Saturday, May 19, 2018

"பேச நா இரண்டுடையாய் போற்றி!" - பேரறிஞர் அண்ணா

*இந்தப் பக்கம் "பிரபாகரனோடு சேர்ந்துக்கொண்டு ராஜீவ் காந்தியைக் கொன்றதும் தி.மு.க";
அந்தப் பக்கம் "ராஜீவ் மனைவியான சோனியாவோடு சேர்ந்துக்கொண்டு பிரபாகரனைக் கொன்றதும் தி.மு.க".
*இந்தப் பக்கம் "1991ஆம் ஆண்டு முன்னாள் பிரதமரைக் கொன்ற தீவிரவாத இயக்கமான விடுதலைப் புலிகளை தி.மு.க ஆதரித்தது தேச துரோகம்";
அந்தப் பக்கம் "அதனால் எம்.ஜி.ஆர் காலத்தில் பத்தாண்டுகளாக நிபந்தனையின்றி புலிகளுக்கு கோடிக்கணக்கில் பண உதவி செய்துவந்த அ.தி.மு.கவுக்கு 1991 தேர்தலில் வாக்களித்து ஜெயலலிதாவை முதல்வராக்கினோம்"
*இந்தப் பக்கம் "2009 இறுதிக்கட்ட ஈழப் போரில் மேதகு பிரபாகரனுக்கு போதுமான ஆதரவை கலைஞர் வழங்கவில்லை";
அந்தப் பக்கம் "அதனால்தான் பிரபாகரனை கைது செய்து இந்தியச் சிறையில் அடைக்கவேண்டும் என்று பேசிய ஜெயலலிதாவுக்கு 2011 தேர்தலில் ஓட்டுப்போட்டோம்"
*இந்தப் பக்கம் "தி.மு.கவின் பழைய போராட்ட குணங்கள் மழுங்கி இந்திய தேசியத்தின் கைப்பாவையாகிவிட்டது";
அந்தப் பக்கம் "தி.மு.க பிரிவினையை ஊக்குவிக்கும் தேசவிரோதக் கட்சி".
*இந்தப் பக்கம் "89பேரை வைத்துக்கொண்டு ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களை தன்பக்கம் இழுத்து ஆட்சியைப் பிடிக்கத் தெரியாதது ஸ்டாலினின் கையாளாகாதத்தனம்";
அந்தப் பக்கம் "வெறும் 104 எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடிப்பதற்காக பி.ஜே.பி எதிர்க்கட்சி ஆட்களிடம் குதிரை பேரம் நடத்துவது ஜனநாயகப் படுகொலை".
அன்றே இவர்களைத்தான் பேரறிஞர் அண்ணா, "பேச நா இரண்டுடையாய் போற்றி!" என்று வாழ்த்தினார்.

பத்மநாபா நினைவுக் கூட்டத்தில் ஜெயகாந்தன்


ஜெயகாந்தன் சொன்னவைகள் அனைத்தும் உண்மை தான்! புலிகள்தான் தமிழினத்தின் துரோகிகள், புலிகள் பத்பநாபாவையும் மற்றும் அவரின் இயக்க அங்கத்தவர்களை மட்டும் கொலை செய்யவில்லை அவர்கள் tello , thampa, tella, plot, epdp அமைப்புகளில் இருந்த ஆயிரக்கணக்கான இயக்க உறுப்பினர்களை கொன்று குவித்தவர்கள். இவற்றோடு மட்டும் நின்றுவிடவில்லை ஈழத் தமிழர்கள் ஆகிய பொது மக்களையும் பல்லாயிரக்கணக்கானவர்களையும் கொன்று குவித்தவர். இவைகள் அனைத்தையும் தமிழ் நாட்டில் உள்ள தமிழ் மக்கள் அறிய வாய்ப்பில்லை ஏனென்றால் அனைத்தும் மறைக்கப் பட்டுவிட்டது. பொதுவாக புலிகள் கொடிய செயல்கள்தான் செய்தவர்கள். ஈழத் தமிழர்களின் அபிலாஷைகள் அனைத்தையும் குழி தோண்டி புதைத்தவர்கள். இலங்கையில் வடக்கும் கிழக்கும் இணைந்து தனியாட்சியாக செயற்படக் கூடிய வாய்பிருந்தது ஆனால் புலிகள் அவற்றை எல்லாம் நிராகரித்து தமிழ் மக்கள் பெற வேண்டிய நன்மைகள் அனைத்தையும் தவறவிட்டு விட்டு தமிழ் மக்களை ஏமாற்றியே யுத்தம் செய்து வந்தவர்கள். யுத்தத்தினால் இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் அதாவது பொது மக்கள் மட்டும் இறந்ததுதான் மிச்சம்.

ஐம்பது சதவீதமான ஈழத் தமிழர்கள் புலிகளை ஆதரிக்கவில்லை. இறுதிக் காலத்தில் பேச்சு வார்த்தை என்ற பெயரில் மேசைக்கு போனார்கள் புலிகள் அப்பொழுதிலிருந்ததான் ஐம்பது சதவீதமான ஈழத் தமிழர்கள் ஆதரிக்க முன் வந்தார்கள். ஒருமித்த ஈழத் தமிழர்கள் போரை விரும்பவில்லை. போரை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்றே விரும்பினார்கள். ஏனென்றால் ஈழத் தமிழர்களில் இளஞ் சந்ததியினர் போருக்காக உயிரை மாய்த்துக் கொண்ட வண்ணமே இருந்து வந்தார்கள். ஏனென்றால் புலிகள் இயக்கம் காலகாலமாக அவர்களை பயன் படுத்திய வண்ணமே இருந்து வந்தார்கள். நான் இதில் இறுதியாக நடந்த யுத்தத்தைப் பற்றி பேசவில்லை. அதற்கு முன்னால் கொடிய வரலாறுகள் நடந்து கொண்டு வந்திருக்கின்றன. தற்போது யுத்தம் முடிவுக்கு வந்துதான் சிறந்தது ஏனென்றால் இலங்கைத் தமிழ் மக்கள் முந்தய காலங்களைவிட நிம்மதியாக உள்ளார்கள்.

பிரபாகரன் எனும் பாசிஸ்ட் பற்றிய உண்மையை உரக்கச் சொல்வோம்

மே 18: கருணாநிதியைத் தூற்றுவதும் பிரபாகரனைப் பற்றி மௌனிப்பதும்.
மே 18 2009-இல் முடிவுக்கு வந்த இலங்கை உள் நாட்டுப் போர் பற்றி இன்று வரும் பெரும்பாலான பதிவுகள் கருணாநிதி துரோகம் இழைத்தார் என்றும் உலக நாடுகள் கை விட்டன என்றும் புலம்புகின்றன. இலங்கைத் தமிழர்களின் அந்த அவல முடிவுக்கு முழு முதற் காரணம் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
ஒரு பாசிஸ்ட் இயக்கத்தை நடத்தி ஓர் உரிமைப் போரை கோர முடிவை நோக்கி நகர்த்திய கயமை பிரபாகரனையே சாரும். இதைப் பற்றி மழுப்பலாக மௌனம் காத்துவிட்டு ஏனையோரை நோக்கி விரல் நீட்டுவது அயோக்கியத்தனம்.
போரின் முடிவில் அமெரிக்க வால் ஸ்றீட் ஜர்னல் ஒரு செய்திக் கட்டுரையில் 2004 முதல் 2009 வரை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தப் பகுதிகள் எப்படி படிப்படியாக குறைந்துக் கொண்டு வந்து கடைசியில் கடற்கரை மணலில் புதைந்தது என்பதை காட்டியது. அடைய நினைத்த நிலப்பகுதியின் பெரும்பான்மையை அடைந்த பின்னும் தீவிரவாதத்தை கைவிட முடியாத பாசிஸ்ட் இயக்கம் என்ன முடிவை அடையுமோ அதையே புலிகளின் இயக்கம் அடைந்தது. அதில் துயரம் மக்கள் பகடைக் காயானது.
9/11 நிகழ்வுக்கு பின் தீவிரவாதம் குறித்த மக்கள் பார்வையும் உலக நாடுகளின் பார்வையும் மாறியது. 'One man's terrorist is another man's freedom fighter' என்பது கைவிடப்பட்டு உலக நாடுகள் தீவிரவாதம் எதன் பொருட்டு நடந்தாலும் அது தீவிரவாதமே எனும் நிலைக்கு வந்து தீவிரவாதத்தை அரசுகள் ஒடுக்கும் முயற்சிக்கு இடையூறாக, மனித உரிமைகள் காற்றில் பறந்தாலும், இருக்கக் கூடாதென்ற நிலை வந்தது. இதுப் புரியாத பாசிஸ்ட் பிரபாகரன் போரை ஆரம்பித்தார்.
கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் தனி அரசாங்கமே நடத்தினார் பிரபாகரன் ஆனால் அது அரசாங்கமே அல்ல, காட்டு தர்பார். பாசிஸ்ட் கொலைக்கார கொடுங்கோல் ஆட்சி. இன்று பிரபாகரனின் மகனுக்காக உருகும் எத்தனைப் பேர் குழந்தைப் போராளிகளை உருவாக்கி அவர்களை மரணத்துக்கு அனுப்பிய பிரபாகரனை கண்டிக்கத் தயார்?
பத்மனாபாவுக்காக நடந்த இரங்கல் கூட்டத்தில் ஜெயகாந்தன் புலிகளை மிக மிக கடுமையாக சாடி அவர்களுக்கு கொலைச் செய்வதை தவிர வேறொன்றும் தெரியாது என்றார்.
போரின் கடைசிக் கட்டத்தில் தன் மக்களையே மனிதக் கேடயங்களாக பயன் படுத்தி கடைசித் தருணத்தில் தப்பிச் செல்ல முயன்ற தம் மக்களையே சுட்டுக் கொல்ல ஆணையிட்ட கொலைவெறி பிடித்த பாசிஸ்ட் பிரபாகரன் இலங்கைத் தமிழர்களை பீடித்த நோய்.
இலங்கை அரசு, ஜெயவர்த்தனே, பிரேமதாஸா, ராஜபக்‌ஷே ஆகியோரெல்லாம் யோக்கியர்கள் அல்ல. மனித உரிமை மீறல்களை அவர்கள் எல்லோரும் செய்தார்கள். குறிப்பாக 2009 போரின் போது ராஜனக்‌ஷே மனித உயிர்களுக்கு சற்றும் மதிப்பே இல்லாமல் பிரபாகரனை வீழ்த்துகிறேன் என்றப் பெயரில் மனித உரிமை மீறல்களையும் போர் நியம மீறல்களையும் சகஜமாக நடத்தினார். தீவிரவாதத்தை ஒடுக்க முனையும் அரசு தீவிரவாதியாகி அதை நியாயப்படுத்த முடியாது. அரசுகளுக்கு உயரிய கடமை இருக்கிறது. புலிகள் மருத்துவமனைகளுக்கு அருகே ராக்கெட் லாஞ்சர்கள் வைக்கிறார்கள் என்றுச் சொல்லி மருத்துவமனை மீது குண்டுப் பொழிந்தது அரக்கத்தனம். பிரபாகரனை கொல்வதற்காக செஞ்சோலை மீது தாக்குதல் நடத்தியது அரக்கத்தனம்.
சரி அப்படியென்றால் ஏன் பிரபாகரனை குற்றம் சொல்ல வேண்டும்? விடுதலை இயக்கங்கள், பிரிவினை இயக்கங்களின் தோற்றுவாயே ஆட்சியாளர்களின் மாறாந்தாய் மனப்பான்மையும் ஆட்சியாளர்களின் அறம் மீறிய கொடுங்கோன்மையுமே. அவ்வியக்கங்களின் தலைமைய தான் உரிமைக் கோரும் மக்கள் அவ்வியக்கங்களின் போக்குக்கும், முடிவுக்கும் முதன்மை பொறுப்பாளியாக்க முடியும். தன்னால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் திசை மாறி வன்முறை பாதையில் அடியெடுத்து வைக்கிறது என்பதை பார்த்து போராட்டம் உச்சத்தில் இருந்தப் போதும் அதை வாபஸ் பெற்றத் தலைவனை உலகம் இன்றும் மகாத்மா என்றுக் கொண்டாடுகிறது. ( உடனே நான் இலங்கையில் காந்தியப் போராட்டம் நடைப்பெற்றிருக்க வேண்டும் என்றுச் சொல்வதாக அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது).
அமிர்தலிங்கம், பத்மநாபா, ராஜீவ் காந்தி என்று ஒவ்வொரு கொலையையும் பிரபாகரன் நிகழ்த்திய போது அவரது பாசிஸ்ட் தன்மையை மறைத்தோ புரிந்துக் கொள்ளத் தவறியோ அவரை போராளியாக கொண்டாடிய எல்லோரும் ஒரு வகையில் மே 18-2009-க்கு காரணமே. இன்றாவது பிரபாகரன் எனும் பாசிஸ்ட் பற்றிய உண்மையை உரக்கச் சொல்வோம்.

நாங்கள் உண்மையை கூறுகிறோம் அதை திரித்துரைக்கும் வேலையை நீங்கள் செய்கிறீர்கள்.

திமுக காமராஜரை விமர்சித்தது. காமராஜருக்கு எதினான கட்சி.
-காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக 24.05.2006 அன்று அறிவித்தவர் கலைஞர்.
திமுக நாத்திக கட்சி. கடவுள் மறுப்பாளர்களை கொண்டது. கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு எதிரானது.
-பெரியார் தான் கோவிலுக்குள் செல்லும் உரிமைக்காக போராடினார். கலைஞர் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை 02.12.1970 இல் கொண்டு வந்தவர்.
திமுக தமிழ் மொழிக்கு எதிரான கட்சி. தமிழை அழித்தவர்கள் அவர்கள் தான்.
-இருமொழி கொள்கையை கொண்டு வந்தவர் அண்ணா. கடைகளின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும்‌ திரைப்படங்களின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர். தமிழ்தாய் வாழ்த்து கொண்டு வந்தவர் கலைஞர்.செம்மொழி மாநாடு நடத்தியவர் கலைஞர்.
திமுக தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தை விமர்சிப்பவர்களை கொண்டது‌. கண்ணகியையும் பழிப்பவர்கள்.
-கண்ணகிக்கு கோவில் எழுப்பயவர் கலைஞர்.
திமுக வில் இருப்பவர்கள் திருவள்ளுவரை கூட விமர்சிப்பவர்கள்.
-திருவள்ளுவருக்கு 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் முடிவு இங்கு என்று சொல்லாதீர்கள் இதுதான் ஆரம்பம் என்று சொல்லும்படி வானுயர சிலை அமைத்தவர் கலைஞர்.
இதே போல் நாங்கள் இன்று பிரபாகரன் அவர்களையும் விமர்சிக்கிறோம். அது விமர்சனம் மட்டுமே. மற்றவர்கள் எங்கள் மீது உமிழ்வதை போன்ற காழ்ப்புணர்வு அல்ல. சொல்லமுடியாது ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு அவருக்கு சிறப்பு செய்யும் வகையில் தமிழகத்தில் ஏதேனும் ஒரு நினைவகமோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றோ கூட அமைக்கப்படலாம். அல்லது அவ்வாறு அமைந்தால் அது திமுக ஆட்சியில் மட்டுமே நடக்கும்.
நாங்கள் உண்மையை கூறுகிறோம். ஆனால் அதை திரித்துரைக்கும் வேலையை நீங்கள் செய்கிறீர்கள். நாங்கள் பேசுவது உண்மை என்பது உங்களுக்கும் புரியும். காலம் தான் அதற்கான விடை.

இனப்படுகொலை என்றால்

இனப்படுகொலை என்றால் ஒரு இனத்தை மொத்தமாக குவித்து வைத்து கொல்வது
ஹிட்லர் அதனை செய்தான் அதன் பின் கொஞ்ச வருடம் முன்பு யூகேஸ்லேவியாவில் நடந்தது, ஆப்ரிக்காவில் அடிக்கடி நடக்கும்
முள்ளிவாய்க்காலில் 2009ல் நடந்தது இனபடுகொலை ஆகாது, யாழ்பாணத்தில் தமிழர் இயல்பு வாழ்க்கை வாழ்ந்தனர், மட்டகிளப்பு அமைதியாக இருந்தது
கொழும்பு தமிழர் மீது ஒரு குண்டூசி கூட விழவில்லை
சிக்கல் புலிகள் பிடித்து வைத்த முள்ளிவாய்க்கால் பகுதி மக்கள் மூலமாக வந்தது, அவர்களை கிளிநொச்சியில் இருந்தே மிரட்டி கூட கூட்டிகொண்டு கிழக்கு நோக்கி புலிகள் நடத்தினார்கள்
புலிகள் இத்தனை ஆயிரம் மக்களை விடுத்திருந்தால் இக்கொடும் சாவு நடந்திருக்காது, பின் அதுதான் நடந்தது
இதற்கு காரணம் காங்கிரஸ் தோற்கும் வாஜ்பாய் 2009ல் பிரதமராவார் அவர் வைகோவின் பேச்சை கேட்டு ஈழத்தில் தலையிட்டு போரை நிறுத்துவார் எனும் தவறான வழிகாட்டல்
இதனால்தான் அத்தனை ஆயிரம் மக்களை பிடித்து வைத்து புலிகள் காவல் இருந்தனர், சிங்களமோ ஆயிரம் பேர் கொல்லபட்டாலும் புலிகளை விட கூடாது எனும் வெறியில் இருந்தது
இதுதான் சில ஆயிரம் மக்கள் இறக்க காரணம்
அதனால்தான் இக்கொடூர சாவு இனபடுகொலை வகைக்குள் வராது, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என முடிந்துவிட்டது
சும்மா இனபடுகொலை என சொல்பவன் சொல்லிகொண்டே இருப்பான், அவனை திருத்த முடியாது

கஜினி முகமது vs ராஜராஜ சோழன்

கஜினி முகமது சோமநாதபுரத்தில் கொள்ளையிட்ட செல்வத்தில் அவன் சொந்த ஊரான கஜினியில் அணைகட்டினான்
ராஜராஜ சோழன் ஈழவெற்றியின் அடையாளமாக, அனுராதபுரத்தை கொள்ளையடித்து வந்து பெரியகோவிலை கட்டினான்
இதில் கஜினி என்பவன் கொள்ளையன் , ராஜராஜன் என்பவன் மாமன்னமா?
சாதரண மனிதன் செய்தால் கொள்ளை, அதை அரசன் படையோடு செய்தால் போர்
அலெக்ஸாண்டர் முதல் கிழக்கிந்திய கம்பெனிவரை இந்த கொள்ளையினைத்தான் செய்தது, இப்போது அமெரிக்கா எண்ணெய்க்காக செய்கின்றது
ஆனாலும் கொள்ளையில் கோவில் கட்டியதை விட, கோவிலில் அடித்த கொள்ளையில் அணைகட்டிய கஜினி எப்படி மன்னன் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்

தமிழரையே சுட்டு கொல்லும் இவர்களா தமிழர் உரிமையினை பாதுகாப்பார்கள்?

இந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வு என்பதே கலைஞரையும் காங்கிரசையும் திட்டுவதற்கு என்றே நடத்தபடுகின்றது, நடக்கட்டும்
இதில் 2005ல் நடந்த சம்பங்கள் , 2009க்கு எப்படி வழிவிட்டது என்பதை மட்டும் எல்லோரும் மறக்கின்றார்கள், உண்மையில் புலிகள் ராஜிவ் கொலையில் சாகவில்லை. அவர்கள் செய்த ஏகபட்ட அட்டகாசங்களுக்காக சாகவில்லை
2001ல் உலகளாவிய தீவிரவாதிகள் நெட்வொர்க்கை பின்லேடன் அட்டகாசத்தையொட்டி அமெரிக்கா தேட தொடங்கியபொழுது பல்வேறு தீவிரவாதகுழுக்களுடன் புலிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது
உச்சமாக வடகொரியாவிடம் இருந்தும் எல்லா தீவிரவாதிகளுக்கும், புலிகளுக்கும் ஆயுதம் வருவது கண்டறியபட்டது
புலிகள் ஒரு இணைப்பு புள்ளியாக இருப்பதை உணர்ந்த சக்திகள் , புலிகளை அமைதியாக்க விரும்பினர். அழிக்கும் திட்டமெல்லாம் அப்போது இல்லை
சில தீர்வுகளை பெற்றுகொண்டு அமைதியாக இருங்கள் இனி ஆயுதம் எடுக்க கூடாது என சொல்லி நார்வே தூதுகுழுவினை அனுப்பியது.
அகாலத்தில் இந்தியா சொன்னதும் இதுதான், அமெரிக்கா கடைசியில் சொன்னதும் இதுதான்
இலங்கை அரசுக்கு எதிராக அங்கு ஒரு சக்தி வேண்டும், ஆனால் அந்த சக்தி ஆயுதமில்லா சக்தியாக இருக்க வேண்டும்
அதற்கு பெப்பே காட்ட நினைத்தனர் புலிகள், அமெரிக்கா சகித்துகொண்டது, அப்பொழுது இலங்கை அரசு சார்பில் ஒரு தமிழரே பேசிகொண்டிருந்தார்
அவர் பெயர் ல்ஷ்மன் கதிர்காமம்
ஆம் அவர் தமிழர் ஆனால் இலங்கை அரசபிரதிநியாக அவர்தான் வெளிநாடுகளில் பேசினார்
"எங்கள் பிரதிநிதியே தமிழர் இதற்குமேல் நாங்கள் எப்படி உரிமை கொடுக்கமுடியும், இந்த இலங்கையிலா இன அடக்குமுறை உலகமே.." என இலங்கை சொன்னபொழுது மேற்குலகத்தால் தட்டமுடியவில்லை
இந்த லஷ்மன் கதிர்காமத்தை துரோகி என அறிவித்த புலிகள் கொழும்பிலே அவரை சுட்டு கொன்றனர்
வாய்ப்பினை அட்டகாசமாக பயன்படுத்திய இலங்கை, கொழும்பிற்கான அமெரிக்க தூதரிடமே அழுதது. "இந்த கொலைவெறியர்களிடம் என்ன சமாதானம் பேச சொல்லுங்கள், தமிழரையே சுட்டு கொல்லும் இவர்களா தமிழர் உரிமையினை பாதுகாப்பார்கள்? இவர்களுக்கா பேச வந்தீர்கள்?" என்றெல்லாம் வாதிட்டது
அன்று அமைதியாக இருந்த அமெரிக்க தூதர் இருநாள் கழித்து அறிக்கை வெளியிட்டார்
"புலிகள் இன்னும் போரை தொடர்ந்தால் மிக மிக அவமானமான அழிவுக்கு ஆளாவார்கள், அவர்கள் இருந்த தடமே இங்கு இருக்காது"
ஆனால் பிரபாகரன் திருந்தவில்லை, பாலசிங்கம் விலகினார், அப்படியே மரணமடைந்தார்
மீண்டும் மாவிலாறு அணையினை பூட்டி சிங்களனை வம்புக்கு இழுத்தனர் புலிகள், சண்டை அங்குதான் 20006ல் தொடங்கியது
அத்தோடு தன் சமாதான முகமான நார்வேயினை பின்னுக்கு இழுத்துவிட்டு தன் கோரமுகமான இஸ்ரேலை இறக்கியது அமெரிக்கா
இஸ்ரேல் தளபதிகளே இறுதி திட்டத்தை கொடுத்தனர், அது அக்காலத்திலே மோஷே தயான் வகுத்த திட்டங்களில் ஒன்று
"அதாவது நேருக்கு நேர் மோதாதே, 4 புறமும் இருந்து தாக்கு எதிரி சிதறுவான், அப்பொழுது இன்னொரு சில படைபிரிவுகளை உள்ளே இறக்கு எதிரி குழம்புவான்
அப்பொழுது கையில் கிடைத்தவனை எல்லாம் போட்டு அடித்து கொல்"
சிங்கள அரசு 200ல் தொடங்கிய யுத்தத்தை 2009ல் தான் முடித்தது, அதாவது ஒரே நாளில் முடிக்க முடியும் ஆனால் அழிவுகள் பெருகும் என அது முடிந்தவரை நிதானமாகத்தான் செய்தது
2 வருட அவகாசத்தையும் கணக்கில் எடுக்கா புலிகள் இறுதியில் அழிந்தனர்
இதெல்லாம் எவனும் பேசமாட்டான், கலைஞர் கெடுத்தார் இந்தியா கெடுத்தது என சொல்லிகொண்டே இருப்பான்
புலிகளின் இமாலய தவறு அந்த லஷ்மன் கதிர்காமர் எனும் தமிழரை கொன்றது
அது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர் கொலையோடு பிரபாகரன் சாவோடு முடிந்தது

இனி ஈழம் அழியும் என கண்ணால் கண்ட சாட்சிகள் மிக சில

ஆளாளுக்கு முள்ளிவாய்க்கால் என கதறுங்கள், அலறுங்கள், பிரபாகரன் மீன்பிடித்து பொரித்து கொடுத்தான் என கதையும் விடுங்கள்
ஆனால் இனி ஈழம் அழியும் என கண்ணால் கண்ட சாட்சிகள் மிக சில, தமிழகத்தில் இதனை பற்றி பேசும் ஒரே தகுதி கொண்டவர் மிக சிலர், சில‌ர் மகா முக்கியமானவர்கள் ஆனால் அவர்கள் வாய்திறப்பதில்லை
பண்ருட்டி ராமசந்திரனும் ப.சிதம்பரமும் அதில் முக்கியமானவர்கள்.
ப.சிதம்பரம் பிரபாகரன் இந்தியாவில் பயிற்சிபெறும்பொழுது அவனை தன் பாதுகாப்பிலே வைத்திருந்தார், திராவிட கும்பலோடு பழகிய பிரபாகரன் சிதம்பரத்திடம் சொல்லிகொள்ளாமலே ஈழம் கிளம்ப அவருக்கும் பிரபாகரனுக்கும் பொருந்தவில்லை, அந்த உறவை பிரபாகரனே முறித்தார்
பண்ருட்டி ராமசந்திரனை முதல்வர் ராமசந்திரன் ஈழவிவகாரங்களை கையாளும் பொறுப்பையே கொடுத்திருந்தார்
ஐ.நாவில் ஈழதமிழருக்காக பேசிய இந்திய அரசபிரதிநிதி இன்றுவரை பண்ருட்டி ஒருவர்தான்
ஈழசிக்கலின் தொடக்கபுள்ளி ராஜிவும் பிரபாகரனும் டெல்லியில் சந்தித்த அந்த நிகழ்வு
ஏன் இந்தியா நேரடியாக தலையிட்டது என்றால் அந்த வடமாராட்சி முற்றுகைக்கு பின்
அந்த 1987ல் என்ன நடந்தது என்றால் வடமாராட்சியில் இதே முள்ளிவாய்க்கால் போல் புலிகளை சுற்றியது இலங்கைபடை, புலிகள் இதே போல் மக்களை கேடயமாக பிடித்து பயமுறுத்தினர்
மொத்தமாக கொல்லும் முடிவிற்கு ஜெயவர்த்தனே வந்தபொழுதுதான், இந்தியா கப்பலில் முதலில் உதவிபொருளை அனுப்பியது, திருப்பி அனுப்பியது இலங்கை
சட்டென உத்தரவிட்டார் ராஜிவ், இந்திய ராணுவ விமானம் உதவிபொருளோடு பறந்தது, அதற்கு பாதுகாப்பாக மிக் ரக விமானமும் பறந்தது
அலறியது இலங்கை, ஐநா அனுமதி கூட இன்றி தைரியமாக செய்தது ராஜிவ் அரசு. இனி புலிகளால் ஈழமக்களை காக்க முடியாது இந்தியா தலையிட்டே தீரவேண்டும் என்ற முடிவு அப்ப்போழுதுதான் வந்தது
இந்தியா இலங்கை ஒப்பந்தம் அப்பொழுதுதான் போட வேண்டும் என முடிவு செய்யபட்டது
எல்லா இயக்கமும் ஏற்க பிரபாகரன் முரண்டு பிடித்தார், இறுதியில் டெல்லிக்கு இந்திய ஹெலிகாப்டர் அவரை திருச்சி வழியாக ஏற்றி வந்து பேச்சுவார்த்தை நடத்தியது
எங்களை மட்டுமே போராளிகளாக ஏற்க வேண்டும், ஒப்பந்தத்தில் எங்களை சேர்க்க வேண்டும் என ஏகபட்ட நிபந்தனைகளை விதித்தார் பிரபாகரன்
இந்தியா மறுத்தது, சர்வதேச விதிபடி ஒரு நாடு இன்னொரு நாட்ட்டோடுதான் ஒப்பந்தம் போடமுடியும், இதோ சிரியாவில் கூட அப்படித்தான் நடக்கின்றது, இதை எந்நாடும் மீற முடியாது
கடும் அடம்பிடித்த பிரபாகரனை பல வழிகளில் சம்மதிக்க வைக்க எடுத்த முயற்சிகள் தோற்றன, தாங்கள் பல குழுக்களில் ஒன்று என்பதை ஒப்புகொள்ள பிரபாகரன் மறுத்தார்
எல்லா குழுக்களையும் ஒழித்துகட்ட அவர் நினைத்தது இங்குதான்
இறுதியில் தமிழகத்து இரு ராமசந்திரன்களையும் அழைத்தார் ராஜிவ் காந்தி
அதுவரை ஈழவள்ளல், பிரபாகரனின் கொடையாளி என்றெல்லாம் சொல்லபட்ட எம்ஜி ராமசந்திரன் ஆளைவிட்டால் போதும் என ஓட்டம் பிடித்தார்
காரணம் அன்று ராஜிவ்காந்தி ஜெயலலிதாவினை வளர்க்க நினைத்தது அவருக்கு பிடிக்கவில்லை, இதற்காக புலிகளை ஆதரித்து ராஜிவ் எதிர்ப்பு அரசியல் செய்தார். நிலமை எல்லைமீறி செல்ல ஓடியே விட்டார் எம்ஜிஆர்
இறுதிவரை பேச்சுவார்த்தையில் இருந்தது பண்ருட்டி
இறுதியில் சம்பிரதாயத்திற்கு சில ஆயுத ஒப்படைப்பு, மாதம் இந்தியா 50 லட்சம் தரும் போன்ற சில வாக்குறுதியோடு சம்மதித்தார் பிரபாகரன், ஆனால் முழுமனம் இல்லை
எப்படியும் யுத்தம் தொடர்வார் என இந்தியாவும் எதிர்பார்த்தது, பிரபாகரனும் அதே முடிவில் இருந்தார்
அமைதி ஒப்பந்தத்திற்கு தற்காலிகமாக பிரபாகரனை சம்மதிக்க வைக்க பெரும் விலை கொடுத்தது இந்தியா
(காரணம் புலிகள் வரிவசூல் செய்ய கூடாது என்றது இந்தியா, பின் எப்படி இயக்கம் நடத்த என எதிர்த்தார் பிரபாகரன் இதற்குத்தான் இந்த தொகை
ஆனால் பின்னாளில் அதை 1 கோடியாக மாற்றி கேட்டு அழிச்சாட்டியம் செய்து , அதாவது இந்தியா ஈழம் பக்கம் வரவே கூடாது என அமைதிபடையோடு மோதி சிங்களனோடு பிரபாகரன் கை கோர்த்தது வேறு கதை)
இந்த முடிவு கடைசியில் எடுக்கபட்டது , ஆனால் நாள் முழுக்க நடந்த வார்த்தை சண்டையில் தீட்சித், அண்டன் பாலசிங்கம், பண்ருட்டி ராமசந்திரன், அதிகாரி பூரி என சிலர் இருந்தனர்
முதலில் ஒப்பந்தத்தை கிழித்து எறிந்தார் பிரபாகரன், ஆளாளுக்கு பேசி பார்த்தனர், எதுவும் நடக்கவில்லை
அப்பொழுது அதிகாரி பூரி சொன்னார்
"பிரபாகரன் நிச்சயம் உங்களுக்கு ஒருநாடும் உதவ வராது, நீங்கள் எல்லோரும் மொத்தமாக செத்துகிடந்தாலும் வராது
உங்களுக்கு ஓரளவு உதவ கூடியது இந்தியா, இதை தவிர உங்களுக்கு ஒரு முடிவும் இல்லை. மீறினால் பேரழிவு
அழிவு மட்டுமே சாத்தியம், அதனால் இதனை ஏற்றுகொள்ளுங்கள்"
பிரபாகரன் முறைக்க ஆண்டன் பாலசிங்கம் சொன்னார், நீங்கள் சொல்லும் மாகாண ஆட்சியினை விட தனிநாடு அடைய தலைவருக்கு தெரியும், நீர் கிளம்பும்
பூரி சொன்னார், ஒருநாள் உணர்வீர்கள் அன்று எல்லாம் அழிந்திருக்கும்
ஆனால் புலிகள் வாயை மூடி கிளம்பும் என்ற தொணிக்கு வந்தனர்
இதை எல்லாம் பார்த்துகொண்டிருந்த சாட்சி பண்ருட்டி ராமசந்திரன்
ராஜிவும் பிரபாகரனும் பேசும்பொழுது அவர்தான் இருந்தார், ராஜிவ் தன் குண்டு துளைக்கா சட்டையினை பிரபாகரனுக்கு கொடுத்தபொழுதும் அவர்தான் கூட இருந்தார்
பின் காட்சிகள் மாறின, அமைதிபடை மோதல் தொடங்கி 1500 வீரர்கள் செத்து இந்திய வீரர்கள் பிணமாக வரும்பொழுது இந்திய ராணுவம் சொன்னது
"ஒரு நாள் அவர்கள் யாரும் கேட்க ஆளில்லாமல் அனாதையாக அழிவார்கள்"
பின் ராஜிவ் கொலையோடு இந்தியா அடித்து சொன்னது, இனி ஈழமாகாணத்திற்கு கூட வழியில்லை
இறுதியில் அந்த அதிகாரி பூரி சொன்னதுதான் நடந்தது "நீங்கள் ஒரு உரிமையும் இல்லாமல் இருக்கின்றீர்கள், ஒருங்கிணைந்த மாநில அரசை ஏற்றுகொள்ளுங்கள், இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லாமல் போய்விடுவீர்கள்"
இன்று ஒன்றுமே இல்லா நிலைதான் இருகின்றது
முள்ளிவாய்க்கால் கொடுமைக்கு முதல் புள்ளி அந்த டெல்லி சம்பவம் , பிரபாகரன் இந்திய கையினை தட்டிவிட்ட சம்பவம்
இனி புலிகளால் பேரழிவு அங்கு நடக்கும் என கட்டியம் கட்டி சொன்ன சம்பவம் அது
இதை அருகில் இருந்து பார்த்த பண்ருட்டி ராமசந்திர்ன, இன்னும் சில அதிகாரிகள் உண்டு
அவர்கள் எல்லாம் புலிகளால் இலங்கை எரியும் அழியும் என உணர்ந்து அன்றே அமைதி ஆனவர்கள், அதுவும் ராஜிவ் கொலைக்கு பின் கனத்த அமைதி
இவர்கள் எல்லாம் இன்று அமைதியாக இருக்க, அந்த 1987ல் சிவகங்கை பக்கம் ஒரு கிராமத்தில் மாட்டுசாணம் அள்ளிகொண்டிருந்த சைமனும், தஞ்சாவூர் பக்கம் தவழ்ந்து கொண்டிருந்த திருமுருகனும்
அன்று பிறக்கவே இல்லா சில பதர்களும் என்னவெல்லாமோ பேசிகொண்டிருக்கின்றன‌
எங்கள் சொல் கேளாமல் ஆயிரகணக்கான மக்களோடு அழிந்தாயே பிரபாகரா என கண்ணீர்விடும் தகுதி இன்றைய தேதியில் பண்ருட்டி ராமசந்திரனுக்கும், பா.சிதம்பரத்திற்கு மட்டுமே உண்டு
வேறு ஒரு பயலுக்கும் இல்லை...
(இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம், இந்த இன உணர்வாளர்களின் குருநாதர் ம.நடராசன் என்ன செய்துகொண்டிருந்தார்
அவர் ஜெயலலிதாவினை அதிமுக தலைவராக ராஜிவிடம் நடையாய் நடந்தார், எல்லா தரகு வேலையும் செய்தார். புலிகள் ஒழிக்கபடவேண்டும் என்பதில் ராஜிவிற்கு ஆதரவாய் இருந்தார்
ராஜிவினை போயஸ்கார்டனுக்கு அழைத்து விருந்து கொடுத்த காலமும் உண்டு
ஈழம் பற்றியோ, புலிபற்றியோ ஒரு துரும்பும் அவர் செய்யவில்லை, மாறாக அவர் ஈழம்பற்றி கவலைபட்டது எல்லாம் கலைஞருக்கு எப்படி சிக்கலை உண்டாக்கலாம் என்பது பற்றியே..)

ஈழபிம்பம் - பண்ருட்டி ராமசந்திரன்

ஈழபிம்பம் உடைய வேண்டுமானால் இங்கு செய்ய வேண்டியது பண்ருட்டி ராமசந்திரன் போன்றோர் பகிரங்க பேட்டிகளை வழங்க வேண்டும்
ஆனால் வழங்கமாட்டார், அடித்து சொல்லலாம் அவர் வாயே திறக்கமாட்டார்
ஈழத்தின் எதிரி கலைஞர் என்ற கருத்து இங்கு நிலைநிறுத்தபடுவதில் பண்ருட்டியாருக்கு ஏக சந்தோஷம்
காரணம் திமுகவில் இருந்தபொழுதே பண்ருட்டிக்கும் கலைஞருக்கும் ஆகாது
பண்ருட்டியார் அப்பொழுதே பொறியியல் படித்தவர், சிறந்த ராஜ தந்திரி
ஆனால் கட்சியின் உள்ளடி வேலைகளால் அவரை நம்பதகாதவர் பட்டியலில் வைத்தார் கருணாநிதி
பின்னாளில் ராமசந்திரனோடு பண்ருட்டி சென்று அமைச்சர் ஆனபொழுது , ஒருநாளும் பண்ருட்டியினை நம்பாதே என கலைஞர் தனி செய்தி அனுப்பும் அளவு பண்ருட்டி மீது கலைஞருக்கு கோபம் இருந்தது
தான் திமுகவில் பெரிய இடத்திற்கு வந்திருக்க வேண்டியவன் கலைஞர் கெடுத்தார், அதிமுகவிலும் தன் மீது சந்தேக விதைகளை அவர் தூவினார் என்பதில் என்றுமே பண்ருட்டிக்கு கோபம் உண்டு
தேமுதிகவிலிருந்தும் பண்ருட்டி வெளியேற்றபட்டதற்கு திமுகவின் சில நகர்வுகள் உண்டு என்பார்கள்
பண்ருட்டி தன் அரசியல் எதிரி என்ற எண்ணம் கருணாநிதிக்கு எக்காலமும் இருந்தது, அது பண்ருட்டிக்கும் புரிந்தது
அந்த கோபத்தைத்தான் எல்லோரும் கலைஞர் ஈழம் கொன்றவர் என்று தூற்றும்பொழுதும் இன்னும் இல்லாத பொய்களை எல்லாம் சொல்லும்பொழுதும் மனதில் ரசித்துகொண்டு நகர்கின்றார்
இது ஒன்றுதான் அவர் வாய்திறக்காமல் இருக்க காரணம்
இல்லை என்றால் அவர் போன்றவர்கள் பேசினால் ஒரே நாளில் பிரபாகரன் பிம்பம் நொறுங்கும், கலைஞர் செய்த பல முயற்சிகள் பற்றி பேச வேண்டி வரும், புலிகள் பிம்பம் நொறூங்கி சரியும்
அப்படி நொறுங்கினால் கலைஞர் தெய்வம் ஆவார், அதற்கு வழிவிடுவாரா பண்ருட்டி
ஒருநாளும் விடமாட்டார்
அந்த டெல்லி சம்பவங்களை தன் நெஞ்ச்சோடே வைத்து அவர் சுமந்து திரிய இதுதான் காரணம்

தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமைப் பறிப்பு மசோதாவைக் கொண்டு வந்த சட்டத்துறை அமைச்சர் தமிழர் கந்தையா வைத்தியநாதன்

ஈழ நினைவுப் பதிவில் திமுக குறித்து எதுவும் குறிப்பிடவில்லையே தோழர்...?//
1948ல் இலங்கை சுதந்திரம் பெற்றதும் நடந்த பொதுத்தேர்தலில் எஸ்டி சேனநாயக்காவின் ஐக்கிய தேசியக் கட்சி(UNP) வெற்றி பெற்று, அமைந்த முதல் அமைச்சரவையில் 13 பேர் கேபினட் அமைச்சர்கள்.அதில் ஏழு பேர் தமிழர்கள்.
அன்று, சட்டத்துறை அமைச்சர் தமிழர் கந்தையா வைத்தியநாதன், புலம் பெயர்ந்த தமிழர்களான தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமைப் பறிப்பு மசோதாவைக் கொண்டு வந்தார்.
அது வெற்றிகரமாக நிறைவேறியது.
அதை இந்திய வம்சாவளி பூர்வ தமிழர்கள் கண்டு கொள்ளவில்லை.
ஏன்.?
1930 களில் இந்தியாவிலிருந்து தோட்டத்தொழிலாளர்களாகக் கூலி வேலைக்குக் குடிபெயர்ந்தோர் ஏறத்தாழ ஏழரை லட்சம் தமிழர்கள் இருந்தனர்.
இவர்களை, இலங்கையின் பூர்வீகத் தமிழர்கள் மிகவும் கேவலமாகப் பார்த்தனர்.
காரணம் அவர்களில் அதிகமும் தலித் மக்கள்.மேலும் பிழைப்புக்காக வந்த கூலிகள் என்கிற பார்வையும் அவர்கள் மேலிருந்தது.
அதுவே,குடியுரிமைப் பறிப்புக்கு இலங்கைத் தமிழர்களை அமைதி காக்க வைத்தது.
அப்போதே தமிழர்கள் பிளவுபட்டு விட்டனர்.
இந்த சிங்கள வெற்றி பிறகு யுஎன்பி யிலிருந்து பிரிந்து இலங்கை சுதந்திரா கட்சி துவக்கிய பண்டாரா நாயக்காவால் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி எனும் துவேஷ முழக்கத்தை வைக்க உதவியது.
பிறகு தான் ஒட்டுமொத்த தமிழர்களும் சற்று விழித்துக் கொண்டனர்.
இயக்கங்கள் பல துவங்கப் பட்டன.
அவற்றை இங்கு ஆதரித்த எம்ஜிஆரும் கருணாநிதியும் ஒரு விஷயத்தை நன்கு விளங்கி வைத்திருந்தனர்.
அது, இலங்கை எனும் நாட்டிற்குள் தனி தமிழ் நாட்டை வாங்கித் தரும் வலிமை தமக்குக் கிடையாது என்பதுதான்.
இந்தியா போன்ற இத்தனை பெரிய தேசத்தில், பல மொழிகள் பேசுவோர் தமக்கான அதிகாரப் பகிர்வுகளுடன் ஒரு ஒன்றியத்தில் இணைந்து,வாழ்ந்து வருகின்றனர்.இதில் அரசியல் ரீதியாகப் போராடவே பழகியவர்கள் தமிழக அரசியல் தலைவர்கள்.
இலங்கை ஒரு சிறிய தீவு.அதில் பிரதான இரண்டு மொழி பேசும் மக்கள்.அதில் அரசியல் செய்து சறுக்கிய தமிழர்கள்.
பிறகு தனி நாடு வேண்டும் என ஆயுதப் போராட்டத்திற்கு நகர்கின்றனர்.
அவர்களுக்கு ராணுவ உதவி செய்யும் அதிகாரம் தமிழகத்துக்கு இல்லை.
மேலும், இலங்கைத் தமிழ் அரசியலை வழி நடத்துமளவுக்கு செல்வாக்கு தமிழகத்தில் எவருக்கும் கிடையாது.இருந்தாலும் அவர்கள் ஏற்கப் போவதுமில்லை.
இதுதான் இன்று வரை நிலைமை.!
திமுகவைப் பொறுத்தவரை,
எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு தமிழினத்தலைவர் எனும் பிம்பத்தை நன்கு உருவாக்கிக் கொண்ட கலைஞருக்கு, அதுவே எதிராகவும் ஆகிப் போனது.
2009 என்பது திமுக வுக்கு ஒரு வாய்ப்பு அல்லது சோதனை.
அதில் மத்திய அமைச்சரவைப் பதவிகளைக் கைப்பற்றுவதா அல்லது காங்கிரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டு, ஆட்சியை இழப்பதா என முடிவெடுக்க வேண்டியிருந்தது.
இரண்டில் எதைச் செய்தாலும் போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்காது என்கிற உண்மை தனியே இருக்க, தமிழினத் தலைமை எனும் இமேஜ் மட்டுமே திமுகவின் பிரச்சினை.
ஈழத்திற்காக ஆட்சி போயிருந்தால் திமுக இமேஜ் மேலும் உயர்ந்திருக்கும்.
இலை மலர்ந்தால் ஈழம் மலருமெனும் சீமான் உளறல்களும், மீண்டும் அதிமுக ஆட்சியும் வராமல் போயிருக்கலாம்.
திமுகவே மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கலாம்.
ஆனால் இவை யாவும் நிகழ்தகவுகளே.
எனவே இது குறித்து கவலையோ அக்கறையோ பட வேண்டியது திமுகவினர்தானே தவிர
ஈழ அக்கறை கொண்டவர்களல்ல.
மறுபுறம், திராவிடத் தெலுங்குப் பாசமே தமிழின அழிப்புக்குத் துணை போகச் செய்தது என்று பேசும் தமிழ்த் தேசியர்கள் ஆபத்தானவர்களாக இருக்கின்றனர்.
2009 காலகட்டத்தில் மத்திய அமைச்சராக இருந்த அன்புமணியோ பாமகவோ ஈழத்திற்காக எந்தப் பெரிய போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.
ஆனால், எம்பியாக இருந்து ஈழத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் துயரங்களை வெளிச்சமிட்டதுடன், தொடர்ந்து ஈழ ஆதரவு போராட்டங்களை நடத்திய விசிக தலைவரையே ஜாதித் தமிழ்த் தேசியம் குறிவைத்தது.
கலைஞரை எதிர்த்து விட்டு ஜெயலலிதாவைத்தான் ஆதரித்தனர்.
இன்று வரை திமுக எதிர்ப்புப் பேசிய தமிழ்த் தேசியம் தனது ஜாதி ஆதிக்க மனநோயையும், பார்ப்பன அடிமைத்தனத்தையும் இழக்கவில்லை.
எனில் விமர்சிக்கப் பட வேண்டியது திமுக அல்ல.
தமிழ்த் தேசியமோ, தமிழின ஒற்றுமையோ பேசுவதற்குக் கொஞ்சமும் அருகதையற்ற இந்த ஊர்த்தெருத் தமிழ்த்தேசியமே.
காரணம், தீர்வு அல்லது மாற்றம் என்பது மக்களிடமே ஏற்பட வேண்டும்.
அதைக் கண்டுகொள்ளாமல், ஈழத்தை வெறும் அரசியல் வணிகமாக்கி
இன/மொழி/ஜாதி அடிப்படை வாதத்தை உயர்த்திப் பிடிப்போரே எதிர்க்கப் பட வேண்டியோராய் உள்ளனர்.

ஈழப்போர் தோல்வி - இன்னொரு பக்கம்

May 19, 2009 கொழும்பு விமான நிலையத்தில் நான்
இப்போது நினைத்தாலும் உடல் சில்லிட்டு உறைந்து போகிறது.
வரலாற்றின் அந்தக் கொடுமையான தினத்தில் நான் அந்த மண்ணில்
நிர்கதியாக நின்று கொண்டிருந்தேன். அதுவும் என் குடும்பத்துடன்.
பாங்காக்கிலிருந்து மும்பைக்கு வரும் வழி. அதுவும் ஶ்ரீலங்கா
விமானத்தில் பயணம். கொழும்பு வழியாக எங்கள் பயணம். இந்திய அரசு
மீது அசாத்தியமான நம்பிக்கையுடன் இருந்த காலக்கட்டம். எப்படியும்
இந்திய அரசு எதாவது செய்துவிடும். தமிழக அரசின் கெடுபிடி அதிகரிக்கும்
என்றெல்லாம் தவறாக ஊட்டப்பட்ட நம்பிக்கையில் -குருட்டு நம்பிக்கையில்-
காத்திருந்த தருணம்.
கொழும்பு நகரில் இறங்கியுவுடன் நிலைமை கைமீறிப் போய்விட்டதை அறிந்து
கொள்கிறேன். கால்கள் நடுக்கமெடுக்கின்றன. என் கணவர் சங்கர் என் குழந்தைகளை
என்ன நடந்தாலும் அமைதியாக இருக்க வேண்டும். பயப்படக்கூடாது, டிவியில் காட்டப்படும்
எந்தக் காட்சிகள் குறித்தும் மும்பையில் வீடுபோய் சேரும் வரை எதுவும் பேசக்கூடாது
என்று சொல்லி அழைத்து வருகிறார். மும்பை விமானத்திற்கு 4 மணி நேரம் நாங்கள்
விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை. டிவி திரைகளில் காட்சிகள் ஓடுகின்றன.
அதைக் கொண்டாடிய சிங்கள முகங்கள் .. ஆண்களும் பெண்களும் கூடி பேசி சிரித்து
ஆராவாரம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது நான் என்ன மன நிலையில் இருந்திருப்பேன்
என்று என்னால் முழுமையாக வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை. எனக்குள் ஒரு நெருப்பு..
நானே அக்னியாகி அத்தருணத்தில் என்னை எரித்துக்கொண்டு எல்லாவற்றையும் எரித்துக்
கொண்டு இந்து மாகடலில் கரைந்துவிட மாட்டோமா என்றிருந்தது. என்னால் எதுவும் செய்ய
முடியாது என்ற கையறுனிலை இன்றுவரை குற்ற உணர்வுக்கு தள்ளுகிறது.
உடல் அனலாகக் கொதித்தது. தலை விண்விண் என்று வலிக்க ஆரம்பித்தது.
பாத்ரூமிறிகுள் நான் போவதும் திரும்புவதுமாய் இருப்பதை அவர்கள் கவனிக்க
ஆரம்பித்தார்கள். நான் போய்வந்தவுடன் பாத்ரூமுக்குள் போய் அறையைக் கண்காணித்தார்கள்.
அவள் கண்முன்னாலேயே பேசினில் வாந்தி எடுத்து தொலைத்தேன். அவள் முகச்சுழிப்புடன்
என்னைப் பார்த்தாள்.
நான் வெளியில் வரவும் அவளும் அவளுடன் இன்னும் இரு ஆண்களும் பெண்களும்
என்னைச் சுற்றி நின்றார்கள். என் பாஸ்போர்ட் டிக்கெட் விவரங்களை வாங்கிப் பரிசோதித்தார்கள்.
வெட்கத்தை விட்டு சொல்கிறேன்.. அப்போது நாங்கள் அவர்களுடன் இந்தியில் பேசினோம்.
மும்பை முகவரி.. இந்தியில் பேசியது.. நெற்றியில் போட்டு இல்லாதது.. குழந்தைகள் இந்தியில்
பேசிக்கொண்டது.. இப்படியாக அச்சூழலிருந்து தப்பினோம்.. எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.
இன்று அதை நினைத்தால் அவமானமாக இருக்கிறது. என்மீதே எனக்கு
வெறுப்பும் ஏற்படுகிறது. இருத்தல் என்பது இவ்வளவு கேவலமானதா?
என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்!
அதன் பின் … திமுக அரசியலையும் அக்கட்சியின் தலைமையையும் மிகவும் கடுமையாக எதிர்க்க
ஆரம்பித்தேன். திமுக அரசும் திமுக தலைமையும் ஈழப்போருக்கு ஆதரவாக பதவி விலகி இருந்தால்
மட்டும் முள்ளிவாய்க்கால் கொடுமைகள் நடந்திருக்காது என்றோ அல்லது ஈழப்போரின்
முடிவுகள் வேறுமாதிரி இருந்திருக்கலாம் என்றோ சொல்லவரவில்லை.
பன்னாட்டு அரசியல் ஆயுத அரசியல் பூகோள அரசியல் வல்லரசுக்கான போராட்டத்தில்
ஈழம் பலிகாடானது என்பதை நானும் அறிவேன். ஆனால் அத்தருணத்தில் திமுக தலைமை
எடுத்த முடிவுகளும் உண்ணா நிலைப் போராட்ட கேவலமான நாடகக்காட்சியும்
என் போன்றவர்களுக்கு உள்ளத்தில் ஆறாத தழும்பாக இருக்கிறது.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்ற வரிகளைச் சொல்லித்தான் எல்லா மேடைகளிலும் என் உரையை ஆரம்பிப்பது வழக்கம். 2009 மே 19 க்குப் பிறகு அந்த வரிகள்
என்னை விட்டு விடைபெற்றுவிட்டன. எதுவும் எழுதமுடியாமல் வாசிக்க முடியாமல் சற்றொப்ப
இரண்டு வருடங்களுக்கும் மேலாக அவதிப்பட்டிருக்கிறேன்.
அன்று கொழும்பு நகர் விமான நிலையத்தில் நான் என்ன நினைத்தேன் என்பதையோ
என்ன செய்ய விரும்பினேன் என்பதையோ என்னால் பதிவு செய்ய முடியாது. இதற்குமேல்
அதைப் பற்றி சொல்வதற்கு தெரியவில்லை.
தேசப்பற்று தேசியம் என்று பேசப்படும் கருத்தருவாக்கங்களை இன்று நான் மீள்வாசிப்பு
செய்து கொண்டிருக்கிறேன்.
(ஒவ்வொரு ஆண்டும் இந்த என் அனுபவத்தை என் தோழி மீராவுடன் பகிர்ந்து கொள்வதுண்டு.
அவள் இதைப் பற்றி நான் பதிவு செய்யவேண்டும் என்று அடிக்கடி சொல்லுவாள். அவளை விட்டு
தொலைவில் இருக்கும் இன்னாளில் .. நன்றி தோழி.)

ஒட்டுமொத்தப்பழியையும் திமுக மீது சுமத்தினார்களே

ராஜிவ்காந்தியை தமிழக மண்ணிலே சாய்த்தெறிந்த பொழுது ஒட்டுமொத்தப்பழியையும் திமுக மீது சுமத்தினார்களே! அப்போதெல்லாம் நெடுமாறனும்! சீமானும்! சில ஈழவியாபாரிகளும் எங்கே போனார்கள்?
விடுதலை புலிகள் செய்த தவற்றையெலாம் திமுக மீது சுமத்தியதால்! ஆட்சியை இழந்தது மட்டுமல்ல! திமுக மீது அவப்பெயரையும் சுமத்தி கட்சியை களங்கப்படுத்தினார்களே! அப்போதெல்லாம் இந்த மதுரை மாமா நெடுமாறன் எங்கு சென்று! எதைப்பிடுங்கிக்கொண்டிருந்தார்?
விடுதலைப்புலிகள் தவறுசெய்தால் திமுக மீது சுமத்தவேண்டுமென்பது மட்டும் என்ன லாஜிக் முட்டாள்களே! விடுதலைப்புலிகளால் திமுக மட்டுமே இழப்பை! அவமானத்தை சந்தித்தது! அப்போது சீமான் முதியவனாக இருந்தானா? இல்லை பொடியனாக பொரியுருண்டை ருசித்தானா?
ஈழம் வீழ்ந்தது விடுதலைப்புலிகளின் தவறான கோணல்களின் வழிகாட்டுதல்களால் அன்றி போர்முனைகளால் அல்லவே! விடுதலை புலிகளுக்குள் மதமும் சாதியமும் உள்வாங்கியதை யாராலும் மறுக்க முடியாது!
இந்தியநாட்டிலுள்ள ஒரு சிறு மாநில கட்சியால் போரைநிறுத்த முடியுமென்றால்! அந்த அதிகாரம் மாநில அரசிற்கு இருக்குமானால்! தமிழகத்தை போர்முனைத்தளமாக்கி ஈழத்தை பெற்றுத்தந்திருப்பார் தலைவர் கலைஞர்! கலைஞரால் முடியாதது எதுவுமல்ல! இதையெலாம் சிந்திக்காமல் திமுக போரைநிறுத்த முயற்சிக்கவில்லை எனக்கூமுட்டைகள் இனியும் கூவிக்கொண்டிருப்பது அரசியல் ஆதாயச்சுயநலம்!
ஆண்டன் பாலசிங்கத்தின் அறிவுரைகளை மதித்து நடக்காதது யார்குற்றம்? கோமாளிகளே?
ரணில் விக்ரமசிங்கேயைத் தோற்கடிக்க ராஜபக்ஷேவுக்கு வாக்களிக்கச்சொன்ன பிரபாகரனை இங்குள்ள ஈழவியாபாரிகள் ஏன் என்று நேரில் போய் கேட்டீர்களா?
பொத்தாம் பொதுவாக நாங்கள் திமுக வைத்தான் குறைசொல்வோம் என கிளம்புவீர்களேயானால்! ஈழக்கோல்மால்களை நாங்களும் தோண்டவேண்டி வரும்!
விடமாட்டோம்! தொடர்ந்துகொண்டே தொலைத்தெடுப்போம்!

----

1980 களில் குட்டிமணி ஜெகன் போன்றவீரர்கள் வெளிக்கடை சிறையில் சித்தரவதை செய்யப்பட்டபோது தமிழகத்தில் திமுக வை சார்ந்த நாங்கள் கல்லூரியில் படிக்கும் போது அனைத்து கல்லூரி மாணவர்களை ஒன்று திரட்டி தமிழகம் முழுவதும் போராடினோம். அப்போது என்போன்றோர் முன்னின்று 1984 ல் நடத்திய எங்கள் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி மாணவர் ஊர்வலத்தில்.திருச்சி முருகன் டிரான்ஸபோர்ட் 9 நம்பர் நகர பேரூந்து டிரைவர் பஸ்ஸை தாறுமாறாக ஓட்டி எங்கள் கூட வந்த மாணவர்கள் 9 பேர் மீது மோதி மரணம்எய்தினர் இலங்கை தமிழர்க்காக தமிழகத்தில் முதல் உயிர் தியாகம் மாணவர்கள் செய்ததை எங்கள் இதயத்தைவிட்டு மறையவில்லை ஆனல் இன்று வரலாறு தெரியாத சில கூலிக்கு மாறடிக்கும் சைமன்கள் ஈழ தமிழர் பற்றி பேசுவது கோமாளி தனமாக உள்ளது. தமிழகத்தில் கலைஞர் மற்றும் அப்போது சுமார் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக பாராளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர் வைகோபால்சாமி போன்றோர் ஈழ விடுதலை க்காக உண்மையாக உணர்வுபூர்வமாக போராடிய சபையில் வாதாடியவர்கள் மற்றவர்கள்எல்லாம் காலபோக்கில் மாரடித்த கயவாழிகள் தற்போது பேசுவது அனைத்தும் பொய்பொய்யாய் பேசி மெய்யாக்க பார்க்கும் திருட்டுதனமாகவே எஙகளை போன்றோர் உணர்கிறோ்ம். இந்திய அரசு ஐநா சபை தழையிடவேண்டிய பிரச்னை யை வேண்டுமென்றே திமுக கலைஞரை யும் பேசிபேசி மக்களை ஏமாற்றும் வளர்ந்த மான் பெரிய சைமன் நிறுத்தகொள்

---


விடுதலை புலிகள் இலங்கையில் குடியேரிய மலையகத் தமிழனுக்கு ஓட்டுரிமை கொடுக்கக்கூடாது என போராடியவர்கள் அவர்களை வந்தேரி என்றர் தமிழனால் தமிழனே இரண்டாம்தர மக்களாக் கப்பட்டர்

---

Friday, May 18, 2018

1990-ல், ஈழம் பற்றிய ஜெயகாந்தனின் தெளிவான பேச்சு

1990-ல், ஈழம் பற்றிய ஜெயகாந்தனின் தெளிவான பேச்சு.
ஈழ வரலாற்றை 1990யிலிருந்து தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
சாகித்திய விருது, பத்ம பூஷன் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன்.
இந்த காணொளி 1990 ல் தமிழ் தேசிய கூட்டணியால் சென்னையில் நடத்தப்பட்டது. இதில் தமிழ் தேசியவாதி மாபொசியும் கலந்து கொண்டுள்ளார்.
அன்றைய நாளில், ஈழத்திற்காக இரு அணிகள் போராடினர்.....
அமைதி வழியில், பத்மநாபா, அமிர்தலிங்கம் தலைமையில் ஒரு அணியும்,
ஆயுதம் ஏந்தி வன்முறை வழியில் பிரபாகரன் தலைமையில் ஒரு அணியும் போராடினர்.
1990-ல், பிரபாகரனும், பத்மநாபாவும் சென்னை வந்திருந்தனர்.
சென்னையில் அப்போது கலைஞர் முதல்வர்.
பத்மநாபா தேர்தல் களத்தில் பிரபலமாகி வந்தார். தமிழ் இளைஞர்களிடம் செல்வாக்கு பெற்று வந்த பத்மநாபாவை பிரபாகரனுக்கு பிடிக்கவில்லை.
பத்மநாபா, பிரபாகரன் இருவரும் தங்களுக்குள் அடித்து கொள்ளக்கூடாது ..ஒற்றுமையாக இருங்கள் என்று பல முறை பல தலைவர்கள் அறிவுரை கூறி வந்தனர்.
ஆனால், அதை பொருட்படுத்தாமல் பிரபாகரன், 1990-ல், சென்னை கோடம்பாக்கத்தில், பட்டப்பகலில், பத்மபாவையும், அவர் உடன் இருந்த மற்ற 10 தமிழ் தலைவர்களையும் சுட்டு கொன்றுவிட்டு தப்பித்து விட்டார்.
கடல் வழியாக தப்பிக்க முயன்ற பிரபாகரனை தமிழக போலீஸ் மடக்கி பிடித்து விட்டது. கலைஞரிடம் தகவல் செல்கிறது. ஆனால், முதல்வர் கலைஞர் பிரபாகரனை தப்பிக்க விட்டு விடும்படி காவல்துறையிடம் கூற பிரபாகரன் சென்னையை விட்டு தப்பி இலங்கை சென்று விட்டார். அதுதான் பிரபாகரனின் கடைசி சென்னை பயணம். பிரபாகரனை தப்ப வைத்ததே கலைஞர்தான். அன்று கலைஞர் அப்படி செய்ய வில்லை என்றால் பிரபகாரன் தமிழக சிறையில் எப்போதோ தூக்கிலிடப்பட்டிருப்பார்.
பத்பநாபா கொலையை கண்டித்து அன்றைய தமிழ் தேசியவாதிகள்(ஜூன் 1990) கண்டன கூட்டம் நடத்தினர்.
புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஜெயலலிதா கலைஞர் மீது தமிழ் நாடு முழுவதும் பரப்புரை செய்கிறார்.
150 MLA க்களுடன் அருதி பெரும்பான்மை திமுக ஆட்சி, ஜெயலலிதா, சுப்பிரமணியம் சாமி தூண்டுதலின் பேரில் கலைக்க பட்டது.
ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆக, புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்ய படுகிறது. புலிகளை ஆதரித்து பேசிய வைகோ, சுபவீ போன்றவர்கள் பொடாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டனர். பிரபாகரன் தூக்கிலிடப்பட்ட வேண்டும் என்று சட்டசபையில் சீமானின் மாமனார் காளிமுத்து தலைமையில் ஜெயலலிதா தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்.
ஆனால், புலிகளுக்கு எதிராக பேசிய மபொசி யைத்தான் சீமான் தலைவர் என்கிறார், ஜெயலலிதாவை ஈழத்தாய் என்கிறார். காளிமுத்து மகளை திருமணம் செய்து கொண்டார்.
ஜெயகாந்தன் அன்றே சொல்லிருக்கிறார் ..புலிகள் அழிவுப்பாதையை நோக்கி செல்கின்றனர்..அவர்கள் அழிவார்கள் என்று.
ஏறத்தாழ 20 ஆண்டுகள் கழித்து ஜெயகாந்தன் சொன்னது போலவே புலிகள் தானும் அழிந்து, தமிழர்களும் அழிய ஒரு காரணமாகி விட்டனர்.

பிறரை குறை சொல்வதை தவிர்த்து ஈழ மக்களும் ஈழ ஆதரவாளர்களும் இதை முதலில் உணரவேண்டும்

21 ம் நூற்றாண்டில் தமிழர்கள் கேட்டது இரண்டு தனிநாடுகள் இரண்டும் கிடைக்காத நிலையில் இவற்றின் இன்றைய நிலை ?
தனிநாடு பெறுவதென்றால் இழப்பின்றி முடியவே முடியாது இதனால் நாம் பெரும் உயிரிழப்பை சந்திக்க நேரிடும் போராட்டங்களாலும் கலவரங்களாலும் தமிழகத்தின் வளர்ச்சி இந்தியாவின் கடைசி இடத்திற்கு தள்ளப்படும் இந்திய ராணுவத்துடன் நடக்கும் சண்டையில் நம் தமிழ் சகோதரிகள் லட்சக்கணக்கில் விதவையாவது உறுதி என்பதும் அப்படி பல இழப்புகளை சந்தித்தாலும் திராவிடநாடு கிடைக்காது என்பதையும் தெள்ள தெளிவாக அறிந்துதான் அண்ணா கலைஞர் போன்ற தலைவர்கள் அன்றே திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டனர் அதன் பலனாகதான் வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் இன்றும் தொடர்ந்து டாப் 3 இடத்திற்க்குள் இருக்கிறது ஆசியாவின் மிகபெரிய நகரங்கள் பட்டியலில் சென்னை செழிப்பாக இருக்கிறது நாம் தமிழ்நாட்டில் நிம்மதியாக வாழவும் தூங்கவும் முடிகிறது
ஆனால் அதேவேளையில் ஈழ பகுதிகளை கொஞ்சம் உற்று நோக்குங்கள் போரில் பல சமாதான வாய்ப்புக்களை உதறி தள்ளிய சக போராளி தலைவர்களை கொன்று குவித்த சாகபோகிறோம் என்று தெரிந்தும் பிரபாகரன் என்ற சரியான முடிவெடுக்க தெரியாத தலைவரால் இன்று இவர்கள் கேட்ட அந்த ஈழ நாடே உருத்தெரியாமல் அழிந்து கிடக்கிறது. ஒரு மகாராஷ்டிரா போலவோ ஒரு தமிழ்நாடு போலவோ வளர்ந்திருக்க வேண்டிய ஈழ பகுதிகளின் இன்றைய நிலை கொடூரமானது அடிப்படை வசதிகூட இல்லாத நிலையில் பரிதாபமாக சுற்றுகிறார்கள் தமிழகத்தை போல கல்வியில் எஞ்சினியரிங் மருத்துவம் உள்பட எந்தவித மேற்படிப்புகளும் படிக்க கல்லூரியும் இல்லை படித்தால் வேலை கொடுக்க கம்பெணிகளும் இல்லை தமிழகத்தை போல மானாட மயிலாட நிகழ்ச்சியோ Vgp குயின்ஸ்லேண்ட் Mgm என குடும்பத்தை மகிழ்விக்க எந்த போழுது போக்கும் டிஸ்கோத்தே ஹோட்டல் பார்ட்டி என்று எந்த உல்லாச வாழ்க்கைகளும் கிடையாது நம்ம ஊர் போல மெட்ரோ ரயிலும் கிடையாது நம்ம ஊர் போல பல ஏர்போட்டுகளும் கிடையாது அதைவிட திருநெல்வேலி அளவுக்கு கூட ஈழத்தில் ஒரு ஊர் கிடையாது ஆகையால் பிரபாகரன் போல சரியாக முடிவெடுக்க தெரியாத தலைவர்களால் தனிநாடு கேட்ட ஈழம் சுடுகாடாய் மாறியதையும் கண்கூடாக பார்க்கிறோம்
அண்ணா கலைஞர் போன்று திராவிடநாடு வேண்டாமென முடிவெடுத்த நல்ல புத்திசாலி தலைவர்களால் தனிநாடு கேட்ட தமிழ்நாடு தனிநாடு கிடைக்கவில்லை என்றாலும் தன்னிறைவான வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்பதே உண்மை பிறரை குறை சொல்வதை தவிர்த்து ஈழ மக்களும்
ஈழ ஆதரவாளர்களும் இதை முதலில் உணரவேண்டும்.

உழைத்தவர்க்கெல்லாம் எதிரியாம்

தாழ்த்தப்பட்ட இனத்தில் தான் பிறந்தார். அவர்களுக்காக தான் உழைத்தார். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரி.
மத்தியில் இருக்கும் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு மாநிலத்தின் அரசியல் கட்சி தலைவராக தான் இருந்தார். ஆனால் விபி சிங்கை தவிர அனைவரையும் தன் மக்களுக்காக எதிர்த்தார். ஆனால் தமிழக மக்களின் எதிரி.
ஈழத்திற்காக யாருமே பேசாத சமயங்களிலும் தன் எழுத்துக்களின் மூலமும் சட்டமன்றத்திலும் தன் எதிர்ப்புகளை கடுமையாக வைத்தார். இந்திரா காந்தியை எதிர்த்து பேசினார். ஆனால் ஈழ மக்களுக்கும் எதிரி.
விடுதலைப் புலிகளுக்காக இரண்டு முறை ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை அவர்களை விமர்சித்தோ கண்டித்தோ ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளின் எதிரி.
வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து பல படைப்புகளை தந்து தமிழுக்காக தமிழ் தாய் வாழ்த்து என்ற முறையையும் கொண்டு வந்தார். செம்மொழி மாநாட்டையும் நடத்தினார். ஆனால் இவர் தமிழுக்கும் எதிரி.
கண்ணகிக்கு சிலை திறந்தார். தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாம் ஆண்டு விழாவை வெற்றிகரமாக நடத்தினார். ஆனால் ஆத்திகர்களுக்கும் எதிரி.
இவர் பெரும்பான்மை மக்களுக்கு எதிரியாகத்தான் இருந்தார். ஏனெனில் வாழும் காலம் முழுவதும் சிறுபான்மையினருக்கும் ஒடுக்கப் பட்டவர்களுக்காகவுமே யோசித்து வாழ்ந்து வந்தவர்.
இன்னும் இவரை இகழாதவை எதாவது இருந்தாலும் இகழ்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் எப்படி இகழலாம் என்று முடிவெடுப்பதற்குள் அதே முறையில் வேறொருவர் இவரை பழித்திருப்பார்.
வேறென்ன பழுத்த மரம் தானே கல்லடி படும்.

கருணாநிதிக்கு பிரபாகரன் எழுதிய மடல்


23.7.97
தமிழீழம் 

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அண்ணாவிற்கு.
நான் நலமேயுள்ளேன்
அதுபோல் நீங்களும் நலமேயிருக்க தமிழ் அன்னையை வேண்டுகிறேன். இங்கு இப்போது மருந்துப் பொருட்களுக்குத்தான் பெரிய தட்டுப்பாடு அண்ணா. நீங்கள் அருட்பிதா சேவியர் மூலம் ஒழுங்கு செய்த மறுத்துப் பொருட்கள் எமக்கு கிடைத்தன. நான் அதற்குரிய ஒரு நன்றிக் கடிதம் அவருக்கு கொடுத்துள்ளேன் அண்ணா அதை அவரிடம் நீங்களே நேரில் கொடுத்து விடுங்கள். மற்றும் மருந்துப் பொருட்கள் எடுப்பதற்காக அங்கு வந்த எமது போராளிகள் பிடிபட்டு இது வரை ஐம்பது லட்சம் வரையான பணம் தமிழ் நாட்டு பொலீசாரிடம் பிடிபட்டுள்ளது எமக்கு இங்கு இருக்கும் எவ்வளவோ பணக் கஸ்டத்தின் மத்தியிலும் மருத்துப் பொருட்கள் வாங்க அனுப்பிய பணம்  தமிழ் தமிழ் என முழங்கும் கலைஞரின் ஆட்சியிலேயே பறிக்கப் படுவதுதான் வேதனையை தருகிறது அனாலும் உங்கள் உதவி எமக்கு ஒரு நம்பிக்கையையும் ஆறுதலையும் தருகிறது. எங்களுக்கு இங்கு இப்போதைக்கு தேவையானது மருந்துப் பொருட்கள் தான். தொடர்ந்தும் இது போல எமக்கு மருத்துப் பொருட்கள் கிடைக்க உதவி செய்யுங்கள் அண்ணா அது இங்கு எமது போராட்டத்திற்கு உதவியாக இருக்கும் அண்ணா.
இப்படிக்கு
வே. பிரபாகரன் 


தும்பிகள் நினைப்பதுஆசிய கண்டத்தின் அதிபராகவும், ஐநா சபை தலைவராகவும் 2006 முதல் 2011 வரை பொறுப்பு வகித்த தமிழின துரோகி கலைஞர் எனும் பேர் அரக்கரின் துரோகத்தால் எங்கள் தொப்புல் கொடி ஒறவுகள் ஈழத்தில் முற்றாக அழித்ததை வண்மையா கண்டிக்கிறேன்...

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் - ஈழ ஆதரவுக்காக கலைக்கப்பட்ட திமுக ஆட்சி

"பிரபாகரன் ஒரு சர்வதேச தீவிரவாதி, விடுதலைபுலிகள் இயக்கம் சர்வதேச பயங்கரவாத இயக்கம், பெண்களையும், சிறுவர்களையும் புலிகள் அரணாக அமைத்து பலிகொடுத்து சண்டை இடுகிறார்கள், பிரபாகரனை இந்தியா இழுத்து வந்து தூக்கிலிடவேண்டும், விடுதலை புலிகளை இந்தியாவில் தடை செய்ய வேண்டும், இலங்கை என்ற அந்நியநாட்டு விவகாரங்களில் நாம் தலையிடக்கூடாது, ஆண்டன் பால சிங்கம் மற்றும் பிரபாகரன் தாயார் இந்தியா வந்து சிகிச்சை பெற அனுமதிக்கக் கூடாது" என்று விடுதலை புலிகளை எகிறி அடித்த, அடித்துக் கொண்டே இருந்தவர் ஜெயலலிதா. அவருக்குதான் தமிழ் தேசிய ஆதரவாளர்களால் ஈழத்தாய் பட்டம் கொடுத்து "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்" என்று வக்கணையாக பேசி இலை மலர்ந்து 7 வருடங்களாகியும் இன்னும் ஈழம் மலராமல் இருக்கிறது!
இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங்கிற்கு,"நாளை பிரபாகரன் உங்கள் முன் ஒரு ஹோட்டலில் இருப்பர், சுட்டு கொன்றுவிடுங்கள்" என்று மத்திய அரசிடமிருந்து ஒரு உத்தரவு வருகிறது. வக்கணையாக பேசி பிரபாகரனை டெல்லி அசோகா ஓட்டலுக்கு வர வைத்து இந்திய அரசிடம் ஒப்படைத்தார் ஈழப் போராளிகள் கொண்டாடும் தானை தலைவர், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். ஆனால் ஜெனரல் ஹர்கிரத் சிங், "இது கோழைத்தனமான, முதுகில் குத்தும் செயல்" என்பதாலும், "இந்திய ராணுவத்தின் பெயர் உலகளவில் கெட்டு விடும்" என்பதாலும் இதை ஏற்க மறுத்துவிட்டார். தப்பித்தார் பிரபாகரன் அன்று.
ஆனால் திமுகவோ என்றென்றும் ஈழ விடுதலைக்காக போராடியது. மக்களின் உள்ளங்களில் ஈழ உணர்வை ஊட்டியது. கலைஞரும் பேராசியரும் தங்கள் MLA பதவிகளை துறந்தனர். காவலுக்கு கெட்டிக்காரன் படத்தில் பிரபுவுக்கு "திலீபன்" என்றும் பாலைவன ரோஜாக்கள் படத்தில் சத்யராஜுக்கு "சபாரத்தினம்" என்றும் பெயர்கள் சூட்டி தனக்கு கிடைத்த எல்லாம் வாய்ப்புகளுக்குள்ளும் ஈழ அரசியலை தமிழகத்துக்கு எளிமையாக கற்றுக் கொடுத்தார் கலைஞர். .
"தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் விடுதலைப் புலிகளுக்குக் கருணாநிதி எல்லா வசதிகளும் செஞ்சு கொடுத்தா. விடுதலைப் புலிகள் இங்கே பெட்ரோல் பங்க் நடத்துனா. கோயம்புத்தூரில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கிற தொழிற்சாலை வெச்சிருந்தா. எல்.டி.டி.ஈ.க்கு யூனிஃபார்ம் தைச்சுக் கொடுத்தா. இதைப்பத்தி எல்லாம் எனக்கு ரிப்போர்ட் வந்தது. நான்தான் சந்திரசேகர்கிட்ட எடுத்துச் சொல்லி, 'கருணாநிதி தீவிரவாதிகளுக்கு சப்போர்ட்ட பண்றா, அவா அரசைக் கலைச்சிடுவோம்னு' சொன்னேன். அவர் கலைச்சிட்டார்" என்று சுப்பிரமணியன் சுவாமி, '(விகடன் மேடை' - 04.07.2012 ) கூறுகிறார்.
திமுக ஆட்சி ஈழ ஆதரவுக்காக கலைக்கப்பட்டது. 1991ல் ராஜிவ் காந்தி இறந்த போது திமுக கொடி கட்டின வீட்டையெல்லாம் தேடி தேடி அடிச்சப்போ எந்த ஈழ ஆதரவு சக்தியும் திமுகவை காக்கவில்லை. தமிழகத்தில் இருந்த ஈழத்தமிழனுக்கு வீடு கொடுத்தவன் திமுககாரன் தான். மறுக்கமுடியுமா? ஈழத்தமிழனுக்காக முதல் முதலே தீக்குளிச்சவன் திமுககாரன் தான். அதுவும் புலிகள் வேண்டாம்னு ஒதுக்கின இஸ்லாமிய மதத்தவன்! ஈழத்திற்காக போலிஸாலே தேடி தேடி வேட்டையாடப்பட்ட திமுகக்காரன் இன்னிக்கு துரோகி ஆயிட்டான்
ஈழ வரலாறு!

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் - ஈழத்துரோகி, தமிழினத்துரோகி கலைஞர் ஒழிக. திமுக ஒழிக. செயலு பெயிலு

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்ற சீமான் அவர்களின் வார்த்தைக்கு இணங்க ஈழம் பெற்றுத்தந்த எங்கள் ஈழத்தாய் இதயதெய்வம் புரட்சித்தலைவி செல்வி டாக்டர் அம்மா அவர்களை இந்த நாளிலே நினைவுகூர்ந்து ஈழத்துரோகி திமுகவை திட்டுவோம்.
தமிழக மக்கள் ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்த அதிமுக எம்பிக்கள் 39பேர் நாடாளுமன்றத்தில் இருந்து காவிரியில் தண்ணீர்தான் பெற்றுத்தரமுடியாது. ஆனால் திமுக ஏன் ஈழம் பெற்றுத்தரவில்லை? கலைஞர் ஏன் உண்ணாவிரத நாடகம் நடத்தினார்? புரட்சித்தலைவி அம்மாவைப்போல் போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று தைரியமாகச் சொல்லக்கூட கலைஞருக்கு வக்கில்லை.
சீன ராணுவம் இலங்கை ராணுவம் இணைந்து இன அழிப்பை நிகழ்த்தியபோது இந்திய ராணுவம் போய் ஏன் தடுத்து நிறுத்தவில்லை? இந்தியா செய்த துரோகம் எத்தனை கொடுமையானது? நார்வேவும் ஐநா சபையும் தடுத்து நிறுத்தாத போரை ஏன் கலைஞர் தடுத்து நிறுத்தவில்லை. ஈழம் பெயரைச்சொல்லி பலரும் பிழைப்பு நடத்தும்போது, 1991ல் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்பதற்காக திமுக அரசை டிஸ்மிஸ் செய்தபிறகு அதிமுகவுக்கு ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த எம்மக்கள் என்ன இளிச்சவாயர்களா??
வெகுஜன மக்களை கேடயமாக்கி அங்கே ஆயுதப்போராட்டம் நடக்கிறது என்று தைரியமாகச்சொன்ன வீரப்பெண்மணி தைரியப்பெண்மணி ironlady ஜெயலலிதாவைப் போற்றுவோம். தலைவரைப் பார்க்கப்போய் ஆமைக்கறி தின்றுவிட்டு AK 74ல் ஆயுதப்பயிற்சி எடுத்த சீமான் அவர்களைப் போற்றுவோம். மெரீனாவில் தனக்கு சாதகமாகும் வரை போராட்டம் நடத்தவிட்டுப் பின் இறுதியில் போலீஸை விட்டு கொலைவெறித்தாக்குதல் நடத்திய போராட்டம் மாதிரி எதையும் நடத்தாத கலைஞரை திட்டுவோம்.
ஈழத்துரோகி, தமிழினத்துரோகி கலைஞர் ஒழிக. திமுக ஒழிக. செயலு பெயிலு.

அன்று திமுக தனது ஆதரவை விளக்கி கொள்வதாக அறிவித்திருந்தாலும் மத்திய அரசுக்கு எந்த இழப்பும் இருந்திருக்க போவதில்லை. கருணாநிதி நினைத்து இருந்தால் போரை நிறுத்தி இருக்கலாம் என்பது முட்டாள்த்தனம்.

திமுக ஆட்சியில் ராமேஸ்வரம் வழியா ஈழத்துக்கு ஆயுதம் போகுதுன்னு ஆட்சியைக் கலைக்கச்சொன்னவங்கள்லாம்தான் இப்போ நல்லவங்க. திமுக ஒழிக

திமுகவை திட்டுபவர்கள் யாரும் இதோ இங்கிருக்கும் அகதிகள் முகாமிற்கு சென்று ஒரு வேளை உணவு போட வக்கில்லாதவர்கள்.. அவர்களின் அரசியல் பிழைப்பு.

தமிழ் தேசிய சீமான் தும்பிகளின் நிலைப்பாடு

தமிழ் தேசிய சீமான் தும்பிகளின் நிலைப்பாடு -
## தமிழ் தேசிய தலைவர் யார்?
மேதகு பிரபாகரன்
## பிரபாகரனின் புலிகள் இயக்கத்தை, இந்தியாவில் யார், எந்த ஆண்டு தடை செய்தார்கள்?
1992-ம் ஆண்டு, அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ்
## நரசிம்ம ராவோடு அன்றைய மத்திய அரசின் கூட்டணியில் இருந்தவர் யார்?
ஜெயலலிதா
## புலிகளை இந்தியா கொண்டு வந்து தூக்கிலிடவேண்டும் என்று யார் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார்?
ஜெயலலிதா
## அந்த தீர்மானத்தை யார் நிறைவேற்றினார்?
அன்றைய சபாநாயகர், சீமானின் மாமனார் காளிமுத்து
## போர் என்றால் மக்கள் கொல்ல படுவார்கள் என்று அறிக்கை விட்டது யார்?
ஜெயலலிதா
## போரில் மக்களை தப்பிக்கவிடாமல் புலிகள் பிடித்து வைக்கிறார்கள் என்று பிரபாகரன் மீது குற்ற சுமத்தியது யார்?
ஜெயலலிதா
## ஈழதாய் யார்?
ஜெயலலிதா
இப்படி எந்த லாஜிக்கும் இல்லாம, ஈழத்தமிழர்கள் கிட்ட பிச்சை எடுக்கர கூட்டம்தான் சீமான், நெடுமாறன் கூட்டம்

மதிய உணவுத் திட்டம்

உண்மையில் மதிய உணவுத்திட்டம் உங்களால் 'முன்னேற்றக்கழகம்'
எனக் கிண்டலடிக்கப்படுபவர்களின் முன்னோடிகளால் கொண்டுவரப்பட்டதுதான்
மிஸ்டர் .S P Udayakumaran
**************************
இந்த மதிய உணவுத் திட்டம்...
மதிய உணவுத் திட்டம்...
எனக்கூவுவதும் அதற்கு காமராசரை முழுமுதற் கடவுளாக்கிப் புகழ்வதும்
கூட ரொம்ப சாமர்த்தியம்தான்.
ஆனால் உண்மை வரலாறு என்னவென்றால் இன்று கோயாபல்சை விடப்பெரிய புளுகாண்டிகளாய் மாறிப்போன தமிழ்த்தேசிய முட்டாள்களால் தெலுங்கர்கள் மலையாளிகள் என அவதூறு செய்யப்படும் நீதிக்கட்சியினரின் ஆட்சிக் காலத்தில் பகுதி பகுதியாக அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டு பின்பு காமராசர் ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாணம் முழுவதும் அதாவது இன்றைய கேரளம், ஆந்திரம்,கர்நாடகம்,தமிழ்நாடு, ஓரிசாவின் சிலபகுதிகள் வரை விரிவுப்படுத்தப்பட்டதுதான் இந்த மதிய உணவுத் திட்டம்.
இந்த கோரிக்கையையும் முதன்முதலாக அன்றிருந்த சட்ட மேலவையில் பனகல் அரசர் முன்னிலையில் கோரிக்கையாக எழுப்பியவர் திரு.எல்.சி.குருசாமி அய்யா அவர்கள்.(காண்க:"ராவ்சாகிப் எல்.சி.குருசாமி சட்டமேலவை உரைகள்" :தமிழாக்கம் ம.மதிவண்ணன்.) இந்த வரலாற்றை நினைவுப்படுத்துவதன் மூலம் மாமனிதர் பெரியாரால் 'பச்சைத் தமிழர்'எனச் செறிவூட்டப்பட்டு முன்னிறுத்தப்பட்ட காமராசர் அவர்களின் மதிப்பை குறைத்துக் காட்டுவதாகாது .
திரு 'உத்தம' உதயகுமாரன்களால் தொடர்ந்து கேலியும் கிண்டலுமாக ஏசப்பட்டுஞம் திராவிடர் இயக்க முன்னோடிகளாம் 'ஆங்கில ஏகாதிபத்திய அடிமைகள்'
'மிட்டாமிராசுகள்' 'பூர்ஷ்வா வர்க்க பிழைப்புவாதிகள் ' என இன்றுவரை பார்ப்பனப்பொறுக்கி பத்திரிகையாளர்களாலும்
அவர்களின் அடியொற்றிப்பிழைக்கும் தற்குறி சூத்திரமுட்டாள்களாலும் அவதூறு செய்யப்பட்டு வருகிற நீதிக்கட்சியினர் போட்ட சமூக நீதிப் பாதையில் பெரியாரின் வழிகாட்டுதல்களின் படியும் நடந்ததாலேயே 'காமராஜ் நாடார்' என அன்றைய சமூகத்திற்கு அறிமுகமாகியிருந்த காமராஜர்
'பச்சைத் தமிழர் காமராசர்' ஆனார்.
ஆனாலும் பாருங்கள் உதயகுமார்
உங்கள் 'பச்சை வேறு'
எங்கள் 'பச்சை'வேறுதான்.
*பின்குறிப்பு: காமராசருக்கும் பெரியாருக்கும் இருந்த சமூகநீதி உறவு நிலைகளைப் புரிந்துகொள்ள சென்னைப் பல்கலைக் கழகத்தின்
முன்னாள் துணைவேந்தராகவும் காமராசர் ஆட்சிக் காலத்தில் கல்வியதிகாரியாகவும் இருந்த நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் எழுதிய#எனதுநினைவலைகள்"என்கிற இரு தொகுதிகளையும் அவசியம் வாசியுங்கள்.

எத்தனை எத்தனை பலியாடுகள் இந்த ஈழ ஆகுதியில் அநியாயமாக பலியாயின

அவசியம் படிக்கவேண்டிய பகிரவேண்டிய செய்தி. இதுபோல் எத்தனையோ சம்பவங்கள், நெஞ்சறிந்த பொய்கள், வஞ்சகம் நிறைந்த நட்புகள், சந்தர்பத்துக்கேற்ற, தங்கள் கடைந்தெடுத்த சுயநலனுக்கேற்ப, சுயதேவைகளுக்கேற்ப ஏழை எளிய தமிழ்நாட்டுத்தமிழர்களை toilet tissueக்களாக பயன்படுத்தி துடைத்தபின் கேவலமாக தூக்கியெறிந்த நிஜக்கதைகள் இங்கே ஏராளம்.
தங்களின் அன்றன்றைய சுயநலத்தேவைகளுக்காக யாரையும் எப்படியும் பயன்படுத்திக்கொள்ளலாம், அதனால் ஏதுமறியாத ஏழை பாழைகள் அப்பாவிகள் அவர்களின் குடும்பங்கள் எப்படி சீரழிந்தாலும் பரவாயில்லை என்பதே இவர்களின் எழுதப்படாத வாழ்நெறி.
1983 முதல் 1991 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு வந்த ஈழத்தமிழர்களுக்கு எந்த பிரதியுபகாரமும் எதிர்பார்க்காமல் தம் சக்திக்கு மீறி எல்லாவகையிலும் உதவிய உண்மையான உணர்வுள்ள பலருக்கும் அந்த உதவிகளால் பலன்பெற்றவர்கள் செய்த “கைம்மாறுகள்” கொஞ்சமா நஞ்சமா?
எழுதப்படாத வரலாற்றின் இருண்ட பக்கங்களில் அழிந்துபோன அசிங்கங்கள் அவை. அவர்களில் பலரின் பெயர்கூட யாருக்கும் தெரியாது. அந்த காலகட்டத்தில் நிலவியது தான் உண்மையான தொப்புள்கொடி உறவு. பாதிக்கப்பட்ட தன் சகோதர சகோதரிக்கு சக சகோதர சகோதரிகள் நீட்டிய உதவிக்கரம் உண்மையானது. உணர்ச்சிகளால் உந்தப்பட்டது. எந்தவித எதிர்பாப்பும் இல்லாதது. அத்தனையையும் ராஜீவைக்கொன்ற மனித வெடிகுண்டு வெடித்துச்சிதறடித்துவிட்டது. அன்றோடு முடிந்தது உண்மையான மக்கள் சார்ந்த “தொப்புள்கொடி” பந்தம்.
2009க்குப்பின் உருவான உண்டியல் குலுக்கிகளின் வர்த்தக வகைமாதிரியை மட்டுமே பார்த்துப்பழகிவிட்டவர்களுக்கு அதெல்லாம் தெரியவும் தெரியாது. சொன்னாலும் புரிபடாது.
பேரறிவாளனுக்காகவும் நளினிக்காகவும் இன்று உருகோ உருகென உருகும் யாரும் 1983 முதல் 1991 வரையில் ஈழத்தமிழருக்கு உதவிய காரணத்தால் வாழ்வைத்தொலைத்தவர்களின் வரலாற்றை தொட்டுக்கூட பார்க்க மாட்டார்கள். ஏனெனில் அது பேசமுடியா பெருஞ்சோகம். வெளிநாட்டு வெள்ளிக்காசு ஆதரவை பெற முடியாத வர்த்தகம்.
எதிர்காலத்தில் புகைப்படக்கலைஞனாக வர கனவுகண்டு ராஜீவ் படுகொலையில் பலியான வெள்ளந்தி ஏழை இளைஞன் ஹரிபாபு முதல் தென்னிந்தியாவின் முதன்மையான செய்தி/சினிமா புகைப்பட நிறுவன அதிபராக இருந்த சுபா சுந்தரம் வரை எத்தனை எத்தனை பலியாடுகள் இந்த ஈழ ஆகுதியில் அநியாயமாக பலியாயின? எத்தனை உயிர்கள், எத்தனை குடும்பங்கள், எத்தனை பேரின் வாழ்க்கை, எதிர்காலம்? எல்லாம் எதற்காக?
உதவி கேட்டு வந்த இடத்தில் நம்பிநீட்டிய நட்ப்புக்கரங்களுக்கு இத்தனை அழிவுகளையும் தெரிந்தே ஏற்படுத்திய அதே நபர்கள், அமைப்புகள், அறிவுசீவிகள் இன்று தமிழ்நாட்டுத்தமிழருக்கு தர்மோபதேசம் செய்வதை என்ன சொல்ல? காலக்கொடுமை. வேறென்ன சொல்ல. இதில் அறம், மறம் என எதுகை மோனைவேறு
முள்ளிவாய்க்கால் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பில் இருந்த போது மும்பை கணேசன் மற்றும் இறைசா ராஜேந்திரன் என்னை அனுகினார்கள்> அப்போது சிவசேனா குறித்து தமிழில் ஒரு சிறிய நூல் எழுதியதால் பால் தாக்கரே பாராட்டியிருந்தார். அது ஊடகத்தில் வந்திருந்தது,
தாராவியில் என்னைச் சந்தித்த இறைசா வளத்தியான ஒருவரை அறிமுகப்படுத்தினார்.
அவர் ஈழத்தில் இருந்து வந்திருப்பதாகவும், பாதித்த ஈழத்தமிழர்களுக்காக உலகம் முழுவதும் சென்று உதவிகள் கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் கூறினார். அப்போது விலாஷ் ராவ் தேஷ் முக் தலைமையில் காங்கிரஸ் மகர்ராஷ்டிராவில் இருந்தது, காங்கிரஸ் தலைவர்கள் அனுக முடியாத நிலையில் இலங்கையில் இருந்து வந்த நபர் என்று கூறிக்கொண்டவர் நான் அவரது நன்பர் பால்தாக்கரேவுடன் படித்தவர்கள் என்று கூறினார். சரி அவரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிவிட்டு பாந்திரா மாதே சிறி இல்லம் சென்றோம், கணேசன் அவர்களது காரில் தான் சென்றோம்.
முதல் சந்திப்பின் போது பால்தாக்கரேவிற்கு உடல் சரியில்லாத காரணத்தால் அவரைச் சந்திக்க முடியவில்லை. மீண்டும் திரும்பிவிட்டோம், அதன் பிறகு அந்த ஈழத்துக்காரர் என்னைத் தொடர்புகொண்டு அவரது கட்சி பிரமுகரைச் சந்திக்கலாமா என்றார்.
இந்த யோசனை எனக்கு சரியாகப் படவில்லை. ஆகையால் அப்போது கட்சியின் இளைஞரணித்தலைவராக இருந்த உத்தவ் தாக்கரேவை சிவசேனா பவன் தாதரில் வைத்து சந்திக்க ஏற்பாடு செய்தேன் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, 13.5.2010 அன்று நன்பகல் உணவிற்குப் பிறகு சிறிது நேரம் பேசலாமே என்றார். உத்தவ் ஆங்கிலத்தில் பேசுவார், இருப்பினும் ஒரு மொழிபெயர்ப்பாளன் என்ற முறையில் நான ஈழத்தமிழரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தேன், அப்போது உள்ளே நுழைந்த அந்த ஈழத்தமிழருடன் ஒரு பார்ப்பனர் வந்திருந்தார். தாராவியில் இருந்த போது எல்லாம் அந்த ஈழத்தமிழர் இங்கு யாரும் தெரியாது, உங்களை நம்பி வந்துள்ளேன் என்று கணபதி, ரவிச்சந்திரன் இறைசா ராஜேந்திரன் போன்றவர்களிடம் கூறிக்கொண்டிருந்தவர், தீடிரென்று ஒரு பார்ப்பனருடன் வருகை புரிந்தார். நான் அவருடன் உள்ளே செல்ல முயன்ற போது அந்த ஈழத்தமிழர் என்னை வரவேண்டாம் என்று நேரடியாக கூறாமல் சரவணா கொஞ்சம் காத்திருங்கள் உள்ளே சென்று விட்டு உடனே வந்துவிடுகிறோம், நாம் வேறு ஒரு முக்கியமான ஒருவரைப் பார்க்கவேண்டும் என்று கூறிவிட்டு எனது பதிலுக்கு காத்திராமல் அவர்கள் இருவரும் உள்ளே சென்றுவிட்டனர்.
அப்போது அந்த ஈழத்தமிழர் மும்பை வந்ததில் இருந்து அவருடனே இருந்த கணேசன், இறைசா ராஜேந்திரன், வழக்கறிஞர் குணசீலன், தமிழ்நேசன் என்று யாருமே இல்லை. நானும் அவர்கள் வெளியே காத்திருக்கிறார்களா என்று பார்க்க சென்றால் அவர்கள் இல்லை. உடனே இறைசாவை தொடர்புகொண்டேன். அவர் கூறிய செய்தி எனக்கு அதிர்ச்சியை அளித்து அதாவது அந்த ஈழத்தமிழர் நம்மவர்களிடம் உடல்நிலை சரியில்லை ஆகையால் இன்று முழுவதும் நன்று ஓய்வு வேண்டும் என்று காலையிலேயே சொல்லிவிட்டதால் நாங்கள் யாரும் அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்று அவரது அறைக்கு சென்று சந்திக்கவில்லை என்றார்கள்,

அவர்கள் உத்தவைச் சந்திக்கச்சென்று ஒரு மணிநேரம் கடந்துவிட்டது, எனக்கு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிற்குச் செல்லவேண்டி இருந்ததால், நான் சிவசேனா பவன் செகரட்டி ஜெயந்த் மானே விடம் கூறிவிட்டு புறப்பட்டேன்,
இவ்வளவு நடந்தும் நான் எந்த ஒரு சந்தேகமும் படவில்லை, இது நடந்து முடிந்த இரண்டு நாளைக்குப் பிறகு மீண்டும் மும்பை தோழர்கள் அனைவரும் சேர்ந்து அவரை தாதர் எக்ஸ்பிரஸில் வழியனுப்பி வைத்தோம்.
அதன் பிறகு அந்த ஈழத்தமிழரைத் தொடர்புகொள்ள முடியவில்லை, நாங்களும் அதை மறந்தோ போனோம்,
இது நடந்த முடிந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அதிர்ச்சிகர தகவல் வந்தது, அது ஈழத்தில் சிவசேனா அதன் தலைவர் மரவன்புலவு க சச்சிதானந்தம் என்ற அந்த செய்திதான்.
இந்த சச்சிதானந்தம் தான் அன்று ஈழத்தமிழர்களுக்காக உலகம் முழுவதும் சென்று உதவிகேட்க பயனித்துள்ளேன் என்று என்னிடமும் மும்பை நன்பர்களிடமும் கூறி ஏமாற்றியவர்.

சமீபத்தில் ஒரு திருமணத்தில் அவர் வந்திருந்தார். அது எனது உறவினரின் வீட்டுத்திருமணம் அந்த திருமணத்திற்கு மும்பை சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து அரசியல் தலைவர்கள் பிரமுகர்கள் என அனைவரும் வந்திருந்தனர். அங்கு என்ன திட்டத்தோடு வந்தாரோ தெரியவில்லை. என்னைக் கண்டதும் முகம் வெளீரிப்போய் சிறிது நேரத்திலேயே மண்டபத்தை விட்டு வெளியே சென்றுவிட்டார்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான காரணம் சிங்களவர்கள் மூலமாக சில தமிழர்கள் நடந்திய கோடுர நாடகம் தான், சிங்களவன் அம்பென்றால் அதை எய்தவர்கள் நம்முடனே இருந்துள்ளனர்.
அன்று என்னை ஒரு காயாக பயன்படுத்திக் கொண்டார்கள். இது எவ்வளவு பெரிய துரோகம், இப்படிப் பச்சையாக துரோகம் செய்தவர்கள் அன்று சுயநலத்திற்காக நம்மக்களைக் பலிகொடுத்திருக்கமாட்டார்களா??

அப்போது ஒருவர் என்னை எச்சரித்தார், ஆம் பெரியார் திராவிடர் கழகத்தின் மும்பைத் தலைவர் திரு.கதிரவன் அவர்கள் என்னிடம் இவரது செயல்பாட்டில் சந்தேகம் இருக்கிறது, இவருக்கு எதுவும் செய்து பிற்காலத்தில் வருத்தப் படுவாய் என்றார். அப்போது நான் கூறியது அய்யா எல்லாத்தையுமே சந்தேகப் படுவதுதான் உங்கள் அமைப்பின் கொள்கையா என்று கூறினேன்.

Thursday, May 17, 2018

நான்கே கேள்வி பதில்களில் தமிழ்த்தேசியம் - கட்டுரை

கிளி ஒரு தமிழ் தேசியவாதி எனபதால் தான் கிளியை அதிகம் பிடிக்கிறது. ஈழத் தொப்புள் கொடி என்பது அறுபடாமல் இருந்தால் தாய்க்கும் நல்லதல்ல, சேய்க்கும் நல்லதல. குழந்தை தாயைவிட அறிவாலும் ஆற்றலாலும் வளர்ந்தால் தான் தாய்க்கும் பெருமை, சேயும் செழித்து வளரும். இன்னும் புடிப்பால் பாப்பா ரேஞ்சிலேயே சேயை டீல் செய்து அரசியல் செய்யும் ஆட்களை ஒதுக்கித் தள்ளவேண்டியது இரு நாட்டு தமிழர்களின் கடமை. போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்தால், தமிழ்நாடு, ஈழம், சிங்கப்பூர் என தமிழ்பாடும் நாடுகளின் வலிமையான கூட்டமைப்பு பின்னாட்களில் கிட்டும். ஐக்கிய அரபு நாடுகள், ஐக்கிய ராஜ்ஜியம் எனப்படும் UK போன்று வலிமையானதொரு கூட்டமைப்பாக தமிழ் பேசும் தேசங்கள் ஆசிய பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும். அப்படி நிகழ வைப்பது தான் உண்மையான தமிழ் தேசியத்தின் பார்வையாக இருக்கவேண்டும்.

நான்கே கேள்வி பதில்களில் தமிழ்த்தேசியம் - கட்டுரை
கேள்வி 1 :- ஈழ தமிழர் மேல் இவ்வளவு காட்டம் ஏன் ?..அவர்களும் தமிழர் தானே ? பின் ஏன் திராவிட திம்மிகள் வரிந்துகட்டிக்கொண்டு விமர்சனம் செய்கிறார்கள் ?
பதில் :- ஒரு முக்கியமான பாகுபாட்டை சுற்றிவளைக்காமல் உங்களுக்கு விளக்குகிறேன். ஈழத் தமிழர் ஆதரவுக்கும் , விடுதலைப் புலிகள் ஆதரவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஈழத் தமிழரின் ஒரு சில நலனுக்காக புலிகளின் ஒருசில செயல்பாட்டை ஆதரிக்கலாம். ஆனால் " சில " விஷயங்களுக்காக விடுதலைப் புலிகளின் கோட்பாட்டை எல்லாம் முழுவதும் ஏற்பது என்பது சரியல்ல.சபாரத்தினம், பத்மநாபா எல்லாம் ஏலியன் தமிழர்களா என்ன ? துரோகி முத்திரை குத்தப்பட்டு அவர்கள் எல்லாம் காவு வாங்கப்பட்டது எல்லாம் ஒட்டுமொத்த ஈழத்தமிழரின் விருப்பமா சொல்லுங்கள் ?.
புலிகளின் இந்தமாதிரியான செயல்களை எல்லாம் நியாயப் படுத்துவது என்பது ஈழத்தமிழர் என்றாலே அமைதியை விரும்பாதவர்கள், எதிர்க்கும் ஆட்களைக் காவு வாங்கும் ஆட்கள் என்ற தப்பான அபிப்பிராயத்தை விளைவிக்கும் அல்லவா ? இப்பொழுது ஈழத்தமிழரை களங்கப்படுத்துவது புலிகள் ஆதரவாளர்கள் தான் என்பது ஒரு கோணத்தில் சரிதானே ?
உதாரணமாக திமுக வை யோ, அதிமுகவையோ எதிர்க்கும் யாரோ ஒருவரை நீங்கள் தமிழக மக்களின் ஒட்டுமொத்த விரோதி என்ற முத்திரை குத்த இயலுமா ? அதேபோல் தான் புலிகள் விவகாரத்திலும். ஆகவே புலிகளின் நிலைப்பாடுகளின் மேல்தான் விமர்சனமே தவிர ஈழத் தமிழர் மேல் இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.
வடிவேலு காமெடி ஒன்றில் " நான் சொல்லலீங்க..அய்யாசாமி தான் சொல்லச் சொன்னார் " என்று அவரை மாட்டிவிட்டு செல்லும் கதாபாத்திரம் போல் , விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை விமர்சிக்கும்போது அதை லாவகமாக "ஈழ தமிழர் எதிர்ப்பு " என்று திரிப்புவாதம் பேசும் ஆட்களை முதலில் கண்டுகொள்ளுங்கள்.
கேள்வி 2:- இங்கே நடக்கும் விவகாரங்களுக்கு அங்கே இருப்பவர்கள் குரல் கொடுத்தார்களா ? பின் நாம் ஏன் அவர்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும் ?
பதில் : ஈழத்தமிழர்கள் நம்மை எப்படி நினைக்கிறார்கள் என்பது வேறு விஷயம். தமிழக தமிழர்கள் இன்றளவும் ஈழத்து மக்களை சகோதரர்களகத் தான் பார்க்கிறார்கள். பார்ப்பார்கள். தமிழக அரசியல் சூழல்களையே புரட்டிப் போடும் முடிவுகளை ஈழத்தமிழர்களுக்காக தாங்கிக்கொண்டது தமிழ்நாடு.அதுமட்டுமல்லாமல் ஒரு பிரதமரைக் கொன்றதன் மூலம் அயல்தேசங்களில் நான் தமிழன் என்று சொன்னால் " தீவிரவாதி " என்ற சொல்லை கீழ்மையாக நினைக்காமல், அதில் உள்ள நியாயத்தையும் புரிந்துகொண்டு, ஒரு இனம் சிங்களர்களால் வஞ்சிக்கப்படுவதை தெளிவாக எடுத்துரைத்து, புலிகளின் செயல்களால் மொத்த ஈழத்தமிழர் படும் அல்லலையும் தவறாக சித்தரிக்கக்கூடாது என்று பேசும் தமிழக தமிழர்கள் அநேகம். சந்தேகம் இருந்தால் விசாரித்துப் பாருங்கள்.
மேலும் ஒரு பெரும் துயருக்குப்பின் ஜப்பானியர்கள் காட்டிய எழுச்சிக்கு ஒப்பானதொரு தொழில், வர்த்தக, அறிவியல் நல்வாழ்வியல் எழுச்சியை காட்டவேண்டிய அவசியத்தில் ஈழ மக்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் அடித்துப் பிடித்து தங்களை மீண்டும் கட்டமைக்க வேண்டும். தனியாக வான்படை இருக்கிறது, நீர்மூழ்கி கப்பல் இருக்கிறது , கொழும்பு மீது வான்தாக்குதல் நடத்தும் வன்மை இருக்கிறது என்பது பெருமையல்ல. எரிக்கப்பட்ட யாழ் நூலகத்தைவிட எங்களிடம் பெரிய டிஜிடல் நூலகம் இருக்கிறது. திருட்டுவிசிடி கள் செய்வதை விட நாங்கள் அறிவியல் புரட்சி செய்கிறோம், சிங்கப்பூர் என்ற தேசம் தமிழர்களின் தனி உழைப்பால் முன்னேறியதைப் போல் முன்னேறி காட்டவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. அந்த வேளையில் அவர்கள் அவர்கள் பிரச்சனைகளைப் பற்றி அதிகம் சிந்திப்பது தான் சரி.
தமிழக பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கக்கூடிய தீரம் தமிழர்களுக்கே இருக்கிறது என்பதை அறிந்தவர்கள் ஈழத்தமிழர்கள். அதனால் தான் அவர்கள் பெரியதாக கண்டுகொள்வது இல்லை. பீ தமிழன், வேசித் தமிழன் என ஒருசில சங்காத் தமிழர்கள் தமிழக தமிழர்களை தூஷணம் செய்தாலும் கூட அது புறந்தள்ளப்பட வேண்டியது இதனால் தான். சிங்கப்பூர் எப்படி தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வளமான தேசமாக எழுந்து நின்றதோ அதே போல் ஈழமும் எழுந்து நிற்க வேண்டும். எனவே தமிழ்நாட்டில் இருக்கும் சில்லரைப் பிரச்சனைகளுக்கு எல்லாம் அவர்கள் குரல் கொடுத்தார்களா என்று கேட்பது தவறு ?.
அவர்கள் மேலேழும்பட்டும் பின்பு அவர்கள் செம்மரக் கொலைகளுக்கு குரல் கொடுத்தார்களா , ஐ ஐ டி போராட்டங்களுக்கு குரல் கொடுத்தார்களா என்று விமர்சிக்கலாம். அதுவரையில் அவர்கள் செய்வது சரியே.
கேள்வி 3 :- அரக்கரே .. இப்படியும் பேசுகிறீர், அப்படியும் பேசுகிறீரே...பின் யாரை தான் நோவது ?
பதில் அரசியல் லாபங்களுக்காக மட்டுமே ஈழ மக்களை வியாபாரப் பொருளாக்கும் ஆட்களை தான் நோக வேண்டும். ஈழ மக்கள் நமது பிரச்சனைகளைக் கண்டுகொள்ளாதது தவறில்லை என்று சொன்னேனே தவிர, இங்கேயே தமிழக தமிழனாகப் பிறந்து தமிழகப் பிரச்சனைகளை மறந்த ஆட்களை எல்லாம் உத்தமர்கள் என்று சொல்லவில்லை.
உதாரணம் ஓர் அண்டார்டிக் தமிழர், தமிழக மக்களுக்கான பெரியார்- அம்பேத்கர் - ஐ ஐ டி போராட்டத்தில் ஈழ தமிழர்கள் போலவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நியாயங்கள் தான் கேட்கப்பட்டன. உண்மையில் இங்குள்ள தமிழர்கள் மேல் அக்கறை இருந்தால், இந்த மண்ணில் தமிழனாக பிறந்திருக்கிற ஆளாக இருந்தால் இந்த பிரச்சனைக்கு குரல் கொடுத்திருக்க வேண்டும். இதை " ஆரியர்-திராவிடர் " பிரச்சனை.. நாம் வேடிக்கை பார்ப்போம் என்று சொல்லியிருக்கக் கூடாது. தங்கள் மக்களுக்காக எப்படி ஈழத் தமிழ்கள் வரிந்து கட்டிக்கொண்டு பேசுகிறார்களோ அதில் இருக்கும் வேகத்தில் கால்வாசியாவது நமக்கும் வேண்டாமா ? ஆனால் அதையும் "தமிழருக்கு சம்பந்தம் இல்லாத போராட்டம் " என்று சித்தரித்து, பிரபாகரனை ஆதரிப்பது மட்டுமே தமிழனின் தலையாய கடமை என்று சொல்வதுபோல் பேசுவது அபத்தம். தமிழ்நாட்டில் பிறந்துவிட்டு தமிழனின் பிரச்சனை எலாம் பிரச்சனை அல்ல, நாடு என்றால் அது ஈழம் மட்டுமே, தலைவன் என்றால் அது பிரபாகரன் மட்டுமே என்று இங்குள்ள நியாயங்களை எல்லாம் மறந்துவிட்டு அரசியலுக்காக ஈழம் பேசும் ஆட்கள் தான் ஆபத்தானவர்கள். அவர்களை தான் நீங்கள் நோக வேண்டும்.
இத்தகைய ஆட்கள் தான் ஈழ மக்களை எல்லாம் வியாபாரப் பொருளாக்கி அவர்களை அசிங்கப்படுத்துவது. இத்தகைய ஆட்கள் தான் தமிழக தமிழர்களை எல்லாம் தங்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் உணர்ச்சி அரசியல் மட்டுமே பேச வைத்து அறிவுப் புரட்சியை மழுங்கடிப்பது. இவர்களை எல்லாம் கண்டுகொண்டால் இரு நாட்டு தமிழர்களுக்கும் நலம். ஆம்...இரு நாடு என்று தெரிந்தே தான் கூறினேன்.
அப்பொழுது " நீங்கள் வேறு நாங்கள் வேறு " என்று இரு நாட்டு தமிழர்களும் பிரிந்து நிற்க வேண்டுமா ?
ஒரு விஷயம் சொல்கிறேன். இப்பொழுது உள்ள உலக வரைபடத்தைப் பார்த்தீர்கள் என்றால் அது 50 வருடங்களுக்கு முன் எப்படி இருந்ததோ அதைவிட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.
புதிய நாடுகள் உருவாவது என்பது வெகு சாதாரண விஷயம். ஆனால் ஒரு புதிய நாடு உருவாக அங்கே தேவை அறிவுப் புரட்சி. ஆயுதப் புரட்சியால் நாடுகளை புதியதாக உருவாக்கினால் அதை ஒடுக்க "பெரியண்ணன் "கள் அனைவரும் காத்திருக்கிறார்கள். ஆணித்தரமாக, மெல்ல மெல்ல பிரிந்து சென்று தனி அதிகாரம் , தன்னிறைவு பெறுவது எப்படி என்று ஸ்காட்லான்ட் ஆட்களுக்கு தெரிந்திருக்கிறது. அவர்கள் மெல்ல மெல்ல அதி நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அப்படி முன்னெடுத்து செல்ல அவர்களுக்கு பின்புலமாய் இருப்பது அறிவு எனும் ஆயுதம். கல்வி எனும் ஆயுதம்.அதை முழுமையாக வியாப்பிக்க இருதேச தமிழர்களும் கல்வி ரீதியிலாக முன்னேற முன்னேற வேண்டும்.
அப்படி இரு நாடுகளும் முன்னேறிவிட்டால் அசையாத ஆசிய சக்தியாக தமிழக தேசங்கள் திகழும். ஆசிய நாடுகளுக்கு சவால்விடும் வகையில் நாம் முன்னேறலாம். ஒருவேளை வாய்ப்பு இருந்தால் கிழக்கு மற்றும் மேற்கு செர்மனி பெர்லின் சுவர் உடைந்து இணைந்ததுபோல் இரு நாடுகளும் இணையலாம்.
வட கொரியா, தென் கொரியா தனி தேசங்களாக இருந்தாலும் மொழி ஒன்றே...இன்று அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளில் கொரிய பொருட்கள் இல்லாத சந்தையே இல்லை. பிரிந்து இருந்தாலும் முன்னேறி காட்டிய தேசங்கள் அவை. தமிழக தயாரிப்புகள், அறிவு ஜீவிகள் எல்லாம் உலக வியாப்பித்து கொரியர்களை விட சுலபம். பிளவு பட்டு அவர்கள் நிற்பதுபோல் நாம் நிற்பது இல்லை. நமது வளர்ச்சி எனது அசுர வளர்ச்சி அல்ல. அரக்க வளர்ச்சியாக இருக்கும். ..
உலக அரசியலில் எதுவும் நடக்கும். ஆனால் அதுவரை தீரமிக்க ஒரு இனமாக பரிணமிக்க அணைத்து தமிழர்களும் படிக்க வேண்டும். தூதரகத்தை தாக்குவோம், சிங்களப் பெண்ணை கற்பழிப்போம், குண்டு வீசுவோம், மெழுகு வர்த்தி தூக்கினால் தான் தமிழன், வடுக வந்தேறி , விடுதலைப் புலிகளை ஆதரித்தால் தான் தமிழன் என்ற வெற்றுக் கூச்சல்களை புறந்தள்ள வேண்டும். அரசியல் லாபங்களுக்காக மட்டும் துரோகியே என்று கைதூக்கும் ஆட்களை எல்லாம் தான் கண்டு ஒதுக்க வேண்டும்.
அரக்கரே இறுதிக் கேள்வி :- அடிக்கடி இரு நாடுகள் நாடுகள் என்று பேசுகிறீர்களே....அப்பொழுது நீங்கள் தமிழ் தேசியவாதியா ?
பதில் ஒவ்வொரு திராவிடக்கருத்தாளரின் முகத்திரையை கிழித்தீர்கள் என்றால் அங்கு தமிழ்த்தேசியம் இருக்கும். அதுதான் நிஜமான தமிழ்த்தேசியம். அதன் படி நானும் ஒரு தமிழ்த்தேசியவாதிதான்.

ஆகச்சிறந்த மொழிகளிலே தாய்மொழியாம் தமிழே

நான் அலுவல் நிமித்தமாக இரண்டு அல்லது மூன்று மாநிலங்களுக்கு சென்றிருக்கிறேன். வட இந்தியாவில் வசித்தும் இருக்கிறேன். அப்பொழுதெல்லாம் நமது மொழியைப் பற்றிய தீவிரமான சிந்தனைக்குத் தள்ளப் பட்டிருக்கிறேன். நம் தமிழைத் தவிர வேறு எல்லா இந்திய மொழிகளிலுமே க, ச, ட, த,ப ஆகியவற்றில் நான்குவிதமான சப்தங்கள் வரும்படி நான்கு எழுத்துக்கள் உள்ளன. அதாவது க என்று எடுத்துக் கொள்வோம். அதில், க, kha, ga, gha என்று இருக்கும். இதே போலத்தான் மற்ற எழுத்துக்களிலும். எனவே பேசும் பொழுது ஏற்படும் ஒலி மாறுபட்டு தெரியும். மற்றவர்கள் உச்சரிப்பதற்கும், நாம் உச்சரிப்பதற்கும் வேறுபாடு இருக்கும். இதை எல்லோரும் மிகவும் கேலி செய்து பேசினார்கள்.
ஒரு முறை ராஜா என்று நான் கூறினேன். உடனே அவர்கள் எங்கே ராஜா என்று உன் மொழியில் எழுதிக் காட்டு பார்க்கலாம் என்றார்கள். அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது ஜா என்கிற ஒலி ஏற்படுத்தும் எழுத்து தமிழில் இல்லை என்பது. முதலில் எனக்கு இது அவமானமாகவே இருந்தது. தமிழ் அப்படிப்பட்ட குறைபாடுகள் உள்ள மொழியா? மற்ற ஒலி சப்தங்களை சரியாக உச்சரிக்கும் படியான வசதிகள் இங்கு இல்லையா என்று இரவு பகலாக யோசித்தேன். சிறிது தெளிவு கிடைத்தது. அடுத்த முறை நான் சொன்னேன். ஐயா, ராஜா என்பது தமிழ் வார்த்தையே இல்லை. உடனே ஒரே சிரிப்பு சப்தம். அப்படியானால் King என்பதை நீங்கள் எப்படி சொல்லுவீர்கள் என்று கை தட்டி சிரித்தார்கள். நானும் சிரித்து கொண்டே சொன்னேன், “ஐயா, மன்னன், வேந்தன், கொற்றவன், அரசன் என்பதுதான் எங்கள் மொழி சொற்கள். ராஜா இல்லை.” டக்கென்று சிரிப்பு சப்தம் அங்கே அடங்கியது. ஆனால் என் மன சிந்தனைகள் ஓயவே இல்லை. இது என்னை வாட்டிக் கொண்டே இருந்தது. என் தாய் தமிழில் இந்த குறைபாடு இருக்கிறதா என்று நிறைய நேரம் யோசித்து யோசித்து பார்த்த பின் எனக்கு ஒரு தெளிவு பிறந்தது.
மற்ற மொழிகளில் ஒவ்வொரு சப்ததிற்கும் ஒரு எழுத்து இருக்கிறது. ஆனால் என் தாய் மொழியில் அப்படித் தேவையே இல்லாத இயற்கையாகவே ஒரு arrangement இருக்கிறது. கீழே பல உதாரணங்கள் சொல்கிறேன். பாருங்கள்.
தலை,
புது,
மனிதம்.
மத்தது.
இந்த வார்த்தைகளை கவனித்துப் பாருங்கள். த என்கிற எழுத்து தன் இடத்திற்கேற்ப ஒலியை தானாகவே மாறுபடுத்திக் கொள்கிறது. தலையில் முதல் எழுத்து, புது என்ற வார்த்தையில் இரண்டாமிடம், மனிதம் என்ற வார்த்தையில் மூன்றாமிடம், அடுத்ததில் நான்காம் இடம். உச்சரித்துப் பாருங்கள். தானாகவே உச்சரிப்பு மாறும். ஹிந்தியில் முதல் “த”, இரண்டாம் “த”, மூன்றாம் “த”, மற்றும் நான்காம் “த” என்பதை ஒட்டி இந்த சப்தங்கள் அமைந்திருக்கின்றன. மற்ற மொழிகளைப் போல ஒவ்வொரு உச்சரிப்புக்கும் தனி எழுத்து தேவையே இல்லை.
மேலும் உதாரணங்கள்:
1) கதவு. தகவு, நாடகம், வாங்குக (“க”என்கிற எழுத்தின் உச்சரிப்பை கவனியுங்கள். ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் நான்காம் இடத்தில் உள்ளது )
2) தமிழ், பதவி, அதது, நடந்து (த என்கிற எழுத்தை கவனியுங்கள்)
அதே போல் மெய் எழுத்துகளும் இந்த வேலையை கவனித்துக் கொள்கின்றன. இப்போது பாருங்கள்:
அது, அந்த
பத்து, பந்து
ஓடு, ஓட்டை
படம், பட்டம்.
பசை, பச்சை
“த்” “ட்” “ச்” மற்றும் “ந்” என்கிற மெய்யெழுத்துக்கள் தமக்கு அடுத்து வரும் எழுத்தின் ஒலியை (அதன் உச்சரிப்பை) எப்படி மாற்றுகின்றன என்று பாருங்கள். அந்த மெய்யெழுத்துகளை எடுத்து விட்டு உச்சரித்துப் பாருங்கள். ஒலி மாறும். இந்த அற்புதமான கட்டமைப்புகள் நம் தமிழ் மொழியின் செழுமையை பறைசாற்றுகின்றன. அதே போல “ன்” மற்றும் “ண்” என்கிற எழுத்துக்களும் இந்த வேலையை சரிவர செய்ய உதவுகின்றன. பன்றி, கறி, வெற்றி, மன்னன், கண்ணன் என்கிற வார்த்தைகளை நன்றாக உச்சரித்துப் பாருங்கள். ஒலி வேறுபாடுகள் புரியும்.
எனவே அடுத்த தடவை நான் நெஞ்சு நிமிர்த்தி சொன்னேன். “தோழர்களே, என் மொழியில் எல்லா சப்தங்களையும் சொல்லும் அற்புதமான ஏற்பாடு இருக்கிறது. உங்களைப் போல ஒவ்வொன்றுக்கும் ஒரு எழுத்து என்கிற பயம் எங்களுக்கு இல்லை. அப்படி இல்லாமலேயே நாங்கள் எல்லா ஒலியையும் சரியாக உச்சரிக்க வசதி கொண்டிருக்கிறோம். அது தவிரவும் நீங்கள் உபயோகப் படுத்தும் பல ஆங்கில வட மொழி சொற்களுக்கு சரியான தமிழ் வார்த்தைகள் எங்களிடம் கொட்டிக் கிடக்கின்றன”
இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். சிலர் சில வார்த்தைகளைத் தவறாகவே உச்சரிக்கின்றனர். அதாவது குதிரை என்பதை Guதிரை என்றும் பூசை என்பதை Bhuசை என்றும் உச்சரிக்கின்றனர். தமிழில் எப்பவுமே முதல் எழுத்தின் உச்சரிப்பு “ப்ப”, “க்க, ச்ச த்த” என்கிற உச்சரிப்புகளில் மட்டுமே இருக்கும். Bha, Gha, Dha, Da என்கிற ஒலி சப்தங்கள் முதல் எழுத்தாக தமிழில் வரவே வராது. வந்தால் அவை தமிழ் மொழி சார்ந்த வார்த்தைகள் இல்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். கோபால்சாமி என்பதின் முதல் எழுத்தை Gho என்கிற சப்தம் வரும்படி உச்சரிக்கிறோம். இது தவறு. கோபால் என்பது தமிழ் வார்த்தை அல்ல.
எனவே தமிழ் மொழி வேறு எந்த மொழிக்கும் சளைத்தது இல்லை என்பதுடன் மற்ற மொழிகளை விடவும் உயர்வானதே என்பதே எனது முடிவு. நான் சொல்வது சரியா தவறா? உங்களின் மேலான கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறேன்.
(நான் அலுவல் நிமித்தமாக இரண்டு அல்லது மூன்று மாநிலங்களுக்கு சென்றிருக்கிறேன். வட இந்தியாவில் வசித்தும் இருக்கிறேன். அப்பொழுதெல்லாம் நமது மொழியைப் பற்றிய தீவிரமான சிந்தனைக்குத் தள்ளப் பட்டிருக்கிறேன். நம் தமிழைத் தவிர வேறு எல்லா இந்திய மொழிகளிலுமே க, ச, ட, த,ப ஆகியவற்றில் நான்குவிதமான சப்தங்கள் வரும்படி நான்கு எழுத்துக்கள் உள்ளன. அதாவது க என்று எடுத்துக் கொள்வோம். அதில், க, kha, ga, gha என்று இருக்கும். இதே போலத்தான் மற்ற எழுத்துக்களிலும். எனவே பேசும் பொழுது ஏற்படும் ஒலி மாறுபட்டு தெரியும். மற்றவர்கள் உச்சரிப்பதற்கும், நாம் உச்சரிப்பதற்கும் வேறுபாடு இருக்கும். இதை எல்லோரும் மிகவும் கேலி செய்து பேசினார்கள்.
ஒரு முறை ராஜா என்று நான் கூறினேன். உடனே அவர்கள் எங்கே ராஜா என்று உன் மொழியில் எழுதிக் காட்டு பார்க்கலாம் என்றார்கள். அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது ஜா என்கிற ஒலி ஏற்படுத்தும் எழுத்து தமிழில் இல்லை என்பது. முதலில் எனக்கு இது அவமானமாகவே இருந்தது. தமிழ் அப்படிப்பட்ட குறைபாடுகள் உள்ள மொழியா? மற்ற ஒலி சப்தங்களை சரியாக உச்சரிக்கும் படியான வசதிகள் இங்கு இல்லையா என்று இரவு பகலாக யோசித்தேன். சிறிது தெளிவு கிடைத்தது. அடுத்த முறை நான் சொன்னேன். ஐயா, ராஜா என்பது தமிழ் வார்த்தையே இல்லை. உடனே ஒரே சிரிப்பு சப்தம். அப்படியானால் King என்பதை நீங்கள் எப்படி சொல்லுவீர்கள் என்று கை தட்டி சிரித்தார்கள். நானும் சிரித்து கொண்டே சொன்னேன், “ஐயா, மன்னன், வேந்தன், கொற்றவன், அரசன் என்பதுதான் எங்கள் மொழி சொற்கள். ராஜா இல்லை.” டக்கென்று சிரிப்பு சப்தம் அங்கே அடங்கியது. ஆனால் என் மன சிந்தனைகள் ஓயவே இல்லை. இது என்னை வாட்டிக் கொண்டே இருந்தது. என் தாய் தமிழில் இந்த குறைபாடு இருக்கிறதா என்று நிறைய நேரம் யோசித்து யோசித்து பார்த்த பின் எனக்கு ஒரு தெளிவு பிறந்தது.
மற்ற மொழிகளில் ஒவ்வொரு சப்ததிற்கும் ஒரு எழுத்து இருக்கிறது. ஆனால் என் தாய் மொழியில் அப்படித் தேவையே இல்லாத இயற்கையாகவே ஒரு arrangement இருக்கிறது. கீழே பல உதாரணங்கள் சொல்கிறேன். பாருங்கள்.
தலை,
புது,
மனிதம்.
மத்தது.
இந்த வார்த்தைகளை கவனித்துப் பாருங்கள். த என்கிற எழுத்து தன் இடத்திற்கேற்ப ஒலியை தானாகவே மாறுபடுத்திக் கொள்கிறது. தலையில் முதல் எழுத்து, புது என்ற வார்த்தையில் இரண்டாமிடம், மனிதம் என்ற வார்த்தையில் மூன்றாமிடம், அடுத்ததில் நான்காம் இடம். உச்சரித்துப் பாருங்கள். தானாகவே உச்சரிப்பு மாறும். ஹிந்தியில் முதல் “த”, இரண்டாம் “த”, மூன்றாம் “த”, மற்றும் நான்காம் “த” என்பதை ஒட்டி இந்த சப்தங்கள் அமைந்திருக்கின்றன. மற்ற மொழிகளைப் போல ஒவ்வொரு உச்சரிப்புக்கும் தனி எழுத்து தேவையே இல்லை.
மேலும் உதாரணங்கள்:
1) கதவு. தகவு, நாடகம், வாங்குக (“க”என்கிற எழுத்தின் உச்சரிப்பை கவனியுங்கள். ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் நான்காம் இடத்தில் உள்ளது )
2) தமிழ், பதவி, அதது, நடந்து (த என்கிற எழுத்தை கவனியுங்கள்)
அதே போல் மெய் எழுத்துகளும் இந்த வேலையை கவனித்துக் கொள்கின்றன. இப்போது பாருங்கள்:
அது, அந்த
பத்து, பந்து
ஓடு, ஓட்டை
படம், பட்டம்.
பசை, பச்சை
“த்” “ட்” “ச்” மற்றும் “ந்” என்கிற மெய்யெழுத்துக்கள் தமக்கு அடுத்து வரும் எழுத்தின் ஒலியை (அதன் உச்சரிப்பை) எப்படி மாற்றுகின்றன என்று பாருங்கள். அந்த மெய்யெழுத்துகளை எடுத்து விட்டு உச்சரித்துப் பாருங்கள். ஒலி மாறும். இந்த அற்புதமான கட்டமைப்புகள் நம் தமிழ் மொழியின் செழுமையை பறைசாற்றுகின்றன. அதே போல “ன்” மற்றும் “ண்” என்கிற எழுத்துக்களும் இந்த வேலையை சரிவர செய்ய உதவுகின்றன. பன்றி, கறி, வெற்றி, மன்னன், கண்ணன் என்கிற வார்த்தைகளை நன்றாக உச்சரித்துப் பாருங்கள். ஒலி வேறுபாடுகள் புரியும்.
எனவே அடுத்த தடவை நான் நெஞ்சு நிமிர்த்தி சொன்னேன். “தோழர்களே, என் மொழியில் எல்லா சப்தங்களையும் சொல்லும் அற்புதமான ஏற்பாடு இருக்கிறது. உங்களைப் போல ஒவ்வொன்றுக்கும் ஒரு எழுத்து என்கிற பயம் எங்களுக்கு இல்லை. அப்படி இல்லாமலேயே நாங்கள் எல்லா ஒலியையும் சரியாக உச்சரிக்க வசதி கொண்டிருக்கிறோம். அது தவிரவும் நீங்கள் உபயோகப் படுத்தும் பல ஆங்கில வட மொழி சொற்களுக்கு சரியான தமிழ் வார்த்தைகள் எங்களிடம் கொட்டிக் கிடக்கின்றன”
இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். சிலர் சில வார்த்தைகளைத் தவறாகவே உச்சரிக்கின்றனர். அதாவது குதிரை என்பதை Guதிரை என்றும் பூசை என்பதை Bhuசை என்றும் உச்சரிக்கின்றனர். தமிழில் எப்பவுமே முதல் எழுத்தின் உச்சரிப்பு “ப்ப”, “க்க, ச்ச த்த” என்கிற உச்சரிப்புகளில் மட்டுமே இருக்கும். Bha, Gha, Dha, Da என்கிற ஒலி சப்தங்கள் முதல் எழுத்தாக தமிழில் வரவே வராது. வந்தால் அவை தமிழ் மொழி சார்ந்த வார்த்தைகள் இல்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். கோபால்சாமி என்பதின் முதல் எழுத்தை Gho என்கிற சப்தம் வரும்படி உச்சரிக்கிறோம். இது தவறு. கோபால் என்பது தமிழ் வார்த்தை அல்ல.
எனவே தமிழ் மொழி வேறு எந்த மொழிக்கும் சளைத்தது இல்லை என்பதுடன் மற்ற மொழிகளை விடவும் உயர்வானதே என்பதே எனது முடிவு. நான் சொல்வது சரியா தவறா? உங்களின் மேலான கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறேன்.
தமிழ் உலகின் எந்த மொழிக்கும் சளைத்ததல்ல
அதே நேரத்தில் ஒவ்வொரு மொழியும் அதற்கான தனிச்சிறப்புடன் விளங்குகிறது
எனவே நாம் எந்த மொழியையும் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை
ஆனால் ஆகச்சிறந்த மொழிகளிலே தாய்மொழியாம் தமிழே...

விடுதலைபுலிகளே விடுதலை புலிகளின் அழிவுக்கு காரணம்

ஈழ இறுதி போரை ஆரம்பித்தது விடுதலைபுலிகளே. மாவிலாறு அணையை மூடி தண்ணீர் தர மறுத்ததால்தான் சண்டை மூண்டது. அதுவே விடுதலை புலிகளின் அழிவுக்கு காரணமானது. அவ்வாறே முள்ளி வாய்க்காலில் லட்சக்கணக்கான மக்களை வலுக்கட்டாயமாக கொண்டு போய் அடைத்ததும் விடுதலைப்புலிகளே. புலிகளின் தவறான திட்டமிடல் காரணமாக மக்கள் பெருமளவில் உயிர் இழக்க காரணமாக அமைந்தது. இதில் சோனியாவை சம்பந்தப்படுத்தி பேசுவதும் கலைஞரை சம்பந்தப்படுத்தி பேசுவதும் மூளைகெட்ட மனிதர்களின் மானங்கெட்ட செயல்.
இந்த நாம் டம்ளர் கட்சி கீறல் விழுந்த டேப்பு மாறி 'ஈழப் படுகொலை' ன்னு தேர்தலுக்கு தேர்தல் பேசி மக்களை கொல்றாங்க. அதுங்க லூசா ..இல்ல லூசு மாறி நடிக்கரான்களா..ஒன்னும் புரியல. இலங்கை வேற நாடு...எந்த கொம்பனும் அங்க நடக்கறத தடுக்க முடியாது. ஐ நா சபை மூலம்தான் தடுக்க முடியும். என்னவோ, கருணாநிதி போய் LTTE ய சண்ட போடுன்னு சொன்ன மாதிரியும்..இல்ல பிரபாகரன் கருணாநிதி பேச்சை கேட்டுதான் எல்லாம் பண்ண மாதிரம் ஏண்டா லூசு மாதிரி பேசிக்கிட்டு திரியுறீங்க. கருணாநிதி இல்ல, அந்த ஒபாமாவே ஒன்னும் பண்ண முடியல. பிரபாகரன் சமாதானத்துக்கு கூப்டப்ப வரல...அப்புறம் பிரபாகரன் கூப்டப்ப ராஜபக்சே ஒதுக்கல. போங்கடா ..சீமான் மாதிரி சில நாயிங்க இத தமிழ் நாட்டு தேர்தல் அப்பா பேசி நக்கி தின்னு புழப்பு நடதுதுங்க
புடுங்க முடியாத கூட்டம்தான் தேர்தல் வந்தவுடன் ஈழ பிரச்சினைய எடுத்துக்கிட்டு தான் பெரிய யோக்கியன் மாதிரி பெரிய புடிங்கி மாதிரி திமுகவ குறை சொல்லிட்டு திரியுரானுங்க. பிணத்தை வைத்து வோட்டு கேட்கரத்துக்கு பதிலா போயி பிச்ச எடுத்து சாபிடுங்கடா.,
நாய் டம்ளர்கள் ஈழ விடுதலைக்கு என்ன புடிக்கினார்கள் ,அதையும் தெரிசுக்கலாம் !

இதுபோன்ற மூளை வளர்ச்சி இல்லாதவர்களை புறக்கனியுங்கள்

தடுப்பூசி எதிர்ப்பு, சித்த வைத்தியம், இயற்கை விவசாயம், நாட்டுமாட்டு பால் என்று இயற்கையாகவே மூளை வளராமல் இருக்கும் இன்றைய சில இளைஞர்களுக்கு எந்த வகையிலும் உங்கள் பெண்ணையோ அல்லது தெரிந்தவர்கள் பெண்ணையோ கல்யாணம் செய்து கொடுக்காதீர்கள் என்பதே நீங்கள் அந்த பெண்களுக்கு செய்யும் நன்மை,
ஏனென்றால் கல்யாணத்திற்கு பிறகு அவர்கள் பிரசவத்திற்கு தங்கள் மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் வீட்டிலேயே வைத்து சுகபிரசவம் செய்து சாவடிப்பார்கள்.
அப்படியும் தாயும் குழந்தையும் பிழைத்தால் குழந்தைக்கு தடுப்பூசி போடாமல் சாகடிப்பார்கள் அல்லது நோய் பாதிப்பில் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
அதிலும் தப்பித்தால் டெங்கு போன்ற நோய்கள் வரும்போது மருத்துவரிடம் செல்லாமல் நிலவேம்பு கசாயம் கொடுத்து கொன்றுவிடுவார்கள்.
அதிலும் மீறி சக்கரை அல்லது கேன்சர் என்ற கொடும் நோய் வரும்பட்சத்தில் அதெல்லாம் நோயே இல்லை கார்பரேட்டுகள் பணம் சம்பாதிக்க அதை நோய் என்று சொல்லி பணம் சம்பாதிக்கிறார்கள் என்று வெட்டி நியாயம் பேசி வீட்டிலேயே வைத்து கண்டிப்பாக சாவடித்துவிடுவார்கள்.
ஆகையால் திருமணம் நிச்சயம் செய்யுமுன் மாப்பிள்ளையின் முகநூலையாவது குறைந்தபட்சம் கண்டறிந்து இதுபோன்ற மூளை வளர்ச்சி இல்லாதவர்களை புறக்கனியுங்கள்..

ஒரு மாநில முதல்வரால் போரையே நிறுத்தியிருக்க முடியும் என நம்புவது அறியாமையின் உச்சம்

ஈழத்தமிழனுக்கும் சிங்களவனுக்கும் சண்டை,இதில் வலு உள்ளவன் பல நாட்டு உதவியுடன் வெற்றி பெற்றான்.இதில் அன்றைய மத்திய அரசில் அங்கம் வகித்த ஒரே காரணத்திற்காக ஒரு மாநில முதல்வரால் போரையே நிறுத்தியிருக்க முடியும் என நம்புவது அறியாமையின் உச்சம்.அப்படி இருந்தும் கலைஞர் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்தார் ஆனால் போரின் உச்சத்தில் ஸ்ரீலங்கா இந்தியாவின் பேச்சையே கேட்கவில்லை என எஸ்.எம்.கிருஷ்ணாவே சொல்லியிருக்கிறார்.

உண்மை இப்படி இருக்க இன்னும் தி மு க துரோகம் என்பவன் தி மு க மேல் கொண்ட காழ்ப்புணர்வு மட்டுமே காரணம் ஈழத்தமிழர் மேல் பாசமெல்லாம் இல்லை. இது ஒரு சாக்கு அவ்வளவே.சொல்லப்போனால் விடுதலைப்புலிகளால் ராஜிவ் கொல்லப்பட்ட போதும் சரி,அதற்கு முன்பு அவர்களுக்கு உதவுதாக கூறி ஆட்சியை இழந்த கட்சி
தி மு க மட்டுமே.மேலும் Ipkf இந்தியா திரும்பி வந்தபோது மரபை மீறி அதை வரவேற்க மாட்டேன் என்று சொன்னவர் கலைஞர்.

உண்மை என்னவெனில் பிரபாகரனும்,கோத்தபயவும்,
பசிலும் தன் லட்சியத்தை அடைய யாரையும் பலி கொடுக்க தயாராக இருந்தனர்.அதில் ஆர்மி வென்றது.இத்தனை நாள் பிரபாகரன் என்ற ஒற்றை மனிதருக்காக அவதூறுகளை பொறுத்தோம்,இனியும் அவர் பேரில் திமுகவை எதிர்த்தால் அதற்கும் தக்க பதிலடி கொடுப்போம்.





பிரபாகரனால் கொல்லபட்ட தமிழர்களின் பட்டியலை பாருங்கள்

ஆங்காங்கே கலைஞரையும், இந்தியாவினையும் திட்டிகொண்டிருக்கும் சைமனின் தும்பிகளுக்காகவும், குபீர் தமிழுண்ர்வு போராளிகளுக்காகவும், இந்தியா ஈழதமிழரை கொன்றது என சொல்பவர்களுக்காகவும் சொல்லிகொள்வது..
கடவுள் மனிதனை மண்ணிலிருந்து படைத்தாராம், ஆனால் உங்கள் மண்டைகளில் ஏன் அந்த மண் அப்படியே இருக்கின்றது என தெரியவில்லை,
ஏதோ ஈழத்தில் சண்டை 2006ல்தான் வந்தது போலவும், பிரபாகரன் பெரும் உத்தமன் என்பது போலவும், 2009ல் இந்தியா அவனை கொல்ல முன்னின்றது என்பது போலவும் எத்தனை பொய்கள்? எத்தனை புரட்டுகள்
சரி, என்னை திட்டுமுன் பிரபாகரனால் கொல்லபட்ட தமிழர்களின் பட்டியலை பாருங்கள்
ஆல்பர்ட் துரையப்பா, மைக்கேல்,பற்குணம் என 1980களின் பட்டியல்
செட்டிதனபாலசிங்கம் எனும் கொள்ளையனோடு சேர்ந்து அடகு கடை, வங்கி கொள்ளையில் நடந்த கொலைகள் என 1981 வரிசைகள்
செல்லகிளி மர்மமாக செத்தது, தமிழ் போலீஸ் அதிகாரி பஸ்தியாம் பிள்ளை கொலை என 1982 வரிசைகள்
உச்சமாக குட்டிமணியினை காட்டிகொடுத்த யூதாஸ் என்று உங்கள் மேதகு மேல் பெரும் கறை உண்டு,
அதன்பின் ஆள் அம்பு சேனை வாய்த்தவுடன் செய்த கொலைகள் ஏராளம்.
கொஞ்சம் யோசனை சொன்ன அல்லது கண்டித்த பெண் சிந்தனையாளர்களான ராஜினி, செல்வி, மகேஸ்வரி, ரேலங்கி என பெரும் எழுத்தாளர்களை கொன்றது யார்?
அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், லட்சுமண் கதிர்காமர் என கொன்றது யார்?
சக போராளியான சபாரத்தினத்தை 2000 போராளிகளோடு சேர்த்து கொன்றது யா? 2000 பேர் அய்யா? தமிழ் போராளிகள்.
பத்மநாபாவினை சென்னையில் 17பேரோடு கொன்றது யார்? அவரின் இயக்கத்தார் 1000 பேரை கொளுத்தியது யார்?
கந்தன் கருணை எனும் இல்லத்தில் 80 போராளிகளை கொன்றது யார்?
செய்யதெரியாமல் வெடிகுண்டு செய்து 100 பொதுமக்களை கொன்று அச்செய்தியினை 2 பேர் என மாற்றியது யார்?
காத்தான்குடி பள்ளிவாசலில் புகுந்து 100 இஸ்லாமியரை கொன்று மசூதியினை ரத்தகுளம் ஆக்கியது யார்? தங்கத்தையும் பணத்தையும் பறித்துகொண்டு 5000 இஸ்லாமிய குடும்பங்களை விரட்டியது யார்?
மாத்தையா எனும் புலியோடு 800 புலிகளை கொடூரமாக கொன்றது யார்? அவர்கள் தமிழர்கள் இல்லையா?
அதன் பின் கருணாவோடு சென்ற புலிகள் 300க்கும் மேற்பட்டோரை கதற கதற கொன்றது யார்?
சரி இவர்களாவது தமிழர்கள் என்றாலும் ஈழத்தவர், இப்படி பிரபாகரனால் கொல்லபட்ட 15 ஆயிரம் தமிழர்களையாவது உங்கள் கணக்குபடி துரோகிகள் என விட்டுவிடலாம்.
ஆனால் சிங்களனோடு சேர்ந்து புலிகள் 1500 அமைதிபடை வீரர்களை கொன்றதை, ராஜிவோடு சேர்ந்து 16 தமிழரை கொன்றதை, பத்மநாபா கொலையில் 4 தமிழக போலீசாரை கொன்றதை மறந்தால் நீ இந்தியனா? அப்படி இனம்தான் முக்கியம் நாடு இல்லை என்றால் கிளம்பு கிளிநொச்சிக்கு உனக்கு இங்கு என்ன வேலை?
இன்று 3 இந்திய தமிழரும், 4 ஈழத்தவரும் தூக்கு கயிறு முன் நிற்க, அவர்களை காப்பாற்ற அந்த பிரபாகரன் ஏதும் வாய் திறந்து சொன்னனா? சொல். அவன் சொல்லியிருந்தால், அந்த வெடிகுண்டு எங்களால் செய்யபட்டது என அவன் சொன்னால் பேரரிவாளன் வாழ்க்கை தொலைத்திருப்பானா?
இந்தியா என்ன செய்யவில்லை?
1983 முதல் 1990 வரை அது எத்தனை முறை காப்பாற்றி என்னவெல்லாம் செய்தது? அதனை ஏன் மறைக்கின்றீர்கள்?
மக்களை மிரட்டி கப்பம் வாங்கிய ஒரு ரவுடி கும்பல், அந்நிய சக்திகளிடம் விழுந்த்து மனம் போன போக்கில் கொலை செய்தால் அது போராட்டமா?
இன்று படுகொலை என பிணங்கள் என முள்ளிவாய்க்கால் படம்போடும் நீங்கள்? நாங்கள் பதிலுக்கு போட்டால் தாங்க முடியுமா? அது முழுவதும் போட்டால் முகநூல் தாங்குமா?
நீ முள்ளிவாய்க்கால் படம் போட்டுகொண்டே இரு, நாங்கள் புலிகளின் அட்டகாசத்திற்கு சில சாம்பிள் மட்டும் போடுகின்றோம்.
நீ பாலசந்திரனை பார்த்து அழுதால், நாங்கள் ராஜிவோடு செத்த அந்த சிறுமிக்காக அழுவோம்.
நீ அடுத்தநாட்டு மக்களுக்காக அழு, நாங்கள் சொந்த மக்களுக்காக அழுகின்றோம், அப்படி இந்நாடு முக்கியமல்ல அந்த நாடு முக்கியமென்றால் கிளம்பி செல், உங்கள் சீமானையும் அழைத்துகொண்டு போ.
சிங்களனோடு மோதி சாவு, இங்கிருந்துகொண்டு எமது ராணுவத்தையும், எமது மக்களையும் நினைக்காமல் அடுத்த நாட்டை நினைப்பவன் தேசதுரோகி, உங்களுக்கு இங்கு என்ன வேலை?
அமைதிபடை காலத்திலும் சென்று ராஜிவ் கொலையில் சந்தேகம் இருந்தும் குற்றம் சாட்டபடாமல் தப்பிய வைகோ, நெடுமாறன் போன்றவர்களையும், பின் சென்று பிரபாகரனை பார்த்த தமிழக சினிமாகாரர்களையும் அன்றே தேசதுரோக குற்றச்சாட்டில் போட்டு சாத்தி இருக்கவேண்டும்,
அப்படி செய்திருந்தால் நீங்கள் எல்லாம் பேச முடியும்?
அதனை இந்த தேசம் உங்களுக்கு செய்யவில்லை, அந்த தைரியத்தில்தானே பேசிகொண்டிருக்கின்றீர்கள்?
யாழ்பாண மக்களுக்கு 1995ல் விடுதலை கிடைத்தது, அதன் பின் புலிகள் அதனை பிடிக்கவே முடியவில்லை. அவர்கள் மாவீரம் மண்ணாங்கட்டி எல்லாம் அவ்வளவுதான்,
சும்மா சவுடால், அவர்களின் ஒரே தந்திரம் எதிர்பாரா நேரம் தாக்குவது அல்லது நம்பவைத்து கொல்வது.
பெரும் படை, அணி, வீரம் எல்லாம் தமிழக தினதந்தி மட்டும் கண்டது.
அப்படி வன்னி மக்களுக்கு விடுதலை கிடைத்த நாள் மே 18, அதுதான் உண்மை
(புலிகளால் கொல்லபட்ட வரிசை மிக பெரிது, இது ஒரு துளிதான்)

Amirthalingam

Neelam Thiruchelvam

Rajiv Gandhi

IPKF

EPRLF Padmanabha

Lakshman Kadirgamar


1. Amirthalingam - http://www.asiantribune.com/node/63128 - “It was the Tigers who killed my husband,” – Mangayarkarasi Amirthalingham

2. Neelam Thiruchelvam - https://www.colombotelegraph.com/index.php/defacing-of-sanctity-of-life-mural-on-kynsey-terrace/dr-neelan-tiruchelvam/

3. Lakshman Kadirgamar - https://www.smh.com.au/news/world/state-of-emergency-declared-after-assassination/2005/08/13/1123353543133.html

4. Previous Post  புலிகளால் கொல்லபட்ட தமிழர்கள்