Thursday, February 06, 2020

இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி...

இராஜராஜ சோழன் ஆட்சி!
பார்ப்பனியத்தின் மீட்சி...👇👇👇
உலகின் மிக உயரமான கோபுரங்களைக் கொண்ட, பழமையான பெருங்கோவில்களில் தஞ்சைப் பெரியகோவிலும் ஒன்று. இன்றிருப்பதைப் போன்ற துரிதக் கட்டுமானப் பொறி நுட்பங்கள் ஏதும் வளர்ந்திராத, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கட்டிடப் பொறியியலில் மாபெரும் சாதனையாகக் கட்டப்பட்டதுதான் இந்தக் கோவில். மழைபெய்தால் நீர்க்கசிவு ஏற்படாதிருக்கப் பதிக்கப்பட்டிருக்கும் நுண்குழாய்கள், ஒரே கல்லினால் ஆன மிகப் பெரும் நந்தி எனப் பல்வேறு பிரம்மாண்டமான பொறியியல் சாதனைகளை எல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்துக் காட்டிய மாமன்னன் ராஜராஜன் போற்றிக் கொண்டாடப்படுகிறான். கூடவே அவனது ஆட்சியும் ’தமிழகத்தின் பொற்கால ஆட்சி’ என்று புகழப்படுகிறது.
தஞ்சைப் பெரியகோவிலின் கலைநுட்பமும், பொறியியல் சாதனையும் மனிதகுல வரலாற்றில் மகத்தான படைப்புகள்தான். அதே போல எகிப்தின் பாரோக்கள் கட்டிய பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும்கூட மனித வரலாற்றின் பெரும் சாதனைகள்தான். எனினும் அவை பொற்காலங்களாகக் கொண்டாடப்படுவதில்லை. கலைத்திறனைப் போற்றுவது என்பது வேறு. அரசாட்சியைக் கொண்டாடுவதென்பது வேறு.
பெரியகோவிலை எழுப்பிய ராஜராஜனின் ஆட்சியில்தான் குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை செழித்திருந்ததாகவும், வேந்தன் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலங்களை அளந்து முறைப்படுத்தி ’உலகளந்தான்’ எனும் பெயர் பெற்றதாகவும் கூறி ’தமிழனின் பொற்கால ஆட்சி’ என கலைஞர் முதல் தமிழினவாதிகள் வரை பலராலும் போற்றப்படுகிறது, ராஜராஜனின் ஆட்சி.
அன்றாடங்காச்சிகளாக வாழும் அப்பாவித் தமிழர்கள் கூட இப்பெருமிதக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ’கடாரம் கொண்டான்’ என்றும் ’சோழ சாம்ராச்சியம்’ என்றும் காதில் கேட்டமாத்திரத்தில் ’நம் தமிழனின் பெருமை’ என்று பெருமிதத்துள் வீழ்கின்றனர்.
வரலாறு நெடுகிலும், மன்னர் ஆட்சி, உழைக்கும் மக்களுக்கு கொடுங்கோல் ஆட்சியாகவே இருந்துள்ளது. இருப்பினும் அம்மன்னர்களின் வரலாற்றுப் பாத்திரம் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அசோகனின் பாத்திரமும் புஷ்யமித்திர சுங்கனின் பாத்திரமும் வேறுவேறுதான். முன்னெப்போதும் இல்லாப் பிரம்மாண்டமாக ராஜராஜன் பெரியகோவிலை எழுப்பியது ஏன்? அக்கற்றளிக் கோவிலின் கம்பீரம் மூலம் அவன் எதைச் சொல்ல நினைத்தான்?
அடிமை உழைப்பிலும் போர்க் கொள்ளையிலும் உருவான பெரிய கோவில்!
ராஜராஜனுக்கு முன்னர் நடுகல் வழிபாடுதான் தமிழ்நாட்டில் பரவி இருந்தது. அக்கம் பக்கமாக குறிஞ்சி (மலை சார்ந்த) , முல்லைப் பகுதிகளில் (காடு சார்ந்த) இருந்த வேளிர் எனும் இனக்குடிகளின் அரசுகளை ஒழித்துக் கட்டி, மருதநிலப் பரப்பில் பேரரசுகள் உருவாக்கம் பெற்ற வரலாற்றுக் காலமே ராஜராஜனின் காலம். தொடர் போர்கள் மூலம் சிற்றரசுகளை நிர்மூலமாக்கி, அவ்வரசுகளின் செல்வங்களை எல்லாம் கவர்ந்து வந்து தன் பேரரசைக் கண்டாலே அனைவரும் அச்சத்தால் உறைந்திடச் செய்யும் மாபெரும் சின்னம் ஒன்றை உருவாக்குவதும், அச்சின்னத்தையே அதிகார மையமாக மாற்றுவதுமே ராஜராஜனின் நோக்கமாக இருந்திருக்கிறது. அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் பெரிய கோவில்.
சங்கம் மருவிய காலத்தின் பின் வந்த களப்பிரர் காலத்தில் வைதீகத்தின் கொட்டம் அடக்கப்பட்டு சமணம் தழைத்தோங்கி இருந்தது. களப்பிரர்களை வீழ்த்திய பாண்டியபல்லவர்கள் காலத்தில் ஆற்றுப்பாசனம் வளர்ச்சி பெற்று வேளாண் உற்பத்தி பெருகியது. சிற்றரசுகள் வீழ்த்தப்பட்டு பெருவேந்தர்கள் உருவாகும் வரலாற்றுக் கட்டத்தைச் சேர்ந்தது சோழர் ஆட்சி. கழுவேற்றி சமணத்தைக் கருவறுத்த சைவத்தின் வெற்றி, ராஜராஜனின் பேரரசு உருவாக்கத்தோடு ஒருங்கிணைந்தது. இக்காலத்தில்தான் சைவக்கொழுந்துகளான வேளாளர்களும் பார்ப்பனர்களும் கூட்டணி கட்டிக் கொண்டு அதிகார மையமானார்கள். இவர்களின் ஆட்சிக்கு பெரியகோவில்தான் மைய அச்சாக இருந்தது.
கருங்கற்பாறைகளே இல்லாததும் காவிரியாறு கொண்டு வந்து சேர்த்த வண்டலால் நிரம்பியதுமான தஞ்சைப் பகுதியில், ஒரு லட்சத்து முப்பதாயிரம் டன் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடம்தான் பெரிய கோவில். கட்டிடக் கலை சார்ந்த நவீன தொழில்நுட்பங்களோ, சாலைகளோ போக்குவரத்து வசதிகளோ இல்லாத அந்தக் காலத்தில் இத்தனை பெரிய கட்டிடத்தைக் கட்டிமுடிக்க, எவ்வளவு மனித உழைப்பு தேவைப்பட்டிருக்கும்? இந்தக் கட்டுமானப் பணியில் எத்தனை பேர் தங்களது உயிரை இழந்திருப்பார்கள்?
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இந்தக் கோவிலை அடிமைகளின் இலவச உழைப்புதான் உருவாக்கியது. தனது ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து போர்கள் நடத்திய ராஜராஜன் போரில் தோற்ற நாட்டு வீரர்களைக் கைதிகளாக்கிக் கொண்டுவந்து அவர்களின் உழைப்பிலேயே இக்கோயிலை எழுப்பினான். போர்க்களங்களில் இருந்து கைதிகளை மட்டுமல்ல, இக்கோவிலுக்குத் தேவையான அனைத்தையும் கொள்ளையடித்துத்தான் கொண்டு வந்தான்.
மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை வென்றபோது கைப்பற்றப்பட்ட செல்வங்களும், ஈழம், கேரளத்தின் தென் பகுதி, ஆந்திரத்தின் தென் பகுதி ஆகியவற்றை வென்று அந்நாடுகளின் கருவூலங்களைக் கொள்ளை அடித்த செல்வங்களும்தான் 216 அடிக் கற் கோபுரமாகியது. மலைநாடு எனப்படும் சேரநாட்டை வென்றபோது எடுத்து வந்த பொன் நகைகளும், பாண்டிய நாட்டை வென்றபோது கொள்ளையடித்து வந்த முத்து, பவளங்களும்தான் பெருவுடையாருக்குரிய நகைகளாயின.
சாளுக்கிய நாட்டிலிருந்து கொள்ளையிட்டு பெருவுடையாருக்கு சொந்தமாக்கப்பட்ட 87.593 கிலோ தங்க நகைகளும், சேர, பாண்டிய நாட்டுக் கொள்ளையில் கிடைத்த 95.277 கிலோ வெள்ளியும் இதில் அடக்கம். ஈழப் போரின்போது கைப்பற்றப்பட்ட கிராமங்கள் பெரிய கோவிலுக்கான வருவாய்க் கிராமங்களாக (நிவந்தம்) விடப்பட்டிருந்தன. இவ்வாறு அண்டை நாடெங்கும் போர்தொடுத்து கொள்ளையடித்த பொருட்களால் உருவானதுதான் தஞ்சைப் பெரியகோவில்.
இக்கோவில் உருவாவதற்காக தென்னகத்தில் தொடர்ந்து ரத்த ஆறு ஓடிக் கொண்டே இருந்தது. காந்தளூர் முதல் ஈழம் வரை இதற்காக ராஜராஜன் படை எடுத்துப் பேரழிவை நடத்தினான். காந்தளூரில் (இன்றைய திருவனந்தபுரத்தின் ஒரு பகுதி) சேரனைத் தோற்கடித்து, உதகை நகர் (கல்குளம் வட்டம்) கோட்டை தகர்க்கப்பட்டு எஞ்சிய நகரெங்கும் தீவைக்கப்பட்டது. இது அவனுடைய மெய்க்கீர்த்தியில் ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி’ என்று சொல்லப்படுகிறது.
அண்மையில் கண்டறியப்பட்ட கல்வெட்டில் இதன் அடுத்த வரி ‘மலையாளிகள் தலை அறுத்து‘ என்றுள்ளதாக முனைவர் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். அடுத்து மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனைத் தோற்கடித்த போரில் நகரங்களைக் கொளுத்தியும், குழந்தைகள் எனக்கூடப் பாராது அனைவரையும் கொன்று வெறியாட்டம் போட்டது சோழர்படை. கன்னிப்பெண்களைக் கைப்பற்றி மனைவியராக்கிக் கொண்டும் அளவற்ற பொருட்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினர்.
ஈழத்தின் மீது படை எடுத்து அந்நாட்டு அரசியையும், அவளுடைய மகளையும் கைப்பற்றி வந்தனர். புத்தசமய நினைவுச் சின்னங்களில் இருந்த பொன்னாலான உருவங்களைக் கொள்ளை அடித்தனர். இந்தப் படையெடுப்பின்போது அனுராதபுரம் நகரை தீவைத்து அழித்தனர். புது நகராக பொலனருவாவை உருவாக்கினர். ஜார்ஜ் புஷ், ஈராக்குக்கு ஜனநாயகம் வழங்கியதைப் போல ஜனநாதபுரம் என அதற்குப் பெயருமிட்டனர்.
நாட்டு மக்களைச் சுரண்டிய பெரிய கோவில் பொருளாதாரம்!
ஆகம நெறிப்படி பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட கோவில்களில் தஞ்சைப் பெரிய கோவிலே முதற்கோவில் என்பர். சைவம் பரப்பும் வேலையை மட்டும் அக்கோவில் செய்துகொண்டிருக்கவில்லை. சோழர்காலத்தின் வட்டிக்கடையாகவும், நில உடைமையாளராகவும், பொற்களஞ்சியமாகவும் அரசின் அதிகார பீடமாகவும் விளங்கியது.
சோழநாட்டின் விளை நிலங்களில் பெரும்பகுதி பெருவுடையார் கோவிலுடன் இணைக்கப்பட்டிருந்தது. குடிகளிடம் இருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு கோவிலுக்கு வசூலிக்கப்பட்டது. கோவில் நிதிக் குவியலில் (பண்டாரம்) இருந்து விவசாயிகள் தமது தொழிற்தேவைகட்கும், பெண்களுக்கு சீதனம் தரவும் கடன் பெற்றனர். பெருவுடையார் கோவில் கணக்கில் இருந்த பல்லாயிரக் கணக்கான களஞ்சு பொன்களும், காசுகளும் பெரும்பாலும் பல ஊராட்சி மன்றங்களுக்கும், சபைகளுக்கும் கடனாகத் தரப்பட்டு 12 சதவீதம் வட்டியாக (பணமாகவோ பொருளாகவோ) வசூலிக்கப்பட்டது.
சிறிய அளவில் நிலம் வைத்திருந்த விவசாயிகட்குக் கடன் கொடுத்து விளைச்சல் இன்மையால் அவர்கள் கடன் கட்டத் தவறிய போது, அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டு பெரியகோவிலுக்கு சொந்தமாக்கப்பட்டன. கடனாளியான விவசாயிகளை கோவில் அடிமைகளாக்கி, அவர்கள் முதுகில் சூட்டுக் கோலால் சூடுபோட்டு, கோவில் நிலங்களில் வேலை செய்ய வைத்தனர்.
பெரிய கோவில் இறைத் திருமேனிக்கு ராஜராஜன் அளித்தது 2.692 கிலோ தங்கமாகும். பெரியகோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து காணிக் கடனாக ஆண்டொன்றுக்கு வந்த நெல் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் கலம். ஆண்டொன்றுக்கு கோவிலுக்கு வந்த வருவாயில் நெல் தவிர பொன், 300 களஞ்சு, காசுகள் 2 ஆயிரம் என நாட்டின் ஒட்டுமொத்த செல்வமுமே பெரியகோவிலில் குவிக்கப்பட்டிருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கென 4 பண்டாரிகள், 116 பரிசாரகர்கள், 6 கணக்கர், 12 கீழ்க்கணக்கர் பெரியகோவிலில் பணி புரிந்தனர். கோவிலுக்கு நெல்லும், பொன்னும் கட்டாயமாகத் தரவேண்டும் என 57 கிராமங்களுக்கு ராஜராஜன் உத்தரவிட்டிருந்தான்.
அன்றாடம் இந்தக் கோவில் இயங்குவதற்கான இலவச உழைப்பும் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இக்கோவிலுக்கு நுந்தா விளக்கெரிப்பதற்காக 400 இடையர்கட்கு ‘ சாவா மூவாப் பேராடுகள்’ எனும் பெயரில் ஆடு, மாடு, எருமைகள் வழங்கப்பட்டன. ‘வெட்டிக் குடிகள்’ என அழைக்கப்பட்ட இந்த 400 பேரும் கோவிலுக்கு விளக்கெரிக்க நாளொன்றுக்கு உழக்கு நெய் கொடுக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது. கோவிலுக்குக் கொடுத்தது போக, இவர்களுக்கு ஆடுமாடுகளிடமிருந்து கிடைத்த உபரியைத் தவிர வேறு சம்பளம் கிடையாது. கால்நடைகளின் எண்ணிக்கை குறையாமல் அவற்றைப் பராமரித்து கோவிலுக்கு நெய் அளக்கும் ‘வெட்டிக் குடி’ (ஊதியம் இல்லா வேலையாட்கள்)களாக அவர்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. நெய் அளக்கத் தவறிய இடையர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வெட்டிக்குடிகளைப் போன்றே பல பெண்கள், பெரிய கோவில் நெல் குற்று சாலையில் சம்பளம் இன்றி வேலை செய்ய அமர்த்தப்பட்டனர். ஆனால், பார்ப்பனர்களுக்கென்று, வேதம் கற்க பாடசாலைகள், உணவு உறைவிட வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டன. இப்பாடசாலை மாணவர்களுக்கு 6 கலம் நெல்லோடு 1 பொன் உபகாரச் சம்பளமாகவும் வழங்கப்பட்டது.
விவசாயிகளுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தும், நிலப்பறிப்புச் செய்தும், அரசு வல்லமையால் வரி தண்டிச் சுரண்டியும்தான் பெரியகோவில் வானுயர்ந்து நின்றது.
பார்ப்பனிய நிலவுடமை ஆதிக்கத்தின் காலம்!
இவ்வாறு பெரிய கோவில் செழித்திருந்த காலத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது?
பார்ப்பனரைத் தவிர அனைத்துத் தரப்பினரும் தத்தம் ஊர்களுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்த காவலுக்கென்று ‘பாடி காவல் வரி’ செலுத்தினர். கைத்தொழில் செய்வோர் ஒவ்வொரு தொழிலுக்கும் வரி (இறை) செலுத்த வேண்டி இருந்தது. நெசவாளர் ’தறி இறை’யும், எண்ணெய் பிழிபவர் ’செக்கு இறை’யும், தட்டார், தட்டாரப்பாட்டத்தையும், தச்சர், ‘தச்சு இறை’யும் வரிகளாகச் செலுத்தினர். மக்களிடமிருந்து புரவு, இரவு, குடிமை, திருமணவரி, போர்வரி எனப் பல வரிகளை அரசு வசூலித்த அதே நேரத்தில், ஊர், சபை போன்ற அமைப்புகளும் தனியாக வரி விதித்தன. இவ்வாறு விதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிடமிருந்துதான் வசூலிக்கப்பட்டன.
விவசாயிகள், விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை வரியாக செலுத்த வேண்டியிருந்தது. அந்த வரிக்குக் ’கடமை’ எனப் பெயரிட்டதன் மூலம் அரசுக்கு நெல் கொடுப்பது உழவர்கள் வாழ்வின் நிரந்தரமான கடமையாக்கப்பட்டிருந்தது. இந்த வரியை செலுத்தத் தவறினால், நிலம் பிடுங்கப்பட்டு, அந்த நிலம் ஊர்ப் பொதுவாக்கப்பட்டது. மக்கள் பலர் பஞ்சத்தாலும் வறுமையாலும் வாடியுள்ளனர். வரிகொடுக்க இயலாதோரின் நிலங்கள் ஈவிரக்கமின்றிப் பறிமுதல் செய்யப்பட்டன. ஊர்களே அதனை விற்று பணத்தை வரியாக (இறை)க் கட்டின. நிலத்தைப் பறித்தல்தான் அன்றைய சமூக அமைப்பில் மிகப் பெரிய தண்டனையாக இருந்தது.
சோழர் ஆட்சிக்காலத்தில் அடிமை முறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக் கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆறு பேர் பதின்மூன்று காசுகளுக்குத் தம்மைப் பெரிய கோவிலுக்கு விற்றுக் கொண்டுள்ளனர். நந்திவர்ம மங்கலத்தில் பதிகம் பாடுவதற்காக 3 பெண்கள் பரிசளிக்கப்பட்டனர். திருவிடந்தைப் பெருமாள் கோவில் எனும் ஊரிலுள்ள ஸ்ரீவராகதேவர் கோவிலுக்கு 12 மீனவர் குடும்பத்தினர் தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டிருக்கின்றனர். இதே போல நெசவாளர்களும் கோவிலுக்கு அடிமைகளாக தம்மை விற்றுக் கொண்டுள்ளனர். இவ்வடிமைகள் தங்களின் தொழில் மூலம் வரும் வருவாயில் களஞ்சுப் பொன், கோவிலுக்குத் தர வேண்டும் என்றும், ஆண்டுக்கு இருமுறை வரும் கோவில் திருநாட்களில் பணிகள் செய்யவேண்டும் என்றும் விதிகள் இருந்தன.
பார்ப்பனர் அல்லாதோரின் பஞ்சாயத்து ஆதிக்கத்திலுள்ள கிராமங்களை ‘ஊர்கள்’ என்றழைத்தனர். ‘ஊர்களின்’ நில உரிமைகளை மாற்றியும், கோவிலுக்குக் குடிகள் கொடுக்க வேண்டிய காணிக்கடனை அதிகரித்தும் ராஜராஜன் கட்டளைப் பிறப்பித்தான்.
தங்கள் தேவைக்கென சிறு அளவில் வேளாண்மை செய்து வந்தவர்களின் நிலங்கள் அவ்வப்போது ஆட்சியாளர் களால் பறிக்கப்பட்டு, அந்த உழவர்களைக் கூலியாக மாற்றியோ (‘குடி நீக்கியா’), குத்தகையாளராக மாற்றியோ (‘குடி நீக்காமலோ’), அவர்களின் நிலங்கள் கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டன.
அரசனுக்கும், கோவிலுக்குமான பங்கான ‘மேல்வாரமும்’, குத்தகைதாரர்களின் பங்கான ‘கீழ்வாரமும்’ எடுக்கப்பட்டபின், ஊர் அறிவித்துள்ள மானியங்களை உரியவர்களுக்குக் கொடுத்த பின்பு எஞ்சியதே உழவர்களுக்குக் கிடைத்தது. இது விளைச்சலில் பத்தில் ஒருபங்கை விடக் குறைவானது. ‘மேல்வார’மாக செலுத்த வேண்டிய விளைச்சல் ஏற்கெனவே அதிகமாக இருந்ததுடன், அடிக்கடி இந்த அளவு உயர்த்தப்பட்டுக் கொண்டே போனதால் உழுபவர்க்குக் கிடைக்கும் பங்கு குறைந்து கொண்டே போனது.
இதனால் நில உடைமையாளருக்கு (கோவில்தான் உடைமையாளர்) அஞ்சி உழுகுடிகள் ஊரைவிட்டு ஓடியுள்ளனர். வரி அதிகமாகப் பிடுங்கியதால் தாங்கள் வெள்ளாமை செய்து குடியிருக்கப் போவதில்லை என மன்னார்குடி மக்கள் எச்சரிக்கையும் விட்டுள்ளனர். சாகுபடி செய்யாது கிடந்த நிலங்களுக்கும் வரி இருந்தது. அதை வசூலிக்கத் தவறிய புன்னைவாயில் எனும் ஊர்ச்சபை தண்டிக்கப்பட்டிருந்தது.
ஊரார் சிலரே வரி நெல்லைக் குறைத்து அளப்பதற்காக, தமது ஊர்நிலத்தில் வரி விலக்குப் பெற்றிருந்த (இறையிலி) நிலங்களின் அளவைக் கூடுதலாகக் கணக்குக் காட்ட முயன்றிருக்கின்றனர். சொந்த நிலமுடையவர்கள் கூட தங்கள் நிலத்தை வரியில்லா நிலங்கள் எனக் கணக்குக் காட்டி அனுபவித்து வந்தனர். கோவிலின் சுரண்டலில் இருந்து எவ்வாறெல்லாம் தப்பலாம் எனத் திட்டமிட்ட குடிமக்கள், மகிழ்ச்சியுடன் வரி செலுத்தி இருக்கக்கூடுமா?
பார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்ற சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின் அவர்கள் நிலங்களை விற்றுவிடச் சொல்லி ராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை ராஜராஜனின் தமக்கை குந்தவை விலைக்கு வாங்கி கோவிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பார்ப்பனர் ஊர்களில் பார்ப்பனரல்லாதோரின் நில உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழுகூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர்.
இவ்வாறு கோவிலைச் சார்ந்து பிறப்பிக்கப்படும் நிலப்பறிப்பு, வரி விதிப்பு போன்ற ஆணைகளை யாரேனும் உழவர்கள் எதிர்த்தால் அவர்கள், ‘சிவத்துரோகி’ எனப் பட்டம் கட்டி அடக்கப்பட்டனர்.
விவசாயத் தொழிலாளர்கட்கு நெல் கூலியாக அளக்கப்பட்டது. நெல் அளப்பவரின் பதவிப் பெயர் ‘கருமி’. இன்றளவும் அச்சொல் மக்கள் மத்தியில் கஞ்சத்தனத்திற்கு மாற்றாகச் சொல்லப்படுவதிலிருந்தே சோழர் காலத்தில் தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் வயிற்றில் அடிக்கப்பட்டிருப்பர் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.
சேரிகள், அடிமை விபச்சாரம்: ராஜராஜ சோழனின் சாதனை!
ராஜராஜன், 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு ‘தேவரடியார்களாக’ மாற்றினான். இப்பெண்கள் கோவிலின் பணிகளோடு நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டனர். இறைவனின் பெயரால் விபச்சாரத்தைப் புனிதமாக்கி தஞ்சையில் ‘தளிச்சேரி’யை உருவாக்கினான். கோவில் அடிமைகளென கட்டாயப்படுத்தி இழுத்து வரப்பட்ட இப்பெண்கள், அரசனின் அந்தப்புரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடுமைகளும் சோழப் பொற்காலத்தில்தான் நிகழ்ந்தன. கோவில் பூசகர்கள், பெருநிலவுடமையாளர்களின் காமவெறிக்குப் பலி கொடுக்கப்பட்ட ‘தேவரடியார்’ குலப் பெண்களின் ஆயிரம் ஆண்டுகாலக் கொடுமையை 1929 இல் சுயமரியாதை இயக்கமும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் போராடி சட்டம் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
‘தமிழ்மறை மீட்டான்’ என சைவக் கொழுந்துகளால் போற்றப்படும் ராஜராஜன், தமிழ்மறைகளை ஒளித்து வைத்துக் கொண்டு சமயக்குரவர் நால்வரும் வந்து கேட்டால்தான் தருவோம் என தில்லை தீட்சிதர்கள் மிரட்டியபோது பம்மிப் பதுங்கி சமயக்குரவர்களின் தங்கச்சிலைகளைச் செய்து அவர்களுக்குத் தானம் தந்து மீட்டானே ஒழிய, தளிச்சேரிப் பெண்டிர் மீது ‘சூடு’ போட்ட ‘வீரத்தை’ தீட்சிதரிடம் காட்டவில்லை. “சமச்சீர் கல்வியை எதிர்த்து போராடுவோம்” என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மிரட்டியபோது ‘செம்மொழிகொண்டானின்’ அரசு ‘அனைத்துத் தரப்பினரின் நலன்களும் காக்கப்படும்’ எனக் கெஞ்சியதே, ராஜராஜன் காட்டியதும் அதே வீரம்தான்.
தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களில் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது. வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில் ஊருக்கு வெளியே தீண்டாச் சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன.
தாழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழல்வதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும், பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது. ராஜராஜனின் பொற்காலம் பற்றிப் பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையைப் பற்றியோ, சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதே இல்லை.
கோவிலை மையமாகக் கொண்ட சோழர் கால அதிகார அமைப்பில் சாதிவாரிக் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டன. பார்ப்பன, வெள்ளாள நிலவுடைமை ஆதிக்க சாதிகள் ஒருபுறமும் விவசாயத் தொழிலாளிகள், அடித்தட்டு உழைப்பாளர் மற்றும் உடைமை,உரிமை அற்ற சமூக அடிமைகளாக கடைச் சாதி தீண்டப்படாதோர் மறுபுறமுமாக சமூகமே பிரிந்து கிடந்தது.
பொற்காலத்தில் கொழித்த பார்ப்பனர்களும், ஆண்டைகளின் ஜனநாயகமும்!
ராஜராஜனின் ‘பொற்கால ஆட்சி’யை அனுபவித்தவர்கள் யார்? தீட்சிதப் பார்ப்பனர்கள் தனக்கு பட்டம் சூட்ட மறுத்ததால் பீகார் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை சோழநாட்டிற்கு அழைத்து வந்து ராஜராஜன் அவர்களைக் குடியேற்றினான். தமிழக மன்னர்களின் வரலாற்றில் முதன்முதலாக ராஜகுரு என்றொரு பதவியை உருவாக்கி, ஈசான சிவப் பண்டிதர் எனும் காஷ்மீரப் பார்ப்பனரை அப்பதவியில் நியமித்தான். பின்னர் பார்ப்பனர்களே இப்பதவிக்கு வருவது மரபாக்கப்பட்டது. ராணுவப் படையெடுப்பு போன்றவற்றை தான் கவனித்துக் கொண்டு, குடிமக்கள் நிர்வாகத்தை ராஜகுருவின் ஆலோசனைக்கு விட்டிருந்தான்.
பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக் கிராமங்கள், கோவில்கள், மடங்கள் ஆகியவை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. 250 ஊர்கள் சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன. இந்தியச் சட்டங்கள் எவையும் செல்லுபடியாகாத இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போன்றே , குற்றவிசாரணைக்காகக்கூட அரசப்படையினர் இத்தகைய ‘மங்கலங்களின்’ உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.
குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை சோழர் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுவது ஒரு இமாலயப்பொய். ஊர்ச்சபைகளைத் தேர்ந்தெடுக்க ஓலைகளில் வேட்பாளர்கள் பெயர்கள் எழுதப்பட்டு ஒரு குடத்துக்குள் அவ்வோலைகள் போடப்படும். பின்னர் குடத்துக்குள் கையை விட்டு எடுக்கப்படும் ஓலையில் வரும் பெயருக்குரியவர் சபைக்குத் தேர்வு செய்யப்படுவார். இந்த திருவுளச்சீட்டு ஜனநாயகத்தில் வேட்பாளராக நிற்பதற்கு வேதம் கற்றிருக்க வேண்டும், நில உடைமையாளராக இருக்க வேண்டும் என்ற இரு தகுதிகள் வைக்கப்பட்டிருந்தன.
வேதக் கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமேயான உரிமையாக இருந்ததால், பார்ப்பன நிலவுடைமையாளர்கள் மட்டுமே ஊர்ச்சபைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதுதான் குடவோலை முறையின் யோக்கியதை. அதுமட்டுமல்ல, நிலவுடைமையாளர்களான பிராமணர்கள் மட்டுமே பெருவுடையார் கோவிலின் நிதி நிர்வாகிகளாக (பண்டாரி) இருக்க முடியும் என்று ராஜராஜன் ஆணை பிறப்பித்திருந்தான்.
பார்ப்பனர்களுக்கு தன் எடைக்கு எடை (துலாபாரம்) தங்கமும், தானியமும் பலமுறை தானமாகத் தந்தான் ராஜராஜன். அதுமட்டுமல்ல, அவனும் அவனது தமக்கை குந்தவையும் தமது ‘பிறவி இழிவு நீங்கி’ சொர்க்கம் செல்வதற்காக, தங்கத்தால் பசுமாடு ஒன்றைச் செய்து, அதன் வயிற்றுக்குள் சென்று வந்த பின்னர், அந்த தங்கப் பசுவை பார்ப்பனர்க்கு தானமாகத் தந்துவிடும் ஹிரண்யகர்ப்ப தானம் செய்தனர்.
மண்ணும் பொன்னும் தந்து பார்ப்பனர்களை மகிழ்வித்த ராஜராஜன், தனது அரசாட்சியிலும் பார்ப்பன நீதிமுறைகளையே பின்பற்றினான். தனது அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்களைக்கூட அவன் தண்டிக்கவில்லை. சோழ எல்லை தாண்டி சேர நாட்டிற்கு நாடுகடத்தினான். “கொலைக்குற்றம் செய்தாலும் பார்ப்பனர்களுக்கு மரணதண்டனை தரக்கூடாது” என்ற மனுதரும விதியைத் தனக்கே பிரயோகித்துக் கொண்ட மன்னன், மக்கள் மீது அவ்விதியை எங்ஙனம் நிலைநாட்டியிருப்பான் என்பதை யாரும் புரிந்துக் கொள்ளலாம்.
சோழநாட்டின் ஊர்களில் நிலம், ஊருக்குப் பொதுவாயினும், அவை கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டு, அதில் வேளாளரின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. விளைநெல்லில் பெரும்பங்கு, குத்தகை உரிமையாகவும் (காராட்சி) கோவிலுக்காக மேற்பார்வை ஊதியமாகவும் (மீயாட்சி) வேளாளருக்கு மட்டுமே கிடைத்தது.
வேளாளர் தம் மேற்பார்வையில் இருந்த நிலங்களில் ‘காராட்சி’, ‘மீயாட்சி’ப் பங்குகளை முன்னிலும் அதிகமாக வசூலித்தபோது பயிரிட்ட குடிமக்கள் கிளர்ச்சி செய்துள்ளனர். இந்த வேளாளர் பங்குகளுக்கு மன்னன் உச்சவரம்பு நிர்ணயிக்காததால், உழுகுடிகளையும் விவசாயக் கூலிகளையும் வேளாளச் சாதியினர் வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்தனர். ராஜராஜனின் காலம் மட்டுமின்றி, சோழர் காலம் முழுவதுமே வேளாளர், பார்ப்பனக் கூட்டணிக்கு பெருவாழ்வைத் தந்த பொற்காலமாக இருந்தது.
களப்பிரர் காலம்: உழைக்கும் மக்களின் பொற்காலம்!
ராஜராஜனது பொற்காலத்தை விதந்தோதும் சதாசிவ பண்டாரத்தாரில் இருந்து கருணாநிதி வரை தமிழக வரலாற்றில் இருண்டகாலமாக ‘களப்பிரர்’ காலமிருந்ததெனக் குறிப்பிடத் தவறுவதே இல்லை. அந்த ‘இருண்டகாலத்தை’ புரிந்து கொண்டால்தான் சோழர் பொற்காலத்தின் மகிமையை விளங்கிக் கொள்ள இயலும்.
களப்பிரர்களின் ஆட்சிக்காலத்துக்கு (கி.பி. 4 முதல் 6 ஆம் நூற்றாண்டுவரை)முந்தைய சங்கக் காலத்தில் (கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை) விவசாய உற்பத்தி வளர்ச்சி பெற்று முற்காலப்பாண்டியர்களின் அரசு உருவாகி வந்தது. நிலவுடைமை என்பது பொதுவில் இருந்த வேளிர்களின் காலம் அது. பாண்டிய ஆட்சியின்போது விவசாயமயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டு விளிம்புகளிலிருந்த இனக்குழு சமூகம் விவசாய விரிவாக்கத்துக்குள் கொண்டுவரப்பட்டு, அவர்களின் உபரி உறிஞ்சப்பட்டது. அவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. பார்ப்பனர்களுக்குத் தானமாக்கப்பட்டன. அரசனுக்கான வரியாக இனக்குழுக்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. இதனை எதிர்த்து கிளர்ந்தெழுந்த இனக்குழு சமூகங்களின் எழுச்சி தமிழகமெங்கும் 300 ஆண்டுகள் தொடர்ந்தது. களப்பிரர் ஆட்சிக்காலமாகக் குறிப்பிடப் படும் காலம் இதுதான்.
இக்காலத்தில் நிலங்கள் மீண்டும் ‘பொது’வாக்கப்பட்டன. பார்ப்பனர்களுக்குத் தானமாகத் தரப்பட்ட நிலங்கள் பறிக்கப்பட்டன. இந்த ‘இருண்ட’ காலத்தில்தான் தமிழிலக்கிய வளர்ச்சி உச்சத்தில் இருந்தது. மணிமேகலை, சீவக சிந்தாமணி, எலி விருத்தம், கிளி விருத்தம், கார் நாற்பது, இனியவை நாற்பது போன்ற இலக்கிய நூல்களும், விருத்தம், தாழிசை போன்ற பாவகைகளும், உரை நூல்களும் உருவாக்கப்பட்டன. தமிழுக்கு வச்சிரநந்தி தலைமையில் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டு தமிழ் இலக்கியம் வளர்ச்சி பெற்றது. வைதீகத்தை வீறுகொண்டு எதிர்த்து, ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று பிரகடனம் செய்த திருக்குறளும் களப்பிரர் காலத்தில்தான் இயற்றப்பட்டது. தமிழகமெங்கும் பவுத்தமும் சமணமும் தழைத்தோங்கியிருந்த காலமும் இதுதான்.
இந்த ‘இருண்டகால’த்தைத்தான் பல்லவர்களும் பாண்டியர்களும் வீழ்த்தினர். இனக்குழுக்களின் பொது நிலத்தை மீண்டும் பறித்து, பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கினர். நிலத்தின் மீது நிலவிய
சோழர் காலம் பொற்காலமா, பார்ப்பனிய மீட்சிக் காலமா?
இன்று கருணாநிதிக்கு சூட்டப்படும் சமத்துவப் பெரியார், வாழும் வள்ளுவர் போன்ற எண்ணற்ற அடைமொழிகளைப் போலவே சோழர்களும் அடைமொழி சூடினார்கள். இன்று கருணாநிதியின் துதிபாடுவதற்காகவே நடத்தப்பட்டும் சொறியரங்குகளைப் போலவே, அன்றைய ‘மெய்க்கீர்த்தி’களும், ‘உலா’, பரணிகளும்தான் சோழர்களைச் சொறிந் தன. வருணாசிரமத்தை கடுமையாக எதிர்த்த திருக்குறளின் பொருளைத் திரிப்பதற்கு சோழர்கள் காலத்தில் பல உரையாசிரியர்கள் தோன்றினார்கள். வேதங்களையும், வேள்விகளையும் கண்டித்து, பிறப்பினால் அல்ல, ஒழுக்கத்தினாலேயே மனிதனுக்கு உயர்வு வரும் என்று கற்பித்த வள்ளுவரின் குறளையே திரித்துப் பரிமேலழகர் எனும் பார்ப்பனர் ‘நால் வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கங்களில் வழுவாது நிற்க’ என்று சோழர்காலத்தில்தான் உரை எழுதினார்.
சோழர் காலத்துக்கு முந்திய நிலையை ஜெயங்கொண்டார் (சோழர் காலம்) கலிங்கத்துப் பரணியில் ‘மறையவர் வேள்வி குன்றி, மனுநெறிக் குலைந்து, சாதிகள் கலப்புற்றதாக’ப் பாடியுள்ளார். இவற்றை எல்லாம் மீண்டும் தலைகீழாக மாற்றி மனுநெறியை நிலைநாட்டியதுதான் சோழர்களின் ‘சாதனை’.
சோழ மன்னர்கள் சிங்களம், மலைநாடு, கங்கம், மாலத்தீவெல்லாம் படையெடுத்துச் சென்று தலை அறுத்துக் கொண்டிருந்தார்கள். தலையறுத்துக் கொள்ளையடித்த பொன்னையும் பொருளையும் கொண்டு, கோவில்கட்டுவதற்காக மக்களைக் கல்லறுக்கப் பணித்தார்கள். சற்சூத்திரர்களின் ‘ஊர்’களும், பார்ப்பனர்களின் ‘பிரம்மதேயங்களும்’ பார்ப்பன ராஜகுருவின் ஆலோசனைக்கும் ஆணைக்கும் கட்டுப்பட்டே இருந்தன. உழுகுடிகளை ஒட்டச் சுரண்ட பெரியகோவிலும் வட்டாரக் கோவில்களும் இருந்தன.
இதனைப் பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே, வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச் சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் யாரும் சிந்தித்து விடாதிருக்க, ‘கங்கை கொண்டான்’, ‘கடாரம் கொண்டான்’ என்று மாற்றான் தோட்டத்தில் தாலி அறுத்து வந்து தமிழ்நாட்டில் கோபுரம் கட்டியிருப்பதை அண்ணாந்து பார்க்கச் சொல்கிறார்கள். நாம் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே நம் காலடி மண்ணை ‘இறையிலி’ ஆக்கி ஏகாதிபத்தியங்களின் ‘மங்கலங்களாக’ மாற்றிக் கொண்டிருக்கிறது, கருணாநிதி அரசு.

Wednesday, February 05, 2020

நீ ஒரு அப்பன் ஆத்தாவுக்கு தான் பொறந்தியா

இந்த பக்தா எல்லாம் டென்சன் ஆனா நீ ஒரு அப்பன் ஆத்தாவுக்கு தான் பொறந்தியானு கிளம்புறாங்க

இயற்கையாகவே அறிவியல் படி இங்கே மனிதன் ஒரு தாய் தந்தைக்கு தான் பிறக்கிறார்கள்

இருந்த போதும் பக்தாளின் ஆர்வத்தை புரிந்து கொண்டு ஒரு அப்பன் ஆத்தாவுக்கு பிறக்காதவர்கள் லிஸ்ட்

விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பிறந்த குழந்தை தான் ஐயப்பன்,ஐயப்பனுக்கு இரண்டுமே தந்தை தான் தாய் இல்லை

ஆக ஐயப்பன் ஒரு அப்பன் ஆத்தாவுக்கு பிறக்காதவர்

பிரம்மனின் மகள் மற்றும் மனைவி இரண்டுமே EDUCATION DEPARTMENT GOD சரஸ்வதி தான் இவருக்கு தந்தை உண்டு தாய் இல்லை

ஆக சரஸக்கா ஒரு அப்பன் ஆத்தாவுக்கு பிறக்காதவர்

தசரதனின் துப்பாக்கி வெடிக்காத காரணத்தால் ராமனின் தாய் பாயாசம் குடித்து விட்டு குதிரையுடன் இரவைக் கழிக்கிறார்

ராமனுக்கு தாய் உண்டு தந்தை இல்லை

ஆக ராமன் ஒரு அப்பன் ஆத்தாவுக்கு பிறக்காதவர்

பார்வதியின் அழுக்கில் இருந்து விநாயகர் பிறக்கிறார் விநாயகர் பிறப்பில் எந்த ஆணுக்கும் தொடர்பு இல்லை

விநாயகருக்கு தாய் உண்டு தந்தை இல்லை

ஆக விநாயகர் ஒரு அப்பன் ஆத்தாவுக்கு பிறக்காதவர்

பாண்டவர்கள் ஐந்து பேரில் ஒருவர் கூட பாண்டுவுக்கு பிறக்கல இவர்கள் ஐந்து பேருக்கும் தாய் ஒன்று தான் ஆனால் தந்தை ஐந்து பேர்

ஆக பாண்டவர்கள் ஐந்து பேரும் ஒரு அப்பன் ஆத்தாவுக்கு பிறக்காதவர்கள்

ஒரு தகவல் தான்

அய்யோ #கிருஷ்ணா ! அரே #கிருஷ்ணா !

அய்யோ #கிருஷ்ணா ! அரே #கிருஷ்ணா !


வீட்ல ராமன், வெளியில கிருஷ்ணன் என்ற தலைப்பில் ஒரு சினிமாப் படம் வந்தது. மனைவிக்கு மதிப்புத் தந்து, பயந்து நடந்து கொள்ளும் ஒருவன், வெளி உலகில் எப்படி பெண் பித்தனாக, வெறியனாக நடந்துகொள்கிறான் என்பதை நடிகர் (சிவக்குமார்) வெளிப்படுத்துவார். இந்தப் படம் தெரிவித்த செய்தி என்ன?



ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழும் மனிதர்கள் ராமனைப் போல எனக் கூறுவார்கள். எல்லா அரசர்களையும் போல, ராமனும் பல மனைவிகளைக் கொண்டிருந்தான் என்பதை வெள்ளி நாக்கு சீனிவாச சாஸ்திரி அம்பலப்படுத்தி உள்ளார் என்பது வேறு செய்தி. இருந்தாலும் ராமன்    மீது அப்படி ஒரு கருத்து உண்டு.

#பதர்போன்ற #பகவான்

ஆனால், கிருஷ்ணன் கதை என்ன? ஒரே சமயத்தில் 9 ஆயிரம் கோபிகையருடன் கலவி செய்த கதையை பாகவதம் கூறும். 9 ஆயிரம் கிருஷ்ணன்களாகிக் கலவி செய்தானாம். 18 ஆயிரம் பேர்கள் ஆணும் பெண்ணுமாக உடலுறவில் ஈடுபட்டதைப் பாகவதம் கூறும் நேர்த்தியை பாகவத மேளா நடத்தும் பார்ப்பனர்கள், பாகவதர்கள், தூர்தர்ஷன், சங்கரா தொலைக்காட்சியில் காலட்சேபம் செய்யும் வேளுக்குடிகள் விவரிக்கும்போது கேட்கும் கிருஷ்ண பக்தர்கள் வாயில் எச்சில் ஒழுகும்.

இதன் பொருள் என்ன? கிருஷ்ணன் எனும் கடவுள் பொம்பளைப் பொறுக்கி என்ற கொச்சை வார்த்தையால் வருணிக்கப்பட வேண்டிய பதர்தானே!

கடவுள் என்ற நிலையில் வைத்து கவுரவிக்க வேண்டிய அளவுக்குத் #தகுதியானவனா?

இப்படித்தான் வாழவேண்டும் என்று அளவுகோல்போல் வாழக் கூடியவர்களுக்கு கடவுள் ராமன் _ எப்படியும் வாழலாம் என்ற இழி பிறவிகளுக்கு உதாரணமான கடவுள் கிருஷ்ணன் என்று கவிஞர் கண்ணதாசன் கூறினார்! அர்த்தமுள்ள இந்துமதம் எழுதியவர் அவர்! முத்தய்யா எனும் தன் பெயர் இருக்க, கண்ணதாசன் என்ற பெயரைச்  சூடிக்கொண்ட கவிஞர். கண்ணன் அவரைக் கவர்ந்ததும் அவர் பெயருக்குக் காரணியாக அமைந்த அவரது தனிவாழ்க்கையும் தனிக்கதை. என்றாலும் அவர் போன்ற ஆத்திகச் சிகாமணிகளால் அற்பன் என்று கூறப்பட்டவன்தானே கிருஷ்ணன்!

#ராதா #அத்தைஅல்லவா?

ராதா கல்யாணம் என்று பாகவதர் காலட்சேபம் நடத்துவார். ருக்மணி கல்யாணம் என்று ஒருவர் பிரசங்கம் செய்வார். பாமா விஜயம் எனப் பாடுவார் ஒருவர். சத்ய பாமா _ ருக்மணி சண்டையைச் சிலாகித்துப் பாடுவார் வேறொருவர். ஜாம்பவதி என்ற மனைவியை அறிந்தவர்கள் சிலரே!

ஒரு ஆணுக்கு இத்தனை மனைவிகளை இணைத்துப் பாடுகிறோமே என்று பாகவதர்களுக்கும் வெட்கமோ குற்ற உணர்வோ கிடையாது. கேட்கும் பக்தர்களுக்கும் அறிவோ, மானமோ கிடையாது என்பது தெரிந்த சங்கதியே!

ஆண்களில் சிலர் ராதாகிருஷ்ணன் என்றே பெயர் வைத்துக் கொள்கிறார்கள். கிருஷ்ணனின் மனைவி பெயரையும் சேர்த்தே தன் பெயராக வைத்துக் கொள்கிறார்கள். அத்தகைய தனிச் சிறப்பு பெற்ற கிருஷ்ணனின் மனைவி ராதா, கிருஷ்ணனின் மனைவியா? கிருஷ்ணன் தாலி கட்டிய மனைவியா? முறையாகக் கல்யாணம் செய்து கொண்ட மனைவியா?

பக்தர்கள் பதில் கூறட்டுமே! கிடையாதே! பின் ராதா யார்? கிருஷ்ணனின் அத்தை! அப்படி இருக்கும்போது, அத்தையை வைத்துக் குடும்பம் நடத்தியவன்தானே கிருஷ்ணன்! கல்யாணம் ஏதும் செய்து கொள்ளாமல், சும்மா வைத்துக் கொண்டவன்தானே கிருஷ்ணன்!

#அடுத்தவன் #மனைவியோடு...

பின் ராதை யாருடைய மனைவி? இருவேறு கதைகள் உள்ளன. ஒன்றில் அபிமன்யுவின் மனைவி. அதை முன்பு பார்த்தோம். அதிரதன் என்பவனுடைய மனைவி என்று இன்னொரு பாரதம் சொல்கிறது! அதிரதன் யார்? வேகமாகத் தேரோட்டும் அதிரதனின் மனைவியாம்! இந்த அதிரதன்தான் கர்ணனின் வளர்ப்புத் தந்தை. திருமணத்திற்கு முன்பே திருட்டுத்தனமாக குழந்தை பெற்ற குந்திதேவி, ஊரார் பழிச் சொல்லுக்குப் பயந்து குழந்தையைக் கூடையில் வைத்து ஆற்றில் விட்டாளாம். அந்தக் கூடையைக் கண்டு, எடுத்து, வளர்த்தவள்தான் ராதை! கர்ணனின் வளர்ப்புத்தாய். வேறு வகையில் கிருஷ்ணனின் அத்தை!

அத்தையோடு குடும்பம் நடத்திய குடிகேடன் கிருஷ்ணன். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்துவரும் ஆணும் பெண்ணும் கணவனும் மனைவியும் எனக் கருதப்படலாமா எனும் வழக்கில் தீர்ப்பு வழங்கிய இந்திய உச்ச நீதிமன்றம் கிருஷ்ணனும் ராதையும் வாழ்ந்த கதையை எடுத்துக்காட்டாகக் கூறித் தீர்ப்பு அளித்துள்ளது.

ராதாகிருஷ்ணன் யோக்யதையைச் சட்டப் பூர்வமாகக் குறிப்பிட்டுக் கூறியிருப்பவர் மற்றொரு கிருஷ்ணன்தான். இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன்!

#பாரதத்தின்வண்டவாளம்

பாரதம் படிக்காத கிருஷ்ணபக்தர்கள், ஆல் இந்தியா லா ரிப்போர்ட் புத்தகங்களையாவது படிக்கட்டும். 18 நாள் பாரதம் படித்தபோது பக்கத்தில் ஆமாம் போடுபவர்களாக இருந்தவர்கள் _ இருப்பவர்கள்தானே கிருஷ்ணனைக் கும்பிடும் பக்தர்கள்! யாருக்கு முழுக் கதை தெரியும்? பெயர் தெரிந்த நான்குபேர் தவிர, மேற்கொண்டு 16 ஆயிரம் பேர் மனைவிகள் என்கிறதே, பாரதம்! அறிவார்களா, இவர்கள்?

15ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் எழுதப்பட்ட பிரம்ம வைவர்த்த புராணக் கதையின்படி, ராதா, கிருஷ்ணனை வளர்த்த தாய் என்று ஆகிறாள். சிறுவன் கிருஷ்ணனை வளர்த்தவள். இவள் வீட்டில் இருந்தபோதுதான் இவன் தீராத விளையாட்டுப் பிள்ளை! வெண்ணெய் திருடித் தின்றது ராதா வீட்டில் வளர்ந்தபோதுதான்! நவநீத (வெண்ணெய்) கிருஷ்ணன் என்ற பெயர் வந்ததே ஆயர்குல ராதையின் வீட்டு வெண்ணெயைத் திருடித் தின்று லீலை செய்ததால்தான்! இத்தகைய லீலா கிருஷ்ணன், தன்னை வளர்த்த தாயையே தாரமாக்கிக் கொண்டான் என்றால்... இந்தக் கேடுகெட்ட கதாபாத்திரம் கடவுளா?
யோசித்துப் பார்க்க வேண்டும்! தாயாக, அத்தையாக இருந்த வயதில் மூத்த பெண்ணைத் தன் மனைவியாக்கிக் குடித்தனம் நடத்திய குணக்கேடன் கிருஷ்ணன்! வங்கதேசத்து மன்னன் லட்சுமணசேனன் (1179-_1209) என்பவனது அரசவைக் கவிஞன் ஜெயதேவ என்பவன் எழுதிய இடையனின் பாடல் எனும் கவிதை ராதாவிடம் எப்படியெல்லாம் கிருஷ்ணன் நடந்துகொண்டான் என்பதைக் கூறும். ராதாவின் முன் குனிந்து அவளது காலைத் தூக்கித் தன் தலையில் வைத்துக் கொண்டாடினான் என்கிறது இந்தக் கவிதை! இப்படியும் ஒரு கடவுளா?

#வஞ்சகன்கிருஷ்ணன்

குடும்ப வாழ்க்கை இவ்வளவு கோளாறுகள் நிறைந்தது என்றால், கிருஷ்ணனைப் பற்றிப் பெருமையாகப் பேசப்படும் பாரதப் போர் பற்றிய கதை நிரம்பவும் வஞ்சகம் நிறைந்தது. பாண்டவர்கள் பக்கம் சாய்ந்து நின்று அவர்கள் போரில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக என்னென்ன செய்தான் என்பது எல்லார்க்கும் தெரிந்ததே. அவற்றை விவரிக்கப் போவதில்லை. போர் முடிந்து, பாண்டவர்கள் வெற்றி பெற்றபிறகு போர்க்களத்தில் நடைபெற்ற கடைசிக் காட்சி பலபேருக்குத் தெரியாத ஒன்று.

அதுதான் அர்ஜூனனை இறங்கச் சொல்லிவிட்டு கிருஷ்ணன் தேரிலிருந்து இறங்கியதும் தேர் எரிந்துபோன காட்சி! அதைத்தான் கடந்த இதழில் நாம் பார்த்தோம்.

தேரே எரிந்து போகும் அளவுக்கு அயோக்கியத்தனம் செய்து போரில் வென்றிருக்கிறோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் தரும் அளவிற்குத்தான் உள்ளது பாரதப் போரை கிருஷ்ணன் நடத்திய யோக்கியதை! இத்தகைய கிருஷ்ணனும் கடவுளா?

ராதா #யார்மனைவி?

வேறொரு கதையின்படி, ராதா அபிமன்யுவின் மனைவி என்கிறது. அபிமன்யுவின் தந்தை அர்ஜூனன். அபிமன்யுவின் தாய் சுபத்திரை. கிருஷ்ணனின் தங்கை சுபத்திரை. தன் தங்கையின் மருமகளைத் தன் தாரமாக்கிக் கொண்டவன்தான் கடவுள் கிருஷ்ணன்!

16ஆம் நூற்றாண்டில் ரூபகோஸ்வாமி என்னும் சைதன்யரின் சீடரால் எழுதப்பட்ட சமக்கிருதக் காவியம் கூறும் கதை இது. பாதராயணனின் பிரம்மசூத்ரத்திற்கு ராமானுஜர் எழுதிய சங்கரரின் தத்துவம் எனும் நூலின் 14ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ள செய்தி இது!

என்னய்யா, குழப்பம் இது! கடவுளின் பெண்டாட்டி பற்றியே இவ்வளவு மாறுபட்ட கதைகள் என்றால்...?

#தங்கையோடு கூட...

கூடுதலாக ஒரு செய்தி. சர்வம் ஜகன்னாதம் என்று வைணவச் சொல்லடை ஒன்றுண்டு. எந்த வித்தியாசமும் இல்லாதது என்று இதற்குப் பொருள் கூறுகிறார்கள். அதனை விளக்க ஒரு கதையையும் கூறுகிறார்கள்.

ஒருநாள் தங்கை சுபத்திரா அண்ணன்  கிருஷ்ணனைப் பார்த்து எல்லாப் பெண்களும் உன்னை விரும்புவதற்கும் உன்னை அடைவதற்கும் என்ன காரணம்? அதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றாளாம். இதைச் சொல்லி விளக்க முடியாது, செய்து காட்டித்தான் விளக்க முடியும் என்று கூறித் தன் தங்கையுடன் உடல் உறவு கொண்டு விளக்கினானாம். அந்தச் செயல் நடந்த இடம் ஜகன்னாத். ஒடிஷா மாநிலத்தில் பூரி எனும் கடற்கரை நகரில் நடந்ததாம். அதனால்தான் அங்கே பெரிய கோவில். அங்கே கிருஷ்ணனுக்கு ஜகன்னாத் என்று பெயர், பூரிஜெகன்னாத் கோவில் முழுவதும், கோபுரம் முழுவதும் அசிங்கமான, ஆபாசமான உடல் உறவுச் சிற்பங்களே!

இந்தக் கோவிலுக்குள் இந்து தவிர பிற மதத்தவர் அனுமதிக்கப்படுவதில்லை. பார்சி மதத்தவரைத் திருமணம் செய்து கொண்டதால் இந்திரா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது அவர் பிரதமராக இருந்தபோதே! இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவராக ஆக்கப்பட்ட பாபாசாகேப் அம்பேத்கர் உள்ளே போக அனுமதிக்கப்படவில்லை. இத்தனைக்கும் அவர் விஷ்ணுவின் மகன் (அரிஜன்) என்றழைக்கப்பட்டார் காந்தியாரால்!

ஆனால் மிலேச்சரான மவுன்ட் பேட்டன் பிரபு அனுமதிக்கப்பட்டார். இந்த லட்சணத்தில் சர்வம் ஜகன்னாதம் என்ன வாழ்கிறது?

ஓ! நான்கு வருணங்களையும் இதே கிருஷ்ணன்தான் படைத்தவனா?

#அவதாரம்அல்ல

படைத்தவன் என்றால் _ கிருஷ்ணன் கடவுளா? கடவுளின் அவதாரமா? விஷ்ணு எனும் கடவுள் இந்து மதத்தின் மூன்று கடவுள்களில் ஒன்று. இந்தக் கடவுள் 22 அவதாரங்களை எடுத்தது என்கிறது புராணம். அவற்றில் 10 அவதாரங்களை மட்டுமே சிலாகித்துப் பேசுவார்கள். அதில் ஒன்று கிருஷ்ண அவதாரம் என்கிறார்கள்.

அது #உண்மையா?

பாரதத்தைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் கும்பகோணம் அத்வைத பண்டிதர், வேதாந்த கேசரி, மகாமகோபாத்யாய, பைங்கா நாடு கணபதி சாஸ்திரி என்பவர். அவரது மொழிபெயர்ப்பு நூல் 1930ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அந்நூலின் 1266ஆம் பக்கத்தில் விஷ்ணுவும் நாரதனும் பேசிக் கொள்ளும் விவரம் உள்ளது. தான் எடுத்த அவதாரங்களைப் பற்றிய விவரத்தை விஷ்ணுவே கூறுவதாக வாசகம். ஓ, நாரத முனியே! என்னுடைய அவதாரங்களைக் கேள். மத்ஸ்யம், கூர்மம், வராஹம், நரசிம்ஹம், வாமனம், பரசுராமன், தாசரதிராமன், பலராமன், புத்தன், கல்கி எனத் தொடர்கிறது. (அத்யாயம் 348)

பரசுராமன் இருக்கிறான். தசரதனின் மகன் ராமன் இருக்கிறான். பலராமனும் இருக்கிறான். கிருஷ்ணனைக் காணோமே!

#புத்தர் அவதாரப் #பித்தலாட்டம்

பலராமனுக்கு அடுத்து புத்தன் வருகிறது. 2,560 ஆண்டுகளுக்கு முந்தைய அரசன் மகனாகப் பிறந்து புத்தராக வளர்ந்து மறைந்து சித்தார்த்தர், கவுதமர் என்றெல்லாம் பெயர் பெற்ற புத்தர் வருவது எப்படி?

புத்தர் அவதாரம் விஷ்ணு எடுத்தது என்பது அண்டத்தையே தூக்கிச் சாப்பிடும் புளுகு அல்லவா? இந்தப் புளுகு கந்த புராணத்திலும் இல்லை என்பது சொல்லடை. அத்தகைய புளுகு மூட்டையான கந்த புராணம் கூட இப்படிப்பட்ட புளுகைப் புளுக வில்லையே!

சரி, கிருஷ்ணன் அவதாரம் இல்லை என்று ஆகிறது. அப்படியானால் அவன் யார்? துவாரகையை ஆண்ட அரசன் என்கிறார்கள். மாடு மேய்த்த இடையர்குல குறும்பன் என்கிறார்கள். எது உண்மை? நிறைய செயல்கள் அவன் மாடுமேய்த்துக் கொண்டிருந்தபோது செய்தவை என்பதாகப் பழங்கதைகள் நிறைய இருக்கின்றன. அதனால்தான் அவன் ஒரு ஜாதிக் கடவுளாகக் குறுக்கப்பட்டு விட்டானோ!

அய்ரோப்பியக் கடவுள், #அரபியக் கடவுள், இந்தியக் கடவுள் என்று நில எல்லைக் கடவுள்கள் (TERRITORIAL GODS) இருப்பதுபோல, ஜாதிக் கடவுள் (SECTARIAN GOD) என்பதாகவும் ஆகிவிட்டதோ, #கிருஷ்ணன்?????????????????

அவர்களைத்தான் கேட்க வேண்டும்!

எரிந்து கொண்டே இருக்கிறது ஈராயிரம் ஆண்டுகளாக...

எரிந்து கொண்டே இருக்கிறது ஈராயிரம் ஆண்டுகளாக...

எது நடந்தாலும் 
பற்றி எரிவது என்னவோ
சேரிகள் தான்.
இன்று நேற்றல்ல
இரண்டாயிரம் ஆண்டுகளாய்.

அரக்கு மாளிகையில்
பாண்டவர்களுக்காக
வைத்த தீயில்
பாண்டவர்கள் சாகவில்லை.
ஐந்து பஞ்சமர்களே
பலியானார்கள்
இது மகாபாரதம்.

குரங்கு வைத்த தீயில்
எரிந்தது எல்லாம் எது?
ஈழத்துச் சேரிகள் தான்
இது இராமாயணம்.

உயிரோடு எரிக்கப்பட்ட
கழுமரத்தில் கொல்லப்பட்ட
பௌத்தர்களும்
சமணர்களும் யார்?
தாழ்த்தப்பட்டவர்களே
இது சைவ வரலாறு.

காஞ்சியிலும்
திருப்பெரும்புதூரிலும்
எரிக்கப்பட்ட ஏழைகள் யார்?
இராமானுஜரால்
பார்ப்பனராக்கப்பட்ட
பறையர்களே.
இது வடகலை வைணவம்.

கண்ணகி மூட்டிய
மதுரைத் தீயில்
கருகிப்போன
தீத்திறத்தார் யார்?
சேரி மக்களே.
இது சிலப்பதிகாரம்.

நந்தன்
ஏன்
நாயனார் ஆனார்?
அது அந்தணர் இட்ட தீ
இது பெரியபுராணம்.

ஈராயிரம் ஆண்டுகளாக
கொலைகளைச் செய்து கொண்டும்
கொல்லாமைப் பேசிக் கொண்டும்
பயணப்படுகிறது ஆதிக்கத்திமிர்.

ஆதிக்க வெறிக்கு
வர்ணங்கள் உண்டு
வர்க்க வேறுபாடுகள் உண்டு.
அவர்ணர்களுக்கு அது ஏது?
அவர்ணங்களா?
ஆம்.
வர்ணமற்றவர்கள்.

சம்புகன்
ஏகலைவன்
நந்தன்
வெண்மணி
மேட்டுப்பாளையம்
தொடர்கிறது.

அடைகாத்த
ஆதிக்கத்திமிர் அகற்றிட
அணிவகுக்கும் காலம்
அருகில் தான்.
அயர்ந்து விடாதீர்கள்.
எரியிடை மூழ்கி அல்ல
எரிதழல் ஏந்தி.

தமிழ் இனக்குழுக்களின் ஆட்சி என்றால் அது களப்பிரர்களின் ஆட்சி.

தமிழ் இனக்குழுக்களின் ஆட்சி என்றால் அது கி.பி.4 ஆம் நூற்றாண்டை தொடங்கி கி.பி.6 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்த களப்பிரர்களின் ஆட்சி.
இவர்களின் காலத்தில் தனியுடமையாக இருந்த நிலங்கள் மற்றும் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் பறிக்கப்பட்டு பொதுவுடமை நிலங்களாக மாற்றப்பட்டன.
தமிழுக்கு சங்கம் அமைக்கப்பட்டு தமிழ் இலக்கியம் வளர்ச்சியில் கவனம் செலுத்தினர்.
வைதீகம் கற்பித்த உயர்வு தாழ்வை எதிர்த்து "பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்’ சமத்துவம் பேசிய திருக்குறளும் களப்பிரர் காலத்தில் இயற்றப்பட்ட ஒன்று.
மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்ற காப்பியங்களும் இவர்களின் காலத்தில் இயற்றப்பட்டது.
தமிழகம் முழுவதும் பௌத்தமும் சமணமும் களப்பிரர் காலத்தில் தழைத்தோங்கியது.
இவர்களின் ஆட்சியை தான் பல்லவர்களும் பாண்டியர்களும் இணைந்து வீழ்த்தினர்.
இனக்குழுக்களின் பொது நிலத்தை கைப்பற்றி மீண்டும் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கினர். நிலத்தின் மீது நிலவிய பொதுவுடைமையை நீக்கியதனாலேயே ‘பொது நீக்கி’ என்று இம்மன்னர்கள் புகழப்படுகிறார்கள்.
உலகம் முழுதும் மன்னர் ஆட்சிகளுக்கு எதிராக மக்களாட்சி மலர செய்து வரலாறு இருக்கிறது.இதற்கு அண்மை உதாரணம் நேபாளம்.
ஆனால் தமிழர்கள் சிந்தனை என்பது தலைக்கீழ்.எங்களுக்கு மக்கள் ஆட்சி வேண்டாம்.மன்னார் ஆட்சி போதும்.ஏனெனில் மன்னார் ஆட்சி என்பது பூலோக சொர்கம் என்பது இவர்களின் கற்பனைவாத கணிப்பு.
மன்னர்கள் கட்டிய கோயில்களை சான்றாக வைத்து அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்குவது தமிழர்களின் தொன்றுதொட்ட பழக்கம். பிம்ப வழிப்பாட்டுக்கு ராஜ ராஜ சோழன் முதல் எம்.ஜி.ஆர்.வரை ஆக சிறந்த சான்று.