Sunday, June 06, 2021

நாடு என்ற சொல் அவர்களை அச்சறுத்தவே செய்யும்.

 நாடு என்ற சொல் அவர்களை அச்சறுத்தவே செய்யும்.
ஏனெனில் அவர்கள் நாடற்றவர்கள்.
நாடோடி கூட்டத்தினர்.
பிறதேசத்திலிருந்து வந்ததாலேயே பரதேசி என்று சொல் உருவானது.

தமிழகத்தில் வாழும் எந்தவொரு மதம், சாதியினரும் அந்தந்த வட்டார வழக்குகளில் தான் பேசுவார்கள்.

இவர்களோ கன்னியாகுமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை, வெச்சு, நோக்கு,நேக்கு, தோப்பனார், ஆத்திலே,த்வம்சம், பண்ணிப்புடுத்து,
அவாளை, வந்துண்டு, இருக்கச்சே, பேஷா இதுபோல் ஒரே மாதிரியாகப் பேசுவார்கள்.

அவர்களின் தாய் மொழி சமஸ்கிருதம்.
மொழிவாரியாக மாநிலங்கள் உருவான போது சமஸ்கிருத மொழியின் படி மாநிலம் அமையவில்லை.
ஏனெனில் அது தேவபாஷா.
மற்ற மொழிகள் அனைத்தும் நீசபாஷா.

தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகள் அனைத்தும் மக்கள் மொழி.
சமஸ்கிருதம் மந்திரமொழி.
எனவே அது வளரவில்லை.
135 கோடி மக்களில் 24,000 பேர் வரை மட்டுமே நாளது தேதியில் பேசுவதாகச் சொல்லப்படும் மொழி.

ஒரு பொது மொழி,ஒரு பொது பண்பாடு,ஒரு பொது நிலப்பரப்பு இவற்றைக் கொண்டு வரலாற்றில் நீடித்து நிலைத்து வாழ்ந்த ஒரு இனமே தேசிய இனம்.அந்த இனம் வாழும் பகுதியே நாடு. பலநாடுகள் சேர்ந்த துணைக்கண்டமே இந்தியா.

எனவே தங்களுக்கான நாடு இது அல்ல என்பதால், நாடு என்ற சொல்லே இருக்கக்கூடாது என கதறுகிறார்கள். உரக்கச் சொல்வோம். இது தமிழ்நாடு தான்.

இவர்கள் மீதான கோபத்திற்கு ஒரே காரணம் தான்.
ஈராயிரம் ஆண்டுகள் வாழ்ந்த இந்த மண் மீதும், இங்கு வாழும் மக்கள் மீதும் இப்போதுவரை வெறுப்பு பாராட்டுகிறார்களே என்பது தான்.

சகலமும் உங்களது வேற
எங்களது வேற.

தேவதாசி

 #தேவதாசி

 20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.

கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.

 இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது.
முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார். சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர். பெண் விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.

இதற்கு பார்ப்பனர்கள் சொன்ன காரணம் என்னவென்றால்.. இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டோம் என்று கூறி தேவதாசி பெண்களை வைத்தே இந்த தீர்மானத்தை எதிர்த்து போராட வைத்தனர்.

இந்த இக்கட்டான சூழலில் பெரியாரிடம் வந்து "இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் என்ன செய்வது" என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்.

அதற்கு பெரியார் " நான் சொல்லுகிறபடி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்" என்று சொல்லி அனுப்பினார். பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்கத் தயாராக இருந்தார்.
 
அப்போது சத்தியமூர்த்தி அய்யர் பேசினார். "தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் என்று சொன்னார். அவர்கள் தங்களை அர்ப்பணித்து தொண்டு செய்வதால் புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகிறார்கள்.'' என்றார்

அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சி பார்ப்பனர்களைப் பார்த்து "தேவதாசி ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராக பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இதுவரையில் எங்க ஜாதியிலேயே கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். எக்கச்சக்க புண்ணியத்தை சேர்த்து வைத்துள்ளார்கள்.
இனிமேல் அந்தத் தொண்டை உங்கள் பிராமண பெண்களே செய்யட்டும்.. நீங்களும் புண்ணியம்  சேர்த்து கொள்ளுங்கள், அதற்கு யாரும் எதிர்ப்பு கூறமாட்டார்கள், உங்கள் சாத்திர சம்பிரதாயங்களும் கெட்டுப் போகாது" என்றார்.

இதைக் கேட்ட பார்ப்பனர்களுக்கு, ஒரு செருப்பை வாயில கவ்வக் கொடுத்து, இன்னொரு செருப்பை சாணில முக்கி அடித்தது போல் இருந்தது.

இவ்வளவு பிரச்சினைகளை மீறித்தான் தேவதாசி ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

#பெரியார்_என்றாலே ஏன் பார்ப்பனர்கள் வெறுப்பை உமிழ்கிறார்கள் என்று இப்பொழுதாவது புரிகிறதா..?

மத்திய அரசு.. ஹிந்து மதம்.. இரண்டுமே மாயாபஜார்தான்..

 மத்திய அரசு.. ஹிந்து மதம்..
இரண்டுமே மாயாபஜார்தான்..

பல தடவை சொல்லி விட்டோம், இந்தியா என்பது ஒரு நாடு அல்ல. பல்வேறு தேசிய இனங்கள் கொண்ட ஒரு துணைக்கண்டம். அரசியல் சாசன சட்டப்படி அதன்பெயர் யூனியன் ஆப் இந்தியா.

இந்த பாரத் மாதா கி ஜே என்பதெல்லாம், பிரிட்டிஷ்காரன் நம்மை அடிமைப்படுத்திய போது அவனை எதிர்த்து போராட ஆரம்பித்தபோது வந்தவைதான்.

மன்னர்கள் ஆண்டபோது பாரதமாதா கான்செப்ட் எல்லாம் இல்லை..

பல்வேறு தேசங்களாக சமஸ்தானங்களாய் சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த பகுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக அடிமைப்படுத்தினான் வியாபாரி வடிவில் வந்த பிரிட்டிஷ்காரன்.  

அவன் நம்மை காலில் போட்டு மிதித்த போது வலி எடுக்கவே எல்லோரும் ஒன்று சேர்ந்து கதறினோம். அவனுக்கு எதிராக போராட ஆரம்பித்தோம். ஜெய் ஹிந்த் பாரத் மாதா இன்குலாப் ஜிந்தாபாத் ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் எல்லாம் முளைத்தன.

இப்படி சுதந்திரப் போராட்டம் தேசபக்தி என அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து  சுதந்திரம் பெற்று இந்தியா என ஒரு அரசை பெற்றிருக்கிறோம்.

மத்திய அரசு என்பது பல தேசிய இனங்கள் கொண்ட மாநிலங்கள் தங்களுக்குள்ளாக செய்து கொண்ட ஒரு ஏற்பாடு.. அவ்வளவுதான்..

இங்கே மாநிலங்கள் உண்டு. யூனியன் பிரதேசங்கள் உண்டு. அவற்றுக்கு சொந்தமான நிலங்கள் உண்டு. ஆனால் மத்திய அரசுக்கு என எங்குமே ஒரு அடி நிலம் கூட சொந்தம் கிடையாது.

ராணுவம் விண்வெளி ஆராய்ச்சி  ரயில்வே என எந்த வகையிலாட்டும், அதன் அடிமனை ஏதாவது ஒரு மாநிலத்திற்கு சொந்தமாக தான் இருக்கும்.  உள்ளாட்சி அமைப்புக்கு கீழ்தான் வரும்.

மாநில அரசுகளிடம் இருந்து வரி வருவாய் வாங்கி அதில் தன் செலவுக்கு கொஞ்சம் போக மீதியைக் பகிர்ந்து கொடுப்பது தான் மத்திய அரசின் வேலை.

ராணுவம், ரிசர்வ் வங்கி, வெளியுறவுத்துறை விண்வெளி ஆராய்ச்சி ரயில்வே போன்றவற்றை மட்டுமே வைத்துக்கொண்டு உலக அளவில் இந்தியா என்ற தேசத்தின் தன் பிரதிநிதியாக செயல்படுவது மட்டுமே  மத்திய அரசின் வேலை. அதற்கான அடையாளமும் அவ்வளவுதான்.

இந்த இந்துமதமும் அப்படித்தான். மற்ற மதங்களைப் போல் இந்து மதம் எனப்படுவதற்கு ஒற்றைத் தலைமையோ இதுதான் பிறப்பிடம் என்றோ என்பதெல்லாம் கிடையாது.

பல்வேறு தேசிய இனங்களின் மத நம்பிக்கை அடிப்படையில் ஒரு மெல்லிய இழையால் கட்டப்பட்ட ஒரு கற்பனைதான் இந்துமதம்.

இன்னும் சொல்லப்போனால் இஸ்லாம் கிறிஸ்தவம் போன்ற வேற்று மதங்களை சாராதவர்களை ஒரு குடையின் கீழ் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பெயர் வைத்தான், அதுதான் இந்து மதம்

தமிழனும் ஹிந்துதான். பீகார் காரன் ராஜஸ்தான்காரன் மலையாளி தெலுங்கன் ஆகியோரும் ஹிந்து தான்.

ஆனால் எல்லோருடைய இந்து மத நம்பிக்கையும் 100% ஒரே மாதிரியாகவா இருக்கின்றன?

நம்ம சிவனுக்கு அழகான முருகன் என்ற கடவுள் உண்டு. வடநாட்டான் சிவனுக்கு முருகன் என்ற கான்செப்ட்டே கிடையாது.

தமிழனுக்கு இந்தப் புராணம் இதிகாசம் எல்லாம் கிடையாது. அதிகபட்சம் பக்தி இலக்கியங்கள்தான்..

வடநாட்டு ஹிந்துவுக்கு திருக்குறள் தேவாரம் திருவாசகம் மற்றும் ஐம்பெரும் காப்பியங்கள் எல்லாம் தெரியுமா?

இல்லை நமக்குத்தான் அவருடைய பக்தி இலக்கியங்கள் கலாச்சாரம் பண்பாடு போன்றவை பொருந்துமா?

பத்து நாட்கள் ரொட்டி சாப்பிடவில்லை என்றால் அவன் நாக்கு காலி. 10 நாட்கள் அரிசி சோறு சாப்பிடவில்லை என்றால் நம்முடைய நாக்கு காலி.

இந்தியனோ இந்துவோ, ஒரு கூட்டமைப்பின் அடிப்படையில் பன்முகத் தன்மையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தி தேசிய மொழி இல்லாவிட்டாலும் இங்கிலீஷ்  தெரியாத மற்றவர்களுக்கு தொடர்பு மொழியாக பயன்படுவதால் அதனை அனுமதித்து கொண்டிருக்கிறோம்.

வெளி உலக சூழலில் அவசியம் வரும்போது இந்தியன் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்து தேசத்தின் குடிமகனாக திகழ்கிறோம்.  தவிர மற்ற நேரங்களில் கூட்டாட்சித் தத்துவத்தின் அவரவர் மாநிலத்தின் தனித்தன்மையோடு வாழ்ந்து  கொண்டிருக்கிறோம் அவ்வளவுதான்.

பெரியாரின் லேட்டஸ்ட் வெர்சன் தான் கலைஞர்

 இன்றைய தேதிக்கு சங்கிகள் பின்னால மெளகா பொடி வெச்சா மாதிரி எரியணும்னா ரெண்டு பேர் பெயரை சொன்னால் போதும். முதலாமவர் பெரியார்...  இன்றைக்கும் கதறி அழுவானுக இவரு பேரை சொன்னாலே.  அவரின் சிலை இன்றும் அவமானப்படுத்தப்படுவது ஒன்றே அதற்கு சாட்சி.

இன்னொருவர்... முத்துவேலன் கருணாநிதி.... #கலைஞர் ...

அண்ணாவை ரொம்ப மைல்டா தான் கையாளுவானுக இந்த குரூப்.  ஆனா கலைஞரை இன்னமும் இவனுகளால ஜீரணிச்சுக்கவே முடியாம தவியா தவிக்கிறானுவ.

கலைஞர் அளவுக்கு உயிரோட இருக்கும்போது இம்சை பட்ட தலைவன் வேற யாருமில்ல.  அந்தாளை நிம்மதியா ஆட்சி கூட நடத்தவிடல.  அவ்வளவு இம்சைகள் தினம் தினம்.  எல்லாத்துக்கும் காரணம் இந்த ஆரிய கூட்டம்.

ஊழல், கமிஷன், அறிக்கைன்னு எதையாவது புதுசு புதுசா கெளப்பி விட்டுட்டே இருப்பானுவ.  சரி எங்கடா ஆதாரம்னு கேட்டால., "இது விஞ்ஞானப்பூர்வமானது.  அதனால ஆதாரமே இல்ல" ன்னுவானுக.  விஞ்ஞானத்துக்கு அடிப்படையே நிரூபணமும், ஆதாரமும் தான்.  அது இல்லன்னா அது விஞ்ஞானமே இல்லை.  இதை தெரிஞ்சுக்கூட அறிவுகூட இல்லாத இவனுகளை என்னானு திட்றதுன்னு தெர்ல.

கலைஞரை எந்த ஆதாரமும் இல்லாமல் இவ்வளவு பேசும் இவனுக தான், நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டவர்களை இரும்பு ராடு, அயர்ன் தூண் அப்டினு தினமும் துதி பாடுறானுவக.

தினம் ஒரு அவதூறு... தினம் ஒரு பொய், வதந்தின்னு அவரோட பேரை அடுத்த தலைமுறைக்கு எந்தளவு எதிர்மறையா உருவாக்கம் செய்யணுமோ அவ்ளோ பண்ணினானுக.  ஆனா எல்லாத்தையும் லெஃப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணி தான் அரசியலில் கடைசி வரை மையப்புள்ளியாகவே திகழ்ந்தார் கலைஞர்.

இலங்கை பிரச்னைக்காக ஆட்சியை இழந்த அவர் ஈழ துரோகி.  ஆனா பிரபாகரனை தூக்கிலிட வேண்டும்.  போர்னு வந்தா மக்கள் சாவது சகஜம்... விடுதலைபுலிகள் இயக்கம் தடைன்னு திரிஞ்சவங்க இந்த நாட்ல ஈழத்தாய் என்று உருவாக்கப்பட்டனர்.

பிடிவாதமாக அவரோட பெயரை கெடுத்தே தீருவதுன்னு கங்கணம் கட்டி திரிஞ்சவனுக, அட ஆட்சில இருக்கும் போது தான் இம்சை குடுத்தானுகனு பார்த்தால், இறந்த பிறகும் கூட இன்னமும் அவரை திட்டி தீர்த்துட்டு தான் இருக்கானுவ.

இதுக்கெல்லாம் காரணம் என்ன.....

பெரியார், ஆரிய கும்பலின் அட்டகாசங்களை தோலுரிச்சு காண்பிச்சு நம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் எதிர் கேள்வி கேட்க அடிப்படை காரணமாக இருந்தார்.  ஆனால் அவர் அரசியல், ஆட்சி, அதிகாரம்ங்கிற வட்டத்துக்குள்ள வராததால் அவைகளை சட்டமாக்க முடியவில்லை.

ஆனால்  கலைஞரோ மக்கள் ஆதரவோட ஆட்சிக்கு வந்து பெரியார் கனவுகள் பலவற்றை சட்டமாக்கினார்.  சமூகநீதி, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை மேலோங்க செய்தல், வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கான நியாயமான பங்கு, பெண்களுக்கான கல்வி, முன்னேற்றம், அவர்களுக்கான சரியான அங்கிகாரம், சொத்தில் சம்பங்கு என்று அவர் தொடாத விசயங்களே இல்லை.

சமத்துவபுரம் திட்டமெல்லாம் சாதீயரீதியில் பிரித்து வைத்தே வாழ்க்கையை ஓட்டி வந்த குறிப்பிட்ட பிரிவினருக்கு மிகுந்த சங்கடத்தை அளித்த விசயமாகும்.

எல்லாவற்றிற்கும் உச்சமாய் அனைத்து சமூகமும் அர்ச்சகராகலாம்னு சட்டம் கொண்டு வந்தது அவர்களை செய்வதறியாமல் கையை பிசைய வைத்துவிட்ட ஒன்று.

எங்க அடிச்சா வலிக்கும்னு நல்லா தெரிஞ்ச மனுசன் கலைஞர்.  அதனாலேயே அவரை நம் தமிழ் சமூகத்திலருந்து எப்படியாவது ஒதுக்கி வெச்சிடணும்னு பாடாக பட்டானுவ.  இன்னக்கிம் பட்டுட்டு தான் இருக்கானுவ.

கலைஞர் என்கிற ஒரு பெயரே தமிழகத்தின் அரசியல் அச்சாணி.  இவர் பெயரை விடுத்து தமிழக அரசியலே இல்லை.  ஏன் தமிழகமே இல்லை.

இதற்கு இன்று கதறும் எதிரிகளின் கதறலே சாட்சி....

பெரியாரின் லேட்டஸ்ட் வெர்சன் தான் கலைஞர் என்னும் சமூக நீதி காத்த இளைஞன்.... பெரியார் 2.0

#கலைஞர்_98
#HBDKalaignar98