Saturday, November 26, 2022

கடவுள்னு நீங்க கும்பிடுற சிலையே பார்ப்பனர்கள் காலுக்கு கீழதான்

கடவுள்னு நீங்க கும்பிடுற சிலையே பார்ப்பனர்கள் காலுக்கு கீழதான் என்கிறார்களா ஐயன்மீர்?

 



அடே சங்கீஸ் இது என்ன அபிஷேகம் னு கேட்டு சொல்லுங்கடா.

 


 

சனாதனக் கதை

 சனாதனம்.. சனாதனம் என்று சங்கிகள் பொங்கிக் கொண்டிருக்கும் இந்த அற்புதமான சுபமுகூர்த்த வேளையிலே.. சனாதனம் பற்றி நாமும் அறிந்து கொள்ள சனாதனத்தின் மிக முக்கியமான இதிகாசமான மஹாபாரதத்தில் இருந்து கதைகள் சிலவற்றை அறிந்து கொண்டு சனாதனத்தின் சிறப்பை உணர்வோமாக!

சனாதனக் கதை - 1

யயாதியின் மகள் மாதவி

மஹாபாரதம் உத்தியோக பருவத்தில் இந்தக் கதை வருகிறது.

விசுவாமித்திரர் என்னும் அந்த மஹாமுனியிடம் சீடனாக இருந்து பொறுமை என்பதைக் கற்றுக் கொண்ட கலவன் என்னும் பிராமணன், விசுவாமித்திரரிடம், "நான் உங்களுக்கு ஏதாவது குருதட்சணை தர வேண்டும். தயவு செய்து என்ன வேண்டும் என்று கூறுங்கள்" என்றானாம். விசுவாமித்திரர் "எனக்கு எதுவும் தேவை இல்லை" என மறுக்க, மீண்டும் மீண்டும் கலவன் அவரைத் தொல்லை செய்து கொண்டே இருந்தானாம். விசுவாமித்திரர் கொஞ்சம் எரிச்சலாகி, "எனக்குக் கருப்பு நிறக் காதுகள் உடைய வெள்ளை நிறக் குதிரைகள் எண்ணூறு வேண்டும்" என்றாராம்.

"இப்படிப்பட்ட தரமான எண்ணூறு குதிரைகள் வாங்கிப் பரிசளிக்கும் அளவுக்கு என்னிடம் செல்வம் இல்லையே என்ன செய்வேன்? விஷ்ணுவிடம் சரணடைந்து கேட்கலாமா? என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் கருடன் அவன் முன் தோன்றி, "வா நான் உனக்கு வழிகாட்டுகிறேன்" என்று தன் மீது அமர்ந்து கொள்ளச் சொல்லிப் பறந்தான்.

"உலகத்தில் பிராமணர்களுக்கு வேண்டிய செல்வத்தைத் தரவே அரசர்கள் இருக்கிறார்கள். வா உன்னை காசியை ஆளும் யயாதி என்னும் அரசனிடம் அழைத்துச் செல்கிறேன்" என்று யயாதியிடம் சென்றார்கள். யயாதியிடம் குதிரைகள் வேண்டும் என்று கேட்க, யயாதியோ "எண்ணூறு உயர்தரக் குதிரைகள் தரும் அளவுக்கு செல்வம் இல்லை. யாசகம் கேட்டு வந்த பிராமணர்களைத் திருப்பி அனுப்பினால் என்னுடைய குலமே அழிந்து விடும். செல்வம் இல்லாவிட்டாலும், என்னிடம் மாதவி என்னும் மகள் இருக்கிறாள். அவள் உலகமே வியக்கும் பேரழகி, அரசர்கள் முதல் அசுரர்கள் வரை அவள் கரம் பிடிக்கப் போட்டி போடுகிறார்கள். எண்ணூறு குதிரைகள் என்ன? இவளை எந்த அரசனுக்குக் கொடுத்தாலும் அவன் உலகத்தையே உங்களுக்குக் கொடுத்து விடுவான்" என்று கூறினார். கருடனும் "நான் உனக்கு வழி காட்டிவிட்டேன். இனி உன் திறமை" என்று கூறிவிட்டு பறந்துவிட்டார்.

அந்த கன்னிகையை அழைத்துக் கொண்டு கலவன் அயோத்தியை ஆண்ட ஹர்யாஸ்வா என்னும் இஷ்வாகு (ராமன் பிறந்ததாகக் கூறப்படும் வம்சம்) அரசனிடம் அழைத்துச் சென்று, "இவளை நீ மனைவியாக ஏற்றுக் கொள். இவள் உனக்கு நான்கு நல்ல மகன்களைப் பெற்றுத் தருவாள். ஆனால், அதற்குப் பதிலாக ஸ்த்ரீதனமாக  எனக்கு வெள்ளைநிறமும் கருப்புநிறக் காதுகளும் உடைய எண்ணூறு குதிரைகள் தர வேண்டும்" என்றார்.

அந்த மன்னன் "ஆஹா!இவள் பேரழகி தான். எனக்கு நன்மக்களைப் பெற்றும் தருவாள். ஆனால் என்னிடம் இருநூறு குதிரைகள் தான் இருக்கின்றன. நான் ஒரே ஒரு மகனை மட்டும் இவள் மூலம் பெற்றுக் கொள்கிறேன்" என்று சொன்னானாம்.

இதைக் கேட்ட மாதவி கலவனிடம், "ஐயா.. பரவாயில்லை. எனக்கு உறவு கொண்டு குழந்தை பெற்றாலும் மீண்டும் கன்னித்திரை உருவாகி விடுகிற வரம் இருக்கிறது. அதனால், நீங்கள் நான்கு மன்னர்களிடம் என்னை அழைத்துப் போய் குழந்தை பெற வைத்து எண்ணூறு குதிரைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்றாளாம்.

அது போலவே செய்து அந்த மன்னனுக்குக் குழந்தை பிறந்தவுடன் குழந்தையை விட்டுவிட்டு மாதவியை அழைத்துக் கொண்டு கலவன் என்னும் அந்த பிராமணர் அடுத்த மன்னனைப் போய்ப் பார்த்தார். அவன் பீமஸேனனின் மகனாகிய திவோதசன். திவோதசனும் "நானும் இதை ஏற்கனவே கேள்விப்பட்டேன். இது எனக்கு மிகப்பெரிய மரியாதை" என்று கூறி மாதவியை ஏற்றுக் கொண்டு ஒரு குழந்தையைப் பெற்றுக் கொண்டு இருநூறு குதிரைகளைக் கொடுத்தானாம்,

அடுத்ததாக மாதவியை அழைத்துக் கொண்டு கலவன் போஜ அரசனாகிய உசீநரனிடம் சென்றார். அவனும் முன்னவர்களைப் போலவே ஒரே ஒரு குழந்தையை மட்டும் மாதவி மூலம் பெற்றுக் கொண்டு இருநூறு குதிரைகளை மட்டும் கொடுத்துவிட்டானாம்.

கலவன் அறுநூறு குதிரைகளையும், மாதவியையும் வைத்துக் கொண்டு அடுத்து யாரிடம் போகலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் கருடன் அவரிடம் வந்து, மீதமிருக்கும் இருநூறு குதிரைகளுக்கு பதிலாக விசுவாமித்திரருக்கு இந்த மாதவியைக் கொடுத்து ஒரு மகனைப் பெற்றுக் கொள்ளச் சொல்லலாம் என்று யோசனை கூற, அது போலவே விசுவாமித்திரரிடம் சென்று கலவன் கூறினான். விசுவாமித்திரரோ, "இதை நீ முன்பே சிந்தித்து இருந்தால், இவ்வளவு பேரிடம் போக வேண்டிய தேவை இல்லை. நானே, மாதவியுடன் கூடி நான்கு மகன்களைப் பெற்றிருப்பேனே?" என்று கேட்டு, மாதவியையம் அறுநூறு குதிரைகளையும் பெற்றுக் கொண்டு கலவனை அனுப்பிவிட்டாராம்.

மாதவியுடன் கூடி விசுவாமித்திரர் அஷ்டகன் என்னும் மகனைப் பெற்றெடுத்து அவனிடம் அறுநூறு குதிரைகளை விட்டுவிட்டு, மாதவியை மறுபடியும் கலவனிடம் கொடுத்துவிட்டாராம்.

கலவனும் மாதவியிடம் "பெண்ணே! நீ என்னையும் உன் தந்தையையும் நான்கு மன்னர்களையும் உன் மகன்களைப் பெரும் சக்தியால் காப்பாற்றிவிட்டாய். சென்று வா!" என்று கூறி தந்தை யயாதியிடம் கொடுத்து விட்டான்.

இதற்கு மேலும் தனக்கு மணவாழ்க்கை வேண்டாம் என்று எண்ணிய மாதவி துறவறம் பூண்டு காடுகளில் வாழ்ந்து மடிந்தாள்.

---------------------------------------------------------------------

இது ஒரு கதை தான். உண்மையான நிகழ்வு என்று நாம் கூறவில்லை. ஆனால், இப்படி ஒரு கதை எழுதப்பட்டதும் அது மிகப்பெரும் இதிகாசத்தில் பகுதியாக இன்றும் இருப்பதும் உண்மை.

இந்தக் கதையை எழுதியவர் வேதங்களைத் தொகுத்த, பிரம்மசூத்திரம் என்னும் வேதாந்தத்தின் அடிப்படை நூலை எழுதிய, பல புராணங்களை எழுதிய ரிஷி என்று சனாதனிகள் நம்புகிற வேதவியாசர்.

இந்தக் கதை மூலம் மக்களுக்கு அவர் சொல்ல விரும்பியது என்ன?

1.பிராமணர்கள் தானம் என்று கேட்டால் மறுத்தால் வம்சமே அழிந்து விடும்.

2. அவர்கள் கேட்பதைக் கொடுக்க முடியாவிட்டாலும் அதற்கு ஈடாக எதையாவது கொடுத்தே ஆக வேண்டும்.

3. தந்தை தன்னைத் தானமாக எவனோ ஒருத்தனுக்குக் கொடுத்தாலும் எந்த எதிர்ப்பும் இன்றி சென்றுவிட வேண்டும்.

4. தானம் வாங்கியவர் தன்னை எப்படி பயன்படுத்தினாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது.

5. பிள்ளை பெற்றுக் கொடுக்கும் தன்னுடைய கடமையை எவன் செய்யச் சொன்னாலும் பெண் செய்ய வேண்டும்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இப்படிப்பட்ட கதைகளை உருவாக்கி, மக்கள் மத்தியில் பரப்பி தன்னுடையதும் தான் சார்ந்த கூட்டத்தின் நலத்தையும் மற்றவர்கள் எப்பாடுபட்டாவது எவ்வளவு கேவலமான செயல்களைச் செய்தாவது கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே சனாதனம். இந்த சனாதனம் நாட்டை அல்ல; ஒரு சிறு கூட்டத்தை மட்டுமே கட்டிக் காக்கிறது என்பதே உண்மை.✍🏼🌹

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை ஏமாற்றி முட்டாளாக்கிய ஸ்ரீரங்கம் பார்ப்பனர்கள்

 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை ஏமாற்றி முட்டாளாக்கிய ஸ்ரீரங்கம் பார்ப்பனர்கள் - இன்றுவரை  தொடரும் பார்ப்பன தந்திர அரசியல்...

13ஆம் நூற்றாண்டில் ஒரு சம்பவம்..

திருச்சிக்குப் பக்கத்தில சிறீரங்க கோயில்ல துலாபாரம் நடத்துருக்கு.. செஞ்ச பாவத்துக்கு ஏத்த மாதிரி எடைக்கு எடை பொருள கடவுளுக்கு குடுக்கப்படுறதா சொல்லிட்டு, ஐயர்ங்க ஆட்டய போடுற நிகழ்ச்சி தான் துலாபாரம்.

இந்த பார்ப்பனர்களுக்கு துலாபாரம்  கொடுத்து அதிகமான அரசர்கள் பார்ப்பனர்களால் ஏமாற்றிப்பட்டுருக்காங்க. அதுல ரெம்ப அப்ராணியா, முட்டாளா ஏமாந்தவன் தான்  சுந்தர பாண்டியன் ங்கிற மன்னன். இப்படி சொன்னா நம்ம ஆளுகளுக்குத் தெரியாது. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் னு சொன்னா தெரியும். நம்மாள்களுக்கு சினிமாவோடு லிங்க் பண்ணிதான் தெரிய வைக்கணும்

அந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஒரிசா வரைக்கும் படைஎடுத்துக்கொண்டு போனான். தெற்கே இலங்கை வரைக்கும் படை எடுத்துப் போனான். இந்த நாடு முழுவதையும் அவனுடைய ஆட்சியின் கீழ கொண்டுவந்து பெரிய பேரரசாக சக்கரவர்த்தியாக ஆண்டான் னு வரலாறு சொல்லுது.

ஒரு ஐயர் சுந்தரபாண்டிய மன்னனிடம் "நீ பல போர்களை செய்திருக்கிற, பல உயிர்களைக் கொன்றிருக்கிற.. அந்தப் பாவத்தைப் போக்கத் துலாபாரம் செய்ய செய்யணும்" னு சொல்லிருக்குறான். மன்னனும் "சரி செஞ்சிட்டா போச்சி.. துலாபாரம் எங்கே செய்யலாம்?" னு கேக்க., "சிறிரங்கத்தில போயி பெருமாளுக்கு செய்வோம்"னு பூணுல் போட்ட ஐயர் சொல்ல,  மன்னனும் "சரி.. அப்படியே பண்ணிறலாம்"னு சொல்லிட்டான்.

சுந்தரபாண்டியன் துலாபரம் கொடுக்குற மேட்டர கோயிலுள இருக்குற ஐயர்ங்கிட்ட சொல்ல.. ஐயர்ங்க கோயிலில தராசு கட்டி துலாபரத்துக்கு ரெடி பண்றாங்க

சுந்தரபாண்டியன் பட்டுச் சட்டை வேட்டியோடு துண்டை எல்லாம் போட்டு கோயிலுல இருக்குற ஜனங்களுக்கு ஒரு கும்புட போட்டு தராசில் உட்காரப் போனான். அப்போ.. ஒரு பட்டர் கேக்குறான் "மன்னா.. எடைக்கு எடை என்ன தரப் போகிறீர்"னு

(எடைக்கு எடை சாக்குப்பை நிறையா வெள்ளரிக்காய் தாறேன், கத்தரிக்காய் தாறேன், தக்காளி தாறேன், பழம் தாறேன் னு சொன்னா.. ஐயர்பயலுக மூடிட்டு வாங்கிட்டு வீட்டுக்கு போயிருப்பாங்க...)

ஆனா.. சுந்தரபாண்டியன் சொன்னது"நான் எடைக்கு தங்கம், பொருள்கள் தரப் போகிறேன்" னு

இவன் இப்படி சொன்னதும் பார்ப்பன மூளை வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சி.. "எடைக்கு எடை தங்கம், வைரம் எல்லாம் கொடுக்கப் போறாான். எல்லாம் நம்மவாளுக்குத்தான் கிடைக்க போது, இவன் பட்டு வேட்டி சட்டையோட தாரசுல உட்காரக் கூடாது" னு ஒரு ஐயர் ஆரம்பிக்கான் "மன்னா.. நீங்கள் எதற்காக துலாபாரம் செய்கிறீர்கள்?"னு கேக்க, மன்னன்"போர்க்களத்திலே பெற்ற வெற்றிக்காகவும், அங்கே செய்யப்பட்ட படுகொலைக்கு பாவ சாந்திக்காகவும் தான்"னு சொல்ல,

"ரொம்ப மகிழ்ச்சி. நீங்க துலாபாரம் செய்யுங்கள். அந்தத் தங்கத்தை எல்லாம் கொடுங்க.. ஆனால் ஒன்று. நீங்கள் போர்க் களத்திற்கு எப்படி போனீர்களோ அந்த மாதிரி உடை, பொருள்களை அணிந்து கொண்டு உட்காருங்கள்"னு ஒரு ஐயர் சொல்றான்.

அங்க இருக்குற எல்லா ஐயர் பயபுள்ளைகளும் கணக்கு போட ஆரம்பிச்சுட்டாங்க "போர்க்களத்திற்குப் பட்டு வேட்டியையும் துண்டையுமா கட்டிக் கொண்டு போவான்? போர்க்களத்திற்கு எப்படி போவான்? பெரிய இரும்பு உடைவாள், ஈட்டி, கேடயம் இரும்புக் கவசம், தலைப்பாகை இதை எல்லாத்தையும் கொண்டு போவான்.. இதுவே ஒரு 50 கிலோக்கு சேரும், அப்றம் சுந்தரபாண்டியன் ஒல்லியான ஆள் இல்ல,. நல்ல குண்டான ஆள். இந்த உடைகளைப் எல்லாம் போட்டால் இன்னும் 50 கிலோ வைரம் எக்ஸ்ட்ரா வரும்" னு பிளான்ன போட்டு... "சுந்தரபாண்டிய மன்னா.. நீங்க போருக்கு எப்படி போனீங்களோ.. அத மாதிரி தராசுல உக்காருங்க,.. அப்போதான் நீங்க செஞ்ச பாவம் போகும்"னு ஐயர்ங்க சொல்ல ஆரம்பிட்டாங்க.

போரில எதிரிகள பாத்து நடுங்காத சுந்தரபாண்டியன் இந்த ஐயர், பட்டர் பயக கோரஸ்ஸா சொன்னத பாத்து நடிங்கிட்டான். உடனே தளபதிய கூப்ட்டு.., உடைவாள், கவசம், ஈட்டி எல்லாம் எடுத்துட்டு வர சொல்லி,  போருக்கு போன மாதிரியே தராசில் உட்காரப் போறான்.

"கொஞ்சம் பொறுங்க மன்னா" னு இன்னொரு பூணுல் போட்ட பெரிய பட்டர் கேக்குறான் "நீ எதற்காக துலாபாரம் இப்படி செய்யப் போகிறாய்?"னு கேக்க.., இப்ப யாரு.. னு பாத்த மன்னன் "போர்க் களத்திலே பெற்ற வெற்றிக்காக அங்கே செய்யப் பட்ட படுகொலை பாவங்களைப் போக்குவதற்காக செய்கிறேன்"னு சொல்ல,

அதுக்கு பட்டர் "சரி, நல்லா பண்ணுங்கோ... திவ்யமா பண்ணுங்கோ... ஆனா ஒன்னு, போர்க்களத்திற்கு எதன்மீது போனீர்கள்" என்று கேட்டவன் "போர்க்களத்திற்கு யானை மீது தானே போனாய்?"

(யானையோட, ஒவ்வொரு தந்தமும் மட்டும் 20 கிலோ எடை இருக்கும். மன்னனோட யானை டன் கணக்குல வெய்ட் இருக்கும்) இத கணக்குபோட்ட பட்டர் "யானையோடு வந்து மன்னன் சுந்தர பாண்டியன் உட்கார வேண்டும். யானையோடு மட்டுமல்ல, யானை மீது உட்கார்ந்திருந்த அம்பாரியோடு உக்காரவேண்டும்"னு சொல்ல அங்க இருக்குற ஜனங்க, பொண்டு பொடுசுக எல்லா சிரிச்சிட்டாங்க.

பக்கத்திலே இருந்த ஐயர்ங்க எல்லாம் கோரஸா.."ஆமா மன்னா.. நீங்கள் அவர் சொல்லுகிற மாதிரி யானைமீது வாருங்கள்"னு சொல்ல ஆரம்பிக்க.. அங்க இன்னோரு ஐயர் குருப்பு "இப்ப எப்படி இவன் துலாபாரம் கொடுக்கிறான்னு பார்ப்போம். அதும் யானை மீது அம்பாரி கொடுக்கிற அளவுக்கு"னு பேசி சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

சுந்தரபாண்டியன் சிரிக்கல "யானைக்கு எடையா எதுல வச்சி கொடுக்க, தாரசு இல்லயே ?"னு கேக்க, அதுக்கு ஐயர் பயக "அத நாங்க பாத்துக்குறோம்.. நீங்க யானையோட வந்தா மட்டும் போதும்"னு சொல்லிட்டு தாரசு ரெடி பண்ண ஆத்தங்கர மண்டபத்திற்குப் போனாங்க, காவிரியில நிறையத் தண்ணீ ஓடுனது வசதியா போனதால.., இரண்டு பரிசலைப் யானையயும், பொருளயும் வைக்கிற மாதிரி பெருசா செஞ்சி.., ரெண்டையும் ஆத்துல மிதக்க விட்டுடாங்க.

அப்றம் சுந்தரபாண்டியன யானையோட ஒரு பரிசல்ல நிக்க வச்சிட்டு, இன்னொரு பரிசல்ல பொருள்கள கொட்ட சொன்னானுக. சுந்தரபாண்டியனும் தங்கம், அரண்மனல இருக்குற பொருள எல்லாம் கொட்டி சிறிரங்க கோயிலுக்கு துலாபரம் கொடுத்தான். அதற்கப்புறம் சுந்தரபாண்டியன பார்ப்பனர்கள் மேளதாளத்துடன் கூட்டிப் போக பெரிய திருவிழா மாதிரி கொண்டாடியிருக்காணுக.

எல்லாம் முடிச்சதும் ஏமாளியான சுந்தரபாண்டியன், அந்த கோயில் தலைமை பட்டரைப் பார்த்து "சாமி... எனக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது"னு கேக்கான்.
(சுந்தரபாண்டியன் யாரு..?.. மன்னாதி மன்னன். தென்னாட்டு சக்ரவர்த்தி, பேரரசன், அவனுடைய கண் அசைவுக்கும், கை அசைவுக்கும் மக்கள், மன்னர்கள்,  கைகட்டி காத்திருக்கின்றாங்க.. அவ்வளவு பெரிய இந்த சக்கரவர்த்தி.. பட்டரிடம் "சாமி, எனக்கு ஒரு கோரிக்கை இருக்கு.. இந்தக் கோவில் வளாகத்திற்குள்ளயே என்னுடைய சிலை ஒன்றை வைத்துக் கொள்கிறேன்" னு கேக்க..

அதுக்கு அந்த பட்டர் பய.."இல்ல, இல்ல.. ஆண்டவனுடைய ஆலயத்தில் சாதாரண மனிதனுடைய சிலை வைப்பதற்கு இடம் இல்லை"னு மறுத்துட்டான்.

சுந்தரபாண்டியன் நினைச்சிருந்தா இந்தக் கோவிலையே இடித்து தரைமட்டமா ஆக்கியிருக்கலாம். அவனுடைய ஆதிக்கத்தில தான் அந்த கோவிலும் இருக்கு. இந்த ஐயர், பட்டரெல்லாம் அவன் போடுற பிச்சையில உயிர் வாழ்ரவுங்க, அந்தப் பெருமாளும், கோயிலுமே அவன் போடுற பிச்சையில தான் வாழ்ற நிலைமை இருக்க, அவன் இவ்வளவு செல்வத்தைக் கொடுத்தும், ஒரு ஓராமா கூட அவனுடைய சிலைய வைக்க விடல.

அதுக்கு பிறகு ஒரு கட்டப்பஞ்சாயத்து நடத்தி,... "சிலையெல்லாம் வைக்க விடமாட்டோம், வேணுமுனா.. நீங்க பிறந்த நட்சத்திரத்தில உங்களுக்கு ஒரு பூஜைய போடுறோம், அர்ச்சனைய பண்றோம் னு பட்டர்கள் சுந்தரபாண்டியன்கிட்ட சொல்லியிருக்கானுக. அந்த அர்ச்சனை சிறிரங்கத்து கோயிலுல இன்னைக்கு வரைக்கும் நடந்துட்டு இருக்கு..

BJP காரன் போட்டோ சாப்புக்கு 2 ரூபாய் குடுக்குற மாதிரி, இந்த ஐயர் பயபுள்ளகளுக்கு தட்டுல 1 ரூபாயோ, 2 ரூபாயோ போட்டாலே போதும் அர்ச்சனைய பண்ண போராணுக.. மலைபோல செல்வத்தை கொடுத்துட்டு ஒரு அர்ச்சனைக்காக மன்னன் அங்கே கைகட்டி நின்னுருக்கானா.... எவ்வளவு பெரிய முட்டாளா இருப்பான் சுந்தரபாண்டியன்..?
நம் முன்னோர்கள் அப்பவே முட்டாள்தான் பாஸு...

நான் சொல்லுவதெல்லாம் கதை இல்ல. எல்லாமே சீறீரங்கம் கோயில் கல்வெட்டில் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் போய் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த பூணூல் பார்ப்பனர்கள் அந்த காலத்துல இருந்து இப்போ வரைக்கும் நம்மள இப்படித்தான் ஏமாத்திட்டு வாரங்க.. இதுக்கு உதாரணமா நடைமுறைல இருக்குற.. பார்ப்பனர்களின் RSS இயக்கத்தால் வழிநடத்தப்படுற மோடி ஆட்சிய சொல்லலாம்.. மக்களோட வரிப் பணத்தையெல்லாம் பார்ப்பன முதலாளிகளுக்கும், பானியா முதலாளிகளுக்கும் வாரி கொடுக்குறது, பார்ப்பனர்களுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்புல 10% இடஒதுக்கீடு  னு அவன் நோகமா சவ்ரிய மைரா வாழ்றதுக்கு நாட்டுல இருக்குற மீத 97% முட்டாளா ஆக்கிட்டான்.

 பார்ப்பனன் இன்னும் நம்ம கோமணத்த தான் உறுவல னு நீங்க நினைக்க வேண்டாம் மக்களே. எப்போ 3% பூணூல்காரனுக்கு 10% இடஒதுக்கீடு செல்லும் னு கோர்ட் சொல்லிச்சோ., அப்பவே 97% இருக்குற நாம நிர்வாணமா ஆக்கப்பட்டுவிட்டோம்.✍🏼🌹

EWSReservation Must Read

 Thread!
#EWSReservation
Must Read!

facebookல் ஒரு நண்பரின் பதிவு. கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று👇

நேத்து ஒரு அதிமுக நண்பன் கிட்ட பேசிட்டிருந்தேன். மிக நெருங்கிய நண்பன் அவன். #EWS ஆதரிச்சு ரொம்ப ஆவேசமா பேசிட்டிருந்தான். இட ஒதுக்கீட்டால SC/STதான் எல்லா வாய்ப்புகளையும்..

..பறிச்சு முன்னேறிட்டதாகவும்  தன் சமூகம் பின் தங்கிவிட்டதாகவும் அடிச்சு பேசினான். அவன் MBC

"குப்பை அள்ளுபவர்களுக்கு 75 ஆயிரம் சம்பளம், அவர்கள் 2 கோடியில் வீடு கட்டுகிறார்கள்" என்றெல்லாம் WhatsAppல் வந்த தகவல்களையெல்லாம் பேசிக் கொண்டிருந்தான். அதெல்லாம் பொய்கள் என்று..

..சில Dataக்களைச் சொன்னேன். இதுதான் உங்ககிட்ட இருக்கிற பிரச்சனை.. சும்மா Bookக்க படிச்சிட்டு, Data படிச்சிட்டு பேசுவீங்க. அதெல்லாம் உண்மையில்ல. Data எல்லாமே பொய்னு ஒரே அடியா அடிச்சிட்டான்.
 
திடீர்னு "இதுக்கெல்லாம் திமுக ஆட்சிதான் காரணம், தீபாவளி வாழ்த்து ஏன் சொல்லல?.."

"..ஆ.ராசா இந்துக்கள இழிவு படுத்திட்டாரு, திருமா நாடககாதலை ஊக்குவிக்கிறாரு, இந்து முஸ்லிம்.. ப்ளா ப்ளா ப்ளா"ன்னு பாஜக குரல்ல சங்கித்தனமா பேச ஆரம்பிச்சான்.

இவன் இப்டி பேசற ஆள் இல்லையே.. என்னடா இவ்வளவு எமோசனலா பேசறான்னு குழப்பமா இருந்துச்சு.

கடைசியா அதற்கான பதில் அவனே சொன்னான்.

"அம்பது வருஷமா இட ஒதுக்கீட்டால SC/ST பயனடஞ்சாங்கள்ல.. இந்த 10% EWSனால நாங்க பயனடையக் கூடாதா?"ன்னு கேட்டான்.
 
"அடேய்..  EWSல உனக்கும் பங்கு கிடைக்கும்னுதான் இவ்ளோ நேரம் பேசிட்டிருந்தியா?"னு கேட்டேன்.

Basically அவன் நல்லவன் தான்..

..வெளிப்படையா 'ஆமா'னு ஒத்துக்கிட்டான். அவன் தன்னையும் அரியவகை ஏழையா நெனச்சுட்டு இருந்திருக்கான்.

உயர்ஜாதி ஏழைகள் என்கிற வார்த்தை எவ்வளவு நுட்பமானது, சூழ்ச்சிகரமானது என்று அப்போதான் புரிஞ்சுது எனக்கு. சமூகத்தில் தன்னை உயர்ஜாதியாக கருதிக்கொள்கிற BC, MBCயில் இருக்கும்..

..பலரை கூட இந்த EWS இடஒதுக்கீடு தமக்கானது என நம்ப வைக்கப்பட்டிருப்பது ஆபத்தானது. இதற்கெதிரான பெரிய எதிர்ப்புக்குரல் எதுவும் வராததன் பின்னணியில் இந்தச் சூழ்ச்சிதான் இருக்கிறது

இந்த EWS என்கிற வழிப்பறிக்கெதிராக பேசாமல், ஜாதியை உயர்த்திப்பிடிக்கும் ஜாதிக்கட்சி தலைவர்களின்..

..சூழ்ச்சிகரமான அமைதிக்குப் பின்னால் இருக்கும் ஆதாய கணக்கீடுகளில் பலியாக்கப்படுவது இவனைப்போன்ற அப்பாவிகள்தான்

ஜாதி உளவியல், தனக்கு மேலடுக்கில் உள்ளவர்களின் ஆதிக்கம் குறித்து கவலையோ வெட்கமோ கொள்வதில்லை. ஆனால் தனக்குக் கீழடுக்கில் இருப்பவர்களின் குறைந்தபட்ச...

..முன்னேற்றத்தைக்கூட சகித்துக்கொள்ள இயலாதபடி இரக்கமற்ற முறையில் சூழ்ச்சிகரமாக வார்க்கப்படிருக்கிறது

இந்த WhatsApp வதந்திகள் மனிதர்களின் சிந்தனையை மலினப்படுத்தி, சக மனிதர்களின் மீதான கண்ணோட்டத்தை எவ்வளவு தூரம் ஊனப்படுத்திவிடுகிறது என்பதை நினைக்கும்போது கவலையாக இருக்கிறது

எதார்த்தத்தில் அவன் படித்தவன். சிந்திக்கும் தன்மையுடையவன் தான். சிந்திக்க விடாமல் தடுத்திருக்கும் பார்ப்பனியக் கருத்தியலையும் வாட்சப் பல்கலைக்கழகத்தையும் தாண்டி என்றாவது வெளியே வந்து தன்னைச்சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் வலையைப் புரிந்துகொள்வான் என்று நம்பிக்கை இருக்கிறது

ஆனால் எவ்வளவு நாள் காத்திருப்பது. அதற்குள் மீண்டும் நம்மை பழைய நிலைக்கு கொண்டு செல்வார்கள். ஒரு 100வருடங்கள் பின் தங்குவோம்.

இந்த ஆபத்தை புரிந்துகொண்டு அனைத்து ஜனநாயகவாதிகளும் ஒன்றிணைந்து இந்த சமூக அநீதிக்கு எதிராக போராட வேண்டும். எதிர்கால சந்ததியினரை காப்பாற்றவேண்டும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

இந்த மோசடிகள் அனைத்தும் எந்த ஒரு வெளிநாட்டவரும் செய்யவில்லை

 தாஜ்மஹால் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது;
 செங்கோட்டை = முஸ்லிம்களால் கட்டப்பட்டது;
 குதுப்மினார் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது;
 சார் மினார் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது;
 கோல் கும்பஸ் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது;
 சிவப்பு கதவுகள் = முஸ்லிம்களால் செய்யப்பட்டவை;
 ஏவுகணை = முஸ்லீம் செய்யப்பட்டது (டாக்டர் கலாம்);

 இந்தியா கேட் = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது
 இந்தியாவின் நுழைவாயில் = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது
 ஹவுரா பாலம் = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது;
 பாராளுமன்ற மாளிகை = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது;
 ராஷ்டிரபதி பவன் = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது;
 வடக்கு-தெற்கு தொகுதி = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது;
 கன்னாட் பிளேஸ் = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது..... (கட்டப்பட்டவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள்.)
 அரசியலமைப்பு = எஸ்சி உருவாக்கப்பட்டது (டாக்டர் அம்பேத்கர்);

 அப்படியென்றால் இந்தியாவில் இந்த புண்ணிய பிராமணர்கள் என்ன செய்கிறார்கள்???
 - நாட்டை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்!
 நாடு, மதம், கலாச்சாரம், நாகரிகம், சமூகம் ஆகியவற்றை பலவீனப்படுத்துகிறது!
 நாட்டில் சாதி, மதத்தின் பெயரால் கலவரங்களை உருவாக்கி வருகின்றனர்.
 - நாட்டை உடைத்திருக்கிறார்கள்!
 நாட்டுச் செல்வம், மதப் பயம் என்ற பெயரில் கோயில்களில் வசூல் செய்து வருகின்றனர்!

 1987 - போஃபர்ஸ் பீரங்கி ஊழல், 960 கோடி
 1992 - பங்கு ஊழல், 5,000 கோடி.
 1994 - சர்க்கரை ஊழல், 650 கோடி
 1995 - முன்னுரிமை ஒதுக்கீடு ஊழல், 5,000 கோடி
 1995 - சுங்க வரி மோசடி, 43 கோடி
 1995 - கப்லர் ஊழல், 1,000 கோடி
 1995 - தினார் / ஹவாலா ஊழல், 400 கோடி
 1995 - மேகாலயா வன ஊழல், 300 கோடி
 1996 - உர செவ்வக ஊழல், 1,300 கோடி
 1996 - தீவன ஊழல், 950 கோடி
 1996 - யூரியா ஊழல், 133 கோடி
 1997 - பீகார் நில ஊழல், 400 கோடி
 1997 - மியூச்சுவல் ஃபண்ட் ஊழல், 1,200 கோடி
 1997 - சுக்ராம் டெலிகாம் ஊழல், 1,500 கோடி
 1997 - SNC மின் திட்ட ஊழல், 374 கோடி
 1998 - உதய் கோயல் விவசாய விளைபொருள் ஊழல், 210 கோடி
 1998 - தேக்கு மரக்கன்று ஊழல், 8,000 கோடி
 2001 - டால்மியா பங்கு ஊழல், 595 கோடி
 2001 - UTI ஊழல், 32 கோடி
 2001 - கேதன் பரிக் பத்திர ஊழல், 1,000 கோடி
 2002 - சஞ்சய் அகர்வால் வீட்டு முதலீட்டு ஊழல், 600 கோடி
 2002 - கல்கத்தா பங்குச் சந்தை ஊழல், 120 கோடி
 2003 - முத்திரை ஊழல், 20,000 கோடி
 2005 - ஐபிஓ காரிடார் ஊழல், 1,000 கோடி
 2005 - பீகார் வெள்ளப் பேரிடர் ஊழல், 17 கோடி
 2005 - சார்பியன் நீர்மூழ்கிக் கப்பல் ஊழல், 18,978 கோடி
 2006 - பஞ்சாப் சிட்டி சென்டர் ஊழல், 1,500 கோடி
 2008 - கருப்புப் பணம், 2,10,000 கோடி
 2008 - சத்யம் ஊழல், 8,000 கோடி
 2008 - ராணுவ ரேஷன் ஊழல், 5,000 கோடி
 2008 - ஸ்டேட் பேங்க் ஆஃப் சவுராஷ்டிரா, 95 கோடி
 2008 - ஹசன் அலி ஹவாலா ஊழல், 39,120 கோடி
 2009 - ஒரிசா சுரங்க ஊழல், 7,000 கோடி
 2009 - அரிசி ஏற்றுமதி ஊழல், 2,500 கோடி
 2009 - ஜார்க்கண்ட் சுரங்க ஊழல், 4,000 கோடி
 2009 - ஜார்க்கண்ட் மருத்துவ உபகரண ஊழல், 130 கோடி
 2010 - ஆதர்ஷ் வீடு ஊழல், 900 கோடி
 2010 - உணவு தானிய ஊழல், 35,000 கோடி
 2010 - பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஊழல், 2,00,000 கோடி
 2011 - 2ஜி அலைக்கற்றை ஊழல், 1,76,000 கோடி
 2011 - காமன் வெல்த் ஊழல், 70,000 கோடி

 இந்த மோசடிகள் அனைத்தும் எந்த ஒரு வெளிநாட்டவரும் செய்யவில்லை, எந்த முஸ்லீமும் இல்லை, எந்த கிறிஸ்தவரும் இல்லை, எந்த SC, ST, OBC களும் இல்லை, இந்த மோசடிகள் அனைத்தும் போலி தேசபக்தியுள்ள பிராமண-பனியாக்கள் என்று அழைக்கப்படுபவர்களால் செய்யப்பட்டுள்ளன.  அதற்கு மேல், இடஒதுக்கீட்டால் நாடு பின்னோக்கிப் போகிறது என்று இந்த அயோக்கியர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

 வாழ்க இந்தியா... வாழ்க அரசியலமைப்பு...
  பங்கு பங்கு
 மேலும் பகிர்வதன் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

Tuesday, November 22, 2022

காசி தமிழ் சங்கமம் பித்தலாட்டம்

 என்னுடன் முன்பு பணிபுரிந்த உத்திரபிரதேசத்திலுள்ள நண்பனிடம் நேற்று பேசினேன் லக்னோவை பூர்வீகமாக கொண்டவன் சமாஜ்வாடி கட்சிகாரன். 


அவனிடம் என்னப்பா உங்க ஊரே #காசி_தமிழ்_சங்கமத்தில் கோலகலமாக இருக்கிறதே என்று சொன்னவுடன்.


அப்படியா அந்த மாதிரி செய்திகள் எதுவும் லோக்கல் தொலைகாட்சிலயோ இல்லை ஊடகங்களிலயோ வந்தா மாதிரி தெரியலையே என்றான்.. 


காசியில் நடந்த விழா உண்மையில் தமிழ்நாட்டை தாண்டி ஒருத்தருக்கும் தெரியவில்லை.. தஞ்சை சாஸ்தா கல்லூரியில் படிக்கும் 300 க்கும் மேற்பட்ட மாணவர்களை இலவசமாக காசிக்கு கொண்டு சென்று கூட்டத்தை சேர்த்து ஒரு போலி நாடகத்தை நடத்தியுள்ளது பாஜக..

