Sunday, June 06, 2021

பெரியாரின் லேட்டஸ்ட் வெர்சன் தான் கலைஞர்

 இன்றைய தேதிக்கு சங்கிகள் பின்னால மெளகா பொடி வெச்சா மாதிரி எரியணும்னா ரெண்டு பேர் பெயரை சொன்னால் போதும். முதலாமவர் பெரியார்...  இன்றைக்கும் கதறி அழுவானுக இவரு பேரை சொன்னாலே.  அவரின் சிலை இன்றும் அவமானப்படுத்தப்படுவது ஒன்றே அதற்கு சாட்சி.

இன்னொருவர்... முத்துவேலன் கருணாநிதி.... #கலைஞர் ...

அண்ணாவை ரொம்ப மைல்டா தான் கையாளுவானுக இந்த குரூப்.  ஆனா கலைஞரை இன்னமும் இவனுகளால ஜீரணிச்சுக்கவே முடியாம தவியா தவிக்கிறானுவ.

கலைஞர் அளவுக்கு உயிரோட இருக்கும்போது இம்சை பட்ட தலைவன் வேற யாருமில்ல.  அந்தாளை நிம்மதியா ஆட்சி கூட நடத்தவிடல.  அவ்வளவு இம்சைகள் தினம் தினம்.  எல்லாத்துக்கும் காரணம் இந்த ஆரிய கூட்டம்.

ஊழல், கமிஷன், அறிக்கைன்னு எதையாவது புதுசு புதுசா கெளப்பி விட்டுட்டே இருப்பானுவ.  சரி எங்கடா ஆதாரம்னு கேட்டால., "இது விஞ்ஞானப்பூர்வமானது.  அதனால ஆதாரமே இல்ல" ன்னுவானுக.  விஞ்ஞானத்துக்கு அடிப்படையே நிரூபணமும், ஆதாரமும் தான்.  அது இல்லன்னா அது விஞ்ஞானமே இல்லை.  இதை தெரிஞ்சுக்கூட அறிவுகூட இல்லாத இவனுகளை என்னானு திட்றதுன்னு தெர்ல.

கலைஞரை எந்த ஆதாரமும் இல்லாமல் இவ்வளவு பேசும் இவனுக தான், நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டவர்களை இரும்பு ராடு, அயர்ன் தூண் அப்டினு தினமும் துதி பாடுறானுவக.

தினம் ஒரு அவதூறு... தினம் ஒரு பொய், வதந்தின்னு அவரோட பேரை அடுத்த தலைமுறைக்கு எந்தளவு எதிர்மறையா உருவாக்கம் செய்யணுமோ அவ்ளோ பண்ணினானுக.  ஆனா எல்லாத்தையும் லெஃப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணி தான் அரசியலில் கடைசி வரை மையப்புள்ளியாகவே திகழ்ந்தார் கலைஞர்.

இலங்கை பிரச்னைக்காக ஆட்சியை இழந்த அவர் ஈழ துரோகி.  ஆனா பிரபாகரனை தூக்கிலிட வேண்டும்.  போர்னு வந்தா மக்கள் சாவது சகஜம்... விடுதலைபுலிகள் இயக்கம் தடைன்னு திரிஞ்சவங்க இந்த நாட்ல ஈழத்தாய் என்று உருவாக்கப்பட்டனர்.

பிடிவாதமாக அவரோட பெயரை கெடுத்தே தீருவதுன்னு கங்கணம் கட்டி திரிஞ்சவனுக, அட ஆட்சில இருக்கும் போது தான் இம்சை குடுத்தானுகனு பார்த்தால், இறந்த பிறகும் கூட இன்னமும் அவரை திட்டி தீர்த்துட்டு தான் இருக்கானுவ.

இதுக்கெல்லாம் காரணம் என்ன.....

பெரியார், ஆரிய கும்பலின் அட்டகாசங்களை தோலுரிச்சு காண்பிச்சு நம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் எதிர் கேள்வி கேட்க அடிப்படை காரணமாக இருந்தார்.  ஆனால் அவர் அரசியல், ஆட்சி, அதிகாரம்ங்கிற வட்டத்துக்குள்ள வராததால் அவைகளை சட்டமாக்க முடியவில்லை.

ஆனால்  கலைஞரோ மக்கள் ஆதரவோட ஆட்சிக்கு வந்து பெரியார் கனவுகள் பலவற்றை சட்டமாக்கினார்.  சமூகநீதி, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை மேலோங்க செய்தல், வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கான நியாயமான பங்கு, பெண்களுக்கான கல்வி, முன்னேற்றம், அவர்களுக்கான சரியான அங்கிகாரம், சொத்தில் சம்பங்கு என்று அவர் தொடாத விசயங்களே இல்லை.

சமத்துவபுரம் திட்டமெல்லாம் சாதீயரீதியில் பிரித்து வைத்தே வாழ்க்கையை ஓட்டி வந்த குறிப்பிட்ட பிரிவினருக்கு மிகுந்த சங்கடத்தை அளித்த விசயமாகும்.

எல்லாவற்றிற்கும் உச்சமாய் அனைத்து சமூகமும் அர்ச்சகராகலாம்னு சட்டம் கொண்டு வந்தது அவர்களை செய்வதறியாமல் கையை பிசைய வைத்துவிட்ட ஒன்று.

எங்க அடிச்சா வலிக்கும்னு நல்லா தெரிஞ்ச மனுசன் கலைஞர்.  அதனாலேயே அவரை நம் தமிழ் சமூகத்திலருந்து எப்படியாவது ஒதுக்கி வெச்சிடணும்னு பாடாக பட்டானுவ.  இன்னக்கிம் பட்டுட்டு தான் இருக்கானுவ.

கலைஞர் என்கிற ஒரு பெயரே தமிழகத்தின் அரசியல் அச்சாணி.  இவர் பெயரை விடுத்து தமிழக அரசியலே இல்லை.  ஏன் தமிழகமே இல்லை.

இதற்கு இன்று கதறும் எதிரிகளின் கதறலே சாட்சி....

பெரியாரின் லேட்டஸ்ட் வெர்சன் தான் கலைஞர் என்னும் சமூக நீதி காத்த இளைஞன்.... பெரியார் 2.0

#கலைஞர்_98
#HBDKalaignar98

No comments: