Thursday, May 17, 2018

பத்மநாபாவும் , ராஜீவ் காந்தியும் கொலை செய்யப்படாமல் இருந்திருந்தால்

1990 களில் பத்மநாபாவும் , ராஜீவ் காந்தியும் கொலை செய்யப்படாமல் இருந்திருந்தால், வெறும் 700 ற்கும் உட்பட்ட போராளிகள் மாத்திரம் தான் இறந்திருப்பார்கள்.
அவைகள் மட்டும் அல்ல 90ம் ஆண்டு முதற்கொண்டு 2009 மே 18 வரை லட்சக்கணக்கான மக்கள் இறந்திருக்க மாட்டார்கள்.
50,000 ற்கு மேற்பட்ட இளைஞர்கள்,யுவதிகள்,சிறுவர்,சிறுமியர் புதைகுழிக்குள் சென்றிருக்க மாட்டார்கள்.
அல்பிரெட் துரையப்பா முதற்கொண்டு மகேஸ்வரி வேலாயுதம் வரை அரசியல்வாதிகள், தலைவர்கள், கல்விமான்கள், பலகலைக்கழக மாணவர்கள்,பாடசாலை அதிபர்கள், புத்திஜீவிகள், தொழிலதிபர்கள் , என்று பலர் இன்றும் உயிர் வாழ்ந்திருப்பார்கள்.
தமிழ்நாடில் இலங்கைத் தமிழ் அகதிகளின் சித்திரவதை முகாம் உருவாகியிருக்காது.
வலிகாமம் வடக்கு மக்கள் தங்கள் பூர்வீக இடங்களில் நிம்மதியாக வாழ்ந்திருப்பார்கள்.
இராணுவ உயர்பாதுகாப்பு வலயங்கள் உருவாக சந்தர்ப்பம் இருந்திருக்காது..
இந்திய இராணுவத்திடம் தமிழ்ப் பெண்கள் தங்கள் மானத்தைப் பறிகொடுத்தீருக்க வேண்டி வந்திருக்காது.
வட பகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேறவேண்டி வந்திருக்காது.
அரசியல் கைதிகள் என்று யாரும் சிறையில் இருந்திருக்க மாட்டார்கள்.
வன்னிக்காடுகள் எங்கும் இராணுவப் பிரசன்னம் வந்திருக்காது.
புத்திஜீவிகள் கல்விமான்கள், தொழிலதிபர்கள் இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
கூட்டமைப்பு என்ற கூத்தாடிகள் உருவாகியிருக்க மாட்டார்கள்.
வி வாண்ட் டமில் ஈழம் என்று வெளிநாட்டு உண்டியல் குலுக்கிகள் கத்தி இருக்க மாட்டார்கள்.
முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் மாண்டிருக்க மாட்டார்கள்.


No comments: