Friday, December 14, 2018

இந்திராவின் மருமகள், இந்தியாவின் மகள்

1997 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் நாள், அன்றைய காங்கிரஸ் தலைவர் சீத்தாராம் கேசரிக்கு 10, ஜன்பத் இல்லத்தில் இருந்து ஒரு குறிப்பு வந்தது . அதை வாசிக்கும் போதே அவர் முகம் மாறியது " It is all over... She is coming " என்று அந்த குறிப்பை சோகமாக வாசித்து முடித்தார். அந்த எட்டு வரி குறிப்பு தான் சோனியா காந்தியின் அரசியல் வாழ்க்கையின் முதல் புள்ளி. அந்த குறிப்பில் 1998ஆம் ஆண்டு பாராளமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்யப் போவதாக அவர் அறிவித்தார். தன்னுடைய கனவர் இறப்புக்கு பின் ஏழு ஆண்டுகள் அமைதியாக இருந்த சோனியா காந்தியின் இந்த முடிவை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அப்படி தான் அவர் அரசியல் வாழ்க்கை தொடங்கியது.அதற்கு அடுத்து சில மாதங்கள் கழித்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்க பட்டார்.
கட்சியின் தலைவராக அவர் பொறுப்பேற்ற போது அவருக்கு சொந்த கட்சியிலே பல எதிர்ப்புகள் குறிப்பாக, ஷரத் பவார், மறைந்த லோக்சபா சபாநாயகர் பி.ஏ.சங்மா இவர்கள் எல்லாம் கட்சியை விட்டு விலகினார்கள். அத்தனை எதிர்ப்புகளையும், சவால்களையும் தனி ஒரு நபராக அவர் எதிர் கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு மிகச் சிறந்த தலைமையை வழங்கினார். தலைவராக பொறுப்பேற்று ஆறு ஆண்டுகளில் மத்தியில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர வைத்தார். பதினொரு மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி இருபத்து நான்கு மாநிலங்களில் ஆட்சியை கைபற்றியது. காங்கிரஸ் கட்சியின் வரலாற்றிலே 19 ஆண்டுகள் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஒரே நபர் அவர் மட்டுமே.
நேரடியாக அரசியலில் களம் இறங்காத போதும் 1970களிலும், 80களிலும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி களின் அரசியல் நடவடிக்களையும், அதிகாரத்தில் இருக்கும் போது அவர்களது செயல்பாடுகளையும் அருகில் இருந்து பார்த்தவர். கட்சியை வழி நடத்துவதில் இந்திராவும் சோனியா காந்தியும் ஒரே அனுகுமுறையை கையாண்டதில்லை. கட்சியில் மூத்த தலைவர்கள் தனக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினால் இந்திரா காந்தி அத்தனை பேரையும் அதிரடியாக நீக்கி விடுவார் அல்லது கட்சி இரண்டாக உடையும். சோனியா காந்தி அப்படி அல்ல அவர்களே கட்சியை விட்டு விலகும் வரை அமைதியாக இருப்பார். 1994ல் நரசிம்ம ராவ் சோனியா காந்தியை ஓரம் கட்ட நினைத்த போதும் கூட அவர் கட்சியை பிளக்க முயற்ச்சிக்கவில்லை. பெரும்பான்மையான மத்திய அமைச்சர்களும் , மாநில முதல்வர்களும் அப்போது சோனியாவை தலைவராக்க விரும்பினார்கள் எனினும் அவர் மறுத்து விட்டார். 2004ல் கூட பிரதமர் பதவியை ஏற்க மறுத்து விட்டார். 1975ல் அலாகாபாத் உயர் நீதி மன்றம் அன்னை இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவித்த போது அதை ஏற்க மறுத்து அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். ஆக தலைமை பொறுப்பை பொருத்தவரை அடிப்படையிலேயே இந்திரா காந்திக்கும் சோனியா காந்திக்கும் நிறைய வித்யாசங்கள் உண்டு. சோனியா எப்போதும் ஒரு democrat leader தான்.
சோனியா காந்தியின் வாழ்க்கையை நான்கு காலக் கட்டங்களாக பிரிக்கலாம் .முதல் காலக் கட்டம் அவருடைய திருமண வாழ்க்கை , காதல் கனவர், தன்னுடைய அத்தையான அன்னை இந்திராவின் முழுமையான அன்பும் அரவனைப்பும் பெற்ற ஒரு நிறைவான திருமண வாழ்க்கை. எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்த போது அன்னை இந்திராவின் படுகொலை அவரை பெரும் சோகத்தில் தள்ளியது.
இரண்டாம் காலக் கட்டம் அவருடைய வாழ்க்கையை தலை கீழாக புரட்டி போட்டது. ராஜீவின் மரணம் அவருடைய வாழ்க்கையில் பேரிடியாக வந்து விழுந்தது. ராஜீவ் காந்திக்கு அரசியல் மீது நாட்டமே இல்லை. அன்னை இந்திரா பிரதமராக இருந்த போதும் அவர் பைலட் ஆகவே இருந்தார். சஞ்சய் காந்தியின் மரணத்திற்கு பிறகு அன்னை இந்திராவின் வற்புறுத்தலால் அரசியலில் நுழைந்தார் ராஜீவ். அன்னை இந்திராவின் மறைவுக்கு பிறகு காங்கிரஸ் காரியக் கமிட்டி ராஜீவை தலைவராக தேர்ந்தெடுத்த போது அதை கடுமையாக எதிர்த்தார் சோனியா. அன்னை இந்திரா போல் தன் கனவரும் கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் அவருக்கு இருந்தது. எல்லா பொதுக் கூட்டங்களுக்கும், வெளிநாடு பயணங்களுக்கும் ராஜீவ் உடன் சோனியா எப்போதும் இருப்பார். 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி சோனியாவின் வாழ்க்கையில் இடி விழுந்தது. தன்னுடைய அன்பு கனவரை தீவிரவாதத்துக்கு பலி கொடுத்தார். அதில் இருந்து மீண்டு வர அவர் மிகவும் சிரமப்பட்டார்.
மூன்றாவது காலக் கட்டம் 1991 முதல் 1998 வரை அந்த ஏழு ஆண்டுகள். வாழ்க்கையை வெறுத்து தனிமையில் இருந்தார். அவர் இத்தாலிக்கே திரும்பப் போகப் போவதாக அப்போது பேசப் பட்டது. இந்த காலக் கட்டத்தில் தான் அவரை அரசியலுக்கு வர வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வற்புறுத்தினார்கள். அதை முற்றிலுமாக நிராகரித்து விட்டார். டெல்லி தல்கோத்ரா மைதானத்தில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் வந்த போது அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து " சோனியா , சோனியா " என்று கத்தினார்கள். பத்து நிமிடத்திற்கும் மேலாக கைதட்டல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. காரியக் கமிட்டி உறுப்பினர் ஒருவர் சோனியாவிடம் வந்து மேடைக்கு வர அழைத்த போது, இந்த ஆர்பாட்டத்தை இப்போது நிறுத்தா விட்டால் நான் கூட்டதில் இருந்து வெளியேறுவேன் என்று எச்சரித்தார். இந்த காலக்கட்டத்தில் தான் Rajiv Gandhi Foundationஐ தொடங்கினார். மேலும் Nehru Memorial Fund , Indira Gandhi Memorial trustஐ தலைமையேற்று பல சர்வதேச மாநாடுகளை டெல்லியில் நடத்திக் காட்டினார்.
நான்காவது காலக் கட்டம் அவருடைய அரசியல் பயனத்தின் தொடக்கம். 1998 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார். அன்றிலிருந்து இன்று வரை இந்திய அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்து வருகிறார். 1998 ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் போட்டியிட்டு முதல் முறை நாடாளுமன்ற உறுப்பினரானார். பிறகு 2004ல் காங்கிரஸ் அதிக இடங்களை கைபற்றியபோது ஐக்கிய முற்போக்கு கூட்டனி என்று ஒன்று உருவானது அதன் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். சோனியா தான் பிரதமராக வேண்டும் என்று முதல் ஆளாக சொன்னவர் கலைஞர், அனைவரும் அவர் தான் பிரதமர் ஆவார் என்று எதிர்பார்த்தார்கள். சோனியா அது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. அன்றைய குடியரசு தலைவர் திரு.அப்துல் கலாமை சந்தித்து ஆட்சி அமைக்க தமக்கு போதுமான MPக்கள் இருப்பதாக தெரிவித்தார், அப்போது MPக்களின் ஆதரவு கடிதத்தை அவர் எடுத்துச் செல்லவில்லை. MPக்களின் ஆதரவு கடிதத்துடன் அதற்க்கு அடுத்த நாள் கலாமை சந்தித்தார். இரண்டாம் நாள் கலாமை சந்திக்க சென்ற போது சோனியா தன்னுடன் மன்மோகன் சிங்கை அழைத்துச் சென்றார்.
அந்த ஒரு நாள் இரவில் தான் சோனியா தான் பிரதமராக போவதில்லை என்ற முடிவை எடுத்தார். ஆதரவு கடிதத்தை திரு.அப்துல் கலாமிடம் கொடுத்து விட்டு குடியரசு தலைவர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த போது Madam , Are you the next PM ? என்று ஒருவர் கேட்ட போது " I think our country will be safe in the hands of Dr.Manmohan Singh " என்று கூறினார். சோனியா காந்தியின் இந்த முடிவை யாரும் எதிர்பார்க்க வில்லை. காங்கிரஸ் கட்சியினர் இதை நிராகரித்தார்கள், நாடு முழுவதும் அன்று சுஸ்மா ஸ்வராஜ்ன் உருவ பொம்மை கொளுத்தப்பட்டது காரணம் சோனியா பிறப்பால் ஒரு இத்தாலியர், அவர் பிரதமரானால் நான் மொட்டை அடித்துக் கொள்வேன் என்று சொன்னார்.இன்றும் சங்கிகள் அப்துல் கலாம் அவருக்கு பதவி பிரமானம் செய்து வைக்க மறுத்து விட்டார் என்று பொய்யை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சர்ச்சை பற்றி அப்துல் கலாம் தன்னுடைய Turning Points புத்தகத்தில் எழுதியிருக்கிறார் from Turning Points " While this communication was in progress, I had a number of emails and letters coming from individuals, organizations and parties that I should not allow Mrs Sonia Gandhi to become the prime minister of our country. I had passed on these mails and letters to various agencies in the government for their information without making any remarks. During this time there were many political leaders who came to meet me to request me not to succumb to any pressure and appoint Mrs Gandhi as the prime minister, a request that would not have been constitutionally tenable. If she had made any claim for herself I WOULD HAVE HAD NO OPTION BUT TO APPOINT HER " சுருக்கமாக " சோனியாவை பிரதமராக்க கூடாது என்று எனக்கு பல தரப்பில் இருந்து அழுத்தங்கள் தரப்பட்டது. அந்த கோரிக்கை அரசியல் அமைப்பு சாசனத்துக்கு எதிரானவை . ஒருவேளை சோனியா பிரதமராக வேண்டும் என்று அவரே நினைத்திருந்தால், அவருக்கு நான் பதவி பிரமானம் செய்து வைப்பது தவிர வேறு வழியில்லை "
அதற்கு பிறகு காங்கிரஸ் பாராளமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய போதும் அவர் பிரதமர் பதவி தனக்கு வேண்டாம் என்று தெளிவாக சொன்னார். அவருடைய பேச்சுகளில் மிகச் சிறந்த பேச்சு அது. காங்கிரஸ் MP ரேனுகா சௌத்ரி அவர் பேச்சை கேட்டு கதறி அழுதார். நான் youtubeல் பலமுறை பார்த்த வீடியோ அது, குறிப்பாக இந்த வரிகள் இன்றும் என் மனதில் இருக்கிறது " The people of India choosen us for their aspirations not for ours. I must be humble to decline this post" நாட்டின் உயரிய பதவியை இந்த இரண்டு வரிகளில் தூக்கி எறிந்தார்.
எச் ராஜா போன்ற ஈன பிறவிகளுக்கு அவர் இத்தாலியராக தெரியலாம். மோடி போன்ற தற்குறிகள் அவரை விதவை என்று அழைக்கலாம்.
ஆனால் அவர் இந்திராவின் மருமகள், இந்தியாவின் மகள்.

சில ஆதி திராவிட தோழர்கள் திராவிடர் இயக்கம் எங்களுக்கு என்ன செய்தது என்று கேட்கிறார்கள்

சில ஆதி திராவிட தோழர்கள் திராவிடர் இயக்கம் எங்களுக்கு என்ன செய்தது என்று கேட்கிறார்கள் அவர்களுக்கு நான் பதில் அளிப்பதற்கு முன்பு இந்தியா முழுவதும் ஆதிதிராவிர் நிலை வப்படி இருந்தது என்பதைக் கூறிவிட்டு பிறகு சென்னை மாகாணத்தில் என்ன மாறுதல் செய்தார்கள் என்பதைக் கூறுகிறேன்.
நான் பதிவிட்ட இந்த நுல் எம்.சி.ராசா வாழ்க்கைச் சுருக்கமும் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளும் ஜெ.சிவசமுகம் பிள்ளை அவர்கள் 1930 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டது.
இந்திய அரசு ஆதிதிராவிடர்கள் நிலையை அறிந்து கொள்ள 1928 ஆம் ஆண்டு எம்.சி,ராசா தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்தது. அவர் இந்திய அரசுக்கு தொகுத்து அளத்ததை சிறு சிறு பகுதியாக தொடர்ந்து பதிவிட உள்ளேன்.
வாலாசா வல்லவன்.
இயல் - 7
இந்திய அரசின் மத்தியகுழு அறிக்கைக்கு ராவ்பகதூர் எம்.சி. ராசா எழுதிய குறிப்பு:
இந்தியாவில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் இந்திய நாட்டின் அரசியல் மற்றும் சமுதாய மாறுதலில், வளர்ச்சியில் ஒரு திட்டவட்ட மான பிரச்சினையாக உருவாகிவிட்டனர். அந்தப் பிரச்சினைகள் வரலாற்று சக்திகளால் மத, பொருளா தார மற்றும் சமுதாய சக்திகளின் விளைவாக உருவானவை. தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடையே தோன்றிய மாற்றங்கள் சமுதாயத்தில் நிலவுகின்ற, சமுதாய கருத்துக்களை வெடித்து சிதற வைத்தன.
பூர்வீக இந்து சமுதாயத்தை உருவாக்கியவர்கள் விதித்த நிபந்தனைகளின் காரணமாக, அவர்கள் விதித்த கட்டுப்பாடுகளின் காரணமாக நீண்ட நெடுங்காலமாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் கள் தனிமைப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டனர். அவர்கள் உருவாக்கிய விதம் அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளின் காரணமாகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களிடையே விழிப்புணர்ச்சி எற்பட்டு அவர்கள் தங்கள் வாழ்வு மேம்படவும் பொருளா தாரம், கல்வித்துறைகளில் முன்னேற்றம் ஏற்படவும் அரசியல் பிரச்சினையாக அதை உருவாக்கினார்.
அவர்களிடையே தங்கள் வகுப்புக்களைப் பற்றிய உள்ளுணர்வுகள் வளர்ந்தன, தாழ்த்தப்பட்ட வகுப்புக்களை சார்ந்தவர்களது பூர்வீகம் வரலாற்று அடிப்படையில் ஆய்வுக்குரியது. அரசாங்கத்தின் அனுதாபம் காரணமாகவும், இந்து சமுதாயத்தில் மிக தாமதமாக சமூக விழிப்புணர்வு உருவான காரணத்தினாலும் அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அப்படியிருந்தும் உருவாகிக் கொண்டிருக்கும் புதிய சக்திகளுக்கு பழைமைவாதிகள் ஒருபக்கமும் அறியாமை இன்னொரு பக்கமும் அணிதிரண்டு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இந்தியாவில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தாழ்த்தப்பட்டோர் பிரச்சினைகளை ஒப்புக் கொள்கின்றன மற்றும் அவர்களுக்காக சிறப்பு நிவாரண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஒப்புக்கொள்கின்றன

சிந்துவெளி நாகரீகம்

ஆரியர்களை பற்றி தெரிந்து கொள்ளும் முன் சிந்துவெளி மக்களை குறித்து நாம் பார்ப்போம் ஏனெனில் இது ஒரு ஆரிய பண்பாடு என்று RSS கூட்டம் கூறிவருகிறது.
சிந்துவெளி நாகரீகம் என்பது சாரத்தில் பாலைவன நாகரிகம் ஆகும்.
அதாவது உலகில் தோன்றிய முதல் நாகரிகங்களான சிந்து வெளி நாகரீகம் சீனாவின் மஞ்சள் நதி மற்றும் யாஞ்சி நாகரீகங்கள் . எகிப்தின் நைல்நதி நாகரீகம். மெசபடோமியாவின் டைகிரீஸ் யுப்ரடீஸ் நாகரீகங்கள் அனைத்தும் ஏறத்தாழ சமகாலத்தில் தோன்றிய நாகரிகங்களாகும்
இந்த நாகரீகங்கள் அனைத்தும் சமகாலத்தில் தோன்றியவை அதுபோல் வேறொரு ஒற்றுமையும் உண்டு இவை அனைத்தும் கற்கால மனிதன் செம்பையும் வெண்கலத்தை கற்கருவிகளோடு இணைத்து பயன்படுத்திய காலமாகும்
இந்த நாகரீகங்கள் தோன்றிய பகுதிகள் அனைத்தும் பால நிலம், சார்ந்த ஆற்று பாசன பகுதிகள் ஆகும் அதாவது அக்கால மனிதன் தனது எளிய கற்கருவிகளைக்கொண்டு எளிமையாக வேளாந்தொழில் செய்ய தேர்வு செய்த இடங்களே பாலை சார்ந்த வண்டல் மண் கொண்ட நிலமாகும்
ஏனெனில் கற்கருவிகளசிக்கொண்டு அவனுக்கு இங்குதான் தோண்டுவதும் மண்ணை பதப்படுத்துவதும் மிக எளிதாக இருந்தது இதன் வளர்ச்சிப்போக்கில் நல்ல வருமானத்தையும் கொடுத்தது
இவை சுரங்கத்தொழில் மற்றும் பட்டரைகள் கைவினைத்தொழில் ஆகிய தொழில்களில் ஈடுபடும் அளவுக்கு வருமானம் பெருகியது
இப்படி வளர்ந்த இந்த நாகரீகங்களின் உச்சத்தில்தான் பொதுவாக மனிதன் பயிர்தொழிலை விரிவாக செய்ய ஆரம்பித்தான்
இதுஆரம்பத்தில் பெண்களால்தான் மேற்கொள்ளப்பட்டது என பழைய பதிவுகளில் கூறியுள்ளேன் நினைவில் கொள்க எனவே வேளாண் தொழிலை அடிப்படையாக கொண்ட இம்மக்கள் தாய் தெய்வத்தையே வணங்கினார்கள்
ஆனால் சுரங்கம் வர்த்தகம் பட்டரைத்தொழில் பெரிய படகுகளை செய்வது வெண்கலகருவிகளை ஏற்றுமதி செய்வது தந்த பொருட்கள் முத்துமாலைகள் மாணிக்க மாலைகள் போன்ற தொழில்கள் பரவலாக விரிவடந்தது
இந்த தொழில் பிரிவினை இயல்பாகவே ஆணாதிக்கத்தையும் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் உருவாக்கி இருந்தது
இக்காலத்தில் மெசபடோமிய ஊர் பகுதியில் கிடைத்த தடயங்கள் அங்கு இறந்த ஆண்டையின் உடலின் நான்கு திசைகளிலும் 70 போர் வீரர்களும் பணியாளர்களும் அப்பென்ணின் உடலுக்கு காவலாக புதக்கப்பட்டு இருந்ததும் இது அடிமை சமூக அமைப்பு முறை என்பதையும் தெளிவாக்கியது
இதுபோல் எகிப்திய பிரமிடுகளும் அடிமை உழைப்பால்தான் கட்டப்பட்டன இதன் காலம் கிமு 2500
மேற்கண்ட இந்த உதாரணங்கள் வேலை பிரிவினையுடன் சேர்ந்து அடிமை முறையும் உருவானதைக்காட்டுகிறது
ஆனால் சிந்து வெளியில் இவ்வளவு கொடுமையான அடிமை முறை நிலவியதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை
ஆனாலும் சாதிய வேலை பிரிவனை முறையோ அல்லது சற்று நெகிழ்வான அடிமைமுறையோ இங்கு இருந்து இருக்கவே வேண்டும்
சிந்துவெளி மக்கள் மாடு,ஆடு,கழுதை நாய் ஒட்டகம், யானை குதிரை போன்ற விலங்குகளை வீட்டு விலங்காக வளர்த்துவந்தனர்
குதிரைகளை ஆரியரே இந்தியாவுக்கு கொண்டுவந்தனர் என்பது தவறாகும் கிமு 2000க்கும் முன்பே இந்தியாவில் பல்வேறுபகுதிகளில் குதிரைகள் வளர்த்து இனப்பெருக்கம் செய்யப்பட்டன என்பதை மொகஞ்சதாரோ,ஹரப்பா லோதல் சுர்க்கோட்டடா, கலிபங்கன் குண்டாசி ஆகிய பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட குதிரைகளின் எலும்புகள் பற்றிய நீண்ட பட்டியலே இருக்கிறது
இவர்கள் மத்திய ஆசிய ஈரான் எகிப்து சீனா ஆகிய உலகின் பெரும் பகுதிகளுடன் வாணிப தொடர்பு கொண்டிருந்தனர்
என்பதற்கு அங்கெல்லாம் கிடைத்த ஹரப்பன் பொருட்கள் சான்றாக விளங்குகிறது
சிந்து வெளி பண்பாடு என்பது ஏதோ ஒரு இனத்துக்கான பண்பாடு அல்ல
அது இப்பகுதிகளில் வாழ்ந்த பல்வேறு மக்கள் சமூகங்களின் பொதுப்பண்பாடு ஆகும்
இதில் ஏற்றதாழ்வுகளும் இருந்தன சில பகுதிகளில் ஏர்கலப்பயும் சில பகுதிகளில் சூலம் போன்ற கருவிகளும் மன்ணை கிளர பயன்படுத்தப்பட்டது சில பகுதிகளில் ஆரம் கொண்ட சக்கரங்களும் சில பகுதிகளில் வட்ட சக்கரங்களும் பயன்பாட்டில் இருந்தன
இவை அந்த சமூகங்களுக்கு இடையில் நிலவிய வேறூபாட்டை கூறுகின்றன
சிந்து வெளி நாகரீகம் என்பது ஆப்கன் பாகிஸ்தான் முதல் குஜராத் உபி வரை ஏறத்தாழ 15 லட்சம் சதுர கிலோமிட்டர் தூரம் பரவி இருந்தது இவை இந்தியாவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் பாதியாகும் இந்த அளவு நிலப்பரப்பில் எந்த குறிப்பிட்ட இனங்களோ தேசிய இனங்களோ இதுவரை உருவானதே இல்லை
எனவே எந்த இனமோ அல்லது குறிப்பிட்ட மொழி சார்ந்த மக்களோ இது எங்கள் நாகரீகம் எனக்கூறுவது அவர்களின் அறியாமையே ஆகும்
இந்த நாகரீகத்தின் பெரும்பகுதி கிமு 1900 வாக்கில்; அழிந்து விட்டது
இதை ஆரியர்கள் அழித்தார்கள் என நம்புவதற்கு சில காரணகள் உண்டு அவை ரிக் வேதத்தில் இந்திரன் தஸ்யூ தாசர்களின் கோட்டைகளை அழித்தான் எனும்பாடல்கள் அடிக்கடி வருவது ஹரப்பா பகுதிகளின் தெருக்களில் பிணக்குவியல்கள் கிடைத்ததும் ஆகும்
இவை இரண்டையும் இணைத்து புரிந்து கொண்ட ஆங்கிலேய ஆய்வாளர் மார்சல் ஆரியர்களே இந்நாகரீகத்தை அழித்ததாக முடிவு செய்தார்
மேலும் ரிக்வேதத்தில் ஹரியூப்பிரியா நதிக்கரையில் நடந்த போரை பற்றிய பாடல்களும் வரலாற்று ஆய்வளார் DD கோசாம்பி இன்றைய ஹரப்பாதான் ரிக்வேத ஹரியூப்பிரியா என நம்பி விட்டார்
ஆனால் உண்மையில் புதையுண்ட நகரம் எனும்பொருளில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஹரப்பா எனும் பெயர் சூட்டப்பட்டதை அவர் அறியவில்லை
மேலூம் ஹரப்பாவில் காண்ப்பட்ட பிணக்குவியல் பல்வேறு கால கட்டங்களை சேர்ந்தவை என்பதும் அவர்கள் அனைவரும் கடும் தொழு நோயாளும் காச நோயாளும் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது
மேலும்,ஹரப்பா நாகரீகம் ஆரியருடையது இல்லை இவர்கள் தந்தை வழி தனித்தெய்வங்களையே வணங்கினர் சிந்து மக்களோ தாய்வழி தெய்வங்களை வணங்கிய நகர்புறத்தை சேர்ந்த வேளாண்தொழில் சுரங்கத்தொழில் அனைத்திலும் திறமை வாய்ந்தவர்கள்
ஆரியர்களோ மேய்ச்சல் தொழில் மட்டுமே அறிந்த நிலையான இருப்பிடம் அற்ற நாடோடி வாழ்வினர் இவர்களுக்கு விவசாயமோ ஏர்கலப்பை பற்றிய எந்த அடிப்படையும் அறியாதவர்கள்
மேலும் ஹரப்பா அழிந்த காலத்தில்தான் எகிப்திய மெசபடோமிய நாகரீகங்களும் அழிந்தன காரணம் மழை 200 ஆண்டுகள் பொய்த்துபோனதே காரணம் என பல்வேறு சான்றுகள் நிறூபிக்கின்றன
அக்ல்கால சிப்பி நத்தை ஓடுகளிள் கன ஆக்சிஜனும் கன ஹைட்ரனும் கலந்துள்ளது அப்பகுதியில் நிலவிய வரட்சியை சுட்டுகிறது மேகாலய குகை ஆய்வுகளும் மழைபெய்யாததை உறுதிசெய்கிறது
மேலும் ஹரப்பா நாகரீகம் அழிந்து 500. 600 ஆண்டுகளுக்கு பின்பே ஆரியர்கள் சுந்து வெளியில் குடியேறினார்கள்
கடைசியாக கிடைத்த தகவல்கள் சிந்து பகுதியை சுற்றி இப்போது வாழும் மக்களிடம் சிந்து மக்களின் ஜீன்கள்காணப்படுவதையும் அவர்களின் உடல் காசம் மர்றும் மலேரியா ஆகிய நோய்களை எதிர்க்கும்திறன் குறைந்தவர்களாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது
ஹரப்பா மக்களை தாக்கி அழித்த நோய்களில் மலேரியாவும் ஒன்று தொடரும்

இராஜாஜி மகள் லட்சுமி அம்மையார்

குழந்தை திருமணம் மூலம் பாதிக்கப்பட்ட இராஜாஜி மகள் லட்சுமி அம்மையார், காந்தியடிகள் மகன் தேவதாஸ்காந்தி ஆகியோரின் சாதிமறுப்பு திருமணம் நடந்த அந்த காலத்திலும்..

இதே மாதிரித்தான் சாதிக்காய் சங்கிபாய்ஸ் கதறிட்டு இருந்தாய்ங்களாம்...

(இந்த திருமணம் நடைபெற முக்கிய காரணம் தந்தைபெரியார்) 👍👍👍👍


b

வருணாசிரம தருமப்படி சுடுகாட்டிலும் பேதம்

வாழ்க மனுதர்மம் !
வளர்க மனு நீதி!
வருணாசிரம தருமப்படி சுடுகாட்டிலும் பேதம் !
2000 ஆண்டுகட்கு மேலாக மனு நீதிக்கு அடிமையாக இருக்கும் தமிழர்கள் பிணத்தைப் புதைப்பதிலும் சாதியவெறி கொண்டு ஒருவருக்கொருவர் சண்டையிடுவதில் வியப்பென்ன ? 
மனு தர்மத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்காமல் மாந்தருக்கு உண்மையான விடுதலை கிடைக்காது !
" பார்ப்பனன் இறந்தால் (இரவிகுல மண்டலமுள்ள ) கிழக்கே உள்ள சுடுகாட்டுக்குக் கொண்டுபோ என்றும் ; சத்திரியனகா இருந்தால் (சாமராஜ்யபுரி மண்டலமுள்ள) வடக்கே கொண்டுபோ என்றும்; வைசியனாக இருந்தால்
(குபேர மண்டலமுள்ள) மேற்கே கொண்டுபோ என்றும் , சூத்திரனாக இருந்தால் (எமலோக மண்டலமுள்ள) தெற்கே கொண்டுபோ " என்றும் மனு கூறுகின்றார் .
சான்று : பக்கம் 86
சித்தாந்த சிந்தனை
டாக்டர் புரட்சிதாசன் , எம் . ஏ., வௌியீடு:பாண்டியன்பாசறை சென்னை 600 017

ஆண்டன் பாலசிங்கத்தின் மரணம் நிகழ்ந்த நாள்

இன்றோடு 14 ஆண்டுகள் ஆகின்றன, இந்த நாளில்தான் புலிகளுக்கு நாள் குறிக்கபட்டது
அது ஆண்டன் பாலசிங்கத்தின் மரணம் நிகழ்ந்த நாள்
உறுதியாக சொல்லலாம், சூடமேற்றி சத்தியம் அடித்து சொல்லலாம், எல்லா சிக்கலிலிருந்தும், புலிகள் செய்த எல்லா அட்டகாசங்களிலிருந்தும் புலிகளையும், பிரபாகரனையும் காத்தவர் பாலசிங்கம் மட்டுமே
அவரின் வாதமும் வல்லரசுகள் முன்னால் அவர் செய்த தர்க்கமுமே. பாலசிங்கமே புலிகளின் முகம், பிரபாகரன் என்பவன் முகமூடி
யாழ்பாண வம்சம், லண்டன் கல்வி, அங்கே பேராசிரியர் எனினும் ஈழபோராட்டம் அவரை அழைத்தது, புலிகளின் ஆதரவாளராக மாறினார்
அவர் புலிகளுடன் இணைந்தபின்பே புலிகளின் வீரியமான போராட்டம் தொடங்கிற்று, சர்வதேச ஆதரவினை புலிகளுக்கு பெற்று கொடுத்தவர் அவரே, அந்த ஆதரவில்தான் ராஜிவ் கொலை முதல் பல சிக்கல்களை தாண்டி புலிகளால் நிற்க முடிந்தது
பிரபாகரனுடன் நேருக்கு நேர் விவாதித்த ஒரே புலி இறுதிவரை பாலசிங்கம் மட்டுமே, இந்த கடிவாளம்தான் அதுகாறும் புலிகளை காத்தது
அமைதிபடை காலம், சந்திரிகா காலம் என எல்லா ஆபத்துக்களிலிருந்த்தும் புலிகள் அவரால்தான் காப்பற்றபட்டனர், பிரேமதாசா முதல் இறுதியாக நார்வே குழு வரை அவர் புலிகளை காக்க பட்டபாடு கொஞ்சமல்ல‌
உலக நிலை மாற, பாலசிங்கத்திற்கும் சில விஷயங்கள் புரிந்தன, இனி தனிஈழம் என்பது சாத்தியமல்ல, இந்தியாவும் ராஜிவ் கொலை என்பதை தாண்டி வராது, ஆனால் பிரபாகரனோ தனிஈழம் இல்லை என்றால் யாரையும் கொல்ல கூடியவர்
ஆனால் அமெரிக்க எச்சரிக்கையோ இனி யுத்தமென்று வந்தால் புலிகள் இருக்கவே மாட்டார்கள் எனும் ரீதியில் இருந்தது
பாலசிங்கம் தவித்தார், நார்வேயிடம் தனியாட்சி பரிசீலிக்கின்றோம் என சொல்லிவிட்டு பிரபாகரனை அவரால் சந்திக்க முடியவில்லை,
பிரபாகரன் உலகம் புரியாதவராய் இருந்தார், புரிவதற்கு அறிவு கொஞ்சமாவது வேண்டும்
பாலசிங்கத்தோடு முரண்பட்டார் பிராபரன், 2002ல் பாலசிங்கம் சுயாட்சி முடிவுக்கு வந்திருந்தார், ஆனால் பிரபாரகன் வரவே இல்லை.
சில இடங்களில் அவர் இறுதியில் பிரபாகரனால் அவமானபடுத்தபட்ட இடங்களும் உண்டு என்பார்கள்
2004ல் கருணா விலகும்பொழுதே , ஆண்டன் பாலசிங்கமும் விலகினார், உடல்நலம் காரணம் காட்டி விலகுவதாக சொன்னாலும், அவர் மனம் நொந்தது கொஞ்சமல்ல‌
உலகில் எல்லா நாட்டையும் பகைத்துவிட்டு ஒரு இயக்கம் நாடு அடைய முடியாது என அவர் சொன்னது யார் காதிலும் ஏறவில்லை
அந்த பாலசிங்கம், இறுதியில் புலிவால் பிடித்த கொடுமையால் ஏதும் யாரிடமும் பேசமுடியாமல் தவித்தார்
இந்தியாவுடன் அவர் நட்புறவினை ஏற்படுத்த முயன்றாலும், இந்தியா புலிகளை நம்ப மறுத்தது, காரணம் 1983 முதல் புலிகள் காட்டிய நன்றிகடன் அப்படி
இந்தியாவினை இழுத்து பேச்சுவார்த்தைக்கு கொண்டுவர விரும்பினார் பிரபாகரன், இந்தியா போங்கடா .... என்ற நிலைப்பாட்டில் இருந்தது, அதன் நிலைப்பாடு அப்படி
பிரபாகரனுக்கும் உலகிற்கும் இடையில் தவியாய் தவித்தார் பாலசிங்கம்
எப்படியாவது இந்தியாவினை இழுத்து தன் நோக்கத்தில் வெல்ல வேண்டும் என்ற பிரபாகரனுக்கு எப்படி இந்தியா வரும் என நம்புகின்றாய்? என சொல்லிபுரியவைக்க முடியா சோகத்தில் அவர் இருந்தார்
எதையுமே யோசிக்காத பிரபாகரன் ஒருபக்கம்
தனக்கு செவிமடுக்கா பிரபாகரனை மொத்தமாக ஒழித்துவிட மேற்குநாடுகள் ஒருபக்கம்
இதில் கொல்லபடபோவது லட்சகணக்கான மக்கள், இதுதான் பாலசிங்கத்தின் வேதனை
நார்வே தூதுகுழு என்பது அமெரிக்காவின் மென்மையான முகம், இஸ்ரேல் என்பது அவர்களின் கொடுமையான முகம் என்பது உலக அரசியல் தத்துவம்
அந்த நார்வே வந்து பேசுகின்றது என்றால் அது அமெரிக்காவின் குரல் என்றே அர்த்தம். 1987ல் ராஜிவினை வெளியே போ என சொன்ன பிரபாகரன், எரிக் சோல்ஹிமினையும் கழுத்தை பிடித்து தள்ள தயங்கவில்லை
பாலசிங்கத்திடம் இனி பிரபாரனின் சாவு தவிர்க்கமுடியாதது என்பதை சொன்னார் எரிக்சோல்ஹிம், ஏன் அமெரிக்க இலங்கை தூதரே "இனி புலிகள் யுத்தமென்று வந்தால் கேவலமாக தோற்பார்கள்" என சொன்னார்.
நார்வே தூதர் எரிக் சோல்ஹிமிடம் " லட்சகணக்கான சனம் சாக போகுது எரிக், அதனை நினைத்தால்தான் கடும் வேதனை" என இறுதியாக சொன்னதுதான் ஆண்டன் பாலசிங்கத்தின் வார்த்தை
அவர் காலமானதும், பாய்ந்துவந்த மேற்குலக கட்டளைகள் புலிகளை குதறி எறிந்து முடித்தும் விட்டன‌
எங்கோ காட்டுக்குள் சுட்டுகொண்டிருந்த இயக்கம், பாலசிங்கத்தின் வருகைக்கு பின்னே உச்சம் அடைந்தது, அவர் காலமெல்லாம் அது தன் கொடியினை பறக்கவிட்டுகொண்டே இருந்தது
சுருக்கமாக சொன்னால் அப்போரின் கிருஷ்ணபரமாத்மா சாட்சாத் பாலசிங்கமே, அவர் சொற்படி கேட்டிருந்தால் இந்நேரம் ஈழ வரலாறு மாறி இருக்கலாம்.
தர்மன் தவறு செய்தான், அதனால் பொறுத்திருப்போம் என்ற கிருஷ்ணனின் வார்த்தைகளுக்கு பாண்டவர் கட்டுபட்டனர்,
என்மீது தவறே இல்லை, அர்ச்சுணா யுத்தம் தொடங்கு என தர்மன் வனவாசம் போகாமல் யுத்தகளம் வந்திருந்தாலோ
கிருஷ்ணா உன் புல்லாங்குழலை தூக்கி நட, கர்ணனையும், பீஷ்மரையும் வெல்லும் வழி எனக்கு தெரியும் என அர்ச்சுணன் பேசி இருந்தாலோ பாரதம் என்னாயிருக்கும்?.."
அதுதான் ஈழத்தில் நடந்தது
புலிகளின் பெரும் தவறு ராஜிவ் கொலை, அடுத்த பெரும் தவறு பாலசிங்கத்தையும், கே பத்மநாபனையும் ஒதுக்கியது.
இதனால் ஏற்பட்டதே பெரும் அழிவும் முடிவும்
உனக்கு தெரியாது, இந்தியாவும் கலைஞருமே ஈழபோருக்கு காரணம்,என சீமானிய வைகோயிச அடிப்பொடிகள் சொல்லிகொண்டிருந்தால், அவர்களுக்கெல்லாம் ஒரே பதில்
பாலசிங்கத்தின் மனைவி அடெல் ஆஸ்திரேலியா பெண்மணி, வெள்ளைகாரிதான், ஆனால் கிட்டதட்ட சோனியா சாயல். கணவனுக்காக தமிழ் கற்றார்
ஈழபோராட்டத்தின் ஆரம்பம், சிக்கல், எது தடை?, எது பிடிவாதம் என்பது நம் எல்லோரையும் விட அடேலுக்கு நன்றாக தெரியும், காரணம் எல்லா பேச்சுவார்த்தைகளிலும் அவரும் பங்குபெற்றிருந்தார்
ஈழப்போர் முடிந்து எங்காவது அவர் பேச கண்டிருக்கின்றோமா?
சீமான், வைகொ, இன்னும் சம்பந்தமில்லா பலபேர் டிவிக்களில் பிரபாகரன் அப்படி, இப்படி என பேசிகொண்டிருக்க, பிரபாகரனிடம் ஒரு மூத்த சகோதரி போல பழகிய அடேல் அமைதி காக்கின்றார்.
அவருக்கு எல்லா ரகசியமும் தெரியும், ஈழமுடிவின் காரணமும் தெரியும், ஆனால் பேசவிட மாட்டார்கள், பேசவிட்டால் பலர் முகத்தில் கரி பூசப்படும்
அப்படி அது அரசியலாக்கபட்டுவிட்டது, அவர் பேசினால் பலபேர் ஓடவேண்டி இருக்கும், இந்த புலிபெருமை எல்லாம் தூரவீசபடும்.
அதனால் அவர் வாய்திறக்க கூடாது என்பதில் பலருக்கு ஆர்வம்
ஈழபோராட்டம் 30 ஆண்டுகள் நடைபெற்றது என்றால், உலகளாவிய ஒரு பார்வை பெற்றது என்றால் அதற்கு ஒரே காரணம் பாலசிங்கம்
அவர் வந்தவுடன் இயக்கம் விஸ்வரூபமெடுத்தது, அவர் இல்லாத இயக்கம் சீட்டுகெட்டென சரிந்தது
இன்று அந்த ராஜதந்திரியின் நினைவு நாள்,
திம்பு பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தியாவிலிருந்து அவர் நாடுகடத்தபட்டதும், பின் அமைதிபடை மோதலின் போது அவர் பிரேமதாசாவோடு போஸ் கொடுத்ததும் நினைவுக்கு வருகின்றன‌
அதே பாலசிங்கம் பின் ராஜிவ் கொலைக்கு பின் கிட்டுவுடன் லண்டனில் போஸ்கொடுத்த காலமும் உண்டு
பின்னாளில் பிரபாகரனை திருந்தமுடியாது என அவர் அறிந்த கால்ங்களில் இந்தியாவுடன் தன் தொடர்பினை ஏற்படுத்த முயன்றதும், இந்தியா கையினை தட்டிவிட்ட காலமும் கண்ணுக்குள் வந்தது
ஒருவகையில் பிரபாகரனுக்கு அஞ்சிய வாழ்வுதான் அவர் வாழ்ந்திருக்கின்றார், படித்தவர், பெரும் ராஜதந்திரி ஆனால் ஒரு முரடனுக்கு முக மூடியாக இருந்ததுதான் பெரும் சோகம்
ஆங்கில புலமையில் தன்னிர்கற்றவர் பாலசிங்கம், அதற்கு எடுத்துகாட்டு கிளிநொச்சி மாநாடு, உலக பத்திரிகையாளர் ஆங்கிலத்தில் கேள்விகளை அள்ளி வீச, அனாசயமாக பதிலளித்தார் பாலசிங்கம்
அதனை கவனித்தவர்களுக்கு ஒரு விசித்திரம் பிடிபடும்
கேள்விக்கான பதிலை வாய்வரை கொண்டுவருவார் பாலசிங்கம், அதற்குள் பிரபாகரன் முகம் மாறும், உடனே கேள்வியினை பிரபாகரனிடம் மொழிபெயர்ப்பார், பிரபாகரன் திருதிருவென விழித்துகொண்டே ஆஆஆஆ..ஈஈஈஈ,, அது.. என எதாவது முணகுவார், பிரபாகரன் பதிலுக்கு சம்பந்தமே இல்லாமல் ஆங்கிலத்தில் பதிலளிப்பார் பாலசிங்கம்
பிரபாகரனுக்கு ஒன்றும் புரியாது, இப்போதிருக்கும் அதிமுக எம் எல் ஏக்கள் போல முழித்துகொண்டே இருந்தார்
ஆனாலும் ஒரு கேள்விக்கு பிரபாரன் முட்டாள்தனமாக பதில் சொல்ல, உலகின் சுருக்கு கயிறு இறுகியது, அது ராஜிவ் கொலையினை பற்றி நிரூபர்கள் சுருக்கு போட, பாலசிங்கள் கேள்வியினை திருப்ப, கொஞ்சமும் யோசிக்காமல் "அது ஒரு துன்பியல் சம்பவம்" என்றார் பிரபாகரன்
அவரை பொறுத்தவரை அது பிரபாகரன் செய்த ஏராளமான கொலையில் ஒன்று, இந்தியர் வருந்தும் துன்பமா? சரி துன்பமான சம்பவம் என சொல்லிவிட்டார்
ஆனால் பால்சிங்கம் ராஜதந்திரமான வார்த்தைகளால் அதனை மறைத்தாலும், துன்பியல் சம்பவம் முத்திரையாயிற்று, அது பால்சிங்கத்தின் வார்த்தை அல்ல,
மாறாக பிரபாகரனின் வார்த்தை
பிரபாகரனை பக்கத்தில் வைத்து ஒரு பேட்டி கூட கொடுக்கமுடியா பாலசிங்கம், 30 ஆண்டுகளாக இயக்கம் நடத்தினார் அல்லவா? அதுதான் ராஜதந்திரம்
ஈழம் அமைவதில் 1991லே மண் அள்ளி போட்டாயிற்று, பின் பின்லேடன் ஆட்டத்தில் அதற்கு சமாதியும் கட்டியாயிற்று
பாலசிங்கம் சொற்படி கேட்டிருந்தால் இன்று ஈழத்தில் ஒரு சுயாட்சியாவது அமைந்திருக்கும், இத்தனை பெரும் அழிவு நடந்திருக்காது என்பதில்தான் பால்சிங்கத்தின் முத்திரை ஈழபோராட்டத்தில் பதிந்திருக்கின்றது.
ஈழ புலிகளுக்கு உண்மையான காவல்காரன் அந்த பாலசிங்கமே என்பதைத்தான் 2009 முள்ளிவாய்க்கால் உலகிற்கு உணர்த்தியது.
இதில் மகா விசித்திரம் என்னவென்றால், 30 வருடம் பழகிய அந்த பாலசிங்கத்திடம் சொல்லாத பல ரகசியங்களை பிரபாகரன் என்னிடம் சொன்னார் என சீமான் என்றொருவர் சொல்லிகொண்டிருக்கின்றார் அல்லவா?
அதுதான் மகா விசித்திரம்
பீஷ்மரிடம், கர்ணனிடம் கூட சொல்லாத ரகசியத்தை துரியோதனன் ஒரு வழிப்போக்கனிடம் சொன்னான் என்பதை நீங்கள் நம்புவீர்களானால், சீமானையும் நம்பிகொள்ளுங்கள்.
அங்கே திருமுருகன் காந்தி என்பவன் மே 17 அன்றுதான் ஈழம் அழிந்தது என சொல்லிகொண்டிருக்கின்றான் , இந்த டிசம்பர் 14 பற்றி எல்லாம் அவன் பேசமாட்டான்.
உண்மையில் ஈழதமிழரின் நம்பிக்கை அழிந்தது 2009 முள்ளிவாய்க்காலில் அல்ல, அது ஆண்டன் பாலசிங்கத்தின் மரணம் அடைந்த டிசம்பர் 14.

அவா ஆத்துல vs நம்மாத்துல



அம்மபீ, வேத பாட சாலையில படிச்சுண்டிருந்தியே?
... ஆமாம் மாமா, ஏழு வருஷம் முடிச்சுட்டேன்...
ஏழு வருஷத்துல என்ன கத்துண்டே? சுருக்கமா சொல்லு..
... நம்மாத்துல நெய்ய பருப்புல ஊத்தணும்...
... அவா ஆத்துல .... நெருப்புல ஊத்தணும்...
.
.. நம்மாத்துல அரிசியை உலையில போடணும்...
... அவா ஆத்துல ..... தலையில போடணும்..
... நம்மாத்துல பூசணிக்காயை கூட்டுல போடணும்..
.
.. அவா ஆத்துல.. .. ரோட்டுல போடணும்..
அவா ஆத்து சாமானையெல்லாம் வீணடிச்சதுக்கு, அவாளண்ட காசும் வாங்கிண்டு,
கடைசியா.. ஸ்வாஹா சொல்லி முடிக்கணும்..

Tuesday, December 11, 2018

கடந்த தேர்தலில் பாஜகவை மக்கள் வெற்றி பெற வைத்ததற்கு காரணம்

கடந்த தேர்தலில் பாஜகவை மக்கள் வெற்றி பெற வைத்ததற்கு காரணம், காங்கிரஸ் மீது சுமத்தப்பட்ட 2G ஊழல் குற்றச்சாட்டும், பாஜக அமைத்த பலமான கூட்டணிகளும், மீடியாக்களின் ஓயாத விளம்பரங்களுமே.
பாஜகவோ தனது வெற்றிக்கு காரணம் இந்துத்துவ கொள்கையும், மோடியுமே என தவறாக புரிந்து கொண்டு அதை தீவிரமாக நம்பவும் ஆரம்பித்து விட்டார்கள். மக்கள் நலனை மறந்து விட்டார்கள்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் மக்கள் அவதியுறும்போது, மக்களே தியாகம் செய்யுங்கள் என இரக்கமில்லாமல் சொன்னார்கள் ஆட்சியாளர்கள். 100க்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள்.
லட்சக்கணக்கான விவசாயிகள் கடன் தொல்லையால் அவதிப்பட்டும் பலர் தற்கொலை செய்துள்ள போதும் அவர்களின் 3000கோடி ருபாய் கடனை தள்ளுபடி செய்யாமல் , 20 கோடீஸ்வரர்களின் 3லட்சம்கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தது பாஜக அரசு.
சிறுபான்மை மக்களை எதிரியாக்கி 50மேற்பட்ட முஸ்லிம்கள் மாட்டின் பெயரால் படுகொலை செய்யப்பட்ட போதும் மவுனம் காத்து , கொலைகாரர்களை ஊக்குவித்தது பாஜக.
மக்கள் வேலை இல்லாமல் அவதிப்பட்டு இருக்கும் போது ராமர் கோவில் கட்ட அவசரத் தீர்மானம் போட்டனர் பாஜக.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் போது நடிகர் குடும்ப விழாக்களில் சந்தோழமாய் இருந்தனர்.
மக்கள் தங்களது வாக்குகளின் பலம் அறிந்து ஜாதி மதம் பார்க்காமல் மக்களுக்காக உண்மையாக உழைக்கும் அரசியல் தலைவர்களுக்கு வாக்களித்தால்தான்,
அண்ணல் அம்பேத்கர் , பண்டிட் நேரு கண்ட உண்மையான ஜனநாயகம் மலரும்.
ஜெய் ஹிந்த்