Thursday, January 17, 2019

பார்ப்பனர்களின் கையில் அகப்பட்ட தயிர் சோத்தைப் போல வதைபடும் இந்திய ஊடகங்களின் ethics

"ஏழைங்க, மிடில் க்ளாஸ்ட்ட புடுங்கி இப்படி பணக்காரங்க கிட்ட கொடுக்கிறியே... நீயெல்லாம் உருப்படுவியா?" என்கிற தொனியில் அந்த பாஜககாரர் மோடியிடம் லைவ் நிகழ்ச்சியில் கேள்வி கேட்டுவிட்டார். பதில் சொல்ல முடியாமல், "ச்சலியே புடுச்சேரி கோ வணக்கம்," என நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஓடிவிட்டார் மோடி. இது நாமெல்லாம் காணொளியில் கண்ட உண்மை சம்பவம்.
இச்சம்பவத்தை, "மோடியை ஓட விட்ட பாண்டிச்சேரி பாஜககாரர்," என ஏதாவது செய்தித்தாளில் செய்தி பார்த்தீர்களா?
ஆனால் துபாயில் ராகுல்காந்தியை திணறடித்த சிறுமி என்கிற செய்தியை இவர்களாகவே உருவாக்கி, நடக்காத ஒரு செய்திக்கு ஏதோ ஒரு சிறுமியின் புகைப்படம் ஒன்றை எடுத்து மார்ஃப் செய்து வெளியிட்டிருக்கிறது தினமலர், தினகரன் உள்ளிட்ட பத்திரிக்கைகள். இதை பொய் என பிபிசி செய்திவெளியிட்டவுடன் தினகரன் மட்டும் மன்னிப்பு வெளிட்டுள்ளது.
மோடியை மாற்றினாலோ, பாஜகவை மாற்றினாலோ நிரந்தரமாக எதுவும் மாறாது. பார்ப்பனர்களின் கையில் அகப்பட்ட தயிர் சோத்தைப் போல வதைபடும் இந்திய ஊடகங்களின் ethics சரிசெய்யப்பட்டால் மட்டும்தான் உண்மையான ஜனநாயகத்தை உருவாக்க முடியும். இல்லையென்றால் எல்லாமே கேலிக்கூத்துதான்.

Wednesday, January 16, 2019

தமிழர்களே... பார்ப்பனர்கள் உங்களைப் போல முட்டாள்கள் அல்ல

இந்த தடவையும் ஸ்டாலின் அவ்ளோதானா? இந்த வாட்டியும் திமுக வேடிக்கை பாக்க வேண்டியதான் போல... என்றெல்லாம் நக்கல் அடிக்கும் மூளைச் சலவை செய்யப்பட்ட தமிழர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கும். ஏதோ திமுக ஆட்சிக்கு வருவது திமுகவுக்கு மட்டுமே நன்மை பயக்கும் ஒன்று என்கிற கருத்து ஒழுங்காக சுத்தம் செய்யப்படாத பொதுக் கழிப்பிடத்தைப் போல அவர்கள் மூளையில் செருகி வைக்கப்பட்டிருக்கிறது. ஏதோ ஜெயலலிதா இருந்தபோது இதைச் சொன்னால் கூட பரவாயில்லை. ஆனால் எடப்பாடி காலத்திலும் எப்படி இவர்களால் சொல்ல முடிகிறது? நீட் மூலம் நம் குழந்தைகளின் படிப்பு முற்றிலும் போய்விட்டது. இன்று இட ஒதுக்கீட்டையும் கண்முன் களவாடிக் கொண்டுவிட்டார்கள். அடுத்து கட்டாய இந்தித் திணிப்பைக் கொண்டு வருகிறார்கள்.
வரலாற்றில் எப்போதாவது இப்படி தங்களுக்கு முழுச்சாதகமாக அமையும் அரசை வைத்து தங்கள் இனத்துக்கு என்னவெல்லாம் நல்லது செய்துகொள்ள முடியுமோ, திராவிட இனத்துக்கு என்னவெல்லாம் தீங்கு செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டுவிட்டார்கள். முன்காலத்தில் திராவிடர்களுக்கும் இப்படி முழுச்சாதகமாக ஒரு அரசு அமைந்தது.


அது வி.பி.சிங் அரசு. அதை வைத்து தனது மாநிலத்தில் இருக்கும் தன் இனத்துக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் அடுத்தடுத்து பல நன்மைகளைச் செய்துகொடுத்தார் கலைஞர்.கருணாநிதி.
ஆனால் நமக்கோ நன்றி என்பது துளியும் இல்லை. எவனோ கொளுப்பெடுத்து எவனையோ கொல்லப்போக, நாமோ கலைஞரையும் ஆட்சிக்கு வரவிடவில்லை. வி.பி.சிங்கையும் ஆட்சிக்கு வரவிடவில்லை.
ஆனால் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் தமிழர்களே... பார்ப்பனர்கள் உங்களைப் போல முட்டாள்கள் அல்ல. தங்களுக்கு நன்மை செய்யும் அரசை மீண்டும் மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்த்த என்ன்ன்ன்ன்ன வேண்டுமானாலும் செய்வார்கள். எதை வேண்டுமானாலும் ஆதரிப்பார்கள். அமித்ஷா மகனின் வருமானம் 16000 மடங்கு உயர்ந்ததே எவனாவது வாயைத் திறந்தானா? ஆனால் உதயநிதி திருவாரூரில் நிற்கப்போகிறார் என்பதை கடுமையாகப் பரப்பி நம்மையெல்லாம் அதையே பேசவைத்து ஏதோ அது ஒன்றுதான் நாட்டில் பிரச்சினை போல மடைமாற்றுவார்கள். ஆனால் அமித்ஷாவின் கொள்ளுப்பேரன் தேர்தலில் நின்றாலும் தங்கள் வேலை நடக்கும்வரை பார்ப்பனர்கள் எந்தக் கூச்சமும் இன்றி ஓட்டு குத்துவார்கள்.
ஆனால் நாமோ, cbse சிறந்தது, சமச்சீர் மட்டம் என்று திரும்பத் திரும்பச் சொன்னால் நம்புவோம். நீட் கல்வித்தரத்தை உயர்த்தும் என்றால் நம்புவோம். எட்டு லட்சம் சம்பாதிக்கும் உயர்சாதி ஏழைகள் பாவம்தானே என்றால் நம்புவோம். அதிமுக நீட் தேர்வுக்கு சொம்படிச்சா என்னப்பா, நமக்கு உதயநிதி தானே முக்கியம். தினகரன் பாஜக கதவுகளை எல்லாம் தட்டித் தட்டி சோர்ந்துபோன ஆளாக இருந்தால் என்ன, டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றினால் என்ன? எந்த வித கூச்சமும் நாச்சமும் இன்றி நாம் அவரை ஆதரிப்போம். ஏன்? ஏனென்றால் நமக்கு திமுவை பிடிக்காது. பொடனியில் அடித்ததைப் போல உண்மையைச் சொல்லும் பல திமுககாரர்களைப் பிடிக்காது. ஆஹா... எவ்வளவு அழகான நடுநிலை அரசியல்!!
என்றாவது ஒரு பார்ப்பனன் நடுநிலை அரசியல் பேசி, உட்டோப்பிய கனவு கண்டு, தூய்மைவாதம் பேசி பார்த்திருக்கிறீர்களா? வாருங்கள் வாக்கு போடாமல் இயக்க அரசியல் மட்டுமே செய்வோம் எனப் பேசி பார்த்திருக்கிறீர்களா? மாட்டவே மாட்டார்கள். உங்களை பேசவைப்பார்களே தவிர அவர்கள் பேச மாட்டார்கள். ஆயிரம் விமர்சனங்கள் ஒரு கட்சியின் மீது இருந்தாலும் தங்கள் இனத்துக்கு எந்தக் கட்சியால் அதிகபட்ச நன்மை இருக்குமோ அந்தக் கட்சிக்கு ஓட்டை குத்துவார்கள். அதுமட்டுமல்ல, அந்தக் கட்சிதான், அந்த நபர்தான் நாட்டுக்கே நல்லது, எல்லோருக்கும் நல்லது, சர்வரோக நிவாரணியே அந்தக் கட்சிதான் என சிரமம் மேற்கொண்டு பரப்பி வெற்றி அடைவார்கள். மோடி என்கிற 3% பணக்காரர்களுக்காகவும், 4% பார்ப்பனர்களுக்காகவும் மட்டுமே உழைக்கும் ஒரு அடிமையை ஒட்டுமொத்த இந்தியா தலையிலும் கட்டி வைத்தார்களே அதைப்போல!!
ஈழமாயையை கட்டமைத்து ஜெயித்தார்கள். 2ஜி எனும் கட்டுக்கதையை கட்டி ஜெயித்தார்கள். நீட்டில் ஜெயித்தார்கள். ஜி.எஸ்.டியில் ஜெயித்தார்கள். இதோ இட ஒதுக்கீட்டிலும் ஜெயித்துவிட்டார்கள். நாளை இந்தி திணிப்பிலும் ஜெயிப்பார்கள். இதிதெலாம் பெரும்சோகம் அவர்கள் நாடாளுமன்றத்தில் ஜெயிப்பது அல்ல. தமிழக மக்கள் மனங்களிலும் இதையெல்லாம் சரி என உணர வைத்து ஜெயிப்பதே பெருஞ்சோகம். அதுதான் நமக்கும், நம் குழந்தைகளுக்கும் சரிசெய்ய முடியாத பேரிழப்பை கொடுத்துவிட்டுப் போகப்போகிறது.
எதையெல்லாம் பலநூறு ஆண்டுகள் போராடிப்பெற்றோமோ அதையெல்லாம் ஐந்தாண்டுகளில் சரசரவென இழந்திருக்கிறோம். அதுவும் நம் முழு ஒத்துழைப்புடன். இது எல்லாமே காலம் காலமாக, எதெல்லாம் பார்ப்பனர்களுக்கு நல்லதோ அதுதான் நாட்டுக்கும் நல்லது, எதெல்லாம் பார்ப்பனர்களுக்கு கெட்டதோ அதெல்லாம் நாட்டுக்கும் கெட்டது என்கிற பரப்புரையை மட்டுமே மையநோக்காகக் கொண்டு இயங்கிவரும் பார்ப்பன ஊடக அமைப்பு எனும் கண்ணுக்கு தெரியாத கோயபல்ஸ் அமைப்பினால் சாத்தியப்பட்டிருக்கிறது.
பெரியார் மிகத்தெளிவாக சொல்கிறார். "வாக்கு அதிகாரத்தை பயன்படுத்த பார்பனர்களிடம் இருக்கும் தெளிவு நம் மக்களிடம் இல்லை. அதனால் சுலபமான வழி ஒன்று உண்டு. பார்ப்பனர்கள் யாரை எதிர்க்கிறார்களோ அவர்களை ஆதரியுங்கள். பார்ப்பன ஊடகங்கள் யாரை வில்லன்களாக சித்தரிக்கிறதோ அவர்களை கண்ணை மூடிக்கொண்டு ஆதரியுங்கள். இது ஒன்றுதான் வழி," என்கிறார்.
ஆனால் நமக்குள் இருக்கும் விபீடணர்களோ பார்பனர்களுடன் சேர்ந்துகொண்டல்லவா நம்மை காட்டிக்கொடுக்கிறார்கள்!!! நம் மக்களை முட்டாள்கள் ஆக்குகிறார்கள். மாடுமேய்க்க வைக்கிறேன் என்கிறான் ஒருவன். படிப்பெல்லாம் ஒன்றுமே இல்லை. தூக்கிப்போட்டு இயக்க அரசியலுக்கு வா என்கிறான் இன்னொருவன். திமுகவும், அதிமுகவும், பாஜகவும் ஒன்னுதான் சார் என்கிறான் இன்னொருவன். தாங்கள் ஆளும் மாநிலத்தில் கைரிக்‌ஷாவைக் கூட ஒழிக்க முடியாத ஒருவன் ரிக்‌ஷாவையே கிட்டத்தட்ட ஒழித்துவிட்ட தமிழ்நாட்டுக்கு பாடம் எடுக்கிறான்.
இனியும் அறிவின்மைமிக்க ஒரு பேரினமாக வாட்சப்களையும், ஆமைக் கறிக்கதைகளையும், யாருக்கும் ஓட்டுப்போடாதீர்கள் விஷத்தையும், பார்ப்பன பொய்ப்பிரச்சாரங்களையும் பருகிக்கொண்டே இருந்தோமேயென்றால் சிறுகச் சிறுக சேர்த்துவைத்ததை எல்லாம் கூட துடைத்து வழித்துவிட்டுப் போய்விடுவார்கள். அரசியல்/சமூகப் புற்றுநோயின் இறுதி ஸ்டேஜில்தான் திருந்துவேன் என்கின்றவர்களை யாரால் என்ன செய்ய முடியும்!!!
ஆனால் நேத்து கேட்டதே ஒரு குரல், "இதென்ன அநியாயமா இருக்கு," என்கிற குரல். அது ஒற்றைக் குரல் அல்ல. அது பெரியாரின் கைத்தடியில் இருந்து எழுந்த சத்தம். அண்ணாவின் பேனாவிலிருந்து எழுந்த சத்தம். மெரினாவில் இருக்கும் கலைஞரின் ஒருநொடி டில்லியில் எழுப்பிய பெருங்கோபம். அது ஒன்றுதான் ஒளிக்கீற்று. அது ஒன்றுதான் விமோசனம். அது ஒன்றுதான் விமோசனம்!

check source

Tuesday, January 15, 2019

நமக்கு கிடைத்த வள்ளுவராண்டின் வரலாறு

ஹிச்டாரிக்கல் பிகராக (வரலாற்று சித்திரம்) அதாவது ரத்தமும் சதையுமாக நிஜமாக வாழ்ந்த மனிதர் என ஒரு பிரபலம் அறியப்பட அவரது இருப்பிற்கான பிஸிகல் எவிடென்ஸ் கிடைக்கவேண்டும். உதா: அவரது சவபெட்டி, எலும்புகூடு முதலானவை
பல சமயங்களில் அத்தகைய எவிடென்ஸ் கிடைப்பது கிடையாது (உதா: ராஜராஜ சோழன்). அத்தகைய சமயங்களில்
அவரை பற்றி அவர் வாழ்ந்த காலத்தில் எழுதபட்ட நூல்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், பாடல்கள் மூலம் அவரைபற்றி அறியலாம். அவர் ஹிஸ்டாரிகல் பிகர் என்ற முடிவுக்கு வரலாம்.அவர் வாழ்ந்த காலத்து வரலாற்று ஆசிரியர்கள் அவரைபற்றிய குறிப்பு எழுதி இருப்பார்கள். உதா: அலெக்சாந்தர் காலத்து வரலார்று ஆசிரியர் காலிஸ்தனிஸ் அவரது வாழ்க்கை வரலாறு குறித்து எழுதியுள்லார். அலெக்சாந்தர் படையெடுத்து சென்ற நாடுகள் முழுக்க அவரது வரலாறு பதிவாகியுள்ளது.
வள்ளுவரை பொறுத்தவரை:
மேலே சொன்ன எந்த ஆதாரஙக்ளும் நம்மிடம் கிடையாது. நம்மிடம் இருப்பவை மிக பிற்காலத்தில் எழுதப்பட்ட வள்ளுவமாலை, வள்ளுவர் கோயில், சிலை, அவர் பற்றி நிலவும் தொன்மகதைகள் ஆகியவையே
வள்ளுவர் ஆணா,பெண்ணா, அரசரா, துறவியா, அவர் வயது என்ன, என்ன தொழில் செய்தார், எங்கே பிறந்தார் என எத்தகவலும் நம்மிடம் கிடையாது. நம்மிடம் இருப்பது அவரது திருக்குறள் எனும் நூல் மட்டுமே. அதில் அவர் தன்னை பற்றிய எக்குறிப்பையும், தன் பெயர் வள்ளூவன் என்பதையும் கூட கொடுக்கவில்லை.
திருவள்ளுவரின் உண்மையான பெயர் என்ன? வள்ளுவர் என்பது அவரது பெற்றோர் அவருக்கு வைத்த பெயரா? பட்ட பெயரா? ஜாதி பெயரா?
தெரியாது...அவர் பல்வேறு உரை ஆசிரியர்களால் பல்வேறு பெயர்களில் அழைக்கபடுகிறார், நாயனார், தேவர், மாதானுபாங்கி, பெருநாவலர் இப்படி பல பெயர்களில் அழைக்கபடுகிறார். இதில் எப்படியோ திருவள்ளுவர் எனும் பெயர் பரவி நம்மிடையே தங்கிவிட்டது. முதல்முதலாக அச்சொல் எந்த நூலில் காணப்படுகிறது, அந்நூலின் ஆசிரியர் யார் என்ற ஆய்வை செய்யவேண்டும். அதுபோல் திருக்குறள் உரை ஆசிரியர்கள் கால ஆய்வையும் செய்யவேண்டும்.
இவற்றுக்கான பிஸிகல் எவிடென்ஸ் எதுவும் நம்மிடம் இல்லை. திருக்குறள் எனும் நூல், அந்த நூல் வேறு எந்த எந்த நூல்களில் கோட் செய்ய்படுகிறது, அவற்றின் காலம் என்ன என்பதை வைத்து தோராயமாக குறள் எழுதபட்ட நூற்ராண்டை கணிக்க முடியும். அத்தகைய ஆய்வுகள் நிகழ்ந்து உள்ளன. ஆனால் வள்ளுவர்/தேவர்/நாயனார்/நான்முகன் எனும் அந்த நூலின் ஆசிரியர் பற்றி வேறு எதுவும் நமக்கு தெரியாது. நம்மிடம் இருப்பவை அவர் குறித்த தொன்மங்கள் மட்டுமே.
ஆக தொன்மங்கள், நூல் இவற்றை வைத்து மட்டுமே வள்ளுவர் நிஜமாக வாழ்ந்த மனிதர்/ இங்கே வாழ்ந்தார் என எதையும் கண்டறிய முடியாது.
ஆனால் திருக்குறள் என்ற நூல் ஒன்று இருக்கிறது. அதை எழுதியவர் யாரோ இருக்கவெண்டும் அல்லவா என கேட்கலாம்.
ஆமாம். திருக்குறள் என்ற நூல் உள்ளது. அதை எழுதியவர் வள்ளுவர் என்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம்மிடயே உள்ள தகவல். இதற்குமேல் எதுவும் தெரியாது. யாரோ எழுதி இருக்காமல் அந்த நூல் உருவாகி இருக்காது. அது இருவரா, ஒருவரா, பலர் சேர்ந்து எழுதினார்களா, காலவெள்ளத்தில் தொகுக்கபட்ட பழமொழிகளின் தொகுப்பா..எப்படி வேண்டுமனாலும் இருக்கலாம். ஆனால் நூலின் நடை, ஒழுங்கு ஆகியவற்றை வைத்து ஆராய்கையில் அதை பலர் சேர்ந்து எழுதினார்கள் என சொல்ல இடமில்லை.
இதுதான் நமக்கு வள்ளுவர் பற்றி தெரிந்தது. வரலார்றில் நாம் மிக வீக். பல சங்கபாடல்களை எழுதியவர் பெயர் கூட தெரியாமல் பாடலின் முதல்வரியை அவருக்கு பெயராக சூட்டி விடுகிறோம்.
அதே சமயம் தமிழக அரசு திருவள்ளுவர் பிறந்தநாள் ஜனவரி 15 31 பி.சி என அறிவித்துள்ளது,
இந்த நாளில் வள்ளுவர் பிறந்தார் என நமக்கு எப்படி தெரியும்?
1935ம் ஆண்டுவாக்கில் சென்னையில் "திருவள்ளுவர் திருநாட் கழகத்தினர்" என்ற அமைப்பு ஒன்று உருவாகிறது. அந்த அமைப்பின் தலைவர் மறைமலை அடிகளார். அவரும் இன்னபிற தமிழ அறிஞர்களான சுப்பையாபிள்ளை, கண்ணுசாமி பிள்ளை முதலானோர் திருவள்ளுவர் நாள் ஒன்று கொண்டாட வேண்டும் என முடிவெடுக்கின்றனர். அதன்பின் பச்சையப்பன் கல்லூரியில் அன்றைய சென்னை ராஜதானி அமைச்சர்களான முத்தையா முதலியார், தெய்வநாயகம் பிள்ளை முன்நிலையில் "வள்ளுவர் பிறந்தது கிமு 30" "வள்ளுவர் நாள் என்பது மே 18" என மறைமலை அடிகள் அறிவிக்கிறார். அதற்கு எந்த ஆதாரமும் அவர் கொடுக்கவில்லை. யாரும் கேட்கவும் இல்லை, காரணம் வள்ளுவர் நாள் என்ற நாள் ஒன்றை தேர்ந்தெடுத்து அன்று தமிழ்நாடெங்கும் வள்ளுவர் தின கொண்டாட்டங்களை செய்யவேண்டும், உணவிடவேண்டும் என்பதே அதன் நோக்கம். அதன்பின் ஒட்டுமொத்த திருவள்ளுவர் திருநாள் கழகமும் மயிலை வள்ளுவர் கோயிலுக்கு சென்று வழிபடுகிறது. அக்கோயிலில் வைகாசி அனுஷ நட்சத்திரதன்று வள்ளுவர் தினம் கொண்டாடபடுகிறது. அதன் அடிபப்டையில் மே 18 எனும் நாள் தேர்ந்தெடுக்கபட்டிருக்கலாம்.
அதன்பின் 1963ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு (எப்ரல் 14) அன்று திருவள்ளுவர் விழா ஒன்றில் அறிஞர் அண்னாவும், பக்தவத்சலனாரும் கலந்துகொள்கிறார்கள். அகூட்டத்தில் வள்ளுவர் தினமாக ஜூனில் இருந்து ஜூலைக்குள் ஏதோ ஒரு நாள் அறிவிக்கபடவேண்டும் என வேண்டுகோள் விடபட்டு அன்றைய தமிழக அரசும் ஜூன் 2 நாளை வள்ளுவர் தினமாக அறிவிக்கிறது. அதை தேர்ந்தெடுக்க ஸ்பெஷல் காரணம் எதுவும் இல்லை.
அதன்பின் 1971ல் கலைஞர் முதல்வர் ஆனபின் வள்ளுவர் பிறந்தது தை 1 என சொல்லி, வள்ளுவர் பிறந்தநாளை ஜனவரி 15, கிமு 31 ஆக அறிவித்து வள்ளுவர் ஆண்டை உருவாக்குகிறார். அதற்கு சொல்லபட்ட காரணம் தமிழருக்கு தனி ஆண்டு முறை வேண்டும் என்பது. பொங்கல் சமயத்தில் துவக்குவது பிராக்டிகலாக இருக்கும் என்பதாலும் மாற்றி இருக்கலாம். மறைமலை அடிகள் தலைமையில் 1921ல் நடந்த அறிஞர் குழு ஒன்று தை 1 தான் வள்ளுவர் பிறந்தார் என அறிவித்ததாக கலைஞர் கூறினார்.
ஆக வள்ளுவரை அடைப்படையாக வைத்து நமக்கு கிடைத்த வள்ளுவராண்டின் வரலாறு இதுவே