Wednesday, September 04, 2019

அரசியலில் மதத்தைக் கலக்கு..! சிறுபான்மையினரை விலக்கு..!! தன் சந்ததியைப் பெருக்கு..!!!

அரசியலில் மதத்தைக் கலக்கு..!          சிறுபான்மையினரை விலக்கு..!!
தன் சந்ததியைப் பெருக்கு..!!!
----------------------------------------

தர்மபிரபு படத்தில் ஒரு காட்சி வரும்..!? சிவபெருமானின் கோபத்திலிருந்து தப்பிக்கவும், தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளவும் எமனுக்கு ஒரு பார்ப்பனன் ஆலோசனை சொல்லுவான்.

அந்த ஆலோசனையாக பட்டது,  உனக்கு அழகான அக்கா, தங்கை யாராவது இருந்தால் சிவனிடம் அனுப்பி தாஜா செய்து,  உன் பதவியைக் காப்பாற்றிக் கொள் என்பதுபோல் அந்தக் காட்சி இருக்கும்.

இப்படி ஒரு உண்மைச் சம்பவம் வரலாற்றிலும் நடைபெற்றிருக்கிறது மேற்கொண்டு படியுங்கள் புரியும்..!

அதுவரை, அரசர்களை உருவாக்கும்,  ஆட்டிப்படைக்கும் ராஜ குருக்களாக மட்டுமே பதவி வகித்து வந்த ஆரிய பார்ப்பனர்களுக்கு பௌத்த பரவலைக் கண்டு முதல்முறையாகஅச்சம் வருகிறது

தற்போது நாம் இருக்கும் பதவியை வைத்துக் கொண்டு இந்த பௌத்த மதத்தை அழிக்க முடியாது,  நாமே நேரடியாக ஆட்சி கட்டிலில் அமர்ந்தால்தான், 

பௌத்தத்தை அழித்து நமது சனாதன தர்மத்தை காக்க முடியும், சனாதன தர்மம் இருந்தால்தான் நம்  இனத்தை வாழையடி வாழையாக வாழ வைக்க முடியும் என்று கருதி...

ஆரியப் பார்ப்பனர்கள் நேரடியாக ஆட்சிக் கட்டிலில் அமரச் செய்த சூழ்ச்சி களில் ஒன்றுதான் நாம் மேலே பார்த்த தர்மபிரபு படத்தில் வரும் காட்சி..!?

ஆம்..!
அசோகனின்பேரனான பிருகரத்னனுக்கு தன் அழகான மகளைக்கூட்டிக்கொடுத்து அரசனின் நம்பிக்கைக்கு உரியவனாக மாறுகிறான் புஷ்யமித்ர சுங்கன், பிறகு படைத்தளபதியாகவும் பதவிஉயர்வு பெறுகிறான்.

பிருகரத்தனின் நம்பிக்கைக்குரியவனாக மாறிப் படைத் தளபதியாகவும் பதவிப் பெற்று விட்டான் புஷ்யமித்ர சுங்கன்.. ஒரு நாள் அரசர் தன் படை வரிசைகளை பார்வை யிட்டுக் கொண்டு வரும்போது..!?

ஒரு முறை இலங்கைக்குச் சென்றிருந்த திரு.ராஜீவ் காந்தி அவர்கள் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிடும் போது எப்படி ஒரு சிப்பாய் துப்பாக்கியின் பின் கட்டையால் தாக்க முற்பட்டானோ அதுபோல...

தன்படை வரிசையைப் பார்வையிட்டு கொண்டு வரும்போது திடீரென்று பாய்ந்து அரசன் பிரகரத்தன் தலையை வெட்டிக் கொலை செய்கிறான்  புஷ்யமித்ர சுங்கன்..!

பின்னர் தன்னைத்தானே அரசனாகவும் அறிவித்துக் கொள்ளுகிறான்..!

இப்படித்தான் இந்திய வரலாற்றில் ஒரு பார்ப்பனன் அரசன் ஆகிறான்,  ஆண்டு கி.மு. 187.

இந்தியா முழுவதும் பார்ப்பனர்களின் கற்பிதமான ஜாதி, மத, வேத, சாஸ்திர, புராண ஆத்மா, மறுபிறப்பு போன்ற வற்றிற்கு எதிராக மிகப்பெரிய  எழுச்சியை ஏற்படுத்தியது பௌத்தம்,

மக்கள் கூட்டம் கூட்டமாக பௌத்தத்தை ஏற்றுக் கொண்டார்கள் அதன்படியே வாழ்ந்து வந்தார்கள்..!

பார்ப்பனர்களின் வேள்வி, கேலிப் பொருளாக மாறிப்போனது, பார்ப்பனர்களின் சமூக மரியாதை கேள்விக் குட்படுத்தப்பட்டது.

புத்தர் என்றால் கடவுள் மறுப்பாளர் என்பது மட்டுமல்லாமல், இன்று எப்படி கங்கை, இமயம், பசு போன்றவைகள் மத புனித சின்னங்களாக இருக்கின்றதோ..!?

அதுபோல அன்றைய காலகட்டத்தில் அரசமரமும், ஸ்வஸ்திக் சக்கரமும் புத்தரின் அம்சமாக, புனிதமாக கருதப்பட்டது. அவரின் போதனைகள் கல்வெட்டுக்களாக செதுக்கப்பட்டது

இந்தியாவில் ஒரு தனிமனிதருக்கு சிலை வைக்கப்பட்டது என்றால் அது புத்தருக்கு தான்,

அறிவை பாய்ச்சிய புத்தனை மக்கள் அக மகிழ்வோடு, விதவிதமான கோணங் களில் அவரின் சிலைகளை வடித்தார்கள் அதை  வீதிதோறும் வைத்தார்கள்,

குறிப்பாக உடல் சுத்தம் செய்யும் நீர் நிலைகள் அருகில் எல்லாம் உள்ள சுத்தம் செய்ய புத்தரின் சிலையை வைத்தார்கள்.

சிலை வைக்கும் மரபு என்பது புத்தர் காலத்திலிருந்துதான் தொடங்குகிறது..!

ஆட்சிக்  கட்டிலில் அமர்ந்த புஷ்யமித்ர சுங்கன்தான் புத்தரின்அனைத்துகுறியீடு களையும் அழித்தான் அல்லது சனாதன தர்மத்தில் கரைத்தான்.

உலகத்தின் பல்வேறு நாடுகளில் கேலிப் பொருளாகவும், குழந்தைகளின் விளை யாட்டுப் பொருளாகவும், உதாரணக் குறியீடாகவும்,

மனித உடலும் யானைத் தலையுமான பிள்ளையாரை..!? மீண்டும் சொல்லுகிறேன் குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாகவும், கேலிப் பொருளாகவும் இருந்த பிள்ளையாரை,

எங்கெல்லாம் புத்தர் சிலைகள் இருந்ததோ அதையெல்லாம் இடித்து, உடைத்து அதைக் கொண்டுப்போய் நீர் நிலைகளில் கரைத்தார்கள்,

இது ஒருவகையில் புத்தரைக் கேலி செய்யும் விதமாக பிள்ளையாரைப் போல நீயும் கேலிக்குரியவன்தான் என்று மக்களிடம் சுட்டிக்காட்ட புத்தர் சிலைகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் பிள்ளையார் சிலைகளை வைத்தார்கள்.

புத்தர் சிலையை உடைத்த சனாதனிகள் அதை ஆட்டமும், பாட்டமுமாக  ஒரு சவ ஊர்வலம்போல் கொண்டுப் போய் நீர் நிலைகளில் கரைத்தார்கள்.

அந்த மரபின் தொடர்ச்சிதான் பல்வேறு புனைவு கதைகளைச் சொல்லிப் பழைய வரலாற்றை பார்க்க முடியாத அளவிற்கு கற்பனைகளை கலந்து, அன்று எப்படி புத்தனை சவ ஊர்வலமாக கொண்டு போனார்களோ, அது தேய்ந்து தேய்ந்து இன்று பிள்ளையாரை கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அந்த சிலை உடைப்பு மரபின் தொடர்ச்சி தான் சற்று மாறுதலுக்குட்பட்டு இன்று பிள்ளையார் ஊர்வலமாகத் தொடர்கிறது

இப்படி சிலை உடைப்பதற்கென்றே தனி அமைச்சகத்தை உறுவாக்கி, நாடு  முழுவதும் உள்ள புத்தர் சிலைகளில் மூக்கை உடைப்பது, தலையை உடைப்பது, இவை இரண்டும் முடியாத பட்சத்தில் புத்தரை கடவுளாக மாற்றுவது,

அல்லது சிலைகளின் அடையாளங்களை மாற்றி பெருமாளாக்கி, பெரு தெய்வ வழிபாட்டிற்குள் மக்களை கொண்டு வருவது போன்ற காரியங்களைச் செய்தான் இதற்காக  புஷ்யமித்திர சுங்கன் ஒரு குழுவையே உறுவாக்கி வைத்திருந்தான்.

இதோடு மட்டுமல்லாமல் அந்தக் குழு புத்தபிக்குகளையும் தேடித் தேடி கொன்றொழித்தார்கள், பல்வேறு புத்த விகாரங்களையும், சமணப்பள்ளிகளை யும்இடித்து  தரை மட்டமாக்கினார்கள்.

புத்த வரலாற்றையும், புத்த போதனைக ளையும் சொன்ன, நூற்றுக்கணக்கான ஸ்தூபிக்கள், ஆயிரக்கணக்கான கல் வெட்டுக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டது புஸ்யமித்திர சுங்கனால்.

புத்த மதமும், புத்தத்தை பின்பற்றும் மக்களும் நிலைகுலைந்து போயினர்,

சிலை உடைப்பு என்பது ஏதோ பெரியார் தான் தொடங்கி வைத்தது போல் பேசும் 7அறிவு பிராணிகள் வரலாறையும் சற்று உற்று நோக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்..!

அதுமட்டுமல்லாமல், ஆட்சி மொழியாக இருந்த பாலி மொழியை நீக்கிவிட்டு,  சமஸ்கிருதத்தை அரசு மொழியாகவும் மக்கள் மொழியாகவும்கொண்டுவந்தான்

இதையெல்லாம் எதிர்த்துக் கேட்பவர் களை ஒடுக்க நம்ம N.I.A. வைப்போல, சுமதி பார்கவாவைக் கொண்டு மனு ஸ்மிருதி என்கின்ற ஒரு கொடூரமான, மனித குலத்திற்கே எதிரான சட்ட நூல் எழுதப்பட்டது.

இதைத் தட்டிக் கேட்டவர்களை தாழ்த்தப் பட்டோர் என ஊருக்கு வெளியே ஒதுக்கி வைக்கவும், தண்டிக்கவும் இந்த மனு சட்டம் வழிவகை செய்தது.

நாடோடிப் பாடல்களாகவும், செவிவழிக் கதைகளாகவும் மட்டுமே இருந்து வந்த ராமாயணமும், வேதங்களும் எழுத்து வடிவம் பெற்றதும் இவன் ஆட்சியில் தான்.

ஏறக்குரைய 110 ஆண்டுகள் இருந்த சுங்க வம்ச ஆட்சியில், புத்த மரபுகள் ஒழிக்கப்பட்டு மீண்டும் வேத மரபுகள் தலைத் தூக்கத் தொடங்கியது.

பௌத்தம் என்கின்ற பெயரும், அது தொடர்பான குழுக்களும், அதன் அரைகுரைக் கோட்பாடுகளும் மக்கள் வழக்காற்றில் இருந்தாலும் அதற்கான சான்றுகள் முற்றாக அழிக்கப் பட்டிருந்தது.

வெள்ளையர்கள் வந்து பல்வேறு ஆய்வுகள், அகழ்வாராய்ச்சிகள் என செய்தப்பிறகுதான் அதன் பதிவுகள் முழுமையாக நமக்குக் கிடைத்தன..!

அதாவது 1800 க்குப் பிறகுதான் புத்தர் என்பவர் வாழ்ந்ததற்கான ஆதாரமே நமக்குக் கிடைத்தது அதுக்கூட இலங்கையில் உள்ள இலக்கியங்களை ஆய்வு செய்யும்போதுதான் இந்தியாவில் புத்தர் வாழ்ந்ததே தெரிந்தது.

கால ஓட்டம், அரசியல் மாற்றம், அரசு மாற்றம் இவைகளால் தூர்ந்துப் போய்க் கொண்டிருந்த தொண்மங்களை சமீபக் காலங்களில் மீண்டும் துலக்கி மக்களிடையே கொண்டு வந்தார் பால கங்காதரத் திலகர் என்பவர்.

பார்ப்பனர்கள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தன் வரலாற்றையோ, வஞ்சத்தையோ மறக்க மாட்டார்கள்.

ஆம் புஸ்யமித்திரசுங்கன், புத்தரை இழிவுப்படுத்த, கேலிசெய்ய பயன் படுத்திய பிள்ளையார், மக்கள் மனதில் படிமங்களாக தொடர்ந்தது,

அதைத் திலகர், அரசியலில் மதத்தைக் கலக்கப் பயன் படுத்திக் கொண்டார்.

இன்று திருவாளர் திலகர், வினாயகர் விஜர்ஸனம் என்கின்றப் பெயரில், கடவுளையே  கலவர கதாநாயகனாக மாற்றியது மட்டுமல்லாமல், இந்தியாவில் மத அரசியலையும் அவர்தான் தொடங்கி வைத்தார்

பிள்ளையார் சதுர்த்தி விழா, ஊர்வலம் இன்று மத அரசியலுக்கும் மதச்சிறு பான்மையினர் வெறுப்பிற்கும், இந்திய தேச உறுவாக்கத்திற்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றால்..!

அது, திலகர் முன்னுணர்ந்து தனது சாதுரியத்தால் உறுவாக்கிய இந்த வினாயகர் சதுர்த்தி விழாதான்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  பௌத்த அழிப்பிற்கு பயன் படுத்தப்பட்ட அதே பிள்ளையாரை..!

காலம்தாண்டியும்,மறக்காமல் நினைவில் வைத்திருந்து, இந்த அறிவியல் நூற்றா ண்டில்க் கூட வெறுப்பு அரசியலுக்குப் பயன் படுத்தப் படுகிறது என்றால்..!?

பார்ப்பனர்களின் சாதுர்யத்தையும், சமயோஜிதத்தையும், அவர்களின் கட்டுப்பாடான ஒற்றுமையையும், தங்கள் சந்ததிகள் மேல் அவர்கள் கொண்ட அக்கரையையும், அதற்காக அவர்கள் சிந்திய உழைப்பையும் நம்மால் பாராட் டாமல் இருக்க முடியவில்லை..!
****************

தமிழர்களே..!
பார்ப்பானைப் பார்த்தாவது வாழக் கற்றுக் கொள்ளுங்கள்...
....................தந்தைப் பெரியார்..................

No comments: