Thursday, May 17, 2018

பிரபாகரனை மிக மிக வன்மையாக சாடியவர் ம.பொ.சி

பத்மநாபா கொல்லபட்டபொழுது சென்னையில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பிரபாகரனை மிக மிக வன்மையாக சாடியவர் ம.பொ.சி
ஒருகாலமும் பிரபாகரனால் ஈழம் அமையாது எனவும், அந்நாட்டை பிரபாகரன் சுடுகாடு ஆக்குவார் எனவும் சொன்னது அவர்தான்
அதற்கும் மேலாக சொன்னார், "தமிழக இளைஞர்கள் இந்த பாசிச புலிகளிடம் மிக மிக கவனமாக இருக்கவேண்டும், இவர்களால் பலர் வாழ்வை தொலைக்க நேரிடும் ஜாக்கிரதை"
அவர் சொன்னதையும் கேளாமல் வாழ்வை தொலைத்தவர்கள்தான் ராஜிவ்கொலை கேமரா ஹரிபாபு, இப்போது பரோலில் வந்த பேரரிவாளன், நளினி இன்னபிற புலி ஆதரவு கொலையாளிகள்
அந்த ம.பொ.சிக்கு , பிரபாகரன் படம் பிடித்தலையும் சைமன் கோஷ்டி அஞ்சலி செலுத்துகின்றதாம்
ம.பொ.சிக்கு எவ்வளவு அவமனானம்? அஞ்சலி செலுத்த ஒரு தகுதி வேண்டாமா?
யார் செத்தாலும் வீரவணக்கம் என கிளம்புவார்கள் இவர்கள், அவருக்கு அஞ்சலி செலுத்த நமக்கு என்ன தகுதி இருகின்றது, கொள்கை இருக்கின்றது என கொஞ்சமும் யோசிப்பதில்லை.
இதன் பெயர்தான் தமிழ் தேசியமாம். என்ன கருமாந்திரமோ தெரியவில்லை
போகிற போக்கில் ராஜிவ்காந்திக்கும் , ஜெயவர்த்தனேவிற்கும் கூட வீரவணக்கம் இவர்கள் தெரிவிப்பார்கள் பாருங்கள்.
அது என்ன மா.போ. சி?
அவர் மா.பொ.சியா? ம.போ.சியா?
முதலில் தமிழை ஒழுங்காக எழுத பழகுங்கள் காலி டம்ளர் பாய்ஸ்
மிஸ்டர் அங்கிள் சைமன்
பிரபாகரனை சற்றும் ஏறெடுத்துபார்க்காமல், அவரின் செயல்பாடுகளால் வெறுப்புற்ற ம.பொ.சி சிலை முன்னால் நின்றுகொண்டு என்ன அஞ்சலி?
நான் இந்தியன் அதன் பின் தமிழன் என நின்றிருந்த அந்த மாபெரும் தலைவன் சிலை முன்னால் நின்று கண்டதை பேசி பிரபாகரன் ஸ்டைல் வணக்கம் சொல்ல கொஞ்சமேனும் வெட்கமே இல்லையா?

No comments: