Monday, September 04, 2017

அவுங்கதான் நமக்கு கல்வி கொடுப்பாங்க

உன்னோட பிளஸ் டூ கட் ஆஃப் என்ன”
”278”
”எந்த காலேஜ்ல படிச்ச”
“ஆர்.ஈ.சி திருச்சில”
“278 க்கு எப்படி ஆர்.ஈ.சி திருச்சி கிடைச்சது”
“எனக்கு பிசி கோட்டா உண்டு அதுல கிடைச்சது”
“சூப்பர். பிசி கோட்டான்னா என்ன அது ஏன் வந்துச்சுன்னு தெரியுமா?”
“தெரியாது”
“அந்த வாய்ப்ப ஏற்படுத்திக் கொடுத்ததுக்கு பின்னாடி அம்பேத்கர் மாதிரி ஆட்களோட உழைப்பும் தியாகமும் இருக்கு தெரியுமா”
“யாரு அம்பேத்கர்?”
”அம்பேத்கர் தெரியாதா உனக்கு”
“தெரியாது. நான் படிச்சேன். நான் ஆர்.ஈ.சி போனேன். நா நல்லா சம்பாதிக்கிறேன். இதுல ஏன் அம்பேத்கர் பத்தி தெரிஞ்சிக்கனும் சொல்லு. எதுன்னாலும் சட்டுன்னு சொல்லு. நாளைக்கு சரஸ்வதி பூஜை. நான் பூஜைக்கு சாமான் செட்டு வாங்கிட்டு வீட்டுக்கு போகனும்”
“சரஸ்வதி பூஜை எதுக்கு கொண்டாடுற?”
“என்ன நீ.. அம்பேத்கர் அது இதுன்னுட்டு தேவையில்லாத எல்லாம் பேசுற. ஆனா சரஸ்வதின்னா யாருன்னு தெரியாதுங்கற. சரஸ்வதிதான் நம்ம கல்விக்கு கடவுள். அவுங்கதான் நமக்கு கல்வி கொடுப்பாங்க”
“இப்பதான் நீ படிச்சே நீ அர்.ஈ.சி போனேன்னு சொன்ன”
“அது நான் படிச்சாலும் சரஸ்வதி கடாட்சம் இல்லாம ஆர்.ஈ.சிக்குள்ள போயிருக்க முடியுமா”
“ஸோ நீ ஆர்.ஈ.சிக்குள்ள போனதுக்கு காரணம், அம்பேத்கர் இல்ல சரஸ்வதின்னு முழுமையா நம்புற”
“ஆமா சரஸ்வதி தேவிதான் கல்விக்கு அதிபதி”
“அப்ப அந்த சரஸ்வதி தேவி ஏன் உன் தாத்தாவுக்கு கல்வி கொடுக்கல, பத்மநாபன், பார்த்தசாரதி தாத்தாவுக்கு மட்டும் கல்வி கொடுத்தாங்க. அப்படி நினைச்சிப் பாத்தியா. அப்ப எப்பத்துல இருந்து உனக்கு கல்வி கிடைக்க ஆரம்பிச்சது, அதுக்கான வாய்ப்ப யாரெல்லாம் ஏற்படுத்திக் கொடுத்தா யோசிச்சியா”
“இதப்பாரு எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் சரஸ்வதி பூஜைக்கு சாமான் வாங்கனும். போய் புத்தகங்களுக்கெல்லாம் மஞ்சள் கரைச்சி பிள்ளையார் சுழி போடனும். நிறைய வேலை இருக்கு. நா போறேன்”
“சரி போடா இந்திய குடிமகனே போ. ’கலைவாணி நின்கருணை தேன்மழையே பாடிகிட்டே போ’” நல்லா இரு...சமூக அறிவு உனக்கு நிறைய இருக்கு... நீ கலக்கு..