போராட்டம் என்றால் கொள்கை உறுதி என்றால் என்ன தெரியுமா?!

 ஆதார் அட்டை கேட்டதற்கு பேரணியே வேண்டாமென்று ஓடிய கயவர்களைக் கண்டிருக்கிறோம் ..


போராட்டம் என்றால் கொள்கை உறுதி என்றால் என்ன தெரியுமா?! 




நவம்பர் 26 1957

சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்பிரிவுகளை எரிக்க வேண்டும் என பெரியார் போராட்டத்திற்கு அழைக்கிறார்.


அழைத்தவர் பெரியார்...

திராவிடர் இயக்கத் தொண்டர்கள் 10000 பேர் அரசியல் சட்டத்தில் சாதியைப் பாதுகாக்கும் பக்கங்களைக் கொளுத்தினர்.



 தமிழக காவல்துறை 

பெண்கள் சிறுவர்கள் உட்பட போராட்டத்தில் கலந்து கொண்டாரில் 3000 பேரை கைது செய்தனர். 


சென்னையில் – 35 இடங்கள், வட ஆற்காடு மாவட்டம் – 30 இடங்கள், தென் ஆற்காடு மாவட்டம் – 26 இடங்கள், சேலம் மாவட்டம் – 41 இடங்கள், கோவை மாவட்டம் – 14 இடங்கள், இராமநாதபுரம் மாவட்டம் – 4 இடங்கள், மதுரை மாவட்டம் – 13 இடங்கள், நெல்லை மாவட்டம் – 8 இடங்கள், தர்மபுரி – 18 இடங்கள், செங்கல்பட்டு – 9 இடங்கள், கன்னியாகுமாரி – 5 இடங்கள், திருச்சிராப்பள்ளி – 107 இடங்கள், தஞ்சாவூர் – 161 இடங்கள், புதுச்சேரி – 6 இடங்கள், பெங்களூர் மற்றும் ஆந்திரா – 1 இடம்.


பெரியார் போராட்டத்தை அறிவித்த பின்னர்தான் அரசு சட்டத்தை எரிப்பவர்களுக்கு 3 ஆண்டு சிறை என்று எச்சரித்து புதிதாக ஒரு சட்டத்தையும் இயற்றியது . அதுவரை அரசியலமைப்புச் சட்டத்தை எரிப்பவர்களுக்கு என்ன தண்டனை என ஒரு சட்டமே இல்லை .


அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுடைய தியாகத்தைப் பற்றி சொல்வதானால் தனி புத்தகம் எழுத வேண்டும்.


அவர்களுடைய உறுதியை பற்றி சொல்வதானால் பேனாவில் மை நிரப்பக் கூடாது . எரிமலை குழம்பு தான் நிரப்ப வேண்டும்.


இன்றைக்கு சாதி ஒழிப்புக்கு திராவிடர் இயக்கம் என்ற செய்தது எனக் கேட்கத் துணிவோர் தம் காலாணிகளை எடுத்து தங்களையே அடித்துக்கொள்ள வேண்டும்.


திராவிடர் இயக்கத்தினரின் தியாகங்கள் அத்தனையும் சொல்ல என் எழுத்தால் சொல்ல முடியாதால் ஒன்றை மட்டும் சொல்கிறேன்.


வாளாடியைச் சார்ந்த 16 வயது சிறுவன் பெரியசாமி. கருஞ்சட்டை தொண்டர். இன்னும் இளமை முழுதும் தொடங்காத அந்த உள்ளம் பெரியாரின் உரைகள் கேட்டு இரும்பின் இன்னொரு பிம்பமாய் நின்றது.


போராட்டத்தில் கைதாகி சிறைத் தண்டனை பெற்றவர்களில் ஒருவர்.

 பெரியசாமி க்கு விதிக்கப்பட்டது தூத்துக்குடி தட்டப்பாறை சிறை இரண்டு ஆண்டுகள் .


சிறைச்சாலையில் பார்வையிட வந்திருந்த அன்றைய ஆளுநர் விஷ்ணுராம் மேதி,. இளம் வயதில் ஒரு சிறுவன் அடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து என்ன என்று விசாரிக்க ...

உடனிருந்தோர் பெரியாரின் போராட்டம் அதில் பெரியசாமியின் பங்களிப்பு அத்தனையும் கூற 

இந்தச் சிறு வயதில் இப்படி ஒரு போராட்டத்தில் எப்படி ஈடுபட்டார் என்று அதிர்ந்து போயிருந்தார். பெரியசாமியை அழைத்துக் கேட்கிறார்.. இந்தச் சிறுவயதில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கலாமா?! நான் உன்னை மன்னித்து விடுதலை செய்ய ஏற்பாடு செய்கிறேன். மீண்டும் சட்டத்தை எரிக்க மாட்டேன் என்று எழுதிக் கொடுப்பாயா என்று கேட்கிறார் அன்றைய ஆளுநர் விஷ்ணுராம் மேதி....



“என் தலைவர் பெரியார் இந்தப் போராட்டத்தை அறிவித்தபோது நான் மட்டும் தான் சட்டத்தை எரித்தேன், வெளியே அனுப்பினால் என் தோழர்களைக் கூட்டி மீண்டும் எரிப்பேன்.” என்கிறார் அந்தப் பெருந்தொண்டர் பெரியசாமி என்கிற சிறுவன்.


மலைத்துப் போய் வாய் பேச முடியாத விஷ்ணு ராம் மேதி..மெல்ல தன்னைத் தேற்றி . கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும் என்று சொல்லிவிட்டு போகிறார்..


ஏற்கனவே சிறை... விடுதலை செய்கிறேன் என்ற உறுதி.. இன்னலில் இருந்து தப்பி விடலாம் என்று எவரேனும் நினைக்கக்கூடும்... திராவிட இயக்கத்தின் சீர்மிகு தொண்டன் பெரியசாமி மீண்டும் போராடத்தான் செய்வேன் சட்டத்தை எரிப்பேன் என்று காட்டிய உறுதி எங்கே....



ஆதார் அட்டை கேட்டவன் பேரணியே வேண்டாம் என்று கலைந்து போன ஆர்எஸ்எஸ் கயவர் கூட்டம் எங்கே ..?!..





சொல்லாமல் விடமுடியுமா ...


 கீழ்வாளாடி பெரியசாமி‌ என்கிற திராவிட இயக்கத்தின் சமராளி...

22.12.58ல் சிறையிலே நோயுற்று இறந்தே போனார். பெரியாரும் மணியம்மையாரும் அந்த கொள்கை மறவனுக்கு கண்ணில் நீரொழுக அஞ்சலி செலுத்திய படம்

வீரமாமுனிவர்

 தமிழ்மொழியின் இனிமையால் ஈர்க்கப்பட்டு தன் பெயரையே மாற்றிக்கொண்ட மகத்தான தமிழ் அறிஞர் #வீரமாமுனிவர் பிறந்த தினம் - நவம்பர் 8:


இத்தாலியில் பிறந்த வர். கிறிஸ்தவ குருவான இவர் மதப் பிரச்சாரத்துக்காக 1710-ம் ஆண்டு கோவாவுக்கு வந்தார். அங்கிருந்து தமிழகம் வந்து சேர்ந்தார்.


மதத்தைப் பரப்ப உள்ளூர் மொழியைத் தெரிந்துகொள்வது அவசியம் என்பதை உணர்ந்தார். அதற்காகத் தமிழ் கற்றார். தமிழ் அவரைத் தன்னுள் இழுத்துக்கொண்டது. சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். விரைவிலேயே இலக்கியப் பேருரை கள் நடத்தும் அளவுக்குப் புலமை பெற்றார்.


கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தனது இயற்பெயரை முதலில் தைரியநாதன் என்றுதான் மாற்றிக் கொண்டார். பிறகு அதுவும் சமஸ்கிருதம் என்று அறிந்து வீரமாமுனிவர் என்று வைத்துக்கொண்டார் இந்த முன்னுதாரணப் புலவர்.


இலக்கணம், இலக்கியம், அகராதி ஆகியவற்றைப் படைத்தார். திருக்குறளை லத்தீன் மொழியிலும் தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகிய வற்றை பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட்டார்.


வெளிநாட்டினர் தமிழ் கற்கவும், தமிழர்கள் பிறமொழி களைக் கற்கவும் உதவியாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கு லத்தீனில் விளக்கம் கொடுத்தார். தொடர்ந்து 4400 சொற்களைக் கொண்ட தமிழ் -போர்ச்சுகீசிய அகராதியைப் படைத்தார். நிகண்டுக்கு மாற்றாக பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி ஆகிய பகுப்புகளைக் கொண்ட சதுரகராதியைத் தொகுத்தார்.


அந்த காலத்தில் சுவடிகளில் மெய் எழுத்துகளுக்குப் புள்ளி வைக்காமல் கோடு போடுவது வழக்கம். நெடில் எழுத்துகளைக் குறிக்க, ‘ர’ சேர்த்தனர். இதை மாற்றி ‘ஆ’, ‘ஏ’, ‘ஓ’ ஆகிய நெடில் எழுத்துகளைக் கொண்டுவந்தார். பல்வேறு தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்தன. மக்கள் சிரமமின்றிப் படிக்கவேண்டும் என்ற நோக்கில் அவற்றை உரைநடையாக்கினார்.


தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதன்முதலாகப் பேச்சுத் தமிழை விவரித்தார்.


உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், வாமன் கதை ஆகியவற்றைப் படைத்தார். தமிழின் முதல் நகைச்சுவை இலக்கியம் என்று போற்றப்படும் ‘பரமார்த்த குருவின் கதை’ நூலைப் படைத்ததும் இவரே.


இயேசு காவியமான தேம்பாவணியை இயற்றினார். இவரைப்போல வேறு எந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை என பல இலக்கிய வகைகளிலும் நூல்கள் படைத்ததில்லை.


தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார். ஒன்பது மொழிகளில் புலமை பெற்றவர். பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழ்ந்தவர், தனது 67-வது வயதில் மறைந்தார்.


திருநெல்வேலி தொல்லியல் கழகம்

Sunday, November 20, 2022

காசியும் பெரியாரும்

 பெரியாருக்கு வயது 25. ஒரு சமயம் அப்பா மீது வந்த கோபத்தில் காசிக்குப் போய் சாமியாராக முடிவு செய்தார். பெரியார் வீட்டை விட்டுப் புறப்பட்டுவிட்டார். பலவாறு பாடுபட்டு கசியை அடைந்த பெரியாருக்கு சோறு கிடைக்கவில்லை. பல நாள் பட்டினி. அவர் கையில் காசு கிடையாது. பசியைத் தாங்க முடியவில்லை. ஒரு சாப்பாடு சத்திரத்திற்குள் நுழைய முயன்றார். சத்திரத்தில் பார்ப்பன ஜாதியினருக்குத்தான் இலவசமாக சாப்பாடு கிடைக்கும். இவர் பார்ப்பனர் அல்ல என்பதைக் கண்ட காவலாளி பெரியாரை வெளியே  தள்ளினான். அப்போது எச்சிலைகளை வெளியே கொண்டுவந்து எறிந்தனர். பெரியார் பார்த்தார்.

பசிக்கொடுமை, எச்சிலை அருகில் ஓடினார். சட்டமாக அமர்ந்தார். எச்சிலையிலிருந்து சோற்றை வழித்து சாப்பிட்டார். இடுப்பில் ஒன்றரைப் பவுன் மோதிரமிருக்க பெரியார் இச்செயலைச் செய்தார்.

பிறகு காசியில் பெரியார் வேலை தேடினார். ஒன்றும் கிடைக்கவில்லை. தாடி, மீசையை எடுத்தார். மொட்டையடித்துக் கொண்டு சாமியாரானார்.

காசியில் பெரியாருக்கு ஒரு மடத்தில் வேலை கிடைத்தது. பெரியாருடைய வேலை பூசைக்காக வில்வ இலை பறிக்க வேண்டும். விளக்குப் போட வேண்டும். இந்தக் காரியங்களை அதிகாலையில் குளித்து உடம்பில் திருநீறு அணிந்து செய்ய வேண்டும். பெரியாருக்கு அதிகாலையில் எழுந்து குளிப்பது கஷ்டமாக இருந்தது. ஒரு நாள் குளிக்காமல் திருநீறு பூசிக்கொண்டு பூசைக்கு வந்தார். இப்படிப் பலநாள் செய்தார். ஒரு நாள் உண்மை தெரிந்தது. வேலையிலிருந்து விரட்டப்பட்டார்.

பெரியார் மறுபடியும் பிச்சை எடுத்தார். சாமியார் வாழ்க்கையை வெறுத்தார். சாமியார்களிடம் இருந்த ஒழுக்கக் குறைவு பெரியாருக்குப் பிடிக்கவில்லை.
 தன்னிடம் இருந்த மோதிரத்தை விற்றார். பணத்துடன் காசியை விட்டுப் புறப்பட்டார்.

காசி நகரம், ஆத்திகர் ராமசாமியை நாத்தீகராக மாற்றி அனுப்பி வைத்தது!