம்மாண்டமாக ராஜராஜன் பெரியகோவிலை எழுப்பியது ஏன்? அக்கற்றளிக் கோவிலின் கம்பீரம் மூலம் அவன் எதைச் சொல்ல நினைத்தான்?
அடிமை உழைப்பிலும் போர்க் கொள்ளையிலும் உருவான பெரிய கோவில்!
ராஜராஜனுக்கு முன்னர் நடுகல் வழிபாடுதான் தமிழ்நாட்டில் பரவி இருந்தது. அக்கம் பக்கமாக குறிஞ்சி (மலை சார்ந்த) , முல்லைப் பகுதிகளில் (காடு சார்ந்த) இருந்த வேளிர் எனும் இனக்குடிகளின் அரசுகளை ஒழித்துக் கட்டி, மருதநிலப் பரப்பில் பேரரசுகள் உருவாக்கம் பெற்ற வரலாற்றுக் காலமே ராஜராஜனின் காலம். தொடர் போர்கள் மூலம் சிற்றரசுகளை நிர்மூலமாக்கி, அவ்வரசுகளின் செல்வங்களை எல்லாம் கவர்ந்து வந்து தன் பேரரசைக் கண்டாலே அனைவரும் அச்சத்தால் உறைந்திடச் செய்யும் மாபெரும் சின்னம் ஒன்றை உருவாக்குவதும், அச்சின்னத்தையே அதிகார மையமாக மாற்றுவதுமே ராஜராஜனின் நோக்கமாக இருந்திருக்கிறது. அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் பெரிய கோவில்.
சங்கம் மருவிய காலத்தின் பின் வந்த களப்பிரர் காலத்தில் வைதீகத்தின் கொட்டம் அடக்கப்பட்டு சமணம் தழைத்தோங்கி இருந்தது. களப்பிரர்களை வீழ்த்திய பாண்டியபல்லவர்கள் காலத்தில் ஆற்றுப்பாசனம் வளர்ச்சி பெற்று வேளாண் உற்பத்தி பெருகியது. சிற்றரசுகள் வீழ்த்தப்பட்டு பெருவேந்தர்கள் உருவாகும் வரலாற்றுக் கட்டத்தைச் சேர்ந்தது சோழர் ஆட்சி. கழுவேற்றி சமணத்தைக் கருவறுத்த சைவத்தின் வெற்றி, ராஜராஜனின் பேரரசு உருவாக்கத்தோடு ஒருங்கிணைந்தது. இக்காலத்தில்தான் சைவக்கொழுந்துகளான வேளாளர்களும் பார்ப்பனர்களும் கூட்டணி கட்டிக் கொண்டு அதிகார மையமானார்கள். இவர்களின் ஆட்சிக்கு பெரியகோவில்தான் மைய அச்சாக இருந்தது.
கருங்கற்பாறைகளே இல்லாததும் காவிரியாறு கொண்டு வந்து சேர்த்த வண்டலால் நிரம்பியதுமான தஞ்சைப் பகுதியில், ஒரு லட்சத்து முப்பதாயிரம் டன் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடம்தான் பெரிய கோவில். கட்டிடக் கலை சார்ந்த நவீன தொழில்நுட்பங்களோ, சாலைகளோ போக்குவரத்து வசதிகளோ இல்லாத அந்தக் காலத்தில் இத்தனை பெரிய கட்டிடத்தைக் கட்டிமுடிக்க, எவ்வளவு மனித உழைப்பு தேவைப்பட்டிருக்கும்? இந்தக் கட்டுமானப் பணியில் எத்தனை பேர் தங்களது உயிரை இழந்திருப்பார்கள்?
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இந்தக் கோவிலை அடிமைகளின் இலவச உழைப்புதான் உருவாக்கியது. தனது ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து போர்கள் நடத்திய ராஜராஜன் போரில் தோற்ற நாட்டு வீரர்களைக் கைதிகளாக்கிக் கொண்டுவந்து அவர்களின் உழைப்பிலேயே இக்கோயிலை எழுப்பினான். போர்க்களங்களில் இருந்து கைதிகளை மட்டுமல்ல, இக்கோவிலுக்குத் தேவையான அனைத்தையும் கொள்ளையடித்துத்தான் கொண்டு வந்தான்.
மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை வென்றபோது கைப்பற்றப்பட்ட செல்வங்களும், ஈழம், கேரளத்தின் தென் பகுதி, ஆந்திரத்தின் தென் பகுதி ஆகியவற்றை வென்று அந்நாடுகளின் கருவூலங்களைக் கொள்ளை அடித்த செல்வங்களும்தான் 216 அடிக் கற் கோபுரமாகியது. மலைநாடு எனப்படும் சேரநாட்டை வென்றபோது எடுத்து வந்த பொன் நகைகளும், பாண்டிய நாட்டை வென்றபோது கொள்ளையடித்து வந்த முத்து, பவளங்களும்தான் பெருவுடையாருக்குரிய நகைகளாயின.
சாளுக்கிய நாட்டிலிருந்து கொள்ளையிட்டு பெருவுடையாருக்கு சொந்தமாக்கப்பட்ட 87.593 கிலோ தங்க நகைகளும், சேர, பாண்டிய நாட்டுக் கொள்ளையில் கிடைத்த 95.277 கிலோ வெள்ளியும் இதில் அடக்கம். ஈழப் போரின்போது கைப்பற்றப்பட்ட கிராமங்கள் பெரிய கோவிலுக்கான வருவாய்க் கிராமங்களாக (நிவந்தம்) விடப்பட்டிருந்தன. இவ்வாறு அண்டை நாடெங்கும் போர்தொடுத்து கொள்ளையடித்த பொருட்களால் உருவானதுதான் தஞ்சைப் பெரியகோவில்.
இக்கோவில் உருவாவதற்காக தென்னகத்தில் தொடர்ந்து ரத்த ஆறு ஓடிக் கொண்டே இருந்தது. காந்தளூர் முதல் ஈழம் வரை இதற்காக ராஜராஜன் படை எடுத்துப் பேரழிவை நடத்தினான். காந்தளூரில் (இன்றைய திருவனந்தபுரத்தின் ஒரு பகுதி) சேரனைத் தோற்கடித்து, உதகை நகர் (கல்குளம் வட்டம்) கோட்டை தகர்க்கப்பட்டு எஞ்சிய நகரெங்கும் தீவைக்கப்பட்டது. இது அவனுடைய மெய்க்கீர்த்தியில் ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி’ என்று சொல்லப்படுகிறது.
அண்மையில் கண்டறியப்பட்ட கல்வெட்டில் இதன் அடுத்த வரி ‘மலையாளிகள் தலை அறுத்து‘ என்றுள்ளதாக முனைவர் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். அடுத்து மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனைத் தோற்கடித்த போரில் நகரங்களைக் கொளுத்தியும், குழந்தைகள் எனக்கூடப் பாராது அனைவரையும் கொன்று வெறியாட்டம் போட்டது சோழர்படை. கன்னிப்பெண்களைக் கைப்பற்றி மனைவியராக்கிக் கொண்டும் அளவற்ற பொருட்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினர்.
ஈழத்தின் மீது படை எடுத்து அந்நாட்டு அரசியையும், அவளுடைய மகளையும் கைப்பற்றி வந்தனர். புத்தசமய நினைவுச் சின்னங்களில் இருந்த பொன்னாலான உருவங்களைக் கொள்ளை அடித்தனர். இந்தப் படையெடுப்பின்போது அனுராதபுரம் நகரை தீவைத்து அழித்தனர். புது நகராக பொலனருவாவை உருவாக்கினர். ஜார்ஜ் புஷ், ஈராக்குக்கு ஜனநாயகம் வழங்கியதைப் போல ஜனநாதபுரம் என அதற்குப் பெயருமிட்டனர்.
நாட்டு மக்களைச் சுரண்டிய பெரிய கோவில் பொருளாதாரம்!
ஆகம நெறிப்படி பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட கோவில்களில் தஞ்சைப் பெரிய கோவிலே முதற்கோவில் என்பர். சைவம் பரப்பும் வேலையை மட்டும் அக்கோவில் செய்துகொண்டிருக்கவில்லை. சோழர்காலத்தின் வட்டிக்கடையாகவும், நில உடைமையாளராகவும், பொற்களஞ்சியமாகவும் அரசின் அதிகார பீடமாகவும் விளங்கியது.
சோழநாட்டின் விளை நிலங்களில் பெரும்பகுதி பெருவுடையார் கோவிலுடன் இணைக்கப்பட்டிருந்தது. குடிகளிடம் இருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு கோவிலுக்கு வசூலிக்கப்பட்டது. கோவில் நிதிக் குவியலில் (பண்டாரம்) இருந்து விவசாயிகள் தமது தொழிற்தேவைகட்கும், பெண்களுக்கு சீதனம் தரவும் கடன் பெற்றனர். பெருவுடையார் கோவில் கணக்கில் இருந்த பல்லாயிரக் கணக்கான களஞ்சு பொன்களும், காசுகளும் பெரும்பாலும் பல ஊராட்சி மன்றங்களுக்கும், சபைகளுக்கும் கடனாகத் தரப்பட்டு 12 சதவீதம் வட்டியாக (பணமாகவோ பொருளாகவோ) வசூலிக்கப்பட்டது.
சிறிய அளவில் நிலம் வைத்திருந்த விவசாயிகட்குக் கடன் கொடுத்து விளைச்சல் இன்மையால் அவர்கள் கடன் கட்டத் தவறிய போது, அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டு பெரியகோவிலுக்கு சொந்தமாக்கப்பட்டன. கடனாளியான விவசாயிகளை கோவில் அடிமைகளாக்கி, அவர்கள் முதுகில் சூட்டுக் கோலால் சூடுபோட்டு, கோவில் நிலங்களில் வேலை செய்ய வைத்தனர்.
பெரிய கோவில் இறைத் திருமேனிக்கு ராஜராஜன் அளித்தது 2.692 கிலோ தங்கமாகும். பெரியகோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து காணிக் கடனாக ஆண்டொன்றுக்கு வந்த நெல் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் கலம். ஆண்டொன்றுக்கு கோவிலுக்கு வந்த வருவாயில் நெல் தவிர பொன், 300 களஞ்சு, காசுகள் 2 ஆயிரம் என நாட்டின் ஒட்டுமொத்த செல்வமுமே பெரியகோவிலில் குவிக்கப்பட்டிருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கென 4 பண்டாரிகள், 116 பரிசாரகர்கள், 6 கணக்கர், 12 கீழ்க்கணக்கர் பெரியகோவிலில் பணி புரிந்தனர். கோவிலுக்கு நெல்லும், பொன்னும் கட்டாயமாகத் தரவேண்டும் என 57 கிராமங்களுக்கு ராஜராஜன் உத்தரவிட்டிருந்தான்.
அன்றாடம் இந்தக் கோவில் இயங்குவதற்கான இலவச உழைப்பும் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இக்கோவிலுக்கு நுந்தா விளக்கெரிப்பதற்காக 400 இடையர்கட்கு ‘ சாவா மூவாப் பேராடுகள்’ எனும் பெயரில் ஆடு, மாடு, எருமைகள் வழங்கப்பட்டன. ‘வெட்டிக் குடிகள்’ என அழைக்கப்பட்ட இந்த 400 பேரும் கோவிலுக்கு விளக்கெரிக்க நாளொன்றுக்கு உழக்கு நெய் கொடுக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது. கோவிலுக்குக் கொடுத்தது போக, இவர்களுக்கு ஆடுமாடுகளிடமிருந்து கிடைத்த உபரியைத் தவிர வேறு சம்பளம் கிடையாது. கால்நடைகளின் எண்ணிக்கை குறையாமல் அவற்றைப் பராமரித்து கோவிலுக்கு நெய் அளக்கும் ‘வெட்டிக் குடி’ (ஊதியம் இல்லா வேலையாட்கள்)களாக அவர்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. நெய் அளக்கத் தவறிய இடையர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வெட்டிக்குடிகளைப் போன்றே பல பெண்கள், பெரிய கோவில் நெல் குற்று சாலையில் சம்பளம் இன்றி வேலை செய்ய அமர்த்தப்பட்டனர். ஆனால், பார்ப்பனர்களுக்கென்று, வேதம் கற்க பாடசாலைகள், உணவு உறைவிட வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டன. இப்பாடசாலை மாணவர்களுக்கு 6 கலம் நெல்லோடு 1 பொன் உபகாரச் சம்பளமாகவும் வழங்கப்பட்டது.
விவசாயிகளுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தும், நிலப்பறிப்புச் செய்தும், அரசு வல்லமையால் வரி தண்டிச் சுரண்டியும்தான் பெரியகோவில் வானுயர்ந்து நின்றது.
பார்ப்பனிய நிலவுடமை ஆதிக்கத்தின் காலம்!
இவ்வாறு பெரிய கோவில் செழித்திருந்த காலத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது?
பார்ப்பனரைத் தவிர அனைத்துத் தரப்பினரும் தத்தம் ஊர்களுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்த காவலுக்கென்று ‘பாடி காவல் வரி’ செலுத்தினர். கைத்தொழில் செய்வோர் ஒவ்வொரு தொழிலுக்கும் வரி (இறை) செலுத்த வேண்டி இருந்தது. நெசவாளர் ’தறி இறை’யும், எண்ணெய் பிழிபவர் ’செக்கு இறை’யும், தட்டார், தட்டாரப்பாட்டத்தையும், தச்சர், ‘தச்சு இறை’யும் வரிகளாகச் செலுத்தினர். மக்களிடமிருந்து புரவு, இரவு, குடிமை, திருமணவரி, போர்வரி எனப் பல வரிகளை அரசு வசூலித்த அதே நேரத்தில், ஊர், சபை போன்ற அமைப்புகளும் தனியாக வரி விதித்தன. இவ்வாறு விதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிடமிருந்துதான் வசூலிக்கப்பட்டன.
விவசாயிகள், விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை வரியாக செலுத்த வேண்டியிருந்தது. அந்த வரிக்குக் ’கடமை’ எனப் பெயரிட்டதன் மூலம் அரசுக்கு நெல் கொடுப்பது உழவர்கள் வாழ்வின் நிரந்தரமான கடமையாக்கப்பட்டிருந்தது. இந்த வரியை செலுத்தத் தவறினால், நிலம் பிடுங்கப்பட்டு, அந்த நிலம் ஊர்ப் பொதுவாக்கப்பட்டது. மக்கள் பலர் பஞ்சத்தாலும் வறுமையாலும் வாடியுள்ளனர். வரிகொடுக்க இயலாதோரின் நிலங்கள் ஈவிரக்கமின்றிப் பறிமுதல் செய்யப்பட்டன. ஊர்களே அதனை விற்று பணத்தை வரியாக (இறை)க் கட்டின. நிலத்தைப் பறித்தல்தான் அன்றைய சமூக அமைப்பில் மிகப் பெரிய தண்டனையாக இருந்தது.
சோழர் ஆட்சிக்காலத்தில் அடிமை முறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக் கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆறு பேர் பதின்மூன்று காசுகளுக்குத் தம்மைப் பெரிய கோவிலுக்கு விற்றுக் கொண்டுள்ளனர். நந்திவர்ம மங்கலத்தில் பதிகம் பாடுவதற்காக 3 பெண்கள் பரிசளிக்கப்பட்டனர். திருவிடந்தைப் பெருமாள் கோவில் எனும் ஊரிலுள்ள ஸ்ரீவராகதேவர் கோவிலுக்கு 12 மீனவர் குடும்பத்தினர் தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டிருக்கின்றனர். இதே போல நெசவாளர்களும் கோவிலுக்கு அடிமைகளாக தம்மை விற்றுக் கொண்டுள்ளனர். இவ்வடிமைகள் தங்களின் தொழில் மூலம் வரும் வருவாயில் களஞ்சுப் பொன், கோவிலுக்குத் தர வேண்டும் என்றும், ஆண்டுக்கு இருமுறை வரும் கோவில் திருநாட்களில் பணிகள் செய்யவேண்டும் என்றும் விதிகள் இருந்தன.
பார்ப்பனர் அல்லாதோரின் பஞ்சாயத்து ஆதிக்கத்திலுள்ள கிராமங்களை ‘ஊர்கள்’ என்றழைத்தனர். ‘ஊர்களின்’ நில உரிமைகளை மாற்றியும், கோவிலுக்குக் குடிகள் கொடுக்க வேண்டிய காணிக்கடனை அதிகரித்தும் ராஜராஜன் கட்டளைப் பிறப்பித்தான்.
தங்கள் தேவைக்கென சிறு அளவில் வேளாண்மை செய்து வந்தவர்களின் நிலங்கள் அவ்வப்போது ஆட்சியாளர் களால் பறிக்கப்பட்டு, அந்த உழவர்களைக் கூலியாக மாற்றியோ (‘குடி நீக்கியா’), குத்தகையாளராக மாற்றியோ (‘குடி நீக்காமலோ’), அவர்களின் நிலங்கள் கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டன.
அரசனுக்கும், கோவிலுக்குமான பங்கான ‘மேல்வாரமும்’, குத்தகைதாரர்களின் பங்கான ‘கீழ்வாரமும்’ எடுக்கப்பட்டபின், ஊர் அறிவித்துள்ள மானியங்களை உரியவர்களுக்குக் கொடுத்த பின்பு எஞ்சியதே உழவர்களுக்குக் கிடைத்தது. இது விளைச்சலில் பத்தில் ஒருபங்கை விடக் குறைவானது. ‘மேல்வார’மாக செலுத்த வேண்டிய விளைச்சல் ஏற்கெனவே அதிகமாக இருந்ததுடன், அடிக்கடி இந்த அளவு உயர்த்தப்பட்டுக் கொண்டே போனதால் உழுபவர்க்குக் கிடைக்கும் பங்கு குறைந்து கொண்டே போனது.
இதனால் நில உடைமையாளருக்கு (கோவில்தான் உடைமையாளர்) அஞ்சி உழுகுடிகள் ஊரைவிட்டு ஓடியுள்ளனர். வரி அதிகமாகப் பிடுங்கியதால் தாங்கள் வெள்ளாமை செய்து குடியிருக்கப் போவதில்லை என மன்னார்குடி மக்கள் எச்சரிக்கையும் விட்டுள்ளனர். சாகுபடி செய்யாது கிடந்த நிலங்களுக்கும் வரி இருந்தது. அதை வசூலிக்கத் தவறிய புன்னைவாயில் எனும் ஊர்ச்சபை தண்டிக்கப்பட்டிருந்தது.
ஊரார் சிலரே வரி நெல்லைக் குறைத்து அளப்பதற்காக, தமது ஊர்நிலத்தில் வரி விலக்குப் பெற்றிருந்த (இறையிலி) நிலங்களின் அளவைக் கூடுதலாகக் கணக்குக் காட்ட முயன்றிருக்கின்றனர். சொந்த நிலமுடையவர்கள் கூட தங்கள் நிலத்தை வரியில்லா நிலங்கள் எனக் கணக்குக் காட்டி அனுபவித்து வந்தனர். கோவிலின் சுரண்டலில் இருந்து எவ்வாறெல்லாம் தப்பலாம் எனத் திட்டமிட்ட குடிமக்கள், மகிழ்ச்சியுடன் வரி செலுத்தி இருக்கக்கூடுமா?
பார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்ற சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின் அவர்கள் நிலங்களை விற்றுவிடச் சொல்லி ராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை ராஜராஜனின் தமக்கை குந்தவை விலைக்கு வாங்கி கோவிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பார்ப்பனர் ஊர்களில் பார்ப்பனரல்லாதோரின் நில உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழுகூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர்.
இவ்வாறு கோவிலைச் சார்ந்து பிறப்பிக்கப்படும் நிலப்பறிப்பு, வரி விதிப்பு போன்ற ஆணைகளை யாரேனும் உழவர்கள் எதிர்த்தால் அவர்கள், ‘சிவத்துரோகி’ எனப் பட்டம் கட்டி அடக்கப்பட்டனர்.
விவசாயத் தொழிலாளர்கட்கு நெல் கூலியாக அளக்கப்பட்டது. நெல் அளப்பவரின் பதவிப் பெயர் ‘கருமி’. இன்றளவும் அச்சொல் மக்கள் மத்தியில் கஞ்சத்தனத்திற்கு மாற்றாகச் சொல்லப்படுவதிலிருந்தே சோழர் காலத்தில் தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் வயிற்றில் அடிக்கப்பட்டிருப்பர் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.
சேரிகள், அடிமை விபச்சாரம்: ராஜராஜ சோழனின் சாதனை!
ராஜராஜன், 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு ‘தேவரடியார்களாக’ மாற்றினான். இப்பெண்கள் கோவிலின் பணிகளோடு நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டனர். இறைவனின் பெயரால் விபச்சாரத்தைப் புனிதமாக்கி தஞ்சையில் ‘தளிச்சேரி’யை உருவாக்கினான். கோவில் அடிமைகளென கட்டாயப்படுத்தி இழுத்து வரப்பட்ட இப்பெண்கள், அரசனின் அந்தப்புரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடுமைகளும் சோழப் பொற்காலத்தில்தான் நிகழ்ந்தன. கோவில் பூசகர்கள், பெருநிலவுடமையாளர்களின் காமவெறிக்குப் பலி கொடுக்கப்பட்ட ‘தேவரடியார்’ குலப் பெண்களின் ஆயிரம் ஆண்டுகாலக் கொடுமையை 1929 இல் சுயமரியாதை இயக்கமும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் போராடி சட்டம் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
‘தமிழ்மறை மீட்டான்’ என சைவக் கொழுந்துகளால் போற்றப்படும் ராஜராஜன், தமிழ்மறைகளை ஒளித்து வைத்துக் கொண்டு சமயக்குரவர் நால்வரும் வந்து கேட்டால்தான் தருவோம் என தில்லை தீட்சிதர்கள் மிரட்டியபோது பம்மிப் பதுங்கி சமயக்குரவர்களின் தங்கச்சிலைகளைச் செய்து அவர்களுக்குத் தானம் தந்து மீட்டானே ஒழிய, தளிச்சேரிப் பெண்டிர் மீது ‘சூடு’ போட்ட ‘வீரத்தை’ தீட்சிதரிடம் காட்டவில்லை. “சமச்சீர் கல்வியை எதிர்த்து போராடுவோம்” என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மிரட்டியபோது ‘செம்மொழிகொண்டானின்’ அரசு ‘அனைத்துத் தரப்பினரின் நலன்களும் காக்கப்படும்’ எனக் கெஞ்சியதே, ராஜராஜன் காட்டியதும் அதே வீரம்தான்.
தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களில் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது. வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில் ஊருக்கு வெளியே தீண்டாச் சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன.
தாழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழல்வதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும், பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது. ராஜராஜனின் பொற்காலம் பற்றிப் பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையைப் பற்றியோ, சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதே இல்லை.
கோவிலை மையமாகக் கொண்ட சோழர் கால அதிகார அமைப்பில் சாதிவாரிக் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டன. பார்ப்பன, வெள்ளாள நிலவுடைமை ஆதிக்க சாதிகள் ஒருபுறமும் விவசாயத் தொழிலாளிகள், அடித்தட்டு உழைப்பாளர் மற்றும் உடைமை,உரிமை அற்ற சமூக அடிமைகளாக கடைச் சாதி தீண்டப்படாதோர் மறுபுறமுமாக சமூகமே பிரிந்து கிடந்தது.
பொற்காலத்தில் கொழித்த பார்ப்பனர்களும், ஆண்டைகளின் ஜனநாயகமும்!
ராஜராஜனின் ‘பொற்கால ஆட்சி’யை அனுபவித்தவர்கள் யார்? தீட்சிதப் பார்ப்பனர்கள் தனக்கு பட்டம் சூட்ட மறுத்ததால் பீகார் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை சோழநாட்டிற்கு அழைத்து வந்து ராஜராஜன் அவர்களைக் குடியேற்றினான். தமிழக மன்னர்களின் வரலாற்றில் முதன்முதலாக ராஜகுரு என்றொரு பதவியை உருவாக்கி, ஈசான சிவப் பண்டிதர் எனும் காஷ்மீரப் பார்ப்பனரை அப்பதவியில் நியமித்தான். பின்னர் பார்ப்பனர்களே இப்பதவிக்கு வருவது மரபாக்கப்பட்டது. ராணுவப் படையெடுப்பு போன்றவற்றை தான் கவனித்துக் கொண்டு, குடிமக்கள் நிர்வாகத்தை ராஜகுருவின் ஆலோசனைக்கு விட்டிருந்தான்.
பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக் கிராமங்கள், கோவில்கள், மடங்கள் ஆகியவை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. 250 ஊர்கள் சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன. இந்தியச் சட்டங்கள் எவையும் செல்லுபடியாகாத இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போன்றே , குற்றவிசாரணைக்காகக்கூட அரசப்படையினர் இத்தகைய ‘மங்கலங்களின்’ உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.
குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை சோழர் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுவது ஒரு இமாலயப்பொய். ஊர்ச்சபைகளைத் தேர்ந்தெடுக்க ஓலைகளில் வேட்பாளர்கள் பெயர்கள் எழுதப்பட்டு ஒரு குடத்துக்குள் அவ்வோலைகள் போடப்படும். பின்னர் குடத்துக்குள் கையை விட்டு எடுக்கப்படும் ஓலையில் வரும் பெயருக்குரியவர் சபைக்குத் தேர்வு செய்யப்படுவார். இந்த திருவுளச்சீட்டு ஜனநாயகத்தில் வேட்பாளராக நிற்பதற்கு வேதம் கற்றிருக்க வேண்டும், நில உடைமையாளராக இருக்க வேண்டும் என்ற இரு தகுதிகள் வைக்கப்பட்டிருந்தன.
வேதக் கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமேயான உரிமையாக இருந்ததால், பார்ப்பன நிலவுடைமையாளர்கள் மட்டுமே ஊர்ச்சபைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதுதான் குடவோலை முறையின் யோக்கியதை. அதுமட்டுமல்ல, நிலவுடைமையாளர்களான பிராமணர்கள் மட்டுமே பெருவுடையார் கோவிலின் நிதி நிர்வாகிகளாக (பண்டாரி) இருக்க முடியும் என்று ராஜராஜன் ஆணை பிறப்பித்திருந்தான்.
பார்ப்பனர்களுக்கு தன் எடைக்கு எடை (துலாபாரம்) தங்கமும், தானியமும் பலமுறை தானமாகத் தந்தான் ராஜராஜன். அதுமட்டுமல்ல, அவனும் அவனது தமக்கை குந்தவையும் தமது ‘பிறவி இழிவு நீங்கி’ சொர்க்கம் செல்வதற்காக, தங்கத்தால் பசுமாடு ஒன்றைச் செய்து, அதன் வயிற்றுக்குள் சென்று வந்த பின்னர், அந்த தங்கப் பசுவை பார்ப்பனர்க்கு தானமாகத் தந்துவிடும் ஹிரண்யகர்ப்ப தானம் செய்தனர்.
மண்ணும் பொன்னும் தந்து பார்ப்பனர்களை மகிழ்வித்த ராஜராஜன், தனது அரசாட்சியிலும் பார்ப்பன நீதிமுறைகளையே பின்பற்றினான். தனது அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்களைக்கூட அவன் தண்டிக்கவில்லை. சோழ எல்லை தாண்டி சேர நாட்டிற்கு நாடுகடத்தினான். “கொலைக்குற்றம் செய்தாலும் பார்ப்பனர்களுக்கு மரணதண்டனை தரக்கூடாது” என்ற மனுதரும விதியைத் தனக்கே பிரயோகித்துக் கொண்ட மன்னன், மக்கள் மீது அவ்விதியை எங்ஙனம் நிலைநாட்டியிருப்பான் என்பதை யாரும் புரிந்துக் கொள்ளலாம்.
சோழநாட்டின் ஊர்களில் நிலம், ஊருக்குப் பொதுவாயினும், அவை கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டு, அதில் வேளாளரின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. விளைநெல்லில் பெரும்பங்கு, குத்தகை உரிமையாகவும் (காராட்சி) கோவிலுக்காக மேற்பார்வை ஊதியமாகவும் (மீயாட்சி) வேளாளருக்கு மட்டுமே கிடைத்தது.
வேளாளர் தம் மேற்பார்வையில் இருந்த நிலங்களில் ‘காராட்சி’, ‘மீயாட்சி’ப் பங்குகளை முன்னிலும் அதிகமாக வசூலித்தபோது பயிரிட்ட குடிமக்கள் கிளர்ச்சி செய்துள்ளனர். இந்த வேளாளர் பங்குகளுக்கு மன்னன் உச்சவரம்பு நிர்ணயிக்காததால், உழுகுடிகளையும் விவசாயக் கூலிகளையும் வேளாளச் சாதியினர் வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்தனர். ராஜராஜனின் காலம் மட்டுமின்றி, சோழர் காலம் முழுவதுமே வேளாளர், பார்ப்பனக் கூட்டணிக்கு பெருவாழ்வைத் தந்த பொற்காலமாக இருந்தது.
களப்பிரர் காலம்: உழைக்கும் மக்களின் பொற்காலம்!
ராஜராஜனது பொற்காலத்தை விதந்தோதும் சதாசிவ பண்டாரத்தாரில் இருந்து கருணாநிதி வரை தமிழக வரலாற்றில் இருண்டகாலமாக ‘களப்பிரர்’ காலமிருந்ததெனக் குறிப்பிடத் தவறுவதே இல்லை. அந்த ‘இருண்டகாலத்தை’ புரிந்து கொண்டால்தான் சோழர் பொற்காலத்தின் மகிமையை விளங்கிக் கொள்ள இயலும்.
களப்பிரர்களின் ஆட்சிக்காலத்துக்கு (கி.பி. 4 முதல் 6 ஆம் நூற்றாண்டுவரை)முந்தைய சங்கக் காலத்தில் (கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை) விவசாய உற்பத்தி வளர்ச்சி பெற்று முற்காலப்பாண்டியர்களின் அரசு உருவாகி வந்தது. நிலவுடைமை என்பது பொதுவில் இருந்த வேளிர்களின் காலம் அது. பாண்டிய ஆட்சியின்போது விவசாயமயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டு விளிம்புகளிலிருந்த இனக்குழு சமூகம் விவசாய விரிவாக்கத்துக்குள் கொண்டுவரப்பட்டு, அவர்களின் உபரி உறிஞ்சப்பட்டது. அவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. பார்ப்பனர்களுக்குத் தானமாக்கப்பட்டன. அரசனுக்கான வரியாக இனக்குழுக்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. இதனை எதிர்த்து கிளர்ந்தெழுந்த இனக்குழு சமூகங்களின் எழுச்சி தமிழகமெங்கும் 300 ஆண்டுகள் தொடர்ந்தது. களப்பிரர் ஆட்சிக்காலமாகக் குறிப்பிடப் படும் காலம் இதுதான்.
இக்காலத்தில் நிலங்கள் மீண்டும் ‘பொது’வாக்கப்பட்டன. பார்ப்பனர்களுக்குத் தானமாகத் தரப்பட்ட நிலங்கள் பறிக்கப்பட்டன. இந்த ‘இருண்ட’ காலத்தில்தான் தமிழிலக்கிய வளர்ச்சி உச்சத்தில் இருந்தது. மணிமேகலை, சீவக சிந்தாமணி, எலி விருத்தம், கிளி விருத்தம், கார் நாற்பது, இனியவை நாற்பது போன்ற இலக்கிய நூல்களும், விருத்தம், தாழிசை போன்ற பாவகைகளும், உரை நூல்களும் உருவாக்கப்பட்டன. தமிழுக்கு வச்சிரநந்தி தலைமையில் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டு தமிழ் இலக்கியம் வளர்ச்சி பெற்றது. வைதீகத்தை வீறுகொண்டு எதிர்த்து, ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று பிரகடனம் செய்த திருக்குறளும் களப்பிரர் காலத்தில்தான் இயற்றப்பட்டது. தமிழகமெங்கும் பவுத்தமும் சமணமும் தழைத்தோங்கியிருந்த காலமும் இதுதான்.
இந்த ‘இருண்டகால’த்தைத்தான் பல்லவர்களும் பாண்டியர்களும் வீழ்த்தினர். இனக்குழுக்களின் பொது நிலத்தை மீண்டும் பறித்து, பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கினர். நிலத்தின் மீது நிலவிய
சோழர் காலம் பொற்காலமா, பார்ப்பனிய மீட்சிக் காலமா?
இன்று கருணாநிதிக்கு சூட்டப்படும் சமத்துவப் பெரியார், வாழும் வள்ளுவர் போன்ற எண்ணற்ற அடைமொழிகளைப் போலவே சோழர்களும் அடைமொழி சூடினார்கள். இன்று கருணாநிதியின் துதிபாடுவதற்காகவே நடத்தப்பட்டும் சொறியரங்குகளைப் போலவே, அன்றைய ‘மெய்க்கீர்த்தி’களும், ‘உலா’, பரணிகளும்தான் சோழர்களைச் சொறிந் தன. வருணாசிரமத்தை கடுமையாக எதிர்த்த திருக்குறளின் பொருளைத் திரிப்பதற்கு சோழர்கள் காலத்தில் பல உரையாசிரியர்கள் தோன்றினார்கள். வேதங்களையும், வேள்விகளையும் கண்டித்து, பிறப்பினால் அல்ல, ஒழுக்கத்தினாலேயே மனிதனுக்கு உயர்வு வரும் என்று கற்பித்த வள்ளுவரின் குறளையே திரித்துப் பரிமேலழகர் எனும் பார்ப்பனர் ‘நால் வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கங்களில் வழுவாது நிற்க’ என்று சோழர்காலத்தில்தான் உரை எழுதினார்.
சோழர் காலத்துக்கு முந்திய நிலையை ஜெயங்கொண்டார் (சோழர் காலம்) கலிங்கத்துப் பரணியில் ‘மறையவர் வேள்வி குன்றி, மனுநெறிக் குலைந்து, சாதிகள் கலப்புற்றதாக’ப் பாடியுள்ளார். இவற்றை எல்லாம் மீண்டும் தலைகீழாக மாற்றி மனுநெறியை நிலைநாட்டியதுதான் சோழர்களின் ‘சாதனை’.
சோழ மன்னர்கள் சிங்களம், மலைநாடு, கங்கம், மாலத்தீவெல்லாம் படையெடுத்துச் சென்று தலை அறுத்துக் கொண்டிருந்தார்கள். தலையறுத்துக் கொள்ளையடித்த பொன்னையும் பொருளையும் கொண்டு, கோவில்கட்டுவதற்காக மக்களைக் கல்லறுக்கப் பணித்தார்கள். சற்சூத்திரர்களின் ‘ஊர்’களும், பார்ப்பனர்களின் ‘பிரம்மதேயங்களும்’ பார்ப்பன ராஜகுருவின் ஆலோசனைக்கும் ஆணைக்கும் கட்டுப்பட்டே இருந்தன. உழுகுடிகளை ஒட்டச் சுரண்ட பெரியகோவிலும் வட்டாரக் கோவில்களும் இருந்தன.
இதனைப் பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே, வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச் சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் யாரும் சிந்தித்து விடாதிருக்க, ‘கங்கை கொண்டான்’, ‘கடாரம் கொண்டான்’ என்று மாற்றான் தோட்டத்தில் தாலி அறுத்து வந்து தமிழ்நாட்டில் கோபுரம் கட்டியிருப்பதை அண்ணாந்து பார்க்கச் சொல்கிறார்கள். நாம் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே நம் காலடி மண்ணை ‘இறையிலி’ ஆக்கி ஏகாதிபத்தியங்களின் ‘மங்கலங்களாக’ மாற்றிக் கொண்டிருக்கிறது, கருணாநிதி அரசு.

Wednesday, February 05, 2020

நீ ஒரு அப்பன் ஆத்தாவுக்கு தான் பொறந்தியா

இந்த பக்தா எல்லாம் டென்சன் ஆனா நீ ஒரு அப்பன் ஆத்தாவுக்கு தான் பொறந்தியானு கிளம்புறாங்க

இயற்கையாகவே அறிவியல் படி இங்கே மனிதன் ஒரு தாய் தந்தைக்கு தான் பிறக்கிறார்கள்

இருந்த போதும் பக்தாளின் ஆர்வத்தை புரிந்து கொண்டு ஒரு அப்பன் ஆத்தாவுக்கு பிறக்காதவர்கள் லிஸ்ட்

விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பிறந்த குழந்தை தான் ஐயப்பன்,ஐயப்பனுக்கு இரண்டுமே தந்தை தான் தாய் இல்லை

ஆக ஐயப்பன் ஒரு அப்பன் ஆத்தாவுக்கு பிறக்காதவர்

பிரம்மனின் மகள் மற்றும் மனைவி இரண்டுமே EDUCATION DEPARTMENT GOD சரஸ்வதி தான் இவருக்கு தந்தை உண்டு தாய் இல்லை

ஆக சரஸக்கா ஒரு அப்பன் ஆத்தாவுக்கு பிறக்காதவர்

தசரதனின் துப்பாக்கி வெடிக்காத காரணத்தால் ராமனின் தாய் பாயாசம் குடித்து விட்டு குதிரையுடன் இரவைக் கழிக்கிறார்

ராமனுக்கு தாய் உண்டு தந்தை இல்லை

ஆக ராமன் ஒரு அப்பன் ஆத்தாவுக்கு பிறக்காதவர்

பார்வதியின் அழுக்கில் இருந்து விநாயகர் பிறக்கிறார் விநாயகர் பிறப்பில் எந்த ஆணுக்கும் தொடர்பு இல்லை

விநாயகருக்கு தாய் உண்டு தந்தை இல்லை

ஆக விநாயகர் ஒரு அப்பன் ஆத்தாவுக்கு பிறக்காதவர்

பாண்டவர்கள் ஐந்து பேரில் ஒருவர் கூட பாண்டுவுக்கு பிறக்கல இவர்கள் ஐந்து பேருக்கும் தாய் ஒன்று தான் ஆனால் தந்தை ஐந்து பேர்

ஆக பாண்டவர்கள் ஐந்து பேரும் ஒரு அப்பன் ஆத்தாவுக்கு பிறக்காதவர்கள்

ஒரு தகவல் தான்

அய்யோ #கிருஷ்ணா ! அரே #கிருஷ்ணா !

அய்யோ #கிருஷ்ணா ! அரே #கிருஷ்ணா !


வீட்ல ராமன், வெளியில கிருஷ்ணன் என்ற தலைப்பில் ஒரு சினிமாப் படம் வந்தது. மனைவிக்கு மதிப்புத் தந்து, பயந்து நடந்து கொள்ளும் ஒருவன், வெளி உலகில் எப்படி பெண் பித்தனாக, வெறியனாக நடந்துகொள்கிறான் என்பதை நடிகர் (சிவக்குமார்) வெளிப்படுத்துவார். இந்தப் படம் தெரிவித்த செய்தி என்ன?



ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழும் மனிதர்கள் ராமனைப் போல எனக் கூறுவார்கள். எல்லா அரசர்களையும் போல, ராமனும் பல மனைவிகளைக் கொண்டிருந்தான் என்பதை வெள்ளி நாக்கு சீனிவாச சாஸ்திரி அம்பலப்படுத்தி உள்ளார் என்பது வேறு செய்தி. இருந்தாலும் ராமன்    மீது அப்படி ஒரு கருத்து உண்டு.

#பதர்போன்ற #பகவான்

ஆனால், கிருஷ்ணன் கதை என்ன? ஒரே சமயத்தில் 9 ஆயிரம் கோபிகையருடன் கலவி செய்த கதையை பாகவதம் கூறும். 9 ஆயிரம் கிருஷ்ணன்களாகிக் கலவி செய்தானாம். 18 ஆயிரம் பேர்கள் ஆணும் பெண்ணுமாக உடலுறவில் ஈடுபட்டதைப் பாகவதம் கூறும் நேர்த்தியை பாகவத மேளா நடத்தும் பார்ப்பனர்கள், பாகவதர்கள், தூர்தர்ஷன், சங்கரா தொலைக்காட்சியில் காலட்சேபம் செய்யும் வேளுக்குடிகள் விவரிக்கும்போது கேட்கும் கிருஷ்ண பக்தர்கள் வாயில் எச்சில் ஒழுகும்.

இதன் பொருள் என்ன? கிருஷ்ணன் எனும் கடவுள் பொம்பளைப் பொறுக்கி என்ற கொச்சை வார்த்தையால் வருணிக்கப்பட வேண்டிய பதர்தானே!

கடவுள் என்ற நிலையில் வைத்து கவுரவிக்க வேண்டிய அளவுக்குத் #தகுதியானவனா?

இப்படித்தான் வாழவேண்டும் என்று அளவுகோல்போல் வாழக் கூடியவர்களுக்கு கடவுள் ராமன் _ எப்படியும் வாழலாம் என்ற இழி பிறவிகளுக்கு உதாரணமான கடவுள் கிருஷ்ணன் என்று கவிஞர் கண்ணதாசன் கூறினார்! அர்த்தமுள்ள இந்துமதம் எழுதியவர் அவர்! முத்தய்யா எனும் தன் பெயர் இருக்க, கண்ணதாசன் என்ற பெயரைச்  சூடிக்கொண்ட கவிஞர். கண்ணன் அவரைக் கவர்ந்ததும் அவர் பெயருக்குக் காரணியாக அமைந்த அவரது தனிவாழ்க்கையும் தனிக்கதை. என்றாலும் அவர் போன்ற ஆத்திகச் சிகாமணிகளால் அற்பன் என்று கூறப்பட்டவன்தானே கிருஷ்ணன்!

#ராதா #அத்தைஅல்லவா?

ராதா கல்யாணம் என்று பாகவதர் காலட்சேபம் நடத்துவார். ருக்மணி கல்யாணம் என்று ஒருவர் பிரசங்கம் செய்வார். பாமா விஜயம் எனப் பாடுவார் ஒருவர். சத்ய பாமா _ ருக்மணி சண்டையைச் சிலாகித்துப் பாடுவார் வேறொருவர். ஜாம்பவதி என்ற மனைவியை அறிந்தவர்கள் சிலரே!

ஒரு ஆணுக்கு இத்தனை மனைவிகளை இணைத்துப் பாடுகிறோமே என்று பாகவதர்களுக்கும் வெட்கமோ குற்ற உணர்வோ கிடையாது. கேட்கும் பக்தர்களுக்கும் அறிவோ, மானமோ கிடையாது என்பது தெரிந்த சங்கதியே!

ஆண்களில் சிலர் ராதாகிருஷ்ணன் என்றே பெயர் வைத்துக் கொள்கிறார்கள். கிருஷ்ணனின் மனைவி பெயரையும் சேர்த்தே தன் பெயராக வைத்துக் கொள்கிறார்கள். அத்தகைய தனிச் சிறப்பு பெற்ற கிருஷ்ணனின் மனைவி ராதா, கிருஷ்ணனின் மனைவியா? கிருஷ்ணன் தாலி கட்டிய மனைவியா? முறையாகக் கல்யாணம் செய்து கொண்ட மனைவியா?

பக்தர்கள் பதில் கூறட்டுமே! கிடையாதே! பின் ராதா யார்? கிருஷ்ணனின் அத்தை! அப்படி இருக்கும்போது, அத்தையை வைத்துக் குடும்பம் நடத்தியவன்தானே கிருஷ்ணன்! கல்யாணம் ஏதும் செய்து கொள்ளாமல், சும்மா வைத்துக் கொண்டவன்தானே கிருஷ்ணன்!

#அடுத்தவன் #மனைவியோடு...

பின் ராதை யாருடைய மனைவி? இருவேறு கதைகள் உள்ளன. ஒன்றில் அபிமன்யுவின் மனைவி. அதை முன்பு பார்த்தோம். அதிரதன் என்பவனுடைய மனைவி என்று இன்னொரு பாரதம் சொல்கிறது! அதிரதன் யார்? வேகமாகத் தேரோட்டும் அதிரதனின் மனைவியாம்! இந்த அதிரதன்தான் கர்ணனின் வளர்ப்புத் தந்தை. திருமணத்திற்கு முன்பே திருட்டுத்தனமாக குழந்தை பெற்ற குந்திதேவி, ஊரார் பழிச் சொல்லுக்குப் பயந்து குழந்தையைக் கூடையில் வைத்து ஆற்றில் விட்டாளாம். அந்தக் கூடையைக் கண்டு, எடுத்து, வளர்த்தவள்தான் ராதை! கர்ணனின் வளர்ப்புத்தாய். வேறு வகையில் கிருஷ்ணனின் அத்தை!

அத்தையோடு குடும்பம் நடத்திய குடிகேடன் கிருஷ்ணன். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்துவரும் ஆணும் பெண்ணும் கணவனும் மனைவியும் எனக் கருதப்படலாமா எனும் வழக்கில் தீர்ப்பு வழங்கிய இந்திய உச்ச நீதிமன்றம் கிருஷ்ணனும் ராதையும் வாழ்ந்த கதையை எடுத்துக்காட்டாகக் கூறித் தீர்ப்பு அளித்துள்ளது.

ராதாகிருஷ்ணன் யோக்யதையைச் சட்டப் பூர்வமாகக் குறிப்பிட்டுக் கூறியிருப்பவர் மற்றொரு கிருஷ்ணன்தான். இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன்!

#பாரதத்தின்வண்டவாளம்

பாரதம் படிக்காத கிருஷ்ணபக்தர்கள், ஆல் இந்தியா லா ரிப்போர்ட் புத்தகங்களையாவது படிக்கட்டும். 18 நாள் பாரதம் படித்தபோது பக்கத்தில் ஆமாம் போடுபவர்களாக இருந்தவர்கள் _ இருப்பவர்கள்தானே கிருஷ்ணனைக் கும்பிடும் பக்தர்கள்! யாருக்கு முழுக் கதை தெரியும்? பெயர் தெரிந்த நான்குபேர் தவிர, மேற்கொண்டு 16 ஆயிரம் பேர் மனைவிகள் என்கிறதே, பாரதம்! அறிவார்களா, இவர்கள்?

15ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் எழுதப்பட்ட பிரம்ம வைவர்த்த புராணக் கதையின்படி, ராதா, கிருஷ்ணனை வளர்த்த தாய் என்று ஆகிறாள். சிறுவன் கிருஷ்ணனை வளர்த்தவள். இவள் வீட்டில் இருந்தபோதுதான் இவன் தீராத விளையாட்டுப் பிள்ளை! வெண்ணெய் திருடித் தின்றது ராதா வீட்டில் வளர்ந்தபோதுதான்! நவநீத (வெண்ணெய்) கிருஷ்ணன் என்ற பெயர் வந்ததே ஆயர்குல ராதையின் வீட்டு வெண்ணெயைத் திருடித் தின்று லீலை செய்ததால்தான்! இத்தகைய லீலா கிருஷ்ணன், தன்னை வளர்த்த தாயையே தாரமாக்கிக் கொண்டான் என்றால்... இந்தக் கேடுகெட்ட கதாபாத்திரம் கடவுளா?
யோசித்துப் பார்க்க வேண்டும்! தாயாக, அத்தையாக இருந்த வயதில் மூத்த பெண்ணைத் தன் மனைவியாக்கிக் குடித்தனம் நடத்திய குணக்கேடன் கிருஷ்ணன்! வங்கதேசத்து மன்னன் லட்சுமணசேனன் (1179-_1209) என்பவனது அரசவைக் கவிஞன் ஜெயதேவ என்பவன் எழுதிய இடையனின் பாடல் எனும் கவிதை ராதாவிடம் எப்படியெல்லாம் கிருஷ்ணன் நடந்துகொண்டான் என்பதைக் கூறும். ராதாவின் முன் குனிந்து அவளது காலைத் தூக்கித் தன் தலையில் வைத்துக் கொண்டாடினான் என்கிறது இந்தக் கவிதை! இப்படியும் ஒரு கடவுளா?

#வஞ்சகன்கிருஷ்ணன்

குடும்ப வாழ்க்கை இவ்வளவு கோளாறுகள் நிறைந்தது என்றால், கிருஷ்ணனைப் பற்றிப் பெருமையாகப் பேசப்படும் பாரதப் போர் பற்றிய கதை நிரம்பவும் வஞ்சகம் நிறைந்தது. பாண்டவர்கள் பக்கம் சாய்ந்து நின்று அவர்கள் போரில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக என்னென்ன செய்தான் என்பது எல்லார்க்கும் தெரிந்ததே. அவற்றை விவரிக்கப் போவதில்லை. போர் முடிந்து, பாண்டவர்கள் வெற்றி பெற்றபிறகு போர்க்களத்தில் நடைபெற்ற கடைசிக் காட்சி பலபேருக்குத் தெரியாத ஒன்று.

அதுதான் அர்ஜூனனை இறங்கச் சொல்லிவிட்டு கிருஷ்ணன் தேரிலிருந்து இறங்கியதும் தேர் எரிந்துபோன காட்சி! அதைத்தான் கடந்த இதழில் நாம் பார்த்தோம்.

தேரே எரிந்து போகும் அளவுக்கு அயோக்கியத்தனம் செய்து போரில் வென்றிருக்கிறோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் தரும் அளவிற்குத்தான் உள்ளது பாரதப் போரை கிருஷ்ணன் நடத்திய யோக்கியதை! இத்தகைய கிருஷ்ணனும் கடவுளா?

ராதா #யார்மனைவி?

வேறொரு கதையின்படி, ராதா அபிமன்யுவின் மனைவி என்கிறது. அபிமன்யுவின் தந்தை அர்ஜூனன். அபிமன்யுவின் தாய் சுபத்திரை. கிருஷ்ணனின் தங்கை சுபத்திரை. தன் தங்கையின் மருமகளைத் தன் தாரமாக்கிக் கொண்டவன்தான் கடவுள் கிருஷ்ணன்!

16ஆம் நூற்றாண்டில் ரூபகோஸ்வாமி என்னும் சைதன்யரின் சீடரால் எழுதப்பட்ட சமக்கிருதக் காவியம் கூறும் கதை இது. பாதராயணனின் பிரம்மசூத்ரத்திற்கு ராமானுஜர் எழுதிய சங்கரரின் தத்துவம் எனும் நூலின் 14ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ள செய்தி இது!

என்னய்யா, குழப்பம் இது! கடவுளின் பெண்டாட்டி பற்றியே இவ்வளவு மாறுபட்ட கதைகள் என்றால்...?

#தங்கையோடு கூட...

கூடுதலாக ஒரு செய்தி. சர்வம் ஜகன்னாதம் என்று வைணவச் சொல்லடை ஒன்றுண்டு. எந்த வித்தியாசமும் இல்லாதது என்று இதற்குப் பொருள் கூறுகிறார்கள். அதனை விளக்க ஒரு கதையையும் கூறுகிறார்கள்.

ஒருநாள் தங்கை சுபத்திரா அண்ணன்  கிருஷ்ணனைப் பார்த்து எல்லாப் பெண்களும் உன்னை விரும்புவதற்கும் உன்னை அடைவதற்கும் என்ன காரணம்? அதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றாளாம். இதைச் சொல்லி விளக்க முடியாது, செய்து காட்டித்தான் விளக்க முடியும் என்று கூறித் தன் தங்கையுடன் உடல் உறவு கொண்டு விளக்கினானாம். அந்தச் செயல் நடந்த இடம் ஜகன்னாத். ஒடிஷா மாநிலத்தில் பூரி எனும் கடற்கரை நகரில் நடந்ததாம். அதனால்தான் அங்கே பெரிய கோவில். அங்கே கிருஷ்ணனுக்கு ஜகன்னாத் என்று பெயர், பூரிஜெகன்னாத் கோவில் முழுவதும், கோபுரம் முழுவதும் அசிங்கமான, ஆபாசமான உடல் உறவுச் சிற்பங்களே!

இந்தக் கோவிலுக்குள் இந்து தவிர பிற மதத்தவர் அனுமதிக்கப்படுவதில்லை. பார்சி மதத்தவரைத் திருமணம் செய்து கொண்டதால் இந்திரா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது அவர் பிரதமராக இருந்தபோதே! இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவராக ஆக்கப்பட்ட பாபாசாகேப் அம்பேத்கர் உள்ளே போக அனுமதிக்கப்படவில்லை. இத்தனைக்கும் அவர் விஷ்ணுவின் மகன் (அரிஜன்) என்றழைக்கப்பட்டார் காந்தியாரால்!

ஆனால் மிலேச்சரான மவுன்ட் பேட்டன் பிரபு அனுமதிக்கப்பட்டார். இந்த லட்சணத்தில் சர்வம் ஜகன்னாதம் என்ன வாழ்கிறது?

ஓ! நான்கு வருணங்களையும் இதே கிருஷ்ணன்தான் படைத்தவனா?

#அவதாரம்அல்ல

படைத்தவன் என்றால் _ கிருஷ்ணன் கடவுளா? கடவுளின் அவதாரமா? விஷ்ணு எனும் கடவுள் இந்து மதத்தின் மூன்று கடவுள்களில் ஒன்று. இந்தக் கடவுள் 22 அவதாரங்களை எடுத்தது என்கிறது புராணம். அவற்றில் 10 அவதாரங்களை மட்டுமே சிலாகித்துப் பேசுவார்கள். அதில் ஒன்று கிருஷ்ண அவதாரம் என்கிறார்கள்.

அது #உண்மையா?

பாரதத்தைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் கும்பகோணம் அத்வைத பண்டிதர், வேதாந்த கேசரி, மகாமகோபாத்யாய, பைங்கா நாடு கணபதி சாஸ்திரி என்பவர். அவரது மொழிபெயர்ப்பு நூல் 1930ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அந்நூலின் 1266ஆம் பக்கத்தில் விஷ்ணுவும் நாரதனும் பேசிக் கொள்ளும் விவரம் உள்ளது. தான் எடுத்த அவதாரங்களைப் பற்றிய விவரத்தை விஷ்ணுவே கூறுவதாக வாசகம். ஓ, நாரத முனியே! என்னுடைய அவதாரங்களைக் கேள். மத்ஸ்யம், கூர்மம், வராஹம், நரசிம்ஹம், வாமனம், பரசுராமன், தாசரதிராமன், பலராமன், புத்தன், கல்கி எனத் தொடர்கிறது. (அத்யாயம் 348)

பரசுராமன் இருக்கிறான். தசரதனின் மகன் ராமன் இருக்கிறான். பலராமனும் இருக்கிறான். கிருஷ்ணனைக் காணோமே!

#புத்தர் அவதாரப் #பித்தலாட்டம்

பலராமனுக்கு அடுத்து புத்தன் வருகிறது. 2,560 ஆண்டுகளுக்கு முந்தைய அரசன் மகனாகப் பிறந்து புத்தராக வளர்ந்து மறைந்து சித்தார்த்தர், கவுதமர் என்றெல்லாம் பெயர் பெற்ற புத்தர் வருவது எப்படி?

புத்தர் அவதாரம் விஷ்ணு எடுத்தது என்பது அண்டத்தையே தூக்கிச் சாப்பிடும் புளுகு அல்லவா? இந்தப் புளுகு கந்த புராணத்திலும் இல்லை என்பது சொல்லடை. அத்தகைய புளுகு மூட்டையான கந்த புராணம் கூட இப்படிப்பட்ட புளுகைப் புளுக வில்லையே!

சரி, கிருஷ்ணன் அவதாரம் இல்லை என்று ஆகிறது. அப்படியானால் அவன் யார்? துவாரகையை ஆண்ட அரசன் என்கிறார்கள். மாடு மேய்த்த இடையர்குல குறும்பன் என்கிறார்கள். எது உண்மை? நிறைய செயல்கள் அவன் மாடுமேய்த்துக் கொண்டிருந்தபோது செய்தவை என்பதாகப் பழங்கதைகள் நிறைய இருக்கின்றன. அதனால்தான் அவன் ஒரு ஜாதிக் கடவுளாகக் குறுக்கப்பட்டு விட்டானோ!

அய்ரோப்பியக் கடவுள், #அரபியக் கடவுள், இந்தியக் கடவுள் என்று நில எல்லைக் கடவுள்கள் (TERRITORIAL GODS) இருப்பதுபோல, ஜாதிக் கடவுள் (SECTARIAN GOD) என்பதாகவும் ஆகிவிட்டதோ, #கிருஷ்ணன்?????????????????

அவர்களைத்தான் கேட்க வேண்டும்!

எரிந்து கொண்டே இருக்கிறது ஈராயிரம் ஆண்டுகளாக...

எரிந்து கொண்டே இருக்கிறது ஈராயிரம் ஆண்டுகளாக...

எது நடந்தாலும் 
பற்றி எரிவது என்னவோ
சேரிகள் தான்.
இன்று நேற்றல்ல
இரண்டாயிரம் ஆண்டுகளாய்.

அரக்கு மாளிகையில்
பாண்டவர்களுக்காக
வைத்த தீயில்
பாண்டவர்கள் சாகவில்லை.
ஐந்து பஞ்சமர்களே
பலியானார்கள்
இது மகாபாரதம்.

குரங்கு வைத்த தீயில்
எரிந்தது எல்லாம் எது?
ஈழத்துச் சேரிகள் தான்
இது இராமாயணம்.

உயிரோடு எரிக்கப்பட்ட
கழுமரத்தில் கொல்லப்பட்ட
பௌத்தர்களும்
சமணர்களும் யார்?
தாழ்த்தப்பட்டவர்களே
இது சைவ வரலாறு.

காஞ்சியிலும்
திருப்பெரும்புதூரிலும்
எரிக்கப்பட்ட ஏழைகள் யார்?
இராமானுஜரால்
பார்ப்பனராக்கப்பட்ட
பறையர்களே.
இது வடகலை வைணவம்.

கண்ணகி மூட்டிய
மதுரைத் தீயில்
கருகிப்போன
தீத்திறத்தார் யார்?
சேரி மக்களே.
இது சிலப்பதிகாரம்.

நந்தன்
ஏன்
நாயனார் ஆனார்?
அது அந்தணர் இட்ட தீ
இது பெரியபுராணம்.

ஈராயிரம் ஆண்டுகளாக
கொலைகளைச் செய்து கொண்டும்
கொல்லாமைப் பேசிக் கொண்டும்
பயணப்படுகிறது ஆதிக்கத்திமிர்.

ஆதிக்க வெறிக்கு
வர்ணங்கள் உண்டு
வர்க்க வேறுபாடுகள் உண்டு.
அவர்ணர்களுக்கு அது ஏது?
அவர்ணங்களா?
ஆம்.
வர்ணமற்றவர்கள்.

சம்புகன்
ஏகலைவன்
நந்தன்
வெண்மணி
மேட்டுப்பாளையம்
தொடர்கிறது.

அடைகாத்த
ஆதிக்கத்திமிர் அகற்றிட
அணிவகுக்கும் காலம்
அருகில் தான்.
அயர்ந்து விடாதீர்கள்.
எரியிடை மூழ்கி அல்ல
எரிதழல் ஏந்தி.

தமிழ் இனக்குழுக்களின் ஆட்சி என்றால் அது களப்பிரர்களின் ஆட்சி.

தமிழ் இனக்குழுக்களின் ஆட்சி என்றால் அது கி.பி.4 ஆம் நூற்றாண்டை தொடங்கி கி.பி.6 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்த களப்பிரர்களின் ஆட்சி.
இவர்களின் காலத்தில் தனியுடமையாக இருந்த நிலங்கள் மற்றும் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் பறிக்கப்பட்டு பொதுவுடமை நிலங்களாக மாற்றப்பட்டன.
தமிழுக்கு சங்கம் அமைக்கப்பட்டு தமிழ் இலக்கியம் வளர்ச்சியில் கவனம் செலுத்தினர்.
வைதீகம் கற்பித்த உயர்வு தாழ்வை எதிர்த்து "பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்’ சமத்துவம் பேசிய திருக்குறளும் களப்பிரர் காலத்தில் இயற்றப்பட்ட ஒன்று.
மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்ற காப்பியங்களும் இவர்களின் காலத்தில் இயற்றப்பட்டது.
தமிழகம் முழுவதும் பௌத்தமும் சமணமும் களப்பிரர் காலத்தில் தழைத்தோங்கியது.
இவர்களின் ஆட்சியை தான் பல்லவர்களும் பாண்டியர்களும் இணைந்து வீழ்த்தினர்.
இனக்குழுக்களின் பொது நிலத்தை கைப்பற்றி மீண்டும் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கினர். நிலத்தின் மீது நிலவிய பொதுவுடைமையை நீக்கியதனாலேயே ‘பொது நீக்கி’ என்று இம்மன்னர்கள் புகழப்படுகிறார்கள்.
உலகம் முழுதும் மன்னர் ஆட்சிகளுக்கு எதிராக மக்களாட்சி மலர செய்து வரலாறு இருக்கிறது.இதற்கு அண்மை உதாரணம் நேபாளம்.
ஆனால் தமிழர்கள் சிந்தனை என்பது தலைக்கீழ்.எங்களுக்கு மக்கள் ஆட்சி வேண்டாம்.மன்னார் ஆட்சி போதும்.ஏனெனில் மன்னார் ஆட்சி என்பது பூலோக சொர்கம் என்பது இவர்களின் கற்பனைவாத கணிப்பு.
மன்னர்கள் கட்டிய கோயில்களை சான்றாக வைத்து அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்குவது தமிழர்களின் தொன்றுதொட்ட பழக்கம். பிம்ப வழிப்பாட்டுக்கு ராஜ ராஜ சோழன் முதல் எம்.ஜி.ஆர்.வரை ஆக சிறந்த சான்று.

Saturday, January 11, 2020

1884-ஆண்டு நெல்லையில் ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் எடுக்கப்பட்ட படம்

1884-ஆண்டு நெல்லையில் ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் எடுக்கப்பட்ட படம், ஒடுக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் தாகத்திற்கு தண்ணீர் குடிக்கிறார். அவருக்கு தருபவர் நீண்ட மூங்கில் தண்டின் மேல் புறத்தில் தண்ணீர் ஊற்ற கீழே வழியும் நீரைக் குடிக்கவேண்டும்.



அன்றைய காலகட்டத்தில் இப்போது உள்ளது போல் எந்த கிணற்றிலும் போய் தண்ணீர் எடுக்க முடியாது, குளத்தில் இறங்கி குளிக்க முடியாது, அடிபம்ப் என்பது எங்குமே இல்லை. அப்படி என்றால் குடிக்க தண்ணீர் எடுக்க என்ன செய்யவேண்டும்.

இதற்கு தமிழகத்தில் என்ன நடந்திருக்கும் என்று புலன்விசாரணை செய்யும் முன்பு உஜ்ஜைனின் 1922-ஆம் ஆண்டு ஒரு ஆங்கிலேயே அதிகாரியின் பதிவில் இருந்து “உஜ்ஜைனில் உயர்ஜாதியினரின் கழிவு நீர் தேங்கும் குழிக்கு அருகே ஒரு குழி வெட்டப்பட்டுள்ளது, அந்தக்குழியில் ஊற்று நீர்(கழிவு தொட்டியில் இருந்து வரும் நீர்) நிரம்பும் வரை காத்திருந்து பானைகளில் பிடித்துச் செல்கிறார்கள். இந்த அழுக்கு நீரை இவர்கள் பயன்படுத்துவதால் இவர்களின் குழந்தைகள் நோயுள்ளவர்களாக உள்ளனர். இவர்களுக்கு அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க டில்லியில் இருந்து கவர்னர் வேண்டுகோள் விடுத்தும் இந்த நாட்டின் (உஜ்ஜைன் ஆங்கிலேயரின் ஆளுமைகுட்பட்ட பகுதி அல்ல) தலைவர் மத சூத்திரத்தின் குறிப்புகளைச் சுட்டிக்காட்டி மறுத்துவிடுகிறார். மனம் வேதனைப்படுகிறது என்று எழுதியுள்ளார்.
இப்போது சங்கிகள் கூறும் ரொட்டிக்காகவும் காசுக்காகவும் மதம் மாறினார்கள் என்பது எந்த அளவிற்கு மோசடியான பொய்கள் என்று தெரியும்

1971ல், 1972ல் நடந்தேறிய அனைவரும் அறிய வேண்டிய மிக இன்றியமையாத அரசியல் வரலாறு.

1971ல், 1972ல் நடந்தேறிய அனைவரும் அறிய வேண்டிய மிக இன்றியமையாத அரசியல் வரலாறு.
ஒன்றிய அரசு நினைத்தால் எப்பற்ப்பட்ட அரசையும், சூழ்ச்சி செய்து, கவிழ்த்து விடலாம். 184 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்தை கூட நிலைகுலைய செய்யவும் முடியும். கபட நாடகத்தை அரங்கேற்றி ஒரு செல்வாக்கு பெற்ற நடிகரைக் கூட தனி கட்சியை தொடங்க வைக்க முடியும் என்பதற்கு கீழ்காணும் பதிவு. சான்று.
-----------------------
23.3.92 இல் தமிழ் வார இதழில் போலீஸ் அதிகாரி மோகன்தாஸ் எழுதி வெளிவந்துள்ள தொடர் கட்டுரையின் ஒரு பகுதியை எழுத்துப் பிசகாமல் அப்படியே தருகிறேன்
ஜூனியர் விகடன்
எஸ் எஸ் வாசன் என்ற
பிரபல காங்கிரஸ்காரரும்
ஜெமினி ஸ்டூடியோ அதிபரும் ஆனந்தவிகடன் நிறுவனமான செல்வாக்குடன் வாழ்ந்து மறைந்த ஒருவரின் புதல்வர் பாலசுப்ரமணியம் அவர்களால் நடத்தப்படும் ஏடு.
அந்த ஏட்டில் போலீஸ் மனிதர்கள் என்ற தலைப்பில் ஒரு தொடர் வெளிவந்து கொண்டு இருக்கிறது
நான் இங்கே குறிப்பிடுவது
13ஆவது தொடராகும்.
போலீஸ் உளவுத் துறை அதிகாரி ஒருவர் அவர் பணியாற்றியபோது நாட்டில் நடந்த சில நடப்புகளையும் விளக்குகிறார் அதைத்தான் வாசகர்களாகிய நீங்கள் இப்போது படிக்கப் போகின்றீர்கள்
அவர் பின்வருமாறு எழுதுகிறார்
எம்ஜிஆரை திமுகவில் இருந்து வெளியே கொண்டுவர ஒரு பெரிய நாடகம் நடத்தினோம்
அந்த நாடகத்தை எப்படி நடத்தினோம் தெரியுமா என்று ஆரம்பித்த
சிஐடி அதிகாரி தொடர்ந்து
சொல்லத் தொடங்கினார்.
எதிர்க்கட்சிகளை உடைப்பதற்கு தேவையான தகவல்களை திரட்டித் தரும் பொறுப்பும் ஒரு சில சமயம் உளவுத்துறையின் தலையில் விழும்
அதைச் செய்ய வேண்டுமானால்
அந்த கட்சியில் உள்ள தலைவர்களுருடைய தனிப்பட்ட வாழ்க்கை அவர்களுக்கு உள்ள
பலம் பலவீனங்கள் கண்டெடுக்கப்படும்
அவர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு போன்ற
புள்ளி விவரங்கள்
இன்டெலிஜன்ஸ் அதிகாரிகளுக்கு
தெரிந்திருக்க வேண்டும்
இல்லையென்றால் ஆழம் தெரியாமல் காலை விட்ட கதையாகும்.
1971 திமுக 25 எம்பிக்களை வைத்திருந்தது.
அரசியலில் கருணாநிதியும் ஒரு சூப்பர் மேனாக இருந்த நேரம்
மாநில சுயாட்சிக் கொள்கையை உரமூட்டி வளர்த்துக் கொண்டிருந்தார் தன்னுடைய மாநிலதில் தான்
சிறப்பான ஆட்சி என்று முழங்கினார் இந்த குரல்கள் எல்லாம்
பிரதமர் இந்திரா காந்தி
காதிலும் விழுந்திருந்தன
தமிழ்நாட்டைச் சுற்றி உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் தான் ஆண்டது தமிழ்நாடு மட்டும் ஒரு தீவாக திமுகவின் கையில் இருந்தது.
திமுகழக எம்பிக்களின் ஆதரவு
இந்திரா காந்தியின் அரசுக்கு
அப்போது தேவைப்பட்டது
அதே சமயத்தில் கருணாநிதி
தன் கைக்குள் இருக்க வேண்டும்
என்றும் நினைத்தார் இந்திரா காந்தி
இதற்கு என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தார்
திமுகவை உடைத்துவிட்டால் தான் அந்தக் கட்சி காங்கிரஸ் உதவியை தமிழ்நாட்டில் நாடும்
என்று முடிவெடுத்தார்.
அதற்கான வேலையை செய்ய இன்டெலிஜென்ஸ்
உயர் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்
உதவிக்கு காங்கிரஸ் பிரமுகர் ஒருவரும் அனுப்பப்பட்டார் அந்த காங்கிரஸ் பிரமுகர் இன்டலிஜன்ஸ் அதிகாரியோடு உட்கார்ந்து திட்டம் போட்டார்
எனக்கு கூட அப்போது வேறு மாநிலத்தில் தான் பணியில் இருந்தது
ஆனால் தமிழக அரசியல் தெரியும் என்பதால் எனக்கு
ஸ்பெஷல் ட்யூட்டி போட்டிருந்தனர்.
திமுகவில் முக்கிய புள்ளிகள் யார் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தபோது
என் கண்முன் எம்ஜிஆர் தான் முன்னணியில் இருந்தார்.
அதனால்தான் அவரை
திமுகத்திலிருந்து இழுக்க
நாங்கள் முயற்சி செய்தோம்.
அப்போது ஏராளமான படங்களில்
நடித்து கொண்டிருந்தார் எம்ஜிஆர் வருமானமும்அதிகமான இருந்த நேரம்
இதைக் கருத்தில் கொண்டு
வருமான வரி அதிகாரிகள்
அடுத்து வருவாய் கண்காணிப்பு அமலாக்க பிரிவு என்று
எல்லா அதிகாரிகளையும்
எம்ஜிஆர் வீட்டை முற்றுகையிட்டு குடைந்து எடுக்க வைத்தோம்
அப்போது அவர் ஒரு சினிமா படப்பிடிப்பு சம்பந்தமாக வெளிநாடு சென்று வந்திருந்தார்
அதற்கான கணக்கு வழக்குகளை விசாரித்தார்கள்
ஆனால் இதற்கெல்லாம்
பெரும் பின்னணி இருப்பது
எம்ஜிஆருக்கு தெரியாது.
இந்த சமயத்தில் எம்ஜிஆருடன் பேச என்னை அனுப்பினார்கள்
நான் போன போது எம்ஜிஆர் மிகவும் சோர்வாக இருந்தார்
நானே வழியே பேசி பிரச்சினைகளை சமாளிக்க டெல்லி போய் இந்திராகாந்தியை பாருங்க எல்லாம் சரியாய்ப் போய்விடும் என்று
யோசனை சொன்னேன்
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டார் எம்ஜிஆர்
பிறகு நானே முக்கியமான காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் பெயரைச் சொல்லி அவர் மூலமாக அம்மாவை மீட் பண்ணுங்க என்று கூறி வழி காட்டிக் கொடுத்தேன்
அதன்படி எம்ஜிஆர் அந்த காங்கிரஸ் பிரமுகர் மற்றும் தன் வழக்கறிஞரிடம் சென்று பிரதமரை சந்தித்தார்
சந்திப்பு நடந்து எம்ஜிஆர் உற்சாகமாக திரும்பினார்
இப்படித்தான் மெதுமெதுவாக தொடங்கி திமுகவில் உட்பூசல் உண்டாக்கி கடைசியில் 1972ல் எம்ஜிஆரை திமுகவிலிருந்து வெளியேற்ற வைத்தோம் என்று முடித்தார்
அந்த போலீஸ் அதிகாரி.
ஜூனியர் விகடன் வார இதழில் வந்துள்ள இந்த உண்மையை
20 ஆண்டுகளுக்கு முன்பு
நானும் திமுக தலைவர்களும்
பல ஆதாரங்களுடன்
மக்கள் மன்றத்தில் எடுத்துவைத்த போது இப்படியும் இருக்குமா என்று
எங்களை மூர்க்கத்தனமாக எதிர்த்தனர்
ஆனால் உண்மை 20 ஆண்டுகள் கழித்து சாட்சியுடன் வெளிவந்துள்ளது.
நெஞ்சுக்கு நீதி தொடரிலிருந்து
அண்ணன் Napa Mc.
_____________________
இது ஏதோ முரசொலியில் பதிவானது அல்ல. 'நான் ஏன் பிறந்தேன்' என்று தொடரை கொடுத்த ஆனந்த விகடன் குழுமத்தில் இருந்து வரும் ஜூனியர் விகடனில் வெளியானது.
உண்மைத்தன்மை நிறைந்திருக்கும். ஏனெனில் எழுதியவர் அரசியல்வாதி அல்ல. எழுதிய நேரத்தில் திமுக சட்டமன்றத்தில் 1 இடம் மட்டுமே வென்ற அரசியல் கட்சி.
கணக்கு வழக்குகளை கொடுக்க வேண்டிய பொருளாளர் எவ்வாறு கணக்கு கேட்பார் என்ற அடிப்படையே தெரியாத அறியாதவர்கள் அதிகம் வாழ்ந்த காலம் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்கவில்லை.
நிறைவாக, ஆளும் ஒன்றிய அரசு நினைத்தால் எந்த ஒரு நடிகரையும் கட்சியோ, மய்யமோ, மன்றமோ, இயக்கமோ தொடங்கி வைக்க முடியும்.
பெரும் பலம்வாய்ந்த ஒரு இயக்கத்தை தகர்க்க, ஆட்சியில் வராமல் தடுக்க எல்லா அரசியல் சித்து விளையாட்டுகளை அரங்கேற்றிக் கொண்டிருக்க முடியும்.
அன்று அந்த விவரமறியாத தமிழ்ச் சமூகம் ஏமார்ந்தது. இன்று நிச்சயம் ஏமாராது என்பதனை ஒவ்வொரு தேர்தலிலும் தமிழக மக்கள் உணர்த்தி உள்ளனர்.மீண்டும் உணர்த்துவார்கள்.