Friday, April 27, 2018

ஒரே குறி கலைஞர்

சென்னையில் அடையாள உண்ணாவிரதமா பிரபாகரன் இருப்பார்
பல்கலைகழகத்தில் மதிவதனி உண்ணாவிரதம் இருந்தாளா? பிரபாகரனின் புலிப்படை இரவோடு தூக்கி வந்து காப்பாற்றும்
ஆனால் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து செத்து போக திலீபனுக்கு கட்டளை இடபடும்.
கலைஞரும் அப்‍படி சாக வேண்டும் அப்படித்தானே?
பிரபாகரன் வீசிய எலும்பை பொறுக்கி தின்றவர்கள் ஏன் இங்கு உண்ணாவிரம் இருந்து சாகவில்லை, ஆமைகறி பிரியர்கள் ஏன் திலீபன் போல் சாகவில்லை?
கலைஞர் மட்டும் சாகவேண்டுமா? அம்மனிதர் மேல் இவ்வளவு வெறுப்பா..
நல்லவர்கள் திலீபன் போல் வைகோ, சைமன், நெடுமாறன் எல்லாம் ஏன் சாகவில்லை என கேளுங்கள், அட உண்ணாவிரதம்தான் இருக்கவில்லை தற்கொலை படையாக மாறி வீரகாவியம் படைத்தால் என்ன?
இதனை எல்லாம் ஒரு பயலும் கேட்கமாட்டான், ஒரே குறி கலைஞர்.
பிரபாகரன் சொன்னால் சயனைடு குடிக்கும் புலிகள், அதே பிரபாகரன் சொன்னால் நீர் குடித்து பிழைக்கமாட்டார்களா?
திலீபனை காப்பாற்ற பிரபாகரனால் முடிந்திருக்காதா? மருத்துவனே அவனை தொடாதே, திலீபனை மருத்துவமனைக்கு அனுமதியோம் என நின்றது யார்?
திலீபனை உண்மையில் கொன்றது யார்?
டேய்.. எங்கடா விடுறீங்க டூப்பு...

திலீபன் உண்ணாவிரதம் இருந்தான் செத்தான், கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார் சாகவில்லை



திலீபன் உண்ணாவிரதம் இருந்தான் செத்தான், கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார் சாகவில்லை என சில பதர்கள் கிளம்பியிருக்கின்றன‌
காரணம் கலைஞர் உண்ணாவிரதம் இருந்த நாளாம் இன்று
திலீபன் உண்ணாவிரதத்தின் கள்ளதனம் என்ன என்பது, நுட்பபமாக கவனித்தால் அன்றி விளங்காது
அன்று அமைதி ஒப்பந்ததை எங்கள் வசூல் பாதிக்கபடும் இன்னபிற சிக்கல்கள் உண்டு ஆயுதங்களை கீழே வைக்கமாட்டோம் மாதம் 50 லட்சம் வேண்டும் என்றெல்லாம் சொல்லியே ஏற்றுகொண்டனர் புலிகள், அவர்கள் மனதில் யுத்தம் தொடங்கும் நோக்கமே இருந்தது
ராஜிவ் இதனை அனுமதித்தே ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தார்
இதோ சிரியாவில் கடும் யுத்தம் எந்த நாடாவது சிரிய போராளி குழுவுடன் பேசியதா? கண்டோமா? இல்லவே இல்லை
எல்லா நாடும் இன்னொருநாட்டு விவகாரத்தில் தலையிடும்பொழுது அந்நாட்டு அரசுடனே பேசும், இஸ்ரேல் கூட அபாராபத்துடன் பேசிற்றே தவிர ஹமாசோடு இல்லை
எனினும் புலிகளை மதித்து அழைத்து இவ்வளவுதூரம் இந்தியா பேசிற்று, இந்தியா செய்த பெரும் தவறு அது. இந்த சனியன்களை அழைத்து பேசியிருக்கவே கூடாது, ஆனாலும் ராஜிவ் அதனை செய்தார்
அதுவும் தன் குண்டு துளைக்காத சட்டையினை பிரபாகரனுக்கு கொடுத்து அனுப்பியும் வைத்தார், அம்மாமனிதனின் மனம் அப்படி இருந்திருக்கின்றது.
ஆனாலும் யுத்தம் நடத்தும் முடிவிலே இருந்த புலிகள் காரணம் தேடினர். அவர்களின் ஆயுதங்கள் ஒளித்துவைக்கபட்டதே தவிர சமாதானத்திற்கு வரவே இல்லை
திலீபன் உண்ணாவிரதம் என்ன சூழலில் நடந்தது?
அது ஈழமக்கள் அமைதிபடையினை வரவேற்ற நேரம், முதல் இரு மாதங்கள் ஈழமக்கள் அமைதிபடையினை கொண்டாடினர், புலிகளுக்கு அமைதிபடை மேல் வெறுப்பு இதில்தான் தொடங்கிற்று
எங்களை மக்கள் மறப்பதா? வசூல் என்னாகும்? கட்டபஞ்சாயத்து என்னாகும் ? முடியாது ஏதும் செய்து யுத்தம் தொடங்க வேண்டும் என எண்ணினர்
ஜெயவர்த்தனே இறங்கிவந்து தமிழருக்கு தனி மாகாணம் கொடுக்கலாம் என முதன்முதலாக சொல்லி இருந்த நேரம். அதற்கு மேலும் இழுத்தால் நிலமை இன்றைய சிரியா அளவிற்கு செல்லலாம் என்பதால் எல்லா குழுக்களும் இணக்கபாட்டுக்கு வந்திருந்த நேரம்
புலிகளும் ராஜிவ் ஒப்புகொண்ட
அமைதியாக இருக்க‌ மாதாந்திர 50 லட்சத்தையும் வாங்கிகொண்டு எப்படியும் ஜெயவர்த்தனேவுக்கும் ராஜிவிற்கும் பிணக்கினை ஏற்படுத்தி மறுபடியும் சண்டை தொடங்கலாம் என எதிர்பார்த்த நேரம்.
ஆனால் ஜெயவர்த்தனேவோ அனுபவஸ்தர், இந்தியாவினை எதிர்க்கும் அளவிற்கெல்லாம் செல்லவே இல்லை. சீரழிந்த வடக்கு மாகாணத்தை சீர் படுத்ததொடங்கினார்
புலிகள் பொறுமை இழந்து மக்களை தூண்டிவிட ஆரம்பித்தனர், இந்திய முகாம்கள் முன்னால் ஈழமக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர், பிண்ணணியில் புலிகள்
கொஞ்சம் கொஞ்சமாக இது அதிகரித்தது, இந்திய ராணுவம் முதலில் குழம்பினாலும் பின்னால் சுதாரித்தது, ஏதோ அவர்களுக்கு புரிந்தது. அன்று வரவேற்ற மக்களுக்கு இன்று என்ன ஆனது? ஏதோ துர்போதனை, நடக்கட்டும்
இந்திய இலங்கை ஒப்பந்தபடி வடக்கே சீரழிந்திருந்த நிர்வகத்தை ஜெயவர்த்தனே நடத்த தொடங்கினார். அதுவரை காவல் நிலையங்கள் இல்லை, அவர் திறக்கதொடங்கினார்
புலிகளுக்கு அழிவுக்கண் திறந்தது, காரணம் காவல்நிலையம் திறப்பது மக்களுக்கு சௌகர்யமோ இல்லையோ, தங்களுக்கு ஆபத்து என கருதினர். அவர்களை பொறுத்தவரை நீதி, காவல் எல்லாம் அவர்கள்தான், ஒரே நோக்கம் வசூல்
அதற்கு முன்பாக மக்களை தூண்டிவிட்டு காவல்நிலையங்களை அடித்து நொறுக்கிய காட்சியியினை கண்ட இந்திய ராணுவம் அமைதியாகத்தான் இருந்தது, ஆனால் ஏதோ நடக்கபோவதை புரிந்து கொண்டது
அப்படி அந்நேரம் ஆங்காங்கே மக்கள் இந்தியாவினை எதிர்த்தாலும் பெரும் எதிர்ப்பு இல்லை. இந்தியாவினை மொத்த மக்களும் எதிர்க்க புலிகளுக்கு ஒரு காரணம் தேவைபட்டது, சில காரணங்களை உள்ளடக்கி திலிபன எனும் ராசையா பார்த்தீபனை உண்ணாவிரதம் என களமிறக்கினர்.
காரணங்கள் இவைதான், புதிய காவல் நிலையம் திறக்க கூடாது, ஊர்க்காவல் படை கூடாது, எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துகொள்வோம், குறிப்பாக வடக்கு கிழக்கில் சிங்களன் வரவே கூடாது, இதனை ஏற்காதவரையில் உண்ணாவிரதம் தொடங்கும் என்றனர்.
இது சிக்கலான விஷயம், இந்தியபடை அமைதிகாக்க சென்றது, ஒருங்கிணைந்த ஈழமாகாணத்து தேர்தலை அமைதியாக நடத்த சென்றது, அங்கே நீதிமன்றம் கூடாது, காவல்நிலையம் கூடாது என்பது ஏற்றுகொள்ளகூடியது அல்ல, சட்டம் ஒழுங்கு வேண்டாமா?
கொழும்பில் ஏராளமான தமிழர்கள் வாழும்போது வடக்கே சிங்களர் நுழைய கூடாது என்பது எப்படி சாத்தியம்? அதுவும் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என ஜெயவர்த்தனேவினை ஒப்புகொள்ளசெய்தபின் ஏன் தயக்கம் என ஏகபட்ட கருத்துக்கள் இந்தியாவிற்கு.
காந்தி போன்ற தலைவர்கள் அவர்களே உண்ணாவிரதம் இருந்தனர், ஆனால் இங்கோ பிரபாகரனுக்கு பதில் திலீபன் இருந்தான், காரணம் அவன் சாக வேண்டும் என்பது எடுக்கபட்ட முடிவு
முதலில் உண்ணாவிரத‌தித்தினை இந்தியா கண்டுகொள்ளவில்லை, காரணம் அப்படி தன்னை மிரட்டி தான் பணிந்தால் எடுத்தற்கெல்லாம் உண்ணாவிரதம் என கிளம்பிவிடுவார்கள் என்பது இந்தியாவிற்கு தெரியாததல்ல‌
இந்தியாவினை தன் விருப்பத்திற்கு மட்டும் ஆட்டுவிக்கும் விபரீத ஆயுதமாக புலிகள் திலீபனை பயன்படுத்துவதை இந்தியா உணர்ந்தது அமைதி காத்தது
ஆனால் புலிகள் ஈழமெங்கும் மக்களை அழைத்து திலீபனை காண செய்து கொடுங்கோல் இந்தியா எப்படி நம்மை சாகவிடுகின்றது பாரீர் என ஒப்பாரி வைத்தனர்.
மகாத்மா காந்தியும் உண்ணாவிரதம் இருந்தார், ஆனால் சுதந்திரம் கிடைக்கும்வரை இருந்து சாவேன் என அவர் இருக்கவில்லை. ஆனால் சில உரிமைகளை அவ்வப்போது பெற்றுகொடுக்கவும் தவறவில்லை
அந்த உயரிய தியாகத்திற்கும் வீண் பிடிவாததத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணரா நாடல்ல இந்தியா, அது அப்படியே இருந்தது.
புலிகளும் திலீபன் செத்தே தீரவேண்டும் என முடிவோடே இருந்தனர், இல்லை என்றால் சாகப்போகும் அவன் தன்னை காப்பாற்றவேண்டாம் என எழுதிகொடுத்ததாக சொன்ன கடிதத்தை காட்டியே அவனுக்கு ஒரு சொட்டு நீர் கொடுக்காமல் வதைத்தனர்.
புலிகள் நினைத்திருந்தால் அவனை காப்பாற்றி இருக்கலாம், புலிதலைவர் சொன்னால் சயனைடு கடிக்கும் புலிகள், அவர் கட்டளை இட்டால் நீர் குடிக்கமாட்டார்களா?
அவர் காட்டிய பிடிவாதமே திலீபனை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றது, ஈழ மக்களிடையே இந்திய எதிர்ப்பு அதிகரித்தது.
இறுதியில் அவன் செத்துவிடுவான் என உறுதிசெய்யபட்ட நிலையில் இந்திய தரப்பு அணுகுமுறைகள் அவனை பாதுகாக்க வண்ணம் புலிகளும் ஆடினர், அதாவது தாமதபடுத்தினர். வெளியில் துடித்தனர், உள்ளுக்குள் கடும் திட்டம்
ஏற்றுகொள்ளமுடியாத கோரிக்கைகளுக்கு எப்படி செவிகொடுக்க முடியும் என இந்தியா யோசிக்க, வதைக்கபட்டு செத்தான் திலீபன்
அவன் செத்ததும் மொத்த ஈழதமிழரையும் இந்தியா கைவிட்டுவிட்டதாக ஒப்பாரி வைத்து, அவன் உடலை பெரும் பேரணியாக்கி ஒருவித பதற்ற நிலையினை உண்டாக்கினர் புலிகள்
அதாவது மக்கள் போரினை மறந்து அமைதிவழிக்கு திரும்பிகொண்டிருந்தபொழுது, நிம்மதியாக பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து மகிழ்ந்தபொழுது, இனி போராளி குழுக்கள் வேண்டாம், இந்திய ராணுவம் எம்மை காக்கும் என் கொஞ்சம் கொஞ்சமாக புலிகளை மறக்க நினைத்தபொழுது
பெரும் சர்ச்சையாக திலீபனை சாகடித்து இந்திய ராணுவத்திற்கு எதிராக மக்களை திருப்பினர் புலிகள்.
ஆக எப்படியும் புலிகள் இந்தியாவுடன் மோதுவர், நாம் ஏன் அவசரபடவேண்டும் என்ற அனுபவஸ்த ஜெயவர்த்தனேவின் நிதானைம் வெற்றிபெற்ற வேளை அது.
அதன் பின் நடக்க கூடாதது எல்லாம் நடந்து, இன்று ஈழமக்களுக்கு ஒருங்கிணணைந்த மாநிலம் கூட இன்றி சிங்கள ராணுவ முற்றுகைக்குள்ளே வாழும்படி செய்தாகிவிட்டு அவர்களும் பரலோகம் சென்றாயிற்று
திலீபனும் புலிகள் அமைப்பின் உறுப்பினராக ஆடிய ஆட்டம் கொஞ்சமல்ல, போராளிகுழுக்கள் ஒழிப்பில் அவர் காட்டிய வெறியும், இன்னபிற அழிச்சாட்டிய கொடுமைகளும் பல இடங்களில் காண கிடக்கின்றன‌
புலிகளின் இரண்டாம் உண்ணாவிரதம் இது, முதல் உண்ணாவிரதம் சென்னையில் ராமசந்திரன் காலத்தில் நடந்தது. சார்க் மாநாட்டையொட்டி ஜெயவர்த்தனே இந்தியா வரும்பொழுது சென்னையில் இருந்த பிரபாகரனை நிராயுதபாணியாக்கி வீட்டு சிறையில் தள்ளினார் ராமச்சந்திரன்
அதாவது மத்திய அரசு சொல்லி, செயலில் இறங்கினார் அவர். செய்தது அந்நாளைய கமிஷனர் மோகன் தாஸ், பழி சுமந்ததும் அவரே
ஒன்றுமறியாத கன்னிபோல கவலையாய் விழித்துகொண்டிருந்தார் ராமசந்திரன், காரணம் அவரின் ஈழ இமேஜை காப்பாற்றும் நாடகம் அப்படி. அன்றெல்லாம் நெடுமாறன், வைகோ எல்லாம் ஏய் துரோகி ராஜினாமா செய் என்றெல்லாம் சொல்லவே இல்லை
மாநாடு முடிந்ததும் எச்சரிக்கையுடன் கருவிகளை பிரபாகரனிடம் கொடுத்தார் மோகன் தாஸ். ஒரே நாளில் உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு அடித்து புரண்டு இலங்கை ஓடிய பிரபாகரன அதன்பின் தமிழக பக்கம்வரவே இல்லை.
(பின்னாளில் பத்மநாபா, ராஜிவ் என எல்லா கொலைகளையும் தமிழகத்தில் செய்து தமிழகத்தை ஒரு கலவர பூமியாக்க புலிகள் எடுத்த முயற்சிக்கெல்லாம் உட்கோபம் அதுவேதான்.
ராமச்சந்திரன் அருமையாக நடித்த அரசியல் காட்சிகளில் இதுவும் ஒன்று.)
காரணம் உண்ணாவிரதம் என ஆரம்பித்து சென்னையில் ஒரு பதற்றத்தை அவர் தொடங்கினார், வீரமணி கும்பலின் ஜால்ரா ஒருபக்கம், புலிகளை பற்றிஅறியா தமிழக மக்களின் அப்பாவித்தனம் ஒருபக்கம் என மாநிலம் தடுமாறுவதை மோகன் தாஸ் விரும்பவில்லை
இன்னொன்று இலங்கை தீவிரவாதிகளுக்கு இடமளித்துவிட்டு பஞ்சாப், காஷ்மீர் என பாகிஸ்தானை எப்படி கண்டிக்கமுடியும் என்ற மோகன் தாஸின் பேட்டி பாராட்டதக்கது.
இதெல்லாம் ராமச்சந்திரனுக்கு தெரிந்துதான் நடந்தது, ஆனாலும் இன்றுவரை அவரை ஒருவார்த்தை யாரும் பேசமுடியாது ஜாதகம் அப்படி.
ஆக அன்று எப்படியும் தன்னை தமிழக மக்கள் காப்பாற்றுவார்கள் என உண்ணாவிரதம் தொடங்கிய பிரபாகரன், பின் நிச்சயம் இம்மும்றை சாகத்தான் வேண்டும் என்ற நிலையில் திலீபனை களம் இறக்கினார்.
ஏன் சாகவேண்டிய அந்த உண்ணாவிரதத்தை பிரபாகரன் இருந்தால் என்ன?
முன்பு சிங்கள பலகலைகழகத்திற்கெதிராக மாணவிகள் உண்ணாவிரதம் இருந்தபொழுது, இது எல்லாம் வேலைக்கு ஆகாது, வன்முறை ஒன்றே வழி என அம்மாணவியரை புலிகள் கடத்தினர். அவர்களில் ஒருவரை பிரபாகரன் திருமணமும் செய்தார்
அவர்தான் மதிவதனி,
அவருக்கு அன்று கொடுக்கபட்ட போதனை உண்ணாவிரதம் எல்லாம் சும்மா, தலைவர் பிரபாகரனை நம்பு
பின்பு திலீபனுக்கு கொடுக்கபட்ட கட்டளை, ஆயுத பலத்தால் இப்போது மக்களை திரட்டமுடியாது, உண்ணாவிரதம் இருந்து செத்துபோ, உணர்ச்சிகளை வைத்து பின் நாங்கள் பார்த்துகொள்கின்றோம்
அதாவது மதிவதனி இருந்தால் காப்பாற்றுவார்கள், திலீபன் இருந்தால் சாகும் வரை கிட்டே இருந்து கொல்வார்கள்.
அதன்பின் ஈழபிரச்சினை வேறுகோணத்தில் சென்று எல்லாம் நாசமாகிவிட்டது, எனினும் தங்களை மக்களிடம் மறுபடியும் கொண்டு சேர்ததற்காக யாழ்பாணத்தில் அவனுக்கொரு நினைவு தூண் புலிகளால் கட்டபட்டது
(இன்று அது சிதைக்கபட்டு அழிந்து கிடக்கின்றது, கண்டுகொள்ள யாருமில்லை)
தியாக தீபம் எனும் அடையாளம் காசி ஆனந்தனால் கொடுக்கபட்டது, பின் திலீபன் பெரும் அடையாளம் ஆனார்
ஏராளமான பேரினை கொன்றவர்கள் புலிகள், ஒருவனை உலகின் கண்முன் வதைத்து கொன்றனர் என்றால் அது திலீபனை மட்டுமே.
அவன் கடைசிவார்த்தை வரை பிரபாகரன் பின்னால் திரளுங்கள், ஈழத்தில் நமது கொடி நமது ராணுவம் என சொல்லியே செத்தான் என்றால் அவன் யாரால் தூண்டபட்டு, எதற்காக செத்தான் என்பது எளிதில் முடிவுக்கு வரகூடியது,
ஒரே காரணம் இந்திய ராணுவம் வெளியேற மக்கள் சண்டைக்கு வரவேண்டும்
இன்னொன்று குமாரப்பா உட்பட 17 புலிகள் தற்கொலை செய்தனர். அவர்களை சிங்களபடை பிடித்து கொழும்பு கொண்டு செல்ல முயன்றபொழுது இது நடந்தது
17 பேரை இந்தியா காப்பாற்றவில்லை என சர்ச்சை வந்தது, ஆனால் நடந்தது என்ன‌
17 பேரையும் கடலில் கைது செய்தது சிங்களபடை, இதில் குமாரப்பா மேல் சிங்கள பொதுமக்களை கொன்ற வழக்கு இருந்தது. இந்தியா நிதானமாக கையாள நினைத்தது புலிகள் அவசரமாக அவர்கள் விடுவிக்க வேண்டும் என்றனர்
கைது செய்யபடும்பொழுது அவர்களிடம் சயனைடு இல்லை, அவர்கள் சாகவும் தயாரில்லை ஆனால் ஆண்டன் பாலசிங்கம் ரொட்டியும் பழமும் கொடுக்கும் சாக்கில் சயனடை கொடுத்தார், உத்தரவு பிரபாகரன்
செத்து போங்கள், உங்கள் சாவு எங்களுக்கு முக்கியம்
17 பெரும் அதன்பின்பே செத்தனர், பாலசிங்கம் சந்தித்த பின்பே செத்தனர். ஆனால் இந்தியா காக்கவில்லை என சொல்லி மக்களை குழப்பிய புலிகள் கடும் ஆட்டத்தில் இறங்கினர், மக்களும் குழம்பினர் , இலங்கை எரிய ஆரம்பித்தது
2009 வரை எரிந்தது.
அன்று இந்திய முயற்சியில் எல்லாம் மிக நன்றாக நடந்துகொண்டிருந்த பொழுது திலீபனின் வதை சாவு எல்லாவாற்றையும் நாசமாக்கி மக்கள் உணர்ச்சிகள் மீண்டும் புலிகளால் அநியாயமாக தூண்டபட்டு எல்லாம் மண்ணாய் போக மிக முக்கிய காரணமாய் அமைந்துவிட்டது.
அனுபவஸ்த ஜெயவர்த்தனே நிதானமாக தன் எதிரிகளை மோதவிட்டு ரசிக்க தொடங்கினார், வரலாற்றின் பெரும் தந்திரக்கார வில்லன் அவர்.
ஆனால் நிதானமிழந்த புலிகள் முட்டாள்தனமாக‌ உதவவந்த இந்தியா மீதே பாய இன்று எல்லாம் சர்வநாசம்.
இன்றும் ஆங்காங்கே தீயாக தீபம், திலீபன், இந்திய கோரமுகம் என சிலர் தமிழகத்திலும் வீரவணக்கம் என இறங்கலாம், புரிந்தவர்களுக்கு புரியும் திலீபன் ஏன் சாகடிக்கபட்டான் என்பது
இந்தியாவிற்கு எதிராக அன்று ஏவபட்ட ஒரு தற்கொலை படை அவன்.
போகட்டும்
திலீபன் உண்ணாவிரதம் தொடங்கும்பொழுது பிரபாகரன் சொன்னாராம் "திலீபா நீ முன்னால் போ..நான் பின்னால் வருகிறேன்"
சொன்னபடி உடனே வந்தாரா? இல்லை. அவன் செத்ததும் அவனை வைத்து சீன் போட்டு என்னமோ செய்தார்
22 ஆண்டுகள் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு தீலிபனுக்கு சொன்னபடி முள்ளிவாய்க்காலில் அவன் இருக்குமிடம் சென்றார்.
அவர் சென்றது பிரச்சினை இல்லை, மாறாக எத்தனை லட்சம் தமிழ்மக்களை கூட்டிகொண்டு சென்றுவிட்டார்.
அதுதான் மகா பரிதாபம், இந்த நூற்றாண்டின் பெரும் கொடுமைகளில் ஒன்று.
இப்படி எல்லோரையும் அனுப்பிவிட்டு இறுதியாக இவர் சென்றார், சரி இவருக்கு பின் போராட யாரை விட்டு சென்றார்? எதனை மிச்சம் வைத்துவிட்டு சென்றார்?
ஆக இதனை தாண்டி யோசியுங்கள் திலீபனை சாக விட்டது யார் என தெரியும், யாரின் தலமைக்கு பணிந்து அவன் செத்தான் என்பதும் தெரியும், யாருக்கு லாபம் என்பதும் புரியும்
காஷ்மீரிய எல்லையில் செத்த எம் தேசவீரர்களை மறந்துவிட்டு, இப்படி எவன் சொல்லி எங்கோ அந்நிய நாட்டில் செத்தவனுக்காக இங்கு எவனாவது கொடிபிடித்தால் அவர்கள் எப்படிபட்டவர்கள் என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
காந்தி தானே உண்ணாவிரதம் இருந்தாரேயன்றி, இன்னொருவனை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க சொல்லி எவனையும் சாகடிக்கவில்லை.
இதோ வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருந்தார், அடித்து பிடித்து அவன் உயிரை காப்பாற்றியிருக்கின்றது தமிழகம்
அப்படி திலீபன் உயிரை பிரபாகரன் காப்பாற்ற எவ்வளவு நேரமாயிருக்கும்?
இதனை எல்லாம் சொல்லமாட்டார்கள் மறைப்பார்கள்.,
அவன் சாகவேண்டும் என உத்தவிடனர் புலிகள், அவன் செத்தான், அதுதான் நடந்தது.
அதன் பலனை புலிகள் அறுவடை செய்தனர், பழி இந்தியா மீது போடபட்டு அமைதிபடைக்கு எதிராக ஈழம் கொதித்தது
பின் மோதல் நடந்து இந்தியா வெளியேறிற்று
இறுதியில் கேட்க யாருமில்லாமல் முள்ளிவாய்க்காலில் கொள்ளிவைத்தது இலங்கைபடை.
திலீபன் உண்ணாவிரதம் இருந்த வரலாறும் அதன் அழிவும் இதுதான்
கலைஞர் நிலை பரிதாபம் டெசோ காலம் முதல் அமைதிபடை மீட்பு வரை அவர் கடும்பாடு பட்டார்
அமிர்தலிங்கம் கொலையும் தன் காலடியில் நடந்த‌ பத்மநாபா கொலையும் அவரை பாதித்தது உச்சமாக ராஜிவ் கொலை அவரை மனதால் கொன்றது
அதன் பின்னும் வைகோவினை புலிகள் பயன்படுத்தி கட்சி துண்டாகி கடும் சிக்கலை சந்தித்தார் கலைஞர்
2009ல் பிரபாகரன் தப்பமுடியாது என்பது அவருக்கென்ன உலகிற்கே தெரிந்தது, மறைமுகமாக "போரஸ் மன்னனை அலெக்ஸாண்டர் நடத்தியது போல் பிரபாகரனை கவுரவமாக நடத்தவேண்டும் என சொல்லி எல்லாம் பார்த்தார்
அது அறிவுள்ளோர்க்கு புரியும்
பிரபாகரனின் அண்ணனும் அக்காவும் கனடாவில் சுகவாழ்வு வாழ பிரபாகரனின் தாய் இந்தியாதான் கொண்டு வரபடவேண்டும் என்பதில் இந்திய அரசுக்கே உடன்பாடில்லை,
ஏன் பார்வதியம்மாள் பிள்ளைகளுக்கு பொறுப்பு இல்லையா?
கலைஞர் உண்ணாவிரதம் இருந்தது "ஏய் பிரபாகரா அந்த மக்களை விட்டுவிடு, இனி உன்னை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" என்பதே
அறிவு இருந்தால் அதை புரிந்து கொள்வார்கள்
அறிவில்லா மாந்தர் கூட்டம் ஏன் திலீபனை போல் கலைஞர் சாகவில்லை என கேட்கின்றது
அந்த நாய்களுக்கு யாரவது சாக வேண்டும் அதை வைத்து அரசியல் செய்ய வேண்டும்
ஏ பதர்களே, கலைஞர் செய்ததை எல்லாம் மறந்து ராஜிவை கொலை செய்து அவர் முதல்வராவதையும் தடுத்து, வைகோவினை வைத்து கட்சியினை உடைத்து அவரின் அரசியலையும் முடக்க சதி செய்த முட்டாள்களே
இதெல்லாம் பிரபாகரனை தூக்கில் போட வேண்டும் என பகிரங்கமாக சொன்ன ஜெயாவிற்கு லாபமாக முடியும் என்பதை கூட உணராத முட்டாள் கூட்டமே
திலீபன் என்ன? பிரபாகரன் என்ன? உங்கள் சாவையும் பார்த்துவிட்டுத்தான் கலைஞர் காலம் முடியும், அதை நாங்களும் காணத்தான் போகின்றோம்

Monday, April 23, 2018

ஒரு வகையில் இந்தியாவும் தமிழகமும் ஒரே வகையிலானது தான்

இன்றும் நாம் தமிழர் தம்பிகள் தங்களின் எதிரிகள் யாரென கண்டு கொள்ளாமல் தெலுங்கர்கள் என்று இன்னும் அதே விசயத்தை பேசிக்கொண்டிருப்பது யார் எழுதிக் கொடுத்தது அல்லது யாரை காப்பாற்றுவதற்காக என்று தெரியவில்லை. இன்று அவர்கள் தெலுங்கர்களுக்கு எதற்கு இட ஒதுக்கீடு என்று தொடங்கியுள்ளனர்.
ஒரு வகையில் இந்தியாவும் தமிழகமும் ஒரே வகையிலானது தான். இரண்டின் சூழ்நிலையும் கிட்டத்தட்ட ஒன்று போன்றது தான்.
சுதந்திரத்திற்கு முன்னர் இந்தியாவெங்கும் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தனர். முஸ்லிம்கள் தனிநாடு கோரிக்கை வைத்து பாகிஸ்தான் என்ற நாட்டை வாங்கி விட்டு சென்ற பின்னர் எல்லா முஸ்லிம்களும் சென்று விடவில்லை. ஏனெனில் அவர்களுக்கு மதம் அவ்வளவு பெரியதாக இருக்கவில்லை. எல்லா மனிதனுக்கும் அடிப்படை தேவைகள் உணவு உடை உறைவிடம் தான். இது மூன்றும் கிடைக்கப்பெற்ற ஒருவன் தான் தன்னிடம் தன் தேவைக்கு மீறி உள்ளதை கடவுள் மதம் என்று செலவிடுவான்.
அதே நிலைதான் அந்த முஸ்லிம்களுக்கும். அவர்களுக்கு தங்களின் அடிப்படை தேவை தான் முதலாகப்பட்டது. இனி இன்னொரு புதிய இடத்திற்கு சென்று வாழ்க்கையை தொடங்கி அமைப்பதற்கு ஏற்கெனவே இங்கிருக்கும் வாழ்வை விட்டு விட்டு செல்ல அவர்கள் தயாராய் இல்லை. அதனால் அவர்கள் இங்கேயே தங்கி விட்டனர். இன்றும் அவர்களை இந்திய மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்‌. காந்தி அவர்களுக்கு ஆதரவாக பேசியதால் காந்தியையே கொன்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தை தவிர அவர்களின் அரசியல் முகமான பாஜகவை தவிர ஒட்டுமொத்த இந்திய மக்களும் அவர்களை ஏற்றுக்கொண்டு விட்டனர்.
தமிழகத்தில் சொல்லவே வேண்டாம். அவர்கள் நம்முடன் நமது சகோதரர்களாகவே இருந்து வருகின்றனர்.
இப்போது அப்படியே தமிழகத்தின் சூழ்நிலைக்கு வருவோம். தமிழகத்திலும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்னர் தமிழர்கள் தெலுங்கர்கள் கன்னடர்கள் என மூன்று மொழி பேசும் மக்களும் கலந்து இருந்தனர். அவர்கள் எல்லாம் வெவ்வேறு காலகட்டங்களில் இங்கு வந்தவர்கள்.
கன்னடர்கள் களப்பிரர் காலத்தின் போதே இங்கு வந்து விட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் சொல்கின்றனர். அதாவது இரண்டாம் நூற்றாண்டில் இருந்து ஐந்தாம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில்.
தெலுங்கர்கள் பதினான்காம் நூற்றாண்டின் போது விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்குட்பட்ட நாயக்கர்கள் காலத்திலேயே வந்தவர்கள்.
எப்படி பார்த்தாலும் தெலுங்கர்கள் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னரும் கன்னடர்கள் குறைந்தது ஆயரத்தி அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்திற்குள் வந்து விட்டனர். வந்தவர்களில் பலருக்கு தேவை அடிப்படை வசதிகளே. அவர்களுக்கு அவர்களின் மொழியை விட அவர்களின் வாழ்வாதரமே பெரிதாக இருந்தது. அதனால் தான் அவர்கள் தங்கள் மொழியையே மறந்து விட்டு தமிழர்களாகவே வாழ ஆரம்பித்தனர்.
இங்கும் பலருக்கு முக்கியத்தேவை அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளே. மொழி இனம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். ஆனால் இன்றும் அவர்களின் சாதியை கொண்டு அவர்கள் தமிழர்கள் இல்லை தெலுங்கர்கள் என்று முத்திரை குத்துவது நாசிக்கள் செய்த ஆரியர் யூதர் இனவேறுபாட்டை ஒத்ததே.
தம்பிகள் தர்க்க ரீதியில் சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அறிவுரீதியில் சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அதனால் தான் ஒப்பீட்டு முறையில் சொல்லியிருக்கிறேன். இதையாவது புரிந்து கொள்கிறார்களா என்று பார்ப்போம்.
இன்னும் நீங்கள் சாதி வைத்து தெலுங்கர்களை பிரித்தால் மதத்தை வைத்து உருது பேசும் இஸ்லாமியர்களை மட்டும் ஏன் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்று மல்லாக்க படுத்து உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்...

திருமாவும் தமிழ் தேசியமும்:

திருமாவும் தமிழ் தேசியமும்:
தேசப் பற்று, இந்திய உணர்வு என்கிற உணர்ச்சிப் பெருக்கான வாதங்களைப் புறந்தள்ளிவிட்டு வெறும் யதார்த்தமான வாதங்களை அதுவும் பொருளியல் நோக்கில் மட்டும் பார்த்தால் இந்தியா ஒன்றியமாக இருப்பதே தமிழக தலித்துகளுக்கு நல்லது.
தேசியம் என்பது பலி பீடமல்ல. உங்கள் உரிமைகளுக்குப் போராடவும் பேசவும் உங்களுக்கு இந்திய அரசியல் சாசனம் அநேக உரிமைகளைக் கொடுக்கிறது. ராமதாஸும் மற்ற சமூகத்தினரும் அம்பேத்கரின் அரசியல் சாசனம் கொடுக்காத எதையும் கொடுக்க மாட்டார்கள் என்பதோடு கொடுக்கப்பட்டதில் ஒரு சிறு விழுக்காடைத் தான் கொடுப்பார்கள் என்பதும் நிதர்சனம்.
நவோதயா பள்ளிகளை கோருங்கள். இந்தியையும் படியுங்கள். ஆங்கில வழிக் கல்வியை வற்புறுத்துங்கள். ஹைதராபாத்தும், பெங்களூருவும், தில்லியும், சென்னையும் உங்கள் நகரங்கள்.
மேடையேறி ‘Welcome to Republic of Tamil Nadu’ என்று ‘குடியரசு’ என்பது என்னமோ லாலாக்கடை மிட்டாய் என்கிற அளவில் பேசி கைத்தட்டல் வாங்குவது எளிது. பிரிவினைப் பேசுபவர்களில் இருக்கும் நேர்மையாளர்களை விட ஒற்றும்ப் பேசுபவர்களில் எதார்த்தவாதிகள் அதிகம்.
இன்னும் சொல்லப்போனால் பரந்த உலகில் உங்களுக்கான வாய்ப்புகளை அடையக் கூடிய எதார்த்தங்களைத் தேடுங்கள். திமுகவினரிடமும் பாஜகவினரிடமும் நீங்கள் கற்றுக் கொள்ள்லாம். ஒரு சாரார் தேசியம் பேசிவிட்டு அமெரிக்க தூதரகத்தின் முன் அணிவகுப்பவர்கள். இன்னொரு சாரார் தமிழ் என்றுப் பேசிவிட்டு தங்கள் பிள்ளைகளுக்கு நகரத்தில் இருக்கும் கான்வெண்டுகளுக்கு எம்.எல்.ஏ சிபாரிசோடு போய் நிற்பவர்கள்.

இதை இந்து ராஜ்ஜியமாக ஆக்குவோம் என்பதில் உள்ள அதே எரிச்சல் , தமிழ்நாட்டை தனிநாடாக்குவோம் என்பதிலும் வருகிறது. 

நமது உரிமைகள் புறக்கணிக்கத்தான் படுகிறது. பறிக்கப் படவில்லை. சரியான புத்திசாலித்தனமாக , strategical லாக இயங்கும் தலைவர்களே இங்கு தேவை....