Wednesday, September 04, 2019

நமக்கும் நமது எதிரிக்கும் உள்ள வேறுபாடு

நமக்கும் நமது எதிரிக்கும் உள்ள வேறுபாடு

எந்த ஆர்.எஸ்.எஸ் காரணும் சாவர்க்கர் சிறந்த தலைவரா கோல்வால்கர் சிறந்த தலைவரா என்று தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வதில்லை...

இங்கு பெரியாரையும் அம்பேத்காரையும் பிரபாகரனையும் ஒன்றாக சேர்த்து வைத்து போராடாமல் நமக்குள்ளயே மோதிக்கொள்ளும் நிலையை ஆரியம் உருவாக்கி வருகிறது நாமும் அதை உணராமல் ஆரியRss சூழ்சிக்கு பலியாகி வருகிறோம்.

ராமர் கோவில் கட்டுவோம் என்று முழக்கங்கள் நீளும் போது, சைவ அய்யர்கள் யாரும் ஏன் சிவனுக்கு கோவில் கட்டக்கூடாதா என்று கேட்பதில்லை...

வாஜ்பாய் தான் சிறந்த தலைவர், மோடி அவரளவுக்கு இல்லை என்று வரலாற்றை கூறி நிகழ்கால நபர்களை பொது தளத்தில் தாங்களே மட்டம் தட்டிக்கொள்வதில்லை...

இயக்க அரசியல் தான் பலம் வாய்ந்தது, இல்லை இல்லை வாக்கு அரசியல் தான் வலிமைவாய்ந்தது, என்று வெளிப்படையாக எந்த ஆர்.எஸ்.எஸ் பாஜக நபர்களும் சண்டையிட்டு கொள்வதில்லை...

இப்படி சொல்லிகிட்டே போகலாம் மேற்கோள் காட்டிய எடுத்துக்காடுகளுடன், நாம் பயணிக்கும் சித்தந்தையும்,இயக்கத்தையும் பொருத்தி ஒப்பிட்டு பாருங்கள், புரியும்...

அனைத்தையும் விட முக்கியமானது,,, நாம் ஒருவரை ஒருவர் போலி திராவிடம், போலி பெரியாரிஸ்ட், சூத்திர திராவிடம், நீல சங்கீகள் ,புலிதிஷ்ட். டம்ளர் பாய்ஸ் நாய் டம்ளர் என்று நம்மை சுற்றி இருப்பவர்களேயே மாறி மாறி மணல் வீசி நம் இன உறவுகள் முகத்திலேயே அடித்துக்கொள்கிறோம்

அவர்களில் யாரும்.. நீ போலி பார்பனியவாதி, போலி ஹிந்துத்துவாவாதி, Fake Bjp persons ..... என்று யாரையுமே corner செய்து அடிப்பது இல்லை...

 சிந்திப்போம் ஒன்றுபடுவோம் தனித்தமிழ்நாட்டை வென்றெடுப்போம்

No comments: