Friday, June 29, 2018

பிராமணர்கள் எங்காவது கலவரத்தில் வன்முறையில் ஈடுபட்டு பார்த்திருக்கிறீர்களா.!?

பிராமணர்கள் எங்காவது கலவரத்தில் வன்முறையில் ஈடுபட்டு பார்த்திருக்கிறீர்களா.!?
-எஸ்வி.சேகர்-
இவரின் கூற்றில் ஒழிந்து கிடக்கும் உண்மையை நாம் விவாதிக்காமல் எளிதாக தவிர்த்து விட்டு கடந்து செல்வது யாரை ஏமாற்றும் செயல்..!!??
கூட்டுக் களவாணிகளில் பார்ப்பனர்களை மட்டும் குற்றம் சுமத்துவது ஒருதலை பட்சமாக இல்லையா.!?
நத்தம் நாயக்கன்கொட்டாய் 350 தலித் வீடுகளை கொளுத்தியது யார்.!? பார்ப்பனர்களா.!?
இளவரசன் கோகுல்ராஜ் நாகமுத்து சங்கர் முத்தழகு வை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
1968 கீழ்வெண்மணியில் 44 தலித்துகளை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
1978 விழுப்புரத்தில் 12 தலித்துகளை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
1979 உஞ்சனையில் 5 தலித்துகளை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
1992 வாச்சாத்தியில் 186 பழங்குடியின குடும்பங்களையும் துண்புறுத்தியும் 18 சிறுமிகள் பெண்களை வன்புணர்ந்து வன்கொடுமை செய்தது​ யார்.!? பார்ப்பனர்களா.!?
1995 கொடியங்குளம் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தியது​ யார்.!? பார்ப்பனர்களா.!?
அதை தொடர்ந்து நெல்லை விருதுநகரில் 75 பேரை அரிவாள் வீசி கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
இந்த கலவரத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தது யாரால்.!? பார்ப்பனர்களாலா.!?
1997 மேலவளவு 7 தலித்துகளை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
2000 ம.புளிபங்குடி 3 தலித்துகளை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
2002 திண்ணியத்தில் தலித்துகள் வாயில் மலத்தை திணித்தது யார்.!? பார்ப்பனர்களா.!?
2003 கண்ணகி முருகேசனை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
2017 வடபழஞ்சி முத்தழகை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
கீரிப்பட்டி பாப்பாபட்டி நாட்டார்மங்களம் கொட்டக்காச்சியெந்தல் பஞ்சாயத்துகளில் தேர்தலை நடக்க முடியாமல் செய்தது யார்.!? பார்ப்பனர்களா.!?
தேசிய கொடியை தொட்டதற்காக சொட்டத்தட்டி பஞ்சாயத்து தலைவரை செருப்பால் அடித்தது யார்.!? பார்ப்பனர்களா.!?
எழுத்தாளர் பெருமாள் முருகனை முடக்கியது யார்.!? பார்ப்பனர்களா.!?
எழுத்தாளர் புலியூர் முருகேசன் மீது கொடூர தாக்குதல் நடத்தியது​ யார்.!? பார்ப்பனர்களா.!?
நந்தினியை வன்புணர்ந்து கொன்றது யார்.!?
பார்ப்பனர்களா.!?
ஆக வன்முறையிலும் கலவரத்திலும் ஈடுபடும் கூட்டுக் களவாணியான பெருந்திரள் வாக்குவங்கி இடைநிலை சூத்திர சாதி இந்துக்களையும்​ இக்கணம் விமர்சிப்பதை விட்டுட்டு
மற்றொரு கூட்டுக் களவாணியான எஸ்வி.சேகர் போன்ற பார்ப்பனர்கள் மீது மட்டும் ஒட்டு மொத்த பழியையும் சுமத்த முயல்வது தூற்றுவது எவ்வளவு பெரிய அய்யோக்கியத்தனம் பித்தலாட்டம் ஏமாற்றுவேலை

பௌத்த விஹாரையே அபேஷ் பண்ணுனதுக்கு என்ன செய்யிறதாம்?

திருப்பதி ஜீயருக்கு ஆண்டுக்கு 1.5 கோடி சம்பளம் என்று சொன்னதற்கே ஆச்சரியப்படுறீங்க.
பௌத்த விஹாரையே அபேஷ் பண்ணுனதுக்கு என்ன செய்யிறதாம்?
கி.பி.7 ம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் பரவிய காலத்தில் தான் இந்த நிலப்பரப்பில் கோவில்கள் கட்டப்பட்டன.
ஆழ்வார்களும்-நாயன்மார்களும் கடுமையான மதமாற்றப் பணிகளை செய்து முடித்தனர்.
அவர்களுக்கு இணையான மதமாற்றத்தை உலகில் இதுவரை எவரும் செய்ததில்லை.
கிறிஸ்தவர்கள் மதமாற்றம் செய்கிறார்கள் என்ற ஆர்.எஸ்.எஸ் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதற்கு ஒரே உதாரணம் ஆண்டாண்டு காலமாக கிறிஸ்தவ மக்கள் தொகை 4% சதத்தை தாண்டாதது தான்.
கிறிஸ்தவம் இந்திய நிலப்பரப்பில் வளராமல் போனதற்கு அடிப்படையான காரணம் ஒன்று உண்டு.
அது யாதெனில் கிறிஸ்துவின் பிறப்பு குறித்ததும் கிருஷ்ணரின் பிறப்பு குறித்ததும் ஒன்றுதான்.
மதமாற்றம் செய்வது வேறு
மதம் மாறுவது என்பது வேறு.
இங்கு அதிகாரம் மூலம் மட்டுமே மதம் மாற்றப்பட்டார்கள்.
மதம் மாறுவது என்பது தனிநபர் மனம் சார்ந்த தேடல் மட்டுமே.
ஒரு நடிகனின் ரசிகனாக இருப்பவனை
மற்றொரு நடிகனின் ரசிகனாக மாற்ற முடியாது எளிதில்.
பௌத்தமும்-சமணமும் அதிகாரத்தின் துணை கொண்டே அழிக்கப்பட்டு
வைதீகம் வந்து சேர்ந்தது.
வைதீகத்தின் வசங்கெட்ட செயலால் அதிலிருந்து பிரிந்ததே சைவமும்-வைணவமும்.
வைணவத்தின் இருகிய தன்மையை உடைத்ததே ராமானுஜரின் தென்கலை வைணவம்.
வடகலை இன்றும் வக்கிரங்களோடு வாழ்கிறது.
ராஜாஜி முதல் ஜெயலலிதா வரை வடகலை வைணவர்களே.
இந்த நிலப்பரப்பெங்கும் இருந்த பௌத்த ஆலயங்கள் கி.பி.7 க்குப் பிறகு அப்படியே சைவ-வைணவ பங்குளாக பிரிக்கப்பட்டன.
திருப்பதி பெருமாள் கோவிலும் பௌத்த ஆலயமே.
இன்றுள்ள பெருமாள் சிலையின் அலங்காரத்தை அகற்றினால் உள்ளே புத்தரே இருப்பார்.
எந்த பெருமாள் கோவிலிலும் மொட்டையடிக்கும் வழக்கம் கிடையாது.
பௌத்த வழக்கமே மொட்டையடித்தல்.
நேற்று ஒரு நண்பர் இதைப்பற்றி கடந்த பதிவில் கேட்டார்.
அவருக்காக இந்தப் பதிவு.
உங்களுக்கு பயன்பட்டாலும் கூட.
புத்தரை தூக்கி எறிந்த சந்தோச முழக்கமே கோவிந்தா.கோவிந்தா.
கோ என்றால் அரசன் என்ற பொருள் உண்டு.
அந்த அரசன் புத்தனே.
இந்திய வரலாறு என்பது
பௌத்தத்திற்கும்-பார்பபனியத்திற்கும் நடந்த யுத்தமே என்ற அண்ணல் அம்பேத்கரின் கருத்து நினைவில் கொள்ளத்தக்கது.
இதுவே அங்குள்ள சிலை.

ஜீன் - 30 -1997 - ஈன சாதி பயலுக்கு தலைவர் பதிவி கேட்குதா


கடந்த 1997 ம் ஆண்டு சூன் 30ந் தேதி மதுரை மாவட்டம் மேலூர் தாலுக்கா மேலவளவு ஊராட்சி மன்ற தலைவர் பதவி தாழ்த்தபட்டோருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த ஊரில் வசித்த ஆதிக்க சாதி வெறியர்கள் அம்பலகார்ர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகாரத்திற்க்கு வருவதை இரண்டு முறை யாரும் போட்டியிடாதவாறு தடுத்து நிறுத்தினார்.இதை மீறி துணிச்சலாக முருகேசன் என்பவர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு மேலவளவு பஞ்சாயத்து தவைவரானார்.இதை பொருத்து கொள்ள முடியாத சாதிவெறியர்கள் பேருந்தில் பயணித்து கொண்டிருந்த முருகேசன் உள்ளிட்டவர்களை வெட்டி சாய்த்தனர்.


ஜீன் - 30 -1997
அன்றொரு நாள் இப்படித்தான் அமைதியாக விடிந்தது
மேலவளவு நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தை 50 க்கும் மேற்பட்ட ஜாதி வெறி மிருகங்கள் அரிவாள், கத்திகளோடு மறித்தன. இதை பார்த்ததும் பேருந்தின் நடத்துனரும் ஓட்டுநரும் தலை தெறிக்க ஓடுகின்றனர்.
மக்கள் அலறி அடித்து கொண்டிருக்கையில் அந்த சம்பவம் நடைபெறுகிறது. 7 பேர் பட்டப் பகலில் வெட்டி கொலை செய்யப்படுகிறார்கள்..
என்ன நடந்தது ??? - வாக்குமூலம்
"ஈன சாதி பயலுக்கு தலைவர் பதிவி கேட்குதா " என்றபடி, தான் பதுக்கி வைத்திருந்த (அருவாள்) ஆயுதத்தால் அழகர்சாமி முருகேசனின் வலது தோளில் வெட்டினார். பேருந்திலிருந்த பயணிகள் அலறி அடித்து இறங்கி ஓடினார்கள்.



அழகர்சாமி முருகேசனின் தலையைத் துண்டித்து, துண்டித்த தலையோடு மேற்கு நோக்கி ஓடினார்” (சாட்சி கிருஷ்ணன்).
2. “மார்க்கண்டன் முருகேசனின் வயிற்றில் குத்தினார். அய்யாவு முருகேசனின் வலது உள்ளங்கையை வெட்டினார். அழகர்சாமியோ முருகேசனின் தலையைத் துண்டித்து, துண்டித்த தலையை எடுத்துக்கொண்டு வடமேற்கு திசை நோக்கி ஓடினார்” (சாட்சி ஏகாதெசி).3.
“முருகேசனின் துண்டிக்கப்பட்ட தலை, பேருந்தின் படிக்கட்டில் வந்து விழுவதைப் பார்த்தேன். அழகர்சாமி அந்தத் தலையை எடுத்துக் கொண்டு போய்விட்டார்” (சாட்சி மாயவர்).4.
“சக்கரமூர்த்தி முருகேசனின் கைகளை அருவாளால் வெட்டினார். அழகு முருகேசனை சரமாரியாக வெட்டினார்” (சாட்சி கல்யாணி).5.
"அழகர்சாமி முருகேசனை அருவாளால் வெட்டினார். அழகு முருகேசனின் இடது கன்னத்தை வெட்டினார்; பாரதிதாசன் முருகேசனின் இடது கையை வெட்டினார்; நாகேஷ் முருகேசனின் இடது மணிக்கட்டை வெட்டினார். கதிர்வேல், தங்கமணி, கணேசன், மணி ஆகியோரும் முருகேசனின் வயிற்றுப் பகுதி மற்றும் மார்புப் பகுதியில் வெட்டினார்கள். அழகர்சாமி முருகேசனை வெட்டுவதைப் பார்த்தேன். முதல் வெட்டு முருகேசனின் வலது தோளில் விழுந்தது. பின்னர் முருகேசன் இழுக்கப்பட்டு மற்ற அம்பலக்காரர்களும் முருகேசனை வெட்டினார்கள், குத்தினார்கள்” (சாட்சி பழனி).6.
“அழகர்சாமி முருகேசனின் வலது தோளில் அருவாளால் வெட்டினார். பேருந்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினார்கள். அப்போது மேலும் சில அம்பலக்கார சாதியினர் அங்கு வந்து, ஆதி திராவிடர்களைத் தாக்கினார்கள். இத்தாக்குதல்களினால் முருகேசன், மூக்கன், ராஜா, பூபதி, செல்லத்துரை, சேவகமூர்த்தி ஆகியோர் செத்துவிட்டனர். நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, முருகேசனின் தலையில்லா உடல் பேருந்திலிருந்து வெளியே வீசி எறியப்பட்டது” (சாட்சி கணேசன்)
இப்படி ஒரு கொடூரம் எதற்காக நடந்தது ??
1997 ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படுகிறது அதில் மேலவளவு ஊராட்சி தனித்தொகுதியாக அறிவிக்கப்படுகிறது.
சாதி இந்துக்கள் ஊர் மந்தையில் கூட்டம் போட்டு தலித்துகள் யாரும் போட்டியிடக்கூடாது மீறி போட்டியிட்டால் கொலை செய்யவும் தயங்கமாட்டோம் என சபதமிட்டார்கள்....

நமது பகுதியில் நாம் பெரும்பான்மையாக இருக்குமிடதில் நாம் இவர்களின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து தேர்தலில் போட்டியிடாமல் இருந்தால் சரியா வராது என எண்ணி மேலவளவு திமுக கிளை செயலாளர் முருகேசன் அவர்கள் திமுக சார்பில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு பிறகு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்....
மீண்டும் ஊர் மந்தையில் சாதி இந்துக்கள் ( கள்ளர் சமூகம்) கூடினார்கள் மீண்டும் எச்சரிக்கை செய்தார்கள் வேண்டாம் முருகேசா மனுவை வாபஸ் வாங்கிவிடு இல்லையென்றால் சொன்னபடி செய்வோம் என எச்சரிக்கை செய்தார்கள்...
எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நான் போட்டியிடுகிறேன் உங்களுக்கு தெரிந்ததை பார்த்துகொள்ளுங்கள் என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்...
பல்வேறு குளறுபடிகளுக்கு நடுவில் தேர்தல் நடந்து (அப்போது வாக்குச்சீட்டு முறை)வாக்குகள் எண்ணப்பட்டன மேலவளவு ஊராட்சி மன்ற தலைவராக பெரியப்பா முருகேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்....
சாதி இந்துக்களுக்கு ஒரே தலைகுனிவாய் போனது...
வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாச்சு...
இரண்டு மூன்று நாட்கள் கழித்து ஊராட்சி பணிகள் குறித்தும் பாதுகாப்பு குறித்தும் மதுரை மாவட்ட கலெக்டர் அவர்களை சந்திக்க முருகேசன் உள்ளிட்ட ஒரு பத்து பதினைந்து பேர் கிளம்பி சென்றார்கள் இந்த தகவலை ஓர் உளவாளி மூலம் பெரும் பணம் கொடுத்து சாதி இந்துக்கள் தெரிந்து கொண்டனர்...
அதே கயவனை உளவாளியாக அமர்த்தி எப்போது எங்கே வருகிறீர்கள் என்கிற தகவல்களை சொல்லசொல்லி அனுப்புகிறார்கள் அப்போது அவர் சாதி இந்துக்களிடம் கேட்கிறான் என்னை ஒன்றும் செய்துவிட மாட்டீர்களே என்று அதற்கு சாதி இந்துக்கள் நீ நம்மபயயா உன்னை ஒன்றும் செய்யமாட்டோம் தகவலை சரியாக சொல்லிவிடு என்று அனுப்பி வைத்தார்கள்...
காலையில் மதுரை சென்று கலெக்டர் அவர்களை சந்தித்து விட்டு வந்து உணவருந்தும் போது பொது தொலைபேசியில் சாதி இந்துக்களை அழைத்து சாப்பிட்டு விட்டு சற்று நேரத்தில் கிளம்பி விடுவோம் என தகவல் சொல்லி விட்டார்.
மதுரையில் இருந்து கிளம்பி மேலூர் வந்து இறங்கியவுடன் மீண்டும் அவர்களுக்கு தெரியாமல் பொது தொலைபேசியில் மூலம் அழைத்து இந்த பஸ்ஸில் ஊருக்கு வந்து கொண்டிருக்கிறோம் என தகவல் சொல்லி விட்டார்....
அந்த பஸ்ஸின் ஓட்டுனர் நடத்துனர் எல்லாம் சாதி இந்துக்கள் அவர்களுக்கு ஏற்கனவே தகவல் சொல்லியாச்சு பஸ்ஸை எங்கே நிறுத்த வேண்டும் என்று பஸ் கிளம்பி மேலவளவு நோக்கி சென்று கொண்டிருக்கிறது அப்போது ஊருக்கு முன் உள்ள வளைவில் பஸ் நிறுத்தப்படுகிறது.
பஸ்ஸை நிறுத்தி விட்டு ஓட்டுனரும் நடத்துனரும் இறங்கி ஓட்டெமடுத்தார்கள் சாதி இந்துக்கள் கும்பலாக கையில் பயங்கரமான ஆயுதங்களோடு பஸ்ஸின் இருவாயில்களிலும் நின்றார்கள் பொதுமக்களை விரட்டியது அக்கும்பல் முருகேசன் உள்ளிட்ட உறவுகள் தப்பிக்க முற்படும் போது முதல் வெட்டு உளவு சொன்ன கயவனுக்கு விழுந்தது பணத்துக்காக இனத்தானையே காட்டி கொடுத்த நீ நாளை எங்களை காட்டி கொடுக்க மாட்டைனு என்னடா நிச்சயம் என...
அவரோடு சேர்த்து 7 பேர் தலைதுண்டித்து படுகொலை செய்யப்பட்டனர்....(அவர்தான் உளவாளி என யாருக்கும் தெரியாமல் போயிருக்கும் அவரின் மனைவி அழுகும் போது ஒரு ப்புளோவில் உன்னை வெட்டமாட்டாங்கனு சொன்னியே ஆனா உன்னைதான் முதல்ல வெட்டியிருக்காங்க என அழுததால் அனைவருக்கும் தெரிந்தது)
படுகொலையை கண்டித்து மேலூர் மதுரை என தென்மாவட்டங்களில் கலவரம் மூண்டது பட்டியலின மக்களின் உடமைகள் சிதைக்கப்பட்டன மேலூரில் பெரும் கலவரம் மூண்டது...
பின்பு எல்லாம் அடங்கிய பிறகு 7பேரின் உடல்கள் அடக்கம் செய்ய கொண்டுவரப்பட்டது ...

ஒரு ஊராட்சி மன்ற பதவியில் கூட பட்டியலினத்தவர் அமரக்கூடாது - என்று கள்ளர் ஜாதி வெறி பிடித்த மிருகங்களால் நடத்தப்பட்ட பச்சை படுகொலை
இந்த ஜாதி வெறியை, ஆதிக்கத்தை வீழ்த்தத்தான் புரட்சியாளர் அம்பேத்கரும் ,தந்தை பெரியாரும் தன் வாழ் நாள் முழுதும் போராடினார்கள்
ஜாதி ஒழிப்பே சமூக விடுதலை
மேலவளவு போராளிகளுக்கு வீர வணக்கம்



டாக்டர் சி.நடேசனார் (1875 - 1937)

டாக்டர் சி.நடேசனார் (1875 - 1937)
1875- ல் சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தவரான சி.நடேசனார் மருத்துவம் பயின்றவர். பிராமணரல்லாத மாணவர்களுக்கு விடுதிகளில் இடம் மறுக்கப்பட்ட காலகட்டத்தில், அவர்களுக்காக ' திராவிடர் இல்லம்' விடுதியை 1914- ல் தொடங்கியவர் இவர். அவர்களின் உணவு, உடை, தங்குமிடம் ஆகிய தேவைகளை மட்டுமன்றி, அவர்களின் கல்வி வளர்ச்சிக்குமான செலவுகளையும் ஏற்றவர். இது தவிர, ' சென்னை ஐக்கிய சங்கம்' என்ற அமைப்பையும் நடேசனார் உருவாக்கினார். கல்வி, வேலைவாய்ப்புகளில் பிராமணரல்லாதோர் சமூகம் ஏற்றம் காண, அரசியல் அதிகாரம் மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்த நடேசன் ஏனைய முன்னோடிகளுடன் கைகோத்தன் விளைவே நீதிக் கட்சி. 1923-ல் மதறாஸ் மாகாணச் சட்ட மன்றத்தில் அவர் காலடி எடுத்துவைத்தார். ' சென்னை பப்ளிக் சர்விஸ் கமிசன்' அமைக்கப்பட்டதில் முக்கியமான பங்கு இவருக்கு உண்டு. ஆதிதிராவிடர்களின் உரிமை, தீண்டாமை ஒழிப்பு, ஆலயப் பிரவேச உரிமை ஆகியவற்றைக் குறித்து 1918 லேயே பேசிய நடேசன், தன்னுடைய பதவிக் காலத்தில் பிராமணரல்லாதோர் மேம்பாட்டுக்கான எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பெரும் உந்துசக்தியாக இருந்தார்.




யார் இராவணன்.....???

யார் இராவணன்.....???

அரக்கனா....???

நர மாமிசம் உண்ணும் கோரியா...???

அயோக்கியனா.....???

இல்லை. இவற்றில் எதுவும் இல்லை.

பிறகு இராவணன் யார்....???

கலை பத்தில் தலைசிறந்த கலைஞன்.

யாழிசை வித்தகன்.

பெண்களை கண்ணெனப் போற்றும் பேராண்மை வாய்ந்தவன்.

அப்படியென்றால் புராணத்தில் சொல்லப்பட்டவை....???

கேள்வி எழும் எனில் அதற்கான விடை வெறும் புரட்டு என்பதே.

புராணங்கள் இதிகாசங்கள் யாவும் பண்டைத் தமிழர்களை அரக்கர்களாகவும் கோர வடிவம் கொண்டவர்களாகவுமே சித்தரிக்கின்றன.

இந்த புராணங்கள் எல்லாம் வடமொழியான சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டவை.

நமது வரலாற்றை திரித்து,   ஆரியர்களை மேன்மை தங்கியவர்களாகவும், தமிழர்களை காட்டுமிராண்டிகளாகவும் காட்டுவதற்கே

இந்த புனைவுக்கதைகள். பெரும்பாலான புராணங்கள் தமிழர்களை
அசுரர் என்றே அடையாளப்படுத்துகிறது.

"சுரர் என்றால் மது அருந்துபவன்.  அசுரன் என்றால் மது அருந்தாதவன்"

இதை தவறாக எடுத்துக்கொண்ட நமது சமூகம் அசுரன் என்றால் அரக்கன் என்ற தவறான புரிதலுக்குள் விழுந்து விட்டது.

ஒருவேளை உண்மையில் இராவணன் கொடியவனாக இருந்திருந்தால் சீதையை கவர்ந்த அந்நொடியே அவள் கற்பிழந்திருப்பாள், இராமன் வந்திருக்க மாட்டார், இராமயணம் பிறந்திருக்காது.

சீதை சிதையில் இறங்கியது கூட இராவணன் கற்பை நிரூபிக்கத்தான்.

இராமாயணமே பதிவு செய்கிறது இராவணன் ஆட்சியில் இலங்கை செல்வ செழிப்போடு இருந்ததென்று.

கட்டுக்கோப்பான ஆட்சி வழங்கியவர் இராவணன்.

வீரம் செறிந்தவன், மிகச்சிறந்த சிவபக்தன், எழுத்தாளன், மருத்துவன், மாண்புமிக்க போராளி, இன்னும் இன்னும்....

ஆனால் இன்று, தன் இனத்தான் இறந்த நாளையே கொலுவைத்து கொண்டாடுகிற அடிமைத்தனத்தில் ஊறியவர்களாய் மாறி நிற்கிறோம்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் எரியப்போவது வெறும் இராவணன் பொம்மையல்ல,

நமது ஆண்மையும், வீரமும், இனமானமும் தான்.
ஆரியரின் இராவண எதிர்ப்பு என்பது மறைமுக  தமிழர்  எதிர்ப்பு.

ஆரியத்தை நேரடியாக எதிர்த்த தமிழ் மன்னன் என்பதற்காகவே, இன்றளவும் எரியூட்டப்படுகிறார் நமது பாட்டன் இராவணன்.

ஆரியத்தின் சூழ்ச்சியால் ஆரியன் ராமன் கடவுள் ஆனான். எங்கள் பாட்டன் இராவணன் அரக்கனான்.

வரலாற்றில் தெளிவு பெறாத எந்த இனமும் வாழாது. படித்தறிவோம் வரலாற்றை.

போற்றுவோம் நமது மூதாதை இராவணன் பெரும்புகழை.

1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது கைதான பெரியார் நீதிமன்றத்தில் கொடுத்த எழுத்துப்பூர்வமான வாக்கு மூலத்தின் சில பகுதிகள்

1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது கைதான பெரியார் நீதிமன்றத்தில் கொடுத்த எழுத்துப்பூர்வமான வாக்கு மூலத்தின் சில பகுதிகள்:

“இந்தக் கோர்ட்டு காங்கிரசு அமைச்சர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்டது. நீதிபதியாகிய தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவைதவிர இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் காங்கிரசு அமைச்சர்கள் அதிதீவிர உணர்ச்சியுடன் உள்ளார்கள். அதுவிஷயத்தில் நியாயம் அநிநாயம் பார்க்க வேண்டியதில்லை என்றும், கையில்
கிடைத்த ஆயுதத்தைப் பயன்படுத்தி ஒழித்தாக வேண்டும் என்றும், இந்தி எதிர்ப்புகிளர்ச்சியைத் திடீரென்று வகுத்து புகுந்த திருடர்களுடன் ஒப்பிட்டும் மாண்புமிகு அமைச்சர்கடற்கரைக் கூட்டத்தில் பேசியுள்ளார். இந்தி எதிர்ப்பு விஷயத்தில் அமைச்சர்கள் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் அடக்குமுறையே என்பது என் கருத்து. அடக்குமுறைக் காலத்தில் இம்மாதிரிக் கோர்ட்டுகளில் நியாயம் எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம். இந்த இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சி ஒரு செயல் விளக்கம் (Demonstration) ஆக மேற்கொள்ளப்பெற்று வருகிறதேயொழிய அதில் எவ்வித நிர்ப்பந்தப்படுத்தும் கருத்தும் இல்லையென்று தெரிவித்துக் கொள்ளகிறேன். இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சி நிறுவனத்தின் கொள்கையில் சட்டம் மீறக்கூடாதென்பது முக்கிய நோக்கமாகும்.

நான் சம்பந்தப்பட்ட சுயமரியாதை இயக்கம், தமிழரியக்கம், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி, ஜஸ்டிஸ் இயக்கம் ஆகியவையும் சட்டத்திற்கு உட்பட்டே கிளர்ச்சி செய்ய வேண்டும் என்ற கொள்கையுடைவைகளே. இதுவரை அக்கொள்கை மாற்றப்படவே இல்லை. என்னுடைய பேச்சு முழுவதையும் படித்துப்பார்த்தால் இது தெளிவாகும். ஆகவே, நீதிமன்றத்தார் அவர்கள் தாங்கள் திருப்தி அடையும் வண்ணம் அல்லது அமைச்சர்கள் திருப்தி அடையும் வண்ணம் எவ்வளவு அதிகத் தண்டனை வழங்கமுடியுமோ அதையும், பழிவாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க முடியுமோ அதையும் கொடுத்து, வழக்கு விசாரணை நாடகத்தை முடித்து விடும்படி வணக்கமாகக் கேட்டுக் கொள்கிறேன்.”


....தொடரும்

-'பெரியார் சிந்தனைகள்' குறித்து பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் ஆற்றிய உரையிலிருந்து..

கோயில்கள் பெருத்த ஊர் மட்டுமல்ல கும்பகோணம்...பார்ப்பனர்களுக்காக தேவதாசிகள் நிறைந்த ஊரும் அதுவே

கோயில்கள் பெருத்த ஊர் மட்டுமல்ல கும்பகோணம்...பார்ப்பனர்களுக்காக  தேவதாசிகள் நிறைந்த ஊரும் அதுவே, என்பது குறித்த ஒரு வரலாற்று பதிவு.

கும்பகோணத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவானது குறித்து ஆய்வுக்காக அப்போதைய ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்ட அரசு அதிகாரி கில்பர்ட் ஸ்லேட்டர், கும்ப்கோணம் நகராட்சி அதிகாரியை சந்தித்து விவரம் கேட்கிறார்.

அதிகாரிகள் இங்கே 12 கோயில்கள் இருக்கின்றன, தேவதாசிகள் பெருமளவில் இங்கே இருக்கிறார்கள், அதனால் பிறப்பு விகிதம் குறைவு என்கின்றனர். உடனே அவர் அரசு மருத்துவமணைக்கும் சென்று ஆய்வு செய்கிறார்.

அங்கே ஏராளமான பெண்கள் "கனோரியா" மற்றும் "சி்பிலிஸ்" போன்ற நோய் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார், அவர்களில் அயந்து  பேரில் 4 பெண்கள் பார்ப்பன சமூகத்தைச் சார்ந்தவர்கள், அவர்கள் கோயில்களில் தேவதாசிகளாக பணிபுரிபவர்கள் என்பதனை மருத்துவ அதிகாரிகள் மூலம் அறிகிறார்.

ஆதாரம்:- இந்திய நாகரீகத்தில் திராவிடப் பண்புகள் (Dravidian Elements in Indian Culture-Book Page No. 111) எனும் நூலின் பக்கம் 111.

சமஸ்கிருதத்தின் கேவலம் புரிகிறதா?

சில நாட்களுக்கு முன்னர்
என்னுடைய  இளமைக்கால தோழி ஒருவரை அவர் கணவரோடு
சந்தையில் சந்திக்க நேர்ந்தது..

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு சந்தித்தேன்..

இருதரப்பு நல விசாரிப்புகளுக்கு பின், தத்தம் குழந்தைகள் பற்றி பேச்சு திரும்பியது..

அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள்.

மூத்தவள் +2 வும்
இளையவள் 8 ஆம் வகுப்பும் படிக்கிறார்கள்

என்ன பெயர் வைத்திருக்கிறிர்கள்
எனக் கேட்டேன்..

பெரியவ பேர் "மகிஷா.."
சின்னவ "கேஷு.. "

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது..

பேர்ல என்ன அதிர்ச்சின்னு கேக்குறிங்களா..?

ஆமா..
மூத்தவ பொறந்த உடனே இவர்தான்
ஐயர் கிட்ட ஜாதகம் பார்த்து பேர் எழுதி வாங்கியாந்தார்ன்னு தன் கணவரை கை காட்டினார்..

சின்னவளுக்கும் அதே ஐயர்தான்
ஜாதகம் பாத்து பேர் எழுதி கொடுத்தார்ன்னும் சொன்னாங்க..

மூத்த பொண்ணு முழுப்பேரு மகிஷாசுரமர்த்தினி!
அடுத்த பொண்ணு முழுப்பேரு
கேஷ்வர்த்தினி!
அவரே சுருக்கமா மூத்தவள "மகிஷா"ன்னும்
சின்னவளை
"கேஷு" ன்னும் கூப்பிடலாம்ன்னாராம்..
..
இப்ப நான் ஏன் அதிர்ச்சியானென்ற
மேட்டருக்கு வருவோம்..
அந்த மகிஷாவுக்கும் கேஷுவுக்கும்
அர்த்தம் என்ன தெரியுமா..?
..
மகிஷான்னா "எருமை"
கேஷுன்னா  "மயிரு"
சமஸ்கிருதத்துல..
..
பெத்தவங்களுக்கு தெரியாது,
பேர் வச்ச பாப்பானுக்கு தெரியுமில்லையா..?

தன்னை நம்பி வந்தவர்களுக்கு
பணத்தை வாங்கிட்டு அவன் காட்டிய
நன்றிய பார்த்தீங்களா..?
இதான் பார்ப்பனியம்..
..
இன்னும் குழந்தை பிறந்தால்
இவனுங்கிட்ட ஜாதகம் எழுதி
பெயர் வைக்கக் கோரும் எத்தனையோ பெற்றோர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..
அவர்களின் குழந்தைகளுக்கு
இவனுங்க வைக்கும் பெயரின்
லட்சணம் இதுதான்..
..
இன்றைக்கு பார்ப்பன அயோக்யத்தனத்தினால் கட்டுண்டு கிடக்கும் ஊடகங்கள்,
தமது நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி தொடர்கள் வழியாகவும் சமஸ்கிருத பெயர்களை அறிமுகம் செய்ய,
இன்றைய பெற்றோர் சமஸ்கிருதத்தில் பெயர் வைப்பதை நாகரீகமாக, பெருமையாக, ஸ்டைலாக நினைக்கின்றனர்..
அப்படி அவர்கள் வைக்கும் பெயர்களின்
உண்மைப் பொருள் தெரிந்தால், கேவலப்படுவார்கள்..

எடுத்துக்காட்டாக,
பிருத்வி என்ற சமஸ்கிருதப் பெயருக்கு
மண்ணாங்கட்டி என்று பொருள்.
மண்ணாங்கட்டி என்று தமிழில் வைத்தால் கேவலமாக நினைப்பவன்,
அதையே சமஸ்கிருதத்தில் வைத்துக்கொண்டு பெருமையாகத் திரிகிறான்!

பெண்ணுக்கு யாஷிகா என்று  சமஸ்கிருதப் பெயர் வைத்து பெருமை கொள்கிறார்கள்.
அதற்கு என்ன பொருள்?
யாஷிகா என்றால் யாசகம் எடுப்பவள்,
அதாவது பிச்சைக்காரி என்று அர்த்தம்.
தமிழில் பிச்சைக்காரி என்று
பெயர் வைத்துக்கொள்வாளா?
ஆனால், அதையே சமஸ்கிருதத்தில் வைத்துக்கொண்டு பெருமையாகத் திரிகிறார்கள்.

அதேபோல் கேசவன் என்று
சமஸ்கிருதப் பெயர் வைத்துக்கொள்கிறான்.
அதன் பொருள் மயிரான்.
கேசம் - மயிர்

கோபிகா என்றால் பால்காரி..

தாமோதரன் என்றால் கயிற்றால் கட்டப்பட்டவன்.

அபர்ணா என்றால் நிர்வாணமானவள்,
ஆடை இல்லாதவள்.

வாசுகி என்றால்
"என்னை அனுபவி "என்று பொருள்.
(திருவள்ளுவர் மேல எவ்ளோ கடுப்பு இருந்திருந்தா அவர் பொண்டாட்டிக்கு
இப்டி ஒரு பெயரை வச்சிருப்பானுங்க)

கோபால் என்றால் பசும்பால் என பொருள்.
(கோ- பசு தமிழ்ல ஆட்டையை போட்ட சொல்)

சுந்தரலிங்கம்,
மகாலிங்கம்,
ஜம்புலிங்கம், இது போன்ற மிகக்கேவலமான கெட்ட வார்த்தைகளை குறிக்கும் (அர்த்தம் கேக்காதீங்க) பெயர்களைக்கூட பெருமையுடன் வைத்துக்கொண்டு இருக்கிறார்களே!
நாம் என்ன செய்யமுடியும்?

கருப்பன், இருளன் என்று பெயர் வைத்தால் கேவலமாக என்னும் நாம்
அதையே சமஸ்கிருதத்தில் கிருஷ்ணா..
கிருஷ் என வைத்துக்கொள்வோம். 

கிருஷ்ணவேணி என்று சமஸ்கிருதப் பெயரை வைப்பதற்கு என்ன பொருள் தெரியுமா? கருவாச்சி

 சமஸ்கிருதத்தின் கேவலம் புரிகிறதா?
..
தமிழ்மேல் எத்தகைய காழ்ப்புணர்வு இருந்தால், இந்த பார்ப்பனியம் இத்தகைய கயமையை இந்த விவரமறியா மக்கள் மேல் கட்டவிழ்த்து விடும்..
..
ஆமா.. உங்க குழந்தைகளுக்கு
என்ன பெயர் வச்சிருக்கிங்க..?
..
பாப்பாங்கிட்ட கேட்டிருந்தா பண்ணாடப்பயலுக நிச்சயம் ஏதாவது கெட்ட வார்த்தையத்தான் பேரா வச்சிவிட்டிருப்பானுங்க..
நீங்க வேணும்ன்னா செக் பண்ணி பாருங்க..

இனியாவது..
போலி கவுரவத்தால் அறிவிழக்காமல் பிள்ளைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயரைச் சூட்டுங்கள்.

பிள்ளையார் சூத்திரக் கடவுள் என்ற நிலையிலிருந்து மாறி, இந்துப் பெருந்தெய்வக் கடவுள் ஆகின்றார்

சிவன், விஷ்ணுவை வணங்குபவர்கள் 'சுடலை மாடன்'  '18-ஆம் படிக்கருப்பு' போன்ற தெய்வங்களை வணங்க மாட்டார்கள்.

அம்பாளை வணங்குவோர், மாரியம்மனை வணங்குவதில் தயக்கம் காட்டுவர்.

சாமியாடுதல், பால் குடம் எடுத்தல், அக்கினிச் சட்டி ஏந்துதல், தீ மிதித்தல் போன்றவை எல்லாம் சிவ, விஷ்ணு கோயில்களில் பார்க்க முடியாத சடங்குகள்.

ஆனால் எல்லாம் இந்துக் கடவுள்களே. எல்லோரும் இந்துக்களே!

இந்தக் கடவுள்களின் வரிசையில் சற்று வேறுபட்டவர் பிள்ளையார். கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழ்நாட்டில் அறிமுகமானவர்.

அந்தக் கடவுள் பற்றிக் கூறும் கதைகள் பல உள்ளன. புராணங்களில் காணப்படும் பிள்ளையார் பற்றிய ஆறு விதமான கதை வடிவங்களை எடுத்துக் கூறுவார் பேராசிரியர் சிவசுப்ரமணியன்.

மற்ற தெய்வங்களிலிருந்து பிள்ளையார் எப்படி வேறுபடுகிறார் என்றால், தொடக்கத்தில் அவர் சிவ, விஷ்ணு பக்தர்களால் ஏற்றுகொள்ளப்படவில்லை. அவர் கோவிலுக்கு வெளியேதான் நிறுத்தப்பட்டிருந்தார்.

தெருமுனையில், குளத்தங்கரையில் என்று எங்கும் பிள்ளையாரைப் பார்க்க முடியும். ஆம், அவர் சூத்திரர்களின் கடவுளாகத்தான் முதலில் கருதப்பட்டார். பிறகுதான் சிவன் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக ஆக்கப்பட்டார்.

முருக வழிபாடு தமிழர்களிடம் சங்க காலத்திற்குப் பிந்திய காலம்தொட்டே இருந்து வந்துள்ளது. அதனால்தான், 'முருகன் எங்கள் முப்பாட்டன்' என்று சொல்லித் தங்கள் அரசியலுக்கு அவரைப் பயன்படுத்திக் கொள்ள இயலுமா என்று இங்கு சில முயல்கின்றனர்.

சங்க இலக்கியமான பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகிய நூல்களில் முருகன் பேசப்பட்டாலும், அவ்விலக்கியங்கள் சங்க காலத்திற்கு மிகவும் பிந்தியவை.

திருமுருகாற்றுப்படை, பிற்காலச் சைவத் திருமுறை நூல்களின் வரிசையிலும் சேர்க்கப்பட்டுள்ளது என்பதே அதற்குச் சான்று.

எவ்வாறாயினும், தமிழர்களுக்கு நெருக்கமான முருகனின் அண்ணன் என்று பிள்ளையார் உருவகம் செய்யப்பட்டார். அதற்கு ஏற்ற வகையில், முருகனின் பெயர் சுப்பிரமணியன் என்று மாற்றப்பட்டது.

சுப்பிரமணியன் என்றால், சு - பிராமணியன், அதாவது 'பிராமணர்களுக்கு நல்லவன்' என்று பொருள்.

பிறகு அவர் பிள்ளையாரின் தம்பி என்பதால் 'பால'சுப்பிரமணியன் என்று ஆக்கப்பட்டார். இந்த அடிப்படையில்தான், இப்போதும் சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன் ஆகிய பெயர்களைப் பார்ப்பனர்கள் சூடிக் கொள்வார்களே தவிர, ஒருநாளும் முருகன் என்ற பெயர் அவர்களிடம் இருக்காது.

முருகன் ஐயரோ, முருகன் அய்யங்காரோ எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். முருகன் என்பது அழகிய தமிழ்ப் பெயர். முருகு என்றால் அழகு. முருகன் என்றால் அழகன்.

சுப்பிரமணியன் என்பது சமற்கிருதத் சொல். முருகன் பெயர் மட்டுமன்று, சமற்கிருதம் கலக்காத தூய தமிழ்ப் பெயர் எதனையும் பார்ப்பனர் சமூகத்தில் பார்க்கவே முடியாது. எங்கேனும் லட்சம் பேரில் ஒருவர் விதிவிலக்காக இருக்கலாம்.

இங்குதான், மொழிக்கும் சமயத்திற்குமான உறவும், முரணும் தொடங்குகின்றன. எனவேதான், இன்றுவரையில், 'சமற்கிருத எதிர்ப்பு' என்பது திராவிட இயக்கக கொள்கையின் மாறாத ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

'பெருந்தெய்வ' வழிபாடு, சமற்கிருத மேலாண்மை, வருண அடிப்படையிலான சமூகம் ஆகியனவற்றை மையமாகக் கொண்டு ஒரு புதிய மதத்தை வலிமையாகக் கட்ட ஆதி சங்கரர் முயன்றார்.

தனித்தனி மாதங்களாக இருந்த சைவம், வைணவம், சாக்தம், காணபத்யம், கௌமாரம், சௌரம் ஆகிய ஆறு மதங்களையும் ஒருங்கிணைக்க அவர் முயன்றார். அதன் காரணமாகவே அவர் 'ஷண்மத ஸ்தாபகர்' என்று அழைக்கப்பட்டார்.

ஷண் என்றால் ஆறு என்று பொருள். (நம் வீட்டு ஆறுமுகங்கள் ஷண்முகங்கள் ஆன கதை இதுதான்). ஆனால் அவரால் அந்த முயற்சியில் இறுதி வெற்றியைப் பெற முடியவில்லை.

அந்த வேலையை இறுதியாகச் செய்து முடித்தவர்கள் ஆங்கிலேயர்களே. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில், சர் வில்லியம் ஜோன்ஸ் என்னும் ஆங்கில நீதிபதிதான், இந்து என்னும் சொல்லை வழக்கிற்குக் கொண்டுவந்தவர்.

அதனால்தான், மறைந்த சங்கராச்சாரியார், தன் 'தெய்வத்தின் குரல்' என்னும் நூலில், "ஆங்கிலேயர்கள் நம்மை இந்துக்கள் என்ற பெயரில் ஒன்றாகச் சேர்த்தார்களோ நாம் பிழைத்தோமோ" என்று எழுதுகின்றார்.

இவ்வாறு இணைப்பு ஏற்பட்ட பின்தான், பிள்ளையார் சூத்திரக் கடவுள் என்ற நிலையிலிருந்து மாறி, இந்துப் பெருந்தெய்வக் கடவுள் ஆகின்றார்.

- சுப.வீ..அவர்களின் 'கருப்பும் காவியும்'
தொடரிலிருந்து .