Saturday, May 12, 2018

அமேரிக்க வாழ்தமிழர்களும் ஆர்கேநகர் வாக்கார்களும்

அமேரிக்க வாழ்தமிழர்களும் ஆர்கேநகர் வாக்கார்களும்
சசிகலா ஏற்படுத்திய அதிமுக அரசு கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம், வழிகாட்டல் என எல்லாமுமாக இருந்து நடத்திய ”மெரினா புரட்சிக்காக” (?!?!) குடும்பம் குடும்பமாக வார இறுதியில் picnic/போராட்டம் நடத்தி facebookஇல் பொங்கோ பொங்கென்று பொங்கிய அமேரிக்க வாழ் தமிழ் அறிஞர்கள் எல்லோரும் தமிழ்நாட்டில் பெண்பத்திரிக்கையாளர்கள் அனைவரும் படுத்து தான் சம்பாதிக்கிறார்கள் என்று எழுதிய பதிவர் அதே அமேரிக்காவில் தங்கள் மத்தியில் வாழ்ந்தும் அவருக்கு எதிராக முகநூல் கண்டனம் தெரிவிப்பதைக்கூட கவனமாய் தவிர்க்கிறார்கள். ஆனால் அந்த ஆபாச பதிவை பகிர்ந்த எஸ் வி சேகரை எதிர்த்து நீதிமன்றம்வரை சென்று வழக்கு நடத்திக்கொண்டிருக்கும் ஏழை இளம் தமிழ் பத்திரிக்கையாளர்கள் பலருக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். குறிப்பாக இந்த செயல்களால் அவர்களின் இப்போதைய வேலை மட்டுமல்ல எதிர்கால வேலைகளும் மோசமாக பாதிக்கும். இருந்தும் செய்கிறார்கள். வெளிநாடு வாழ் தமிழர்களின் அறச்சீற்றத்தின் ஆழ அகலத்துக்கு இது ஒரு உதாரணம்.
அதைவிட கொடுமை தமிழ்நாட்டின் ஏழை எளியமாணவர்களின் எதிர்கால மருத்துவக்கனவை இல்லாமல் செய்து, அனிதாக்களின் அகாலமரணத்துக்கு காரணமான முழுமுதல் குற்றவாளி, அதிமுக தலைவி ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக எதிர்த்த நீட்டை ஒப்புக்கொண்டுவந்த தமிழ்நாட்டின் முதலாவது அமைச்சர், எர்ணாகுளம் என்ன அமெரிக்காவிலா இருக்கிறது என்று வாய்க்கொழுப்போடு எகத்தாளம் பேசியவர், மத்திய ஆர்எஸ்எஸ் பாஜகவின் எடுபிடியும் ஏவலாளுமான அரசியல் வியாபாரி, கட்சிமாறி தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை கூப்பிட்டு சிறப்பு செய்வதும் இதே அமேரிக்க பேரறிஞர் கும்பல் தான். கும்பல் என்கிற வார்த்தையை அதன் பொருள் புரிந்தே இங்கே பயன்படுத்துகிறேன்.
சில எதிர்ப்புக்குரல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்தாலும் மெரினா பொய்புரட்சியை காரணம் காட்டி குடும்பரீதியாக வார இறுதி சுற்றுலா எதிர்ப்பு காட்டிய அளவோடு ஒப்பிட இப்போதைய எதிர்ப்பு ஒன்றுமே இல்லை. அத்தோடு விட்டாலும் பரவாயில்லை. இந்த கேவலத்தை அரங்கேற்றும் அமேரிக்க வாழ் தமிழர்களின் அமைப்பை எதிர்த்து லேசாக முணுமுணுப்பவர்களுக்கு எதிராக புதுவித வியாக்கியானம் ஒன்றை இவர்கள் முன்வைக்கிறார்கள். அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வருவதை நாங்களும் விரும்பவில்லை. ஆனால் அதற்காக அவரை அழைத்து சிறப்பு செய்யும் அமேரிக்கவாழ் தமிழ் அமைப்புகளை எதிர்க்கக்கூடாது என்கிறார்கள். எப்பேர்கொத்த வாதம்?!?!? இதெல்லாம் சராசரி மனிதர் புரிந்துகொள்ள முடியாத தனித்துவமான அரசியல் சந்தர்ப்பவாதங்களிலேயே ஆனப்பெரிய சந்தர்ப்பவாதம்.
இது தான் அமெரிக்க வாழ் தமிழர்களின் அரசியல், அறச்சீற்றத்தின் லெட்செணம். இவர்களுக்கும் 20 ரூபாய் நோட்டுக்கு டிடிவி தினகரனுக்கு ஓட்டுபோட்ட ஆர் கே நகர் வாக்காளர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. குறைந்தது ஆர் கே நகர் வாக்காளர்கள் ஏழ்மை என்றொரு சாக்கு சொல்லிக்கொள்ள முடியும். மாஃபா பாண்டியராஜனையெல்லாம் கூப்பிட்டு தம் மேடையேற்றி அங்கீகரித்து பாராட்டி மகிழும் அமேரிக்கவாழ் தமிழர்களுக்கும் தமிழறிஞர் கும்பலுக்கும் அப்படியான எந்த சாக்குபோக்கும் இல்லை. அன்றன்றைய அரசுகளை அண்டிப்பிழைப்பது என்கிற சந்தர்ப்பவாதத்தின் மொத்த உருவங்கள் இவர்கள். நாளை ரஜினியையும் கமலையும் மட்டுமல்ல ஆர் கே நகர் 20 ரூபாய் நோட்டு புகழ் டி டி வி தினகரனைக்கூட கூப்பிட்டு சிறப்பு செய்வார்கள். அதற்கும் ஒரு வியாக்கியானம் சொல்வார்கள். அறிஞர்களல்லவா?
போர்க்காலத்தில் மனிதநேயம் முற்றாக செத்துப்போய் இருந்தத்தும் வன்னி மக்கள் சந்தித்த பேரவலங்களுக்கு காரணமாக இருந்தது. இன்றுவரையிலும் நாம் போலியான அல்லது பக்க சார்பு மனிதாபிமானிகளாகவே இருக்கின்றோம்
20.04.2009 வவுனியா மெனிக்பாம் வலையம் 3 மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழியதொடங்கியது. இறுதி போர்க்களத்தில் ஒரு முக்கியமான மாற்றம் நிகழ்ந்தால் ஏற்பட்ட சன நெருக்கடி அது.. அம்பலவன்பொக்கணை பகுதியில் உள்ள புலிகளின் முன்னரங்க பகுதிகளை படையினர் கைப்பற்றியதன் மூலம் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளில் மக்கள் மீதான புலிகளின் கட்டுப்பாட்டையும் முற்றாக உடைத்திருந்தனர். .இப்போது மக்களிடம் இரண்டு தெரிவுகள் எஞ்சியிருந்தன.
1.சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றுவிடல்.
2.வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு பின்வாங்கி சென்ற புலிகளுடன் செல்லுதல்.
( ஆனாலும் வலைஞர் மடத்தில் கரையாம் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு த்ங்களை செல்லுமாறு புலிகள் அடித்து உதைத்ததாக அங்கிருந்த கிருஸ்தவ தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் ஐ.நா வுக்கு கூறினார்கள் என்பது வேறு கதை)
அந்த பகுதியில் இருந்த வன்னி மக்களில் கிட்டதட்ட 104,868 பேர் மெனிக்பாம் வலையம் 3 அன்றய தினம் வந்து சேர்ந்திருந்தனர். ஒரே நாளில் மிக அதிகமானோர் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் சென்றது இதுவே முதலும் கடைசியுமாக இருந்தது. தமது மனிதாபிமான இராணுவ நடவடிக்கையில் மீட்கப்பட்ட கடைசி தொகுதி மக்களாக இராணுவம் இவர்களை கருதி இருக்க வேண்டும்.
ஏனெனில் இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விடயம் இருந்தது. அதுநாள் வரை இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு மக்கள் தப்பி சென்றுவிடாமல் இரும்புகரம் கொண்டு அவர்களை கையாண்ட புலிகள் அதனை தொடர்ந்து செய்ய முடியாத நிலையில் கைவிட்டு பின்வாங்கி முள்ளிவாக்கால் பகுதிக்கு சென்றிருந்தனர். அனேகமான கட்டாயமாக பிடித்து செல்லப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள்கூட மக்களோடு மக்களாக தமது உறவினர்கள் துணையுடன் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றனர். அதிகளவில் புலிகளும் இராணுவத்தினரிடம் சரணடைந்ததும் இச்சந்தர்ப்பத்தியேலே. புலிகளின் முக்கிய உறுப்பினர்களான தயா மாஸ்டர், ஜோர்ஜ் போன்ரவர்கள் கூட இந்த மக்களுடன் வெளியேறி இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர். கிட்டதட்ட 15 லெப்டினண்ட் கேணல் தரம் வழங்கப்பட்ட புலிகளின் இயக்க உறுப்பினர்கள்,04 வைத்தியர்கள், பத்து வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவம் உடைய புலிகள் உட்பட 700 மூத்த புலிகள் உறுப்பினர்கள், அரசு படைகளிடம் சரணடைந்தனர்.
சுமார் 22000-25000 பேர் மாத்திரமே முள்ளிவாய்க்கால் பகுதிக்கு புலிகளுடன் இணைந்து இடம்பெயர்ந்ததுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர், ஐ.நா, சர்வதேச செஞ்சிலுவை சங்கம், பாதுகாப்பு படைகள், வவுனியா-முல்லைதீவு அரச செயலகம் போன்றவற்றினரால் கணிக்கப்பட்டது இவ்வாறு முள்ளி வாய்க்காலுக்கு சென்றவர்களுக்காகவே மெனிக்பாம் வலையம் 4 அமைக்கப்பட்டது..இவர்களில் சுமார் 18000 ( சரியான எண்ணிக்கையை படைதரப்பு கூறவில்லை) பேர் வரையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மெனிக்பாம் வலையம் 4க்கு இராணுவத்தினரால் கொண்டுவந்து விடப்பட்டனர். 14.05.2009 ல் சுமார் 3000 பேரும் 15.05.2009 அன்று சுமார் 15000 பேரும் இராணுவத்தினரால் வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து அழைத்துவரப்பட்டு மெனிக்பாம் வலையம் 4ல் தங்கவைக்கப்பட்டனர். கிட்டதட்ட 3000 பேர்வரையில் காயமடைந்த நிலையில் சிகிட்சைக்காக வவுனியா வைத்தியசாலை உட்பட வேறு சில இடங்களில் சேர்க்கப்பட்டிருந்தனர். மிகுதி பேர்களுக்கு என்ன நடந்து எனபது இதுவரை வெளிப்படையாக தெரியாத ஒன்றாக இருக்கின்றது. இவர்கள் ஒன்றில் போரில் கொல்லப்பட்டிருக்கலாம், அல்லது காணாமல் போய் இருக்கலாம், அல்லது வெளிநாடுகளுக்கு தப்பி சென்றிருக்கலாம். அல்லது வேறு எங்காவது தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம். 15.05.2009க்கு பின்னரும் வெளியேறாமல் முள்ளிவய்க்காலில் இருந்தவர்களை புலிகளாகவே தாம் கருத வேண்டியுள்ளதாக அரசு படைகள் ஐ.நா மற்றும் இராஜதந்திர வட்டாரங்களுக்கு கூறினர்.
பெரும்பாலான மக்களுடன் இணைந்து 20.04.2009ல் போர்களத்தில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு தப்பி செல்லாமல் மிக மோசமான கொலைக்களமாக மாறப்போகின்றது என்று தெரிந்தும் இவர்கள் ஏன் முள்ளிவாய்க்காலுக்கு சென்றனர்?
முள்ளிவாய்க்காலுக்கு இடம்பெயந்து சென்றவர்களில் மூன்று வகையினர் அடங்கியிருந்ததாக கருதப்படுகின்றது.
1.புலிகள் இயக்க முக்கிய உறுப்பினர் குடும்பத்தினர்-உறவினர்கள்.அவர்களுடன் இணைந்து தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருந்தவர்கள்.
2.இலங்கையின்ல் பல்வேறு குற்றசெயல்களுடன் தொடர்புடையதாக கருதப்பட்டது கைதாவதில் இருந்துது தப்பிப்பதற்காக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் தஞ்சமடைந்தோர்.
3.புலிகளால் கட்டாயமாக பிடித்து செல்லப்பட்டு இதுவரையிலும் தப்பித்து வராமல் இருக்கும் தங்கள் பிள்ளைகளை தேடி சென்றோர்.
இதனால்தான் அரசுபடைகளும் சர்வதேச சமூகமும் முள்ளிவாய்க்காலை கண்டுகொள்ளாமல் இருந்தனரா? இன்றுவரையும் இருக்கின்றனரா?
பதில் சம்மந்தப்பட்டவர்களுக்கும் கடவுளுக்கும்தான் தெரியும்.

படம் 1- 12.05.2009ல் வெளியேறியவர்கள்.

படம் 2- 14.052009 ல் வெளியேறியவர்கள்.

Friday, May 11, 2018

முப்பாட்டன் கல்லறை எங்கேடா?அரண்மனை எங்கேடா?

எங்கோ முட்டுசந்தில் அங்கிள் சைமன் அங்கு அவசத்திற்கு ஒதுங்கியவனிடம் சில கேள்விகளை கேட்டிருக்கின்றார், அதை ஒளிந்திருந்து கேட்ட தும்பிகள் சாடுகின்றன‌
எப்படி?
ராஜராசோழன் கல்லறை எங்கேடா? அரண்மனை எங்கேடா? பாண்டிய நெடுஞ்செழியன் பால் குடித்த சங்கு எங்கேடா? எம் முப்பாட்டன் குலசேகரன் மகிழ்ந்திருந்த அரண்மனை எங்கேடா என ஒரே சத்தம்
இதையாவது சகித்துவிடலாம் என்றால் அடுத்து கேட்பதுதான் பழனிச்சாமிக்கே கோபம் வரும் கேள்வி
கஜினி முகமதுவினை 17 முறை விரட்டிய ராஜ ராஜ‌ சோழனுக்கு இங்கு எங்கிருக்கின்றது அரண்மனை என்கின்றார்கள்
கஜினி எங்கு வந்தான்? ராஜ ராஜ சோழன் எங்கிருந்தான்? இருவரும் கனவிலும் சந்தித்தவர்கள் இல்லை
கஜினி மாபெரும் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி அல்ல, அவ்வப்போது இந்தியாவில் ஊடுருவி கொள்ளை அடித்துவிட்டு திரும்பிய கொள்ளைக்காரன்
அவன் பெரும் சாம்ராஜ்யம் அமைத்து ஆண்டதாக சரித்திரமில்லை, கொள்ளை அடித்துவிட்டு தப்புவது அவன் ஸ்டைல்
அதுவும் ஆப்கன், பஞ்சாப் லாகூர் காஷ்மீர், குஜராத் என அவன் அட்டகாசம் இருந்ததே தவிர தஞ்சாவூருக்கு எப்பொழுது வந்தான்?
இவர்களாக அள்ளிவிடுவது
முதலில் தமிழர்களுக்கு கல்லறை அமைக்கும் பழக்கமே கிடையாது, உயிர்விட்ட உடன் சுட்டுவிட வேண்டும் என எரிக்கும் பழக்கமே இருந்தது, அதுவும் சாம்பலையும் கரைத்துவிடுவார்கள்
இதில் எங்கிருந்து ராஜ ராஜனுக்கு சமாதி, பாண்டியனுக்கு சமாதி?
பண்டைய ஆலயங்கள் கோவில் என அழைக்கபட்டன, கோ என்றால் அரசன், காப்பவன் அவனின் இல்லம் கோவிலானது
பாண்டிய, சோழ , மன்னர்கள் கோவிலில் ஒரு பகுதியில்தான் அவை நடத்தினார்கள். மீனாட்சி அம்மன் ஆலயம் அதற்கு சான்று
தஞ்சாவூர் பெரிய கோவில் அகழி போன்ற அமைப்புடன் காணப்பட அதுவே காரணம்,
ஊரை சுற்றி கோட்டையும், கோட்டைக்குள் ஆலயத்திற்குள் வசித்தவர்கள் தமிழக மன்னர்கள், அவர்களுக்கு அரண்மனை இல்லை
பின் வந்த நாயக்கர்களும், மராட்டியர்களும் கட்டிகொண்டனர்
சேரர்கள் வித்தியாசம், பின்னாளில் சீன தொடர்பு கிடைத்தபின் அவர்கள் கட்டகலை சீனாவின் பாணியில் அமைந்தது
இன்றும் கூர்ந்து பாருங்கள் கேரள ஆலயமும், அரண்மனையிலும் சீன கூரை சாயல் தெரியும்
சேர சோழ பாண்டி மன்னர்களில் சோழருக்கும், பாண்டியருக்கும் கல்லறை இல்லை, எல்லாம் எரித்துவிட்டு சாம்பலை கரைத்த கதை
சேரரும் அப்படியே
இங்கு சோழன் கல்லறை, பாண்டியன் அரண்மனை என தேடிகொண்டிருப்பதெல்லாம் மகா மோசடி, அப்படி ஒன்று இல்லை
ஆனால் ஒரே ஒரு சேர மன்னனுக்கு கல்லறை உண்டு, ஆனால் இங்கல்ல மெக்காவில்
ஆம் இங்கு இஸ்லாம் 7ம் நூற்றாண்டிலே பரவியது, கேரள சேரமன்னன் சேரமான் பெருமான் என்பவனே முதலில் இஸ்லாமினை ஏற்று மதம் மாறியவன்
இந்தியாவில் முதல் மசூதி அவனாலே கேரளாவில் கட்டபட்டது
மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்டவன் அங்கேயே இறந்தான், அவன் கல்லறை இன்றும் அங்கு உண்டு
முப்பாட்டனுக்கு உள்ள ஒரே கல்லறை அதுதான்
வேண்டுமானால் தும்பிகள் சவுதி அரேபியா சென்று, "இது முப்பாட்டன் கல்லறைடா, விடுங்கடா, நாம் தமிழர்னு பெயர் போடனும்ன்டா, புரட்சிடா, இயக்கம்டா" என கத்தட்டும் பார்க்கலாம்
( ராஜராஜன், பாண்டியன் என கத்தும் தும்பிகளும் சைமனும் ஜெயலலிதாவிற்கு ஏன் மணிமண்டபம் என கேட்கவில்லை அல்லவா?
இதுதான் அவர்களின் தமிழ் உணர்வு, போர்களம்
மெதுவாக காதோரம் ம. நடராசனுக்கு நினைவு மண்டபம் கட்டுவோமா என கேளுங்கள், உடனே கண்களை சிமிட்டியபடி "சரி சரி" என்பார்கள்.)

நாங்க ஐயர்ன்னு பேர் போட்டா

நாங்க ஐயர்ன்னு பேர் போட்டா
அவுங்கள பறையர், பள்ளர்ன்னு சாதிப்பேர பேரு பின்னாடி போட்டுக்க சொல்லுங்க.
நாங்க நாடார், தேவர்,முதலியார், நாயுடு,நாயக்கர்ன்னு பேரு போட்டா அவுங்கள அவுங்க சாதிப்பேர போட்டுக்கோங்க. ஏன் அவுங்க சாதி போட்டுக்கிறதுல இவ்வளவு தாழ்வு மனப்பான்மை. கம்பீரமா அதை போட்டுக்க வேண்டியதுதான.
இது மாதிரியான எண்ணங்களை என்னளவில் சாதி இந்துக்களை விட பிராமின்ஸ் பேசி கேட்டிருக்கிறேன்.
அடிப்படையாக பார்த்தால் சட்டென்று பார்த்தால் இதில் ஒரு லாஜிக் இருப்பதாக தெரியும்.
என் வீட்டில் என்னால் முடிந்த உணவை என் உணவு என்று உண்கிறேன். நீ உன் வீட்டு உணவை இதுதான் என் உணவு என்று உண்ண வேண்டியதுதானே.
ஏன் கூனி குறுகுகிறாய். இப்படி யோசிக்கும் போது மேலே சொன்ன அவரவர் சாதிப்பெயரை பின்னால் போட்டுக் கொள்வது சரியென்று தோன்றும்.
ஆனால் அப்படி இல்லை.
சாதரணமாக இப்படி ஒரு பிராமின் கல்லூரி மாணவருக்கு எழும் இந்த சந்தேகத்தை எப்படி தீர்ப்பது என்பதற்கு கிடைத்த வாய்ப்புதான் காந்தி மண்டபத்தில் இருக்கும் மதிப்பிற்குரிய இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் பெயர்களை ஆராயும் வாய்ப்பு.
ஒரு எலுமிச்சை சர்பத் குடித்து விட்டு காந்தி மண்டபத்தில் இருக்கும் தியாகிகள் புகைப்படங்கள் இருக்கும் பகுதிக்கு சென்றேன்.
அங்கு மொத்தம் 1125 சுதந்திரப் போராட்ட தியாகிகள் புகைப்படங்கள் இருக்கின்றன.
அதில் எத்தனை தியாகிகள் பெயர் பின்னால் சாதிப்பெயர் இருக்கிறது என்று கணக்கு எடுக்க ஆரம்பித்தேன்.
சற்றே சிரமம் ஆன வேலைதான்.
ஆனாலும் நின்று எடுத்து முடித்தேன்.
மேலும் எத்தனை தியாகிகள் சுபாஸ் சந்திர போஸின் INDIAN NATIONAL ARMY யில் இருந்தார்கள் என்பதையும் மிக தோராயமாக எடுத்தேன்.
கோயமுத்தூர் மாவட்டம்
122 தியாகிகள் புகைப்படத்தில் 41 தியாகிகள் புகைப்படங்கள் சாதி பெயரோடு இருக்கின்றன.
5 பேர் INA
தூத்துக்குடி மாவட்டம்
37 தியாகிகள்
17 சாதி அடையாளம்
1 INA
விழுப்புரம் மாவட்டம்
34 தியாகிகள்
17 சாதி அடையாளம்
0 INA
தஞ்சாவூர் மாவட்டம்
68 தியாகிகள்
26 சாதி அடையாளம்
7 INA
மதுரை மாவட்டம்
86 தியாகிகள்
24 சாதி அடையாளம்
36 INA
இப்படி 30 மாவட்டங்கள் தியாகிகள் புகைப்படங்களில் இருந்து கணக்கு எடுத்தேன்.
மொத்ததில்
1125 தியாகிகள்
370 சாதி அடையாளம்
135 INA
இதில் இந்த INA கொஞ்சம் தோராயமாகத்தான் இருக்கும். ஏனென்றால் பல புகைப்படங்களில் ராணுவ உடை உடுத்தி இருக்கும் தியாகிகள் பெயர் விபரத்தில் INA சேர்க்கப்படவில்லை.
ஆனால் சாதி அடையாள பெயர்கள் கணக்கில் 5 சதவிகிதம் முன்னே பின்னே மாறலாமே தவிர 95 சதவிகிதம் சரியான தகவல்.
சரி விஷயத்துக்கு வருகிறேன்.
மொத்தம் 1125 தியாகிகள் படத்தில் 370 தியாகிகள் பெயர் சாதி பெயரோடு இருந்தது என்று சொன்னேன் இல்லையா...
If there is Brahmin or Caste Hindu younsters reading this status pls loooook at this..
அந்த 370 சாதி அடையாள தியாகிகள் பெயரில் ஒரு தியாகி பெயர் கூட பட்டியல் இனத்தவர் (SC ST) அடையாளத்தோடு இல்லை.
ஒரு தியாகி பெயர் கூட இல்லை.
ஏன் இல்லை ?
எஸ்.சி எஸ்.டி பிரிவில் வரும் மக்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவில்லையா?
அவர்கள் போராடவில்லையா என்ன?
போராடி இருப்பார்கள். அவர்கள் புகைப்படம் கூட காந்திமண்டபத்தில் இருக்கலாம். ஆனால் சாதி பெயர் போடாமல் இருக்கலாம்.
அதான் கேட்கிறேன் ஏன் போடவில்லை.
“ஏன்னா அந்த காலத்துல எஸ்.சி எஸ்.டி சாதியினர இழிவாக நடத்தினார்கள். அந்த சாதி பெயரை சொன்னாலே பிறர் இழிவாக பார்க்கும் படியான ஒரு சமூக சூழல் இருந்தது.. அதான் போடவில்லை”
“அந்த காலத்தில் இல்லை எந்த காலத்திலும் அச்சூழல்தான் இருக்கிறது. இப்போது இந்த நிமிடமும் அச்சூழல்தான் இருக்கிறது. ஒரு பொண்ணு பாருங்க பையனப் பாருங்க கல்யாணம் பண்ண எஸ்.சி மட்டும் வேணாம்” என்று சமூக பேசுகிறதா இல்லையா.
”பேசுகிறதுதான். ஆமா சாதி பெயர போடுறது. ஐயர், தேவர், முதலியார்ன்னு போடுறது தப்புதான்”
“தப்பு இல்ல ரொம்ப ரொம்ப தப்பு. அதுலையும் நீ டாக்டர், என்ஜினியர்ன்னு படிச்சிட்டு உன் பேருக்கு பின்னாடி சாதி பெயர் போட்டு ஃபேஸ்புக் அக்கவுண்ட் வெச்சிக்கிறது அநாகரிகமான நடவடிக்கை”
இப்படித்தான் சாதி பெயர் அடையாளத்தை புரிந்து கொள்ள வேண்டும் இளைஞர்களே...
இதில் இன்னொரு முக்கியமான பாயிண்டை கவனியுங்கள்.
INA என்னும் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து போராடிய தியாகிகள் பெயரில் 90 சதவிகித பெயரில் சாதிப் பெயர் இல்லை. அவர்கள் சாதி அதிகம் புழங்கும் இடத்தில் இருந்து வந்தாலும் சாதிப்பெயரை அவர்கள் பெயரோடு சேர்க்கவில்லை.
ஆக குழுவாக இணைந்து தீவிர போராட்டம் செய்யும் போது உயிரை பணயம் வைத்து போராடும் போது மக்களுக்காக மிகத்தீவிரமாக போராடும் போது ஏற்படும் தோழமை உணர்வால் சாதி உணர்வு குறைகிறதா. குறைகிறதுதான்.
இந்த பாயிண்ட் கம்யூனிஸ்டுகள் பார்வையில் முக்கியமான பாயிண்டாகும்.
தீவிரமாக கம்யூனிஸ்டுகள் மக்கள் நலத்தை முன்னிட்டு மக்களை இளைஞர்களை போராட அழைக்கும் போது அவர்களுக்குள் சாதி உணர்வு குறைகிறதா. நிச்சயம் அவ்வுணர்வு குறைந்து அழிந்தே போகிறதுதான்.
இப்படி இதில் யோசிக்க நிறைய இருக்கிறது.
அதே சமயம் இப்படி எஸ்.சி எஸ்.டி பிரிவினரை இச்சமூகம் அனைத்து துறைகளிலும் மிக நேரடியாகவும் நாசுக்காகவும் ஒதுக்கி வைத்திருக்கும் போது அவர்கள் அந்த ஒடுக்கப்பட்ட சாதி என்ற தளத்தில் ஒன்று இணைவது மட்டும்தான் விடுதலைக்காக சம உரிமை பெறுவதற்கான ஒரே வழி.
ஆக அடக்குபவன் தன் வீண் பெருமை சாதி அடையாளத்தோடு ஒன்று சேர்வது சாதி வெறி.
அடக்கப்படுபவன் தன்னைப் போன்ற அடக்கப்படும் சாதிகளோடு சேர்ந்து தலித் அடையாளத்தோடு சாதி ஒழிக்க போராடுவது சாதி ஒழிப்பு.
இதை புரிந்து கொள்ள வேண்டும்.
பொத்தாம் பொதுவாக சாதி பெயர் நீயும்தான் போட்டுக்கோயேன் நண்பா என்று சொல்லக் கூடாது.
அது மனித தன்மையற்ற, அநாகரிகமான செயலாகும்.
அடுத்த தலைமுறையினரான நீங்களும் பெயருக்கு பின்னால் சாதிப்பெயரை போடுவதை தவிருங்கள்.
கொஞ்சம் யோசியுங்கள்...

ஒரு சராசரி இந்திய மனம் எப்படி இயங்கும்?

ஒரு சராசரி இந்திய மனம் எப்படி இயங்கும்?
பார்ப்பனர்கள் எல்லாம் அறிவாளிகள் என நம்பும்,
இறைச்சி உண்டால் படிப்பு வராது என நம்பும்,
இந்துமதம் மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட மதம் என்று நம்பும்,
வெள்ளையா இருக்கவன் பொய் சொல்லமாட்டான் என நம்பும்,
குடும்பம், பிள்ளைக்குட்டி இல்லாத தலைவர்கள் பெரும்பாலும் யோக்கியர்களாகத்தான் இருப்பார்கள் என நம்பும்,
CBSE மட்டும்தான் தரமான பாடத்திட்டம் என நம்பும்,
ஊழல்தான் இந்நாட்டின் ஆகப்பெரிய பிரச்சனை என்று நம்பும்,
'இப்போ எல்லாம் யார் சார் சாதி பாக்குறது?' என்றக் கேள்வியை நியாயமென நம்பும்,
Salute to Indian Army, Pray for Paris/Syria/Israel என்று முகநூல் photoframeஐ கும்பல் கும்பலாக மாற்றுவதே மிகப் பெரிய சமூகப்புரட்சி என நம்பும்,
குடும்பத்தோடு கிளம்பிச் சென்று காப்பி அருந்தும் சிறிதுநேரத்தில் அந்த ஒரு அமர்விலேயே தனக்கான வாழ்கைத் துணையை தேர்ந்தெடுத்துவிடமுடியும் என்று நம்பும்,
இந்த அமைப்புமுறை, சமூகம் எல்லாவற்றையும் அப்படியே வைத்துக்கொண்டு ஒரேயொரு மனிதர் தேவதூதரைப் போல ஆட்சிக்கு வருவதன்மூலம் நாடு நிமிர்ந்துவிடும் என்று நம்பும்,
இட-ஒதுக்கீடு பற்றியோ, இந்தியாவின் சமூகநீதி வரலாற்றைப் பற்றியோ எதுவுமே தெரியாமல், தன் சிறிய அனுபவத்தில் தான் பார்த்த ஒரு ஏழை பார்ப்பன குடும்பத்தையோ, ஒரு மேல்தட்டு தலித் குடும்பத்தையோ அடிப்படையாக வைத்துக்கொண்டு இட-ஒதுக்கீடு ஏழைகளுக்கு எதிரானது என்று நம்பும்,
50ஆண்டுகளாக தமிழ்நாடு போன்ற ஒரு பெரிய மாநிலத்தின் மருத்துவக் கட்டுமானத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டியெழுப்பிய சமூகநீதி அரசியலை புறந்தள்ளிவிட்டு, மருத்துவத்துறையில் புரட்சி செய்ய NEET போன்ற ஒரு Choose the best answer தேர்வுமுறையே போதுமானது என நம்பும்.
இப்படி பலவற்றை நம்பும். நம்பி நாசமாய்ப்போகும்.

வணிகப்பெயரைத் தமிழில் மொழிபெயர்க்கலாமா

பேஸ்புக் என்ற வணிகப்பெயரைத் தமிழில் முகநூல் என்று மொழிபெயர்க்கலாமா என்று முழிபெயர்க்கும் அளவுக்குப் பட்டிமன்றங்களைப் பார்க்கிறேன்.
பாருங்கள், கணினிக்குள்ளும், திறன்பேசிக்குள்ளும் தமிழைக் கொண்டு வருவதற்குப் பலர் அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் தமிழர்கள் தமிழில் குறுஞ்செய்தி அனுப்புவதற்கே ததிங்கிணத்தோம் போட வேண்டியிருக்கிறது. தென்கிழக்காசியாவில் கணினி, திறன்பேசிகளில் தாய்மொழிதான் இயல்பு. சீனாவில் தேடுபொறி கூகுள் இல்லை, சீனர்களே சீன மொழியில் படைத்த பைடு. ருசியாவிலும், சீனாவிலும் சமூக ஊடகத் தொடர்புக்கு அவர்களே அவர்கள் மொழியில் எழுதிய மென்பொருள்களைத்தான் புழங்குகிறார்கள். தமிழ்நாட்டிலோ “தமிழில்” வரும் தொலைக்காட்சிகளில் கூட ஆங்கிலத்தில் பேசுவதுதான் உயர்வாகக் கருதப் படுகிறது. ஆங்கிலம் கலந்து பேசுபவர்கள்தாம் உயர்ந்தவர்கள் என்ற நிலை.
இதைப்பற்றி எல்லாம் வணிகப்பெயரைத் தமிழில் மொழிபெயர்க்கக் கூடாது என்று எரிந்த கட்சி பேசுபவர்கள் அக்கறையோடு விவாதித்திருக்கிறீர்களா என்று தெரியாது. பொதுவாகத் தமிழ்வளர்ச்சியைப் பற்றியெல்லாம் பேசுபவர்களைத் தமிழ் வெறியர்கள் என்று ஓரம் கட்டும் போக்கு நிலவுகிறது.
மென்பொருள்களைத் தமிழில் புழங்கினால்தான் அவற்றைத் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து ஆதரிப்பார்கள். இப்படி உயர்நுட்பக் கருவிகளில் தமிழ் புழங்கினால்தான் தமிழ் தொடர்ந்து வாழும். இல்லையேல் அது அடுக்களை மொழியாகச் சுருங்கி மறையலாம். முகநூலுக்கே முழுக்க முழுக்கத் தமிழ் இடைமுகம் இருக்கிறது. அதை எத்தனை தமிழர்கள் புழங்குகிறார்கள்? ஐபோனில் தமிழில் எழுதுவதை ஆப்பிள் நிறுவனம் அண்மையில் கூட்டியிருக்கிறது. ஆனாலும், தமிழர்கள் ரோமன் எழுத்தில் தமிழை எழுதுகிறார்கள். “என்று மடியும் இந்த அடிமையின் மோகம்” என்ற பாரதியின் புலம்பல் நினைவுக்கு வருகிறது.
இப்படிப்பட்ட செய்திகளைப் பற்றி ஆக்க முறையில் உரையாடலாம்.
முகநூலா பேஸ்புக்கா என்ற பட்டிமன்றம் தமிழர்களுக்கு வேண்டியதில்லை. தம் வணிகப்பெயர்கள், வணிகச்சின்னங்கள் பற்றி அக்கறை கொள்ள வேண்டியவர்கள் நாமில்லை. நாம் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுமில்லை, பங்குதாரர்களுமில்லை. அல்லது அவர்களின் வழக்குரைஞர்களுமில்லை. அதனால் தமிழில் முகநூல் என்ற பெயரைப் பார்த்துக் கடுப்படைவதற்குப் பகராக, தமிழில் இருக்கும் மென்பொருள்களைப் புழங்கினால் வளர்முகமாக இருக்கும். ஏதோ, என்னுடைய தம்பிடித் துண்டு.

மே மாதம் வந்தாலே

மே மாதம் வந்தாலே திமுக காரர்கள் பதற ஆரம்பித்து விடுவர். அவர்களின் துரோகத்தை நினைத்து பயப்படுகின்றனர். அதற்காக அவதூறுகளை பரப்புகின்றனர் என்று ஒரு எல்லாம் தெரிந்த ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டு சுற்றுகிறது. நாங்கள் எதற்கு பதறறமடைய வேண்டும். நாங்கள் எதற்கு பயப்பட வேண்டும்.
ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஈழத்திற்காகவும் ஈழத்தமிழர்களுக்காகவும் போராடியவர் கலைஞர். கடைசி கட்ட போர் நிலவரங்கள் எல்லார் கையையும் மீறிய நிலை. அப்போதும் மக்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று இருந்தவர். எல்லார் முயற்சியையும் பாழாக்கி போரை நடத்தி ஒன்றரை லட்சம் மக்கள் சாவிற்கு காரணமாக இருந்தவர்கள் யாரென்பது உலகிற்கு தெரியும்.
விசயம் தெரிந்தவர்களுக்கு உண்மை தெரியும். சுபவீ அவர்கள் ஒரு புத்தகம் வெளியிட்டு பல காணொளிகளை வெளியிட்டு திமுக தரப்பு நியாயங்களை எடுத்து வைத்துள்ளார். இன்று ஈழப்போரில் ஈடுபட்டவர்கள் முன்னாள் விடுதலைப்புலிகள் கூட உண்மையை பேச ஆரம்பித்து விட்டனர். ஆனால் ஆஃபாயில்கள் மட்டும்தான் இன்றும் உண்மை தெரியாமல் திமுக வெறுப்பு என்பதை மட்டும் லட்சியமாக கொண்டு சுற்றி கொண்டிருக்கின்றனர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தி இந்துவிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருக்கும் செய்தி இன்னும் சந்தேகம் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல விளக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். அதை படித்து பார்க்கவும்.
கேள்வி: விடுதலைப்புலிகள் குறித்து அந்த இயக்கத்தில் இருந்தவர்களே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ராஜீவ் கொலையான சம்பவத்தில், நூலிழையில் உயிர் பிழைத்தவர் நீங்கள். விடுதலைப்புலிகள் என்ன செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
பதில்: ஒன்றை அழுத்தமாகச் சொல்லிவிடுகிறேன். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தவறு பற்றி முழு உண்மை தெரிந்தவர்கள் தமிழ்நாட்டில் மொத்தமே மூன்று பேர்தான். கலைஞர், முரசொலி மாறன், நான். இதுபற்றி கலைஞரே எழுதிய கட்டுரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் முரசொலியில் வந்துள்ளது. பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, தன்னையும், முரசொலி மாறனையும் கடைசிக் கட்டத்தில் அழைத்துப் பேசியதாகவும், அப்போது, “விடுதலைப்புலிகள் என்ன கோரிக்கை வைத்திருக்கிறார்களோ அதைப் பெற்றுத்தருவதற்காக சகல அதிகாரத்தையும் பயன்படுத்தத் தயாராக இருக்கிறேன். இந்தியா முழு வாக்குறுதி தருகிறது” என்று ராஜீவ் சொன்னதாகவும் கலைஞர் எழுதியிருக்கிறார். அது உண்மைதான். ஏனென்றால், இதே விஷயத்தை ராஜீவ் என்னிடமும் சொல்லியிருக்கிறார். இந்த விவரங்கள் எங்கள் கூட்டணியில் உள்ள ஒரு தலைவருக்கும் தெரிந்திருக்கலாம். முரசொலி மாறன் இப்போது இல்லை. நான் கேட்டவன் மட்டுமே. கலைஞர்தான் கலந்துகொண்டவர். “கலைஞரிடம் ராஜீவ் சொன்னார். அதை விடுதலைப்புலிகளிடம் சொல்லச் சொன்னார். கலைஞர் சொன்னாரா? அதனை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டார்களா? ஏற்றுக்கொண்ட பிறகுதான் ராஜீவைத் திட்டமிட்டுக் கொன்றார்களா?” என்ற சந்தேகம் நீடிக்கிறது. இதைப் போக்க வேண்டிய பொறுப்பு கலைஞருக்கு உண்டு. அவர் சொன்னால்தான் 25 ஆண்டுகாலக் குழப்பத்தில் தெளிவு ஏற்படும். ஆனால், அவர் சொல்லத் தயங்குகிறார். இலங்கை மக்கள் மீது தமிழக மக்களுக்கும், உலக மக்களுக்கும் இருக்கிற கொஞ்ச நஞ்ச அனுதாபமும் இத்தகைய செய்திகளை நாம் வெளியிடுவதால் பாழ்பட்டுவிடுமோ என்று அவர் அஞ்சுகிறார். “பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் காப்பாற்றுவதைப் பற்றித்தான் இப்போது யோசிக்க வேண்டும்”என்று ரொம்பவே உருக்கமாக என்னிடம் சொன்னார். ஆனாலும், அவர் உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

எடுத்ததற்கெல்லாம் தமிழ் ஈழத்தைப்பார்

எடுத்ததற்கெல்லாம் தமிழ் ஈழத்தைப்பார் என்று நித்திரையிலும் கொதிநிலையிலேயே தூங்கும் தமிழ்நாட்டு “தமிழ்த்தேசிய” போராளிகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். ஜெயலலிதாவுக்குப்பிறகான அதிமுகவின் நிலைமையில் தான் பிரபாகரனுக்குப் பின்னான தமிழீழ அரசியல் இன்று இருக்கிறது. இதற்கு இந்திய அரசும் இலங்கை அரசும் அவரவர் தரப்பில் காரணங்கள் என்றாலும் அதைவிட அடிப்படையான காரணம் ஒன்றுண்டு. சர்வாதிகாரிகளின் ஆளுமையின் அடிப்படையே அடுத்த தலைமுறை ஆளுமைகளை தலையெடுக்கவிடாமல் அழித்துவிடுவது. அத்தகையை தலைமைகளை ஆதரித்து ஊக்குவித்து ஆராதித்த இரு சமூகங்களும் அதற்கான ஆனப்பெரிய விலைகளை இன்று ஏகத்துக்கு கொடுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனாலும் தம் தற்கால தாள முடியாத துன்ப துயரங்களின் ஆரம்பப்புள்ளி, நதிமூலம் தாம் விழுந்துவிழுந்து ஆதரித்த தம் ஆதர்ஷ ஆளுமைகளே என்பதை இரண்டு தரப்பும் உணர்ந்து தெளிந்ததாக எந்த சமிக்ஞையும் இல்லை. 🙁☹️😟
ப.தெய்வீகனின் பதிவு:
"இனப்படுகொலை புரிந்த சிங்களமே" - "இன்னமும் எங்களை அழித்துக்கொண்டிருக்கும் பேரினவாதமே" - என்று போர் முடிந்த நாள் முதல் குரல் நாண்கள் அறுந்து தொங்குமளவுக்கு குழறிய போராட்டங்கள் அனைத்தும் இன்று எங்கு வந்து நிற்கிறது என்று பார்த்தால் -
யாழ். ஊடக மையத்தில் ஒரு முன்னாள் போராளி - விடுதலைப்புலிகளின் ஆரம்பகால உறுப்பினர் - மாவீரரின் தந்தை என்ற சகல கௌரவங்களயும் கொண்ட முதியவர் "இந்த மண்ணுக்காக உயிர் நீத்த எமது மக்களை நினைத்து நிம்மதியாக அழ விடுங்கள்" - என்று தமிழர் தரப்பை பார்த்து கெஞ்சி கண்ணீர் விடுகின்ற புள்ளியில் வந்து நிற்கிறது.
இதைவிட எங்களது இனத்துக்கு இனி என்ன பெருமை வேண்டியிருக்கிறது?
யாழ். ஊடக மையத்தில் காக்கா அண்ணன் கண்ணீர் விட்ட அந்த காட்சியை விட தாயகத்தின் நிலமையை எந்தப்பெரிய வார்த்தைகளாலும் ஒருவரும் எழுதி கிழித்துவிடமுடியாது.
ஆனால் இந்த சம்பவங்கள் எல்லாம் தமிழர்களுக்கு இனிவரும் காலத்தில் எவ்வளவு காத்திரமான படிப்பினைகளை கொடுக்கப்போகிறதோ இல்லையோ சிங்கள தரப்புக்கு பெரிய பெரிய பாடங்களையெல்லாம் நிச்சயம் கற்றுக்கொடுத்திருக்கும்.
மகிந்த ராஜபக்ச குழுவினர் தற்போதையை வடக்கு நிலைவரங்களை பார்த்து வயிற்றிலும் தலையிலும் அடித்து அழுதிருப்பார்கள். தேவையில்லாமல், அன்று இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கெல்லாம் தடை விதித்தோமே? தேவையில்லாமல் இவ்வாறு அரசியல் பேசுபவர்களை தமிழர் தரப்பில் மிரட்டி வைத்திருந்தோமே! இவர்களையெல்லாம் அப்படியே விட்டிருந்தால் ஆயிரம் ஆயிரம் குழுக்களாக பிரிந்து நின்று எவ்வளவு அழகாக ஆளையாள் காலை வாரியிருப்பர் - அம்புலன்ஸ் செலவுகூட இல்லாமல் தங்களை தாங்களே முடித்திருப்பார் - என்று நிச்சயம் வருந்தியிருப்பர்.
வேண்டுமானால் பாருங்கள், மகிந்த தரப்பு மாத்திரம் அடுத்த தடவை ஆட்சிக்கு வருமானால், தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே "தமிழீழம்" தருவதாக எழுதிக்கொண்டுதான் யாழ்ப்பாணம் வருவார்கள்.
அவ்வளவு தூரம், அவர்களுக்கு இப்போது குளிர்விட்டுப்போயிருக்கும்.
அவர் ஏன் பயப்படவேண்டும்.
கிளியை கட்டி குரங்கிடம் கொடுத்ததுபோல தமிழர் தரப்புக்கு கொடுத்த எந்த விடயமாவது இதுவரையில் உருப்பட்டிருக்கிறதா? அதனை நிறைவேற்றுவதற்கு எங்கள் "வீரத்தமிழ் தலைமைகள்" அனுமதித்திருக்கிறார்களா?
பொருளாதார மத்திய நிலையம் முதல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வரைக்கும் எல்லாவற்றுக்கும் பிச்சல் - புடுங்கல் - பீச்சல் என்று நாறிய பிழைப்புத்தானே?
இதில் சிங்கள தேசம் எதற்குத்தான் தமிழர்களை பார்த்து அச்சப்படவேண்டும்?
இந்த சீத்துவத்தில், ஆயிரக்கணக்கில் பலியான எங்களது மக்களின் அழிவுக்கு நீதி கேட்டுக்கொண்டுபோய் வெளிநாடுகளுடன் முண்டிக்கொண்டு நிற்பதுதான் கடுப்பை கிளப்பும் அடுத்த காமடி.
இருந்து பாருங்கள்!
அந்த விசாரணைகளும்கூட நடந்து முடிந்து தீர்ப்பொன்று வெளிவருகின்ற தினம் வருமானால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு எங்கள் வீர்த்தமிழ் முன்னணி ஒன்று நீதிமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு நிற்கும்.

