Thursday, May 17, 2018

பாஸ்கர சேதுபதி - நாடார்களின் வரலாறு




14.05.1897 அன்று இருளப்ப நாடார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நாடார் சமூகத்தினர் கமுதி மீனாட்சி அம்மன் கோவிலில் தீப்பந்தம் ஏந்தி, பால்குடம் தலையில் சுமந்து மேள தாள ஆரவாரத்துடன் சிலை வழிபாடு செய்த பிறகு அன்றைய கோவில் நிர்வாகி பாஸ்கர சேதுபதியால், நாடார்களின் கோவில் நுழைவு கோவில் சிலையை தீட்டுப்படுத்தியதாக மதுரை சார்பு நீதிமன்றத்தில் வழக்கிடப்பட்டு நீதிமன்றம் இந்து மத சாஸ்திரங்களை அலசி ஆராய்ந்து நாடார்கள் கோவிலுக்குள் நுழைந்ததை கண்டித்து ஐநூறு ரூபாய் அபராதம் விதித்தது.
உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில் ஒத்திசைவுக்கு சம்மதித்த சேதுபதி தரப்பு முப்பத்திஐந்தாயிரம் பெற்றுக்கொண்டு கோவிலுக்குள் அனுமதிக்க இசைந்து முன்பணமாக ஐந்தாயிரம் பெற்றுக்கொண்ட பிறகு அவரது மகனின் பாதுகாவலராக மனைவியைக்கொண்டு ஒத்திசைவுக்கு எதிராக வாதிட்டது.அன்றைய தேதிகளில் தங்கத்தின் விலை ஒரு பவுன் 18 ரூபாய் என்பது நினைவு கூரத்தக்கது.மெட்றாஸ் உயர் நீதிமன்றமும் இந்து சாஸ்திரங்களின் துணையுடன் நாடார்களின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.
கிட்டத்தட்ட அதே காலத்தில்(1890)பாஸ்கர சேதுபதி இந்து மதத்தின் மேன்மையை மேலை நாடுகளில் பரப்ப, விவேகானந்தருக்கு
பண உதவி செய்து அவர்அமெரிக்க சிகாகோ மாநாட்டில் சகோதரர்களே !
சகோதரிகளே !! என முழக்கமிட்டு கைத்தட்டல் பெற்ற போது அவரது உள்ளூர் சகோதர சகோதரிகள் கோவிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டு தங்களை உள்ளே அனுமதிக்க சனாதன இந்து தர்மவான்களை கெஞ்சிக்கொண்டிருந்தனர்.
ஆயிரக்கணக்கான நாடார்கள் கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் தழுவினர்.
தங்களது வழக்கு உயர் நீதிமன்றத்தில் 18.09.1902 இல் தோல்வி அடைந்தாலும் நாடார்கள் மனந்தளராமல் மன்னர் மன்றம் வரை (privy council) 42000 ரூபாய் செலவிட்டு அங்கும் நாடார்களின் கோவில் நுழைவு கேலிக்குள்ளாகி அவர்களது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
கேரள ஆலய பிரவேச சட்டத்தின் நிறைவேறக் காரணம் மதம் மாறுவோம் என கேரளத்தின் 12 சதவிகித மக்கள் தொகையை கொண்ட ஈழவர் மற்றும் தீயர் சமூக மாநாடு அறிவித்ததே என டாக்டர் அம்பேத்கர் அம்பலப்படுத்தினார்.
நாடார்களின் கடந்த இரு நூற்றாண்டுகள் நடந்த சமூக விடுதலைப் போராட்டம் சனாதன இந்து மதத்திற்கு எதிரானது.
நாடார்களின் வரலாறு கறுப்பே ! காவியல்ல


No comments: