Friday, December 28, 2018

உபயோகமில்லாத மாடுகளை தெருவில் விட்டு விடுவதால் அங்குள்ள மக்கள் தொல்லை அனுபவிக்கிறார்கள்

உத்திரபிரதேசம் மாநிலம் 
அலிகார் நகரில் உள்ள இக்லஸ் (Iglas) என்னுமிடத்தில் ஆதரவற்ற மாடுகளின் தொல்லை அதிகமாக இருக்கிறதாம்.


விவசாய பூமியான இக்லாஸில் உபயோகமில்லாத மாடுகளை தெருவில் விட்டு விடுகிறார்கள்.
வட இந்தியா முழுவதும் இப்படி தெருவில் விட்டு விடுவதுதான் வழக்கமாக இருக்கிறது.
அப்படி தெருக்களில் விடப்படும் ஏராளமான மாடுகளால் அங்குள்ள மக்கள் தொல்லை அனுபவிக்கிறார்கள்.
தொல்லை தாங்க் முடியாத மக்கள் மொத்தம் 800 மாடுகளை அங்குள்ள அரசுப் பள்ளிகள் காம்பவுண்ட் உள்ளேயும், வகுப்பறையும் உள்ளேயும் கட்டி வைத்து போய்விட்டார்கள்.
காலையில் வந்து பார்த்த மாணவர்களும் ஆசிரியர்களும் அதைப் பார்த்து திகைத்திருக்கின்றனர்.
பள்ளிகளுக்கு வேறு வழியில்லாமல் விடுமுறை விட்டிருக்கிறார்கள். காவல்துறையும் கலெக்டரும் இது அரசியல் என்கிறார்கள்.
ஆனால் பொதுமக்களோ இப்படி திரியும் மாடுகளை எடுத்துச் செல்லுங்கள் என்கிறார்கள். இதில்லாமல் சில மாடுகளை அங்கே உள்ள மக்கள் உயிருடன் புதைத்திருக்கின்றனர்.
போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டில் மூச்சு திணறி மாடுகள் இறந்ததாக வந்திருக்கிறது.
News - http://archive.is/GhKPC
மாடுகளை கொல்லக் கூடாது அது மதத்தின் படி மகா பாவம் என்று சொன்ன மக்கள் இன்று மாடுகளை உயிருடன் புதைக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
உணவு சங்கிலி, ஒரு நாட்டில் உள்ள அனைவரும் எப்படி எதை உண்கிறார்கள். இந்திய நாட்டின் 130 கோடி மக்களும் எப்படி எல்லாம் ஒவ்வொருவேளையும் பசியாறுகிறார்கள் என்பதை எல்லாம் விஞ்ஞானப் பூர்வமாக தெரிந்தவர்கள் மாட்டுக்கறியை எதிர்க்க மாட்டார்கள்.
வெறுமே மத அபிமானிகள் மாட்டுக்கறியை எதிர்ப்பார்கள். மாடு உண்பவர்களை கொல்லுவார்கள்.
இப்போது பாருங்கள் மதவாதிகளே ஒட்டுமொத்தமாய் தெய்வமாக வணங்கும் மாட்டையே உயிருடன் புதைக்கிறார்கள்.
உயிருடன் புதைக்கப்படும் போது அம்மாடுகள் அடைந்திருக்கும் மூச்சுத்திணறலை நினைத்துப் பாருங்கள்.
எவ்வளவு கொடுமை அது...
ஜி.எஸ்.டி வரி மாதிரி ஒவ்வொரு மக்கள் செலவுக்கும் “மாட்டு வரி” என்று ஒன்று வைத்து இம்மாடுகளை காப்பாற்றுகிறேன் என்பதுதான் அவர்களின் அடுத்த திட்டமாக இருக்கும்.
மிக இயல்பான ஒரு விஷயம் உணவு...
அமெரிக்கர்கள் போல மாட்டுக்கறி யாராலும் சாப்பிட முடியாது.
சீனர்கள் போல பன்றிக்கறி யாராலும் சாப்பிட முடியாது.
நம்மை விட அவர்கள் எவ்விதத்தில் குறைந்து விட்டார்கள்.
மனிதநேயம், பண்பாடு, பிறரை மதித்தல் இதில் கூட அவர்கள் நம்மை முந்தியே இருக்கிறார்கள்.
நம் நாட்டில் மட்டும்தான் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது.. பன்றிக் கறி சாப்பிடக் கூடாது... எவ்வளவு மனத்தடைகள்...
படித்த மக்களே திருந்துங்கள்... யோசியுங்கள்...
மாட்டின் பாலைக் குடிக்கிறீர்கள்... புரோட்டீன் சத்தை எடுத்துக் கொள்கிறீர்கள்..
அது போல மாட்டுக்கறியை உண்டு புரோட்டீன் எடுத்துக் கொள்வதில் என்ன பிரச்சனை உங்களுக்கு...
உங்களுடைய மதக்கொள்கையால் வடமாநிலங்களில் எத்தனையோ ஏழைக் குழந்தைகள் சத்துணவில் முட்டை கூட சாப்பிட முடியாமல் தவிக்கின்றன...
நாம் சொல்லும் ஸ்லோகங்கள் எல்லாம்
எத்தனையோ குழந்தையின் தட்டில் உள்ள
சத்தான உணவை தினமும் பிடுங்கி தூர எறிந்து அவர்களின் உணவின் மேல் கைவைக்கிறது என்பதை நம்ப முடிகிறதா..
ஆனால் அதுதான் உண்மை...

Thursday, December 27, 2018

கண்ணன் கேள்வி - பிஜேபி நாடார்கள்?

கண்ணன் கேள்வி - பிஜேபி நாடார்கள்?



பதில் - உழைத்து முன்னேறிய சமூகம் என்று அறியப்படும் நாடார்கள், அரசியல் முக்கியத்துவம் இன்றி தவித்தனர். பொருளாதாரத்தில் வளர்ந்த பிறகு, அரசியல் ஈடுப்பாடும் அதிகரித்தது.

ஜாதீயை, மதத்தை வைத்து அரசியல் செய்யும் பிஜேபி, தெய்வ வழிப்பாட்டிற்கு முக்கியத்துவம் தரும் நாடார்களை வளைத்தது. இந்து தூபம் போட்டு மயக்கியது. பொருந்தா கூட்டணி. ஆனாலும், தம் சமூகத்துக்கு அரசியல் முக்கியத்துவம் பெற்று தந்து விட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த நிலைபாட்டை எடுத்தனர் நாடார் தலைவர்கள்.

தமிழிசை அவர்கள் பதவிக்கு இன்னும் தோள் தருபவர்கள் நாடார் சங்க தலைவர்கள்தான். பொன்னர் அவர்களுக்கு முக்கியத்துவம் தரும் விஷயத்தில் சிறு சங்கடம் இருந்தாலும், பிஜேபியை வைத்து சாமர்த்தியமாக பயணித்துவிடலாம் என்று எண்ணினார்கள்.

ஒன்றிய அரசு பலம், பணம் இருக்கும் தெம்பில் தமிழக அரசியலில் கலக்கலாம் என்று எண்ணியவர்களை கலங்க வைத்துவிட்டது ஆர்.கே நகர்.

பிஜேபியும் நாடார் சங்கத்திற்கு வரும் கூட்டம் அப்படியே தங்களை கோட்டைக்கு அழைத்து சென்றுவிடும் என்ற நினைப்பில் மண். இனி, பிஜேபிக்கு நாடார்கள் தேவைப்பட மாட்டார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்த அவமானம்.

இனியேனும், நாடார் தலைவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். சென்ற தலைமுறை உழைத்து, ஒழுக்கத்துடன் இருந்து கட்டிக்காத்த நல்ல பெயரை, பிஜேபியுடன் சேர்ந்து ஏற்கெனவே கெடுத்தாகிவிட்டது, இனி, மேலும் அவமானப்படாமல் உடனே வெளியேறுங்கள்.

நீங்கள் அரசியல் முக்கியத்துவம் பெற வேண்டுமானால், குறுக்குவழியை தேடாமல் மக்களுக்காக உழைத்து முக்கியத்துவத்தை பெறுங்கள். நீங்கள் வந்த பாதையில் கற்றப் பாடத்தை இன்றும் ஒடுக்கப்பட்டவர்களாக, தாழ்த்தப்பட்டவராக இருப்பவர்களுக்கு பயன் பெறும் வகையில் செயலாற்றுவீர்களானால் அது உங்கள் முந்தைய தலைமுறைக்கு செய்யும் பெரும் பேறு மட்டும் இன்றி அரசியல் முக்கியத்துவம் தானாக தேடி வரும்.

சமூகம் என்று இனியும் சேரக்கூடாத இடத்தில் சேர்ந்து தமிழர்களுக்கு துரோகம் இழைக்காமல், தமிழர் நலனில் கவனம் செலுத்தினால், தமிழ் நாட்டுக்காக உண்ணாநோன்பு இருந்து உயிர்விட்ட சங்கரலிங்கனார் ஆன்மா சாந்தியடையும். செய்வீர்களா?

Wednesday, December 26, 2018

சில அரசியல்வாதிகள் தமது அரசியலுக்காக செய்த உணர்ச்சி வேகப் பேச்சுக்கு பலியானவர் என்பது புரிகிறது

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமான காலகட்டத்தில் தமிழ்ப் போராளிக் குழுக்கள் அப்பொழுது மற்றைய நாடுகளில் இயங்கிக் கொண்டிருந்த போராளிக் குழுக்களையே தமது வழிகாட்டிகளாக எடுத்துக் கொண்டார்கள்.
பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் அப்பொழுது தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அவர்கள் குண்டு வைத்தார்கள். விமானங்களை கடத்தினார்கள். ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களை சுட்டுக் கொன்றார்கள். இந்தியா போன்ற நாடுகளிலும் இடதுசாரி புரட்சகர இயக்கங்களின் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. பண்ணையார்களை கடத்துவது, கொலை செய்வது, அரசாங்கத்திற்கு தகவல் சொல்பவர்களை சுடுவது என்கின்ற பாதையில் அவர்களின் போராட்டமும் போய்க் கொண்டிருந்தது.
இப்படியான ஒரு காலகட்டத்தில்தான் எமது தமிழ் இளைஞர்களும் ஆயுதங்களை ஏந்தினார்கள். சிங்கள அரசாங்கத்தின் கட்சியில் இருந்தவர்கள், தமிழீழக் கோரிக்கையை கைவிட்டவர்கள், தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் என்று எல்லோர் மீதும் அவர்களின் துப்பாக்கிகளும் திரும்பியது.
அன்றைய உலகின் போக்கில் இது தவிர்க்க முடியாத அவலமாகிப் போனது. சிறுவயதில் துரோகி அல்பிரட் துரையப்பா கொலை செய்யப்பட்டார் என்றுதான் படித்தோம். இன்று இருந்து சிந்தித்தால், சில அரசியல்வாதிகள் தமது அரசியலுக்காக செய்த உணர்ச்சி வேகப் பேச்சுக்கு பலியானவர் என்பது புரிகிறது. துரையப்பாவை சுட்டது சரி என்றால், இன்றைக்கு விஜயகலா மகேஸ்வரனில் இருந்து அங்கஜன் வரை சுட வேண்டும்.
அண்மையில் இயற்கை எய்திய அதிபர் பிரின்ஸ் காசிநாதர் அவர்கள் 1989ஆம் ஆண்டில் ஈபிஆர்எல்எவ் இயக்கம் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார். அன்றைக்கு அவரை சுட்டிருந்தால் 'ஒழிந்தான் துரோகி' என்பதோடு அவர் வரலாற்றை முடித்திருப்போமே என்று நினைக்கின்ற போதே உள்ளம் நடுங்குகின்றது. இன்றைக்கு அவர் பல்லாயிரக்கணக்கான மக்களினதும், மாணவர்களினதும் அஞ்சலியோடும், ஆசான் என்கின்ற மரியாதையுடனும் வழியனுப்பி வைக்கப்பட்டார்.
தீவிரமான தமிழ்த் தேசியம் பேசுபவர்களின் விருப்பப்பட்டியலில் இன்றைக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் இருக்கிறார். அன்றைக்கு புலிகளிடம் மாட்டியிருந்தால், அதோ கதிதான். ரெலோ இயக்கத்தின் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். பார்வதி அம்மாவின் இறுதி நிகழ்வை சிவாஜிலிங்கம் முன்னின்று நடத்துகின்றார்.
காலம் இவர்களுக்கு வழங்கிய வாய்ப்பை நிறையப் பேருக்கு வழங்காமல் போய்விட்டது. இன்றைக்கு தமிழர் அரசியலில் முக்கிய பங்களிப்பை வழங்கக் கூடிய பலரை துப்பாக்கிகள் கொன்று தீர்த்து விட்டன. அன்றைக்கு யார் துப்பாக்கி ஏந்தியிருந்தாலும், இந்த நிலை மாறியிருக்கப் போவதில்லை. ஏற்கனவே சொன்னது போன்று, உலகில் விடுதலைப் போராட்டம், மக்கள் புரட்சி என்று எல்லாவற்றின் பாதையும் இதுவாகத்தான் இருந்தது.
இன்றைக்கு நாம் இவற்றை படிப்பினைகளை பெறுவதற்கான சம்பவங்களாகத்தான் நோக்க வேண்டும். நியாயப்படுத்தல்கள் செய்து எதிர்காலத் தலைமுறையினரையும் இதே வழியில் செல்வதற்கு தூண்டக் கூடாது. சம்பந்தனை கொல்ல வேண்டும், சுமந்திரனைப் போட வேண்டும் என்று மனநோய் பிடித்து முகநூலில் சிலர் கவிதைகளையும் பதிவுகளையும் எழுதுவதைப் பார்க்கிறேன். இந்த மனநோய் பரவக் கூடாது என்பதில் இனப்பற்றும் மானுடப்பற்றும் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

Friday, December 14, 2018

இந்திராவின் மருமகள், இந்தியாவின் மகள்

1997 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் நாள், அன்றைய காங்கிரஸ் தலைவர் சீத்தாராம் கேசரிக்கு 10, ஜன்பத் இல்லத்தில் இருந்து ஒரு குறிப்பு வந்தது . அதை வாசிக்கும் போதே அவர் முகம் மாறியது " It is all over... She is coming " என்று அந்த குறிப்பை சோகமாக வாசித்து முடித்தார். அந்த எட்டு வரி குறிப்பு தான் சோனியா காந்தியின் அரசியல் வாழ்க்கையின் முதல் புள்ளி. அந்த குறிப்பில் 1998ஆம் ஆண்டு பாராளமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்யப் போவதாக அவர் அறிவித்தார். தன்னுடைய கனவர் இறப்புக்கு பின் ஏழு ஆண்டுகள் அமைதியாக இருந்த சோனியா காந்தியின் இந்த முடிவை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அப்படி தான் அவர் அரசியல் வாழ்க்கை தொடங்கியது.அதற்கு அடுத்து சில மாதங்கள் கழித்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்க பட்டார்.
கட்சியின் தலைவராக அவர் பொறுப்பேற்ற போது அவருக்கு சொந்த கட்சியிலே பல எதிர்ப்புகள் குறிப்பாக, ஷரத் பவார், மறைந்த லோக்சபா சபாநாயகர் பி.ஏ.சங்மா இவர்கள் எல்லாம் கட்சியை விட்டு விலகினார்கள். அத்தனை எதிர்ப்புகளையும், சவால்களையும் தனி ஒரு நபராக அவர் எதிர் கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு மிகச் சிறந்த தலைமையை வழங்கினார். தலைவராக பொறுப்பேற்று ஆறு ஆண்டுகளில் மத்தியில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர வைத்தார். பதினொரு மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி இருபத்து நான்கு மாநிலங்களில் ஆட்சியை கைபற்றியது. காங்கிரஸ் கட்சியின் வரலாற்றிலே 19 ஆண்டுகள் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஒரே நபர் அவர் மட்டுமே.
நேரடியாக அரசியலில் களம் இறங்காத போதும் 1970களிலும், 80களிலும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி களின் அரசியல் நடவடிக்களையும், அதிகாரத்தில் இருக்கும் போது அவர்களது செயல்பாடுகளையும் அருகில் இருந்து பார்த்தவர். கட்சியை வழி நடத்துவதில் இந்திராவும் சோனியா காந்தியும் ஒரே அனுகுமுறையை கையாண்டதில்லை. கட்சியில் மூத்த தலைவர்கள் தனக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினால் இந்திரா காந்தி அத்தனை பேரையும் அதிரடியாக நீக்கி விடுவார் அல்லது கட்சி இரண்டாக உடையும். சோனியா காந்தி அப்படி அல்ல அவர்களே கட்சியை விட்டு விலகும் வரை அமைதியாக இருப்பார். 1994ல் நரசிம்ம ராவ் சோனியா காந்தியை ஓரம் கட்ட நினைத்த போதும் கூட அவர் கட்சியை பிளக்க முயற்ச்சிக்கவில்லை. பெரும்பான்மையான மத்திய அமைச்சர்களும் , மாநில முதல்வர்களும் அப்போது சோனியாவை தலைவராக்க விரும்பினார்கள் எனினும் அவர் மறுத்து விட்டார். 2004ல் கூட பிரதமர் பதவியை ஏற்க மறுத்து விட்டார். 1975ல் அலாகாபாத் உயர் நீதி மன்றம் அன்னை இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவித்த போது அதை ஏற்க மறுத்து அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். ஆக தலைமை பொறுப்பை பொருத்தவரை அடிப்படையிலேயே இந்திரா காந்திக்கும் சோனியா காந்திக்கும் நிறைய வித்யாசங்கள் உண்டு. சோனியா எப்போதும் ஒரு democrat leader தான்.
சோனியா காந்தியின் வாழ்க்கையை நான்கு காலக் கட்டங்களாக பிரிக்கலாம் .முதல் காலக் கட்டம் அவருடைய திருமண வாழ்க்கை , காதல் கனவர், தன்னுடைய அத்தையான அன்னை இந்திராவின் முழுமையான அன்பும் அரவனைப்பும் பெற்ற ஒரு நிறைவான திருமண வாழ்க்கை. எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்த போது அன்னை இந்திராவின் படுகொலை அவரை பெரும் சோகத்தில் தள்ளியது.
இரண்டாம் காலக் கட்டம் அவருடைய வாழ்க்கையை தலை கீழாக புரட்டி போட்டது. ராஜீவின் மரணம் அவருடைய வாழ்க்கையில் பேரிடியாக வந்து விழுந்தது. ராஜீவ் காந்திக்கு அரசியல் மீது நாட்டமே இல்லை. அன்னை இந்திரா பிரதமராக இருந்த போதும் அவர் பைலட் ஆகவே இருந்தார். சஞ்சய் காந்தியின் மரணத்திற்கு பிறகு அன்னை இந்திராவின் வற்புறுத்தலால் அரசியலில் நுழைந்தார் ராஜீவ். அன்னை இந்திராவின் மறைவுக்கு பிறகு காங்கிரஸ் காரியக் கமிட்டி ராஜீவை தலைவராக தேர்ந்தெடுத்த போது அதை கடுமையாக எதிர்த்தார் சோனியா. அன்னை இந்திரா போல் தன் கனவரும் கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் அவருக்கு இருந்தது. எல்லா பொதுக் கூட்டங்களுக்கும், வெளிநாடு பயணங்களுக்கும் ராஜீவ் உடன் சோனியா எப்போதும் இருப்பார். 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி சோனியாவின் வாழ்க்கையில் இடி விழுந்தது. தன்னுடைய அன்பு கனவரை தீவிரவாதத்துக்கு பலி கொடுத்தார். அதில் இருந்து மீண்டு வர அவர் மிகவும் சிரமப்பட்டார்.
மூன்றாவது காலக் கட்டம் 1991 முதல் 1998 வரை அந்த ஏழு ஆண்டுகள். வாழ்க்கையை வெறுத்து தனிமையில் இருந்தார். அவர் இத்தாலிக்கே திரும்பப் போகப் போவதாக அப்போது பேசப் பட்டது. இந்த காலக் கட்டத்தில் தான் அவரை அரசியலுக்கு வர வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வற்புறுத்தினார்கள். அதை முற்றிலுமாக நிராகரித்து விட்டார். டெல்லி தல்கோத்ரா மைதானத்தில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் வந்த போது அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து " சோனியா , சோனியா " என்று கத்தினார்கள். பத்து நிமிடத்திற்கும் மேலாக கைதட்டல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. காரியக் கமிட்டி உறுப்பினர் ஒருவர் சோனியாவிடம் வந்து மேடைக்கு வர அழைத்த போது, இந்த ஆர்பாட்டத்தை இப்போது நிறுத்தா விட்டால் நான் கூட்டதில் இருந்து வெளியேறுவேன் என்று எச்சரித்தார். இந்த காலக்கட்டத்தில் தான் Rajiv Gandhi Foundationஐ தொடங்கினார். மேலும் Nehru Memorial Fund , Indira Gandhi Memorial trustஐ தலைமையேற்று பல சர்வதேச மாநாடுகளை டெல்லியில் நடத்திக் காட்டினார்.
நான்காவது காலக் கட்டம் அவருடைய அரசியல் பயனத்தின் தொடக்கம். 1998 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார். அன்றிலிருந்து இன்று வரை இந்திய அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்து வருகிறார். 1998 ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் போட்டியிட்டு முதல் முறை நாடாளுமன்ற உறுப்பினரானார். பிறகு 2004ல் காங்கிரஸ் அதிக இடங்களை கைபற்றியபோது ஐக்கிய முற்போக்கு கூட்டனி என்று ஒன்று உருவானது அதன் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். சோனியா தான் பிரதமராக வேண்டும் என்று முதல் ஆளாக சொன்னவர் கலைஞர், அனைவரும் அவர் தான் பிரதமர் ஆவார் என்று எதிர்பார்த்தார்கள். சோனியா அது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. அன்றைய குடியரசு தலைவர் திரு.அப்துல் கலாமை சந்தித்து ஆட்சி அமைக்க தமக்கு போதுமான MPக்கள் இருப்பதாக தெரிவித்தார், அப்போது MPக்களின் ஆதரவு கடிதத்தை அவர் எடுத்துச் செல்லவில்லை. MPக்களின் ஆதரவு கடிதத்துடன் அதற்க்கு அடுத்த நாள் கலாமை சந்தித்தார். இரண்டாம் நாள் கலாமை சந்திக்க சென்ற போது சோனியா தன்னுடன் மன்மோகன் சிங்கை அழைத்துச் சென்றார்.
அந்த ஒரு நாள் இரவில் தான் சோனியா தான் பிரதமராக போவதில்லை என்ற முடிவை எடுத்தார். ஆதரவு கடிதத்தை திரு.அப்துல் கலாமிடம் கொடுத்து விட்டு குடியரசு தலைவர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த போது Madam , Are you the next PM ? என்று ஒருவர் கேட்ட போது " I think our country will be safe in the hands of Dr.Manmohan Singh " என்று கூறினார். சோனியா காந்தியின் இந்த முடிவை யாரும் எதிர்பார்க்க வில்லை. காங்கிரஸ் கட்சியினர் இதை நிராகரித்தார்கள், நாடு முழுவதும் அன்று சுஸ்மா ஸ்வராஜ்ன் உருவ பொம்மை கொளுத்தப்பட்டது காரணம் சோனியா பிறப்பால் ஒரு இத்தாலியர், அவர் பிரதமரானால் நான் மொட்டை அடித்துக் கொள்வேன் என்று சொன்னார்.இன்றும் சங்கிகள் அப்துல் கலாம் அவருக்கு பதவி பிரமானம் செய்து வைக்க மறுத்து விட்டார் என்று பொய்யை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சர்ச்சை பற்றி அப்துல் கலாம் தன்னுடைய Turning Points புத்தகத்தில் எழுதியிருக்கிறார் from Turning Points " While this communication was in progress, I had a number of emails and letters coming from individuals, organizations and parties that I should not allow Mrs Sonia Gandhi to become the prime minister of our country. I had passed on these mails and letters to various agencies in the government for their information without making any remarks. During this time there were many political leaders who came to meet me to request me not to succumb to any pressure and appoint Mrs Gandhi as the prime minister, a request that would not have been constitutionally tenable. If she had made any claim for herself I WOULD HAVE HAD NO OPTION BUT TO APPOINT HER " சுருக்கமாக " சோனியாவை பிரதமராக்க கூடாது என்று எனக்கு பல தரப்பில் இருந்து அழுத்தங்கள் தரப்பட்டது. அந்த கோரிக்கை அரசியல் அமைப்பு சாசனத்துக்கு எதிரானவை . ஒருவேளை சோனியா பிரதமராக வேண்டும் என்று அவரே நினைத்திருந்தால், அவருக்கு நான் பதவி பிரமானம் செய்து வைப்பது தவிர வேறு வழியில்லை "
அதற்கு பிறகு காங்கிரஸ் பாராளமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய போதும் அவர் பிரதமர் பதவி தனக்கு வேண்டாம் என்று தெளிவாக சொன்னார். அவருடைய பேச்சுகளில் மிகச் சிறந்த பேச்சு அது. காங்கிரஸ் MP ரேனுகா சௌத்ரி அவர் பேச்சை கேட்டு கதறி அழுதார். நான் youtubeல் பலமுறை பார்த்த வீடியோ அது, குறிப்பாக இந்த வரிகள் இன்றும் என் மனதில் இருக்கிறது " The people of India choosen us for their aspirations not for ours. I must be humble to decline this post" நாட்டின் உயரிய பதவியை இந்த இரண்டு வரிகளில் தூக்கி எறிந்தார்.
எச் ராஜா போன்ற ஈன பிறவிகளுக்கு அவர் இத்தாலியராக தெரியலாம். மோடி போன்ற தற்குறிகள் அவரை விதவை என்று அழைக்கலாம்.
ஆனால் அவர் இந்திராவின் மருமகள், இந்தியாவின் மகள்.

சில ஆதி திராவிட தோழர்கள் திராவிடர் இயக்கம் எங்களுக்கு என்ன செய்தது என்று கேட்கிறார்கள்

சில ஆதி திராவிட தோழர்கள் திராவிடர் இயக்கம் எங்களுக்கு என்ன செய்தது என்று கேட்கிறார்கள் அவர்களுக்கு நான் பதில் அளிப்பதற்கு முன்பு இந்தியா முழுவதும் ஆதிதிராவிர் நிலை வப்படி இருந்தது என்பதைக் கூறிவிட்டு பிறகு சென்னை மாகாணத்தில் என்ன மாறுதல் செய்தார்கள் என்பதைக் கூறுகிறேன்.
நான் பதிவிட்ட இந்த நுல் எம்.சி.ராசா வாழ்க்கைச் சுருக்கமும் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளும் ஜெ.சிவசமுகம் பிள்ளை அவர்கள் 1930 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டது.
இந்திய அரசு ஆதிதிராவிடர்கள் நிலையை அறிந்து கொள்ள 1928 ஆம் ஆண்டு எம்.சி,ராசா தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்தது. அவர் இந்திய அரசுக்கு தொகுத்து அளத்ததை சிறு சிறு பகுதியாக தொடர்ந்து பதிவிட உள்ளேன்.
வாலாசா வல்லவன்.
இயல் - 7
இந்திய அரசின் மத்தியகுழு அறிக்கைக்கு ராவ்பகதூர் எம்.சி. ராசா எழுதிய குறிப்பு:
இந்தியாவில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் இந்திய நாட்டின் அரசியல் மற்றும் சமுதாய மாறுதலில், வளர்ச்சியில் ஒரு திட்டவட்ட மான பிரச்சினையாக உருவாகிவிட்டனர். அந்தப் பிரச்சினைகள் வரலாற்று சக்திகளால் மத, பொருளா தார மற்றும் சமுதாய சக்திகளின் விளைவாக உருவானவை. தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடையே தோன்றிய மாற்றங்கள் சமுதாயத்தில் நிலவுகின்ற, சமுதாய கருத்துக்களை வெடித்து சிதற வைத்தன.
பூர்வீக இந்து சமுதாயத்தை உருவாக்கியவர்கள் விதித்த நிபந்தனைகளின் காரணமாக, அவர்கள் விதித்த கட்டுப்பாடுகளின் காரணமாக நீண்ட நெடுங்காலமாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் கள் தனிமைப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டனர். அவர்கள் உருவாக்கிய விதம் அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளின் காரணமாகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களிடையே விழிப்புணர்ச்சி எற்பட்டு அவர்கள் தங்கள் வாழ்வு மேம்படவும் பொருளா தாரம், கல்வித்துறைகளில் முன்னேற்றம் ஏற்படவும் அரசியல் பிரச்சினையாக அதை உருவாக்கினார்.
அவர்களிடையே தங்கள் வகுப்புக்களைப் பற்றிய உள்ளுணர்வுகள் வளர்ந்தன, தாழ்த்தப்பட்ட வகுப்புக்களை சார்ந்தவர்களது பூர்வீகம் வரலாற்று அடிப்படையில் ஆய்வுக்குரியது. அரசாங்கத்தின் அனுதாபம் காரணமாகவும், இந்து சமுதாயத்தில் மிக தாமதமாக சமூக விழிப்புணர்வு உருவான காரணத்தினாலும் அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அப்படியிருந்தும் உருவாகிக் கொண்டிருக்கும் புதிய சக்திகளுக்கு பழைமைவாதிகள் ஒருபக்கமும் அறியாமை இன்னொரு பக்கமும் அணிதிரண்டு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இந்தியாவில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தாழ்த்தப்பட்டோர் பிரச்சினைகளை ஒப்புக் கொள்கின்றன மற்றும் அவர்களுக்காக சிறப்பு நிவாரண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஒப்புக்கொள்கின்றன

சிந்துவெளி நாகரீகம்

ஆரியர்களை பற்றி தெரிந்து கொள்ளும் முன் சிந்துவெளி மக்களை குறித்து நாம் பார்ப்போம் ஏனெனில் இது ஒரு ஆரிய பண்பாடு என்று RSS கூட்டம் கூறிவருகிறது.
சிந்துவெளி நாகரீகம் என்பது சாரத்தில் பாலைவன நாகரிகம் ஆகும்.
அதாவது உலகில் தோன்றிய முதல் நாகரிகங்களான சிந்து வெளி நாகரீகம் சீனாவின் மஞ்சள் நதி மற்றும் யாஞ்சி நாகரீகங்கள் . எகிப்தின் நைல்நதி நாகரீகம். மெசபடோமியாவின் டைகிரீஸ் யுப்ரடீஸ் நாகரீகங்கள் அனைத்தும் ஏறத்தாழ சமகாலத்தில் தோன்றிய நாகரிகங்களாகும்
இந்த நாகரீகங்கள் அனைத்தும் சமகாலத்தில் தோன்றியவை அதுபோல் வேறொரு ஒற்றுமையும் உண்டு இவை அனைத்தும் கற்கால மனிதன் செம்பையும் வெண்கலத்தை கற்கருவிகளோடு இணைத்து பயன்படுத்திய காலமாகும்
இந்த நாகரீகங்கள் தோன்றிய பகுதிகள் அனைத்தும் பால நிலம், சார்ந்த ஆற்று பாசன பகுதிகள் ஆகும் அதாவது அக்கால மனிதன் தனது எளிய கற்கருவிகளைக்கொண்டு எளிமையாக வேளாந்தொழில் செய்ய தேர்வு செய்த இடங்களே பாலை சார்ந்த வண்டல் மண் கொண்ட நிலமாகும்
ஏனெனில் கற்கருவிகளசிக்கொண்டு அவனுக்கு இங்குதான் தோண்டுவதும் மண்ணை பதப்படுத்துவதும் மிக எளிதாக இருந்தது இதன் வளர்ச்சிப்போக்கில் நல்ல வருமானத்தையும் கொடுத்தது
இவை சுரங்கத்தொழில் மற்றும் பட்டரைகள் கைவினைத்தொழில் ஆகிய தொழில்களில் ஈடுபடும் அளவுக்கு வருமானம் பெருகியது
இப்படி வளர்ந்த இந்த நாகரீகங்களின் உச்சத்தில்தான் பொதுவாக மனிதன் பயிர்தொழிலை விரிவாக செய்ய ஆரம்பித்தான்
இதுஆரம்பத்தில் பெண்களால்தான் மேற்கொள்ளப்பட்டது என பழைய பதிவுகளில் கூறியுள்ளேன் நினைவில் கொள்க எனவே வேளாண் தொழிலை அடிப்படையாக கொண்ட இம்மக்கள் தாய் தெய்வத்தையே வணங்கினார்கள்
ஆனால் சுரங்கம் வர்த்தகம் பட்டரைத்தொழில் பெரிய படகுகளை செய்வது வெண்கலகருவிகளை ஏற்றுமதி செய்வது தந்த பொருட்கள் முத்துமாலைகள் மாணிக்க மாலைகள் போன்ற தொழில்கள் பரவலாக விரிவடந்தது
இந்த தொழில் பிரிவினை இயல்பாகவே ஆணாதிக்கத்தையும் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் உருவாக்கி இருந்தது
இக்காலத்தில் மெசபடோமிய ஊர் பகுதியில் கிடைத்த தடயங்கள் அங்கு இறந்த ஆண்டையின் உடலின் நான்கு திசைகளிலும் 70 போர் வீரர்களும் பணியாளர்களும் அப்பென்ணின் உடலுக்கு காவலாக புதக்கப்பட்டு இருந்ததும் இது அடிமை சமூக அமைப்பு முறை என்பதையும் தெளிவாக்கியது
இதுபோல் எகிப்திய பிரமிடுகளும் அடிமை உழைப்பால்தான் கட்டப்பட்டன இதன் காலம் கிமு 2500
மேற்கண்ட இந்த உதாரணங்கள் வேலை பிரிவினையுடன் சேர்ந்து அடிமை முறையும் உருவானதைக்காட்டுகிறது
ஆனால் சிந்து வெளியில் இவ்வளவு கொடுமையான அடிமை முறை நிலவியதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை
ஆனாலும் சாதிய வேலை பிரிவனை முறையோ அல்லது சற்று நெகிழ்வான அடிமைமுறையோ இங்கு இருந்து இருக்கவே வேண்டும்
சிந்துவெளி மக்கள் மாடு,ஆடு,கழுதை நாய் ஒட்டகம், யானை குதிரை போன்ற விலங்குகளை வீட்டு விலங்காக வளர்த்துவந்தனர்
குதிரைகளை ஆரியரே இந்தியாவுக்கு கொண்டுவந்தனர் என்பது தவறாகும் கிமு 2000க்கும் முன்பே இந்தியாவில் பல்வேறுபகுதிகளில் குதிரைகள் வளர்த்து இனப்பெருக்கம் செய்யப்பட்டன என்பதை மொகஞ்சதாரோ,ஹரப்பா லோதல் சுர்க்கோட்டடா, கலிபங்கன் குண்டாசி ஆகிய பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட குதிரைகளின் எலும்புகள் பற்றிய நீண்ட பட்டியலே இருக்கிறது
இவர்கள் மத்திய ஆசிய ஈரான் எகிப்து சீனா ஆகிய உலகின் பெரும் பகுதிகளுடன் வாணிப தொடர்பு கொண்டிருந்தனர்
என்பதற்கு அங்கெல்லாம் கிடைத்த ஹரப்பன் பொருட்கள் சான்றாக விளங்குகிறது
சிந்து வெளி பண்பாடு என்பது ஏதோ ஒரு இனத்துக்கான பண்பாடு அல்ல
அது இப்பகுதிகளில் வாழ்ந்த பல்வேறு மக்கள் சமூகங்களின் பொதுப்பண்பாடு ஆகும்
இதில் ஏற்றதாழ்வுகளும் இருந்தன சில பகுதிகளில் ஏர்கலப்பயும் சில பகுதிகளில் சூலம் போன்ற கருவிகளும் மன்ணை கிளர பயன்படுத்தப்பட்டது சில பகுதிகளில் ஆரம் கொண்ட சக்கரங்களும் சில பகுதிகளில் வட்ட சக்கரங்களும் பயன்பாட்டில் இருந்தன
இவை அந்த சமூகங்களுக்கு இடையில் நிலவிய வேறூபாட்டை கூறுகின்றன
சிந்து வெளி நாகரீகம் என்பது ஆப்கன் பாகிஸ்தான் முதல் குஜராத் உபி வரை ஏறத்தாழ 15 லட்சம் சதுர கிலோமிட்டர் தூரம் பரவி இருந்தது இவை இந்தியாவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் பாதியாகும் இந்த அளவு நிலப்பரப்பில் எந்த குறிப்பிட்ட இனங்களோ தேசிய இனங்களோ இதுவரை உருவானதே இல்லை
எனவே எந்த இனமோ அல்லது குறிப்பிட்ட மொழி சார்ந்த மக்களோ இது எங்கள் நாகரீகம் எனக்கூறுவது அவர்களின் அறியாமையே ஆகும்
இந்த நாகரீகத்தின் பெரும்பகுதி கிமு 1900 வாக்கில்; அழிந்து விட்டது
இதை ஆரியர்கள் அழித்தார்கள் என நம்புவதற்கு சில காரணகள் உண்டு அவை ரிக் வேதத்தில் இந்திரன் தஸ்யூ தாசர்களின் கோட்டைகளை அழித்தான் எனும்பாடல்கள் அடிக்கடி வருவது ஹரப்பா பகுதிகளின் தெருக்களில் பிணக்குவியல்கள் கிடைத்ததும் ஆகும்
இவை இரண்டையும் இணைத்து புரிந்து கொண்ட ஆங்கிலேய ஆய்வாளர் மார்சல் ஆரியர்களே இந்நாகரீகத்தை அழித்ததாக முடிவு செய்தார்
மேலும் ரிக்வேதத்தில் ஹரியூப்பிரியா நதிக்கரையில் நடந்த போரை பற்றிய பாடல்களும் வரலாற்று ஆய்வளார் DD கோசாம்பி இன்றைய ஹரப்பாதான் ரிக்வேத ஹரியூப்பிரியா என நம்பி விட்டார்
ஆனால் உண்மையில் புதையுண்ட நகரம் எனும்பொருளில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஹரப்பா எனும் பெயர் சூட்டப்பட்டதை அவர் அறியவில்லை
மேலூம் ஹரப்பாவில் காண்ப்பட்ட பிணக்குவியல் பல்வேறு கால கட்டங்களை சேர்ந்தவை என்பதும் அவர்கள் அனைவரும் கடும் தொழு நோயாளும் காச நோயாளும் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது
மேலும்,ஹரப்பா நாகரீகம் ஆரியருடையது இல்லை இவர்கள் தந்தை வழி தனித்தெய்வங்களையே வணங்கினர் சிந்து மக்களோ தாய்வழி தெய்வங்களை வணங்கிய நகர்புறத்தை சேர்ந்த வேளாண்தொழில் சுரங்கத்தொழில் அனைத்திலும் திறமை வாய்ந்தவர்கள்
ஆரியர்களோ மேய்ச்சல் தொழில் மட்டுமே அறிந்த நிலையான இருப்பிடம் அற்ற நாடோடி வாழ்வினர் இவர்களுக்கு விவசாயமோ ஏர்கலப்பை பற்றிய எந்த அடிப்படையும் அறியாதவர்கள்
மேலும் ஹரப்பா அழிந்த காலத்தில்தான் எகிப்திய மெசபடோமிய நாகரீகங்களும் அழிந்தன காரணம் மழை 200 ஆண்டுகள் பொய்த்துபோனதே காரணம் என பல்வேறு சான்றுகள் நிறூபிக்கின்றன
அக்ல்கால சிப்பி நத்தை ஓடுகளிள் கன ஆக்சிஜனும் கன ஹைட்ரனும் கலந்துள்ளது அப்பகுதியில் நிலவிய வரட்சியை சுட்டுகிறது மேகாலய குகை ஆய்வுகளும் மழைபெய்யாததை உறுதிசெய்கிறது
மேலும் ஹரப்பா நாகரீகம் அழிந்து 500. 600 ஆண்டுகளுக்கு பின்பே ஆரியர்கள் சுந்து வெளியில் குடியேறினார்கள்
கடைசியாக கிடைத்த தகவல்கள் சிந்து பகுதியை சுற்றி இப்போது வாழும் மக்களிடம் சிந்து மக்களின் ஜீன்கள்காணப்படுவதையும் அவர்களின் உடல் காசம் மர்றும் மலேரியா ஆகிய நோய்களை எதிர்க்கும்திறன் குறைந்தவர்களாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது
ஹரப்பா மக்களை தாக்கி அழித்த நோய்களில் மலேரியாவும் ஒன்று தொடரும்

இராஜாஜி மகள் லட்சுமி அம்மையார்

குழந்தை திருமணம் மூலம் பாதிக்கப்பட்ட இராஜாஜி மகள் லட்சுமி அம்மையார், காந்தியடிகள் மகன் தேவதாஸ்காந்தி ஆகியோரின் சாதிமறுப்பு திருமணம் நடந்த அந்த காலத்திலும்..

இதே மாதிரித்தான் சாதிக்காய் சங்கிபாய்ஸ் கதறிட்டு இருந்தாய்ங்களாம்...

(இந்த திருமணம் நடைபெற முக்கிய காரணம் தந்தைபெரியார்) 👍👍👍👍


b

வருணாசிரம தருமப்படி சுடுகாட்டிலும் பேதம்

வாழ்க மனுதர்மம் !
வளர்க மனு நீதி!
வருணாசிரம தருமப்படி சுடுகாட்டிலும் பேதம் !
2000 ஆண்டுகட்கு மேலாக மனு நீதிக்கு அடிமையாக இருக்கும் தமிழர்கள் பிணத்தைப் புதைப்பதிலும் சாதியவெறி கொண்டு ஒருவருக்கொருவர் சண்டையிடுவதில் வியப்பென்ன ? 
மனு தர்மத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்காமல் மாந்தருக்கு உண்மையான விடுதலை கிடைக்காது !
" பார்ப்பனன் இறந்தால் (இரவிகுல மண்டலமுள்ள ) கிழக்கே உள்ள சுடுகாட்டுக்குக் கொண்டுபோ என்றும் ; சத்திரியனகா இருந்தால் (சாமராஜ்யபுரி மண்டலமுள்ள) வடக்கே கொண்டுபோ என்றும்; வைசியனாக இருந்தால்
(குபேர மண்டலமுள்ள) மேற்கே கொண்டுபோ என்றும் , சூத்திரனாக இருந்தால் (எமலோக மண்டலமுள்ள) தெற்கே கொண்டுபோ " என்றும் மனு கூறுகின்றார் .
சான்று : பக்கம் 86
சித்தாந்த சிந்தனை
டாக்டர் புரட்சிதாசன் , எம் . ஏ., வௌியீடு:பாண்டியன்பாசறை சென்னை 600 017

ஆண்டன் பாலசிங்கத்தின் மரணம் நிகழ்ந்த நாள்

இன்றோடு 14 ஆண்டுகள் ஆகின்றன, இந்த நாளில்தான் புலிகளுக்கு நாள் குறிக்கபட்டது
அது ஆண்டன் பாலசிங்கத்தின் மரணம் நிகழ்ந்த நாள்
உறுதியாக சொல்லலாம், சூடமேற்றி சத்தியம் அடித்து சொல்லலாம், எல்லா சிக்கலிலிருந்தும், புலிகள் செய்த எல்லா அட்டகாசங்களிலிருந்தும் புலிகளையும், பிரபாகரனையும் காத்தவர் பாலசிங்கம் மட்டுமே
அவரின் வாதமும் வல்லரசுகள் முன்னால் அவர் செய்த தர்க்கமுமே. பாலசிங்கமே புலிகளின் முகம், பிரபாகரன் என்பவன் முகமூடி
யாழ்பாண வம்சம், லண்டன் கல்வி, அங்கே பேராசிரியர் எனினும் ஈழபோராட்டம் அவரை அழைத்தது, புலிகளின் ஆதரவாளராக மாறினார்
அவர் புலிகளுடன் இணைந்தபின்பே புலிகளின் வீரியமான போராட்டம் தொடங்கிற்று, சர்வதேச ஆதரவினை புலிகளுக்கு பெற்று கொடுத்தவர் அவரே, அந்த ஆதரவில்தான் ராஜிவ் கொலை முதல் பல சிக்கல்களை தாண்டி புலிகளால் நிற்க முடிந்தது
பிரபாகரனுடன் நேருக்கு நேர் விவாதித்த ஒரே புலி இறுதிவரை பாலசிங்கம் மட்டுமே, இந்த கடிவாளம்தான் அதுகாறும் புலிகளை காத்தது
அமைதிபடை காலம், சந்திரிகா காலம் என எல்லா ஆபத்துக்களிலிருந்த்தும் புலிகள் அவரால்தான் காப்பற்றபட்டனர், பிரேமதாசா முதல் இறுதியாக நார்வே குழு வரை அவர் புலிகளை காக்க பட்டபாடு கொஞ்சமல்ல‌
உலக நிலை மாற, பாலசிங்கத்திற்கும் சில விஷயங்கள் புரிந்தன, இனி தனிஈழம் என்பது சாத்தியமல்ல, இந்தியாவும் ராஜிவ் கொலை என்பதை தாண்டி வராது, ஆனால் பிரபாகரனோ தனிஈழம் இல்லை என்றால் யாரையும் கொல்ல கூடியவர்
ஆனால் அமெரிக்க எச்சரிக்கையோ இனி யுத்தமென்று வந்தால் புலிகள் இருக்கவே மாட்டார்கள் எனும் ரீதியில் இருந்தது
பாலசிங்கம் தவித்தார், நார்வேயிடம் தனியாட்சி பரிசீலிக்கின்றோம் என சொல்லிவிட்டு பிரபாகரனை அவரால் சந்திக்க முடியவில்லை,
பிரபாகரன் உலகம் புரியாதவராய் இருந்தார், புரிவதற்கு அறிவு கொஞ்சமாவது வேண்டும்
பாலசிங்கத்தோடு முரண்பட்டார் பிராபரன், 2002ல் பாலசிங்கம் சுயாட்சி முடிவுக்கு வந்திருந்தார், ஆனால் பிரபாரகன் வரவே இல்லை.
சில இடங்களில் அவர் இறுதியில் பிரபாகரனால் அவமானபடுத்தபட்ட இடங்களும் உண்டு என்பார்கள்
2004ல் கருணா விலகும்பொழுதே , ஆண்டன் பாலசிங்கமும் விலகினார், உடல்நலம் காரணம் காட்டி விலகுவதாக சொன்னாலும், அவர் மனம் நொந்தது கொஞ்சமல்ல‌
உலகில் எல்லா நாட்டையும் பகைத்துவிட்டு ஒரு இயக்கம் நாடு அடைய முடியாது என அவர் சொன்னது யார் காதிலும் ஏறவில்லை
அந்த பாலசிங்கம், இறுதியில் புலிவால் பிடித்த கொடுமையால் ஏதும் யாரிடமும் பேசமுடியாமல் தவித்தார்
இந்தியாவுடன் அவர் நட்புறவினை ஏற்படுத்த முயன்றாலும், இந்தியா புலிகளை நம்ப மறுத்தது, காரணம் 1983 முதல் புலிகள் காட்டிய நன்றிகடன் அப்படி
இந்தியாவினை இழுத்து பேச்சுவார்த்தைக்கு கொண்டுவர விரும்பினார் பிரபாகரன், இந்தியா போங்கடா .... என்ற நிலைப்பாட்டில் இருந்தது, அதன் நிலைப்பாடு அப்படி
பிரபாகரனுக்கும் உலகிற்கும் இடையில் தவியாய் தவித்தார் பாலசிங்கம்
எப்படியாவது இந்தியாவினை இழுத்து தன் நோக்கத்தில் வெல்ல வேண்டும் என்ற பிரபாகரனுக்கு எப்படி இந்தியா வரும் என நம்புகின்றாய்? என சொல்லிபுரியவைக்க முடியா சோகத்தில் அவர் இருந்தார்
எதையுமே யோசிக்காத பிரபாகரன் ஒருபக்கம்
தனக்கு செவிமடுக்கா பிரபாகரனை மொத்தமாக ஒழித்துவிட மேற்குநாடுகள் ஒருபக்கம்
இதில் கொல்லபடபோவது லட்சகணக்கான மக்கள், இதுதான் பாலசிங்கத்தின் வேதனை
நார்வே தூதுகுழு என்பது அமெரிக்காவின் மென்மையான முகம், இஸ்ரேல் என்பது அவர்களின் கொடுமையான முகம் என்பது உலக அரசியல் தத்துவம்
அந்த நார்வே வந்து பேசுகின்றது என்றால் அது அமெரிக்காவின் குரல் என்றே அர்த்தம். 1987ல் ராஜிவினை வெளியே போ என சொன்ன பிரபாகரன், எரிக் சோல்ஹிமினையும் கழுத்தை பிடித்து தள்ள தயங்கவில்லை
பாலசிங்கத்திடம் இனி பிரபாரனின் சாவு தவிர்க்கமுடியாதது என்பதை சொன்னார் எரிக்சோல்ஹிம், ஏன் அமெரிக்க இலங்கை தூதரே "இனி புலிகள் யுத்தமென்று வந்தால் கேவலமாக தோற்பார்கள்" என சொன்னார்.
நார்வே தூதர் எரிக் சோல்ஹிமிடம் " லட்சகணக்கான சனம் சாக போகுது எரிக், அதனை நினைத்தால்தான் கடும் வேதனை" என இறுதியாக சொன்னதுதான் ஆண்டன் பாலசிங்கத்தின் வார்த்தை
அவர் காலமானதும், பாய்ந்துவந்த மேற்குலக கட்டளைகள் புலிகளை குதறி எறிந்து முடித்தும் விட்டன‌
எங்கோ காட்டுக்குள் சுட்டுகொண்டிருந்த இயக்கம், பாலசிங்கத்தின் வருகைக்கு பின்னே உச்சம் அடைந்தது, அவர் காலமெல்லாம் அது தன் கொடியினை பறக்கவிட்டுகொண்டே இருந்தது
சுருக்கமாக சொன்னால் அப்போரின் கிருஷ்ணபரமாத்மா சாட்சாத் பாலசிங்கமே, அவர் சொற்படி கேட்டிருந்தால் இந்நேரம் ஈழ வரலாறு மாறி இருக்கலாம்.
தர்மன் தவறு செய்தான், அதனால் பொறுத்திருப்போம் என்ற கிருஷ்ணனின் வார்த்தைகளுக்கு பாண்டவர் கட்டுபட்டனர்,
என்மீது தவறே இல்லை, அர்ச்சுணா யுத்தம் தொடங்கு என தர்மன் வனவாசம் போகாமல் யுத்தகளம் வந்திருந்தாலோ
கிருஷ்ணா உன் புல்லாங்குழலை தூக்கி நட, கர்ணனையும், பீஷ்மரையும் வெல்லும் வழி எனக்கு தெரியும் என அர்ச்சுணன் பேசி இருந்தாலோ பாரதம் என்னாயிருக்கும்?.."
அதுதான் ஈழத்தில் நடந்தது
புலிகளின் பெரும் தவறு ராஜிவ் கொலை, அடுத்த பெரும் தவறு பாலசிங்கத்தையும், கே பத்மநாபனையும் ஒதுக்கியது.
இதனால் ஏற்பட்டதே பெரும் அழிவும் முடிவும்
உனக்கு தெரியாது, இந்தியாவும் கலைஞருமே ஈழபோருக்கு காரணம்,என சீமானிய வைகோயிச அடிப்பொடிகள் சொல்லிகொண்டிருந்தால், அவர்களுக்கெல்லாம் ஒரே பதில்
பாலசிங்கத்தின் மனைவி அடெல் ஆஸ்திரேலியா பெண்மணி, வெள்ளைகாரிதான், ஆனால் கிட்டதட்ட சோனியா சாயல். கணவனுக்காக தமிழ் கற்றார்
ஈழபோராட்டத்தின் ஆரம்பம், சிக்கல், எது தடை?, எது பிடிவாதம் என்பது நம் எல்லோரையும் விட அடேலுக்கு நன்றாக தெரியும், காரணம் எல்லா பேச்சுவார்த்தைகளிலும் அவரும் பங்குபெற்றிருந்தார்
ஈழப்போர் முடிந்து எங்காவது அவர் பேச கண்டிருக்கின்றோமா?
சீமான், வைகொ, இன்னும் சம்பந்தமில்லா பலபேர் டிவிக்களில் பிரபாகரன் அப்படி, இப்படி என பேசிகொண்டிருக்க, பிரபாகரனிடம் ஒரு மூத்த சகோதரி போல பழகிய அடேல் அமைதி காக்கின்றார்.
அவருக்கு எல்லா ரகசியமும் தெரியும், ஈழமுடிவின் காரணமும் தெரியும், ஆனால் பேசவிட மாட்டார்கள், பேசவிட்டால் பலர் முகத்தில் கரி பூசப்படும்
அப்படி அது அரசியலாக்கபட்டுவிட்டது, அவர் பேசினால் பலபேர் ஓடவேண்டி இருக்கும், இந்த புலிபெருமை எல்லாம் தூரவீசபடும்.
அதனால் அவர் வாய்திறக்க கூடாது என்பதில் பலருக்கு ஆர்வம்
ஈழபோராட்டம் 30 ஆண்டுகள் நடைபெற்றது என்றால், உலகளாவிய ஒரு பார்வை பெற்றது என்றால் அதற்கு ஒரே காரணம் பாலசிங்கம்
அவர் வந்தவுடன் இயக்கம் விஸ்வரூபமெடுத்தது, அவர் இல்லாத இயக்கம் சீட்டுகெட்டென சரிந்தது
இன்று அந்த ராஜதந்திரியின் நினைவு நாள்,
திம்பு பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தியாவிலிருந்து அவர் நாடுகடத்தபட்டதும், பின் அமைதிபடை மோதலின் போது அவர் பிரேமதாசாவோடு போஸ் கொடுத்ததும் நினைவுக்கு வருகின்றன‌
அதே பாலசிங்கம் பின் ராஜிவ் கொலைக்கு பின் கிட்டுவுடன் லண்டனில் போஸ்கொடுத்த காலமும் உண்டு
பின்னாளில் பிரபாகரனை திருந்தமுடியாது என அவர் அறிந்த கால்ங்களில் இந்தியாவுடன் தன் தொடர்பினை ஏற்படுத்த முயன்றதும், இந்தியா கையினை தட்டிவிட்ட காலமும் கண்ணுக்குள் வந்தது
ஒருவகையில் பிரபாகரனுக்கு அஞ்சிய வாழ்வுதான் அவர் வாழ்ந்திருக்கின்றார், படித்தவர், பெரும் ராஜதந்திரி ஆனால் ஒரு முரடனுக்கு முக மூடியாக இருந்ததுதான் பெரும் சோகம்
ஆங்கில புலமையில் தன்னிர்கற்றவர் பாலசிங்கம், அதற்கு எடுத்துகாட்டு கிளிநொச்சி மாநாடு, உலக பத்திரிகையாளர் ஆங்கிலத்தில் கேள்விகளை அள்ளி வீச, அனாசயமாக பதிலளித்தார் பாலசிங்கம்
அதனை கவனித்தவர்களுக்கு ஒரு விசித்திரம் பிடிபடும்
கேள்விக்கான பதிலை வாய்வரை கொண்டுவருவார் பாலசிங்கம், அதற்குள் பிரபாகரன் முகம் மாறும், உடனே கேள்வியினை பிரபாகரனிடம் மொழிபெயர்ப்பார், பிரபாகரன் திருதிருவென விழித்துகொண்டே ஆஆஆஆ..ஈஈஈஈ,, அது.. என எதாவது முணகுவார், பிரபாகரன் பதிலுக்கு சம்பந்தமே இல்லாமல் ஆங்கிலத்தில் பதிலளிப்பார் பாலசிங்கம்
பிரபாகரனுக்கு ஒன்றும் புரியாது, இப்போதிருக்கும் அதிமுக எம் எல் ஏக்கள் போல முழித்துகொண்டே இருந்தார்
ஆனாலும் ஒரு கேள்விக்கு பிரபாரன் முட்டாள்தனமாக பதில் சொல்ல, உலகின் சுருக்கு கயிறு இறுகியது, அது ராஜிவ் கொலையினை பற்றி நிரூபர்கள் சுருக்கு போட, பாலசிங்கள் கேள்வியினை திருப்ப, கொஞ்சமும் யோசிக்காமல் "அது ஒரு துன்பியல் சம்பவம்" என்றார் பிரபாகரன்
அவரை பொறுத்தவரை அது பிரபாகரன் செய்த ஏராளமான கொலையில் ஒன்று, இந்தியர் வருந்தும் துன்பமா? சரி துன்பமான சம்பவம் என சொல்லிவிட்டார்
ஆனால் பால்சிங்கம் ராஜதந்திரமான வார்த்தைகளால் அதனை மறைத்தாலும், துன்பியல் சம்பவம் முத்திரையாயிற்று, அது பால்சிங்கத்தின் வார்த்தை அல்ல,
மாறாக பிரபாகரனின் வார்த்தை
பிரபாகரனை பக்கத்தில் வைத்து ஒரு பேட்டி கூட கொடுக்கமுடியா பாலசிங்கம், 30 ஆண்டுகளாக இயக்கம் நடத்தினார் அல்லவா? அதுதான் ராஜதந்திரம்
ஈழம் அமைவதில் 1991லே மண் அள்ளி போட்டாயிற்று, பின் பின்லேடன் ஆட்டத்தில் அதற்கு சமாதியும் கட்டியாயிற்று
பாலசிங்கம் சொற்படி கேட்டிருந்தால் இன்று ஈழத்தில் ஒரு சுயாட்சியாவது அமைந்திருக்கும், இத்தனை பெரும் அழிவு நடந்திருக்காது என்பதில்தான் பால்சிங்கத்தின் முத்திரை ஈழபோராட்டத்தில் பதிந்திருக்கின்றது.
ஈழ புலிகளுக்கு உண்மையான காவல்காரன் அந்த பாலசிங்கமே என்பதைத்தான் 2009 முள்ளிவாய்க்கால் உலகிற்கு உணர்த்தியது.
இதில் மகா விசித்திரம் என்னவென்றால், 30 வருடம் பழகிய அந்த பாலசிங்கத்திடம் சொல்லாத பல ரகசியங்களை பிரபாகரன் என்னிடம் சொன்னார் என சீமான் என்றொருவர் சொல்லிகொண்டிருக்கின்றார் அல்லவா?
அதுதான் மகா விசித்திரம்
பீஷ்மரிடம், கர்ணனிடம் கூட சொல்லாத ரகசியத்தை துரியோதனன் ஒரு வழிப்போக்கனிடம் சொன்னான் என்பதை நீங்கள் நம்புவீர்களானால், சீமானையும் நம்பிகொள்ளுங்கள்.
அங்கே திருமுருகன் காந்தி என்பவன் மே 17 அன்றுதான் ஈழம் அழிந்தது என சொல்லிகொண்டிருக்கின்றான் , இந்த டிசம்பர் 14 பற்றி எல்லாம் அவன் பேசமாட்டான்.
உண்மையில் ஈழதமிழரின் நம்பிக்கை அழிந்தது 2009 முள்ளிவாய்க்காலில் அல்ல, அது ஆண்டன் பாலசிங்கத்தின் மரணம் அடைந்த டிசம்பர் 14.

அவா ஆத்துல vs நம்மாத்துல



அம்மபீ, வேத பாட சாலையில படிச்சுண்டிருந்தியே?
... ஆமாம் மாமா, ஏழு வருஷம் முடிச்சுட்டேன்...
ஏழு வருஷத்துல என்ன கத்துண்டே? சுருக்கமா சொல்லு..
... நம்மாத்துல நெய்ய பருப்புல ஊத்தணும்...
... அவா ஆத்துல .... நெருப்புல ஊத்தணும்...
.
.. நம்மாத்துல அரிசியை உலையில போடணும்...
... அவா ஆத்துல ..... தலையில போடணும்..
... நம்மாத்துல பூசணிக்காயை கூட்டுல போடணும்..
.
.. அவா ஆத்துல.. .. ரோட்டுல போடணும்..
அவா ஆத்து சாமானையெல்லாம் வீணடிச்சதுக்கு, அவாளண்ட காசும் வாங்கிண்டு,
கடைசியா.. ஸ்வாஹா சொல்லி முடிக்கணும்..

Tuesday, December 11, 2018

கடந்த தேர்தலில் பாஜகவை மக்கள் வெற்றி பெற வைத்ததற்கு காரணம்

கடந்த தேர்தலில் பாஜகவை மக்கள் வெற்றி பெற வைத்ததற்கு காரணம், காங்கிரஸ் மீது சுமத்தப்பட்ட 2G ஊழல் குற்றச்சாட்டும், பாஜக அமைத்த பலமான கூட்டணிகளும், மீடியாக்களின் ஓயாத விளம்பரங்களுமே.
பாஜகவோ தனது வெற்றிக்கு காரணம் இந்துத்துவ கொள்கையும், மோடியுமே என தவறாக புரிந்து கொண்டு அதை தீவிரமாக நம்பவும் ஆரம்பித்து விட்டார்கள். மக்கள் நலனை மறந்து விட்டார்கள்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் மக்கள் அவதியுறும்போது, மக்களே தியாகம் செய்யுங்கள் என இரக்கமில்லாமல் சொன்னார்கள் ஆட்சியாளர்கள். 100க்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள்.
லட்சக்கணக்கான விவசாயிகள் கடன் தொல்லையால் அவதிப்பட்டும் பலர் தற்கொலை செய்துள்ள போதும் அவர்களின் 3000கோடி ருபாய் கடனை தள்ளுபடி செய்யாமல் , 20 கோடீஸ்வரர்களின் 3லட்சம்கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தது பாஜக அரசு.
சிறுபான்மை மக்களை எதிரியாக்கி 50மேற்பட்ட முஸ்லிம்கள் மாட்டின் பெயரால் படுகொலை செய்யப்பட்ட போதும் மவுனம் காத்து , கொலைகாரர்களை ஊக்குவித்தது பாஜக.
மக்கள் வேலை இல்லாமல் அவதிப்பட்டு இருக்கும் போது ராமர் கோவில் கட்ட அவசரத் தீர்மானம் போட்டனர் பாஜக.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் போது நடிகர் குடும்ப விழாக்களில் சந்தோழமாய் இருந்தனர்.
மக்கள் தங்களது வாக்குகளின் பலம் அறிந்து ஜாதி மதம் பார்க்காமல் மக்களுக்காக உண்மையாக உழைக்கும் அரசியல் தலைவர்களுக்கு வாக்களித்தால்தான்,
அண்ணல் அம்பேத்கர் , பண்டிட் நேரு கண்ட உண்மையான ஜனநாயகம் மலரும்.
ஜெய் ஹிந்த்

Tuesday, October 02, 2018

செத்தாலும் சாதி போகாது

கொஞ்ச நாளைக்கு முன்னாடி friend ஒருத்தன் கிட்ட பேசிட்டு இருந்தேன் ..
எப்பயும் சாதி எதிர்ப்பு பேசுரவன் அவன் ...
தீடீர்னு ஒரு நாள் அவங்க வீட்ல சண்ட ஏன்டானு கேட்டேன் இல்லடா பாட்டி சாதி வச்சு திட்டிருச்சுன்னு சொன்னான் என்னடா சொல்றா புரிலன்னு கேட்டேன் ...
எங்க அம்மா அப்பா காதல் பண்ணி கல்யாணம் பண்ணாங்க அப்பா தலித் அம்மா ஒரு இடைநிலை சாதிய சேந்தவங்க அவங்க மத்த பேரன பாக்குற விதமும் என்ன பாக்குற விதமுமே வேற மாறி இருக்கும் சின்ன வயசுல இருந்து என்ன அவங்க தூக்குனதே கெடையாது வீட்டுக்கு போய் சாப்பிட்டாலும் என் தட்டுக்கு மட்டும் வித்தியாசம் இருக்கும் மத்த எல்லாருக்கும் கீரை சாதம் செஞ்சு உருண்ட புடிச்சு வாயில திணிக்கும் போது நா மட்டும் கைல வாங்கி சாப்பிடுவேன் சின்ன வயசு கதையெல்லாம் சொல்லும் போதே கண்ணுல தண்ணி அடக்கிட்டு இருந்தான் ..
நா பேச்ச மாத்த எல்லா கொஞ்ச நாளைக்கு தான் உங்க ஆத்தாலும் ஐயனும் எங்க அம்மையும் அப்பனும் சாகுற வரையும் தான் அப்பறம் எல்லாம் மாறும் னு சொல்கிட்டு இருந்தேன்.
அந்த நேரம் வீட்ட விட்டு கிழவி வெளிய வந்துச்சு ஒரு மொற மொராச்சுட்டு போச்சு ....
கொஞ்ச தொலவு கிழவி போற வரையும் ரெண்டு பேரும் அமைதியா பாத்துட்டு இருந்தோம் இன்னும் வாழுறதே கொஞ்ச நாள் தான் அப்படி இருந்தும் தான் பெத்த பொண்ணு பையன் மேல இவ்ளோ வன்மத்த கக்க வைக்குது சாதி !
ஒரு சிலர் சொல்றாங்க செத்தாலும் சாதி போகத்துன்னு அது இந்த மாறி ஆளுங்க நடமாடும் போது தெளிவா தெரியுது .

Monday, October 01, 2018

பரியேறும் பெருமாள் - ஆனந்த் - ஒர் பார்வை

பரியேறும் பெருமாள் - ஆனந்த் - ஒர் பார்வை
தன்னுடன் படித்த​ SC/ST பிரிவு மாணவர்கள் இட​ ஒதுக்கீடு பெற்று உயர் கல்வியோ அரசு வேலையோ பெற்றால் இடைநிலை சாதியை சேர்ந்தவர்களுக்கும் (BC/MBC) மேல் சாதியை (OC) சேர்ந்தவர்களுக்கும் கடுப்பாக​ இருக்கும்.
தன் கடுப்பை நேருக்கு நேராக​ காட்டாமல் புறம் பேசுவார்கள். மேலும் தன் கல்விநிலைய​ whatsapp குழுமங்களில், தன் கல்விநிலைய Facebook group-களில் SC/ST இட​ ஒதுக்கீட்டிற்கு எதிரான பதிவுகளை share செய்வார்கள்.
தான் இருக்கும் whatsapp குழுமங்களில் Facebook group-களில் SC/ST இட​ ஒதுக்கீட்டில் பயன் பெற்றவர்களும் இருக்கிறார்கள் என்பதை நன்கு தெரிந்து கொண்டு அவர்களை இழிவு செய்ய​ இவ்வாறு செய்வார்கள்.
தன் ஊரை/பள்ளியை/கல்லூரியை சேர்ந்த​ SC/ST-யினரை friend list-ல் வைத்து கொண்டு SC/ST இட​ ஒதுக்கீடு பெற்றவர்களின் சுயமரியாதையை இழிவு செய்யும் வகையில் போடப்படும் meme-களை பகிர்வார்கள்.
தங்களை இழிவு செய்ய​ தான் இவ்வாறு போடுகிறார்கள் என்பதை அறிந்தும் அவ்விடத்தில் பதில் கூறினால் பொதுதளத்தில் சாதி ரீதியிலான அடையாளம் தன் மீது விழுந்து விடும் என கருதி​ SC/ST இட​ ஒதுக்கீட்டில் பயன் பெற்றவர்கள் மவுனமாக​ இருப்பார்கள்.
அந்த​ கல்விநிலையங்களில் பயின்றவர்களில், அந்த​ ஊரை சேர்ந்தவர்களில் "பரியேறும் பெருமாள்" ஆனந்த்களும் இருப்பார்கள். அவர்கள் தான் இங்கே பதில் கூறுவார்கள். ஏன் இட​ ஒதுக்கீடு தேவை என்பதை சுட்டிகாட்டுவார்கள், பலநூறு ஆண்டுகளாய் SC/ST பிரிவினர்
ஒடுக்கப்பட்டதை எடுத்துரைப்பார்கள். இட​ ஒதுக்கீடு என்பது சலுகை அல்ல​ அது சமூகநீதிக்கான உரிமை என வலியுறுத்துவார்கள்.
ஆனால்..ஆன்ந்த்கள் பேச​ ஆரம்பித்ததும் 'இந்த​ குழுவில் அரசியல் பேச​ கூடாது" என்று சொல்லி ஆன்ந்த்களின் வாயை மூட​ முயல்வார்கள்.
அதாவது ஜாதி வெறியர்களை பொருத்த​ வரையில், இட​ ஒதுக்கீட்டை இழிவு செய்து பேசுவது அரசியல் பேசுவதில் வராதாம்! ஆனால் ஆன்ந்த்கள் அவற்றிற்கு பதில் கொடுப்பது மட்டும் அரசியல் பேசுவதில் வந்து விடுமாம்.
இவர்கள் போடும் தடையை மீறி ஆன்ந்த்கள் பேசினால் ஆனந்த்களுக்கு "இந்து விரோதி, கிறிஸ்தவ​ கைக்கூலி, அரேபிய​ அடிமை நாய்" என்ற​ பட்டங்களை கொடுப்பார்கள்.
பெரும்பாலான சமூகவலைத்தள​ group-களில் இதுதான் நிலைமை என தோழர்கள் கூறுகிறார்கள்.

'நாசாவில் நடாராஜர் சிலை இருக்கிறது' கதை

நேற்று ஒரு பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு போயிருந்தேன். ஈழத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முதன்மை விருந்தினராக வந்திருந்தார். அப்படி இவர் பரதநாட்டியம் பற்றி என்னதான் பேசப் போகிறார் என்று ஆர்வமாகக் கவனித்தேன்.
சிறிதரன் எதற்கும் கவலைப்படவில்லை. இருக்கவே இருக்கிறது வாட்ஸ்ஆப் செய்திகள். அதில் சிலவற்றை எடுத்து அடித்து விட்டார். அதில் முக்கியமானது 'நாசாவில் நடாராஜர் சிலை இருக்கிறது' என்று அவர் பேசியது. சிறிதரன் மட்டும் அல்ல, வேறு சிலரும் நாசாவில் நடராஜர் சிலைக் கதையை மேடையில் பேசினார்கள்.
தமிழர்கள் நம்பிக் கொண்டிருக்கின்ற பெரிய பொய்களில் இந்த நடராஜர் சிலைக் கதையும் ஒன்று. நாசாவில் நடராஜர் சிலை இல்லை. இல்லவே இல்லை. நாசாவில் நடராஜ் என்கின்ற இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட விஞ்ஞானி ஒருவர் பணிபுரிகிறார். அவ்வளவுதான்.
ஆனாலும் நடராஜர் சிலை ஒரு இடத்தில் இருக்கிறது. சுவிஸ் நாட்டில் ஜெனிவாவிற்கு அண்மையில் உள்ள மெய்ரினில் அமைந்துள்ள CERN என்கின்ற அணுவாராய்ச்சிக் கூடத்தில் நடராஜர் சிலை இருக்கிறது. இந்தக் கூடத்தில்தான் கடவுளின் துகளைக் கண்டுபிடிக்கின்ற மாபெரும் ஆராய்ச்சியாக சொல்லப்பட்ட துகள்களை மோதவிடுகின்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இங்கேயும் நடராஜர் சிலையை ஐரோப்பிய விஞ்ஞானிகள் வைக்கவில்லை. நடராஜர் சிலை 2004ஆம் ஆண்டு CERN ஆராய்ச்சிக் கூடத்திற்கு இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர்களும் அன்பளிப்பாக வந்து விட்டதே என்று வைத்துக் கொண்டார்கள். இந்தியர்கள் யாராவது அங்கே போனால், நடராஜர் சிலை எங்கே இருக்கிறது என்று விசாரித்து, அங்கே சென்று படம் எடுத்துச் செல்கிறார்கள். இதைத் தாண்டி எந்த முக்கியத்துவத்தையும் CERNஇல் உள்ள நடராஜர் சிலை பெறவில்லை.
இப்பொழுது நாம் சில விடயங்களை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாசாவின் தலைமையகம் அமெரிக்காவின் வாசிங்டனில் அமைந்துள்ளது. CERN சுவிஸில் உள்ளது. நாசா ஒரு விண்வெளி ஆராய்ச்சிக் கூடம். CERN ஒரு அணுவாராய்ச்சிக் கூடம். CERNஇலும் நடராஜர் சிலையை அவர்கள் வைக்கவில்லை. இந்தியாவின் அன்பளிப்பாக வந்து சேர்ந்தது.
ஆனால் நாசாவில் நடராஜர் சிலை இருக்கிறது என்றும் விண்வெளிக்கு ராக்கட் அனுப்புவதற்கு முதல் நடராஜரை விஞ்ஞானிகள் வணங்குவார்கள் என்றும் எத்தனை கதைகள் இந்த நவீன காலத்தில் எம் மத்தியில் உலாவுகின்றன? இவற்றை நம்புகின்றவர்கள்தானே எம்மில் பெரும்பான்மையாக இருக்கிறோம்!
பாராளுமன்ற உறுப்பினர் தொடக்கம் பத்திரிகை ஆசிரியர்கள் வரை இப்படியான வாட்ஸ்ஆப் கதைகளை நம்பி மேடைகளில் பேசுகிறார்கள் எழுதுகிறார்கள். மேடைகளில் பேசுபவர்களாயினும் சரி, ஊடகங்களில் எழுதுபவர்களாயினும் சரி, தேடலும் தயார்படுத்தலும் மிக அவசியம். தவறான, பொய்யான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பக் கூடாது என்கின்ற பொறுப்புணர்வு எல்லோருக்கும் இருக்க வேண்டும்.

திருவாங்கூர் சமஸ்தானத்தில் பெண்கள் எவ்வளவு அடிமையாக இருந்தனர்

சபரிமலை ஐயப்பன் கோயில் உரிமையாக இருந்த திருவாங்கூர் சமஸ்தானத்தில் பெண்கள் எவ்வளவு அடிமையாக இருந்தனர் என்பது தோள் சீலை போராட்டத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம். ஒரு காலத்தில் உயர் சாதிப் பெண்களைத் தவிர இடைநிலை பிற சாதி பெண்கள் மேலாடை அணியாமல் திறந்த மார்புடன் தான் இருக்க வேண்டும். அதுதான் பண்பாடு மத கலாச்சாரம் என திருவாங்கூர் சமஸ்தானத்தில் சட்டம் இருந்தது. அதன் நீட்சிதான் பெண்கள் சபரிமலை கோயிலுக்கு செல்ல கூடாது என்பதாகும்.
இன்று இந்து மதக் கலாச்சாரம் என்று பெண்களுக்கு அவர்களின் உரிமைகளுக்கு எதிராக ஐயப்பன் கோயிலுக்கு செல்லக்கூடாது என சிந்திக்கும் பேசும் வலியுறுத்தும் நண்பர்கள் அனைவருமே இடைநிலைச் சாதிகள் என்பதை மறந்து விடக்கூடாது.



*******
தோள் சீலைப் போராட்டம் 1822 முதல் 1859 வரை
கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்ளான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதியுகள் திருவாங்கூர் சமசுதானத்தின் கீழ் மன்னராட்சியின் கட்டுப்பட்ட்டில் இருந்தது. அப்போது மனுதர்ம அடிப்படையில் ஆட்சி நடந்து வந்த இந்து நாடாக இருந்தது.அந்த கால கட்டத்தில் சாதீயக் கொடுமைகளால் மக்கள் அதிக அடக்குமுறைக்கு ஆளாகினர். இந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார்(நாடார்), பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட 18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் மார்பகத்தை திறந்து போடுவதுதான் உயர் சாதியினருக்குத் தரும் மரியாதை என்று தரம் தாழ்ந்த எண்ணத்தில் திருவாங்கூர் சமசுதானம் ஒரு நடைமுறையை வகுத்திருந்தது. இதன்படி 18 சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியாமல் அவமானத்துடன் வாழ்ந்து வந்தனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து சீர்திருத்த கிறித்தவத்தை ஏற்றுக்கொண்ட நாடார் சாதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் சாதிப் பெண்களுக்கு மார்பை மறைத்து சேலை அணிய உரிமை கோரிப் போராடத் தொடங்கினர். இது தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது. 37 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு திருவிதாங்கூர் அரசு நாடார் கிருத்தவ பெண்களுக்கு தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் உரிமை அளித்தது.
போராட்டத்திற்கான காரணம்
ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் ஜன்மிசம்பிரதாயமும், 10 மற்றும் 11 ம் நூற்றான்டுகளில் ஆரியப் பிராமணர்களிம் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் சேர நாட்டில் ஓங்கத் தொடங்கிய வேளையில் சாதிக் கட்டுப்பாடுகள் உருவெடுத்தன. 12 ம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் ஜென்மி சம்பிரதாயத்தின் உத்வேகத்தால் அதிகரித்து, மேல் சாதி இந்து என்றும், கீழ் சாதி இந்து என்றும் பாகுபாடுகள் உருவாகி காணாமை, நடவாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாகிற்று. இந்த தீமைகளில் ஒரு பிரிவு தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு. உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும். சான்றாக நம்பூதிரிகளின் முன்பு சூத்திர நாயர் பெண்கள் மார்பகங்களை மறைக்க கூடாது, அதேப் போன்று சாதி வரிசையின் அடிப்படையில் கீழ் சாதி இந்து பெண்கள் அனைவரும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும் என்பது மரபாகிவிட்டது. இவ் உடைக் கட்டுப்பாட்டை மீறினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.[1]
[தொகு]உடை கட்டுபாடு
திருவிதாங்கூர் சமசுதானத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் தங்கள் இடுப்பிற்கு மேல் உடை அணிய மறுக்கப் பட்டனர். கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்களுக்கும் இது திணிக்கப்பட்டது. உயர் சாதி பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி அளிக்கப் பட்டது என்றாலும் நம்பூதிரிப் பிரானணர்கள் முன்பு அனைத்துச் சாதிப் பெண்களும் திறந்த மார்புடனே நிற்க வேண்டும் என்ற ஈனக் கட்டுப்பாடு இருந்தது. இந்த உடை கட்டுப்பாடுகள் மிக கடுமையாக கடைபிடிக்கப் பட்டன. உடை அணியும் விதத்தை வைத்தே மக்களை உயர்ந்தவர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டார்கள். கொத்தனாவிளை என்ற ஊரில் 1822 ம் ஆண்டு ஒரு சிறிய போராட்டம் நடைப்பெற்றது. அதன் பிறகு 37 வருட காலம் இப் பேராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட போராட்டம் 1822 முதல் 1823 வரையும், இரண்டாம் கட்டப் போராட்டம் 1827 முதல் 1829 வரையும், மூன்றாம் கட்டப் போராட்டம் 1858 முதல் 1859 வரையும் நடைப்பெற்றது.
[தொகு]முதல் போராட்டம்
சீர்திருத்தக் கிறித்தவ சமயத் தொண்டரான மீட் பாதிரியார் கிறித்தவ பெண்களின் மார்பகங்களை மறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.இதனால் கிறித்தவ பெண்கள் தங்கள் மார்பகங்களை துணிந்து மறைத்ததுமல்லாமல், அதற்கு மேல் ஒரு மேலாடையையும் பயன்படுத்தினர். இதனால் மேல் சாதியினர் கலவரம் செய்தனர். மே மாதம் 1822ம் வருடம் கல்குளம் மற்றும் இரணியல் பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதன் காரணமாக மீட் ஐயர் என்ற ஐரோப்பிய மறைப்பணியாளர் ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் என்பவருக்கு இச் சம்பவங்களைப் பற்றி விரிவாக கடிதம் எழுதினார். இதன் பயனாக ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் பத்மநாபபுரம் நீதிமன்ற விசாரனைக்கு உத்தரவிடுகிறார். இதன் பயனாக 1823 ம் ஆண்டு வெளியிடப்பட்ட நீதிமன்ற உத்தரவுப் படி சீர்திருத்தக் கிறித்தவர்களுக்கு மட்டும் குப்பாயம் என்ற உடையை அணியலாம் என்று தீர்ப்ளிக்கப் படுகிறது.
[தொகு]இரண்டாம் கட்ட போராட்டம்
மிக அதிகமாக பாதிக்கப் பட்ட இடங்களான ஆத்தூர், திற்பரப்பு, கண்ணனூர், அருமனை,உடையார்விளை, புலிப்பனம் ஆகிய இடங்களில் மீண்டும் 1827 ம் ஆண்டு போராட்டம் வெடித்தது. 1823 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ஒரு நிரந்தரமான தீர்வை அளிக்கத் தவறியது. இந்த ஆணையின் அடிப்படையில் கிறித்தவப் பெண்கள் உயர்சாதிப் பெண்கள் அணிவது போன்ற ஆடைகள் அணியக்கூடாது என்று தடை விதிக்கப் பட்டது. இதனால் கிறித்தவ நாடார் பெண்களிடம் அதிருப்தி ஓங்கியது. கிறித்தவ நாடார் பெண்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட குப்பாயம் என்ற மேலாடையை விட ஐரோப்பிய மறைப்பணியாளர்கள் மற்றும் உயர் சாதி பெண்கள் அணியும் உடைகளை அணிய ஆரம்பித்தனர். இவர்களைப் பின்பற்றி இந்து நாடார் பெண்களும் மேலாடை அணிய ஆரம்பித்தனர். இவர்களுக்கு முத்துக்குட்டி போன்றோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். இதற்கு ஆட்சியில் இருந்த நாயர்கள் எதிர்பு தெரிவித்தனர்.
[தொகு]மூன்றாம் கட்ட போராட்டம்
1858 ம் ஆண்டு விக்டோரியா மகராணியின் பிரகடனத்தையடுத்து தோள் சீலைப் போராட்டம் தீவிரமடைந்தது. விக்டோரியா மகராணியின் பிரகடனம்
'one soceity or Government should not interfere into the religious regulations or social restrictions of other society. Government servants should not intervene and discriminate anybody in the customary affairs that is being followed in the respective soceities. The violators of this order would be punished'[2]
இந்த பிரகடனம் நவம்பர் 1, 1858 ம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்தியாவை ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனியிடமிருந்து அரசாங்க கட்டுப்பாட்டில் கொண்டு வரும் போது ஆற்றிய உரை. இதை எதிர்த்து கிறித்தவ மறைப் பணியாளர்கள் ஆங்கிலேய அரசிடம் முறையிட்டனர். நெய்யாற்றின்கரையில் தொடங்கியப் போராட்டம் பாறசாலை, நெய்யூர் போன்ற ஊர்களுக்கும் பரவியது. பல இடங்களில் தெருக்களிலும், சந்தைகளிலும் பெண்கள் தாக்கப்பட்டனர். பெண்களின் மேலாடைகள் கிழித்து எறியப்பட்டன. ஆண்கள் தங்கள் உயிருக்கு பயந்து பல இடங்களில் ஒளிந்து வாழ்ந்து வந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் ஐரோப்பிய மறைபரப்பாளர்களின் பங்களாக்களில் ஒளிந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். டிசம்பர் 30, 1859 ம் நாள் கோட்டாறுப் பகுதியில் வைத்து கிறித்தவ நாடார்களுக்கும் உயர் சாதி நாயர்களுக்கும் இடையே மிகப் பெரிய சண்டை மூண்டது. இந்து நாடார்களும் கிறித்தவர்களுடன் இதில் கைகோர்த்து கொண்டனர்.
[தொகு]உடை உடுத்த உரிமை
இப் போராட்டத்திம் விளைவாகவும் ஆங்கிலேயர்களின் நெருக்கடியின் காரணமாகவும் திருவிதாங்கூர் அரசரும், திவானும் அனைத்து நாடார் பெண்களும் மத வேறுபாடு இல்லாமல் குப்பாயம் என்கின்ற மேலாடை அணியலாம் என்று உரிமை அளித்தனர். இதற்கான அரசாணை 26, சூலைத் 1859 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் உயர் சாதி பெண்கள் அணிவது போன்ற ஆடை அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த உரிமை மற்ற கீழ் சாதியினருக்கு அரசு வழங்கவில்லை. எனினும் கிறித்தவப் பெண்கள் அனைவரும் மேலாடை அணிந்தனர்.
[தொகு]மேற்கோள்கள்
LIBERATION OF THE OPPRESSED, A CONTINUOUS STRUGGLE, A CASE STUDY (Since 1822 A.D.)
முத்துக்கமலம் இணைய இதழில் நெல்லை விவேகநந்தா எழுதிய கட்டுரை
மதத்தை வேரறுத்த தோள்சீலைப் போராட்டம்
தோள் சீலைப் போராட்டம்
தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்
மறுபக்கம் தோள் சீலைப் போராட்டம்
சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 5. உடை
எழுதப்படாத சரித்திரம் சமூக புரட்சியாளர் வைகுண்ட சாமி!
எழுதப்படாத சரித்திரம்
பொன்னீலன் எழுதிய தெற்கிலிருந்து
பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் மையம் வெளியிட்ட பண்பாட்டு வேர்களைத் தேடி
அ.கா.பெருமாள் எழுதிய தென் குமரியின் கதை.

Wednesday, September 26, 2018

ஆங்கில வார்த்தைகளுக்குள் வித்தியாசம்

ஒரு நண்பர் August என்பதற்கும் august என்பதற்கும் வித்தியாசம் உண்டா? என்று கேட்டிருக்கிறார்.
முதன்முறை படித்தபோது இந்த இரண்டு ஆங்கில வார்த்தைகளுக்கும் வித்தியாசம் புரிய வில்லை.
பிறகுதான் புரிந்தது அவர் Capitonym பற்றிக் கேட்கிறார் என்று.
அதாவது அவர் குறிப்பிட்டதில் ஒரு வார்த்தை (August என்று) Capital Letter- ல் தொடங்க, மற்றொன்று ‘august’ என்று Capital Letter இல்லாமல் தொடங்குகிறது.
இதுபோன்ற வார்த்தைகளை ஆங்கிலத்தில் Capitonym என்பார்கள்.
அதாவது முதல் எழுத்தை Capital ஆக மாற்றிவிட்டால் அந்த வார்த்தையின் அர்த்தம் மாறிவிடும்.
சில சமயம் உச்சரிப்புகூட மாறிவிடும். நண்பர் சுட்டிக் காட்டிய வார்த்தைகளையே எடுத்துக் கொள்ளலாமே.
August என்பது ஒரு மாதத்தின் பெயர். ரோமானியச் சக்கரவர்த்தி Augustus என்பவர் பெயரிலிருந்து உருவானது.
மாறாக august என்ற வார்த்தைக்குப் பொருள் மரியாதைக்குரிய மற்றும் கவரக்கூடிய என்பதாகும்..
அதாவது Respected, distinguished, renowned, prestigious போன்ற வார்த்தைகளுக்குச் சமமானது. I was in an august company என்றோ It was an august performance என்றோ குறிப்பிடலாம்.
வேறொரு மாதம் கூட இந்த வகையைச் சேர்ந்ததாகிறது. March என்ற வார்த்தை வருடத்தின் மூன்றாவது மாதத்தைக் குறிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.
மாறாக march என்பது ராணுவத்தில் நடப்பதுபோல சீரான இடைவெளிகளில் நடப்பது என்று அர்த்தம்.
மேற்கூறியவற்றில் இரண்டாவதாகக் குறிப்பிட்ட வார்த்தைகள் (august, march ஆகியவை) வாக்கியத்தின் தொடக்கத்தில் இடம் பெற்றால் என்ன செய்வது என்கிறீர்களா? (வாக்கியத் தொடக்க எழுத்து capital letterல்தானே எழுதப்பட வேண்டும்!)
அப்படி இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். நான் கூட அதனால்தான் ‘மாறாக’ என்ற வார்த்தையை இடம்பெறச் செய்திருக்கிறேன்.
சில சமயம் ஒரு குறிப்பிட்ட பொருளை அதே போன்ற பிற பொருள்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டவும் Capitonym பயன்படும்.
பிரபஞ்சத்தில் பல சூரியன்கள் உள்ளன. அவற்றில் ஒன்றைக் குறிப்பிட sun என்றும் பூமி போன்ற கிரகங்கள் சுற்றும் சூரியனை Sun என்றும் குறிப்பிடுவார்கள்.
அதேபோல பூமியைச் சுற்றும் நிலவுக்கு மட்டும் Moon என்று ஸ்பெஷல் அந்தஸ்து.
பிற கிரகங்களைச் சுற்றும் பொருள் moon. இப்படி வானியல் நூல்களில் குறிப்பிடுவதுண்டு.
Church என்றால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகக் கூடி இருக்கும் மக்கள் குழு. முதல் எழுத்தைச் சிறியதாக்கி church என்றால் அது ஒரு கட்டிடத்தை மட்டுமே குறிக்கிறது.
Liberal என்றால் அது லிபரல் கட்சியைச் சேர்ந்தவர்களைக் குறிக்கிறது. மாறாக liberal என்றால் அது தாராளமயமான என்பதைக் குறிக்கிறது.
Cancer என்பது ஒரு குறிப்பிட்ட வானியல் கூட்டம் அல்லது ராசிகளில் ஒன்று. புற்றுநோயைக் குறிக்க cancer என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். ( தூள் படத்தின் ரீமா சென் விவேக் மயில்சாமி நினைவுக்கு வருகிறார்களா?)
Titanic என்றால் நீரில் மூழ்கிய அந்தப் பிரம்மாண்டக் கப்பலைக் குறிக்கும் என்பது தெரிந்திருக்கும். முதல் எழுத்தைச் சிறியதாக்கி titanic என்றால் பிரம்மாண்டமான என்று மட்டுமே பொருள்.
இந்த வாக்கியம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.
A turkey may march in Turkey in May or March!
(Turkey என்பது துருக்கி நாட்டையும் turkey என்பது வான்கோழியையும் குறிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்தானே?)
VERBATIM
Verb என்பதற்கும் verbatim என்பதற்கும் என்ன தொடர்பு என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். தொடர்பு உண்டு யார் சொன்னது?
Verbatim என்ற வார்த்தையைக் கொஞ்சம் விரிவாகவே விளக்கினால் தெளிவாகப் புரியும்.
அப்பாவும் மகனும் ஒரு கண்காட்சிக்குப் போனார்கள். அங்கே நயாகரா பற்றி ஒரு குறும்படம் காட்டப்பட்டது. வீட்டுக்கு வந்ததும் அப்பா தன் மனைவியிடம் இப்படிக் கூறினார். அந்தக் குறும்படத்தின் தொடக்கத்திலே ஒரு ஸ்லைடு போட்டாங்க கீதா. நயாகரா பத்தி இப்படித் தொடங்கினாங்க. “அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே..’’.
அப்பா இப்படி ஆரம்பித்தவுடனேயே மகன் குறுக்கிட்டான். “தப்பா சொல்றீங்க அப்பா. ‘அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே’ கிடையாது. ‘கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே’ன்னுதான் சொன்னாங்க’’ என்று திருத்தினான். .
அப்பா ஒப்புக்கொண்டு தன் வாக்கியத்தை மாற்றிச் சொன்னார்.
“கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நீர்வீழ்ச்சி ..’’. இப்படித் தொடரும்போது “தப்பு தப்பு’’ என்று குறுக்கிட்டான் மகன். “நீர்வீழ்ச்சின்னு அவங்க சொல்லலை. அருவின்னுதான் சொன்னாங்க’’ என்றான்.
அந்த மகன் சரியான Verbatim-காரன்! அதாவது ஒருவர் சொன்னதை “வார்த்தைக்கு வார்த்தை அச்சுப்பிசகாமல்’’ சொல்வதோ எழுதுவதோதான் VERBATIM.
REFUSE REFUTE REBUT
Refuse என்றால் மறுப்பது. He refused the invitation. I refuse to accept your view.
Refute என்பதை ஆதாரத்துடன் மறுப்பது என்கிற அர்த்தத்தில் பயன்
படித்ததில் பிடித்தது

சைமன் கமிஷனில் சமர்ப்பிக்கப்பட்ட ரிப்போர்ட்

இது 1929ல் இந்தியாவில் இருந்த நிலைமை. சைமன் கமிஷனில் சமர்ப்பிக்கப்பட்ட ரிப்போர்ட். ஒவ்வொரு மாகாண சட்டமன்றங்களிலும் எத்தனை பிரதிநிதிகள் தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாக இந்திய அரசு சட்டம், 1919 படி கவர்னரால் நியமிக்கப்படலாம் என தெரிவிக்கும் அட்டவணை இது. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது மெட்ராஸ் மாகாணத்தில் மற்ற எல்லா மாநிலங்களை விட அதிகமான தாழ்த்தப்பட்ட பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டது தான். மெட்ராஸ் மாகாணத்தில் 65லட்சம் தலித்துகளுக்கு 10 பிரதிநிதிகள், வங்காளத்திலும் உ.பியிலும் 1 கோடி தலித்துகளுக்கு 1 பிரதிநிதி. 1900களில் தமிழகத்தில் தலித் அரசியல் பிற மாநிலங்களை காட்டிலும் மிகவும் முன்னேறிய நிலையில் இருந்ததற்கான சான்று இது. உரிமைக்காக தொடர்சியாக தலித்துகள் சார்பாக அவர்களின் பிரதிநிதிகள் ஆங்கிலேய அரசிடம் வைத்த கோரிக்கைகளின் விளைவு இது.


Friday, September 21, 2018

நாஞ்செலியும் பார்ப்பனர் கொடுமையும்...

நாஞ்செலியும் பார்ப்பனர் கொடுமையும்...

ஆரிய வருகைக்கு முன்பு வரை, அப்போதைய இந்தியாவில் சாதிகள் என்பது இருந்ததில்லை. அவர்கள் வருகைக்கு பின்பு இந்தியாவில் வாழ்ந்த பூர்வ குடிகள் அனைவரும் தென்னிந்தியா பக்கம் நகரத்துவங்கினர். வட இந்தியா முழுவதும் சாதிக் கொடுமைகள் அரங்கேறிய போது, தென்னிந்தியாவில் சாதிக் கொடுமைகள் என்று இருந்ததே இல்லை. வட இந்தியாவை முழுவதும் வேத கலாச்சாரத்திற்கு மாற்றிய பார்ப்பனர்கள், தென்னிந்தியாவிற்கு கி.பி 2 முதல் ஏழாம் நூற்றான்டுகளில் குடியேறத் துவங்கினர்.

அப்படி திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குடியேறிவர்கள் தான் நம்பூதிரிகள் என்ற பார்ப்பனர்கள்.

தங்களை பூமியில் வாழும் கடவுளாக பாவித்துக் கொண்டு, அரசன் முதல் அடித்தட்டு மக்கள் வரை தங்களுக்கு சேவை செய்ய வேண்டியவர்கள என்று பிரச்சாரம் செய்த நம்பூதிரிகள், திருவிதாங்கூர் சமஸ்தானத்தையே தங்கள் வசம் கொண்டு வந்தனர். நம்பூதிரிகள் என்றழைக்கப்படும் இந்த பார்ப்பனர்கள் வந்த பிறகு தான் சாதிக் கொடுமைகள் தலைதூக்கத் துவங்கியது.


நாடார், ஈழவர், முக்குவர், பரவர், புலையர் என சுமார்
பதினெட்டு சாதிகள் தாழ்த்தப்பட்ட சாதிகளாக அறிவித்த பார்ப்பனர்கள், அவர்களின் மீது கொடுமைகளை கட்டவிழ்த்து விட்டனர்.
நம்பூதிர்களை கண்டால் நாடார்கள் 72 அடி தள்ளியே நிற்க வேண்டும். கோவில்களுக்கு செல்லக்கூடாது. பொதுக் கிணறு, குளம் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என தீண்டாமைக் கொடுமைகளை திருவிதாங்கூர் சமஸ்தான ராஜா உதவியுடன் அரங்கேற்றினர் பார்ப்பனர்கள்.

நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்கு ஆடைகள் விசயத்திலும் மக்களை ஒடுக்கினார்கள். கீழ் சாதியினர் என்றழைக்கப்படுபவர்கள் யாரும் மேலாடை அணியக்கூடாது. முட்டுக்கு கீழே ஆடையும் அணியக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்தனர். பார்ப்பனர்களுக்கு முன்பு இந்த பதினெட்டு சாதி பெண்களும் திறந்த மார்புடன் தான் உலவ வேண்டும். பெண்கள் திறந்த மார்புடன் உலாவுவதே எங்களுக்கு அளிக்கும் மரியாதை என்றனர் பார்ப்பனர்கள். அதனை மீறி மேலாடை அணிந்தால், அந்த ஆடை கிழிக்கப்பட்டு மரண தண்டனை அளிக்கப்படும்.


பெண்களுக்கு மட்டுமல்லாமல்,
ஆண்கள் மீசை வைத்திருந்தால் அதற்கு வரி விதிக்கப்பட்டது. கைத்தடி வைத்திருந்தால் வரி, கைப்பிடி இருக்கும் குடை வைத்திருந்தால் அதற்கு வரி என கொடுமைகள் செய்தது பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானம். இதில் கொடுமை என்னவெனில் சோறு என்ற வார்த்தையை கூட சொல்லக்கூடாது, கஞ்சி என்று தான் சொல்ல வேண்டும் என்றளவிற்கு அடக்குமுறைகள் ஏவப்பட்டது.

பெண்கள் மார்பகங்களை காட்டுவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் மார்பகங்களின் அளவிற்கு ஏற்றவாறு வரி செலுத்த வேண்டும் என்றும் புதிய சட்டம் போடப்பட்டது. இதனை எதிர்த்து பல பெண்கள் போராடினார்கள். அதில் குறிப்பிடத்தக்க பெண் தான் வீரமங்கை நாஞ்செலி.


30 வயதான நாஞ்செலி கேரளாவின் சேர்தலா என்ற பகுதியில் வசித்து வந்தார். பார்ப்பனர்களின் இந்த கொடுமையை எதிர்த்து மார்பு வரி செலுத்த முடியாது என்று போராடி வந்தவர், வரியையும் செலுத்தாமல் இருந்தார். பல மாதங்களாக வரி செலுத்தாத நிலையில், வரியை வசூல் செய்யும் பிராவதியார் என்ற அதிகாரிகள் நாஞ்செலி மீது கோபமடைந்தனர்.

நாஞ்செலி வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் வரியை தருமாறு கேட்டனர். இருங்கள் வருகிறேன் என்று உள்ளே சென்ற நாஞ்செலி, வாழை இலையையும் கையில் ஒரு அரிவாளையும் எடுத்து வந்தார். என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்த அதிகாரிகள் மத்தியில், யாரும் எதிர்பாராத விதமாக, தான் வைத்திருந்த அரிவாளால், தனது இரண்டு மார்பகங்களையும் அறுத்து வாழையில் இலையில் வைத்து, மார்பகம் இருந்தால் தானே வரி கேட்பீர்கள் என்று கேட்க, அரண்டு போயினர் சமஸ்தான அதிகாரிகள்.

மார்பகத்தை வெட்டியதால் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு நாஞ்செலி இறந்து போனார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் செய்த தொடர் போராட்டத்தால், வேறு வழியில்லாமல் மார்பக வரியை ரத்து செய்தது திருவிதாங்கூர் சமஸ்தானம்.

நாஞ்செலியின் மார்பகம் அறுந்த உடலை பார்த்த அவளது கணவர் சிருகந்தன், அவரது இறுதி சடங்கில், உடலுக்கு தீ வைத்து விட்டு, அதன் மீது பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார். நாஞ்செலி வாழ்ந்த இடம் முலைச்சிபரம்பு என்று அழைக்கப்பட்டது.

பார்ப்பனர்களுக்கு எதிராக போராடிய எல்லா வரலாறுகளையும் தற்போது மறைத்து வரும் பா.ஜ.க அரசு, நாஞ்செலி வரலாறை வெறும் கதை என்றும் அதற்கு ஆதாரம் இல்லை என்றும் கூறி, கடந்த 2016 ஆம் ஆண்டு பாடப்புத்தகத்தில் இருந்த நாஞ்செலி வரலாறை நீக்கியது குறிப்பிடத்தக்கது.
நன்றி தோழர்

முஹம்மது பல பெண்களை திருமணம் செய்தது ஏன்?

முஹம்மது பல பெண்களை திருமணம் செய்தது ஏன்?
.
.
உலக மக்கள் அனைவருக்கும் உலகம் அழியும்வரை வழிகாட்துவதற்காக அனைத்தையும் அறிந்த, யாவற்றையும் படைத்த இறைவனான அல்லாஹ் அனுப்பிய இறுதித் தூதர் என்று சொல்லப்படும் முஹம்மது அவர்கள் தனது வாழ்க்கையில் பதினோரு பெண்களை திருமணம் செய்து அவர்களுடன் வாழ்ந்தார் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஆதாரபூர்வமான அறிவிப்புகள் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் ஆகும்.
.
.
.
முஹம்மது அவர்கள் ஒரே தடவையில் அதிகப் படியாக பத்து மனைவிகளுடன் வாழ்ந்து இருக்கின்றார், மரணிக்கும் வரை அவருடன் பத்து மனைவிகள் இருந்துள்ளார்கள். அவர் மணமுடித்த பதினொருவரில் பத்துப்பேரை பருவமடைந்தவர்களாகவும், ஒருவரை சிறுமியாகவும் திருமணம் செய்திருக்கின்றார். இந்த பதினோரு பேருக்கு மேலதிகமாக சரியாக கணக்கிட முடியாத எண்ணிக்கையில் ‘வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்’ என்ற பெயரில் பாலியல் அடிமைகளையும் வைத்து இருந்தார். (இவை அனைத்தும் இஸ்லாமிய மூலாதாரங்களில் உள்ள விடயங்களாக இருந்தாலும் பதிவின் நீளம் கருதி ஆதரங்கள் தவிர்க்கப் படுகின்றன.)
.
.
.
எல்லா விடயங்களிலும் அழகிய முன்மாதிரி (உஸ்வதுல் ஹசனா) உள்ளவர் என்று குரான் சான்றிதழ் வழங்கும் முஹம்மது அவர்கள் தன்னைப் பின்பற்றும் முஸ்லிமான ஆண்களுக்கு ஒரே தடவையில் அதிகபட்சமாக நான்கு மனைவிகளை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கிவிட்டு, அந்த அதிகபட்ச அனுமதிக்கு முரணாக தான் மாட்டும் 10 மனைவிகளை ஒரே தடவையில் வைத்துக்கொண்டாலும், தான் எதற்காக ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகளை வைத்திருக்கின்றேன் என்பது குறித்து எங்கேயும் விளக்கம் வழங்கியதாக விபரங்கள் இல்லை..
.
.
.
முஹம்மதிற்கு மிகவும் பிற்பட்ட காலத்தில் யுத்தங்கள் குறைவடைந்து கருத்தியல் ரீதியாக இஸ்லாத்தை பிரச்சாரம் செய்து பரப்ப வேண்டிய நிலைமை ஏற்பட்ட பொழுது இஸ்லாத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் முக்கியமானவையாக முஹம்மது நபியின் பலதார திருமணங்களும், சிறுமியை திருமணம் செய்ததும் அமைந்திருந்தன. இந்நிலையில் திருமணங்கள் குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து இஸ்லாத்தை காப்பாற்றுவதற்காக பிற்காலத்தவர்களால் பல நூல்கள் மற்றும் விளக்கங்கள் எழுதப்பட்டன. இராஜதந்திரம், கோத்திரங்களுக்கு இடையில் ஒற்றுமை ஏற்படுத்துதல், பெண்களுக்கு வாழ்வு கொடுத்தல் என்று முஹம்மது அவர்களின் திருமணங்களுக்கு புத்திசாலித்தனமாக விளக்கம் கொடுக்க முற்பட்ட பிற்கால இஸ்லாமிய அறிஞர்கள், முஹம்மது அவர்கள் இச்சைக்காகவோ, பெண்ணாசைக்காகவோ காமத்திற்காகவோ திருமணம் செய்யவில்லை என்று நிறுவுவதற்கு பகீரதப் பிராயத்தனங்களை மேற்கொண்டு இருப்பதை தாராளமாகக் காணலாம். எனினும் முஹம்மது அவர்களின் நெருங்கிய பணியாளராகிய அனஸ் இப்னு மாலிக் அவர்களோ “முஹம்மது அவர்களுக்கு முப்பது ஆண்களின் பாலியல் சக்தி வழங்கப்பட்டு இருந்தது” என்று அறிவிக்கும் ஹதீஸ் புஹாரி கிரந்தத்தின் பாகம் ஒன்று நூல் 05 இல் 268 ஆவது ஹதீஸாக இடம்பெற்றுள்ளது. இதே ஹதீஸ் மேலும் பல இடங்களிலும் பதிவாகி உள்ளமையானது பிற்கால அறிஞர்களின் சப்பைக்கட்டு விளக்கங்களை குப்பைத்தொட்டியின் வாசலுக்கே தள்ளிவிடுகின்றது.
.
.
.
இது மட்டுமின்றி இப்னு ஷாத் உடைய கிதாப் அல் தபகாத் அல் கபீர் பாகம் ஒன்றின் 438 ஆவது பக்கத்தில் இடம்பெற்றுள்ள ஹதீஸ் “அல்லாஹ்வின் தூதர் கூறினார், ஜிப்ரீல் ஒரு பாத்திரத்தில் கொண்டு வந்ததை நான் அருந்தியதிலிருந்து எனக்கு நாற்பது ஆண்களின் பாலியல் பலம் கிடைத்து விட்டது.” என்று அமைந்துள்ளது. இது மட்டுமின்றி மேற்குறிப்பிட்ட கிதாபின் 469 ஆவது பக்கத்தில் ஆயிஷா அறிவிக்கும் ஹதீஸ் “நபிக்கு உலகில் மிகவும் பிரியமான பொருட்கள் வாசனைத் திரவியங்கள், பெண்கள் மற்றும் உணவு ஆகியவையாம். அவர் உணவைத் தவிர மற்ற இரண்டையும் அடைந்துகொண்டார்” என்று அமைந்துள்ளது. மேலும் நஸயி 3939 இல் பதியப்பட்டுள்ள அனஸ் இப்னு மாலிக் அறிவிக்கும் இன்னொரு ஹதீஸ் “பெண்களும் வாசனைத் திரவியங்களும் எனக்கு உலகில் பிரியமானவையாக ஆக்கப்பட்டுள்ளன” என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள் என்று அமைந்துள்ளது.
.
.
.
உலகம் அழியும்வரையான உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டுவதற்காக இறைவனால் அருளப்பட்ட வழிகாட்டி என்று சொல்லப்படும் இஸ்லாமிய புனித நூலான குரானில் முஹம்மதிற்கும், அவரது மனைவிகளுக்கும் இடையில் அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகளுக்கு பஞ்சாயத்து பண்ணுவதற்காக மட்டுமே பல வசனங்கள் இடம்பெற்று இருப்பதை காணலாம். முஹம்மதின் திருமணங்களின் நோக்கம் என்னவாக இருந்தது என்கின்ற வாதப் பிரதிவாதங்களுக்கு அல்லாஹ்வின் வார்த்தை என்று முஸ்லிம்கள் நம்பும் குரான் முற்றுப்புள்ளி வைக்கும் வசனம் சூரத்துல் அஹ்ஸாப் இன் 53 ஆவது வசனமாக இடம்பெற்றுள்ளது. “(நபியே) வேறு பெண்களின் அழகு உம்மைக் கவர்ந்த பொழுதும் அவர்களை திருமணம் செய்வதற்கோ அல்லது உமது மனைவிகளை மாற்றிக்கொள்வதற்கோ உமக்கு அனுமதியில்லை, எனினும் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களின் விடயத்தில் உமக்கு விலக்களிக்கப் பட்டுள்ளது.” என்ற வகையில் குறித்த வசனத்தின் மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது. இந்த வசனத்தின் வெவ்வேறு மொழிபெயர்ப்புக்களை https://goo.gl/dFYmzc என்ற இணைப்பில் காணலாம். இந்த வசனம் ஏற்கனவே குப்பைத் தொட்டியின் வாசலுக்கு தள்ளப்பட்டுவிட்ட அறிஞர்களின் சப்பைக்கட்டு விளக்கங்கள், சமாளிப்புகளை எட்டி உதைத்து குப்பைத் தொட்டிக்குள் தள்ளிவிடுவதாக அமைந்துவிட்டது. ஆக, பலபேர் பலவாறு விளக்கங்கள், சமாளிப்புகள் செய்தாலும், பெண்களை போகப் பொருளாகப் பார்த்த முஹம்மது அவர்கள் பல திருமணங்களை செய்ததன் காரணம் பெண்களின் அழகு மற்றும் காமம் போன்றவைதான் என்றுதான் குரானும், ஹதீஸ்களும் தெளிவான ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளன.
இப்பொழுது சொல்லுங்கள் : “முஹம்மது நபி பல பெண்களை திருமணம் செய்தது ஏன்?”.