Saturday, May 19, 2018

"பேச நா இரண்டுடையாய் போற்றி!" - பேரறிஞர் அண்ணா

*இந்தப் பக்கம் "பிரபாகரனோடு சேர்ந்துக்கொண்டு ராஜீவ் காந்தியைக் கொன்றதும் தி.மு.க";
அந்தப் பக்கம் "ராஜீவ் மனைவியான சோனியாவோடு சேர்ந்துக்கொண்டு பிரபாகரனைக் கொன்றதும் தி.மு.க".
*இந்தப் பக்கம் "1991ஆம் ஆண்டு முன்னாள் பிரதமரைக் கொன்ற தீவிரவாத இயக்கமான விடுதலைப் புலிகளை தி.மு.க ஆதரித்தது தேச துரோகம்";
அந்தப் பக்கம் "அதனால் எம்.ஜி.ஆர் காலத்தில் பத்தாண்டுகளாக நிபந்தனையின்றி புலிகளுக்கு கோடிக்கணக்கில் பண உதவி செய்துவந்த அ.தி.மு.கவுக்கு 1991 தேர்தலில் வாக்களித்து ஜெயலலிதாவை முதல்வராக்கினோம்"
*இந்தப் பக்கம் "2009 இறுதிக்கட்ட ஈழப் போரில் மேதகு பிரபாகரனுக்கு போதுமான ஆதரவை கலைஞர் வழங்கவில்லை";
அந்தப் பக்கம் "அதனால்தான் பிரபாகரனை கைது செய்து இந்தியச் சிறையில் அடைக்கவேண்டும் என்று பேசிய ஜெயலலிதாவுக்கு 2011 தேர்தலில் ஓட்டுப்போட்டோம்"
*இந்தப் பக்கம் "தி.மு.கவின் பழைய போராட்ட குணங்கள் மழுங்கி இந்திய தேசியத்தின் கைப்பாவையாகிவிட்டது";
அந்தப் பக்கம் "தி.மு.க பிரிவினையை ஊக்குவிக்கும் தேசவிரோதக் கட்சி".
*இந்தப் பக்கம் "89பேரை வைத்துக்கொண்டு ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களை தன்பக்கம் இழுத்து ஆட்சியைப் பிடிக்கத் தெரியாதது ஸ்டாலினின் கையாளாகாதத்தனம்";
அந்தப் பக்கம் "வெறும் 104 எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடிப்பதற்காக பி.ஜே.பி எதிர்க்கட்சி ஆட்களிடம் குதிரை பேரம் நடத்துவது ஜனநாயகப் படுகொலை".
அன்றே இவர்களைத்தான் பேரறிஞர் அண்ணா, "பேச நா இரண்டுடையாய் போற்றி!" என்று வாழ்த்தினார்.

No comments: