Monday, November 28, 2022

ஊழல் ஓழிப்பு போராளி H. Raja வும் - Lotus benefit fund -ம்

 ஊழல் ஓழிப்பு போராளி 


H. Raja வும் - Lotus benefit fund -ம் 


பாஜகவின் (முன்னாள்) மாநிலத் துணைத் தலைவர் ஹெச்.ராஜா பல்வேறு மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்களுக்கு ஓர் அதிரடிக் கடிதம் வந்துள்ளது. 


பணத்தை பறிகொடுத்த திருச்சியை சேர்ந்த பழனியப்பன்-ரேவதி தம்பதியினர் பத்திரிக்கைக்கு அளித்த கண்ணீர் பேட்டி:-


பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரையின் பெயரில் 'லோட்டஸ் பெனிபிட் பண்ட்' என்ற நிதி நிறுவனத்தை குடும்ப நிறுவனமாக 1997 ஆம் ஆண்டு காரைக்குடியில் துவக்கினார் ஹெச்.ராஜா. அப்பொழுது நான் பா.ஜ.க.வின் திருச்சி மாவட்டத் தலைவராக இருந்தேன்.


ராஜா, மாநில செயலாளராக இருந்த பரிச்சயத்தால், அவர் மேலுள்ள நம்பிக்கையால், அவர் கேட்டுக்கொண்டபடி, முதலில் ரூ.50000 மட்டும் 'லோட்டஸ் பெனிபிட் பண்ட்'டில் முதலீடு செய்தேன். அதற்கு 2 வட்டி வீதம் கொடுத்திருந்தார். அதற்குப் பிறகு, ரூ.2 லட்சம் கூடுதலாக முதலீடு செய்தேன்.


அதற்குப் பிறகு ரூ.8 லட்சம் என பத்தரை லட்சம் ரூபாயை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தேன்.


திடுமென வட்டி வருவது நின்று விட, என்ன என்று கேட்டதற்கு, "நிறுவனத்தில் திருடு போய்விட்டது" என்றார்.


அதற்குப் பிறகு இன்றுவரை திருச்சியிலிருந்து, காரைக்குடிக்கு 200 தடவைக்கு மேல் வந்து சென்றுவிட்டேன். அவர் எனக்குப் பணத்தைக் கொடுப்பதாகத் தெரியவில்லை. ஆளை வைத்து கொலை செய்வதாக மிரட்டுகிறார். என்னைப்போல் அந்த நிதி நிறுவனத்தில் ஏமாந்தவர்கள் அதிகம். பணத்தை இழந்த அத்தனைப் பேரும் எங்களது பா.ஜ. கட்சியினரே. 


கட்சியில் மாவட்டப் பொறுப்பிலிருந்த எனக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களின் நிலை வாய் மூடி மௌனித்திருப்பதே" என்றார் பழனியப்பன்


முன்னாள் தேசியக்குழு உறுப்பினரும், பழனியப்பனின் மனைவியுமான ரேவதி கூறுகையில்,


"முதலில் ரூ.50000, அடுத்து ரூ.2 லட்சம் என அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தது போதும் என்றிருந்தோம். அப்போது சின்னக்கடை வீதியில் எங்களுக்கு சொந்தமான சொத்தை விற்று வங்கியில் போட்டு வைத்திருந்தோம்.


அதை தெரிந்துகொண்ட ஹெச்.ராஜா, "பேங்க்கில் சும்மாதானே பணம் கிடக்குது. இதை எங்ககிட்ட முதலீடு செஞ்சா, 2 வட்டி கிடைக்குமில்ல" என்றார். நாங்களும் அவர் பேச்சை நம்பி முதலீடு செய்து, நடுத்தெருவில் நிற்கிறோம். இப்ப, என் பெண்ணிற்கு திருமண ஏற்பாடு நடக்குது. அதற்காகக் கூட தந்துவிடலாமில்லையா?


வரும் தை பொங்கலுக்குள் எங்களுக்கு தரவேண்டிய பணத்தை தராவிட்டால் நான், என் கணவர், என் மகள் உட்பட மூன்று பேரும் ஹெச்.ராஜா வீட்டின் முன்னால் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம்" என்றார் ரேவதி.


பாஜக-வின் தமிழக தலைவர்களில் இந்த ஹெச்.ராஜா என்பவர் ஒரு தினுசானவர். இவர் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும்போது ஆதரங்களைப் பற்றி இம்மியளவும் கவலைப்படாமல் துணிந்து பேசக்கூடியவர். மறுதரப்பினரை பேச அனுமதிக்காமல் குறுக்கே பேசியும், கத்தியும் ஜனநாயகத்தை நிலைநாட்டக் கூடியவர்.


குறிப்பாக நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைப் பற்றியோ, காங்கிரஸின் மீதான பொருளாதார குற்றச்சாற்றுகள், ஊழல்கள் பற்றி பேசும் போதோ கொந்தளிக்கக் கூடியவர்.


ஆனால் அவரே ஊழல்வாதி தான்

சாதுவான பார்ப்பனர்களை ஜாதி வெறியர்களாக தூற்றுவது சரியா

 ஜாதியை இன்று

தூக்கி பிடித்து காப்பாற்றும் இடைநிலை சாதி

வெறியர்களை விட்டு விட்டு எப்போது பார்த்தாலும் சாதுவான

பார்ப்பனர்களை 

ஜாதி வெறியர்களாக

தூற்றுவது சரியா


#நண்பரின் பதில்

 நான் நம்புவது அவர்களுக்காக அல்ல!அவர்கள் ஜாதியத்தை பெரிதாக வளர்ப்பதில்லை 

நம் திராவிட கட்சிகளே ஜாதியத்தை வளர்க்கிறது.

நான் வெகு அரிதாகத்தான் கோவிலுக்கு செல்வேன்.


அர்ச்சனைகள் தட்டில் காசு கூட வெகு சில சமயத்தில்தான் இடுவேன்.


ஐயர்கள் மேல் எனக்கு பெரிய கோபம் ஏதும் இல்லை.


எனக்கும் கடவுளுக்கும் நடுவில் புரோக்கர்கள் யாரும் தேவையில்லை ஏன கருதுகிறேன்.


உங்கள் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.


நான் பார்த்தவரையில் பிராமணர்கள் மூலம் ஏற்படும் ஜாதிய வேறுபாடுகளை விட ஆதிக்கஜாதிகள் செய்யும் ஜாதிய வேறுபாடுகளே அதிகம்.


அதை எதிர்த்து குரல் கொடுக்க யாரும் வருவதில்லை.


திகவினர் கூட ஜாதியத்தை வளர்கின்றனர்.


#என்பதில்

Mano Haran 

எரிவதை பிடுங்கினால்

கொதிப்பது அடங்கும்


ஜாதிக்கு விறகும் வைத்து

நெய்யும் ஊற்றுவது

பிராமணர்கள்

அவர்களின் மனுநீதி தர்மங்கள்


மூலம் எது என்று

அறியாத மூடர்கள்தான்

இடைஜாதி வெறியர்களை

குறை கூறுவார்கள்


இடைசாதி வெறியர்கள்

கல்வி அறிவு இல்லாமல்

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக 

அரசர்கள் மூலம்

பார்ப்பனியம் வழி நடத்தப்பட்டதால்தான்


அவன் ஜாதி வெறியானக

இருக்கிறான்


அவனுக்கு முதலில் கல்வி

கொடுக்கவேண்டும்

என்பதை பெரியார் புரிந்தே.... 

காமராஜர் மூலம் பல ஆயிரம்

கல்வி கூடங்களை திறந்தார்/

திறக்க வைக்க துணை நின்றார்


அண்ணா இது மட்டும் போதாது

நம் மக்கள் 

ஆட்சிக் கட்டிலில்

ஏறினால்தான்

பார்ப்பனீயம் அடங்கும்

என்று தேர்தல் அரசியலுக்குள்

வந்தார்... 


அண்ணா எதிர்பார்த்தது போலவே

 பார்ப்பனீயம்

காமராஜரை அரசியலில் இருந்து இந்திராவை பிடித்து

ஒதுக்கியது... 


அண்ணாவுக்கு

தன் திட்டத்தை நிறவேற்ற

ஆயுள் இல்லை... 


அடுத்து வந்த கலைஞர்

கட்சியை காப்பாற்ற

பல தில்லு முல்லுகளை

செய்யவேண்டியதாகிவிட்டது


இதை வைத்து திராவிடத்தை

உடைக்க இந்திரா திட்டத்தில்

உதித்தவர் எம்ஜிஆர்


ஆனால் அவர் நேராக பார்ப்பனீய இந்திரா காங்கிரசில் இணையாமல்


தனி தவில் வாசித்தார்


அவரிடம் அதிகம் இருந்தவர்கள் ஜாதி மத வெறியர்கள்தான்


போலி திராவிட கொள்கையை

வைத்து மக்களை முட்டாளாக்கி

ஜாதி சனாதனம் வளர உதவியது

அதிமுக 


நாம் என்ன ஆயுதம்

எடுக்க வேண்டும் என்பதை

எதிரி தீர்மானிக்கிறான்


என்ற தத்துவப்படி

கலைஞரும் ஜாதி சாக்கடையில் இறங்கினார்


சூழ்நிலைக்கு தக்க தன்னை

தகவமைத்த உயிரே

நிலைத்து வாழும்


அப்படித்தான் திமுக 

இன்று வரை

உயிர்ப்போடு இருக்கிறது

ஜாதி சனாதனத்தை

எதிர்த்து போராடுகிறது


காரணம் கலைஞர்

ஒரு MBC தழ்ந்த ஜாதி பிரிவில்

பிறந்தவர்

அந்த வலி அவருக்கு தெரிந்திருந்தது.

2600 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இனம் நகர நாகரீகத்துடன்

 #பகிர்வு

2600 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இனம் நகர நாகரீகத்துடன் எழுத, படிக்க, கடல் கடந்து வாணிபம் செய்ய முடிந்தது என்றால்_.... 


அந்த இனம் இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்வி அறிவு பெற்ற இனமாகத்தான் இருந்திருக்க வேண்டும். 


_அப்படி கல்வியறிவுடன் முன்னேறியிருந்த இனம் 19ஆம் நூற்றாண்டின் முதல் பகுதி வரையிலும் படிப்பறிவில்லாமல் இருந்தது ஏன்..எப்படி?!_


*மூட நம்பிக்கை*


*இறை நம்பிக்கை*


*மத நம்பிக்கை*


_இந்த மூன்று மந்திரங்களை வைத்து, அரசர்களின் உதவியுடன் ஒரு சிறு நாடோடி குழு, ஒட்டு மொத்த தமிழினத்தையும் 2000 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைப்படுத்தி வைத்திருந்துள்ளது._


_*மன்னர்களிடம் இருந்த நாடு பிடிக்கும் பேராசையை பயன்படுத்திக் கொண்டு*_


_1. இந்த திசையில் சென்றால் வெல்லலாம்._


_2. இந்த குறிப்பிட்ட நாளில் படையெடுத்துச் சென்றால், எதிரியை தோற்கடிக்கலாம்._

 

_3. இத்தனை பெண்களை மணமுடித்தால், சாம்ராஜ்யம் பெருகும்._


_4. இந்த இறைவனுக்கு கோவில் கட்டினால் மகாராஜாவாக ஆகலாம்._


_5. ராஜாவின் மனைவி அந்த புரோகிதருடன் உடலுறவு கொண்டால், புத்திர பாக்கியம் கிட்டும்._


_6. அந்த வேதியருக்கு, அந்த பண்டிதருக்கு 5000 வேலி நிலமும் 10 கிராமங்களும் தானமாக கொடுத்தால் உங்கள் தோஷம் தீரும்._


_*என்று அரசர்களை முட்டாள்களாக்கி, அவர்கள் கல்விக் கூடங்கள், மருத்துவ கூடங்கள் அமைக்க விடாது தடுத்து, அறிவு வளர்ச்சியடைந்த ஒரு இனத்தையே 2000 ஆண்டுகள் கல்வியறிவு இல்லாமல் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.*_


_*தமிழ்நாட்டில் இருந்த பாண்டிய, சோழ, சேர, பல்லவ மன்னர்கள் யாவரும் கல்வி சாலைகளை திறக்காமல், மருத்துவ வசதிகள் கூடங்கள் இல்லமால், இரண்டு கிலோமீட்டர் இடைவெளியில் கோவில்களை "மட்டுமே" கட்டி, அந்த கோவில்களுக்கு நிலங்களை ஒதுக்கி, அதனை சமஸ்கிருதம் தேவபாஷை என்று கூறி ஏமாற்றி வந்த ஒரு குரூப் இட‌ம் ஒப்படைத்து விட்டனர்.*_


_20ம் நூற்றாண்டில் எனது தாய்வழி தாத்தாவிடம் சுமார் 18 ஏக்கர் நிலம் இருந்தது, படிப்பு?! ஓரளவு படிப்பார், கையெழுத்து போடுவார். தந்தைவழி தாத்தாவிடம் 20 ஏக்கர் நிலம் இருந்தது, படிப்பு?! ஓரளவு படிப்பார், கையெழுத்து போடுவார். அவ்வளவுதான்.


_*காமராஜர் ஆட்சி காலத்தில் பள்ளிகள் திறக்க முற்பட்ட பொழுது, எங்கள் கிராமத்தில் பள்ளிக்கூடம் அமைக்க, தந்தைவழி தாத்தா தானாக முன்வந்து தனது 1/2 ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்தார். திவான்கள் , ஜமீன்கள் எவரிடமும் எதுவும் பெயரவில்லை.*_


_எனது பெரியப்பா 3ஆம் வகுப்பு வரை சென்றார், அத்தை பள்ளிக்கே செல்லவில்லை, அப்பா 6ஆம் வகுப்பு வரை சென்றார், அம்மா 3ஆம் வகுப்பு வரை சென்றார்._ 


_என் தந்தை வழி உறவில் முதல் பட்டதாரி மற்றும், ஒரே பட்டதாரி நான் மட்டுமே! தாய்வழி உறவிலும் முதல் பட்டதாரி நான். இப்பொழுது தான் எங்கள் அடுத்த சந்ததி அனைவரும் பள்ளி கல்லூரிகளில் அடி எடுத்து வைக்கின்றனர்._


_*இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், சமூகத்தில் உயர்நிலையில் இருப்பதாக கூறிக்கொள்ளும், நிலவுடமைச் சமூகமே இப்பொழுதுதான் கல்வியை உணருகிறது என்றால் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை..?!*_


_*ஒருவேளை, பிரிட்டிஷ் ஆட்சி அமையாமல் அரசாட்சியே தொடர்ந்திருந்து, டாக்டர் நடேசன் (முதலியார்), பெரியார் போன்ற திராவிட தலைவர்களின் முன்னெடுப்பு இல்லாமல் இருந்திருந்தால்!?*_


_ஏன் ஒரு குரூப் , பிரிட்டிஷார் மற்றும் கிறித்தவர்களை திட்டிக்கொண்டே இருக்கின்றனர் என்று இப்பொழுதாவது புரிகிறதா?!_


_*மீண்டும் சூழ்ச்சிகள் மூலம் தடைகளை ஏற்படுத்து கின்றனர். அன்று அவர்களுக்கு கிடைத்த பேராசை அடிமைகள், சோழ,பாண்டிய, சேர, பல்லவ மன்னர்கள். இன்று பழனிச்சாமி, நரேந்திர தாமோதரதாஸ்.*_


_கல்விச் சாலைகள் முழுக்க இராமாயணம், மகாபாரதம் என்று மாறிக் கொண்டிருக்கிறது. மீண்டும் சமஸ்கிருதம் எல்லா துறைகளிலும் எட்டிப் பார்க்கிறது_


_*அதானி, அம்பாணி, பிர்லா, மிட்டல், பஜாஜ், கோத்தாரி, கோத்ரெஜ், வேதாந்தா போன்றவர்கள் நமது நிலங்களை எடுத்துக்கொள்ள ஏற்கனவே சட்டம் இயற்றிவிட்டனர். அடுத்து கல்வி பறிபோகும். அடுத்து உரிமை?!*_ 


_*எவன் ஒருவன், ஏ!! இந்துக்களே, வாருங்கள் நாம் இந்துக்களாக ஒன்றிணைவோம், உலக நாடுகளுக்கு தலைமை ஏற்கலாம் என்று மதத்தை தூக்கிக்கொண்டு வருகின்றானோ, அவன் அடுத்த 500 ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்த போகின்றான் என்று விளங்கிக் கொள்ளுங்கள்.*_


_*நாம் விழிப்புடன் இருந்து நமது சந்ததியினரின் உரிமைகளை காப்போம்.*_

கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்மோனிய பொட்டி இளையராஜாவிடம்

*கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்மோனிய பொட்டி இளையராஜாவிடம்*




#கம்யூனிஸ்ட்_இயக்கத்திற்குதான் #நன்றிகடன்பட்டவர்கள்_இவர்கள்!


கேரளாவில் #இஎம்எஸ் தலைமையிலான ஆட்சி நடந்தபோது தேவிக்குளம், பீர்மேடு தொகுதி இடைத்தேர்தலுக்காக பிரச்சார மேடைகளில் பாடுவதற்காக மாயாண்டி பாரதி மூணாறு பண்ணைப் புரத்தில் தோட்டவேலை செய்து வந்த பாவலர் வரதராஜனை அழைத்து வந்துள்ளார். 


தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் வெற்றி பெற்றபின் தலைவர்கள் எல்லாம் ஊருக்கு திரும்பியபின் மாயாண்டி பாரதியிடம் வாழ்க்கை நடத்த வழிச்சொல்லுங்கள் எனக்கூற, அதற்கு ஐமாபா, "நான் என்ன முதலாளியா? பணக்காரனா? என்ன செய்ய முடியும்? கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகையில் உன் பாட்டை பற்றி எழுதுகிறேன். ஆனா நீ ஒத்த குரல்ல பாடுனா பத்தாது. ஒரு கச்சேரி மாதிரி கொடுக்கனும்"ன்னு சொன்னார் ஐமாபா. 


அதற்கு, "என் தம்பி பயல்கள் 10 ,15 வயசு. அவனுங்கள கூட்டிட்டு வரேன்" என்றார் பாவலர் வரதராஜன். அதன்படி, தமிழ்நாட்டில் பாட்டு கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 


பாவலர் தம்பி பாஸ்கர், தபேலா போட, ராசய்யா (இளையராஜா) பெண் குரலில் பாட, அமர்சிங் (கங்கை அமரன்) ஜால்ரா போட, கச்சேரிகள் நடந்துள்ளது.


தனியாக பாட்டு மட்டும் பாடி கம்யூனிஸ்ட் கட்சிக்கு கலை அழகு கொடுக்க முடியாது என எண்ணி, கச்சேரி நடத்த தபேலா, ஹார்மோனியம், ஜால்ரா வாங்க தோழர்களிடம் நிதி தாரீர் என பத்திரிகையில் செய்தி வெளியிட்டப்பட்டது. 


அதற்கு தோழர்கள் அளித்த உதவியில் பாவலரின் இசை க்குழுவிற்கு இசைக்கருவிகள் கட்சியால் வாங்கப்பட்டுள்ளது. 


மாயாண்டி பாரதியால் சென்னையில் கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இப்படி தான் தங்களது இசைப் பயணத்தை பாவலர் குடும்பம் தொடங்கியது.


#கம்யூனிஸ்ட் கட்சியால் அறிமுகம் செய்யப்படாமல் போயிருந்தால், இந்த நால்வரும் பண்ணைப்புரத்திலேயே இப்போதும் தோட்ட வேலை செய்து கொண்டிருந்திருப்பார்கள்.


வாழ்க்கை தந்த கம்யூனிஸ்ட் கட்சியை மறந்து பேசும் இவர்களை (கங்கை அமரன் மற்றும் இளையராஜா) போன்ற ஆயிரக்கணக்கான சுயநலவாதிகள் இந்த தேசத்தில் உள்ளனர்.