Friday, May 11, 2018

முப்பாட்டன் கல்லறை எங்கேடா?அரண்மனை எங்கேடா?

எங்கோ முட்டுசந்தில் அங்கிள் சைமன் அங்கு அவசத்திற்கு ஒதுங்கியவனிடம் சில கேள்விகளை கேட்டிருக்கின்றார், அதை ஒளிந்திருந்து கேட்ட தும்பிகள் சாடுகின்றன‌
எப்படி?
ராஜராசோழன் கல்லறை எங்கேடா? அரண்மனை எங்கேடா? பாண்டிய நெடுஞ்செழியன் பால் குடித்த சங்கு எங்கேடா? எம் முப்பாட்டன் குலசேகரன் மகிழ்ந்திருந்த அரண்மனை எங்கேடா என ஒரே சத்தம்
இதையாவது சகித்துவிடலாம் என்றால் அடுத்து கேட்பதுதான் பழனிச்சாமிக்கே கோபம் வரும் கேள்வி
கஜினி முகமதுவினை 17 முறை விரட்டிய ராஜ ராஜ‌ சோழனுக்கு இங்கு எங்கிருக்கின்றது அரண்மனை என்கின்றார்கள்
கஜினி எங்கு வந்தான்? ராஜ ராஜ சோழன் எங்கிருந்தான்? இருவரும் கனவிலும் சந்தித்தவர்கள் இல்லை
கஜினி மாபெரும் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி அல்ல, அவ்வப்போது இந்தியாவில் ஊடுருவி கொள்ளை அடித்துவிட்டு திரும்பிய கொள்ளைக்காரன்
அவன் பெரும் சாம்ராஜ்யம் அமைத்து ஆண்டதாக சரித்திரமில்லை, கொள்ளை அடித்துவிட்டு தப்புவது அவன் ஸ்டைல்
அதுவும் ஆப்கன், பஞ்சாப் லாகூர் காஷ்மீர், குஜராத் என அவன் அட்டகாசம் இருந்ததே தவிர தஞ்சாவூருக்கு எப்பொழுது வந்தான்?
இவர்களாக அள்ளிவிடுவது
முதலில் தமிழர்களுக்கு கல்லறை அமைக்கும் பழக்கமே கிடையாது, உயிர்விட்ட உடன் சுட்டுவிட வேண்டும் என எரிக்கும் பழக்கமே இருந்தது, அதுவும் சாம்பலையும் கரைத்துவிடுவார்கள்
இதில் எங்கிருந்து ராஜ ராஜனுக்கு சமாதி, பாண்டியனுக்கு சமாதி?
பண்டைய ஆலயங்கள் கோவில் என அழைக்கபட்டன, கோ என்றால் அரசன், காப்பவன் அவனின் இல்லம் கோவிலானது
பாண்டிய, சோழ , மன்னர்கள் கோவிலில் ஒரு பகுதியில்தான் அவை நடத்தினார்கள். மீனாட்சி அம்மன் ஆலயம் அதற்கு சான்று
தஞ்சாவூர் பெரிய கோவில் அகழி போன்ற அமைப்புடன் காணப்பட அதுவே காரணம்,
ஊரை சுற்றி கோட்டையும், கோட்டைக்குள் ஆலயத்திற்குள் வசித்தவர்கள் தமிழக மன்னர்கள், அவர்களுக்கு அரண்மனை இல்லை
பின் வந்த நாயக்கர்களும், மராட்டியர்களும் கட்டிகொண்டனர்
சேரர்கள் வித்தியாசம், பின்னாளில் சீன தொடர்பு கிடைத்தபின் அவர்கள் கட்டகலை சீனாவின் பாணியில் அமைந்தது
இன்றும் கூர்ந்து பாருங்கள் கேரள ஆலயமும், அரண்மனையிலும் சீன கூரை சாயல் தெரியும்
சேர சோழ பாண்டி மன்னர்களில் சோழருக்கும், பாண்டியருக்கும் கல்லறை இல்லை, எல்லாம் எரித்துவிட்டு சாம்பலை கரைத்த கதை
சேரரும் அப்படியே
இங்கு சோழன் கல்லறை, பாண்டியன் அரண்மனை என தேடிகொண்டிருப்பதெல்லாம் மகா மோசடி, அப்படி ஒன்று இல்லை
ஆனால் ஒரே ஒரு சேர மன்னனுக்கு கல்லறை உண்டு, ஆனால் இங்கல்ல மெக்காவில்
ஆம் இங்கு இஸ்லாம் 7ம் நூற்றாண்டிலே பரவியது, கேரள சேரமன்னன் சேரமான் பெருமான் என்பவனே முதலில் இஸ்லாமினை ஏற்று மதம் மாறியவன்
இந்தியாவில் முதல் மசூதி அவனாலே கேரளாவில் கட்டபட்டது
மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்டவன் அங்கேயே இறந்தான், அவன் கல்லறை இன்றும் அங்கு உண்டு
முப்பாட்டனுக்கு உள்ள ஒரே கல்லறை அதுதான்
வேண்டுமானால் தும்பிகள் சவுதி அரேபியா சென்று, "இது முப்பாட்டன் கல்லறைடா, விடுங்கடா, நாம் தமிழர்னு பெயர் போடனும்ன்டா, புரட்சிடா, இயக்கம்டா" என கத்தட்டும் பார்க்கலாம்
( ராஜராஜன், பாண்டியன் என கத்தும் தும்பிகளும் சைமனும் ஜெயலலிதாவிற்கு ஏன் மணிமண்டபம் என கேட்கவில்லை அல்லவா?
இதுதான் அவர்களின் தமிழ் உணர்வு, போர்களம்
மெதுவாக காதோரம் ம. நடராசனுக்கு நினைவு மண்டபம் கட்டுவோமா என கேளுங்கள், உடனே கண்களை சிமிட்டியபடி "சரி சரி" என்பார்கள்.)

No comments: