Wednesday, September 04, 2019

ஆன்மிக கூமுட்டைகளுக்கு ஒரு கேள்வி!

ஆன்மிக கூமுட்டைகளுக்கு ஒரு கேள்வி!

தமிழர்களின் கருப்புச்சாமியோ, கருப்பணசாமி, அய்யனாரோ, பட்டத்தரசியோ, காமாட்சியோ
,மதுரைவீரனுக்கோ பிறந்தநாள் விழா என்று ஓன்று கிடையாது... உளூர் காவல் தெய்வங்களுக்கு எதுக்குமே பிறந்தநாள் விழா கிடையாது... இந்த வழக்கம் தமிழர்களிடம் இல்லை என்பதையே இது காட்டுகிறது

ஆனால் இன்றய முட்டாள் தமிழன் என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்...

ஆரிய பிராமணன் கொண்டுவந்த பிள்ளையாருக்கும்...  கிருஷனுக்கும்....  ராமனுக்கும்...  பிறந்தநாள் கொண்டாடிகிட்டு இருக்கான்.....

ஏண்டா முட்டாள் ஆன்மிகவாதிகளா... இதுலையாவது கொஞ்சம் யோசிக்க கூடாதா..... எந்த வட மாநிலத்துலையாவது கருப்புசாமிக்கு பிறந்தநாள் கொண்டாடுறானா? இல்லை அய்யனாருக்கு பிறந்தநாள் கொண்டாடுறானா??? குறைந்தபட்சம் கோவிலாவது இருக்கா? .

அப்போறோம் என்ன உனக்குமட்டும் கிருஷ்ன ஜெயந்தியையும்...
பிள்ளையார் சதூர்தியும்?? யோசிக்கவே மாட்டிங்களா?? உங்க கடவுள்களை ஊருக்கு வெளியிலையும்..... பார்ப்பன கோவில்களின் வாசலிலும் நிறுத்திவைத்துவிட்டு .. பார்ப்பன்னனையும் அவனது ஆபாச கடவுள்களையும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுகிறாய்... அபோறேம் என்ன உனக்கு தமிழன் என்கிற பெருமை வேறே???

கடவுள் இல்லனு சொன்னாதான் ஒத்துக்க மாட்டுக்குறிங்க ..சரி... குறைந்தபட்சம் உங்க தெய்வங்கள் கூடவா கேவலப்படுத்திவிட்டு பார்ப்பான் கொண்டுவந்த ஆபாச கடவுள்களையும் புராணங்களையும் நம்பிகிட்டு இப்படி தெருவுக்கு தெரு பார்ப்பான் வயிறு வளர்க்க (நீ உழைத்து) கோவில் கட்டிவிட்டு பார்ப்பனனுக்கு ஓசி சோறு போட்டுக்கிட்டு சூத்திரனாய் நிக்கிறே... பஞ்சமனாய் நீ வெளியே நின்னு முட்டாளா நிற்கிறே???

இதிலிருந்தாவது புரியுதா நீ பார்ப்பன அடிமையாகி விட்டாய் என்று??

இதையாவது சிந்திக்க கூடாதா???

உங்களையெல்லாம் பார்க்கும் போது எனக்கு அந்த கிழவன் சொன்னதுதாய்யா நினைவுக்கு வருது

பக்தி வந்தால் புத்தி போகும்   புத்தி வந்தால் பக்தி போகும்

வேறே என்னத்த சொல்ல???....

புத்தி வரட்டும்!! .....

அரசியலில் மதத்தைக் கலக்கு..! சிறுபான்மையினரை விலக்கு..!! தன் சந்ததியைப் பெருக்கு..!!!

அரசியலில் மதத்தைக் கலக்கு..!          சிறுபான்மையினரை விலக்கு..!!
தன் சந்ததியைப் பெருக்கு..!!!
----------------------------------------

தர்மபிரபு படத்தில் ஒரு காட்சி வரும்..!? சிவபெருமானின் கோபத்திலிருந்து தப்பிக்கவும், தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளவும் எமனுக்கு ஒரு பார்ப்பனன் ஆலோசனை சொல்லுவான்.

அந்த ஆலோசனையாக பட்டது,  உனக்கு அழகான அக்கா, தங்கை யாராவது இருந்தால் சிவனிடம் அனுப்பி தாஜா செய்து,  உன் பதவியைக் காப்பாற்றிக் கொள் என்பதுபோல் அந்தக் காட்சி இருக்கும்.

இப்படி ஒரு உண்மைச் சம்பவம் வரலாற்றிலும் நடைபெற்றிருக்கிறது மேற்கொண்டு படியுங்கள் புரியும்..!

அதுவரை, அரசர்களை உருவாக்கும்,  ஆட்டிப்படைக்கும் ராஜ குருக்களாக மட்டுமே பதவி வகித்து வந்த ஆரிய பார்ப்பனர்களுக்கு பௌத்த பரவலைக் கண்டு முதல்முறையாகஅச்சம் வருகிறது

தற்போது நாம் இருக்கும் பதவியை வைத்துக் கொண்டு இந்த பௌத்த மதத்தை அழிக்க முடியாது,  நாமே நேரடியாக ஆட்சி கட்டிலில் அமர்ந்தால்தான், 

பௌத்தத்தை அழித்து நமது சனாதன தர்மத்தை காக்க முடியும், சனாதன தர்மம் இருந்தால்தான் நம்  இனத்தை வாழையடி வாழையாக வாழ வைக்க முடியும் என்று கருதி...

ஆரியப் பார்ப்பனர்கள் நேரடியாக ஆட்சிக் கட்டிலில் அமரச் செய்த சூழ்ச்சி களில் ஒன்றுதான் நாம் மேலே பார்த்த தர்மபிரபு படத்தில் வரும் காட்சி..!?

ஆம்..!
அசோகனின்பேரனான பிருகரத்னனுக்கு தன் அழகான மகளைக்கூட்டிக்கொடுத்து அரசனின் நம்பிக்கைக்கு உரியவனாக மாறுகிறான் புஷ்யமித்ர சுங்கன், பிறகு படைத்தளபதியாகவும் பதவிஉயர்வு பெறுகிறான்.

பிருகரத்தனின் நம்பிக்கைக்குரியவனாக மாறிப் படைத் தளபதியாகவும் பதவிப் பெற்று விட்டான் புஷ்யமித்ர சுங்கன்.. ஒரு நாள் அரசர் தன் படை வரிசைகளை பார்வை யிட்டுக் கொண்டு வரும்போது..!?

ஒரு முறை இலங்கைக்குச் சென்றிருந்த திரு.ராஜீவ் காந்தி அவர்கள் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிடும் போது எப்படி ஒரு சிப்பாய் துப்பாக்கியின் பின் கட்டையால் தாக்க முற்பட்டானோ அதுபோல...

தன்படை வரிசையைப் பார்வையிட்டு கொண்டு வரும்போது திடீரென்று பாய்ந்து அரசன் பிரகரத்தன் தலையை வெட்டிக் கொலை செய்கிறான்  புஷ்யமித்ர சுங்கன்..!

பின்னர் தன்னைத்தானே அரசனாகவும் அறிவித்துக் கொள்ளுகிறான்..!

இப்படித்தான் இந்திய வரலாற்றில் ஒரு பார்ப்பனன் அரசன் ஆகிறான்,  ஆண்டு கி.மு. 187.

இந்தியா முழுவதும் பார்ப்பனர்களின் கற்பிதமான ஜாதி, மத, வேத, சாஸ்திர, புராண ஆத்மா, மறுபிறப்பு போன்ற வற்றிற்கு எதிராக மிகப்பெரிய  எழுச்சியை ஏற்படுத்தியது பௌத்தம்,

மக்கள் கூட்டம் கூட்டமாக பௌத்தத்தை ஏற்றுக் கொண்டார்கள் அதன்படியே வாழ்ந்து வந்தார்கள்..!

பார்ப்பனர்களின் வேள்வி, கேலிப் பொருளாக மாறிப்போனது, பார்ப்பனர்களின் சமூக மரியாதை கேள்விக் குட்படுத்தப்பட்டது.

புத்தர் என்றால் கடவுள் மறுப்பாளர் என்பது மட்டுமல்லாமல், இன்று எப்படி கங்கை, இமயம், பசு போன்றவைகள் மத புனித சின்னங்களாக இருக்கின்றதோ..!?

அதுபோல அன்றைய காலகட்டத்தில் அரசமரமும், ஸ்வஸ்திக் சக்கரமும் புத்தரின் அம்சமாக, புனிதமாக கருதப்பட்டது. அவரின் போதனைகள் கல்வெட்டுக்களாக செதுக்கப்பட்டது

இந்தியாவில் ஒரு தனிமனிதருக்கு சிலை வைக்கப்பட்டது என்றால் அது புத்தருக்கு தான்,

அறிவை பாய்ச்சிய புத்தனை மக்கள் அக மகிழ்வோடு, விதவிதமான கோணங் களில் அவரின் சிலைகளை வடித்தார்கள் அதை  வீதிதோறும் வைத்தார்கள்,

குறிப்பாக உடல் சுத்தம் செய்யும் நீர் நிலைகள் அருகில் எல்லாம் உள்ள சுத்தம் செய்ய புத்தரின் சிலையை வைத்தார்கள்.

சிலை வைக்கும் மரபு என்பது புத்தர் காலத்திலிருந்துதான் தொடங்குகிறது..!

ஆட்சிக்  கட்டிலில் அமர்ந்த புஷ்யமித்ர சுங்கன்தான் புத்தரின்அனைத்துகுறியீடு களையும் அழித்தான் அல்லது சனாதன தர்மத்தில் கரைத்தான்.

உலகத்தின் பல்வேறு நாடுகளில் கேலிப் பொருளாகவும், குழந்தைகளின் விளை யாட்டுப் பொருளாகவும், உதாரணக் குறியீடாகவும்,

மனித உடலும் யானைத் தலையுமான பிள்ளையாரை..!? மீண்டும் சொல்லுகிறேன் குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாகவும், கேலிப் பொருளாகவும் இருந்த பிள்ளையாரை,

எங்கெல்லாம் புத்தர் சிலைகள் இருந்ததோ அதையெல்லாம் இடித்து, உடைத்து அதைக் கொண்டுப்போய் நீர் நிலைகளில் கரைத்தார்கள்,

இது ஒருவகையில் புத்தரைக் கேலி செய்யும் விதமாக பிள்ளையாரைப் போல நீயும் கேலிக்குரியவன்தான் என்று மக்களிடம் சுட்டிக்காட்ட புத்தர் சிலைகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் பிள்ளையார் சிலைகளை வைத்தார்கள்.

புத்தர் சிலையை உடைத்த சனாதனிகள் அதை ஆட்டமும், பாட்டமுமாக  ஒரு சவ ஊர்வலம்போல் கொண்டுப் போய் நீர் நிலைகளில் கரைத்தார்கள்.

அந்த மரபின் தொடர்ச்சிதான் பல்வேறு புனைவு கதைகளைச் சொல்லிப் பழைய வரலாற்றை பார்க்க முடியாத அளவிற்கு கற்பனைகளை கலந்து, அன்று எப்படி புத்தனை சவ ஊர்வலமாக கொண்டு போனார்களோ, அது தேய்ந்து தேய்ந்து இன்று பிள்ளையாரை கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அந்த சிலை உடைப்பு மரபின் தொடர்ச்சி தான் சற்று மாறுதலுக்குட்பட்டு இன்று பிள்ளையார் ஊர்வலமாகத் தொடர்கிறது

இப்படி சிலை உடைப்பதற்கென்றே தனி அமைச்சகத்தை உறுவாக்கி, நாடு  முழுவதும் உள்ள புத்தர் சிலைகளில் மூக்கை உடைப்பது, தலையை உடைப்பது, இவை இரண்டும் முடியாத பட்சத்தில் புத்தரை கடவுளாக மாற்றுவது,

அல்லது சிலைகளின் அடையாளங்களை மாற்றி பெருமாளாக்கி, பெரு தெய்வ வழிபாட்டிற்குள் மக்களை கொண்டு வருவது போன்ற காரியங்களைச் செய்தான் இதற்காக  புஷ்யமித்திர சுங்கன் ஒரு குழுவையே உறுவாக்கி வைத்திருந்தான்.

இதோடு மட்டுமல்லாமல் அந்தக் குழு புத்தபிக்குகளையும் தேடித் தேடி கொன்றொழித்தார்கள், பல்வேறு புத்த விகாரங்களையும், சமணப்பள்ளிகளை யும்இடித்து  தரை மட்டமாக்கினார்கள்.

புத்த வரலாற்றையும், புத்த போதனைக ளையும் சொன்ன, நூற்றுக்கணக்கான ஸ்தூபிக்கள், ஆயிரக்கணக்கான கல் வெட்டுக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டது புஸ்யமித்திர சுங்கனால்.

புத்த மதமும், புத்தத்தை பின்பற்றும் மக்களும் நிலைகுலைந்து போயினர்,

சிலை உடைப்பு என்பது ஏதோ பெரியார் தான் தொடங்கி வைத்தது போல் பேசும் 7அறிவு பிராணிகள் வரலாறையும் சற்று உற்று நோக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்..!

அதுமட்டுமல்லாமல், ஆட்சி மொழியாக இருந்த பாலி மொழியை நீக்கிவிட்டு,  சமஸ்கிருதத்தை அரசு மொழியாகவும் மக்கள் மொழியாகவும்கொண்டுவந்தான்

இதையெல்லாம் எதிர்த்துக் கேட்பவர் களை ஒடுக்க நம்ம N.I.A. வைப்போல, சுமதி பார்கவாவைக் கொண்டு மனு ஸ்மிருதி என்கின்ற ஒரு கொடூரமான, மனித குலத்திற்கே எதிரான சட்ட நூல் எழுதப்பட்டது.

இதைத் தட்டிக் கேட்டவர்களை தாழ்த்தப் பட்டோர் என ஊருக்கு வெளியே ஒதுக்கி வைக்கவும், தண்டிக்கவும் இந்த மனு சட்டம் வழிவகை செய்தது.

நாடோடிப் பாடல்களாகவும், செவிவழிக் கதைகளாகவும் மட்டுமே இருந்து வந்த ராமாயணமும், வேதங்களும் எழுத்து வடிவம் பெற்றதும் இவன் ஆட்சியில் தான்.

ஏறக்குரைய 110 ஆண்டுகள் இருந்த சுங்க வம்ச ஆட்சியில், புத்த மரபுகள் ஒழிக்கப்பட்டு மீண்டும் வேத மரபுகள் தலைத் தூக்கத் தொடங்கியது.

பௌத்தம் என்கின்ற பெயரும், அது தொடர்பான குழுக்களும், அதன் அரைகுரைக் கோட்பாடுகளும் மக்கள் வழக்காற்றில் இருந்தாலும் அதற்கான சான்றுகள் முற்றாக அழிக்கப் பட்டிருந்தது.

வெள்ளையர்கள் வந்து பல்வேறு ஆய்வுகள், அகழ்வாராய்ச்சிகள் என செய்தப்பிறகுதான் அதன் பதிவுகள் முழுமையாக நமக்குக் கிடைத்தன..!

அதாவது 1800 க்குப் பிறகுதான் புத்தர் என்பவர் வாழ்ந்ததற்கான ஆதாரமே நமக்குக் கிடைத்தது அதுக்கூட இலங்கையில் உள்ள இலக்கியங்களை ஆய்வு செய்யும்போதுதான் இந்தியாவில் புத்தர் வாழ்ந்ததே தெரிந்தது.

கால ஓட்டம், அரசியல் மாற்றம், அரசு மாற்றம் இவைகளால் தூர்ந்துப் போய்க் கொண்டிருந்த தொண்மங்களை சமீபக் காலங்களில் மீண்டும் துலக்கி மக்களிடையே கொண்டு வந்தார் பால கங்காதரத் திலகர் என்பவர்.

பார்ப்பனர்கள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தன் வரலாற்றையோ, வஞ்சத்தையோ மறக்க மாட்டார்கள்.

ஆம் புஸ்யமித்திரசுங்கன், புத்தரை இழிவுப்படுத்த, கேலிசெய்ய பயன் படுத்திய பிள்ளையார், மக்கள் மனதில் படிமங்களாக தொடர்ந்தது,

அதைத் திலகர், அரசியலில் மதத்தைக் கலக்கப் பயன் படுத்திக் கொண்டார்.

இன்று திருவாளர் திலகர், வினாயகர் விஜர்ஸனம் என்கின்றப் பெயரில், கடவுளையே  கலவர கதாநாயகனாக மாற்றியது மட்டுமல்லாமல், இந்தியாவில் மத அரசியலையும் அவர்தான் தொடங்கி வைத்தார்

பிள்ளையார் சதுர்த்தி விழா, ஊர்வலம் இன்று மத அரசியலுக்கும் மதச்சிறு பான்மையினர் வெறுப்பிற்கும், இந்திய தேச உறுவாக்கத்திற்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றால்..!

அது, திலகர் முன்னுணர்ந்து தனது சாதுரியத்தால் உறுவாக்கிய இந்த வினாயகர் சதுர்த்தி விழாதான்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  பௌத்த அழிப்பிற்கு பயன் படுத்தப்பட்ட அதே பிள்ளையாரை..!

காலம்தாண்டியும்,மறக்காமல் நினைவில் வைத்திருந்து, இந்த அறிவியல் நூற்றா ண்டில்க் கூட வெறுப்பு அரசியலுக்குப் பயன் படுத்தப் படுகிறது என்றால்..!?

பார்ப்பனர்களின் சாதுர்யத்தையும், சமயோஜிதத்தையும், அவர்களின் கட்டுப்பாடான ஒற்றுமையையும், தங்கள் சந்ததிகள் மேல் அவர்கள் கொண்ட அக்கரையையும், அதற்காக அவர்கள் சிந்திய உழைப்பையும் நம்மால் பாராட் டாமல் இருக்க முடியவில்லை..!
****************

தமிழர்களே..!
பார்ப்பானைப் பார்த்தாவது வாழக் கற்றுக் கொள்ளுங்கள்...
....................தந்தைப் பெரியார்..................

உள்நாட்டவர்களை வைத்தே அவர்கள் நாட்டை தனதாக்கி கொண்டுஇருக்கிறார்கள்

ஐரோப்பாவில் இருந்து கூட்டமாக வந்த ஒரு கூட்டம்
இந்து நதிக்கரையில் தங்கள் கூட்டத்துக்கு அடையாளமாய்
ஒரு நூலை உடம்பில் சுற்றி கொண்டு பிரிந்தார்கள்  இமையம் முதல் குமரி வரை 

வெள்ளையன் வரும் வரை அங்குள்ள மக்களை ஜாதியா பிரித்தார்கள் அவர்கள்  கோவில்களை , மருத்துவத்தை , வாழ்வுமுறையை  கைப்பற்றினார்கள்.புராண கதைகளை உருவாக்கினார்கள்

வெள்ளைக்காரன் வந்த பிறகு
சிதறி கிடந்த நாட்டை வெள்ளையனை வைத்து
இந்தியா என்று ஒரு நாட்டையும் 
இந்து என்று ஒரு மதத்தையும் உருவாக்கினார்கள்
பள்ளி மற்றும் மடங்களை திறந்தார்கள்

பூர்வ குடிகளை  வைத்து வெள்ளைக்காரனை விரட்டினார்கள்
ஆர் எஸ் எஸ் என்ற இயக்கம் உருவாக்கி 
தேச தந்தை காந்தியை சுற்று கொன்றார்கள்
மற்ற அரசியல் கட்சிகளுக்குள் இருந்து அரசியல் கற்றார்கள்
பிறகு தங்களுக்கு என்று பி ஜே பி அரசியல் கட்சி  உருவாக்கினார்கள்

 குண்டு வைத்தார்கள் , ஜாதி , மத கலவரத்தை உருவாக்கி வளர்ந்தார்கள்  

நாம் வாழ்க்கையில் வெற்றி பெற  அவர்கள் மந்திரத்தை நம் கோவில் ,வீடுகளில்  சொல்லவைத்து விட்டு  
 மின்னணு எந்திரத்தை தங்கள் வெற்றி மந்திரமாக மாற்றிக்கொண்டார்கள்.

மொத்தத்தில் அவர்கள் வியர்வை , ரத்தம் சிந்தாமல்  உள்நாட்டவர்களை வைத்தே அவர்கள் நாட்டை தனதாக்கி கொண்டுஇருக்கிறார்கள்.


இது கதை இல்லை நிஜம் !

உலகத்தில் 3 ‘ஜாதிகள்’ உள்ளன

உலகத்தில் 3 ‘ஜாதிகள்’ உள்ளன, இந்த படத்திற்கு வரும் “reaction” வைத்து சொல்லிவிடலாம் :


முதல் ஜாதி - இந்த படத்தை பார்த்து, இந்த படத்தில் என்ன கொடுமை இருக்கு என்றே தெரியாதவர்கள். இவர்கள் யார் ஆண்டாளும் கவலைப்படாதவர்கள். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவர்கள். இவர்கள் போராடவும் வரமாட்டார்கள், இவர்களை வைத்து கொண்டு போராடவும் முடியாது, இவர்களுக்காக போராடுவதும் வீண்.

இரண்டாவது ஜாதி - இந்த படத்தை பார்த்து, இது சரிதானே, இதில் என்ன தவறு இருக்கிறது, இதற்க்கு ஒரு உளவியல்/அறிவியல்/பொருளாதார /ஆன்மீக காரணம் இருக்கிறது என்று நினைப்பவர்கள். இவர்கள்தான் ‘தீயவர்கள்’ 

மூன்றாவது ஜாதி  - இந்த படத்தை பார்த்து, சொல்லித்தராமலேயே இவர்களின் இரத்தம் கொதிக்கும். இவர்கள்தான் ‘நல்லவர்கள்‘. இவர்கள் தான் ஆளவேண்டியவர்கள்!

ஆஸ்திரேலியர் கிரகாம் ஸ்டைன்ஸ்

இந்த படத்தில் இருப்பவர்களை உங்களில் பலருக்கு தெரிந்து இருக்காது.
ஆனால் இந்த கதை இன்றும் முடியவில்லை என்பது தான் சோகம்.


1990 களில் ஒடிசா மாநிலம் மயூர்பஞ்சில் தொழு நோய் தலை விரித்து ஆடிய போது, அங்கு வந்து தொழுநோயாளிகளுக்கு சேவை செய்ய வந்த ஆஸ்திரேலியர் கிரகாம் ஸ்டைன்ஸ் மற்றும் அவரது இரு மகன்கள் தான் இவர்கள்.

அக்காலத்தில் தொழுநோயாளிகளை அப்பகுதியில் சொந்த வீட்டில் இருந்து வெளியேற்றி விடுவார்கள். அப்படிப்பட்ட நோயாளிகளை சேர்த்து இடம் கொடுத்து அரவணைத்து வந்தார் ஸ்டெயின்ஸ்.

இந்து இந்து கத்திய எவனும் அந்த நோயாளிகளை கவனிக்கவும் இல்லை, மாறாக பூர்வ ஜென்ம கர்மா என்று ஒரு கருமம் பிடித்த காரணம் சொல்லி வசதியாக ஒதுக்கி தள்ளினார்கள். இவர் தான் வந்து அவர்களுக்கும் ஒரு சரணாலயம் ஆனார். அது மட்டுமில்லாமல் மருத்துவ முகாம் நடத்தி மேலும் பரவுவதை தடுத்தார்.

இவரால் ஈர்க்கப்பட்டு சேவை செய்ய வந்த பலர் , ஒடுக்கப்பட்ட மக்கள். இந்த மனுவாத சமுதாயத்தால் நிரந்தர தொழுநோயாளி என ஒதுக்கி தள்ளப் பட்டவர்கள். அவர்கள் க்றிஸ்த்வ மதத்தை தழுவ ஆரம்பிக்க , வந்தது மதக்காவலர்களான பஜ்ரங் தளத்துக்கு கோபம். ஸ்டெயின்ஸை மிரட்டினார்கள் , நீ உன் மருத்துவ சேவையை மட்டுமே பார் என்று ( அப்போதும் நாங்கள் சேவை செய்கிறோம் நீ வெளியே போ... ம்ம்ம் ஹூம் அது வராது ~ கர்ம வினை அல்லவா தொற்றிக் கொள்ளுமே)

ஸ்டெயின்ஸ் அதை பெரிது படுத்தவில்லை, அவர் வேலையை தொடர்ந்தார். உள்ளூர் மக்கள் அவர் பின் அரணாக நின்றதால் ஒன்றும் செய்யவும் முடியவில்லை. அப்போதைய மாநில பஜ்ரங் தள தலைவர் ஒரு பிராமணர், அங்கே வந்தார், கூட்டம் போட்டார், ஸ்டெயின்ஸ் உயிர் உள்ள போதே வெளியேறாவிட்டால், பிணமாக அனுப்பி விடுவோம் என்றார். அப்போதும் அசரவில்லை ஸ்டெயின்ஸ், அவர்களுக்கு தான் செய்வது மருத்துவ சேவை, மதமாற்றம் நான் செய்வது இல்லை என்று விளக்கமும் சொன்னார். அப்புறம் சிறிது நாட்களில் சத்தம் அடங்கிப்போனது.

1999 இந்தியாவில் ஒரு மாற்றம். பா ஜ க முதன் முறையாக பதவி ஏற்றது. பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளுக்கு கொடுக்கு முளைத்தது.

ஸ்டெயின்ஸை அழிக்க அங்கே உள்ள பழங்குடி மக்களிடையே தன் விஷப் பிரச்சாரத்தை ஆரம்பித்தது பஜ்ரங்கிகள். அதனுள் ஒரு கூட்டத்தையும் கூட்டி சதி செய்தது. தாரா சிங் என்பவனுக்கு கொம்பு சீவி தயார் படுத்தியது (வரலாறு முழுவதும் இதே கதை தான். பிள்ளையார் பெயரால் கலவரம் செய்ய முதற்கொண்டு இவர்களுக்கு ஏவல் நாய்கள் சூத்திர , பஞ்சமர்கள் தானே!)

விடுமுறைக்கு வந்த தன் இரு மகன்கள் கூட ஒரு பிக்னிக் போவதாக சற்று ஊருக்கு வெளியே போய் காம்பிங் செய்து கொண்டிருந்த ஸ்டெயின்ஸ் மற்றும் அந்த இரு பிஞ்சுகளையும் மிருகத்தனமாக தாக்கின தாரசிங் தலைமையில் வந்த ஆயுதம் ஏந்திய கும்பல்.
அவர்கள் மூவரையும் குற்றுயிராக போகும் வரை வேல் கம்புகளால் தாக்கி விட்டு அவர்கள் ஜீப்போடு சேர்த்து தீயிட்டு கொளுத்தின அந்த வெறி பிடித்த சங்கி கூட்டம் கொளுத்திய பின்னர் ஜெய் ஸ்ரீராம் , ஜெய் பஜ்ரங் பலி என்று கூச்சலிட்டு கொண்டாடி தீர்த்தன அந்த பாறை மன மத வெறி ஓநாய்கள். அந்த சத்தத்தில் அந்த பிஞ்சுகள் மரண வலியால் துடித்த கூக்குரல் கேட்கவே இல்லை.

நிற்க! நிகழ்காலத்துக்கு வருவோம்.



அந்த இரண்டாவது படத்தில் இருப்பது மஹாகணம் பொருந்திய அஹிம்சா மூர்த்தி மோடி மகானின் அமைச்சரவையில் சிறுதொழில் அமைச்சர், ஒரிஸ்ஸாவின் balasore தொகுதி MP,  பி சி சாரங்கி. சங்கீகள் ஆஹா ஓஹோ என்று அவர் எளிமையை கொண்டாடிக் கொண்டு உங்களை வசியம் செய்ய பார்க்கும் அதே மகான் தான்.
இவருக்கும் அந்த கொடூர மத வெறி கொலைகளுக்கும் என்ன சம்பந்தம்? அன்னார் தான் அந்த பிராமண பஜ்ரங் தள தலைவர்.

தீவிரவாதிக்கு  பதவி கொடுத்து அழகு பார்ப்பது தானே புதிய ஹிந்தியா?

அந்த குழந்தைகளின் கூக்குரல் சத்தம் உங்களால் உணர முடியாது போனால், அன்னார் பதவி ஏற்பை ஒரு முறை கேட்டு விடுங்கள். அவை பின்னால் உங்கள் புலனுக்கு கேட்கும். அந்த படாடோப விழாவில் இருந்த சிவப்புக் கம்பளங்களின் சாயம் இயற்கை இரத்தம் கொண்டு நிறமூட்டப்பட்டதும் புரியும்.

இப்போது பெருமையுடன் சொல்லுங்கள்...
பாரத மாதா கி ஜெய்!

இந்தித்திணிப்புக்கும் இந்தி என்ற வடமொழியை கற்றுக்கொள்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன

இந்தித்திணிப்புக்கும் இந்தி என்ற வடமொழியை கற்றுக்கொள்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன?, இந்தி அவசியமாக படிப்பது தேவையான ஆணிதானா? என்ற விவரங்களை நன்கு விளங்கிக்கொள்ள கீழ்க்கண்ட கேள்விபதிலை படியுங்கள்!

கேள்வி:
#இந்திபடித்தால்நல்லதுதானே?*

பதில்:
இந்தி மட்டுமல்ல...நீங்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் உங்கள் சுயவிருப்பத்தின் பேரில் தாராளமாக படியுங்கள். உங்களை யாரும் எதிர்க்கவே இல்லை.

ஆனால் நீங்கள் ஒருவர் விரும்புவதற்காக இம்மாநிலத்தில் உள்ள எல்லாரும் இந்தி படிக்க முடியாதல்லவா?

அதனால் நீங்கள் உங்கள் சுயவிருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள உங்கள் சொந்த காசை பயன்படுத்தி இந்தி என்ன? ஜெர்மன், மராத்தி, ஸ்பானிஷ், உருது, மலாய், சமஸ்கிருதம், பிரஞ்சு என எது வேண்டுமானாலும் படிங்க. நாங்க யாரும் குறுக்கே நிற்க மாட்டோம்.

*கேள்வி:
#மூன்றாவதுமொழிநல்லதுதானே?*

பதில்:
நீங்கள் மூன்றென்ன, முப்பது மொழிகளை கூட படிங்க. ஆனா நீங்க மூன்றாவது மொழி படிக்க விரும்புகிறீர்கள் என்ற காரணத்துக்காக தமிழ்நாடே மூன்றாவது மொழியை படிக்க வேண்டும் என்று நினைக்காதீங்க

*கேள்வி:
#தமிழ்நாட்டில்நிறையஇந்திபேசும்_மக்கள் வேலைக்கு வருகிறார்கள். என்னால் அவர்களுடன் இந்தி பேச முடியவில்லையே?*

பதில்:
சொந்த மாநிலத்தில் பிழைக்க வழியில்லாமல் இந்தியாவிலேயே வளர்ந்த மாநிலங்களில் ஒன்றான தமிழகத்துக்கு வரும் மற்ற மாநில சகோதரர்களை மூன்று மாதம் அவர்கள் பாேக்கில் விடுங்கள். அவர்கள் தன்னால தமிழ் கற்றுக்கொண்டு உங்களோடு உரையாடுவார்கள். உங்களுக்கு இதில் சந்தேகமா? என்னுடன் போரூர் அடையார் ஆனந்த பவனில் ஒரு காபி அருந்த வாங்க. அழகு தமிழில் நம்மிடம் ஆர்டர் எடுக்கும் அசாம் மாநில பெண்களை காட்டுகிறேன்.

*கேள்வி:
#வேலைக்காகநான்வடமாநிலங்களுக்குசென்றால்இந்திதெரிஞ்சிருந்தா_நல்லதுதானே?*

பதில்:
7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ் மாநிலத்திலிருந்து வேலைக்காக வெளிமாநிலம் செல்பவர்களை விட வெளிநாடு செல்பவர்களே அதிகம்.

Delhi செல்பவனை விட Dubai, Detroit செல்பவனே அதிகம்.
Maharashtra செல்பவனை விட Melbourne, Manhattan செல்பவனே அதிகம்.
Lucknow செல்பவனை விட London, Los Angeles செல்பவனே அதிகம்.

உண்மை நிலை இவ்வாறிருக்க குழம்பவே வேண்டாம். கற்றறிந்த தமிழர்களுக்கு வேலை தர வெளிநாடுகளே வரிசைக்கட்டி நிற்கையில் இந்தி மாநிலங்களில் நமக்கென்ன வேலையிருக்கு?

*கேள்வி:
#மென்பொருள்நிறுவனங்கள்வடமாநிலங்களில்பணியில்அமர்த்தினால்_என்னசெய்வது?*

பதில்:
மென்பொருள் நிறுவனங்களில் வேலை என்பது தமிழர்களின் ஆங்கில புலமைக்கும், கணினி அறிவுக்குமானது. உங்களுக்கு இந்தி தெரிந்தால் மட்டுமே வேலை என்று எந்த மென்பொருள் நிறுவனமும் சொல்லவே சொல்லாது.

ஒரு வேளை நீங்கள் பணிநிமித்தம் வடமாநிலங்களுக்கு செல்ல நேர்ந்தால் மூன்று நான்கு மாதங்களில் இந்தி பேசிவிட உங்களால் முடியும்...கவலை வேண்டாம்.

*கேள்வி:
#அதுஎப்படிசாத்தியம்?*

பதில்:
எந்த கல்வியறிவும் இல்லாமல் வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்து தமிழும் கற்று தனக்கு தெரிந்த வேலையை வடமாநிலத்தவரால் செய்ய முடியும் போது...எல்லா பெரும்படிப்புகளும் படித்து, பெரிய வேலைக்கு செல்லும் உங்களால் முடியாதா என்ன?

எத்தனையோ கல்வியறிவு இல்லாத தமிழர்கள் காலம் காலமாய் அரபியாே, உருதோ தெரியாமல் எப்படி வளைகுடா நாட்டில் வேலைக்கு சென்றார்கள், பிழைத்தார்கள்?

*கேள்வி:
#எனக்கு_வடக்கில்தான்வேலை.
#இந்திதெரியாமநான்எவ்வளவுகஷ்டப்பட்டேன்_தெரியுமா?*

பதில்:
நீங்கள் மட்டுமா கஷ்டப்பட்டு இப்பாே கத்துக்கிட்டீங்க? உங்களை மாதிரி நிறைய பேர் இருக்காங்க. ஆனா ஒட்டுமொத்த தமிழர்களோடு ஒப்பிடும் போது உங்களோட சதவிகிதம் ஒன்றுமேயில்லை. நீங்க இந்தி தெரியாம  கஷ்டப்படக்கூடாது என்பதற்காக  நாங்க எல்லாருமே இந்தி தெரிஞ்சிக்க  கஷ்டப்பட முடியாது.

*கேள்வி:
#எல்லாம்சரிதான். #ஆனாலும்எனக்குஇந்தி_படிக்கனும்?*

பதில்:
தாராளமாக படிங்க. உங்க வீட்டுக்கு அருகே உள்ள தனியார் பள்ளியில் இந்தி படிங்க. நாங்க யாரும் உங்களை தடுக்கவே இல்லை. உங்க ஒருவருக்காக ஊரே இந்தி படிக்க முடியாது என்று தான் சொல்லுறோம்.

*கேள்வி:
#அப்படிஎன்னங்கஉங்களுக்குஇந்திமேலகாண்டு? #அவ்வளவுதமிழ்வெறியா_உங்களுக்கு?*

பதில்:
நாங்க இந்திக்கு எதிரியில்லை.
கட்டாய இந்திக்கு மட்டுமே எதிரி.

எந்த மொழியை நான் படிக்க வேண்டும் என்பது என்னுடைய சொந்த தேர்வு. அது வெறியல்ல. மாறாக அரசே நான் இந்த மொழியை படித்தாக வேண்டும் என்று எங்களை கட்டாயப்படுத்துவது தான் வெறிச்செயல்.

சாகு மகராஜ்தான் 1920ல் பாபாசாகேப் அம்பேத்கரை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தினார்

50% சதவீத இட ஒதுக்கீடு பார்ப்பனரல்லாதாருக்கு சாகு மகராஜ் அறிவித்ததும், பார்ப்பானுங்க சேர்ந்து சாகுவை கொல்வது என முடிவெடுத்தார்கள்.

தீர்த்தத்திலே விஷம் கலந்து கொடுத்தாங்க. ஆனா பார்ப்பான் கை நடுக்கத்தால் தூர கொட்டிய சாகு, தன் உயிர் எந்நேரத்திலும் பறிக்கபடலாம் என உணர்ந்து, மக்களுக்கான இன்னும் அநேக திட்டங்களை போடணும் என்ற பரந்த எண்ணத்தில், தொழில் மட்டும் வைசியனும், பார்ப்பானும்தான் செய்யணுமா? அதை சூத்திர, பஞ்சமனுக்கும் கொடுத்தால் என்ன? என யோசித்து ''கங்காராம் காம்ளே'' என்ற சூத்திரரை ஹோட்டல் நடத்த சொன்னார்.

சாப்பிட யாரும் வரலை என்றதால் ஒரு சட்டம் இயற்றினார். ''எனது அரசாங்கத்தில் உங்களுக்கு ஏதேனும் வேலை ஆக வேண்டுமெனில், இந்த காம்ளே ஹோட்டலில் சாப்பிட்ட பில்லில் அவர் கையெழுத்திட்டிருந்தால் உடனே ஆகும்''. இப்ப ஹோட்டலில் நீண்ட கியூ. எல்லாம் விற்பனையானது.

இது எதை காட்டுது என்றால் ''அதிகாரம் நம் கையிலிருந்தால் சட்டத்திற்குட்பட்டு எதையும் செய்ய வைக்கலாம்'' என்பது.

இந்த பிற்படுத்தபட்ட சாகு மகராஜ்தான் 1920ல் பாபாசாகேப் அம்பேத்கரை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இதை இதற்கு முன் எப்பவாவது கேள்விபட்டிருக்கிறீர்களா?

நமக்கும் நமது எதிரிக்கும் உள்ள வேறுபாடு

நமக்கும் நமது எதிரிக்கும் உள்ள வேறுபாடு

எந்த ஆர்.எஸ்.எஸ் காரணும் சாவர்க்கர் சிறந்த தலைவரா கோல்வால்கர் சிறந்த தலைவரா என்று தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வதில்லை...

இங்கு பெரியாரையும் அம்பேத்காரையும் பிரபாகரனையும் ஒன்றாக சேர்த்து வைத்து போராடாமல் நமக்குள்ளயே மோதிக்கொள்ளும் நிலையை ஆரியம் உருவாக்கி வருகிறது நாமும் அதை உணராமல் ஆரியRss சூழ்சிக்கு பலியாகி வருகிறோம்.

ராமர் கோவில் கட்டுவோம் என்று முழக்கங்கள் நீளும் போது, சைவ அய்யர்கள் யாரும் ஏன் சிவனுக்கு கோவில் கட்டக்கூடாதா என்று கேட்பதில்லை...

வாஜ்பாய் தான் சிறந்த தலைவர், மோடி அவரளவுக்கு இல்லை என்று வரலாற்றை கூறி நிகழ்கால நபர்களை பொது தளத்தில் தாங்களே மட்டம் தட்டிக்கொள்வதில்லை...

இயக்க அரசியல் தான் பலம் வாய்ந்தது, இல்லை இல்லை வாக்கு அரசியல் தான் வலிமைவாய்ந்தது, என்று வெளிப்படையாக எந்த ஆர்.எஸ்.எஸ் பாஜக நபர்களும் சண்டையிட்டு கொள்வதில்லை...

இப்படி சொல்லிகிட்டே போகலாம் மேற்கோள் காட்டிய எடுத்துக்காடுகளுடன், நாம் பயணிக்கும் சித்தந்தையும்,இயக்கத்தையும் பொருத்தி ஒப்பிட்டு பாருங்கள், புரியும்...

அனைத்தையும் விட முக்கியமானது,,, நாம் ஒருவரை ஒருவர் போலி திராவிடம், போலி பெரியாரிஸ்ட், சூத்திர திராவிடம், நீல சங்கீகள் ,புலிதிஷ்ட். டம்ளர் பாய்ஸ் நாய் டம்ளர் என்று நம்மை சுற்றி இருப்பவர்களேயே மாறி மாறி மணல் வீசி நம் இன உறவுகள் முகத்திலேயே அடித்துக்கொள்கிறோம்

அவர்களில் யாரும்.. நீ போலி பார்பனியவாதி, போலி ஹிந்துத்துவாவாதி, Fake Bjp persons ..... என்று யாரையுமே corner செய்து அடிப்பது இல்லை...

 சிந்திப்போம் ஒன்றுபடுவோம் தனித்தமிழ்நாட்டை வென்றெடுப்போம்

ஏன் #பார்ப்பானியத்தை விமர்சனம் செய்து கொண்டே இருக்க வேண்டும்?

ஏன் #பார்ப்பானியத்தை விமர்சனம் செய்து கொண்டே இருக்க வேண்டும்?

பொதுவாக #பார்ப்பனர்களிடம் போய் "நீங்கள் தயிர் சாப்பிட கூடாது, பருப்பு கடைய கூடாது, எங்கள் கோவிலுக்கு வர கூடாது, இதை செய், அதை செய், இதுதான் விதி, பூணுல் போட கூடாது" என்று நாம் யாரும் சொல்வதில்லை. #நாத்திககொள்கையுடையவர்கள் கூட "எங்கோ மூலையில் அவன் நம்பிக்கைக்கு ஏதாவது பண்ணிட்டு போகட்டும்ன்னு" விட்டுட்டு தான் நகர்வார்கள்.

ஆனால் பார்ப்பனீயம் இதற்கு #நேர்எதிர்மறையானது, தனக்கு சம்மந்தமே இல்லாத இடத்தில் கூட, தனக்கு சம்மந்தப்படாத விவகாரத்தில் கூட, தான் உருவாக்கிய #சட்டதிட்டங்கள் நிலைத்து இருக்க வேண்டுமென, #சமூகத்தை தன் #சித்தாந்தத்தால் சீண்டிக்கொண்டே இருக்கும்.

நாம் அதிகபட்சமாக என்ன செய்வோம் என்றால், "நீ சொல்ற மாதிரியெல்லாம் என்னால இருக்க முடியாது, நீ எவன்டா சொல்றது" என்று அவர்கள் நிறுவுகிற விஷயங்களை காலில் மிதித்து துச்சமாக பதில் விமர்சனம் செய்வோம், கேலி செய்வோம்.

அவ்வளவுதான், இதை கூட தாங்கிக்கொள்ள முடியாமல் குதிப்பவர்கள் தான் #பார்ப்பனவாதிகள். அதாவது அவர்கள் செய்யும் #அநீதியை நீங்கள் பதிலுக்கு கூட செய்ய தேவையில்லை, அவர்களது சித்தாந்தத்தை துவம்சம் செய்ய பேசுவதையே பெரும் குடைச்சலாக கருதுபவர்கள்.

பொதுச்சபையில் அப்படியான அவர்களது நம்பிக்கை சார் விவகாரங்களை கிளறி விட்டால் ரத்தக் கொதிப்பு வந்து காட்டு கத்தல் கத்துவார்கள், நாம் அப்படி எதுவும் சொல்லியிருக்க மாட்டோம், அவர்கள் பேசின விவகாரத்திற்கு சம்மட்டி அடி கொடுத்து பதில் கேள்வி கேட்டிருப்போம் அவ்வளவு தான்.

அதிகார இடத்தில் நீங்கள் இருந்தால் உங்களிடம் நற்பெயர் வாங்கி எப்படியும் காரியத்தை சாதித்து கொள்வார்கள் அதுவேற விஷயம், ஆனால் அவ்விடத்தில் இல்லாமல் நீங்கள் சாமானியனாய், #சமமாய் பேசுவதையே விரும்பாத அளவு ஆதிக்கபுத்தி ஊறியது தான் #பார்ப்பனீயம்.

பட்டும் படாமல் விமர்சனம் செய்வோமென்றால், இதில் மட்டுமல்ல, வேறு எதிலும் அவர்களை நீங்கள் வெறுப்பேற்றி பார்க்க முடியாது.

சாமிகளின் பிறப்பும் இறப்பும்

சாமிகளின் பிறப்பும் இறப்பும்
–ச.தமிழ்ச்செல்வன்

2011இல் வெளிவந்த குழந்தைகளுக்காக  எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல்.ஆனால் பெரியவர்களும் படிக்க வேண்டிய புத்தகம்.பல ஊர்களில் பல அறிஞர்களுடன் கலந்துரையாடி அந்த ஊர்களிலுள்ள சாமிகள் வந்த கதையை எளிமையாக விவரிக்கிறார்.சாமிகளில் ஏழைச்சாமி பணக்காரச்சாமி,கீழ்சாதி சாமி,மேல் சாதி சாமி என்று இருப்பதை எளிமையாக விளக்குகிறார். ஏழைச் சாமிக்கு வெறும் மண்ணால் ஆன பீடம் மட்டுமே உண்டு. பணக்கார சாமிக்கு கோபுரங்கள் உண்டு. ஏழைச்சாமிக்கு என்று எந்த வேதப் புத்தகமும் கிடையாது. பணக்கார சாமிகளுக்கு பைபிள்,பகவத் கீதை,குரான் என பல மறை நூல்கள் உண்டு. இரண்டிற்கு படைக்கப்படும் உணவுகள் வேறு வேறு. ஏழைச்சாமியை வழிபட தனியான பூசாரி கிடையாது. அவர் வேறு தொழில் செய்துகொண்டிருப்பார்.பொங்கல் அன்று மட்டும்தான் பூசாரி வேலையை செய்வார்.பணக்கார சாமியை வழிபட ஒரு புரோகிதர்,பாதிரியார் அல்லது முல்லா இருப்பார்.இதைப்போல ஏழு வேறுபாடுகளை சுட்டிக் காட்டுகிறார்.

கடவுள் வழிபாடு தோன்றிய விதத்தை இப்படி விளக்குகிறார்.

மேலிருந்து வந்த மின்னலினால் காடு தீப்பற்றி எரிந்தது.மேலிருந்து வந்த மழையினால் அது அணைந்தது.சூரியனும் நிலவும் மேலேதான் இருக்கிறது. ஆகவே நல்லதும் கெட்டதும் எல்லாமே மேலே இருந்துதான் வருகிறது என்று அன்றைய மனிதன் நினைத்தான்.
தங்களிடமிருந்த ஆடு மாடுகளை தூக்கிப் போட்டு மிருகங்களை சமாதானப்படுத்தியதுபோல் மேலிருந்த அந்த சக்தியை சமாதானப்படுத்த ஆடு மாடுகளை நெருப்பில் போட்டு எரித்தார்கள். அந்தப் புகை மேலே போவதால் மேலே உள்ள சக்தி சமாதானமாகி நல்லது செய்யும் என்று நினைத்தார்கள்.

காலப்போக்கில் கோபுர சாமிகளை பெருந்தெய்வங்கள் என்றும் மக்கள் உண்டாக்கின சாமிகளை சிறு தெய்வங்கள் என்றும் சொல்லி சிறுமைப் படுத்தினார்கள்.உண்மையில் மக்கள் உண்டாகிய சாமிகள் சிறு தெய்வங்களா?இல்லை.அவைதான் முதலில் உண்டான சாமிகள்.நம் ஊர்களுக்கு முதலில் வந்த சாமிகள்.சீனியர் சாமிகள்.இந்த சிவபெருமான்,கிருஷ்ணர்,புத்தர்,மகாவீரர் எல்லோரும் ஜூனியர் சாமிகள்.பின்னால் வெளியிலிருந்து நம்ம ஊருக்குள் மன்னர்கள் உதவியோடு வந்து சேர்ந்தவர்கள்தான்.

இந்தப் பகுதிகள் எல்லாம் புத்தகத்தின் இறுதியில் வருகின்றன. அதுதான் சிறப்பு.அதாவது குறிப்பான விசயங்களை சொல்லிப் பின் அதிலிருந்து பொதுவான முடிவுகளுக்கு வருகிறார்.

புத்தகத்திலிருந்து சில பகுதிகள்.

மூதேவி என்று ஒரு பெண்சாமி உண்டு.திருப்பரங்குன்றத்திலும் நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் என்கிற ஊரிலும் அந்த சாமிக்கு கோவில் உண்டு.வண்ணார் சமூகம் தவிர வேறு யாரும் அதை வணங்குவது இல்லை.

தமிழ்நாட்டில் முன்னர் ‘கொற்றவை’என்றொரு பெண் தெய்வம் இருந்தது.
ஊரெல்லாம் அதற்காகக் கோவில்கள் இருந்தன. ...இப்போது கொற்றவையை யாரும் கும்பிடுவதில்லை....சாமிகள் இருக்கும் இடம் ரெண்டுதானே.ஒன்று கோவில்.இன்னொன்று மனித மனம்.இந்த இரண்டு இடங்களிலும் இல்லாமல் போன சாமிகளைத்தான் நாம் ‘செத்துப்போன சாமி’கள் என்கிறோம்.

சக்கிலியர் சாதியில் பிறந்த மதுரைவீரன் உண்மையிலேயே பெரிய வீரன்.கள்ளர்களை அடக்கினான்.....அவன் மீது மதுரை மன்னரின் மகள் பொம்மி காதல் கொண்டாள்.....ஐ லவ் யூ சொன்னாள்......இரண்டுபேரும் கல்யாணம் செய்துகொண்டார்கள். ஒரு கீழ்சாதிக்காரன் போம்மியைக்கல்யானம செய்து விட்டானே என்று மேல்சாதிக்காரர்களுக்கு கோபம்.அவனைப் பிடித்துக் கொலை செய்துவிட்டார்கள்.மக்களால் மன்னனை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியவில்லை.மதுரைவீரனை சாமியாக்கி கும்பிடத் தொடங்கினார்கள்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் முத்தாலம்மன்.ஐப்பசி மாதம்  முதல் நாள் போய் சிலை செய்து எடுத்து வரவேண்டும்.ஒரு நாள் பகல் முழுவதும் கோவிலில் வைத்து அவளைக் கும்பிடலாம்.அன்று இரவே அச்சிலையை எடுத்து வந்து குளத்தங்கரையில் வைத்து கட்டையால் அடித்து நொறுக்கிவிட வேண்டும்.

மாலையம்மன் என்கிற சாமி கொசப்பட்டியில் இருக்கிறது.அந்தப் பெண்ணின் கணவர் இறந்தபோது நெருப்பு கொடுக்காததால் அந்த ஊர் அழிந்துவிட்டதாக மக்கள் சொல்கிறார்கள்.உண்மையில் மன்பானையைப் பயன்படுத்தும் பழக்கம் நாட்டில் குறைந்துவிட்டதால் மண்பானை செய்யும் தொழிலும் அழிந்துவிட்டது.அந்த ஊரை விட்டு மக்கள் வேறு தொழில் தேடி வேறு வேறு ஊர்களுக்கு போய்விட்டார்கள்.ஊர் அப்படியே சிதைந்து போயிருக்கும்.என்றாலும் மக்கள் மாலையம்மன் கதையோடு ஊர் அழிவை பின்னால் சேர்த்துவிட்டார்கள்.

மலட்டம்மா கோவில் விருதுநகர் மாவட்டம் கொம்புச் சித்தம்பட்டிக்கு வடக்கே பொம்மைக் கோட்டைக்கு தெற்கே அமைந்துள்ளது. குழந்தை இல்லாத ஒரு பெண் தன கணவர் இறந்ததற்கு கொள்ளிவைக்க தீ கேட்கிறாள்.அதை அந்த ஊர் மக்கள் தர மறுக்கிறார்கள்.வேறு ஊரில் போய் தீ வாங்கி கணவனுக்கு தீ மூட்டிவிட்டு தானும் இறந்து போகிறாள்.செய்த குற்றத்தின் சுமை மனதை அழுத்துகிறது.பரிகாரம் என்று மந்திரம் ஓதி யாகங்கள் செய்ய வசதி இல்லாத ஏழை மக்கள் சாமியாக்கி கும்பிட்டு பாவத்தைக் கழுவிக்கொள்ள நினைக்கிறார்கள். அவள் பெயர் தெரியாததால் மலத்டம்மா என்று அழைத்து கும்பிடுகிறார்கள்.

...... கும்பிடாத சாமி என்றும் ஒருவகை உண்டு.திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் இப்படிச் சாமிகள் உண்டு.அது என்னவெனில் காட்டுக்குப் போகும்போது இடி விழுந்து(அதாவது மின்னல் வெட்டி)செத்தவர்களுக்கு அவர் செத்த இடத்திலேயே கல்நாட்டு ‘சாமி’ என்று வைத்து விடுவது.ஆனால் அதை யாரும் கும்பிடுவது கிடையாது.கேட்டால் அது ‘கும்பிடாத சாமி’ அல்லவா என்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தில் கிறித்துவ மதத்தில் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிள்ளைமார்களுக்கு தனித்தனி வாசல் கொண்ட சர்ச் தோற்றத்தில் டவுசர் போல் இருந்ததால்  ‘டவுசர் சர்ச்’ என்று அழைக்கப்பட்டதாம்.பின்னாளில் வந்த பாதிரியார் ஒருவர் எச்சாதியில் பிறந்தாலும் எல்லோரும் ஏசுவின் பிள்ளைகள்தான் .ஏசுவுக்கு சாதி கிடையாது என்று வாதிட்டுப் பார்த்தார். மூன்று வழிகள் உள்ள அந்த சர்ச்சை இடித்து கட்ட வேண்டும் என்றார்.எங்க ஊரில் சாதி உண்டப்பா என்று மேல்சாதியினர் அடம்பிடித்தனர். கோவிலை இடிக்கக்கூடாது என்று கோர்ட்டில் வழக்கு போட்டனர்.அருட் தந்தை கவுசானல் வாதாடி வாதாடி சர்ச்சை இடிக்கவைத்து எல்லோருக்கும் பொதுவான சர்ச் கட்டப்பட்டது.

மதுரை மாவட்டம் அழகர்கோவில் செல்லும் வழியில் உள்ளது தாதக்கிணறு.அங்கு ஐஸ் காளியம்மன் கோவில் இருக்கிறது.(சுவாரசியமான கதை.புத்தகத்தில் படித்துப் பாருங்கள்.)

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்குள் இருக்கும் இஸ்மாயில் ஷா பள்ளிவாசல் கதையின் முடிவில் இவ்வாறு சொல்கிறார்.
‘இந்துவானாலும் முஸ்லிம் ஆனாலும் உயிர்கள் மனித உயிர்கள் அல்லவா?மதம் ஒரு சட்டை போலத்தானே?’

இறுதிப் பகுதியில் பெரியாரையும் மார்க்சையும் மேற்கோள் காட்டி இவ்வாறு முடிக்கிறார்.

இந்த உலகம் ,நம் நாடு,நம் அரசு, நம் சக மனிதர்கள் இரக்கமுள்ளவர்களாக மாறிவிட்டால் கடவுளை மக்கள் தேட மாட்டார்கள்.நம்மிடமே கருணை பெருகிவிட்டால் கருணையின் வடிவத்தை சிலை வடிவில் ஏன் தேடப் போகிறோம்?ஏக்கப் பெருமூச்சு விடும்படியாக இருக்கும் இன்றைய ஏழைகளுக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும் ஒரு சமூகம் அமைந்துவிட்டால் கடவுள் தேவைப்பட மாட்டார்.

அண்ணாவை அதிர வைத்த என் .எஸ். கிருஷ்ணன்

(அண்ணாவை அதிர வைத்த என் .எஸ். கிருஷ்ணன் )தமிழ்நாட்டில் 1957ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது அறிஞர் அண்ணா போட்டியிடும் தொகுதிகள் தேர்தல் பிரச்சார மேடையில் பேசினார் என். எஸ். கிருஷ்ணன் அறிஞர் அண்ணா மேடையில் அமர்ந்து இருந்தார் அண்ணாவை எதிர்த்து ஒரு மருத்துவர் வேட்பாளராக நின்றார் என். எஸ் .கிருஷ்ணன் பேசும்போது   "இந்த தொகுதியில் அண்ணாவை எதிர்த்து ஒரு மருத்துவர் வேட்பாளராக நிற்கிறார் மக்களுக்காக அல்லும் பகலும் மக்களின் ஆரோக்கியத்திற்காக பாடுபட்டு வருகிறார் கை ராசிக்காரர்" என புகழ்ந்து பேசுவதை கண்ட அண்ணா திடுக்கிட்டார் தொடர்ந்து என். எஸ் .கிருஷ்ணன்  "இப்பேர்ப்பட்ட மருத்துவ சேவை மக்களுக்கு கிடைக்க வேண்டும் ஆகவே மறந்தும்கூட மருத்துவருக்கு வாக்களித்து விட்டால் உங்களுக்கு யார் வைத்தியம் பார்ப்பார்கள்? சமூக சமுதாய தொண்டுகளை பூர்த்தி செய்து வரும் அறிஞர் அண்ணாவுக்கு வாக்களியுங்கள்" என்று பேசினார் கலைவாணர் என். எஸ் .கிருஷ்ணன் .(தொகுப்பு. அ .தமிழ் க்குமரன் திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஈரோடு )

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் அமைதியாக இருக்கலாம் அல்லவா

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் அமைதியாக இருக்கலாம் அல்லவா, ஏன் கடவுளையும் மதத்தையும் தொடர்ந்து  விமர்சிக்க வேண்டும் அவமானப்படுத்த வேண்டும் ? எங்கள் நம்பிக்கைகளில் ஏன் குறுக்கிட வேண்டும் ?

இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் சிலர் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். பக்தியை லாபமாக, வாக்காக, அதிகாரமாக  மாற்ற நினைக்கிறவர்களுக்குத்தான் இது எப்போதும் தலையாயப் பிரச்சனை.

கடவுளை பக்தியை வழிபாடுகளை,
உங்கள் நம்பிக்கையை கேள்வி கேட்பதென்பது பகுத்தறிவு என்கிற திமிரிலோ, தனித்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவோ, உங்களை சங்கடபடுத்தி அதன்வழி குரூர மகிழ்ச்சி கொள்ளவோ இல்லை. பகுத்தறிவின் அடிப்படையே மானுட நலனும் சமத்துவமும்தான்.

உங்கள் பக்தி எல்லோருக்குமானதாகவும்  அன்பை, சமத்துவத்தை பரப்புவதாகவும் இருக்குமானால் அது குறித்து கவலையில்லை. ஆனால் மதங்கள் அப்படித்தான் இருக்கின்றனவா?

* பெரும்பாலான ஆண்களும், ஒட்டுமொத்த பெண்களும் கடவுள் இருக்கும் கருவறைக்கு போக தகுதியில்லாததாக உங்களை ஒரு மதம் சொல்லுமானால், அதை ஏனென்று கேள்வி கேட்க உரிமை இருக்கிறது. ஏனெனில் அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை இல்லை.

* உலகின் சரிபாதி இருக்கும் பெண்களை ஆலய குருக்களாகவோ, ஒரு பெண்ணை போப்பாண்டவராகவோ தேர்ந்தெடுக்க பெண்களுக்கு தகுதியில்லை என்று ஒரு மதம் சொல்லுமானால் அதை ஏனென்று கேள்வி கேட்க உரிமை இருக்கிறது. ஏனெனில் அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை இல்லை.

* ஒற்றை வார்த்தையில் திருமணத்தை முறிக்க கூடிய அதிகாரத்தை ஆணுக்கு கொடுக்கும் பாகுபாடு, பெண்களை தங்களின் விருப்ப வாழ்கையை தேர்ந்தெடுக்க உரிமை தராத ஒரு கட்டமைப்பு, கடவுளை தொழும் மசூதிகள், தர்காக்களில் எல்லாம் பெண்களை அனுமதிக்க முடியாது, நீங்கள் தனியே தொழுது கொள்ளுங்கள என்றெல்லாம் ஒரு மதம் சொல்லுமானால் அதை ஏன் என்று கேள்வி கேட்க உரிமை இருக்கிறது. ஏனெனில் அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை இல்லை.

அன்பையும்  சமத்துவத்தையும்தான் மதங்கள் போதிக்கிறதென்றால், வரலாற்றின் சிலுவைப்போர்கள் தொடங்கி, இஸ்லாமிய அடிப்படைவாத தற்போதைய வன்முறைகள், இந்தியாவில் நடைபெற்று வரும்
இந்து – இஸ்லாம், இந்து - கிறிஸ்தவ வன்முறைகள் வரை தொடர்வதற்கு கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களா காரணம்?

மூடநம்பிக்கைகளில் சிக்க வைத்து மனிதனை உருத் தெரியாமல் அழித்துக் கொண்டிருக்கும் கருவி - மதம் தவிர்த்த வேறு ஏதேனும் ஒன்றை உங்களால் சொல்ல முடியுமா?

மதம், பக்தி, நம்பிக்கை இதெல்லாம் உங்கள் தனிப்பட்ட விருப்பமாக இருக்குமானால், அது நான்கு சுவர்களுக்குள் இருக்குமானால் அதில் தலையிட நிச்சயம் யாருக்கும் உரிமையில்லை.ஆனால் பிரம்மாண்ட மேடைகள் போட்டு  முடமான கால்களை கடவுள் நடக்க வைக்கிறார் என பிரசங்கம் என்றபெயரில் மூளைச் சலவை  செய்வதும், கடவுளின் சிலைகளை ஊர் முழுக்க சுற்றிசுற்றி வலம் வருவதன் வாயிலாக பெருமைப்படுவதும், மார்க்க விளக்க கூட்டங்கள் மாவட்டம் தோறும் நடத்துவதும்,
பள்ளி, கல்லூரி ஒன்று விடாமல் எல்லா கடவுளர்களுக்கும் வாழ்த்து பாடச் சொல்லி கட்டாயப்படுத்துவதும்,

அடிப்படைவசதிகளான கழிப்பிடங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள்  எல்லாவற்றையும் விட வழிபாட்டுதலங்கள் எண்ணிக்கையில் அதிகம் இருக்குமானால் அது தனிப்பட்ட பிரச்சனை மட்டுமில்லை. ஏனெனில் இதெல்லாம் நான்கு சுவர்களுக்குள் இல்லை; நாம் வாழும் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

"இல்லை இல்லை இவையெல்லாம் எங்கள் உரிமை, நாங்கள் பின்பற்றியே தீருவோம் என்று சொன்னால், தவறுகளை உங்கள் நலனுக்காக சுட்டிக் காட்டுவதும் உரிமையென்றே சொல்ல வேண்டி வரும்”

"இல்லை இல்லை மதம் அப்படி எல்லாம் சொல்லவில்லை நீங்கள் தவறாகப்புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்வீர்களானால்,
வன்முறைகளில் ரத்தம் பார்க்க ஆயுதம் ஏந்திய -ஏந்தும் மதவாதிகளுக்கு, கருத்து சொன்னதற்காக உயிர் பறிக்கும் அடிப்படைவாதிகளுக்கு முதலில் ஒழுங்காக மதத்தைப் பற்றி  புரியவையுங்கள். அதற்குப் பிறகு கடவுள் மறுப்பாளர்கள் பற்றி கேள்வி எழுப்பலாம்.

ஒரே ஒரு கேள்வி மீதமிருக்கிறது.

சகமனிதனைக் கொன்று தீர்ப்பதன் மூலமும் அவனுடைய அன்றாட வாழ்வை சிதைப்பதன் மூலமும்தான் உங்கள் கடவுள்களை மகிழ்விக்க முடியும் என்றால் அவரென்ன கடவுளா இல்லை கொள்ளைக் கூட்டத் தலைவனா ?

அதனால்தான் அவர் "தந்தை" பெரியார்! ❤

கேள்வி: "பெரியாரை ஏன் 'தந்தை' என்கிறோம்?"

பதில்:

எத்தனையோ காரணங்கள் உண்டு. ஒரேயொரு உதாரணத்தை மட்டும் சொல்லி விளக்க முயலுகிறேன்.

நான் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு ஆங்கிலத் தொடரில் ஒரு கறுப்பினத் தந்தை தனது மகளிடம், "You have to be twice as good as them, to get half of what they have" என்பார்.

'அவர்கள் பெறும் வெற்றியில் பாதியைப் பெறுவதற்கே, நீ அவர்களைவிட இரண்டு மடங்கு அதிகம் உழைத்தாகவேண்டும்' என்பதுதான் அதன் பொருள்.

நம் சமூகத்தில் பார்ப்பன வீட்டுப் பிள்ளைகளுக்கு தலைமுறை தலைமுறையாகக் கிடைத்துவரும் கல்வி, வசதி வாய்ப்புகள், சிபாரிசுகள் ஆகியவற்றைக் கடந்துதான் நம் வீட்டுப் பிள்ளைகள் முன்னேறியாகவேண்டும் என்கிற நிலைதானே இன்னும் நீடிக்கிறது?

திராவிட இயக்கமும், அதன் தலைவர்களும் 'பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய கல்வி' என்பதைப் பொருத்தவரை எவ்வித சமரசமுமின்றி இவ்வளவு தீவிரமாக இயங்குவதற்குக் காரணம் அதுதான்!

இந்நிலையில் 1953ஆம் ஆண்டு 'புதியக் கல்வி திட்டம்' என்றப் போர்வையில் 'மாணவர்கள் அரைநாள் மட்டும் பள்ளிக்கு வந்து படித்தால் போதும், மீதியுள்ள அரைநாளில் அவரவர் குடும்பத் தொழிலைக் கற்றுக்கொள்ளலாம்' என்று முதல்வர் ராஜாஜி தேன் தடவிய வார்த்தைகளில் நமக்கு நஞ்சைக் கொடுத்தப்போது, அதை 'குலக்கல்வித் திட்டம்' என்று அடையாளங்கண்டுக் கடுமையாக எதிர்த்தது பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம்தான் என்பது நாம் அறிந்த செய்தி.

'குலக்கல்வி திட்டம்' என்பது பார்ப்பனர்களின் வர்ணாசிரம சூழ்ச்சி என்பதற்காக மட்டும் அதை எதிர்த்திருந்தால் அவர் வெறும் 'தலைவர்' பெரியாராக மட்டும் இருந்திருப்பார்.  ஆனால் அவரிடம் இன்னொருக் காரணமும் இருந்தது.

"உங்கள் வீட்டுப் பார்ப்பன பிள்ளைகளுக்கு அரைநாள் விடுப்பு என்பது ஒரு பெரிய விசயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் எங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு அப்படியல்ல. அவர்கள் 2000ஆண்டுகளாகக் கல்வி கற்கும் உரிமையே மறுக்கப்பட்டவர்கள். அதை ஓரளவேனும் ஈடுசெய்யவேண்டுமானால் அவர்கள் நாள்தோறும் அல்லும் பகலும் சிரமப்பட்டுப் படித்தால்தான் முடியும்" என்று கர்ஜித்தவர் பெரியார்.

இப்போது அந்தக் கறுப்பினத் தந்தை தன் மகளுக்கு சொன்ன அறிவுரையை மீண்டும் படித்துப் பாருங்கள். அதே அறிவுரையைத்தான் பெரியார் நம் ஒட்டுமொத்த இனத்திற்கும் சொன்னார். அந்தப் பேரன்பும், அக்கறையும், 'நாம் இழந்தவை அனைத்தும் நம் பிள்ளைகளுக்கு கிடைத்துவிடவேண்டும்' என்கிற பறிதவிப்பும் ஒரு தந்தைக்கே உரிய குணாதிசயங்கள்.

அதனால்தான் அவர் "தந்தை" பெரியார்! ❤

சிதம்பரம் கோவிலில் பிள்ளையார் சிலை தும்பிக்கையை மற்றொரு பெண்சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு...

"சிதம்பரம் கோவிலில் யானை முகங் கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து அதன் தும்பிக்கையை மற்றொரு பெண்சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு இக்காட்சியை யாவருக்கும் தெரியும்படியாகச் செய்திருப்பதுடன் இந்தக் காட்சிக்கு தினமும் முறைப்படி பூசையும் நடந்து வருகின்றது. பல ஆண் பெண் பக்தர்கள் அதை தரிசித்து கும்பிட்டும் வருகின்றார்கள்.

சில தேர்களிலும் ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண்குறியில் புகுத்தி அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டிருப்பது போலவும் அந்தப் பெண் இரண்டு காலையும் அகட்டிக் கொண்டு அந்தரத்தில் நிற்பது போலவும் செதுக்கப்பட்டிருக்கின்றது. இவைகளைப் பார்த்து யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவைகளுக்கு ஒரு கதையும் புராணமும் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அதாவது ஏதோ ஒரு அசுரனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும் அந்த யுத்தத்தில் தோன்றிய அசுரர்களை யெல்லாம் அந்த கடவுள் கொன்று கொண்டே வந்தும், தன்னால் முடியாத அளவு சூரர்கள் ஒரு அசுர ஸ்திரீயின் பெண் குறியில் இருந்து ஈசல் புற்றிலிருந்து ஈசல் புறப்படுவது போல் பல லட்சக்கணக்காய் வந்து கொண்டே இருந்ததாகவும், இதை அறிந்த அந்தக் கடவுள் பிள்ளையார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும் உடனே பிள்ளையாரானவர்  ஈசல் புற்றிலிருந்து கரடி ஈசல்களை உறிஞ்சுவதுபோல் தனது தும்பிக்கையை அந்த ஸ்திரீயின் பெண் குறிக்குள் விட்டு அங்கிருந்த அசுரர்களையெல்லாம் ஒரே உறிஞ்சாக உறிஞ்சி விட்டதாகச் சொல்லப்படு கின்றது. எனவே இம்மாதிரியான காட்டுமிராண்டித் தன்மையான ஆபாசங் களுக்கு கண்டவைகளையெல்லாம் கடவுள் என்று சொல்லும் "ஆஸ்திகர்கள்" என்ன பதில் சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம்.

இவற்றையெல்லாம் பற்றி எந்த ஆஸ்திக சிகாமணி களுக்கும் ஒரு சிறிதும் கவலையில்லாவிட்டாலும் பிள்ளையார் சதுர்த்தி என்கின்ற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத்திரம் வாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் குறைவில்லை என்று சொல்வதோடு இந்த ஆபாசங் களையெல்லாம் ஒழிக்க முயற்சிக்காமல் சும்மா இருந்து கொண்டும், இவ்வாபாசங்களை பிரசங்கம் பண்ணிக் கொண்டும் இருந்துவிட்டு இதை எடுத்துச் சொல்லுபவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லி விடுவதாலேயே எந்தக் கடவுளையும் எந்தச் சமயத் தையும் காப்பாற்றிவிட முடியாதென்றே சொல்லுவோம்"

- பெரியார்
('குடி அரசு' - 26.08.1928)

கல்வி சேவைக்கு பரிசு..மனித மலம்வீச்சு..!

இந்திய வரலாறு மறந்த முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே பிறந்த ஜனவரி 3-ம் நாளே ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட வேண்டும்.

 கல்வியின் இருண்ட  காலம்…!

இந்தியாவின் கடந்த காலத்தைப் புரட்டிப் பார்த்தால், அதுவும் கல்வி தொடர்பான தகவல்களைப்  படித்தால்  கொஞசம் அச்சமாகவும் வேதனையைத் தருவதாகவும்  உள்ளது. 1800 களில் பார்ப்பனருக்கு மட்டுமே கல்வி கொடுக்கப்பட்டது. அப்போது ஆண்ட பிரிட்டிஷ்காரர்களும், உயர்தட்டு மக்களுக்கே கல்வி கொடுக்க திட்டமிட்டனர். இந்த காலகட்டத்தில் இந்திய பெண்களின், சமூகத்தை உய்விக்கப் பிறந்தவர்கள்தான் ஜோதிராவ் கோவிந்த புலே மற்றும் காண்டோஜி சாவித்திரி பாய் புலே என்ற தம்பதியர் இருவரும்.

சாவித்ரிபாய் புலே  யார் ?

இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண் போராளி என்றுதான் கூறவேண்டும். ஏனெனில்,முறையாக ஆசிரியர் தினம் என்று சாவித்திரிபாய் பிறந்த தினத்தைத்தான் கொண்டாட வேண்டும். ஆனால், சமூக சீர் திருத்தவாதியான சாவித்திரிபாய் பற்றி எந்த பாட புத்தகத்திலும் இல்லை. இது ஒரு வரலாற்றுப் பிழையே.  சாவித்திரிபாய் புலே ,  1831, ஜனவரி மாதம் 3ம் நாள், மகாராஷ்ட்டிர மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில், நைகோன் (Naigon ) என்ற கிராமத்தில் பணக்கார விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை, கான்டோஜி நைவஸ்  பட்டேல், அன்னை: லட்சுமி பாய். தந்தை கிராமத்து தலைவராக இருந்தவர்.

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். ..!

இந்திய வரலாற்றில் பெண்கல்விக்காக  முதல் பள்ளி அமைத்தவர், சாதியத்தை தீயிட்டுக் கொளுத்திய, பெண்ணுரிமைக்காக  குரல் கொடுத்த சமூகப் போராளியும் கூட. அரசியல் கவிதை எழுதிய  புரடசிப்  பெண்ணும் ஆவார்.. மராட்டிய மண்ணின் முதல் பெண் கவிஞரும் இவரே. 19ம் நூற்றான்டின் அனைத்து சமூகத்தடைகளையும் உடைத்து தூக்கி எறிந்தவர். டெல்லி, பல்கலைக்கழக நிறுவனத்தின், உலகளாவிய ஆய்வுகள் பற்றி ( Global Studies at University Institute in New Delhi,India.) ஆராய்ந்து பணிபுரியும் .பேரா. டாம் உல்ப் (Tom Ulf) என்பவர் , ஆயிகோஸ் என்ற உலக பத்திரிகையில் ( published in ‘Oikos Worldviews Journal’ (2008), சாவித்திரிபாய் பற்றி உயர்வாக குறிப்பிட்டுள்ளார். அவர் செக்கோஸ்லோவாகியா நாட்டின் ஜான் கொமேனியஸ் (Jan Comenius (1592-1670), என்பவர் ஐரோப்பாவின், நவீன  கல்வியின் தந்தை என்றும்,. சாவித்திரிபாய் இந்தியாவின் நவீன கல்வி மற்றும் பெண் கல்வியின் அன்னை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இருவரையும் உலக அளவில் கல்விக்காக ஒப்பிட்டு எழுதி இருக்கிறார் என்றால், சாவித்திரி என்ற பெண்மை கல்விக்கு அளித்துள்ள சாதனையை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.

சமூக சீர்திருத்த வாதி..!

சாவித்திரியின் பெற்றோர் அக்கால வழக்கப்படி,. அவருக்கு 9  வயதாகும்போது,1840ல்.குழந்தை திருமணம் செய்து வைத்தனர். அந்த ஊருக்கு அருகில் உள்ள 13 வயது நிரம்பிய ஜோதிராவ் புலே என்னும் பாலகனுக்கு சாவித்திரியை   மணம் முடித்தனர். சாவித்திரிபாய் புலேவுக்கு ஜோதிராவ் புலே  4 ஆண்டுகள் கல்வி சொல்லிக் கொடுத்தார். சாவித்திரிபாய்  கற்றுத்தேர்ந்ததும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும்,கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கும்  மறுக்கப்பட்ட கல்வியை, ஜோதிராவ் மற்றும் சாவித்திரி இருவரும்  பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் கல்வி  தருவோம் என்று கூறினர், 1847 ல் முதல் பள்ளியை தாழ்த்தப்பட்ட மற்றும் விதவைப் பெண்களுக்காக  துவங்கினார்கள். பின்னர் 1848,ல், இந்திய வரலாற்றிலேயே, முதன் முறையாக,  முதல் பெண் குழந்தைகளுக்கான பள்ளியை, புனேயிலுள்ள பீடே வாடு என்ற  இடத்தில், 9 பெண் குழந்தைகளுடன், தொடங்கினர்.  அதில் சாவித்திரிபாய்தான் பள்ளியில் பொறுப்பு ஏற்று, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக ஆனார்.  பின் 1849ல், ஒரு பள்ளியை ஜோதிராவ் மற்றும் சாவித்திரிபாய் துவங்கினார்கள். அதுவே பெரியவர்களுக்கான  பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், என அனைத்து சாதியினருக்கும் என உருவாக்கப்பட்ட  முதல் பள்ளி, இந்தியாவிலேயே இதுதான்.

கல்வி சேவைக்கு பரிசு..மனித மலம்வீச்சு..!

சாவித்த்ரி பாய் தாழ்த்தப்பட்டவர்களுக்கு, விதவைகளுக்கு கல்வி போதித்ததால், இந்து சனாதனவாதிகளுக்கு கோபம் வந்தது. சாவித்திரி பாய் பள்ளி செல்லும்போது, இந்த ரவுடிக் கும்பல் அவர்மேல், கற்கள், சாணம், மனித ,மலம் எல்லாவற்றையும் வீசி எறிந்தது கலாட்டா செய்தனர்.  சாவித்திரிபாய்  வீட்டுக்கு வந்து கணவர் ஜோதிராவ் புலேவிடம் , மனித மலம் வீசியது பற்றி சொன்ன போது , ஜோதிராவ் ” கல்வி ஒன்றுதான் மனிதர்களின் வாழ்க்கையைப்  பு ரட்டிப்போடும்  வல்லமை படைத்தது.: கல்வி மட்டுமே சமூக மாற்றத்தை செய்ய முடியும். ஆனால், இந்த சமூகத்தில், நாம் இருவரும் இவர்களை எதிர்க்க முடியாது. எனவே நீ பள்ளி செல்லும்போது பையில் வேறொரு  புடவை எடுத்து சென்று, அங்கு குளித்து உடை மாற்றிக் கொள்”  என்றார். இதுதான் பெண்கல்வியை முனைப்பாக கொண்டு சென்ற முதல் பெண் ஆசிரியருக்கு, இந்தியாவில் பரம்பரியத்தைக் காப்பாற்றும் கும்பலால்  கிடைத்த பரிசு என்றே நாம் கொள்ள வேண்டும்.

அந்த கால பிரிட்டிஷ் அரசின் பாராட்டு

சாவித்திரி பாய் புலே, ஜோதிராவ் புலே இருவரும் மகாராஷ்டிரத்தில் 9 இடங்களில் அனைத்து சாதியினருக்கும்,  விதவைகளுக்கும், தவறான உற்வின் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் என எல்லோருக்கும் கல்வி கொடுக்க  பள்ளியை   துவங்கினர். இதில் 150 பெண்களும், 100 ஆண்களும் படித்தனர். இந்த பள்ளிகள் அரசு  பள்ளியைவிட சிறப்பாக செயல்பட்டன. இதனால்,    1852, நவம்பர் 14ல், பிரிட்டிஷ் அரசால் இவர்கள் இருவரும் சிறந்த ஆசிரியர்கள்  என்ற பாராட்டும்பரிசும்  பெற்றனர்.

சமூக நீதி போராளி..

தவித்த வாய்க்கு தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது என்று அன்று சமூகம் ஒதுக்கிய  மக்கள் தீண்டத்தகாதவர் என கூறப்பட்டவர்கள் இவர்களுக்கு பொதுக் கிணற்றிலிருந்து நீர் தர ஊர் மக்களும்  மறுத்தனர்.அப்படி  தண்ணீர் கொடுக்க மறுத்த கொடுமையை எண்ணி தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தார்  சாவித்திரிபாய் புலே. . பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய நடைமுறை இந்தியாவில் அப்போது மோசமாக பின்பற்றப்பட்டது. ; அந்த மழிக்கும் பணியை செய்யும் நாவிதர் மக்களை வைத்தே,சாவித்திரிபாய் இனி விதவைப் பெண்களுக்கு, மழிக்கும் பணியை  நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்க செய்தார் போராட்டம்  நடத்தினார்.   விதவை மறுமணங்களை தொடர்ந்து நடத்திக்காட்டினார்.

மராட்டிய முதல் பெண் கவிஞர்& பெண்ணிய  காப்பாளர் 

சாவித்திரிபாய் நல்ல கவிஞரும் கூட. மராத்தியத்தின் நவீன கவிதைப்போக்கு இவரில் இருந்தே துவங்குகிறது. இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி என்று பல்வேறு தளங்களில் அவரின் கவிதைகள் பயணித்தன1854களில்.  அவரது கவிதைத் தொகுப்பான “காவிய மலர்கள்” பிரிட்டிஷ் அரசின் அங்கீகாரத்துடன் வெளியானது. 1852ல்  இவர் தொடங்கி வைத்த ‘மஹிளா சேவா மண்டல்’ (பெண்கள் சேவை மையம்) மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டது.1853ம் ஜனவரி 28ம் நாள், குழந்தையிலேயே விதவையானவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை காப்பாற்ற மருத்துவ மனை அமைத்தார்.

மக்கள் பணியில். .இறுதி வாழ்க்கை..

1876-1878 பஞ்ச காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் போக்குவதற்குத் தமது கணவரோடு கடுமையாக உழைத்ததோடு மக்களின் துயரங்கள் தீர்வதற்கான  பல்வேறு  ஆலோசனைகளையும் முன்வைத்தார் அவர். மகாராஷ்ட்ராவை ப்ளேக் நோய் தாக்கிய பொழுது ஆங்கிலேய அரசு நோய்த்தொற்று பரவாமல் இருக்க கடுமையான ப்ளேக் சட்டங்களை போட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மற்றவர்களை பிரித்து வைத்தது. மருத்துவம் படித்து ராணுவத்தில் வேலைபார்த்து கொண்டிருந்த  இவரின் மகன் யஸ்வந்த் தென் ஆப்பிரிகாவில் இருந்து விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். அவரை ஹடாஸ்பூரில் ஊருக்கு வெளியே மருத்துவமனை துவங்க வைத்தார் சாவித்திரி பாய்.

உயிர் காக்க  உயிர் துறந்த தியாகி..

சாவித்திரி பாய் தானே பல பேரை தூக்கிக்கொண்டு வந்து, தனது  அறுபத்தி ஆறு வயதில், மனித  நேயம் காக்க மனித உயிர்கள்  காக்கப்போராடினார். அப்படி பத்து வயது சிறுவன் பாண்டுரங் பாபாஜியை காக்க தூக்கிக்கொண்டு வந்த பொழுது நோய் தொற்று ஏற்பட்டு,1897, மார்ச் 10 ம் நாள்  மரணமடைந்தார்  சாவித்திரி பாய் புலே. அந்த சிறுவன் பிழைத்துக்கொண்டான்.  பிளேக் நோய் பரவியபோது ஓடோடி மக்களுக்கு உதவி செய்தார். கடைசியாக ஒருவரை தூக்கிக் கொண்டு போய் மருத்துவ மனையில் சேர்த்துவிட்டு, மருத்துவ மனை வாசலிலேயே மயங்கி விழுந்துவிட்டார். சாவித்திரி பாய் மருத்துவமனையில் சேர்த்தவர் பிழைத்துவிட்டார். அவர் யார் தெரியுமா ? பெண் கல்விக்காக பள்ளிக்கூடம் துவக்கியோர்களை எதிர்த்து கலவரம் செய்த கங்காராம். கங்காராம் பிழைத்த பின்னர், தான் சாவித்திரி பாயால் காப்பாற்றபட்டது தெரிந்து, அவரிடம் நன்றி சொல்ல ஓடினார். அங்கே வெள்ளைத்  துணியால் போர்த்தப் பட்டிருந்த   சாவித்திரி பாயின் உடலைத் துணியை விலக்கிக்  காட்டினார்கள். பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு உயிர் துறந்த சாவித்திரி பாயின் உடலைப் பார்த்து, பெண்கல்விக்கு எதிரான கங்காராம் தலையில் அடித்துக்கொண்டு அழுது புலம்பினார்.  கதறினார்.

மத்திய அரசு, சாவித்திப்பாய்; புலேவுக்கு பெருமை செய்யும் விதமாக,1998,ம் ஆண்டு, அவரின் படம் போட்ட அஞ்சல் தலை வெளியிட்டது. மராட்டிய அரசு  ஜனவரி 3ம் நாளை பெண்கள் தினமாக  அனுசரிக்கிறது. அவரின் பெயரில் ஓர் பல்கலைக் கழகமும் இருக்கிறது.

வாழ்வே சேவையாகிப்போன சாவித்த்ரிபாய் புலே யின்

கவிதை கீழே :

போ கல்வி கல்
சொந்தக்காலில் நில், சோராமல் உழை-

ஞானத்தை,செல்வதைச் சேர்
அறிவில்லாமல் போனால் அனைத்தும் அழியும்
ஞானமில்லாமல் விலங்காகி போவோம் நாம்
இன்னமும் சோம்பலுற்று அமர்ந்திருக்காதே, போ,

போய் கல்வி பெறுக !
ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட நம்மவர்களின் துயரங்கள் துடைத்திடுக
கற்க ஒரு பொன்னான வாய்ப்பு இது
கற்று, ஜாதியின் சங்கிலிகளை அறுத்திடுக..

ஏன் சமற்கிருதம் தமிழோடு சண்டை போடுகிறது?

வரலாறு இல்லாதவன் வரலாறு உள்ளவனிடம் மெதுவாக நட்பை ஏற்படுத்திகொள்வான்

பின்னர் உறவாடிகொண்டே மெல்ல மெல்ல சிதைக்கும் வேலையை சன்னமாக செய்வான்

சிறிது காலம் கழித்து நாம் இருவரது மொழியும் சமம் என்பான்

இறுதியில் என் மொழிதான் உன் மொழியைவிட உயர்ந்தது பழைமையானது என்பான்

இந்தியாவில் எவ்வளவோ பழைமையான மொழிகள் இருக்க

ஏன் சமற்கிருதம் தமிழோடு சண்டை போடுகிறது?

ஏன் விடாமல் தமிழை துரத்திகொண்டேயிருக்கிறது?

இந்த கேள்வியில் உள்ளது அதற்க்கான விடை

கொம்பு சீவிய இந்துத்துவா அமைப்புகள் வரமாட்டார்கள்

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை இசுலாமியர்கள் வசிக்கும் தெரு வழியாக தான் எடுத்து செல்லவேண்டும் என்று அப்பகுதி இளைஞர்களை கொம்பு சீவி விட்ட இந்துத்துவா அமைப்புகள், தங்கள் பகுதிகளில் தங்களுக்கு எதிராக கோஷம் போட்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் பெரும் மத கலவரம் உண்டாகும் என்று அமைதியாக ஒதுங்கிக்கொண்டனர் அப்பகுதி இசுலாமியர்கள்,

ஊர்வலம் இசுலாமிய தெருக்களில் இசுலாமிய எதிர்ப்பு கோஷத்துடன் கடந்துக்கொண்டு இருக்கும் போதே கடும் மழை ஆரம்பித்தது, ஊர்வலத்தை ஏற்பாடு செய்த இளைஞர்களில் சிலர் தெருக்களில் இருந்த மின் கம்பிகள் சிலை மீது படாமல் இருக்க கம்புகளை வைத்து தூக்கிவிட்ட தருணத்தில் சுமார் ஐந்து நபர்களுக்கு மின்சாரம் மிக மோசமாக தாக்கிவிட்டது,

இதை அறிந்த இசுலாமியர்கள் பதரிப்போய் ஓடிவந்து மின்சாரம் தாக்கியவர்களை தங்களின் வாகனங்களில் ஏற்றிக்கொண்டு உடனே மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்,

யாருக்கு எதிராக ஊர்வலம் சென்றோமோ சென்ற இடத்தில் நமக்கு ஒரு பாதிப்பு என்றால் அங்கு உடனே வருவது நம்மை கொம்பு சீவிய இந்துத்துவா அமைப்புகள் வரமாட்டார்கள், இசுலாமியர்கள் தான் வருவார்கள் என்பதை குஜராத் மக்கள் உணர்ந்து இருப்பார்கள்,

மின்சாரம் தாக்கியவர்களின் இருவர் இறந்துவிட்டனர் மற்றவர்கள் கவலைகிடம்,!

80 ஆண்டுகளுக்கு முன் பனகல் அரசர் போட்ட உத்தரவு

80 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் சமஸ்கிருத மாநாடு நடைபெற்றது.

அன்றைய சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசர் பி. ராமராய நிங்கர் மாநாட்டின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

பார்ப்பனரல்லதோர் இயக்கமாக உருவெடுத்த நீதிக்கட்சியின் சார்பில் முதல்வரானவர் அவர்.

மாநாட்டுக்கு அவரை அழைத்தப் பார்ப்பனர்கள் திட்டமிட்டு தமிழில் பேசுவதை தவிர்க்கிறார்கள்.

 முதலவருக்கு சமஸ்கிருதம் தெரியாதே என்ற எண்ணத்தில், பனகல் அரசரைப் பற்றி கேலியும் கிண்டலுமாக சமஸ்கிருத சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.

 எல்லோரும் கை கொட்டிச் சிரிக்கிறார்கள். அமைதியாக அமர்ந்திருக்கிறார் பனகல் அரசர்.

‘நிறைவாக இப்போது முதல்வர் பேசுவார் என்று அறிவிக்கப்படுகிறது’ பனகல் அரசர் தனது பேச்சை ஆரம்பிக்கிறார். தமிழில் அல்ல… தெளிவான சமஸ்கிருதத்தில்.

அதுவரை பேசியவர்களைவிடச் சிறப்பாக, அவர்களுக்கு பதில் சொல்வது போல், இலக்கியத் தரம் வாய்ந்த சொற்பொழிவை சமஸ்கிருதத்தில் ஆற்றி முடிக்கிறார். முதல்வர் சமஸ்கிருதத்தில் எம்.ஏ., படித்தவர் என்ற தகவல் அவர்களுக்கு தெரியாததால் , அவமானப்படுத்த நினைத்தவர்கள், அவமானப்பட்டு போகிறார்கள்.

அந்த மாநாடு முடிந்த சில நாட்களுக்குள் ஓர் உத்தரவை பிறப்பிக்கிறார் முதல்வர். அதுவரை மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில் பாடமாக இருந்த சமஸ்கிருதத்தை நீக்கும் உத்தரவு அது.

‘ஆங்கிலத்தில் படிக்கப்போகும் மருத்துவக் கல்விக்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன சம்பந்தம்?’ என்ற கேள்வி முதல்வருக்கும் எழுந்திருக்கிறது.

‘சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டும்தான் அதாவது பார்ப்பனர்கள் மட்டும்தான் மருத்துவக் கல்வி படிக்கவேண்டும். மற்றவர்கள் படிக்கக்கூடாது ’ என்ற ‘பரந்த’ உணர்வே அதற்கு காரணம் என்பதை உணர்ந்தார் முதல்வர்.

அதனால் சமஸ்கிருதத்தை நுழைவுத் தேர்வில் இருந்து நீக்குகிறார்.

முதல்வரின் முடிவுக்கு எதிர்ப்பு வருகிறது.
மருத்துவத் துறையில் தகுதி, திறமை போய்விடும் என்கிற கூப்பாடு எழுகிறது.
அதை புறம் தள்ளுகிறார் முதல்வர்.

அதன் பிறகு பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், முஸ்லீம்கள், கிறிஸ்த்துவர்கள் என்று நிறையபேர் மருத்துவக் கல்வி படிக்கிறார்கள்.

இன்று இந்தியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவர்களை கொண்ட ஊர் என்ற பெயரை பெற்றிருக்கிறது சென்னை.

வெளிநாட்டினர் கூட இங்கு வந்து இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு போகும் நிலைமை உருவாகியிருக்கிறது.

80 ஆண்டுகளுக்கு முன் பனகல் அரசர் போட்ட உத்தரவு – செரியன், சாலமன் விக்டர் போன்ற உலகப் புகழ் பெற்ற டாக்டர்கள் உருவாவதற்கு காரணமாக இருக்கிறது என்றால் அது அதிகபட்சமான வார்த்தையாகாது

கலவரம், ஊர்வலம், கடல் தண்ணீர், என்றால் காணாமல் போகும் பார்ப்பன அம்பிகள்...???

கலவரம், ஊர்வலம், கடல் தண்ணீர், என்றால்
காணாமல் போகும் பார்ப்பன அம்பிகள்...???



சூத்திர அடிமை :
ஏன் ஐயரே புள்ளையார் ஊர்வலம் போறோம்.
புள்ளையார கடல்ல கரைக்க போறோம்.
உங்க புள்ளாண்டான அனுப்ப கூடாதா?

ஐயர் :
அடேய் அபிஷ்ட்டு.
அவனுக்கு கோச்சிங் கிளாஸ் இருக்கு.
அவன் நீட்டா நீட்டுக்கு படிக்கணும்.
ஐஐடி எக்ஸாமுக்கு படிக்கணும்.
ஊர்வலம் போய் கலாட்டா பண்ண தான்
உங்க புள்ளைங்க இருக்காங்களே.
விநாயகரை கடல்ல கரைக்க போய்
அலை அடிச்சிண்டு போய்ட்டா என்னடா பண்றது?
அபிஷ்ட்டு அபிஷ்ட்டு.
கலவரம் பண்ண,
ஜெயிலுக்குப்போக போக
தண்ணீல விழுந்து சாகத்தான்
சூத்ரா உங்கள வச்சி இருக்கோம்.
நீ என்னடானா என் புள்ளாண்டான கூப்பிட்ற.

மாமி :
ஏன்னா நீங்க மைண்ட் வாய்ஸ்னு நெனைச்சிண்டு
சத்தமா பேசுறேள்.

ஐயர் : அச்சச்சோ ஆமாம் ஆமாம்.
(சூத்திர அடிமையை பார்த்து)
டேய் அம்பி விநாயகருக்கு ஊர்வலம்
போனா புண்ணியம்டா.
போ போ புண்ணியத்தை தேடிக்கோ.....

(ஐயரின் மைண்ட் வாய்ஸ்: புண்ணியம் என்ற இந்த ஒரு வார்த்தையை வைத்துதான் உங்களைப் போன்ற முட்டாள்களை ஏமாற்றிண்டு இருக்கோம்டா அம்பி...)

மகாத்மா ஜோதிராவ் பூலே பிறந்த தினமே உண்மையான ஆசிரியர் தினம்

உண்மைகள் கசக்கத்தான் செய்யும் இருந்தாலும் தெரிந்து கொள்வதில் பிழையில்லை ஆசிரியர் தினம் குறித்த வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு செய்தியை இந்த நாளில் உங்களுக்கு நினைவு படுத்த கடமைப்பட்டுள்ளேன்.

உண்மையில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டியநாள்......

ஏப்ரல் 21 தான்,

என்பதை மனசாட்சியோடு வரலாற்றை நோக்குபவர்களுக்குப் புரியம். இந்திய வரலாறு பெரும்பகுதி துரோகத்தாலும் இருட்டடிப்பாலும் உருவானது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். எழுதப்பட்டுவிட்டதாலேயே ஒரு வரலாறை கட்டி அழவேண்டிய அவசியம் நமக்கு தலைவலியாய்தான் நாளும் பின்தொடரும்.... எழுதப்படாத வரலாற்றில் புதைந்துள்ள உண்மைகளை நாம் எப்போது கைப்பற்றி நடக்கிறோமோ அப்போதுதான் உண்மையான சமூக, பொருளாதார ஜனநாயகத்தை நம்மால் படைக்கமுடியும்.......

ஆம்! அப்படி இருட்டிப்புக்கும் துரோகத்திற்கும் ஆளானவர்கள்தான் மகாத்மா ஜோதிராவ் பூலே-சாவித்ரிபாய் பூலே ஆவார்கள். நான் இதை எழுதுவதற்கு முக்கியமான காரணம், செப்டம்பர் 5 சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசாரியர் தினமாக கொண்டாடுப்படுவதின் வரலாற்று பிழைகளைச் சுட்டிக்காட்டாவே.....

பூலே பிறந்தது 1827 ஏப் 21 , இராதாகிருஷ்ணன் பிறந்தது 1888 செப் 5. பூலே பிறந்தது சரியாக 60 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ராதாகிருஷ்ணன் பிறக்கிறார். பூலே, ராதாகிருஷ்ணன் பிறந்த இரண்டாமாண்டே அதாவது 1890 லேயே இறந்துவிடுகிறார். அப்படியெனில் இராதாகிருஷ்ணன் பிறப்புக்கு முன்பே தன் வாழ்நாள் பணியை புரட்சிகரமாக செய்து முடித்துவிட்டார்.....

சத்திரிய மாலி வகுப்பில் பிறந்து 12 வயதில் சாவித்ரிபாயை மணந்தார்.
1848-ல் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு தனிப்பள்ளி தொடங்கினார். பிறகு,
1851-ல் அனைத்து சாதி பெண்களுக்குமான பள்ளி என மாற்றினார். பல சவால்களுக்கிடையிலும், ஆதிக்க சாதி வெறியர்களுக்கிடையிலும் ஆசிரியர் கிடைக்காமல் தனது மனைவியை ஆசிரியராக பயிற்றுவித்து சமுகப் புரட்சியை செய்தார். இதையெல்லாம் பாராட்டும் விதமாக 1888-ல் பூனாவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் ஜோதிராவ் பூலேவுக்கு "மகாத்மா" என்ற பட்டம் வழங்கப்பட்டது. காந்திக்கு மாகாத்மா என்பது கொடுக்கப்பட்ட பட்டமல்ல சூட்டிக்கொண்ட பட்டம் என்பது நாம் பிற்காலங்களில் அறிந்து கொண்ட உண்மை....

அதுமட்டுமல்ல பூலே விதவை மறுமணம், குழந்தை திருமணம், சாதி ஒழிப்பு, மத எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண் அடிமை ஒழிப்பு என பல தளங்களில் இந்திய முற்போக்காளர்களுக்கெல்லாம் தந்தையாக இருந்துள்ளார்.....

இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் பூலே பிறந்து 60 ஆண்டுகளுக்கு பின்னால் பிறந்த ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக இந்திய அரசாங்கம் கொண்டாடுவது வரலாற்று இருட்டடிப்புதான் என்று சொல்லத்தோன்றுகிறது......

ராதாகிருஷ்ணன் பேராசிரியராக இருந்தார், தத்துவவாதியாக இருந்தார், துணைவேந்தராக இருந்தார், பல்கலைக் கழக ஆணையத்தின் தலைவராக இருந்தார்,  வேதநூல்களின் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்,  ஜனதிபதியாக இருந்தார் என்பதால்தான் அவர் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக இந்திய அரசாங்கம் கொண்டாடுகிறது என்றால் அதைவிட சிறப்புக்குறியவர் மாகாத்மா பூலே ஆவார் என்பதை மேற்கண்ட சான்றுகள் வழி மறுத்துவிட முடியுமா?.....

காரல் மார்க்ஸ் சொல்வதைப்போல உலகை ஆராய்வதல்ல வரலாற்றின் பணி.... உலகை மாற்றுவது.... என்பார். அந்த கூற்றை மெய்ப்பித்துக்காட்டியவர் மகாத்மா பூலே.....

வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு அதுவும் பெண்களுக்கு
1848 -லேய பள்ளி தொடங்கி தன்மனைவியையும் ஆசிரியராக்கி சமுகமாற்றத்திற்கு வித்திட்டவர். இவர் பிறந்தநாள்தானே ஆசிரியர் தினமாக கொண்டாடியிருக்கவேண்டும்...... அவர் கல்விப்பணி மட்டுமா செய்தார்..... தீண்டாமை ஒழிப்பு, பெண் அடிமை, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, மத எதிர்ப்பு,  சாமி சடங்குகள்,மத  கலாச்சார சுரண்டல் எதிர்ப்பு  என பல தளங்களில் போராடியுமுள்ளார். இவருடைய பிறந்த நாள்தானே ஆசிரியர் தினமாக கொண்டாடியிருக்க வேண்டும்.....

இந்து மாதத்தின் தந்திரமே அனைத்தையும் இருட்டடிப்பு செய்து விழாவாகவும் சடங்காகவும் சட்டமாகவும் மாற்றுவதுதான். இதைத்தான் மனுவும் செய்யச் சொல்கிறது....

வராலாறை மாற்ற நினைக்கும் நாமும் சூழ்ச்சிக்கு இரையாகி போலியான ஆசிரியர் தினத்தைக் கொண்டாடலாமா? பாபாசாகேப் Dr.அம்பேத்கர் அவர்கள் ஏற்றுக்கொண்ட முன்னோடிகளில் ஜோதிராவ் பூலே முக்கியமானவர். அம்பேத்கரிய இயக்கம் என்பது பூலேஅவர்கள் இயக்கத்தின் தொடர்ச்சியே. பாபாசாகேப் அவர்களின் கூற்றுப்படி "கல்வியின் நோக்கம் தன்னை அறிந்துகொள்வதோடு மட்டுமில்லாமல் உலகத்தை மாற்ற வேண்டும். இங்கே உலகம் என்பது ஜாதிய அடிமைமுறை ஏற்றத்தாழ்வை மாற்ற வேண்டும் என்பதை தெள்ளத்தெளிவாக கூறியுள்ளார். இப்படி அறியாமையை அகற்றிய மகாத்மா ஜோதிராவ் பூலே அவர்களே உண்மையான கல்வித்தந்தை அவருடைய பிறந்த தினமே உண்மையான ஆசிரியர் தினம். ஜெய் பீம்

பார்ப்பன நிர்மலா vs சூத்திர தமிழிசை

தமிழிசையை உருவகேலி செய்ததில் முக்கிய பங்கு சங்கிகளின் நாளிதழான தின மலத்தையே சேரும்.. எவ்வளவு வன்மமும் குரூர புத்தியும் இருந்தால் இப்படி செய்திருப்பார்கள் இந்த சங்கிகள்..

இந்த படத்தை விட சிறந்த எடுத்துக்காட்டு வேறென்ன வேண்டும்..

நிர்மலா - Defense earlier and Finance now

தமிழிசை - Governor post (everyone knows its dummy)

என்னவோ தமிழிசை இத்தனை வருசம் (நிர்மலாவை விட சீனியர்) இருந்ததுக்கு powerful போஸ்ட் குடுத்த மாதிரி இந்த சங்கிங்க பில்டப் கொடுக்குறாங்க..

Defense/ Finance ஏன் கொடுக்கல?

அத கூட விடுங்கப்பா.. ஏன் மருத்துவம் படிச்ச தமிழிசைக்கு Health minister பதவியாவது கொடுத்திருக்கலாம்ல? ஏன் கொடுக்கல?

சூத்திரர்களை எங்க வைக்கனும்னு அவங்களுக்கு தெரியும்.. நம்ம ஆட்களுக்குத் தான் அது புரியாம முட்டு கொடுத்திட்னு திர்றாய்ங்க..

அன்னை சாவித்திரிபா பூலே அவர்கள்தான் ஆசிரியர்கள் தினத்தில் நினைவு கூறத்தக்கவர் இராதாகிருஷ்ணன் அல்ல

சிறந்த கவிஞரும், சமுக சீர்திருத்தவாதியும், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் அன்னை சாவித்திரிபா பூலே அவர்கள்தான் ஆசிரியர்கள் தினத்தில் நினைவு கூறத்தக்கவரே ஒழிய இராதாகிருஷ்ணன் அவர்களல்ல..!

இவர் 1831 இல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.அக்கால வழக்கப்படி இவர் தன் 9 ஆம் வயதில் ஜோதிராவ் புலேவை( 13 வயது) 1840இல் மணந்தார். ஜோதிராவ் புலே தனது துணைவி சாவித்திரிபாயை சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.  யஸ்வந்த் ராவ் என்ற குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தனர்.

ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட சமுகத்து பெண்களுக்குக் கல்வி புகட்டினார். பின்னர் 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார். மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப்பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது. பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார்.

விதவைப் பெண்களின் தலையை மொட்டையடிப்பதைக் கண்டித்து நாவிதர்களை திரட்டி, 1863 ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டத்தினை சாவித்திரி பாய் நடத்தினார். 1870ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால் அனாதைகளான 52 குழந்தைகளுக்கு உறைவிடப் பள்ளியை நடத்தினார்.

1897 இல் ஏற்பட்ட பிளேக்கு தொற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிப்பதற்காக, சாவித்திரிபாய் புலேயும் அவரது வளர்ப்பு மகனும் மருத்துவருமான யஷ்வந்தும் ஒரு மருத்துவமனையை அமைத்தனர். புனேக்கு அருகிலுள்ள சாசனே மலா (ஹடாப்சர்) என்ற ஊருக்கு வெளியே தொற்றுநோய் பாதிப்புக்கு உட்படாத இடத்தில் அம்மருத்துவமனை இருந்தது. சாவித்திரிபாய் நோயால் பாதிக்கப்பட்டவர்களை அம்மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறச் செய்தார். இப்பணியில் அவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டு மார்ச் 10, 1897 இல் இறந்தார்.

1892 ஆம் ஆண்டு சாவித்ரிபாய் கல்வியின் தேவை, சாதி எதிர்ப்பு ஆகிய கருத்துகளை வலியுறுத்தும் கவிதைகளான 'கவிதை மலர்கள்' என்ற நூலை வெளியிட்டார்கள்.

சாவித்திரிபாய் புலே நினைவு அஞ்சற்தலை
பெண் சமூக சீர்திருத்தவாதிகளைச் சிறப்பிக்கும் வகையில், மகாராஷ்டிர அரசு சாவித்திரிபாய் புலேயில் பெயரில் ஒரு விருதினை ஏற்படுத்தியது.

2015 இல் புனே பல்கலைக்கழகத்தின் பெயர் சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது.
மார்ச் 10, 1998 அன்று, இந்திய அஞ்சல் துறை இவர் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிட்டு பெருமைத் தேடிக் கொண்டது.

ஆசிரியர் தினத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்காக தன் வாழ்வை அர்பணித்த அன்னையைப் இந்நாளில் போற்றுவோம்..!

Tuesday, September 03, 2019

யானைத் தலை எல்லாம்.. விநாயகர் அல்ல!

Not an Amazing Fact! It's an ugly fact:)

விநாயகர் உலகெங்கும் 'அருள்' பாலிக்கவில்லை!
யானைத் தலை எல்லாம்.. விநாயகரும் அல்ல!



இது பெளத்த மத (வஜ்ராயணம்) Kangiten தேவன்.
கேவலமான அசுர குணம் கொண்டவன்!
இவனை அடக்க, இதே போல் பெண்ணை அனுப்பி
'அணைப்பு நிலையில்' இருவரையும் வைத்துள்ளனர்!


'Unru Yin' Temple is NOT for Vinayaka!
It is a sub-temple of Sennyū-ji (Mortuary)
Built by Japanese Emperor Gokogon for Aristocrat Deaths

சுடுகாட்டுக் கோயிலா விநாயகர் கோயில்?:)

ஆசையிருக்கலாம்..
அத்தனையும் விநாயகராய் ஜோடிக்க!
ஆனால் முதலில் வாசிக்கணும்!:)

Japan's Kangiten Deity is offered Beef & Raddish
விநாயகருக்கு நாமும் Beef படைக்கலாமே?:)

அறிக: Kangiten= Vajrayana Buddhism

இது விநாயகரும் அல்ல!
நர மாமிசம் தின்று, ஊருக்கே தடங்கல் ஏற்படுத்திய அசுரனை, ஒரு பெண்ணால் கட்டி வைத்து, அமைதி ஆக்கிய ஜப்பானியக் கதை!

Kangiten தேவன், பெண்ணை அணைத்துக் கொண்டு நிற்பதால்..
கூச்சம் கருதி, பெரும்பாலும் பொதுவெளியில் சிலை வைப்பதில்லை, ஜப்பானில்!

தாந்த்ரீகம் மட்டுமே!
தடங்கல் செய்யும் அசுரனை வழிபட்டால்
தடங்கல் செய்யாமல் விட்டுவிடுவான்!

இப்போது சொல்க: உங்கள் விநாயகன்= அசுரனா?:))

அறிக: உலகம் முழுதும் 'யானைத் தலை' கதைகள் உண்டு! அவை விநாயகர் அல்ல!
பச்சைப் புடைவை கட்டினவரெல்லாம் பங்கஜம் மாமி எ. அறிவு நலம் பயக்காது!:)

Vajrayana Buddhism= மாய மந்திரம்
அதைப் புத்தர் உருவாக்கவில்லை!
Kangiten= விநாயகர் அல்ல!
சாந்தி செய்யப்படும் அசுரன்!

விநாயகரை, மனம் உருக வழிபடுங்கள்!
அது பக்தி!

ஆனால் 'விநாயகப் பெருமை' பேசுகிறேன் என்று
அறியாமலேயே, பொய் வலைக்குள் விழுந்து
விநாயகரை, நீங்களே இழிவுசெய்து விடாதீர்கள்!

*கம்பன் பாடிய விநாயகன்= எள்ளல்!
*ஜப்பான் Kagiten= அசுரன்!
தேவையா இதெல்லாம் விநாயகருக்கு?:)