ஒற்றுமையில்லை எனில் ஒன்றுமே நடக்காது என்றுதானே டெஸோவை ஆரம்பித்தார் கலைஞர் ..மகோரா (MGR) விடுதலைப் புலிகளை தனியே பிரித்து அதிமுக இலங்கை பிரிவாக நடத்த ஆரம்பித்தபோதே முடிந்துவிட்டது எல்லாம் அவலமாக .

இலங்கையில் தமிழர்களுக்கிடையே சாதிப்பிரிவு

”ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை?” என்ற பிரச்சாரம் இப்போது இலங்கை தமிழர்கள் மத்தியில் தொடங்கியிருக்கின்றதாம்.
இதன் பொருள் என்ன என்று ஜெர்மனியில் உள்ள என் இலங்கைத் தமிழ் நண்பர்களை விசாரித்தேன். நீண்ட கதையைச் சொன்னார்கள்.
’சிங்களவர்களுக்கு எதிராக இலங்கையைத் தமிழர்கள் தான் முதலில் ஆண்டார்கள். ஆக, நாம் மீண்டும் ஆள வேண்டும்’ என மேலெழுந்தவாரியாகச் சொல்லிச் செல்லும் இந்த வாசகத்தின் பின் இருப்பது... இலங்கைத் தமிழர்களைக் காலம் காலமாக ”கீழ்நிலைச் சாதி” என பிரித்து வைத்து ”உயர் சாதி” சைவர்கள் என தம்மைக் கூறிக் கொள்ளும் ‘வெள்ளாளர்” சமூகத்தின் ஒரு தந்திரம் இது எனக் கூறினர். சரி தமிழகத்தில் உள்ளது போலவா இலங்கையில் தமிழர்களுக்கிடையே சாதிப்பிரிவு..? என அறிந்து கொள்ள விசாரித்ததில், இலங்கையில் தமிழ்ச்சமூகத்தினிடையே உள்ள சாதி பற்றிய தகவல் கிடைத்தது.
இலங்கையைப் பொறுத்தவரை உயர்சாதி என்றால் அது வெள்ளாளர் சமூகத்தினர் தான். பிராமணர் அல்ல. பிராமணர் வெள்ளாளர் சமூகத்துக்குக் கோயில் தொடர்பான காரியங்களை மட்டும் செய்வதற்காகத் தனி அந்தஸ்துடன் வைக்கப்பட்டிருக்கும் ஒரு சமூகம். இவர்கள் வேறு யாருடனும் சேர்ந்து இருக்க மாட்டார்கள். தனியாகச் சமைத்து தனியாக உண்டு தனியாக வாழ்வார்கள். “உயர்சாதியான’ வெள்ளாளர்கள் வீட்டில் கூட கை நனைக்க மாட்டார்களாம் ஆச்சார பிராமணர்கள். ஆனாலும் கூடஅவர்கள் உயர் சாதியினர் இல்லை இலங்கையில்.
இது இப்படி இருக்க..
எந்தெந்த சாதிப் பிரிவுகள்.. இவை எப்படி உருவாகின எனக் கேட்டு வைத்தேன். ஒரு பட்டியல் கிடைத்தது யார் யாரெல்லாம் “கீழ் சாதியினர்” என்பதற்கு. (இது ஈழத்து நண்பர்கள் வழங்கிய பட்டியல்)
1. பறையர் - மலம் அள்ளுபவர் (முன்னர்); பறை இசை இசைப்பவர்; நெசவுத் தொழில் செய்பவர்; இறைச்சி விற்பவர்
2. நளவர் - பனைமரத்தில் ஏறி கள் இறக்குபவர்
3. பள்ளர் - விவசாயம் கூலி வேலை செய்பவர்
4. கோவியர் - பிணம் தூக்குபவர்
5. திமிலர் - மீன் பிடிப்பவர்கள்
6. கரையார் - மீன் பிடிப்பவர்கள்
7.முக்குவர் - மீன் பிடிப்பவர்கள்
8. அம்பட்டன் - முடிவெட்டுபவர்
9. வண்ணார் - துணி துவைப்பவர்; பெண்களுக்கு பேறு காலத்தில் உதவும் மருத்துவச்சி
10. கொல்லர் - மண்வெட்டி, சுத்தியல் போன்ற இரும்புப்பொருட்களை உருவாக்குபவர்
11.கட்டார் - பொற்கொல்லர்
12. தச்சர் - மரவேலை செய்பவர்
.... இன்னும் சில இருக்கலாம்.
ஆக மேலே நாம் பார்த்த 12 வகை தமிழ்ச்சமூகத்தினரும் “ கீழ் சாதி” என இலங்கைத் தமிழர்களுக்குள் பிரித்து வைக்கப்பட்டிருக்கும் சமூகமே. இன்றும் இலங்கையிலும் சரி, புலம்பெயர்ந்த அயல் நாடுகளிலும் சரி, இந்தச் சாதி வித்தியாசம் இறுக்கமாகப் பார்க்கப்படுகின்றது. பெண் எடுத்தல் பெண் கொடுத்தல் என்பது ”கீழ் சாதிக்கோ” , அல்லது “கீழ் சாதி” யில் உள்ள குழுவுக்கு குழுவோ அனுமதிக்கப்படுவதில்லை.
இன்றைய நிலையில் ஈழத்தில் அரசியல் தலைமையில் இருப்போர் “வேளாளர்” சமூகத்தவர்களே மிகப்பெரும்பாண்மை.
அப்படியென்றால்,
ஈழத் தமிழ்ச் சொந்தங்களைப் பாதுகாப்போம்..
ஆண்டபரம்பரை மீண்டும் ஆளட்டும்...
என்ற கோஷமெல்லாம் யாருக்குச் சாதகமானவை என்ற கேள்வி எழுகின்றது.
இலங்கையில் இறைச்சி வெட்டுபவர், துணி துவைக்கும் வண்ணார், திமிலர்.. இப்படி தாழ்த்தப்பட்ட சமூகத்தோரை வீட்டிற்கு, வீட்டு எல்லைக்கு, வீட்டின் பின்புறம் என.. இவர்கள்
எங்கு வரை வர அனுமதிக்கப்படுவார்கள் என்பது இன்னமும் வழக்கில் உள்ளதாம். ஆனால் ஜெர்மனியில் இறைச்சி வெட்டும் ஜெர்மானியரோடு சேர்ந்து தான் படிக்கின்றனர்; லாண்டரி கடை வைத்திருக்கும் இத்தாலியரோடு நெருக்கமாகப் புழங்குகின்றனர்... இது என்ன பாரபட்சம்..??
இன்றும் கூட வெள்ளாளர்கள் வாழும் குடியிறுப்புப் பகுதியில் வீட்டு வரிசையில் இந்த “தாழ்ந்த” வகுப்பில் இருந்து யாராவது வீடு வாங்கி விட்டால் அதனை பெரிய குறையாகப் பேசி புலம்பி வருந்துவது நடைமுறையில் இருக்கின்றதாம்... நான் சொல்வது போருக்குப் பிந்திய சூழலைத்தான்.
ஒரு தனி மனிதரின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியத் தொழில்களையும் செய்யும் சமூகத்தினரை “தாழ்ந்த” நிலையில் வைத்து விட்டு ஓரிரு சாதிகள் மட்டும் தம்மை “உயர் சாதி” என சொல்லிக் கொள்வது என்ன நியாயம்?
இலங்கையில் நடந்து முடிந்த போருக்குப் பின்னராவது சாதியை முற்றிலும் ஒழித்து விட்டு தனி ஒரு இனமாக ஒற்றுமையுடன் ஈழத் தமிழர்கள் வாழ்வதில் என்ன பிரச்சனை? இந்தக் காலச் சூழலில் சாதிப் பிரிவினை அங்கும் சரி, புலம்பெயர்ந்த தேசத்திலும் சரி.. என்ன நன்மையைத் தரப்போகின்றது.? வெறும் வெற்றுப் பெருமைகளைக் கட்டிக் கொண்டு எத்தனை காலம் தான் இலங்கைத் தமி் மக்கள் தங்களுக்குள்ளேயே பிரிந்து வாழப்போகின்றார்கள்?
இன்று உலகத்தமிழர்கள் என்ற அடையாத்தை நோக்கி நாம் செல்ல வேண்டிய அத்தியாவசியம் வந்து விட்டது. ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் இதனை யோசிக்க வேண்டியதும் சாதி அமைப்பை ஒழிப்பதும் இன்றைய காலத்தின் அவசியம் அல்லவா?

தட்டு ஏந்தும் அர்ச்சகர் கூட ஏன் தொட்டுப் பேசுவதில்லை

கேள்வி: அர்ச்சகர்கள் தீண்டாமையைக் கடைபிடிப்பதாகச் சொன்னீர்கள். ஆனால், அவர்களும் கோயிலில் தட்டு ஏந்தும் நிலையில் தானே இருக்கிறார்கள்?
பதில்:
தட்டு ஏந்தும் அர்ச்சகர் கூட ஏன் தொட்டுப் பேசுவதில்லை என்பது தான் சாதி. சாதி வேறு. வறுமை வேறு. உங்கள் உழைப்பால் வறுமையை வெல்லலாம். ஆனால், தலைமுறைத் தலைமுறையாக சாதி உங்களைத் துரத்தும். நீங்கள் முதல்வர் ஆனாலும் சரி. அமெரிக்காவுக்குப் போனாலும் சரி.
அப்புறம் சொல்ல மறந்துட்டேன். தட்டு ஏந்துவது pocket money மட்டுமே.
* எங்கள் ஊர்க் கோயில் பேரில் உள்ள நிலங்களுக்கான குத்தகைத் தொகையின் ஒரு பகுதி அர்ச்சகர் குடும்பங்களுக்குச் செல்லும். இதெல்லாம் வீரத் தமிழ் மன்னர்கள் அவர்களுக்கு விட்டுச் சென்ற சொத்து.
* பொதுவாகவே, எல்லா அர்ச்சகர்களுக்கும் கோயில் அருகேயே hot real estateல் வீடு இருக்கும்.
* இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள அர்ச்சகர்களுக்குச் சம்பளம் உண்டு.
* மொத்த கோயிலையும் உரிமை கொண்டாடும் சிதம்பரம் அர்ச்சகர்கள் போன்ற கதைகள் தனி.
இல்லை, இன்னும் ஏழ்மையான அர்ச்சகர்கள் இருக்கிறார்கள் என்பது தான் உங்கள் வாதம் என்றால், இலாபம் இல்லாத இந்தத் தொழிலை ஏன் பார்க்கிறார்கள்? யாரும் குலத் தொழிலால் வஞ்சிக்கப்படக்கூடாது என்பது தான் திராவிடக் கொள்கை. எல்லா சாதி மக்களையும் அர்ச்சகர் ஆக விடுங்கள். உங்கள் பாரம் குறையும்.
எப்படி வசதி?

சிப்பாய்க் கலகம் ஏன்??

சிப்பாய்க் கலகம் ஏன்??
மே மாதம் 10ந்தேதி.
இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாள். பட்டியலின மக்களுடைய வாழ்க்கையையே அடியோடு புரட்டி போட்ட நாள். பட்டியலின மக்கள் முன்னேற்றத்திற்கு அடித்தளம் போட்ட நாள். இன்று தான், இந்தியாவின் முதல் புரட்சி என்றழைக்கப்படும் சிப்பாய்க் கலகம் வெடிக்கத் தொடங்கியது. இந்தியாவெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இக்கலகம் தான் இந்தியாவின் உண்மையான முகத்தை உலகிற்கு முதன்முதலில் வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இந்தியாவில் பெருமளவில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தனர் பிரிட்டிஷார். கணவனை இழந்த பெண்கள் உடன்கட்டை என்னும் சதி ஏறுதலைத் தடை செய்தனர் பிரிட்டிஷார். ஹிந்துதர்ம மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதோடு மட்டுமல்லாமல், பெண்கள் மறுமணம் செய்வதை ஊக்குவித்தனர் பிரிட்டிஷார். ஹிந்துதர்மத்தின் புனிதமே கெட்டுவிட்டதாகக் கருதினர் மக்கள். அவையெல்லாவற்றையும் விட ஒரு பெரும் சட்டம் கொண்டுவந்தனர் பிரிட்டிஷார். அது தான் இந்தியாவெங்கும் ராணுவ வீரர்களை வீறுகொண்டு எழ வைத்தது. 1856ஆம் ஆண்டு, 'பொது ராணுவ சிவில் சட்டம்' கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் இந்திய ராணுவத்தில் பட்டியலின மக்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். ஹிந்துக்களால் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட மக்கள் ராணுவத்தில் சேர்ந்து, ஹிந்துக்களுக்கு இணையாக சட்டை அணிவது, தொப்பி அணிவது, ஷூ அணிவது என்று இணையாக நடந்துக்கொண்டதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்தியாவெங்கும் கலகம் வெடித்தது. அப்போது, பிரிட்டிஷ் ராணுவத்தில் மொத்தம் 22பட்டாலியன்கள் இருந்தன. அதில் 20பட்டாலியன்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து கலகத்தில் ஈடுபட்டன. அந்த 20பட்டாலியன்களையும் எதிர்த்து நின்றன 2பட்டாலியன்கள். அந்த 2பட்டாலியன்கள் யாரென்றால்,
மதராஸ் பிரசிடென்சி ஆஃப் பறையாஸ்
மும்பை பிரசிடென்சி ஆஃப் மஹார்ஸ்
இந்த இரண்டு வீரமிக்க பட்டாலியன்கள் அந்த 22பட்டாலியன்களை ஒரு ஆண்டு 41நாட்கள் எதிர்த்து நின்று ஓட ஓட விரட்டி அடித்தனர்.
பிறகு பிரிட்டிஷார், கலகத்தை நிறுத்த
'பொது சிவில் ராணுவச் சட்டத்தை'த் தடை செய்தனர். 1858ல் இருந்து பட்டியலின மக்கள் ராணுவத்தில் சேர தடைசெய்யப்பட்டனர். இந்த தடை சட்டத்தை விதித்த பிரபுவை மக்கள் கருணை உடையவர் என்று மக்கள் கொண்டாடினர். அந்த பிரபு தான்
'கருணையுள்ள' கார்னிங்க் பிரபு.
"உங்களுக்கு ஏன் பிரதிநிதித்துவம் வேண்டும் என கேட்கிறீர்கள்???"
என்று சைமன் குழு கேட்டதற்கு,
போதிசத்வா அம்பேத்கர் சிப்பாய்க் கலகத்தை எடுத்துக்கூறி,
"நாங்கள் பணியில் சேருவதை பிரிட்டிஷாரே விரும்பாத போது, எங்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்???" எனக் கேட்டார்.
அன்றிலிருந்து தான் தாழ்த்தப்பட்டமக்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டு, இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

Modi, Rahul and Sonia

Modi, Rahul and Sonia:
I'd say I was politically conscious and began framing opinions around my 7th grade when Rajiv Gandhi had taken the helm with the tag, "Mr. Clean". Those days I was an avid Arun Shourie and Indian express fan so eventually I turned to V.P. Singh until he unleashed Mandal for political survival and thus became what he said he'd not. Then the tragic assassination of Rajiv happened.
It is funny to see the BJP accuse the Congress of dynasty rule. In a way it certainly is and in substantive ways it is not. Indira was the creation of the aging regional satraps, the Syndicate. Rajiv, was foisted by Moopanar over Pranab and others. Its more a failure of inner party democracy that saw the clan perpetuate its hold. However, unless the Indian voter gave the vote they've been faced with failures. After Rajiv's assassination Sonia pointedly refused to take the mantle. This is often forgotten. Only in 1996 facing a near total demise of the party did she step back in. Those were days when even Rangarajan Kumaramangalam bolted to BJP. Without Sonia stepping in the Congress would have evaporated. This is a fact.
In 2004 it was Sonia who led the party to victory. Yet the frenzy of xenophobia whipped up by the BJP prevented Sonia, unconstitutionally, from becoming India's PM. Whether it is the freedom of nuns to visit Srirangam Temple or Sonia becoming PM the fabled "oh India needs no lectures on secularism" is less than true. I'd have much rather preferred Sonia as PM because then she'd have been directly responsible for every action or omission. I consider Sonia Gandhi an Indian and as much an Indian as everyone living in India is. Bowing down to xenophobia she at least let someone as decent as Manmohan become PM. Not an Ambika Soni like Jayalalitha did.
It is irritating hypocrisy to see Modi worshippers sometimes clothe their support of Modi in an economic agenda. When the Congress under Narasimha Rao liberalized the economy it was the Gurumurthys who led a 'Swadeshi Jagran Manch' to raise the bogey of 'Swadeshi'. It was BJP the party of atavist nationalist economics. When Manmohan stepped out of the foreign policy norms to establish a historic partnership with US the Modi wagon did not even squeak in support. It was Manmohan who struck a historic accord with George Bush. Unfortunately Obama and Modi let it whither away.
So what if Rahul fumbles here and there? So what if Rahul reads from a teleprompter? So what if Rahul checks a note before writing out a note? All of that is far better than a empty 56" chested braggadocio who dishes out plain lies as campaign rhetoric. It is better to check notes than to claim Nehru never visited Bhagat Singh. Trump is a childish politician compared to Modi. And Modi has to resort to plain xenophobia to score a point by suggesting that Rahul should talk in his "mother's mother tongue". Like an American asked of McCarthy, "at long last sir, have you no decency left". I've no doubt that he has no decency left.
Kannadigas are better of with 10% Siddharamiah than Yediyurappa who is 100% in the pocket of Reddy brothers.
The Congress, for all their faults, are the last refuge of minorities and those who believe in broad based progress. Congress may be defeated in Karnataka but, as Ted Kennedy put it, "the cause endures, the fight continues".
During the presidential election in 2016 I posted "Democracy is at stake, go vote". I say the same today about Karnataka.
'The idea of India', as Sunil Khilanani framed it, is at the heart of the battle. Swaminathan Ankleswaria Aiyar says the Congress has no ideology and that the BJP is scoring because it has a clear ideology. This is nonsense. The Congress stands for a secular and inclusive India and the so called ideology of BJP is Nazism. Aiyar also lamented that the BJP joining hands with Reddy brothers would malign the 'image of Mr Modi as incorruptible". More nonsensical words are yet to be written. Mr. Modi is nowhere being incorruptible.
Democracy and Secularism is at stake in Karnataka.

Wednesday, May 09, 2018

பார்ப்பனர்களால் திணிக்கப்பட்ட ஜோதிடம்.

பார்ப்பனர்களால் திணிக்கப்பட்ட ஜோதிடம்.
ஜோதிட புரட்டு. அறிவியலுக்குப் பொருந்தாத ஜோதிடத்தைப் புகுத்தியவர்கள் பார்ப்பனர்களே!.
மனிதன் தோன்றிய நாளிலிருந்து பல பிரச்சினைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறான். முதலில் காற்று, மழை, இடி, மின்னல் ஆகியவற்றின் சீற்றத்திலிருந்தும் இயற்கைப் பேரழிவுகளிலிருந்தும், விலங்குகளிலிருந்தும் தன்னை காத்துக் கொள்ள பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டியதிருந்தது. மனிதன் அறிவியல் பலமுள்ளவனாக இருந்தாலும், மனவலிமையில் சில நேரங்களில் பலமற்றவனாகவே இருந்து வருகின்றான்.
பயந்த மனிதன், பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கும் மனிதன் தனக்கு ஒரு வழியில் ஆதரவு கிடைக்கிறதென்றால் உடனடியாக அதை ஏற்றுக்கொண்டு, அதன் மூலம் பரிகாரமோ பலனோ கிடைத்திடுமென்ற நம்பிக்கை கொள்வது மனிதனின் இயல்பாக இருந்து வருகிறது.
நல்ல காரியத்திற்கெல்லாம் கைராசி பார்க்கக் கூடியவர்கள் நம் மக்கள். குடு குடுப்பைக்காரன் சொல்லும் குறியையும், குறத்தி சொல்லும் வாக்கையும், சோழி உருட்டி சோதிடம் கூறுபவனையும், கிளி ஜோதிடத்தையும் நம்புகிற நம்மக்களிடத்தில் ஜோதிடம் எளிதாக இடம் பெற்றுவிட்டது.
பொருளாதாரத்தில் சிக்கித் தவிப்பனையும், பெண்ணாசை கொண்டு அலைபவனையும் கயவர்கள், சமூக விரோதிகள், ஏமாற்றுப் பேர்வழிகள் நயந்து பேசி நம்பும் படியாகச் செய்து முடிவில் நம்பியவனை ஏமாற்றி இருப்பதைப் பறித்துச் செல்வதைப் போல,
சமுதாயத்தில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவர்களையும், பணம் பணம் என்று அலையும் பேராசைக் காரர்களையும், பிரச்சினைகளைச் சந்திக்க திடமான மன உறுதி இல்லாதவர்களையும், அச்சத்தோடு வாழ்பவர்களையும் அவர்களுடைய பலவீனத்தைப் பயன்படுத்தி,
ஜோதிடத்தால் எல்லாவற்றுக்கும் பரிகாரம் காணலாம். யோகம் இருக்கிறது. காலம் சரியில்லை என்றெல்லாம் பொய் கூறி, புரட்டுப் பேசி, நம்பவைத்து பார்ப்பனர்கள் தங்கள் ஜோதிடத்தை புகுத்தியும் பரப்பியும் ஏமாந்த மக்களையும், அக்கால மன்னர்களையும் ஆட்டிப் படைத்தனர். பார்ப்பனர்களின் சுய நலத்திற்கு ஜோதிடம் நன்கு பயன்பட்டு வந்திருக்கிறது - வருகிறது.
தமிழ் மக்களின் வரலாற்றிலும், வாழ்க்கை முறையிலும் இல்லாத ஜோதிடத்தைப் பார்ப்பனர்கள் தமிழர்களிடையே புகுத்திட அக்கால மன்னர்களும் துணை செய்தனர். பார்ப்பனர்களின் பொய்யையும் புரட்டையும் நம்பியதால் ஜோதிடம் மாத்திரமல்ல, வடமொழி யான சமஸ்கிருதத்தைப் புகுத்தினார்கள்.
திருமண முறையில் வைதிகத்தைப் புகுத்தினார்கள். ஆலய வழிபாட்டை அவர்களின்ஆதிக்கத்திற்கு முழுமையாக ஆக்கிக் கொண்டனர். தமிழர்களின் வாழ்க்கை முறையிலும், வழிபாட்டு முறையிலும் பார்ப்பனர்களின் வேத, புராணக் கொள்கைகள் இடம்பெற்று வரலாயிற்று.
1300 ஆண்டுகளுக்கு முன் நடந்த கண்ணகி - கோவலன் திருமணத்தில் வயதான பார்ப்பான் வேதம் ஓதி சடங்குகள் நடத்தி தீ வலம் சுற்றி வந்ததாகச் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீ வலம் செய்வது காண்பார்கண் நோன்பு என்னை கி.பி 2வது நூற்றாண்டிலேயே தமிழர்களின் திருமணச் சடங்குகளில் பார்ப்பனர்கள் ஆரிய கலாச்சாரத்தைப் புகுத்தி விட்டனர்.
ஜோதிடம் பார்ப்பனர்களால்தான் தமிழர்களிடையே புகுத்தப்பட்டது.
பார்ப்பனராகிய விசுவாமித்திரர் ஒரு ஜோதிடர். இந்த பார்ப்பன ஜோதிடர்களின் கட்டுக்கதையைப் பாருங்கள்.
கிருத்திகை நட்சத்திரத்திலுள்ள 7 நட்சத்திரங்களும் 7 முனிவர்களின் மனைவியர்களாம். அம்மனைவிமார் முறையே அம்பா, துலா, நிதத்நி, அப்யந்தி, மேகயந்தி,வர்ஷயந்தி, சுபுனிகா. இது பார்ப்பனர்களின் அறிவியல். ஜோதிடர்களின் வானவியல்.
விஞ்ஞானம் தரும் விளக்கத்தைப் பாருங்கள். கிருத்திகை நட்சத்திரம் சூரியனைவிட 1000 மடங்கு ஒளியுடையது. அதன் குறுக்களவு 90 இலட்சம் கி.மீ. இங் கிருந்து 410 ஒளியாண்டுத் தொலைவில் உள்ளது.
வேதத்திற்கும் - விஞ்ஞானத்திற்கும் உள்ள வேறுபாட்டை எண்ணிப்பார். இந்த வேதம் கூறும் சோதிடத்தை நம்ப வேண்டுமாம்.
ரிக் வேதத்தை ஜோதிட நூல் என்கின்றனர்! மேலும் பிருஹத் சம்கிதை, சாராவளி, காலப்பிரகாசிகா அர்த்த சாஸ்திரம் ஆகியவைகளும் ஜோதிட நூற்களாம். இந்த நூற்கள் ஒருவருடைய மரணம், நிகழ்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகள், நேரம் ஆகியவற்றை வினாடி சுத்தமாக முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடிய கணித முறைகளை விளக்கியிருக்கிறதாம். இப்படி எழுதி இருக்கிறார் தினமணி ஜோதிடர்.
இந்த வேதங்களிளெல்லாம் அறிவியல் இருக்கிறதாம், நாமெல்லாம் அதை நம்ப வேண்டுமாம். இப்படித் துணிந்து இன்னமும் எழுதிக்கொண்டிருக்கின்றனர் பார்ப்பனர்கள்.
உண்மையிலேயே மனித வாழ்வை நிர்ணயிக்கக் கூடிய கணிதமுறை ஜோதிடத்தில் இருக்குமானால் அறிவியல் உலகம் அதை ஏற்றுக்கொண்டிருக்கும்.
உண்மையில்லாத பொய் நிறைந்த பார்ப்பனர்களின் ஜோதிடத்தை அறிவியல் உலகம் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ளாது. வேத காலத்திலிருந்து பார்ப்பனர்கள் சொல்லிப்பார்க்கிறார்கள் அறிவியல் உலகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லையே.
உலகின் வானவியல் அறிஞர்கள், கோபர்னிக்கஸ், கெப்ளர், பிராகே, கலிலியோ, நியூட்டன், லேப்லேஸ், சேம் பர்லின், மவுல்டன், பிரின்சியா, ஜேம்ஸ், பிரெட் ஹாய்ஸ், வான்வெய் ஜக்கர், ஹாய்லி, ஹெயின்ரிச்வேபே, ஈன்ஸ்டீன் ஆகியோர்களின் வானவியல் கருத்துகளை யெல்லாம் ஏற்றுக்கொண்ட விஞ்ஞான உலகம் ஜோதிடத்தையும், தினமணி ஜோதிடர் கூறியுள்ள அந்த வேதக் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளாததற்குக் காரணம் அதிலே அறிவியல் இல்லை; பொய்யும் புரட்டும் கொண்டதாக இருப்பதால் அதை ஏற்றுக்கொள்ள வில்லை.
அறிவியலுக்குப் பொருந்தாத ஜோதிடத்தைப் புகுத்தியவர்கள் பார்ப்பனர்களே. அதை நம்பி ஏமாந்த இளித்த வாயர்களாக வாழ்பவர்கள் தமிழர்களே

Tuesday, May 08, 2018

காந்தியால் துயருறும் பெண்கள்- (Michael Connellan)

பெண்ணுரிமைக்காக இந்தியா தயாரானபோது, மோகன்தாஸ் காந்தி அதைப் பின்னுக்கு இழுத்தார்; தவிர, பெண்கள் தொடர்பான அவரது நடத்தையும் விசித்திரமாகவே இருந்திருக்கிறது.

அவர் மிகவும் வியப்புக்குரிய ஒரு மனிதர். அவர் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை ஒழித்துக்கட்ட உதவி, தன் நாட்டை சுதந்திர நாடாக்க வழிவகை செய்தார். இந்தியா அவரை புனித ஆத்மா என்றும் மகாத்மா என்று வழிபட்டது; இன்றைக்கும் வழிபடுகிறது. அவர் மிகுந்த தைரியம் உள்ளவராகவும், புத்திச் சாதுர்யம் நிரம்பியவராகவும், தன் மக்களிடத்தில் கருணை கொண்டவராகவுமே மேற்கத்திய நாடுகள் அவரைப் பார்க்கின்றன.

ஆனால், காந்தி ஒழுக்கக் கோட்பாடுகளில் மிகக் கடுமையாகவும், இன்பங்களைத் துய்ப்பதைக் கடுமையாக எதிர்ப்பவராகவும், பெண்களை வெறுப்பவராகவுமே இருந்தார். பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் உள்ளுக்குள்ளேயே புதைத்துக் கொள்ளும் ஒரு பெரிய நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதை அவர் உறுதிப்படுத்த விரும்பினார். பெண்கள் பிறப்பதற்கு ஏற்றதாக இல்லாமல் அச்சுறுத்தும் ஒரு நாடாகவே அவர் இந்தியாவை வைத்திருக்க விரும்பினார். 1949-ல் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘காந்தி – சில எண்ணங்கள்’ (Reflections on Gandhi) என்கிற கட்டுரையில், ‘அப்பாவிகள் என்று நிரூபணமாகிற வரையில், மகான்களைக்கூடக் குற்றவாளிகளாகத்தான் பார்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
காந்தி உடலுறவை அடியோடு வெறுத்தார். வம்ச விருத்திக்காக மட்டுமே உடலுறவு கொள்ளலாம்; வேறு எந்த வகையிலும் பாலியல் உறவு கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார். காம இச்சைகளை அடக்கத் தவறினால், அது மலச்சிக்கல் போன்ற உபாதைகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் போதித்தார். உடலுறவு வைத்துக் கொள்வது ஆரோக்கியத்துக்குத் தீங்கானது என்றும், உடலுறவுச் சுதந்திரம் என்பது இந்தியர்களை மனிதர்களாக வாழவே தகுதியற்றதாகச் செய்துவிடும் என்றும் அவர் நம்பினார். ‘சமய நெறிகள் காரணமாக இல்லற இன்பத்தைத் துறந்துவிட்டு வாழ்வது ஒரு நரகம்’ என்றார் மார்ட்டின் லூதர் கிங். ஆனால், அப்படியொரு இன்பம் துறந்த நாடாகத்தான் காந்தி தன் நாட்டைக் காண விரும்பினார். தன் மனைவியிடம்கூடக் கலந்தாலோசிக்காமல், இல்லற இன்பத்தைத் துறப்பதென அவர் தன்னிச்சையாக முடிவெடுத்தார்.
காந்தி பெண்களை ஆண்களுக்கு நிகராக மதித்தார் என்றும், சுதந்திரப் போராட்ட காலத்தில் பெண்கள் செலுத்திய பங்களிப்பைப் போற்றினார் என்றும், காந்தி மற்றும் அந்தப் புனிதரைப் பற்றிக் கட்டுரை எழுதியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஆம்பிளைத்தனமான பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொடுமைக்கு எதிராக அவர் கையாண்ட அஹிம்சா ரீதியான எதிர்ப்பை பெண்மைக்குரிய கொள்கையாக அவர் மதித்துக் கொண்டாடினார். ஆனால், பாலியல் உறவுகள் குறித்தான அவரின் கவலைகள், அவரை பாலுறவுகளுக்கு எதிராக அதிர்ச்சியான கொள்கைகளை எடுக்கச் செய்தன. பெண்களின் உடம்பு குறித்த அவரது சிந்தனை கோணலாக இருந்தது. ரீத்தா பானர்ஜி ‘செக்ஸ் அண்ட் பவர்’ என்கிற தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது போல, ‘பெண்களின் ஆன்மா காம உணர்வுக்குத் திரும்புவதன் காரணமாகவே அவர்களுக்கு மாதாந்திர உதிரப் போக்கு நிகழ்கிறது என்று காந்தி நம்பினார்’.
தென்னாப்பிரிக்காவில் தங்கி, அந்த அரசின் நிறவெறிக் கொள்கையை எதிர்த்து காந்தி போராடிக்கொண்டு இருந்த காலத்தில், இரண்டு பெண்கள் ஓர் இளைஞனைத் தொடர்ந்து பாலியல்ரீதியாகத் தொல்லை கொடுத்துக்கொண்டு இருந்ததைக் கண்டார். அந்தப் ‘பாவக் கண்கள்’ சுத்திகரிக்கப்படவேண்டுமானால், அந்த இரண்டு பெண்களின் தலையை மொட்டை அடித்துவிடும்படி அவர் அவனுக்கு ஆலோசனை சொன்னார். காந்தியே தனது கட்டுரை ஒன்றில் இந்த நிகழ்ச்சியைப் பெருமையோடு குறிப்பிட்டு, பாலியல்ரீதியான தாக்குதல்களுக்குப் பெண்கள்தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்கிற செய்தியை எல்லா இந்தியர்களுக்கும் தெரிவித்துள்ளார். அத்தகைய கொள்கைதான் இன்னமும் நீடித்துள்ளது. 2009-ம் ஆண்டு கோடையில், வட இந்தியாவில் உள்ள கல்லூரிகள் பாலியல் வன்முறைகளுக்குத் தீர்வு காணும் விதமாக, பெண்கள் மேற்கத்திய நாகரிக உடையான ஜீன்ஸ் அணிவதைத் தடை செய்தன. அத்தகைய உடைகள் அந்த வளாகத்தில் உள்ள ஆண்களின் காம உணர்ச்சியைத் தூண்டுகின்றனவாம்.
கற்பழிக்கப்பட்ட இந்தியப் பெண்கள் மனிதர்களுக்குண்டான தகுதியை இழந்துவிடுகிறார்கள் என்று நம்பினார் காந்தி. குடும்ப மற்றும் சமூக நன்மைக்காக, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தங்கள் மகள்களை அப்பாக்கள் கொல்வதைக்கூட அவர் நியாயம் என்று வாதாடினார். தனது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் அவர் தனது கருத்துக்களை மாற்றிக் கொண்டார். ஆனால், அவரது கொள்கைகளின் பாதிப்பு இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் பெண்கள் அவமானம் கருதித் தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் நாளேடுகளில் வந்துகொண்டுதான் இருக்கின்றன. கர்ப்பத்தடை மாத்திரை மற்றும் சாதனங்களுக்கு எதிராகவும் யுத்தம் செய்தார் காந்தி. அவற்றைப் பயன்படுத்தும் பெண்களை விபசாரிகளுக்கு நிகராகக் கருதினார்.
தனது சொந்த காம உணர்வுகளின் மீதே யுத்தம் செய்து அவற்றை அழுத்தப் பார்க்கும் எந்தவொரு ஆண் மகனையும் போலவே, பெண்கள் தொடர்பான காந்தியின் நடத்தை மிக மிகப் புதிராக ஆகிப்போனது. தன் காம இச்சையைக் கட்டுப்படுத்திக்கொள்ளத் தன்னால் முடிகிறதா என்று பரிசோதித்துக் கொள்ளும் பொருட்டு, நிர்வாணமான ஓர் இளம்பெண் மற்றும் தன் உடன்பிறந்தவரின் மகளோடு படுத்து உறங்கினார். இந்தச் செயல் அவரது ஆதரவாளர்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் கடுங் கோபத்தையும் ஏற்படுத்தியது. காந்தியின் மனைவி இதை எப்படி எடுத்துக் கொண்டார் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்!
பெண் என்பவள் அவளை உடைமையாக்கிக் கொண்டுள்ள ஆணுக்குப் பெருமையோ சிறுமையோ தேடித் தரும் ஒரு ஜந்து என்பது மாதிரியான ஒரு மனப்போக்கைத்தான் அடுத்த தலைமுறைக்குப் பதித்துவிட்டுப் போயிருக்கிறார் காந்தி. இதுவும்கூட இன்னமும் தொடர்கிறது. உலக பொருளாதார மன்றத்தின்படி, ஆண்-பெண் சமத்துவப் பட்டியலில் இந்தியா மிக மிகக் கீழே இருக்கிறது. இத்தகைய ஒரு ஆணாதிக்கத்தை எதிர்த்து இந்திய சமூகப் போராளிகள் யுத்தம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். வரதட்சிணைக் கொடுமைகளுக்கு எதிராகவும், வரதட்சிணை சாவுகளுக்கு எதிராகவும் அவர்கள் போராடுகிறார்கள். பதின்பருவ காதலர்களை இகழ்பவர்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள். எய்ட்ஸுக்கு எதிராகப் போராடுகிறார்கள். பெண் குழந்தைகள் பிறப்பதைத் தடுப்பதற்கு எதிராகவும், பெண் சிசுக் கொலைக்கு எதிராகவும் போராடுகிறார்கள்.
இந்திய எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின் வார்த்தைகளில் சொன்னால், “இந்தியாவில் நடக்கும் வன்முறை மற்றும் விரும்பத்தகாத நிகழ்ச்சிகளில் பத்துக்கு ஒன்பது, பாலியல் ரீதியான கட்டுப்பாடு காரணமாகவே நிகழ்கின்றன”. செக்ஸ் மற்றும் பெண்களின் பாலுறவு விருப்பங்கள் தொடர்பாக இந்தியாவில் ஆழமாகப் படிந்து கிடக்கும் இத்தகைய பிரச்னைக்குரிய மனப்போக்குக்கு காந்தியை மட்டும் நாம் தனிப்பட்டுக் குற்றவாளியாக்க முடியாது. ஆனால், தமது ஆளுமையும் புகழும் தொடர்ந்துகொண்டு இருந்த போதிலும், பாலுறவுச் சுதந்திரத்தை இந்தியா எப்போதுமே அனுபவிக்கக் கூடாது என்பதற்காகப் போராடி, அதில் வெற்றியும் பெற்றார் காந்தி. அகிம்ஸா முறையிலான அரசியல் புரட்சிக்கு உள்ள சக்தியை உணர்ந்துகொண்டது காந்தியின் மேதைமை. ஆனால், பெண்களுக்கு எதிரான அவரது எண்ணங்களில் உள்ள வன்முறையானது எண்ணற்ற கௌரவக் கொலைகளையும், அளக்க முடியாத துயரங்களையும் வழங்கியிருக்கிறது.

வாஞ்சிநாதனின் நயவஞ்சகம்


எழுதப்பட்ட வரலாறு பெரும்பாலும் அரசர்களுடைய வரலாறாகவும் ஆதிக்க சாதித் தலைவர்களின் வரலாறாகவுமே இருக்கிறது. குறிப்பிட்ட சாதியினரை மகிழ்விக்க வரலாற்றில் பல சம்பவங்களை திரித்தும் , பலவற்றை மறைத்துமே நமக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ் துரையை வாஞ்சிநாதன் என்பவர் மணியாட்சி ரயில்நிலையத்தில் சுட்டுக்கொன்றார் என்பதுதான் நாம் சிறுவயது முதல் படித்து நமது சுதேச உணர்வுகளை தூண்டிய செய்தி.இதனை படிக்கும் அனைவரும் வாஞ்சியை ஒரு வரலாற்று நாயகனாகவும் சுதந்திரப்போராட்ட தியாகியாகவும் நினைத்து வந்தோம்.
ஆனால் செங்கோட்டையைச் சேர்ந்த பலர் கூறியது , ஆஷ்துரை திருநெல்வேலி ஆட்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அனைத்து சாதியினரையும் சமமாக நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சாதிபாகுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் மதிய உணவு உண்ணவேண்டும் என்றும் ஒரே குடத்தில் தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அவர் செய்த மகத்தான சாதனை , குற்றால அருவியில் தெய்வங்களும் , தெய்வத்திற்க்கு அடுத்தபடியான பிராமணர்களுமே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது என்றிருந்த மறபை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் ஆஷ்.
இதுபோன்ற சமூக சீர்திருத்தங்களை உத்தரவிட்ட்து மட்டுமில்லாது தானே முன்னின்று நட்த்தவும் செய்தார்.அவரின் இந்த செயல்களால் ஆத்திரமடைந்த வாஞ்சிநாதன் “பாரத மாதா சங்கம் “ என்ற பெயரில் பிராமண இளைஞர்களையும் , வெள்ளாளர் இளைஞர்களையும் ( அக்காலத்தில் பிராமணர்களுக்கு தாங்கள் தான் இணையானவர்கள் என்று காட்டிக்கொள்ள அவர்களைப்போலவே நடந்துக்கொண்ட இனம்) சேர்த்துக்கொண்டு ஆஷ் செய்த சீர்திருத்தங்களை எதிர்க்க ஆரம்பித்தனர்.
ஆஷ் தொடர்ந்து சாதியிலான வேறுபாட்டை எதிர்த்து வந்தார். பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டிருந்த அருந்த்தி சமுதாயத்தைச் சேர்ந்த பெண், பிராமணர்கள் வசிக்கும் தெரு வழியாக மருத்துவமனைக்கு போக வேண்டியதிருந்தது. அவர்களை
பிராமணர்கள் உள்ளே விட மறுத்தனர்.
அப்போது அவ்வழியாக வண்டியில் வந்த ஆஷ்துரையும் அவரது மனைவியும் அந்தப்பெண்னை அவர்கள் வண்டியிலேயே ஏற்றி பிராமணர் தெரு வழியாக சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரின் இந்த செயல்களால் பிராமண குலத்திற்க்கு இழுக்கு நேர்ந்ததாக பாரத மாதா சங்கத்தினர் கருதினர்.அதனால் ஆஷை கொன்றுவிட தீர்மானித்தனர். அதன்படியே வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். அவன் சட்டைப்பையில் இருந்த கடித்தின் மூலம் அந்த சங்க உறுப்பினர்களின் ஆதிக்க சாதி வெறி தெரிகிறது.
வார்த்தை மாறாமல் அக்கடிதம் அப்படியே :
“ ஆங்கில சத்துருக்கன் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு ,அழியாத சனாதன தர்மத்தை காலால் மிதித்து துவம்சம் செய்து வருகிறார்கள்.ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேச சத்துருவாகிய ஆங்கிலேயரைத் துரத்தி தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.எங்கள் ராமன்,சிவாஜி,கிருஷ்ணன்,குரு கோவிந்தர்,அர்ஜுன்ன் முதலியோர் இருண்ட்க தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரும் முயற்சி நடந்து வருகிறது.அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனையே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதனைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையோனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன்.இது தான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை”.
இப்படிக்கு,
R. வாஞ்சி ஜயர்.
நியாயமாப்பார்த்தா தீண்டாமையை எதிர்த்து போராடி அதில் ஒரு சாதிவெறி பிடித்த மனிதனால் உயிர் இழந்த ஆங்கிலேய பிரபுவுக்கு நாம் அஞ்சலிதான் செலுத்த வேண்டும்
ஆதாரம்: அருந்ததியர் வாழும் வரலாறு . ஆசிரியர் : மாற்கு.